Jump to content

உசன் மிருசுவில் : தடங்கள்


Recommended Posts

ஊரடங்கிய நடுநிசி. புளிய மரம் இருந்த இடம் தெரியாது அழிக்கப்பட்டிருக்கிறது. அது பிரசவித்த அனைத்துப் பேய்களதும் தடங்கள் காற்றில் பதிந்திருக்கிறது. முடக்கு வருகிறது. உரப்பையில் துவக்கை மறைத்து, ஏசியா துவிச்சக்கர வண்டியில் கோடன் சேட்டும் சாரமும் கட்டிப் பயணித்த பதின்வயது முகங்களின் சிரிப்பு அப்படியே அந்த முடக்கில் கண்ணிற்குப் புலப்படாத உணர்வாய் உறைந்திருக்கிறது. ஐபோன் ஆறு எஸ்சின் மூன்று பரிமாணத் தொழில்நுட்பம் போன்று, உறைந்த படத்தை அழுத்திப் பிடித்தால் உள்ளுர அது காணொளியாகி மறைகிறது. கடந்து நடக்கிறேன். சந்திக் கடையில் நின்று கதைபேசியவர் தடங்கள். காதிற்குள் ஒலி ஏறாத போதும் அவர்கள் உதட்டசைவை வாசிக்க முடிகிறது. கடந்து போகக் கோவில் வருகிறது. குஞ்சம்மா மூதாட்டி வழமை போல் ஜன்னலூடு கும்பிட்டு நிற்கின்றார். நந்தனார் கதையின் நடைமுறை உதாரணம் அவர். அந்தக் கோயிலின் அந்த ஜன்னல் இன்னமும் இருப்பதனால் காற்றில் அவள் உருவம் நிற்குமிடத்தைக் கூர்ந்து பார்க்க முடிகிறது.

மதில்களில் தொடர்பற்ற பாத்திரங்கள் தொடர்புபடுத்தப்பட்டிருந்தமை அவசரமாக அழிக்கப்பட்டிருந்தும், மதில்கள் இடித்துக் கட்டப்பட்டிருந்தபோதும், தடம் உணர முடிகிறது. 'பலாப்பழம்' இன்னமும் மீன் விற்றுச் செல்லுகிறார். காலையில் வியாபாரம் மாலையில் மேடையில் பிரச்சாரப் பேச்சென்று வாழ்ந்தவர் வாயில் அவர் பேசிய அனைத்துப் பேச்சுக்களினதும் தடங்களை வாசிக்க முடிகிறது. அவரது மீன் சைக்கிள் அதே ஒலி எழுப்பிக் கடந்து போகிறது. கூலி வேலையிலும் சுதந்திரமாய் வாழ்ந்த மரியநாயகம் அண்ணை. காலை மணி பத்தரையானால் வேலியடைப்பை நிறுத்துவதற்கு எவரையும் அவர் கேட்டதில்லை. கள்ளுத் தவறணை, சந்தையில் கொஞ்சம் மீன் கொண்டு சென்று குடித்துத் தின்றுவிட்டு நிறைமாதக் கர்ப்பிணி கூட பஸ்சில் இவரிற்கு எழுந்து இடம்குடுக்கும் வகை அமைந்திருந்த தனது கள்ளுத் தொந்தியினைத் தள்ளியபடி வருவார். ஒரு தடவை பேய் ஒன்று மாட்டு வண்டியில் தன்னை ஏற்றிப் போனதாய் அவர் சொன்ன தத்ரூபமான கதை நினைவில் வந்து போகிறது.

கட்டுவரம்பில் போன இறுதி ஊர்வலங்கள். முகங்கள் தெரியாது பதிவாகியிருந்த தடங்களில் இன்று முகங்களைப் பார்க்க முடிகிறது. என்னைத் துரத்திய எத்தினை நாய்கள், இப்போதும் கலைத்து வருகின்றன ஆனால் அவற்றால் பல்லுப் பூட்ட முடியவில்லை. அதனால் நின்று நிதானமாய் அவற்றின் உடலசசை உற்று நோக்கிப் பிரமித்துப் போகிறேன். பரமேஸ்வரியக்காவின் நாய் இப்போதும் சற்றுப் பயப்படுத்தவே செய்கிறது. காதில் இரைச்சல் சற்றும் குறையாது தொடர்கிறது. அவதானிக்கத் தவறிய ஒலிகளையும் அவதானிக்க முடிகிறது. இரைச்சல் சுதியாகி எத்தனையோ சங்கதிகள் நேரம் மாயை என்பதாய் இன்றைய உடலிற்குள் அன்றைய காட்சிகளை அவிழ்த்துக் கொண்டிருக்கின்றன.

புவனேஸ்வரிச் ரீச்சரும் ராசேஸ்வரிற் ரீச்சரும் ஒன்றாகவே பள்ளிக்கு நடந்து வருகிறார்கள். அசோகன் அண்ணா, மருத்துவபீடம் கிடைத்திருந்தும் சந்தையில் மாம்பழம் விற்று மீண்டுகொண்டிருக்கிறார். றுக்மன் அண்ணாவின் ஜேர்ணி மினிபஸ் இன்று பிந்திப் போய்க்கொண்டிருக்கிறது. சிவப்பிரகாசமண்ணை திருஞான சம்பந்தரோ என்று பார்ப்பவர் எண்ணும் வகை புட்போட்டில் நிற்கிறார். செல்வம் அண்ணை, இவர் வேகமாய் வண்டியோட்டுவாரா என்று பார்ப்பவர் நினைக்கும் ஒரு அப்பாவி முகத்தோடு இப்போதைக்கு மெதுவாய் ஓட்டிக்கொண்டிருக்கிறார். கொடிகாமத்தில் 'எண்ணாயிரத்து நூறு' இவர் போற நேரத்திற்கு வெளிக்கிட்டால், கதை பிறகு வேற மாதிரிப் போகும். ஜோசப் மாஸ்ற்றர் பெடியளின் தலையில் குட்டுவதற்கு ஒருகையினைத் தயார்ப் படுத்தி வைத்தபடியே சைக்கிளைக் கட்டுவரம்பில் ஏற்றுகிறார். 

ஹெட்-ரீச்சர் குடையினை மறக்காது எடுத்தபடி பள்ளிக்குக் கண்டி வீதியால் நடந்து போய்க்கொண்டிருக்கிறார். மிருசுவில் றோமன் கத்தோலிக்க மகாவித்தியாலத்திற்குள், இலங்கநாயகம் ரீச்சரின் வகுப்பு என்றைக்கும் போல சுவர்க்கமாய் நடந்து கொண்டிருக்கிறது. பக்கத்தில் உமையம்மா ரீச்சரின் வகுப்பில் நரகம் அப்படியே இருக்கிறது. ஏகாம்பரண்ணை கடையைத் திறக்கிறார். பெயர் எனக்கு மறந்துபோன ஒருவர் பாண் வாங்கிப் போகிறார். காட்டுக் கொய்யா மரத்தில் பழுத்த பழம் கொந்தப் படாது கிடைப்பது அபூர்வம். அப்டி ஒரு அபூர்வ பழத்தினை எனக்கு ஒரு முறை தந்த அந்தக் கொய்யா மரம், போஸ்ற் ஆபீசுக்குப் பகத்தில் நின்று தலையசைக்கிறது. ட்றெயின் ஸ்டேசனைக் கடந்து அரசரட்ணம் அண்ணையின் வீட்டு வேலியில் சீமைக்கிழுவை பூத்துக் குலுங்குகிறது. அந்தப் பூவின் நறுமணத்தின் பிரமிப்பு எப்போதும் போல் என்னைச் சிலிர்க்கச் செய்கிறது. சீடி track மாறியதுபோலத் திடீரென அரசரட்ணம் அண்ணை வீட்டிற்குள் காலம் ஒரு தசாப்தம் பின்னால் செல்கிறது. ஒரு குழந்தை முற்றத்தில் காலைக்கடன் கழித்துக் கொண்டிருக்கிறது. ஒரு மலையக பணிப்பெண் தேமா இலை கொண்டு அது கழித்ததை எடுத்துக் குப்பைக்குள் போடுகிறாள். ஒரு கார் விரைந்து வருகிறது. குளத்தில் தாமரைக் கொடியில் சிக்கி உயிர் நீத்த ஜனா அண்ணாவின் உடல் வெளியே எடுக்கப்படுகிறது.

