Jump to content

சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள்


Recommended Posts

சடலத்துக்கு தீ மூட்ட 
உயிருள்ளவன் ஒத்திகை பார்க்கிறான் 
சிகரட் 

ஆறு அங்குல உயரம் 
ஆறடி மனிதனையே கொல்கிறது
சிகரட் 

^

கே இனியவன்
ஹைக்கூ கவிதை

Link to comment
Share on other sites

  • Replies 70
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

இந்த ஏகலைவனுக்கு...நீங்கள் துரோணராக இருங்கள், கவிப்புயல்! நன்றி !

 

 

உயிருடன் இருக்கும் போதே,

உடலுக்குக் கொள்ளி வைக்கிறது,

சிகரட்!

 

ஆறடி உயரத்து மனிதனை,

ஆள்கின்றது ஆறங்குல உயரம்,

சிகரட்!

Link to comment
Share on other sites

22 minutes ago, புங்கையூரன் said:

உயிருடன் இருக்கும் போதே,

உடலுக்குக் கொள்ளி வைக்கிறது,

சிகரட்!

சிகரட் கொள்ளி வைக்குதோ இல்லையோ
நல்லா அள்ளி வைக்கிராங்களப்பா 
 

cigar emoticon

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

எல்லா உணவிலும் 
கலந்திருக்கும்  உப்புச்சுவை 
தொழிலாளி வியர்வை 
^
மே தின வாழ்த்துக்கள் 
கவிப்புயல் இனியவன் 

Link to comment
Share on other sites

உழைப்பின் வலியும் வியர்வையும் 
நினைவு படுத்தி  வலிக்கிறது   
தந்தை சுமந்த சுமை 

^
மே தின ஹைக்கூ கவிதை 
கவிப்புயல் இனியவன்

Link to comment
Share on other sites

  • 4 weeks later...

கையும் வண்மையானவன்  
இதயமும் வண்மையானவன் 
மரவெட்டி 

&
கவிப்புயல் இனியவன் 
ஹைக்கூ கவிதை  

Link to comment
Share on other sites

  • 3 weeks later...

எல்லாகடவுளும் ஒரே இடத்தில் 
எல்லா மதமும் சம்மதமே 
படக்கடையில் வியாபாரம் 
&
கவிப்புயல் இனியவன் 
ஹைக்கூ கவிதை 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மிகவும் நன்றாக இருக்கின்றன ... தொடருங்கள்  புயல்...!!  tw_blush:

Link to comment
Share on other sites

14 hours ago, suvy said:

மிகவும் நன்றாக இருக்கின்றன ... தொடருங்கள்  புயல்...!!  tw_blush:

நன்றி நன்றி

Link to comment
Share on other sites

  • 3 weeks later...

பறப்பதாக நினைத்து 
பரலோகம் போகிறான் 
போதைக்காரன் 

@@@

அரசாங்க அனுமதியோடு 
உடலை கருக்கும் செயல் 
சிகரெட் 

@@@

பேச்சில் ஒரு வாழ்க்கை 
நிஜத்தில் ஒரு வாழ்க்கை 
அரசியல் 

&
கவிப்புயலின் ஹைக்கூக்கள் 
 

Link to comment
Share on other sites

  • 2 months later...

என் சந்ததிக்காக குழிதோண்டுங்கள்
இரந்து மன்றாடி கேட்கிறது 
மரம் 

^^^
ஹைக்கூ
கவிப்புயல் இனியவன்

Link to comment
Share on other sites

வாழ்க்கை ஒரு சுமை 
குழந்தை வயதில் கற்பிக்கப்படுகிறது
பள்ளி புத்தகப்பை

^^^
ஹைக்கூ
கவிப்புயல் இனியவன்

முதல் தேதிமுதல் வளர்பிறை
பதினைந்தாம் தேதி முதல் தேய்பிறை
மாத சம்பளம்

^^^
ஹைக்கூ
கவிப்புயல் இனியவன்
 

Link to comment
Share on other sites

  • 4 weeks later...

