Jump to content

ஏன்? என்னைக் கொன்றாய்? நீங்கள் செய்த தவறுக்கு எனக்கு ஏன் மரணதண்டனை?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
rape_srilanka.jpg
சிறைக்கூண்டில் ஒவ்வொரு நிமிடமும் என் குழந்தை என் முன்னே வந்து ஏன்? என்னைக் கொன்றாயென்றும் நீங்கள் செய்த தவறுக்கு எனக்கு ஏன் மரணதண்டனை ? என்றும் என்னிடம் கேட்கிறது. இதுதானோ நான் தேடிய விடியல்?

சிறுவயதிலிருந்தே நான் கஷ்டங்களுக்கு மத்தியில் வளர்ந்து வந்தேன். துன்பங்களே சூழ்ந்த வாழ்வில் வெளிச்சத்தைத் தேடி தினம் எனது விடியல் அமைகிறது. 

கொலைக்குற்றம் செய்ததற்காக சிறைவாசம் கொண்டுள்ள சஞ்ஜீவனி (பெயர்கள் அனைத்தும் மாற்றப்பட்டுள்ளன) கூறும் கதை தான் இது.

எனது அப்பா ஒரு அரச அதிகாரி. குடிக்கு அடிமையான காரணத்தினால் அவர் வேலையிலிருந்து பணிநீக்கம் செய்யப்பட்டார். அவர் வேலைக்கு சென்றாலும் குடிக்கே அவருடைய சம்பளப் பணம் அனைத்தையும் செலவிட்டார்.

அம்மா தான் வீடுகளில் கூலிவேலை செய்து என்னை வளர்த்து வந்தாள். இதுமாத்திரமின்றி, பாடசாலைகளுக்கருகே அச்சாறு விற்றும் வந்தார். எனக்கு ஐந்து வயதாக இருக்கும்போது அச்சாறு விற்கச்சென்ற வேளை விபத்தொன்றில் சிக்கி அம்மா இறந்துவிட்டாள்.

அதற்கு பின்னர் அப்பா என்னைக் கவனித்துக்கொள்வதற்காக அம்மாவின் தங்கையை அழைத்து வந்தார். சித்தியின் கணவரும் அவரை விட்டு பிரிந்து சென்றிருந்தார். சித்தி தனது இரண்டு பிள்ளைகளுடன் வீட்டுக்கு வந்தார்.

அதற்கு பின்னர் இரண்டு பிள்ளைகளை பெற்றெடுத்தார். சித்தியின் பிள்ளைகளை பார்த்துக்கொள்வதற்காக எனது கல்வியை பாதியில் இடைநிறுத்திக்கொள்ளவேண்டிய நிலை ஏற்பட்டது. சித்தி தன் பிள்ளைகளை எனது பொறுப்பில் விட்டு அவரும் வேலைக்குச் சென்றார். சித்தியின் நான்கு பிள்ளைகளை பார்த்துக் கொள்ளும் பொறுப்பு சிறிய வயதிலேயே என் தலைமீது விழுந்தது.

இவ்வளவு நடந்தும் அப்பா குடியை விடவில்லை. எனக்கு பதினைந்து வயதான நிலையில் அனைத்து வீட்டுவேலைகளையும் நானே செய்ய வேண்டியேற்பட்டது. இது எல்லாவற்றிற்கு மேலாக சித்தியின் பேச்சுக்களையும் தந்தை குடித்துவிட்டு வந்து செய்யும் அட்டகாசங்களையும் என்னால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை.

வீட்டில் நான் கழிக்கும் ஒவ்வொரு நிமிடங்களையும் நரக வேதனையுடனே கழித்தேன். இதிலிருந்து விடியல் கிட்டாதா? என்று எண்ணியிருந்த சந்தர்ப்பத்தில் தான் சமனுடன் பழக்கம் ஏற்பட்டது.

