Jump to content

வண்ண சிங்கள


putthan

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

 

"நெக்ஸ்ட் பிளிஸ்" என்ற அழ‌கிய குரலுக்கு சொந்தகாரியான அழகி என்னை அழைக்க நானும் "‍‍‍ஹாய்" என்று சொல்லியபடியே இருக்கிற பல் எல்லாத்தையும் காட்டிகொண்டு பயணப்பொதிகளை இழுத்து கொண்டு அவள் இருக்கும் கவுன்டர் அருகே சென்று கையில் ஆய‌த்தமாக வைத்திருந்த பாஸ்போர்டையும் விமான டிக்கட்டையும் கொடுத்தேன் .புன்முறுவலுடன் வாங்கியவள் சகலதும் ச‌ரியாக இருக்கின்றதா என பார்த்தபடியே பொதிகளை நிலுவையில் வைக்கும்படி சொன்னாள் .

த‌ராசு 35 கில்லோ காட்டியது.முப்பது கில்லோ தான் கொண்டு போகமுடியும் மிகுதியை நீங்கள் எடுக்க வேணும் என்றாள்.கை பொதியில் எவ்வள‌வு இருக்கு என்று பார்ர்ப்போம் அதையும் தராசில் வையுங்கோ என்றாள் . மெதுவாக தூக்கி வைத்தேன் அது ஒன்பது கில்லோ என்பதை காட்டியது.கை பொதி ஏழு கில்லோ தான் அனுமதிப்போம் அதையும் குறையுங்கோ என்றாள் . சிறிலங்கா விமானநிலையத்தில் ஒருகாலத்தில் கொஞ்ச காசை கொடுத்தால் கண்டு கொள்ளாமல் விட்டிடுவாங்கள் , அறுவாங்கள்  இப்ப கண்ட இடத்திலயும் கமராவை பூட்டி வைச்சிருக்கிறாங்கள் இதனால் வாங்கிறவங்களுக்கும் சுதந்திரமில்லை கொடுக்கிறவங்களுக்கும் சுதந்திரமில்லை என்று திட்டியபடியே சாமான்களை குறைச்சு போட்டு மீண்டும் நிலுவையில் வைத்தேன் 31 கில்லோ காட்டியது. இந்த தடவை கைப்பொதியை எடை பார்க்கும் படி கேட்கவில்லை.பொதிகளுக்கு லெபிள்களை ஒட்டிய அழ‌கி தங்க்யூ என்று சொல்லி பாஸ்போர்ட்டையும் போர்டிங்க் பாஸையும் தந்தாள் ..நானும் பதிலுக்கு நன்றி சொல்லி போட்டு  கைப்பொதியை தூக்கியபடி இடத்தை விட்டு நக‌ர்ந்தேன்.

குறைத்த நாலு கில்லோவையும் எப்படியும் கை பொதிக்குள் அடைந்து கொண்டு செல்வது என முடிவெடுத்தேன்.ஏற்கனவே அதனுள் இடம் இருந்தபடியால் இந்த நாலுகில்லோவையும் உள்ளே திணிக்ககூடியதாக இருந்தது.

குடிவரவு,குடியக‌ழ்வு விண்ணப்படிவத்தை நிரப்பி எல்லோரிடமும் விடைபெற்றுக்கொண்டு கைப்பையை தோளில் மாட்டிய‌படி  உள்ளே சென்று வரிசையில் நின்றேன்.அங்கும் ஒரு பெண் அதிகாரி புன்முறுவலுடன் நெக்ஸ்ட் என்றாள்.பாஸ்போர்ட்டில் உள்ள படத்துடன் எனது முகம் பொருந்துகிறாத என பார்த்த பின்பு  கடவுச்சீட்டில்  சீல் குத்தி  தந்தாள் .அவ‌ளுக்கும் நன்றியை சொல்லிவிட்டு அடுத்த வரிசையில் நின்றேன்.அது பொதிகளை எக்ஸ்ரே செய்யும் லைன்.எனக்கு முன்னாள் வெள்ளையின‌ தம்பதியினர் இருவர் நின்றனர்.அவர்களின் கையில்  தண்ணீர் போத்தல் இருந்தது .அதை உள்ளே கொண்டு செல்ல முடியாது  என அதிகாரி சொல்ல தம்பதியினர் மனஸ்தாபட்டனர்.

உள்ளே கொண்டு செல்ல வேணுமென்றால் தண்ணீர் கொஞ்சத்தை குடித்து காட்டவும் என அதிகாரி கேட்க அவர்கள் குடித்துகாட்டினார்கள் ,அதன்பின்பு உள்ளே கொண்டுசெல்ல அதிகாரி அனுமதித்தார்.

என்னடாப்பா தண்ணீர் போத்தல் கொண்டு செல்வதற்கு இவ்வளவு நடப்பு காண்டுகின்றனர் என மனதில் எண்ணிகொண்டிருக்கும் பொழுது எனது முறை வந்தது .பெல்ட்,பேர்ஸ் போன்ற‌வற்றை  ஒரு டிரேயில் வைத்து , கைபொதியையும் எக்ஸ்ரே  மேசினுடாக அனுப்பிவிட்டு,நான் எக்ஸ்ரே கதவுடாக சென்றேன்.

தம்பி நல்ல பிள்ளை குண்டுகள் ,வெடிபொருட்கள் ,துப்பாக்கி அவனிட‌மில்லை என்று மெசின் தன‌து மெளன‌த்தின் மூலம் காட்ட‌ அதிகாரி உள்ளே செல்ல அனுமதித்தார்.நான் பெல்ட்,பேர்ஸ்,கைபொதியை எடுக்க போக இன்னுமொரு அதிகாரி கைபொதியை திறந்து காட்டும்படி கேட்டார்.உள்ளிருந்த சென்ட் போத்தலை எடுத்து எவ்வளவு மில்லி என  பார்த்துவிட்டு 100 மில்லி என்றபடியால் கைப்பொதியை கொண்டு செல்ல அனுமதித்தார்.

போர்டிங்க் பார்சில் குறிப்பிட்ட் கேட் இலக்கத்தை கண்டுபிடித்து வாசலில் நின்ற அழ‌கியிடம் போர்டிங் பார்சை கொடுத்து விமானத்தில் ஏறினேன்.

