Jump to content

உறவுகளின் வழிகாட்டல் தேவை


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் உறவுகளே.
நேற்று என் நண்பர் ஒருவரை பார்ப்பதற்கு அவரின் வீட்டிக்கு போய் இருந்தேன். 
அவரின் தற்போதைய உடல், உள நிலைகள் மிகவும் கவலை அளிப்பதாக இருந்தது.
அவரின் மன உளைவு,  தேக ஆரோக்கியம் தொடர்பில் கவனகுரைவுகள்,போன்ற அவருக்கு பாதிப்பை கொடுக்கின்ற சில விடயங்களில் இருந்து மீட்கும் என் முயற்சியில் உங்களிடம் இருந்து சில அறிவுரைகள், வழி கோல்களை கேட்டே இதனை பதிகின்றேன்.

நண்பர்பற்றிய ஒரு குறிப்பு:
இவரோடு எனக்கு சுமார் 20 வருட பழக்கம், திருமணம், குழந்தை பிறப்பு, குடும்பத்தார் இறப்பு, கோடை சுற்றுலா என்று பங்குகொன்று இதர நண்பர்களோடும் வளம் வரும் சிநேகம்.
இவருக்கு மூன்று அழகான பெண் குழந்தைகள். வயது 13,11,10 இருக்கும். மூன்று குழந்தைகளும் படிப்பில் அபாரம், அம்சமான தமிழ் பெயர்களை கொண்ட தமிழை அழகாக கதைக்கும் குழந்தைகள். 
என் நண்பர் அவரின் தந்தையார் முகத்தை பார்த்ததே கிடையாது. மிகவும் சிறு வயதிலேயே தந்தையாரை இழந்துவிட்டார். அவருக்கு ஒரு தம்பி. அம்மா ஒரு காலத்தில் ஆங்கில ஆசிரியையாக இருந்தவர். மகன்மார் இருவரையும் தனியாக வளர்த்து ஆளாக்கியவர்.

என் நண்பன் ஊரில் ராணுவ கெடுபிடி தொடங்கிய காலத்தில் நாட்டை விட்டு வெளியேறி பல நாடுகள் ரஷ்யா, உக்ரீன், தாய்லாந்து,இந்தியா, கியூபா, சிங்கபூர் இப்படி பல நாடுகளில் கஷ்டப்பட்டு கடைசியில் கனடா வந்து வாழ்க்கை ஆரம்பித்தவர். 
நிறைய வாசிப்பு திறமையும், உலக பொது அறிவு, ஆங்கில சினிமா, இந்திய அரசியல், தமிழ் இலக்கியம் இவற்றில் எல்லாம் நிறைய அறிவும் கொண்டவர்.

அவரின் அம்மாவும், தம்பியும் இங்கே தான் வாழ்ந்து வந்தார்கள். என் நண்பர் ஒரு அம்மா பிள்ளை.
அம்மா, அம்மா என்று எல்லாமே அம்மாவாக இருந்தவர்.
காலத்தின் கொடூரம், தம்பி நோய் வாய்ப்பட்டு (சிறுநீரக கோளாறு), சிகிச்சைகள் பெற்று பலன்கள் அற்று எட்டு  வருடங்களுக்கு முன்னர் இறந்து விட்டார். இவர் இறக்கும் போது வயது 34 இருக்கும் என நினைக்கிறேன். மிகவும் சோகத்தோடு கடந்த நாட்கள் அவை.

தம்பி இறந்து சரியாக 52 ஆவது நாளில் எனது நண்பனின் அம்மாவும் இறந்து விட்டார். இது அனைவருக்கும் பேரிடி!! என் நண்பன் துவண்டு போனான். வாழ்க்கை தடம் புரண்டது போல ஒரு உணர்வு, தனிமை, சோகம் இவனை வாட்ட. ஏற்க்கனவே இருந்த குறைவான மதுப் பழக்கம் முழுமையாக ஆட்கொள்ளத்தொடங்கிற்று!!

மனைவி, மூண்டு குழந்தைகளுடன் வீட்டுக்குள்ளேயே முடங்கிய வாழ்க்கை. பெரிதாக எங்குமே வரவும் மாட்டார்கள். அப்படியே வந்தாலும் என் நண்பனின் அதீத மதுப் பழக்கம் அவர்களுக்கு மிகவும் சங்கடமாக இருந்தது. 

நண்பன் கவலையில் இருக்கிறான், கொஞ்சம் குடிக்கிறான் என்ற பொதுவான என்னப்பாடோடு நண்பர்கள் நாங்களும் இருந்து விட்டோம். 

சில சம்பவங்கள் அவரின் மனைவி மூலம் உறவுகலூடாக பகிரப்பட்டு எங்கள் காதுக்கு எட்டியது. அதாவது என் நண்பன் 
ஒவ்வொரு நாள் இரவுவிழும் வேலை முடிந்து வந்ததன் பின்னர் குளித்து, முழுகி பட்டை திருநீறு அணிந்து சாமி கும்பிட்டு விட்டு ஒரு 750 மில்லி பாட்டில் மதுவை (தினமும்) அருந்துகிறாராம்.

தவிர  இரவு நேரங்களில் குடும்பத்தார் நித்திரை கொண்ட பின்னர் எழுந்து சென்று அவரின் அம்மா உறங்கி இருந்த கட்டிலில் போய் இருந்து கொண்டு அம்மாவை நினைத்து, நினைத்து வாய் விட்டு அழுகின்றாராம்.  
இது அம்மா இறந்த நாள் முதல் நேற்று நான் அவனை சந்திக்கும் போதும் கூட செய்துகொண்டு இருக்கிறான். இதனை கட்டுப் படுத்துவதற்கு மனைவி எடுத்த எந்த முயற்சியும் பலனளிக்க வில்லை. மனைவி மிகவும் பாசமாகவே அவரை கவனித்து வருகிறார். உண்மையில் சொல்லப்ப்போனால் அவரை ஒரு குழந்தையாகவே கவனித்துக் கொள்கிறார்.

எப்படியோ என் நண்பனின் போக்கில்  இன்றுவரை மாற்றங்களும் இல்லாமல் நாட்கள் போகப் போக அவரின் உடல் நிலையும் பெரிதும் பாதிக்கப்பட்டு கொண்டு இருக்கிறது.

இந்த சூல்நிலையில் நேற்று நான் அவனை பார்க்க போயிருந்தேன். நண்பன் நிறை போதையில் இருந்தான்.கட்டியிருந்த லுங்கி கூட அவன் இடுப்பில் நிலையாக  நிற்க வில்லை. கவலையோடு அவனை பார்த்து ஏனடா இப்படி இருக்கிறாய். என்று உரிமையோடு கடிந்து கொண்டேன். சொல்லக்கூடிய அறிவுரைகளையும் சொல்லி வைத்தேன்.

திடீரென்று என் கைகளை பிடித்துக்கொண்டு அழத்தொடங்கி விட்டான். 
அம்மாவையும், தம்பியையும் நினைத்து பலவிடயங்கள் சொல்லி சுமார் ஒரு மணிநேரம் அழது தீர்த்து விட்டான். அவன் கூறிய விடயங்கள் தான் இவை...
என்னால் அம்மா இல்லாமல் வாழமுடியாதடா? நான் அனாதையாக ஒற்றையாக இருக்கிறேனே !!
என்னால் நித்திரை கொள்ள முடிவதில்லை, தொழில் இடத்திலும் சென்று மறைந்து நின்று அழுகின்றேன், என்னால் இந்த உணர்வை கட்டுப்படுத்த புடியாமல் இருக்கிறது. இப்போது வேலை இடத்திலும் எல்லோருக்கும் இது தெரிந்து விட்டது. தொழில்சாலை உரிமையாளர் என் நிலைமை நன்கு உணர்ந்து என்னை என் பாட்டில் விட்டுவிட்டார். மற்றும்படி வேலை இடத்தில எனக்கு எந்த பிரச்சினைகளும் இல்லை. நான் மிகவும் கடினமாக உழைக்கிறேன். 
தவிர எனக்கு உடல் நிலையும் முன்னர் போல இல்லை. வாயிற்று சுத்தம் செய்யும் போது  இரத்தபி போக்கு அதீதமாக இருப்பதாகவும். இது தாங்கேனா வலியையும், எரிவையும் தருவதாகவும் சொன்னான். இதனை வைத்தியரிடம் காட்டி மருந்து எடுக்க வெட்கமாக இருப்பதாகவும் கூறினான். 
அவன் கூறிய விடயங்களை பார்க்கும் போது சாதாரண ஹெம்மறோய்ட் (Hemorrhoid) போன்ற ஒரு விடயத்தை இவன் கவனிக்காமல் விட்ட படியால் அது பெரிதாக வளர்ந்து அவனுக்கு தொந்தரவாக இருக்கிறது என்றே நினைக்கிறன். 
நண்பனின் வைத்தியர் எவ்வளவோ கூறியும் வெட்கத்தில் அதனை காட்டாமல் இன்று வரைக்கும் தவிர்த்துக்கொண்டு பார்மசிகளில் கிடைக்கும் சில முறையற்ற மருந்து, க்ரீம் போன்றவற்றை பாவித்து நாட்களை கடத்துகின்றார்.

நான் நிறைய நேரம் பல விடயங்களை எடுத்து கூறியதன் பின்னர் தன்னை இந்த இக்கட்டான சூழ் நிலைகளில் இருந்து மீட்ட்குமாறு என் கைகளை பிடித்து கண்ணீர் விட்டு கேட்டுக்கொண்டான்.
பிள்ளைகளையும், தன்னுடைய சூழ்நிலைகளையும் நினைத்து நிறையவே பயந்து போய் உள்ளான்.

இவனுக்கு இருக்கும் 3 பிரச்சினைகள்.
1. அதீத மதுப்பழக்கம் 
2. அன்னையின் இழப்பில் தொடர்ந்தும் உழன்றுகொண்டு பரிதவிப்பது.
3. வைத்திய ஆலோட்சனைகள் பெறாமல், தேகாரோக்கியத்தை கைவிட்டு மிகவும் சிக்கலான ஒரு நிலையில் தற்போது இருப்பது.

குழந்தைகள், மனைவி மக்களிடம் பாசமாகவே இருக்கிறான். அதில் எதுவித குற்றச்சாட்டுகளும் இல்லை. 

