Jump to content

தமிழினியின் நூல் போர்க்குற்றங்களை மறுதலிக்கின்றது! சிங்கள ஊடகம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, பகலவன் said:

ஜனநாயக முறைப்படி அந்த மாகாணத்தில் பொது வாக்கெடுப்பு ஒன்றை நடாத்தி மட்டுமே மீளப்பெற முடியும் என்று வைத்தால் இன்னும் நல்லது. 

நிச்சயமாக. உங்கள் முறை என்னுடையதை விட, ஜனநாயகத்துக்கு உவப்பானதாயேயுளது.

இதில் முக்கியம் மாகாண அதிகாரத்தின் வரையறை. மாகாணத்துக்கென்று அதிகாரங்கள் என்னதான் தெளிவாக வரையறை செய்யப்பட்டாலும், சில சட்டமூலங்களை கீழ்சபையில் சமர்பித்து பின்கதவால் மாகாண அதிகாரத்தை பறிக்க முயற்சிப்பர். உதாரணம் திவிநெகும சட்டம்.

இத்திட்டம் உச்ச நீதிமன்று போன போது, to her credit, ஷிராணி மாகாணங்களின் ஒப்புதல் இல்லாமல் இது செல்லாது என்றார். ஆனால் இப்படி நேர்மையாக எப்போதும் உச்சநீதி மன்றம் நடக்கும் என்று தமிழர்கள் நம்பி ஏமாற முடியாது.

எனவே இந்த தீர்பளிக்கும் பாகத்தை நீதிமன்றில் இருந்து முதல்வர்கள் சபைக்கு மாற்றலாம். ஆனால் அங்கும் நம் பலம் 2:7. எனவே அங்கும் சிம்பிள் மெஜொரிட்டிக்கோ 2/3 கோ நாம் உடன் படக்கூடாது.

1) கீழ்சபையில் ஒரு சட்டம் நிறைவேறி 6 கிழமைக்குள் அதில் மாகாண அதிகாரங்களை பறிக்கும் சரத்துகள் இருக்கிறதா இல்லையா என எல்லா முதல்வர்களும் முடிவு செய்ய வேண்டும்.

2) ஒருவரேனும் இருக்கிறது என முடிவு செய்தால், அவர் அதை முதல்வர்கள் சபையில் பிரேரிக்க வேண்டும். இல்லாவிடில் சட்டம் முழுநாட்டுக்கும் அமுலாகும்.

3) முதல்வர்கள் சபைக்கு விடயம் வந்தபின், முடிந்தால் சட்டமூலத்தில் திருத்தங்கள் செய்து, திருத்திய சட்டம் ஏகமனதாய் ஏற்கப்பட்டால்- அது சட்டமாகும். ஏக ஆதரவு இல்லாதவிடத்து, மாகாண அடிப்படையில் சர்வஜன வாக்கெடுப்பு நடத்தி முடிவாகும். ஆம் என்ற மாகாணங்களில் புதிய சட்டம் அமுலாகும். இல்லை என்ற மாகாணங்களில் உள்ளபடியே இருக்கும்.

மேலே கூறப்பட்டிருப்பது அதியுட்ச சமஸ்டி ஏற்பாடு,  சமஸ்டி என்ற பதத்தை பாவிக்காமல் இப்படி ஒரு ஏற்பாட்டை நாம் அடைந்தால் - அது பெருவெற்றியாய் அமையும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தனிநபர்கள் அதாவது...ஜனாதிபதி,முதலமைச்சர்,பிர‌தமர்,உச்சநீதிமன்ற நீதியரசர்கள்,ஆளுநனர் போன்றோர் தங்களது அதிகாரங்கள் மூலம் மாகாணசபை அதிகாரங்களை குறைக்க இடமளிக்க கூடாது.....அதற்கு ஏற்றவகையில் அரசியல் தீர்வு இருக்க வேண்டும்.... 

