Jump to content

அதிசயக்குழந்தை


Recommended Posts

அதிசய குழந்தை அவன் ...
ஆசான் நான் ...
என்னைவிட அவனே முன்னுக்கு " அ "
நான் "ஆ "

இந்த குழந்தை இப்படியெல்லாம் ....
பேசுமா....?  சிந்திக்குமா ...?
நம்ப முடியவில்லை என்போர் ...
இந்த கவிதையை மூடிவிட்டு 
போகலாம் ....!!!

இந்த குழந்தை என்னதான் 
சொல்லப்போகிறது என்பதை ...
பார்க்க விரும்புவோர் ....
பொறுமையோடு காத்திருந்து ....
தொடராக வரும் வசனக்கவிதையை ....
பாருங்கள் .....!!!

அதிசயக்குழந்தை ....
எப்படி இருப்பான் ...?

ஆசான் நேரான சிந்தனையில் ...
பேசினால் அவன் எதிர் சிந்தனையில் 
பேசுவான் . ஆசான் எதிர் சிந்தனையில் 
பேசினால் அவன் நேர் நித்தனையில் ...
பேசுவான் - ஆனால் அர்த்தம் இருக்கும் ....!!!

ஆன்மீகம் பேசுவான் 
அரசியில் பேசுவான் 
இல்லறம் பேசுவான் 
எல்லாமே பேசுவான் 

இலக்கண தமிழில் உரைப்பான் 
இந்தாங்கோ என்று பேச்சு தமிழிலும் 
பேசுவான் ....
கசப்ப்னான உண்மைகளை உரைப்பான் ...
இனிப்பான பொய்களையும் சொல்வான் ...
மொத்தத்தில் அதிசய குழந்தை 
இடையிடையே அதிர்ச்சியை ....
தருவான் என்பது மட்டும் உண்மை ....!!!

^
அதிசயக்குழந்தை 
   வசனக்கவிதை 
கவிப்புயல் இனியவன் 

Link to comment
Share on other sites

  • Replies 53
  • Created
  • Last Reply

அதிசயக்குழந்தை - பூதம் 
-------
ஒட்டு துணிகூட இல்லாமல் ...
பிறந்த மேனியோடு கட்டாந்தரையில் ....
புழுதி மண்ணுக்குள் உருண்டு பிரண்டு ....
விளையாடிகொண்டிருந்தான் ....
அதிசயக்குழந்தை .......

டேய் எழுந்திரு என்று அதட்டினேன் ...
எதற்கு என்று கேட்டான் அவன் ....!!!

மண்ணுக்குள் விளையாடுகிறாயே ....
உடம்பு முழுக்க அழுக்கு படுத்தே ...
என்றேன் ....

நீங்க மட்டும் அழுகில்லையோ...?
என்றான் அவன் - மேலும் சொன்னான் ....

ஆசானுக்கு  நான் சொல்வதா ...?
ஊழ்வினை உடம்பே அழுக்குதான் ....
பஞ்ச பூத கூட்டுத்தானே உடம்பு ....!!!

மனத்தின் அழுக்கை நீக்க 
கண்ணீரால் (தண்ணீர் ) கழுவுகிறீர்கள் ....
உடலின் அழுக்கை நீக்கவும் ...
தண்ணீரால் கழுவுகிறீர்கள் ....
கோபப்படும் போது " நெருப்பாய்" கொதிக்குறீங்க ..
உள்ளத்தை துளைக்கும்  சொல்லை ...
காற்றோடு கலக்கிறீங்க ....
உங்களின் அசுத்தம் ஆகாயத்தையும் ...
அசுத்தமாக்கும் போது 
நான் இந்த மண்ணில் புரளுவது மட்டும் 
உங்களுக்கு அழுக்காய் தெரிகிறதோ ....?

என்றான் - அதியக்குழந்தை.....!!!

போதும் போதும் உன் வியாக்கியானம் ..
என்று கூறிக்கொண்டு ஒரு சிறு தடி எடுத்து ...
அதட்டினேன் .....

விழுந்து விழுத்து சிரித்தான் ....

ஏனடா சிரிகிறாய்....?

இயலாமையின் இறுதி கருவியே ....
அதிகாரம் என்றான் ...!

திகைத்து நின்றேன் ....!!!

தன் பகுத்தறிவால் விடைதராமல் ....
பட்ட தடியை தூக்கி நியாயம் தேடும் ...
ஆசானே - உம்மில் குற்றமில்லை ....
" ஏட்டு சுரக்காய் கறிக்கு உதவாது "
என்பதுபோல் உங்கள் புத்தக படிப்பு 
எனக்கு சரிவராது என்றான் 

^
அதிசயக்குழந்தை 
வசனக்கவிதை 
கவிப்புயல் இனியவன்
 

Link to comment
Share on other sites

அதிசயக்குழந்தை - உணவு 
-----
சாப்பிடாயா என்று கேட்டேன் ....
சாப்பிடேன் என்றான் .....
அதிசய குழ்ந்தை  .......!!!

என்ன சாப்பிட்டாய் ....?

என்ன சாப்பிடாய் என்று கேட்காமல் ....
எப்படி சாப்பிடாய் என்று கேளுங்கள் ...
என்று சொன்னான் .....!!!

எப்படி சாப்பிட்டாய் ....?

அடித்து பறித்து சாப்பிட்டேன் ....

நீ அத்தனை கொடூரமானவனா ...?

நான் மட்டுமல்ல நீங்களும் ....
அப்படித்தான் சாப்பிட்டு உள்ளீர் .....!!!

தன் இனத்தை பெருக்க வந்தத ....
தன் உணர்வை வெளிப்படுத்த வந்த ....
அத்தனை உயிரினத்தையும் ....
நாம் அடித்து அதன் வாழ்வுரிமையை ....
பறித்துதானே - சாப்பிடுகிறோம் .....!!!

மாங்காய் தேங்காய் என்று ....
அவை முதுமை அடைய முன்னரே ....
அடித்து இழுத்து பறித்து சாப்பிடுகிறோம் .....

குடியோடு குடித்தனமாய் தூங்கும் ...
ஜீவன்களுக்கு தூக்கத்திலேயே ....
கண்ணி வைத்து கொலை செய்து ....
சாப்பிடுகிறோம் ......

கூட்டம் கூட்டமாய் பார்க்கும் ....
பறவைகள் - சாரை சாரையாய் ...
அலைந்து திரியும் மீன்கள் ....
அத்தனைக்கும் வலைபோட்டு ....
வாழ்வுரிமையை  சாப்பிடுகிறோம் ....!!!

எல்லாமே இறைவன் எமக்கே ....
படைத்தவன் என்று இறைவனை ....
பிணையாக வைத்து அத்தனையின் ....
வாழ்வுரிமையைசாப்பிடுகிறோம் ....!!!

கேட்டால் அதுதான் உணவுசங்கிலி ....
என்று ஒரு கோட்பாட்டையும் 
வைத்திருக்கிறோம் - சொல்லுங்கள் ....!!!

ஆசானே ....!!!!

சமைத்து சாப்பிட்டோமா ....?
சண்டையிட்டு - மனசமரசத்துடன் 
சாப்பிட்டோமா ....?

^
அதிசயக்குழந்தை 
வசனக்கவிதை 
கவிப்புயல் இனியவன்

Link to comment
Share on other sites

அதிசயக்குழந்தை - உறக்கம் 
--------
ஏய் 
குழந்தாய் நேரமாகி விட்டது
உறங்கவில்லையா ....?

உறக்கம் என்றால் என்ன ....?
நானே சொல்கிறேன் ஆசானே ....!!!

மூளை ஓய்வெடுப்பது உறக்கம் ....
மூளை செயல் இழப்பது மரணம் ....
கண்ணை மூடுவது உறக்கமில்லை....
கண் மூடுவது என்பது சாதாரண ...
விடயமும் இல்லை மிக கடின வேலை....!!!

அப்படியென்ன கடினம் என்று கேட்டேன் ...?

வெறும் கண்ணை மூடுவது ஒன்றும் ...
கடினமில்லை .இரண்டு இமையும் 
இணைத்தால் போது அது கண் மூடல் ...
என்றுதான் எல்லோரும் நினைக்கிறோம் ....
தவறு கண்மூடினால் ஒன்றுமே ....
தெரியாமல் இருப்பது மட்டுமல்ல ....
ஒன்றுமே நினைக்காமல் இருப்பதே ....
உண்மை கண் மூடல் .....!!!

