Jump to content

வாட்ஸ்அப் 256: இனி போட்டியையும் குழுச் சண்டையையும் அதிகரிக்கும்!


Recommended Posts

வாட்ஸ்அப் 256: இனி போட்டியையும் குழுச் சண்டையையும் அதிகரிக்கும்!

 

ளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்ற சொல், எதுக்கு பொருந்துகிறதோ இல்லையோ...  'கட்செவி அஞ்சல்' எனப்படும் 'வாட்ஸ்அப்புக்கு நன்றாகவே பொருந்தும்.   நவீன தகவல் தொடர்பு சேவைகளை தரும் அப்ளிகேஷன்களில் வாட்ஸ்ஆப் முன்னிலையில் இருக்கிறது. கடந்த இரண்டாம் தேதி நிலவரப்படி, உலகில் 100 கோடி பயனாளர்கள் வாட்ஸ்அப்  பயன்படுத்துகின்றனர் என அதன் உரிமையாளரும், ஃபேஸ்புக் நிறுவனத்தின் தலைவருமான மார்க் ஜூக்கர்பெர்க் தெரிவித்திருக்கிறார்.

உலகில் 7ல் ஒருவர் கையில் வாட்ஸ்அப்

அதாவது உலகில் 7 பேரில் ஒருவர் வாட்ஸ்‌ அப் பயன்படுத்துகிறார்.  இந்தியாவில் வைபர், ஹைக், லைன் என கடும் போட்டியை தரும் ‘ஆப்கள்’ இருந்தாலும், 'வாட்ஸ்ஆப்'பையே பயனாளர்கள் அதிகம் விரும்புகின்றனர்.  இது வரவேற்கக் கூடியதுதான் என்றாலும், தற்போதைய சூழலில் வாட்ஸ்அப் பயன்பாடு எப்படியிருக்கிறது?

wats.jpg

வாட்ஸ்அப் பயன்பாட்டாளர்கள் என்ன செய்கிறோம் என்பதை அறியாமல் இருக்கிறார்களோ என்ற எண்ணம் வெகுநாட்களாவே மனதில் உருண்டோடுகிறது. தமக்கென்று ஒரு கொள்கையோ, கருத்தோ இல்லாமல் பிறர் அனுப்பிய கதைகள், கட்டுரைகள், படங்கள், வீடியோக்கள் என எல்லாவற்றையும் அப்படியே ஃபார்வர்டு செய்வதில்தான் ஆர்வமும்,‌ வேகமும் காட்டுகிறார்களே தவிர, பகிரப்படும் பதிவில் இருக்கும் உண்மைத்தன்மை என்ன? அது சரியானா தகவல்தானா? நாம் அனுப்புவதால் ஏற்படும் விளைவு என்ன? என்ற எண்ணம் சிறிதளவு கூட இல்லாமல் இருக்கிறார்களே என்ற ஆதங்கமும் ஏற்படுகிறது.

பல்லை காட்டுவார்கள்

ஃபார்வர்டு செய்யும் தகவல்களை முழுமையாக அவர்கள் படித்திருப்பார்களா என்றால் அதுவும் இல்லைதான். ஒருவர் ஃபார்வர்டு செய்யும் ஒரு பதிவுக்கு மற்றொரு குழுவில் நான்கைந்து பாராட்டுகள் வரும். அதை புன்முறுவலுடன் அவர் ஏற்றுக் கொள்வார். அதே அந்தப் பதிவுக்கு எதிர்ப்பும், கண்டனமும் ஏற்பட்டால், நண்பர் அனுப்பினார், தெரிந்தவர் அனுப்பினார் அல்லது வேறொரு குழுவில் இருந்து வந்ததை அப்படியே அனுப்பினேன் என்று சம்பந்தப்பட்ட நபர் பல்லை காட்டுவார்.
 
