Jump to content

பொங்கல்


Recommended Posts

பச்சரிசி பால் பொங்கல்
Paal Pongal Recipe: Pongal Special

 பொங்கல் திருநாளன்று சர்க்கரை பொங்கல் மட்டும் தான் செய்ய வேண்டும் என்பதில்லை. சர்க்கரை பொங்கலடன், கார பொங்கலும் செய்யலாம். அதிலும் பச்சரிசி கொண்டு பால் பொங்கல் செய்து, பொங்கல் புளிக்குழம்புடன் சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும். உங்களுக்கு பால் பொங்கல் எப்படி செய்வதென்று தெரியாதா?

அப்படியெனில் தொடர்ந்து படியுங்கள். சரி, இப்போது பச்சரிசி பால் பொங்கலை எப்படி எளிய செய்முறையில் செய்வதென்று பார்ப்போம். அதைப் படித்து பொங்கலன்று செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

 

  தேவையான பொருட்கள்:

பச்சரிசி - 1 கப்

பாசிப் பருப்பு - 3 டேபிள் ஸ்பூன்

தேங்காய் - 2 டேபிள் ஸ்பூன்

முந்திரி - சிறிது (நெய்யில் வறுத்தது)

பால் - 2 கப்

தண்ணீர் - 2 கப்

உப்பு - தேவையான அளவு

 

செய்முறை:

முதலில் பாசிப்பருப்பை பொன்னிறமாக வறுத்து, தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் அரிசியை நீரில் நன்கு கழுவி, பெரிய குக்கரில் போட்டு, அத்துடன் பாசிப்பருப்பையும் சேர்த்து, 1 கப் பால் மற்றும் 2 கப் தண்ணீர் சேர்த்து குக்கரை மூடி, அடுப்பில் வைத்து, 3-4 விசில் விட்டு இறக்கிக் கொள்ள வேண்டும்.

விசில் போனதும், குக்கரை திறந்து, மீதமுள்ள பாலை ஊற்றி கரண்டியால் மசித்து விட வேண்டும்.

பின் மீண்டும் குக்கரை அடுப்பில் வைத்து, 3 நிமிடம் நன்கு கொதிக்க விட்டு, பின் தேவையான அளவு உப்பு சேர்த்து கிளறி விடவும்.

பிறகு அதில் தேங்காய், வறுத்த முந்திரி சேர்த்து கிளறி இறக்கினால், பச்சரிசி பால் பொங்கல் ரெடி!!! இந்த பொங்கலை பொங்கல் புளிக் குழம்புடன் சாப்பிட்டால், அற்புதமாக இருக்கும்.

Link to comment
Share on other sites

சர்க்கரைப் பொங்கல்

 

 
sarkkarai_2692198f.jpg
 

என்னென்ன தேவை?

அரிசி - ஒரு கப்

பாசிப் பருப்பு - கால் கப்

வெல்லம் - ஒரு கப்

பனங்கல்கண்டு - அரை கப்

பால், தேங்காய்ப் பால் - தலா அரை கப்

முந்திரி, திராட்சை - 15

நெய் - கால் கப்

ஏலக்காய் - 8

குங்குமப்பூ, ஜாதிக்காய்ப் பொடி - சிறிதளவு

பச்சை கற்பூரம் - சிறு துளி

எப்படிச் செய்வது?

அரிசி, பாசிப் பருப்பைத் தனித்தனியாக வெறும் வாணலியில் லேசாக வறுத்துக்கொள்ளுங்கள். ஒரு மூடி தேங்காயை அரைத்து கெட்டிப்பால் எடுங்கள். பாலுடன் நான்கரை கப் தண்ணீர் சேர்த்துக் கொதிக்கவையுங்கள். அரிசி, பருப்பைக் களைந்து குக்கரில் ஐந்து விசில் வரும்வரை வேகவிடுங்கள். சூடு ஆறியதும் குக்கரைத் திறந்து அதில் தேங்காய்ப் பால் சேர்த்துக் கொதிக்கவிடுங்கள். அதனுடன் பொடி செய்த வெல்லம் மற்றும் பனங்கற்கண்டு சேர்த்து, தளதளவென்று கொதிக்கும்போது இறக்கிவையுங்கள்.

நெய்யில் முந்திரி, திராட்சையைத் தனியாக வறுத்து, பொங்கலில் சேருங்கள். பிறகு ஜாதிக்காய்ப் பொடியை நெய்யில் வறுத்துச் சேருங்கள். ஏலக்காய், பச்சை கற்பூரத்தைப் பொடித்து சேருங்கள். குங்குமப்பூவை சிறுதளவு பாலில் கரைத்து சேருங்கள். மீதமுள்ள நெய்யைக் கொட்டிக் கிளறுங்கள். பொங்கல் இறக்கும்போது சற்று தளதளவென்று இருக்கும். ஆறியதும் சரியாகிவிடும்.

http://tamil.thehindu.com/society/recipes/%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D/article8092143.ece

Link to comment
Share on other sites

தைப் பொங்கலுக்கு உதவியாய் இருக்கும் ...... நன்றி சகோ!

ரதி இந்த முறை தைப்பொங்கலுக்கு இந்த முறையைப் பார்த்து சர்க்கரைப் பொங்கல் செய்யுங்கோ

வெல்லம்/சர்க்கரைக்குப் பதிலாக brown sugar போடலாம்.... 

Link to comment
Share on other sites

பொங்கல் படையல்: பாரம்பரியம் பகரும் ஏழு காய் குழம்பு

 

 
 
ezu_kai_2692196f.jpg
 

என்னென்ன தேவை?

சர்க்கரைவள்ளிக் கிழங்கு, சேனைக் கிழங்கு, கருணைக் கிழங்கு, சேப்பங்கிழங்கு, பூசணி, பரங்கி, வாழைக்காய், கேரட், கத்திரி, உருளைக் கிழங்கு (பெரிதாக நறுக்கிய துண்டுகள்) - இரண்டரை கப்

மொச்சைக் கொட்டை, பட்டாணி - கால் கப்

அவரை, கொத்தவரை, பீன்ஸ் (கால் இன்ச் நீள துண்டுகள்) - தலா அரை கப்

துவரம் பருப்பு - அரை கப்

மைசூர் பருப்பு- 6 டீஸ்பூன்

புளி - ஒரு பெரிய எலுமிச்சை அளவு

எண்ணை - 6 டேபிள் ஸ்பூன்

நெய் - 4 டீஸ்பூன்

உப்பு - தேவையான அளவு

வறுத்து அரைக்க

பெருங்காயம் - 1 துண்டு

உளுத்தம் பருப்பு - 2 டீஸ்பூன்

கடலைப் பருப்பு - 4 டீஸ்பூன்

தனியா - 6 டீஸ்பூன்

காய்ந்த மிளகாய் - 10 முதல் 15

மிளகு - 2 டீஸ்பூன்

வெந்தயம் - கால் டீஸ்பூன்

துருவிய தேங்காய் - அரை கப்

தாளிக்க

கடுகு - 4 டீஸ்பூன்

பச்சை மிளகாய் - 4

நிலக்கடலை - 4 டீஸ்பூன்

கறிவேப்பிலை, கொத்தமல்லித் தழை - சிறிதளவு

எப்படிச் செய்வது?

துவரம் பருப்பு, மைசூர் பருப்பை தேவையான தண்ணீர் ஊற்றி குக்கரில் வேகவையுங்கள். மூன்று டேபிள் ஸ்பூன் எண்ணெயில் முறையே பெருங்காயம், உளுந்து, கடலைப் பருப்பு, தனியா, காய்ந்த மிளகாய், மிளகு, வெந்தயம், தேங்காயைத் தனித்தனியே சிவக்க வறுத்து, ஆறியதும் சிறிதளவு தண்ணீர் சேர்த்து அரையுங்கள். புளியுடன் நான்கு கப் தண்ணீர் சேர்த்துக் கரையுங்கள். பூசணி, பரங்கி, கத்திரி, வாழைக்காய் தவிர மற்ற காய்கறித் துண்டுகளை சிட்டிகை மஞ்சள் பொடி, உப்பு சேர்த்து நசுங்கும் பதத்துக்கு வேகவைத்து, வடிகட்டுங்கள்.

புளிக் கரைசலில் பூசணி, பரங்கி, வாழைக்காய், கத்திரி துண்டுகளைச் சேர்த்து கொதிக்கவிடுங்கள். சற்று புளி வாசனை போனதும் பாதியளவு வெந்த காய்கறிகள், தேவையான உப்பு, மஞ்சள் பொடி சேர்த்துக் கொதிக்கவையுங்கள்.

நன்கு கொதித்து சேர்ந்து வந்ததும், அரைத்த கலவை, வேகவைத்த பருப்பு சேர்த்துக் கொதிக்கவிடுங்கள். பத்து நிமிடம் கொதித்ததும் இறக்கி, 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் மற்றும் நெய்யைச் சுடவைத்து கடுகு, நிலக்கடலை, கீறிய பச்சை மிளகாய் சேர்த்துத் தாளியுங்கள். இதில் சாம்பார் பொடி சேர்க்கக் கூடாது. விருப்பப்பட்டால் சிறிய துண்டு வெல்லம் சேர்க்கலாம். காரம் அதிகம் விரும்புபவர்கள் மிளகாய் வற்றலை அதிகமாக சேர்த்துக்கொள்ளலாம்.

முருங்கை, முள்ளங்கி, வெங்காயம் ஆகியவற்றை இதில் சேர்ப்பதில்லை. மேலே கறிவேப்பிலை, கொத்தமல்லி தழை சேர்த்தால் மணக்கும் ஏழு கறிக் குழம்பு தயார்.

நிறைய காய்கறிகள் சேர்ப்பதால் குழம்பு அதிகமாக இருக்கும். மீதியான குழம்பில் மறுநாள் சின்ன வெங்காயத்தை இரண்டாக நறுக்கி வதக்கிச் சேர்த்து கொதிக்கவிட்டுச் சாப்பிட மிக சுவையாக இருக்கும். இதனை எரித்த குழம்பு என்றும் சொல்வதுண்டு.

இந்தக் குழம்பில் ஏழு காய்கறிகள் சேர்ப்பது வழக்கம். ஆனால் இதற்கு மேலும் கூட்டியோ, அல்லது கிடைத்த காய்கறிகளைக் கொண்டும் இந்தக் குழம்பைச் செய்யலாம். ஆனால் காய்கறிகள் எண்ணிக்கை ஒற்றைப் படையாக இருக்க வேண்டும்.

http://tamil.thehindu.com/society/recipes/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8F%E0%AE%B4%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/article8092112.ece

Link to comment
Share on other sites

சர்க்கரை பொங்கல்

1937061_474761776045815_8772963954198294

 

தேவையானவை:
புதிய பச்சரிசி-200 கிராம்
தண்ணீர் - 3 டம்ளர்
வெல்லம்- 200 கிராம்
தேங்காய்த்துருவல்- கால் கப்
முந்திரிப்பருப்பு, திரட்சை- தலா 10
நெய்- 4 டீஸ்பூன்
ஏலக்காய்-1

செய்முறை:
பச்சரிசியை முதல்முறை நன்றாகக் கழுவவும். இரண்டாவது முறை கழுவும் தண்ணீரில், அரிசி வேக வைத்துக்கொள்ளவும். அந்த தண்ணீரை வடிகட்டி, பொங்கல் வைக்கும் பாத்திரத்தில் ஊற்றிக் கொதிக்கவிடவும். பொங்கிவரும் போது, அரிசியைச் சேர்த்து தீயைக் குறைத்து வேக விடவும். அரிசி வெந்தவுடன் பொடித்த வெல்லத்தைச் சேர்த்து, வெல்லம் கரையும் நன்கு கிளறவும். நெய்யில் வறுத்த முந்திரி, திரட்சை , ஏலக்காய் மற்றும் தேங்காய்த்துருவலை பொங்கலில் சேர்த்து நன்கு கிளறி இறக்கிப் பரிமாறவும்.