புருவத்தின் மத்தியில் நினைவை 
கொண்டுவந்து கண்மூடி உள்ளே ...
பாருங்கள் உங்களை நீங்கள் ....
அறிவீர்கள் உங்களின் அத்துணை ...
குணமும் படமாய் ஓடும் .....
என்று அந்த படமெல்லாம் ஓடி ...
கலைத்து வெறும் திரை கண் முன் ...
வருகிறதோ அன்றே நீங்கள் ....
உண்மையான கண் மூடல் 
அனுபவத்தை பெற்றுள்ளீர்கள் ....

வாழ்நாளில் என்றொ ஒரு நாள் ...
இப்படி கண்மூடிபாருங்கள் ....
சொர்க்கம் தெரியும் என்றான் ......!!!  

^
அதிசயக்குழந்தை 
வசனக்கவிதை 
கவிப்புயல் இனியவன்
தொடர் - 04

Link to comment
Share on other sites

அதிசயக்குழந்தை - பெயர் 
---
ஏய் குழந்தாய்....
உன் பெயரென்ன ....?

அதிசயகுழந்தை....!!!

இது ஒரு பெயரா ...?

அப்போ சொல்லுங்கள் ...
ஆசானே..... 
பெயர் என்றால் என்ன ...?

நீ தான் 
வியாக்கியான வித்தகன்- சொல் ...!!!

அஃறிணையில் பிறந்த மனிதனை ...
" உயர்திணை" யாக்குவது  ...
தான் பெயர் என்றான் ....!!!

புரியவில்லை என்றேன்....

விளக்கினான் இப்படி .....

நாய் ஓடியது (அஃறிணை)
பறவை பறக்கிறது (அஃறிணை)
கண்ணன் ஓடினான் (உயர்திணை)

இப்போது புரிகிறதா என்றான் ....?

புரிகிறது ஆனால் புரியல்ல ....

மேலும் சொன்னான் .....

மனிதன் பிறக்கும் போதும் ....
இறந்தபின்னும் அஃறிணை....!!!

இதோ என் விளக்கம் ....

குழந்தை அழுகிறது  (அஃறிணை)
பிணம் எரிகிறது  (அஃறிணை)
கண்ணன் அழுகிறான் ( உயர் திணை )

இப்போ பாருங்கள் ஆசானே ....
அஃறிணை பிறந்த மனிதன் ....
அஃறிணை இறக்கிறான் ....
இந்த இடைப்பட்ட காலத்தில் ....
மனிதனை உயர்திணையாக்கும்....
ஒரு மொழிக்கருவியே - பெயர் ....!!!

என்று மனிதனுக்கு பெயர் ....
சூட்ட படுகிறதோ -அன்றே அவன் ....
உயர் திணையில்.... 

அழைக்கப்படுகிறான் ....!!!
மனிதனின் வாழ்க்கை காலத்தை ....
உயர் தினையாக்குவதே -பெயர் ....!!!

^
அதிசயக்குழந்தை 
வசனக்கவிதை 
கவிப்புயல் இனியவன்
தொடர் - 05
 

Link to comment
Share on other sites

அதிசயக்குழந்தை - கை
----
கை தட்டி ஆரவாரமாக ....
இருந்தான் அதிசயக்குழந்தை.....
என்ன அத்துணை மகிழ்ச்சியோ ....?
ஆசான் அதிகாரத்தில் கேட்டேன் ....!!!

எனக்கு ....
கை கூப்புவது பிடிக்காது .......
கை தட்டுவதே பிடிக்கும் என்றான் ....
கை தட்டி பாருங்கள் -ஓசை மட்டும் ....
வருவதில்லை .ஓயஷ்சும் (காந்த சக்தி )
கிடைக்கும் என்றான் .....!!!

எல்லா மனித நரம்புகளும் ....
கையுடன் தொடர்புபடும் ....
கை தட்டினால் அனைத்து ....
மன அழுத்தமும் பறந்துவிடும் ....
தனித்து நின்று கை தட்டினால் ....
பித்தன் என்கிறார்கள் .....
கூட்டத்தோடு தட்டினால் ...
" பிரார்த்தனை" என்கிறார்கள் ....!!!

இன்னும் ஒன்றை கேளுங்கள்   .....!!!

கைகளை கொண்டு ....
போராடுங்கள் என்றது 
மாக்சிஷம்....!
கைகளை ஆயுதமாக்கியது .....
பாசிஷம்.......!
இருகோட்பாடும் தோற்றுவிட்டது... 
முதலாளிதுவத்திடம் .....!!!
இங்கு அலங்கார ஆடையுடன் ....
கை கூப்பியவன் ,கை குலுக்கியவன் ....
உலகினிலே நிமிர்த்து நிற்கிறான்  .....
எனக்கு கை கூப்பும் கொள்கை ....
பிடிக்காது ..............!!!

^
அதிசயக்குழந்தை 
வசனக்கவிதை 
கவிப்புயல் இனியவன்
தொடர் - 06

   

 

Link to comment
Share on other sites

அதிசயக்குழந்தை - வீடு 
------
எப்போதுமே ....
தெருகில் நிற்கிறாயே ....
உனக்கு வீடே இல்லையா ...?
குழந்தாய் ...?

எனக்கு சிறையில் ...
இருப்பது பிடிக்காது ...
என்றான் சட்டென்று ...!!!

வீட்டையேன் ...
சிறை என்கிறாய் ...?
அது பாதுகாப்பான ...
இடமல்லவா ....?
இருள் மழை காற்று ...
மின்னல் வெயில் ....
எல்லாவற்றிலும் இருந்து ....
பாதுகாக்கிறதே.....
அது எப்படி சிறை ....?

ஆசானே ....
வாழ்நாள் முழுதும் ...
இருள் மழை காற்று ...
மின்னல் வெயில் ....
எல்லாவற்றிலும் பேராடி ...
வாழும் மிருகத்துக்கு ...
எங்கே வீடு ....?

குழந்தாய் ....
அவை இவற்றிலிருந்து ....
வாழ்வதற்கான திறனில் ...
படைக்கப்பட்டுள்ளன ....
அவற்றுக்கு வீடு ......
தேவையில்லை ...!!!

அப்போ பலவீனமாக ....
படைக்கப்பட்ட மனிதனுக்கே ...
வீடு தேவைப்படுகிறது ....
அப்படிதானே ஆசானே ...?
பலவீனமாய் படைக்கபட்ட ...
மனிதனே இயற்கையை ....
அழித்தும் வாழ்கிறான் ....
எல்லா விடயத்திலும் ...
இருந்து வெளியில் வாருங்கள் ....
ஆசானே சுதந்திரமாய் ....
வாழ்வோம் .....!!!

^
அதிசயக்குழந்தை 
வசனக்கவிதை 
கவிப்புயல் இனியவன்
தொடர் - 07
 

 

Link to comment
Share on other sites

அதிசயக்குழந்தை -எழுத்து 
----------------
அழகான வர்ணம் பூசிய .....
ஒரு வீட்டின் வெளிப்புற ....
சுவரில் அதியக்குழந்தை....
கிறுக்கி விளையாடி....
கொண்டிருந்தான்.......!!!

டேய் 
சுவரை அசிங்க படுத்தாதே....
என்று கொஞ்சம் கோபத்தோடு ...
ஆசான் என்ற போர்வையில் ....
அவனை அதட்டினேன் ....!!!

சிரித்த படியே .....
சொன்னான் - ஆசானே ....
நீங்கள் தானே சுவர் இருந்தால் .....
சித்திரம் வரையலாம் என்றீர்கள் ....
நான் அதைதானே செய்கிறேன் ...!!!

குழந்தாய் ...
அந்த சுவர் என்றது ....
உடம்பை குறிக்குமடா....
ஆரோக்கியம் இருந்தாலே ....
சாதிக்கலாம் என்பதாகும் .....!!!

ஆசானே ....
உடம்பும் ஒரு கலவைதானே ....
அது இருக்கட்டும் ஆசானே ....