இறந்த பின்னரும் 

நிம்மதியில்லை

மர்ம மரணம்

 

&

சிந்திக்க வைப்பதே ஹைக்கூ

கவிப்புயல் இனியவன்

Link to comment
Share on other sites

மனித வடிவில் சுற்றும்
எமதர்மர்கள்
போலி டாக்டர்

&
சிந்திக்க வைப்பதே ஹைக்கூ
கவிப்புயல் இனியவன்

Link to comment
Share on other sites

கற்றுதந்த விலங்குகள் 
ஹைக்கூ வடிவில் சில
***********************************

உடம்பையே வளர்க்காதே 
நம்பிக்கையையும் வளர் 
யானை 

காப்பவனை காப்பாற்று 
கற்றுதந்தது 
நாய் 

குறிக்கோளுடன் வாழ்
தன்னிலை இழக்காதே 
புலி 

வாழ்க்கை ஒரு சுமை 
அழாமல் சுமந்துகொள் 
கழுதை 

உழைக்காமல் சாப்பாடு 
மெத்தையில் தூக்கம் 
பூனை 


இனப்பெருக்கம் 
கற்றுத்தந்தது 
பன்றி

Link to comment
Share on other sites

நகைத்தாள் 
நகையை இழந்தேன் 
நகை திருட்டு 

$
சென்றியூ
கவிப்புயல் இனியவன் 

Link to comment
Share on other sites

  • 1 month later...

சடப்பொருளும் 
என் வீட்டில் கவிதை எழுதுகிறது 
பேனா 

&
சிந்திக்க வைப்பதே ஹைக்கூ
கவி நாட்டியரசர் , கவிப்புயல் 
கே இனியவன்

ஒரு மரத்தை கூட காணவில்லை 
வறண்ட ஊரின் பெயர் 
பூந்தோட்டம் 

&
சிந்திக்க வைப்பதே ஹைக்கூ
கவி நாட்டியரசர் , கவிப்புயல் 
கே இனியவன்

Link to comment
Share on other sites

நானும் அழகாய் இருக்கிறேன் 
என்னை சுற்றியும் அழகான பெண்கள் 
கண் மூடி இருக்கிறேன் 

&
சிந்திக்க வைப்பதே ஹைக்கூ
கவி நாட்டியரசர் , கவிப்புயல் 
கே இனியவன்

நடிகைக்கு கவர்ச்சி துளி 
நாற்று நடுப்பவனுக்கு உழைப்பு துளி 
வியர்வை 

&
சிந்திக்க வைப்பதே ஹைக்கூ
கவி நாட்டியரசர் , கவிப்புயல் 
கே இனியவன்

Link to comment
Share on other sites

  • 1 month later...

மனதில் இருள் 
ஆடையில்  வெண்மை 
விதவை 

@@@

காற்றோட்டமான ஆடை 
ஆடை முழுவதும் அலங்காரம் 
ஏழை சிறுமி 

@@@

உடல் முழுதும் காயம் 
தையல் போட்டும் காயவில்லை 
கிழிந்த ஆடை 

@@@

கார் கதவை திறந்து 
சலுயூட் அடித்தான் காவலாளி 
இறங்கி வந்தது நாய் 

@@@

கவிப்புயல் இனியவன் 
ஹைக்கூகள்  

Link to comment
Share on other sites

 

 

 

மிகவும் சிறந்த ஆக்கம், அனைத்துமே அர்த்தம் பொதிந்த வரிகளின் அழகான அணிவகுப்பு! ஆயிரம் வார்த்தைகள் சொல்லாத கருத்தை உங்களின் சிறந்த வரிகள் சில வரிகள் சொல்லிவிடுகிறது பாராட்டுகள். tw_blush: தொடர்ந்து பதிவிடுங்கள் கவிஞரே... உங்கள் கவிதையின் ரசிகன் நான்! தொடர்ந்து ரசிக்க காத்திருக்கிறேன். tw_blush:

 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 11.9.2016 at 5:39 AM, கவிப்புயல் இனியவன் said:

என் சந்ததிக்காக குழிதோண்டுங்கள்
இரந்து மன்றாடி கேட்கிறது 
மரம் 

^^^
ஹைக்கூ
கவிப்புயல் இனியவன்

அருமையான...  "ஹைக்கூ"  பதிவுகள். கவிப்புயல் இனியவன்.:)

