Jump to content

சமையல் செய்முறைகள் சில


Recommended Posts

நீங்கள் வேறு பயப்படுத்தி கொண்டு ஆத்தா அது இது என்று.:grin:

இன்று ஈஸ்ட்டர் அதுக்காகதான் அது ஆத்தா புரிந்து கொள்ளும்.tw_blush:

என்றாலும் நீங்கள் சொன்னபடியால் ஒரு சைவபுரியாணி பதிவு தேடி பிடித்து போடுகிறேன்.:rolleyes:

ஆத்தா இந்த பக்கம் வராமல் பார்த்து கொள்ளுங்கள்.tw_blush:

5 hours ago, suvy said:

இது கொஞ்சமும் சரியில்லை நவீனன்..... இன்று  மூன்றாவது பங்குனித் திங்கள்.... பிறகு ஆத்தா வையும்....!  tw_blush:

பரிகாரம்  சைவப் பிரியாணி போடுதல்.....!

 

Link to comment
Share on other sites

வெள்ளை கொண்டைக்கடலை  பிரியாணி செய்வது எப்படி

 

 வெள்ளை கொண்டைக்கடலை மசாலா, சுண்டல் செய்து சாப்பிட்டு இருப்பீங்க. இன்று பிரியாணி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

 
 
சென்னா பிரியாணி செய்வது எப்படி
 
தேவையான பொருட்கள்

வெள்ளை கொண்டைக்கடலை - 150 கிராம்
வெங்காயம்  பெரியது - 1
தக்காளி - 2
இஞ்சி - சிறு துண்டு
பூண்டு - 6 பல்
உப்பு - தேவைக்கு
 மஞ்சள் தூள் - 1/2 ஸ்பூன்
மிளகாய்த்துள் - 1 ஸ்பூன்
 கரம் மசாலா - 1 ஸ்பூன்
தயிர் - 1 குழிக்கர
ண்டி
புதினா இலை - சிறிது
பாசுமதி அரிசி - 200 கிராம்

தாளிக்க

பட்டை,
லவங்கம்,
ஏலக்காய்,
பிரியாணி இலை,
முந்திரி,
நெய் - 1 ஸ்பூன்,
எண்ணைய் - தேவைக்கு

201803311358192087_1_variety-rice._L_styvpf.jpg

செய்முறை :

பாசுமதி அரிசியை நன்றாக கழுவி உதிரியாக வேகவைத்து கொள்ளவும்.

 வெள்ளை கொண்டைக்கடலை 6 மணிநேரம் ஊறவைத்து உப்பு போட்டு வேக வைத்து கொள்ளவும்.

வெங்காயம், தக்காளி, இஞ்சி,பூண்டு இவற்றை மிக்ஸியில் போட்டு அரைத்து கொள்ளவும்.

வாணலியில் எண்ணெய், நெய் சேர்த்து சூடானதும் லவங்கம், பட்டை, ஏலக்காய், பிரியாணி இலை, முந்திரி போட்டு தாளித்த பின்னர் அரைத்த விழுதை சேர்த்து, வதக்கவும்.

விழுது நன்றாக வதங்கியதும்  மஞ்சள் தூள்,  மிளகாய்த் தூள்,  கரம் மசாலாத்தூள் சேர்த்து உப்பு சேர்த்து வதக்கவும்.

அடுத்து தயிர் சேர்க்கவும்.

அடுத்து அதில் புதினா, வேகவைத்த சென்னா சேர்த்து கிளறி, இறுதியில் சாதம் சேர்த்து கிளறி 5 நிமிடம் மிதமான தீயில் மூடிவைத்து இறக்கி பரிமாறவும்.

சூப்பரான  வெள்ளை கொண்டைக்கடலை பிரியாணி ரெடி.

https://www.maalaimalar.com

Edited by நவீனன்
Link to comment
Share on other sites

சூப்பரான ஆந்திரா ஸ்டைல் மீன் வறுவல்

 
அ-அ+

குழந்தைகளுக்கு மீன் என்றால் மிகவும் பிடிக்கும். இன்று மீனை வைத்து ஆந்திரா ஸ்டைலில் வறுவல் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

 
 
 
 
சூப்பரான ஆந்திரா ஸ்டைல் மீன் வறுவல்
 
தேவையான பொருட்கள் :

மீன் - 8 துண்டுகள் (துண்டு மீன்)
கறிவேப்பிலை - ஒரு கைப்பிடி
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு

மசாலாவிற்கு…

வெங்காயம் - 1
பூண்டு - 5 பல்
இஞ்சி - 1 இன்ச்
சீரகம் - 1 டீஸ்பூன்
தனியா - 1 டீஸ்பூன்
சோம்பு - 1 டீஸ்பூன்
வர மிளகாய் - 4
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
கரம் மசாலா தூள் - 1/2 டீஸ்பூன்

201804031502074383_1_fish-fry._L_styvpf.jpg

செய்முறை :

வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

மீனை துண்டுகளாக நறுக்கி நன்கு கழுவி, சுத்தம் செய்து வைத்து கொள்ள வேண்டும்.

வாணலியை அடுப்பில் வைத்து சூடானதும் அதில் 1 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி மசாலாவிற்கு கொடுத்துள்ள பொருட்கள் அனைத்தையும் ஒன்றன்பின் ஒன்றாக போட்டு நன்றாக வறுத்து ஆற வைத்து மிக்சியில் போட்டு நன்கு பேஸ்ட் போல் நைஸாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

அரைத்த மசாலாவுடன், தேவையான அளவு உப்பு சேர்த்து மீனின் மீது தடவி, அரை மணிநேரம் ஊற வைக்க வேண்டும்.

வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி, கறிவேப்பிலை சேர்த்து பொரித்து தனியாக வைக்கவும்.

பின்பு ஊற வைத்துள்ள மீன் துண்டுகளை அந்த எண்ணெயில் போட்டு, இருபுறமும் பிரட்டி பொன்னிறமாக வறுத்து எடுக்க வேண்டும்.

வறுத்த மீனை ஒரு தட்டில் வைத்து அதன் மேல் பொரித்த கறிவேப்பிலையை போட்டு பரிமாறவும்.

இப்போது சுவையான ஆந்திரா ஸ்டைல் மீன் வறுவல் ரெடி!

https://www.maalaimalar.com

Link to comment
Share on other sites

கிராமத்து ஸ்டைல் நண்டு மசாலா

 

 
 

தோசை, இட்லி, சாதத்திற்கு தொட்டுக்கொள்ள கிராமத்து ஸ்டைலில் நண்டு மசாலா செய்தால் அருமையாக இருக்கும். இன்று நண்டு மசாலா செய்முறையை பார்க்கலாம்.

 
 
 
 
கிராமத்து ஸ்டைல் நண்டு மசாலா
 
தேவையான பொருட்கள் :

நண்டு - 1/2 கிலோ
வெங்காயம் - 2
தக்காளி - 2
கறிவேப்பிலை - சிறிது
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன்
பிரியாணி இலை - 1
பட்டை - 1
ஏலக்காய் - 4
சோம்பு - 2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்
மல்லித் தூள் - 2 டீஸ்பூன்
மிளகுத் தூள் - 1/4 டீஸ்பூன்
எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு

அரைப்பதற்கு...

துருவிய தேங்காய் - 1/2 கப்
சோம்பு - 2 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
பச்சை மிளகாய் - 5

201804021514221668_1_crab-masala._L_styvpf.jpg

செய்முறை :

நண்டை சுத்தம் செய்து கொள்ளவும்.

வெங்காயம்,  தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

மிக்சியில் துருவிய தேங்காய், சோம்பு, கறிவேப்பிலை, பச்சை மிளகாய் சேர்த்து நன்றாக அரைத்து கொள்ளவும்.

வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பிரியாணி, பட்டை, ஏலக்காய், சோம்பு சேர்த்து தாளித்து, கறிவேப்பிலை சேர்த்து கிளறி, பின் வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்க வேண்டும்.

வெங்காயம் பொன்னிறமாக வதங்கியதும் அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து கிளறவும்.

அடுத்து அதில் தக்காளியை சேர்த்து நன்கு மென்மையாகும் வரை வதக்கவும்..

பிறகு அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித் தூள், மிளகுத் தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்கு கிளறி, பின் மூடி வைத்து, எண்ணெய் தனியே பிரியும் வரை வதக்கி விட வேண்டும்.

அடுத்து அதில் நண்டு சேர்த்து நன்கு மசாலா நண்டில் சேரும் வரை பிரட்டி, பின் அதில் சிறிது தண்ணீர் தெளித்து, மூடி வைத்து நண்டை வேக வைக்க வேண்டும்.

