Jump to content

தமிழீழ நீதியரசி சித்திராவின் வறுமைக்கு தீர்வு கிடைக்குமா?


Recommended Posts

 

 

 

தமிழீழ நீதியரசி சித்திராவின் வறுமைக்கு தீர்வு கிடைக்குமா?
[ புதன்கிழமை, 02 மார்ச் 2016, 04:53.38 PM GMT ]
valarmathi_ltte_001.jpg
வறுமையில் வாடும் முன்னாள் போராளியான வளர்மதி இறுதி யுத்தத்தில் பாதிக்கப்பட்டு, புற்றுநோயினால் பீடிக்கப்பட்ட நிலையில் மிகவும் வறுமையில் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்.

முன்னாள் போராளியும் தமிழீழ நீதி நிர்வாகத்துறை பிரிவு நீதியரசியுமான கிருஸ்ணாகரன் வளர்மதி (சித்திரா) 1990ம் ஆண்டு தமிழீழ விடுதலை புலிகளின் மகளிர் அணியின் ஆரம்பகால உறுப்பினரக இணைந்துள்ளார். 

பலாலியில் இராணுவத்ததினருடன் ஏற்பட்ட நேரடி சமரில் காயமடைந்து, பின்னர் தமிழீழ நீதி நிர்வாகத்துறை பிரிவில் 14 ஆண்டுகள் பயிற்சிபெற்று, முல்லைத்தீவு மல்லாவி நீதிமன்றில் 2009 ம்ஆண்டுவரை நீதிபதியாக கடமையாற்றியுள்ளார். 

 

தமிழீழ காவல்துறை ஆய்வாளராக கடைமையாற்றிய கிருஸ்ணாகரனை வளர்மதி மணம் முடித்து, இரண்டு பெண் பிள்ளைகளை பெற்றேடுத்த நிலையில் கணவனை இறுதியுத்தத்தில் இழந்துள்ளார். 

உடலில் ஏற்பட்ட காயத்தினால் ஒரு கை இயங்காத நிலையிலும் மன காயத்தினால் மனநிலை பாதிக்கப்பட்ட நிலையிலும் தற்பொழுது வாழ்ந்து கொண்டிருக்கின்றார். 

மேலும் இரத்த புற்றுநோயால் பாதிப்படைந்த நிலையில் எப்போழுது மரணம் ஏற்படுமோ என்றும், பிள்ளைகளின் எதிர்காலம் என்னாகுமோ என்றும், ஏங்கி தவித்து சொல்லொணா துன்பத்தில் மிக வறுமைக் கோட்டின்கிழ் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்.  

மனச்சுமையை இறக்கி வைக்கத் துடிக்கும் வளர்மதி கடந்த காலத்தில் இருந்த நிலையும் தற்போதைய நிலையினாலும் மனநிலை மோசமாக பாதிப்படையும் நிலையில் உள்ளார் என அவருடய தாயார் குறிப்பிடுகின்றார். 

உரியமுறையில் வைத்தியரை நாடி வைத்தியம் செய்யக்கூட வசதியற்ற நிலை இருப்பதாக மேலும் குறிப்பிட்டுள்ளார். 

வளர்மதியின் தொலைபேசி இலக்கத்துடன் அவருடைய தாயாரின் தொலைபேசி இலக்கமும் இங்கு இணைக்கப்பட்டள்ளது. 

தொடர்புகொள்ளும் அன்பு உள்ளங்கள் வளர்மதியுடன் பேசமுடியாத சூழல் ஏற்பட்டால் அவருடைய தாயருடன் தொடர்பினை ஏற்படுத்துமாறு அன்பாக கேட்டுக்கொள்கின்றோம். 

தொலைபேசி இலக்கம் 0094774732493 , 0094776450722

கணக்கு இலக்கம்- 

9838490 bank of eylon 
VALARMATHI KIRUSHNAKARAN

valarmathi_001.jpg

valarmathi_002.jpg

valarmathi_003.jpg

valarmathi_004.jpg

 

http://www.tamilwin.com/show-RUmuyDTWSWewzD.html

 

Link to comment
Share on other sites

  • Replies 87
  • Created
  • Last Reply

யாழ் கள உறவுகள் ஒன்றிணைந்து இப் பிள்ளைகளுக்கு குறிப்பிட்ட வயது வரைக்கும் மாதாந்தம் உதவி புரிவோமா? நேசக்கரத்தின் (சாந்தியின்) உத்வியை பெற்று இவர்களின் நிலவரத்தினை அறிந்து கொள்வதிலிருந்து எம் முயற்சியை ஆரம்பிக்கலாம்.

Link to comment
Share on other sites

என்னால் இயன்ற பங்களிப்பினை வழங்க தயாராக உள்ளேன் .

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்னால் இயன்ற பங்களிப்பினை வழங்க தயாராக உள்ளேன் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என் பங்களிப்பும் உண்டு. மாதாந்த கொடுப்பனவு ஒரு நல்ல ஐடியா.

Link to comment
Share on other sites

எனது பங்களிப்பையும் சேர்த்துக் கொள்ளுங்கள்..!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் களம்.. நேரடியாகவோ.. அதனூடாகவோ.. உதவ முன்வந்தால்.. (தமிழினி அக்காவுக்கு உதவ முன்வந்து போல).. எங்கள் பங்களிப்பை வழங்குவம். ஆனால் மாதாந்த உதவி என்பது எல்லோருக்கும் சரிப்பட்டு வராது. 

மேலும் தமிழினி அக்காவிற்கான உதவியின் மீதத்தை (இன்னும் யாருக்கும் வழங்கப்படாது இருக்கும் பட்சத்தில்) இவர்களுக்கு அளிக்கலாம். இது குறித்தும் யாழ் பரிசீலிப்பது நல்லது. 

Link to comment
Share on other sites

 இது தொடர்பாக சாந்தியை முக நூலூடாக தொடர்பு கொண்டு இத் திரியை பார்க்குமாறு கேட்டுள்ளேன். மிச்சம் பிறகு ...

Link to comment
Share on other sites

முன்னர் கிழக்குப்பகுதியினைச் சேர்ந்தவர்களுக்கு உதவி தேவை என தெரிந்தவர்கள் மூலம் கேட்டிருந்தார்கள். இங்கு களத்தில் முன்னர் குறிப்பிட்டபடி அவர்களுக்கு உதவ முடியும் என விபரம் கேட்டிருந்தேன். அவர்கள் 5 பேருடைய பெயர் விபரங்கள் ஒன்றரை மாதங்களுக்கு முன்னர் தந்திருந்தார்கள். இருக்கும் பணத்தினை 5 பேருக்கும் பிரித்துக் கொடுப்பதிலும் பார்க்க இரண்டு பேருக்கு கொடுத்தால் அவர்களுக்கு ஏதாவது சிறு தொழில்களுக்கு உதவியாக அமையலாம் எனக் குறிப்பிட்டு கட்டாயம் உதவி தேவை எனக் கருதும் இருவருடைய பெயர்களைக் குறிப்பிடும்படி கேட்டிருந்தேன்.