Link to comment
Share on other sites

மச்சம் புசித்தால் கோயிலுக்கு போகாதே 
பூசகரும் பூரண சைவம் 
கோயிலில் மச்ச அவதார சிலை 

&
கவிப்புயல் இனியவன் 
சிந்திக்க வைப்பதே ஹைக்கூ 

பண்பாடுகள் பாழாய் போகிறது 
கலாச்சார விழாக்களில் மக்கள் இல்லை 
தொலைக்காட்சி நேரடி ஒளிபரப்பு 

&
கவிப்புயல் இனியவன் 
சிந்திக்க வைப்பதே ஹைக்கூ 
 

Link to comment
Share on other sites

காலம் காலமாய் ஏமாற்றுகிறார்கள் 
தாயின் கையை தட்டி விட்டது குழந்தை 
நிலா சோறு 

&
கவிப்புயல் இனியவன் 
சிந்திக்க வைப்பதே ஹைக்கூ 

வயல் நிலங்கள் வெடித்தது 
வறட்சியால் பயிர்கள் இறப்பு 
வெட்டிய மரங்களின் சாபம் 

&
கவிப்புயல் இனியவன் 
சிந்திக்க வைப்பதே ஹைக்கூ 

Link to comment
Share on other sites

நிலத்தில் கோடுகள்
வறுமை கோடானது 
நீடிய வறட்சி 

&
கவிப்புயல் இனியவன் 
சிந்திக்க வைப்பதே ஹைக்கூ 
 

Link to comment
Share on other sites

  • 2 months later...

