Jump to content

மன்னார் மாவட்ட தமிழ் முஸ்லிம் உறவு - வ.ஐ.ச.ஜெயபாலன்


poet

Recommended Posts

மன்னார் மாவட்ட தமிழ் முஸ்லிம் உறவை மீழக் கட்டி எழுப்புதல்.
*
மன்னார் மாவட்ட்த்தில் சமத்துவமும் நீதியுமுள்ள தமிழ் முஸ்லிம் உறவை மீழக் கட்டி எழுப்ப அனுசரணை வளங்குமாறு மன்னார் தமிழ் சிவில் சமூக தலைவர் அதி வணக்கத்துக்குரிய ராயப்பு யோசப் ஆண்டகையிடம் விண்ணப்பம்

------------------------------------------------------------------------------------------

போர்க்காலத்திலும் பின்னரும் இனக்கொலை அரசின் அச்சுறுத்தல்களுக்குப் பணியாது தமிழ் சிவில்சமூகத்தை வழிநடத்திய எங்கள் தலைவன் அதி வணக்கத்துக்குரிய யோசப் இராயப்பு ஆண்டகையை தலைபணிந்து வாழ்த்துகிறேன்
*
என்றும் என் போற்றுதலுக்கும் மதிப்பிற்குரிய இராயப்பு யோசப் ஆண்டகை அவர்கள் மன்னார் மாவட்டத்தில் குறிப்பாக மன்னார் தெற்க்கு கரையோரப் பகுதிகளில் தமிழ் முஸ்லிம் முரண்பாடுகளை சுமூகமாக தீர்த்து வைக்கும் நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என பணிவன்புடன் வேண்டுகிறேன். மன்னார் தெற்க்கு பகுதியின் சிக்கலாக இருக்கும் புத்தளம் அகதிகள் முகாம்களில் இருந்து தாய் மண் திரும்பும் முஸ்லிம் அகதிகள் மீழ்வருகையும் இந்திய முகாம்களில் இருந்து தாய்மண் திரும்பும் தமிழ் அகதிகள் மீழ்வருகையும் நீதியும் சமாதானமும் சுமூகமாகவும் இடம் பெறும் சூழல் உருவாக்கப் படுவது அவசியம். இரு தரப்பு அரசியல் வாதிகளாலும் இப்பிரச்சினையை முழுமையாக அணுக முடியவில்லை, இரு தரப்பு சிவில் சமூகமும் தலையிட வேண்டிய சூழல் நெடுநாளாக உள்ளது. இருதரப்பு சிவில் சமூகத் தலைமைகளோடும் தொடர்புள்ள அதி வணக்கத்துக்குரிய யோசப் இராயப்பு ஆண்டகை அவர்கள் மன்னார் தமிழ் முஸ்லிம் முரண்பாடுகளை நீதியும் சமத்துவமும் சுமூகமுள்ள முறையில் கழைகிற ஒரு தீர்வுக்கான முன்முயற்சிகளை எடுக்கவேண்டும் என்பது வரலாற்றுக் கோரிக்கையாகும்.

மதிப்பிற்குரிய இராயப்பு யோசப் ஆண்டகை அவர்கள் தமிழ் சிவில் சமூக தலைவர்களும் முஸ்லிம் சிவில் சமூக தலைவர்களும் சந்தித்து பேசவும் அவர்கள் தமிழ் முஸ்லிம் மக்களிடை நிலவும் பிரச்சினைக்கு நீதியும் சமத்துவமும் உள்ள சுமூகமான தீர்வைக் காணவும் அனுசரணை வளங்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். அதற்கான ஆழுமையும் அனுபவமும் செல்வாக்கும் ஆணடகையிடம் உள்ளது. என்னுடைய பணிவான வேண்டுகோளை மதிப்பிற்குரிய இராயப்பு யோசப் ஆண்டகை வர்களும் தமிழ் மற்றும் முஸ்லிம் சிவில் சமூக தலைவர்களும் பரிசீலிக்க வேண்டும் என வேண்டுகிறேன்.
- வ.ஐ.ச.ஜெயபாலன் கவிஞன்

Link to comment
Share on other sites

மமன்னார் ட்னமிழ் முஸ்லிம் உறவு பிரச்சினையை இரு தரப்பு அரசியல் வாதிகளாலும் பேசி தீர்க்க முடியவில்லை. ஆனால் இருபக்க சிவில் சமூக தலைவர்களும் கூடி இருந்து முழுப் பிரச்சனைகளையும் பேசினால் இப்பிரசினைக்கு சுமூகமான முடிவை எட்டமுடியும்.  அரோக்கியமன ஒரு விவாதத்தை வரவேற்க்கிறேன்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.