Jump to content

முள்ளில் மலரும் பூக்கள் - கஸல் கவிதை


Recommended Posts

உன்முகம் .....
பூரண சந்திரன் ....
வார்த்தைகள் சூரியன் ...
நம் காதல் சிலவேளை 
குளிர்கிறது  .....
சுடுகிறது .....!!!

இதயத்தை முள்ளாய் ....
வைத்துக்கொண்டு ...
கண்ணை மலராய் ....
வீசுகிறாய் ....!!!

காதல் குயவன் ....
கையில் பானைபோல் ....
அழகாக வடித்தால்....
அழகுதான் ,.........!!!

^
முள்ளில் மலர்ந்த பூக்கள் 
கஸல் கவிதை 
கவிப்புயல் இனியவன் 
1026
 

Link to comment
Share on other sites

  • Replies 70
  • Created
  • Last Reply

உன் நினைவுகளின் ....
எண்ணங்களோடு ....
தூங்கினேன் -நீ 
கனவில் கூட வரவில்லை ....!!!

காதல் 
நிறைந்த இடத்தில் ....
வாழ பொருத்தமில்லாதவள் ....
காதலே இல்லாத இடத்தில் ....
உன்னை சேர்த்து விடுகிறேன் ....
என்னோடு வந்துவிடு .....!!!

நான் 
விடுவது கண்ணீர் ....
என்று நினைக்கத்தே ....
நீ தந்த நினைவுகள் ....!!!

^
முள்ளில் மலர்ந்த பூக்கள் 
கஸல் கவிதை 
கவிப்புயல் இனியவன் 
1027
 

Link to comment
Share on other sites

உன்னை காதலிக்கும் ....
போதே கற்று விட்டேன் .....
நீ தரும் வலியை எப்படி ....
சுமப்பதென்று .....!!!

உனக்கு என் ஞாபகங்கள் ....
பறக்கும் பஞ்சு ....
எனக்கு தலையணை பஞ்சு ....
தினமும் அதில் தூங்குகிறேன் ....!!!

காதல் இரு வழி பாதை ....
எனக்கோ இரு வலி பாதை ....
உன்னையும் சுமக்கிறேன் ....!!!

^
முள்ளில் மலர்ந்த பூக்கள் 
கஸல் கவிதை 
கவிப்புயல் இனியவன் 
1028

Link to comment
Share on other sites

நிச்சயமாக நீ 
என் நினைவுகளால் ....
வதைக்கப்படுகிறாய் ....
இங்கு என் இதயம் ...
கண்ணீர் விடுகிறது ....!!!

என் இதயம் ....
வீதியோர சுமைதாங்கி ....
இறக்கிவை உன் சுமையை ...

காதல் ...
ஊதும் பலூனுனை போல் ....
அளவாக காற்றை ....
ஊதவேண்டும் .....!!!

^
முள்ளில் மலர்ந்த பூக்கள் 
கஸல் கவிதை 
கவிப்புயல் இனியவன் 
1029

Link to comment
Share on other sites

உன் 
இதய சிறை கைதி நான் ....
நினைவுகளால் மீண்டும் ...
விலங்கிடாதே .....!!!

உன் பார்வையால் ...
கவிஞனாகினேன் ....
நீ காதலித்தால் ...
பித்தனாகிவிடுவேன் ....!!!

உன் கண்ணில் காதல் ....
இல்லை - கண்ணாடியை ....
பார் உன் கண்ணுக்குள் ....
நான் இல்லை .....!!!

^
முள்ளில் மலர்ந்த பூக்கள் 
கஸல் கவிதை 
கவிப்புயல் இனியவன் 
1030

 

Link to comment
Share on other sites

நீ 
காதல் விளக்கு... 
அருகில் வருகிறேன்..... 
அணைந்து விடுகிறாய் ....!!!

ஒற்றை பார்வை ....
பார்த்தாய் அதுதான் ....
ஒற்றையாய் நிற்கிறேன் ....!!!

கறை படிந்த துணியில் ....
அழுக்கு இருப்பதுபோல் ....
என் இதயத்தில் நீ .....!!!

^
முள்ளில் மலர்ந்த பூக்கள் 
கஸல் கவிதை 
கவிப்புயல் இனியவன் 
1031
 

Link to comment
Share on other sites

அப்படியே 
நினைத்து பார்க்கவே ....
பயமாக இருக்கிறது 
நம் காதலை .....!!!