நண்டின் நிறம் ஆரஞ்சு நிறத்தில் மாற ஆரம்பித்தால், நண்டு வெந்துவிட்டது என்று அர்த்தம்.

பின் அதில் அரைத்து வைத்துள்ள தேங்காய் பேஸ்ட் சேர்த்து, சிறிது தண்ணீர் ஊற்றி கிளறி, 5 நிமிடம் மிதமான தீயில் மூடி வைத்து பச்சை வாசனை போக கொதிக்க விட்டு இறக்கினால், கிராமத்து ஸ்டைல் நண்டு மசாலா ரெடி!!!

https://www.maalaimalar.com/

Link to comment
Share on other sites

காரசாரமான சிக்கன் மிளகு வறுவல்

 

சிலர் காரசாரமாக சாப்பிட விரும்புவார்கள். இன்று சிக்கனில், மிளகு சேர்த்து காரசாரமான வறுவல் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

காரசாரமான சிக்கன் மிளகு வறுவல்
 
தேவையான பொருள்கள் :

சிக்கன் - அரை  கிலோ
மிளகு - 1 ஸ்பூன்
மிளகுத் தூள் - 3  ஸ்பூன்
பச்சை மிளகாய் - 3
காய்ந்த மிளகாய் - 2
வெங்காயம் - 2
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 3 ஸ்பூன்
எண்ணெய் - 4 ஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிதளவு
கொத்தமல்லி - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு

201804061409183356_1_spicy-chicken-pepper-fry._L_styvpf.jpg

செய்முறை:

ஒரு வெங்காயத்தை பொடியாக நறுக்கி வைக்கவும்.

கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

ஒரு வெங்காயத்தை அரைத்து கொள்ளவும்.

சிக்கனை நன்கு சுத்தமாக கழுவி தண்ணீரை வடித்து வைக்கவும்.

கழுவிய சிக்கனை ஒரு பாத்திரத்தில் போட்டு அரைத்த வெங்காயம், இஞ்சி பூண்டு பேஸ்ட், சிறிதளவு உப்பு, 2 ஸ்பூன் மிளகுத் தூள் சேர்த்து நன்கு பிரட்டி 1 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.

பின்பு  கடாயை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், மிளகு, காய்ந்த மிளகாய், பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும்.

பிறகு அதில் 1 ஸ்பூன் மிளகுத்தூள் சேர்த்து, பின் அதில் வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்க வேண்டும்.

அடுத்து அதில் ஊற வைத்துள்ள சிக்கனை போட்டு 10 நிமிடம் நன்கு வதக்கி சிறிதளவு தண்ணீர் தெளிந்து கடாயை மூடி வைத்து, சிக்கனை நன்கு வேக வைக்க வேண்டும்.

சிக்கன் நன்கு வெந்து தண்ணீர் சுண்டியதும் கொத்தமல்லி தூவி இறக்கவும்.

காரசாரமான சிக்கன் மிளகு வறுவல் ரெடி.

https://www.maalaimalar.com

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சனிக்கிழமைக்கேற்ற சரியான ஆயிட்டம்.....இதில் பத்து மிளகை முழுதாக ஆங்காங்கே தூவி விடணும். அப்போதுதான் இடைக்கிடை கடிபடும்போது சுவை அள்ளிக்கொண்டு போகும்.....! tw_blush:

Link to comment
Share on other sites

 வறுத்து அரைத்த சிக்கன் குழம்பு

 

தோசை, இட்லி, சப்பாத்தி, சாதத்திற்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும் இந்த சிக்கன் குழம்பு. இன்று இந்த சிக்கன் குழம்பை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

 
 
 
 
தோசைக்கு அருமையான வறுத்து அரைத்த சிக்கன் குழம்பு
 
தேவையான பொருட்கள் :

சிக்கன் - அரை கிலோ
தேங்காய் (துருவியது) - 1 கப்
இஞ்சி - சிறிய துண்டு
பூண்டு - 6
பச்சை மிளகாய் - 6
தேங்காய் எண்ணெய்
சின்ன வெங்காயம் -1
பெரிய வெங்காயம் -1
தக்காளி - 1
மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - ½ தேக்கரண்டி
வெந்தயத்தூள் - 2 தேக்கரண்டி
கரம் மசாலா தூள்- ½ தேக்கரண்டி
கறிவேப்பிலை - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு

201804071414454044_1_varutharacha-chicken-curry._L_styvpf.jpg

செய்முறை :

சிக்கனை நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும்.

சின்னவெங்காயம், பெரிய வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

கடாயை அடுப்பில் வைத்து இரண்டு தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் தேங்காய் துருவலை போட்டு வறுத்த பின்னர் அதோடு கொத்தமல்லித்தூள், மிளகாய்த்தூள், கரம் மசாலா பொடி, மஞ்சள் தூள் யாவும் போட்டு சிறிது கிளறி விடவும். கலவை பொன்னிறமாக வந்ததும் அதனை விழுதாக அரைத்துத் தனியாக வைத்து கொள்ளவும்.

அதே கடாயை அடுப்பில் வைத்து சிறிது எண்ணெய் ஊற்றி சூடானதும் சின்ன வெங்காயம், இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் போட்டு நன்கு வதக்கவும்.

இப்போது சிக்கன் துண்டுகளைப் போட்டு சிறிது உப்பு சேர்த்து மெதுவாக கிளறவும்.

பின்னர் இரண்டு கப் நீர் ஊற்றி மெதுவாக கிளறி விடவும். இப்போது பாத்திரத்தை மூடி சிக்கனை வேக விடவும்.

பாத்திரத்தைத் திறந்து நறுக்கி வைத்த பெரிய வெங்காயம், தக்காளி ஆகியவற்றைப் போட்டு மேலும் சிறிது தண்ணீர் ஊற்றவும். இப்போது பாத்திரத்தை மூடி 20 நிமிடங்கள் மறுபடியும் வேக வைக்கவும்.

பின்னர் மூடியைத் திறந்து அரைத்து வைத்த தேங்காய் மசாலா விழுதினை போட்டு நீர் ஊற்றி நன்கு கிளறி விடவும்.

சிறிது கறிவேப்பிலை போட்டு குறைவான தீயில் 5 நிமிடங்கள் வேக வைக்கவும்.

இப்போது சுவையான மணக்கும் சிக்கன் குழம்பு ரெடி.

https://www.maalaimalar.com/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முதலாவது படத்தை பார்க்க சுப்பராய இருக்குது. ஆனால் இரண்டாவது படம் வாய்க்கவில்லை
 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, ரதி said:

முதலாவது படத்தை பார்க்க சுப்பராய இருக்குது. ஆனால் இரண்டாவது படம் வாய்க்கவில்லை
 

ஒரு தே .கரண்டி மி.தூளுக்கும், மற்றும் மஞ்சள் தூள்,மல்லித்தூள் 2 தே .கரண்டி,மசாலாத்தூள் எல்லாத்துக்கும் இரண்டாவது படம்தான் சரி....! முதலாவது படத்தில் சில சமயம் தனி மிளகாய்தூள் அல்லது நிறம் காட்ட கேசரி பவுடர் போன்ற ஏதாவது சேர்த்திருக்கலாம்.....!  tw_blush:

  • Haha 1
Link to comment
Share on other sites

சூப்பரான கூனி இறால் வறுவல் செய்வது எப்படி

அ-அ+

கூனி இறால் வறுவல் சாம்பார் சாதம், தயிர் சாதத்திற்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும். இன்று கூனி இறால் வறுவல் செய்முறையை பார்க்கலாம்.

 
 
 
 
சூப்பரான கூனி இறால் வறுவல் செய்வது எப்படி
 
தேவையான பொருட்கள் :

கூனி இறால் (Baby Prawns / Kooni) - 1 கப்
தேங்காய் எண்ணெய் - 3 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிதளவு
பூண்டு - 6 பல்
ப.மிளகாய் - 2
வெங்காயம் - 2
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - சிறிதளவு
இஞ்சி, பூண்டு விழுது - 1 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு

201804071115224220_1_Baby-Prawns-Roast._L_styvpf.jpg

செய்முறை :

பூண்டு, வெங்காயம், ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

கடாயை  அடுப்பில் வைத்து தேங்காய் எண்ணெய் ஊற்றி சூடானதும் பொடியாக நறுக்கிய பூண்டு, ப.மிளகாய், கறிவேப்பிலை போட்டு வதக்கவும்.

அடுத்து அதில் வெங்காயம், மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும்.

அடுத்து அதில் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து 3 நிமிடம் வதக்கவும்.

பிறகு மிளகாய் தூள் சேர்த்து வதக்கவும்.

