Jump to content

சாதியை ஒழிப்பது எப்படி?


Recommended Posts

sathi_2828032f.jpg
 

சாதியற்ற தேசமாக மாற இந்தியாவில் சமூக, கலாச்சார மாற்றம் ஏற்பட வேண்டும்

ஐக்கிய நாடுகள் சபை முதன்முறையாக பாபா சாஹேப் அம்பேத்கரின் பிறந்த நாளைக் கொண்டாடியிருக்கிறது. கோடிக்கணக்கான இந்தியர்களுக்கும், உலகெங்கும் சமத்துவத்துக்காகவும் சமூக நீதிக்காகவும் போராடுபவர்களுக்கும் உத்வேகமாகத் திகழ்பவர், இந்தியாவின் நாயகரான அம்பேத்கர் என்று அது தெரிவிக்கிறது.

சமீபத்தில் ஐ.நா.வின் மனித உரிமைகள் ஆணையம் சார்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில், சாதியப் பாகுபாடுகள் பற்றிய விமர்சனமும் உள்ளது. அதற்கு இந்திய அரசு ஆட்சேபம் தெரிவித்துள்ளது. அந்த ஆட்சேபம், இந்திய அரசியல் சாசனத்தின் சிற்பியான அம்பேத்கருக்கு நிச்சயமாகத் திருப்தியானதாக இருக்காது.

ஏட்டளவிலும் நடைமுறையிலும்

ஐ.நா. அரங்கில் சாதிப் பிரச்சினை விவாதிக்கப் படுவதில் இந்தியாவுக்கு உள்ள எரிச்சலுக்குச் சமீபத்திய உதாரணம் இது. ரீட்டா ஈஸாக் - அந்தியாயெ எனும் ஐ.நா. பிரதிநிதியால் தயாரிக்கப்பட்ட அறிக்கை ‘பிறப்பு’ அடிப்படையிலான சாதிப் பாகுபாடுகளையும் தொழில்ரீதியிலான பாகுபாடுகளையும் தீண்டாமை நடைமுறைகளையும் வலுக்கட்டாயமான அகமண முறை போன்றவற்றையும் ‘உலகளாவிய நிகழ்வு’ என்கிறது. உலக அளவில் 25 கோடிக்கும் மேற்பட்டோரை இந்த நிகழ்வு பாதித்திருக்கிறது என்றும் குறிப்பிடுகிறது. இதில் பெரும்பாலானோர் இந்தியர்கள் என்றும், யேமன், ஜப்பான், மொரிஷியானா போன்ற நாட்டு மக்களும் பாதிப்படைந்திருக்கிறார்கள் என்றும் அது குறிப்பிடுகிறது.

பட்டியல் இனத்தவருக்கு எதிரான குற்றங்கள் பெருகிக்கொண்டே வருவதைத் தெரிவித்து ‘குற்றப்பதிவுகளுக்கான இந்தியாவின் தேசிய ஆணையம்’ (என்.சி.ஆர்.பி.) வெளியிட்ட தரவுகள் அதில் உள்ளன. தலித்துகளுக்கு எதிரான வன்கொடுமை 2013-ஐவிட 2014-ல் 19% அதிகரித்திருப்பதாக அந்தத் தரவுகள் சொல்கின்றன. கையால் மலம் அள்ளுவதைச் சட்டம் தடுத்திருந்தாலும் ‘உள்ளாட்சி அமைப்புகளும் நகராட்சிகளும் கையால் மலம் அள்ளுவோரை நியமிப்பதன்’ மூலம் அரசே அந்தச் செயல்பாட்டுக்கு அங்கீகாரம் கொடுத்திருக்கிறது என்று அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

சித்தாந்த ஆயுதம்

முன்னதாக, ‘இனவெறிக்கு எதிரான சர்வதேச மாநாடு’ 2001-ல் டர்பனில் நடைபெற்றபோது, இனவெறிப் பட்டியலில் சாதியையும் சேர்க்க வேண்டும் என்று இந்தியத் தன்னார்வ அமைப்புகள் முயற்சிசெய்தன. இந்திய அரசோ அதைக் கடுமையாக எதிர்த்தது.

