Jump to content

தமிழீழ நீதியரசி சித்திராவின் வறுமைக்கு தீர்வு கிடைக்குமா?


Recommended Posts

 

 

 

தமிழீழ நீதியரசி சித்திராவின் வறுமைக்கு தீர்வு கிடைக்குமா?
[ புதன்கிழமை, 02 மார்ச் 2016, 04:53.38 PM GMT ]
valarmathi_ltte_001.jpg
வறுமையில் வாடும் முன்னாள் போராளியான வளர்மதி இறுதி யுத்தத்தில் பாதிக்கப்பட்டு, புற்றுநோயினால் பீடிக்கப்பட்ட நிலையில் மிகவும் வறுமையில் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்.

முன்னாள் போராளியும் தமிழீழ நீதி நிர்வாகத்துறை பிரிவு நீதியரசியுமான கிருஸ்ணாகரன் வளர்மதி (சித்திரா) 1990ம் ஆண்டு தமிழீழ விடுதலை புலிகளின் மகளிர் அணியின் ஆரம்பகால உறுப்பினரக இணைந்துள்ளார். 

பலாலியில் இராணுவத்ததினருடன் ஏற்பட்ட நேரடி சமரில் காயமடைந்து, பின்னர் தமிழீழ நீதி நிர்வாகத்துறை பிரிவில் 14 ஆண்டுகள் பயிற்சிபெற்று, முல்லைத்தீவு மல்லாவி நீதிமன்றில் 2009 ம்ஆண்டுவரை நீதிபதியாக கடமையாற்றியுள்ளார். 

 

தமிழீழ காவல்துறை ஆய்வாளராக கடைமையாற்றிய கிருஸ்ணாகரனை வளர்மதி மணம் முடித்து, இரண்டு பெண் பிள்ளைகளை பெற்றேடுத்த நிலையில் கணவனை இறுதியுத்தத்தில் இழந்துள்ளார். 

உடலில் ஏற்பட்ட காயத்தினால் ஒரு கை இயங்காத நிலையிலும் மன காயத்தினால் மனநிலை பாதிக்கப்பட்ட நிலையிலும் தற்பொழுது வாழ்ந்து கொண்டிருக்கின்றார். 

மேலும் இரத்த புற்றுநோயால் பாதிப்படைந்த நிலையில் எப்போழுது மரணம் ஏற்படுமோ என்றும், பிள்ளைகளின் எதிர்காலம் என்னாகுமோ என்றும், ஏங்கி தவித்து சொல்லொணா துன்பத்தில் மிக வறுமைக் கோட்டின்கிழ் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்.  

மனச்சுமையை இறக்கி வைக்கத் துடிக்கும் வளர்மதி கடந்த காலத்தில் இருந்த நிலையும் தற்போதைய நிலையினாலும் மனநிலை மோசமாக பாதிப்படையும் நிலையில் உள்ளார் என அவருடய தாயார் குறிப்பிடுகின்றார். 

உரியமுறையில் வைத்தியரை நாடி வைத்தியம் செய்யக்கூட வசதியற்ற நிலை இருப்பதாக மேலும் குறிப்பிட்டுள்ளார். 

வளர்மதியின் தொலைபேசி இலக்கத்துடன் அவருடைய தாயாரின் தொலைபேசி இலக்கமும் இங்கு இணைக்கப்பட்டள்ளது. 

தொடர்புகொள்ளும் அன்பு உள்ளங்கள் வளர்மதியுடன் பேசமுடியாத சூழல் ஏற்பட்டால் அவருடைய தாயருடன் தொடர்பினை ஏற்படுத்துமாறு அன்பாக கேட்டுக்கொள்கின்றோம். 