ஓடாமல் இருக்கும் 
மணிக்கூட்டில் நான் ...
நிமிட முள்ளாய் ...
இருந்தென்ன பயன் ....?

அணைத்தேன் துன்பம் ...
அழைத்தேன் இன்பம் 
நீ அருகில் இருப்பதை ...
விட தூர இரு .....!!!

^
முள்ளில் மலர்ந்த பூக்கள் 
கஸல் கவிதை 
கவிப்புயல் இனியவன் 
1032
 

Link to comment
Share on other sites

நீ 
புல்லாக வளர்ந்து விடு ....
நான் எருதாக வந்து ...
மேய்ந்து விடுகிறேன் ....
அப்போதாவது நாம் ...
இணைவோம் .....!!!

நீ 
கண்ணை தான் ....
சிமிட்டினாய் ....
கல் பட்ட கண்ணாடி ....
ஆகிவிட்டேன் ......!!!

உன்னை இனிபார்க்க‌
துடிக்க‌ மாட்டேன்
என் இதயத்தில் நீ 
துடிப்பது போதும் ....!!!

முள்ளில் மலர்ந்த பூக்கள் 
கஸல் கவிதை 
கவிப்புயல் இனியவன் 
1033
 

Link to comment
Share on other sites

நான் கண்ணால் ...
காதல் கோலம் ....
போடுகிறேன் -நீ 
கண்ணீரால் .....
அழிக்கிறாய்.....!!!

காதலில் 
பூக்கள் சிரித்ததை 
விட வாடியதுதான் 
அதிகம் .......!!!

உனக்கு நான் 
காதலன் உறவு 
நீ எனக்கு எப்போ ...?
காதல் .......
உறவாகப்போகிறாய் .....?

&
முள்ளில் மலர்ந்த பூக்கள் 
கஸல் கவிதை 
கவிப்புயல் இனியவன் 
1034

Link to comment
Share on other sites

உன் இதயம்.... 
மர்மதேசம் ......
புரியாத புதிர் -நீ ....!!!

நடந்துவந்தேன் 
வீதியால் -உன் 
சிரிப்பில் தடக்கி 
விழுந்துவிட்டேன் ....!!!

காதல் கிணற்றில் ....
மூச்சு திணறுகிறேன்.....
காப்பாற்றுவாய் ....
என்றால் அமுக்கி ...
விடுகிறாய் ......!!!

&
முள்ளில் மலர்ந்த பூக்கள் 
கஸல் கவிதை 
கவிப்புயல் இனியவன் 
1035
 

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

வலமிருந்து ....
இடமாக காதல் ...
தேவதையை சுற்றி ....
வரவேண்டும் .....(+)
நம் காதல் தோஷம் ....
இடமிருந்து வலமாக ....
சுற்றுகிறேன் .......!!!(-)

வாடி விழும் பூவின் ....
நெத்து மரமாகி ....
மீண்டும் பூக்கும் ...(+)
நீ  வாடித்தான் ....
விழுந்தாய் ......
பூவின் மென்மை கூட .....
உன்னில் இல்லை ....!!!(-)

அடுத்த ஜென்மத்தில் ....
என் இதயத்தை ....
ஈரமாக படைக்காதே ...(-)
வீரமாக படைத்து விடு ....!!!(+)

&
முள்ளில் மலர்ந்த பூக்கள் 
கஸல் கவிதை 
கவிப்புயல் இனியவன் 
1036
 

Link to comment
Share on other sites

வெள்ளத்தில் கத்தும் ....
தவளைக்கு ஒரு இரவு ....
இன்பம் .....
உன்னை பார்த்த ....
ஒரு இரவு எனக்கு ....
துன்பம் .....!!!

ஈர்ப்பால் கோள்கள் ....
சுற்றுகிறது ....
மோதியத்தில்லை ....
உன் ஈர்ப்பில் ...
சுற்றும் நான் ....
காயப்பட்டு விட்டேன் ...!!!

ரோஜா சிவப்பு ....
கொடுத்த இதயத்தில் ....
இரத்தம் வடிவத்தால் ....!!!

&
முள்ளில் மலர்ந்த பூக்கள் 
கஸல் கவிதை 
கவிப்புயல் இனியவன் 
1037

Link to comment
Share on other sites

நான் 
இரவு நேர இதய ....
காவலாளி .....
கனவில் கூட நீ 
வருவதை தடுக்க ....!!!