உணர்வுகளின் ஓசை மொழி ....
ஓசையின் பரிமாணம் பாஷை....
பாசையின் அலங்காக வடிவம் ....
எழுத்து - எழுத்தின் " கரு"  கிறுக்கல் ...
அதேயே  செய்தேன் ஆசானே ....
கிறுக்கியது தவறு இல்லை ....
உங்களுக்கு புதிய சுவர் ...
என்பதுதானே கவலை ....
மெல்ல சிரித்தபடி நகர்ந்தான்...!!!

^
அதிசயக்குழந்தை 
வசனக்கவிதை 
கவிப்புயல் இனியவன்
தொடர் - 08

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அதிசயக் குழந்தை மொழியில் அழகிய எழுத்துகள்! வாழ்த்துகள்!

 

Link to comment
Share on other sites

அதிசயக்குழந்தை - எண்ணம்
------------
எண்ணும் எழுத்தும் ....
கண்ணெனத்தகும் ....!!!

அதிசய குழந்தை 
வாய்க்குள் உச்சரித்து ...
கொண்டிருந்தான் ...!!!

என்னடா 
புது பழமொழியோ ...?

இல்லை ஆசானே ....
எதுவுமே புதியது இல்லை ....
எல்லாமே முன்னோர் சொன்ன ....
பொதுமை மொழிகள் ....
அதிலிருந்தே இனிமேல் ...
எல்லோரும் எடுக்க வேண்டும் ....
இது எனது இது நான் சொன்னது ....
என்று யாரும் உரிமை ....
கொண்டாடுவதில் பயனில்லை ...!!!

எண்ணமே ஒருவனின் உருவம் ....
எண்ணமே ஒருவனின் வாழ்க்கை....
எண்ணமே ஒருவனின்முடிவும் ....

அடுத்து சொன்னான் குழந்தை ......

சொர்க்கமும் நகரமும் ....
ஒருவனுடைய எண்ணமே .....
துயில் எழும்பும் போது ....
நல்ல சிந்தனையுடன் எழுபவன் ....
அன்று முழுதும் சொர்க்கத்தில் ....
வாழ்கிறான் ......!!!

நேற்றைய பகையை ...
முன்னைய இழப்பை ....
பொறாமையை துயில் ....
எழும்போது நினைப்பவன்
அன்று முழுதும் நரகத்தில் ....
வாழ்கிறான் ......!!!

குப்பத்தில் இருப்பவனை ...
கோபுரத்துக்கும் ,கோபுரத்தில் ...
இருப்பவனை குப்பத்துக்கும் ....
மாற்றுவது தலையெழுத்தல்ல ....
அவரவர் எண்ணமே எண்ணமே....!!!

^
அதிசயக்குழந்தை 
வசனக்கவிதை 
கவிப்புயல் இனியவன்
தொடர் - 09

On 2/10/2016 at 7:49 PM, seyon yazhvaendhan said:

அதிசயக் குழந்தை மொழியில் அழகிய எழுத்துகள்! வாழ்த்துகள்!

 

மிக்க நன்றி நன்றி 

Link to comment
Share on other sites

அதிசயக்குழந்தை -வறுமை 
*******
வீதியில் 
நின்ற வறிய வயோதிபர்....
வீதியில் வந்த பணக்காரனை .... 
உதவி கேட்டார் - அவர் பணம் ....
கொடுக்கவில்லை - கோபமடைந்த ...
வயோதிபர் வாய்க்கு வந்தபடி ....
திட்டினார் ....!!!

இதை 
அவதானித்த அதிசய குழந்தை .....
வயோதிபரிடம் என்ன தாத்தா ...
என்று ஆரம்பித்ததும் ....
அவர் மேலும் திட்டினார் .........!!!

பணம் 
படைத்தவர்கள் தீயவர்கள் .....
கயவர்கள் கள்வர் இரக்கம்...
அற்றவர்கள் நயவஞ்சகர்கள் ....
திட்டிக்கொண்டே போனார் ....
நிலை குலைந்த தாத்தாவுடன் ....
பேசி பயனில்லை என்றறிந்த ....
அதிசயக்குழந்தை விலகியது .....!!!

என்ன குழந்தாய் அதிகம் ...
ஜோசிக்கிறாய் என்று கேட்டேன்....?

ஆசானே .....
வறுமை என்பது ஒரு நோய் .....
நோய்க்கு நாம் மருந்தெடுத்து ....
மாற்றுகிறோமோ அதுபோல் ...
வறுமையையும் நாம் மாற்றலாம் ....
வறுமையோடு வாழ்பவன் நோயோடு ....
இறந்து விடக்கூடாது என்கிறேன் ....!!!

வறுமைக்கு காரணம் பணம் ....
படைத்தவர்கள் மோசமானவர்கள் ...
என்ற மன விரக்தியும் தாமும் ....
பணம் படித்தால் அவ்வாறே மாறி ....
விடுவோம் என்ற மனப்பயமுமே ....
ஒருவன் மீது வறுமை தொடரகாரணம் ....
வறுமையை நீக்கணும் என்றால் ....
பணம் படைத்தவரை மதிக்கணும் .....
அவன் எப்படி பணத்தை தேடினான் ...
என்று சிந்திக்கணும் இதை விட்டு ....
அவனில் குறைகாணும் மனிதர் ....
யாரும் பணம் படைத்தவனாக ....
வரவே முடியாது என்று ஒரு நீண்ட ...
கருத்தை சொன்னான் அதிசய குழந்தை ....!!!

^
அதிசயக்குழந்தை 
வசனக்கவிதை 
கவிப்புயல் இனியவன்
தொடர் - 10

Link to comment
Share on other sites

  • 4 weeks later...
On 2/19/2016 at 0:53 PM, seyon yazhvaendhan said:

உண்மை உரைக்கும் சிந்தனை.

 

நன்றி நன்றி 

Link to comment
Share on other sites

அதிசயக்குழந்தை - முதுமை 
----------
பக்கத்து வீட்டில் தாத்தா ....
பேரனை திட்டியபடி இருந்தார் ....
தனது அனுபவத்தையெல்லாம் ....
அறிவுரையாக கொட்டி கொண்டிருந்தார் .....
பேரனோ காதில் விழுத்தாமல் ....
எங்கேயோ பார்த்துகொண்டிருந்தான் ...
கோபமடைந்த தாத்தா அடிக்க கை ....
ஓங்கினார்................................................. 
அப்போது அதிசய குழந்தை ....!!!

தாத்தா 
நிறுத்துங்க...  நிறுத்துங்க ....
உங்களுக்கு அறிவுரை செய்ய ...
நான் பெரும் அறிவானவன் இல்லை ...
என்றாலும் கூறதொடங்கினான்.....!!!

முதுமையில் எல்லோரும் -தம் ....
அனுபவத்தை அறிவாக நினைத்து ....
அறிவுரை சொல்கிறார்கள் -தப்பு ...
அனுபவம் வேறு அறிவு வேறு .....!
உங்களது அனுபவம் மற்றவனுக்கு ....
தேவைப்படாது ,பொருத்தமற்றது ....
முதுமையில் அதை நீங்கள் பிறர் ....
மீது திணிக்கிறீர்கள் தப்பு தாத்தா ...!!!

வயது கூடியவர்கள் அறிவாளிகள் ....
வயது குறைந்தவர்கள் அறிவற்றவர்கள் ....
நாங்களே அனுபவசாலிகள் ...
உங்களுக்கு அனுபவம் போதாது ....
என்றெல்லாம் முதியோர் நினைப்பது ....
தப்பு தாத்தா தப்பு .....!!!

முதுமையின் ஒத்தகருத்து பொறுமை .....
தேவையற்றவற்றில்  தலையிடாமல் .....
தேவையானவற்றில் தலையிட்டு ....
எல்லோரும் எமக்கு மதிப்பு தரனும் ....
என்று நினைப்பது தப்பில்லை ....
எல்லாமே எனக்கு தான் தெரியும் ...
என்று நினைபப்து தப்பு தாத்தா ....!!!

அடிக்க கையோங்கிய தாத்தா .....
நிதானமானார் ...................................
அதிசய குழந்தையின் ....
அபாரத்தை அவர்களுக்கு தெரியாமல் ...
கேட்ட ஆசான் நானும் திகைத்தேன் ...
எனக்கும் முதுமை வயது தானே ....!!!

