Jump to content

தமிழர்களின் வரலாற்றில் பதிவுபெறும் ஒரு நாயகனாக பாலாண்ணா விடைபெறுகின்றார்:- பொட்டுஅம்மான்.


Recommended Posts

தமிழர்களின் வரலாற்றில் பதிவுபெறும் ஒரு நாயகனாக பாலாண்ணா இப்பூவுலகில் இருந்து விடைபெறுகின்றார்:- பொட்டுஅம்மான்.

தமிழர்களின் வரலாற்றில் பதிவுபெறும் ஒரு நாயகனாக பாலாண்ணா இப்பூவுலகில் இருந்து விடைபெறுகின்றார். வாழ்வின் நீண்டகாலப் பகுதியை தமிழீழ தேசத்திற்காக கொடுத்து வாழ்ந்த மாமனிதனை எம் தேசியத் தலைவர் அவர்கள் தேசத்தின் குரல் எனும் உயர்கௌரவத்தைக் கொடுத்து வழியனுப்பிவைக்கிறார். என தேசத்தின் குரல் அன்ரன்பாலசிங்கம் அவர்களின் இறுதிவீரவணக்க உரையை ஆற்றிய விடுதலைப்புலிகளின் புலனாய்வுத்துறைப்பொறுப்பாள

Link to comment
Share on other sites

சர்வதேசம் விடுதலைப்புலிகளை வரவேற்கின்ற அளவிற்கு தனியொரு சரித்திரமாக நின்று உழைத்த புனிதம்:- சூசை.

சர்வதேசம் தமிழீழ விடுதலைப்புலிகளை தமிழர்களின் பிரதிநிதிகளாக இன்று வரவேற்கின்றதென்றால் அதனை தனியொரு சரித்திமாக நின்று உழைத்தவர் பாலாண்ணா என தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் இறுதி வீரவணக்க நிகழ்வில் நினைவுரையாற்றிய தமிழீழ விடுதலைப்புலிகளின் கடற்புலிகளின் சிறப்புத் தளபதி கேணல் சூசை அவர்கள் தெரிவித்தார்.

கடுமையான போராட்டச் சூழலில் ஒரு கெரில்லாப் போராளியாக தன்னையும் தனது துணைவியாரையும் வரித்துக்கொண்டு இந்த மண்ணின் விடுதலைக்காக உழைத்தவர் சர்வதேசம் எங்கும் தமிழரின் உரிமைக்காக குரல் கொடுத்தவர் மரணம் வரையிலும் மண்ணுக்காக உழைத்த மாமனிதரை இழந்து தவிக்கிறோம். அவரின் தமிழீழ இலட்சியக் கனவை நனவாக்க உறுதியுடன் போராடுவோம். என அவர் மேலும் தெரிவித்தார்.

www.sankathi.com

Link to comment
Share on other sites

விடைபெறுகிறார் "தேசத்தின் குரல்" பாலா அண்ணை:- பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் வீரவணக்கம்.

தமிழீழ "தேசத்தின் குரல்" அன்ரன் பாலசிங்கத்தின் புகழுடலுக்கு பல்லாயிரக்கணக்கானோர் இன்று வீரவணக்கம் செலுத்தினர்.

லண்டனின் வடக்குப் பகுதியில் உள்ள அலெக்சாண்ட்றா மாளிகை முன்பாக இன்று புதன்கிழமை காலை 8 மணிக்கு பாலா அண்ணையின் புகழுடல் வைக்கப்பட்டது.

உலகம் முழுவதுமிருந்தும் பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் குடும்பம் குடும்பமாக வந்து பாலா அண்ணைக்கு வீரவணக்கம் செலுத்தினர்.

ஐரோப்பாவில் உள்ள தமிழர்கள் நாள் முழுமைக்கும் லண்டன் நோக்கி வருகை தந்து கொண்டிருக்கின்றனர்.

நோர்வே சர்வதேச அபிவிருத்தி அமைச்சரும் இலங்கைக்கான சமாதானத் தூதுவருமான எரிக் சொல்ஹெய்ம், தமிழ்நாட்டிலிருந்து மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிர்வாகி சபாபதி மோகன், விடுதலைச் சிறுத்தைகள் பொதுச் செயலாளர் தொல். திருமாவளவன் ஆகியோர் பாலா அண்ணைக்கு வீரவணக்கம் செலுத்தினர்.

இங்கிலாந்து நேரப்படி பிற்பகல் 2.30 மணிக்கு தமிழீழத் "தேசத்தின் குரல்" பாலா அண்ணையின் புகழுடல் தீயுடன் சங்கமமாகிறது.