நான் எனக்கு தெரிந்த வைத்திய நண்பன் ஒருவரிடம் இவனை கூட்டிபோவதாக உள்ளேன்.
முதலில் உடல் நிலை குறித்த விடயங்களும், அதோடு உளவியல் ரீதியாக அணுகி அவனை ஒரு தெளிவு நிலைக்கு கொண்டு வருதலும் அத்தோடு மதுப்பழக்கம் படிப்படியாக அல்லது ஒரேயடியாக குறைப்பது சார்ந்தும் ஆலோசனைகள் பெற்றுக்கொடுக்கலாம் என நினைக்கிறன்.

இதில் உங்களிடம் இருந்து நான் எதிபார்ப்பது,
ஏதாவது ஆலோசனைகள், வழிமுறைகள், பிரார்த்தனைகள்.
நிச்சயம் அவனுக்குள் ஏதாவது ஒரு சிறிய மாற்றத்தை கொண்டுவர என்னால் முடியும் என்று மிகுந்த நம்பிக்கை எனக்கு உள்ளது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, Sasi_varnam said:

இவனுக்கு இருக்கும் 3 பிரச்சினைகள்.
1. அதீத மதுப்பழக்கம் 
2. அன்னையின் இழப்பில் தொடர்ந்தும் உழன்றுகொண்டு பரிதவிப்பது.
3. வைத்திய ஆலோட்சனைகள் பெறாமல், தேகாரோக்கியத்தை கைவிட்டு மிகவும் சிக்கலான ஒரு நிலையில் தற்போது இருப்பது.

குழந்தைகள், மனைவி மக்களிடம் பாசமாகவே இருக்கிறான். அதில் எதுவித குற்றச்சாட்டுகளும் இல்லை. 

சசிவர்ணம் உங்கள் நண்பரின் நிலையிலேயே... இங்கு வாழும் பலர் தமது வாழ்கையை இழந்து உள்ளார்கள். அதனால்... பலர் தமது குடும்பத்தை, பிள்ளைகளுடன் தவிக்க விட்டு, இவ்வுலகத்தை விட்டு சென்றவர்களும் அதிகம்.

1) அவருக்கு... உள்ள  அதிக மதுப்பழக்கத்தை முற்றாக உடனடியாக நிறுத்த முடியாவிட்டாலும்... மூன்று சிறிய வயதில் உள்ள பெண் பிள்ளைகளின் எதிர்காலத்தை கருதியாவது, அதிலிருந்து மீண்டும் வர வேண்டும் என்று கூறுங்கள். அத்துடன் அவர் இல்லாமல், மனைவி பிள்ளைகளுடன் எடுத்த படங்களை... அவரின் பேர்ஸ், காரின் முன்பக்கம், அவர் அதிகமாக பழகும் அறைகள், முக்கியமாக அவர் மதுப் போத்தல் வைத்து எடுக்கும் அலமாரி போன்ற இடங்களில் வைக்க முயற்சி செய்து பாருங்கள். படங்கள் வெவ்வேறு இடங்களில், வேறு  கோணங்களில் எடுத்த படம் என்றால் இன்னும் நல்லது.

2) தாயின் மரணம்... தவிர்க்க முடியாதது. இந்த உலகில் பிறந்தவர்கள் அனைவரும் இங்கு நிரந்தரமாக தங்க வந்தவர்கள் அல்ல என்பதை அவருக்கு எடுத்துக் கூறுங்கள். தாயின் மரணத்தை.... மது அருந்துவதற்கு, ஒரு சாட்டாக வைத்து... மது அருந்துபவர்களும் உள்ளார்கள்.

3) 40 வயதுக்கு மேல்... எம்மவர்கள் இலவச மருத்துவ வசதி உள்ள நாட்டில் கூட இந்தத் தவறை மீண்டும், மீண்டும் செய்கிறார்கள். 6 மாதத்துக்கு ஒரு தடவை தன்னும்... வைத்தியரிடம் சென்று தமது இதயத்துடிப்பு, கொலஸ்ரோல் போன்றவற்றை பரிசோதிப்பது மிக முக்கியம்.

அத்துடன்.... மதுவை நிறுத்துவதற்கு, சில ஆலோசனை மையங்கள் அங்கும் இருக்கும், அதனை இணையத்தில் தேடி ஆலோசனை பெறுவதும் பலன் தரும். உங்கள் நண்பர் மீண்டும் முன்பு போல் பழைய மனிதனாக வர பிரார்த்திக்கின்றேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
30 minutes ago, தமிழ் சிறி said:

சசிவர்ணம் உங்கள் நண்பரின் நிலையிலேயே... இங்கு வாழும் பலர் தமது வாழ்கையை இழந்து உள்ளார்கள். அதனால்... பலர் தமது குடும்பத்தை, பிள்ளைகளுடன் தவிக்க விட்டு, இவ்வுலகத்தை விட்டு சென்றவர்களும் அதிகம்.

1) அவருக்கு... உள்ள  அதிக மதுப்பழக்கத்தை முற்றாக உடனடியாக நிறுத்த முடியாவிட்டாலும்... மூன்று சிறிய வயதில் உள்ள பெண் பிள்ளைகளின் எதிர்காலத்தை கருதியாவது, அதிலிருந்து மீண்டும் வர வேண்டும் என்று கூறுங்கள். அத்துடன் அவர் இல்லாமல், மனைவி பிள்ளைகளுடன் எடுத்த படங்களை... அவரின் பேர்ஸ், காரின் முன்பக்கம், அவர் அதிகமாக பழகும் அறைகள், முக்கியமாக அவர் மதுப் போத்தல் வைத்து எடுக்கும் அலமாரி போன்ற இடங்களில் வைக்க முயற்சி செய்து பாருங்கள். படங்கள் வெவ்வேறு இடங்களில், வேறு  கோணங்களில் எடுத்த படம் என்றால் இன்னும் நல்லது.

2) தாயின் மரணம்... தவிர்க்க முடியாதது. இந்த உலகில் பிறந்தவர்கள் அனைவரும் இங்கு நிரந்தரமாக தங்க வந்தவர்கள் அல்ல என்பதை அவருக்கு எடுத்துக் கூறுங்கள். தாயின் மரணத்தை.... மது அருந்துவதற்கு, ஒரு சாட்டாக வைத்து... மது அருந்துபவர்களும் உள்ளார்கள்.

3) 40 வயதுக்கு மேல்... எம்மவர்கள் இலவச மருத்துவ வசதி உள்ள நாட்டில் கூட இந்தத் தவறை மீண்டும், மீண்டும் செய்கிறார்கள். 6 மாதத்துக்கு ஒரு தடவை தன்னும்... வைத்தியரிடம் சென்று தமது இதயத்துடிப்பு, கொலஸ்ரோல் போன்றவற்றை பரிசோதிப்பது மிக முக்கியம்.

அத்துடன்.... மதுவை நிறுத்துவதற்கு, சில ஆலோசனை மையங்கள் அங்கும் இருக்கும், அதனை இணையத்தில் தேடி ஆலோசனை பெறுவதும் பலன் தரும். உங்கள் நண்பர் மீண்டும் முன்பு போல் பழைய மனிதனாக வர பிரார்த்திக்கின்றேன்.


உங்கள் கனிவான வார்த்தைகளுக்கும், பிரார்த்தனைகளுக்கும் 
மிக்க நன்றி தமிழ்சிறி அண்ணா, குறிப்பாக அந்த "அவன் இல்லாத" புகைப்பட விடயம் மிகுந்த ஆழமானதொரு சிந்தனை.

Link to comment
Share on other sites

சசி ,

உங்கள் நண்பருக்கு உடனடியாக தேவைப்படுவது மன நலம் தொடர்பான கவுன்சிலிங் மற்றும் மதுப்பழக்கத்தில் இருந்து மீட்டு எடுக்கும் அமைப்புகளின் உதவி. நண்பரின் மனைவி மூலம் அவர்களின் குடும்ப வைத்தியரை அணுகி இது தொடர்பாக எவரை நாட வேண்டும் என்று கேட்டு அதன்படி செய்யுங்கள். முயற்சியை இன்றே இப்பவே தொடங்குங்கள்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முடிந்தால் வேறு வீட்டுக்கு மாறினால் நல்லது, அல்லது அந்த வீட்டின் உள் அலங்காரங்கள் அறைகள் போன்றவற்றை மாற்றுங்கள்.  கவுன்சிலிங்தான் இப்ப அத்தியாவசியமானது. அவருக்கும் தான் நலமாக வேண்டும் என்ற எண்ணம் இருப்பதால் நல்லா ஒத்துழைப்பார். நேரம் கிடைக்கும்போது நெருங்கிய நன்பர்கள் வீடுகளுக்குப் போய் வருவதும் மதுப் பழக்கத்தைக் குறைக்க உதவும்....!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அவரின் குழந்தை மனைவியை வைத்து அவருக்கு கவுன்சிலிங் கொடுக்க வேண்டும் 

இந்த உலகில் யாரும் ஆயிரம் வருடங்களுக்கு வாழ முடியாது பிறப்பு இருந்தால் இறப்பு என்பதும் நிச்சயமா உண்டு அவரை நாளைக்கு உனக்கும் இப்படி நடந்து விட்டால் உன் குழந்தை குடும்பத்தை யார் கவனிப்பது என்று நிதானமாக இருக்கும் போது  கேளுங்கள்  

அடிக்கடி  ஊர் சுற்றி பார்க்க வெளியில் அழைத்து செல்லுங்கள் 

நன்றாக தியானம் இருக்க செய்து பாருங்கள்   ஒரு சில மணி நேரம் அவர் வணங்கும் கடவுளை நினைத்து. 

 

Link to comment
Share on other sites

மனத்தாங்கல் (depression) மனநோயன்று, இவர்களால் சில வேளைகளில் அதிக சக்தியுடன் நாட்களை கடக்கவும், சக்தியே இல்லாமல் வீட்டில்  முடங்கி கிடக்கவும் முடியும். ஆனால் இவர்கள் அனேகமாக அதிகம் சிந்திப்பவர்களாக இருப்பார்கள். இவ்வாறு அதிகம் சிந்திப்பவர்கள் தம்மை முதலில் பஞ்சி பிடித்தவர்கள் என்று உணர்வார்கள். ஆனால் உண்மை அதுவல்ல என்று தெரிய  வரும்போது. அதற்கான காரணத்தை தேடுவார்கள். தாம் நினைப்பதுதான் காரணமென்று நம்பி அதனுள்ளே வாழ விரும்புவார்கள்.  சில  சந்தர்பங்களில் அவர்கள் கண்டறிந்த காரணம் உண்மையாக இருக்கலாம். இதே வேளையில் மதுவிற்கும் அடிமையானால் - மது ஒரு குறுகிய காலத்திற்கு மட்டுமே அமைதியை தரும். பின்னர் நிலைமையை இன்னமும் மோசமாக்கி விடும். 