அடுப்பை மிதமான தீயில் வைத்து கூனி இறாலை சேர்த்து 8 முதல் 10 நிமிடங்கள் வதக்கவும். கூனி இறால் விரைவில் வெந்து விடும்.

சூப்பரான கூனி இறால் ரெடி.

https://www.maalaimalar.com

Link to comment
Share on other sites

புட்டு முதல் புர்ஜி வரை... 30 வகை ஆல் இன் ஆல் ரெசிப்பி

 

 

முளைகட்டிய கோதுமை இனிப்புப் புட்டு

தேவை: கோதுமை - ஒரு கப்  நாட்டுச் சர்க்கரை - தேவையான அளவு  நெய் - சிறிதளவு  தேங்காய்த் துருவல் - தேவையான அளவு.

p101b_1522506702.jpg

செய்முறை: கோதுமையை 10 மணி நேரம் ஊறவைத்து முளைகட்டவும். முளைத்த கோதுமையைச் சுத்தமான துணியில் பரப்பி வெயிலில் நன்கு காயவிடவும். வெறும் வாணலியில் கோதுமையைச் சிறிது சிறிதாகப் போட்டு, படபடவென வெடிக்கும் வரை வறுத்தெடுக்கவும். ஆறிய பிறகு மிக்ஸியில் சேர்த்துப் புட்டு மாவுப் பதத்துக்கு அரைத்தெடுக்கவும். அதில் லேசாக தண்ணீர் தெளித்துப் பிசிறி ஆவியில் வேகவிட்டு எடுக்கவும். அதனுடன் தேங்காய்த் துருவல், நெய், நாட்டுச் சர்க்கரை சேர்த்துக் கலந்து பரிமாறவும்.


p101c_1522506728.jpg

புதினா பொடி புலாவ்

தேவை: புதினா பொடி செய்ய:  புதினா - ஒரு கட்டு  கறுப்பு உளுத்தம்பருப்பு - 100 கிராம்  பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை  காய்ந்த மிளகாய் – தேவையான அளவு  எண்ணெய் - 2 டீஸ்பூன்  உப்பு - தேவையான அளவு. புலாவ் செய்ய:   பாசுமதி அரிசி சாதம் - ஒரு கப்  வேகவைத்த பச்சைப் பட்டாணி - ஒரு கைப்பிடி அளவு  நெய் - ஒரு டேபிள்ஸ்பூன்  பூண்டு - 5 பல் (பொடியாக நறுக்கவும்)  பெரிய வெங்காயம் - ஒன்று (பொடியாக நறுக்கவும்)  உப்பு - தேவையான அளவு.

செய்முறை: புதினாவை நன்கு அலசி ஒரு துணியில் பரப்பி ஈரம் போக உலரவிடவும். வாணலியில் கறுப்பு உளுந்தைச் சேர்த்து வாசனை வரும்வரை வறுக்கவும். அதனுடன் பெருங்காயத்தூள், உப்பு, காய்ந்த மிளகாய் சேர்த்துப் புரட்டி இறக்கவும். அதே வாணலியில் 2 டீஸ்பூன் எண்ணெய்விட்டு புதினா சேர்த்து, அடுப்பை சிறு தீயில் வைத்து இரண்டு நிமிடங்கள் வதக்கி எடுக்கவும். ஆறியதும் உளுந்து கலவையுடன் சேர்த்து மிக்ஸியில் பொடியாக அரைத்தெடுக்கவும். புதினா பொடி ரெடி. அதே வாணலியில் சிறிதளவு நெய்விட்டு பூண்டு, வெங்காயம் சேர்த்து வதக்கவும். அதனுடன் வேகவைத்த பட்டாணி சேர்த்து இறக்கவும். இதை ஆறிய சாதத்துடன் சேர்த்து உப்பு, புதினா பொடி சேர்த்து சாதம் உடையாமல் நன்கு புரட்டிவிடவும். 

குறிப்பு: பொடியில் உப்பு இருப்பதால் சாதத்துடன் உப்பைக் கவனமாகச் சேர்க்கவும். பொடியை அவரவர் விருப்பத்துக்கேற்ப சேர்த்துக்கொள்ளலாம்.


p101d_1522506752.jpg

முருங்கைக்கீரை சூப்

தேவை: சுத்தம் செய்த முருங்கைக்கீரை - ஒரு கப்  சீரகம் - ஒரு டீஸ்பூன்  பூண்டு - 5 பல்
 தோலுரித்த சின்ன வெங்காயம் - 6  தக்காளி - ஒன்று (பொடியாக நறுக்கவும்)  கறிவேப்பிலை, மஞ்சள்தூள் - சிறிதளவு  தேங்காய்ப்பால் - ஒரு கப்  மிளகுத்தூள், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: வெங்காயம், சீரகம், பூண்டு, தக்காளி, கறிவேப்பிலை ஆகியவற்றை மிக்ஸியில் சேர்த்துத் தண்ணீர் தெளித்து நைஸாக அரைத்தெடுக்கவும். குக்கரில் கழுவிய முருங்கைக்கீரை, அரைத்த விழுது, தேவையான அளவு தண்ணீர், மஞ்சள்தூள், உப்பு சேர்த்து மூடி ஆறு விசில்விட்டு இறக்கவும். ஆவி அடங்கியதும் குக்கரின் மூடியைத் திறந்து நன்கு மசித்து வடிகட்டவும். அதனுடன் தேங்காய்ப்பால், மிளகுத்தூள் சேர்த்துச் சூடாக்கி ஒரு கொதிவிட்டு இறக்கிப் பரிமாறவும்.


p101e_1522506775.jpg

முருங்கைக்காய் சூப்

தேவை: முருங்கைக்காய் - 4 (சிறிய துண்டுகளாக்கவும்)  பெரிய வெங்காயம், தக்காளி - தலா ஒன்று (பொடியாக நறுக்கவும்)  சீரகம் - பூண்டு விழுது -  ஒரு டீஸ்பூன் (ஒன்றிரண்டாக அரைத்தது)  சாம்பார் பொடி - கால் டீஸ்பூன்  மஞ்சள்தூள் - 2 சிட்டிகை  தேங்காய்ப்பால் (ஒரு மூடியில் எடுத்தது) - ஒரு கப்  மிளகுத்தூள்,  கொத்தமல்லித்தழை - சிறிதளவு  தேங்காய் எண்ணெய் - 3 டீஸ்பூன்  உப்பு - தேவையான அளவு.

செய்முறை: முருங்கைக்காயை நன்கு வேகவிட்டு, சதைப்பகுதியை மட்டும் தனியாக எடுத்து நன்றாக மசிக்கவும். வாணலியில் தேங்காய் எண்ணெய் ஊற்றி சீரகம் - பூண்டு விழுது, வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கவும். அதனுடன் மஞ்சள்தூள், சாம்பார் பொடி சேர்த்து நன்கு வதக்கவும். பிறகு முருங்கைக்காயின் சதைப்பகுதி, உப்பு சேர்த்து வேகவிடவும். இதனுடன் தேங்காய்ப்பால் சேர்த்து ஒரு கொதிவிட்டு இறக்கவும். மேலே கொத்தமல்லித்தழை, மிளகுத்தூள் சேர்த்துக் கலந்தால் இரும்புச் சத்து நிறைந்த முருங்கைக்காய் சூப் ரெடி.


p101f_1522506798.jpg

காலிஃப்ளவர் - புதினா ரைஸ்

தேவை: ஆய்ந்த காலிஃப்ளவர், சாதம் - தலா ஒரு கப்  பெரிய வெங்காயம் - ஒன்று (பொடியாக நறுக்கவும்)  பச்சை மிளகாய் - தேவையான அளவு  இஞ்சி - பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன்  புதினா  - ஒரு கைப்பிடி அளவு  எண்ணெய், நெய் - தலா 2 டீஸ்பூன்  உப்பு - தேவையான அளவு.

செய்முறை: காலிஃப்ளவரை உப்பு கலந்த வெந்நீரில் போட்டு எடுக்கவும். புதினாவுடன் பச்சை மிளகாய் சேர்த்துத் தண்ணீர் தெளித்து விழுதாக அரைத்தெடுக்கவும். வாணலியில் எண்ணெய், நெய் ஊற்றி வெங்காயம், இஞ்சி - பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். அதனுடன் அரைத்த புதினா விழுது, உப்பு சேர்த்து நன்கு சுருள வதக்கவும். பிறகு காலிஃப்ளவரைச் சேர்த்து வேகவிட்டு இறக்கவும். இதனுடன் சாதம் சேர்த்து நன்கு புரட்டி எடுத்தால், காலிஃப்ளவர் - புதினா ரைஸ் ரெடி.


p101g_1522506819.jpg

முள்ளங்கி - சீரக சாதம்

தேவை: முள்ளங்கி - ஒன்று (தோல் சீவி, சதுர துண்டுகளாக்கவும்)  சாதம் - ஒரு கப்  சீரகம் - ஒரு டீஸ்பூன்  கறிவேப்பிலை - சிறிதளவு  பூண்டு - 5 பல் (வட்டமாக நறுக்கவும்)  மிளகுத்தூள், உப்பு  - தேவையான அளவு
 எண்ணெய், நெய் - தலா ஒரு டீஸ்பூன்.