குறிப்பு:
வெல்லத்தில் கல், மண் இருந்தால் சிறிது தண்ணீரில் கரைத்து வடிகட்டி அரிசியோடு சேர்க்கவும். பொங்கல் அதிக தண்ணீரை இழுக்கும் என்பதால், கவலை வேண்டாம்.

 

பொங்கல் சாதம்

12401960_474761326045860_409206857795458

தேவையானவை:
பச்சரிசி- 200 கிராம்
தண்ணீர்- 4 டம்ளர்

செய்முறை:
பச்சரிசியை ஒரு முறை கழுவவும். இரண்டாவது முறை கழுவும்போது கொடுக்கப்பட்ட 4 டம்ளர் தண்ணீரை கொஞ்சம் கொஞ்சமாக அரிசியில் ஊற்றி கழுவவும். இதனை ஒரு பாத்திரத்தில் சேர்த்து வடிகட்டி பொங்கல் வைக்கும் பாத்திரத்தில் ஊற்றிக் கொதிக்கவிடவும். பொங்கி வரும்போது தீயைக் குறைத்து அரிசியைச் சேர்த்து வேக விடவும். அரிசி வெந்ததும் இறக்கிப் பரிமாறவும்.

குறிப்பு- தண்ணீர் அதிகமாக இருந்தால் ஒரு கரண்டியால் சிறிது தண்ணீரை எடுத்துவிடவும். தேவையென்றால் கடைசியில் சேர்த்துக்கொள்ளலாம்.

Link to comment
Share on other sites

  • 11 months later...

பொங்கல் ஸ்பெஷல்: கல்கண்டு பொங்கல்

இந்த பொங்கலுக்கு கல்கண்டு பொங்கலை செய்து வீட்டில் உள்ளவர்களை அசத்துங்கள். இப்போது கல்கண்டு பொங்கல் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

 
பொங்கல் ஸ்பெஷல்: கல்கண்டு பொங்கல்
 
தேவையான பொருட்கள் :

கல்கண்டு - 400 கிராம்
பச்சரிசி - 500 கிராம்
பால் - 1 லிட்டர்
முந்திரி - 10௦
திராட்சை - 10௦
நெய் - 200 கிராம்
ஏலக்காய் தூள் - சிறிதளவு

செய்முறை :

* கல்கண்டை பொடித்து கொள்ளவும்.

* பச்சரிசியை நன்றாக கழுவி அரை மணி நேரம் ஊற வைத்து ரவை போல் உடைத்து கொள்ளவும்.

* அடி கனமான பாத்திரத்தில் பாலை ஊற்றி காய்ச்சவும்.

* பால் நன்றாக கொதிக்க ஆரம்பித்தவுடன் உடைத்த பச்சரிசியை சேர்த்து நன்றாக குழைய வேகவைக்கவும்.

* இடையிடையே நெய்யை சேர்க்கவும்.

* பிறகு அதில் பொடித்த கல்கண்டை சேர்க்கவும்.

* கல்கண்டு கரைந்ததும் நெய்யில் வறுத்த முந்திரி, திராட்சை மற்றும் ஏலக்காய் தூள் சேர்த்து நெய் ஊற்றி நன்கு கலந்து இறக்கி 10 நிமிடம் கழித்து பரிமாறவும்.

* சூப்பரான கல்கண்டு பொங்கல் ரெடி.

http://www.maalaimalar.com/

Link to comment
Share on other sites

சத்தான சுவையான காய்கறி பொங்கல்

பொங்கலில் காய்கறிகளை சேர்த்து செய்தால் வித்தியாசமான சுவையுடன் சூப்பராக இருக்கும். இன்று சுவையான காய்கறி பொங்கல் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

 
 
 
 
சத்தான சுவையான காய்கறி பொங்கல்
 
தேவையான பொருட்கள்  :

பச்சரிசி - 1 கப்
பாசிப் பருப்பு - அரை கப்
காய்கறி (பொடியாக நறுக்கியது) - 1 கப்
பெரிய வெங்காயம் - 1
தக்காளி - 1
கேரட் - 1
வேக வைத்தப் பச்சைப்பட்டாணி- 1 கப்
இஞ்சி - 1 துண்டு
கறிவேப்பிலை சிறிது
நெய் - 1 தேக்கரண்டி
பெருங்காயம் - அரை தேக்கரண்டி
உப்பு-தேவைக்கு ஏற்ப

தாளிக்க :

மிளகு - 1 டீஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
பட்டை - துண்டு
லவங்கம் - 2
ஏலக்காய் - 1
நெய் - 2 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் - 3 டீஸ்பூன்.

செய்முறை :

* அரிசி, பருப்பை ஒன்றாக அலம்பி ஆறரை கப் தண்ணீரை கொதிக்க வைத்து, அதில் சேர்த்து சிறு தீயில் நன்கு வேகவிடுங்கள். பாதியளவு வெந்ததும் நெய், பெருங்காயம், உப்பு, கறிவேப்பிலை சேர்த்து வேகவிடுங்கள்.

* வெங்காயம், தக்காளி, இஞ்சி போன்றவற்றைப் பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* கடாயில் நெய், எண்ணெயை ஊற்றி சூடானதும் மிளகு, சீரகம், பட்டை, லவங்கம், ஏலக்காய், தாளித்த பின் வெங்காயம், இஞ்சி சேர்த்து சிறிது வதக்கிய பின் காய்கறிக்கலவையைச் சேருங்கள்.

*. அடுத்து அதில் சிறிது உப்பும் சேர்த்து நன்கு வதங்கியதும் தக்காளி சேருங்கள். 2 நிமிடம் வதக்கி காய்கள் வெந்ததும் பொங்கலில் சேர்த்து நன்கு கிளறுங்கள்.

* கமகம காய்கறிப்பொங்கல் தயார்.

http://www.maalaimalar.com

Link to comment
Share on other sites

பொங்கல் ஸ்பெஷல்: கருப்பட்டி பொங்கல்

பொங்கல் பண்டிகையன்று சர்க்கரை பொங்கல் செய்து சாப்பிட்டு இருப்பீர்கள். இந்த வருடம் சந்தோஷமா கருப்பட்டி பொங்கல் செஞ்சு பொங்கலை கொண்டாடுங்க....

 
பொங்கல் ஸ்பெஷல்: கருப்பட்டி பொங்கல்
 
தேவையான பொருட்கள் :

கருப்பட்டி தூள் - 1 கப்
பச்சரிசி - 1 கப்
பால் - 3 கப்
தண்ணீர் - 3 கப்
நெய் - அரை கப்
ஏலக்காய் பொடி - 1/4 டீஸ்பூன்
முந்திரி - தேவைக்கு
உலர் திராட்சை - 1 தேவைக்கு
பாதாம் - 10 (விருப்பப்பட்டால்)
பிஸ்தா - 10 டீஸ்பூன்(விருப்பப்பட்டால்)

செய்முறை :

* அரிசியை நன்றாக சுத்தம் செய்து கழுவி கொள்ளவும்.

* அடுப்பில் அடிகனமான பாத்திரத்தை வைத்து அதில் தண்ணீர், இரண்டு கப் பால், அரிசி சேர்த்து நன்றாக வேக விடவும்.

* மற்றொரு அடுப்பில் ஒரு பாத்திரத்தில் கருப்பட்டி தூளுடன் கால் கப் தண்ணீர் சேர்த்து தணலை சிம்மில் வைத்து நன்றாக கரைய விடவும். கருப்பட்டி கரைந்ததும் வடிகட்டி வைக்கவும்.

* பாத்திரத்தில் வேகும் அரிசியை அடிக்கடி கிளறி விடவும்.

* பாலும் தண்ணீரும் வற்றியவுடன் காய்ச்சி வடிகட்டிய கருப்பட்டி கரைசலை சேர்த்து நன்கு கிளறவும்.

* மீதம் உள்ள ஒரு கப் பாலையும் சேர்த்து அடுப்பை மிதமான தீயில் வைத்து நன்கு கிளறவும்.

* அதில் அடிக்கடி நெய்யை பாதி பாதியாக சேர்த்து கிளறி கொண்டே இருக்கவும்.

* அடுத்து அதில் ஏலக்காய் பொடி சேர்க்கவும்.

* எல்லாம் நன்றாக சேர்ந்து பொங்கல் பதம் வந்ததும் இறக்கி வைக்கவும்.

* முந்திரி, திராட்சையை நெய்யில் வறுத்து சேர்த்து கிளறவும்.

* பாதாம் மற்றும் பிஸ்தாவை துருவி சேர்க்கவும்.

* சுவையான கருப்பட்டி பொங்கல் தயார்.

குறிப்பு  :

* கருப்பட்டி சேர்த்து செய்வதால் சர்க்கரை நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்.

* நெய் அதிகம் சேர்த்து செய்தால் கூடுதல் சுவையாக இருக்கும்.

http://www.maalaimalar.com

Link to comment
Share on other sites

பொங்கல் ஸ்பெஷல்: கோதுமை ரவை இனிப்பு பொங்கல்

சர்க்கரை நோயாளிகள் இந்த கோதுமை ரவை பொங்கலை சாப்பிடலாம். பொங்கலுக்கு சூப்பரான கோதுமை ரவை இனிப்பு பொங்கலை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

 
பொங்கல் ஸ்பெஷல்: கோதுமை ரவை இனிப்பு பொங்கல்
 
தேவையான பொருட்கள் :

கோதுமை ரவை - 1 கப்
பயத்தம் பருப்பு - 1/4 கப்
வெல்லம் பொடித்தது - ஒன்றரை கப்
நெய் - கால் கப்
முந்திரி பருப்பு - சிறிது
காய்ந்த திராட்சை - சிறிது
ஏலக்காய் தூள் - 1/4 டீஸ்பூன்  

செய்முறை :

* வாணலியில் கோதுமை ரவை, பயத்தம் பருப்பு இரண்டையும் தனித்தனியாகப் போட்டு சிவக்க வறுத்தெடுக்கவும்.

* வறுத்த ரவை, பருப்பு இரண்டையும் குக்கரில் போட்டு, 3 கப் தண்ணீரைச் சேர்த்து, 4 விசில் வரும் வரை வேக விட்டு எடுக்கவும்.

* ஒரு பாத்திரத்தில் வெல்லத்தைப் போட்டு அத்துடன் 1/2 கப் தண்ணீரைச் சேர்த்து கொதிக்க விடவும். வெல்லம் கரைந்து கொதிக்க ஆரம்பித்ததும், அடுப்பிலிருந்து எடுத்து, வடிகட்டி வைத்துக் கொள்ளவும்.

* குக்கரை திறந்து, வெந்த ரவை மற்றும் பருப்பை சற்று மசித்து விட்டு, அதில் வடிகட்டிய வெல்ல பாகையும் விட்டு, மீண்டும் அடுப்பிலேற்றி, கிளறி விடவும். இடை இடையே சிறிது சிறிதாக நெய்யை சேர்த்து கொண்டே வரவும்.

* அடுப்பை மிதமான தீயில் வைத்து, பொங்கல் சற்று கெட்டியாக வரும் வரை கிளறிக் கொண்டே இருக்கவும்.