நீண்ட நாட்களாக எதுவித தகவலும் கிடைக்கவில்லை என்பதால் இன்று இச்செய்தியினைப் பார்த்துவிட்டு தமிழினிக்கு எனச் சேர்க்கப்பட்டு மீதமாக உள்ள பணத்தினை இவர்களுக்கு வழங்க முடியுமா என நினைத்து எதற்கும் முன்னர் தருவதாகச் சொல்லியிருந்தபடியால் முன்னர் தொடர்பு கொண்டவரிடம் தொடர்பு கொண்டிருந்தேன். அவர் இன்று குறிப்பிட்டபடி எனக்கு தந்த 5 பேரும் மிகவும் வறிய நிலையில் உள்ளார்கள் என்றும: நாமே அதில் இருவரைத் தெரிவு செய்து உதவியை வழங்கும்படி தெரிவித்திருந்தார். 

உதவி கேட்டவர்களின் விபரங்களை பின்னர் இணைக்கின்றேன். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனது பங்களிப்பும் உண்டு. தயவுசெய்து அனுப்பத் தேவையான விபரங்களை அறியத்தரவும்.

Link to comment
Share on other sites

4 hours ago, மோகன் said:

முன்னர் கிழக்குப்பகுதியினைச் சேர்ந்தவர்களுக்கு உதவி தேவை என தெரிந்தவர்கள் மூலம் கேட்டிருந்தார்கள். இங்கு களத்தில் முன்னர் குறிப்பிட்டபடி அவர்களுக்கு உதவ முடியும் என விபரம் கேட்டிருந்தேன். அவர்கள் 5 பேருடைய பெயர் விபரங்கள் ஒன்றரை மாதங்களுக்கு முன்னர் தந்திருந்தார்கள். இருக்கும் பணத்தினை 5 பேருக்கும் பிரித்துக் கொடுப்பதிலும் பார்க்க இரண்டு பேருக்கு கொடுத்தால் அவர்களுக்கு ஏதாவது சிறு தொழில்களுக்கு உதவியாக அமையலாம் எனக் குறிப்பிட்டு கட்டாயம் உதவி தேவை எனக் கருதும் இருவருடைய பெயர்களைக் குறிப்பிடும்படி கேட்டிருந்தேன்.

நீண்ட நாட்களாக எதுவித தகவலும் கிடைக்கவில்லை என்பதால் இன்று இச்செய்தியினைப் பார்த்துவிட்டு தமிழினிக்கு எனச் சேர்க்கப்பட்டு மீதமாக உள்ள பணத்தினை இவர்களுக்கு வழங்க முடியுமா என நினைத்து எதற்கும் முன்னர் தருவதாகச் சொல்லியிருந்தபடியால் முன்னர் தொடர்பு கொண்டவரிடம் தொடர்பு கொண்டிருந்தேன். அவர் இன்று குறிப்பிட்டபடி எனக்கு தந்த 5 பேரும் மிகவும் வறிய நிலையில் உள்ளார்கள் என்றும: நாமே அதில் இருவரைத் தெரிவு செய்து உதவியை வழங்கும்படி தெரிவித்திருந்தார். 

உதவி கேட்டவர்களின் விபரங்களை பின்னர் இணைக்கின்றேன். 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்னால் இயன்ற பங்களிப்பினை வழங்க தயாராக உள்ளேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, நிழலி said:

யாழ் கள உறவுகள் ஒன்றிணைந்து இப் பிள்ளைகளுக்கு குறிப்பிட்ட வயது வரைக்கும் மாதாந்தம் உதவி புரிவோமா? நேசக்கரத்தின் (சாந்தியின்) உத்வியை பெற்று இவர்களின் நிலவரத்தினை அறிந்து கொள்வதிலிருந்து எம் முயற்சியை ஆரம்பிக்கலாம்.

 

என்னால் இயன்ற உதவிகளை செய்கின்றேன். மேலை உள்ளவர்களுக்கு நிலையான வைப்பிலிட்டு வட்டியில் படிக்க கூடிய மாதிரி பணத்தை சேர்ந்தால் நன்று. மாதாந்த உதவி என்பது நடைமுறைக்கு சாத்தியமற்றது.

மோகண்ணா வாக்கு கொடுத்த படி மிகுதிப்பணத்தை அந்த உறவுகளுக்கே பயன்படுத்தவும்.

Link to comment
Share on other sites

நிழலி  மற்றும் அனைத்து கள உறவுகளுக்கும்,
மேற்காணும் செய்திக்குரிய வளர்மதிக்கான உதவியை நிரந்தர வருமானத்திற்கான வழியொன்றை ஏற்படுத்துவதே சரியாகும். 

அவரது மகள்கள் முறையே 15,13 வயது பிள்ளைகள். இருவரும் மாணவிகள். பிரத்தியேக வகுப்புகளுக்கு செல்லாமல் தாங்களே படிக்கிறார்கள். வளர்மதி மன்னாரில் ஒரு கடையின் ஒருபகுதியில் தேயிலை , மா, தூள் போன்ற வியாபாரம் செய்கிறார். இதில் வரும் வருமானம் அத்தோடு சமுர்த்தி உதவி மாதாந்தம் 2ஆயிரம் ரூபாவை வைத்தே இவர்களது வாழ்க்கை போகிறது. 

இவரது தாயார் பேசிய போது தமது வளவுக்குள் சிறுபயிர்கள் வைத்தலோ அல்லது கால்நடை வளர்ப்போ எதுவும் செய்ய முடியாதென கூறினார். 

பிள்ளைகளுக்கு ஆளுக்கு ஒருலட்சம் சேமிப்பு கணக்கு திறந்து கொடுத்துக் கொண்டு வளர்மதியின் வியாபாரத்தை முன்னேற்ற உதவலாம். அத்தோடு மாதாந்த கொடுப்பனவு ஒருதொகை கொடுத்தால் மட்டுமே அவர்களால் சமாளிக்க முடியும்.

வளர்மதி தொடர்ந்து மருத்துவம் செய்வதற்கான ஒழுங்குகளை நேசக்கரம் மூலம் செய்து கொடுப்போம். நோயின் வேதனை குடும்ப சுமையால் ஏற்பட்ட தாக்கம் தனக்கான மருத்துவத்தை செய்வதை நிறுத்தியுள்ளார். புற்றுநோய் என்றால் மரணம் தான் என்ற முடிவில் அக்கறை செலுத்தாமல் இருப்பது போலிருக்கிறது. அவருக்கான மேலதிக சிகிச்சைக்கான ஏற்பாடுகளை எம்மால் மேற்கொள்ள முடியும். 

முதல்கட்டம் அவர்களுக்கான அவசர உதவியாக ஒருதொகை பணத்தை கொடுத்துக் கொண்டே மேற்கொண்டு பேசமுடியும். காரணம் பலர் தொலைபேசியெடுத்து நிறைய விசாரணைகள் செய்துள்ளார்கள்.