செய்முறை: முள்ளங்கியுடன் சிறிதளவு தண்ணீர் தெளித்துத் தனியாக வேகவைத்து எடுக்கவும். சாதத்தை உதிர் உதிராக வேகவிட்டு ஆறவைக்கவும். வாணலியில் நெய் - எண்ணெய் ஊற்றி சீரகம், கறிவேப்பிலை தாளிக்கவும். அதனுடன் பூண்டு, முள்ளங்கி, உப்பு சேர்த்துக் கிளறி இறக்கவும். பிறகு சாதம், மிளகுத்தூள் சேர்த்துக் கலந்து பரிமாறவும்.


p101h_1522506840.jpg

சிவப்பரிசி ஆப்பம்

தேவை: சிவப்பரிசி, பச்சரிசி - தலா 200 கிராம்  உளுத்தம்பருப்பு - ஒரு கைப்பிடி அளவு  வெந்தயம் - 2 டீஸ்பூன்  தேங்காய் எண்ணெய்  உப்பு  - தேவையான அளவு.

செய்முறை: சிவப்பரிசி, பச்சரிசி, உளுத்தம்பருப்பு, வெந்தயம் ஆகியவற்றைச் சேர்த்து மூன்று மணி நேரம் ஊறவைக்கவும். பிறகு களைந்து அவற்றுடன் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கிரைண்டரில் நைஸாக அரைத்தெடுக்கவும். பிறகு உப்பு சேர்த்துக் கரைத்து ஆறு மணி நேரம் புளிக்கவிடவும். ஆப்பக்கல்லைச் சூடாக்கி மாவை ஆப்பங்களாக ஊற்றி, சிறிதளவு தேங்காய் எண்ணெய்விட்டு வேகவிட்டு எடுக்கவும்.

குறிப்பு: சிவப்பரிசி சேர்ப்பதால் ஆப்ப சோடா தேவையில்லை. நன்கு மிருதுவாக வரும். ருசியாகவும் இருக்கும். சிவப்பரிசியில் சத்துகள் பல அடங்கியுள்ளன.


p101i_1522506861.jpg

பசும் மஞ்சள் சூப்

தேவை: பசும் மஞ்சள் - ஒன்றரை இன்ச் அளவு துண்டு   ஓமவல்லி இலைகள் - 4  துளசி இலைகள் - 10   சீரகம் - அரை டீஸ்பூன்  மிளகு - 4   பூண்டு - 2 பல்  தோலுரித்த சின்ன வெங்காயம் - 3  தண்ணீர் - ஒரு லிட்டர்  உப்பு  - தேவையான அளவு.

செய்முறை: பசும் மஞ்சளைத் தோல் சீவி, பொடியாக நறுக்கவும். அதனுடன் ஓமவல்லி, துளசி, மிளகு, சீரகம், பூண்டு, வெங்காயம் ஆகியவற்றைச் சேர்த்து மிக்ஸியில் போட்டுச் சிறிதளவு தண்ணீர்விட்டு அரைத்தெடுக்கவும். பாத்திரத்தில் ஒரு லிட்டர் தண்ணீருடன் அரைத்த விழுது சேர்த்துக் கலந்து கொதிக்கவிடவும். தண்ணீர் கொதித்து முக்கால் லிட்டர் ஆன பிறகு இறக்கவும்.  தேவையானபோது  லேசாக சூடாக்கி உப்பு சேர்த்துப் பருகலாம். 

குறிப்பு: இந்த சூப் உடலில் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும். தொடர்ந்து எடுத்துக்கொள்ளலாம்.


p101j_1522506884.jpg

முளைகட்டிய பயறு கொழுக்கட்டை

தேவை: கொழுக்கட்டை மாவு - 200 கிராம்  முளைகட்டிய பச்சைப் பயறு - ஒரு கைப்பிடி அளவு  பெரிய வெங்காயம்  பச்சை மிளகாய் - தலா 2 (பொடியாக நறுக்கவும்)  கடுகு, உளுத்தம்பருப்பு - தலா ஒரு டீஸ்பூன்  கடலைப்பருப்பு - 4 டீஸ்பூன்  கறிவேப்பிலை, நறுக்கிய கொத்தமல்லித்தழை - சிறிதளவு  தேங்காய்த் துருவல் (அ) பல்லு பல்லாகக் கீறிய தேங்காய்த் துண்டுகள் - ஒரு டேபிள்ஸ்பூன்  எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: வாணலியில் எண்ணெய்விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு தாளிக்கவும். வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். அதனுடன் முளைகட்டிய பயறு சேர்த்து ஒரு நிமிடம் வதக்கி இறக்கவும். மேலே கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை, தேங்காய்த் துருவல் சேர்த்துக் கலக்கவும்.  கொழுக்கட்டை மாவுடன் வதக்கிய பயறு, உப்பு சேர்த்துக் கலக்கவும். அதனுடன் சிறிதளவு தண்ணீர் தெளித்துப் பிசையவும். பிறகு மாவைக் கொழுக்கட்டைகளாகப் பிடித்து, ஆவியில் வேகவிட்டு எடுக்கவும். சத்தான பயறு கொழுக்கட்டை ரெடி.

குறிப்பு:    இடியாப்ப மாவு (அ) சிவப்பரிசி புட்டு மாவிலும் தயாரிக்கலாம்.


p101k_1522506904.jpg

சிவப்பரிசிக் கஞ்சி

தேவை:     சிவப்பரிசி - 100 கிராம்  பாசிப்பருப்பு - ஒரு கைப்பிடி அளவு   பெரிய வெங்காயம்  பச்சை மிளகாய், தக்காளி - தலா ஒன்று (பொடியாக நறுக்கவும்)  இஞ்சி - பூண்டு விழுது – ஒரு டீஸ்பூன்  கொத்தமல்லித்தழை - சிறிதளவு  வெந்தயம், சீரகம் - தலா அரை டீஸ்பூன்  தேங்காய்த் துருவல் - 2 டீஸ்பூன்  தேங்காய் எண்ணெய் - 2 டீஸ்பூன்  உப்பு - தேவையான அளவு.

செய்முறை: வெறும் வாணலியில் சிவப்பரிசியை லேசாக வறுத்தெடுக்கவும். ஆறிய பிறகு மிக்ஸியில் சன்ன ரவையாக உடைத்தெடுக்கவும். பாசிப்பருப்பை அரை மணி நேரம் ஊறவிடவும். குக்கரில் தேங்காய் எண்ணெய்விட்டு வெந்தயம், சீரகம் தாளிக்கவும். அதனுடன் இஞ்சி - பூண்டு விழுது, பச்சை மிளகாய், வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கவும். பிறகு அரை லிட்டர் தண்ணீர் ஊற்றிக் கொதிக்கவிடவும். அதனுடன் அரிசி ரவை, பாசிப்பருப்பு, உப்பு சேர்த்து குக்கரை மூடி ஐந்து விசில்விட்டு இறக்கவும். குக்கரில் ஆவி அடங்கியதும் மூடியைத் திறந்து தேங்காய்த் துருவல், கொத்தமல்லித்தழை சேர்த்துக் கலந்து பரிமாறவும்.

குறிப்பு: விரும்பினால் தேங்காய்ப்பால் சேர்க்கலாம்.  


p101l_1522506934.jpg

மொசுமொசு அவரைக் கறி

தேவை: மொசுமொசு அவரை - கால் கிலோ (பொடியாக நறுக்கவும்)  தோலுரித்த சின்ன வெங்காயம் - ஒரு கைப்பிடி அளவு (வட்டமாக நறுக்கவும்)  பூண்டு - 5 பல் (வட்டமாக நறுக்கவும்)  சாம்பார் பொடி - தேவையான அளவு  மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயத்தூள் - தலா கால் டீஸ்பூன்  கறிவேப்பிலை - சிறிதளவு  தேங்காய்த் துருவல் - ஒரு டேபிள்ஸ்பூன்  எண்ணெய், உப்பு - தேவையான அளவு. 

