Jump to content

மாகாணசபையால் வைரமுத்துவிற்கு எத்தனை கோடி வழங்கப்பட்டது(காணொளி)


Recommended Posts

 

 
green-lizard-in-the-rainforest.jpg
இலங்கை முல்லைத்தீவில் வடக்கு மாகாண
 
முதலமைச்சர் விக்கினேஸ்வரன் தலைமையில் உழவர் பெருவிழா கொண்டாடப்பட்டது. அதில் சிறப்பு விருந்தினராகக் கவிஞர் வைரமுத்து கலந்துகொண்டார். 
 
இந்த செய்தியினை நாமும் வெளியிட்டிருந்தோம் இருந்தும் கவிஞர் வைரமுத்து அவர்கள் கலந்து கொண்டமை தொடர்பில் சில யாழ் ஊடகநண்பர்கள் உட்பட சிலர் தங்கள் முகநூல்களில் கவிஞர் வைரமுத்து தொடர்பில் இறுதி யுத்தம் தொடர்பிலும் விமர்சனங்களை வைத்துவருகின்ற நிலையில் உண்மையிலேயே வைரமுத்துவை எதற்காக அழைக்க வேண்டும்? அவரை அழைப்பதற்கு வடமாகாணசபையால் பல இலட்சம்ரூபா வழங்கப்பட்டதாகவும் பிரச்சாரங்கள் முன்னெடுக்கப்படுகின்றனவே என்ற கேள்விகளை இது தொடர்பில் ஏற்பாட்டாளர்களில் ஒருவரான வடமாகாண விவசாய அமைச்சர் ஐங்கரநேசன் அவர்களை தொடர்புகொண்டு கேட்டபோதே அவர் மேற்படி தகவலை தந்தார்.
 
 

உண்மையிலேயே இந்தியாவில் இருக்கின்ற முதன்மை கவிஞர்கள் இருவரில் ஒருவரை அழைத்து எமது உழவர்களை கௌரவிக்க முடிவெடுத்தோம் என்றும் அந்த அழைப்பை திரு வைரமுத்து அவர்களிடம் தெரிவித்தபோது அவர் அதனை ஏற்றுக்கொண்டதோடு அதற்கு தனக்கு எந்த கொடுப்பனவோ கௌரவமோ தேவையில்லை என்றும் விமானச் சீட்டு உட்டபட அனைத்து செலவுகளையும் தானே ஏற்று வருவதாகவும் தெரிவித்தாக அமைச்சர் தெரிவித்தார். 
 
வைரமுத்துவின் பிறந்த தினமான யூலை 13ந்திகதி தமிழ்நாட்டில் நடைபெறவுள்ள ‘கவிஞர்கள் திருநாள்’ நிகழ்வில் ஈழத்துக் கவிஞர்கள் இருவருக்கு விருதுடன் 1 இலட்சம் இந்திய ரூபா பணப்பரிசும் வழங்கி கொளரவிக்கப்படும் என கவிப்பேரரசு வைரமுத்து அறிவித்துள்ளார்.

யாழ். நூலக வளாக கேட்போர் கூடத்தில் கவிப்பேரரசு வைரமுத்து யாழ்ப்பாண இலக்கியவாதிகள் மற்றும் இலக்கிய ஆர்வலர்களைச் சந்தித்தார்.

எழுகலை இலக்கியப்பேரவையின் ஏற்பாட்டில் நடந்த இச்சந்திப்பில் ஏற்புரை வழங்கிய கவிஞர் வைரமுத்து பாராபட்சம் பார்க்காமல் ஈழத்திலிருந்து இரு திறமையான கவிஞர்களைத் தேர்வு செய்து தரும்படி ஏற்பாட்டாளர்களைக் கேட்டுக்கொண்டார். பரிசுத் தொகையுடன் விருது பெற வரும் இரு கவிஞர்களுக்கான பயணச் செலவையும் தானே ஏற்பதாக கூட்டத்தினரின் கரகோசத்துக்கு மத்தியில் கவிஞர் அறிவித்தார்.

கவிஞர் கை.சரவணனின் தலைமையில் இடம்பெற்ற இச் சந்திப்பில் வரவேற்பு கவியினை திருமதி சித்திரா பிரசன்னா வழங்கினார்.வாழ்த்துக் கவியினை வேலணையூர் சுரேஸ் வழங்கினார். தொடர்து யாழ்.பல்கலைக்கழக பேராசிரியர் ராஜேஸ்வரன் , அரசறிவியல் பேராசிரியர் கே.ரீ கணேசலிங்கன் ஆகியோர் கருத்துரைகளை வழங்கினர்.
 
 

குறிப்பு- எமது அடுத்த பதிவு கவிஞர் வைரமுத்து ஈழத்திற்காக என்ன செய்தார்? என்ற விபரமான கருப்பொருளில் கட்டுரை நாளை வெளிவரும் என்பதை வாசகர்களுக்கு அறியத்தருகின்றோம்.

http://www.tamilkingdom.com/2016/01/27.html

தொடர்புடைய முன்னைய செய்தி
 
தமிழர்களின் வலிகளை ஈழ மகாகாவியமாக எழுதப்போகின்றேன்”-கவிஞர் வைரமுத்து(காணொளி)
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.