தொலைபேசி இலக்கம் 0094774732493 , 0094776450722

கணக்கு இலக்கம்- 

9838490 bank of eylon 
VALARMATHI KIRUSHNAKARAN

valarmathi_001.jpg

valarmathi_002.jpg

valarmathi_003.jpg

valarmathi_004.jpg

 

http://www.tamilwin.com/show-RUmuyDTWSWewzD.html

 

Link to comment
Share on other sites

  • Replies 87
  • Created
  • Last Reply

யாழ் கள உறவுகள் ஒன்றிணைந்து இப் பிள்ளைகளுக்கு குறிப்பிட்ட வயது வரைக்கும் மாதாந்தம் உதவி புரிவோமா? நேசக்கரத்தின் (சாந்தியின்) உத்வியை பெற்று இவர்களின் நிலவரத்தினை அறிந்து கொள்வதிலிருந்து எம் முயற்சியை ஆரம்பிக்கலாம்.

Link to comment
Share on other sites

என்னால் இயன்ற பங்களிப்பினை வழங்க தயாராக உள்ளேன் .

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்னால் இயன்ற பங்களிப்பினை வழங்க தயாராக உள்ளேன் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என் பங்களிப்பும் உண்டு. மாதாந்த கொடுப்பனவு ஒரு நல்ல ஐடியா.

Link to comment
Share on other sites

எனது பங்களிப்பையும் சேர்த்துக் கொள்ளுங்கள்..!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் களம்.. நேரடியாகவோ.. அதனூடாகவோ.. உதவ முன்வந்தால்.. (தமிழினி அக்காவுக்கு உதவ முன்வந்து போல).. எங்கள் பங்களிப்பை வழங்குவம். ஆனால் மாதாந்த உதவி என்பது எல்லோருக்கும் சரிப்பட்டு வராது. 

மேலும் தமிழினி அக்காவிற்கான உதவியின் மீதத்தை (இன்னும் யாருக்கும் வழங்கப்படாது இருக்கும் பட்சத்தில்) இவர்களுக்கு அளிக்கலாம். இது குறித்தும் யாழ் பரிசீலிப்பது நல்லது. 

Link to comment
Share on other sites

 இது தொடர்பாக சாந்தியை முக நூலூடாக தொடர்பு கொண்டு இத் திரியை பார்க்குமாறு கேட்டுள்ளேன். மிச்சம் பிறகு ...

Link to comment
Share on other sites

முன்னர் கிழக்குப்பகுதியினைச் சேர்ந்தவர்களுக்கு உதவி தேவை என தெரிந்தவர்கள் மூலம் கேட்டிருந்தார்கள். இங்கு களத்தில் முன்னர் குறிப்பிட்டபடி அவர்களுக்கு உதவ முடியும் என விபரம் கேட்டிருந்தேன். அவர்கள் 5 பேருடைய பெயர் விபரங்கள் ஒன்றரை மாதங்களுக்கு முன்னர் தந்திருந்தார்கள். இருக்கும் பணத்தினை 5 பேருக்கும் பிரித்துக் கொடுப்பதிலும் பார்க்க இரண்டு பேருக்கு கொடுத்தால் அவர்களுக்கு ஏதாவது சிறு தொழில்களுக்கு உதவியாக அமையலாம் எனக் குறிப்பிட்டு கட்டாயம் உதவி தேவை எனக் கருதும் இருவருடைய பெயர்களைக் குறிப்பிடும்படி கேட்டிருந்தேன்.

நீண்ட நாட்களாக எதுவித தகவலும் கிடைக்கவில்லை என்பதால் இன்று இச்செய்தியினைப் பார்த்துவிட்டு தமிழினிக்கு எனச் சேர்க்கப்பட்டு மீதமாக உள்ள பணத்தினை இவர்களுக்கு வழங்க முடியுமா என நினைத்து எதற்கும் முன்னர் தருவதாகச் சொல்லியிருந்தபடியால் முன்னர் தொடர்பு கொண்டவரிடம் தொடர்பு கொண்டிருந்தேன். அவர் இன்று குறிப்பிட்டபடி எனக்கு தந்த 5 பேரும் மிகவும் வறிய நிலையில் உள்ளார்கள் என்றும: நாமே அதில் இருவரைத் தெரிவு செய்து உதவியை வழங்கும்படி தெரிவித்திருந்தார். 