தமது உயிருக்கு உயிரானவர்களின் இழப்பு / தவறுகள் பலரை இந்நிலைக்கு கொண்டு வந்திருக்கு.  இப்படியான நிலையில் உள்ளவர்களை மனைவியும் பிள்ளைகளும் நன்கு பராமரிக்க வேண்டும். இவர்களுக்கு தம்மை சுற்றி ஒருவருமே துணைக்கு இல்லை என்ற எண்ணம் வரவே விடக்கூடாது.

கவுன்சிலிங்தான் இப்போதைய உடனடித் தேவை.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் நண்பரைப் போன்றே நாடு விட்டு நாடு வந்து படிக்கும் பலர் நடக்கக் கண்டிருக்கிறோம். 

இதற்கு முதன்மைக் காரணம்..

தாம் தனித்துவிடப்பட்டுவிட்டோம் என்ற உணர்வு தான். 

இப்படியானவர்களுடன் நன்கு நெருக்கமான.. நம்பிக்கைக்குரிய.. அன்பான நட்பு எப்போதும் கூட இருப்பின் அவர்கள் இயல்புக்குத் திரும்ப வழிகள் உண்டு.

இதனை நீங்களும்.. அவர்களுக்கு நெருக்கமான உறவுகளும் வழங்கினால்.. அவரை அவர் குடும்பத்தை மீண்டும் மகிழ்ச்சிப் பாதைக்கு அழைத்து வருவதில் சிரமம் இருக்காது. தொடர்ந்து தனிமைக்குள் அவர்களைத் தள்ளினால்.. அவர்கள் கதி.. நிர்க்கதிதான். 

மனிதன் ஒரு சமூக விலங்கு. சமூகமாக உள்ள போது அவன் அடையும் திருப்தி என்பது.. தனிமைபடுத்தப்படும் போது அதுவே விரக்தியாகிறது. அதில் இருந்து மீள முடியாமல்.. அதனை மறக்க மறைக்க..மது.. புகை.. மாது.. கணணி விளையாட்டு.. திரைப்படம் என்று அடிமையாகின்றனர். 

எங்களுடன் படித்த ஒருவரும்.. இப்படித்தான்.

மிக நல்லக் கெட்டிக்காரன். ஆனால்.. நாடு விட்டு நாடு வந்த தனிமை.. அவர் புகைக்கு அடிமையானார். நண்பர்கள் பலரும் கண்டுகொள்ளவே இல்லை. இந்த நிலையில்.. எங்களை எதேச்சதையாகச் சந்தித்தார். நாங்கள் இருந்த அதே விடுதிக்கு அருகில் வீடு எடுத்து இருந்ததால்.. சமைப்பது.. படிப்பு விடயமாக உரையாடுவது.. ஊர் விசயங்களை பகிர்ந்து கொள்வது.. அரசியல் கதைப்பது.. கால்பந்து.. கிரிக்கெட் விளையாடுவது.. நகர மத்திக்கு துவிச்சக்கர வண்டியில் போவது.. சாப்பிங்குக்கு துவிச்சக்கர வண்டியில் போவது என்று நல்ல நண்பர்களாக இருந்தோம். இன்னொரு மாணவனும் எங்களுடன் இணைந்தார். எல்லோரும் கூடிச் சமைப்பது.. கலந்துரையாடி சாப்பிடுவது.. இணைந்தே.. விளையாட்டு நிகழ்வுகளை தொலைக்காட்சியில் பார்ப்பது என்று நல்ல நண்பர்களாக ஒருவருக்கு ஒருவர் இருந்த மனம் வெளிக்காட்டி உணராத வகைக்கு தனிமையை தவிர்த்து வாழ்ந்த போது.. புகைப்பழகத்தில் இருந்து தானே விடுபட.. தானே கவுன்சிலிங் எல்லாம் போய்.. கடைசியில் எல்லாம் விட்டிட்டு இருந்தார்.

மீண்டும் ஓர் நாள்..திடீர் என்று.. ஒரே கவலையில் இருந்தார். கேட்டால்.. ஊரில் இருந்த காதலியிடம் இருந்து நெருக்குதல். அவளின் பெற்றோர் அவளை இன்னொருவரை திருமணம் செய்யச் சொல்லிச் சொல்வதாகவும்.. இவருக்காக காத்திருப்பது வீண் என்றும். யுனிக்கும் போகாமல்.. மீண்டும் புகைக்குள் மூழ்கல். விரக்தியில்.. மூழ்கினார். 

எங்களிடம் வந்து அழுதார்.. என்ன செய்ய என்று. அவருக்கு வேண்டிய அறிவுரைகளைச் சொல்லும் அனுபவம் நமக்கில்லை என்றாலும்.. ஒரு திறமையான மாணவனின் படிப்பு பாழாகக் கூடாது என்பது தான் எங்களுக்கு முதன்மையாகப் பட்டது. அந்தக் காதலிக்கு இரண்டு சந்தர்ப்பம் வழங்கச் சொல்லிச் சொன்னம்.

1. படிப்பு முடித்து தான் உன்னோடு என் வாழ்க்கை.. எந்தச் சந்தர்ப்பதிலும்.. என்னை நம்பி இருந்தால்.. உன்னை கைவிட போவதில்லை.

2. அதுவரை உன்னால் உன் பெற்றோரை சமாளிக்க முடியவில்லை என்றால்.. நீயே நான் உன் வாழ்க்கையில் தேவையில்லை என்று கருதினால்.. உன் பெற்றோர் வழியில் சென்றுவிடு. இந்தப் பிரிவுக்கு நான் பொறுப்பல்ல.

நீண்ட நாள் தொலைபேசி உரையாடல்களின் பின்.. காதலி சந்தர்ப்பம் இரண்டைத் தெரிவு செய்ய.. ஆடித்தான் போனார் நண்பர். ஆனாலும்.. அவருக்குள் இந்த நிபந்தனைகள் தொடர்பில்.. திருப்தி இருந்ததால்.. ஏலவே..மனதளவில் தன்னை தயார்படுத்திக் கொண்டதால்..பாதிப்பு அதிகம் இல்லை.

படிப்பை முடித்தார்.. பின் மேற்படிப்பையும் தொடர்ந்தார்.. இன்று நல்ல நிலையில்.. நல்ல தொழிலோடு இருக்கிறார். நாடு விட்டு நாடு போயிருந்தாலும் ஒரு சக நண்பனை.. மனிதனை.. தகுந்த நேரத்தில் கூட இருந்து அவனின் தகாத காலத்தைக் கழிக்க உதவிய திருப்தி எமக்குள் இன்று. 

அந்த வகையில்... நீங்களும் உங்கள் குடும்பமும் நினைத்தால்.. இவர்களை தனிமைச் சூழலுக்குள் இருந்து விலக்கி.. சமூகச் சூழலுக்குள் கொண்டு வந்தால்.. நிச்சயம் நல்ல பெறுபேறு கிட்டும். இரு குடும்பங்கள் என்பதால்.. பிரச்சனைகளுக்கு வழி குறைவாகவே இருக்கும். பிரச்சனைகளுக்குரிய மார்க்கங்களில் சிந்தித்து.. சமயோசித முடிவுகள் எடுத்துச் செயற்பட்டால் இந்த நிலைமை மாற அதிக பிரச்சனை இருக்காது என்றே நம்புகிறோம்.

இது பொதுவான ஒரு கருத்து. எனி தனிப்பட்ட சூழ்நிலைகளையும் கருத்தில் எடுத்துத்தான் இறுதி முடிவுகளை எடுக்கலாம். எடுக்க வேண்டும்.tw_warning:

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, Sasi_varnam said:

நண்பர்பற்றிய ஒரு குறிப்பு:
இவரோடு எனக்கு சுமார் 20 வருட பழக்கம், திருமணம், குழந்தை பிறப்பு, குடும்பத்தார் இறப்பு, கோடை சுற்றுலா என்று பங்குகொன்று இதர நண்பர்களோடும் வளம் வரும் சிநேகம்.
இவருக்கு மூன்று அழகான பெண் குழந்தைகள். வயது 13,11,10 இருக்கும். மூன்று குழந்தைகளும் படிப்பில் அபாரம், அம்சமான தமிழ் பெயர்களை கொண்ட தமிழை அழகாக கதைக்கும் குழந்தைகள். 
என் நண்பர் அவரின் தந்தையார் முகத்தை பார்த்ததே கிடையாது. மிகவும் சிறு வயதிலேயே தந்தையாரை இழந்துவிட்டார். அவருக்கு ஒரு தம்பி. அம்மா ஒரு காலத்தில் ஆங்கில ஆசிரியையாக இருந்தவர். மகன்மார் இருவரையும் தனியாக வளர்த்து ஆளாக்கியவர்.

என் நண்பன் ஊரில் ராணுவ கெடுபிடி தொடங்கிய காலத்தில் நாட்டை விட்டு வெளியேறி பல நாடுகள் ரஷ்யா, உக்ரீன், தாய்லாந்து,இந்தியா, கியூபா, சிங்கபூர் இப்படி பல நாடுகளில் கஷ்டப்பட்டு கடைசியில் கனடா வந்து வாழ்க்கை ஆரம்பித்தவர். 
நிறைய வாசிப்பு திறமையும், உலக பொது அறிவு, ஆங்கில சினிமா, இந்திய அரசியல், தமிழ் இலக்கியம் இவற்றில் எல்லாம் நிறைய அறிவும் கொண்டவர்.

அவரின் அம்மாவும், தம்பியும் இங்கே தான் வாழ்ந்து வந்தார்கள். என் நண்பர் ஒரு அம்மா பிள்ளை.
அம்மா, அம்மா என்று எல்லாமே அம்மாவாக இருந்தவர்.
காலத்தின் கொடூரம், தம்பி நோய் வாய்ப்பட்டு (சிறுநீரக கோளாறு), சிகிச்சைகள் பெற்று பலன்கள் அற்று எட்டு  வருடங்களுக்கு முன்னர் இறந்து விட்டார். இவர் இறக்கும் போது வயது 34 இருக்கும் என நினைக்கிறேன். மிகவும் சோகத்தோடு கடந்த நாட்கள் அவை.