தமிழீழத் தாயகத்திலும் மலேசியா உள்ளிட்ட தமிழர் வாழும் நாடுகளிலும் லண்டனில் நடைபெறும் இறுதி வணக்க நிகழ்வு அதே நேரத்தில் வீரவணக்க நிகழ்வு நடைபெறுகிறது.

www.puthinam.com

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புதினம் மேலதிக இணைப்பு

இந்நிகழ்வில் உரையாற்றிய நோர்வே சர்வதேச அபிவிருத்தி அமைச்சர் எரிக் சொல்ஹெய்ம் தனது உரையில்,

பாலா எனது நண்பர். 1999 ஆம் ஆண்டு இலங்கையிலிருந்து அவர் இலண்டன் வந்த காலம் முதல் அவருடன் பழகி வந்தேன். சமாதான முயற்சிகள் முன்நகர்த்தப்பட வேண்டும் என்று விரும்பியவர் பாலா. யுத்த நிறுத்த ஒப்பந்த காலத்தில் பாலாவின் வீட்டில் நீண்ட நேரம் நாங்கள் உரையாடினோம். பாலா நல்ல நகைச்சுவையாளர். அமைதி முயற்சிகளில் தொடர்புபட்ட இலங்கையின் பல இனத் தலைவர்களுடன் நான் உரையாடும்போது ஒருபோதும் பொய்யே கூறாத உண்மையான மனிதர் என்று தெரிவித்தனர் எனக் குறிப்பிட்டார்.

இங்கிலாந்து நேரப்படி மாலை 4 மணியளவில் தமிழீழத் "தேசத்தின் குரல்" பாலா அண்ணையின் புகழுடல் தீயுடன் சங்கமமாகியது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஈழத் தமிழர்களின் விடுதலைக்காக சிலுவை சுமந்தவர் "தேசத்தின் குரல்": புதுவை இரத்தினதுரை

ஈழத் தமிழர்களின் விடுதலைக்காக சிலுவை சுமந்தவர் "தேசத்தின் குரல்" அன்ரன் பாலசிங்கம் என தமிழீழ கலை பண்பாட்டுக் கழகப் பொறுப்பாளர் புதுவை இரத்தினதுரை தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சியில் இன்று புதன்கிழமை நடைபெற்ற "தேசத்தின் குரல்" அன்ரன் பாலசிங்கத்தின் வீரவணக்க நிகழ்வில் கலந்துகொண்டு நினைவுரையாற்றும் போது அவர் மேலும் தெரிவித்ததாவது:

தமிழீழ தேசியத் தலைவர் அவர்களுக்கு அருகிருந்து மதியுரைத்த பாலா அண்ணாவை தமிழீழ தேசம் இழந்து விட்டது.

தமிழீழ விடுதலைக்காக தாயகத்திலும், சர்வதேசத்திலும் தமது நோயினையும் பொருட்படுத்தாது அர்ப்பணிப்புடன் பாடுபட்டு உழைத்த ஒரு அற்புத மனிதனை எமது தேசம் இழந்து விட்டது.

பாலா அண்ணாவிற்கு எமது தேசம் விடுதலை பெற்று அத்தேசத்தில் தனதுயிரை துறக்கவேண்டும் என்ற பெரு விருப்பிருந்தது. அது அவருக்கு கைகூடவில்லை. பாலா அண்ணாவின் கனவை நனவாக்க தேசியத் தலைவருக்கு உலகத் தமிழினம் கைகொடுக்க வேண்டும். அதன் மூலம் எமது தேசம் விரைவில் விடுதலை பெற்று பாலா அண்ணாவின் கனவு நனவாகும் என்றார் அவர்.

மாலை 5.00 மணிக்கு கிளிநொச்சி முருகன் ஆலய முன்றலில் இருந்து "தேசத்தின் குரல்" அன்ரன் பாலசிங்கத்தின் உருவப்படம் தாங்கிய ஊர்தி அணியிசையுடன் பேரணியாக நகர்ந்து கிளிநொச்சி கரைச்சிப் பிரதேச சபையை சென்றடைந்தது.

அங்கு சிறப்பாக அமைக்கப்பட்டிருந்த பந்தலின் கீழ் முதன்மைச் சுடரை தமிழீழ நீதி நிர்வாகத்துறைப் பொறுப்பாளர் பரா ஏற்றிவைத்தார்.

வடபோர் முனை கட்டளைத் தளபதி கேணல் தீபன் தமிழீழ தேசியக் கொடியினை அரைக்கம்பத்தில் பறக்கவிட்டதுடன் "தேசத்தின் குரல்" அன்ரன் பாலசிங்கம் அவர்களது திருவுருவப்படத்திற்கு சுடர் ஏற்றி மலர்மாலை அணிவித்தார்.

தலைமையுரையினை கிளிநொச்சி மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் கலைவாணன் நிகழ்த்தினார்.

நினைவுரைகளை அருட்திரு ஜோசப் அடிகளார், ஆசிரியை பகீரதி ஆகியோர் நிகழ்த்தினர்.

இதேவேளை புதுக்குடியிருப்பு, மல்லாவி, மடு ஆகிய பகுதிகளிலும் தேசத்தின் குரல் அன்ரன் பாலாசிங்கம் அவர்களின் இறுதி வணக்க நிகழ்வுகள் நடைபெற்றன.

