Jump to content

கண்முன்னே தாய்மையின் வலி : உடலுறவை துறந்த கணவன்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

true_love

என் மனைவியின் பிரசவத்தை நேரில் பார்த்த பின்னர், எனக்கு ஒரு வருடத்திற்கு செக்ஸே வெறுத்துப் போய் விட்டது என்று கூறியுள்ளார் இங்கிலாந்தைச் சேர்ந்த எழுத்தாளர் மார்ட்டின் டப்னி என்பவர்.

மனைவி கர்ப்பமாக இருக்கும்போது ‘ஸ்கேன்’ செய்து பார்ப்பதில் விருப்பம் உள்ளவர்கள் நிறையப் பேர் உள்ளனர். ஆனால் தனது மனைவியின் பிரசவத்தை நேரில் பார்த்த மார்ட்டின், அதன் பின்னர் ஒரு வருடத்திற்கு செக்ஸ் குறித்தே நினைக்கவில்லையாம். மாறாக மனைவியுடனேயே இருந்து அவரை சிறப்பாகப் பார்த்துக் கொண்டாராம்.

இதுகுறித்து அவர் கூறுகையில்,

நானும் சரி எனது மனைவியும் சரி 10 வருடமாக அழகான வாழ்க்கை நடத்தி வருகிறோம். ஆனால் கடந்த ஒரு வருடமாக நாங்கள் இரவில் தனித்தே படுத்துத் தூங்குகிறோம். எங்களுக்குள் செக்ஸ் ரீதியான எந்த செயல்பாடுகளும் இல்லை, பேச்சுக்களும் இல்லை. இருவருக்குமே செக்ஸில் விருப்பம் இல்லாமல் இல்லை. ஆனால் செக்ஸ் இடம் பெறவில்லை.

நான் எனது மனைவி டயானாவுக்கு அருகில் போவேன். அவரும் என்னிடம் நெருங்கி வருவார், ஆனால் அவ்வளவுதான், அதற்கு மேல் இருவரும் நெருங்குவதில்லை. எனது வயிற்றுக்குள் பட்டாம்பூச்சி பறப்பது போல உணர்வேன், இதயம் தாறுமாறாக துடிக்கும். ஆனாலும் அத்தோடு நிறுத்திக் கொள்வேன்.

ஏன் இப்படி… எங்களுக்குள் கடந்த ஒரு வருடமாக செக்ஸ் நடக்கவில்லை என்றவுடன் பதறிப் போகத் தேவையில்லை. காரணம், எங்களுக்குள் அதையும் தாண்டிய அன்பும், பரிவுமே மேலோங்கியிருந்தது. டயானாவை முன்பை விட அதீதமாக இப்போது காதலிக்கிறேன்.

டயானாவுக்கும், எனக்குமான செக்ஸ் பந்தம் ஒரு வருடமாக பிரேக் ஆக இருப்பதற்கு டயானாவின் பிரசவம்தான் காரணம். அவரது பிரசவத்தை நான் நேரில் பார்த்தபோது எனக்கே பெரும் அவமானமாகி விட்டது, வெட்கப்பட்டேன். செக்ஸை விட மிகப் பெரிய விஷயம் தாய்மை, அன்பு என்பதை அப்போது நான் புரிந்து கொண்டேன்.

எங்களுக்குள் செக்ஸ்தான் குறைந்து போய் விட்டதே தவிர, டயானாவுடனான எனது மன நெருக்கம் முன்பை விட மேலும் அதிகமாகியுள்ளது என்பதே உண்மை.

எனது மனைவிக்குக் குழந்தை பிறந்தபோது ஒரு ஆண் என்பதை விட ஒரு தந்தை என்ற உணர்வுதான் என்னிடம் மேலோங்கியிருந்தது.
எனது மனைவி 3 நாட்கள் மருத்துவமனையில் சிரமப்பட்டாள். அதையெல்லாம் நேரில் பார்த்தபோது நான் கலங்கிப் போய் விட்டேன். மிகவும் கஷ்டமான நாட்கள் அவை. நான் அப்போது பொறுப்பாக செயல்பட நல்ல வாய்ப்பு கிடைத்தது. அதை நானும் விடவில்லை.