வெல்கம்,யுஅ சீட் ஒன் ரைட் என்றாள்,அவளுக்கும் ஒரு தங்க்யூ சொல்லி போட்டு எனது இருக்கையில் இருந்தேன்.நடை பாதையின் அருகில் உள்ள சீட் என்றபடியால் எனக்கு மிகவும் ச‌ந்தோசமாக இருந்தது.ஏன் என்றால் விமானபணிப்பெண்களை அடிக்கடி அழைத்து தேவையானதை வாங்க‌லாம்,அத்துடன் இயற்கை உபாதைகளுக்கு செல்வதென்றாலும் மற்றவ‌ர்களிடம் "எக்ஸ்கியுஸ் மீ" என்று பல்லிக்காமல் சென்று வரலாம். என்ன தான் வயசு போனாலும் பெண்களை கண்டால் ஒருக்கா பார்க்கதான் மனசு சொல்லுது.மனசின் ஆசையை நிறைவேற்ற சிங்கை அழகிகளை பார்த்து மனசை சமாதானப்படுத்திய பின்பு,தொலைக்காட்சி யில் படங்கள் பார்க்க முடிவு செய்தேன்.பிளேனிலிருந்து  தமிழ் படம் பார்த்தால் கெளரவ குறைச்சல் என்றபடியால் இங்கிலிஸ் படம் ஒன்றை பார்க்க‌முடிவுசெய்து முன்னால் இருந்த தொலைகாட்சிபெட்டியை விரல்களால் தொட்டு விறும்பிய சனலை அழுத்தி ஒரு ஆங்கில படத்தை போட்டு காதினுள் இய‌ர்பொனை செருகிகொண்டேன். விமானம் எயர்பொக்ட்டுக்குள் போகும் பொழுது சிறிது ஆட்டம் போட அடியேனுக்கு மனதில் பல எண்ணங்கள் தோண்றி  மறைந்தன.விமானிக்கு மூளையில் பிசகு என்றால் என்ன செய்வது,விமானத்தை யாராவது கடத்தினால்,கீழேயிருந்து யாராவது ஏவுகனையால் தாக்கினால் போன்ற எண்ணங்கள் உண்டாக எல்லாம் வல்ல சிட்னிமுருகனை நினைத்து" முருகா யூ ஆர் கிரேட் "என்று ஆங்கிலத்தில் வணங்கி ,ஊரில இருக்கும் சிவனை நினைத்து ஓம் நமச்சிவாயா சொல்லி மனத்தை தெற்றிகொண்டு கண்யர்ந்து போனேன்.

'சேர் யூ லைக் கொவி,யூஸ்"

இனிமையான குரலை கேட்டு திடுக்கெட்டு எழுந்து "ஸ்கொட்ச் ஒன் த ரொக்"என்றேன்.

ஒரு சிறிய பிளக்லேபிள் போத்தலும் ஐஸ் கட்டிகள் நிரப்பிய‌ கிளாசையும் ,அத்துடன் பிநட்ஸ் பக்கற்றையும் சிரித்த முகத்துடன் தந்து சென்றாள்.

படத்தை பார்த்தபடியே பழரசத்தைரசித்து பருகினேன்.மீண்டும் ஒரு பெக் எடுக்க வேண்டும் போல‌ இருக்க ,படம் பார்த்த கண்கள் விமானபணிப்பெண்ணை தேடியது.எனது கண்களின் தேடலுக்கு பலன் கிடைத்து.

"கான் ஐ ‍ஹாவ் வன் மொர் டிரிங்க்"

"சுயர்"

"தங்க்யூ"

மீண்டும் ரசித்து பருகிகொண்டிருக்கும் பொழுது வண்டிலை தள்ளி கொண்டு வந்தவள்,

"சேர் வட் யூ லைக் "

இரண்டு மாசால தோசை ஒரு தயிர் வடையும் என்று கேட்டாள் தந்திடுவாளாக்கும் என மனம் நினைக்க ,அவளோ என‌க்கு தான் கேட்டது புரியவில்லை என்ற எண்ணத்தில் தங்களிடம் உள்ள இரண்டு சாப்பாட்டை சொன்னால் அதில் சிக்கன் என்பது மட்டும் எனக்கு புரிந்தபடியால் அதையே திருப்பி சொல்ல சாப்பாட்டை தந்து புன்னகையும் இலவசமாக தந்து சென்றாள்..

சாப்பாட்டை முடித்தவுடன் அடுத்த தூக்கத்துக்கு தயாரானேன.

விமானி விமானத்தை இறக்குவத‌ற்குறிய அறிவிப்புக்களை செய்தார் விமானபணியாட்களும் அதற்குறிய ஆயத்தங்களை செய்து கொண்டிருந்தார்கள் .நானும் புறக்கணி சிறிலங்கா என்ற கொள்கையை துறந்திட்டு "அப்பே லங்கா,நமோ நமோ மாதா"என்ற கொள்கையை அறவணைத்து கொண்டு இறங்கினேன்...ஆயுதப்படையினர் ஆயுதமின்றி நின்றனர் ...ஓஓஓஒ...சமாதானம் வந்திட்டோ அதுதான் ஆயுதமின்றி ஆயுதப்படையினர் என்று நினைத்துகொண்டு எனது பொதிகளை பார்த்துகொண்டிருந்தேன்.டேய் புறம்போக்கு சமாதானம் வந்தால் ஏன்டா ஆயுதமின்றிய ஆயுதப்படை மனசாட்சி ஒரு கேள்வியை கேட்க திகைத்து போய் அதுதானே என்று மீண்டும் பதில் கேள்வியை மனசாட்சி கேட்டுது.... இப்படியான இக்கட்டான‌ நேரங்களில்.."ஒம் நமச்சிவாயா"சொல்லி மன‌தை சமாதானப்படுத்துவதுண்டு.அப்படி சொல்லிகொண்டு மனதை சமாதனப்படுத்தும் பொழுது எனது பொதி போன்று ஒன்று  வர அதை எடுத்து தயாராக‌ இருந்த ரொலியில் எற்றி தள்ளும் பொழுது

" மாத்தையா பொட்டாக் இன்ட மெக்க மகே பாக் " என்ற குரல் கேட்டு

அறைகுறை சிங்களம் தெரிந்தபடியால் எதோ பொதிப்பிரச்சனை, பாக்கை மாறி கொண்டுவந்திட்டன் போல  என்று போட்டு பாக்கை பார்த்தேன் என்ட பொதியில் இருந்த கீறல்கள் அந்த பொதியில் இல்லை என்பது புலப்பட்டது. பொதியின் சொந்தக்காரியின் குரலை கேட்டு அவளை பார்த்தேன்.ஆகா ஆகா ஆஅ காஆகா ....."ஒயாகே பாக் மேக்க எனேத"என்ற குரல் கேட்டு திரும்பி பார்த்தேன் சிங்களபாரம்பரிய உடை உடுத்த ஒரு முப்பதைந்து வயது மதிக்க வண்ண சிங்களத்தி என்னருகில் நின்றாள்.....அர‌சியலும் ......புலம் பெயர் புண்ணாக்கும்...சிங்கையூருச்சியா?சிங்களத்தியா? தமிழிச்சியா?.

Link to comment
Share on other sites

கதை நல்லாத்தான் போகுது. தொடருவீங்களா அல்லது முற்றுமா.


பெண்கள் எமது கண்கள் போன்றவர்கள். ஆனாலும் ஆரம்பம் முதலே பெண்களாவே சந்திப்பது கொஞ்சம் பொறாமையாத்தான் இருக்கு. எங்கோ மச்சம் இருக்கு, எங்கென்று சொன்னால் நானும் அங்கு ஸ்ரிக்கர் ஒட்டலாம். புத்தா(உங்களைச் சொல்லவில்லை ஒறிஜினல் புத்தரைச் சொனேன்) உனது திருவிளையாடலா இது. 

