Jump to content

தூதுவளை சம்பல் 1


Recommended Posts

2009 வைகாசி 12 ஆம் நாள் சர்வதேசத்தின் கரங்களுக்காகவும் இந்தியாவின் பாதுகாப்புக்காகவும் நாங்கள்  வானொலிகளை  திருப்பி  கொண்டு, அடுக்கப்பட்டு  கிடந்த துணிகளால்  ஆன மண் மூடைகளுக்கு  நடுவே  கிடந்த அந்த  பொழுது.  அவற்றையும் தொலைத்து விட்டு வெறும் நிலமே  பாதுகாப்பாக  படுத்திருந்த அந்த பொழுதுகள் சர்வதேசமே எங்கள் இருப்பை உறுதிப்படுத்த முடியாது தவித்து கொண்டிருந்த நாட்களில் ஒன்று. பல வல்லரசுகள் எம்மை ஒன்றிணைந்து அழித்தொழித்த நாட்களில் ஒன்று.  நாங்கள் வழமையான சில  பணிகளில்  கிடக்கிறோம். வழமை போலவே அந்த இரவும் எமக்கு விடிந்து போனது. செல்லும் ரவையும் விமானமும் எங்கள் தலைகளை குறி வைத்து பாய்ந்து வந்து கொண்டிருந்த ஒரு காலை பொழுது  அது. இதில ஒன்றை வெட்டுங்க அவடத்தில ஒன்றை வெட்டுங்க ” I ” வடிவ பதுங்குகுழிகளை அமைக்கும் தீவிர முயற்சியில் நாம் எமக்கான தந்தையின் கட்டளைகள் இவை அதையும் தாண்டி அம்மாவின் குரல் ஒலிக்கிறது. “எல்லோரும் சாப்பிடுவம் வாங்கோ”… கிடந்த அரிசியில் கிடைத்த உப்பை இட்டு காச்சப்பட்ட கஞ்சி ஒரு குவளை எமக்கு அம்மாவிடம்  இருந்து  கிடைக்கிறது. அதை  உண்பதற்காக  நாங்கள் ஆவல்  கொண்டிருந்தாலும், உயிர் பிரியும் அபாயம் எம்மை துரத்தி  கொண்டு  இருந்ததால் நாங்கள் அவ்விடத்துக்கு  மெதுவாகவே  நகர்கிறோம்.  தலை தூக்கி நடந்தால் பதுங்கி சுடும் குறியாளர்களின் தாக்குதல் நிட்சயமாக எம்முயிரை பறிக்கும் அல்லது எதிரியால்  தொடர்ந்து  சுடப்பட்டு  கொண்டிருந்த பீ.கே  என்று  சொல்லப்படுகின்ற  கனரக இயந்திர துப்பாக்கி ரவைகள் எம்மை  சாகடிக்கும். இத்தனைக்கும் மத்தியிலும் தொடர்கிறது எங்கள் உயிர் காக்கும் அந்த பதுங்கு குழி வெட்டும் பணி.

கிடைத்த  கஞ்சிக்காக  நாங்கள்  கூடி  இருந்த அந்த நேரம் எனது சிறிய தந்தையின் மகளின் குரல் கேட்கிறது. ” அந்த குரல் அண்ணா தூதுவளை சம்பல் தாறதா…?”  எப்பிடி அதை தயார் செய்தாள் என்பது யாரும் அறியாதது. ஆனால் அங்கே பற்றைக்குள் படர்ந்திருந்த தூதுவளையில் உப்பிட்டு தரமான சம்பல் ஒன்றை செய்திருந்தாள் சிறிய தந்தையின் மகள் அதை தொட்டு கொண்டு கஞ்சியை குடித்த போது உண்மையில் அந்த நேர மரண அச்சம் கூட காணாமல் போயிருந்தது.