ஆனால் யாரும் இதுவரை எவ்வித உதவியும் செய்யவில்லை. சிலர் பணம் அனுப்பியதாக வங்கியில் போய் பார்க்கச் சொல்லியிருக்கிறார்கள். ஆனால் பணம் கிடைக்கவில்லை. கதைத்தவர்கள் எதையும் செய்யவில்லை. பணம் அனுப்பினோம் என சொன்னவர்கள் தனக்கு பொய்சொல்லி விட்டார்கள் என்ற கோபமும் வெறுப்பும் வளர்மதியை மனவுளைச்சலுக்கு உள்ளாக்கியுள்ளது. அவரது வங்கிக்கு நேரடியாக அனுப்ப விரும்புவோர் அனுப்பிவிட்டு அறியத்தந்தால் அவருக்கு தெரிவித்து அடுத்த முயற்சியை செய்யலாம்.

இணையத்தில் செய்தி வந்தால் உடனடியாக உதவி கிடைக்குமென்ற நம்பிக்கையில் கொடுத்தவர்கள் கிடைக்காத நிலமையில் கோபப்படுதல் வெறுப்படைதல் பெரிய விடயம் அல்ல. 

யாழ் களம் எவ்வகையில் உதவலாம் என்பதனை அறியத்தந்தால் மேலதிக விடயங்களை பகிரலாம். நாளை பின்னேரம் வளர்மதியுடன் தொலைபேசுவேன். உங்கள் எண்ணங்களை அறியத்தாருங்கள்.

Link to comment
Share on other sites

பதிலுக்கும் தகவல்களுக்கும் நன்றி சாந்தி

 

3 hours ago, shanthy said:

 

முதல்கட்டம் அவர்களுக்கான அவசர உதவியாக ஒருதொகை பணத்தை கொடுத்துக் கொண்டே மேற்கொண்டு பேசமுடியும். காரணம் பலர் தொலைபேசியெடுத்து நிறைய விசாரணைகள் செய்துள்ளார்கள்.

ஆனால் யாரும் இதுவரை எவ்வித உதவியும் செய்யவில்லை. சிலர் பணம் அனுப்பியதாக வங்கியில் போய் பார்க்கச் சொல்லியிருக்கிறார்கள். ஆனால் பணம் கிடைக்கவில்லை. கதைத்தவர்கள் எதையும் செய்யவில்லை. பணம் அனுப்பினோம் என சொன்னவர்கள் தனக்கு பொய்சொல்லி விட்டார்கள் என்ற கோபமும் வெறுப்பும் வளர்மதியை மனவுளைச்சலுக்கு உள்ளாக்கியுள்ளது. அவரது வங்கிக்கு நேரடியாக அனுப்ப விரும்புவோர் அனுப்பிவிட்டு அறியத்தந்தால் அவருக்கு தெரிவித்து அடுத்த முயற்சியை செய்யலாம்.

 

வணக்கம் உறவுகளே ,

இது தொடர்பாக உங்கள் கருத்து என்ன? ஒரு குறிப்பிட்ட தொகையை முதலில் சேர்ப்போமா? ஓம் எனில், விரைவாக ஒரு குறிப்பிட்ட தொகையை சேர்க்க வேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

5 இலட்சம் ரூபா என்று நிர்ணயிப்போமா?

இரண்டு லட்சம் பிள்ளைகள் இருவருக்கும் 18 வயது வரை மீளப் பெறாதவகையில் நிரந்தர வைப்பில் இட்டு,

 3 இலட்சத்தில் அவரது கடையை விரிவுபடுத்தி மிகுதியை 5/10 வருடங்களுக்கு மீளப் பெறாதவகையில் நிரந்தர வைப்பில் இடலாம். 

அவருக்குரிய மருத்துவ உதவியை நேசக்கரம் வழங்க இருப்பதால், நிரந்தர வருமானத்திற்கு வழி அமைப்போம். 

 

Link to comment
Share on other sites

5 இலட்சம் என்பது சிறிய தொகையாயினும் யாழ் களத்தினைப் பொருத்தவரைக்கும் உறுப்பினர்களின் பங்களிப்பின் மூலம் மட்டுமே பெறுவது கொஞ்சம் கடினமானது. உறுப்பினர்களின் தனிப்பட்ட பங்களிப்புகளுக்கு சமாந்தரமாக வர்த்தக நிறுவனங்களின் பங்களிப்பையும் பெற முடியுமாயின் விரைவாக பணத்தினை சேர்க்க முடியும்.

உங்களுக்கு தெரிந்த வர்த்தக நிறுவனங்களினை அணுகி விளம்பரங்களை பெற்று அவர்களிடம் இருந்து சிறிய தொகையை பெற முடியுமா? அப்படிப் பெற்றால் யாழில் இரு வாரங்களுக்குள் அவர்களின் விளம்பரத்தினை எம்மால் பிரசுரிக்க முடியும். சும்மா காசை தருவதை விட அவர்களுக்கும் பயன் தரக் கூடிய விதமாக இது அமையும்.

ஒரு பக்கம் யாழ் உறவுகளின் பங்களிப்பும் மறு பக்கம் வர்த்தக நிறுவனங்களின் விளம்பர பங்களிப்பும் ஒருங்கே கிடைக்குமாயின் யாழின் மூலம் பல நல்ல விடயங்களை செய்ய முடியும் .

Link to comment
Share on other sites

1 hour ago, நிழலி said:

பதிலுக்கும் தகவல்களுக்கும் நன்றி சாந்தி

தற்சமயம் பேபாலில் அனுப்ப முடியாத சூழ்நிலை. நேரடியாக சம்பந்தப்பட்டவரின் வங்கி கணக்குக்கு அனுப்ப விரும்பவில்லை. இலங்கையில் உள்ள ஒரு வங்கி கணக்கை தந்துதவினால் எனது பங்களிப்பும் இருக்கும் (உதாரணமாக நேசக்கரத்தின் வங்கிக்கணக்கு இலக்கம்).

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நிழலி, பிரித்தானியாவில் இப்போது பெரும்பாலானவர்கள் IBC தொலைக்காட்சிக்கே விளம்பரங்களை வழங்குகிறார்கள். மேலும் யாழ் இணையத்தைப் பொறுத்த வரை எல்லா நாட்டில் இருந்தும் பார்வையாளர்கள் இருப்பதால் ஐரோப்பிய ரீதியில் வியாபாரம் செய்யும் நிறுவனங்களே(LYCA, LEBARA) விளம்பரத்தினால் பயன்பெறுவர்.

எதற்கும் IP address ஐ வைத்து கடந்த மாத்த்தில் எந்தந்த நாட்டிலிருந்து எவ்வளவு பேர் வருகை தந்தார்கள் என்ற விபரத்தை தரமுடியுமா? அத்துடன் கட்டண விபரங்களையும் தாருங்கள் முயற்சி செய்கிறேன். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வளர்மதியின்ர குடும்பமே நடுச்சந்தியில நிக்கிறது இந்த திரியை நாற்சந்திக்கு நகர்த்தி என்ன செய்வது?

மைத்திரியின் நல்லாட்சியிலும் பயமா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நானும், என்னால் முடிந்ததை செய்வேன்.

Link to comment
Share on other sites

வளர்மதிக்கு உடனடி மருத்துவத்தேவைக்கு பத்தாயிரம் ரூபாய் தேவைப்படுகிறது. அதனை கொடுத்து அவரை மருத்துவமனைக்கு சிகிக்சைக்கு அனுப்ப வேண்டும். 