குழந்தை பெற்ற பிறகு சில வாரங்களிலேயே பெண்களில் பெரும்பாலானோர் செக்ஸ் வாழ்க்கைக்குத் தயாராகி விடுகின்றனர். ஆண்களும் தயாராகவே இருக்கின்றனர். ஆனால் எங்களுக்குள் அப்படி எந்த அவசரமும் ஏற்படவில்லை. செக்ஸ் இல்லாமல் ஒரு வாழ்க்கையா என்று எனது நண்பர்கள் சிலர் தங்களது மனைவியை விட்டுப் பிரிந்து சென்றுள்ளனர். ஆனால் அது எனக்கு இப்போது ஆச்சரியமாக இருக்கிறது.

ஆனால் தனது மனைவியின் பிரசவத்தை நேரில் பார்க்கும் வாய்ப்பு ஒரு கணவருக்கு கிடைத்தால் நிச்சயம் செக்ஸ் அவருக்குப் பெரிதாகத் தோன்றாது என்பது எனது எண்ணம் என்கிறார் மார்ட்டின்.

 

http://www.canadamirror.com/canada/59113.html#sthash.xojPBBeC.dpbs

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு பிரசவத்தின் போது பெரும்பாலான கணவன்மார்கள் உடன் இருக்கிறார்கள். அதற்காக அவர்கள் உடலுறவு வைக்காமாலா இருக்கிறார்கள்? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, தமிழரசு said:

எங்களுக்குள் கடந்த ஒரு வருடமாக செக்ஸ் நடக்கவில்லை

இதை ஏதோ செய்தது திறம் மாதிரி வெளியிலை சொல்லுறார் மார்ட்டின் 

இதுக்கை வாயிலை பச்சத்தண்ணிகூட படேல்லை எண்ட மாதிரி வீரவசனங்கள் வேறை......பேசாமல் தூக்குப்போட்டு மண்டையையாவது போட்டிருக்கலாம்.......... டயானாவை சந்தோசமாய் வாழவிட்டிருக்கலாம்....
இதைத்தான் "வைச்சுக்கொண்டு வஞ்சகம் பண்ணுறான்" எண்டு சொல்லுறது :cool:

Link to comment
Share on other sites

16 hours ago, தமிழரசு said:

கடந்த ஒரு வருடமாக நாங்கள் இரவில் தனித்தே படுத்துத் தூங்குகிறோம். எங்களுக்குள் செக்ஸ் ரீதியான எந்த செயல்பாடுகளும் இல்லை, பேச்சுக்களும் இல்லை. இருவருக்குமே செக்ஸில் விருப்பம் இல்லாமல் இல்லை. ஆனால் செக்ஸ் இடம் பெறவில்லை.

போற போக்க பாத்தால் யாரோ ஒருவன் Gapஇல கடா வெட்டப்போறான் எண்டு மட்டும் தெரியுது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, ஜீவன் சிவா said:

போற போக்க பாத்தால் யாரோ ஒருவன் Gapஇல கடா வெட்டப்போறான் எண்டு மட்டும் தெரியுது.

10xsxew.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உவர் என்னத்துக்கு உந்த அறைக்குள் போனவர்...!   கூழுக்கும் ஆசை மீசைக்கும் ஆசை .  வீராங்கணைகளே அடுத்த மாதம் போல்போட் பாய்ந்து ஓடுறாங்கள். tw_angry:

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

 பலகண்டு பிடிப்புகளும் இல்லாமல் போயிருக்கும் பல விஞ்ஞானிகளையும் இழந்து இருக்கும் முதல் பிறந்த குழந்தைகாகா மட்டும் இராமல் முயன்று பார்த்து அடுத்த வாரிசை உருவாக்குங்கள் அவனும் இந்த உலகை ஆழலாம் யாருக்கு தெரியும் 