அவர் எங்கள் வீட்டிற்கு அருகே தான் இருந்தார். நான் தேடிய விடியல், சுதந்திரம், அன்பு, பாசம் எல்லாமே அவரிடமிருந்து கிடைக்கும் என நம்பினேன். காலப்போக்கில் நமது நட்பு காதலாக மாறியது. அவரிடம் நான் தூய்மையான அன்பை மட்டுமே எதிர்பார்த்தேன் ஆதலால் அவர் என்ன வேலை செய்கிறார் என்று கூட எனக்கு தெரிந்திருக்கவில்லை.

வீட்டுப் பிரச்சினை நாளுக்கு நாள் அதிகரித்து வரவே, நான் சமனுடன் யாருக்கும் தெரியாமல் வீட்டை விட்டு வந்துவிட்டேன். அதற்கு பிறகு நான் சமனுடன் கழித்த ஒவ்வொரு நொடிப்பொழுதும் சுவர்க்கத்தில் இருப்பதாய் உணர்ந்தேன். சமன் எனக்கு உடுத்துவதற்கு நல்ல உடைகளை வாங்கித்தந்தார். குறையேதும் சொல்ல முடியாதபடி என்னைப் பார்த்துக்கொண்டார்.

காலப்போக்கில் சமன் போதைப்பொருட்கள் விற்பனை செய்பவர் என அறிந்துகொண்டேன். இந்தத்தொழிலை விட்டுவிடுமாறு அவரிடம் கேட்டுக் கொண்டேன். பயனில்லை. ஒரு சமயம் பொலிஸாருக்கு பயந்து மோட்டார் சைக்கிளில் வேகமாக பயணித்தபோது எதிரே வந்த கனரகவாகனத்தில் மோதி உயிரிழந்தார்.

எனக்கோ தலைசுற்றுவது போலிருந்தது. வாழ்க்கையில் நான் ஏங்கித்தவித்தவை சமன் மூலம் கிட்டியது. அவையும் நிலைக்கவில்லையே.. கடவுளே உனக்கு ஈவு இரக்கமே இல்லையா? என் அன்புத் தாயையும் அழைத்துக்கொண்டாய். என் உயிருக்கு உயிரான சமனையும் அழைத்துக்கொண்டாயே என்று கடவுளை திட்டித் தீர்த்துக் கொண்டேன்.

அதற்கு பிறகு என்ன செய்வதென்று புரியவில்லை. மீண்டும் சித்தியிடம் தஞ்சமடையவும் மனமில்லை. சமனின் எஜமான் அவரின் இறுதிக் கிரியைகளுக்கான அனைத்தை செலவையும் ஏற்றுக்கொண்டார். 
யாருமில்லாமல் தவித்த எனக்கு சமனின் எஜமான் அடைக்கலமளித்து பராமரித்து வந்தார்.

அந்த வேளையில்தான் சரத்துடன் பழக்கம் ஏற்பட்டது. எஜமானரும் என்னை சரத்துடன் சேர்த்துவைத்தார். நாங்கள் புதுவாழ்க்கையை ஆரம்பித்தோம். எனது வாழ்க்கையில் மீண்டும் வசந்தம் வீசியது. அதுவும் கடவுளுக்கு பொறுக்கவில்லை. எனக்கு அந்த வாழ்க்கையும் நிலைக்கவில்லை. சரத் தன் எஜமானிக்கு பாதுகாவலராக செயற்பட்டு வந்தார்.

திடீரென்று ஒருநாள் போதைப் பொருட்களுடன் சரத் பொலிஸாரிடம் வசமாக சிக்கிக்கொண்டார். நீதிமன்றத்தில் அவருக்கு 20 வருட சிறைத்தண்டனை கொடுக்கப்பட்டது. சரத் சிறை சென்ற சில நாட்களில் நான் கர்ப்பமடைந்தேன். இந்த சந்தோஷத்தை யாரிடம் கூறி பகிர்ந்து கொள்வதென்றே தெரியவில்லை. .