'ஏஸ்' அண்ணை வெள்ளை ஜீன்சும் வெள்ளைச் சேட்டும் போட்டு கிளீன் சேவெடுத்துச் சைக்கிளில் சந்திக்கு வந்து சைக்கிளைப் பூட்டிவிட்டு சென்பற்றிக்ஸ் செல்ல பஸ்சுக்குக் காத்திருக்கிறார். வசந்தன் அண்ணையும் பயஸ் அண்ணையும் வௌ;வேறு பாசறைகளால் விடுமுறையில் வந்திருக்கிறார்கள். விலாசம் அண்ணை இப்போதைக்குச் சென்றல் கல்லூரிக்குப் போய் வருகிறார். கேடி அண்ணையின் வங்கி வாகனம் காற்றாய்ப் பறந்து மறைகிறது. இந்த அண்ணை மாரின் வயதொத்த அக்காமார். த்திரிசா, நயன்தாரா, இலியான, சிறீதிவ்வியா எல்லாம் பிச்சை வாங்க வேண்டிய பிரமாத படைப்புக்கள் எத்தனை எத்தனை. அவரவரிற்கே உரிய தனித்துவமான திமிரிடுடன் அவர்கள் நடந்து கொண்டிருக்கிறார்கள். மீராக்கா பாங் வேலைக்குப் போய்க்கொண்டிருக்கிறார். சிவா அண்ணை எங்கையோ அவசரமாய் ஹொண்டா 200ல் போகிறார். தாசன் அண்ணையின் ற்றாக்ற்றர் பெட்டியிருந்தும் புலிபோல் பாய்கிறது—அவர் கறுத்த முகத்தின் சிவந்த கண்ணகள் எப்போதும் போல் ரெத்தச் சிவப்பாய் இருக்கிறது. ரஞ்சன் அண்ணையும் பகீரதனும் ஓல்ட்பார்க் முதல் பச்சில் பயிற்ச்சி எடுப்பதற்கு இன்னமும் சற்று நாளிருக்கிறது. இப்போதைக்கு மிருசுவிலில் புளொட்டும், உசனிற்குள் புலிகளும், அங்கங்கே ரெலோவும், போக்கட்டியில் மட்டும் கொஞ்சம் 'ரெலா'வுமாக இயக்கம் தெரிகிறது. 

கே.எஸ்.றாஜா வந்து நிகழ்ச்சி செய்கிறார். பபி அக்கா 'அன்னை என்னும் ஆலயம்' பாடல் பாடி இறங்குகிறார். உசன் கந்தனிற்குக் கொடியேற்றத் தெல்லிப்பளையில் இருந்து சுந்தர் ஐயா வந்திருக்கிறார். சபா மழலை மாறாது மந்திரம் சொல்லிப் பக்த்தகோடிகளிற்கு மலைப்பேற்படுத்துகிறான். அதற்குள் தீர்த்தம் வந்துவிடுகிறது. கேதி ஐயா உடல் நடுங்கக் கும்பம் சுமந்து செல்லுகிறார். கானமூர்த்தி பஞ்சமூர்த்தி, பஞ்ஞாபிகேசன், கைதடிக் கூட்டம் என்று மேழமும் நாதசுரமும் வானைப் பிழக்கிறது. கட்டாக்காலி காலமாதலால் வயலில் கிறிக்கெட்டும் விளையாடப்படுகிறது. வரதன் அன்ணையும் முகுந்தன் அண்ணையும் கன்னைத் தலைவர்களாக ஊர்ப்பெடியளைப் பிரித்து விளையாடுகிறார்கள். ரெலோவும் புலியும் என அத்தருணத்தில் அந்தக்கன்னைகள் அழைக்கப்படவில்லை. வரதன் அண்ணை அடித்த பந்தை பவுண்டரி லைனில் பிடித்து ஸ்ரம்சை நோக்கிக் குறிபார்த்து எறிந்து வரதன் அண்ணையினை றண்ணவுட் ஆக்கிவிட்டு முகுந்தன் அண்ணை தன்னைத் தானே ரசித்தபடி வயலிற்குள் சிரித்தபடி விலாசம் காட்டிக் கொண்டிருக்கிறார்.

சிவலிங்கம், தான் பள்ளி விட்டு வீடு செல்லைகயில் வளியில் ஆட்காட்டி முட்டை எடுத்துக் குடித்துச் செல்வேன் என்கிறான். அவனது கதை, சாகசநாவலாய்ப் பதிகிறது. காலம் ஒரு தசாப்த்தம் முன்நோக்கிப் பாய்கிறது. சிவலிங்கத்தின் அண்ணை ஈ.பீ.ஆர்.எல்.எப் இயக்கதவர் என்பதனால் சுடப்பட, புலிகளிற்கு எதிராய் இந்திய இராணுவத்தோடு சேர்ந்து சிவலிங்கம் சாவகச்சேரியில் ஈ.பீ பேப்பர் விற்றுக்கொண்டிருக்கிறான். காட்சி கசத்ததால் நேரம் பிற்செல்கிறது. குலசிங்க மாஸ்ட்டர் அடித்தது தப்பென்று அவரிற்கு அடிப்பதற்காய் கஜந்தி அண்ணை கட்டுவரம்பில் காத்து நிற்கிறார். ஒருவாறு செல்வச்சந்திரன் மாஸ்ற்றரும் ஜோசப் மாஸ்ற்றரும் குலசிங்க மாஸ்ற்றரைக் காப்பாத்திக் கூட்டிச் செல்கின்றனர். வசந்தன் அண்ணைக்கும் பத்மாக்காக்கும் மீனில் ஆரம்பித்த சண்டை வாழ்வெட்டாய் மாறி ஒரு நாளைச் சாகசமாக்குகிறது. பற்றிமாக்காவின் மகள் தனது பிறந்த தினத்திற்கு என்று வகுப்பிற்கு சாக்கிளேட் கொண்டுவர, விரதம் என்று கூறி புனேஸ்வரிற்ரீச்சர் எடுக்கவில்லை. தொடர்ந்து வகுப்பில் முக்காவாசி மாணவர்கள் விரதம் என்று கூறி ஆசிரியரைப் பின்பற்றினர். எதனால் தனது பிறந்த தினத்திற்கு அத்தனை பேர் விரதமிருக்கிறார்கள் என்பது நிச்சயம் அந்தக் குழந்தைக்கு அன்று அதன் வீட்டில் புரியவைக்கப்பட்டிருக்கும். ஏழாம் வகுப்புப் படிக்கும் போதே கிருசாந்திக்குக் கலியாணம் செய்து வைத்துவிட்டார்கள். 