இனவெறி, இனப் பாகுபாடு, பிற நாட்டார் மீதான வெறுப்பு மற்றும் இது தொடர்பான சகிப்பின்மை போன்றவற்றின் சமகால வடிவங்கள் குறித்து ‘தி ஹக்’ நகரத்தில் ஐ.நா. சார்பாக ஒரு மாநாடு 2006-ல் நடந்தது. இந்த விவகாரங்கள் தொடர்பான ஐ.நா.வின் சிறப்புப் பிரதிநிதி துது தியனா ‘மனித உரிமைகளும் தலித் பெண்களின் கண்ணியமும்’ என்ற கருத்தரங்கில் பேசியதிலிருந்து இந்தியா பாடம் கற்றுக்கொள்ள வேண்டும். “சட்டத்தைக் கடந்தும் நீங்கள் பார்த்தாக வேண்டும். அடையாளங்கள் குறித்த கருத்தாக்கம் நோக்கிச் செல்ல வேண்டும். இந்திய அடையாளம் என்பது பல நூற்றாண்டு காலமாக எப்படிக் கட்டமைக்கப்பட்டிருக்கிறது என்பதைப் பார்க்க வேண்டும். பாகுபாட்டின் எல்லா வடிவங்களின் வேர்களையும் வரலாற்றிலும் சித்தாந்தங்களிலும் காண முடியும். பாகுபாடு என்பது இயற்கையானது. அதாவது, இயற்கையின் ஒரு பகுதி. ஆகவே, அதை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று நம்மை நம்ப வைப்பதுதான் இனவெறியாளர்களும், பாகுபடுத்தும் சமூகத்தினரும் கைக்கொண்டுள்ள உத்தி. அவர்களின் சித்தாந்த ஆயுதம் அதுதான். அதில் எந்த வித உண்மையும் இல்லை. பாகுபாடு என்பது அண்டவெளியிலிருந்து வரவில்லை. ஆகவே, சாதிரீதியிலான பாகுபாட்டை வீழ்த்துவதற்காக அதன் வேர்களைக் கண்டறிந்து, வேரோடு பிடுங்கி எறிய வேண்டும். பாகுபாட்டின் கலாச்சாரத்தையும் மனப்போக்கையும் கட்டமைத்துக்கொண்டிருக்கும் இந்த விஷயத்தை அழித்தொழிப்பதற்கான அறம்சார்ந்த, அறிவுபூர்வமான இந்த வழிமுறையைக் கைக்கொள்ளுங்கள்” என்று துது பேசியிருந்தார்.

இந்தியா சுதந்திரமடைந்து 68 ஆண்டுகள் ஆனாலும் நம்பவே முடியாத அளவுக்குச் சமூகப் பாகுபாடு களையும், ரத்தத்தை உறையவைக்கும் வன்கொடுமை களையும் நாடெங்கும் தலித் மக்களும் ஆதிவாசிகளும் எதிர்கொள்வது இன்னமும் தொடர்கிறது. ‘பயன்பாடுசார் பொருளாதார ஆய்வுக்கான தேசிய ஆணைய’மும் அமெரிக்காவின் மேரிலாண்ட் பல்கலைக்கழகமும் ஒரு ஆய்வை நடத்தியது. அதில் நான்கில் ஒரு இந்தியர் தனது வீட்டில் ஏதாவது ஒரு வடிவத்தில் தீண்டாமையைக் கடைப்பிடிப்பதாக ஒப்புக்கொண்டிருக்கிறார். இந்தியாவின் அனைத்து மதங்களையும் சாதிகளையும் சேர்ந்தவர்களும் - முஸ்லிம்கள், கிறித்தவர்கள், பட்டியல் இனத்தவர், சீர்மரபினர் போன்றோர் உட்பட - தாங்கள் தீண்டாமையை ஏதொவொரு வடிவத்தில் கடைப்பிடிப்பதாக ஒப்புக்கொண்டிருக்கிறார்கள் என்று ‘இந்திய மனித மேம்பாட்டு ஆய்வு’ (2011-2012) தெரிவிக்கிறது. ஆகவே, வெறும் அடையாளபூர்வமான செயல்பாடு மட்டுமே போதாது. சாதியப் பாகுபாடு என்ற நூற்றாண்டுகள் பழமையான, மனிதத்தன்மையற்ற சுமையை இந்தியா ஒட்டுமொத்தமாக உதறித்தள்ள வேண்டிய தருணம் இது. இந்தியா மறைப்பதற்கென்று ஏதும் அதனிடம் இருக்கக் கூடாது, யதார்த்தத்தை, அது எப்படி இருக்கிறதோ அப்படியே பார்த்து, அதில் உள்ள பிரச்சினைகளை நேருக்கு நேர் எதிர்கொள்ள வேண்டும்.

மாற்றத்தை நோக்கி…

சாதியற்ற தேசம் என்ற இலக்கை நோக்கி இந்தியா செல்ல வேண்டுமென்றால் சமூக, கலாச்சார மாற்றம் ஒன்று ஏற்பட வேண்டும். அது இந்தியா முழுவதையும், அனைவரையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும். இதற்கான பாதையை அம்பேத்கர் நமக்கு இப்படிக் காட்டியிருக்கிறார்: “எந்தத் திசையில் வேண்டுமானாலும் பாருங்கள்! சாதி என்ற அரக்கன் உங்களுக்குக் குறுக்கே பாதையை மறைத்துக்கொண்டு இருப்பான். அந்த அரக்கனைக் கொன்றழிக்காமல் உங்களால் அரசியல் சீர்திருத்தத்தையோ பொருளாதாரச் சீர்திருத்தத்தையோ அடைய முடியாது.”