உன் 
நினைவுகளால் .....
இதயத்தில் தாஷ்மஹால் ...
காட்டுகிறேன் ....
வலிகள் தான் செலவு ....!!!

காற்றில் உரசும் ....
மரக்கொப்புக்கு உள்ள ....
இன்பம் கூட நமக்குள் ....
இல்லை .....!!!

&
முள்ளில் மலர்ந்த பூக்கள் 
கஸல் கவிதை 
கவிப்புயல் இனியவன் 
1038

Link to comment
Share on other sites

சிரிப்பதற்கும் ....
அழுவதற்கும் ...
சிறந்த பயிற்சி ....
காதல் ................!!!

துணிந்து ....
செல் வெற்றி ....
என்கிறது உலகம் ....
காதலை தூக்கி ....
எறிகிறது...........!!!

நான் ...
முறிந்து விழுந்த மரத்தில் ...
ஈரம் உள்ளவரை .....
துளிர் விடுவேன் .....!!!

&
முள்ளில் மலர்ந்த பூக்கள் 
கஸல் கவிதை 
கவிப்புயல் இனியவன் 
1039
 

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

கடல் ......
கரையில் இருந்து ....
அக்கரையை பார்க்கும் ....
போது நிலமும் வானமும் ....
முத்தமிடும் .....
நம் காதலை போலவே .....
எல்லாம் மாயை ......!!!

பூவில் .....
இருக்கும் தேனும் .....
பூவின் கீழ் இருக்கும் ....
முள்ளும் நீதான் .....
எப்படி போடுகிறாய் ....
வேஷம் ......?

கடல் கரையில் ....
தோன்றிய நம் காதல் ....
அலைபோல் வந்து வந்து ....
போகிறது .......!!!

&
முள்ளில் மலர்ந்த பூக்கள் 
கஸல் கவிதை 
கவிப்புயல் இனியவன் 
1040
 

Link to comment
Share on other sites

காதல் ஒரு ....
மந்திர உலகம் .....
சிரிப்பில் தோன்றி ....
கண்ணீரில் முடியும் ....!!!

பேசாமல் இருந்தபோது ....
காதல் இனித்தது ....
பேசினாய் - காதல் .....
வெறுத்து விட்டது ......!!!

உன்னை கண்ணில் .....
தேடுகிறேன் ....
நீ கண்ணீரில் வந்து .....
போகிறாய் ......!!!

&
முள்ளில் மலர்ந்த பூக்கள் 
கஸல் கவிதை 
கவிப்புயல் இனியவன் 
1041
 

Link to comment
Share on other sites

மின்னலை பார்த்தால் .....
கண் கெட்டுவிடும் ....
என்  கண்ணில் நீ ....
பட்டாய்     நான் .......
பட்டுவிட்டேன் ....!!!

மதுவை விட போதை நீ .....
மது உயிரை குடிக்கும் ....
நீயோ............ 
உயிரை வதைக்கிறாய் .....!!!

காதலை .....
ஆரம்பித்ததும் நீ ....
முடித்ததும் நீ ......
நான் என்ன பாவம் ....
செய்தேன் ......?

&
முள்ளில் மலர்ந்த பூக்கள் 
கஸல் கவிதை 
கவிப்புயல் இனியவன் 
1042
 

Link to comment
Share on other sites

  • 3 weeks later...

நீ....
பூப்போல் .....
பேசிய வார்த்தைகள்....
இப்போ புண்ணாய்.....
மாறுகிறது.......!!!

காதலால் காலனை......
சந்தித்தவன் நான்......
வீசு பாசக்கயிறை......
மார்கண்டேயன் நான்.....!!!

காதல் கண்ணீரில்......
நீச்சல் அடிக்க வைச்சவள்.....
அப்போதும் உன் காதல்.....
கரை தெரியவில்லை.......!!!

&
முள்ளில் மலரும் பூக்கள்
கஸல் கவிதை
கவிப்புயல் இனியவன்

1043

Link to comment
Share on other sites

நான்....
காற்றில் ஆடும் பட்டம்.....
உன் கையில் நூல்....
என்ன வேண்டும் என்றாலும்.....
நீ தான் முடிவெடு.......!!!

காட்டுக்குள்....
தனியாக கண்ணை கட்டி ....
விட்டவனைபோல்....
உன்னை பிரிந்த பின் .....
நிற்கிறேன்......
நீ தான் காப்பாற்ற வேண்டும்.....!!!