^
அதிசயக்குழந்தை 
வசனக்கவிதை 
கவிப்புயல் இனியவன்
தொடர் - 11
 

Link to comment
Share on other sites

  • 1 month later...

அதிசயக்குழந்தை - ஆசை 
----------
உன் 
ஆசை என்ன என்று கேட்டேன் ...
அதிசயக்குழந்தையிடம்.....?

ஆசையில்லாமல் இருக்கவே ...
ஆசை என்றான் ஒரே வரியில் ....!!!

என்னப்பா சொல்கிறாய் ....?
ஆமா ஆசானே .....!!!

ஆசையே அனைத்து துன்பத்துக்கும் ....
மூல காரணி ......!!!
நிறைவேறாத ஆசையின் வெளிப்பாடே ....
கோபம் ,,,,,,,,,,,,!!!
கோபத்தின் வெளிப்பாடே ....
கொடூரம் ...........!!!
கோபத்தை குறையுங்கள் .....
என்பது தவறு - ஆசையை ....
குறையுங்கள் என்பதே சரியானது .....!!!

பெண் ஆசை ....
நடத்தையை கெடுக்கும் ......
மண் ஆசை .....
நாட்டை கெடுக்கும் ......
பொன் ஆசை ......
பெண்ணையே கெடுக்கும் .......!!!

ஆசையை குறைப்பது எளிதல்ல ....
ஆசையை வரிசைப்படுத்துங்கள் ....
அந்த வரிசையில் இயலுமையை ....
பாருங்கள் நிறைவேறக்கூடிய ....
அவசியமான ஆசைக்கு ஆசைப்படுங்கள் .....!!!

^
அதிசயக்குழந்தை 
வசனக்கவிதை 
கவிப்புயல் இனியவன்
தொடர் - 12

Link to comment
Share on other sites

அதிசயக்குழந்தை - இறக்கம் 
-------
அதிசயக்குழந்தை .....
ஏணியில் ஏறுவதும் ....
இறங்குவதுமாய் விளையாடிக்  ...
கொண்டிருந்தான் ....!!!

அந்தவழியால் வந்த நான் ....
என்னடா செய்கிறாய் என்று ....
கேட்டேன் .....!!!

ஏறுவதும் இறங்குவதுமாய் ....
இருக்கிறேன் தெரியவில்லையா ...?
என்றான் ....?

உனக்கு 
ஏற்றம் பிடிக்குமா .....?
இறக்கம் பிடிக்குமா ....?

எனக்கு இறக்கம் தான் ...
பிடிக்கும் ஆசானே ....
ஏன்டா உனக்கு எப்போதும் ....
எதிர் மறையாகதான் பிடிக்குமா ...?

இல்லை 
ஆசானே எதிர் மறையின் ...
நன்மையை உணரமாட்டேன் ..
என்கிறீர்களே ....!!!

இறக்கமும் வீழ்ச்சியும் ....
தோல்விகள் இல்லை ....
வரலாற்றின் மறு பக்கங்கள் .....!!!

மலை 
ஏறுபவன் இறங்கினால்-தான்
மலை ஏறியதின் சாதனை ...
தெரியவரும் .....!
பள்ளத்திலிருந்து நீர் வீழ்ந்தால்-தான்
நீரின் மகிமை புரியும் ....!

அப்பில் பழம் கீழே விழுந்ததால் ...
நியூட்டன் புவியீர்ப்பை கண்டார் ....
வானத்து நீர் கீழே விழுந்தால் தான் ....
பூமி பசுமை அடைகிறது ....!
இயக்கவிதி மேலே தொழிற்பட்டால் ....
வெளிப்பாடு கீழேதான் இருக்கும் .....!!!

இறக்கமும் வீழ்ச்சியும் .....
இழிவானவையல்ல எல்லா ....
செயல்களிலும் புரட்சிகரமானவை ...!!!

^
அதிசயக்குழந்தை 
வசனக்கவிதை 
கவிப்புயல் இனியவன்


 

Link to comment
Share on other sites

அதிசயக்குழந்தை - அநாதை 
-----

அதிசயக்குழந்தையிடம் ....
உன் அப்பா பெயர் என்ன ...?
உன் அம்மா பெயர் என்ன ...?
உனக்கு உடன் பிறப்புக்கள் ...
எத்தனை பேர் .....?

எனக்கு யாருமே இல்லையே ...
என்றான் ....!!!

அப்போ நீ அநாதையா...?
என்று கேட்டேன்....
யாருமே இல்லை என்றுதானே ...
சொன்னேன் அநாதை ...
என்று சொன்னேனா  என்றான் ...!!!

என்ன உளறுகிறாய் ....?

சொல்ல தொடங்கினான் அவன் 
கருத்தை .....................!!!!!!!!!!!!

உங்கள் ....
அம்மா அப்பா இப்போ ....
இருகிறார்களா ....?
இல்லையே ....!!!

அப்போ நீங்கள் ...

அநாதையா ....? 
இல்லையே ....!!!

உங்கள் பெற்றோர் இறந்தவுடன் ...
உங்களுக்கென ஒரு குடும்பத்தை ...
அமைத்து மனைவி குழந்தை....
மாமனார் மாமியார் என்று ஒரு ...
உறவை வளர்த்தீர்களே......
உங்களை யாரும் அநாதை ..
என்று அழைத்தார்களா ....?

உங்களின் தவறு என்ன தெரியுமா ...?
நீங்கள் பிறரை காப்பாற்றுவதாக ....
நினைப்பதும் நீங்கள் இல்லையென்றால் ...
அவர்கள் அனாதையாகிவிடுவர் ....
என்ற உங்கள் தப்பான எண்ணமே ....!!!

நான் 
ஒரு அநாதை எனக்கு உதவுங்கள் ....
என்று சொல்பவர்கள் அநாதை ...
என்ற சொல்லை தம் ஆயுதமாய் ....
எடுத்து தம்மீது எல்லோரும் இரக்கப்பட...
பயன்படுத்தும் தந்திரம் .....
உழைத்து உண்பவனுக்கும் ...
நம்பிக்கை உள்ளவனுக்கும் ....
அநாதை சொல் அருவருப்பான ....
சொல்லாகும் ஆசானே என்றான் ....!!!

^
அதிசயக்குழந்தை 
வசனக்கவிதை 
கவிப்புயல் இனியவன்

Link to comment
Share on other sites

  • 7 months later...

உனக்குள்ளே நானிருப்பதால் ,இங்கு 
எனக்குள்ளே மூச்சு வெந்து துடிக்குதடி 
தனியாக பேசி இன்பம் காணாமல் 
துணையாக பேசி இன்பம் காண்போம் வா 

&
காதல் வெண்பா 
கவிப்புயல் இனியவன் 

&

வரைந்தேன் கண்ணால் உருவத்தை நானே 
கரைந்தேன் அவள் நினைவுக்குள் தானே 
துடி துடிக்குது ஏக்கத்தோடு இதயம் 
அடிக்கடி சமாதானம் சொல்லுது மனம் 

&
காதல் வெண்பா 
கவிப்புயல் இனியவன்
 

Link to comment
Share on other sites

 

 

மிக அருமையான வரிகள், வார்த்தையின் வளமை அழகூட்டுகிறது கவிக்கு. எனது வாழ்த்துக்கள் கவிஞரே.

 

 

Link to comment
Share on other sites

22 hours ago, மாறன் said:

 

 

மிக அருமையான வரிகள், வார்த்தையின் வளமை அழகூட்டுகிறது கவிக்கு. எனது வாழ்த்துக்கள் கவிஞரே.

 

 

மிக்க நன்றி நன்றி

Link to comment
Share on other sites

எங்கே வருகிறாய் ஏங்கி துடிக்குது - இதயம் 
அங்கேயே சுழன்று தெரியுது மனசு -நீ 
பூவுக்குள் உதயமாகியவள் - நீ அனுமதித்தால் 
பூ மாலையாக மாற துடிக்கிறேன் ....!!! 