நத்தார் தாத்தா ஒருபுறமும் திருவெம்பா பஜனை ஒருமுறமுமாய் டிசெம்பரானதால் ஊரின் பெடியங்கள் எல்லாவீட்டுக்கும் போகிறார்கள். இடையில் ஊரில் இருந்த ஐந்திற்கும் குறைவான புரோட்டஸ்டாண்ட் குடும்பத்தவர் வேறு மத்தவரையும் சேர்த்துத் தமக்கும் ஒரு கரோலினை நடாத்தி முடிக்கின்றனர்.
ஜோன்பின்ளை மாஸ்ரரின் மகன் அசோகா ஹொட்டலிற்குள் தொண்டர் படைக்காக வலுக்கட்டாயமாய் பிடிக்கப்படுவதற்கு இன்னமும் நாளிருக்கிறது. இந்திரா அண்ணையின் புதிய வீட்டிற்கான அத்திவாரம் சிறீகாந்தன் மாஸ்ரரின் ரியூசன் மாணவர்களிற்குப் பலவகைகளில் உதவியாய் இருக்கிறது. ரியூசனில் சரஸ்வதி பூசை நடக்கிறது. 'மாமரத்துப் பூவெடுத்து மஞ்சம் ஒன்று போடவா' பாட்டு அப்போது பிரபலமாக இருக்கிறது. சிறீகாந்தன் மாஸ்ரரின் ரியூசன் கொட்டிலின் கூரையின் சிலாகையில் 'செல்டன் லவ் ..' என்று ஒரு பெண் பெயர் எழுதப்பட்டிருக்கிறது. சிறீகாந்தன் மாஸ்ரர் எடே அது 'செல்ட்டன் லவ்ஸ்' என்று வந்தாலே கிறமர் சரியாய் இருக்கும் என்று கூறி நக்கலாய்ச் சிரிக்கிறார்.

இன்றைய உசன் மிருசுவிலிற்குத் தெரியாத மேலும் எத்தனையோ கதைகளின் தடங்கள் அந்தக் காற்றில் இன்னமும் அப்படியே தடங்களாய் இருக்கின்றன. டி.வீ.டி ஒன்றினை பார்ப்பது போல அனைத்துக் கதைகளையும் பார்க்க முடிகிறது. உலகின் வானமனைத்தும் தொடுத்து நிற்பதால் பல்லாயிரம் மைல்கள் தொலைவில் இருந்தும் என்னால் இந்தத் தடங்களைப் பார்க்க முடிகிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்னுமொருவனின் நினைவுத் தடங்கள் மறையாமல் அப்படியே இருப்பது பிரமீப்பூட்டுகின்றது.

Link to comment
Share on other sites

நன்றி கிருபன் மற்றும் நந்தன் உங்கள் வருகைக்கும் கருத்திற்கும்.

துருக்கிய எழுத்தாளர் ஓர்கான் பாமுக் ஓருமுறை பேட்டியொன்றில் குறிப்பிட்ட ஒரு விடயம் நினைவில் வர அதை இன்ஸ்ப்பிறேசனாக எடுத்து எழுதியது தான் இது. ஓர்கான் பாமுக்கின் கதைகளில் இஸ்த்தான்புல் நகரும் அதன் வாழ்க்கையும் அக்குவேறு ஆணிவேறாக பிரித்து மேயப்பட்டிருக்கும். அவர் சொல்கிறார், தான் இருட்டில் தான் நகரத்தை வாசிப்பேன் என்று. ஊரடங்கிய பின்னர், தனியே நடந்து செல்வாராம். அன்றைய நாளின் தடங்களை தன்னால் இரவில் உணரக்கூடியதாய் இருக்கும் என்கிறார். அந்தவகையில், எனது குழந்தைப் பராயத்தின் எத்தனை பங்கு என்னில் பதிந்திருக்கிறது என்பதைப் பரிசோதிப்பதற்காகவே இதை எழுதினேன். எழுதிக்கொண்டிருக்கும் போது தான் எத்தனை பாத்திரங்கள் அவை ஒவ்வொன்றினதும் கதைகள் எத்தனை என்பது என்னை மலைப்பேற்றியது. 

ரசனை ஒரு போதை, வாழ்வு அளவின்றி இந்தப் போதைப்பொருளைக் கட்டவிழ்த்துக் கொண்டே இருக்கிறது. என்ன, வாழ்வுப் போராட்டம் பல நொடிகளை நமக்குப் பிடிக்காத விடயங்களில் செலவிடுவதை அவசியமாக்கி வைத்துள்ளது.


 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மிருசுவில் ஞாபகம் வந்தது,கேடில்ஸ் ஞாபகம் வந்தது பெரிசில்லை....அத்தோடு சேர்த்து திரிசாவும்,நயனுமாம்[அந்தக் காலத்திலேயே]...எங்கேயோ இடிக்கேல்ல

Link to comment
Share on other sites

 

சங்கரப்பிள்ளை ஏற்றத்தில் இறங்கி நடந்து வந்து படித்த மகளீர்திட்டம் உசன் எல்லா இடமும் திரிந்த ஒரு காலமும் நினைவில் வருகிறது. லக்சபானா டவர்களில் ஏறியும்  வயல் பிள்ளையார் (மருதடி) என ம்ம்ம் 

அந்த பேக்கரி எப்படி இருக்கோ ... 

 

உங்கள் மொழி கலைத்துப்போட்டு நன்றாக இருக்கிறது.

ஒரானின் என் பெயர் சிகப்பு நாவலை மூன்று தரம் வாசிக்க எடுத்து எடுத்து வைத்துவிட்டேன். இஸ்தான்புல் வாசிக்கணும்... 

நினைவுகளைத் தூண்டியமைக்கு நன்றிகள் 

Link to comment
Share on other sites

ரதி,
காட்சிகள் முன்னரே பதியப்பட்டுவிட்டன.  காட்சி பதியப்பட்டபோது சிறீதிவ்வியா சிறீதிவ்வியாவாக இருக்கவில்லை. ஆனால் பதியப்பட்ட பழைய காட்சியினை இன்று பார்க்கும் போது, இடையில் சிறீதிவ்வியாவையும் நாம் பார்த்திருந்ததால், ஒப்பீடு இயல்பானது. ஏனெனில் பார்வையாளன் பழைய காட்சிகளைப் புதிதாக (ஒரு அல்பம் பார்ப்பது போல்) திருப்பிப் பார்த்துக் கொண்டிருக்கிறான். 

எப்பவாவது பழைய அல்பங்களைப் புரட்டிப் பாhத்துக் கொண்டிருக்கும் போது இவ்வாறான அனுபவம் உங்களிற்கு ஏற்பட்டதில்லையா? நயனும் த்திரிசாவும் காட்சியில் பதியப்ட்டில்லை, பார்வையாளனின் கிரகிப்பின்போது மட்டுமே வந்து போனார்கள்.

நன்றி நெற்கொழுதாசன் உங்கள் ஞாபகங்களையும் பகிர்ந்துகொண்டமைக்கு.

Link to comment
Share on other sites

இதை மண்மணம் அறியாத ஒருவர் வாசித்திருந்தால் பிதற்றுகிறான் என்றிருப்பார். ஆனால் பிதற்றல்கள் மனதின் பிளிறல்கள் என்பது வலிமிகுந்த எமது சமூகத்திற்கே உரியது.

தொடர்ந்து எழுதுங்கள், வாழ்த்துக்கள் 
 

Link to comment
Share on other sites

On ‎6‎/‎02‎/‎2016 at 10:28 AM, Innumoruvan said:

உலகின் வானமனைத்தும் தொடுத்து நிற்பதால் பல்லாயிரம் மைல்கள் தொலைவில் இருந்தும் என்னால் இந்தத் தடங்களைப் பார்க்க முடிகிறது.

காலவோட்டங்கள் கடந்தகாலம் பற்றிய கற்பனைகள் மனதுக்கு இதமானவை. அதே கடந்த காலத்திலும் துன்பியல் சம்பவங்கள் நடந்திருந்தாலும் மனம் selective processing செய்வது விசித்திரமானது.

எனது காதலி இலங்கையிலும் நான் அவுசிலும் இருக்கும்போது இலங்கையில் விடியுமட்டும் பார்த்துக் கொண்டிருப்பேன். பின்னர் அவளுக்குத் தொலைபேசி சொல்லுவேன் வெளியே வந்து சூரியனைப் பார் என்று. பின்னர் சொல்லுவேன் நான் பார்க்கும் சூரியனைத்தானே நீயும் பார்க்கிறாய் என்று. கிட்டத்தட்ட இருவரையும் இணைக்கும் சட்டலைட் போன்று சூரியன் எனக்குத் தோன்றியதுண்டு. உங்கள் வரிகளை வாசித்தபோது அந்த நினைவு வந்து போனது.

