Jump to content

`இளையவர்கள் பெரும்பான்மையாக உள்ள ஆப்பிரிக்காவின் தலைவர்கள் மட்டும் வயதானவர்கள்'


Recommended Posts

`இளையவர்கள் பெரும்பான்மையாக உள்ள ஆப்பிரிக்காவின் தலைவர்கள் மட்டும் வயதானவர்கள்'

 

இளம் வயதினர் அதிகமாக வாழும் ஆப்பிரிக்க நாடுகளில் வயதான தலைவர்களே ஆட்சியில் உள்ளனர்.

150611144113_westafrican_leaders_512x288
 மேற்கு ஆப்பிரிக்க நாடுகளின் தலைவர்கள்

ஆப்பிரிக்க கண்டம் முழுவதுமாக உள்ள நாடுகளின் தலைவர்களின் சராசரி வயது 61 என தெரிவிக்கப்படுகிறது.

அந்த நாட்டுத் தலைவர்களில், வயதில் மூத்த முதல் 10 தலைவர்களின் சராசரி வயது 79 என்று தெரிவிக்கப்படுகிறது.

உலகிலேயே இளம் வயதானோர் அதிகம் வாழும் ஆப்பிரிக்கக் கண்டத்தில், அந்த நாடுகளின் தலைவர்கள் எப்போதுமே வயது முதிர்ந்தவர்களாக உள்ளதற்கு காரணம் பற்றிய ஆய்வுகளும் துறைசார் வல்லுனர்களின் கருத்துக்களும் முன்வைக்கப்பட்டுள்ளன.

160303155058_east_africa_second_clothes_  கிழக்கு ஆப்பிரிக்க சந்தை

ஆப்பிரிக்க கண்டத்தில் உள்ள மொத்த மக்கள் தொகையின் சராசரி வயது 18 என ஆய்வு தெரிவிக்கிறது.

அதில் 40 வீதமானோர், அதாவது 416 மில்லியன் பேர் வரையானோர் 14 வயதிற்கு உட்பட்டவர்கள் ஆவர்.

ஆப்பிரிக்க கண்டத்திலேயே நீண்ட காலம் தொடர்ந்தும் நாட்டின் அதிபர் பதவியினை வகித்து வருவோர்களின் பட்டியலில், முதல் 11 இடங்களை பிடித்துள்ள நாடுகளின் தலைவர்கள் ஒவ்வெருவரும் குறைந்தது 15 ஆண்டுகள் அந்த பதவியில் உள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது.

160308082434_atiku_zuma_nigeria_south_af  

இதில் இரண்டு மடங்கு காலம் தொடர்ந்தும் ஆட்சியில் நீட்டிக்கும் தலைவர்களும் அவர்களிடையே உள்ளனர்.

ஆட்சிக்கு வரும் தலைவர்கள் இரண்டாவது தடவையும் தமது பதவிக் காலத்தை நீட்டிப்பதுடன், அதற்கு மேல் சென்று மூன்றாவது தவணையும் பதவிக் காலத்தை நீட்டிப்பது அங்கு பெரும் அரசியல் பிரச்சினையாகவும் உருவெடுத்துள்ளது.

காங்கோ, ருவண்டா, மற்றும் புருண்டி ஆகிய நாடுகளில், அண்மைக் காலங்களில் வெடித்த இந்தப் பிரச்சினை, கண்டம் முழுவதும் அதிர்வுகளை ஏற்படுத்தியிருந்ததுவும் குறிப்பிடத்தக்கது.

உகண்டா அதிபர் யுவரி முஸவனி 29 ஆண்டுகளாக நாட்டின் தலைவர் பதவியை வகித்துவருகிறார் என்பது இதற்கு ஒரு உதாரணமாகும். 1986 ஆம் அண்டு அவர் தனது 41 ஆவது வயதில் அதிபராக பதவி ஏற்றார்.

