Jump to content

உறவுகள்: செய்யும் பணி விரும்பு!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
stress_2698043f.jpg
 

வணக்கம் அம்மா. நான் 25 வயது ஆண். கல்லூரி முடித்துவிட்டு தற்போது மென்பொருள் நிறுவனம் ஒன்றில் பணியாற்றிக் கொண்டிருக்கிறேன். ஓரளவு நல்ல சம்பளம் கிடைக்கிறது. இன்னும் திருமணமாகவில்லை.

என்னுடைய பணியில் எந்த ஒரு சவால்களும் இல்லை. மேலும் மன அழுத்தம் தரக் கூடிய அளவுக்கு வேலைப் பளுவும் இல்லை. இந்த மென்பொருள் பணி எனக்குச் சுத்தமாகப் பிடிக்கவில்லை. அத‌னால் சம்பளத்துக்காக மட்டுமே வேலை செய்வதாக எனக்குத் தோன்றுகிறது. இப்போதே வேலையை விட்டுவிடலாமா என்றும் கூடத் தோன்றுகிறது. ஆனால் வீட்டில் அதற்குப் பதில் சொல்லியாக வேண்டும் என்பதால், இப்போதைக்கு இதே வேலையிலேயே தொடரலாம் என்று நினைக்கிறேன்.

என்னுடைய கவலையெல்லாம் வருங்காலத்தில் நான் என்ன நிலையில் இருப்பேன் என்பதுதான். வருங்காலத்திலும் இதே நிறுவனத்தில் இதே பணியிலேயே தொடரலாமா அல்லது வேறு நிறுவனத்துக்கு மாறலாமா, அப்படி மாறினால் நல்ல சம்பளம் கிடைக்குமா, இல்லையெனில், இதே நிறுவனத்திலேயே தொடர்ந்தால் ஒருவேளை இந்த நிறுவனம் என்னை வேலையைவிட்டுத் தூக்கிவிட்டால் என்ன செய்வது என குழப்பத்தில் இருக்கிறேன். இதிலிருந்து விடுபட எனக்கு ஒரு ஆலோசனை சொல்லுங்கள்.

நண்பரே, மன அழுத்தம் அதிகமாக இருக்கும் மென்பொருள் பணியில் பளுவே இல்லாமல் ஜாலியாக ஊதியம் பெறும் அதிர்ஷ்டசாலி நீங்கள். வேலையைப் பிடித்தமானதாக மாற்றிக்கொள்ள என்ன வழி என்று பார்க்கலாமா?

தயானந்த ஸ்வாமிஜிக்குப் பாகற்காய் அறவே பிடிக்காதாம். விருப்பு, வெறுப்பிற்கு அப்பாற்பட்டு வாழ வேண்டும் என்று அவரது சிஷ்யர்களுக்கு உபதேசம் செய்யும்போது மனசாட்சி உறுத்தியதாம்! அன்றிலிருந்து பாகற்காய் பிடிக்காது எனும் எண்ணத்தை விட்டு, பிடிக்க வேண்டும் என்ற எண்ணத்தை வளர்த்துக் கொண்டாராம். பாகற்காயை விரும்பிச் சாப்பிட ஆரம்பித்தவுடன் அவருக்கே ஆச்சர்யமாகிவிட்டதாம்!

ரகசியம் இதுதான். பிடிக்கவில்லை என்பதைப் பிடிக்க வேண்டும் என்று மாற்றிக்கொள்வது. இன்றிலிருந்து இப்படி நினைக்க ஆரம்பியுங்கள். விரும்பி ஒரு வேலையைச் செய்யும் போது, சிறப்பாகச் செய்ய முடியும். சிறப்பாகச் செய்தால் பதவி உயர்வு அல்லது வேலை மாற்றம் சாத்தியமாகும்.

ஒருவருடைய சுயமதிப்பு அவரது ஊதியத்தைச் சார்ந்திருக்கும். அதனால், இன்னொரு வேலையைத் தேடிக்கொள்ளாமல் கையிலிருக்கும் வேலையை உதறுவது சரியில்லை. மென்பொருளில் தேர்ச்சி பெற்ற நீங்கள் இனிமேல் லைன் மாறுவது சாத்தியமா என்று ஆராயுங்கள்.