இயல்பான எழுத்தோட்டம். தொடர்ந்து எழுதுங்கள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ம்ம்ம்

கொஞ்சம் இழுத்தமாதிரி தெரியுது எனக்கு..

(உங்களுடைய பழைய கதைகளின் சுருக்கத்தாலோ என்னமோ)

கடைக்கு சிங்களப்பெண்கள் வரும் போது 

இனி எனக்கும் இது ஞாபம் வரும்..

அர‌சியலும் ......புலம் பெயர் புண்ணாக்கும்...சிங்கையூருச்சியா?சிங்களத்தியா? தமிழிச்சியா?.

தொடர்ந்து கிறுக்குங்கள் புத்தர்

Link to comment
Share on other sites

கதை அருமை சகோ புத்தன்... தொடர்ந்து எழுதுங்கள்!!! கிழமைக்கு ஒரு கதையாவது குறைந்தது எழுதுங்கள்!! வாசிக்க ஆவல் :)

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்களுக்கேயுரிய அந்த நளினம் கதை முழுதும் இழையோடுகின்றது....! தொடர்ந்து எழுதுங்கள்...!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வழக்கமாக புத்தனின் கதையில் இருந்து ஏதோ ஒண்டு மிஸ்பண்ணுகிறது என்று நினைக்கின்றேன்! ஆகா கண்டுபிடித்துவிட்டேன்.  <_< புத்தனின் கதைகளில் நக்கல் நளினத்துடன் சமூகத்திற்கான ஒரு செய்தியும் இருக்கும். இன்று அந்த செய்தியைக் காணவில்லை. ஒருவேளை சிங்களத்திகள் அழகென்ற செய்தியை சொல்லுகின்றாரோ தெரியவில்லை.  :rolleyes:  மற்றும்படி கதைசொல்லும் பாங்க்ம் எழுத்துநடையும் சூப்பர்!tw_blush:

Link to comment
Share on other sites

உங்களை மாதிரித்தான் எல்லாரும் ,

83 கலவரத்தின் போது லண்டனில்  வெட்ட வேண்டும் கொத்த வேண்டும் என்று நின்ற பலர் அத்துலத்முதலியின்  அழகிய உறவு ஒன்று வந்து சேர அதே கூட்டம் தான் பின்னால் அலைந்தது .

நல்ல யதார்த்தமான கதை புத்தன் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விமானப் பயணத்தின் போது ஏற்படும் சம்பவங்களை சுவாரஸ்யமாக எழுதி இருக்கிறீர்கள்.
நானே ஸ்ரீ லங்கனில் பறந்து ~ கட்டுநாயக்கா தளத்தில் இறங்கியது போல ஒரு உணர்வு.
அப்படியே கட்டுநாயக்கா, சீதுவ, ஜாஎள,  வத்தள , பிட்ட கொட்டுவ ... என்று உங்கள் பயணக் கதையை தொடருங்கள் ... 

"அம்மா ப்பா சிங்கள படு கேன ...கியளா வேடக் நஎ சகோதரயா ..."
  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புத்தன்! சும்மா சுண்டி விட்டமாதிரி ஒரு விசயத்தை சொல்லியிருக்கிறியள்.....நான் நெடுக சொல்லுற மாதிரி நீங்கள் ஒரு பேய்க்காய் :cool:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விமானப் பயணத்துக்குள்ள ...இவ்வளவு விசயங்கள் இருக்குது எண்டு இண்டைக்குத் தான் தெரியும்!

அன்பையும், எழிலையும் அள்ளித் தருகின்றது.. எயார் லங்கா .. என்ற கொச்சைத் தமிழ் 'வனக்கம்' காலத்தில்.. ஆரம்பித்த 'பறப்பு'.. இன்று வரை தொடர்கின்றது!

இவ்வளவு நாளும்... பேய்க்குஞ்சு மாதிரி... கோணர் சீற்றில பயணித்து... எனது காலத்தை வீணாக்கி விட்டதாக இப்போது உணர்கிறேன்! இந்த 'உரசல்' விஷயம்... இது வரை யாரும் சொல்லித் தரவே இல்லை!

சிங்களப் பெண்கள் அன்பை.. வெளிக்காட்டும் விதமே தனித்துவமானது தான்! எங்கள் பெண்களும் தான் அன்பைக் காட்டுகிறார்கள்! ஆனால்.. வார்த்தைகளால் வெளிப்படுத்துவது மிகவும் குறைவு! எப்போதாவது வருகின்ற 'நீலச் சந்திரனைப்' போலவே அவர்களது ..அன்பு வெளிக்காட்டல்' அமைகின்றது!

உங்களது கதையில்.. ஆங்கிலமும்.. சிங்களமும் கலந்து..இருந்தாலும்.. உங்கள் எழுத்து நடை.. அதை ஒரு 'உறுத்தலாகக்' காட்டாமல் கதையை இயல்பாக நகர்த்திச் செல்வது உங்கள் தனித்துவம்!

இப்போதெல்லாம்.. புத்தன்  'கிறுக்கல்' நிலையைத் தாண்டி... எழுத்தாளன் என்ற நிலைக்கு வளர்ந்து விட்டான் என்றே நினைக்கத் தோன்றுகின்றது!

தொடர்ந்து எழுதுங்கள், புத்தன்!

  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நளினம் கலந்த இயல்பான எழுத்து நடை புத்தனுக்கு உாிய தனித்தன்மை. கதையை தொடருங்கள். செய்திக்காகக் காத்திருக்கும் எம் எதிா்பாா்ப்பை ஏமாற்றாமல்....... , தொடருங்கள் புத்தன் பாராட்டுக்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 30/01/2016 at 2:41 AM, ஜீவன் சிவா said:

கதை நல்லாத்தான் போகுது. தொடருவீங்களா அல்லது முற்றுமா.


பெண்கள் எமது கண்கள் போன்றவர்கள். ஆனாலும் ஆரம்பம் முதலே பெண்களாவே சந்திப்பது கொஞ்சம் பொறாமையாத்தான் இருக்கு. எங்கோ மச்சம் இருக்கு, எங்கென்று சொன்னால் நானும் அங்கு ஸ்ரிக்கர் ஒட்டலாம். புத்தா(உங்களைச் சொல்லவில்லை ஒறிஜினல் புத்தரைச் சொனேன்) உனது திருவிளையாடலா இது. 

இயல்பான எழுத்தோட்டம். தொடர்ந்து எழுதுங்கள். 

எல்லாம் அவன் செயல் அந்த ஒறிஜினல் புத்தன் செயல்

On 30/01/2016 at 3:11 AM, விசுகு said:

ம்ம்ம்

கொஞ்சம் இழுத்தமாதிரி தெரியுது எனக்கு..

(உங்களுடைய பழைய கதைகளின் சுருக்கத்தாலோ என்னமோ)

கடைக்கு சிங்களப்பெண்கள் வரும் போது 

இனி எனக்கும் இது ஞாபம் வரும்..