* கடைசியில் முந்திரி, திராட்சை ஆகியவற்றை நெய்யில் வறுத்து போடவும்.

* ஏலக்காய் தூளையும் தூவி, மீண்டும் ஒரு முறை நன்றாகக் கிளறி இறக்கி வைக்கவும்.

* சூப்பரான கோதுமை ரவா இனிப்பு பொங்கல் ரெடி.

http://www.maalaimalar.com/

Link to comment
Share on other sites

பொங்கல் ஸ்பெஷல்: கதம்ப சாம்பார்

பொங்கல் பண்டிகைக்கு செய்யும் ஸ்பெஷல் உணவுகளில் கதம்ப சாம்பாரும் ஒன்று. இந்த கதம்ப சாம்பரின் ஸ்பெஷல் என்னவென்றால், இதில் பலவிதமான காய்கறிகளைப் போட்டு செய்வது தான்.

 
 
 
 
பொங்கல் ஸ்பெஷல்: கதம்ப சாம்பார்
 
தேவையான பொருட்கள்:

முருங்கைக்காய் - 1  
கத்திரிக்காய் - 3
மாங்காய் - 1
கேரட் - 1
உருளைக்கிழங்கு - 1
அவரைக்காய் - 3
பீன்ஸ் - 2  
வெங்காயம் - 2
தக்காளி - 3
பச்சை மிளகாய் - 3
துவரம் பருப்பு - 200 கிராம்
புளி சாறு - 2 டேபிள் ஸ்பூன்
மஞ்சள் பொடி - 1 சிட்டிகை
குழம்பு மிளகாய் தூள்/சாம்பார் தூள் - 2 டேபிள் ஸ்பூன்
தேங்காய் அரைத்த விழுது - கால் கப்
கடுகு - 1 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
வரமிளகாய் - 2
பெருங்காயத் தூள் - சிறிது
கறிவேப்பிலை - சிறிது
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
கொத்தமல்லி - சிறிது

செய்முறை :

* காய்கறிகள், வெங்காயம், தக்காளி, ப.மிளகாயை சமமான அளவில் வெட்டிக்கொள்ளவும்.

* குக்கரை அடுப்பில் வைத்து, அதில் துவரம் பருப்பை கழுவிப் போட்டு, தேவையான தண்ணீர், மஞ்சள் தூள், பெருங்காய தூள் மற்றும் உப்பு சேர்த்து, 5 விசில் விட்டு இறக்க வேண்டும். விசில் போனவுடன் பருப்பை கடைந்து கொள்ளவும்.

* ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை, வரமிளகாய் சேர்த்து தாளித்த பின் வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்க வேண்டும்.

* அடுத்து அதில் தக்காளியை போட்டு சிறிது நேரம் வதக்கி, குழம்பு மிளகாய் தூள், உப்பு மற்றும் நறுக்கி வைத்துள்ள காய்கறிகளை போட்டு சிறிது தண்ணீர் ஊற்றி, காய்கறிகளை நன்கு வேக வைக்க வேண்டும்.

* காய்கறிகள் வெந்ததும், அதில் தேங்காய் விழுதை சேர்த்து கொதிக்க விட வேண்டும்.

* குழம்பானது நன்கு கொதிக்கும் போது, அதில் வேக வைத்து மசித்து வைத்துள்ள துவரம் பருப்பை சேர்த்து, நன்கு 10 நிமிடம் கொதிக்க விடவும்.

* பிறகு அதில் புளியை ஊற்றி, பச்சை வாசனை போகும் வரை கொதிக்க விட்டு, கொத்தமல்லியை தூவி இறக்கி விட வேண்டும்.

* இப்போது சுவையான பொங்கல் ஸ்பெஷல் கதம்ப சாம்பார் ரெடி!!!

http://www.maalaimalar.com/Health/Kitchenkilladikal/2017/01/13105411/1061922/pongal-special-kadamba-sambar.vpf

Link to comment
Share on other sites

மில்லெட் ஸ்வீட் பொங்கல்

தேவையானவை:

 குதிரைவாலி அரிசி - அரை கப்
 பாசிப்பருப்பு - 2 டேபிள்ஸ்பூன்
 தூளாக்கிய வெல்லம் - அரை கப் (தலை தட்டியது)
 நெய் - தேவையான அளவு
 ஏலக்காய் - 1
 கிராம்பு - 1
 முந்திரி - 6

p9a.jpg

செய்முறை:

அடுப்பில் குக்கரை வைத்து பாசிப்பருப்பைச் சேர்த்து வாசனை வரும்வரை வறுத்துகொள்ளவும். பிறகு, கழுவிய குதிரைவாலி அரிசியை, பருப்போடுச் சேர்த்து 2 கப் தண்ணீர் ஊற்றி 3 அல்லது 4 விசில் வரை வேகவிடவும்.

அரிசி நன்கு வெந்ததும் வெல்லத்தைச் சேர்த்து கலக்கவும். ஒருவேளை வெல்லத்தில் கற்கள் இருப்பதாக தோன்றினால் கரையவிட்டு வடிகட்டி, வெந்த அரிசி-பருப்பு கலவையில் சேர்க்கலாம்.

நெய்யில் முந்திரி, ஏலக்காய், கிராம்பைச் சேர்த்து வறுத்து பொங்கலில் சேர்க்கவும். சிறிது நெய், ஏலக்காய்த்தூளை பொங்கலில் சேர்த்து 4 நிமிடங்கள் கிளறி இறக்கிப் பரிமாறவும்.

 

சாமை பொங்கல்

தேவையானவை:

 சாமை அரிசி - அரை கப்
 பாசிப்பருப்பு - 2 டேபிள்ஸ்பூன்
 இஞ்சி - அரை இஞ்ச் நீளமுள்ளது
(தட்டி வைக்கவும்)
 மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை
 தண்ணீர் - 2 கப்

தாளிக்க:
 நெய் - 2 டீஸ்பூன்
 மிளகு - 1 டீஸ்பூன்
 சீரகம் - முக்கால் டீஸ்பூன்
 பச்சை மிளகாய் - 1
 கறிவேப்பிலை - சிறிதளவு
 பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை

p9b.jpg

செய்முறை:

அடுப்பில் சிறிய குக்கரை வைத்து நெய் விட்டு உருகியதும் மிளகு, சீரகம் சேர்த்து வதக்கவும். இத்துடன் இரண்டாக உடைத்த பச்சை மிளகாயைச் சேர்க்கவும். பிறகு இஞ்சி, பாசிப்பருப்பு, மஞ்சள்தூள், பெருங்காயத்தூள், கறிவேப்பிலைச் சேர்த்து ஒரு நிமிடம் வறுத்து, கழுவிய சாமையைச் சேர்த்து கிளறவும். இத்துடன் 2 கப் தண்ணீர் விட்டு சூடானதும் குக்கரை மூடி மிதமான தீயில் 4 விசில் வரை வேகவிட்டு எடுக்கவும். பிரஷர் நீங்கியதும் குக்கரைத் திறந்து கலவையை மசித்துவிட்டு இறக்கி பரிமாறவும்.

 

வெள்ளைப் பொங்கல் / பால் பொங்கல்

தேவையானவை:

 பச்சரிசி - அரை கப்
 பால் - முக்கால் கப்
 தண்ணீர் - இரண்டரை அல்லது 3 கப்
 உப்பு - ஒரு சிட்டிகை

p9c.jpg

செய்முறை:

பால் மற்றும் தண்ணீரை அடிகனமான பாத்திரத்தில் சேர்த்து, அடுப்பில் வைத்து காய்ச்சவும். அரிசியைக் கழுவி பாலோடு சேர்த்து வேகவிடவும். தீயை மிதமாக்கவும். அரிசி நன்கு மிருதுவாக வெந்ததும், கரண்டியால் நன்கு மசித்துவிடவும். இந்தப் பதத்தில் உப்பைச் சேர்த்து தொடர்ந்து கிளறவும். இல்லையென்றால் அடி பிடித்துவிடும். பிறகு பரிமாறினால் சுவை அள்ளும்.

 

 

கோதுமை ரவை ஸ்வீட் பொங்கல்

தேவையானவை:

கோதுமை ரவை - அரை கப்
 வெல்லம் - அரை கப்
 பாசிப்பருப்பு - 2 டேபிள்ஸ்பூன்
 உப்பு - ஒரு சிட்டிகை
 ஏலக்காய் - 1 (பவுடராக்கவும்)
 தண்ணீர் - ஒன்றரை கப் + கால் கப்
 நெய் - 2 டீஸ்பூன் + சிறிது
 முந்திரி - சிறிதளவு

p9h.jpg

செய்முறை:

அடுப்பில் பாத்திரத்தை வைத்து ஒரு டீஸ்பூன் நெய் விட்டு முந்திரியை நிறம் மாற வறுத்தெடுத்து தனியாக வைக்கவும். அதே பாத்திரத்தில் ரவையைச் சேர்த்து வறுத்தெடுக்கவும். பிறகு, அதே பாத்திரத்தில் ஒன்றரை கப் தண்ணீர் ஊற்றி, வறுத்த ரவை, பாசிப்பருப்பு, உப்பு சேர்த்து மூடிப்போட்டு மிதமான தீயில் வேகவிடவும். மற்றொரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து கால் கப் தண்ணீர், வெல்லம் சேர்த்து கரையவிட்டு, அப்படியே வெந்து கொண்டிருக்கும் ரவை கலவையில் கலக்கவும். வெல்லக்கரைசலை ரவை உறிஞ்சியதும், 1 டீஸ்பூன் நெய் விட்டு கலக்கவும். பொங்கலில் இருந்து நெய் வெளிவர ஆரம்பிக்கும்போது நெய்யில் வறுத்த முந்திரி, ஏலக்காய்த்தூள் கலந்து கிளறி இறக்கி பரிமாறவும்.

 

 

Link to comment
Share on other sites

  • 11 months later...

இது ஃப்யூஷன் பொங்கல்!

அகிலா விமல்

 

9p1_1514531030.jpg

பொங்கல் என்றால் பண்டிகை... பொங்கல் என்றால்   இனிக்கும் சர்க்கரைப் பொங்கல்... பொங்கல் என்றால் நெய் சொட்டும் வெண் பொங்கல், பால் பொங்கல்... இவ்வளவுதான் நினைவுக்கு வருகிறதா?

இனி... ஸ்வீட் கார்ன், வரகரசி, மஷ்ரூம், சாக்லேட், பைனாப்பிள், பனீர், பீட்ரூட் போன்றவற்றோடும் பொங்கல் ருசிக்கும்; மணக்கும். இப்படி வித விதமான ஃப்யூஷன் பொங்கல் ரெசிப்பிகளை வீட்டிலேயே செய்யும் வகையில் அழகிய படங்களுடன் வழங்கியிருக்கிறார் ராஜபாளையத்தைச் சேர்ந்த சமையல் கலைஞர் அகிலா விமல்.

9p2_1514531055.jpg

கேக் பிரியர்களுக்குப் பிடித்த ரெட் வெல்வெட் டைப்பிலும் உண்டு ஒரு சிறப்புப் பொங்கல்.  இசையில் மட்டுமல்ல... உணவிலும் இனி ஃப்யூஷன் கொண்டாட்டம்தான்!