அன்ன நடை நடந்து என்னை கொன்றவளே 
அன்னம் தண்ணியில்லாமல் தவிக்க வைத்தவளே 
உள்ளம் ஒரு காதல் கோயிலடி - அதில் நீ 
உள்ளிருக்கும் கருவறை தெய்வமடி....!!! 

சொல்லாமல் கொள்ளாமல் இதயத்தில் நுழைந்து 
கொல்லாமல் கொல்லுகிறாய் விடலை என்னை 
சித்தியை துணைக்கு அழைத்துவந்து -இதயத்தை 
சித்தரவதை முகாம் ஆக்கி விட்டாய் .....!!! 

விழி அழகி என்று நீ பெயர் கொண்டதாலோ 
விழி மூடாமல் என்னை செய்து விட்டாய் 
தெருவெங்கும் நிற்கும் மாந்தரெல்லாம் -உன் 
திருமுகமாய் தெரிய என்ன செய்தாய் ...? 

காலமெல்லாம் காத்திருப்பேன் உனக்காக 
காலனிடம் கெஞ்சி கேட்பேன் என் ஆயுளை 
மாதவம் செய்தேனும் உனை அடைவேன் -அன்றேல் 
மாண்டு விடுவேன் உன் காலடியில் மண்ணிட்டு...!!! 

& 
கவி நாட்டியரசர் இனியவன் 
காதல் வெண்பா

Link to comment
Share on other sites

  • 4 weeks later...

காதல்.......
ஆனந்த கண்ணீரில்...
ஆரம்பித்து.......
ஆறுதல் கண்ணீரில்.....
முடிகிறது..........!!!

முகில்களுக்கிடையே....
காதல் விரிசல்.......
வானத்தின் கண்ணீர்......
மழை..........................!!!

நான்
வெங்காயம் இல்லை....
என்றாலும் உன்னை.....
பார்த்தவுடன் கண்ணீர்....
வருகிறது................!!!

&
கவிப்புயல் இனியவன்
இறந்தும் துடிக்கும் இதயம்
மற்றுமொரு காதல் கஸல் 

Link to comment
Share on other sites

கண்ணீர் .....
காதலின் வலியின்.....
திரவம் ........
தண்ணீர் தான்.....
மருந்து...........!!!

முதலை கண்ணீரை.....
நிஜக்கண்ணீரென்று....
நம்பிவிட்டேன்.........!!!

காதலில் போடும்....
முடிச்சு திருமணத்தில்....
அவிழ்க்கபடுகிறது.........!!!

&
கவிப்புயல் இனியவன்
இறந்தும் துடிக்கும் இதயம் 02
மற்றுமொரு காதல் கஸல்

Link to comment
Share on other sites

கண்கள் .....
சந்திக்கமுன் ....
யாவரும் .....
சந்தோசமாய் ....
இருந்தோம் .......!!!

நான் 
புகையிரதம் .....
நீ தண்டவாளம் .....
அனுமதித்தால்.....
பயணம் தொடரும் ....!!!

உயிர் கூட .....
இரட்டை வேடம் ....
போடுகிறது ......
இருந்தால் உயிர் ....
மறைந்தால் சாவு .....!!!

&
கவிப்புயல் இனியவன்
இறந்தும் துடிக்கும் இதயம்
மற்றுமொரு காதல் கஸல் 
மெல்லிய வலி கவிதை

உயிரை வதைப்பது .....
தண்டனை குற்றம் .....
உயிரே உனக்கு .....
தெரியுமா .............?

கண் இமைக்கும் ....
கணப்பொழுதில் ....
நடக்கும் விபத்து .....
காதல் .......................!!!

காதல் ....
இல்லாத இடத்திலும் .....
இருக்கும் ......
காதல் இல்லாத .....
இடமே இல்லை ...........!!!

&
கவிப்புயல் இனியவன்
இறந்தும் துடிக்கும் இதயம்
மற்றுமொரு காதல் கஸல் 
மெல்லிய வலி கவிதை

Link to comment
Share on other sites

மெல்லிய .....
வலியால் பிரசவித்ததே ......
கஸல் கவிதை ..........!!!

கவிதையை .....
ரசிக்கிறாய் என்றால் .....
நீயும் என்னைப்போல் ....
வலியை சுமக்கிறாய் .....!!!

அவள் கண்ணில் ....
இப்போ தான் பட்டாள்......
இதய சேதவிபரம் ......
இன்னும் தெரியவில்லை .....!!!

&
கவிப்புயல் இனியவன்
இறந்தும் துடிக்கும் இதயம்
மற்றுமொரு காதல் கஸல் 
மெல்லிய வலி கவிதை

