Jump to content

மேனனை கருணாநிதி சந்தித்தது தவறு" - பழ.நெடுமாறனுடன் சந்திப்பு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

மேனனை கருணாநிதி சந்தித்தது தவறு" - பழ.நெடுமாறனுடன் சந்திப்பு

இந்திரா காந்திக்குப் பிறகு வந்த மத்திய அரசுகள் இலங்கைத் தமிழர் பிரச்சினையின் முக்கியத்துவத்தைக் குறைத்து விட்டன என்று தமிழர் தேசிய இயக்கத் தலைவரும், உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவருமான பழ. நெடுமாறன் குற்றம் சாட்டுகிறார்.

இலங்கைத் தமிழர்களுக்காக நீண்ட நெடுங்காலமாக சலிக்காமல் குரல் கொடுத்து, அயராமல் பாடுபட்டு வருபவர் நெடுமாறன். தமிழகத்தில் உள்ள தலைவர்களிலேயே இவரை விட இலங்கைத் தமிழர்களுக்காக குரல் கொடுத்தவர் யாரும் இருக்க முடியாது.

பொடா சட்டத்தின் வாயில் சிக்கி சிறைவாசம் அனுபவித்தவர். அப்படியும் குரல் தளராமல், ஈழத் தமிழர்களுக்காக முழங்கி வரும் தமிழகத்தின் மூத்த தலைவர்களில் ஒருவரான நெடுமாறன்.

ஈழத் தமிழர்கள் பிரச்சினைக்கு தற்போதுள்ள மத்தியஇ மாநில அரசுகள் உரிய முக்கியத்துவம் தரவில்லை என்று குறைபடுகிறார், குற்றம் சாட்டுகிறார் நெடுமாறன். அவருடன் உரையாடியபோது நம்முடன் பகிர்ந்து கொண்டவை.

ஏமாற்றும் இந்திய அரசு:

இலங்கைத் தமிழர் பிரச்சினையில் இந்திய அரசு ஏமாற்று வேலையில் ஈடுபட்டுள்ளது. சிங்கள கடற்படைக்கு வெடிப் பொருட்களை அனுப்பியபோது, அதை மதுரை அருகே பறிமுதல் செய்வது போல நடந்து கொண்டு அதைத் தடுத்து நிறுத்தாமல் அனுப்பி விட்டது தமிழக போலீஸ்.

இது குறித்து மத்திய அரசில் அங்கம் வகிக்கும் திமுக அமைச்சர்களால் மத்திய அரசிடம் கேள்வி கேட்க முடியவில்லை. இங்கிருந்து வெடிபொருட்கள் போவதை தடுத்து நிறுத்த மனமும் இல்லை.

மானாமதுரை அருகே விடுதலைப் புலிகளுக்கு பொருட்களை அனுப்பியதாக கைது செய்து சிலர் மீது வழக்குப் போட்டது போல இப்போதும் வழக்குப் போட்டிருக்க வேண்டியதுதானே? ஏன் போடவில்லை?

யாழ்ப்பாணத்தில் தமிழர்களை பட்டினி போட்டுக் கொண்டிருக்கிறது இலங்கை அரசு. அங்குள்ள நெடுஞ்சாலையை மூடி விட்டனர். இதை மனிதாபிமான முறையில் இந்தியா கண்டிருத்திருக்க வேண்டுமா, இல்லையா? மனிதாபிமான முறையில் கண்டிக்க இந்தியாவுக்கு தயக்கம் ஏன்?

அப்பாவித் தமிழர்கள் மீதான தாக்குதலைக் கண்டித்து இந்தியாவும், உலக நாடுகளும் இலங்கைக்கு நிர்பந்தம் கொடுக்க வேண்டும். இந்திரா காந்தி இருந்தபோது 1983ம் ஆண்டு தமிழர்கள் மீது இலங்கை ராணுவம் தாக்குதல் நடத்தியது. அந்த இனப்படுகொலையை இந்திரா காந்தி கடுமையாக கண்டித்தார்.

உடனடியாக தாக்குதலை நிறுத்த வேண்டும். இல்லாவிட்டால் இந்தியா தலையிடும் என்று கண்டித்தார். இதையடுத்து பயந்து போன இலங்கை அரசு தாக்குதலை நிறுத்தி விட்டது.