Link to comment
Share on other sites

எத்தனை எத்தனை நினைவுகள். வாசிக்க வாசிக்க, வரிகளுக்கிடையில் என் ஊரின் காட்சிகளின் நினைவுப் படிமங்களும் எனக்குள் வந்து வந்து சென்று, வாசித்து முடிக்க நீண்ட நேரம் எடுத்தது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பார்க்கப் பார்க்க மூளையைக் குடையும் பிக்காஸோ ஓவியம் போல் , இன்னுமொருவனின் எழுத்துக்கள் நின்று, நிறுத்தி,நிதானமாக வாசிக்க வைக்கின்றன. அதில்தான் சுவாரஸ்யத்தையும் கலந்து விடுகின்றீர்கள்...!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அக்கரைப் பச்சையை நோக்கிய பயணம் நிறைவுற்ற பின்னர் இக்கரையைத் திரும்பிப் பார்க்க வைக்கின்றது.... இன்னுமொருவனின் தடங்கள்!

இப்போதெல்லாம் இக்கரை... அக்கரையிலும் பச்சையாகத் தோன்றுகின்றது!

எனினும் 'தடங்கள்' மறை பொருளாகவேனும் இன்னும் அழியாமல் இருக்கின்றன என்பது கண்டு மிக்க மகிழ்ச்சி!

நன்றி.. இன்னுமொருவன்! 

Link to comment
Share on other sites

நல்லதொரு நினைவு மீட்பு .

வயது போக போகத்தான் பழைய நினைவுகள் குறிப்பாக பாடசாலை ,கிராமம் ,காதல்கள் எல்லாம் திரும்ப திரும்ப வருகின்றது .

படிப்பு ,வேலை ,கல்யாணம்,பிள்ளைகள் வளர்ப்பு என்று ஒருநிமிடம் நின்று நிதானிக்க வழியிலாமல் ஓடுவதால் எதையும் அசை போடக்கூட நேரம் கிடைப்பதிக்ல்லை .

சற்று ஓய்வு பெறும் நிலைக்கு வாழ்க்கை வரும்போது பழைய நினைவுகள் தான்  கனவிலும் நினைவிலும் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்னுமொருவன்! சுயசரிதை மாதிரி இருக்கின்றது. பழைய நினைவுகள் மனதை தாலாட்டும் போது அதன் சுகமே தனி...

உசன் மிருசுவில் ஒரு இடமா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அருமையான நினைவுப்பதிவு

"வயது போக போகத்தான் பழைய நினைவுகள் குறிப்பாக பாடசாலை ,கிராமம் ,காதல்கள் எல்லாம் திரும்ப திரும்ப வருகின்றது"

 "ழைய நினைவுகள் மனதை தாலாட்டும் போது அதன் சுகமே தனி"

அருமை

Link to comment
Share on other sites

சுவி,சுவைப்பிரியன், புங்கையூரான், சுபேஸ், தும்பளையான், அர்யுன், குமாரசாமி, கொளும்பான் மற்றும் நிழலி நன்றி உங்கள் கருத்துக்களிற்கு.