ஒரு ‘கரியர் கவுன்ஸில’ரைப் பார்த்து எந்த லைன் உங்களுக்கு உகந்தது என்று தெரிந்து கொள்ளலாம். அதன் பின் அந்த லைனுக்கு உங்களைத் தயார் செய்ய, மேற்கொண்டு படிக்கலாம். இவையனைத்தும் வேலையில் இருந்துகொண்டே செய்ய வேண்டியவை. படிப்பு முடிந்தபின் அதற்கு ஏற்ற வேலையில் அமரலாம். அதுவும் பிடிக்கவில்லையென்றால்...? நிதர்சனமான உண்மையைப் புரிய வைக்கவே நான் இவ்வளவையும் விளக்கினேன்!

‘கையிலிருக்கும் ஒரு பறவை, கூட்டிலிருக்கும் இரு பறவைகளை விட மேல்' என்பதையும், இக்கரைக்கு அக்கரை பச்சை என்பதையும் புரிந்து கொள்ளுங்கள். இப்போது பணிபுரியும் கம்பெனி பிடிக்கவில்லையென்றால், வேறொரு நிறுவனத்தில் சேரலாமே.

வணக்கம் அக்கா. நான் கல்லூரியில் எம்.டெக். படிக்கும்போது என் ஜூனியர் பெண் ஒருவரைக் காதலித்தேன். அப்போது அவள் பி.டெக். படித்து வந்தாள். நான் கடந்த நான்கு வருடங்களாக அவளைக் காதலித்து வருகிறேன். அவளும் என்னைக் காதலித்தாள்.

நான் வேலை காரணமாக இடையில் இரண்டு ஆண்டுகள் பெங்களூருவுக்குச் சென்றுவிட்டேன். அப்போதும் எங்கள் காதல் தொடர்ந்தது. அவள் கல்லூரிப் படிப்பை முடித்துவிட்டு மென்பொருள் நிறுவனம் ஒன்றில் வேலைக்குச் சென்று வந்தாள்.

அங்கு கம்பெனி பஸ்ஸில், ஒருவ‌ருடன் (அவருடைய வயது 35) பழக ஆரம்பித்தாள். அவர்களிருவரும் ஒரே இருக்கையில்தான் அமர்ந்து வருகிறார்கள் என்றும், அவருடன் மட்டுமே அவள் எப்போதும் பேசிக்கொண்டிருப்பதாகவும், இரவில் வெகுநேரம் அவருடன் ‘வாட்ஸ் அப்'பில் பேசுவதாகவும் எனக்குத் தகவல்கள் கிடைத்தன. இதனால் கோபமடைந்த நான் அவளைக் கண்டித்தேன்.

இதனால் என்னுடன் பேச வேண்டாம் என்று சொல்லிவிட்டாள். அந்த நபருடன் தொடர்ந்து பழகியதால் நாளடைவில் அது காதலாக மாறியது. ‘நாள் அவரைத்தான் காதலிக்கிறேன்' என்று சொல்லி என்னிடமிருந்து அவள் விலகிவிட்டாள். அவளும் அவரிடம் எங்கள் காதலைச் சொல்லவில்லை.

இதற்கிடையில் என்ன நடந்ததோ தெரியாது. இப்போது அவள் என்னிடம் ‘நான் தவறு செய்துவிட்டேன். என்னை மன்னித்துவிடுங்கள். என்னை ஏற்றுக்கொள்ளுங்கள்' என்று சொல்கிறாள். நான் என்ன முடிவெடுக்க வேண்டும் என்று தெரியாமல் தத்தளிக்கிறேன். நீங்கள் ஆலோசனை தர‌ வேண்டுகிறேன்.

காதல் அரும்பும் வயதில் ஆண், பெண் இருவரையுமே உணர்வுகளின் எழுச்சி ஆட்கொள்ளும். அதன் சொல்படிதான் நடப்பார்கள். இந்தக் காரணத்தாலேயே அவர்கள் எடுக்கும் முடிவுகள் தவறாக இருக்கும். சாலைப் போக்குவரத்துக்கு உள்ளதுபோல் சமிக்ஞைகள் காதலுக்கு இருந்தால் நன்றாக இருக்கும் அல்லவா? பச்சை, மஞ்சள், சிவ‌ப்பு என்று தோன்றும் நிறத்தைப் பொறுத்து, செல்லலாமா, நிதானிக்க வேண்டுமா, போகக் கூடாதா என்று தீர்மானிப்போம். குழப்பம் இருக்காது.