லண்டனில் "தேசத்தின் குரல்" அன்ரன் பாலசிங்கம் அவர்களின் இறுதி வணக்க நிகழ்வுகள் நடைபெற்ற சம நேரத்தில் தமிழிர் தாயகத்திலும் வணக்க நிகழ்வுகள் நடைபெற்றன.

http://www.eelampage.com/?cn=30194

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அனுபவப் பகிர்விற்கு நன்றி கோசான் அவர்களே. புத்தர் சிலைகள் எல்லாம் எந்தளவு தூரம் முளைத்துள்ளன? 
    • மனித வளம் அதிகம் இருப்பதால்தான் இன்னும் மனித மலத்தை மனிதர்களை வைத்தே கையால் அள்ளிக் கொண்டிருக்கிறார்களோ?தமிழ்நாட்டில் எண்ணெய்கப்பல் கசிந்து கடல்நீரில் கலந்த பொழுது வாளியால் அள்ளி ஊற்றினார்கள்.உண்மையில் இந்தியாவில் பொருளாதாரம் பெரும் வளர்ச்சி அடையவில்லை.ஆனால் ஒரு அணுவாயுத வல்லரசு பொருளாதாரத்தில் வளர்ந்தது போல் ஒருமாயத் தோற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது.நகர்ப்புறங்கள் நவீனத் தோற்றத்தைக் காட்டிக் கொண்டிருக்கின்றன.சந்திராயனுக்கு ரொக்கற் அனுப்பிய அதே வேளையில் இந்தியாவின் கடைக்கோடி கிராமத்தில் அடிப்படை வசதிகளற்று மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.ஒப்பீட்டளவில் தென் மாநிலங்கள் ஓரளவு வளர்ச்சி அடைந்த நிலையில் வடமாநிலங்களின் நிலமை படு மோசம்.
    • சகோ சீமானின் பிள்ளைகள் பற்றிய கருத்தை இங்கே பதிவிட்டவன் யானே.  இங்கே எனது கேள்வி தனது பிள்ளைகள் தமிழ் படிக்காததற்கு  மேடை கோணல் என்பது.  ஆனால் அது உண்மையல்லவே.  எனவே இந்த இவரது கூற்று தேர்தல் நேரத்தில் அவரை கவிழ்க்க உதவும் என்பதே அவரின் அபிமானியான எனது கவலை. நன்றி. 
    • சீமான் தமிழ் தேசியத்தைப் பேசுகிறார், உண்மை - ஈழத்தில் கஜேந்திரகுமார் அணி தமிழ் தேசியத்தைப் பேசுவது போல பேசுகிறார்😎. இதனால் மட்டும் தமிழ் தேசியம் வாழும் என்றால், நீங்கள் குறிப்பிடும் தமிழ் தேசியம் "யூ ரியூப்" வியாபார தமிழ் தேசியம் என எடுத்துக் கொள்கிறேன்! இந்த "திராவிடர்-தமிழர் ஆணி" ஈழவருக்கு தேவையில்லாத ஆணி என்கிறேன். இதனால், தமிழ் நாட்டில் ஆட்சியில் இருக்கப் போகும் கட்சிகளோடும் (குறைந்த பட்சம் புலத்தில் வாழும்) ஈழவர் பகைத்துக் கொள்ள வேண்டி வரும். இன்னொரு பக்கம், சீமான் தம்பிகள் முன்மாதிரியில் போலிச் செய்திகள், வைரல் வீடியோக்கள், யாழில் நடப்பது போன்ற எங்களிடையேயான அர்த்தமில்லாத சண்டைகளும் வளரும். இதெல்லாம் "ஈழவரான எங்களுக்கு ரொம்ப நல்லது!" என்று நீங்கள் சொன்னால் நான் நம்புகிறேன்!  
    • உங்களுக்கு இந்தியா பற்றி நான் தந்திருப்பது தரவுகளை. நீங்கள் மேலே அலம்பியிருப்பது இந்தியா தொடர்பான உங்கள் ஆத்திரக் கருத்துக்களை. இந்தியா மீது அபிமானம் எனக்கும் இல்லை - ஆனால், தரவுகளை நோக்கித் தான் ஒரு நாட்டின் முன்னேற்றம் பற்றிய கருத்துக்கள் வர வேண்டும், அந்த நாட்டை விரும்புகிறோமா வெறுக்கிறோமா என்பதை ஒட்டியல்ல. பொருளாதார வளர்ச்சி ஊழலால் பெரிதும் பாதிக்கப் பட்டிருக்கிறது இந்தியாவில். ஆனால், மனித வளம் அதையும் மீறி இந்தியாவை முன்னேற்றி வருகிறது. இந்தியா போன்ற கலாச்சாரப் பின்னணி கொண்ட, ஆனால் மனித வளம் மிகக் குறைந்த பாகிஸ்தானிலோ. வங்க தேசத்திலோ இந்தியாவில் இருப்பது போன்ற வளர்ச்சி இல்லை - இது உங்களுக்குக் கசக்கலாம், ஆனால் யதார்த்தம் அது தான்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.