தம்பி இறந்து சரியாக 52 ஆவது நாளில் எனது நண்பனின் அம்மாவும் இறந்து விட்டார். இது அனைவருக்கும் பேரிடி!! என் நண்பன் துவண்டு போனான். வாழ்க்கை தடம் புரண்டது போல ஒரு உணர்வு, தனிமை, சோகம் இவனை வாட்ட. ஏற்க்கனவே இருந்த குறைவான மதுப் பழக்கம் முழுமையாக ஆட்கொள்ளத்தொடங்கிற்று!!

இப்படியான ஒரு சில சம்பவங்களை/நண்பர்களை நான் வாழும் இடத்தில் சந்தித்திருக்கின்றேன். பாரதூரங்களை நான் இங்கு சொல்ல விரும்பவில்லை. கனடாவைப்பற்றி எனக்கு தெரியாது. உளவியல் சம்பந்தப்பட்ட சிகிச்சை உடனடியாக தேவை என்பது மட்டும் நான் சொல்வேன். தாமதிக்காது ஆவன செய்யுங்கள்.

யாழ்கள உறவுகளே!  இதே உளம் சார்ந்த பிரச்சனைகள் நமக்கும் வரலாம். ஏனெனில் நாம் அப்படியான உலகில் தான் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்.  மனிதனின் வாழ்க்கைக்கு மிக முக்கியமானது ரிலாக்ஸ்..

 

Relax please

எழுந்து உட்கார் இமயம் கூட உனக்கு மட்டம்தான் 
என்ன நடந்தது இப்போது எல்லாம் 
உன் கால் தூசுக்குக் கீழ் தைரியம் உன் ரத்தமன்றோ 
துடைத்துப் போடு துயரத்தை துணிவுடன் அணுகு வந்த துயரத்தை 
வாசலிலேயே பிடித்து நிறுத்து வசந்தமாக உணர் 
எல்லாமே ஓடிப் போகும் உன் முன்பு!

ஒவ்வொரு துயரத்தையும், சோகத்தையும், வலியையும் துடைத்துப் போட நமக்கு உதவுவது மன தைரியம்தான். என்னதான் நடந்தாலும் தைரியமாக இருந்து அதை சந்திக்க வேண்டும். மனதை திடமாக வைத்துக் கொண்டு பிரச்சினையை அணுக வேண்டும்

சோகத்தில் இருப்பவர்களிடம், துயரத்தில் இருப்பவர்களிடம் நான் இருக்கிறேன் உனக்கு, இதெல்லாம் என்ன பெரிய பிரச்சினை, தைரியமாக அணுகு, எல்லாம் சரியாய்ப் போகும் என்று சொல்லுங்கள், அது அவருக்கு ஆயிரம் யானை பலத்தைக் கொடுக்கும்.

கவலையில் இருப்பவர்களிடம் அருகில் அமர்ந்து பேசுங்கள். ஆதரவாக நாலு வார்த்தை பேசுங்கள். அவரது கவலைகளில், கஷ்டத்தில் பங்கு கொள்ளுங்கள், நான் இருக்கிறேன் செல்லமே என்று ஆறுதலாக சொல்லுங்கள். முடிந்தவரை அவருக்குத் துணையாக இருங்கள். ஆறுதல் சொல்வதை விட ஆறுதலாக இருப்பதுதான் மிகச் சிறந்தது. நான் இருக்கிறேன் உனக்கு என்று அவருக்கு உணர்த்துங்கள். அதிலேயே பாதி துயரம் பறந்தோடி விடும்.

வார்த்தைகளை விட நல்ல ஆறுதல் தரும் மருந்து உலகில் எதுவுமே இல்லை. உங்களுக்குப் பிரியமானவர்களுக்கு கஷ்டம் என்றால் அது உங்களுக்கும் கஷ்டம்தான்.இப்படிப்பட்ட நேரத்தில் அவருடன் அணுசரணையாக நாலு வார்த்தை பேசுங்கள். அந்த ஆறுதல் வார்த்தைகள் அவரது மனதுக்கு மருந்தாக அமையும், இதமாக அமையும், ரிலாக்ஸ் செய்ய உதவும்.

கவலைப்படாதே 
உன் கைகள் தனியாக இல்லை 
என் கரம் கோர்த்தே இருக்கிறது 
உன் துயரம் உனக்கு மட்டுமல்ல 
நானும் அதில் பங்கு கொள்கிறேன் 
கண்ணீரைத் துடைத்துப் போடு 
கவலையை இறக்கி வை 
தைரியத்துடன் எதையும் சந்தி 
எல்லாம் கலைந்து போகும் 
எல்லாம் சரியாகும் வாழ்க்கை அழகானது 
அவ்வப்போது அதில் நிழல் படிவது சகஜம்தான் 
நிமிர்ந்து நின்று அதை எதிர்கொள் 
உன் சிரிப்பால் சுற்றியுள்ளவர்களை குஷிப்படுத்து 
என் ஆதரவுக் கரம் உன் தலை தடவி ஆறுதல் சொல்லும்- எப்போதும்.

http://tamil.oneindia.com/

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாயினி, நிழலி, சுவே, ஜீவன், முனிவர் ஜீ ,தமிழ் சிறி அண்ணர்,  நெடுக்ஸ், குசா அண்ணா, 
அனைவரின் கரிசனைக்கும், வழியூட்டளுக்கும் நன்றிகள் பல. பச்சைகள் தீர்ந்துவிட்டன.

இன்று அவரின் மனிவியியோடு சிறிது நேரம் கதைத்தேன். அவரும் சில நிமிடங்களிலேயே அழத்தொடங்கி விட்டார். அவரின் பேச்சிலும் நம்பிக்கை அற்று, சிறிது கோபமும் விரக்தியுமே  எஞ்சி இருந்தது. இவரைத்தானே நம்பி நான் என் சொந்தங்கள், பந்தங்களை விட்டு வந்தேன், எனக்கென்று வேறு யாருமே இங்கு இல்லையே என்று அவர் பெரிதும் நொந்து கொண்டார்.

தவிர எனது நண்பன் தனது உடல் நலனில் கொஞ்சம் கூடி அக்கறை எடுக்காது இருப்பது பற்றியும் ஒரு வேலை சாப்பாடைக்கூட இப்போதெல்லாம் சாப்பிடுவதில்லை என்றும், அதிகாலை 4 மணிக்கு எழும்பி மது அருந்தும் பழக்கத்தையும் ஏற்படுத்திக் கொண்டுள்ளதையும், வீட்டிலே எல்லா வேலைகளையும் தான் ஒரு ஆளாகவே செய்வதாகவும் மிகவும் கவலையாக சொல்லிக்கொண்டு இருந்தார். 


நான் அவருக்கும் ஆறுதல் வார்த்தைகள் சொல்லி, எங்கள் வீட்டுக்கு பிள்ளைகளையும் கூட் டிக்கொண்டு அவனோடு அடிக்கடி வந்து செல்லுங்கள் என்று கேட்டு இருக்கிறேன்.
தவிர மருத்துவ உதவி, இதர விடயங்கள் பற்றியும் கூறி இருக்கிறேன். 

அவரும் ஏதாவது செய்யுங்கள் அண்ணா, இல்லாவிட்டால் நானும் பிள்ளைகளும் நடு ரோட்டிற்கு தான் வரவேண்டி ஏற்படும் என்று  கண்ணீர் சிந்தினார்.

எனது மனைவியும் அவருடன் சில நிமிடங்கள் ஆறுதலாக பேசினார். அவர்களின் சம்பாசனையில் நண்பனின் மூத்த மகள் எந்த நிமிடமும் பூப்படையலாம் என்ற அனாவசிய அயர்ச்சியும்  வெளிப்பட்டது !!! 


இந்த வியாழன் எனது மருத்துவ நண்பரை பார்க்க போகவுள்ளேன்.
நல்லது நடக்கும் என்ற நம்பிக்கை நிறையவே உள்ளது. நம்பிக்கை தானே வாழ்க்கையே!!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சசி, உங்கள் நண்பர் உளவளத் துறையிலுள்ளவருடன் தகுந்த ஆலோசனைகளை தாமதியாமல் பெற்றுக்கொள்ளவேண்டும்.

மேற்குலக counselling ஐ கற்றுத் தேர்ந்த தமிழராக இருந்தால் இலகுவில் நம்பிக்கைகொள்ளவும், மனம் விட்டுப்பேசவும் முடியும்.

முன்னர் கனடா வந்தபோது சந்தித்த மீராபாரதியும் இந்தத் துறையில்தான் இருக்கின்றார் என நினைக்கின்றேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சசி என்ன செய்யலாம் என்று இங்கு உறவுகள் எழுதி உள்ளனர்,

எனது வேண்டுகோள் அல்லேலூயாக்காரர்களிடம் இவரை காட்டிவிடாதீர்கள். 

Link to comment
Share on other sites

இதை விட பெரிய பிரச்சனைகளில் இருந்து மீண்ட ஆட்கள் ரொரன்ரோவில் இருக்கினம். உங்களது நண்பர் மதுவை கைவிட தயாரானால் பிரச்சனைகள் ஒவ்வொன்றாக களையப்படும். Bellwood  என்ற இடம் மிக மிக சரியான இடம். கவுன்சிலிங்கில் இருந்து அனைத்தையும் சரியாக செய்வார்கள். சில காலத்துக்கு தான் அரசு உதவி செய்யும் என நினைக்கிறேன். ஒரு 3 மாத கால program ஒன்றை தேர்தெடுத்தால் போதும் என நினைக்கிறேன். 3 மாதமும் அங்கு தான் தங்க வேண்டும். உறவினர்கள் குறிப்பிட்ட நேரத்தில் பார்க்க முடியும் என நினைக்கிறேன்.

தமிழ் தொலைக்காட்சியில் ஒரு  இலங்கை முஸ்லிம் பெண் ஒருவர் கவுன்சிலிங்(அல்க்ககோல் சம்பந்தமாக) செய்கின்றவர். அவரின் பெயர் நினைவில் இல்லை.