உதவி கேட்டவர்களின் விபரங்களை பின்னர் இணைக்கின்றேன். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனது பங்களிப்பும் உண்டு. தயவுசெய்து அனுப்பத் தேவையான விபரங்களை அறியத்தரவும்.

Link to comment
Share on other sites

4 hours ago, மோகன் said:

முன்னர் கிழக்குப்பகுதியினைச் சேர்ந்தவர்களுக்கு உதவி தேவை என தெரிந்தவர்கள் மூலம் கேட்டிருந்தார்கள். இங்கு களத்தில் முன்னர் குறிப்பிட்டபடி அவர்களுக்கு உதவ முடியும் என விபரம் கேட்டிருந்தேன். அவர்கள் 5 பேருடைய பெயர் விபரங்கள் ஒன்றரை மாதங்களுக்கு முன்னர் தந்திருந்தார்கள். இருக்கும் பணத்தினை 5 பேருக்கும் பிரித்துக் கொடுப்பதிலும் பார்க்க இரண்டு பேருக்கு கொடுத்தால் அவர்களுக்கு ஏதாவது சிறு தொழில்களுக்கு உதவியாக அமையலாம் எனக் குறிப்பிட்டு கட்டாயம் உதவி தேவை எனக் கருதும் இருவருடைய பெயர்களைக் குறிப்பிடும்படி கேட்டிருந்தேன்.

நீண்ட நாட்களாக எதுவித தகவலும் கிடைக்கவில்லை என்பதால் இன்று இச்செய்தியினைப் பார்த்துவிட்டு தமிழினிக்கு எனச் சேர்க்கப்பட்டு மீதமாக உள்ள பணத்தினை இவர்களுக்கு வழங்க முடியுமா என நினைத்து எதற்கும் முன்னர் தருவதாகச் சொல்லியிருந்தபடியால் முன்னர் தொடர்பு கொண்டவரிடம் தொடர்பு கொண்டிருந்தேன். அவர் இன்று குறிப்பிட்டபடி எனக்கு தந்த 5 பேரும் மிகவும் வறிய நிலையில் உள்ளார்கள் என்றும: நாமே அதில் இருவரைத் தெரிவு செய்து உதவியை வழங்கும்படி தெரிவித்திருந்தார். 

உதவி கேட்டவர்களின் விபரங்களை பின்னர் இணைக்கின்றேன். 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்னால் இயன்ற பங்களிப்பினை வழங்க தயாராக உள்ளேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, நிழலி said:

யாழ் கள உறவுகள் ஒன்றிணைந்து இப் பிள்ளைகளுக்கு குறிப்பிட்ட வயது வரைக்கும் மாதாந்தம் உதவி புரிவோமா? நேசக்கரத்தின் (சாந்தியின்) உத்வியை பெற்று இவர்களின் நிலவரத்தினை அறிந்து கொள்வதிலிருந்து எம் முயற்சியை ஆரம்பிக்கலாம்.

 

என்னால் இயன்ற உதவிகளை செய்கின்றேன். மேலை உள்ளவர்களுக்கு நிலையான வைப்பிலிட்டு வட்டியில் படிக்க கூடிய மாதிரி பணத்தை சேர்ந்தால் நன்று. மாதாந்த உதவி என்பது நடைமுறைக்கு சாத்தியமற்றது.

மோகண்ணா வாக்கு கொடுத்த படி மிகுதிப்பணத்தை அந்த உறவுகளுக்கே பயன்படுத்தவும்.

Link to comment
Share on other sites

நிழலி  மற்றும் அனைத்து கள உறவுகளுக்கும்,
மேற்காணும் செய்திக்குரிய வளர்மதிக்கான உதவியை நிரந்தர வருமானத்திற்கான வழியொன்றை ஏற்படுத்துவதே சரியாகும். 