9p3_1514531463.jpg

ஸ்வீட் கார்ன் - வரகரிசி மசாலா பொங்கல்

தேவையானவை:

 வரகரிசி - ஒரு கப்
 பாசிப்பருப்பு - கால் கப்
 ஸ்வீட் கார்ன் முத்துகள் - முக்கால் கப்
 வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய்  - தலா ஒன்று (பொடியாக நறுக்கவும்)
 கொத்தமல்லித்தழை, புதினா (சேர்த்து) - ஒரு கைப்பிடியளவு
 தோல் சீவி, துருவிய இஞ்சி – ஒரு டீஸ்பூன்
 மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன்
 கரம் மசாலாத்தூள் - ஒரு டேபிள்ஸ்பூன்
 நெய், உப்பு - தேவையான அளவு

செய்முறை:

வாணலியில் சிறிதளவு நெய்விட்டு வரகரிசி, பாசிப்பருப்பைச் சேர்த்து லேசாக வறுத்து எடுக்கவும். அதனுடன் 4 கப் தண்ணீர், ஸ்வீட் கார்ன், சிறிதளவு உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து வேகவைக்கவும். பாதியளவு வெந்ததும் வெங்காயம், பச்சை மிளகாய், தக்காளி, இஞ்சி, கொத்தமல்லித்தழை, புதினா சேர்த்து மூடிப் போட்டு மிதமான தீயில் மீண்டும் வேகவிடவும். நன்கு வெந்த பிறகு கரம் மசாலாத்தூள், தேவையான அளவு உப்பு, நெய் சேர்த்துக் கிளறி, சூடாக வெள்ளரி அல்லது வெங்காயத் தயிர் பச்சடியோடு பரிமாறவும். சுவையான இந்தப் பொங்கலைச் சாமை அரிசியிலும் செய்யலாம்!


9p4_1514531477.jpg

மஷ்ரூம் அண்டு ரோஸ்ட் வெஜ் பொங்கல்

தேவையானவை:

 பச்சரிசி - அரை கப்
 வெஜ் ஸ்டாக் - 2 கப்
 தண்ணீர் - 2 கப்
 பொடியாக நறுக்கிய பட்டன் மஷ்ரூம் - 2 கப்
 வெங்காயம் – ஒன்று (பொடியாக நறுக்கவும்)
 பூண்டு -  4 பல் (பொடியாக நறுக்கவும்)
 வெண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன்
 மிளகுத்தூள் - ஒரு டீஸ்பூன்
 கேரட் -  ஒன்று (வட்டமாக நறுக்கவும்)
 குடமிளகாய் (மஞ்சள், சிவப்பு) - தலா ஒன்று (சதுரத் துண்டுகளாக்கவும்)
 கடைந்த பாலேடு அல்லது ஃப்ரெஷ் க்ரீம் – கால் கப்
 எண்ணெய், உப்பு - தேவையான அளவு

செய்முறை:

குக்கரில் வெண்ணெய், 2 டீஸ்பூன் எண்ணெய்விட்டு காயவைத்து வெங்காயம், பூண்டு, மஷ்ரூம் சேர்த்து வதக்கவும். அதனுடன் வெஜ் ஸ்டாக், தண்ணீர் சேர்த்துக் கொதிக்கவிடவும். பிறகு அரிசி சேர்த்து, அடுப்பை மிதமான தீயில் வைத்து, மூடி வேகவிட்டு இறக்கவும்.  வாணலியில் எண்ணெய்விட்டு கேரட், குடமிளகாய், உப்பு சேர்த்து நன்கு கிளறி இறக்கவும். வெந்த பொங்கலுடன் வதக்கிய காய்கறிகள்,  கடைந்த பாலேடு,  மிளகுத்தூள் சேர்த்துச் சூடாகப் பரிமாறவும். புளிப்பு சுவை வேண்டுமானால் ஒரு டீஸ்பூன் வினிகர் அல்லது எலுமிச்சைச் சாறு சேர்க்கலாம்.


9p5_1514531495.jpg

வொயிட் சாக்லேட் அண்டு மிக்ஸ்டு பெர்ரீஸ் பொங்கல்

தேவையானவை:

 பச்சரிசி - அரை கப்
 வெண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன்
 தண்ணீர், பால் - தலா ஒன்றரை கப்
 சர்க்கரை - அரை கப்
 குக்கிங் வொயிட் சாக்லேட் - 100 கிராம் (பொடியாக நறுக்கவும்)
 வெனிலா எசென்ஸ் - அரை டீஸ்பூன்
 உலர்ந்த பெர்ரி பழங்கள் - ஒரு கைப்பிடியளவு
 சாக்லேட் துருவல் (அலங்கரிக்க) - சிறிதளவு
 உப்பு - ஒரு சிட்டிகை

செய்முறை:

சிறிதளவு பெர்ரி பழங்களைத் தனியாக அலங்கரிக்க எடுத்து வைக்கவும். அடிகனமான பாத்திரத்தில் வெண்ணெய்விட்டு உருக்கி அரிசியைச் சேர்த்து லேசாக வறுக்கவும். அதனுடன் பால், தண்ணீர் சேர்த்து நன்கு வேகவிடவும். பிறகு சர்க்கரை, உப்பு, பெர்ரி பழங்கள், நறுக்கிய சாக்லேட் சேர்த்து நன்கு கிளறி இறக்கவும். மேலே வெனிலா எசென்ஸ் சேர்த்துக் கலந்து குளிர வைக்கவும். அதன் மேலே சிறிதளவு பெர்ரீஸ்,  சாக்லேட் துருவல் தூவிப் பரிமாறவும்.

குறிப்பு:

பெர்ரி பழங்களுக்குப் பதிலாகப் பேரீச்சை, உலர்திராட்சை, விருப்பமான நட்ஸ் சேர்க்கலாம்.


9p6_1514531521.jpg

ட்ராபிக்கல் பொங்கல்

தேவையானவை:

 பச்சரிசி - 2/3 கப்
 பால் - 2 கப்
 தண்ணீர் - 2 கப்
 க்ரீமி தேங்காய்ப்பால் - ஒரு கப்
 பைனாப்பிள் துண்டுகள் - கால் கப்
 கண்டன்ஸ்டு மில்க் - கால் கப்
 சர்க்கரை – அரை கப்

அலங்கரிக்க:

 வறுத்த தேங்காய்த் துருவல், செர்ரி – சிறிதளவு 

செய்முறை:

குக்கரில் பச்சரிசியுடன் பால், தண்ணீர் சேர்த்து அடுப்பை மிதமான தீயில் வைத்து ஐந்து விசில்விட்டு இறக்கவும். ஆறிய பிறகு நன்கு மசிக்கவும். அதனுடன் தேங்காய்ப்பால், சர்க்கரை, கண்டன்ஸ்டு மில்க், பைனாப்பிள் துண்டுகள் சேர்த்துச் சூடாக்கி கலவைக் கெட்டியாகும் வரை கிளறி இறக்கவும். மேலே தேங்காய்த்துருவல் தூவி, செர்ரி பழங்களைப் பதித்துக் குளிரவைத்துப் பரிமாறவும்.

குறிப்பு:

ஒரு கப் சூடான பாலில் அரை கப் தேங்காய்த் துருவல் சேர்த்து, கால் மணி நேரம் ஊறவைத்து அரைத்துப் பால் எடுத்தால் ஃக்ரீமி தேங்காய்ப் பால் ரெடி. பைனாப்பிள் துண்டுகள் லேசாகப் புளிப்பு அல்லது கசப்புச் சுவையில் இருந்தால், சிறிது நேரம் சர்க்கரை தண்ணீரில் ஊறவைத்து உபயோகிக்கலாம்.


9p7_1514531539.jpg

பெஸ்டோ - பனீர் பொங்கல்

தேவையானவை - பொங்கல் செய்ய:

 பச்சரிசி - அரை கப்
 பாசிப்பருப்பு - 1/8 கப்
 வெஜிடபிள் ஸ்டாக் (அ) தண்ணீர் - 4 கப்
 பனீர் - 100 கிராம் (சிறிய துண்டுகளாக்கவும்)

பெஸ்டோ செய்ய:

 கொத்தமல்லித்தழை - 2 கப்
 முந்திரி குருணை - அரை கப்
 எண்ணெய் – கால் கப்
 பச்சை மிளகாய் - ஒன்று (நடுத்தர அளவு)
 எலுமிச்சைச் சாறு - 2 டேபிள்ஸ்பூன்
 மிளகுத்தூள் -  அரை டீஸ்பூன்
 உப்பு - தேவையான அளவு

செய்முறை:

அரிசியுடன் பருப்பு சேர்த்துக் கழுவவும். அதனுடன் வெஜ் ஸ்டாக் அல்லது தண்ணீர் சேர்த்து நன்கு வேகவிடவும். தோசைக்கல்லைக் காயவைத்துச் சிறிதளவு எண்ணெய்விட்டு பனீர் துண்டுகளை அடுக்கி இருபுறமும்  டோஸ்ட் செய்து எடுக்கவும். வெறும் வாணலியில் முந்திரி குருணையைச் சேர்த்து வறுத்து எடுத்து, பெஸ்டோ செய்ய கொடுத்துள்ள மற்ற பொருள்களுடன் சேர்த்துக் கெட்டியாக அரைத்தெடுக்கவும். வெந்த பொங்கலுடன் பனீர் துண்டுகள், அரைத்த விழுது சேர்த்துச் சூடாக்கி இரண்டு நிமிடங்கள் கிளறி இறக்கி, சூடாகப் பரிமாறவும்.


9p8_1514531557.jpg

ரெட் வெல்வெட் பொங்கல்

தேவையானவை:

 பச்சரிசி - முக்கால் கப்
 வெங்காயம் -  ஒன்று (மெல்லியதாக நறுக்கவும்)
 இஞ்சி - பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன்
 பீட்ரூட் - ஒன்று (தோல் சீவி, சதுரத் துண்டுகளாக்கவும்)
 பச்சை மிளகாய் – பாதி
 எலுமிச்சைச் சாறு - ஒரு டேபிள்ஸ்பூன்
 வெண்ணெய் – ஒரு டேபிள்ஸ்பூன்
 எண்ணெய் - 2 டீஸ்பூன்
 பொடித்த முந்திரி - 2 டீஸ்பூன்
 உப்பு - தேவையான அளவு

அலங்கரிக்க:

 வடிகட்டிய கெட்டித்தயிர் - ஒரு கப்
 மிளகுத்தூள், பொடித்த முந்திரி - சிறிதளவு
 பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை  - சிறிதளவு

செய்முறை:

குக்கரில் வெண்ணெய், எண்ணெய் சேர்த்துச் சூடாக்கி வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி - பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். அதனுடன் பீட்ரூட், உப்பு, 4 கப் தண்ணீர் சேர்த்து வேகவிட்டு இறக்கவும். ஆறியதும் பீட்ரூட்டைத் தனியாக எடுத்து நைஸாக அரைத்து எடுக்கவும். அதே தண்ணீரில் பச்சரிசியைச் சேர்த்து, குக்கரில் போட்டு மிதமான தீயில் மூன்று விசில் வரும் வரை வேகவிடவும்.

பிறகு சிறு தீயில் ஐந்து நிமிடங்கள் வைத்து இறக்கவும். ஆவி அடங்கியபின் குக்கரைத் திறந்து அரைத்த பீட்ரூட் விழுது, பொடித்த முந்திரி சேர்த்து சுருள கிளறி இறக்கவும். மேலே எலுமிச்சைச் சாறு சேர்த்துக் கலக்கவும். சிறிது நேரம் ஆறியதும் கெட்டித்தயிர் சேர்த்து மிளகுத்தூள், கொத்தமல்லித்தழை, முந்திரி தூவிப் பரிமாறவும்.