உன்னோடு அலைந்த நாட்கள்....
மண்ணோடு மறையும் வரை....
தந்தவள் நீ.............!!!

முள்ளில் மலரும் பூக்கள்
கவிப்புயல் இனியவன்
கஸல் கவிதை
1044

Link to comment
Share on other sites

  • 4 weeks later...

காதலில் நான் ......
மூலவேர் - நீயோ.....
இலை ஒரு நாள்.....
உதிர்ந்து விழுவாய்........!!!

நீ
பனிக்கட்டியில் உருவாகிய.....
கப்பல் தெரியாமல் உன்னில்......
பயணம் செய்துவிட்டேன்.......!!!

என் காதல் தீபமே........
உன்னை அணைத்தேன்........
அணைந்தே விட்டாயே......!!!!

&^&
முள்ளில் மலரும் பூக்கள்
காதல் கஸல் கவிதை
கவிப்புயல் இனியவன்

Link to comment
Share on other sites

நீயும் காதல்......
சிறகு கொண்ட பறவை.....
பருந்தல்ல......
என்னோடு பறந்து வர.....
தயங்குகிறாய்.....!!!

காதலில் 
அதிகமாக எரியாதே....
சாம்பலாகி விடுவாய்
உலகம் ஊதியே மறைத்து....
விடும்............!!!

காதலை ....
உண் - உன் காதல்.....
நம் காதல் ஆகிவிடும்....!!!

&^&
முள்ளில் மலரும் பூக்கள்
காதல் கஸல் கவிதை 1048
கவிப்புயல் இனியவன்
 

Link to comment
Share on other sites

கஸல் கவிதை பற்றிய சிறு விளக்கம் 
-------------------------------------------------------

பலருக்கு கஸல் கவிதை என்றால் என்ன ...?
என்ற ஒரு சந்தேகம் இருக்கிறது .அதை புரியாமல் 
வாசித்தால் இந்த கவிதையில் சுவாரிஸம் இருக்காது .
பொதுவாக கஸல் காதல் வலியை சொல்லும் கவிதை 
முறை . ( மற்ற வகைகளும் எழுதலாம் )

இதில் 3 சந்தங்கள் குறைந்தது எழுதணும் 
( 5 .7 வகையிலும் எழுதலாம் ) ஒரு சந்தத்துக்கும் 
மற்றையத்துக்கும் தொடர்பு வர கூடாது .

அதிக சொற்கள் பயன்படுத்த கூடாது 
ஒரு வரி நேராக (+) இருந்தால் மற்ற வரி எதிராக இருக்கணும் (-)
3 சாந்தமும் ஒன்றுடன் ஒன்று தொடர்பு படக்கூடாது 
ஆனால் 3 பத்தியும் வெளிப்பதும் தாக்கம் ஒரே கருத்தாக இருக்க வேண்டும் ....

உதாரணத்துக்கு ஒரு கவிதை 
-----
வலமிருந்து ....
இடமாக காதல் ...
தேவதையை சுற்றி ....
வரவேண்டும் .....(+)
நம் காதல் தோஷம் ....
இடமிருந்து வலமாக ....
சுற்றுகிறேன் .......!!!(-)
----- 01
வாடி விழும் பூவின் ....
நெத்து மரமாகி ....
மீண்டும் பூக்கும் ...(+)
நீ வாடித்தான் ....
விழுந்தாய் ......
பூவின் மென்மை கூட .....
உன்னில் இல்லை ....!!!(-)
-----02
அடுத்த ஜென்மத்தில் ....
என் இதயத்தை ....
ஈரமாக படைக்காதே ...(-)
வீரமாக படைத்து விடு ....!!!(+)
-----03
&
கஸல் கவிதை 
கவிப்புயல் இனியவன்

Link to comment
Share on other sites

இதயத்தின் வேலை .....
துடிப்பது மட்டுமல்ல....
துடிக்கவும் வைக்கணும்.....!!!

எவ்வளவு தான் ....
உன்னை சுற்றி வந்தாலும்....
நிமிட முள் போல்......
நீதான் முந்திக்கொண்டு
செல்கிறாய் என்னை ......
கவனிக்காமல்.......!!!

இதயத்துக்குள்.....
காதல் யாரையும் கேட்டு.....
வருவதில்லை......
அப்புறம் எதற்கு......
போகும்போது 
கவலைப்படுகிறீர்கள் ......!!!