அவரது மகள்கள் முறையே 15,13 வயது பிள்ளைகள். இருவரும் மாணவிகள். பிரத்தியேக வகுப்புகளுக்கு செல்லாமல் தாங்களே படிக்கிறார்கள். வளர்மதி மன்னாரில் ஒரு கடையின் ஒருபகுதியில் தேயிலை , மா, தூள் போன்ற வியாபாரம் செய்கிறார். இதில் வரும் வருமானம் அத்தோடு சமுர்த்தி உதவி மாதாந்தம் 2ஆயிரம் ரூபாவை வைத்தே இவர்களது வாழ்க்கை போகிறது. 

இவரது தாயார் பேசிய போது தமது வளவுக்குள் சிறுபயிர்கள் வைத்தலோ அல்லது கால்நடை வளர்ப்போ எதுவும் செய்ய முடியாதென கூறினார். 

பிள்ளைகளுக்கு ஆளுக்கு ஒருலட்சம் சேமிப்பு கணக்கு திறந்து கொடுத்துக் கொண்டு வளர்மதியின் வியாபாரத்தை முன்னேற்ற உதவலாம். அத்தோடு மாதாந்த கொடுப்பனவு ஒருதொகை கொடுத்தால் மட்டுமே அவர்களால் சமாளிக்க முடியும்.

வளர்மதி தொடர்ந்து மருத்துவம் செய்வதற்கான ஒழுங்குகளை நேசக்கரம் மூலம் செய்து கொடுப்போம். நோயின் வேதனை குடும்ப சுமையால் ஏற்பட்ட தாக்கம் தனக்கான மருத்துவத்தை செய்வதை நிறுத்தியுள்ளார். புற்றுநோய் என்றால் மரணம் தான் என்ற முடிவில் அக்கறை செலுத்தாமல் இருப்பது போலிருக்கிறது. அவருக்கான மேலதிக சிகிச்சைக்கான ஏற்பாடுகளை எம்மால் மேற்கொள்ள முடியும். 

முதல்கட்டம் அவர்களுக்கான அவசர உதவியாக ஒருதொகை பணத்தை கொடுத்துக் கொண்டே மேற்கொண்டு பேசமுடியும். காரணம் பலர் தொலைபேசியெடுத்து நிறைய விசாரணைகள் செய்துள்ளார்கள்.

ஆனால் யாரும் இதுவரை எவ்வித உதவியும் செய்யவில்லை. சிலர் பணம் அனுப்பியதாக வங்கியில் போய் பார்க்கச் சொல்லியிருக்கிறார்கள். ஆனால் பணம் கிடைக்கவில்லை. கதைத்தவர்கள் எதையும் செய்யவில்லை. பணம் அனுப்பினோம் என சொன்னவர்கள் தனக்கு பொய்சொல்லி விட்டார்கள் என்ற கோபமும் வெறுப்பும் வளர்மதியை மனவுளைச்சலுக்கு உள்ளாக்கியுள்ளது. அவரது வங்கிக்கு நேரடியாக அனுப்ப விரும்புவோர் அனுப்பிவிட்டு அறியத்தந்தால் அவருக்கு தெரிவித்து அடுத்த முயற்சியை செய்யலாம்.

இணையத்தில் செய்தி வந்தால் உடனடியாக உதவி கிடைக்குமென்ற நம்பிக்கையில் கொடுத்தவர்கள் கிடைக்காத நிலமையில் கோபப்படுதல் வெறுப்படைதல் பெரிய விடயம் அல்ல. 

யாழ் களம் எவ்வகையில் உதவலாம் என்பதனை அறியத்தந்தால் மேலதிக விடயங்களை பகிரலாம். நாளை பின்னேரம் வளர்மதியுடன் தொலைபேசுவேன். உங்கள் எண்ணங்களை அறியத்தாருங்கள்.