குப்பை தொட்டி நிரம்புதில்லை
பெருக்க பெருக்க பெருகுகிறது
மனக்குப்பை

&
ஹைக்கூ
கவிப்புயல் இனியவன்

தானும் நிம்மதியாய் வாழ்வதில்லை
பிறரையும் நிம்மதியாய் வாழவிடுவதில்லை
பொறாமை

&
ஹைக்கூ
கவிப்புயல் இனியவன்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கெஹெலிய உள்ளிட்ட 7 பேருக்கு விளக்கமறியல் நீடிப்பு! தரமற்ற மருந்து கொள்வனவு தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட 7 பேர் எதிர்வரும் 8ஆம் திகதி வரை மீளவும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் இன்று (28) மாளிகாகந்த நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டனர். இதன்போது, கெஹெலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட 7 பேரை எதிர்வரும் 8ஆம் திகதி வரை மீளவும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார். சுகாதார அமைச்சின் முன்னாள் செயலாளர் ஜனக ஸ்ரீ சந்திரகுப்த மற்றும் சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளர் சமன் ரத்நாயக்கவும் இதில் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. https://thinakkural.lk/article/297480
    • பல்லைக் காட்டியது யார், வெள்ளைக் குடை பிடித்தது ஏன்? - தமிழ்நாடு தேர்தல் களத்தில் என்ன நடக்கிறது? பட மூலாதாரம்,X/UDHAY/ANI 28 மார்ச் 2024, 05:54 GMT தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. நாடாளுமன்றத் தேர்தல் பரப்புரைகளை கிட்டத்தட்ட அனைத்து கட்சிகளும் தொடங்கிவிட்ட நிலையில், திமுக அதிமுக இடையிலான புது மாதிரியான போட்டோ விவாதம் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. பிரச்சாரத்தின் முக்கிய அங்கமாக சமூக ஊடகங்கள் மாறியுள்ள நிலையில், களத்தில் நடைபெறும் பரப்புரைகள் சமூக வலைதளங்களிலும், எதிரொலிக்கின்றன. தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தனது பிரச்சாரங்களில் போட்டோக்களை பயன்படுத்தி பரப்புரை செய்து வருகிறார். அதிமுகவும் பாஜகவும் ஒரே கூட்டணி என்பதை காட்ட, பிரதமர் மோதியும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் பொது நிகழ்வுகளில், சந்திப்புகளில் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை கையில் கொண்டு வந்து மக்கள் மத்தியில் எடுத்துக் காட்டி பரப்புரை செய்கிறார். இதற்கு பதிலடியாக எடப்பாடி பழனிசாமி தனது பரப்புரைக் கூட்டங்களில் திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலினும் பிரதமர் மோதியும் அரசு நிகழ்வுகளில், விழாக்களில் அருகில் நின்று சிரித்து பேசிக் கொண்ட புகைப்படங்களை எடுத்துக் காட்டி, திமுகவும் பாஜகவும் கள்ளக் கூட்டணி கொண்டுள்ளனர் என்று சுட்டிக் காட்டுகிறார்.   பட மூலாதாரம்,X/UDHAY 'கல்லு பல்லு' என நீளும் விமர்சனம் அதே போன்று, உதயநிதி ஸ்டாலின், மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணிகள் பல ஆண்டுகளாக நிலுவையில் உள்ளது என்பதை சுட்டிக் காட்டும் வகையில் கடந்த தேர்தலில், ஒற்றை செங்கலைக் காட்டி பரப்புரை செய்தார். இந்த முறையும் அதே போன்ற பரப்புரையை மேற்கொண்ட போது, “ஸ்கிரிப்டை மாத்து பா” என்று எடப்பாடி தனது பிரச்சாரத்தில் பதில் கொடுத்துள்ளார். “செங்கலை தூக்கிக் கொண்டு வித்தை காட்டுகிறாயா” என்று கேள்வி எழுப்பிய எடப்பாடி பழனிசாமி, திமுகவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மக்களவையில் அழுத்தம் கொடுத்திருந்தால் எய்ம்ஸ் கட்டுமானத்துக்கு உதவியாக இருந்திருக்கும் என்றார். இந்த விவாதங்கள் பிரச்சாரக் களத்தில் மட்டுமல்லாமல், சமூக ஊடகங்களில் இடம் பெற்றுள்ளன. “நானாவது எய்ம்ஸ் -ல் வைத்த கல்லை காட்டினேன். இவர் பல்லை காட்டுகிறார் பாருங்கள்” என எடப்பாடி மோதியுடன் எடப்பாடி பழனிசாமி சிரித்துக் கொண்டு நிற்கும் புகைப்படத்தைக் காட்டி உதயநிதி ஸ்டாலின் பேசியது சமூக ஊடகங்களில் கல்லு பல்லு என்ற புதிய ஹேஷ் டேக்கை உருவாக்கிவிட்டது. இரு தரப்பினரும் மாறி மாறி, கல்லு பல்லு என்று பல உதாரணங்களை எடுத்து விமர்சித்து கேலி செய்து வருகின்றனர்.   