Jump to content

தமிழும் ஆங்கிலமும் : அறிவுஜீவிகளை முன்வைத்து…


Recommended Posts

Charuonline

பல காலமாக நான் எழுதி வரும் ஒரு விஷயம், தமிழ்நாட்டின் சீரழிவுக் கலாச்சாரத்துக்கு மிக முக்கியமான காரணங்களில் ஒன்றாக இருப்பவர்கள் – தமிழ் தெரியாமல் ஆங்கிலம் மட்டுமே தெரிந்து கொண்டிருக்கும் புத்திஜீவிக் கும்பல்.  (இன்னும் மோசமான வார்த்தைகளில் திட்டத்தான் கை இழுக்கிறது.  லிங்கனையும் காந்தியையும் எண்ணிக் கொண்டு மனக்கட்டுப்பாட்டுடன் கும்பல் என்று மட்டுமே சொல்கிறேன்.  மற்றபடி நீங்கள் எல்லா கெட்ட வார்த்தைகளையும் போட்டுக் கொள்ளலாம்.)  மிக முக்கியமாக, அந்த ஆங்கில அறிவுஜீவிக் கும்பலின் முட்டாள்தனம் சகிக்க முடிவதில்லை.  அந்தக் கும்பலுக்கு எதுவுமே தெரியாது.  தெரிந்த ஒரே விஷயம், நன்றாக ஆங்கிலம் பேசுவார்கள்; தெளிவான ஆங்கிலம் எழுதுவார்கள்.  அவ்வளவுதான்.  அவர்களின் புத்தி, அறிவு எல்லாம் ரொம்ப ரொம்பப் பாமரத்தனமாக இருக்கும்.  அவர்கள் எழுதும் ’உலகப் புகழ்’ பெற்ற சினிமா விமர்சனங்கள், நாடக விமர்சனங்கள், இசை விமர்சனங்கள் எல்லாமே அதற்கு எடுத்துக்காட்டாக விளங்குபவை.

இதற்கு ஒரு கலாச்சார உதாரணமாக இருப்பது ஆங்கில ஹிந்து பத்திரிகை.  உலகக் குப்பையான ஒரு சபா நாடகம் மைலாப்பூரில் நடக்கும்.  அதற்கு நாடக விமர்சகர் ஆங்கில ஹிந்துவில் அரைப் பக்கத்துக்கு மதிப்புரை எழுதுவார்.  ஆனால் அதே ஹிந்து நிறுவனம் தமிழில் ஹிந்துவை ஆரம்பித்த போது ஆங்கில ஹிந்துவின் எந்த அசட்டுத்தனமும் இல்லாமல் தமிழ்க் கலாச்சார மறுமலர்ச்சிக்கு ஏற்ற பல புரட்சிகரமான மாற்றங்கள் அதில் நிகழ்ந்தன; நிகழ்ந்து கொண்டிருக்கின்றன.  அதற்கு அந்தத் தமிழ் இந்துவின் ஆசிரியர் குழு காரணம்.  ஆசிரியர் அசோகனிலிருந்து அரவிந்தன், ஷங்கர ராமசுப்ரமணியன், சமஸ், சந்திர மோகன், ஆசை என்று எல்லோருமே இலக்கிய வாசிப்பில் தேர்ந்தவர்கள்.  ஷங்கர ராமசுப்ரமணியன் கவிஞர்.  அரவிந்தன் நாவலாசிரியர்.  ஆசை கவிஞர்.  இன்னும் பலர் அங்கே உண்டு. இவர்கள் அனைவருக்கும் என் நன்றியும் அன்பும் எப்போதுமே உண்டு.  என் தமிழை இவர்கள் எளிய மனிதர்களிடம் கொண்டு செல்கிறார்கள்.  (ஆனால் இவர்களில் ஒருவரைத் தவிர மற்றவர்கள் பெரும்பாலும் காலச்சுவடு குழுவைச் சேர்ந்தவர்கள் என்று வதந்தி நிலவுகிறது.  அது உண்மைதான் என்பது பொலவே அதில் வரும் புத்தக மதிப்புரைகள் தெரிவிக்கின்றன.  ஆனால் அதில் எனக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை.  நான் இந்த கோஷ்டிப் பூசல்களுக்கெல்லாம் வெளியே நிற்கிறேன்.)