Link to comment
Share on other sites

பதிலுக்கும் தகவல்களுக்கும் நன்றி சாந்தி

 

3 hours ago, shanthy said:

 

முதல்கட்டம் அவர்களுக்கான அவசர உதவியாக ஒருதொகை பணத்தை கொடுத்துக் கொண்டே மேற்கொண்டு பேசமுடியும். காரணம் பலர் தொலைபேசியெடுத்து நிறைய விசாரணைகள் செய்துள்ளார்கள்.

ஆனால் யாரும் இதுவரை எவ்வித உதவியும் செய்யவில்லை. சிலர் பணம் அனுப்பியதாக வங்கியில் போய் பார்க்கச் சொல்லியிருக்கிறார்கள். ஆனால் பணம் கிடைக்கவில்லை. கதைத்தவர்கள் எதையும் செய்யவில்லை. பணம் அனுப்பினோம் என சொன்னவர்கள் தனக்கு பொய்சொல்லி விட்டார்கள் என்ற கோபமும் வெறுப்பும் வளர்மதியை மனவுளைச்சலுக்கு உள்ளாக்கியுள்ளது. அவரது வங்கிக்கு நேரடியாக அனுப்ப விரும்புவோர் அனுப்பிவிட்டு அறியத்தந்தால் அவருக்கு தெரிவித்து அடுத்த முயற்சியை செய்யலாம்.

 

வணக்கம் உறவுகளே ,

இது தொடர்பாக உங்கள் கருத்து என்ன? ஒரு குறிப்பிட்ட தொகையை முதலில் சேர்ப்போமா? ஓம் எனில், விரைவாக ஒரு குறிப்பிட்ட தொகையை சேர்க்க வேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

5 இலட்சம் ரூபா என்று நிர்ணயிப்போமா?

இரண்டு லட்சம் பிள்ளைகள் இருவருக்கும் 18 வயது வரை மீளப் பெறாதவகையில் நிரந்தர வைப்பில் இட்டு,

 3 இலட்சத்தில் அவரது கடையை விரிவுபடுத்தி மிகுதியை 5/10 வருடங்களுக்கு மீளப் பெறாதவகையில் நிரந்தர வைப்பில் இடலாம். 

அவருக்குரிய மருத்துவ உதவியை நேசக்கரம் வழங்க இருப்பதால், நிரந்தர வருமானத்திற்கு வழி அமைப்போம். 

 

Link to comment
Share on other sites

5 இலட்சம் என்பது சிறிய தொகையாயினும் யாழ் களத்தினைப் பொருத்தவரைக்கும் உறுப்பினர்களின் பங்களிப்பின் மூலம் மட்டுமே பெறுவது கொஞ்சம் கடினமானது. உறுப்பினர்களின் தனிப்பட்ட பங்களிப்புகளுக்கு சமாந்தரமாக வர்த்தக நிறுவனங்களின் பங்களிப்பையும் பெற முடியுமாயின் விரைவாக பணத்தினை சேர்க்க முடியும்.

உங்களுக்கு தெரிந்த வர்த்தக நிறுவனங்களினை அணுகி விளம்பரங்களை பெற்று அவர்களிடம் இருந்து சிறிய தொகையை பெற முடியுமா? அப்படிப் பெற்றால் யாழில் இரு வாரங்களுக்குள் அவர்களின் விளம்பரத்தினை எம்மால் பிரசுரிக்க முடியும். சும்மா காசை தருவதை விட அவர்களுக்கும் பயன் தரக் கூடிய விதமாக இது அமையும்.

ஒரு பக்கம் யாழ் உறவுகளின் பங்களிப்பும் மறு பக்கம் வர்த்தக நிறுவனங்களின் விளம்பர பங்களிப்பும் ஒருங்கே கிடைக்குமாயின் யாழின் மூலம் பல நல்ல விடயங்களை செய்ய முடியும் .

Link to comment
Share on other sites

1 hour ago, நிழலி said:

பதிலுக்கும் தகவல்களுக்கும் நன்றி சாந்தி

தற்சமயம் பேபாலில் அனுப்ப முடியாத சூழ்நிலை. நேரடியாக சம்பந்தப்பட்டவரின் வங்கி கணக்குக்கு அனுப்ப விரும்பவில்லை. இலங்கையில் உள்ள ஒரு வங்கி கணக்கை தந்துதவினால் எனது பங்களிப்பும் இருக்கும் (உதாரணமாக நேசக்கரத்தின் வங்கிக்கணக்கு இலக்கம்).