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • Published By: VISHNU   19 APR, 2024 | 02:01 AM (எம்.ஆர்.எம்.வசீம்) இலங்கைக்கு சொந்தமான கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை நாடுவதாக இந்திய பிரதமர் தெரிவித்திருக்கிறார். அவ்வாறானதொரு நிலை ஏற்பட்டால் அதற்கு முகம்கொடுப்பதற்கு நாங்களும் தயார். கச்சதீவு இலங்கைக்கு சொந்தமானது என்பதற்கு போதுமான ஆதாரங்கள் எம்மிடமிருக்கின்றன என இலங்கை மனித நேய கட்சியின் தலைவியும் பேராசிரியருமான சந்திமா விஜேகுணவர்த்தன தெரிவித்தார். இலங்கை மனிதநேய கட்சி தலைமையகத்தில் வியாழக்கிழமை (18) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார். இதுதொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், இந்தியாவில் தேர்தல் சூடுபிடித்துள்ள நிலையில், தமிழ் நாட்டு மீனவர்களின் வாக்குகளை பெற்றுக்கொள்ளும் நோக்கில் அங்குள்ள அரசியல்வாதிகள் கச்சதீவு விவகாரத்தை கையில் எடுத்துக்கொண்டு பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். தேர்தல் காலம் வரும்போது இந்தியாவை பாெறுத்தவரை இது வழமையான விடயமாகும். இந்திய பிரதமரும் கச்சதீவு விடயமாக மிகவும் தீவிரமாக தேர்தல் மேடையில் உரையாற்றி இருக்கிறார். குறிப்பாக கச்சதீவு இந்தியாவுக்கு சொந்தமானது. அதனை இலங்கைக்கு வழங்கியது வரலாற்று தவறு. அதனால் கச்சதீவை இந்தியாவுக்கு மீண்டும் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுப்போம். முடியாவிட்டால் நெதர்லாந்தில் இருக்கும் சர்வதேச நீதிமன்றத்தை நாடுவோம் எனவும் இந்திய பிரதமர் தெரிவித்திருக்கிறார். 285 ஏக்கர் பரப்பளவைக்கொண்ட  கச்சதீவு இலங்கை,, இந்திய மீனவர்கள் கடற்றொழில் செய்வதற்கு அப்பால், இந்த பூமிக்குள் பல பெருமதிவாந்த வேறு விடயங்கள் இருக்கின்றன. அதனால்தான் இந்திய அரசியல்வாதிகள் கச்சதீவை எப்படியாவது தங்களுக்கு சொந்தமாக்கிக்கொள்ள முயற்சித்து வருகின்றனர். கச்சதீவு இலங்கைக்கு சொந்தமானது என்பதற்கு  தேவையான வரலாற்று ஆதாரங்கள் எம்மிடம் இருக்கின்றன.  அதனால் கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்ற்ததை நாடுமாக இருந்தால், அதற்கு முகம்கொடுக்க நாங்களும் தயாராக வேண்டும். கச்சதீவு இலங்கைக்கு சொந்தமானது என்பதற்கான ஆதாரங்களை சர்வதேச நீதிமன்றத்துக்கு சமர்ப்பிக்க நடவடிக்கை எடுப்போம். கச்சதீவு விவகாரத்தால் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இருந்துவரும் உறவில் பாதிப்பு ஏற்படக்கூடாது.இந்த விடயத்தில் இந்தியாவுடன் முரண்பட்டுக்கொள்ள நாங்கள் தயார் இல்லை. இந்தியா அயல் நாடாக இருந்துகொண்டு எமக்கு பாரிய உதவிகளை செய்துவருகிறது. குறிப்பாக கொவிட் காலத்தில் இந்திய அரசாங்கத்தின் உதவிகளை எங்களால் ஒருபோதும் மறந்துவிட முடியாது. அந்த நன்றி எப்போதும் எங்களிடம் இருக்கிறது. இருந்தாலும் கச்சதீவு விவகாரம் என்பது எமது உரிமை சார்ந்த விடயம். அதனை எங்களால் விட்டுக்கொடுக்க முடியாது. இந்திய அரசியல்வாதிகள் தங்களின் தேர்தல் பிரசாரத்திற்கே இந்த விடயத்தை கையில் எடுத்துக்கொள்கின்றனர். தேர்தல் முடிவடைந்த பின்னர் அந்த விடயத்தை மறந்துவிடுவார்கள் என்றார். https://www.virakesari.lk/article/181410
    • பட மூலாதாரம்,GETTY IMAGES 2 மணி நேரங்களுக்கு முன்னர் உலக அளவில் 840 மில்லியன் மக்கள் நாள்பட்ட சிறுநீரக கோளாறுகளால் பாதிக்கப்பட்டுள்ளதாக சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன என இந்தியன் சொசைட்டி ஆப் நெஃப்ராலஜி வெளியிட்டுள்ள இதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் அர்த்தம் 10இல் ஒருவருக்கு சிறுநீரக நோய்கள் இருக்கின்றன. மேலும் சமீப காலங்களில் உயிர்களை கொள்ளும் 10 முக்கிய நோய்களில் 7வது இடத்தை பிடித்துள்ளது நாள்பட்ட சிறுநீரக நோய். இந்தியாவில் மட்டும் ஆண்டொன்றுக்கு 2 - 2.5 லட்சம் மக்கள் புதிதாக சிறுநீரக நோய்களால் பாதிக்கப்படுவதாக இந்தியன் சொசைட்டி ஆப் நெஃப்ராலஜி வெளியிட்டுள்ள இதழில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல் இந்தியாவில் உள்ள வயது வந்தோர் மக்கள்தொகையில் 8-10% பேர் நாள்பட்ட சிறுநீரக நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்த அமைப்பு கூறுகிறது. இதற்கு மிக முக்கிய காரணம் சிறுநீரகம் சார்நத நோய்களை ஆரம்ப கட்டத்தில் கண்டுபிடிக்க முடியாமல் போவதும், இவை அமைதியாக இருந்து தீவிர பிரச்னை ஏற்படும்போதே வெளியே தெரியவரும் என்பதுமே ஆகும் என்று கூறுகிறார் எம்ஜிஎம் ஹெல்த்கேர் மருத்துவமனையின் மூத்த சிறுநீரகவியல் மருத்துவர் மில்லி மேத்யூ.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,பொதுவாகவே சிறுநீரகம் சார்ந்த பிரச்னைகளில் ஆரம்ப கட்டத்தில் அறிகுறிகள் தெரியாது என்கிறார் மருத்துவர் மில்லி மேத்யூ. சிறுநீரகத்தின் செயல்பாடு என்னென்ன? உடலின் மிக முக்கியமான உறுப்புகளில் வயிற்றுப்பகுதியில் அமைந்திருக்கும் சிறுநீரகமும் ஒன்று. சிறுநீரின் வழியாக கழிவுகளை வெளியேற்றுவதே இதன் பிரதான பணி. ரத்தத்தில் காணப்படும் கழிவுப்பொருட்கள், உடலுக்கு தேவையற்ற அளவுக்கு அதிகமான தாதுக்களை சிறுநீரின் வழியாக வெளியேற்றி தூய ரத்தத்தை உடல் முழுவதும் பரவ செய்கிறது சிறுநீரகம். ஆனால், நமது வாழ்க்கை முறை, உணவுமுறை, பழக்கவழக்கங்கள், மரபுவழி பிரச்னைகள், தேவையற்ற மாத்திரைகளை உட்கொள்வது, இதர உடல்நல கோளாறுகள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இந்த உறுப்பு செயல்படுவதில் தடை ஏற்படுகிறது. அப்படி சிறுநீரகத்தின் பணியில் இடையூறு ஏற்பட்டு அதன் வழக்கமான கழிவகற்றல் பணியை சரியாக செய்யமுடியாமல் போகும்போதுதான் பல்வேறு சிறுநீரக கோளாறுகள் ஏற்படுகின்றன. இதில் மேலுமொரு அபாயம் என்னவெனில் இந்த கோளாறுகள் ஆரம்ப கட்டத்தில் எந்த விதமான அறிகுறியும் காட்டாமல் உங்களுக்குள் வந்து விடும். நாளாக நாளாக அதன் வீரியம் அதிகரிக்கும்போதே உங்களுக்கு அறிகுறிகள் தெரிய தொடங்கி, அதிலிருந்து மருத்துவ பரிசோதனைகள் மூலம், நீங்கள் எந்தளவுக்கு, எந்த விதமான நோயால் பாதிக்கப்பட்டுள்ளீர்கள் என்பதை கண்டறிய முடியும் என்று கூறுகிறார் மருத்துவர் மில்லி மேத்யூ. அப்படி என்ன மாதிரியான சிறுநீரகம் சார்ந்த நோய்கள் உங்களுக்கு ஏற்படலாம்? அதில் என்ன மாதிரியான அறிகுறிகள் தென்பட வாய்ப்புள்ளது? என்பதை அறிந்துக் கொள்ளலாம்.