அர‌சியலும் ......புலம் பெயர் புண்ணாக்கும்...சிங்கையூருச்சியா?சிங்களத்தியா? தமிழிச்சியா?.

தொடர்ந்து கிறுக்குங்கள் புத்தர்

நன்றிகள் விசுகு எல்லாம் உங்களது பாராட்டுக்கள் தான் என்னை தொடர்ந்து கிறுக்க வைக்கின்றது....

On 30/01/2016 at 5:51 AM, மீனா said:

கதை அருமை சகோ புத்தன்... தொடர்ந்து எழுதுங்கள்!!! கிழமைக்கு ஒரு கதையாவது குறைந்தது எழுதுங்கள்!! வாசிக்க ஆவல் :)

 

நன்றிகள் மீனா ....ஒரு கிழமைக்கு ஒரு கதை(கிறுக்கல்) என்பது சாத்தியமில்லை ..மாதத்திற்கு ஒன்று தர முயற்சிக்கிறேன்

On 30/01/2016 at 6:31 AM, suvy said:

உங்களுக்கேயுரிய அந்த நளினம் கதை முழுதும் இழையோடுகின்றது....! தொடர்ந்து எழுதுங்கள்...!!

நன்றிகள் சுவி ....உங்களது பாராட்டுக்கள் தான் எனது விட்ட‌மின்....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 30/01/2016 at 6:31 AM, suvy said:

 

On 30/01/2016 at 6:47 AM, வாலி said:

வழக்கமாக புத்தனின் கதையில் இருந்து ஏதோ ஒண்டு மிஸ்பண்ணுகிறது என்று நினைக்கின்றேன்! ஆகா கண்டுபிடித்துவிட்டேன்.  <_< புத்தனின் கதைகளில் நக்கல் நளினத்துடன் சமூகத்திற்கான ஒரு செய்தியும் இருக்கும். இன்று அந்த செய்தியைக் காணவில்லை. ஒருவேளை சிங்களத்திகள் அழகென்ற செய்தியை சொல்லுகின்றாரோ தெரியவில்லை.  :rolleyes:  மற்றும்படி கதைசொல்லும் பாங்க்ம் எழுத்துநடையும் சூப்பர்!tw_blush:

சீ சீ ....தமிழ்தான் அழகு.....தெமிளு படு கொந்தாய்..:rolleyes:.நன்றிகள் வாலி

On 30/01/2016 at 6:47 AM, வாலி said:

 

On 30/01/2016 at 6:47 AM, வாலி said:

 

On 30/01/2016 at 6:57 AM, arjun said:

உங்களை மாதிரித்தான் எல்லாரும் ,

83 கலவரத்தின் போது லண்டனில்  வெட்ட வேண்டும் கொத்த வேண்டும் என்று நின்ற பலர் அத்துலத்முதலியின்  அழகிய உறவு ஒன்று வந்து சேர அதே கூட்டம் தான் பின்னால் அலைந்தது .

நல்ல யதார்த்தமான கதை புத்தன் .

நன்றிகள் அர்ஜூன் ....வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும்.

On 30/01/2016 at 10:51 AM, Sasi_varnam said:

விமானப் பயணத்தின் போது ஏற்படும் சம்பவங்களை சுவாரஸ்யமாக எழுதி இருக்கிறீர்கள்.
நானே ஸ்ரீ லங்கனில் பறந்து ~ கட்டுநாயக்கா தளத்தில் இறங்கியது போல ஒரு உணர்வு.
அப்படியே கட்டுநாயக்கா, சீதுவ, ஜாஎள,  வத்தள , பிட்ட கொட்டுவ ... என்று உங்கள் பயணக் கதையை தொடருங்கள் ... 

"அம்மா ப்பா சிங்கள படு கேன ...கியளா வேடக் நஎ சகோதரயா ..."
  

நன்றிகள் சசி.....இப்ப கடுகதி வீதியை போட்டபிறகு வத்தளை ,ஜாஎல "ப‌டுகளை" பார்க்க ஏலாமல் கிடக்கு.....:rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 31/01/2016 at 11:38 AM, குமாரசாமி said:

புத்தன்! சும்மா சுண்டி விட்டமாதிரி ஒரு விசயத்தை சொல்லியிருக்கிறியள்.....நான் நெடுக சொல்லுற மாதிரி நீங்கள் ஒரு பேய்க்காய் :cool:

நன்றிகள் கு.சா ஐயா உங்களின் பாராட்டுக்கள்தான் எனது கிறுக்களுக்கு ஊக்கமாத்திரை

On 31/01/2016 at 1:50 PM, புங்கையூரன் said:

 

இப்போதெல்லாம்.. புத்தன்  'கிறுக்கல்' நிலையைத் தாண்டி... எழுத்தாளன் என்ற நிலைக்கு வளர்ந்து விட்டான் என்றே நினைக்கத் தோன்றுகின்றது!

தொடர்ந்து எழுதுங்கள், புத்தன்!

 

  

சிங்களத்தியை விட இந்த பாராட்டு என்னை உச்சத்திற்கே கொண்டு போயிற்று....நன்றிகள் புங்கை அண்ணா

On 31/01/2016 at 8:36 PM, அபராஜிதன் said:

புலம்பெயர் ஈழத்து இலக்கியவாதி புத்தன் வாழ்க வாழ்க :D

நன்றிகள் அபாஜிதன்....ஒரு சிறு திருத்தம்...சிட்னி இலக்கியவாதி....புத்தன் வாழ்க‌

On 31/01/2016 at 0:42 AM, Kavallur Kanmani said:

நளினம் கலந்த இயல்பான எழுத்து நடை புத்தனுக்கு உாிய தனித்தன்மை. கதையை தொடருங்கள். செய்திக்காகக் காத்திருக்கும் எம் எதிா்பாா்ப்பை ஏமாற்றாமல்....... , தொடருங்கள் புத்தன் பாராட்டுக்கள்

நன்றிகள் காவ‌லூர் கண்மணி .....சிறு சிறு அத்தியாயமாக தொடர்கிறேன்......

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பல்லில்லாத பொக்கை வாயையே வாயெல்லாம் பல்லென்று நினைக்கிற வயதில முப்பத்தஞ்சு வயசு கூட பதினாறு வயசாத்தான் தெரியும். tw_blush:tw_blush:tw_blush: ஸ்கொட்ச் இறங்கினால் முப்பத்தஞ்சு ஐம்பத்தஞ்சு ஆகத் தெரிந்திருக்கும். அப்ப எல்லாம் கொள்கையளும் திரும்ப வந்திருக்கும்.!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புத்து பயணிகளை திருப்தி படுத்தவதற்காகவோ என்னவோ எல்லா இடங்களிலும் அழகிய பெண்களையே வேலைக்கு அமர்த்தியுள்ளனர்.