குழந்தை பெற்றுக்கொள்ளும் நிலையிலும் நான் இல்லை. சரத்தின் எஜமானிடம் சென்று எனக்கு குழந்தை பெற்றுக்கொள்ள விருப்பமில்லை எனக்கூறி அழுதேன் அவரும் புரிந்துகொண்டார். எஜமானர் மூலமாக கொழும்பின் ஒரு பகுதியில் வைத்து கருக்கலைப்பு செய்துகொண்டேன்.

அதற்கு பின்னர் எஜமான் என்னை அவருக்கு தெரிந்த பெண்ணொருவருக்கு விற்று விட்டார். அவர் இவ்வாறு செய்வார் என்று நான் சற்றும் நினைக்கவில்லை. அதற்கு பிறகு ஒவ்வொரு இரவையும் விலைமாதுவாக கழிக்க வேண்டியதாக இருந்தது.

எனக்கு இருபத்து நான்கு வயதாகும் வரை அந்தப் பெண்மணியின் கீழ் தொழில்புரிந்து வந்தேன். அதன் போது நான் அவருடன் சண்டைபிடித்துவிட்டு அங்கிருந்து தெரிந்த ஒருவர் மூலம் மசாஜ் நிலையமொன்றுக்கு பணிக்கு வந்தேன்.

வெளியிலிருந்து பார்ப்போருக்கு தான் அது மசாஜ் நிலையம். ஆனால், உள்ளே வந்து பார்த்த பிறகுதான் மசாஜ் நிலையத்தின் சுயரூபம் தெரியும். இந்த மசாஜ் நிலையம் பகலில் மசாஜ் செய்யும் நிலையமாகவும் இரவில் விலைமாதுக்களை விற்பனை செய்யும் இடமாகவும் இரகசியமாக செயற்பட்டு வந்தது.

இங்கு வந்ததன் பின்னர் நான் நிறைய பணம் சம்பாதித்தேன். காலப்போக்கில் போதைவஸ்துக்கும் அடிமையாகினேன். நான் சம்பாதித்த பணம் போதைவஸ்து வாங்குவதில் கரைந்து போனது. எதிர்காலத்திற்காக நான் சேமித்து வைத்திருந்த பணமும் தீர்ந்துபோனது.

இவ்வாறு காலம் கழித்துக் கொண்டிருந்தபோது தான் நிலந்தவை சந்தித்தேன். அவருடன் பழகியவேளை போதைவஸ்து பாவனையிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வந்தேன். எனக்கும் அவருக்குமிடையில் நெருக்கமான தொடர்பு ஏற்பட்டது.

நிலந்தவிற்கு பணம் மிகப்பெரிய தேவையாக இருந்தது. ஆனால், ஏன் எதற்காக என்று தெரியவில்லை. அவருடன் நெருக்கமான உறவைப் பேணிவந்ததால் நான் கருவுற்றேன். இதுபற்றி நான் அவரிடம் கூறிய போது அவர் கூறிய பதில் என்தலையில் இடி விழுவது போலிருந்தது.

இந்தக் குழந்தைக்கு நான் தகப்பன் கிடையாது. என்னால் அதற்கு பொறுப்பேற்கவும் முடியாது. இதற்கு பின்னர் நீ தொடர்ந்து என்னுடன் சேர்ந்து வாழவேண்டுமேன்றால் கருக்கலைப்பு செய்ய வேண்டும்" என கடுமையாக கூறிவிட்டார்.

ஆனால், அந்த நேரம் கருக்கலைப்பு கட்டத்தை நான் தாண்டி விட்டேன். இனி கருக்கலைப்பு செய்ய முடியாது என்று வைத்தியர் கூறிவிட்டார் என்று எனது நிலையையும் அவரிடம் கூறினேன். ஆனால், அவற்றை அவர் கேட்பதாக இல்லை. அவர் என்னை மன்னிப்பதாகவும் இல்லை. அவர் அடிக்கொருமுறை இது வேறொருவருடைய குழந்தை என்று என்னை காயப்படுத்திக்கொண்டே இருந்தார்.