முதலில் வளர்மதிக்கு தன்னம்பிக்கை தைரியத்தை ஊட்ட வேண்டும். காரணம் அவரது மனநல தாக்கமானது மருத்துவத்தையும் செய்யக்கூடாதென்பதாக இருக்கிறது.  அவருக்கானஉளவள மேம்பாடு உயர்ந்தால் மட்டுமே தொடர்ந்து சிகிச்சை செய்யலாம். 

1)அவருடன் கதைத்ததில் புரிந்த விடயம். தொடர்ந்து வியாபாரத்தை மேற்கொள்ளவே விரும்புகிறார். 

ஆகவே தற்போது அவசர உதவியானது அவரது மனநலம் சீராக தேவையான ஆதரவாகும். 

2)பிள்ளைகளுக்கான சேமிப்பு  ஆளுக்கு ஒவ்வொரு லட்சம் போடவேண்டும். 

3)பிள்ளைகள் கல்வி மாதம் 5ஆயிரம் கால எல்லையை நிர்ணயித்து செய்ய வேண்டும். 

தாமதம் இல்லாமல் உதவி துரிதப்படுத்தப்படுதல் பிரதானம். 

21 hours ago, Gari said:

இந்த திரியையும்  யாழ் நாற்சந்தி க்கு மாற்றலாமே ?