 

http://www.bellwood.ca/

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • காஸா போர்: ஐ.நா தீர்மானத்தால் இஸ்ரேல் தனிமைப்படுத்தப்படுகிறதா? அமெரிக்கா கூறுவது என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ரியர் அட்மிரல் டேனியல் ஹகாரி கட்டுரை தகவல் எழுதியவர், டேவிட் கிரிட்டன் பதவி, பிபிசி நியூஸ் 7 மணி நேரங்களுக்கு முன்னர் காஸாவில் இஸ்ரேலுடனான போர் நிறுத்தத்திற்கான தற்போதைய முன்மொழிவை ஹமாஸ் நிராகரித்துள்ளதாக இஸ்ரேல் கூறியுள்ளது. உடனடி போர் நிறுத்தம் கோரிய ஐ.நா பாதுகாப்பு சபையின் தீர்மானம் 'சேதத்தை' ஏற்படுத்தியுள்ளது என்பதை இது காட்டுகிறது. பாலத்தீன ஆயுதக் குழுவின் ஏற்க முடியாத கோரிக்கைகளுக்கு இஸ்ரேல் அடிபணியாது என்று பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவின் அலுவலகம் தெரிவித்துள்ளது. காஸாவில் இருந்து இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் முழுமையாக வெளியேற வேண்டும் என்றும், போரை நிறுத்தவும் ஹமாஸ் கோரிக்கை விடுத்துள்ளதாக இஸ்ரேல் கூறுகிறது. அதேநேரம் இஸ்ரேலின் அறிக்கை கிட்டத்தட்ட எல்லா விஷயங்களிலும் தவறானது என்று அமெரிக்கா கூறியுள்ளது. திங்கட்கிழமை ஐ.நா. பாதுகாப்பு சபையில் வாக்கெடுப்பு நடப்பதற்கு முன்னதாகவே ஹமாஸின் அறிக்கை தயாரிக்கப்பட்டதாக அமெரிக்க வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் வலியுறுத்தியுள்ளார். ஹமாஸ் ராணுவப் பிரிவின் துணைத் தலைவர் மர்வான் இசா இரண்டு வாரங்களுக்கு முன்னர் நுசைரத் அகதிகள் முகாமின் சுரங்கப்பாதை வளாகத்தில் நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டதை உறுதி செய்திருப்பதாக இஸ்ரேலிய ராணுவம் தெரிவித்துள்ளது.   24 மணிநேரத்தில் 81 பேர் பலி பட மூலாதாரம்,REUTERS “உளவுத்துறை அறிக்கைகள் அனைத்தையும் நாங்கள் சரிபார்த்தோம். மார்வான் இசா வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டார்,” என்று இதுகுறித்து இஸ்ரேல் ராணுவ செய்தித் தொடர்பாளர் ரியர் அட்மிரல் டேனியல் ஹகாரி தெரிவித்தார். இஸ்ரேல் தெரிவிப்பதில் தனக்கு 'நம்பிக்கை இல்லை என்றும் அந்த அமைப்பின் ராணுவத் தலைமை மட்டுமே இதுகுறித்து 'இறுதியாக ஏதாவது சொல்லும்' என்றும் ஹமாஸ் அரசியல் தலைவரான இஸாத் அல் ரிஷ்க் கூறுகிறார். இசா இந்தக் குழுவின் 'மூன்றாம் நிலையில் இருக்கும் தலைவர்' என்றும், அக்டோபர் 7ஆம் தேதி தெற்கு இஸ்ரேல் மீது நடத்தப்பட்ட தாக்குதலின் 'முக்கிய ஏற்பாட்டாளர்களில் ஒருவர்' அவர் என்றும் ரியர் அட்மிரல் ஹகாரி கூறியுள்ளார். இஸ்ரேல் மீதான ஹமாஸ் தாக்குதலில், 1,200 பேர் கொல்லப்பட்டனர், 253 பேர் பிணைக் கைதிகளாகப் பிடிக்கப்பட்டனர். இதைத் தொடர்ந்து இஸ்ரேல் காஸாவில் பதில் தாக்குதல் மேற்கொண்டது. காஸாவில் இதுவரை 32,400க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாகவும், கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 81 பேர் உயிரிழந்துள்ளதாகவும் ஹமாஸ் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. காஸாவில் போர் நிறுத்த ஒப்பந்தம் தொடர்பாக முட்டுக்கட்டை நிலவி வருகிறது. காஸாவில் உடனடியாக போர் நிறுத்தத்தை அமல்படுத்த ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் முதன்முறையாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதற்கு எதிராக இஸ்ரேல் கடும் எதிர்வினையைப் பதிவு செய்துள்ளது.   தீர்மானத்தில் ஹமாஸை கண்டனம் செய்வது பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு, ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் வாக்கெடுப்பின் போது அமெரிக்கா வாக்களிக்கவில்லை. இந்தத் தீர்மானத்திற்கு ஆதரவாக பிரிட்டன் உட்பட 14 பாதுகாப்பு சபை உறுப்பினர்கள் வாக்களித்தனர். போர் நிறுத்தம், மீதமுள்ள பிணைக் கைதிகளை நிபந்தனையின்றி விடுவித்தல் மற்றும் மனிதாபிமான உதவியை விரிவுபடுத்துதல் ஆகியவை இந்தத் தீர்மானத்தில் அடங்கும். இஸ்ரேலின் நெருங்கிய கூட்டாளியும் ராணுவ ஆதரவாளருமான அமெரிக்கா, அக்டோபர் 7 தாக்குதலுக்கு ஹமாஸை கண்டிக்கத் தவறிய தீர்மானத்தை விமர்சித்துள்ளது. இருப்பினும் இஸ்ரேலின் போர் முறைகள் தொடர்பாக அதிகரித்து வரும் கோபம் காரணமாக இந்தத் தீர்மானத்தின் மீது வாக்களிப்பதில் இருந்து அமெரிக்கா விலகிக் கொண்டது. ஆனால் அமெரிக்கா இந்தப் போரின் முக்கிய நோக்கங்களுக்கு முழு ஆதரவளிப்பதாகக் கூறியது. இந்த முன்மொழிவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இஸ்ரேல், வாஷிங்டனுக்கான தனது தூதுக்குழுவின் பயணத்தை ரத்து செய்துள்ளது. காஸாவின் தெற்கு நகரமான ரஃபாவில் தரைவழித் தாக்குதலை நடத்துவதற்கான திட்டத்தைப் பற்றி விவாதிக்க தூதுக்குழு அங்கு செல்வதாக இருந்தது. தற்போது 10 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் ரஃபாவில் தஞ்சமடைந்துள்ளனர். முழு அளவிலான தாக்குதல் மனித பேரழிவாக நிரூபிக்கப்படலாம் என்று அமெரிக்கா எச்சரித்துள்ளது. பின்னர் ஹமாஸ் போர் நிறுத்த திட்டத்தை நிராகரித்து அறிக்கை வெளியிட்டது. அமெரிக்கா, கத்தார் மற்றும் எகிப்து நாடுகளின் மத்தியஸ்தத்துடன் தோஹாவில் நடைபெற்ற மறைமுக பேச்சுவார்த்தைக்குப் பிறகு இந்தத் திட்டம் உருவானது. "நிரந்தர போர் நிறுத்தத்துடன்" காஸாவில் இருந்து இஸ்ரேலிய படைகள் முற்றிலுமாக வெளியேறவும், இடம்பெயர்ந்த பாலத்தீனியர்கள் தங்கள் வீடுகளுக்குத் திரும்பவும் அழைப்பு விடுத்த தன் அசல் கோரிக்கையைத் தான் பற்றி நிற்பதாக ஹமாஸ் கூறியது. ஹமாஸின் நிலைப்பாடு, 'பேச்சுவார்த்தை மூலமான ஒப்பந்தத்தில் அதற்கு எந்த ஆர்வமும் இல்லை என்பதைத் தெளிவாகக் காட்டுகிறது. கூடவே ஐ.நா. பாதுகாப்பு சபையின் தீர்மானத்தால் ஏற்பட்ட சேதத்தை உறுதிப்படுத்துகிறது,” என்று செவ்வாய்கிழமை காலை இஸ்ரேலிய பிரதம மந்திரி அலுவலகம் தெரிவித்தது. ஹமாஸின் திசை திருப்பும் கோரிக்கைகளை இஸ்ரேல் ஏற்றுக் கொள்ளாது என அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. "ஹமாஸின் ராணுவ மற்றும் அரசாங்க திறன்களை அழித்தல், எல்லா பிணைக் கைதிகளையும் விடுவித்தல், காஸா, இஸ்ரேலிய மக்களுக்கு எதிர்கால அச்சுறுத்தலை ஏற்படுத்தாததை உறுதி செய்தல் போன்றவற்றை உள்ளடக்கிய தனது போர் நோக்கங்களை இஸ்ரேல் தொடர்ந்து அடையும்," என்றும் அறிக்கை தெரிவிக்கிறது.   இஸ்ரேலின் பேச்சுவார்த்தைக் குழு திரும்பிவிட்ட செய்தி பட மூலாதாரம்,EPA-EFE/REX/SHUTTERSTOCK அமெரிக்க வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் மேத்யூ மில்லர் இந்த விமர்சனங்களை நிராகரித்துள்ளார். "இந்த அறிக்கை கிட்டத்தட்ட எல்லா வகையிலும் தவறானது. பிணைக் கைதிகள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு இது நியாயம் இல்லாதது" என்று அவர் வாஷிங்டனில் செய்தியாளர்களிடம் கூறினார்.