இம் முறை பயணத்தில் நானும் ரொம்ப படித்துவிட்டேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 3.2.2016 at 0:12 AM, கிருபன் said:

பல்லில்லாத பொக்கை வாயையே வாயெல்லாம் பல்லென்று நினைக்கிற வயதில முப்பத்தஞ்சு வயசு கூட பதினாறு வயசாத்தான் தெரியும். tw_blush:tw_blush:tw_blush: ஸ்கொட்ச் இறங்கினால் முப்பத்தஞ்சு ஐம்பத்தஞ்சு ஆகத் தெரிந்திருக்கும். அப்ப எல்லாம் கொள்கையளும் திரும்ப வந்திருக்கும்.!

எங்கடை நிலைமை தெரிஞ்சும் வேணுமெண்டு வெறுப்பேத்துறார்mad02171.gif

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • போட்டியில் கலந்துகொண்ட @nunavilan உம், இறுதி நிமிடத்தில் கலந்துகொண்ட @புலவர் ஐயாவும் வெற்றிபெற வாழ்த்துக்கள்😀      போட்டியில் இணைந்தவர்கள்: @பையன்26 @முதல்வன் @suvy @ஏராளன் @நிலாமதி @Ahasthiyan @ஈழப்பிரியன் @kalyani @கந்தப்பு @கறுப்பி @Eppothum Thamizhan @வாதவூரான் @கிருபன் @நீர்வேலியான் @goshan_che @nunavilan @புலவர்
    • இந்தப்பாட்டி காலத்தில் இணைய, முகநூல் வசதியிருந்திருந்தால் எப்படியிருந்திருக்கும்..... கற்பனை பண்ணிப்பார்க்கிறேன். சிறியர்... உங்களுக்கும்  கற்பனை பொறி தட்டியிருக்குமே..... அதை பகிருங்கள் காண ஆவலாக இருக்கிறேன்!
    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
    • இவர்களும் அவ்வப்போது நித்திரையால் எழும்பி கனவு கண்டவர்கள் போல்  குரலெழுப்பி விட்டு மறுபடியும் உறங்கு நிலைக்கு போய் விடுவார்கள். சேர்வதேச விசாரணை இல்லையென்று அடித்துக்கூறிவிட்டார் மாத்தையா, இவர்கள் காதுக்கு இன்னும் எட்டவில்லையோ செய்தி அலறித்துடிக்கிறார்கள். தேர்தலுக்காக இவர்களை யாராவது இயக்குகிறார்களா எனும் சந்தேகமாய் இருக்கு.
    • LSG vs CSK: லக்னௌ விரித்த வலையில் விழுந்த சிஎஸ்கே - ஆட்டத்தை முடித்த 3 விக்கெட் கீப்பர்கள் பட மூலாதாரம்,SPORTZPICS 2 மணி நேரங்களுக்கு முன்னர் வலிமையான பேட்டிங் வரிசை, பந்துவீச்சு பலம் இருந்தும் லக்னௌவின் தொடக்க வரிசையை அசைக்கக்கூட சிஎஸ்கே அணியால் முடியவில்லை. அதேநேரம், சிஎஸ்கே பேட்டர்கள் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக வியூகம் அமைத்து களத்தில் செட்டில் ஆகவிடாமல் லக்னெள அணி திட்டமிட்டுக் காலி செய்துள்ளது. சிஎஸ்கே அணியை கடினமாகப் போராடி லக்னெள அணி வீழ்த்தவில்லை. கனகச்சிதமான திட்டங்களை முன்கூட்டியே வகுத்து, எந்த பேட்டரை எப்படி வீழ்த்த வேண்டுமெனத் தீர்மானித்து தங்கள் திட்டங்களை வெற்றிகரமாகச் செயல்படுத்தி வெற்றி கண்டுள்ளது. ஆட்டத்தைப் பார்த்தபோது, லக்னெள அணியின் பந்துவீச்சு, ஃபீல்டிங், பேட்டிங்கில் இருந்த ஒழுக்கம், கட்டுக்கோப்பு அனைத்தும் சிஎஸ்கே அணியில் மிஸ்ஸிங். தொடக்க வரிசை பேட்டர்களைகூட வீழ்த்துவதற்கு சிரமப்பட்டது, அதன்பின்பும் நெருக்கடி கொடுக்க முடியாமல் தோல்வியை ஒப்புக்கொண்டுள்ளது. லக்னெள அணியின் 3 விக்கெட் கீப்பர்களான கேப்டன் கே.எல்.ராகுல், குயின்டன் டீ காக், நிகோலஸ் பூரன் ஆகிய 3 பேரும் சேர்ந்து ஒட்டுமொத்த சிஎஸ்கே அணியின் ஆட்டத்தை முடித்துவிட்டனர். லக்னெளவில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 34வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது லக்னெள சூப்பர் ஜெயின்ட்ஸ் அணி.   பட மூலாதாரம்,SPORTZPICS முதலில் பேட் செய்த சிஎஸ்கே அணி 6 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் சேர்த்தது. 177 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய லக்னெள அணி 6 பந்துகள் மீதமிருக்கையில் 2 விக்கெட்டுகளை இழந்து 180 ரன்கள் சேர்த்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம், லக்னெள அணி 7 போட்டிகளில் 4 வெற்றி, 3 தோல்வி என 8 புள்ளிகளுடன் 5வது இடத்தில் இருக்கிறது. 8 புள்ளிகள் பெற்றாலும் நிகர ரன்ரேட்டில் 0.123 என்று குறைவாகவே இருக்கிறது. அடுத்தடுத்த போட்டிகளில் பெறும் வெற்றி நிகர ரன்ரேட்டை உயர்த்தும். அதேநேரம், சிஎஸ்கே அணி 7 போட்டிகளில் 4 வெற்றி, 3 தோல்விகள் என 8 புள்ளிகளுடன் 3வது இடத்தில் நீடிக்கிறது. சிஎஸ்கே அணியின் நிகர ரன்ரேட் வலுவாக இருப்பதால், 0.529 எனத் தொடர்ந்து 3வது இடத்தைத் தக்க வைத்துள்ளது. லக்னெள அணியின் வெற்றிக்கு கேப்டன் கே.எல்.ராகுல்(82), டீகாக்(54) முதல் விக்கெட்டுக்கு 134 ரன்கள் சேர்த்து வலுவான அடித்தளம் அமைத்து, இதுதவிர கேப்டனுக்குரிய பொறுப்புடன் கே.எல்.