பட மூலாதாரம்,X/EPSTAMILNADU மேலும் உதயநிதி ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோதியை சந்தித்த போது எடுத்த புகைப்படத்தை காட்டி, “இவர் சிரிச்சா தப்பு இல்ல, நான் சிரிச்சா தப்பா. சிரிச்சா என்ன தெரியுது, பல்லு தானே” என்று மீண்டும் இந்த விவகாரத்தை கையில் எடுத்தார் எடப்பாடி பழனிசாமி. அந்தப் புகைப்படம் கேலோ இந்தியா நிகழ்வுகள் குறித்து பேசும் போது எடுத்தது என்று பதிலளித்தப் உதயநிதி, எடப்பாடி பழனிசாமி சசிகலாவின் காலில் விழும் போட்டோவை காண்பித்து, “நான் இப்படி ஒருவர் காலில் விழும் புகைப்படத்தை காண்பித்தால் நான் அரசியலை விட்டு விலகிவிடுகிறேன்” என சவால் விடுத்துள்ளார்.   பட மூலாதாரம்,X/ANI பிரதமர் நரேந்திர மோதி சென்னை வந்த போது கருப்பு குடைக்கு பதிலாக வெள்ளை குடை பிடித்ததை விமர்சனம் செய்து பேசிய எடப்பாடி பழனிசாமி, “நடிகர் வடிவேலுவின் 23ம் புலிகேசி திரைப்படத்தில், எதிரி நாட்டவர்கள் படை எடுத்து வரும் போது வெள்ளை கொடி எடுத்து செல்வார். அதே போல, கருப்பு குடை பிடித்தால் பிரதமருக்கு கோபம் வரும் என்பதால், அவர் சென்னை வரும் போது, வெள்ளை குடை பிடிக்கப்பட்டது. வெள்ளை குடை ஏந்தும் பொம்மை வேந்தர் என்று முதல்வரை மக்கள் சொல்கிறார்கள்” என்று கூறியிருந்தார்.   பட மூலாதாரம்,X/ANNAMALAI_K 'கோட்டா அரசியல்' - விமர்சனத்தில் சிக்கியுள்ள அண்ணாமலை அண்ணாமலை கோவையில் செய்தியாளர் சந்திப்பில் பேசும் போது,தன்னை எதிர்த்து போட்டியிடும் அதிமுக வேட்பாளரான சிங்கை ராமச்சந்திரன், சட்டமன்ற உறுப்பினராக இருந்த அவரது தந்தை கோவிந்தராசுவின் உதவியால் தான் உயர்படிப்பு படித்தார் என்றும் விமச்சித்திருந்தார். “2002ம் ஆண்டு எம் எல் ஏ கோட்டாவின் கீழ் கல்லூரியில் இடம் பெற்றவர் அவர், வாரிசு அரசியலில் வந்தவர் அவர். ஆனால் நான், எனது தந்தையுடன் கிராமத்திலிருந்து மூன்று பேருந்துகள் மாறி, தகரப்பெட்டியுடன் இந்த நகரத்துக்குள் நுழைந்தேன். கோட்டா அரசியலில் வரவில்லை நான்.” என்று அண்ணாமலை தெரிவித்திருந்தார். பட மூலாதாரம்,X/RAMAAIADMK இதற்கு பதிலளித்த சிங்கை ராமச்சந்திரன், “எனக்கு 11 வயது இருக்கும் போதே என் தந்தை இறந்துவிட்டார். நான் பெற்ற மதிப்பெண்கள் காரணமாகவே எனக்கு பொறியியல் கல்லூரியில் இடம் கிடைத்தது. அவர்களுடைய மோதியின் குஜராத்-ல் உள்ள ஐஐஎம்-ல் மீண்டும் மதிப்பெண்கள் மூலமாகவே இடம் பெற்றிருந்தேன். அவருக்காவது தகரப்பெட்டியை உடன் தூக்கி வர அப்பா இருந்தார், ஆனால் எனக்கு அதுவும் இல்லை. இது போன்ற கஷ்டங்களை அனைவரும் தங்கள் வாழ்வில் சந்தித்திருப்பார்கள். எனவே நான் தான் துன்ப்பப்பட்டேன் என்று கூறிக் கொள்ள எதுவும் இல்லை” என்று பதில் கூறியிருந்தார். இதை அடுத்து கோட்டா அரசியல், இட ஒதுக்கீடு குறித்த விவாதம் சமூக ஊடகங்களில் பரப்பரப்பாக நடைபெற்று வருகின்றன. திருவள்ளூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த் செந்தில், அண்ணாமலை தான் வளர்ந்து வந்த பாதையை மறந்துவிடக் கூடாது என்று