Link to comment
Share on other sites

On 3/28/2016 at 8:24 PM, goshan_che said:

தெனாலி,

எங்கள் விக்கிபீடியா வேங்கைக்கு இதெல்லாம் ஒரு பொருட்டே இல்லை. கீழே பாத்தீர்களா, near, amongst எண்டு எக்கில ஹேர் புடுங்கிறார். இதனால்தான் நான் பதிலே சொல்லாமல் கடந்துபோனேன்.

ஐநா அறிக்கையை வாசித்து கிரகிக்க கூடிய ஆக்களுக்கு நாம் சொல்வது விளங்கி இருக்கும்.

Near =அருகில், மிகவும் குறுகிய ஒரு யுத்த பிரதேசத்தில் மக்கள் அருகில் ஆட்டிலெறியை, ராணுவ தளபாடங்களை புலிகள் வைத்திருந்து சண்டையிட்டனர் என்கிறது ஐநா.

Amongst = மத்தியில். எனவே புலிகள் மக்கள் மத்தியில் இருந்து சண்டையிடவில்லை என்கிறார் அண்ணர்.

அந்த குறுகிய நிலப்பரப்பில், மக்களுக்கு அருகில் நிற்பதுக்கும், மக்கள் மத்தியில் நிற்பதுக்கும் ஒரு வேறுபாடுமில்லையே? முட்டையில் மயிர் புடுங்குவது என்பது இதைத்தான்.

இவரிடம் தான் சொன்ன பிழையான தகவலை ஏற்கும் நேர்மையை, எதிர்பார்ப்பது நம் முட்டாள்தனம்.

ஒரு திரியில் விஜயனை, அசோகன் நாடு கடத்தினான் என்று ஒரு historical bombshell ஐ போட்டுப் போனார்.

விஜயனை விட 150 வருடம் பிற்பட்டவன் அசோகன் என்பதை சுட்டிக் காட்டினேன். ஒரு சத்தமும் இல்லை. அட்லீஸ் தன் தவறை ஒத்துக் கொண்டு ஒரு சிறுபதிவு? இல்லை.

இப்படி பட்ட கருத்து நேர்மையற்ற அரைகுறை விக்கிபீடியா வேங்கைள்தானாம் இவ்வினத்தில் இனப்பற்றாளர்கள்.

 

அது சரி, அப்ப ஏன் ஐ நா மக்களை விட்டுட்டு கிளிநொச்சியில் இருந்து ஓடினார்கள் ....இப்ப வந்து புலிகளை மட்டும் குறை சொல்லாமல் அப்பவே இருந்து மக்களை காப்பாற்றி இருக்கலாமே ...என்ன கொலை செய்த பிறகு தான் இந்த துள்ளல் எல்லாமே ..இதன் அர்த்தம் என்ன ....கண்மூடித்தனமாக காரணங்கள் சொல்ல கூடாது ...அப்ப விட்டுட்டு இப்ப அறிக்கையோ ...அதுவும் புலிகள் தான் எல்லாம் .....சொறிலங்கா என்ன தமிழ் மக்களை கொஞ்சினார்களா ....முதலில் ஒரு அரசாங்கம் செய்த படுகொலை தான் தண்டிக்கப்பட வேண்டும் ...

On 3/29/2016 at 5:43 PM, goshan_che said:

நாம் இனவழிப்புக்கு உள்ளானவர்கள் - நாம் அதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்? நிச்சயமாக இல்லை.

ஆனால் எமது இலக்கு என்ன? இன அழிப்பை நிறுவுவதா? எமக்கான அரசியல் தீர்வை பெறுவதா?

இன அழிப்பு என்பது நிறுவப்படுவது கஸ்டம். அப்படியே நிறுவினாலும் அதில் நான் மேலே சொன்ன நாடுகள் எல்லாம் இழுபடும். குறிப்பாக இந்தியா, தனது கோடிக்குள் ஒரு இனப்படுகொலை நடக்க கண்டுகொள்ளாமல் விட்டார்கள் என்பது நிறுவப்படும்.

அப்படி நடக்க அவர்கள் விடுவார்களா? ஒரு போதும்மில்லை.