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நிழலி, பிரித்தானியாவில் இப்போது பெரும்பாலானவர்கள் IBC தொலைக்காட்சிக்கே விளம்பரங்களை வழங்குகிறார்கள். மேலும் யாழ் இணையத்தைப் பொறுத்த வரை எல்லா நாட்டில் இருந்தும் பார்வையாளர்கள் இருப்பதால் ஐரோப்பிய ரீதியில் வியாபாரம் செய்யும் நிறுவனங்களே(LYCA, LEBARA) விளம்பரத்தினால் பயன்பெறுவர்.

எதற்கும் IP address ஐ வைத்து கடந்த மாத்த்தில் எந்தந்த நாட்டிலிருந்து எவ்வளவு பேர் வருகை தந்தார்கள் என்ற விபரத்தை தரமுடியுமா? அத்துடன் கட்டண விபரங்களையும் தாருங்கள் முயற்சி செய்கிறேன். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வளர்மதியின்ர குடும்பமே நடுச்சந்தியில நிக்கிறது இந்த திரியை நாற்சந்திக்கு நகர்த்தி என்ன செய்வது?

மைத்திரியின் நல்லாட்சியிலும் பயமா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நானும், என்னால் முடிந்ததை செய்வேன்.

Link to comment
Share on other sites

வளர்மதிக்கு உடனடி மருத்துவத்தேவைக்கு பத்தாயிரம் ரூபாய் தேவைப்படுகிறது. அதனை கொடுத்து அவரை மருத்துவமனைக்கு சிகிக்சைக்கு அனுப்ப வேண்டும். 

முதலில் வளர்மதிக்கு தன்னம்பிக்கை தைரியத்தை ஊட்ட வேண்டும். காரணம் அவரது மனநல தாக்கமானது மருத்துவத்தையும் செய்யக்கூடாதென்பதாக இருக்கிறது.  அவருக்கானஉளவள மேம்பாடு உயர்ந்தால் மட்டுமே தொடர்ந்து சிகிச்சை செய்யலாம். 

1)அவருடன் கதைத்ததில் புரிந்த விடயம். தொடர்ந்து வியாபாரத்தை மேற்கொள்ளவே விரும்புகிறார். 

ஆகவே தற்போது அவசர உதவியானது அவரது மனநலம் சீராக தேவையான ஆதரவாகும். 

2)பிள்ளைகளுக்கான சேமிப்பு  ஆளுக்கு ஒவ்வொரு லட்சம் போடவேண்டும். 

3)பிள்ளைகள் கல்வி மாதம் 5ஆயிரம் கால எல்லையை நிர்ணயித்து செய்ய வேண்டும். 

தாமதம் இல்லாமல் உதவி துரிதப்படுத்தப்படுதல் பிரதானம். 

21 hours ago, Gari said:

இந்த திரியையும்  யாழ் நாற்சந்தி க்கு மாற்றலாமே ?