செய்முறை: வாணலியில் எண்ணெய்விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் தாளிக்கவும். அதனுடன் வெங்காயம், பூண்டு சேர்த்து வதக்கவும். பிறகு அவரைக்காய், சாம்பார் பொடி, மஞ்சள்தூள், உப்பு சேர்த்து நன்கு வதக்கவும். அதனுடன் சிறிதளவு தண்ணீர் தெளித்து மூடி போட்டு வேகவிடவும். காய் வெந்ததும் தேங்காய்த் துருவல் சேர்த்துப் புரட்டி இறக்கவும். 

குறிப்பு: மொசுமொசு அவரை மருத்துவக் குணம் கொண்டது. இந்த அவரைக்காய் கிடைக்காதவர்கள் சாதாரண அவரைக்காயிலும் இதேபோல் செய்யலாம்.


p101m_1522506991.jpg

முள்ளங்கி பருப்புப் பச்சடி

தேவை: முள்ளங்கி - 2 (தோல் சீவி, சதுர துண்டுகளாக்கவும்) துவரம்பருப்பு - 100 கிராம்  தக்காளி, பச்சை மிளகாய் - தலா ஒன்று (பொடியாக நறுக்கவும்)  சீரகம் - ஒரு டீஸ்பூன்  சாம்பார் பொடி – தேவையான அளவு  கறிவேப்பிலை - சிறிதளவு  கடுகு, உளுத்தம்பருப்பு - தலா ஒரு டீஸ்பூன்  பெருங்காயத்தூள் - 2 சிட்டிகை  மஞ்சள்தூள் - சிறிதளவு  எண்ணெய் - 3 டீஸ்பூன்  உப்பு - தேவையான அளவு.

செய்முறை: குக்கரில் துவரம்பருப்புடன் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி மூடி, இரண்டு விசில்விட்டு இறக்கவும். வாணலியில் எண்ணெய்விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயத்தூள், கறிவேப்பிலை, சீரகம் தாளிக்கவும். அதனுடன் முள்ளங்கி, தக்காளி, பச்சை மிளகாய் சேர்த்து லேசாக வதக்கவும். பிறகு வேகவைத்த பருப்பு, சாம்பார் பொடி, மஞ்சள்தூள், உப்பு, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து, அடுப்பை மிதமான தீயில் வைத்து நன்கு வேகவிட்டு இறக்கவும்.
 
குறிப்பு: இது சாதம், டிபனுக்கு ஏற்ற சைடிஷ்.


p101n_1522507019.jpg

பீட்ரூட் ஜூஸ்

தேவை: பீட்ரூட், நெல்லிக்காய் - தலா ஒன்று  தோல் சீவிய இஞ்சி - சிறிய துண்டு (துருவவும்)  மிளகுத்தூள், உப்பு - சிறிதளவு.

செய்முறை: பீட்ரூட்டைத் தோல் சீவி, பொடியாக நறுக்கவும். நெல்லிக்காயின் கொட்டையை நீக்கி, பொடியாக நறுக்கவும். பீட்ரூட்டுடன் நெல்லிக்காய் துண்டுகள், இஞ்சித் துருவல், கொஞ்சம் தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் நைஸாக அரைத்து வடிகட்டவும் (வடிகட்டும்போது சிறிதளவு மட்டும் தண்ணீர் சேர்க்கவும்). அதனுடன் சிறிதளவு உப்பு, மிளகுத்தூள் சேர்த்துப் பருகலாம். 

குறிப்பு: இதை அருந்துவதால் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும்.


p101o_1522507040.jpg

செங்கீரைக் கூட்டு

தேவை: நறுக்கிய சிவப்பு தண்டுக்கீரை - ஒரு கப்  பாசிப்பருப்பு - 100 கிராம் (வேகவைக்கவும்)  சீரகம் - ஒரு டீஸ்பூன்  பூண்டு - 4 பல்  தோலுரித்த சின்ன வெங்காயம் - 10  தக்காளி - ஒன்று (பொடியாக நறுக்கவும்)  சாம்பார் பொடி - தேவையான அளவு  மஞ்சள்தூள், பெருங்காயத்தூள் - தலா ஒரு சிட்டிகை  கடுகு, உளுத்தம்பருப்பு - தலா ஒரு டீஸ்பூன்  கறிவேப்பிலை - சிறிதளவு  எண்ணெய், உப்பு  - தேவையான அளவு.

செய்முறை: பூண்டுடன் சீரகம் சேர்த்து ஒன்றிரண்டாக அரைத்தெடுக்கவும். வாணலியில் எண்ணெய்விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் தாளிக்கவும். அதனுடன் வெங்காயம், தக்காளி,  பூண்டு - சீரக விழுது சேர்த்து வதக்கவும். பிறகு, கீரை சேர்த்து நன்கு வதக்கி சாம்பார் பொடி, உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து, தேவையான அளவு தண்ணீர்விட்டு நன்றாக வேகவிடவும். அதனுடன் வேகவைத்த பாசிப்பருப்பு சேர்த்து ஒரு கொதிவிட்டு இறக்கவும். சத்தான கீரைக் கூட்டு ரெடி.

குறிப்பு: சாதத்துடன் பிசைந்து சாப்பிட ருசியாக இருக்கும். மற்ற கீரைகளிலும் இதேபோல் செய்யலாம்.


p101p_1522507074.jpg

குடமிளகாய் சம்பல்

தேவை: குடமிளகாய், பெரிய வெங்காயம் - தலா 2 (சதுர துண்டுகளாக நறுக்கவும்)  பூண்டு - 10 பல் (ஒன்றிரண்டாகத் தட்டவும்)  சீரகத்தூள் - கால் டீஸ்பூன்  மிளகாய்த்தூள் - தேவையான அளவு  மஞ்சள்தூள் - 2 சிட்டிகை  கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை - சிறிதளவு  எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: வாணலியில் எண்ணெய்விட்டு கறிவேப்பிலை, பூண்டு தாளிக்கவும். அதனுடன் வெங்காயம் சேர்த்து இரண்டு நிமிடங்கள் வதக்கவும். பிறகு குடமிளகாய், சீரகத்தூள், மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், உப்பு சேர்த்து நன்கு வதக்கி மூடி போட்டு, அடுப்பை சிறு தீயில் வைத்து நன்கு வேகவிடவும். மேலே கொத்தமல்லித்தழை தூவி இறக்கவும்.

குறிப்பு: தக்காளி சேர்த்தும் செய்யலாம். தண்ணீர் தேவையில்லை. நன்கு சுருள வதக்குவதிலேயே வெந்துவிடும்.


p101q_1522507098.jpg

பூண்டு - வெங்காய வதக்கல்

தேவை: பூண்டு - 100 கிராம் (தோலுரித்து, வட்டமாக நறுக்கவும்)  தோலுரித்த சின்ன வெங்காயம் - 200 கிராம் (நீளவாக்கில் நறுக்கவும்)  மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை  மிளகாய்த்தூள், சீரகத்தூள் - தேவையான அளவு
 கடுகு - ஒரு டீஸ்பூன்  உளுத்தம்பருப்பு - 2 டீஸ்பூன்  கறிவேப்பிலை - சிறிதளவு  நல்லெண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை தாளிக்கவும். அதனுடன் வெங்காயம், பூண்டு சேர்த்து வதக்கவும். பிறகு உப்பு, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், சீரகத்தூள் சேர்த்து நன்கு வதக்கி, கலவை சுருண்டு வந்த பிறகு இறக்கவும். 

குறிப்பு: இது தயிர் சாதத்துக்குத் தொட்டுக்கொள்ள ஏற்றது. நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும்.


p101r_1522507123.jpg

ஸ்வீட் பொட்டேட்டோ -  நட்ஸ் மில்க் ஷேக்

தேவை: சர்க்கரைவள்ளிக் கிழங்கு - ஒன்று  பாதாம், பிஸ்தா, முந்திரி, வால்நட் - தேவையான அளவு  காய்ச்சி ஆறவைத்த பால் - 200 மில்லி  நாட்டுச் சர்க்கரை -  தேவையான அளவு  ஏலக்காய்த்தூள் - சிறிதளவு.

செய்முறை: சர்க்கரைவள்ளிக் கிழங்கை வேகவைத்துத் தோல் நீக்கி துருவவும். பாதாம், பிஸ்தா, முந்திரி, வால்நட் ஆகியவற்றை மிக்ஸியில் சேர்த்துப் பொடிக்கவும். அதனுடன் துருவிய சர்க்கரைவள்ளிக் கிழங்கு சேர்த்து அரைத்தெடுக்கவும். அதில் பால், நாட்டுச் சர்க்கரை, ஏலக்காய்த்தூள் சேர்த்து மிக்ஸியில் நுரை பொங்க அடித்துப் பரிமாறவும்.