9p9_1514531574.jpg

சால்டட் கேரமல் பொங்கல்

தேவையானவை:

சால்டட் கேரமல் செய்ய:

 சர்க்கரை, ஃப்ரெஷ் க்ரீம் - தலா ஒரு கப்
 வெனிலா எசென்ஸ், உப்பு - தலா அரை டீஸ்பூன்

பொங்கல் செய்ய:

 பச்சரிசி - அரை கப்
 பால், தண்ணீர் - தலா ஒரு கப்

செய்முறை:

அரிசியுடன் பால், தண்ணீர் சேர்த்து நன்கு குழைய வேகவிடவும். அடிகனமான பாத்திரத்தில் சர்க்கரையைச் சேர்த்து மிதமான தீயில் கிளறவும். சிறிது நேரத்தில்  சர்க்கரை இளகி, தேன் கலரில் வரும்.  பிறகு சிறிது சிறிதாக க்ரீமை சேர்த்துக் கிளறி, கலவை கெட்டியாக வரும்போது இறக்கவும். அதனுடன் உப்பு, வெனிலா எசென்ஸ் சேர்த்துக் கலக்கவும். இதுவே சால்டட் கேரமல். வெந்த பொங்கலுடன் கேரமல் சேர்த்துக் கலந்து சூடாக்கி, இரண்டு நிமிடங்கள் கிளறி இறக்கவும். இளம் சூடாகவோ அல்லது குளிரவைத்தோ பரிமாறலாம்.

https://www.vikatan.com

Link to comment
Share on other sites

பொங்கல் ஸ்பெஷல்: பால் சர்க்கரை பொங்கல்

பொங்கல் பண்டிகைக்கு சிறியவர் முதல் பெரியோர் வரை அனைவருக்கும் விருப்பமான பால் சர்க்கரை பொங்கலை எப்படி எளிய முறையில் செய்வது என்று பார்க்கலாம்.

 
 
பொங்கல் ஸ்பெஷல்: பால் சர்க்கரை பொங்கல்
 
தேவையான பொருட்கள் :
 
பச்சரிசி - 1 கப்
பால் - 4 கப்
தண்ணீர் - 4 கப்
வெல்லம் - 2 கப்
நெய் - 2 தேக்கரண்டி
முந்திரி - 10
திராட்சை - 10
 
201801091506095059_1_milkpongal._L_styvpf.jpg
 
செய்முறை :
 
வெல்லத்தை துருவிக்கொள்ளவும்.
 
அகலமான அடிகனமான பாத்திரத்தில் 1 கப் தண்ணீர் விட்டு கொதி வந்தவுடன், பச்சரிசியைக் களைந்து அலம்பி அதில் போடவும். அரிசியுடன் தண்ணீர் அதிகமாகவும் பாலைக் குறைவாகவும் சேர்க்கவும்.
 
அரிசி வேக ஆரம்பித்தவுடன் பாலைச் சிறிது சிறிதாக சேர்க்கவும். அரிசி வெந்து நன்கு குழையும் வரை வேக விடவும்.
 
வெல்லத்தைச் சிறிது தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து கொதிக்க வைத்துக் கரைந்ததும் வடிகட்டி, கொள்ளவும்.
 
அரிசி வெந்து நன்கு குழைய ஆரம்பித்தவுடன் வடிகட்டி வைத்துள்ள வெல்லத்தை கரைசலை ஊற்றி தீயைக் குறைத்து வைக்கவும். எல்லாம் ஒன்று சேர்ந்து வெந்தவுடன், நெய்யில் முந்திரி, திராட்சையை வறுத்துப் போடவும்.
 
சூப்பரான பால் சர்க்கரை பொங்கல் ரெடி.

http://www.maalaimalar.com

Link to comment
Share on other sites

பொங்கல் ஸ்பெஷல்: அவல் சர்க்கரைப் பொங்கல்

 
அ-அ+

அவலில் பொங்கல் செய்தால் அருமையாக இருக்கும். இன்று அவலை வைத்து எளிய முறையில் சர்க்கரை பொங்கல் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

 
 
பொங்கல் ஸ்பெஷல்: அவல் சர்க்கரைப் பொங்கல்
 
தேவையான பொருட்கள் :
 
அவல் - ஒரு கப்
வெல்லம் - முக்கால் கப்
குங்குமப்பூ - சிறிது
பால் - 1/2 கப்
நெய் - 1/4 கப்
ஏலக்காய் - 1
முந்திரி - 10
பச்சைப் பயறு - 1/4 கப்
திராட்சை - 10
 
201801121452234026_1_Aval._L_styvpf.jpg
 
செய்முறை : 
 
முதலில் பச்சைப் பருப்பை வெறும் வாணலில் சிவக்க வறுத்துக்கொள்ளவும்.
 
அதே வாணலில் அவலைப் போட்டு சூடேறும் வரை வறுத்துக்கொள்ளவும்.
 
பச்சைப் பருப்பை ஒரு பாத்திரத்தில் போட்டு அது வேகும் அளவிற்கு தண்ணீர் விட்டு மலர வேக வைக்கவும். பருப்பு வெந்ததும் அதில் ஒரு பங்கு அவலுக்கு இரண்டு பங்கு பாலும், தண்ணீருமாகக் கலந்து ஊற்றி கொதிக்க வைக்கவும்.
 
பின்பு கொதி வந்ததும் அவலைக்கொட்டிக் கட்டித்தட்டாமல் நன்றாகக் கிளறி மிகவும் குறைவானத் தீயில் மூடி வேகவைக்கவும். அவல் சீக்கிரமே வெந்துவிடும். 
சிறிது சூடான பாலில் குங்குமப்பூவைப் போட்டுக் கலக்கி பொங்கலில் சேர்த்துவிடவும்.
 
ஒரு அடி கனமான பாத்திரத்தில் பொடித்த வெல்லத்தைப் போட்டு சிறிது தண்ணீர் விட்டு அடுப்பிலேற்றி இளம் பாகு பதம் வந்ததும் இறக்கி வடிகட்டி பொங்கலில் கொட்டிக் கிளறவும்.
 
ஏலக்காயைத் தட்டிப் போடவும்.
 
மற்றொரு வாணலில் நெய் விட்டு முந்திரி, திராட்சை இரண்டையும் பொன்னிறமாக வறுத்து இவற்றை நெய்யுடன் சேர்த்து பொங்கலில் கொட்டிக்கிளறி இறக்கவும் பரிமாறவும்.
 
அருமையான அவல் சர்க்கரைப் பொங்கல் ரெடி.

http://www.maalaimalar.com/

பொங்கல் ஸ்பெஷல்: கருப்பரிசி சர்க்கரைப் பொங்கல்

 
அ-அ+

கருப்பரிசி உடலுக்கு மிகவும் நல்லது. இந்த பொங்கல் பண்டிகைக்கு கருப்பரிசியை வைத்து பொங்கல் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

 
 
 
 
பொங்கல் ஸ்பெஷல்: கருப்பரிசி சர்க்கரைப் பொங்கல்
 
தேவையான பொருட்கள் 
 
கருப்பரிசி - ஒரு கப்
உப்பு - துளிக்கும் குறைவாக‌ (சுவைக்காக‌)
வெல்லம் - ஒரு கப்
நெய் - தேவையான அளவு
பால் - 1/4 கப்
முந்திரி - 10
பாசிப்பருப்பு - 1/4 கப்
ஏலக்காய் - 1 
தேங்காய்ப் துருவல் - சிறிதளவு.
 
201801101512249534_1_blackricepongal._L_styvpf.jpg
 
செய்முறை
 
முதலில் பாசிப்பருப்பை வெறும் வாணலில் சூடுவர வறுத்துக்கொள்ளவும். 
 
வெல்லத்தை துருவிக்கொள்ளவும்.
 
ஏலக்காயைப் பொடித்து வைக்கவும்.
 
பருப்புடன் கருப்ப‌ரிசியை சேர்த்துக் நன்றாக கழுவிவிட்டு, ஒரு பாத்திரத்தில் போட்டு அதனுடன் இரண்டு கப் தண்ணீர் விட்டு, சிறிது உப்பு போட்டு, நன்றாக வேக வைக்கவும்.
 
நன்றாக வெந்த பிறகு பாலை விட்டு தீயை மிதமான தீயில் வைத்துக்கொள்ளவும்.
 
பின்பு ஒரு பாத்திரத்தில் துருவிய வெல்லத்தைப் போட்டு சிறிது தண்ணீர் விட்டு அடுப்பில் ஏற்றி, வெல்லம் கரைந்ததும், மண் - தூசு போக வடிகட்டிவிட்டு, பிறகு மீண்டும் அடுப்பில் ஏற்றி வெல்லத் தண்ணீர் நன்றாக நுரைத்துக்கொண்டு வரும்போது எடுத்து சர்க்கரைப் பொங்கலில் கொட்டி நன்றாகக் கிளறிவிடவும்.
 
பிறகு தேங்காய் துருவல், பொடித்து வைத்துள்ள ஏலக்காய் சேர்த்துக் கிளறவும்.
 
நெய்யில் முந்திரியை வறுத்து பொங்கலில் சேர்த்துக் நன்றாக கிளறி இற‌க்கவும். 
 
இப்போது சுவையான கருப்பரிசி பொங்கல் தயார்.
Link to comment
Share on other sites

பொங்கல் குழம்பு

 
அ-அ+

பொங்கல் பண்டிகைக்கு ஏழு வகையான காய்கறிகளை (ஒற்றைப்படையில்) வைத்து குழம்பு செய்வது வழக்கம். இந்த குழப்பை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

 
 
 
 
நாளைய ஸ்பெஷல் பொங்கல் குழம்பு
 
தேவையான பொருட்கள் :
 
சர்க்கரைவள்ளிக் கிழங்கு, சேனைக்கிழங்கு, கருணைக்கிழங்கு, சேப்பங்கிழங்கு, பூசணி, பரங்கி, வாழைக்காய், கேரட், கத்திரிக்காய், உருளைக் கிழங்கு (பெரிதாக நறுக்கிய துண்டுகள்) - இரண்டரை கப்
மொச்சைக் கொட்டை, பட்டாணி - கால் கப்
அவரை, கொத்தவரை, பீன்ஸ் (கால் இன்ச் நீள துண்டுகள்) - தலா அரை கப்
துவரம் பருப்பு - அரை கப்
மைசூர் பருப்பு - 6 டீஸ்பூன்
புளி - ஒரு பெரிய எலுமிச்சை அளவு
எண்ணெய் - 6 தேவையான அளவு
நெய் - 4 டீஸ்பூன்
மஞ்சள் பொடி - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
 
வறுத்து அரைக்க 
 
பெருங்காயம் - 1 துண்டு
உளுந்தம் பருப்பு - 2 டீஸ்பூன்
கடலைப் பருப்பு - 4 டீஸ்பூன்
தனியா - 6 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 15
மிளகு - 2 டீஸ்பூன்
வெந்தயம் - கால் டீஸ்பூன்
துருவிய தேங்காய் - அரை கப்
 
தாளிக்க
 
கடுகு - 4 டீஸ்பூன்
பச்சை மிளகாய் - 4
நிலக்கடலை - 4 டீஸ்பூன்
கறிவேப்பிலை, கொத்தமல்லித் தழை - சிறிதளவு
 
201801131208159729_1_pongalkulambu._L_styvpf.jpg
 
செய்முறை :
 
துவரம் பருப்பு, மைசூர் பருப்பை நன்றாக கழுவி தேவையான தண்ணீர் ஊற்றி குக்கரில் வேகவையுங்கள். 
 