&^&
முள்ளில் மலரும் பூக்கள்
காதல் கஸல் கவிதை 1049
கவிப்புயல் இனியவன்

Link to comment
Share on other sites

உன் 
தலை குனிவின் .....
அர்த்தமென்ன....
வெட்கமா....?
வெறுப்பா.....?

காதலால்.....
கோலம் போடும் ....
போதெல்லாம்.......
கண்ணீரால்.......
அழித்துவிடுகிறாய்......!!!

காதலை...
மறைத்து மறைத்து....
வைத்தே மறைந்து....
போய்விட்டாய்......!!!

&^&
முள்ளில் மலரும் பூக்கள்
காதல் கஸல் கவிதை 1050
கவிப்புயல் இனியவன்
 

Link to comment
Share on other sites

  • 1 month later...

எதிரும் புதிருமாய் .....
காதலில் பேசினாய் ....
நீரும் நெருப்புமாய் ....
அணைந்துவிட்டோம் ....!!!

முள்ளும் மலருமாய் .....
உன் நினைவுகள் .....
இரவும் பகலும் .....
வந்து கொல்கிறது.........!!!

வாழ்க்கை 
மேடு பள்ளம் தான் ....
அதற்காக பள்ளத்திலேயே .....
வாழ்வதா ......?

&^&
முள்ளில் மலரும் பூக்கள்
காதல் கஸல் கவிதை 1051
கவிப்புயல் இனியவன்
 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நல்லது  உற‌வே அப்படிபட்ட  நீங்கள் தமிழ்நாட்டில்  சீமான் தனது மகனுக்கு ஆங்கில மோகத்தால் ஆங்கில வழி கல்வி கற்ப்பிப்பதை எதிர்க்கவில்லையே. 😭  இலங்கையில்  தமிழர்களும் சிங்கலவர்களும் தங்கள் மொழிகளில் கல்வி கற்பது போன்று மற்றய நாட்டு மக்களும் தங்கள் மொழியில் கல்வி கற்பது போன்று சீமான் தனது மகனுக்கு தமிழ் வழி கல்வி கற்பித்திருந்தால் அது ஒன்றும் சாதனையில்லை  அது ஒரு அடிப்படை விடயம்.அதுவும் தமிழ் தமிழ் என்று சொல்லி அரசியல் செய்யும் சீமான் முதல் செய்ய வேண்டியது.    
    • யாழ்.போதனா வைத்தியசாலையில் எரியூட்டி திறப்பு! யாழ்ப்பாணம் கோம்பயன்மணல் இந்து மயாணத்தில் அமைக்கப்பட்டுள்ள, யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியினை, கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இன்றைய தினம் உத்தியோகபூர்வமாக திறந்துவைத்தார். யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் மருத்துவ கழிவுகளை எரியூட்டுவதற்காக ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் 40 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் குறித்த எரியூட்டி கொள்முதல் செய்யப்பட்டுள்ளமை  குறிப்பிடத்தக்கது. முன்பதாக வைத்தியசாலை மருத்துவ கழிவுகளை எரியூட்டுவதில் பல்வேறு சர்ச்சைகள் எழுந்த நிலையில் எரியூட்டியை அமைப்பதற்கான இடத்தை தேர்வு செய்வதில் கடும் இழுபறி ஏற்பட்டிருந்தது. இந்நிலையில் யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தீர்மானத்திற்கமைய யாழ் மாநகர சபை, கோம்பயன்மணல் மயான சபை என்பவற்றின் அனுமதியுடன் குறித்த எரியூட்டி கோம்பயன்மணல் இந்து மயானத்தில் நிர்மாணிக்கப்பட்ட நிலையில் இன்றையதினம் திறந்து வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1375554
    • எந்தக் காலத்திலும் அதிகாரவெறி கொண்டவர்களாலும் ஆக்கிரமிப்பாளர்களாலும்தான் இந்த உலகம் அமைதியை இழந்து கொண்டிருக்கின்றது.........!   தொடருங்கள் ஜஸ்டின் .......!   👍
    • வ‌ங்க‌ளாதேஸ் எப்ப‌டி த‌னி நாடான‌து...............இத‌ற்க்கு ப‌தில் சொல்லுங்கோ மீண்டும் விவாதிப்போம் பெரிய‌வ‌ரே..........................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.