Jump to content

பறக்கும் கேமரா அறிமுகம்!


Recommended Posts

பறக்கும் கேமரா அறிமுகம்!

 

க்சிஸ் விடியஸ் நிறுவனம் உலகிலேயே மிகச்சிறிய பறக்கும் கேமராவை தயாரித்துள்ளது. 1.5 இன்ச் அளவுக்கும் குறைவான மிகச்சிறிய குவாட்காப்டர் விமானத்தில் இந்த கேமராவானது பொருத்தப்பட்டுள்ளது. 2.4 ஜிகாஹெர்ட்ஸ் கன்ட்ரோலருடன் வெளிவரும் இந்த கேமிராவை ஆன்ட்ராய்டு, ஆப்பிள் ஸ்மார்ட்போன் அல்லது டேப்லட்டை பயன்படுத்தி நாம் இயக்கலாம். 360 டிகிரியிலும் சுழலக்கூடிய இந்த கேமரா 100 அடி உயரம் வரை பறக்கும். வை-ஃபை இண்டர்நெட் இணைப்பு வழியாக இந்த கேமராவில் வானில் இருந்து பதிவு செய்யப்படும் வீடியோ நேரடியாக ஸ்மார்ட்போனுக்கு அனுப்பப்படுகிறது.

flying%20camera01.jpg

அதற்காக, பிரத்யேகமாக உருவாக்கப்பட்டுள்ள அப்ளிகேஷன் மூலம் உடனடியாக படம் பிடித்துக் கொண்டிருக்கும் வீடியோவை சமூக வலைதளங்களிலோ, மின்னஞ்சலிலோ பகிர்ந்து கொள்ள முடியும். அதிகபட்சமாக 420 பிக்சல்கள் வரை படங்களை தெளிவாக படம் பிடிக்கிறது இந்த கேமரா. வீடியோ மட்டுமில்லாது பிக்சர்களையும் எளிதாக எடுக்க முடியும். ஆனால், இதில் 150 எம்.ஏ.எச் அளவே பேட்டரி இருப்பதால் 20 நிமிடங்களுக்கு சார்ஜ் செய்தால் அதிகபட்சமாக 5-7 நிமிடங்கள் வரை மட்டுமே கேமராவால்  பறக்க முடியும்.

பிளைட் சென்சிட்டிவிட்டியை பொறுத்து 3 அளவுகளில் பறக்கும் வேகத்தை நாம் கட்டுப்படுத்தலாம். இதில் உள்ள 6 ஆக்சிஸ் சைரோ ஸ்டெபிலைசேசன் தொழில்நுட்பம் கேமராவை சுமந்து செல்லும் மிகச்சிறிய விமானத்தை காற்றின் வேகத்தில் செல்லவிடாமல் நிலையாக பறக்க உதவி செய்கிறது. இரவு நேரங்களில் பறக்க விடும் போது கண்காணிக்கும் வகையில் கலர் கலரான எல்.இ.டி. பல்புகளும் உள்ளன.

இந்த கேமரா விமானத்தின் எடை 0.55 பவுண்டுகளுக்கும் குறைவாக இருப்பதால் இதை பறக்கவிட அதிக கட்டுப்பாடுகள் இருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும், அமெரிக்காவில் ஆளில்லா குட்டி விமானங்களை பறக்க விட முறையாக அனுமதி மற்றும் பதிவை பெற வேண்டியது கட்டாயமாகும்.

வரும் 7-ம் தேதி முதல் விற்பனைக்கு வரவுள்ள இந்த குட்டி விமான கேமரா ப்ரீ ஆர்டர் அடிப்படையில் 75 டாலர்களுக்கு விற்கப்பட உள்ளதாக அந்நிறுவனத்தின் இணையதளத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய மதிப்பில் இது ரூ.4967.62 ஆகும்.

http://www.vikatan.com/news/information-technology/57249-introduction-of-flying-camera.art

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
        • Like
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
        • Like
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.