இச்செய்தியை யாழ் கருத்துக்கள உறுப்பினர் அல்லாதவர்களும் பார்க்கிறார்கள். இச்செய்தியை யாழில் பார்த்துவிட்டு இச்செய்தியை பார்க்குமாறு முதல் மின்னஞ்சல் எழுதிய நண்பர் கட்டாரில் இருக்கிறார். அவர் கள உறுப்பினர் அல்ல. ஆகவே இங்கேயே இருப்பதே நல்லம்.  இது எனது கருத்து மட்டுமே. 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஈரான் (Iran) மீது இஸ்ரேல் (Israel) நடத்தியுள்ள ஏவுகணை தாக்குதலின் பின்னர் உலக சந்தையில் எண்ணெய் மற்றும் தங்கத்தின் விலை சடுதியாக உயர்வடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மோதல்கள் தொடருமானால் ஈரானுடன் (Iran) நேரடியாகவும் மறைமுகமாகவும் கையாளும் இலங்கையின் பொருளாதாரமும் பாரிய ஆபத்தை எதிர்கொள்ள நேரிடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனை பேராதனை பல்கலைக்கழகத்தின் (University of Peradeniya) பொருளாதார மற்றும் புள்ளிவிபரவியல் பிரிவின் பேராசிரியர் வசந்த அத்துகோரல தெரிவித்துள்ளார். எண்ணெய் ஏற்றுமதி பேராசிரியர் வசந்த அத்துகோரல மேலும் கருத்துத் தெரிவிக்கையில், எரிபொருளை இறக்குமதி செய்வதில் இலங்கை ஈரானுடன் (Iran) நேரடி தொடர்புகளை கொண்டிருக்காவிட்டாலும், இலங்கை (Srilanka) எரிபொருளை கொள்வனவு செய்யும் நாடுகளுக்கு ஈரானே பிரதான எரிபொருளை வழங்குவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். ஈரானின் எண்ணெய் ஏற்றுமதியில் தொண்ணூறு சதவீதம் சீனாவுக்கே செல்கிறது. இதற்கு மேலதிகமாக, இந்தியா மற்றும் ஜப்பானுக்கும் ஈரான் எரிபொருளை ஏற்றுமதி செய்கின்றது. இந்நிலையில், இந்தியா மற்றும் சீனாவிடம் இருந்து இலங்கை கணிசமான அளவு எரிபொருளை கொள்வனவு செய்கிறது. இதனால் மத்திய கிழக்கில் போர் தொடருமாயின் இலங்கையில் பெட்ரோலுக்கு நெருக்கடி நிலை ஏற்படும் வாய்ப்பு காணப்படுகின்றது. உலகப் போராக உருவாகும் அபாயம் அத்துடன் இலங்கை ஈரானுக்கு சுமார் 80 மில்லியன் டொலர் பெறுமதியான பொருட்களை ஏற்றுமதி செய்வதுடன் 10 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான பொருட்களை ஈரானில் இருந்து இறக்குமதி செய்கிறது.   இஸ்ரேல் நேற்று (19) மத்திய ஈரானில் உள்ள இஸ்ஃபஹான் (Isfahan) மாகாணத்தை குறிவைத்து ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இந்நிலையில், எஞ்சிய நாட்களில் இரு நாடுகளுக்கும் இடையிலான மோதல்களும் போட்டிகளும் மேலும் அதிகரிக்கலாம் எனவும், இந்த மோதல்கள் உலகப் போராக உருவாகும் அபாயம் இருப்பதாகவும் அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.   https://tamilwin.com/article/israil-iran-war-tension-and-economy-crisis-1713593678?itm_source=article