ராகுல் பேட் செய்து 82 ரன்கள் சேர்த்தது முக்கியக் காரணங்களில் ஒன்று. இரு பேட்டர்களும், சிஎஸ்கே பந்துவீச்சாளர்கள் செட்டில் ஆவதை அனுமதிக்காமல் ஷாட்களை அடித்து அழுத்தம் கொடுத்து வந்தனர். நடுப்பகுதி ஓவர்களில் சிஎஸ்கே எப்போதுமே நன்றாகப் பந்துவீசக் கூடியது. இதைத் தெரிந்து கொண்டு ராகுல், டீகாக் நடுப்பகுதி ஓவர்கள் யார் வீசினாலும் அந்த ஓவர்களை குறிவைத்து அடித்ததால், சிஎஸ்கேவின் அந்த உத்தியும் காலியானது. லக்னெள ரன்ரேட்டை குறையவிடாமல் கொண்டு சென்ற ராகுல், டீகாக் ஒரு கட்டத்தில் கவனக் குறைவால் விக்கெட்டை வீழ்த்தினர் என்றுதான் சொல்ல வேண்டும். சிஎஸ்கே பந்துவீச்சு சிறப்பாக இருந்தது எனக் கூறுவது சரியானதாக இருக்க முடியாது. குறிப்பிடப்பட வேண்டிய அம்சமாக, சிஎஸ்கே அணிக்காக லக்னெள அணி “ஹோம் ஓர்க்” செய்து முன்கூட்டியே திட்டமிட்டுக் களமிறங்கியது. அந்தத் திட்டங்களை வெற்றிகரமாகச் செயல்படுத்தியது வெற்றிக்கு முக்கியக் காரணம். ஏனென்றால், லக்னெள அணியின் சரியான திட்டமிடலால்தான், 90 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து சிஎஸ்கே அணி தடுமாறியது. கடைசி 4 ஓவர்களில் லக்னெள பந்துவீச்சாளர்கள் துல்லியமாகப் பந்துவீசியிருந்தால், சிஎஸ்கே அணி 120 ரன்களில் சுருண்டிருக்கும். மொயீன் அலியை ஹாட்ரிக் சிக்ஸ் அடிக்க அனுமதித்தது, தோனியின் கடைசி நேர கேமியோ ஆகியவை சிஎஸ்கே ஸ்கோரை உயர்த்தியது. ஒட்டுமொத்தத்தில் சிஎஸ்கேவுக்கு எதிராக லக்னெள அணி செயல்படுத்திய திட்டங்களை சிஎஸ்கே பேட்டர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை.   பதிலடி கொடுத்த ராகுல்-டீகாக் பட மூலாதாரம்,SPORTZPICS இந்த ஐபிஎல் சீசனில் லக்னெள தொடக்க ஆட்டக்காரர்கள், டீ காக், கே.எல்.ராகுல் இருவரும் பவர்ப்ளே ஓவர்களை சரியாகப் பயன்படுத்தவில்லை, பவர்ப்ளே ஓவர்களுக்குள் ஆட்டமிழந்து விடுகிறார்கள், விரைவாக ரன்களை சேர்ப்பதில்லை என்ற விமர்சனங்கள் எழுந்தன. கடந்த 6 ஆட்டங்களில் பெரும்பாலும் நிகோலஸ் பூரனின் அதிரடியால்தான் பெரிய ஸ்கோர் கிடைத்தது என்று கிரிக்கெட் விமர்சகர்கள் விமர்சித்தனர். ஆனால், நேற்றைய ஆட்டத்தில் கே.எல்.ராகுல், டீகாக் இருவரும் அந்த விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுத்தனர். முதல் விக்கெட்டுக்கு 134 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். 10.5 ஓவர்களில் இருவரால் லக்னெள அணி 100 ரன்களை தொட்டது. கே.எல்.ராகுல் அதிரடியாக பேட் செய்ய, டீகாக் வழக்கத்துக்கு மாறாக மிகவும் நிதானமாக தேவையான ஷாட்களை மட்டும் ஆடினார். ராகுல் ஷார்ட் பால் வீசப்பட்டால் நம்பிக்கையுடன் பிக்-அப் ஷாட்களை ஆடி சிஎஸ்கே பந்துவீச்சை வெளுத்து வாங்கினார். குறிப்பாக பதீராணா பலமுறை யார்கர் வீச முயன்றும் ராகுல் அவர் பந்துவீச்சை நொறுக்கினார். தீபக் சஹர் வீசிய 2வது ஓவரிலிருந்தே ராகுல் பவுண்டரிகளாக விளாசத் தொடங்கி, மிட்விக்கெட்டில் சிக்ஸரும் அடித்து சிஎஸ்கேவுக்கு அதிர்ச்சி அளித்தார். முஸ்தபிசுர் ரஹ்மான் பந்துவீச வந்தபோதும் அவரையும் ராகுல் விட்டு வைக்கவாமல் பவுண்டரிகளாக விளாசினார். பட மூலாதாரம்,SPORTZPICS பவர்ப்ளேவில் 5வது, 6வது ஓவரில் ராகுல், டீகாக் இருவரும் இணைந்து சிஸ்கர், பவுண்டர்களாக விளாசியதால் விக்கெட் இழப்பின்றி பவர்ப்ளேவில் லக்னெள 54 ரன்கள் சேர்த்தது. ஜடேஜா வீசிய 9வது ஓவரில் டீ காக் அடித்த ஷாட்டை ஷார்ட் தேர்டு திசையில் இருந்த பதீராணா எளிமையான கேட்சை பிடிக்கத் தவறவிட்டார். இந்த கேட்ச் தவறவிட்டதற்கான விலையை கடைசியில் சிஎஸ்கே கொடுக்க நேர்ந்ததது. ஜடேஜாவின் அடுத்த ஓவரில் டீகாக் பவுண்டரியும், ராகுல் பவுண்டரியும் விளாசி, ராகுல் 31 பந்துகளில் அரைசதத்தை எட்டினார். நிதானாமாக ஆடிய டீகாக் 41 பந்துகளில் அரைசதம் அடித்தார். இருவரையும் பிரிக்க முடியாமல் கேப்டன் கெய்க்வாட், தோனி இருவரும் பல பந்துவீச்சாளர்களை மாற்றிப் பயன்படுத்தியும் ஒன்றும் நடக்கவில்லை. முஸ்தபிசுர் வீசிய 15வது ஓவரின் கடைசிப் பந்தில் ஸ்லோ பவுன்ஸரை அடிக்க முற்பட்டு, டீகாக் தேவையின்றி தனது விக்கெட்டை இழந்தார். அடுத்ததாக, பதீராணா பந்துவீச்சில் ராகுல் அடித்த ஷாட்டில் பேக்வேர்ட் பாயின்ட் திசையில் ஜடேஜா அற்புதமான கேட்சை பிடித்தார். இரு விக்கெட்டுகள் விழுந்ததால் சிஎஸ்கே ஏதேனும் மாயம் செய்யும் என ரசிகர்கள் நினைத்தனர். ஆனால், நிகோலஸ் பூரன், ஸ்டாய்னிஷ் ஜோடி அதற்கு இடம் அளிக்கவில்லை. அதிலும் நிகோலஸ் பூரன் ஒரு சிக்ஸர், 3 பவுண்டரிகள் அடித்து சிஎஸ்கே திட்டத்தை உடைத்தெறிந்தார். பூரன் 22 ரன்களிலும், ஸ்டாய்னிஷ் 7 ரன்களிலும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.   