“செய்தி அறிக்கைகள் மூலம் ஹமாஸின் எதிர்வினை பற்றிய தகவல்கள் பகிரங்கமாயின. ஆனால் அவர்களது பதிலின் உண்மையான சாராம்சம் இதுவல்ல. இந்த எதிர்வினை ஐநா பாதுகாப்பு சபையில் வாக்கெடுப்புக்கு முன் தயாரிக்கப்பட்து, அதற்குப் பிறகு அல்ல என்று என்னால் கூற முடியும்,” என்றார் அவர். கத்தாரின் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மாஜித் அல்-அன்சாரி தோஹாவில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், மறைமுகப் பேச்சுவார்த்தைகள் நிறுத்தப்படவில்லை, அவை தொடர்கின்றன என்றார். "பேச்சுவார்த்தைகளுக்கான கால அட்டவணை எதுவும் இல்லை. ஆனால் நாங்கள் எங்கள் கூட்டாளர்களுடன் பேச்சுவார்த்தை முயற்சிகளைத் தொடர்ந்து செய்து வருகிறோம்," என்று அவர் கூறினார். ஆனால் 10 நாட்கள் பேச்சுவார்த்தைக்குப் பிறகு இஸ்ரேல் தனது பேச்சுவார்த்தைக் குழுவைத் திரும்ப அழைத்ததாக இஸ்ரேலிய அதிகாரிகளை மேற்கோள் காட்டி இஸ்ரேலிய ஊடகங்களும் ராய்ட்டர்ஸ் செய்தி முகமையும் தெரிவித்துள்ளன. இரானுக்கு பயணம் மேற்கொண்ட ஹமாஸ் அரசியல் தலைவர் இஸ்மாயில் ஹனியா, இஸ்ரேல் முன்னெப்போதும் இல்லாத வகையில் அரசியல் தனிமையை எதிர்கொள்வதை ஐ.நா.பாதுகாப்பு சபையின் தீர்மானம் காட்டுவதாகத் தெரிவித்தார். கடந்த ஆண்டு நவம்பர் மாத இறுதியில் ஒரு வார கால போர் நிறுத்தத்தின் போது இஸ்ரேலிய சிறைகளில் அடைக்கப்பட்டிருந்த சுமார் 240 பாலத்தீன கைதிகள் 105 இஸ்ரேலிய பிணைக் கைதிகளுக்கு ஈடாக விடுவிக்கப்பட்டனர். ஹமாஸ் நிராகரித்த புதிய ஒப்பந்தம், ஆறு வாரங்களுக்கு போர் நிறுத்தத்தை முன்மொழிந்ததாகக் கூறப்படுகிறது. கூடவே 800 பாலத்தீன கைதிகளுக்கு ஈடாக ஹமாஸால் பிடிக்கப்பட்ட 40 இஸ்ரேலிய பிணைக் கைதிகளை விடுவிப்பதும் இதில் அடங்கும். ஆனால் காஸாவில் போரில் தோல்வியை ஏற்கும் அறிகுறி இன்னும் தெரியவில்லை. சமீபத்திய இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் பல டஜன் பாலத்தீனர்கள் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. ரஃபாவின் புறநகரில் உள்ள குடியிருப்பு கட்டடத்தின் மீது நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் ஒன்பது குழந்தைகள் உட்பட குறைந்தது 18 பேர் கொல்லப்பட்டதாக பாலத்தீன ஊடகங்களும் உள்ளூர் சுகாதார ஊழியர்களும் கூறுகின்றனர். முசாபா பகுதியில் உள்ள அபு நக்கீராவின் வீட்டில் டஜன் கணக்கான இடம்பெயர்ந்த மக்கள் தஞ்சம் அடைந்திருந்தனர் என்றும் கூறப்பட்டது. காஸா நகரில் அல்-ஷிஃபா மருத்துவமனைக்கு அருகே வான்வழித் தாக்குதலில் 30 பேர் கொல்லப்பட்டதாக வடக்கு காஸாவில் உள்ள அபு ஹசிரா குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் ராய்ட்டர்ஸ் செய்தி முகமையிடம் தெரிவித்தனர். கடந்த 24 மணிநேரத்தில் 60 இலக்குகளைக் குறிவைத்ததாகவும், 'பயங்கரவாத சுரங்கப்பாதைகள், பயங்கரவாத உள்கட்டமைப்புகள் மற்றும் ராணுவ உள்கட்டமைப்புகள்' இதில் அடங்கும் என்றும் இஸ்ரேலிய ராணுவம் செவ்வாய்கிழமை காலை தெரிவித்தது. இஸ்ரேலிய பாதுகாப்புப் படையினர் 'அல்-ஷிஃபா மருத்துவமனை பகுதியில் துல்லியமான தாக்குதல் நடவடிக்கைகளை மேற்கொண்டனர்' என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.   மனிதாபிமான உதவிகளைச் சேகரிக்கும் போது 18 பேர் கொல்லப்பட்டனர் பட மூலாதாரம்,REUTERS கடுமையான சண்டை காரணமாக நோயாளிகள், சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் இடம்பெயர்ந்த மக்கள் ஆபத்தில் இருப்பதாக பாலத்தீனர்கள் மற்றும் உதவிக் குழுக்கள் தெரிவித்துள்ளன. 175 'பயங்கரவாதிகள்' கொல்லப்பட்டுள்ளதாகவும், பொதுமக்கள் யாரும் பாதிக்கப்படவில்லை என்றும் ராணுவம் தெரிவித்துள்ளது. வடக்கு காஸாவில் விமானத்தில் இருந்து போடப்பட்ட மனிதாபிமான உதவிகளைச் சேகரிக்கும்போது 18 பாலத்தீனர்கள் கொல்லப்பட்டதாக காஸாவில் உள்ள ஹமாஸின் அரசு ஊடக அலுவலகம் செவ்வாயன்று கூறியது. உணவுப் பொட்டலங்களைச் சேகரிக்கும்போது 12 பேர் கடலில் மூழ்கி இறந்தனர். அதேநேரம் பொருட்களை எடுக்கும்போது ஏற்பட்ட ' கூட்ட நெரிசலில்' சிக்கி ஆறு பேர் இறந்தனர் என்று கூறப்பட்டது. இந்த அறிக்கையில் மேலதிக தகவல்கள் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. திங்களன்று வடக்கு நகரமான பைட் லாஹியாவில் கடற்கரைக்கு அருகே ஏர் டிராப்பின் போது குறைந்தது ஒரு நபராவது நீரில் மூழ்கியதை வீடியோ காட்சிகள் காட்டின. திங்களன்று அமெரிக்க விமானம் வடக்கு காஸாவில் 18 மனிதாபிமான உதவிப் பொட்டலங்களைப் போட்டதாக பென்டகனை மேற்கோள் காட்டி ராய்ட்டர்ஸ் தெரிவித்தது. ஆனால் பாராசூட்டில் ஏற்பட்ட கோளாறு காரணமாக அவை தண்ணீருக்குள் விழுந்தன. ஆனால் யாரும் உயிரிழந்ததை உறுதிப்படுத்த முடியவில்லை. இஸ்ரேலிய பிணைக் கைதி யூரியல் பரூச் கொல்லப்பட்டதாகவும், அவரது உடல் ஹமாஸிடம் இருப்பதாகவும் இஸ்ரேலிய ராணுவம் அவரது குடும்பத்திடம் கூறியதாக பிணைக்கைதிகள் மற்றும் காணாமல் போன குடும்பங்களின் மன்றம் தெரிவிக்கிறது. 35 வயதான, இரண்டு பிள்ளைகளின் தந்தையான பரூச், அக்டோபர் 7ஆம் தேதி சூப்பர்நோவா இசை விழாவின் போது காயமடைந்தார். பின்னர் அவர் கடத்தப்பட்டார். அதே நேரத்தில் காஸாவில் ஒரு காவலர் துப்பாக்கி முனையில் தன்னை பாலியல் வன்புணர்வு செய்ததாக நவம்பரில் விடுவிக்கப்பட்ட ஒரு பெண் பிணைக் கைதி நியூயார்க் டைம்ஸ் செய்தித்தாளிடம் கூறினார். நாற்பது வயதான அமித் சுசானா தான் சிறைப்பிடிக்கப்பட்ட போது பாலியல் வன்முறைக்கு ஆளானதாகத் தெரிவித்ததாக செய்தித்தாள் குறிப்பிடுகிறது. பிணைக் கைதிகள் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டதற்கான தெளிவான மற்றும் உறுதியான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாகவும், "அத்தகைய வன்முறை தொடரக்கூடும் என்று நம்புவதற்கு நியாயமான காரணங்கள் உள்ளன," என்றும் இந்த மாதத் தொடக்கத்தில் ஐ.நா குழு கூறியது. https://www.bbc.com/tamil/articles/cv2y4zzp76mo
    • பெரிய‌வ‌ரே நாம் த‌மிழ‌ர் க‌ட்சி 2021 ச‌ட்ட‌ ம‌ன்ற‌ தேர்த‌லில் பெற்ற‌ ஓட்டு ச‌த‌ வீத‌ம் 6:75 8ச‌த‌வீத‌ வாக்கு எடுத்து இருந்தா அங்கிக‌ரிக்க‌ ப‌ட்ட‌ க‌ட்சியாய் மாறி இருக்கும்...............இது கூட‌ தெரிய‌ வில்லை என்றால் உங்க‌ளுக்கு நாம் த‌மிழ‌ர் க‌ட்சியின் கொள்கை எப்ப‌டி தெரியும்...........சீமானுக்கு எதிரா எழுதுப‌வ‌ர்க‌ளின் க‌ருத்தை வாசிப்ப‌தில் உங்க‌ளுக்கு எங்கையோ த‌னி சுக‌ம் போல் அது தான் குறுக்க‌ ம‌றுக்க‌ எழுதுறீங்க‌ள்😁😜..............
    • 😀..... மிக்க நன்றி. இல்லை, நான் இங்கு முந்தி எழுதவில்லை. இந்த மாதம் முதலாம் திகதி தான் நான் இங்கு இணைந்தேன். இது சத்தியமான உண்மை. ஆனால் பல வருடங்களாக களத்தை வாசித்து வருகின்றேன்.
