Jump to content

அதிசயக்குழந்தை


Recommended Posts

உனக்கெங்கே புரியப்போகிறது

நீ இல்லாமல் நான் படும் துன்பம்...?

என் நினைவில்லாம்ல் நான் .....

தூங்கியிருக்கிறேன் நீ என் .....

நினைவையே ஆக்கிரமித்ததால்......!

 

^^^
கவிப்புயல் இனியவன்
பஞ்ச வர்ணக்காதல் கவிதை 03

Link to comment
Share on other sites

  • Replies 53
  • Created
  • Last Reply

மனம் நினைக்கும் வார்த்தைகள் .....
பேச உதடுகள் துடியாய் துடிக்குது ....
தடுக்கிறது நீ குடியிருக்கும் இதயம் .....
என்னுள் இருக்கும் நீ வேதனைபட்டால் ......
இறந்திடுவேன் என்கிறது என் இதயம் ....!!!

^^^
கவிப்புயல் இனியவன்
பஞ்ச வர்ணக்காதல் கவிதை 04
 

நீ காரணத்தோடு பிரிந்தாலும் .....
நான் காலமெல்லாம் காதலிப்பேன் ....
எப்படியும் வாழ்வது உன் புத்தி ....
உன்னோடே வாழ்வது என் பக்தி ....
தனியே இருந்தாலும் நினைவில் -நீ 

^^^
கவிப்புயல் இனியவன்
பஞ்ச வர்ணக்காதல் கவிதை 05

கண்ணால் தோன்றிய காதலுக்கு .....
கண்ணூறு பட்டு விட்டுவிடுகிறது........
கண்ணுக்கு தெரியாத காதலுக்கு ....
கனவு தான் மிஞ்சியது .....
காதல் புரியாத புதிராய் தொடர்கிறது....!!!

^^^
கவிப்புயல் இனியவன்
பஞ்ச வர்ணக்காதல் கவிதை 06

Link to comment
Share on other sites

  • 3 weeks later...

அதிசயக்குழந்தை - அன்பு
-------------------
அளவுக்கு மிஞ்சினால்.....
அமிர்தமும் நஞ்சு.........
அன்புக்கும் பொருந்தும்.....!

என்னடா உளருகிறாய்.....?
என்று கேட்டேன் அவனிடம்....
ஆசான் எனும் தோறணையில்......
ஆமாம் ஆசானே எதுவும்.....
அளவோடு இருக்கனும்.....
இல்லையேல் அதுவே நஞ்சு.........!

பணத்தின் மீது அதிக அன்பு......
உடலை கெடுக்கும் உளத்தை......
மாசுபடுத்தும் அது நஞ்சுதானே........
பிள்ளைகள் மீது அதிக பாசம்.....
எதிர்பார்பை கூட்டும்......
நிறைவேறாதபோது குடும்ப.....
சண்டையாக மாறுகிறது........!

துணைமீது அதிக காதல்......
கோழையாக்கிவிடுகிறது......
சுயசிந்தனையை இழக்க வைக்கிறது......
தன்மானத்தை இழக்கவைக்கிறது.......
தனிமையாகினால் முதுமையை.....
துயரமடைய வைக்கிறது.................!

சமூக அக்கறை அதிகமானால்........
அதிக பதவி ஆசை வருகிறது......
பதவி வரும் போது எல்லவற்றையும்....
கண் மறைக்கிறது........!

அப்போ எதையும் விரும்ப கூடாது
என்கிறாயா.......?
இல்லை இல்லை ஆசானே.......
எல்லவற்றையும் விரும்புங்கள்.....
எல்லாம் உங்களால் தான் ......
நடைபெறுகிறது என்பதை மட்டும்....
மறந்துவிடுங்கள்.........!


^^^^^^^^^
அதிசயக்குழந்தை 15
வசனக்கவிதை 
கவிப்புயல் இனியவன்

Link to comment
Share on other sites

  • 4 weeks later...

--------------------------------
கடல் வழிக்கால்வாய் 
--------------------------------
!!!.........இறைவனோடு ஒரு தொடர்பாடல்.......!!!

^^^^^^^^^
என் விஞ்ஞான அறிவை ....
பயன்படுத்தி இறைவனோடு ...
பேசுவதற்கு தொலைபேசியை ...
கண்டு பிடித்தேன் - பலமுறை ...
முயற்சித்தேன் மறுமுனையில் ...
யாருமில்லை ......!

நீங்கள் அழைக்கும் நபர் 
வேறு ஒரு தொடர்பில் இருக்கிறார் ...
சற்று நேரத்தின் பின் தொடர்பு ...
கொள்ளவும் என்று கூட ....
மறுமுனையில் இருந்து வரவில்லை ....
இணைப்பு துண்டிக்கப்படவில்லை ....!

என்ன ஆச்சரியம் ....
ஒருநாள் மறுமுனையில் இறைவன் .....
யார் பேசுகிறீர்கள் என்று கேட்டேன் ...
நீதான் பேசுகிறாய் என்றார் இறைவன் ....
எத்தனை உண்மையான வசனம் அது ....!

இறைவா தயவு செய்து ...
இணைப்பை துண்டித்துவிடாதே....
உன்னிடம் நிறைய கேள்வி இருக்கு ....
நீ துண்டிக்கும் வரையும் நான் ...
துண்டிக்கபடமாட்டேன் என்றார் ...
இறைவன் ......!
எத்தனை உண்மையான வசனம் அது ....!!!

உன் படைப்பில் ஏன் இத்தனை ....
வேறுபாடுகள் - அறிவாளி ...
அறிவிலி - உயர்ந்தவன் தாழ்ந்தவன் ...
படித்தவன் படிக்காதவன் ....
இன்னும் இன்னும் எத்தனையோ ....
ஏன் இத்தனை வேறுபாடுகள் ....?

இறைவன் சிரித்துகொண்டு ...
சொன்னார் என் படைப்பில் ...
வேறுபாடு என்றும் இல்லை ...
உங்கள் எண்ணத்தாலும் ....
செயலாலும்தான் இத்தனை ...
வேறு பாடுகள் நீங்கள் தான் ...
வேறு படுத்தினீர்கள் 
வேறுபடுகிறீர்கள் என்றார் ....!

இப்போதும் பார் நீ கூட 
இறைவனோடு பேசுகிறாய் ...
என்று உன்னோடு ஆழ்மனதோடு ....
பேசுகிறாய் -கண்டு பிடித்துவிட்டாய் ....
கடலின் பாதையை .....!

ஒன்றுமே சொல்லாமல் இறைவன் ...
போய் விட்டார் - மன்னிக்கவும் 
என்னுள் அடங்கிவிட்டார் .....!

&
---------------------------
கடல் வழிக்கால்வாய் 
வசனக்கவிதை
ஆன்மீக கவிதை 
---------------------------
கவிப்புயல் இனியவன் 
மணிபல்லவம்  வட இலங்கை

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.