கட்டுக்கோப்பான பந்துவீச்சு பட மூலாதாரம்,SPORTZPICS லக்னெள அணியின் பந்துவீச்சு நேற்றைய ஆட்டத்தில் நேர்த்தியாகவும், கட்டுக்கோப்பாகவும் இருந்தது. யாஷ் தாக்கூர், மோசின்கான், ரவி பிஸ்னோய் 3 பேரும் கடைசி 4 ஓவர்களில்தான் ரன்களை வழங்கினர். மற்ற வகையில் தொடக்கத்தில் சிஎஸ்கே பேட்டர்களுக்கு கொடுத்த நெருக்கடியை விடாமல் பிடித்துச் சென்றனர். நடுப்பகுதி ஓவர்களில் சிஎஸ்கே பேட்டர்கள் விஸ்வரூபம் எடுக்கலாம் என்பதைக் கருதி, குர்ணல் பாண்டியா, ரவி பிஸ்னோய், ஸ்டாய்னிஷ், மாட் ஹென்றி, என வேகப்பந்துவீச்சு, சுழற்பந்துவீச்சு எனக் கலவையாக பந்துவீசி பேட்டர்களை செட்டில் ஆகவிடாமல் தடுத்தனர். இந்த சீசனில் நடுப்பகுதி ஓவர்களில் சிறப்பாக பேட் செய்து வரும் ஷிவம் துபே விக்கெட்டை ஸ்டாய்னிஷ் எடுத்துக் கொடுத்தார். ரூ.8 கோடிக்கு வாங்கப்பட்ட உ.பி. வீரர் சமீர் ரிஸ்வியை பிஸ்னோய் பந்துவீச்சில் ராகுல் ஸ்டெம்பிங் செய்து வெளியேற்றி கட்டுக்கோப்பாகக் கொண்டு சென்றனர். இதனால் பவர்ப்ளே ஓவர்களில் சிஎஸ்கே அணி விக்கெட்டுகளை இழந்து 51 ரன்கள் சேர்த்த நிலையில், அடுத்த 10 ஓவர்களில் 62 ரன்கள் மட்டுமே சேர்த்தது. 7வது ஓவரிலிருந்து 13வது ஓவர் வரை சிஎஸ்கே அணி 36 ரன்கள் மட்டுமே சேர்த்தது. அதில் ஒரு பவுண்டரிகூட அடிக்கவிடாமல் லக்னெள பந்துவீச்சாளர்கள் துல்லியமாகவும், நெருக்கடி தரும் விதத்திலும் பந்துவீசினர். நடுப்பகுதி 10 ஓவர்களில் 5 ஓவர்களை ரவி பிஸ்னோய், குர்ணல் பாண்டியா இருவரும் பந்துவீசி 29 ரன்கள் மட்டுமே கொடுத்தனர். அதிலும் செட்டில் ஆன பேட்டர் ரஹானே விக்கெட்டையும் குர்ணல் பாண்டியா வீழ்த்தினார்.   ஹோம் ஓர்க் செய்ததன் பலன் பட மூலாதாரம்,SPORTZPICS லக்னெள பந்துவீச்சு குறித்து கேப்டன் ராகுல் கூறுகையில், “சிஎஸ்கே போன்ற வலிமையான அணியை எதிர்கொள்ள நாங்கள் திட்டமிட்டுக் களமிறங்கினோம். எங்கள் திட்டங்களைச் சிறிதுகூட தவறுசெய்யாமல் செயல்படுத்தினோம். எந்த பேட்டரையும் செட்டில் ஆகவிடாத வகையில் பந்துவீச வேண்டும் என முடிவு செய்தோம். அதற்கு ஏற்றார்போல் நடுப்பகுதியில் சுழற்பந்துவீச்சு, வேகப்பந்துவீச்சு என மாறி, மாறி பந்துவீசி, ஒரு பந்துவீச்சுக்கு பேட்டர் செட்டில் ஆகாமல் தடுத்தோம். எங்கள் திட்டங்களுக்குத் தக்க வகையில் ஆடுகளம் இருந்தது, சிஎஸ்கே பேட்டர்களும் அதற்கேற்ப எதிர்வினையாற்றியதால் எளிமையாக முடிந்தது. என்ன விதமான உத்திகளைக் கையாள்வது, பந்துவீசுவது, எவ்வாறு பேட் செய்வது, என்பதை முன்கூட்டியே ஆலோசித்து, ஹோம் ஓர்க் செய்துதான் களமிறங்கினோம். வேகப்பந்துவீச்சு, சுழற்பந்துவீச்சு எனக் கலந்து பயன்படுத்த வேண்டும், குறிப்பாக சிஎஸ்கேவின் எந்த பேட்டரையும் செட்டில் ஆகவிடாமல் பந்துவீச முடிவு செய்தோம். ஒவ்வொரு வீரரும் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பணியை சிறப்பாகச் செய்தனர். குறிப்பாக பந்துவீச்சாளர்கள் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பணியை சிறப்பாகச் செய்தனர். இல்லாவிட்டால், அணி ஒட்டுமொத்தமாக வீணாகியிருக்கும். திட்டங்களைச் சிறப்பாகச் செயல்படுத்தினோம், தீவிரமாகப் பயிற்சி எடுத்ததன் பலன் கிடைத்தது,” எனத் தெரிவி்த்தார்.   சிஎஸ்கே சறுக்கியது எங்கே? பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே அணியின் மோசமான தொடக்க பேட்டர்கள், நடுப்பகுதி பேட்டர்களின் சொதப்பல், பல் இல்லாத பந்துவீச்சு, மோசமான ஃபீல்டிங் ஆகியவை தோல்விக்கான காரணங்கள். ரச்சின் ரவீந்திரா முதல் இரு போட்டிகளைத் தவிர வேறு எந்த ஆட்டத்திலும் ஜொலிக்கவில்லை. கான்வே இல்லாத வெற்றிடத்தை சிஎஸ்கே நன்கு உணர்கிறது. ரஹானே இதுவரை தொடக்க ஆட்டக்காரராக களமிறங்காத நிலையில் இப்போது வழங்கப்பட்டிருக்கும் பணியால் புதிய பந்தில் பேட் செய்ய முடியாமல் திணறுவது தெரிகிறது. புதிய பந்து நன்றாக ஸ்விங் ஆகும்போது, அதை டிபெண்ட் செய்து ஆடுவதற்கே ரஹானே முயல்கிறாரே தவிர, பவர்ப்ளேவுக்கு ஏற்றார்போல் அடித்து ஆட முடியவில்லை. ஆக சிஎஸ்கே அணியின் தொடக்க வரிசை சிக்கலில் இருக்கிறது. கேப்டன் கெய்க்வாட் நேற்றைய ஆட்டத்தில் ஆங்கர் ரோல் எடுக்காமல் 17 ரன்னில் யாஷ் தாக்கூர் பந்துவீச்சில் அவுட்ஸ்விங்கில் எட்ஜ் எடுத்து ஆட்டமிழந்தது பெரிய பின்னடைவு. பவர்ப்ளே ஓவர்களுக்குள் 51 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்தது, அடுத்த 31 ரன்கள் சேர்ப்பதற்குள் 3 விக்கெட்டுகளை இழந்தது என சிஎஸ்கே பேட்டர்கள் ஒட்டுமொத்தமாகத் தவறு செய்தனர். பட மூலாதாரம்,SPORTZPICS