    • Courtesy: Mossad   இவ்விரு கருத்துருவாக்கங்களும் தற்கால இலங்கைத் தமிழ் அரசியல்ச் சூழலில் சுமந்திரன் என்ற தமிழரசுச் கட்சியின் முக்கிய பிரமுகருக்கு உரித்துடையவை. இருபதாம் நூற்றாண்டின் இறுதிக் காலப்பகுதிகளில் மென் வலு என்ற கருத்துடைவாத வார்த்தை ஜோசப் நையலினால் பிரபலப்படுத்தப்பட்டாலும் இருபத்தியோராம் நூற்றாண்டில் சர்வதேச உறவுகளை வடிவமைக்கவும், மேம்படுத்தவும், கையாளவும் தங்களது இலக்குகளை அடைவதற்கான வகையில் பிரயோகிக்கப்படும் ஒரு நியாயப்படுத்தல் பதமாக மாறி முக்கியத்துவம் பெற்றிருக்கின்றது. இவ் வார்த்தைப்பதமானது அரசியலில் பிரயோகிக்கப்படும் சந்தர்ப்பத்தில் குறித்த தளத்திற்கு ஒரு கொள்கைப் பிரகடனத்தின்பால் இறமையுடன் செயற்படும் ஒரு அங்கீகரிக்கப்பட்ட அரசாக அமைந்திருக்க வேண்டும். அரசுக்கு மாத்திரமே ராஜதந்திர நடவடிக்கைகள் மற்றும் நகர்வுகளை மேற்கொள்ள முடியும். பூகோள அரசியலின் நகர்வுகளுக்கு அமைவான நகர்வுகளை நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்ட இலக்கினை அடைவதற்காக மேற்கொள்ள முடியும். வெவ்வேறுபட்ட இரு வேறு நிலைப்பாட்டை உடைய அதிகார இறமைத் தளங்கள் தான் ஒன்றின் மீது மற்றொன்று மென்வலுவைப் பிரயோகிக்க முடியும். தொடர்தேர்ச்சியாக கால ஓட்டத்திற்கு அமைவாக மாற்றம்பெறும் தேவைகளை அடைவதில் பிரயோகிக்கப்படும் நெகிழ்ச்சியைக் குறிக்கும் ஒரு பதமாக மென்வலுப்பிரயோகம் என்பது அர்த்தப்படுத்தப்பட முடியும்.   அரசியலில் மென் வலுவைப் பிரயோகத்திற்கு உட்படுத்துவதற்கு இறமையுடைய மக்கள் ஆணையைப்பெற்ற ஒரு தளம் இன்றியமையாதது. அத் தளத்தின் இலக்குகள் மற்றும் தேவைகள் என்பன கால மாற்றத்திற்கு உட்பட்டவைகளாகவும் காலத்திற்கு காலம் மாறிகளாகவும் காணப்படுதல் அவசியமானது. கட்சிகள் மென்வலுவைப் பாவிக்க முடியுமா என்றதொரு ஆழமான கேள்விவரும் நிலையில், ஒரு நாட்டுக்குள் இருக்கும் கட்சிகள் இயல்பான நிலையில் ஒன்றுடன் ஒன்று மென்வலுவில் அணுக முடியாது. ஒரு கட்சி தன்னுடன் சம பயணத்தில் இருக்கும் பிறிதொரு கட்சியுடன் மென்வலுவில் அணுகுகின்றது என்றால் அணுகப்படும் கட்சியை விடவும் அணுகும் கட்சி மிகவும் நெய்மையான நிலையில் இருப்பதையும் கொள்கைகள் குன்றி வீரியம் குறைந்து வழியற்ற நிலையில் பிறிதொரு நிலைப்பாடுடைய கட்சியை தனது நலனுக்காக ஆதரிக்கின்றது என்ற கருத்து மேலோங்கலும், அணுகும் கட்சிக்கு கொள்கைகள், கோட்பாடுகள் என்பன நிலையானதாக இருக்க முடியாது என்பதையும் வெளிப்படுத்துவதாக அமையும். தமிழரசுக்கட்சியில் மென்வலு அரசியல் முன்னெடுப்புக்கள் தொடர்பில் பேசும்போது சுமந்திரனைத் தவிர்த்து ஒருவிடயங்களையும் பேச முடியாது. காரணம் தமிழரசுக் கட்சியில் மென்வலு அரசியலின் பிதாமகர் சுமந்திரனே ஆவர். தமிழரசுக் கட்சியானது அல்லது அன்றைய தமிழ்த்தேசியக் கூட்டமைப்பானது மென்வலு அரசியல் பிரயோகத்தினை இலங்கையின் அரசாங்கத்துடன் மேற்கொண்டிருந்தது. இங்கே தான் விடயச் சிக்கல்கள் உருவாகின்றது. இலங்கை அரசுடன் யாருக்கு மென்வலு நகர்வை மேற்கொள்ள முடியும்? இரு தரப்பும் வென்று அரசு அமைக்கும் ஒரே நோக்கத்திற்காக தேர்தலில் போட்டியிடுகின்றார்கள், ஒவ்வொரு கட்சியும் கூட்டணியும் தனித்துவமான தங்களது பண்புகளைக் கூறி வாக்குச்சேகரிக்கின்றார்கள். ஒரு தரப்பினர் ஆட்சியமைக்கின்றார்கள், மற்றைய தரப்புக்கள் எதிர்த்தரப்பு ஆகின்றார்கள். எதிர்த்தரப்பு ஆன தழிழரசுக்கட்சி அல்லது தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு ஆளுந்தரப்புடன் ஏதோவொரு சந்தர்ப்பத்தில் பொருத்திக்கொள்ளும் இணக்கங்களுக்கு மென்வலு அணுகுமுறை என அர்த்தம் கற்பிப்பதை விடவும் டக்ளஸ் தேவானந்தாவின் கட்சி அமைக்கப்பட்ட அரசாங்கத்துடன் இணைந்து இணக்க அரசியல் என்ற பதத்தினை பாவித்துக்கொண்டு பயணிப்பது நேர்மையானதும் உண்மையானதும் ஆகின்றது.   அரசியல் கட்சிகள் மென்வலு அரசியலைப் பிரயோகிப்பதை தெளிவாக வரையறுப்பதாயின், தேர்தலில் விஞ்ஞாபன ரீதியாக முன்வைக்கப்பட்ட விடயதானங்களை அப்பட்டமாக மீறி வாக்களித்த வாக்காளர்களையும் கட்சியின் தொண்டர்களையும் ஏமாற்றி அவ் வாக்குக்களால் ஆட்சியேறிய வேட்பாளர்கள் சுயதேவைக்காக தீர்மானங்களை மாற்றி அவற்றிற்கு அர்த்தம் கற்பிக்க பிரயோகிக்கும் ஒரு கவசவாய்க்கியமே மென்வலு என வரையறுக்கலாம். தமிழரசுக் கட்சி யார்மீது மென்வலு பிரயோகித்திருக்க முடியும்? ஒரு கட்சி தன்னுடைய கொள்கைகள், கோட்பாடுகள் மற்றும் பிரகடனங்களுடன் இணங்கிப்போகின்ற நிலையுடன் ஏதோ ஒரு பொது சிந்தனைக்காக இணைந்துள்ள ஒரு கட்சியுடன் அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட கட்சிக் கூட்டணியுடன் ஒரு நெகிழ்ச்சித் தன்மையான அணுகு முறைகளை கையாள முனைவதுதான் மென்வலு அணுகுமுறையாகும். மாறாக கட்சிகள் என்ற நிலையில் இருந்து ஆட்சியாளர்களானபின்னர் அது அரசாங்கம் என அழைப்படும். இவ்வாறு அரசாங்கத்துடன் மென்வலு அணுகுமுறை என கூறி ஒட்டிக்கொள்வது நிபந்தனைகள் அற்ற ஆதரவு என்பதே நிதர்சனமானது. இதற்கு பிரதியுபகாரமாக ஆட்சியாளர்கள் தங்களை தக்கவைப்பதற்காக இவ்வாறான கட்சிகளுக்கு பல சலுகைகளை வழங்கவோ அல்லது மென்வலுதாரர்கள் பெற்றுக்கொள்ளவோமுடியும். தமிழரசுக் கட்சியானது தான் அடங்கு கூட்டமைப்பாக உள்ள ஏனைய கட்சிகளுடனோ அல்லது கூட்டணிகளுடனோதான் மென்வலு அணுகுமுறையைக் கையாள முடியும். சற்று ஆழமாக நோக்கின் தமிழ் தேசிய கூட்டமைப்பில் காணப்படும் அங்கத்துவ கட்சிகளுடன் தமிழரசுக் கட்சி மென்வலுவைப் பிரயோகிக்க வேண்டுமே அன்றி அரசாங்கத்துடன் அல்ல என்பது மாத்திரமே யதார்த்தமாக உள்ளது. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆரம்பத்தில் அகில இலங்கைத் தமிழ் மக்கள் காங்கிரஸ் தொடக்கம் ஈற்றில் ரெலோ, புளொட் வரைக்கும் மென்வலுவின் தோல்வி காரணமாகவே சிதைந்து சென்றன என்பதை யாரும் மறுக்க முடியாது. இவ் அனைத்து சிதைவுகளிலும் ஒற்றுமைத்தன்மையான விடயமாக காணப்படுவது வெளிச்சென்ற அத்தனை கட்சிக்காரர்களது கைகளும் காட்டிய காரணகர்த்தா சுமந்திரன் மாத்திரமே. இவ்வாறான நிலையில் இலங்கை அரசாங்கத்துடன் தமிழ்தேசிய கூட்டமைப்பு மேற்கொண்ட இணக்க அரசியலை மென்வலு அணுகுமுறை என சுமந்திரன் தரப்பு விளிப்பது வேடிக்கைக்குரிய கருத்தாடல் ஆகின்றது. தமிழரசுக் கட்சி தான் அடங்கிய மற்றும் முன்னிலையில் இருந்த கூட்டணியில் கட்சிகளுக்கு இடையே உறவுகளை வடிவமைக்கவும், மேம்படுத்தவும,; கையாளவும் தங்களது இலக்குகளை அடைவதற்கான வகையில் பிரயோகிக்க வேண்டிய மென்வலு அணுகுமுறையை தவற விட்டு தமிழ் மக்களது தரப்பின் அரசியல் ஸ்திரத்தினை அடியோடு சாய்த்துவிட்டது என்ற பழியை எவ்வகையிலும் கடந்துசெல்ல முடியாது. இவ் அனைத்து கைங்கரியங்களும் தனியே சுமந்திரன் என்றதொரு ஒற்றை அரசியல்வாதியை மாத்திரமே நேரடியாகச் சாருகின்றன. மறுபுறம் இவற்றிற்கு எவ்வித எதிர்ப்பும் தெரிவிக்காது அனுமதித்த தமிழரசுக் கட்சியின் ஏனைய கட்சி உறுப்பினர்களையும் மௌமாக அனுமதித்தது, அல்லது இடையூறுகள் மேற்கொள்ளாது துணைபுரிந்தது என்ற வகையில் தவறானவர்கள் ஆக்குகின்றது. அவசியமான இடத்தில் பிரயோகிக்கத் தவறிய மென்வலுவை தங்களது சுயதேவை நிகழ்சிநிரல் நிறைவேற்றங்களுக்காக பாவிக்கப்பட்டதா? என்ற கேள்விக்கு தமிழரசுக் கட்சியின் 2024 கட்சித்தலைவர் போட்டி தேர்தல் வரைக்கும் சென்றதும் அதில் ஒரு வேட்பாளராக சுமந்திரன் முன்னிலைப்பட்டதற்குமுரிய அடிப்படை நடவடிக்கைத் தொடர்புகள் பற்றி சற்றே சிந்திக்கவேண்டியுள்ளது. சுமந்திரனின் ஆதரவுத் தளத்தில் உள்ள தமிழரசுக் கட்சிக்காரர்களுக்கு பாராளுமன்ற உறுப்பினர், மாகாண சபை உறுப்பினர் மற்றும் உள்ளுராட்சி மன்ற உறுப்பினர் பதவிகளை வழங்குவதாயின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ற சாம்பார் வாளியில் இருந்து தமிழரசுக் கட்சி என்ற கரண்டியை வெளியே எடுக்கவேண்டிய தேவை சுமந்திரனுக்கு பல ஆண்டுத் திட்டமிடலில் இருந்திருக்கின்றது என்ற விடயம் புலப்படுகின்றது.   