எப்பிடி அது அவளால் முடிந்தது? சாவுக்கான மணித்துளி எண்ணப்பட்டு கொண்டிருந்த போதும் கஞ்சிக்கு சுவையாக அதை தயார் செய்ய அவளுக்கு எப்படி எண்ணம் வந்தது யாரும் அறியா நியம். பல வேளைகள் உண்ணாதிருந்த எமக்கு அது உண்மையில் அமிர்தமே…

அன்றைய பொழுதி சாய்ந்து இருள் சூழ்ந்த அந்த மணிப்பொழுது கேட்டுக் கொண்டிருந்த அல்லது பாய்ந்து வந்து கொண்டிருந்த உயிர் குடிக்கும் இரும்புத்துண்டுகளின் வரவில் சிறு ஓய்வு… பத்து பதினைந்து நிமிடங்கள் அது நீடித்திருக்கும். அதுவே எங்கள் மேல் விழப்போகும் சாவுக்கான குறியீடு என்று புரியவில்லை எமக்கு. சிறிது நேரம் விழி அயர்ந்து போனோம்

எங்கள் இருப்பிடத்துக்கு மேல் “வண்டு ” என்று எம்மால் குறியிடப்படும் வேவு விமானம் (beech craft ) இரைகிறது என் மனது நடக்க இருக்கும் அசம்பாவிதத்தை உணராமல் இல்லை தூங்கிய அனைவரையும் எழுந்து பாதுகாப்பு தேட சொல்லி உத்தரவிடுகிறேன் அனைவரும் தம்மால் முடிந்த பாதுகாப்பு நிலையான குப்பற படுத்து கொள்கிறனர். எந்த மறைப்புக்களும் அற்ற அந்த பற்றைகளை பாதுகாப்பரண்களாக கொண்டு  நாங்கள் அனைவரும் படுத்து கிடக்கிறோம். எங்கெங்கெல்லாமோ வீழ்ந்து  வெடிக்கும் எறிகணைகள் ரவைகளின் சத்தங்களை தாங்க முடியாது இரு  காதுகளும் திணறுகின்றன. நாங்கள்  இரு கைகளையும் நெஞ்சுக்கும் நிலத்துக்கும்  இடையே வைத்து கொண்டு  விரல்களால் இரு  காதுகளையும் பொத்திய படி படுத்து கிடக்கிறோம். இவை மட்டுமே அன்றைய நாட்களின் எமது பாதுகாப்பு  அரண்கள். சிங்களத்தின் முல்லைத்தீவு பிரதான ஆட்லறித்தளத்தில் இருந்து எறிகணைகள் ஏவப்பட்டு கொண்டிருந்த போது அந்த ஆட்லறி எறிகணை  எம் இடத்தை நோக்கி  வருகிறது. நான் படுத்திருந்த  அந்த  சிறு குழி போன்ற இடத்தில் இருந்து ஐந்து மீற்றர் தூரத்தில் நின்ற  மரம் ஒன்றில் பட்டு  சிதறிப்போகிறது.

மரத்தின்  முன்  பக்கமாக  அமைக்கப்பட்டு இருந்த ஒரு பதுங்குகுழி  இடம்காணாமல்  போகிறது அதற்குள்  இருந்த கிட்டத்தட்ட பத்துப்பேருக்கு  மேலான உறவுகள் உடல் சிதறி கிடப்பது எனக்கு புரிகிறது  ஆனாலும் என்னால் எழுந்து சென்று  பார்க்க  முடியாத நிலை மீண்டும் மீண்டும் எறிகணைகள்  வீழ்ந்து வெடித்து கொண்டிருந்ததால் தலை நிமிர்த்த  முடியவில்லை நான் படுத்தே  இருந்தேன். என் அருகில் படுத்திருந்த அனைவரும் பட்ட காயத்தின்  வேதனையில் முனக தொடங்குகிறார்கள்.  அங்கே ஒரு இரத்த வெள்ளம் உருவாகியது. அனைவரும் காயமடைந்திருந்தார்கள் என்னையும் ஒரு சகோதரனையும் தவிர. மீதி  இருந்தவர்கள் அனைவரும் காயப்பட்டிருந்தார்கள். தம்பி  எனக்கு  கட்டு  போடு  ஐயோ அம்மா வலிக்குது ….. என்று மாறி  மாறி  எழுந்த குரல்களுக்கு இடையே நானும் எனது சகோதரனும் ஓடிக்கொண்டிருந்தோம்  காயத்துக்கு கட்டு போட முடியவில்லை யாருமே யாரையும் பார்க்க முடியவில்லை அந்த அளவுக்கு அந்த இடத்தை  முழுவதும் புகை சூழ்ந்திருந்தது.  அழுகுரல்கள் வானளவு எழுந்தது. ஆனால் அந்த குரல்கள் எந்த வல்லரசுக்கும் கேட்கவே இல்லை… தொடர்ந்து கொண்டிருந்தது அந்த இடத்தை துடைத்தழிப்பதற்கான தாக்குதல்கள் …. அப்போது தான் அண்ணா……. அந்த குரல் தேய்ந்து கொண்டிருந்தது..