ஜடேஜா 4வது வீரராக களமிறக்கப்பட்டாலும், அவர் சிங்கில், 2 ரன்கள் எடுக்கத்தான் முக்கியத்துவம் அளித்தாரே தவிர, பவுண்டரி, சிக்ஸருக்கு பெரிதாக முயலவில்லை. டி20 போட்டிகளில் பவுண்டரி, சிக்ஸர்தான் அணியின் ஸ்கோரை பெரிதாக உயர்த்தும், ரன்ரேட்டை குறையவிடாமல் கொண்டு செல்லும். அதைச் செய்ய ஜடேஜா, மொயீன் அலி தவறிவிட்டனர். நடுப்பகுதி ஓவர்களில் மொயீன் ஜடேஜா களத்தில் இருந்தபோதிலும் 7வது ஓவரில் இருந்து 13வது ஓவர்கள் வரை ஒருபவுண்டரிகூட சிஎஸ்கே அடிக்காதது ரன்ரேட்டை கடுமையாக இறுக்கிப் பிடித்தது. ஜடேஜா ஆங்கர் ரோல் எடுத்து 34 பந்துகளில் அரைசதம் அடித்தாலும், அவரிடம் இருந்து தேவையான பவுண்டரிகள், சிக்ஸர்கள் அரிதாகவே வந்தன. மொயீன் அலி தொடக்கத்தில் நிதானமாக ஆடி கடைசி நேரத்தில் பிஸ்னோய் ஓவரில் ஹாட்ரிக் சிக்ஸர்கள் அடித்து 30 ரன்களில் ஆட்டமிழந்தார். சிஎஸ்கே அணியில் நேற்று ஜடேஜா, மொசின் அலி என இரு சுழற்பந்துவீச்சாளர்கள் இருந்தும் ஜடேஜாவுக்கு மட்டுமே வாய்ப்பு கிடைத்தது. மொசின் அலி ஒரு ஓவர் வீசி 5 ரன்கள் என சிறப்பாகப் பந்துவீசியும் தொடர்ந்து வாய்ப்பு வழங்கவில்லை. ஆனால், சுமாராகப் பந்துவீசிய தேஷ்பாண்டே, முஸ்தபிசுர் இருவருக்கும் தொடர்ந்து வாய்ப்புகள் வழங்கப்பட்டன. மொசின் அலிக்கு கூடுதலாக சில ஓவர்கள் வழங்கி இருக்கலாம்.   பல் இல்லாத பந்துவீச்சு பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே அணியில் முஸ்தபிசுர் ரஹ்மானை தவிர மற்ற பந்துவீச்சாளர்கள் அனைவரும் பேட்டர்களுக்கு நெருக்கடி தரும் அளவுக்கு அனைத்து ஆடுகளங்களிலும் துல்லியமாகப் பந்துவீசுவோர் அல்ல. பந்துவீச்சில் வேரியேஷன், ஸ்லோ பவுன்ஸர்கள், நக்குல் பால், ஷார்ட் பால், பவுன்ஸர் என வேரியேஷன்களை வெளிப்படுத்தி பேட்டர்களுக்கு நெருக்கடி கொடுக்கும் அளவுக்கு பந்துவீச்சு இல்லை என்பதுதான் நிதர்சனம். சிஎஸ்கே அணி தனது வெற்றியை பந்துவீச்சிலும் சரி, பேட்டிங்கிலும் சரி நடுப்பகுதி ஓவர்களில்தான் எதிரணியிடம் இருந்து கபளீகரம் செய்கிறதே தவிர டெத் ஓவர்களிலோ அல்லது பவர்ப்ளே ஓவர்களிலோ அல்ல. அதிலும் மே 1ஆம் தேதிக்குப் பின் முஸ்தபிசுர் ரஹ்மான் சொந்த நாட்டுக்குத் திரும்புகிறார் என்பதால், சிஎஸ்கே பந்துவீச்சு இன்னும் பலவீனமாகும். கான்வே தொடரிலிருந்து முழுமையாக விலகிவிட்டது பேட்டிங்கில் சிஎஸ்கேவுக்கு பெரிய அடி. அவருக்குப் பதிலாக இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளர் ரிச்சார்ட் கிளீசனை சிஎஸ்கே வாங்கியுள்ளது. மே 1ஆம் தேதிக்குப் பின் முஸ்தபிசுர் சென்றபின் அவருக்குப் பதிலாக பந்துவீச்சாளரை வாங்க முக்கியத்துவம் அளிக்குமா அல்லது பேட்டருக்கு முக்கியத்துவம அளிக்குமா என்பது எதிர்பார்ப்பாக இருக்கிறது. பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கூறுகையில், “நாங்கள் பேட்டிங்கை நன்றாக ஃபினிஷ் செய்தோம். இன்னும் கூடுதலாக 15 முதல் 20 ரன்கள் சேர்த்திருக்க வேண்டும். பவர்ப்ளேவில் விக்கெட்டுகள் வீழ்த்த முடியாமல் இருக்கும் சிக்கலைத் தீர்க்க வேண்டும். அதற்கு விரைவாகத் தீர்வும் காண்போம். பவர்ப்ளேவில் விக்கெட் வீழ்த்தினால் நிச்சயமாக எதிரணி கவனமாக ஆடுவார்கள், ரன் சேர்ப்பும் குறையும். இந்த ஆட்டத்தில் தொடக்கத்தில் சரியாக பேட்டிங் செய்ய முடியால் திணறியது, 15வது ஓவர் வரை சிரமம் நீடித்தது. சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தோம். இதுபோன்ற ஆடுகளங்களில், இரவு நேர பனிப்பொழிவு இருப்பதால், 190 ரன்களாவது சேர்ப்பது பாதுகாப்பானது,” எனத் தெரிவித்தார். தோனியின் 101 மீட்டர் சிக்ஸர் சிஎஸ்கே அணியின் முன்னாள் கேப்டன் தோனி, இந்த சீசன் முழுவதும் கலக்கி வருகிறார். லக்னௌ ரசிகர்களும் தோனியின் ஆட்டத்தைக் கண்டு ரசித்தனர். 9 பந்துகளைச் சந்தித்த தோனி 2 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என 28 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார். அதிலும் யாஷ் தாக்கூர் வீசிய கடைசி ஓவரில் லாங்-ஆன் திசையில் இமாலய சிக்ஸர் விளாசினார் இந்த சிக்ஸர் 101 மீட்டர் உயரம் சென்றது. இந்த ஐபிஎல் சீசனிலேயே அதிக உயரத்துக்கு அடிக்கப்பட்ட, மிகப்பெரிய சிக்ஸர் இதுதான். தோனியின் கடைசி நேர கேமியோவில் 28 ரன்கள், பிஸ்னோய் ஓவரில் மொயீன் அலி ஹாட்ரிக் சிக்ஸர் உள்பட 30 ரன்களும் இல்லாவிட்டால் சிஎஸ்கே ஸ்கோர் 125 ரன்கள்தான் என்பது குறிப்பிடத்தக்கது. https://www.bbc.com/tamil/articles/cx03y922278o
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.