போர்குற்றம் எனும் போது, அதில் இவர்களிடம் பெரிதாய் பொறுப்புக்கூறல் இராது. பிரச்சினை இலங்கை அரசோடும் புலியோடும் மட்டுப்படும்.

இதை பாவித்து ஒரு தீர்வை பெற முயற்சிப்பதே இப்போ நாம் செய்யக் கூடியது/வேண்டியது/

அதுக்கான சாத்தியம் உள்ளதா ...சொல்லுங்கள் ....புலி இருக்கும் போது அவர்களால் தங்களுக்கு உண்டான தடையை அறுத்து எறியவே வெளி நாடுகள் எல்லாம் ...தீர்வு என்று அப்போது கதைத்தார்கள் ...இப்ப புலிகளை எல்லாரும் சேர்ந்து அளித்தாகிவிட்டது ...இனி எல்லாம் தீர்வு என்பது வெறும் பேச்சு மட்டுமே ...இதனை புரிவதற்கு ஒரு பெரிய அறிவு தேவை இல்லை ...புலிகள் இருக்கும்  போது தான் தீர்வு என்ற கண்ணாம்பூச்சி ....இப்ப அதன் அவசியம் என்ன ...அவர்களின் பொது எதிரி புலிகளை அழித்து விட்டாச்சு ...

இப்ப மோடி நினைத்தால் முடியாத விடயம் என்ன ....13+  நடை முறை படுத்த முடியாதா ? ஏன் இந்த நாடகம் இப்ப .....அறிவாளிகள் புலிகளை எதிர்ப்பவர்கள் சொல்லுங்கள் ...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, பிரபாதாசன் said:

அது சரி, அப்ப ஏன் ஐ நா மக்களை விட்டுட்டு கிளிநொச்சியில் இருந்து ஓடினார்கள் ....இப்ப வந்து புலிகளை மட்டும் குறை சொல்லாமல் அப்பவே இருந்து மக்களை காப்பாற்றி இருக்கலாமே ...என்ன கொலை செய்த பிறகு தான் இந்த துள்ளல் எல்லாமே ..இதன் அர்த்தம் என்ன ....கண்மூடித்தனமாக காரணங்கள் சொல்ல கூடாது ...அப்ப விட்டுட்டு இப்ப அறிக்கையோ ...அதுவும் புலிகள் தான் எல்லாம் .....சொறிலங்கா என்ன தமிழ் மக்களை கொஞ்சினார்களா ....முதலில் ஒரு அரசாங்கம் செய்த படுகொலை தான் தண்டிக்கப்பட வேண்டும் ...

தகாத வார்தை பிரோயோக விதி பற்றி நிர்வாகத்திடம் ஒரு விளக்கம் கேட்டுள்ளேன். அவர்களின் பதிலை பொறுத்து, உங்களுக்கான எனது பதில் வழங்கப்படும்.

Link to comment
Share on other sites

21 hours ago, goshan_che said:

நிச்சயமாக. உங்கள் முறை என்னுடையதை விட, ஜனநாயகத்துக்கு உவப்பானதாயேயுளது.

இதில் முக்கியம் மாகாண அதிகாரத்தின் வரையறை. மாகாணத்துக்கென்று அதிகாரங்கள் என்னதான் தெளிவாக வரையறை செய்யப்பட்டாலும், சில சட்டமூலங்களை கீழ்சபையில் சமர்பித்து பின்கதவால் மாகாண அதிகாரத்தை பறிக்க முயற்சிப்பர். உதாரணம் திவிநெகும சட்டம்.

இத்திட்டம் உச்ச நீதிமன்று போன போது, to her credit, ஷிராணி மாகாணங்களின் ஒப்புதல் இல்லாமல் இது செல்லாது என்றார். ஆனால் இப்படி நேர்மையாக எப்போதும் உச்சநீதி மன்றம் நடக்கும் என்று தமிழர்கள் நம்பி ஏமாற முடியாது.

எனவே இந்த தீர்பளிக்கும் பாகத்தை நீதிமன்றில் இருந்து முதல்வர்கள் சபைக்கு மாற்றலாம். ஆனால் அங்கும் நம் பலம் 2:7. எனவே அங்கும் சிம்பிள் மெஜொரிட்டிக்கோ 2/3 கோ நாம் உடன் படக்கூடாது.