குறிப்பு: இதைக் குளிரவைத்தும் பரிமாறலாம்.


p101s_1522507146.jpg

சிவப்பரிசி கார சேவை

தேவை: சிவப்பரிசி - 250 கிராம்  தக்காளி - 6 (பொடியாக நறுக்கவும்)  பெரிய வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கவும்)  மிளகாய்த்தூள் - தேவையான அளவு  மஞ்சள்தூள் - சிறிதளவு  இஞ்சி - பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன்  கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை - சிறிதளவு  சோம்பு - கால் டீஸ்பூன்  எண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன்  உப்பு - தேவையான அளவு.

செய்முறை: சிவப்பரிசியை மூன்று மணி நேரம் ஊறவைத்துக் களைந்து கிரைண்டரில் இட்லி மாவு பதத்துக்கு நைஸாக அரைத்தெடுக்கவும். பிறகு மாவை இட்லித் தட்டில் ஊற்றி, ஆவியில் வேகவைத்து எடுக்கவும். இட்லிகள் சூடாக இருக்கும்போதே சேவை அச்சில் போட்டுப் பிழிந்தெடுத்து ஆறவிடவும். வாணலியில் எண்ணெய்விட்டு சோம்பு தாளிக்கவும். அதனுடன் வெங்காயம், கறிவேப்பிலை, இஞ்சி - பூண்டு விழுது, தக்காளி, மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து நன்கு சுருள வதக்கவும். பிறகு, அடுப்பை சிறு தீயில் வைத்து ஆறிய சேவை சேர்த்து நன்கு புரட்டி, கொத்தமல்லித்தழை தூவி இறக்கவும். மிகவும் சத்தான டிபன் ரெடி.

குறிப்பு: தேங்காய்த் துருவல், நெய், நாட்டுச் சர்க்கரை சேர்த்து இனிப்பு சேவையும் செய்யலாம். இந்த சேவையைச் ‘சந்தவை’ என்றும் சொல்வார்கள்.


p101t_1522507169.jpg

பீட்ரூட் தயிர்ப் பச்சடி

தேவை: பீட்ரூட் - 200 கிராம் (தோல் சீவி, சதுர துண்டுகளாக நறுக்கவும்)  தயிர் - 200 மில்லி  கடுகு, உளுத்தம்பருப்பு - தலா ஒரு டீஸ்பூன்  பச்சை மிளகாய் - 2 (பொடியாக நறுக்கவும்)  கொத்தமல்லித்தழை - சிறிதளவு  எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: பீட்ரூட் துண்டுகளுடன் சிறிதளவு தண்ணீர், சிறிதளவு உப்பு சேர்த்து நன்கு வேகவைத்து எடுக்கவும். ஆறியதும் அதனுடன் தயிர், சிறிதளவு உப்பு சேர்த்துக் கலக்கவும். வாணலியில் எண்ணெய்விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு  தாளிக்கவும். அதனுடன் பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி, தயிர்க்கலவையுடன் சேர்க்கவும். மேலே கொத்தமல்லித்தழை தூவிப் பரிமாறவும்.


p101v_1522507189.jpg

தானிய தோசை

தேவை: ராகி, கம்பு, கோதுமை, வரகு - தலா 100 கிராம்  கொள்ளு - 50 கிராம்  கறுப்பு கொண்டைக்கடலை - ஒரு கைப்பிடி அளவு  கறுப்பு உளுந்து - 100 கிராம்  வெந்தயம் - ஒரு டீஸ்பூன்  எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: கறுப்பு கொண்டைக்கடலையை முதல் நாள் இரவே ஊறவைக்கவும். ராகி, கம்பு, கோதுமை, வரகு, கொள்ளு, உளுத்தம்பருப்பு, வெந்தயம் ஆகியவற்றை ஒன்றாகச் சேர்த்து நான்கு மணி நேரம் ஊறவைக்கவும். பிறகு அதனுடன் கொண்டைக்கடலை சேர்த்துக் களைந்து தோசை மாவுப் பதத்துக்கு அரைத்தெடுக்கவும். உப்பு சேர்த்துக் கரைத்து மூன்று மணி நேரம் புளிக்கவிடவும். தோசைக்கல்லைக் காயவைத்து, மாவைத் தோசைகளாக ஊற்றி, சுற்றிலும் எண்ணெய்விட்டு இருபுறமும் வேகவைத்து எடுக்கவும்.

குறிப்பு: மாவைச் சிறிய ஊத்தப்பமாக ஊற்றி, மேலே வெங்காயம் தூவி சுட்டெடுக்கலாம்.


p101w_1522507212.jpg

கொத்தமல்லி - புதினாத் தொக்கு

தேவை: கொத்தமல்லித்தழை, புதினா, கறிவேப்பிலை, பச்சைப் பட்டாணி - தலா 2 கைப்பிடி அளவு  குடமிளகாய் - ஒன்று (பொடியாக நறுக்கவும்)  பச்சை மிளகாய் – தேவையான அளவு  பெருங்காயத்தூள் - 2 சிட்டிகை  கடுகு - ஒரு டீஸ்பூன்  புளி - சிறிதளவு  நல்லெண்ணெய்,  உப்பு  - தேவையான அளவு.

செய்முறை: கொத்தமல்லித்தழையுடன் புதினா, கறிவேப்பிலை, குடமிளகாய், பச்சைப் பட்டாணி, பச்சை மிளகாய், புளி, சிறிதளவு தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் விழுதாக அரைத்தெடுக்கவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, பெருங்காயத்தூள் தாளிக்கவும். அதனுடன் அரைத்த விழுது, உப்பு சேர்த்து நன்கு சுருள வதக்கி இறக்கவும். இதை சாதத்துடன் சாப்பிடலாம். இட்லி, தோசைக்குத் தொட்டுக்கொள்ளலாம்.

குறிப்பு: புளிக்குப் பதிலாக எலுமிச்சைச் சாறு சேர்க்கலாம்.


p101x_1522507264.jpg

சிவப்பு அவல் - நட்ஸ் மசாலா

தேவை: சுத்தம் செய்த சிவப்பு அவல் - ஒரு கப்  கொத்தமல்லித்தழை - சிறிதளவு  இஞ்சி - பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன்  மஞ்சள்தூள், மிளகாய்த்தூள் - சிறிதளவு  உப்பு - தேவையான அளவு.

தாளிக்க: பெரிய வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கவும்)  தக்காளி, பச்சை மிளகாய் - தலா ஒன்று (பொடியாக நறுக்கவும்)  பொடியாக நறுக்கிய வால்நட், பாதாம், பிஸ்தா, முந்திரி - தலா ஒரு டீஸ்பூன்  கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு - தலா ஒரு டீஸ்பூன்  கறிவேப்பிலை - சிறிதளவு  நெய் - ஒரு டீஸ்பூன்  எண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன்.

செய்முறை: வாணலியில் நெய்விட்டு வால்நட், பாதாம், பிஸ்தா, முந்திரி ஆகியவற்றைச் சேர்த்து வறுத்துத் தனியாக எடுத்து வைக்கவும். அதே வாணலியில் எண்ணெய்விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, கறிவேப்பிலை தாளிக்கவும். அதனுடன் வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். பிறகு இஞ்சி - பூண்டு விழுது, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து நன்கு வதக்கவும். அதனுடன் ஒன்றரை கப் தண்ணீர் ஊற்றிக் கொதிக்கவிடவும். பிறகு அவல் சேர்த்து இரண்டு நிமிடங்கள் கழித்து, அடுப்பை சிறு தீயில் வைத்து மூடி போட்டு வேகவிடவும். மேலே கொத்தமல்லித்தழை, வறுத்த நட்ஸ் சேர்த்துக் கலந்து இறக்கிப் பரிமாறவும்.


p101y_1522507288.jpg

வரகு - கொள்ளு பொங்கல்

தேவை: வரகு அரிசி - 200 கிராம்  கொள்ளு - 50 கிராம்  சீரகம் - 2 டீஸ்பூன்  மிளகு - 15  நெய் - 3 டீஸ்பூன்  தேங்காய் எண்ணெய் - 3 டீஸ்பூன்  தோல் சீவிய இஞ்சி - சிறிய துண்டு  பச்சை மிளகாய் - ஒன்று  கொத்தமல்லித்தழை - சிறிதளவு  கறிவேப்பிலை - ஒரு கைப்பிடி அளவு  உப்பு - தேவையான அளவு.

