Jump to content

தூக்கில் தொங்கிய சீட்டு – பாகம் 1


Karan T.

Recommended Posts

யார் யாருக்கு சீட்டு தெரியும் என்று கேட்டால், பெரியவர்களே கைகளை உயர்த்துவார்கள். இதில் உழைப்பாளிகளே தங்களது பணத்தினை ஈடுபடுத்துகிறார்கள். வாகனம், வீடு, கடை என அவர்களின் பெரிய செலவுக்கு பயன்படுகிறது, அத்தோடு அரசாங்க கணக்கில் வராத கறுப்பு பணம்.

சீட்டு பலவிதப்படும். கழிவுச் சீட்டு, குலுக்கல் சீட்டு என்று இருக்கிறது. கழிவுச்சீட்டின் பொருள். ஒரு தொகை மக்கள் இணைந்து மாதம் மாதம் பணம் போடுவார்கள். முதல் சீட்டு தாய் சீட்டு, அது நடத்துபவருக்கு, ஏனையவை எடுப்பவருக்கு கழிவுகளுடன். 12 பேர் இணைந்து 12‘000 ரூபாய் சீட்டு போட்டால் தலா 1000 ரூபாய் கட்டவேண்டும். அவசரமாக கேட்பவருக்கு கழித்து கொடுக்கப்படும். கழித்த பணத்தின் மீதியை 12ஆக பிரித்து கட்ட வேண்டும். கடைசி சீட்டை எடுப்பவர்களுக்கு கழிவு இல்லை. விளக்கம் சரி என்று எண்ணுகிறேன். தவறுக்கு மன்னிக்கவும். குலுக்கி ஒருவரை தேர்ந்தெடுப்பது குலுக்கல் சீட்டு.  

நீண்ட நாள் ஆசை இதை பற்றி எழுத. நீண்ட காலமாக சூதாட்டம் போல பணம் புரளுகிறது சீட்டுகளில். இந்தக் கதை கற்பனையே. சுவிஸ் நாட்டில் லுசெர்ன் மாநிலத்தை கதைக்கு இடமாக தேர்ந்தெடுத்தேன், எனக்கு இது வதிவிடம் என்பதால், இதனால் இங்கு நடந்ததாக நினைக்க வேண்டாம். விரும்பினால் அடுத்த பாகத்தில் மாத்துகிறேன். யாரையும் நோகடிக்க இந்த கதை மூலம் நான் விரும்பவில்லை.

கதாபாத்திரங்கள்:
மலிகைக்கடை அண்ணாச்சி – ஒல்லி உடம்பு, லேசான கறுப்பு, மொட்டை, கொஞ்சம் கட்டை
பாண்டி – குண்டான உடம்பு, சிகப்பு நிறம், மொட்டை, ஓரளவான உயரம்
புறோக்கர் ஆறுமுகம் - குண்டான உடம்பு, சிகப்பு நிறம், நல்ல கறுத்த முடி, கொஞ்சம் கட்டை
சந்திரன் அண்ணை மகன் சின்னு – மெல்லிய உடம்பு, சிகப்பு நிறம், உயரம், இளமை பருவம்
முருகேசு மனைவி ராசாத்தி – குண்டான உடம்பு, கறுப்பு நிறம், கட்டை, பல நரைச்ச முடிகள் கறுப்புக்கிடையில்

சீட்டுக்கு வாங்கோ

மலிகக்கடை அண்ணாச்சி புது சாமான் கடைக்கு வாங்கவேணும். காசு பெரிசா இல்லை. இருந்ததை வச்சு வீடு கட்டிட்டார் லுசெர்ன்லையும் யாழ்ப்பாணத்திலையும். ஒரு லட்சம் பிராங் வேணும், பக்கத்தில கொஞ்சம் இருக்கிறதால கட்டாயம் 80‘000ம் வேணும். இப்ப என்னத்த செய்றது, ஒரு சீட்ட போடுவம் எண்டு முடிவெடுத்தார். ரெண்டு மூண்டு பேரிட்ட சொல்ல, அது லுசெர்ன் முழுக்க பரவிட்டுது, அண்ணாச்சி 80‘000 பிராங் களிவுச் சிட்டுக்கு ஆழ் சேர்க்கிறேர் எண்டு. பட பட எண்டு 20 பேர் சேர்ந்திற்றினம். மாசம் மாசம் 4000.- கட்டவேணும், கழிவு பார்த்தா தொடக்கத்தில 2500 கட்டவேண்டித்தான் வரும் போல.