இச்செய்தியை யாழ் கருத்துக்கள உறுப்பினர் அல்லாதவர்களும் பார்க்கிறார்கள். இச்செய்தியை யாழில் பார்த்துவிட்டு இச்செய்தியை பார்க்குமாறு முதல் மின்னஞ்சல் எழுதிய நண்பர் கட்டாரில் இருக்கிறார். அவர் கள உறுப்பினர் அல்ல. ஆகவே இங்கேயே இருப்பதே நல்லம்.  இது எனது கருத்து மட்டுமே. 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வ‌ண‌க்க‌ம் மோக‌ன் அண்ணா என‌து பெய‌ரை (வீர‌ப்ப‌ன் பைய‌ன்26 ) மாற்றி விடுங்கோ    ந‌ன்றி🙏🥰.......................................
    • த‌மிழ் சிறி அண்ணா அந்த‌ 800ரூபாய் வீடியோ ப‌ழைய‌ வீடியோ அண்ணா அந்த‌ வீடியோ போன‌ வ‌ருட‌மே ரிக்ரோக்கில் பார்த்து விட்டேன்....................இதை ப‌ற்றி அல‌ட்ட‌ என்ன‌ இருக்கு 800ரூபாய் வீடியோ அடிச்சு சொல்லுறேன் அது போன‌ வ‌ருட‌த்தான் வீடியோ ம‌ற்ற‌ வீடியோ ப‌ற்றி நான் வாயே திற‌க்க‌ல‌...................எப்ப‌ பார்த்தாலும் எல்லாத்துக்கையும் என்னை கோத்து விடுவ‌தில் கோஷானுக்கு ஏதோ இன்ப‌ம் இருக்கிற‌ மாதிரி தெரியுது அவ‌ரின் இன்ப‌த்துக்கு அவ‌ர் என்னை எப்ப‌டியும் க‌ழுவி ஊத்த‌ட்டும் ஹா ஹா😂😁🤣.......................... 
    • படக்குறிப்பு,இந்திய தேர்தலில் வாக்களித்த முதல் இலங்கைத் தமிழர் நளினி கிருபாகரன். கட்டுரை தகவல் எழுதியவர், தங்கதுரை குமாரபாண்டியன் பதவி, பிபிசி தமிழ் 18 ஏப்ரல் 2024 புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர் திருச்சி இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் வசித்து வரும் பெண் ஒருவர், இந்திய அரசின் சட்டத்தை உயர் நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டி பாஸ்போர்ட், வாக்காளர் அடையாள அட்டை ஆகிய ஆவணங்களைப் பெற்றிருந்தார். இந்நிலையில், வெள்ளிக்கிழமை (ஏப். 19) நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் அப்பெண் முதல் இலங்கைத் தமிழராக வாக்கு செலுத்தியுள்ளார். இலங்கைத் தமிழர் பெண் இந்திய குடியுரிமை பெற்றது எப்படி? இலங்கைத் தமிழர்கள் இந்திய குடியுரிமை பெற முடியுமா? திருச்சி மாவட்டம் கொட்டப்பட்டு இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் வசித்து வருபவர் நளினி, இவருக்கு 38 வயது ஆகிறது. இவரது பெற்றோர்களான கண்ணன், சாந்தி இலங்கையைச் சேர்ந்த தமிழர்கள். அங்கு ஏற்பட்ட போர் பதற்றத்தால் கடல் வழியாக ராமேஸ்வரத்திற்கு 1983ஆம் ஆண்டு வந்தடைந்தனர். ராமேஸ்வரம் அருகே இருக்கும் மண்டபம் இலங்கை மறுவாழ்வு முகாமில் தங்க வைக்கப்பட்டனர். அங்கு 1986ஆம் ஆண்டு நளினி பிறந்தார். அதைத் தொடர்ந்து அங்கிருந்து திருச்சியில் உள்ள இலங்கை மறுவாழ்வு முகாமிற்கு மாற்றப்பட்டு அங்கு கிருபாகரன் என்பவரை நளினி திருமணம் முடித்து இரண்டு மகன்களுடன் வசித்து வருகிறார். இவர் பாஸ்போர்ட் பெற விண்ணப்பித்திருந்தார். அவர் இலங்கை அகதிகள் முகாமில் வசிப்பதால் அவருக்கு பாஸ்போர்ட் வழங்க அதிகாரிகளால் மறுப்பு தெரிவிக்கப்பட்டது. நீதிமன்றத்தில் பாஸ்போர்ட் கேட்டு வழக்கு தனக்கு பாஸ்போர்ட் வழங்கக்கோரி சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் கடந்த 2021ஆம் ஆண்டு ஜூலை மாதம் 2 ஆம் தேதி வழக்கு தொடுத்தார். அதில், இந்திய குடியுரிமைச் சட்டம் 1955 பிரிவு 3iன் படி, 26.1.1956 முதல் 1.7.1986 வரை இந்தியாவில் பிறந்த குழந்தைகள் அனைவரும் இந்தியர்கள்தான் என்ற அடிப்படையில் தனக்கு பாஸ்போர்ட் வழங்க வேண்டும் எனக் கேட்டிருந்தார். இந்த வழக்கு விசாரணை நடைபெற்று 2022ஆம் ஆண்டு ஆகஸ்ட்12இல் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் தீர்ப்பு வழங்கினார். அதில், "மனுதாரர் நளினி இலங்கையைச் சேர்ந்த பெற்றோருக்குப் பிறந்திருந்தாலும் அவர் இந்திய குடிமகள்தான்” எனத் தீர்ப்பளித்து, அவருக்கு இந்திய பாஸ்போர்ட் வழங்க வேண்டும் என உத்தரவிட்டார். இதையடுத்து, நளினிக்கு பாஸ்போர்ட் வழங்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, இந்திய குடியுரிமை பெற்று வாக்களிக்க எண்ணிய நளினி வாக்காளர் அடையாள அட்டைக்கு கடந்த ஆண்டு விண்ணப்பித்து அதையும் பெற்றார். நாளை நடைபெறும் மக்களவைத் தேர்தலில் வாக்களிக்கும் முதல் இலங்கை தமிழர் என்ற பெயரை பெற்றிருக்கிறார்.   40 ஆண்டு போராடத்திற்குக் கிடைத்த வெற்றி பட மூலாதாரம்,HIGHCOURT MADURAI BENCH படக்குறிப்பு,நளினிக்கு இந்திய பாஸ்போர்ட் வழங்க வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது. இதுகுறித்து பிபிசி தமிழிடம் பேசிய நளினி கூறுகையில், “கடந்த 40 ஆண்டுகளாக தமிழ்நாட்டில் உள்ள அகதிகள் முகாமில் எனது தாய், தந்தை வசித்து வருகின்றனர். இலங்கைத் தமிழர்களுக்கு குடியுரிமை வழங்க வேண்டும் எனப் போராடி வருகின்றனர். எங்களுக்கு அரசிடமிருந்து சலுகைகள் கிடைத்தாலும் நாங்கள் நாடற்ற அகதிகளாகவே இன்னும் பார்க்கப்பட்டு வருகிறோம். எனவே, எங்களுக்கான அடையாளம் குடியுரிமை மட்டுமே. அதைப் பெற வேண்டும் என்பதற்காகப் போராடி வருகின்றோம். கடந்த 1986ஆம் ஆண்டு பிறந்தவர் என்ற அடிப்படையில் பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பித்து அது மறுக்கப்பட்டது. இந்திய குடியுரிமை சட்டத்தை மேற்கோள் காட்டி நீதிமன்றத்தை அணுகியபோது பாஸ்போர்ட் கிடைத்தது. அதைத் தொடர்ந்து, தற்போது முதல் இலங்கைத் தமிழராக வாக்களிப்பதற்கான உரிமையும் பெற்றுள்ளேன்,” என்றார். ‘இலங்கைத் தமிழர்களின் குரலாக முதல் வாக்கு’ நாளை நாடாளுமன்றத் தேர்தலில் வாக்களிக்க இருப்பது மிகவும் மகிழ்ச்சியான நிகழ்வாக இருக்கப் போகிறது எனக் கூறும் அவர், "நாடற்ற பெண்ணாக இருந்தேன். ஆனால் தற்போது இந்திய குடியுரிமை பெற்று இனி ஜனநாயகக் கடமையைச் செய்யப் போகிறேன்," எனத் தெரிவித்தார். தமிழ்நாட்டில் இலங்கை மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் ஒட்டுமொத்த மக்களின் குரலாகத் தனது ஒற்றை வாக்கை நாடாளுமன்றத் தேர்தலில் செலுத்த உள்ளதாகவும் நளினி தெரிவித்தார். அதோடு, இந்திய அரசு தமிழ்நாட்டில் உள்ள பிற இலங்கைத் தமிழர்களுக்கும் வாக்களிக்கும் உரிமையை வழங்க வேண்டும் என்பதையும் அவர் வலியுறுத்தினார்.   ‘150 இலங்கைத் தமிழர்கள் வாக்களிக்க வாய்ப்பு’ படக்குறிப்பு,தேர்தல்களில் வாக்களிக்கும் இலங்கைத் தமிழர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என வழக்கறிஞர் ரோமியோ ராய் தெரிவித்தார். இந்திய குடியுரிமைச் சட்டத்தை மேற்கோள் காட்டி நளினிக்கு பாஸ்போர்ட் கொடுக்கப்பட்டு இந்திய குடியுரிமை பெற்ற நபராக மாறினார். அதைத் தொடர்ந்து வாக்காளர் அடையாள அட்டைக்கு விண்ணப்பித்து அதையும் பெற்றுள்ளார். இதை அடிப்படையாகக் கொண்டு இலங்கைத் தமிழர் முகாமில் வசிக்கும் மூன்று பேர் பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பித்து உள்ளதாகவும் நளினி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ரோமியோ ராய் குறிப்பிட்டார். அதேவேளையில், "தமிழ்நாடு அரசு சார்பில் 1986ஆம் ஆண்டு மற்றும் அதற்கு முன்பாகப் பிறந்தவர்களின் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதில் 150 பேர் இருப்பது தெரிய வந்தது. இவர்களும் இந்திய அரசின் குடியுரிமையைப் பெறுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறேன். இவர்கள் குடியுரிமை பெறும் பட்சத்தில் எதிர்வரும் தேர்தல்களில் இவர்களும் வாக்கு செலுத்த வாய்ப்பு கிடைக்கும்," என்றார் வழக்கறிஞர் ரோமியோ ராய். தமிழ்நாட்டில் 110 இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்கள் உள்ளன. அதில் தோராயமாக 1.10 லட்சம் மக்கள் வசிப்பதாகவும் காவல் நிலையத்தில் அனுமதி பெற்று 80,000க்கும் மேற்பட்டோர் வெளியில் வசித்து வருவதாகவும் கூறுகிறார் வழக்கறிஞர் புகழேந்தி. தமிழர்கள் உரிமைகள் நலனுக்காக இயங்கி வரும் வழக்கறிஞர் புகழேந்தியிடம் பிபிசி தமிழ் பேசியபோது, "அவர்கள் குடியுரிமை வேண்டுமென நீண்டகாலமாகப் போராடி வருவதாகவும்" குறிப்பிட்டார்.   படக்குறிப்பு,"தமிழ்நாட்டில் இலங்கைத் தமிழர்கள் திறந்தவெளி சிறையில் வசிப்பதைப் போன்று வசித்து வருகின்றனர்," என்கிறார் வழக்கறிஞர் புகழேந்தி. தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய இலங்கைத் தமிழர்களுக்கு ஆதார், குடும்ப அட்டை போன்ற அடையாள ஆவணங்கள் வழங்கப்படுவதாகவும் குடும்பத் தலைவருக்கு ஆயிரம் ரூபாய், மற்ற உறுப்பினர்களுக்கு 750 ரூபாய் என உதவித் தொகையும் கொடுக்கப்படுவதாகவும் கூறுகிறார் புகழேந்தி. அவர்களது நிலை குறித்துப் பேசிய அவர், "இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் வசிக்கும் குழந்தைகளால் படித்து முன்னேறி அரசு வேலைக்குச் செல்ல முடியவில்லை. வெளிநாட்டுக்கு வேலைக்குச் செல்ல முடியாது. இதனால் படித்த இளைஞர்கள் கூலித் தொழிலாளர்களாக கட்டட வேலைகளுக்கு மட்டுமே செல்லும் சூழலுக்குத் தள்ளப்படுகின்றனர் அதிலும் பல சிக்கல்களை அவர்கள் சந்தித்து வருகின்றனர்," என்கிறார். மத்திய அரசு கொண்டு வந்திருக்கும் குடியுரிமை திருத்தச் சட்டத்தில் 2014ஆம் ஆண்டுக்கு முன் ஆப்கனில் இருந்து வந்தவர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்தச் சட்டத்தின்கீழ், "இலங்கைத் தமிழர்களையும் சேர்த்துவிட்டால் இவர்களுக்கும் குடியுரிமை கிடைக்கும். அதைச் செய்ய மத்திய அரசு தயங்குவது ஏனென்று புரியவில்லை," என்றும் கூறுகிறார் புகழேந்தி. இலங்கை நாட்டைச் சேர்ந்தவர்கள் லண்டன், ஆஸ்திரேலியா, பிரான்ஸ் போன்ற நாடுகளுக்குச் சென்று மூன்று ஆண்டுகள் தொடர்ச்சியாக வசித்தால் அவர்களுக்கு கிரீன் கார்டு வழங்கப்படுகிறது. ஐந்து ஆண்டுகளுக்கு மேல் வசித்தால் அவர்களுக்கு குடியுரிமை வழங்கப்படுகிறது. ஆனால், "இங்கே 30 ஆண்டுகள் தாண்டி வசிக்கும் இலங்கைத் தமிழர்களுக்கு குடியுரிமை என்பது மறுக்கப்படுக்கிறது. தமிழ்நாட்டில் இலங்கைத் தமிழர்கள் திறந்தவெளி சிறையில் வசிப்பதைப் போன்று வசித்து வருகின்றனர். இதில் மாற்றம் நிகழ வேண்டும் அதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்," எனவும் வலியுறுத்தினார் வழக்கறிஞர் புகழேந்தி. https://www.bbc.com/tamil/articles/cd1w2q1qx2yo
    • "சிந்து வெளி பல் மருத்துவமும் வீட்டு மருத்துவமும்"     50 வருடங்களுக்கு முன்பு வரை, பண்டைய இந்தியா நாகரிகம் சிந்து சம வெளியாக இருந்தது. எமது பண்டையதைப் பற்றிய அறிவு ஹரப்பா, மொஹெஞ்சதாரோ போன்ற பகுதிக்குள் அடங்கி விட்டது. அவையை தனித்துப் பார்க்கும் போது அவையின் முன்னேற்றம் விந்தையாக எமக்கு காட்சி அளித்தது. ஆனால் அன்றில் இருந்து எமது அறிவாற்றலிலும் தொலை நோக்கிலும் பெரும் முன்னேற்றமடைந்தது. 1974 ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப் பட்ட புதிய கற்காலக் குடியேற்ற பகுதியான, இன்றைய பாகிஸ்தானில் உள்ள சிந்து சமவெளி நகரமான, மெஹெர்கர் [Mehrgarh] இதற்கு வழி வகுத்தது. இது அதி நவீன நாகரிக சிந்து வெளிக்கு முன்பும் அது வரையும் உள்ள முக்கிய தொடர்புகளை கொடுத்தது.   தொல்லியல் ஆய்வு ரீதியாய் பல முக்கியங்களை கொண்டிருந்த இந்த பகுதி, 2001 ஆம் ஆண்டு பல் துளைத்தலுக்கும் பல் அறுவை சிகிச்சைக்குமான முதலாவது சான்றை கொடுத்தது. ஆண்ட்ரியா கசினா [Professor Andrea Cucina ,University of Missouri-Columbia] தலைமையில் தொல்லியல் ஆய்வாளர்கள் அங்கு அகழ்வாராய்ச்சி செய்த போது, இரண்டு சிந்து சமவெளி நாகரிக மனிதனின் சிதை வெச்சங்கள் கிடைத்தன. இந்த மனித மண்டை ஓடுகளை ஆய்வுகளுக்கு உட் படுத்தி, ஒரு மண்டை ஓட்டின் பல்லை துப்பரவு செய்யும் போது ஒரு அதிர்ச்சி யூட்டத்தக்க அல்லது திகைக்கச் செய்கிற ஒரு உண்மை தெரிய வந்தது. அது கி மு 7000 ஆண்டில் இருந்தே இவர்களுக்கு பல் மருத்துவம் தெரிந்து இருந்தது என்பது ஆகும். அதாவது கி மு 7000 ஆண்டில் வசித்த மக்கள் பல் வலிக்கு தீர்வாக சொத்தை விழுந்த [cavity] பற்களை கூர்மையான ஒரு வித கற்களைக் கொண்டு, வில்லினால் சுற்றி [bow drills] துளை யிட்டு அறுவைச் சிகிச்சை செய்து அகற்றியது தெரிய வந்தது.   