தும்பளையான் உங்கள் சூரியன் பற்றிய குறிப்பு அழகாய் இருக்கிறது—அலைவரிசை ஒத்திருப்பதை முன்னரும் அவதானித்துள்ளேன். துன்பியல் சம்பவங்களை மனது ஒதுக்கியிருப்பதாய்க் குறிப்பிட்டுள்ளீர்கள். அது பொதுவில் உண்மைதான் என்றபோதும், இப்பதிவில் போரைப் பேசாவிடினும் ஆகக்குறைந்தது எட்டுத் துன்பியல் சம்பவங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன. முழுப்பதிவும் ஒரு பார்வையாளர் தொனியில் அதிகபட்சம் அனொட்டேசன்களை மட்டும் உள்ளடக்கி எழுதியதால் உணர்வுகள் மற்றும் கருத்துக்களை முன்வைக்கவில்லை. அவை வாசகரிடம் விடப்பட்டுள்ளது.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • Published By: DIGITAL DESK 3   29 MAR, 2024 | 09:47 AM   உலகில் வாழும் கிறிஸ்தவர்கள் இன்று யேசுக்கிறிஸ்துவின் பாடுகள், மரணத்தை நினைவு கூர்ந்து புனித வெள்ளியை அனுஷ்டித்து வருகின்றனர். இயேசுவின் மறைவு புனித வெள்ளியாக இன்று அனுசரிக்கப்படுகிறது. அவர் உயிர்த்தெழுந்த நாள் 'ஈஸ்டர்' ஞாயிறாக அனுஷ்டிக்கப்படுகின்றது. யேசுக்கிறிஸ்து இறந்தது துக்க நிகழ்வு என்றாலும், அதனால் மனித குலத்திற்கு விளைந்த நன்மைகளை வைத்தே 'புனித வெள்ளி' என்றழைக்கின்றனர் கிறிஸ்தவர்கள். வரலாற்றில் முக்கிய நிகழ்வான இயேசு கிறிஸ்துவின் பாடுகள், மரணம், உயிர்ப்பை உலகளவில் கிறிஸ்தவர்கள் நினைவு கூர்ந்து வருகின்றனர். அந்தவகையில் இயேசு கிறிஸ்து உயிர்விட்ட நாளை இன்று உலகிலுள்ள அனைத்து கிறிஸ்தவர்களும் இன்று 'பெரிய வெள்ளி'யாக நினைவு கூருகின்றனர். பெரிய வெள்ளி, புனித வெள்ளி, Good Friday என்று சொல்லும் போதே இயே­சுவின் மர­ணம் தான் சர்வ உலக மக்களின் நினை­விலும் வரும். அந்த நாளுக்கு பெரி­ய­வர்கள் அல்­லது முன்­னோர்கள் சரி­யாக பெய­ரிட்­டுள்­ளனர். நல்ல வெள்ளி, புனித வெள்ளி, எல்லா வெள்­ளி­க­ளிலும் பெரிய வெள்ளி என்று மிகவும் பொருத்­த­மா­கவே பெய­ரிட்­டுள்­ளனர். ஆனால், அந்த பெயர்­களின் அடிப்­ப­டையில் அந்த நாள் அனுஷ்­டிக்­கப்­ப­டு­கின்­றதா என்று கேட்டால் இல்லை என்­றுதான் சொல்­ல­வேண்டும். ஒரு கெட்ட மனி­த­னு­டைய மர­ண­மா­யி­ருந்­தாலும் அதற்கு அனு­தா­பப்­ப­டு­கிற உல­கமே நாம் வாழும் இவ்­வு­லகம். ஒரு மனி­த­னுக்கும் தீங்கு நினை­யாமல் எல்லா மனித வாழ்­விலும் நன்மை செய்த தேவ­கு­மாரன் இயே­சுவின் மரண நாளுக்கு வைக்­க­வேண்­டிய பெயரை வைக்­காமல் அந்த நாளுக்கு நல்ல நாள் என்றும், புனித நாள் என்றும், பெரிய நாள் என்றும் ஏன் பெய­ரிட்­டார்கள்? ஆம் பிரி­ய­மா­ன­வர்­களே, இந்த நாள் உல­கத்­தி­லுள்ள எல்லா மனி­தர்­க­ளுக்கும் நல்ல நாள். ஏனென்றால், ஜீவ கால­மெல்லாம் மரண பயத்­தி­னாலே அடி­மைத்­த­னத்­திற்­குள்­ளா­ன­வர்கள் யாவ­ரையும் விடு­தலை பண்­ணும்­ப­டிக்கு தேவ­கு­மா­ரனாம் இயேசு சர்­வத்­தையும் படைத்­தவர், சர்­வத்­தையும் ஆளுகை செய்ய வேண்­டி­யவர். பிள்­ளைகள் மாமி­சத்­தையும் இரத்­தத்­தையும் உடை­ய­வர்­க­ளா­யி­ருக்க அவரும் நம்­மைப்போல் மாமி­சத்­தையும் இரத்­தத்­தையும் உடை­ய­வ­ராகி மர­ணத்தின் அதி­ப­தி­யா­கிய பிசா­சா­ன­வனை தம்­மு­டைய மர­ணத்­தினால் அழிக்கும் படிக்கும், நம்மை மரண பயத்­தி­லி­ருந்து விடு­விக்­கும்­ப­டிக்கும் மர­ணத்­துக்­கே­து­வான ஒன்றும் அவ­ரிடம் காணப்­ப­டாத போதும், மரணம் மனித வாழ்வில் பயத்­தையோ அடி­மைத்­த­னத்­தையோ கொடுக்­கக்­கூ­டாது என்று காண்­பிக்கும் படிக்கும் மர­ணத்தை ஏற்றுக் கொண்டார். பிரி­ய­மா­ன­வர்­களே, இந்த உலகில் வாழும் எல்லா மனி­த­னுக்கும் மரணம் என்­பது மாமி­சத்­துக்கும் இரத்­தத்­துக்­கும்தான். நம்­மு­டைய ஆவி, ஆத்­து­மா­வுக்­கல்ல. சரீ­ரத்தில் இரத்த ஓட்டம் நின்று சரீரம் செய­லற்றுப் போவ­துதான் மரணம். எனவே பரி­சுத்த வேதா­கமம், ‘ஆத்­து­மாவைக் கொல்ல வல்­ல­வர்­க­ளா­யி­ராமல், சரீ­ரத்தை மாத்­திரம் கொல்­லு­கி­ற­வர்­க­ளுக்கு நீங்கள் பயப்­பட வேண்டாம்; ஆத்­து­மா­வையும் சரீ­ரத்­தையும் நர­கத்­திலே அழிக்க வல்­ல­வ­ருக்கே பயப்­ப­டுங்கள்’ (மத் 10:28) என்று சொல்­கி­றது. மேலே சொல்­லப்­பட்­ட­து­போல மரண பயத்­தினால் பிசா­சா­னவன் யாவ­ரையும் அடி­மைப்­ப­டுத்­தி­யி­ருந்தான். நம் இயேசு சிலுவை மர­ணத்தை ஏற்றுக் கொண்டு உல­கி­லுள்ள எல்லா மனி­தர்­க­ளுக்கும் ‘இவ்­வு­லகில் மரணம் என்­பது வெறும் சரீ­ரத்­திற்கே சொந்­த­மா­னது’ என்ற உண்­மையை தெளி­வு ­ப­டுத்­தினார். எனவே உல­கத்­தி­லுள்ள எந்த மனு­ஷனும் மனு­ஷியும் இயே­சுவின் மர­ணத்தை ஏற்றுக் கொள்ளும் போது, மரண பயத்­திற்கு நீங்­க­லாகி பிசாசின் அடி­மைத்­த­னத்­திற்கு நீக்­க­லாக்­கப்­ப­டு­கி­றார்கள். ஆக­வேதான் அதை நல்ல வெள்ளி (Good Friday) என்று உலகம் அழைக்­கி­றது. அடுத்து புனித வெள்ளி என்று ஏன் சொல்­லு­கிறோம்? தேவன் மனி­தனை தம்­மைப்போல் வாழும்­ப­டி­யாயும், பரி­சுத்த சந்­த­தியை உரு­வாக்­கும்­ப­டி­யாயும் படைத்தார். ஆனால் முதல் மனிதன் ஆதாமின் கீழ்­ப­டி­யாமை, மீறு­த­லினால் உல­கத்தில் பாவம் வந்­தது. எல்லா மனி­தர்­க­ளையும் பாவம் ஆளுகை செய்­தது. ஒரு மனித வாழ்­விலும் புனிதம் (பரி­சுத்தம்) இல்லை. பாவம் கழு­வப்­ப­ட­வில்லை. ‘இரத்தம் சிந்­து­த­லினால் மாத்­தி­ரமே பாவப்­பி­ரா­யச்­சித்தம் உண்டு’ என்­பது உலகில் வாழும் அநே­க­மானோர் ஏற்றுக் கொள்ளும் ஒன்று. ஆகவே, தேவ­னு­டைய ஆதி விருப்­பத்­தின்­படி இயேசு சிலு­வையில் சிந்­திய இரத்தம் மாத்­தி­ரமே மனித வாழ்வின் பாவத்தை கழுவி பரி­சுத்­த­மாக்­கி­யது. இரண்டாம் ஆதாம் என்று