எந்தவொரு கருத்தையும் நாம் முதலில் ஏற்றுக் கொள்ள வேண்டும் அல்லது தமது கருத்துக்கு ஒவ்வாததாக இருந்தாலும், அதைப் பிறருக்கு தெரியப்படுத்த வேண்டும் என்ற ஆவல் இருந்தால், அந்தப் பதிவுக்கு முழு பொறுப்பு எடுத்துக் கொண்ட பிறகுதான் பிறருக்கு அனுப்ப வேண்டும். அதாவது வாட்ஸ்ஆப் பயன்பாட்டிலே கூற வேண்டுமானால் ஃபார்வர்டு செய்ய வேண்டும். அதைவிடுத்து பெரும்பாலோனோர் வெறுமனே படங்களையும், வீடியோக்களையும் ஃபார்வடு செய்வதால் மிஞ்சுவது எரிச்சல் மட்டும்தான்.

அப்படியே ஃபார்வர்டு செய்பவர்கள் யோசிக்க வேண்டும்
 
அண்மையில் ஒரு பதிவு வாட்ஸ்அப்பில்  சுற்றிச் சுற்றி வந்தது. குடியரசு நாள் கொண்டாட்டத்தின் போது, நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்த திலீபன் என்றொரு இளைஞர், தேசியக் கொடியை எரிப்பது போன்ற ஒரு படமும், அதுதொடர்பான மேலும் சில படங்களும் வாட்ஸ்அப்பில் மின்னல் வேகத்தில்‌ வெளியாகின. குறைந்த‌து மூன்று நாட்கள் அந்த பதிவுகள் தொடர்ந்து அனைத்து வாட்ஸ்அப் குழுக்களிலும் சுற்றி வந்தது. இதில் என்னவென்றால், ஒரு வாட்ஸ்அப் குழுவில் இருப்பவர் அந்த படத்தை பதிவு செய்துவிட்டாரே என்று எண்ணாமல், அந்த குழுவில் இருக்கும் இன்னும் பலர், மூன்று நாட்களிலும் ஏறக்குறைய ஏழெட்டு முறை அனுப்பி இந்திய தேசத்தின் மீதுள்ள தன் அன்பையும், கொடியை எரித்த நபர் மீதான கோபத்தையும் வெளிப்படுத்தினார்கள்.

அதோடு நில்லாமல், இதை எல்லா குழுவிற்கும் அனுப்புங்கள் என்ற 'அன்பு‌ கட்டளை' வேறு. இதுமட்டுமல்லாமல், இந்தியாவையும், இந்திய தேசத்தையும் களங்கப்படுத்திவிட்டார், அவமானப்படுத்தி விட்டார் என்று எல்லோரும் பொரிந்து தள்ளிவிட்டார்கள். அதுபோகட்டும் ‌என்றால், இரு நாட்கள் கழித்து, தேசியக் கொடியை நான் ஏன் எரித்தேன்? என்றொரு நீண்டப் பதிவு வந்தது. அதாவது தேசியக் கொடியை எரித்ததற்கு திலீபன் கூறும் 'நியாய'மான பதிவு அது. அதனை போட்டி போட்டுக் கொண்டு மாறி மாறி இரு நாட்கள் அனுப்பி தீர்த்து விட்டார்கள். இன்னும் ஒரு மாதம் கழித்துக்கூட ஏதாவது ஒரு வாட்ஸ்ஆப் குழுவில் ஃபார்வர்டு செய்யப்படும். இதிலிருந்து ஒரு விசயம் புரிந்தது. ஏற்கனவே இளைஞரை திட்டித் தீர்த்தவர்கள்தான், அவரை கைது செய்ய வேண்டும் ‌என்று முழங்கியவர்கள்தான், மீண்டும் அவரது சமாளிப்பு பதிவையும் அனுப்பிக் கொண்டிருக்கிறார்கள். வாட்ஸ்அப் பயனாளர்களுக்கென்று, ‌ஒரு கருத்தும், கொள்கையும் கிடையாதா? வந்ததை அப்படியே ஃபார்வர்டு செய்கிறேன் பேர்வழி என்று இருப்பது எந்த விதத்தில் சரியாகும்?