ஆக மென்வலு என்பதற்குரிய வரைவிலக்கணத்தினை வினயமாக பாவித்து காரியமாற்றப்பட்டிருந்தால் தழிழர் தரப்பின் அரசியல் இன்னும் ஒரு படி முன்னகர்ந்து இருக்க வேண்டும். இங்கே மாறாக தமிழர் அரசியல் சுக்குநூறாகக் காணப்படுகின்றது. தமிழர் தரப்பின் எதிர்காலம் தொடர்பில் தெளிவான எந்தவொரு நடைமுறை அரசியல் நோக்கமும் தமிழ் தரப்பில் உள்ள அரசியல் கட்சிகளிடம் இல்லை. இவற்றுக்கு அப்பால் குறைந்தபட்சம் தமிழர்தரப்பு ஒற்றுமைகூட இல்லை. இருந்த ஒற்றுமையையும் சீர்குலைத்த சிறப்பு சுமந்திரனை மட்டுமே சார்ந்ததாக கடந்தகால செயற்பாடுகள் காண்பிக்கின்றன. மேலும், மென்வலுற்கு கிடைத்த பிரதியுபகாரமாக அமைச்சரவை அந்தஸ்துக்கு ஒப்பான வசதி வாய்ப்புக்களுடன் நல்லாட்சிக் காலத்தில் சுமந்திரன் நாடாளுமன்ற உறுப்பினராக வலம்வந்தார். உணர்வுமிக்க வாக்காளர்களுக்கு தனது செயற்பாடுகள் மீது நியாயம் கற்பிக்க கையாண்ட கவச வாய்க்கியமே மென்வலுவாக அர்த்தம்கொள்ளப்பட்டுள்ளது. மக்களது அங்கீகாரத்தில் அதிகாரத்தில் இருக்கும் அத்தனை அரசியல்வாதிகளும் எண்ணவேண்டும் தங்களது செயற்பாடுகளுக்குரிய அங்கீகாரம் பொதுவாக்காளர்ப் பெருமக்கள் போட்ட பிச்சையே அன்றி தங்கள் தங்களுக்குரிய ஆளுமைகள், ஆற்றல்கள் மற்றும் திறன்களால் கிடைக்கப்பெற்றவைகள் அல்ல என்றும், அலரி மாளிகையில் பருகும் ஒருகோப்பை விசேட அதிதிகளுக்கான தேனீர் கூட உங்களுக்கு உரியவைகள் அல்ல அது மக்களது ஆணைக்கு உரியவைகள் என்பதை தெளிவாக உணரவேண்டும். அலரி மாளிகையில் அதிகூடிய விசேட அதிதிகளுக்குரிய தேனீர் பருகிய முதல்நிலைத் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் என்றால் இன்றுவரையான காலப்பகுதியில் சுமந்திரன் மட்டுமே முன்னிலை வகிக்கின்றார். தாங்கள் செய்ய வேண்டிய கருமம் என்ன என்பதை குறைந்தபட்சம் அறியாத அல்லது பின்பற்றாத அரசியல் தலைமைகள் தமிழ் மக்களது உரிமை மற்றும் வாழ்வியல் மேலும் மேலும் சிக்கல்ப்பட கோடரிக் காம்புகளாக வலம் வருவார்களே அன்றி மீட்டார்கள் இல்லை என்ற வாதத்தினை மீணடும் உறுதிசெய்து செல்கின்றது சுமந்திரனின் மென்வலு பிரயோகம். உட்கட்சி ஜனநாயகம் என்ற பதம் தமிழரசுக் கட்சிக்குள் யாப்பிற்கு புறநீங்கலாகவும், எழுபது வருடங்களுக்கு மேற்பட்ட கால ஓட்டத்தில் இருக்காத ஒரு தத்துவமாகவும் 2024 தழிழரசுக்கட்சித் தலைவர் தெரிவிற்கான போட்டியில் இருந்து சுமந்திரன் வெளியிட்டுவரும் ஒரு நாகரீகக் கருத்தாக அமைந்திருக்கின்றது. உட்கட்சியின் தீர்மானங்கள் ஒவ்வொன்றும் ஜனநாயகப் பண்பில் எட்டப்பட்டவைகள் ஆக இருப்பின் அவை மிக மிக சிறப்பானது. தலைவர் பதவிக்காக சுமந்திரன் உட்கட்சி ஜனநாயகத்தின் உச்சப்பட்ச நம்பிக்கையில் போட்டியிட்டிருந்தார். சுமந்திரன் நிழல்த் தலைவராக தமிழரசுக் கட்சியில் செயற்பட்ட காலத்தில் நடைபெற்ற உட்கட்சி சம்பவங்கள் சிலவற்றை பட்டியலிட்டு பார்க்கையில், 01.தமிழ் தேசிய கூட்டமைப்பின் செயற்பாடுகளுக்குள் ஏனைய கட்சிகளுக்கு வழங்கிய செயன்முறைப் பெறுமானம். 02.தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருந்து கட்சிகள் வெளியேறியமை மற்றும் உள்வாங்கப்பட்டமை. 03.போர்க்குற்ற சர்வதேச விசாரணை முடிந்து விட்டது, 04.விக்னேஸ்வரன் முதலமைச்சராக இருந்த காலப்பகுதியில் ஏற்பட்ட முரண்பாடு. 06.மாவை சேனாதிராசாவுக்கு தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உரிமை மறுத்து கலையரசனுக்கு வழங்கியது. 07.சம்பந்தரது முதுமை காரணமாக பதவிவிலக அவரில் அக்கறை கொண்டு இரஞ்சியது. உதாரணத்திற்கு இது போன்ற சில பிரபலமான உட்கட்சிச் செயற்பாடுகளில் உட்கட்சி ஜனநாயகம் அறிந்து செயற்பட்ட தருணங்களை வாக்காளர்கள் உண்மையை உண்மையாக சிந்திக்க வேண்டும் என கேட்டுக்கொண்டு, சுமந்திரன் மீண்டும் உட்கட்சியின் ஜனநாயகத்தினை அறிவதற்காக தமிழரசுக் கட்சியின் தலைமைக்கு போட்டியிட்டாரம். இன்று கட்சி வழக்குவரை முன்னேறியிருக்கின்றது. ஜனநாயகம் என்றால் என்ன? என்பதற்கு சுமந்திரன் ஒரு நேர்காணலில் வழங்கிய ஒரு உவமானக் கதையுடன், ஒரு குடும்பத்தில் மூன்று பெண்பிள்ளைகளும் ஒரு ஆண்பிள்ளையும் இருக்கின்றார்கள். இவர்களது விடுமுறைக்கு வெளியே செல்ல குடும்பமாக திட்டமிடும் சந்தர்ப்பத்தில் ஆண்பிள்ளை ஒரு சாகசம் போன்றதொரு சுற்றுலாவை விரும்புகின்றார், பெண்பிள்ளைகள் மூவரும் இவ்வகையைத் தவிர்த்து ஒருமித்த குரலில் வேறு ஒரு விடயத்தினை தெரிவு செய்வார்கள். இவ்வாறான சந்தர்ப்பத்தில் ஜனநாயக தீர்மானமாக பெண்பிள்ளைகளின் தெரிவுதான் அமையும் என்ற கருத்துப்பட ஒரு அழகான கதையைக் கூறியிருந்தார். இன்று உட்கட்சி விவகாரம் நீதிமன்றத்தில் இருக்கின்றது. இச் சந்தர்ப்பத்தில் ஏழுபேருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்திருக்கின்றார்கள். இதில் சுமந்திரனை தவிர ஏனைய அறுவரும் ஒத்த நிலைப்பாட்டில் நீதிமன்றத்திற்கு தங்களது நிலைப்பாட்டினை அறிவித்திருக்கின்றார்கள். அதன்பால் வழக்கு முடிவுறுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. மாறாக மறு முனையில் சுமந்திரன் ஏனைய அறுவரது நிலைப்பாட்டுடனும் பொருந்தாது தான் மாத்திரம் வழக்கினை தொடர இருப்பதாக தெரிவித்திருப்பதாக அறிய முடிகின்றது. சுமந்திரன் தலைவர் தெரிவில் கூறிய உட்கட்சி ஜனநாயகம், சுமந்திரன் கூறிய உவமானக் கதை ஆகியவற்றின் அடிப்படையில் பார்க்கும்போது சுமந்திரனது இந்த தீர்மானம் மென்வலுப்பிரயோகமா? அல்லது உட்கட்சி ஜனநாயகமா? எந்த வகுதிக்குள் அடங்கும் என தலையைப் பிய்த்துக்கொள்ளவேண்டியுள்ளது. ஈற்றில் ஒன்றுமட்டும் தெளிவாகின்றது தன் தன் வசதிக்காக பல பல தத்துவங்களை பேசுபவர்கள் தவறிழைப்பவர்கள் என்பதை நிறுவுவதில் சுமந்திரனும் தவறவில்லை என்பதுடன், இவ்வழக்கு வென்றாலும் தோல்வி சுமந்திரனுக்கே, வழக்கு தோற்றாலும் தோல்வி சுமந்திரனுக்கே ஆகும். எதிர்வரும் தேர்தல் மிகவும் சவாலானது. கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் வந்து மனோகணேசன் தமிழரசுக் கட்சியில் தேர்தலில் தோன்றினால் எப்படியோ அதையும் தாண்டியதொரு நிலையிலேயே சுமந்திரனும் தேர்தலில் தோற்றவேண்டியிருக்கும். அடுத்த தேர்தலில் சுமந்திரன் யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தினை தவிர்த்து மட்டக்களப்பு மாவட்டத்தில் தேர்தலில் போட்டியிட்டு வெல்வாராக இருப்பின் தமிழரசுக் கட்சிக்குள் மென்வலுவும் உட்கட்சி ஜனநாயகமும் உயிர்ப்புடன் உள்ளது என்பதை நிறுவிக்காட்டமுடியும்.   பொறுப்பு துறப்பு! இக்கட்டுரையானது பொது எழுத்தாளர் Independent Writer அவரால் எழுதப்பட்டு, 28 March, 2024 அன்று தமிழ்வின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது. இக்கட்டுரைக்கும் தமிழ்வின் தளத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை. https://tamilwin.com/article/sumandran-politics-and-internal-party-democracy-1711577764
    • abaan மனிசி ஏன் இவ்வளவு பிடிவாதம் பிடிக்குது இலங்கையின் பெண்கள் கொஞ்சம் உசாரான ஆட்கள் தான் .
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.