    • ஈராக்கில் (Iraq) உள்ள ஈரானுக்கு (Iran) ஆதரவான கல்சோ இராணுவத் தளம் மீது மிகப்பெரிய குண்டுத்தாக்குதல் ஒன்று நடத்தப்பட்டுள்ளது. இந்தத் தாக்குதலில் அணிதிரட்டல் படையை சேர்ந்த ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 8 பேர் காயமடைந்துள்ளனர். குறித்த தாக்குதலுக்கு பின்னால் யார் உள்ளனர் என ஈராக்கின் பாதுகாப்பு வட்டாரங்கள் இன்னும் உறுதியான தகவல் எதையும் வெளியிடவில்லை. அத்துடன், குண்டுவெடிப்புக்கு முன்னதாக இப்பகுதியில் உள்ள வான்வெளியில் ட்ரோன்கள் அல்லது போர் விமானங்கள் எதுவும் கண்டறியப்படவில்லை எனவும் இதன்போது தெரிவிக்கப்பட்டுள்ளது. உரிய பதிலடி இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான மோதல் புதிய கட்டத்தை எட்டியுள்ளதால் மத்திய கிழக்கு நாடுகள் அனைத்தும் மிகவும் எச்சரிக்கையாக உள்ளன.   இந்நிலையில், இஸ்ரேல் மீது ஈரான் நடத்திய ஏவுகணை தாக்குதலுக்கு பதிலடி அளிக்கும் விதமாக நேற்று ஈரானின் இஸ்பஹான் நகர் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது.   அதேவேளை, ஈரானிய நலன்கள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தினால் உரிய பதிலடி வழங்கப்படும் என ஈரானின் வெளியுறவுத் துறை அமைச்சர் ஹொசைன் அமீர் அப்துல்லாஹியன் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.  https://tamilwin.com/article/iran-vs-israel-war-update-today-1713602121?itm_source=parsely-detail
    • 1. கருணாநிதி, குடும்பத்தையே தேர்தலில் மேடை போட்டு நாறடிச்சுவிட்டு, தேர்தலில் திமுக வென்றதும் - ஸ்டாலினை சந்தித்து அதே கருணாநிதி போட்டோ முன் பவ்வியமாக கைகட்டி கூழை கும்பிடு போட்டது தைரியம் என்றால் - நாம் பயந்தவர்களாகவே இருந்து விட்டு போகிறோம். 2. ஊழலை எதிர்த்து தொண்டை புடைக்க பேசி விட்டு, சசி ஜெயிலால் வந்து முகம் கழுவ முன்னம் அவரை போய் சந்தித்து விட்டு, பத்திரிகையாளருக்கு பயந்து பின் கதவால் ஓடியது தைரியம் என்றால் - நாம் பயந்தவர்களாகவே இருந்து விட்டு போகிறோம். 3. விஜி அண்ணி புகாரில் இருந்து தப்பிக்க, உதய்யிடம் இரவு 2 மணிக்கு போன் பேசுவது தைரியம் என்றால் - நாம் பயந்தவர்களாகவே இருந்து விட்டு போகிறோம். 4. தமிழ் இறையியலை மீட்ப்போம் என மார்தட்டி விட்டு - ஒரு பிராமணியை எதிர்க்க திராணி இல்லாமல் சமஸ்கிருதத்தில் மகனிற்கு காது குத்தும் மந்திரத்தை ஓத விட்டது தைரியம் என்றால் - நாம் பயந்தவர்களாகவே இருந்து விட்டு போகிறோம். 5. குடும்ப அரசியலை ஒழிப்பேன் என கதறிவிட்டு - மனைவி சொல்லுக்கு பயந்து மச்சினன் அருண் காளிமுத்துக்கு சீட் கொடுத்தது தைரியம் என்றால் - நாம் பயந்தவர்களாகவே இருந்து விட்டு போகிறோம். 6. தமிழ், தமிழ் என மேடை தோறும் கூவி விட்டு, அவர்களின் எதிர்கால வாய்ப்பு கெட்டு விடும் என பிழையாக பயந்து மகன்களை ஆங்கில வழி கல்வியில் சேர்த்தமை தைரியம் என்றால் - நாம் பயந்தவர்களாகவே இருந்து விட்டு போகிறோம். # பயம் #தான் #கொள்ளி🔥🔥🔥🤣
    • கலோ...ஒரு பொது தளத்தில் வருடத்திற்கு ஒரு பெயர் மாத்த ஏலாது..சும்மா ஏப்பிரல் பூலுக்கு ஏதாச்சும் ஏழுதினாலலே காவிட்டு திரியிற உலகம் இது..சோ..நாம் உலாவும் இடங்களில் மற்றவர்களின் சுதந்திரந்தையும் பார்த்துக்கொள்ள வேணும் புறோ..நீங்கள் நினைச்ச எல்லாம் செய்ய இயலாது..மற்ற பயனாளர்களின் சுதந்திரமும் , வாழ்வும் இதற்குள் அடங்கியிருக்கிறது.🙏🖐️
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.