அழைக்­கப்­படும் இயே­சுவின் கீழ்­ப­டிதல், தாழ்­மையின் மூலம் உலகில் கிரு­பையும், சத்­தி­யமும் வந்­தது. யார் இயேசு மூலம் வந்த கிரு­பையைக் கொண்டு சத்­தி­யத்தை பின்­பற்­று­கி­றார்­களோ அவர்கள் வாழ்வில் கீழ்­ப­டிவும், தாழ்­மையும் காணப்­படும். இயே­சுவின் கீழ்­ப­டிவும் தாழ்­மையும் முழு­மையாய் கல்­வாரி சிலு­வையில் காட்­டப்­ப­டு­கி­றது. இயேசு அங்கே சிந்­திய இரத்­தத்­தி­னால்தான் நாம் பரி­சுத்­த­மாக்­கப்­பட்டோம். ஆக­வேதான் புனித (பரி­சுத்த) வெள்ளி என்று அந்நாள் போற்­றப்­ப­டு­கி­றது. பிரி­ய­மா­ன­வர்­களே, எத்­த­னையோ வெள்­ளிக்­கி­ழ­மைகள் இருக்க இந்­நாளை மட்டும் ஏன் பெரிய வெள்ளி என்று சொல்­கிறோம்? இந்த நாள் மனித வாழ்வில் மரண பயத்தை நீக்கி, அடி­மைத்­தன நுகத்தை முறித்து, மனித வாழ்வில் சாப­மாக வந்த பாவத்தைக் கழுவி, ஆசிர்­வா­தத்தை உண்­டாக்கி, மனி­தனை சிந்­தனை செய்ய வைத்த நாள். இது துக்­கத்தின் நாளும் அல்ல, சந்­தோ­ஷத்தின் நாளும் அல்ல. இது அர்ப்­ப­ணிப்பின், தீர்­மா­னத்தின் நாள். இயே­சுவின் மர­ணத்தில் நம்மை பங்­குள்­ள­வர்­க­ளாக்கும் நாள். நம்­மு­டைய பாவ, சாப, தரித்­திர, மரண வல்­ல­மையை முறி­ய­டித்த நாள். நாம் நம் இயே­சுவின் மர­ணத்தை ஏற்று அதில் நாம் பங்­கு­டை­ய­வர்­க­ளா­கிறோம் என்­ப­துதான் நம் வாழ்வில் நாம் எடுத்த தீர்­மா­னங்­களில் மிகவும் பெறு­ம­தி­யான, விலை­ம­திக்க முடி­யாத தீர்­மானம். நம் வாழ்வில் நாம் எடுக்கும் வெற்றியான தீர்மானத்தின் நாள்தான் நம் வாழ்வின் பெரிய நாளாய் இருக்கும். ஆகவே, இந்த நாள் நல்ல, புனித, பெரிய நாளாய் என் வாழ்வில் அமைந்துள்ளது. உங்கள் வாழ்விலும் அமைய இயேசுவோடு கூட நீங்கள் சிலுவையில் அறையப்பட உங்களை ஒப்புக் கொடுக்கும் தீர்மானம்; உங்கள் பாவ, சாப, பலவீனங்களை சிலுவையில் அறைந்து இயேசுவின் தேவ, தூய பண்புகளை உங்கள் வாழ்வில் கொண்டு வரும். இந்நிலையில், இலங்கையைப் பொருத்தவரையில் மக்கள் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகின்ற நிலையில், கிறிஸ்தவர்கள் புனித வாரத்தை அனுஷ்டிக்கின்றனர். மக்கள் தற்போது எதிர்நோக்கியுள்ள இன்னல்களில் இருந்து விடுபட அனைவரும் பிரார்த்திப்போமாக ! சிலுவையைப் பெற்றுக் கொள்வோம்! ஜெயமாய் வாழ்வோம்! ஆமென்! பெரிய வெள்ளிக்கிழமையை முன்னிட்டு கொழும்பு-13 புதுச்செட்டித் தெரு புனித வியாகுல மாதா ஆலயத்தில் யேசுவின் பாடுகளை நினைவு கூர்ந்து சிலுவைப்பாதை இடம்பெற்றதை படங்களில் காணலாம். (படப்பிடிப்பு :- ஜே.சுஜீவகுமார்) https://www.virakesari.lk/article/179948
    • கணேசமூர்த்தியின் இந்த விபரீத முடிவுக்கு வைகோ தான் காரணம்..!  
    • ஓயாத நிழல் யுத்தங்கள்-5 வியட்நாம் கதை இரண்டாம் உலகப் போரின் பின்னர், இரு துருவங்களாகப் பிரிந்து நின்ற உலக நாடுகளில், இரு அணுவாயுத வல்லரசுகளின் நிழல் யுத்தம் பனிப்போராகத் தொடர்ந்தது. அந்தப் பனிப்போரின் மையம், அண்டார்டிக் கண்டம் தவிர்ந்த உலகின் எல்லாக் கண்டங்களிலும் இருந்தது. தென்கிழக்கு ஆசியாவில், உலக வல்லரசுகளின் பனிப்போரின் தீவிர வடிவமாகத் திகழ்ந்த வியட்நாம் போர் பற்றிப் பார்ப்போம். வியட்நாம் மக்களின் வரலாற்றுப் பெருமை பொதுவாகவே ஆசியக் கலாச்சாரங்களில் பெருமையுணர்வு (pride) ஒரு கலாச்சாரப் பண்பாகக் காணப்படுகிறது. வியட்நாமின் வரலாற்றிலும் கலாச்சாரத் தனித்துவம், தேசிய அடையாளம் என்பன காரணமாக ஆயிரம் ஆண்டுகளாக அதன் அயல் நாடுகளோடு போராடி வாழ வேண்டிய நிலை இருந்திருக்கிறது. பிரதானமாக, வடக்கேயிருந்த சீனாவின் செல்வாக்கிற்கு உட்படாமல் வியட்நாமியர்கள் தனித்துவம் பேணிக் கொண்டிருந்தனர். ஆனால், வியட்நாம் என்பது ஒரு தேசிய அடையாளமாக திரளாதவாறு, மத, பிரதேச வாதங்களும் அவர்களுக்குள் நிலவியது. கன்பூசியஸ் நம்பிக்கைகளைப் பின்பற்றிய வட வியட்நாமிற்கும், சிறு பான்மைக் கிறிஸ்தவர்களைக் கொண்ட தென் வியட்நாமிற்குமிடையே கலாச்சார வேறு பாடுகள் இருந்தன. இந்த இரு தரப்பில் இருந்தும் வேறு பட்ட மலைவாழ் வியட்நாமிய மக்கள் மூன்றாவது ஒரு தரப்பாக இருந்திருக்கின்றனர். 19 ஆம் நூற்றாண்டில், ஐரோப்பிய காலனித்துவம் இந்தோ சீனப் பகுதியில் கால் பதித்த போது, வியட்நாம், லாவோஸ், கம்போடியா ஆகிய பகுதிகள் பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் வந்தன. காலனித்துவத்தை எதிர்ப்பதிலும் கூட, வியட்நாமின் வடக்கிற்கும், தெற்கிற்குமிடையே வேறுபாடு இருந்திருக்கிறது. எனினும், பிரெஞ்சு ஆதிக்கத்தை வியட்நாமியர் தொடர்ந்து எதிர்த்து வந்தனர். இரண்டாம் உலகப் போரின் போது, 1945 இல் ஜப்பான் பிரான்சிடமிருந்து இந்தோ சீனப் பிராந்தியத்தை பொறுப்பெடுத்த போது, பிரெஞ்சு ஆட்சியில் கூட நிகழாத வன்முறைகள் அந்தப் பிராந்திய மக்கள் மீது நிகழ்த்தப் பட்டன.   அதே ஆண்டின் ஆகஸ்டில், ஜப்பான் தோல்வியடைந்து சரணடைந்த போது, உள்ளூர் தேசியத் தலைமையாக இருந்த வியற் மின் (Viet Minh) என அழைக்கப் பட்ட கூட்டணியிடம் ஆட்சியை ஒப்படைத்து வெளியேறியது. இதெல்லாம் நடந்து கொண்டிருந்த காலப் பகுதியில், உலக கம்யூனிச இயக்கத்தினால் ஈர்க்கப் பட்டிருந்த ஹோ சி மின் நாடு திரும்பி வட வியற்நாமில் கம்யூனிச ஆட்சியை பிரகடனம் செய்கிறார். இந்தக் காலப் பகுதி, உலகம் இரு துருவங்களாகப் பிரிவதற்கான ஆரம்பப் புள்ளிகள் இடப் பட்ட ஒரு காலப் பகுதி. முடிந்து போன உலகப் போரில் பங்காளிகளாக இருந்த ஸ்ராலினின் சோவியத் ஒன்றியமும், மேற்கு நாடுகளும் உலக மேலாண்மைக்காகப் போட்டி போட ஆரம்பித்த காலம் இந்த 1940 கள் - சீனாவின் மாவோ இன்னும் அரங்கிற்கே வரவில்லை என்பதைக் கவனிக்க