1) கீழ்சபையில் ஒரு சட்டம் நிறைவேறி 6 கிழமைக்குள் அதில் மாகாண அதிகாரங்களை பறிக்கும் சரத்துகள் இருக்கிறதா இல்லையா என எல்லா முதல்வர்களும் முடிவு செய்ய வேண்டும்.

2) ஒருவரேனும் இருக்கிறது என முடிவு செய்தால், அவர் அதை முதல்வர்கள் சபையில் பிரேரிக்க வேண்டும். இல்லாவிடில் சட்டம் முழுநாட்டுக்கும் அமுலாகும்.

3) முதல்வர்கள் சபைக்கு விடயம் வந்தபின், முடிந்தால் சட்டமூலத்தில் திருத்தங்கள் செய்து, திருத்திய சட்டம் ஏகமனதாய் ஏற்கப்பட்டால்- அது சட்டமாகும். ஏக ஆதரவு இல்லாதவிடத்து, மாகாண அடிப்படையில் சர்வஜன வாக்கெடுப்பு நடத்தி முடிவாகும். ஆம் என்ற மாகாணங்களில் புதிய சட்டம் அமுலாகும். இல்லை என்ற மாகாணங்களில் உள்ளபடியே இருக்கும்.

மேலே கூறப்பட்டிருப்பது அதியுட்ச சமஸ்டி ஏற்பாடு,  சமஸ்டி என்ற பதத்தை பாவிக்காமல் இப்படி ஒரு ஏற்பாட்டை நாம் அடைந்தால் - அது பெருவெற்றியாய் அமையும்.

இது எல்லாம் நடக்குமா ...இப்ப இந்தியாவுக்கு என்ன தடை எங்கள் பிரச்சனைக்கு தீர்வு சொல்ல ? முதல் தான் புலிகள் ...இப்ப யார் ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 29 March 2016 at 0:52 PM, goshan_che said:

இதற்கு நீங்கள் காட்ட கூடிய இரண்டு உதாரணங்கள் உளன.

1) சோல்பெரியாப்பின் 29 ம் பிரிவை, 1வது குடியரசு யாப்பு அகற்றியது

2) தற்காலிக வடக்கு-கிழக்கு இணைப்பை உச்சநீதி மன்றம் அகற்றியது.

இதில் 1மாவது நடக்கும் போது, இலங்கை பிரச்சினை ஒரு சர்வதேச பிரச்சனையாக இருக்கவில்லை. தவிரவும் "கோடீஸ்வரன்" வழக்கு மற்றும் மலையக மக்கள் வாக்குரிமை பறிப்பு, சிங்களம் மட்டும் சட்டங்கள் எடுத்து காட்டுவது போல, 29 ம் பிரிவு அமலில் இருந்த போதே தமிழருக்கு எதிரான செயல்கள் நடக்கவே செய்தன. 

2மாவது - சர்வஜன வாக்கெடுப்பு நடத்தி இணைக்கும் மட்டுமான ஒரு தற்காலிக ஏற்பாடு. இந்திய இலங்கை, ஒப்பந்தத்தை புலிகள் ஏற்றுக்கொண்டு, முஸ்லீம்களின் வகிபாகத்தை ஏற்று அவர்களுக்குரிய பங்கை கொடுத்து, கிழக்கில் இருந்து விரட்டப்பட்ட தமிழரை ஓரளவுக்கு மீளகுடியமர்த்தி, பிரபா-அஸ்ரப் காலத்தில் ஒரு சர்வசன வாக்கெடுப்பு நடத்தி, இதை நிரந்தரமாக்கியிருந்தால், இணைப்பை துண்டிப்பது, இலகுவில் முடிந்திராது.

ஆனால் இப்போ எங்களுக்கே புரிகிறது, வடக்கு-கிழக்கு இணைப்பு, என்பது முஸ்லீம்களின் பங்களிப்பின்றி சாத்தியமில்லை என்பது.