நானும் ஆரம்பத்தில் குழந்தையைப் பெற்றவுடன் யாருக்காவது வளர்க்க கொடுத்து விடுவோமென்று தான் நினைத்திருந்தேன். ஐந்து வயதிலிருந்து சித்தியின் பிள்ளைகளை வளர்க்க நான் பட்ட வேதனைகள் தொடர்ந்து அடிக்கடி என் மனதில் எழுந்து வந்தன. இதுவே காலப்போக்கில் ரணமாக மாறி மிருகமாக மாறிப்போனேன். நான் இவ்வாறு மாறியதை என்னாலேயே நம்ப முடியவில்லை.

வீட்டில் வைத்து யாருமில்லாத சந்தர்ப்பத்தில் எனக்கு பிரசவ வலி வந்தது. உதவிக்கு கூட யாருமில்லை. வீட்டில் வைத்தே என் குழந்தையை பிரசவித்தேன். என் குழந்தை முகத்தை பார்க்கும் வரையிலிருந்த பாசம் முகத்தை பார்த்த பின்னர் மாறிப்போனது.

ஒரு பக்கம் நிலந்த "இது என் குழந்தையல்ல எனக் கூறியது, மறுபக்கம் சித்தியின் கொடுமைகள் இவையனைத்தும் ஒன்று சேர்ந்து என்னை ஆட்டிப்படைக்க, பிறந்த என் பச்சிளம் பாலகனை என் கைகளாலேயே துடிக்கத்துடிக்க கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டேன்.

கொலை செய்த வேகத்தில் நான் வாங்கி வைத்திருந்த போதை வஸ்துக்கள் அனைத்தையும் உண்டு மயங்கிப்போனேன். அதற்குபிறகு பொலிஸார் என்னைக் கைது செய்தனர். கைவிலங்குகளே இறுதியில் எனக்கு வளையல்களாக மாறிப்போயின.

சிறைக்கூண்டில் ஒவ்வொரு நிமிடமும் என் குழந்தை என் முன்னே வந்து ஏன்? என்னைக் கொன்றாயென்றும் நீங்கள் செய்த தவறுக்கு எனக்கு ஏன் மரணதண்டனை ? என்றும் என்னிடம் கேட்கிறது. இதுதானோ நான் தேடிய விடியல் ?