20 பேரில பாண்டி ரெண்டாவதா சேர்ந்தவன். வீடு வாங்குறதுக்கு முதல் போட்டது வேறு ஒரு சீட்டு எடுத்து. அது இன்னும் முடியேல்ல, இருந்தும் இன்னுமொரு சீட்டு போடுறான் புது வீட்டுக்கு. அதை வாங்கி வாடகைக்கு குடுத்தா ஒரு சம்பாத்தியமா இருக்கும். மனிசி வேலைக்கு போகுது, அவனும் 100 வீத வேலை செய்றான். சமாளிக்கலாம் ஏலாட்டி களிச்செடுத்து கட்டுவம் எண்டு முடிவுக்கு வந்திருக்கிறான்.

புறோக்கர் ஆறுமுகம் ஏற்கனவே வீடு வாங்கி சொகுசா வாழுறார். ரெண்டாவது வீடு வாங்குறதுக்கு அவசரமா காசு வேணும். இருக்கிற வீட்ட வித்திற்று, இதுக்கு போட்ட முதல் அதுக்கு போட்டு சொகுசா இன்னும் பெரிய வீட்டில இருக்கலாம். பழைய வீடு 800‘000, புது வீடு 1‘800‘000. இன்னும் இந்த வீடு வில்படேல்ல, அதால சீட்டு எடுத்து முதல் கட்ட வேணும் புது வீட்டுக்கு. வீடும் கட்டுவேல நடக்குது. போதாக்குறைக்கு இன்னும் ஒரு சீட்டு. அது தொடங்கி 5 மாசம் தான், 3 மாசத்தில கழிச்சு எடுத்திட்டார் முதல் கட்ட. இன்னும் ரெண்டு கிளமையில மொத்த முதலும் கட்டவேணும். இவர் ஆக்களுக்கு வீடு பார்த்து குடுக்கிறவர், அதால புறோக்கர் ஆறுமுகம் எண்டு பட்டம்.

சின்னு கல்யாணம் கட்டி ரெண்டு வருசம். புள்ளை இப்பத்தான் பிறந்தது. மனிசி வேலைக்கு போகுறா. நண்பர்கள் வீடு வாங்கினதால தனக்கும் ஒரு ஆசை. வாடக வீடு சின்னன், ரெண்டாவது பிள்ளை பெற்கிறது எண்டு ஒரு யோசனை.

ராசாத்தி புருசன போட்டு படுத்தாத பாடா. சீட்ட போடு சீட்ட போடு உரில வீடு கட்டுவம், வயசான காலத்தில இங்க இருக்க ஏலாது, ஏக்கருக்கு யாழ்ப்பாணத்தில நல்ல காசு கேக்கிறாங்கள், விலை ஏறிக்கொண்டே போகுது, காணி வாங்கி கட்டுவம். ஒரே புலம்பல். ரெண்டு பேரும் பிறந்த இடம் வவுனியா. சொந்தக்காரர் யாழ்பாணத்தில இருக்கிறதால வவுனியாவோட ஈடுபாடு இல்ல. சுவிஸ் வந்து 30 வருசம் ஆகுது. அவாக்கு இன்னும் 10 வருசத்தில பென்சன். வருசத்தில ஒருக்கா ஊருக்கு போயிட்டு வருவினம். பிள்ளைகள் ரெண்டும் லண்டனில கல்யாணம் கட்டி நல்லா இருக்குதுகள்.    

தொடரும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்லா இருக்கு தொடருங்கோ...! நாங்களும் சீட்டை ஒரு கை பார்ப்பம்...!

பிறகு ஏமாத்திப் போட்டு ஓடக் கூடாது... எழுதாமல்....! tw_blush:

Link to comment
Share on other sites

பாகம் 2 முடிந்து பாகம் 3 தயாராகின்றது. 1 கிழமை இடைவெளியில் வெளியாகும்.