256 இனி போட்டியை அதிகரிக்கும்
 
சரி இதுபோகட்டும், வெட்டி அரட்டை, வீண்பேச்சு, தமிழ் மொழி, அறிவியல், மருத்துவம்‌, கல்வி, செய்திக்கதிர், விளையாட்டு, தல, தளபதி, சினிமா, அரசியல் என பல்வேறு வாட்ஸ்அப் குழுக்கள் இருக்கின்றன. ஒருவர் அவருக்கு ஏற்றாற்போல், ஏறக்குறைய 5-லிருந்து 15 குழுக்களில்  இடம்பெற்றிருக்கிறார். ஒவ்வொரு குழுவிலும் அவர் விரும்பியோ, விரும்பாமலோ இடம் பெற்றுவிடுவார் அது தனிகதை. இப்பொழுது ஒரு குழுவில் நூறு பேர்தான் இடம் பெற முடியும் என்ற கட்டுப்பாடும் தளர்த்தப்பட்டு, 256ஆக உயர்த்தப்பட்டிருக்கிறது. இனி குழுவை முழுமைப் பெற வைக்க ஒரு போட்டியே நடக்கும். ஒரு குழுவில் பலர் இடம்பெற்றிருக்கும் போது, பல்வேறு மாறுப்பட்ட கருத்துகள் கிடைக்கப் பெறும். பல புதிய தகவல்கள் இடம்பெறும். அந்த வகையில் இது நல்ல விசயம்தான். சுமார் நூறு பேர் இருக்கும் குழுவில் ஒரு பதிவு  அனுப்பப்படுகிறது என்றால், குறைந்தது 20லிருந்து 30 பேர் வரை தான் முதல் ஒரு மணி நேரத்தில் படிக்கிறார்கள். மற்றவ‌ர்கள் எல்லாம் அந்த நாள் முழுவதிலும் ஏதோ ஒரு நேரத்தில் படிக்கிறார்கள். இதனால் என்ன ஆகிறது?
 
‌ஒரு நாளில், ஒரு குழுவில் குறைந்த‌‌பட்சம் 50 பதிவுகள் வந்திருக்கும். இதை யாரும் முழுமையாக படிப்பதில்லை. ஒரே நேரத்தில் எல்லா பதிவுகளும் சேர்த்திருப்பதால் மேலிருந்து கீழாகவும், கீழிருந்து மேலாகவும் ஸ்குரோல் செய்து விட்டுவிடுகிறார்கள். என்ன நடந்தது? என்ன பதிவு வந்தது? என்று பார்க்காமல், படிக்காமல், இரு நாட்கள் கழித்து, இதே குழுவில் வந்த பதிவுகளை, அதிலுள்ள நண்பர்கள் மீண்டும் ஒரு முறை திருப்பி அனுப்புவார். இது மற்றவர்களுக்கு எந்த வகையில் பயன் தரும்? இந்த பதிவு மூன்று நாளைக்கு முன்னரே வந்துவிட்டது. இதை மீண்டும் பதிவு செய்யாதீர்கள் என்று, அந்த குழு அட்மினோ, வேறு ‌ஒரு நபரோ தெரிவிப்பார். அதற்கு இளித்துக் கொண்டு சரி என்று அந்த நபரும் தெரிவிப்பார்.