வேண்டும். மீண்டும் ஆக்கிரமித்த பிரான்ஸ் கம்யூனிச விரிவாக்கத்திற்கு ஹோ சி மின் ஆட்சி வழி வகுக்கலாமெனக் கருதிய பிரிட்டன், ஒரு படை நடவடிக்கை மூலம் தென் வியட்நாமைக் கைப்பற்றி, தென் வியட்நாமை மீளவும் பிரெஞ்சு காலனித்துவ வாதிகளிடம் கையளித்தது. ஒரு கட்டத்தில், வியட்நாமை பிரெஞ்சு ஆட்சியின் கீழ் இருக்கும் ஒரு சுதந்திர தேசமாக அங்கீகரிக்கும் ஒப்பந்தம் கூட பிரான்சுக்கும், வியற் மின் அமைப்பிற்குமிடையே கைச்சாத்தானது. ஆனால், இந்த ஒப்பந்தத்தின் ஆயுட்காலம் வெறும் 2 மாதம் தான். பிரெஞ்சுப் படைகள் வடக்கை நோக்கி முன்னேற, வியற் மின் பின்வாங்க பிரெஞ்சு வியட்நாம் போர் ஆரம்பித்தது. இந்தப் போரில், முழு வியட்நாமும் பிரெஞ்சு ஆதிக்கத்தை எதிர்க்கவில்லையென்பதையும் கவனிக்க வேண்டும். வியட்நாமின் அரச வாரிசாக இருந்த பாவோ டாய் (Bao Dai), பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் ஒரு தனி தேசமாக வியட்நாம் தொடர்வதை இறுதி வரை ஆதரித்து வந்தார். தொடர்ந்த யுத்தம் 1954 இல் ஒரு சமாதான ஒப்பந்தத்துடன் முடிவுக்கு வந்த போது, லாவோஸ், கம்போடியா ஆகிய நாடுகள் பிரான்சிடமிருந்து சுதந்திரமடைந்தன. புதிதாக வியட்நாம் தலைவராக நியமிக்கப் பட்ட டியெம், தென் வியட்நாமைத் தனி நாடாகப் பிரகடனம் செய்ததோடு, வடக்கில் இருந்த வியற் மின் தரப்பிற்கும், தென் வியட்நாமிற்கும் போர் மீண்டும் மூண்டது. அமெரிக்காவின் வியட்நாம் பிரவேசம் அமெரிக்கா, உலகப் போரில் பாரிய ஆளணி, பொருளாதார இழப்பின் பின்னர் தன் படைகளை இந்தோ சீன அரங்கில் இருந்து வெகுவாகக் குறைத்துக் கொண்டு, ஐரோப்பிய அரங்கில் கவனம் செலுத்தத் தீர்மானித்திருந்தது (இதனால், 50 களில் வட கொரியா தென் கொரியா மீது தாக்குதல் தொடுத்த போது கூட உடனடியாக சுதாரிக்க இயலாமல் அமெரிக்கப் படைகளின் பசுபிக் தலைமை தடுமாறியது). அமெரிக்கா ஏற்கனவே பிரிட்டனின் காலனித்துவத்தில் இருந்து விடுபட்ட ஒரு நாடு என்ற வகையில், அந்தக் காலப் பகுதியில் ஒரு காலனித்துவ எதிர்ப்பு மனப் பாங்கைக் கொண்டிருந்தமையால், பிரெஞ்சு, பிரிட்டன் அணிகளின் வியட்நாம் மீதான தலையீட்டில் பங்கு கொள்ளாமல் விலகியிருந்தது. இத்தகைய காலனித்துவ எதிர்ப்பின் விளைவாக, உலகில் கம்யூனிச மேலாதிக்கம் உருவாகும் போது எதிர் நடவடிக்கையின்றி இருக்க வேண்டிய சங்கடமான நிலை அமெரிக்காவிற்கு. இப்படியொரு நிலை உருவாகும் என்பதை ஏற்கனவே உணர்ந்திருந்த அமெரிக்க வெளியுறவுத் துறையின் அதிகாரியான ஜோர்ஜ் கெனன், 1947 இலேயே Policy of Containment என்ற ஒரு வெளியுறவுக் கொள்கை ஆவணத்தை தயாரித்து வெளியிட்டிருந்தார். ட்ரூமன் கொள்கை (Truman Doctrine) என்றும் அழைக்கப் படும் இந்த ஆவணத்தின் அடி நாதம்: “உலகின் எந்தப் பகுதியிலும் மக்கள், பிரதேசங்கள் சுதந்திரம், ஜனநாயகம் என்பவற்றை நாடிப் போராடினால், அமெரிக்காவின் ஆதரவு அவர்களுக்குக் கிடைக்கும்” என்பதாக இருந்தது. மறைமுகமாக, "தனி மனித அடக்கு முறையை மையமாகக் கொண்ட கம்யூனிசம் பரவாமல் தடுக்க அமெரிக்கா உலகின் எந்த மூலையிலும் செயல்படும்" என்பதே ட்ரூமன் கொள்கை.   இந்த ட்ரூமன் கொள்கையின் முதல் பரீட்சார்த்தக் களமாக தென் வியட்நாம் இருந்தது எனலாம். 1956 இல், டியேம் தென் வியட்நாமை சுதந்திர நாடாக பிரகடனம் செய்த சில மாதங்களில், அமெரிக்காவின் இராணுவ ஆலோசனையும், பயிற்சியும் தென் வியட்நாமின் படைகளுக்கு வழங்க அமெரிக்கா ஏற்பாடுகளைச் செய்தது. தொடர்ந்து, 1961 இல், சோவியத் ஒன்றியத்திடமிருந்து கடும் சவால்களை எதிர் கொண்ட அமெரிக்க அதிபர் கெனடி, அமெரிக்காவின் விசேட படைகளை தென் வியட்நாமிற்கு அனுப்பி வைக்கிறார். விரைவாகவே, பகிரங்கமாக தென் வியட்நாமில் ஒரு அமெரிக்கப் படைத் தலைமயகப் பிரிவு வியட்நாமின் (US Military Assistance Command Vietnam- MACV) நடவடிக்கைகளுக்காகத் திறக்கப் படுகிறது. கெனடியின் கொலையைத் தொடர்ந்து அமெரிக்க அதிபரான லிண்டன் ஜோன்சன், நேரடியான அமெரிக்கப் படை நடவடிக்கைகளை வியட்நாமில் ஆரம்பிக்க அனுமதி அளித்தது 1965 பெப்ரவரியில். இந்த நடவடிக்கைக்கு அமெரிக்க காங்கிரஸ் அனுமதி அளித்திருந்தது குறிப்பிடத் தக்கது. Operation Rolling Thunder என்ற பெயருடன், வட வியட்நாம் மீது தொடர் குண்டு வீச்சு நடத்துவது தான் அமெரிக்காவின் முதல் நடவடிக்கை.  வடக்கும் தெற்கும் 1954 இன் ஜெனீவா ஒப்பந்தம், வியட்நாமை வடக்கு தெற்காக 17 பாகை அகலாங்குக் கோட்டின் படி இரு நாடுகளாகப் பிரித்து விட்டிருந்தது. 10 மாதங்களுக்குள் இரு பாதிகளிலும் இருக்கும் வியட்நாமிய மக்கள் தாங்கள் விரும்பும் பாதிக்கு நகர்ந்து விடுமாறும் கோரப் பட்டிருந்தது. வடக்கிலும் தெற்கிலும் இருந்து பழி வாங்கல்களுக்கு அஞ்சி மக்கள் குடிபெயர்ந்த போது குடும்பங்கள், உறவுகள் பிரிந்தன. ஹோ சி மின்னின் கம்யூனிச வழியை ஆதரித்த மக்கள், வடக்கு நோக்கி நகர்ந்தனர், இவர்களில் பலர் வியற் கொங் என அழைக்கப் பட்ட கம்யூனிச ஆயுதப் படையில் சேர்ந்தனர். தென் வியட்நாமில், கம்யூனிச வடக்கை ஆதரித்த பலர் தங்கவில்லையாயினும், நடு நிலையாக நிற்க முனைந்தவர்களே நிம்மதியாக வசிக்க இயலாத கெடு பிடிகளும், கைதுகளும் தொடர்ந்தன. இந்த நிலையில், வடக்கின் கம்யூனிச ஆயுதப் பிரிவான வியற் கொங், வியட்நாமின் அடர்ந்த காடுகளூடாக Ho Chi Minh trail எனப்படும் ஒரு இரகசிய வினியோக வழியை உருவாக்கி, தென் வியட்நாமை உள்ளிருந்தே ஆக்கிரமிக்கும் வழிகளைத் தேடியது.  