கூறியுள்ளார். இதற்கிடையில், முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் விழுப்புரம் தொகுதியில் பேசும் போது அதிமுக போட்ட பிச்சை தான் தமிழகத்தில் பாஜகவுக்கு இருக்கும் நான்கு சட்டமன்ற உறுப்பினர்கள் என்று காட்டமாக கூறியிருந்தார். தேனி தொகுதியில் பாஜக கூட்டணியில் போட்டியிடும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் டிடிவி தினகரன், பாஜகவின் சாதனைகளை குறித்தோ அல்லது காங்கிரஸ் மீதுள்ள விமர்சனங்கள் குறித்து குறிப்பிட்டு எதையும் பேசுவதில்லை. தனது கட்சியிலிருந்து விலகிச் சென்றவர்களை மறைமுகமாக தாக்கிப் பேசும் அவருக்கு, பிரதான அரசியல் பிரச்னைகள் குறித்து பேசுவதை விட தனது குக்கர் சின்னத்தை மக்களிடம் கொண்டு சேர்ப்பதே முக்கியத்துவம் பெறுகிறது.   பட மூலாதாரம்,X/DRARAMADOSS பாமக மாறி மாறி கூட்டணி வைத்துக் கொள்வதை விமர்சித்து பேசிய எடப்பாடி பழனிசாமி, “நீர் இருக்கும் இடத்தை தேடிச் செல்லும் வேடந்தாங்கல் பறவை போல் பா.ம.க.,வினர் தேவைக்கேற்ப சென்று விடுவர். பா.மக., கூட்டணி வைக்காத கட்சிகளே இல்லை” என்று கூறியிருந்தார். தருமபுரியில் வேட்பாளர் சௌம்யா அன்புமணியை அறிமுகம் செய்து பேசிய அன்புமணி ராமதாஸ் “நாங்கள் வேடந்தாங்கல் பறவை அல்ல, சரணாலயம்” என்று பதில் கூறியுள்ளார். “யார் வந்தாலும் பாதுகாப்பு கொடுப்போம். வெற்றி பெற செய்வோம். எங்களை நம்பி வருபவர்களை வாழ வைப்போம். யாருக்கும் துரோகம் செய்ய மாட்டோம்” என்று தெரிவித்திருந்தார். https://www.bbc.com/tamil/articles/cjkd7v517z2o
    • 😀..... உங்களுக்காக 'கோப்பிக் கணக்கு' என்ற தலைப்பில் ஒன்று எழுத வேண்டும்....🤣 நீங்கள் இலகுவாக கடந்து விடுகிறீர்கள்........👍
    • உங்களின் சிறுகதைப் புத்தகம் வந்தவுடன் சொல்லுங்கள், நான் வாசிப்பில் கொஞ்சம் ஆர்வம் உள்ளவன். நீங்கள் அகரமுதல்வனின் எழுத்துகளை பற்றி இன்னொரு திரியில் எழுதியிருந்ததை பார்த்தேன். எனக்கும் அவரின் எழுத்துகளை பற்றி சில அபிப்பிராயங்கள் இருக்கின்றது. ஆனால், இந்த மாதம் தான் இங்கே களத்தில் இணைந்தேன், அதனால் உடனேயே எல்லா இடமும் போய் கருத்து எழுத ஒரு சின்ன தயக்கமாக இருக்கின்றது. போகப் போக தயக்கம் போய்விடும்.........😀 கலிபோர்னியாவின் பெரும் நகரங்களில் நீங்கள் கண்ட விடயம் மிகச் சாதாரண ஒரு நிகழ்வு. அமெரிக்காவின் பல பெரு நகரங்களிலும் இதே நிலையே.  மினசோட்டாவிற்கு வந்திருக்கின்றேன். அந்த நாட்களில் Kevin Garnett அங்கு கூடைப்பந்து விளையாடும் போது, அது பிடித்த அணிகளில் ஒன்றாக இருந்தது. இந்த வருடம் மீண்டும் ஒரு நல்ல அணி மினசோட்டாவில் உருவாகியுள்ளது. Vikings அணியும் பிடித்த ஒரு அணியே.
    • நன்றி... நாங்கள் அழகிய ஏரிகள் சூழ்ந்த மினசோட்டாவில் வசிக்கின்றோம். மிகவும் பிடித்தமான மகிழ்வான வாழ்வுக்குரிய இடம். தொடக்கத்தில் பனி கொஞ்சம் சிரமமாக இருந்தாலும் குழந்தைகளுடன் குழந்தையாக அதையும் ரசித்து வாழப் பழகி விட்டோம்.  இந்த இடத்தில் இன்னொன்றும் சொல்ல வேண்டும், போன வருடம் வட அமெரிக்க பேரவையின் தமிழ் பெரு விழாவுக்காக சாக்கிரமென்டோ போயிருந்தேன். இடையில் சான்பிரான்ஸ்சிஸ்கோவில் இரண்டு நாட்களை களித்தோம், கோல்டன் கேட் பாலத்துக்கு அருகில் கார் கண்ணாடிகளை உடைத்து பட்டப்பகலில் கொள்ளையர் புரியும் அட்டகாசத்தை நேரில் கண்டு பயந்தேன். இது பற்றி "தங்க வாசல்" என்ற தலைப்பில் ஒரு சிறுகதை எழுதியுள்ளேன், இன்னும் ஓரிரு மாதங்களில் வரவுள்ள எனது சிறுகதை புத்தகத்தில் அது இடம்பெறுகிறது.   
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.