'அளவுக்கு மீறினால் அமிர்தமும்  நஞ்சு '

இதுபோன்ற உரையாடல்கள் நல்ல தகவல்களை தெரிந்து கொள்ள வேண்டும், அறிந்து கொள்ள வேண்டும் என்று இருப்பவர்களுக்கு‌ எரிச்சலடையச் செய்வதோடு, நாளடைவில் அவர் பதிவு செய்யும் பதிவுகளை குறைத்துக் கொண்டு அமைதிக் காப்பார். இறுதியில் குழுவுக்கு நன்றி தெரிவித்துவிட்டு வெளியேறிவிடுவார்.‌ இதெல்லாம் பரவாயில்லை. புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஒருவர் விபத்தில் சிக்கிவிட்டார் ‌என்றும், புற்றுநோய்க்கு அடையாறு புற்றுநோய் மருத்துவமனை இலவச மருந்தை தருகிறது என்றும், கீழ்ப்பாக்கம் மருத்துவமனையின் அவலங்கள் என்றும், அதிக நோபல் பரிசு பெற்ற நாடு எது தெரியுமா என்றும் கேட்கப்படும் பதிவுகளை ஓராண்டிற்கும் மேலாக, (நான் ஒரு வருடமாக வாட்ஸ்அப்பில் இருப்பதால் சொல்கிறேன்) பதிவு செய்யப்பட்டுக் கொண்டே இருக்கின்றன. இதில் இருக்கின்ற உண்மைத் தன்மைக்கு யார் பொறுப்பு? கருத்துச் சுதந்திரம் என்ற பெயரில் எதை வேண்டுமானாலும் எழுதலாம், அதை பிறருக்கு ஃபார்வர்டு செய்து‌ நம்ப வைக்கலாம் என்ற எண்ணம் சரியா? இதை தொடர்புடையவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

பல தரப்பட்ட குழுக்களில் ஒருவர் இருப்பதால், ஏராளமான தகவல்கள் கிடைக்கப் பெறும். நல்ல விஷயங்கள் தெரியவரும்‌. அதையெல்லாம், சான்றுக்கு மேற்கூறிய சில ஃபார்வர்டு பதிவுகளால் படிக்க முடியாமல் சோர்வுற்றுவிடுகிறார்கள். எனவே, வாட்ஸ்அப் பயனாளர்கள் இரண்டு விசயங்களை உள்வாங்கி கொள்ளுங்கள். ஒன்று, உங்களுக்கு கிடைக்கும் எந்த தகவலாக இருந்தாலும், அதன் உண்மைத் தன்மையை உறுதி செய்து கொண்டு‌ பிறருக்கு பரிந்துரை செய்யுங்கள். இல்லையென்றால் நீங்கள் மட்டுமே படித்து தெரிந்து கொள்ளுங்கள். இரண்டாவது, வரும் எல்லா தகவல்களையும் படித்தாயிற்று, வேண்டபட்டவர்களுக்கு ஃபார்வர்டு செய்துவிட்டாகிவிட்டது என்றால், அதை அழித்துவிடுங்கள். ஒருவேளை சில பதிவுகள் தேவை‌‌படுகிறது என்றால் அதை மட்டும் வைத்து‌ கொண்டு மீதமுள்ளவற்றை அழித்துவிடுங்கள். எதுவும் அளவுக்கு மீறாமல் இருப்பதே நலம். மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சாகும். இது வாட்ஸ்அப்புக்கும் அப்படியே பொருந்தும்!

http://www.vikatan.com/news/vasagar-pakkam/58587-whatsapp-group-chat-limit-extended-to-256-people.art