இந்த இரகசிய காட்டுப் பாதை வட வியட்நாமில் இருந்து 500 கிலோமீற்றர்கள் வரை தெற்கு நோக்கி லாவோஸ் மற்றும் கம்போடியா நாடுகளினூடாக நகர்ந்து தென் வியட்நாமில் 3 - 4 இடங்களில் எல்லையூடாக ஊடறுத்து உட் புகும் வழியை வியற் கொங் போராளிகளுக்கு வழங்கியது. இந்த வினியோக வழியை முறியடிக்கும் இரகசிய யுத்தமொன்றை, அமெரிக்க விசேட படைகள் லாவோஸ் காடுகளில் வியட்நாம் ஆக்கிரமிக்கப் படும் முன்னர் இருந்தே முன்னெடுத்து வந்தன. சின்னாபின்னமான வியட்நாம் மக்கள் பனிப்போர் காலத்தில் அமெரிக்கா நடத்திய யுத்தங்களுள், மிக உயர்வான பொது மக்கள் அழிவை உருவாக்கியது வியட்நாம் போர் தான். 1965 முதல் 1975 வரையான வியட்நாம் யுத்தத்தில் கொல்லப் பட்ட மக்கள் தொகை 2 மில்லியன்கள்: வியட்நாமியர், கம்போடியர், லாவோஸ் நாட்டவர் இந்த 2 மில்லியன் பலிகளில் அடங்குகின்றனர். இதை விட 5.5 மில்லியன் பொது மக்கள் காயமடைந்தனர். வாழ்விடங்கள், பயிர்செய்கை நிலங்கள் அழிக்கப் பட்டன. இந்த 10 வருட யுத்தத்தில், அமெரிக்காவின் நேரடிப் பிரசன்னம் 1972 வரை நீடித்த அமெரிக்க வியட்நாம் யுத்தம். இந்தக் காலப் பகுதியில், அமெரிக்கப் படைகள் மட்டுமன்றி, பசுபிக்கில் அமெரிக்காவின் நேச அணியைச் சேர்ந்த தென் கொரியா, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளின் படைகளும் பெருமளவில் யுத்தத்தில் பங்கு பற்றின. இந்தப் படைகளும், அமெரிக்கப் படைகளுடன் சேர்ந்து வியட்நாம் மக்களுக்கெதிரான கொடூர வன்முறைகளை நிகழ்த்தினாலும், குறிப்பிடத் தக்க பாரிய வன்முறைகளை அமெரிக்கப் படைகளே செய்தன. இந்த வன்முறைகள் பற்றி ஏராளமான சாட்சியங்களும், அவற்றின் அடிப்படையிலான நூல்களும் வெளிவந்திருக்கின்றன. வியட்நாம் போரில், அமெரிக்கப் படைகள் பொது மக்களை நடத்திய விதத்திற்கு மிகச் சிறந்த உதாரணமான சம்பவம் மை லாய் (My Lai) படுகொலைச் சம்பவம். 1968 இல், ஒரு மார்ச் மாதம் காலையில் மை லாய் கிராமத்தில் நூற்றுக் கணக்கான வியட்நாமிய பொது மக்களைச் சுற்றி வளைத்த அமெரிக்கப் படைப்பிரிவின் அணியொன்று, மிகக் குறுகிய நேர விசாரிப்பின் பின்னர் அவர்களைச் சரமாரியாகச் சுட்டுக் கொன்றது. கொல்லப் பட்ட மக்கள் ஒரு 500 பேர் வரை இருப்பர், அனைவரும் நிராயுத பாணிகள், பெரும்பாலானோர் பெண்களும் குழந்தைகளுமாக இருந்தனர். இந்தப் படுகொலை பாரிய இரகசியமாக அல்லாமல், நூற்றுக் கணக்கான அமெரிக்கப் படையினரின் முன்னிலையில் நடந்தது. அந்த நடவடிக்கைப் பகுதியில், உலங்கு வானூர்தி விமானியாக சுற்றித் திரிந்த ஹியூ தொம்சன் என்ற ஒருவரைத் தவிர யாரும் இதைத் தடுக்க முயலவில்லை. தொம்சன், தன்னுடைய உலங்கு வானூர்தியை அமெரிக்கப் படைகளுக்கும் கொல்லப் படவிருந்த மக்கள் கூட்டத்திற்குமிடையில் தரையிறக்கி ஒரு சிறு தொகையான சிவிலியன்களைக் காப்பாற்றினார். காயமடைந்த சிலரை உலங்கு வானூர்தி மூலம் அகற்றிய பின்னர், மேலதிகாரிகளுக்கும் மை லாய் படுகொலை பற்றித் தெரிவித்தார் தொம்சன். மிகுந்த தயக்கத்துடன் விசாரித்த அமெரிக்க படைத்துறை, படு கொலை பற்றிச் சாட்சி சொன்னவர்களைத் தண்டனை கொடுத்து விலக்கி வைத்தது. படு கொலைக்குத் தலைமை தாங்கிய படை அதிகாரி வில்லியம் கலி, 3 வருடங்கள் கழித்து இராணுவ நீதி மன்றில் சிறைத் தண்டனை விதிக்கப் பட்டாலும், 3 நாட்கள் மட்டுமே சிறையில் கழித்த பின்னர் மேன்முறையீடு, பிணை என இன்று வரை சுதந்திரமாக உயிரோடிருக்கிறார். இந்தப் படுகொலையில் சரியாக நடந்து கொண்ட விமானி தொம்சனையும் இன்னும் இருவரையும் 1998 இல் - 30 ஆண்டுகள் கழித்து- அமெரிக்க இராணுவம் விருது கொடுத்துக் கௌரவித்தது. இத்தகைய சம்பவங்கள் மட்டுமன்றி, ஒட்டு மொத்தமாக வியட்நாம் மக்களை வகை தொகையின்றிக் கொன்ற நேபாம் குண்டுகள் (Napalm - இது ஒரு பெற்றோலியம் ஜெல்லினால் செய்யப் பட்ட குண்டு), ஏஜென்ற் ஒறேஞ் எனப்படும் இரசாயன ஆயுதத் தாக்குதல் என்பனவும் அமெரிக்காவின் கொலை ஆயுதங்களாக விளங்கின. 1972 இல், அமெரிக்காவில் உள்ளூரில் வியட்நாம் போருக்கெதிராக எழுந்த எதிர்ப்புகளால், அமெரிக்கா தன் தாக்குதல் படைகளை முற்றாக விலக்கிக் கொண்ட போது 58,000 அமெரிக்கப் படையினர் இறந்திருந்தனர். இதை விட இலட்சக் கணக்கான உயிர் தப்பிய அமெரிக்கப் படையினருக்கு, PTSD என்ற மனவடு நோய் காரணமாக, அவர்களால் சாதாரண வாழ்க்கைக்குத் திரும்ப இயலாத நிலை ஏற்பட்டது. வியட்நாம் போரின் முடிவு அமெரிக்காவின் படை விலகலுக்குப் பின்னர், படிப்படியாக அமெரிக்காவின் தென் வியட்நாமிற்கான நிதி, ஆயுதம், பயிற்சி என்பன குறைக்கப் பட்டன. 1975 ஏப்ரலில், வடக்கு வியட்நாமின் படைகள் மிக இலகுவாக தெற்கு வியட்நாமின் சாய்கன் நகரை நோக்கி நெருங்கி வந்த போது, அமெரிக்காவின் ஆதரவாளர்கள், அமெரிக்கப் பிரஜைகள் ஆகியோரை Operation Frequent Wind  என்ற நடவடிக்கை மூலம் அவசர அவசரமாக வெளியேற்றினார்கள். தெற்கு வியட்நாமை ஆக்கிரமித்த வடக்கு வியட்நாம், மேலும் முன்னேறி, கம்போடியாவையும் ஒரு கட்டத்தில் ஆக்கிரமித்து, இந்தோ சீனப் பிரதேசத்தை ஒரு தொடர் கொலைக் களமாக வைத்திருந்தது. இந்தப் பிரதேசங்களில் இருந்து கடல் வழியே தப்பியோடிய மக்கள் “படகு மக்கள்” என அழைக்கப் பட்டனர். இன்று றொஹிங்கியாக்களுக்கு நிகழும் அத்தனை அனியாயங்களும் அவர்களுக்கும் நிகழ்ந்தன. -          தொடரும்
    • தமிழ்நாட்டில் நடக்கும் அநிஞாயங்கள் பாலியல் வல்லுறவுகள் கூட்டு பாலியல் கொலை கொள்ளை என்று திராவிட கும்பல்களால் தினமும் செய்திகள் வருகின்றன. எவருமே அதைப்பற்றி அக்கறை கொள்வதில்லை. ஆனால் சீமானைப்பற்றி ஏதாவது நல்ல செய்தி வந்தால் உடனே கூட்டமாக சேர்ந்து தாக்குதல் நடக்குது. என்ன கூட்டமோ?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.