மேனனை கருணாநிதி சந்தித்தது தவறு:

இந்தியாவின் மூத்த அரசியல் தலைவர் முதல்வர் கருணாநிதி. அவரை சாதாரண அதிகாரிகளான சிவசங்கர மேனனும், நாராயணனும் சந்தித்துள்ளனர். இவர்களை கருணாநிதி சந்தித்திருக்கவே கூடாது. மறுத்திருக்க வேண்டும்.

அமைச்சர்களையோ அல்லது அமைச்சர் அந்தஸ்திலான அதிகாரியையோதான் அனுப்பியிருக்க வேண்டும். இந்திரா காந்தி பிரதமராக இருந்தபோது ஜி.பார்த்தசாரதியை தமிழகத்திற்கு அனுப்பி வைப்பார்.

இலங்கைத் தமிழர் பிரச்சினை தொடர்பாக இலங்கை செல்வதற்கு முன்பும், போன பின்னரும் சென்னை வந்து தமிழக முதல்வராக இருந்த எம்ஜிஆரை சந்தித்து ஆலோசித்து விட்டுத்தான் செல்வார் ஜி.பார்த்தசாரதி. இலங்கைத் தமிழர் பிரச்சினையை முக்கியப் பிரச்சினையாக இந்தியா கருதுவதாக இந்திரா காந்தி தெரிவித்தார்.

இந்தியாவின் இந்த உறுதியான நிலைப்பாட்டைக் கண்டு ஜெயவர்த்தனே பயந்து போனார். ஆனால் இந்திராவுக்குப் பின்னர் வந்த அரசுகள் இலங்கைப் பிரச்சினையின் முக்கியத்துவத்தைக் குறைத்து விட்டன. இலங்கை அரசுடன் பேசுவதாக இருந்தால் அமைச்சர்கள் யாராவது போயிருக்க வேண்டும். எதற்காக மேனன் போகிறார்?

பார்த்தசாரதி போன்றவர்கள் சென்னை வந்து முதல்வரை கலந்து பேசிய பிறகுதான் இலங்கைக்குச் செல்வார்கள், வருவார்கள். ஆனால் மேனனும், நாராயணனும் டெல்லியிலிருந்து நேராக கொழும்பு போனார்கள். பின்னர் டெல்லி திரும்பும் வழியில் சென்னையில் இறங்கி ஒப்புக்கு கருணாநிதியைப் பார்த்து விட்டுச் சென்று விட்டனர்.

உறுதியான நிலைப்பாடு வேண்டும்:

தமிழர் பிரச்சினையில் இப்போது தமிழக அரசியல் கட்சிகள் காட்டி வரும் ஆதரவு போதாது. மத்திய அரசின் நிலைப்பாடு இன்னும் உறுதியாக இருக்க வேண்டும். கட்சிகள் ஏதாவது ஒரு வகையில் போராட்டம் நடத்திக் கொண்டுதான் இருக்கின்றன. சுப்பிரமணியம் சுவாமி மட்டும்தான் போராட்டம் நடத்தவில்லை.

தமிழகத்தில் உள்ள அகதிகள் முகாம்கள் மிகவும் மோசமான நிலையில் உள்ளன. சிறைக் கொட்டடிகள் போல அவை காணப்படுகின்றன. அகதிகளை முறையாக பராமரிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் ஐ.நா. சபையின் அகதிகள் பராமரிப்பு பிரிவு இலங்கைத் தமிழ் அகதிகளை பார்த்துக் கொள்ளத் தயாராக இருக்கிறது. அவர்களிடம் பொறுப்பை கொடுத்து விடலாம்.

துப்பாக்கி கொடுங்கள்:

தமிழக மீனவர்களை இலங்கை படையினர் தாக்குவது நெடுங்காலமாக நடந்து வருகிறது. கச்சத்தீவை இலங்கைக்குத் தாரை வார்த்ததால் வந்த வினை இது. இதுவரை 300க்கும் மேற்பட்ட மீனவர்கள் உயிரிழந்துள்ளனர். இதைத் தடுக்க ஒரே வழி நமது மீனவர்கள் கையில் துப்பாக்கியை கொடுப்பதுதான்.