ஆனாலும் எல்லா தமிழர் ஆதரவு நகர்வுகளும் பின் வாபஸ் பெறப்பட்டன என்பதில்லை. வத்தலோ தொத்தலோ 13ம் திருத்தமும் அதுதந்த மாகாணசபையும் இன்னும் இருக்கிறது. குத்துயிரும் குலையுயிருமாய் என்றாலும் தமிழ் அரச கரும மொழியாய் இருக்கிறது.

60 களில் எந்த ஆட்சி அதிகாரமும் இல்லாமல், சிங்கள ஓன்லிக்கு முகம் கொடுத்து, தமிழ் மொழியே இலங்கையில் அழித்தொழிக்கப் பட்டுவிடுமோ? என்ற நிலையோடு ஒப்பிடும் போது, இது நிச்சயமாக ஒரு முன்னேற்றமே.

பெரும்பான்மைதுவம் என்பது ஜனநாயகம் அல்ல.

ஜனநாயகம் என்பது பெரும்பான்மையின் விருப்புப்படி, சிறுபான்மை உரிமைகள் பாதுகாப்பு உத்தரவாதமளிக்கப்பட்ட, ஒரு நிர்வாக அமைப்பை நிறுவுதல்.

பெரும்பான்மைதுவம் என்பது -தனியே எண்ணிக்கையில் கூடியோர், தம்விருப்பை ஏனையோர் மீது திணிப்பது.

இலங்கையில் இதுவரை நடந்தது ஜனநாயகம் அல்ல, பெரும்பான்மைதுவம்.

தமிழர், ஓரினச்சேர்கையாளர், கிறீஸ்தவர், மாற்றுத்திறனாளிகள் என பல்வகைப்பட்ட சிறுபான்மைகள் வஞ்சிக்கப் பட்ட ஒரு ஆட்சிமுறையே அங்கு நிலவியது, நிலவி வருகிறது.

இந்த முறை அரசியலமைப்பு ஆக்கத்தில், இவ்வாறு பெரும்பான்மைதுவம் முன்னிலை பெறுவதை தடுக்கும் சில பொறிமுறைகளை உள்ளடக்கி, சர்வதேச ( குறிப்பாக இந்திய) மேற்பார்வையில், இவை மீளப்பெறாமையை உறுதிப் படுத்த முடியும்.

ஆயுதப்போராட்டம் தோற்றுப்போன நிலையில், இதை முயற்சி செய்து பார்ப்பதை தவிர, எமக்கு வேறு தெரிவுகள் ஏதும் இருப்பதாக எனக்கு தெரியவில்லை.