முதலில் பல்லில் சிறிய துவாரத்தை கண்டு பிடித்த ஆய்வாளர் ஆண்ட்ரியா கசினா, அந்த துவாரங்கள் ஈமச் சடங்கு போல தெரியவில்லை என்றும் மேலும் இந்த பல் இன்னும் அந்த மனிதனின் தாடையில் இருப்பதால் அவை கழுத்து மாலை செய்ய துளைக்கப் படவில்லை என்றும் தெரியப் படுத்தினார். அவரும் அவரின் மற்ற சக தொல்லியல் ஆய்வாளர்களும் அது பல் சிதைவுக்கான சிகிச்சையாக இருக்கக் கூடும் என்றும் மேலும் அங்கு தாவரம் அல்லது வேறு ஒரு பொருள் பாக்டீரியா வள ர்ச்சியைத் தடுக்கும் பொருட்டு அந்த துவாரத்திற்குள் திணிக்கப் பட்டது எனவும் சந்தேகிக்கிறார்கள். இந்த மெஹெர்கர் அகழ் வாராய்ச்சியின் போது ஒன்பது தனிப்பட்டவர்களில் மொத்தம் பதினொன்று துளை யிடப்பட்ட பற்களை அடையாளம் கண்டா ர்கள். இதில் ஒரு தனிப்பட்டவர் மூன்று துளை யிடப்பட்ட பற்களையும் மற்றும் ஒருவர் இரு தரம் துளை யிடப்பட்ட பல்லையும் கொண்டு இருந்தார். இந்த எல்லா தனிப் பட்டவர்களும் முதிர்ந்த வர்களாக, நாலு பெண், இரண்டு ஆண், மற்றும் மூன்று பால் அடையாளம் சரியாக அடையாளம் காணப்படாத தனிப்பட்ட வர்களாக இருந்தனர். இவர்களின் வயது பெரும்பாலும் இருபதில் இருந்து நாற்பதிற்கு மேலாக உள்ளது. மிக நுணுக்கமாக அவையை உற்று நோக்கும் போது, குறைந்தது ஒரு சிகிச்சையில் பல்லு துளைக்கப்பட்டதும் இன்றி அங்கு உண்டாகிய பொந்து அல்லது உட்குழி நேர்த்தியாய் திரும்ப வடிவமைக்கப் பட்டுள்ளது காணக் கூடியதாக உள்ளது.   சிறிய மேற்பரப்பை கொண்ட இந்த பல்லில் துளையிடுவதற்கு மெஹெர்கர் பல் வைத்தியர் அதிகமாக நெருப்பை உண்டாக்க ஆதி காலத்தில் பாவிக்கப்பட்ட பொறி போன்ற ஒன்றை பாவித்து இருக்கலாம். கயிறு இணைக்கப்பட்ட வில் போன்ற கருவி ஒன்றில் தனது முனையில் கூர்மையான ஒரு வித கற்களை கொண்ட மெல்லிய மரத் துண்டு, அந்த கயிற்றுனால் சுற்றப்பட்டு அழுத்தி சுற்றப்ப டுகிறது. அப்பொழுது அந்த கூர்மையான கல் பல்லில் துளையிடுகிறது. மணி ஆபரணங்கள் செய்வதற்கு பண்டைய கைவினைஞர்கள் மணிகளில் துளையிடும் தொழில் நுட்பத்தில் இருந்து இந்த மெஹெர்கர் பல் வைத்தியர்கள் இந்த அறிவை பெற்றிருக்கலாம் என அறிஞர்கள் நம்புகிறார்கள். பற்கள் அடைப்பதற்கான சான்றுகள் ஒன்றும் இதுவரை கிடைக்கப் படவில்லை. என்றாலும், சில பற்கள் ஆழமாக துளைக்கப் பட்டு இருப்பதால், ஏதாவது ஒன்று அதை அடைக்க அதற்குள் செருகி இருக்கலாம் என ஆய்வாளர்கள் நம்புகிறார்கள். ஆனால் எதனால் அடைத்தார்கள் என தெரியவில்லை. இந்த துளைகள் அரை மில்லி மீட்டரில் இருந்து 3.5 மில்லிமீட்டர் வரை இருக்கிறது. இது பல்லின் மிளரியை [எனமல்/ enamel] ஊடுருவி பல்திசுக்களுக்குள் [dentin] செல்ல போதுமானது. எனினும் பல் அடைப்புக்கான சான்றுகளை ஆய்வாளர்கள் இன்னும் காண வில்லை. எப்படியாயினும் தார் போன்ற பொருள் அல்லது இலகுவான தாவர பொருள் ஒன்று பல் குழிக்குள் அடைத்து இருக்கலாம் என நம்புகி றார்கள்.  துளைக்கப் பட்ட பற்களை கொண்ட இந்த தனிப்பட்டவர்கள் எவரும் சிறப்பு கல்லறையில் இருந்து எடுக்கப்படவில்லை. இது அங்கு வாழ்ந்த எல்லோருக்கும் இந்த வாய் சம்பந்தமான சுகாதார சிகிச்சை அல்லது பராமரிப்பு இருந்ததை சுட்டிக்கா ட்டுகிறது.   இந்த பல் சுகாதார பராமரிப்பு மெஹெர்கரில் கிட்டதட்ட 1,500 ஆண்டுகள் தொடர்ந்து இருந்தாலும், இந்த நீண்ட பாரம்பரியம் அதன் பின் அடுத்த நாகரிகத்திற்கு பரவ வில்லை. இவர்களைத் தொடர்ந்து அங்கு இருந்த செம்புக்கால மக்கள் பல் வைத்தியரிடம் எப்பவாவது சென்ற தற்கான அறி குறிகள் அங்கு இல்லை. ஏன் இந்த பராமரிப்பு தொடராமல் நின்றுவிட்டது என தெரிய வில்லை. ஒருவேளை, இது ஏற் படுத்திய வலி இந்த நீண்ட பாரம்பரியத்தின் செல்வாக்கை இல்லாமல் செய்து இருக்கலாம்?   இங்கே  தரப்பட்ட துளையிட்ட  பல்லின் படம் Nature என்ற ஆய்வு இதழில் வெளியிடப் பட்டு உள்ளது. பாக்கிஸ்தானில் உள்ள புதிய கற்கால இடு காட்டில் இருந்து எடுக்கப்பட்ட  துளைக்கப் பட்ட கடைவாய்ப்பல். இங்கு  2.6 மில்லிமீட்டர் அகலமுள்ள துவாரம் ஒன்று துளைக்கப் பட்டு உள்ளது. இந்த துவாரம் வழவழப்பாக உள்ளது. இது அந்த தனிப்பட்ட மனிதன் இறக்கும் முன் துளைக்கப் பட்டதை காட்டுகிறது. பல்லை நன்றாக பரிசோதனை செய்ததில் இந்த துளையிடும் கருவி பழுதடைந்த பல் திசுவை அகற்றுவதில் மிகவும் திறமை வாய்ந்தது என இதை ஆய்வு செய்த குழு கூறுகிறது. ஆகவே நாம் முன்பு நினைத்ததை விட பல் வைத்தியம் மேலும் 4000 ஆண்டு பழமை வாய்ந்தது. அதுமட்டும் அல்ல மயக்க மருந்து கண்டு பிடிப்பதற்கு எத்தனையோ ஆண்டுகளுக்கு முன் இது பழமையானது. . இந்த பூமி கிரகத்தில் மனிதன் தோன்றிய காலம் தொட்டு நோய் அவனுக்கு ஒரு கொடிய விஷமாக இருக்கிறது. மனிதன் பல வித வியாதிகளுடன் வரலாற்றிற்கு முந்திய காலத்தில் இருந்து போராட வேண்டி இருந்தது. இறுதியாக, அவன் உள்நாட்டு மருத்துவம் ஒன்றை உருவாக்கினான். என்றாலும் மேலே கூறிய பல் அறுவைச் சிகிச்சையை விட, இந்த சிந்து வெளி மக்கள் எந்த வித மருந்துகளை அல்லது வீட்டு மருத்துவத்தை கையாண்டார்கள் என அறிய முடியவில்லை. ஆனால், சிந்து வெளி நூலோ அல்லது ஆவணமோ வாசிக்கக் கூடியதாக இதுவரை கண்டுபிடிக்கப் படாததால், இவர்களுடன் வர்த்தக உறவு வைத்திருந்த மற்ற கி மு 3000 ஆண்டு நாகரிக மக்கள் போல ஒரு நாட்டு வைத்தியம் அங்கு நிலவி இருக்கலாம் என எம்மால் ஓரளவு ஊகிக்க முடியும். ஆகவே இது சமயம், சூனியம், அனுபவ ரீதியான சடங்குகள், முறைகள் போன்ற வையாக இருக்கலாம். அவர்கள் தாயத்து போன்றவைகளை தீங்கில் இருந்து தம்மை காப்பாற்ற, ஆகவே நோயில் இருந்து காப்பாற்ற, அணிந்து இருந்தார்கள். மற்ற மக்களை மாதிரி, அவர்களுக்கு மருந்துகளும் வீட்டு வைத்தியமும் நோய்ப் பட்டவர்களை சிகிச்சையளிக்கவும் தெரிந்து இருக்க வேண்டும். இதற்கான சான்றுகளை அனேகமாக ஹரப்பா, மொஹெஞ்சதாரோ போன்ற பகுதிகளில் உள்ள தொல் பொருள் எச்சங்களில் தேடவேண்டும்.   