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • `உங்க பேரு இறந்தவங்க லிஸ்ட்ல இருக்கு; ஓட்டுப்போட முடியாது!' - அதிர்ச்சியில் உறைந்த பெண் வாக்காளர்! ராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட ராமேஸ்வரத்தில் உள்ள வாக்குச்சாவடி ஒன்றில் வாக்களிக்கச் சென்ற வயதான வாக்காளரின் பெயர், இறந்தவர்கள் லிஸ்ட்டில் சேர்க்கப்பட்டிருந்ததால், வாக்களிக்க முடியாமல் அதிர்ச்சியடைந்து திரும்பிய சம்பவம் அரங்கேறியுள்ளது.   ராமநாதபுரம் நாடாளுமன்றத் தொகுதியில் திமுக கூட்டணி, பாஜக கூட்டணி இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. பாஜக கூட்டணி சார்பில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும், திமுக கூட்டணி சார்பில் நவாஸ்கனியும் போட்டியிடுகின்றனர். இந்நிலையில் இன்று காலை முதல் தொகுதிக்குட்பட்ட பல்வேறு இடங்களில் விருவிருப்பான வாக்குப்பதிவு நடைபெற்றது. மாலை 3 மணி வரை ராமநாதபுரம் தொகுதிக்குட்பட்ட 6 சட்டமன்ற தொகுதிகளிலும் சேர்த்து 52.46 சதவிகித வாக்குகள் பதிவாகியிருந்தது. இந்நிலையில் ராமநாதபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ராமேஸ்வரத்தில் உள்ள வாக்குச்சாவடி ஒன்றில் வாக்களிக்க சென்ற வயது முதிர்ந்த பெண் ஒருவரின் பெயர், இறந்தபோன வாக்காளர் லிஸ்ட்டில் இடம்பெற்றிருந்தததால் வாக்களிக்க முடியாமல் திரும்பினார். துளசிபாவா மடம் பகுதியை சேர்ந்த காளியம்மாள் (65) என்பவர் வாக்காளர் அடையாள அட்டை மற்றும் பூத் சிலிப்புடன் தனது பகுதியில் உள்ள வாக்குப்பதிவு மையத்திற்கு வாக்களிக்க சென்றுள்ளார்.         வாக்குப்பதிவு மையம் உ.பாண்டி     வாக்குச்சாவடி உ.பாண்டி வரிசையில் காத்திருந்த காளியம்மாள் வாக்குப்பதிவு மையத்தினுள் சென்று தனது பூத் சிலிப்பைக் கொடுத்துள்ளார். அதனை வாங்கிப் பார்த்த தேர்தல் பணியாளர், வாக்காளர் பட்டியலில் தேடி பார்த்தபோது, காளியம்மாளின் பெயர் இறந்தவர்களின் லிஸ்ட்டில் சேர்க்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இது குறித்து காளியம்மாளிடம் கூறிய தேர்தல் பணியாளர், அவரை வாக்களிக்க அனுமதிக்காமல் திருப்பி அனுப்பினார். உயிரோடு இருந்து ஓட்டுப்போட ஆர்வத்தோடு வந்த தன்னை, இறந்தவர்கள் லிஸ்ட்டில் சேர்த்திருப்பதை அறிந்த காளியம்மாள் அதிர்ச்சியடைந்ததுடன், வாக்களிக்க முடியாமல் போன வேதனையுடனும் வாக்குப்பதிவு மையத்திலிருந்து வெளியேறினார். `உங்க பேரு இறந்தவங்க லிஸ்ட்ல இருக்கு; ஓட்டுப்போட முடியாது!' - அதிர்ச்சியில் உறைந்த பெண் வாக்காளர்! | name in the dead voters list ramanathapuram woman failed to cast her vote - Vikatan
    • ஓமண்ணை…. பெரிய அநியாயம்….எனக்கெல்லாம் வாழ்க்கையின் பேக்ரவுண்ட் மியூசிக் அது. 70% க்கு மேல இப்ப wok style தாச்சிதான்.