செய்முறை: கொள்ளுப் பயறை இரண்டு மணி நேரம் ஊறவைக்கவும். வரகரிசியை அரை மணி நேரம் ஊறவைக்கவும். இஞ்சியுடன் பச்சை மிளகாய் சேர்த்து ஒன்றிரண்டாக அரைத்தெடுக்கவும். கறிவேப்பிலையுடன் சிறிதளவு தண்ணீர்விட்டு விழுதாக அரைத்தெடுக்கவும். குக்கரில் நெய், எண்ணெய் ஊற்றி சீரகம், மிளகு தாளித்து, கறிவேப்பிலை விழுது சேர்த்துக் கிளறவும். அதனுடன் இஞ்சி - பச்சை மிளகாய் விழுது, கொத்தமல்லித்தழை சேர்த்து நன்கு வதக்கவும். பிறகு உப்பு, தேவையான அளவு தண்ணீர் சேர்த்துக் கொதிக்கவிடவும். அதனுடன் கொள்ளு, வரகு சேர்த்து குக்கரை மூடி ஆறு விசில்விட்டு இறக்கவும். குக்கரில் ஆவி அடங்கியதும் மூடியைத் திறந்து கொத்தமல்லித்தழை தூவிப் பரிமாறவும்.
 
குறிப்பு: விரும்பினால் முந்திரி சேர்க்கலாம். சாதாரண அரிசியைவிட சிறுதானி யங்கள் இறுகும் தன்மையுடையதால் தண்ணீர் அதிகமாகச் சேர்க்கவும்.


p101z_1522507309.jpg

ராகி - பருப்பு அடை

தேவை: ராகி (கேழ்வரகு) - 100 கிராம்  துவரம்பருப்பு, கடலைப்பருப்பு - தலா 50 கிராம்  சோம்பு - ஒரு டீஸ்பூன்  பூண்டு - 4 பல்  காய்ந்த மிளகாய், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

தாளிக்க: பெரிய வெங்காயம் - ஒன்று (பொடியாக நறுக்கவும்)  கடுகு - ஒரு டீஸ்பூன்  உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு - தலா 2 டீஸ்பூன்  கறிவேப்பிலை - சிறிதளவு  எண்ணெய் - சிறிதளவு  முருங்கை இலை - சிறிதளவு. மேலே தூவ: வறுத்து ஒன்றிரண்டாகப் பொடித்த வேர்க்கடலை, கொத்தமல்லித்தழை – சிறிதளவு

செய்முறை: ராகி, துவரம்பருப்பு, கடலைப்பருப்பு ஆகியவற்றை ஒன்றாகச் சேர்த்து மூன்று மணி நேரம் ஊறவைக்கவும். அதனுடன் சோம்பு, பூண்டு, காய்ந்த மிளகாய், உப்பு சேர்த்துக் கெட்டியாக அரைத்தெடுக்கவும். வாணலியில் எண்ணெய் ஊற்றித் தாளிக்கக்கொடுத்துள்ள பொருள்களைச் சேர்த்துத் தாளித்து மாவுடன் சேர்த்துக் கலக்கவும். தோசைக்கல்லைக் காயவைத்து மாவை அடைகளாக ஊற்றி, சுற்றிலும் எண்ணெய்விட்டு இருபுறமும் வேகவிடவும். மேலே வேர்க்கடலைப் பொடி, கொத்தமல்லித்தழை தூவி எடுத்துப் பரிமாறவும்.


p101z1_1522507333.jpg

மிக்ஸட் வெஜ் புர்ஜி

தேவை: நறுக்கிய காய்கறி கலவை (கேரட், பீன்ஸ், கோஸ், பச்சைப் பட்டாணி, குடமிளகாய், காலிஃப்ளவர்) - ஒரு கப்  பூண்டு - 10 பல் (பொடியாக நறுக்கவும்)  தோல் சீவிய இஞ்சி - சிறிய துண்டு (பொடியாக நறுக்கவும்)
 கரம் மசாலாத்தூள் - சிறிதளவு  பெரிய வெங்காயம், தக்காளி - தலா 2 (பொடியாக நறுக்கவும்)  மிளகாய்த்தூள் - தேவையான அளவு  தனியாத்தூள் (மல்லித்தூள்) - ஒரு டீஸ்பூன்  மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை  கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை - சிறிதளவு  எண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன்  உப்பு - தேவையான அளவு.

செய்முறை: காலிஃப்ளவரை உப்பு கலந்த வெந்நீரில் போட்டு எடுக்கவும். வாணலியில் எண்ணெய்விட்டு, கறிவேப்பிலை தாளிக்கவும். அதனுடன் வெங்காயம், இஞ்சி, பூண்டு, தக்காளி சேர்த்து வதக்கவும். பிறகு காய்கறிகள், மல்லித்தூள், மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், கரம் மசாலாத்தூள், உப்பு சேர்த்து நன்கு வதக்கி, சிறிதளவு தண்ணீர் தெளித்து மூடி போட்டு வேகவிடவும். மேலே கொத்தமல்லித்தழை தூவி இறக்கவும்.


p101z2_1522507361.jpg

தினை - கேரட் ரைஸ்

தேவை: தினை - 200 கிராம்  கேரட் - 4 (துருவவும்)  பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் - ஒரு கப்  பூண்டு - 6 பல் (பொடியாக நறுக்கவும்)  பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் - தேவையான அளவு  கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு - தலா ஒரு டீஸ்பூன்  தேங்காய்த் துருவல் - ஒரு டேபிள்ஸ்பூன்  கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை - சிறிதளவு  எண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன்  உப்பு - தேவையான அளவு.

செய்முறை: தினையை நன்கு களைந்து ஒரு பங்குக்கு இரண்டரை பங்கு தண்ணீர்விட்டு குக்கரில் சேர்த்து மூன்று விசில்விட்டு இறக்கி ஆறவிடவும். பிறகு வாணலியை அடுப்பில் ஏற்றி எண்ணெய்விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, கறிவேப்பிலை தாளித்து வெங்காயம், பச்சை மிளகாய், பூண்டு சேர்த்து நன்கு வதக்கவும். இதனுடன் கேரட் துருவல் சேர்த்துக் கலந்து, ஒரு நிமிடத்துக்குப் பிறகு ஆறிய தினை சாதம், உப்பு, தேங்காய்த் துருவல் சேர்த்து உடையாமல் புரட்டி, நன்கு சூடேறியதும் கொத்தமல்லித்தழை தூவி இறக்கிப் பரிமாறவும்.


p101z3_1522507388.jpg

காராமணி - தேங்காய் - மாங்காய் சுண்டல்

தேவை: காராமணி - 200 கிராம்  தேங்காய் - ஒரு டேபிள்ஸ்பூன் (பொடியாக நறுக்கியது)  மாங்காய் - 2 டேபிள்ஸ்பூன் (பொடியாக நறுக்கியது)  சீரகத்தூள் - கால் டீஸ்பூன்  இஞ்சித் துருவல் - சிறிதளவு  பெரிய வெங்காயம் - ஒன்று  பச்சை மிளகாய் - 2 (பொடியாக நறுக்கவும்)  மிளகுத்தூள் - சிறிதளவு, கொத்தமல்லித்தழை, பெருங்காயத்தூள் - சிறிதளவு  எண்ணெய், உப்பு - தேவையான அளவு. தாளிக்க: கடுகு, உளுத்தம்பருப்பு - தலா ஒரு டீஸ்பூன்  கறிவேப்பிலை - சிறிதளவு.

செய்முறை: காராமணியை ஒரு மணி நேரம் ஊறவைத்துச் சிறிதளவு உப்பு சேர்த்து குக்கரில் வேகவிட்டு எடுத்து வைக்கவும். பிறகு வாணலியில் எண்ணெய்விட்டுத் தாளிக்கக் கொடுத்துள்ளவற்றைத் தாளித்து,  வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும். இதனுடன் இஞ்சித் துருவல் சேர்த்துக் கிளறி, காராமணி, சீரகத்தூள், பெருங்காயத்தூள் சேர்த்து நன்கு புரட்டி உப்பு, மிளகுத்தூள் சேர்த்துக் கலக்கவும். பிறகு, ஐந்து நிமிடங்கள் அடுப்பை சிம்மில் வைத்து, இறுதியாக தேங்காய், மாங்காய் துண்டுகளைப் போட்டு நன்கு புரட்டி, கொத்தமல்லித்தழை தூவி இறக்கவும்.


p101z4_1522507409.jpg

முப்பருப்புப் பாயசம்

தேவை: பாசிப்பருப்பு - 100 கிராம்  கடலைப்பருப்பு - 50 கிராம்  துவரம்பருப்பு - 50 கிராம்  வெல்லம் - 200 கிராம்  தேங்காய்த் துருவல் - 4 டேபிள்ஸ்பூன்  ஏலக்காய் - 3  முந்திரி, திராட்சை - தேவையான அளவு  நெய் - 2 டீஸ்பூன்  பச்சரிசி - ஒரு டேபிள்ஸ்பூன்.