அந்தப் பெண்ணின் மனம் ஊசலாடி ஒரு நிலைக்கு இப்போது வந்திருந்தாலும், மறுபடியும் ஊசலாடாது என்று உறுதியாக உங்களால் சொல்ல முடியுமா? உங்களுடன் பழக ஆரம்பித்த பின், வேறு ஒரு ஆணுடன் அவர் சிரித்துப் பேசுவதைப் பார்த்தது உங்களுக்குச் சந்தேகம் வரலாம். இம்மியளவு சந்தேகம் இருந்தாலும், உறவு ஆரோக்கியமாக இருக்காது. நம்பிக்கையைவிட சந்தேகம் அதிகமிருந்தால், காதல் வலுவிழந்துவிடும்.

சந்தேகங்களைத் தாண்டி நம்பிக்கை மேலோங்கி இருந்தால், காதல் பலப்படும். உங்களுக்கு உறவைப் புதுப்பித்துக் கொள்ள ஆர்வம் இருக்கிறது. ஆர்வத்தை வெளிப்படையாகக் காட்டிக் கொள்ளாதீர்கள்! உடனேயே பச்சைக்கொடி காட்டிவிடாதீர்கள்! உங்களை விட்டுச் சென்றதற்கும், அவரை விட்டு வந்ததற்கும் காரணங்கள் என்ன என்று கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள்.

பெண்கள் செல்ஃபோன் மாதிரி. கையைப் பிடித்துக்கொண்டு பேசுவதை மிகவும் விரும்புவார்கள். ஆனால் தவறான ‘கீ'யை அமுக்கி விட்டால் போச்சு! மீண்டும் அதைச் செய்யாமலிருக்க இந்தத் தகவல்கள் உதவும்! அவருடைய எதிர்பார்ப்பு என்ன, எதிர்காலத்தில் உறவு செழிப்படைய என்ன செய்ய வேண்டும் என்றும் புரிந்துகொள்வீர்கள்.

ஒரு காதலர் சொன்னாராம், “உனது சிரிப்பு எனக்குப் பிடித்திருக்கிறது. அதற்கு நான் காரணமாக இருக்கும்போது, நான் பூரித்துப்போகிறேன்”. அதேபோல் பரஸ்பரம் இருவரும் மற்றவரை மகிழ்ச்சியாக வைத்திருக்க முயற்சி செய்யுங்கள்.

உளவியல் ஆலோசகர் பிருந்தா ஜெயராமனுடன் உரையாடலாம். உங்கள் கேள்விகள், எண்ணங்கள், குழப்பங்கள், உறவுச் சிக்கல்களைப் பகிர்ந்துகொள்ளுங்கள். முகவரி: இளமை புதுமை, தி இந்து, கஸ்தூரி மையம், 124, வாலாஜா சாலை, சென்னை-600 002. மின்னஞ்சல்: ilamaiputhumai@thehindutamil.co.in

http://tamil.thehindu.com/society/lifestyle/%E0%AE%89%E0%AE%B1%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/article8112389.ece