http://www.tamilwin.com/show-RUmuyDRUSXmr0F.html

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இப்ப‌த்தை ஆயுத‌ங்க‌ளை ப‌ற்றி நூற்றுக்கு நூறு உங்க‌ளுக்கு தெரியுமா இல்லை தானே நான் ஒரு ஆய்வில் தெரிந்து கொண்டேன் இந்த வ‌ருட‌ம்.................. அதை ஈரானே வெளிப்ப‌டையா அறிவித்த‌து😏............................. அவ‌ங்க‌ யாழுக்கு அதிக‌ம் வ‌ராட்டியும் அத‌தூற‌ ப‌ரப்ப வ‌ருவ‌தில்லை......................... அவாக்கும் குடும்ப‌ம் பிள்ளைக‌ள் வேலைக‌ள் என்று அதிக‌ம் இருக்கு உங்க‌ளை மாதிரி யாழுக்கை 24ம‌ணித்தியால‌ம் கும்பி அடிக்க‌ முடியாது தான் அவவாள்😁..........................
    • இந்த இரண்டு சம்பவமும் அண்மையில் நடந்ததாகவே தெரிகின்றது. ஏனென்றால்... இது சம்பந்தமாக சமூக ஊடகங்களில் பல நூற்றுக் கணக்கானவர்கள்  அதனைப்  பற்றிய கருத்துக்களை பதிவு செய்த போதும்... ஒருவர் கூட, அந்த 800 ரூபாய்  வடை இரண்டு வருசத்துக்கு முன்பு வந்த காணொளி என்று தெரிவிக்கவில்லை. இத்தனைக்கும் அவர்கள் இலங்கையில் வசிப்பவர்கள். அப்படி இருக்க... பையன் எப்படி அது இரண்டு வருடத்துக்கு முன் பார்த்த காணொளி என்று சொன்னார் என்று தெரியவில்லை. சில வேளை மனப் பிராந்தியோ.... நானறியேன். 😂 "ஆடு களவு போகவில்லை. களவு போனமாதிரி கனவு கண்டேன்". என்ற கதை மாதிரி இருக்கு. 🤣
    • யாழில் திறந்து வைக்கப்பட்ட உயிர்காப்பு நீச்சல் பிரிவு! இனியபாரதி. யாழ்ப்பாணம் காங்கேசன்துறை பொலிஸாரினால் பிராந்திய உயிர்காப்பு நீச்சல் பிரிவு ஸ்தாபிக்கப்பட்டு இன்று வெள்ளிக்கிழமை(19) வடக்கு மாகாண பிரதிப் பொலிஸ்மா அதிபர் திலக்.சி.ஏ.தனபாலவினால்  திறந்து வைக்கப்பட்டது. கடற்கரையில் குளிக்கும் போது, விளையாட்டுக்களில் ஈடுபடும்போது உயிர் இறப்பு மற்றும் அசம்பாவிதங்கள் ஏற்படாது தடுக்கும் வகையில் குறித்த பிரிவு செயற்படவுள்ளது. இதன்போது குறித்த பகுதியில் குற்றச்செயல்களை கட்டுப்படுத்தும் வகையில் பொலிஸ் காவலரணும் திறந்து வைக்கப்பட்டது. குறித்த நிகழ்வில் காங்கேசன்துறை பிராந்திய மூத்த பொலிஸ் அத்தியட்சகர், உதவி பொலிஸ் அத்தியட்சகர்கள், காங்கேசன்துறை பிராந்திய பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகள், பொலிஸ் உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்துகொண்டனர். (ச) யாழில் திறந்து வைக்கப்பட்ட உயிர்காப்பு நீச்சல் பிரிவு! (newuthayan.com)
    • (இனியபாரதி)  யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் இதய சத்திர சிகிச்சையின் போது தவறிழைக்கப்பட்டதாக உறவினர்கள் குற்றச்சாட்டு தெரிவித்தனர். குறித்த சம்பவம் தொடர்பாக (18)இன்று யாழ் ஊடக அமையத்தில் நடத்திய ஊட சந்திப்பில் சத்ர சிகிச்சையின் போது இருந்த பெண்ணின் தாயார் மற்றும் சகோதரர் விடயம் தொடர்பாக கருத்து தெரிவித்தனர் யாழ் போதனா  மருத்துவமனையில் இதய சத்திரசிகிச்சை  மேற்கொள்ளப்பட்ட சுரேஸ்குமார் பாக்கியச்செல்வி வயது 44 ஜெயபுரம் தெற்கு பல்லவராயன்கட்டு என்ற குடும்பப் பெண் கடந்த 08 திகதி நடைபெற்ற இதயச் சத்திரசிகிச்சையின் போது உயிரிழந்துள்ளார். தவறுதலான முறையில் சத்திரசிகிச்சை நடைபெற்றதாகவும் உறவினர்கள்  குற்றச் சாட்டுகின்றனர். அரச  மருத்துவமனையில் சத்திர சிகிச்சைகாக பணம் கேட்டதாகவும் குற்றச்சாட்டுகின்றனர்.இவ்வாறான இந்தச் சம்பவத்திற்கு நீதி கிடைக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர். அத்தோடு இறந்த பெண் கணவனால் கைவிடப்பட்ட மிகவும் வறுமையான பெண் என உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.(ப) யாழ் போதனாவில் இதய சத்திர சிகிச்சையின் போது தவறிழைப்பு:உறவினர் குற்றச்சாட்டு! (newuthayan.com)
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.