ஏற்கனவே 87 இல் போடப்பட்ட ஒப்பந்தம் சர்வதேச ஒப்பந்தம்தான் அதில் குறிப்பிட்ட வடக்கு கிழக்கு இணைப்பை சிறிலங்கா தன்னிச்சையாக ஒரு உச்சநீதிமன்றத்தீர்ப்பின் மூலம் மீறிய போது இந்தியா ஒப்புக்குத்தானும் கண்டனம் தெரிவிக்கவில்லை.தன் கௌரவத்திற்கு இழுக்கு ஏற்பட்டாலும் அது தமிழரின் அரசியல் பிரச்சனை என்பதால் பண்டுகவள்ளாமல் விட்டது.இந்தியாவை முன்னிலைப்படுத்தி அரசியல் தீர்வைப் பெற நினைப்பது ஒருபோதும் பலனழிக்காது.வரு அதுய்யம்பூந்துறை நடந்து ஒட்டு மொத்த தமிழகம் அரசியல் எழுச்சி பெற்று மத்திய அரசுக்கு நெருக்கடியான கொடுத்தால் சாத்தியமாகலாம். மற்றபடி சர்வதேச மத்மியஸ்துடனான்ன அரசுயல்தீர்வே நிலையானதாகும்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 1. கருணாநிதி, குடும்பத்தையே தேர்தலில் மேடை போட்டு நாறடிச்சுவிட்டு, தேர்தலில் திமுக வென்றதும் - ஸ்டாலினை சந்தித்து அதே கருணாநிதி போட்டோ முன் பவ்வியமாக கைகட்டி கூழை கும்பிடு போட்டது தைரியம் என்றால் - நாம் பயந்தவர்களாகவே இருந்து விட்டு போகிறோம். 2. ஊழலை எதிர்த்து தொண்டை புடைக்க பேசி விட்டு, சசி ஜெயிலால் வந்து முகம் கழுவ முன்னம் அவரை போய் சந்தித்து விட்டு, பத்திரிகையாளருக்கு பயந்து பின் கதவால் ஓடியது தைரியம் என்றால் - நாம் பயந்தவர்களாகவே இருந்து விட்டு போகிறோம். 3. விஜி அண்ணி புகாரில் இருந்து தப்பிக்க, உதய்யிடம் இரவு 2 மணிக்கு போன் பேசுவது தைரியம் என்றால் - நாம் பயந்தவர்களாகவே இருந்து விட்டு போகிறோம். 4. தமிழ் இறையியலை மீட்ப்போம் என மார்தட்டி விட்டு - ஒரு பிராமணியை எதிர்க்க திராணி இல்லாமல் சமஸ்கிருதத்தில் மகனிற்கு காது குத்தும் மந்திரத்தை ஓத விட்டது தைரியம் என்றால் - நாம் பயந்தவர்களாகவே இருந்து விட்டு போகிறோம். 5. குடும்ப அரசியலை ஒழிப்பேன் என கதறிவிட்டு - மனைவி சொல்லுக்கு பயந்து மச்சினன் அருண் காளிமுத்துக்கு சீட் கொடுத்தது தைரியம் என்றால் - நாம் பயந்தவர்களாகவே இருந்து விட்டு போகிறோம். 6. தமிழ், தமிழ் என மேடை தோறும் கூவி விட்டு, அவர்களின் எதிர்கால வாய்ப்பு கெட்டு விடும் என பிழையாக பயந்து மகன்களை ஆங்கில வழி கல்வியில் சேர்த்தமை தைரியம் என்றால் - நாம் பயந்தவர்களாகவே இருந்து விட்டு போகிறோம்.
    • கலோ...ஒரு பொது தளத்தில் வருடத்திற்கு ஒரு பெயர் மாத்த ஏலாது..சும்மா ஏப்பிரல் பூலுக்கு ஏதாச்சும் ஏழுதினாலலே காவிட்டு திரியிற உலகம் இது..சோ..நாம் உலாவும் இடங்களில் மற்றவர்களின் சுதந்திரந்தையும் பார்த்துக்கொள்ள வேணும் புறோ..நீங்கள் நினைச்ச எல்லாம் செய்ய இயலாது..மற்ற பயனாளர்களின் சுதந்திரமும் , வாழ்வும் இதற்குள் அடங்கியிருக்கிறது.🙏🖐️
    • "காதல் & காமம்" [காதல் ஈவு, இரக்கம் சார்ந்தது. காமம் இச்சை, இம்சை சார்ந்தது.]   காதல் கை கொடுக்கும். காமம் கை விடும். காதல் குறுகுறுப்பு. காமம் கிளுகிளுப்பு. காதல் ஏற்றம் தரும். காமம் ஏமாற்றம் தரும். காதல் வயல்வெளி. காமம் புதைகுழி. காதல் பாசவலை. காமம் நாச வேலை. காதலில் காமம் அடங்கும். காமத்தில் காதல் முடங்கும். காதலில் 'நீயும் நானும்' இருக்கும். காமத்தில் 'நீயா நானா' இருக்கும்   ஆனால் காதல் நிலைக்க காமமும் கூட்டுச் சேரவேண்டும்  ஊடலும் கூடலும் அதற்கு ஒரு உதாரணம் 
    • காக்கா விடம் இருந்து நரி பறித்த  அதே வடையை தான் என்று வேறு சத்தியம் பண்ணியவர் 😃
    • வெள்ளம் வந்த பின்...  @ராசவன்னியன் னின், சிலமன் ஒன்றையும் காணவில்லை. 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.