கடாயை அடுப்பில் வைத்து அதில் மூன்று டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும் முறையே பெருங்காயம், உளுந்து, கடலைப் பருப்பு, தனியா, காய்ந்த மிளகாய், மிளகு, வெந்தயம், தேங்காயைத் தனித்தனியே சேர்த்து சிவக்க வறுத்து, ஆறியதும் சிறிதளவு தண்ணீர் சேர்த்து நைசாக அரையுங்கள். 
 
புளியுடன் நான்கு கப் தண்ணீர் சேர்த்துக் கரைத்து கொள்ளவும். 
 
பூசணி, பரங்கி, கத்திரிக்காய், வாழைக்காய் தவிர மற்ற காய்கறித் துண்டுகளை சிட்டிகை மஞ்சள் பொடி, உப்பு சேர்த்து நசுங்கும் பதத்துக்கு வேகவைத்து கொள்ளவும். 
 
புளிக்கரைசலில் பூசணி, பரங்கி, வாழைக்காய், கத்திரிக்காய் துண்டுகளைச் சேர்த்து கொதிக்கவிடுங்கள். சற்று புளி வாசனை போனதும் பாதியளவு வெந்த காய்கறிகள், தேவையான உப்பு,  மஞ்சள் பொடி சேர்த்துக் கொதிக்கவையுங்கள்.
 
நன்கு கொதித்து சேர்ந்து வந்ததும், அரைத்த கலவை, வேகவைத்த பருப்பு சேர்த்துக் கொதிக்கவிடுங்கள். பத்து நிமிடம் கொதித்ததும் அடுப்பை மிதமான தீயில் வைத்து கொள்ளவும்.
 
கடாயை அடுப்பில் வைத்து 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் மற்றும் நெய்யைச் சுடவைத்து கடுகு, நிலக்கடலை, கீறிய பச்சை மிளகாய் சேர்த்துத் தாளித்து குழம்பில் சேர்த்து கறிவேப்பிலை, கொத்தமல்லி தழை சேர்த்தால் மணக்கும் ஏழு கறிக்குழம்பு தயார்.
 
இந்தக் குழம்பில் ஏழு காய்கறிகள் சேர்ப்பது வழக்கம். ஆனால் இதற்கு மேலும் கூட்டியோ, அல்லது கிடைத்த காய்கறிகளைக் கொண்டும் இந்தக் குழம்பைச் செய்யலாம். ஆனால் காய்கறிகள் எண்ணிக்கை ஒற்றைப் படையாக இருக்க வேண்டும்.
 