ஹரப்பான் மக்கள் தாவரங்கள், விலங்குகளில் இருந்து எடுத்த பொருள்கள், கனிப்பொருள்கள் போன்றவைகளை பாவித்து இருக்கலாம். மலைகளில் இயற்கையாக உண்டாகும் கருப்பு நிலக்கீலம் [Silajit, Black Asphaltum] என்ற கருத்த கனிப் பொருள் அகழ்வின் போது அங்கு கண்டு பிடிக்கப் பட்டது. Shilajit ஆசியாவில் ஒரு சில தேர்ந்தெடுக்கப் பட்ட மலைத்தொடர்களில் இருந்து பெறப்படுகிறது, குறிப்பாக திபெத்திய இமய மலை, ரஷியன் காகசஸ், மங்கோலியன் அல்தை, மற்றும் பாகிஸ்தான் கில்ஜித் மலைகள் [Tibet mountains, Caucasus mountains Altai Mountains, mountains of Gilgit Baltistan] ஆகும். ஆகவே இது சிந்து சம வெளியில் பாவிக்கப்பட்டு இருக்கவேண்டும் என்பதை எமக்கு எடுத்து காட்டு கிறது. இந்த கருப்பு நிலக்கீலம் பல நன்மைகளை கொண்டது. இந்திய துணைக் கண்டத்தில் உள்ள மிகவும் பிரபலமான மருத்துவ கலவை இதுவாகும். மேலும் ஆசியா முழுவதும் பரவலாக ஆயுர் வேத மற்றும் பாரம்பரிய மருத்துவத்தில் அதிகரித்த ஆற்றல், அதிகரித்த நோய் எதிர்ப்பு சக்தி அதனால் நல்ல தரமான வாழ்க்கை, ஒவ்வாமை தணிப்பு , நீரிழிவு குணப்படுத்தல் [increased energy, improved quality of life allergy relief, diabetes relief,] போன்றவற்றிற்கு இது பயன் படுத்தப்படுகிறது.   அதே போல அங்கு இரைப்பை யழற்சிக்கு [gastritis / இரைப்பையின் உட்புறச் சுவர் பல்வேறு காரணங்களினால் அழற்சி அடைதல். வயிறு எரிச்சலடைதல், வயிற்று வலி ஆகியவை பொது வாகக் காணப்படும் அறி குறிகளாகும்] மருந்தாக பாவிக்கப்படும் கடனுரை [cuttlebone / ஒருவகைக் கடல் மீனின் ஓடு], மற்றும் சில [staghorn,] கண்டு எடுக்கப்பட்டது. இவைகள் இன்றும் இந்தியாவின் ஆயுர்வேத மற்றும் பாரம்பரிய மருத்துவத்தில் பாவிக்கப்படுகின்றன, ஆகவே பெரும்பாலும் இவை அந்த பழங்காலத்திலும் பாவிக்கப்பட்டு இருக்கலாம். மேலே கூறியவாறு நாம் சில அடிப்படைகளில் அல்லது ஒப்பீடுகளில் ஊகிப்பதை தவிர எம்மால் ஒன்றும் செய்ய முடியாத நிலை இருந்தாலும், சிந்து வெளியின் மற்றும் ஒரு அம்சமான, மக்களின் சுகாதாரத்தை முதன்மையாக கொண்ட, அவர்களின் கட்டிடமும் வடிகால் அமைப்பும் எமது இந்த ஊகத்தை மிகவும் ஆணித்தரமாக ஆதரிக்கிறது.   [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]           
    • Published By: VISHNU   19 APR, 2024 | 08:36 PM   அண்மையில் வவுனியாவில் உயிரிழந்த சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி வெள்ளிக்கிழமை (19) தரணிக்குளம் கிராம மக்களினால் ஈச்சங்குளம் பொலிஸ் நிலையத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த 17ம் திகதி தரணிக்குளம் கிராமத்தில் வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் 17 வயதுடைய சிறுமியின் சடலம் மீட்கப்பட்டிருந்தத நிலையில், வெள்ளிக்கிழமை (19) இறுதி கிரியைகள் இடம்பெற இருந்த வேளை சிறுமியின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக தெரிவித்து சிறுமியின் வீட்டிற்கு முன்பாக கிராம மக்கள் மற்றும் உறவினர்களால் ஆர்ப்பாட்டம் ஒன்றினை முன்னெடுத்தனர். அத்தோடு குறித்த சிறுமியின் மரணத்திற்கு சிறிய தந்தையாரே காரணம் எனவும் தெரிவித்து மாபெரும் போராட்டத்தினை முன்னெடுத்ததுடன் மரணித்த சிறுமியின் வீட்டில் இருந்து பேரணியாக ஈச்சங்குளம் பொலிஸ் நிலையத்திற்கு சென்று பொலிஸ் நிலையத்தையும் முற்றுகையிட்டதுடன் வீதியை மறித்தும் ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர். இதன் போது சிறுமியின் கொலைக்கு நீதி வேண்டும், பெண் பிள்ளைகளுக்கு பாதுகாப்பு வேண்டும், சதுமிதாவின் மரணத்திற்கு நீதி வேண்டும், போன்ற பதாதைகளை தாங்கியவாறும் கசிப்பு மற்றும் போதைவஸ்தை இல்லாமல் செய், நீதி வேண்டும் நீதி வேண்டும் மரணித்த சிறுமியின் மரணத்திற்கு நீதி வேண்டும் என்ற கோசங்களை எழுப்பியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஒரு மணித்தியாலம் வரை இடம்பெற்ற இவ் ஆர்ப்பாட்டம் காரணமாக தாண்டிக்குளம், இரணைஇலுப்பைக்குள வீதி போக்குவரத்தானது தடைப்பட்ட மையால் அவ்வீதியின் ஊடக பயணம் செய்யும் மக்கள் பாதிப்புக்குள்ளாகினர். இதன்போது கருத்து தெரிவித்த ஆர்ப்பாட்டக்காரர்கள், போதைப்பொருள் பாவனையாலே  இவ்வாறான நிலை ஏற்பட்டுள்ளது. நாங்களும் வேலைக்கு சென்று 6 மணி போல் வரும் போது எங்களிற்கு பாதுகாப்பு இல்லை. தற்போது சதுமிதாவிற்கு நடந்த பிரச்சனைதான் இன்னொரு சிறுமிக்கும் நடைபெறும்.  குறித்த சிறுமியின் மரணத்திற்கு நீதி வேண்டும். 18 வயதிற்குட்பட்ட குறித்த சிறுமியினை துஸ்பிரயோகம் செய்தமையாலே மன ரீதியாக பாதிக்கப்பட்டிருக்கலாம். அத்துடன் குறித்த சிறுமியினை சிறிய தந்தையாரே துஸ்பிரயோகம் செய்துள்ளார் என தெரிவித்த ஆர்ப்பாட்டகாரர்கள்  குறித்த சிறுமியின் மரணத்திற்கு நீதி வேண்டும் என தெரிவித்தார். ஏற்கனவே சந்தேக பேரில் சிறுமியின் சிறியதந்தையினை ஈச்சங்குளம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்த நிலையில், கைது செய்யப்பட்ட நபரினை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதாகவும், இச்சம்பவத்துடன் தொடர்புடைய ஏனையவர்கள் ஐயும் கைது செய்வதாகவும் பொலிஸார் தெரிவித்ததையடுத்து ஆர்ப்பாட்டகாரர்கள் கலைந்த சென்றனர். https://www.virakesari.lk/article/181483
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.