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,நாள்பட்ட சிறுநீரக நோய்களை குணப்படுத்த முடியாவிட்டாலும், அவை தீவிரமடையாமல் தடுக்க முடியும். நாள்பட்ட சிறுநீரக நோய் (Chronic Kidney Disease) நாள்பட்ட சிறுநீரக நோய் என்பது நீண்ட நாட்களாக தொடர்ந்து வரும் சிறுநீரக கோளாறு ஆகும். இது அதிகம் சர்க்கரை நோய் மற்றும் உயர்ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கே ஏற்படும். இதன் ஆரம்ப கட்டங்களில் எந்த விதமான அறிகுறிகளும் இருக்காது. இந்த வகை சிறுநீரக கோளாறுகள் சரி செய்ய முடியாதவை. முறையான மருத்துவ சிகிச்சை மூலம் இவை தீவிரமடையாமல் பார்த்துக் கொள்ள முடியும். அறிகுறிகள் குமட்டல் மற்றும் வாந்தி பசியின்மை கால் மற்றும் கணுக்கால் வீக்கம் மூச்சுத்திணறல் தூங்குவதில் சிரமம் அதிகமாக அல்லது குறைவாக சிறுநீர் கழித்தல்   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீரக கல் ஒன்றிரண்டு இருக்கும்போது அதன் அறிகுறிகள் வெளியே தெரியாது. சிறுநீரகத்தில் கல் சிறுநீரகத்தில் தேங்கும் உப்பு அல்லது தாதுக்களின் படிகங்களே சிறுநீரக கல் என்று அழைக்கப்படுகிறது. பொதுவாக ஓரிரண்டு கற்கள் உருவாகும்போது அறிகுறியோ அல்லது தீவிர பிரச்னையோ ஏற்படாது என்று குறிப்பிடும் மருத்துவர், அது தீவிரமடையவும் வாய்ப்புகள் உள்ளது என்று கூறுகிறார். தண்ணீர் குறைவாக குடித்தால், உடல் பருமன், மோசமான வாழ்க்கை முறை, உணவுமுறை உள்ளிட்டவற்றால் இந்த பிரச்னை ஏற்படுகிறது. அறிகுறிகள் சிறுநீர் கழிக்கும் போது வலி சிறுநீரில் ரத்தம் வெளியேறுதல் சிறுநீர் பாதையில் அடைப்பு ஏற்படுதல் கல் உள்ள இடத்தில் வலி   நீரிழிவு சிறுநீரக நோய் (Diabetes Nephropathy) பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,உலகில் மூன்றில் ஒரு சர்க்கரை நோயாளிகள் சிறுநீரக கோளாறால் பாதிக்கப்படுகின்றனர். ஆய்வுத்தரவுகளின் படி சர்க்கரை நோய் உள்ள 3 பேரில் ஒருவருக்கு சிறுநீரக கோளாறு ஏற்படுகிறது. உலக அளவில் சிறுநீரக நோய்க்கான காரணிகளில் சர்க்கரை நோய் முதன்மையானதாக இருக்கிறது. அப்படி சர்க்கரை நோய் கட்டுப்பாட்டிற்குள் இல்லாதவர்களுக்கு இந்த நீரிழிவு சிறுநீரக நோய் ஏற்படுகிறது. அறிகுறிகள் கால்கள் வீக்கம் நுரையுடன் சிறுநீர் வெளியேறுதல் உடல் சோர்வு எடை குறைதல் உடல் அரிப்பு குமட்டல் மற்றும் வாந்தி   ஹைப்பர்டென்சிவ் நெஃப்ரோஸ்க்ளிரோசிஸ் (Hypertensive Nephrosclerosis) பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு சிறுநீரகம் பாதிக்கும் அபாயம் அதிகம் சர்க்கரை நோய்க்கு இணையாக சிறுநீரகத்தை பாதிக்கும் மற்றுமொரு பிரச்னை உயர் ரத்த அழுத்தம். உயர் ரத்த அழுத்தம் சிறுநீரகத்தில் உள்ள ரத்த குழாய்களை சேதமடைய செய்வதால் சிறுநீரகத்தின் செயல்பாடு பாதிக்கப்படுகிறது. இதனால் ரத்தத்தில் உள்ள தேவையற்ற கழிவுகளை வெளியேற்றுதல் மற்றும் கூடுதல் தாதுக்களை வெளியேற்றுதல் ஆகியவை பாதிப்படைகிறது. இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் சிறுநீரகத்தின் செயல் பாதித்து தேவையற்ற திரவங்கள் ரத்த குழாய்களில் படிவதால், ரத்த அழுத்தம் மேலும் உயர்கிறது. அறிகுறிகள் குமட்டல் மற்றும் வாந்தி தலை சுற்றல் உடல் மந்தம் தலை வலி கழுத்து வலி   சிறுநீர் பாதைத் தொற்று பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீர் பாதையில் ஏற்படும் தோற்று சிறுநீரகத்தையும் பாதிக்கும் அபாயம் உள்ளது. சிறுநீர் பாதைத் தொற்று என்பது சிறுநீரக கோளாறு இல்லை என்றாலும் கூட, அது சிறுநீரகத்தை பாதிக்கவும் வாய்ப்புள்ளது. சிறுநீர் பாதைத் தொற்று என்பது சிறுநீர் பாதையில் ஒட்டிக்கொள்ளும் நுண்ணுயிரிகள் பெருகி பாதிப்பை ஏற்படுத்துவது. இது கீழ்நிலையில் உள்ள சிறுநீர் பாதையிலேயே தங்கி விட்டால் சிறுநீரகத்திற்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்பு குறைவு. ஆனால், பெருகி மேல்நிலை பகுதிக்கு வந்துவிட்டால் சிறுநீரகத்திற்கு பாதிப்பு ஏற்படலாம். அறிகுறிகள் முதுகுப் பக்கத்தில் வலி காய்ச்சல் சிறுநீர் கழிக்கும்போது வலி அடிவயிற்றில் வலி சிறுநீரில் ரத்தம் குமட்டல் மற்றும் வாந்தி   பாலிசிஸ்டிக் சிறுநீரக நோய் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீரகத்தில் அதிகரிக்கும் நீர்க்கட்டிகள் அதை செயலிழக்க செய்யுமளவு ஆபத்தானது. பாலிசிஸ்டிக் சிறுநீரக நோய் என்பது உங்களது சிறுநீரகத்தில் ஏற்படும் நீர்க்கட்டிகளை குறிப்பது. நாளடைவில் இவை வளர்ந்து உங்களது சிறுநீரகத்தை செயலிழக்கும் நிலைக்கும் கொண்டு செல்லலாம். இவை பெரும்பாலும் மரபணு ரீதியாக ஏற்படக்கூடிய சிறுநீரக கோளாறாகும். அறிகுறிகள் மேல்வயிற்றில் வலி அடிவயிற்றின் பக்கவாட்டில் வலி முதுகில் வலி சிறுநீரில் ரத்தம் வெளியேறுதல் சிறுநீர் பாதையில் அடிக்கடி தொற்று ஏற்படுதல்   ஐஜிஏ நெஃப்ரோபதி (IgA Nephropathy) பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,இந்த சிறுநீரக பிரச்சனையில் சிறுநீரில் ரத்தம் வெளியேறுவது நமக்கே தெரியாது. ஐஜிஏ நெஃப்ரோபதி என்பது பெரும்பாலும் சிறுவயதில் இளம்பருவத்தில் வரக்கூடிய ஒரு சிறுநீரக கோளாறு என்று கூறுகிறார் மருத்துவர் மில்லி மேத்யூ. இதில் சிறுநீர் வெளியேறும்போது ரத்தமும் இணைந்து வெளியாகும். இதை நாம் நேரடியாக பார்த்தால் கண்டறிவது கடினம். ஆனால், பரிசோதனையில் இதை கண்டறிய முடியும்.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீரகத்தின் செயல்பாடு 100இலிருந்து 10% என்ற நிலைக்கு வரும்போது தான் சிறுநீரக செயலிழப்பின் அறிகுறிகள் தெரியும் சிறுநீரக செயலிழப்பு சிறுநீரக செயலிழப்பு ஏற்படுபவர்களுக்கு அதன் முற்றிய நிலையில் மட்டுமே அறிகுறிகள் தெரியும். குறிப்பாக அதில் 5 நிலைகள் உள்ளது. இதில் நான்காவது நிலை வரையிலும் கூட அறிகுறிகள் தென்படாமல் ஒருவர் நன்றாக இருப்பார். சிறுநீரகத்தின் செயல்பாடு 100இலிருந்து 10% என்ற நிலைக்கு வரும்போது தான் அறிகுறிகள் தெரியும். அந்த நிலையில் ஒரு சில பொதுவான அறிகுறிகள் தென்படும். அறிகுறிகள் பசியின்மை வாந்தி கடுமையான உடல் சோர்வு உடல் வீக்கம் தூக்கமின்மை உப்பசம் https://www.bbc.com/tamil/articles/c2e01gql070o
    • Published By: VISHNU   19 APR, 2024 | 02:19 AM (நா.தனுஜா) டயலொக் அக்ஸியாட்டா மற்றும் பார்டி எயார்டெல் லிமிடெட் ஆகிய நிறுவனங்கள் இலங்கையில் அவற்றின் செயற்பாடுகளை இணைந்து முன்னெடுப்பதற்கான ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளன.  இவ்வொப்பந்தத்தின் பிரகாரம் எயார்டெல் லங்காவின் 100 சதவீத பங்குகளை டயலொக் கொள்வனவு செய்யும் அதேவேளை, அதற்குப் பதிலாக இதுவரையில் மொத்தமாக விநியோகிக்கப்பட்ட பங்குகளில் 10.355 சதவீத பெறுமதியுடைய சாதாரண வாக்குரிமை பங்குகளை எயார்டெலுக்கு வழங்கும்.  இதுகுறித்து தெளிவுபடுத்தி நேற்றைய தினம் ஊடக அறிக்கையொன்றை வெளியிட்டிருக்கும் டயலொக் நிறுவனம், நாடளாவிய ரீதியில் தொலைத்தொடர்பு சேவையை மேம்படுத்துவதை இலக்காகக்கொண்டு முன்னெடுக்கப்படும் இந்த இணைப்புக்கு இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு அனுமதியளித்திருப்பதாகத் தெரிவித்துள்ளது.  அதுமாத்திரமன்றி இந்நடவடிக்கையானது போலியான தொலைத்தொடர்பு உட்கட்டமைப்பு செயன்முறைகளைக் கட்டுப்படுத்துவதற்கும், தொழில்நுட்பத்துறையில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கும், வேகமான வலையமைப்பு இணைப்பை விரிவுபடுத்துவதற்கும், செலவினங்களைக் குறைப்பதற்கும், செயற்பாட்டு வினைத்திறனை அதிகரிப்பதற்கும் உதவும் எனவும் டயலொக் நிறுவனம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது. https://www.virakesari.lk/article/181412