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பகிர்வுக்கு நன்றி தமிழரசு....!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நல்ல செயல் செய்பவர்கள் உயர்ந்த குலம் , நாசவேலை செய்பவர்கள் செயலால் தாழ்ந்த குலம் . அதைத்தான் குலவழக்கம் என்றேன் . சுமாவினை இன்னும் கேவலமாக தான் நான் சொல்வேன் , பொதுவெளி மரியாதைக்காக இத்துடன் முடிக்கிறேன் .... என் அயல் ஊர் தான் அவர், சந்து பொந்து எல்லாம் தெரியும் அவரை பற்றி. ஒரு நாகரீகத்துக்காக வேண்டாம் .
    • எனக்கு பெரேரா அண்ட் சன்ஸ் களில் நடந்ததில்லை. ஆனால் புதுக்கடையில் இரு பெண்கள், ஒருவர் மத்திய வயது இன்னொருவர் வயசாளி, சாப்பிட்டு கொண்டிருக்கும் போது வந்து கையை நீட்டுவார்கள். அசெளகரியம்தான் ஆனால் aggressive begging என சொல்லமுடியாது. அதே போல் ரோயல் பேக்கரி அடியிலும் ஒரு ஐயா நிரந்தர டியூட்டி. நிற்க, இது 90,2000,2010 களிலும் இருந்தது. எனது கேள்வி -  இப்போ கூடியுள்ளதாக உணர்கிறீர்களா? எத்தனை சதவீதத்தால்? பிகு என்னுடன் இலண்டன் - இலங்கை வந்த நண்பரை இன்று காலை கேட்டேன். 10% அளவில் கூடி உள்ளதாக அவர் நினைக்கிறார். ப் பா….பெரிய ஆள்தான் வாப்போ😀. சும்மா ஓளட் போடும் ஶேர்யக்ஹ் கணக்கா கம கமப்பிங்க போல🤣 எத்தனை வருடம் கழித்து போகிறீர்கள் ? யாழ் களத்தில் ஒரு சிட்சுவேஷன் ரிப்போர்ட் போட்டு விடவும்🙏. இனிய பயணமாகட்டும்.
    • அப்போ  நான் எப்படியும்  தப்பிவிடுவேன் லிஸ்டில் நம்மடை  (Chanel, Dior) சரக்கு இல்லை   வரும் 24 அன்று இலங்கைக்கு 2 மாத விஜயம் யாழ்கள உறவுகள் நின்றால் சந்திக்கலாம் 
    • வணக்கம் வாத்தியார்......! ஆண் : மீனம்மா மீனம்மா கண்கள் மீனம்மா தேனம்மா தேனம்மா நாணம் ஏனம்மா சுகமான புது ராகம் உருவாகும் வேளை நாணமோ இதமாக சுகம் காண துணை வேண்டாமோ ஓஓ பெண் : சிங்கம் ஒன்று நேரில் வந்து ராஜ நடை போடுதே தங்க மகன் தேரில் வந்தால் கோடி மின்னல் சூழுதே ஆண் : முத்தை அள்ளி வீசி இங்கு வித்தை செய்யும் பூங்கொடி தத்தி தத்தி தாவி வந்து கையில் என்னை ஏந்தடி பெண் : மோகம் கொண்ட மன்மதனும் பூக்கணைகள் போடவே காயம் பட்ட காளை நெஞ்சும் காமன் கணை மூடுதே ஆண் : மந்திரங்கள் காதில் சொல்லும் இந்திரனின் ஜாலமோ சந்திரர்கள் சூரியர்கள் போவதென்ன மாயமோ பெண் : இதமாக சுகம் காண துணை நீயும் இங்கு வேண்டுமே சுகமான புது ராகம் இனி கேட்கத்தான்…. ஆண் : இட்ட அடி நோகுமம்மா பூவை அள்ளி தூவுங்கள் மொட்டு உடல் வாடுமம்மா பட்டு மெத்தை போடுங்கள் பெண் : சங்கத்தமிழ் காளை இவன் பிள்ளை தமிழ் பேசுங்கள் சந்தனத்தை தான் துடைத்து நெஞ்சில் கொஞ்சம் பூசுங்கள் ஆண் : பூஞ்சரத்தில் ஊஞ்சல் கட்டி லாலி லல்லி கூறுங்கள் நெஞ்சமென்னும் மஞ்சமதில் நான் இணைய வாழ்த்துங்கள் பெண் : பள்ளியறை நேரமிது தள்ளி நின்று பாடுங்கள் சொல்லி தர தேவை இல்லை பூங்கதவை மூடுங்கள் பெண் : சுகமான புது ராகம் உருவாகும் வேளை நாணுமே இதமாக சுகம் காண துணை வேண்டாமோ ஓஓ .......! --- மீனம்மா மீனம்மா ---
    • ஆஹா....அற்புதம்......அற்புதம்......!  😂
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.