உண்மையில் இன்றைய தலித் அரசியல் பார்வை என்பது சமூகத்தில் மிகவும் ஒடுக்கப்பட்டவர்கள், சுரண்டப்பட்டவர்கள், சாதி அமைப்பின் விளிம்பு நிலையில் உள்ளவர்கள் போன்றோரை மட்டும் உள்ளடக்கியது அல்ல; பிராமண மேலாதிக்கத்தை எதிர்த்து 1970-களிலும் 1980-களிலும் போராடிய பிற்படுத்தப்பட்ட சாதிகள், ஆதிவாசிகள் போன்றோரையும் உள்ளடக்கியதுதான். இன்றைய தலித் அரசியல் சித்தாந்தம் என்பது பகுஜன் சமாஜ் கட்சியின் உரை வீச்சுகளையும், குடியரசுக் கட்சியின் பிரிவுகளையும், காங்கிரஸ், பாஜக, சமாஜ்வாதி கட்சி, ஐக்கிய ஜனதா தளம் போன்றவற்றின் அடையாள தலித் ஆதரவையும், ஏன் தாழ்த்தப்பட்ட சாதியினர் சார்ந்த மாவோயிஸ்ட் இயக்கங்களையும் தாண்டிச் சென்றுவிட்டது.

அம்பேத்கரை ‘இந்து சீர்திருத்தவாதி’ என்ற நோக்கில் பார்க்கும் முயற்சிகள் அவற்றின் உள்முரண்பாடுகள் காரணமாக வெற்றிபெறாது என்பதை ரோஹித் வெமுலாவின் தற்கொலை அம்பலப்படுத்திவிட்டது. இந்துத்துவத்தின் பிராமணிய மேலாதிக்கத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஏ.பி.வி.பி அமைப்புக்கு எதிராக ஹைதராபாத் மத்திய பல்கலைக்கழகத்தின் அம்பேத்கர் மாணவர் அமைப்பு எழுப்பிய சவால் தலித் அரசியல் பார்வையை அடிப்படையாகக் கொண்டதே.

கடந்த 68 ஆண்டுகளாகக் காப்பாற்றப்படாமல் இருந்த நமது உறுதிமொழி ஒன்றுக்கு நாம் இப்போது உயிர்கொடுப்போம்; இந்தியாவின் ஆதிவாசிகள், தலித் மக்கள், விளிம்பு நிலையினர், ஏழை மக்கள் ஆகிய சமூகத்தின் கடைக்கோடி ஆண்களுக்கும் பெண்களுக்கும் வாழ்வதற்கான வழியை ஏற்படுத்திக்கொடுத்து, உண்மையிலேயே அவர்களுக்கு உரியவற்றை அவர்களுக்கு அளிப்போம். இந்திய மக்களுக்கு முன்னால் உள்ள சவால் இதுதான்.

- சுஹாஸ் போர்க்கர்,

சிட்டிஸன்ஸ் ஃபர்ஸ்ட் டிவியின் எடிட்டர், மாற்று வழிமுறைகளுக்கான அமைப்பொன்றின் ஒருங்கிணைப்பாளர்.

© ‘தி இந்து’ (ஆங்கிலம்), சுருக்கமாகத் தமிழில்: ஆசை

 

http://tamil.thehindu.com/opinion/columns/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%92%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF/article8518936.ece?homepage=true&theme=true