    • Published By: VISHNU    18 APR, 2024 | 10:24 PM வலிப்பு ஏற்பட்ட நிலையில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப் பெண் ஒருவர் புதன்கிழமை (17) உயிரிழந்துள்ளார். இதன்போது மாதகல் - சகாயபுரம் பகுதியைச் சேர்ந்த பிரதீபன் நித்தியா (வயது 37) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த பெண்ணுக்கு வலிப்பு நோய் உள்ளது. இந்நிலையில் புதன்கிழமை (17) பிற்பகல் 6.30 மணியளவில் வீட்டு கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டார். பின்னர் சடலம் தெல்லிப்பழை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது. சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் வியாழக்கிழமை (18) உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இரண்டு பிள்ளைகளின் தாயான இவர் வலி.தென்மேற்கு பிரதேச சபையின் பண்டத்தரிப்பு உப அலுவலகத்தில் அபிவிருத்தி உத்தியோகத்தராக கடமை புரிந்து வந்தமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/181408
    • ஷஷாங்க், அஷுட்டோஷ் அதிரடியால் திகிலடைந்த மும்பை கடைசியில் கட்டுப்பாடான ஓவர்களினால் வெற்றிபெற்றது Published By: VISHNU    19 APR, 2024 | 06:04 AM (நெவில் அன்தனி) மொஹாலி, மல்லன்பூர் மகாராஜா யாதவேந்த்ர சிங் சர்வதேச விளையாட்டரங்கில் வியாழக்கிழமை (18) நடைபெற்ற 17ஆவது இண்டியன் பிறீமியர் லீக் அத்தியாயத்தின் 33ஆவது போட்டியில் பஞ்சாப் கிங்ஸை 9 ஓட்டங்களால் மும்பை இண்டியன்ஸ் வெற்றிகொண்டது. போட்டியின் ஒரு கட்டத்தில் மும்பை இண்டியன்ஸ் இலகுவாக வெற்றிபெறும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ஷஷாங் சிங், அஷுட்டோஷ் ஷர்மா ஆகிய இருவரும் ஆக்ரோஷத்துடன் துடுப்பெடுத்தாடி ஆட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியதால் மும்பை இண்டியன்ஸ் சற்று திகிலடைந்தது. எவ்வாறாயினும் கடைசிக்கு முந்தைய 3 ஓவர்களை ஜஸ்ப்ரிட் பும்ரா, ஜெரால்ட் கோட்ஸீ, ஹார்திக் பாண்டியா ஆகியோர் கட்டுப்பாட்டுடன் வீசியதால் மும்பை இண்டியன்ஸ் வெற்றியை உறுதிசெய்துகொண்டது. அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய மும்பை இண்டியன்ஸ் சிறு சவாலுக்கு மத்தியில் 20 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 192 ஓட்டங்களைப் பெற்றது. இந்த வருட இண்டியன் பிறீமியர் லீக் கிரிக்கெட் போட்டியில் துடுப்பாட்டத்தில் எதிர்பார்த்தளவு பிரகாசிக்கத் தவறிவரும் இஷான் கிஷான் இ ந்தப்  போட்டியிலும் 3ஆவது ஓவரில் 8 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார். எனினும் ரோஹித் ஷர்மாவும் சூரியகுமார் யாதவ்வும் 2ஆவது விக்கெட்டில் 81 ஓட்டங்களைப் பகிர்ந்து சரிவை சீர் செய்தனர். ரோஹித் ஷர்மா 36 ஓட்டங்களுக்கு ஆட்டம் இழந்த பின்னர் சூரியகுமார் யாதவ்வுடன் இணைந்த திலக் வர்மா 3ஆவது விக்கெட்டில் 49 ஓட்டங்களைப் பகிர்ந்தார். மறு பக்கத்தில் திறமையாகத் துடுப்பெடுத்தாடிய சூரியகுமார் யாதவ் 53 பந்துகளில் 7 பவுண்டறிகள், 3 சிக்ஸ்களுடன் 78 ஓட்டங்களைப் பெற்று ஆட்டம் இழந்தார். தொடர்ந்து அணித் தலைவர் ஹார்திக் பாண்டியா (20), டிம் டேவிட் (14) ஆகிய இருவரும் குறைந்த ஓட்டங்களுடன் வெளியேறினர். கடைசிப் பந்தில் மொஹமத் நபி ஓட்டம் பெறாமல் ரன் அவுட் ஆனார். திலக் வர்மா 18 பந்துகளில் 34 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காமல் இருந்தார். கடைசி ஓவரில் 3 விக்கெட்களைக் கைப்பற்றிய ஹர்ஷால் பட்டேலின் 4 ஓவர்களில் 42 ஓட்டங்கள் பெறப்பட்டது. அவரை விட சாம் கரன் 41 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றினார். 193 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பஞ்சாப் கிங்ஸ் 19.1 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 183 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது. பஞ்சாப் கிங்ஸின் ஆரம்பம் மிக மோசமாக இருந்தது. முதல் 3 ஓவர்களுக்குள் ப்ரப்சிம்ரன் சிய் (0), ரைலீ ரூசோவ் (1), பதில் அணித் தலைவர் சாம் கரன் (6), லியாம் லிவிங்ஸ்டோன் (1) ஆகிய நால்வரும் 4 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஆட்டம் இழந்தனர். (14 - 4 விக்.) எனினும் ஹார்ப்ரீட் சிங் பாட்டியா, ஷஷாங்க் சிங் ஆகிய இருவரும் 5ஆவது விக்கெட்டில் 35 ஓட்டங்களைப் பகிர்ந்து அணிக்கு சிறு உற்சாகத்தைக் கொடுத்தனர். ஆனால் ஹார்ப்ரீட் சிங் பாட்டியா 13 ஓட்டங்களுடனும் அவரைத் தொடர்ந்து ஜிட்டேஷ் சிங் 9 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழந்தனர். (77 - 6 விக்.) இதன் காரணமாக பஞ்சாப் கிங்ஸ் 100 ஓட்டங்களை எட்டுமா என்ற சந்தேகம் நிலவியது. ஆனால், ஷஷாங்க் சிங், அஷுட்டோஷ் சிங் ஆகிய இருவரும் 7ஆவது விக்கெட்டில் 34 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியின் மொத்த எண்ணிக்கை 110 ஓட்டங்களைக் கடக்க உதவினர். வழமையான அதிரடியில் இறங்கிய ஷஷாங்க் சிங் 25 பந்துகளில் 3 சிக்ஸ்கள், 2 பவுண்டறிகளுடன் 41 ஓட்டங்களைப் பெற்றார். அதன் பின்னர் அஷுட்டோஷ் ஷர்மா அதிரடியாகத் துடுப்பெடுத்தாடி 28 பந்துகளில் 7 சிக்ஸ்கள், 2 பவுண்டறிகளுடன் 61 ஓட்டங்களைப் பெற்று அணியை கௌரவமான நிலையில் இட்டு ஆட்டம் இழந்தார். அஷுட்டோஷ் ஷர்மாவும் ஹார்ப்ரீட் ப்ராரும் 8ஆவது விக்கெட்டில் 30 பந்துகளில் பகிர்ந்த 57 ஓட்டங்களே இன்னிங்ஸில் அதி சிறந்த இணைப்பாட்டமாக அமைந்தது. (168 - 8 விக்.) மொத்த எண்ணிக்கை 174 ஓட்டங்களாக இருந்தபோது ஹார்ப்ரீட் ப்ரார் 21 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார். எனினும் கடைநிலை ஆட்டக்காரர் கெகிசோ ரபாடா தான் எதிர்கொண்ட முதல் பந்தில் சிக்ஸையும் அடுத்த பந்தில் ஒற்றையையும் பெற்று கடைசி ஓவரில் வெற்றி இலக்கை 12 ஓட்டங்களாக குறைத்தார். எனினும் கடைசி ஓவரில் இல்லாத ஒரு ஓட்டத்தை நோக்கி ஓடிய ரபாடா 8 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்க, மும்பை இண்டியன்ஸ் மிகவும் அவசியமான வெற்றியை ஈட்டியது. பந்துவீச்சில் ஜஸ்ப்ரிட் பும்ரா 21 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் ஜெரால்ட் கோட்ஸீ 32 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் கைப்பற்றினர். https://www.virakesari.lk/article/181411
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.