%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A4%E0%AF%81%E0%

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Similar Content

  • Topics

  • Posts

    • ◌தமிழுக்கும் யாழுக்கும் எமக்கும் தேவையான  உறவு வாருங்கள்  கூடுவோம் பேசுவோம்  மகிழ்ந்திருப்போம்..
    • ஒவ்வொரு பொது த‌ள‌ங்க‌ளிலும் காணொளி பார்த்து முடிந்தது வாசிப்ப‌து உண்டு..................... சீமானுக்கு ஆத‌ர‌வாக‌ 180க்கு மேலான‌ யூடுப் ச‌ண‌ல் இருக்கு......................... புதிய‌த‌லைமுறை ம‌ற்றும் வேறு ஊட‌க‌ங்க‌ளில் ம‌க்க‌ளின் ம‌ன‌ நிலை என்று கீழ‌ வாசிப்ப‌துண்டு நீங்க‌ள் மேல‌ ஈழ‌ப்பிரிய‌ன் அண்ணாவுக்கு எழுதின‌தில் என‌க்கு உட‌ன் பாடு இல்லை ஈழ‌ப்பிரிய‌ன் அண்ணா யாழில் யார் கூட‌வும் வ‌ர‌ம்பு மீறி எழுதும் ந‌ப‌ர் கிடையாது நீங்க‌ள் சீமானில் ஒரு குறை க‌ண்டு பிடிச்சால் க‌ருணாநிதி குடும்ப‌த்தில் ப‌ல‌ நூறு குறைக‌ள் என்னால் க‌ண்டு பிடிக்க‌ முடியும் அதில் பாதி தான் நேற்று உங்க‌ளுக்கு எழுதின‌து ஆனால் நீங்க‌ள் ப‌தில் அளிக்க‌ முடியாம‌ ந‌க‌ர்ந்து விட்டீங்க‌ள்...................................
    • தே. ஆணையம் ஒரு கட்சி அல்ல. அதற்கு ஆதரவாக யூடியூப்பில் எழுத யாரும் இல்லை. ஆனால் - பிஜேபி உட்பட அதை எல்லா கட்சி ஆட்களும் விமர்சிகிறனர். எனவே கட்சி சார்பான காணொளிகளில் தே.ஆ விமர்சிக்கபடுவதை வைத்து த.நா மக்களின் கருத்து அதுவே என சொல்ல முடியாது.  
    • இவரின் செவ்வி பாடப் புத்தகமாக்கப்பட வேண்டும்.    
    • ஆண்ட‌ருக்கு தான் வெளிச்ச‌ம்.............................. யாழை விட்டு பொது யூடுப் த‌ள‌த்தில் காணொளிக்கு கீழ‌ போய் வாசியுங்கோ த‌மிழ் நாட்டு ம‌க்க‌ளின் ம‌ன‌ங்க‌ளில் தேர்த‌ல் ஆணைய‌ம் எப்ப‌டி இருக்கின‌ம் என்று.....................நீங்க‌ள் யாழில் சீமானை ப‌ற்றி தேவை இல்லா அவ‌தூற‌ ப‌ர‌ப்புவ‌தை நிறுத்தினால் ந‌ல்ல‌ம்   உத‌ய‌நிதிக்கு தூச‌ன‌ம் கெட்ட‌ சொல்ட்க‌ள் தெரியாது தானே ந‌ல்ல‌ வ‌ளப்பு......................................................    
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.