    • மத்திய அரசுக்குச் சொந்தமான ஒளிபரப்பு நிறுவனமான பிரசார் பாரதி, தனது இந்திச் செய்தி சேனலான 'டிடி நியூஸ்'-இன் பிராண்டிங், செட் டிசைன், போன்றவற்றில் மாற்றம் செய்துள்ளதாகக் கடந்த 16ம் தேதி அன்று சமூக வலைதளத்தில் அறிவித்திருந்தது. இந்நிலையில் தற்போது அதன் லோகோவை சிவப்பு நிறத்திலிருந்து காவி நிறுத்துக்கு மாற்றியிருக்கிறது.    டிடி நியூஸ் பா.ஜ.க. அரசு பல்வேறு பொதுத்துறை நிறுவனங்களில் தனது கட்சி நிறமான காவியைப் புகுத்தி வருவதற்கு ஏற்கெனவே எதிர்க்கட்சிகள் கண்டனங்களைத் தெரிவித்து வரும் நிலையில் டிடி நியூஸ் சேனலின் லோகோவையும் காவி நிறத்துக்கு மாற்றியுள்ளதற்கு எதிர்க்கட்சிகள் மற்றும் சமூக வலைதளப் பயனாளர்கள் பலரும் கடும் அதிருப்தியும், கண்டனங்களும் தெரிவித்து வருகின்றனர். கடந்த 2012 முதல் 2016 வரை பிரசார் பாரதியின் தலைமை நிர்வாக அதிகாரியாக இருந்த ஜாஹர் சிர்கார், டிடி நியூஸ் சேனல் லோகோ மாற்றம் குறித்து கூறுகையில், “இது பிரச்சார் பாரதி அல்ல. பிரசார பாரதி. அனைத்து மத்திய அரசு நிறுவனங்களையும் காவி மயமாக்கும் நடவடிக்கை நடந்துவருகிறது.   டிடி நியூஸ் புதிய நாடாளுமன்ற கட்டடத்துக்குள் நுழைந்தால், அதன் நிறங்கள் காவி நிறமாக மாற்றப்பட்டுள்ளன. மக்களவை, மாநிலங்களவை ஊழியர்களில் பாதி பேர் இப்போது காவி நிற சீருடைகளை அணிந்துள்ளனர்" என்று விமர்சித்திருக்கிறார். Doordarshan: காவி நிறத்துக்கு மாறிய தூர்தர்ஷன் லோகோ; வலுக்கும் கண்டனங்கள்! பின்னணி என்ன? | DD News logo changes to saffron colour (vikatan.com)
    • கொத்து என்றால்.... தகரத்தில் அடிக்கும் கொத்துதான் கெத்து. 😂 அந்தச் சத்தமே.... வாயில் இருந்து உணவுக் குழாய் வரை குதூகலிக்கும் சத்தம் அது. தாச்சியில்... அதுகும்  இலங்கையில்  கொத்து செய்வதை இப்போதான் கேள்விப்படுகின்றேன்.
    • 🤣 இந்த நுளம்பு கூட்டத்தை அவர்கள் பாணியில் சில ஒபாமாக்கள், விஜி களை ஏவி எதிர்கொள்ளுவதுதான் புத்திசாலித்தனம். அல்லது நீர்யோக நகரம், கொஸ்டரீக்கா போன்றனவற்றையும் கையில் எடுக்கலாம். சீரியசாக எடுத்தால் எமக்கு மண்டை காய்ந்து விடும். ————— உண்மையில் ஓரளவுக்கு சாத்தியமான எடுகோள், பலூசிஸ்தான் போலான் கணவாய் வழி மேற்கே இருந்து ஈயுரேசியர், பேர்சியன்ஸும், வடக்கே கைபர் கணவாய் வழி வந்த மத்திய ஆசியர், மங்கோலியர், பிராமணரும் (வேதங்களை நம்பியோர்)….. சிந்து சமவெளியில் இருந்த திராவிட/தொன் தமிழ் நாகரீகத்தை பிரதியீடு செய்ய, திராவிட/தொல் தமிழர் விந்திய மலைக்கு தெற்கே ஒதுங்கினர். இங்கே திராவிடம் எனப்படுவது தொல் தமிழையே.  இன்று தென்னிந்தியாவில் காணப்படும் மக்களின், மொழிகளின், பண்பாடுகளின் தோற்றுவாய். அலர்ஜி உபாதைகள் இருப்போர் திராவிட என்பதற்கு பதில் தொந்தமிழ் என்றோ அல்லது X நாகரீகம் எனவோ அழைத்துக்கொள்ளலாம். ஆனால் X பெர்சியாவில் இருந்து வந்தது என்பது - சந்தேகமே இல்லாமல் - product of Costa Rica தான்🤣.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.