அப்போது கருத்து தெரிவித்த அவர், ஆப்பிரிக்கா முழுவதும் உள்ள பிரச்சினைகளுக்கு காரணம் மக்கள் அல்ல, அதன் தலைவர்கள் அந்தப் பதவியில் தொடர்ந்தும் இருக்க விரும்புவதே என்பதை சுட்டிக்காட்டியிருந்தார்.

ஆப்பிரிக்காவில் உள்ள பல மில்லியன் கணக்கானோரின் வயது சராசரியாக 18 ஆக மாத்திரமே உள்ள நிலையில், அவர்கள் இதுவரை ஒரு தடைவகூட வாக்களிக்காதவர்களாகவே உள்ளனர்.

பெரும்பான்மையாக இந்த வயது வகுப்பில் உள்ளவர்கள் இதுவரை காலமும் பெற்றோர் வாக்களித்த தலைவர்களுக்கே தமது வாக்குகளையும் அளிக்க தயாராக இருப்பது, அங்கு ஆட்சியில் உள்ள அதாவது வயதில் மூத்த அரசியல் தலைவர்கள் ஆட்சியில் நீட்டித்திருப்பதற்கு காரணம் என அவதானிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

http://www.bbc.com/tamil/global/2016/03/160309_afrrica_leaders

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 5 எள்ளு பாகுகள் பாக்கெட்டில் அடைத்து லேபல் ஒட்டி - வீட்டில் போய் வாங்கினால் ரூ 200 ( 50 பென்ஸ்). இலண்டனில் தமிழ் கடையில் குறைந்தது £3.50? ஏற்றுமதி செலவை கழித்து பார்த்தாலும்? பிகு எள்ளை இடித்து மாவாக்கி பிசையும் உருண்டை. எள்ளுருண்டை அல்ல.
    • அவள் ஒருநாள் வீதியோரம் கூடை நிறைந்த கடவுளர்களை கூவிக் கூவி விற்றுக்கொண்டிருந்தாள்   போவோர் வருவோரிடம் 'கடவுள் விற்பனைக்கு' என்று கத்திச் சொன்னாள்   அவள் சொன்னதை யாரும் கவனித்ததாகத் தெரியவில்லை   பிள்ளை பாலுக்கு அழுதது கடவுளர்களின் சுமை அவளின் தலையை அழுத்தியது   'கடவுள் விற்பனைக்கு' அவள் முகம் நிறைந்த புன்னகையுடன் மீண்டும் கூவினாள்   கடவுள் மீது விருப்புற்ற பலரால் கடவுள் அன்று பேரம் பேசப்பட்டார்   அந்நாளின் முடிவில் அவளின் வேண்டுதலை ஏற்றுக் கடவுளர்கள் அனைவரும் விலை போயினர்     தியா - காண்டீபன் மார்ச் 29, 2024 காலை 7:20
    • வருகை, கருத்துக்கு நன்றி. இரெண்டு வாரம் இல்லை. மாதம். ஆனால் இதை வைத்தும் கணிக்க முடியாதுதான். ஒரு ஊக கணிப்புத்தான். பேசிய பலரும் யாருக்கும் வாக்களிக்காத மனநிலையில், ஒதுங்கி போவதாகவே இருந்தார்கள். இவர்கள் வீட்டில் இருக்க, சலுகை அரசியலை விரும்புவோர் வாக்களித்தால் யாழில் தமிழ் தேசிய எம்பிகள் அளவு குறையும் என நினைக்கிறேன்.  ஜேவிபி க்கு முன்னர் இல்லாத ஆதரவு யாழில் உள்ளது. பிள்ளையார் இன்னில் அண்மையில் கூட்டம் வைத்து, உள்ளூர் பிரமுகர்கள் பலரும் சமூகமாகி இருந்தனர்.
    • சிறப்பான கவிதை... மகிழ்ச்சியாக இருங்கள் 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.