இப்போது இந்த விஷயத்தை எழுத என்ன காரணம் என்றால், நேற்று வந்த ஒரு செய்திதான்.  டாக்டர் சாந்தாவுக்கும் நடிகர் ரஜினிகாந்துக்கும் பத்ம விபூஷன் விருது கொடுக்கப்பட்டுள்ளது.  இதை பெரும்பாலான பத்திரிகைகள் ரஜினியின் பெயரை முதலில் போட்டு, டாக்டர் சாந்தா பெயரை இரண்டாவதாகப் போட்டு வெளியிட்டன.

நோபல் பரிசு பெற்ற டாக்டர் சி.வி. ராமன், சந்திரசேகர் ஆகியோர் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்; உறவினர்கள்.  இருவருமே விஞ்ஞானிகள்.  ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவருக்கு நோபல் பரிசு கிடைப்பது – அதுவும் ஒரே துறையில் – உலகில் வெகு அரிதாக நடக்கும் விஷயம்.  டாக்டர் சாந்தாவும் அதே குடும்பத்தைச் சேர்ந்தவர்தான்.  சி.வி. ராமனுக்கும் சந்திரசேகருக்கும் உறவினர்.  அவருக்குத்தான் பத்மவிபூஷன் பட்டம் கொடுக்கப்பட்டுள்ளது.  அவர் வயது 87.  அறுபது ஆண்டுகளாக புற்றுநோய் சிகிச்சையில் ஈடுபட்டு வருகிறார்.  தொண்டாற்றி வருகிறார் என்று சொல்வதே பொருத்தம்.  அவர் பெயரை முன்னால் போட வேண்டுமா, ரஜினி பெயரா?  ரஜினிக்குக் கிடைத்ததில் அரசியல் இருக்கிறது என்று எல்லோருக்குமே தெரியும்.  ஆனால் டாக்டர் சாந்தா விஷயம் வேறு.

இன்னொன்று, வயது விஷயமும் இருக்கிறது.  ஊடக நண்பர்கள் எப்போதுமே பிராபல்யத்தையே பார்த்துக் கொண்டிருக்கக் கூடாது.  நிச்சயமாக டாக்டர் சாந்தாவை விட ரஜினிக்குப் பிராபல்யம் அதிகம்தான்.  சிறு குழந்தைக்குக் கூட தெரியும்.  ஆனால் மனித குலத்துக்குச் செய்யும் தொண்டு?  மின்சாரத்தைக் கண்டு பிடித்த பெஞ்சமின் ஃப்ராங்க்ளின் மனித குலத்துக்கு முக்கியமானவரா?  அல்லது, அவர் வாழ்ந்த பதினெட்டாம் நூற்றாண்டில் அமெரிக்காவில் பிரபலமாக இருந்த நாடக நடிகர் முக்கியமானவரா?

தமிழ் இந்து நாளிதழில் மட்டுமே டாக்டர் சாந்தாவின் முதலிலும் ரஜினிகாந்தின் பெயர் அடுத்ததாகவும் வந்திருந்தது.  உடனேயே ஆங்கில இந்துவை எடுத்தேன்.  அதைக் கையாலேயே தொடுவதில்லை என்ற சபதத்தையும் மீறி எடுத்தேன்.  பத்தாவது பக்கத்தில் ரஜினிகாந்தின் படமும் பெயரும் முதலிலும் அடுத்ததாக, இரண்டாவதாக டாக்டர் சாந்தாவின் புகைப்படமும் இடம் பெற்றிருந்தது.

எப்பேர்ப்பட்ட மதி கெட்ட சமூகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் நாம் என்பதற்கு இந்தச் செய்தியை ஆங்கில இந்துவும் தமிழ் இந்துவும் போட்டிருக்கும் பாணியிலேயே தெரிந்து கொள்ளலாம்.  நடிகர்களை விட சிந்தனையாளர்களும், விஞ்ஞானிகளும், புத்திஜீவிகளும், எழுத்தாளர்களும் ஒரு சமூகத்தில் அதிக முக்கியத்துவம் பெறுகிறார்கள்; ஒரு சமூகத்தின் முன்னேற்றத்திற்கு நடிகர்களை விட சிந்தனையாளர்களும், விஞ்ஞானிகளும், புத்திஜீவிகளும், எழுத்தாளர்களும்தான் அவசியம் என்று புரிந்து கொண்ட ஒரு அற்புதமான இளைஞர் குழு தமிழ் இந்துவில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.  அவர்களுக்கு என் வணக்கமும் நன்றியும்.

http://charuonline.com/blog/?p=4360

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.