உங்களால் நமது மீனவர்களைக் காக்க முடியவில்லை என்றால் அவர்கள் கையில் துப்பாகிகயைக் கொடுத்து விடுங்கள். அவர்கள் தங்களைப் பாதுகாத்துக் கொள்ளட்டும் என்றார் நெடுமாறன்.

-தற்ஸ்தமிழ்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • முல்லைத்தீவில் புத்தாண்டை முன்னிட்டு இராணுவத்தின் மாபெரும் விளையாட்டு ! (புதியவன்) இலங்கை இராணுவத்தின் ஏற்பாட்டில் தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு முல்லைத்தீவு மாவட்டத்தில் மாபெரும் விளையாட்டு விழா முன்னாயத்த கலந்துரையாடல். மலர இருக்கும் 2024 ஆம் ஆண்டு தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு முல்லைத்தீவு மாவட்ட இலங்கை இராணுவத்தின் 59 வது படைப்பிரிவின் ஏற்பாட்டில் முள்ளியவளை பிரதேசம் மாமூலை டைமன் விளையாட்டுக் கழக மைதானத்தில் (07.04.2024) அன்று மாபெரும் விளையாட்டு நிகழ்வு நடைபெறவுள்ளது. அத்தோடு அன்றைய தினம் காலையில் மரதன் ஓட்டம், துவிச்சக்கரவண்டி ஓட்டம், ஏனைய மைதான விளையாட்டுக்கள், இரவு மாபெரும் இன்னிசை நிகழ்வும் இடம்பெறவுள்ளது. இதன் முன்னாயத்த கலந்துரையாடல் இன்றைய தினம் (28) மு.ப 10.00 மணியளவில் மாவட்ட செயலக பண்டாரவன்னியன் மாநாட்டு மண்டபத்தில் முல்லைத்தீவு மாவட்ட 59 வது படைப்பிரிவின் கட்டளைத் தளபதி மேஜர்ஜென்ரல் பிரசன்ன விஜயசூரிய தலைமையில் நடைபெற்றது. இந்தக் கலந்துரையாடலில் பிரதம அதிதியாக மேலதிக மாவட்ட செயலாளர் திரு.எஸ்.குணபாலன் கலந்து சிறப்பித்தார். இந்த நிகழ்வில் கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி ம.உமாமகள், முல்லைத்தீவு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி , வலயக்கல்வி பணிமனையின் அதிகாரிகள், கலாசார உத்தியோகத்தர், மாவட்ட மருத்துவர்கள் , முல்லைத்தீவு மாவட்ட இராணுவ அதிகாரிகள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.   https://newuthayan.com/article/புத்தாண்டை_முன்னிட்டு_இராணுவத்தின்_மாபெரும்_விளையாட்டு_கலந்துரையாடல்!  
    • மக்கள் தொகை முதன்முறையாக வீழ்ச்சி!   புதியவன் சுதந்திரத்துக்குப் பின்னரான வரலாற்றில் முதல் தடவையாக நாட்டின் சனத்தொகையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது என்று இலங்கை பதிவாளர் பணியக புள்ளி விவரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த 2023 ஜூன் 30ஆம் திகதியுடன் முடிவடைந்த ஓராண்டு காலப்பகுதியில் மக்கள் தொகையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது. இந்த மக்கள் தொகை ஒரு இலட்சத்து 44 ஆயிரத்து 395 ஆல் குறைவடைந்துள்ளது. கடும் பொருளாதார நெருக்கடி நிலைமைகளால் நாட்டை விட்டு வெளியேறுவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.  அத்துடன், பிறப்பு வீதமும் குறைவடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இந்தக் காரணிகளால் நாட்டின் மொத்த சனத்தொகை எண்ணிக்கையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது.(க) https://newuthayan.com/article/மக்கள்_தொகை_முதன்முறையாக_வீழ்ச்சி!
    • முதலிலேயே சொல்லிவிட்டார்தானே
    • நெடுக்காலபோவான், இவை நீங்களே எடுத்த படங்கள் என்று மட்டும் சொல்லிவிடாதீர்கள்.  கேடுகெட்ட சொறிலங்காவுக்குள் உங்களைப் போன்ற மானமுள்ள வீரப் புலம்பெயர்ந்த தமிழர் யாராவது கால் வைப்பார்களா ? நினைக்கவே கால் கூசுகிறது. 😂
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.