http://www.maalaimalar.com

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பொங்கலோ பொங்கல்....எல்லா ஆயிட்டங்களும் அருமை.....!  tw_blush:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • Published By: VISHNU   29 MAR, 2024 | 01:27 AM கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் கிளிநொச்சி பாரதிபுர செபஸ்ரியார் வீதியின் பாலம் புனரமைத்தலுக்கான அடிக்கல் நாட்டு விழா வியாழக்கிழமை (28) இடம்பெற்றிருந்தது. குறித்த நிகழ்வில்  கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், வன்னி பாராளுமன்ற உறுப்பினர் திலீபன், ஒப்பந்ததாரர்கள், பிரதேச செயலாளர்கள், கிராம மக்கள் மற்றும் வீதி அதிகார சபை உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். இந்நிகழ்வில் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களினால் பாலம் புனரமைப்புக்கான திரைநீக்கம் செய்யப்பட்டு பின் பால புனரைப்புக்கான அடிக்கல்லும் நாட்டி வைத்தார்.குறித்த பாலமானது 15,329,888.18 நிதி பங்களிப்பில் 90நாட்கள் ஒப்பந்த அடிப்படையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட கல்மடு நகர் பகுதியில் அமைந்துள்ள மூலிகைப் பண்ணையின்  பிரதான வீதியினை புனரமைப்பதாகவும் அதற்குரிய நிதியினை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் தெரிவித்து அத்துடன் மேலும் தெரிவிக்கையில் பல சிறிய பாலங்கள் உடனடியாக புனரிப்பு செய்வதற்கான நடவடிக்கையினை  உடன் மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்ததுடன் இப்பகுதிகளில் உள்ள பலகிராமிய வீதிகளை புணரமைப்பு செய்வதற்குசம்பந்தப்பட்ட அமச்சுடன் கலந்துரையாடயிருப்பதாகவும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179939
    • புவி வெப்பமயமாதலால், துருவப் பனிக்கட்டிகள் வேகமாக உருகி வருகின்றன. திடமான பனிக்கட்டி உருகுவதால் பூமியின் மையப்பகுதியில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக பூமியின் சுழற்சி வேகம் அதிகரித்து அதன் மூலம் பூமியின் நேரம் மாறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், இன்னும் சில ஆண்டுகளில் பூமியின் நேரம் ஒரு நாளைக்கு ஒரு நொடி வீதம் குறையும் என்று விஞ்ஞானிகள் தற்போது கணித்துள்ளனர் ஒரு வினாடி என்பது மிக குறுகிய காலப்பகுதி என்ற போதிலும், அது கணினி பயன்பாட்டில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர். https://thinakkural.lk/article/297441
    • கொதிக்கும் காய்ச்சலுடன், தாயின் முன்னிலையில் கண்ணீரை வென்ற ‘சஞ்சுமல் பாய்ஸ்’ வீரர் பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 29 மார்ச் 2024, 03:25 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஒவ்வொரு அணியிலும் ஒரு ரியல் ஹீரோ இருப்பார். அனைத்து நேரங்களிலும் அவர்களின் உதயம் இருக்காது, தேவைப்படும் நேரத்தில் அவர்களின் எழுச்சி அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்லும். அந்த வகையில் “சஞ்சுமெல் பாய்ஸ்” என்று அழைக்கப்படும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு நேற்றைய ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஒளிர்ந்தவர் ரியான் பராக் மட்டும்தான். ஜெய்ப்பூரில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 9-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியை 12 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 2ஆவது வெற்றி பெற்றது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. முதலில் பேட் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் சேர்த்தது. 186 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் சேர்த்து 12 ரன்களில் தோல்வி அடைந்தது. இந்த வெற்றியின் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சொந்த மைதானத்தில் இந்த சீசனில் தொடர்ந்து 2ஆவது வெற்றியைப் பெற்றுள்ளது. முதல் வெற்றி பெற்றவுடன் நிகர ரன்ரேட்டை ஒன்று என வைத்திருந்த ராஜஸ்தான், 2 வெற்றிகளில் 4 புள்ளிகள் பெற்றும் நிகர ரன்ரேட் 0.800 புள்ளியாகக் குறைந்துவிட்டது. டெல்லி கேபிடல்ஸ் அணி அடுத்தடுத்து இரு தோல்விகளைச் சந்தித்துள்ளது. இதனால் இன்னும் புள்ளிக்கணக்கைத் தொடங்க முடியாமல், நிகர ரன்ரேட்டும் மைனஸ் 528ஆக பின்தங்கியுள்ளது. இந்த ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஜொலித்தவர் ரியான் பராக் (45 பந்துகளில் 84 ரன்கள் 6சிக்ஸர்கள், 7பவுண்டரிகள்) மட்டும்தான். ஒரு கட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணி 3 விக்கெட் இழப்புக்கு 36 ரன்கள் என்று இக்கட்டான நிலையில் தடுமாறியது. ஆனால், 4வது பேட்டராக களமிறங்கிய ரியான் பராஸ், அஸ்வினுடன் ஜோடி சேர்ந்து 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும், ஜூரெலுடன் சேர்ந்து 52 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அணிக்கு கவுரமான ஸ்கோரை பெற்றுக் கொடுத்தார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES ஒரு கட்டத்துக்கு மேல் அதிரடி ஆட்டம்தான் ஸ்கோரை உயர்த்த கை கொடுக்கும் என்பதை அறிந்த ரியான் பராக் டெல்லி பந்துவீச்சாளர்களை வெளுக்கத் தொடங்கினார். ஒரு கட்டத்தில் 20 பந்துகளில் 16 ரன்கள் என்று மெதுவாக ஆடிய பராக் அதன்பின் பேட்டை சுழற்றத் தொடங்கினார். பராக் தான் சந்தித்த கடைசி 19 பந்துகளில் மட்டும் 58 ரன்களைச் சேர்த்தார். அதிலும் அதிவேகப்பந்துவீச்சாளர் நோர்க்கியா வீசிய கடைசி ஓவரில் மட்டும் 6 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என 25 ரன்களை பராக் சேர்த்தார். ராஜஸ்தான் அணியை ஒற்றை பேட்டராக கட்டி இழுத்து பெரிய ஸ்கோருக்கு கொண்டு வந்த ரியான் பராக் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த 3 சீசன்களிலும் ரியான் பராக் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. கடந்த சீசனில் 7 இன்னிங்ஸில் பராக் சேர்த்தது வெறும்78 ரன்கள்தான், 2022ம் ஆண்டு சீசனில் பராக் 14 இன்னிங்ஸ்களில் 148 ரன்கள் சேர்த்தார், 2021 சீசனில் 10 இன்னிங்ஸ்களில் 93 ரன்கள் என பராக் பேட்டிங் மோசமாகவே இருந்தது. இதனால் அணியில் இருந்தாலும் பல போட்டிகளில் ப்ளேயிங் லெவனில் இடம் பெறவில்லை. ஆனால், கடந்த ஆண்டில் உள்நாட்டுப் போட்டிகளில் ரியான் பாராக் தீவிரமான ஆட்டத்தால் கிடைத்த அனுபவம் ஆங்கர் ரோல் எடுத்து அணியை இக்கட்டான நிலையில் இருந்து மீ்ட்டுள்ளது. 2024 சீசன் தொடங்கியதில் இருந்தே பராக்கின் பேட்டிங்கில் முதிர்ச்சியும், பொறுப்புணர்வும் அதிகம் இருந்ததைக் காண முடிந்தது. முதல் ஆட்டத்திலும் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து பராக் 93 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது பெரிய ஸ்கோருக்கு கொண்டு சென்றது. அந்த ஆட்டத்திலும் பராக் 29 பந்துகளில் 43 ரன்கள் சேர்த்தார். இரு போட்டிகளிலும் தன்னுடைய ஆட்டத்தின் முதிர்ச்சியை, பொறுப்புணர்வை பராக் வெளிப்படுத்தியுள்ளார். அது மட்டுமல்லாமல் கடந்த 3 நாட்களாக ரியான் பராக்கிற்கு கடும் காய்ச்சல், உடல்வலி இருந்துள்ளது.ஆனால், மாத்திரைகளை மட்டும் உட்கொண்டு, அந்த உடல் களைப்போடு நேற்றைய ஆட்டத்தில் பராக் விளையாடினார் என ராஜஸ்தான் நிர்வாகம் தெரிவித்துள்ளது.   பட மூலாதாரம்,GETTY IMAGES தாயின் முன் சிறப்பாக ஆடியது மகிழ்ச்சி ஆட்டநாயகன் விருது வென்ற ரியான் பராக் பேசுகையில் “ என்னுடைய உணர்ச்சிப் பெருக்கு அடங்கிவிட்டது, என்னுடைய தாய் இந்த ஆட்டத்தை இங்கு வந்து நேரில் பார்த்தால் அவர் முன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறேன். என்னை இங்கு கொண்டுவருவதற்கு அவர் பல போராட்டங்களை சந்தித்துள்ளார். நான் சிறப்பாக ஆடுகிறேனோ இல்லையோ, என்னுடைய திறமை என்னவென்று எனக்குத் தெரியும், அதை ஒருபோதும் மாற்றியதில்லை. உள்நாட்டுப் போட்டிகளில் அதிகமான போட்டிகளில் பங்கேற்றேன், அதிகமான ரன்களும் குவித்தேன். டாப்-4 பேட்டராக வருபவர் ஆட்டத்தை கடைசிவரை எடுத்துச் செல்ல வேண்டும் அதை செய்திருக்கிறேன். முதல் ஆட்டத்தில் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்தேன். இன்று சஞ்சு செய்த பணியை நான் செய்தேன். நான் 3 நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் இருந்தேன். இந்த ஆட்டத்துக்காக கடினமாக உழைத்துள்ளேன். என்னால் விளையாட முடியும் என மனதை தயார் செய்து பேட் செய்தேன்” எனத் தெரிவித்தார். ஆட்டத்தை திருப்பிய பந்துவீச்சாளர்கள் ஒரு கட்டத்தில் ஆட்டம் டெல்லி கேபிடல்ஸ் கையில்தான் இருந்தது. அதை அவர்களிடம் இருந்து பறித்தது ராஜஸ்தான் பந்துவீச்சாளர்கள்தான். கடைசி 5 ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 60 ரன்கள் தேவைப்பட்டது. 16-வது ஓவரை வீசிய சஹல் 6 ரன்கள் மட்டுமே கொடுத்து அபிஷேக் போரெல் விக்கெட்டை கைப்பற்றினார். அஸ்வின் வீசிய 17-வது ஓவரில் டெல்லி பேட்டர் ஸ்டெப்ஸ் 2 சிக்ஸர்கள் உள்பட 19 ரன்கள் சேர்த்தால் ஆட்டம் பரபரப்பானது. ஆவேஷ் கான் 18-வது ஓவரை வீசியபோது, ஸ்டெப்ஸ் ஒரு பவுண்டரி உள்பட 9 ரன்களைச் சேர்த்து அணியை வெற்றி நோக்கி நகர்த்தினார். கடைசி இரு ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 32 ரன்கள் தேவைப்பட்டது. சந்தீப் சர்மா வீசிய 19-வது ஓவரில் முதல் இருபந்துகளில் பவுண்டரி, சிக்ஸர் என ஸ்டெப்ஸ் பறக்கவிட்டதால் ஆட்டம் டெல்லி பக்கம் சென்றது.அந்த ஓவரில் டெல்லி 15 ரன்கள் சேர்த்தது. கடைசி ஓவரில் டெல்லி வெற்றி பெற 17 ரன்கள் தேவைப்பட்டது.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெத்ஓவர் ஸ்பெஷலிஸ்ட் கடந்த முதல் ஆட்டத்திலும் டெத் ஓவரில் கடைசி ஓவரை ஆவேஷ்கான் வீசி வெற்றி தேடித்தந்ததால் இந்த முறையும் கேப்டன் சஞ்சு, ஆவேஷ் கானை பயன்படுத்தினார். கடைசி ஓவரை ஆவேஷ்கான் மிக அற்புதமாக வீசினார். நல்ல ஃபார்மில் இருந்த ஸ்டெப்ஸை ஒரு பவுண்டரி, சிக்ஸர்கூட அடிக்கவிடாமல், 3 பந்துகளை அவுட்சைட் ஆஃப்ஸ்டெம்பிலும் வீசினார். 4வது பந்தை ஸ்லாட்டில் வீசியும் ஸ்டெப்ஸ் அடிக்கவில்லை. 5-வது பந்தை ஃபுல்டாசாகவும், கடைசிப்பந்தில் ஃபுல்டாசாக வீசி டெல்லி பேட்டர்களை கட்டிப்போட்டார் ஆவேஷ் கான். அதிரடியாக ஆடிய அஸ்வின் நெருக்கடியான கட்டத்தில் பேட்டிங் வரிசையில் தரம் உயர்த்தப்பட்டு நடுவரிசையில் அஸ்வின் நேற்று களமிறக்கப்பட்டார். ரியான் பராக்கிற்கு நல்ல ஒத்துழைப்பு அளித்து அஸ்வின் ஸ்ட்ரைக்கை மாற்றி, 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும் அமைத்துக் கொடுத்தார். ரியான் பராக் தன்னுடைய முதல்பாதி இன்னிங்ஸில் ரன் சேர்க்க திணறினார், ஆனால் அஸ்வின் அனாசயமாக 3 சிக்ஸர்களை வெளுத்தார். குறிப்பாக குல்தீப், நோர்க்கியா ஓவர்களில் அஸ்வின் 3 சிக்ஸர்களைப் பறக்கவிட்டார். அஸ்வின் அடித்த திடீர் சிக்ஸால்தான் ராஜஸ்தான் ரன்ரேட் 6 ரன்களைக் கடந்தது. அஸ்வின் தன்னுடைய பணியில் சிறிதும் குறைவி்ல்லாமல் சிறிய கேமியோ ஆடி 19 பந்துகளில் 29 ரன்கள் சேர்த்து பெவிலியன் சென்றார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெல்லிக்கு தொல்லையாகிய சஹல் ராஜஸ்தான் அணி தொடக்கத்திலேயே பர்கர், போல்ட் இருவருக்கும் 6 ஓவர்களை வீசச் செய்து பவர்ப்ளேயோடு முடித்துவிட்டது. இதனால் 14 ஓவர்கள்வரை நல்ல ஸ்கோர் செய்யலாம் என டெல்லி பேட்டர்கள் நினைத்திருக்கலாம். டேவிட் வார்னரும் களத்தில் இருந்தார். ஆனால், ஆவேஷ் கான் ஆஃப் சைடில் விலக்கி வீசி வார்னரை அடிக்கச் செய்து ஆட்டமிழக்கச் செய்தார். மிக அருமையாக பந்துவீசிய சஹல் இரு இடதுகை பேட்டர்களான கேப்டன் ரிஷப் பந்த், போரெல் இருவரையும் வெளியேற்றினார். 