வலி இல்லாமல் வாழ்க்கை இல்லையே

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கூடா ந‌ட்ப்பு கேடா முடியும் என்று கலைஞர் சொன்னது 2011 நடுப்பகுதியில். திகார் சிறைச்சாலையில் அவரது மகள் கனிமொழி இருந்தினாலும் 2011  சட்டசபை தேர்தலில் படுதோல்வி அடைந்ததுக்கும் காரணதத்தினால்தான். 
    • ஒரு கொள்கை பற்றுள்ள தலைவன் தானும் தன் குடும்பமும் அந்த கொள்கை வழி நிண்டு காட்டல் வேண்டும். சகாயம், இஸ்ரோ விஞ்ஞானிகள், அப்துல் கலாம்….ஏன் சீமான் கூட, தமிழ் நாட்டில் தமிழ் மொழி மூலம் கல்வி கற்று வாழ்வில் நல்ல நிலையை அடைந்தோர் பலர் உள்ளனர். ஆகவே தமிழ் நாட்டில், தமிழ் வழி கல்வி அப்படி மோசமான ஒன்றல்ல. அப்படி இருந்தும் சீமான் ஆங்கில கல்வியை நாடியது அவரின் ஆங்கில மோகம், சுய நலத்தையே காட்டுகிறது.  தமிழ் மந்திர உச்சரிப்புக்கு போராடி விட்டு, மகனின் காது குத்தில் ஐயரை வைத்து சமஸ்கிருதத்தில் ஓதியது.  குடும்ப அரசியலை எதிர்த்து கொண்டே, மச்சானுக்கு சீட், மனைவிக்கு கட்சியில் பதவியில்லா அதிகாரம் வழங்கியது. அந்த வகையில் சீமானின் இன்னொரு தகிடு தத்தம்தான் இதுவும். கருணாநிதியை போலவே சீமானின் சொல்லுக்கும் செயலுக்கும் வெகுதூரம். தன் சுய நலத்துக்கு எதையும் மாற்றுவார். அவரை போலவே இவருக்கும் என்ன செய்தாலும் முட்டு கொடுக்கவும் சில கொத்தடிமைகள் இருக்கிறார்கள். #சின்ன கருணாநிதி இருக்கு. பெரிய கருணாநிதி பச்சை கள்ளன் என்பதே விடை. பொருந்தும். அச்சொட்டாக. ஏன் இல்லாமல்? தமிழ் தமிழ் என எல்லாரையும் ஏமாற்றிய கருணாநிதி குடும்ப பிள்ளைகள் ஆங்கில கல்வி கற்றதை நானும் பலரும் சிலாகித்து எழுதியுள்ளோமே. ஆகவே இந்த விடயத்தில் பெரிய கருணாநிதி கள்ளன் என்பதில் மாற்று கருத்தே இல்லை. இப்போ நான் கேட்கும் கேள்வி…. கருணாநிதி செய்ததை அப்படியே கொப்பி அடிக்கும் சீமான் கள்ளன் இல்லையா? # சின்ன கருணாநிதி
    • அடுத்த‌ பாராள‌ம‌ன்ற‌ தேர்த‌லில் ஸ்டாலின் தான் பிர‌த‌மரா போட்டி போடுவார் என்று அமெரிக்கா க‌னடா தொட்டு ப‌ல‌ நாட்டில்  க‌தை அடி ப‌டுது.....................துண்டறிக்கை பார்த்தே த‌மிழ‌ ஒழுங்காய் வாசிக்க‌ தெரியாது............ பிரத‌மர் ஆகினால் ஒட்டு மொத்த‌ உல‌க‌மே அதிரும் ஸ்டாலின் ஜயாவின் பேச்சை கேட்டு  😁😜................ வீட்டில் சீமான் பிள்ளைக‌ளுக்கு க‌ண்டிப்பாய் தூய‌ த‌மிழ் சொல்லிக் கொடுப்பார் அதில் எந்த ச‌ந்தேக‌மும் இல்லை யுவ‌ர் ஆன‌ர்.............ஆட்சிக்கு வ‌ராத‌ ஒருத‌ர‌ 68கேள்வி கேட்ப‌து எந்த‌ வித‌த்தில் ஞாய‌ம்...........ஒரு முறை ஆட்சி சீமான் கைக்கு போன‌ பிற‌க்கு அவ‌ர் த‌மிழை தமிழை வளர்க்கிறாரா அல்ல‌து திராவிட‌த்தை போல் தமிழை அழிக்கிறாரா என்று பின்னைய‌ காலங்களில் விவாதிக்க‌லாம்............இப்ப‌ அவ‌ர் எடுக்கும் அர‌சிய‌லை ப‌ற்றி விவ‌திப்ப‌து வ‌ர‌வேற்க்க‌ த‌க்க‌து...................
    • நோர்வே அனுமதித்தால் அங்கும் குரானை எரிக்கலாம்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.