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஈராக்கில் (Iraq) உள்ள ஈரானுக்கு (Iran) ஆதரவான கல்சோ இராணுவத் தளம் மீது மிகப்பெரிய குண்டுத்தாக்குதல் ஒன்று நடத்தப்பட்டுள்ளது. இந்தத் தாக்குதலில் அணிதிரட்டல் படையை சேர்ந்த ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 8 பேர் காயமடைந்துள்ளனர். குறித்த தாக்குதலுக்கு பின்னால் யார் உள்ளனர் என ஈராக்கின் பாதுகாப்பு வட்டாரங்கள் இன்னும் உறுதியான தகவல் எதையும் வெளியிடவில்லை. அத்துடன், குண்டுவெடிப்புக்கு முன்னதாக இப்பகுதியில் உள்ள வான்வெளியில் ட்ரோன்கள் அல்லது போர் விமானங்கள் எதுவும் கண்டறியப்படவில்லை எனவும் இதன்போது தெரிவிக்கப்பட்டுள்ளது. உரிய பதிலடி இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான மோதல் புதிய கட்டத்தை எட்டியுள்ளதால் மத்திய கிழக்கு நாடுகள் அனைத்தும் மிகவும் எச்சரிக்கையாக உள்ளன.   இந்நிலையில், இஸ்ரேல் மீது ஈரான் நடத்திய ஏவுகணை தாக்குதலுக்கு பதிலடி அளிக்கும் விதமாக நேற்று ஈரானின் இஸ்பஹான் நகர் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது.   அதேவேளை, ஈரானிய நலன்கள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தினால் உரிய பதிலடி வழங்கப்படும் என ஈரானின் வெளியுறவுத் துறை அமைச்சர் ஹொசைன் அமீர் அப்துல்லாஹியன் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.  https://tamilwin.com/article/iran-vs-israel-war-update-today-1713602121?itm_source=parsely-detail
    • 1. கருணாநிதி, குடும்பத்தையே தேர்தலில் மேடை போட்டு நாறடிச்சுவிட்டு, தேர்தலில் திமுக வென்றதும் - ஸ்டாலினை சந்தித்து அதே கருணாநிதி போட்டோ முன் பவ்வியமாக கைகட்டி கூழை கும்பிடு போட்டது தைரியம் என்றால் - நாம் பயந்தவர்களாகவே இருந்து விட்டு போகிறோம். 2. ஊழலை எதிர்த்து தொண்டை புடைக்க பேசி விட்டு, சசி ஜெயிலால் வந்து முகம் கழுவ முன்னம் அவரை போய் சந்தித்து விட்டு, பத்திரிகையாளருக்கு பயந்து பின் கதவால் ஓடியது தைரியம் என்றால் - நாம் பயந்தவர்களாகவே இருந்து விட்டு போகிறோம். 3. விஜி அண்ணி புகாரில் இருந்து தப்பிக்க, உதய்யிடம் இரவு 2 மணிக்கு போன் பேசுவது தைரியம் என்றால் - நாம் பயந்தவர்களாகவே இருந்து விட்டு போகிறோம். 4. தமிழ் இறையியலை மீட்ப்போம் என மார்தட்டி விட்டு - ஒரு பிராமணியை எதிர்க்க திராணி இல்லாமல் சமஸ்கிருதத்தில் மகனிற்கு காது குத்தும் மந்திரத்தை ஓத விட்டது தைரியம் என்றால் - நாம் பயந்தவர்களாகவே இருந்து விட்டு போகிறோம். 5. குடும்ப அரசியலை ஒழிப்பேன் என கதறிவிட்டு - மனைவி சொல்லுக்கு பயந்து மச்சினன் அருண் காளிமுத்துக்கு சீட் கொடுத்தது தைரியம் என்றால் - நாம் பயந்தவர்களாகவே இருந்து விட்டு போகிறோம். 6. தமிழ், தமிழ் என மேடை தோறும் கூவி விட்டு, அவர்களின் எதிர்கால வாய்ப்பு கெட்டு விடும் என பிழையாக பயந்து மகன்களை ஆங்கில வழி கல்வியில் சேர்த்தமை தைரியம் என்றால் - நாம் பயந்தவர்களாகவே இருந்து விட்டு போகிறோம். # பயம் #தான் #கொள்ளி🔥🔥🔥🤣
    • கலோ...ஒரு பொது தளத்தில் வருடத்திற்கு ஒரு பெயர் மாத்த ஏலாது..சும்மா ஏப்பிரல் பூலுக்கு ஏதாச்சும் ஏழுதினாலலே காவிட்டு திரியிற உலகம் இது..சோ..நாம் உலாவும் இடங்களில் மற்றவர்களின் சுதந்திரந்தையும் பார்த்துக்கொள்ள வேணும் புறோ..நீங்கள் நினைச்ச எல்லாம் செய்ய இயலாது..மற்ற பயனாளர்களின் சுதந்திரமும் , வாழ்வும் இதற்குள் அடங்கியிருக்கிறது.🙏🖐️
    • "காதல் & காமம்" [காதல் ஈவு, இரக்கம் சார்ந்தது. காமம் இச்சை, இம்சை சார்ந்தது.]   காதல் கை கொடுக்கும். காமம் கை விடும். காதல் குறுகுறுப்பு. காமம் கிளுகிளுப்பு. காதல் ஏற்றம் தரும். காமம் ஏமாற்றம் தரும். காதல் வயல்வெளி. காமம் புதைகுழி. காதல் பாசவலை. காமம் நாச வேலை. காதலில் காமம் அடங்கும். காமத்தில் காதல் முடங்கும். காதலில் 'நீயும் நானும்' இருக்கும். காமத்தில் 'நீயா நானா' இருக்கும்   ஆனால் காதல் நிலைக்க காமமும் கூட்டுச் சேரவேண்டும்  ஊடலும் கூடலும் அதற்கு ஒரு உதாரணம் 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.