4 ஓவர்கள் வீசிய சஹல் 19 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார், இவரின் பந்துவீச்சில் ஒரு சிக்ஸர் மட்டுமே அடிக்க முடிந்தது, பவுண்டரி ஒன்றுகூட அடிக்கவில்லை. சஹல் 7 டாட் பந்துகளையும் வீசியதை கணக்கிட்டால் 2 ஓவர்களில்தான் சஹல் 19 ரன்களை வழங்கியுள்ளார். இரு முக்கியமான பேட்டர்களை சஹல் தனது பந்துவீச்சின் மூலம் வெளியேற்றியது டெல்லி அணிக்கு பெரிய பின்னடைவாக மாறியது. நடுங்கவைத்த பர்கர் ராஜஸ்தான் அணிக்கு இந்த சீசனில் கிடைத்த பெரிய பலம் டிரென்ட் போல்ட், ஆன்ட்ரூ பர்கர் ஆகிய இரு இடதுகை வேகப்பந்துவீச்சாளர்கள்தான். போல்ட் இந்த ஆட்டத்தில் விக்கெட் ஏதும் எடுக்காவிட்டாலும், பர்கர் இரு விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதிலும் ரிக்கி புயிக்கு பர்கர் வீசிய பவுன்ஸர் சற்று தவறியிருந்தால் ஹெல்மெட்டை பதம் பார்த்திருக்கும், ஆனால், கிளவ்வில் பட்டு சாம்சனிடம் கேட்சானது. அதேபோல நல்ல ஃபார்மில் இருந்த மார்ஷ்(23) விக்கெட்டையும் பர்கர் தனது அதிவேகப்பந்துவீச்சில் வீழ்த்தினார். தொடக்கத்திலேயே மார்ஷ், ரிக்கி புயி விக்கெட்டுகளை வீழ்த்தி டெல்லிக்கு பெரிய சேதாராத்தை பர்கர் ஏற்படுத்தினார். மணிக்கு சராசரியாக 148கி.மீ வேகத்தில் பந்துவீசும் பர்கர், பெரும்பாலான பந்துகளை துல்லியமாக, லைன் லென்த்தில் கட்டுக்கோப்பாக வீசுவது ராஜஸ்தான்அணிக்க பெரிய பலம்.   பட மூலாதாரம்,GETTY IMAGES வாய்ப்புகளை தவறவிட்ட டெல்லி அணி டெல்லி அணி பந்துவீச்சிலும்சரி, பேட்டிங்கிலும் சரி கிடைத்த வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்தி இருந்தால் வெற்றி கிடைத்திருக்கும். பந்துவீச்சில் தொடக்கத்திலேயே ராஜஸ்தான் பேட்டர்கள் ஜெய்ஸ்வால்(5), பட்லர்(11), சாம்ஸன்(15) என 3 முக்கிய பேட்டர்களையும் முகேஷ் குமார், குல்தீப், கலீல் அகமது வீழ்த்திக் கொடுத்தனர். இந்த நெருக்கடியை தொடர்ந்து ஏற்படுத்தி தக்கவைத்திருந்தால், ராஜஸ்தான் அணி ஸ்கோர் 120 ரன்களை கடந்திருக்காது. 14 ஓவர்கள் வரை ராஜஸ்தான் அணி 100 ரன்களைக் கூட கடக்கவில்லை. ஆனால், கடைசி 5 ஓவர்களில் அதிலும் டெத் ஓவர்ளில் டெல்லி பந்துவீச்சு மோசமானதை, பராக் பயன்படுத்தி வெளுத்து வாங்கினார். கலீல் அகமது, அக்ஸர் படேல் தவிர எந்தப் பந்துவீச்சாளரும் வாய்ப்பைப் பயன்படுத்தவில்லை. அதேபோல பேட்டிங்கிலும், பவர்ப்ளேயில் 59 ரன்களும், 12 ஓவர்களில் 100 ரன்களை எட்டி டெல்லி அணி வெற்றி நோக்கி சீராக சென்றது. ஆனால், ஒரு கட்டத்தில் ரிஷப் பந்த், போரெல், வார்னர் ஆகியோர் 25 ரன்களுக்குள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தது டெல்லிக்கு பின்னடைவாக மாறியது. கடைசி 5 ஓவர்களில் 60 ரன்களை எட்டுவதற்கும் ஸ்டெப்ஸ் கடுமையாக முயன்று வெற்றிக்கு அருகே கொண்டு சென்றார். ஸ்டெப்ஸுடன் நல்ல பவர் ஹிட்டர் பேட்டர் இருந்தால் ஆட்டம் திசைமாறியிருக்கும். டெல்லி அணியில் வார்னர்(49), ஸ்டெப்ஸ்(44) தவிர எந்த பேட்டரும் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. https://www.bbc.com/tamil/articles/clm7pvlmprko
    • Published By: DIGITAL DESK 3   29 MAR, 2024 | 09:47 AM   உலகில் வாழும் கிறிஸ்தவர்கள் இன்று யேசுக்கிறிஸ்துவின் பாடுகள், மரணத்தை நினைவு கூர்ந்து புனித வெள்ளியை அனுஷ்டித்து வருகின்றனர். இயேசுவின் மறைவு புனித வெள்ளியாக இன்று அனுசரிக்கப்படுகிறது. அவர் உயிர்த்தெழுந்த நாள் 'ஈஸ்டர்' ஞாயிறாக அனுஷ்டிக்கப்படுகின்றது. யேசுக்கிறிஸ்து இறந்தது துக்க நிகழ்வு என்றாலும், அதனால் மனித குலத்திற்கு விளைந்த நன்மைகளை வைத்தே 'புனித வெள்ளி' என்றழைக்கின்றனர் கிறிஸ்தவர்கள். வரலாற்றில் முக்கிய நிகழ்வான இயேசு கிறிஸ்துவின் பாடுகள், மரணம், உயிர்ப்பை உலகளவில் கிறிஸ்தவர்கள் நினைவு கூர்ந்து வருகின்றனர். அந்தவகையில் இயேசு கிறிஸ்து உயிர்விட்ட நாளை இன்று உலகிலுள்ள அனைத்து கிறிஸ்தவர்களும் இன்று 'பெரிய வெள்ளி'யாக நினைவு கூருகின்றனர். பெரிய வெள்ளி, புனித வெள்ளி, Good Friday என்று சொல்லும் போதே இயே­சுவின் மர­ணம் தான் சர்வ உலக மக்களின் நினை­விலும் வரும். அந்த நாளுக்கு பெரி­ய­வர்கள் அல்­லது முன்­னோர்கள் சரி­யாக பெய­ரிட்­டுள்­ளனர். நல்ல வெள்ளி, புனித வெள்ளி, எல்லா வெள்­ளி­க­ளிலும் பெரிய வெள்ளி என்று மிகவும் பொருத்­த­மா­கவே பெய­ரிட்­டுள்­ளனர். ஆனால், அந்த பெயர்­களின் அடிப்­ப­டையில் அந்த நாள் அனுஷ்­டிக்­கப்­ப­டு­கின்­றதா என்று கேட்டால் இல்லை என்­றுதான் சொல்­ல­வேண்டும். ஒரு கெட்ட மனி­த­னு­டைய மர­ண­மா­யி­ருந்­தாலும் அதற்கு அனு­தா­பப்­ப­டு­கிற உல­கமே நாம் வாழும் இவ்­வு­லகம். ஒரு மனி­த­னுக்கும் தீங்கு நினை­யாமல் எல்லா மனித வாழ்­விலும் நன்மை செய்த தேவ­கு­மாரன் இயே­சுவின் மரண நாளுக்கு வைக்­க­வேண்­டிய பெயரை வைக்­காமல் அந்த நாளுக்கு நல்ல நாள் என்றும், புனித நாள் என்றும், பெரிய நாள் என்றும் ஏன் பெய­ரிட்­டார்கள்? ஆம் பிரி­ய­மா­ன­வர்­களே, இந்த நாள் உல­கத்­தி­லுள்ள எல்லா மனி­தர்­க­ளுக்கும் நல்ல நாள். ஏனென்றால், ஜீவ கால­மெல்லாம் மரண பயத்­தி­னாலே அடி­மைத்­த­னத்­திற்­குள்­ளா­ன­வர்கள் யாவ­ரையும் விடு­தலை பண்­ணும்­ப­டிக்கு தேவ­கு­மா­ரனாம் இயேசு சர்­வத்­தையும் படைத்­தவர், சர்­வத்­தையும் ஆளுகை செய்ய வேண்­டி­யவர். பிள்­ளைகள் மாமி­சத்­தையும் இரத்­தத்­தையும் உடை­ய­வர்­க­ளா­யி­ருக்க அவரும் நம்­மைப்போல் மாமி­சத்­தையும் இரத்­தத்­தையும் உடை­ய­வ­ராகி மர­ணத்தின் அதி­ப­தி­யா­கிய பிசா­சா­ன­வனை தம்­மு­டைய மர­ணத்­தினால் அழிக்கும் படிக்கும், நம்மை மரண பயத்­தி­லி­ருந்து விடு­விக்­கும்­ப­டிக்கும் மர­ணத்­துக்­கே­து­வான ஒன்றும் அவ­ரிடம் காணப்­ப­டாத போதும், மரணம் மனித வாழ்வில் பயத்­தையோ அடி­மைத்­த­னத்­தையோ கொடுக்­கக்­கூ­டாது என்று காண்­பிக்கும் படிக்கும் மர­ணத்தை ஏற்றுக் கொண்டார். பிரி­ய­மா­ன­வர்­களே, இந்த உலகில் வாழும் எல்லா மனி­த­னுக்கும் மரணம் என்­பது மாமி­சத்­துக்கும் இரத்­தத்­துக்­கும்தான். நம்­மு­டைய ஆவி, ஆத்­து­மா­வுக்­கல்ல. சரீ­ரத்தில் இரத்த ஓட்டம் நின்று சரீரம் செய­லற்றுப் போவ­துதான் மரணம். எனவே பரி­சுத்த வேதா­கமம், ‘ஆத்­து­மாவைக் கொல்ல வல்­ல­வர்­க­ளா­யி­ராமல், சரீ­ரத்தை மாத்­திரம் கொல்­லு­கி­ற­வர்­க­ளுக்கு நீங்கள் பயப்­பட வேண்டாம்; ஆத்­து­மா­வையும் சரீ­ரத்­தையும் நர­கத்­திலே அழிக்க வல்­ல­வ­ருக்கே பயப்­ப­டுங்கள்’ (மத் 10:28) என்று சொல்­கி­றது. மேலே சொல்­லப்­பட்­ட­து­போல மரண பயத்­தினால் பிசா­சா­னவன் யாவ­ரையும் அடி­மைப்­ப­டுத்­தி­யி­ருந்தான். நம் இயேசு சிலுவை மர­ணத்தை ஏற்றுக் கொண்டு உல­கி­லுள்ள எல்லா மனி­தர்­க­ளுக்கும் ‘இவ்­வு­லகில் மரணம் என்­பது வெறும் சரீ­ரத்­திற்கே சொந்­த­மா­னது’ என்ற உண்­மையை தெளி­வு ­ப­டுத்­தினார். எனவே உல­கத்­தி­லுள்ள எந்த மனு­ஷனும் மனு­ஷியும் இயே­சுவின் மர­ணத்தை ஏற்றுக் கொள்ளும் போது, மரண பயத்­திற்கு நீங்­க­லாகி பிசாசின் அடி­மைத்­த­னத்­திற்கு நீக்­க­லாக்­கப்­ப­டு­கி­றார்கள். ஆக­வேதான் அதை நல்ல வெள்ளி (Good Friday) என்று உலகம் அழைக்­கி­றது. அடுத்து புனித வெள்ளி என்று ஏன் சொல்­லு­கிறோம்? தேவன் மனி­தனை தம்­மைப்போல் வாழும்­ப­டி­யாயும், பரி­சுத்த சந்­த­தியை உரு­வாக்­கும்­ப­டி­யாயும் படைத்தார். ஆனால் முதல் மனிதன் ஆதாமின் கீழ்­ப­டி­யாமை, மீறு­த­லினால் உல­கத்தில் பாவம் வந்­தது. எல்லா மனி­தர்­க­ளையும் பாவம் ஆளுகை செய்­தது. ஒரு மனித வாழ்­விலும் புனிதம் (பரி­சுத்தம்) இல்லை. பாவம் கழு­வப்­ப­ட­வில்லை. ‘இரத்தம் சிந்­து­த­லினால் மாத்­தி­ரமே பாவப்­பி­ரா­யச்­சித்தம் உண்டு’ என்­பது உலகில் வாழும் அநே­க­மானோர் ஏற்றுக் கொள்ளும் ஒன்று. ஆகவே, தேவ­னு­டைய ஆதி விருப்­பத்­தின்­படி இயேசு சிலு­வையில் சிந்­திய இரத்தம் மாத்­தி­ரமே மனித வாழ்வின் பாவத்தை கழுவி பரி­சுத்­த­மாக்­கி­யது. இரண்டாம் ஆதாம் என்று அழைக்­கப்­படும் இயே­சுவின் கீழ்­ப­டிதல், தாழ்­மையின் மூலம் உலகில் கிரு­பையும், சத்­தி­யமும் வந்­தது. யார் இயேசு மூலம் வந்த கிரு­பையைக் கொண்டு சத்­தி­யத்தை பின்­பற்­று­கி­றார்­களோ அவர்கள் வாழ்வில் கீழ்­ப­டிவும், தாழ்­மையும் காணப்­படும். இயே­சுவின் கீழ்­ப­டிவும் தாழ்­மையும் முழு­மையாய் கல்­வாரி சிலு­வையில் காட்­டப்­ப­டு­கி­றது. இயேசு அங்கே சிந்­திய இரத்­தத்­தி­னால்தான் நாம் பரி­சுத்­த­மாக்­கப்­பட்டோம். ஆக­வேதான் புனித (பரி­சுத்த) வெள்ளி என்று அந்நாள் போற்­றப்­ப­டு­கி­றது. பிரி­ய­மா­ன­வர்­களே, எத்­த­னையோ வெள்­ளிக்­கி­ழ­மைகள் இருக்க இந்­நாளை மட்டும் ஏன் பெரிய வெள்ளி என்று சொல்­கிறோம்? இந்த நாள் மனித வாழ்வில் மரண பயத்தை நீக்கி, அடி­மைத்­தன நுகத்தை முறித்து, மனித வாழ்வில் சாப­மாக வந்த பாவத்தைக் கழுவி, ஆசிர்­வா­தத்தை உண்­டாக்கி, மனி­தனை சிந்­தனை செய்ய வைத்த நாள். இது துக்­கத்தின் நாளும் அல்ல, சந்­தோ­ஷத்தின் நாளும் அல்ல. இது அர்ப்­ப­ணிப்பின், தீர்­மா­னத்தின் நாள். இயே­சுவின் மர­ணத்தில் நம்மை பங்­குள்­ள­வர்­க­ளாக்கும் நாள். நம்­மு­டைய பாவ, சாப, தரித்­திர, மரண வல்­ல­மையை முறி­ய­டித்த நாள். நாம் நம் இயே­சுவின் மர­ணத்தை ஏற்று அதில் நாம் பங்­கு­டை­ய­வர்­க­ளா­கிறோம் என்­ப­துதான் நம் வாழ்வில் நாம் எடுத்த தீர்­மா­னங்­களில் மிகவும் பெறு­ம­தி­யான, விலை­ம­திக்க முடி­யாத தீர்­மானம். நம் வாழ்வில் நாம் எடுக்கும் வெற்றியான தீர்மானத்தின் நாள்தான் நம் வாழ்வின் பெரிய நாளாய் இருக்கும். ஆகவே, இந்த நாள் நல்ல, புனித, பெரிய நாளாய் என் வாழ்வில் அமைந்துள்ளது. உங்கள் வாழ்விலும் அமைய இயேசுவோடு கூட நீங்கள் சிலுவையில் அறையப்பட உங்களை ஒப்புக் கொடுக்கும் தீர்மானம்; உங்கள் பாவ, சாப, பலவீனங்களை சிலுவையில் அறைந்து இயேசுவின் தேவ, தூய பண்புகளை உங்கள் வாழ்வில் கொண்டு வரும். இந்நிலையில், இலங்கையைப் பொருத்தவரையில் மக்கள் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகின்ற நிலையில், கிறிஸ்தவர்கள் புனித வாரத்தை அனுஷ்டிக்கின்றனர். மக்கள் தற்போது எதிர்நோக்கியுள்ள இன்னல்களில் இருந்து விடுபட அனைவரும் பிரார்த்திப்போமாக ! சிலுவையைப் பெற்றுக் கொள்வோம்! ஜெயமாய் வாழ்வோம்! ஆமென்! பெரிய வெள்ளிக்கிழமையை முன்னிட்டு கொழும்பு-13 புதுச்செட்டித் தெரு புனித வியாகுல மாதா ஆலயத்தில் யேசுவின் பாடுகளை நினைவு கூர்ந்து சிலுவைப்பாதை இடம்பெற்றதை படங்களில் காணலாம். (படப்பிடிப்பு :- ஜே.சுஜீவகுமார்) https://www.virakesari.lk/article/179948
    • கணேசமூர்த்தியின் இந்த விபரீத முடிவுக்கு வைகோ தான் காரணம்..!  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.