Link to comment
Share on other sites

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

கதையின் கரு அருமை!

எனக்குத் தனிப்பட்ட முறையில் சீட்டு அவ்வளவு பிடிப்பதில்லை!

ஒருத்தர் சீட்டை எடுத்துக்கொண்டு..ஓடிப்போனால் என்ன செய்வது?

சட்ட நடவடிக்கை ஏதும் உங்கள் ஊரில் எடுக்க முடியுமா?

தொடர்ந்து எழுதுங்கள்!

Link to comment
Share on other sites

ஆர்வத்துக்கு நன்றி. அடுத்த பாகங்களில் இன்னும் விபரமாக விடயங்கள் தரப்படும். உங்கள் கேள்விகளுக்கும் பதில் கிடைக்கும்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தினமுரசு ஒரு ஜனரஞ்சக பத்திரிகை என்பதில் சந்தேகமேயில்லை. அதில் அற்புதன் எழுதிவந்த துரையப்பா முதல் அற்புதன் வரை எனும் தொடர் பல நிகழ்வுகளை சொல்லி வந்தது. இதற்காகவே அந்த பத்திரிகையை வாங்கி தொடர் தொடராக வாசித்து வந்தேன். அவற்றையெல்லாம் கட்டி பத்திரமாக இன்றும் வைத்திருக்கின்றேன். கதையை வாசித்தவர்களுக்கு கொலையாளி யாரெனெ தெரிந்திருக்கும்.
    • தினமுரசு பத்திரிகையில் ஈழமக்கள் முன்னணியில் இருந்து தொடர்கதையாக எழுதி வந்த பத்திரிகையாளர் அற்புதன் எமது போராட்டம் எப்படி யார்யார் தொடங்கினார்கள்.                   எமது போராட்டம் பற்றிய உடனடி கள தகவல்களுடன் தினமுரசு பத்திரிகை வெளிவந்து கொண்டிருந்தது.துரோக கும்பலில் உள்ளவர்களால் எழுதப்பட்டாலும் ஒவ்வொரு கிழமை வெளிவந்த பத்திரிகையையும் வாங்கி வாசித்து பலருக்கும் வாசிக்க கொடுத்து சேர்த்து வைத்திருந்தேன்.                  பலரும் ஒவ்வொரு கிழமையும் எப்படா தினமுரசு வரும் என்று காவல் இருந்து வாங்கி வாசித்துக் கொண்டிருந்த காலத்தில் திடீரென பத்திரிகையாளர் அற்புதன் சுட்டுக் கொல்லப்பட்டார்.                அவரது கொலை அவர்களது இயக்கமான ஈபிடிபி யே காரணம் என எல்லோராலும் பேசப்பட்டது.டக்ளஸ் ஏற்கனவே அற்புதனை எச்சரிகை செய்தும் தொடர்ந்தும் பல உண்மைகளை எழுதியதால்த் டக்ளசால் கொல்லப்பட்டாக சொல்கிறார்கள்.                             அற்புதனின் தினமுரசு பத்திரிகையை வாசிக்காதவர்கள் எமது போராட்ட ஆரம்ப வரலாறு தெரியாதவர்கள் இந்த தொடரை பாருங்கள்.                 வரலாற்றை அறிந்து கொள்ளுங்கள்.   பாகம்1    
    • உள்ளதைத்தான் சொல்லியிருக்கின்றீர்கள். இப்ப ஜேர்மனியிலை எதுக்கெடுத்தாலும் தொட்டால் பட்டால் புட்டின் தான் குற்றவாளி.அந்த மாதிரி மக்களை மூளைச்சலவை செய்துகொண்டு போகின்றார்கள். இணக்க அரசியலுக்கு பெயர் போன ஜேர்மனி இப்படி ஆகிவிட்டது. உள்ளதைத்தான் சொல்லியிருக்கின்றீர்கள்.  
    • அத்துடன் மாவீரர் நாளில் மிகுந்த சனத்தை  பார்க்க கூடியதாக இருந்தது. (வன்னியில் என நினைக்கிறேன்)      
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.