செய்முறை: பச்சரிசியை அரை மணி நேரம் ஊறவைத்து ஏலக்காய் சேர்த்து நைஸாக அரைத்து, தேங்காய்த் துருவலை இறுதியாகச் சேர்த்து ஒன்றிரண்டாக அரைத்து வைக்கவும். பருப்பு வகைகளை அரை மணி நேரம் ஊறவைத்து தேவையான தண்ணீர்விட்டு குக்கரில் சேர்த்து வேகவைத்து எடுத்து வைக்கவும். வெல்லத்தைப் பொடித்துச் சிறிதளவு தண்ணீர் சேர்த்துக் கொதிக்கவைத்து வடிகட்டி வைக்கவும். பிறகு வேகவைத்த பருப்புக் கலவையை அடுப்பில் ஏற்றி தேங்காய் - அரிசிக் கலவை மற்றும் வெல்லக் கரைசல் சேர்த்து நன்கு கரண்டியால் கலக்கி ஐந்து நிமிடங்கள் கொதிக்கவிட்டு, இறுதியாக நெய்யில் வறுத்த முந்திரி, திராட்சை சேர்த்து இறக்கவும். விருப்பப்பட்டால் சிறிதளவு பால் சேர்க்கலாம்.


p101z5_1522507440.jpg

பச்சைப் பயறு - கொத்தமல்லி பெசரட்

தேவை: பச்சைப் பயறு - 100 கிராம்  பச்சரிசி - ஒரு கைப்பிடி அளவு  கொத்தமல்லித்தழை - தேவையான அளவு  சீரகம் - 2 சிட்டிகை  பச்சை மிளகாய் - ஒன்று  எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: பச்சைப் பயறு, பச்சரிசி இரண்டையும் இரண்டு மணி நேரம் ஊறவைத்து, கொத்தமல்லித்தழை, பச்சை மிளகாய், உப்பு, சீரகம் சேர்த்து மிக்ஸியில் சற்று கொரகொரப்பாக அரைத்து, தோசை மாவைக் காட்டிலும் சிறிது தண்ணீர் அதிகம் சேர்த்துக் கரைக்கவும். தோசைக்கல்லை அடுப்பில் ஏற்றி மாவைத் தோசைகளாக ஊற்றி, சுற்றிலும் எண்ணெய்விட்டு இரண்டு பக்கமும் சிவந்ததும் எடுக்கவும்.


p101z6_1522507486.jpg

வேர்க்கடலை - அவல் உப்புமா

தேவை: கெட்டி அவல் - 200 கிராம்  பெரிய வெங்காயம் - 2 (நறுக்கியது)  வேர்க்கடலை - ஒரு கைப்பிடி அளவு (வேகவைக்கவும்)  பச்சை மிளகாய் - 2  சீரகத்தூள் - 2 சிட்டிகை  தேங்காய்த் துருவல் - ஒரு டேபிள்ஸ்பூன்  கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை - சிறிதளவு  கடலைப்பருப்பு - 2 டீஸ்பூன்  மஞ்சள்தூள் - சிறிதளவு  எலுமிச்சைச் சாறு - ஒரு டீஸ்பூன்  எண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன்  உப்பு - தேவையான அளவு. 

செய்முறை: வேர்க்கடலையை 12 மணி நேரம் ஊறவைத்து வேகவைக்கவும். அவலை நன்கு அலசி தண்ணீரை வடியவிடவும். பிறகு வாணலியை அடுப்பில் ஏற்றி எண்ணெய் ஊற்றி கடுகு, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை தாளித்து வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும். இதனுடன் அவலைச் சேர்த்து மஞ்சள்தூள், சீரகத்தூள், உப்பு சேர்த்து நன்கு புரட்டி, லேசாக தண்ணீர் தெளித்து, அடுப்பை மிதமான தீயில் வைத்து, மூடி போட்டு ஐந்து நிமிடங்கள் வேகவிடவும். பிறகு வேகவைத்த வேர்க்கடலை, எலுமிச்சைச் சாறு சேர்த்து, கொத்தமல்லித்தழை தூவி, தேங்காய்த் துருவலையும் சேர்த்து நன்கு புரட்டி இறக்கிப் பரிமாறவும்.


தினம் தினம் வித்தியாசம்!

கா
லையில் வழக்கமான சில டிபன் வகைகள் அல்லது பிரெட் ஜாம்; மதியம் சாதம், சாம்பார், ரசம், பொரியல்; இரவில் சாதம் அல்லது சாப்பாத்தி... இதுதான் நம்மில் பெரும்பாலானவர்கள் வீட்டு மெனு கார்டில் இடம்பெறும் உணவு அயிட்டங்கள். சாய்ஸா... மூச்!   

p101z7_1522507513.jpg

என்னதான் மெனக்கெட்டுச் சமைத்தாலும், ருசியாக இருந்தாலும்... ‘நிரந்தர மெனுதான் சாத்தியம்’ என்ற சமையலறைக் கொள்கை, குடும்ப உறுப்பினர்களை சில நேரங்களில் சலிப்படைய வைத்துவிடுகிறது; சாப்பாடு மீதான ஆர்வத்தைக் குறைக்கிறது.

``இதற்காக, இத்தாலியன், அமெரிக்கன், மெக்ஸிகன், சைனீஸ் என அகில உலக டிஷ்களைச் செய்து குவிக்க வேண்டும் என்கிற அவசியம் இல்லை. நம்மிடம் கைவசம் உள்ள மளிகைப் பொருள்கள், அருகிலேயே கிடைக்கும் காய்கறிகள், ஆரோக்கியத்துக்கு உறுதுணை புரியும் சில தானியங்கள் ஆகியவற்றைக்கொண்டு சற்று வித்தியாசமான ரெசிப்பிகளைச் செய்து பரிமாறலாம்’’ என்று சொல்லும் சமையல் கலைஞர் சரஸ்வதி அசோகன்...

காலிஃப்ளவர் - புதினா ரைஸ், சிவப்பரிசி ஆப்பம், முளைகட்டிய கோதுமை இனிப்புப் புட்டு, பீட்ரூட் ஜூஸ், பசும் மஞ்சள் சூப், ஸ்வீட் பொட்டேட்டோ - நட்ஸ் மில்க் ஷேக், மிக்ஸ்டு வெஜ் புர்ஜி, கொத்தமல்லி - புதினாத் தொக்கு எனப் பல்வேறு சுவையான, சத்தான ரெசிப்பிகளை இங்கே வழங்குகிறார். 

https://www.vikatan.com/

Link to comment
Share on other sites

ஆரோக்கியமான முருங்கைக்கீரை ஆம்லெட்

 
அ-அ+

கீரையை சாப்பிட மறுக்கும் குழந்தைகளுக்கு கீரை, முட்டை சேர்த்து ஆம்லெட் போல் செய்து கொடுக்கலாம். இன்று முருங்கைக்கீரை ஆம்லெட் செய்முறையை பார்க்கலாம்.

 
 
 
 
ஆரோக்கியமான முருங்கைக்கீரை ஆம்லெட்
 
தேவையான பொருட்கள் :

முருங்கைக்கீரை - ஒரு கப்
முட்டை - 3
வெங்காயம் - ஒன்று
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு

அரைக்க:

தேங்காய்ப் பூ - ஒரு தேக்கரண்டி
பச்சை மிளகாய் - ஒன்று
கறிவேப்பிலை - ஒரு இணுக்கு
சீரகம் - கால் தேக்கரண்டி

201804111203295977_1_drumstick-leaves-omlet._L_styvpf.jpg

செய்முறை :

வெங்காயத்தைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

அரைக்கக் கொடுத்துள்ளவற்றை மிக்சியில் போட்டு கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.

கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் வெங்காயம் சேர்த்து 2 நிமிடங்கள் வதக்கவும்.

வெங்காயம் சிறிது வதங்கியதும் அத்துடன் முருங்கைக்கீரையைச் சேர்த்து மேலும் 3 நிமிடங்கள் வதக்கி இறக்கவும்.

ஒரு பாத்திரத்தில் முட்டையை உடைத்து ஊற்றி, அத்துடன் வதக்கிய கீரை, அரைத்த தேங்காய் விழுது சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.

அத்துடன் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு நுரை பொங்க அடிக்கவும்.

தோசை கல்லை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி, சூடானதும் முட்டைக் கலவையை ஆம்லெட்டாக ஊற்றி வேகவிடவும்.

ஒரு பக்கம் வெந்ததும் மறுபக்கம் திருப்பி போட்டு வேக வைக்கவும்.

வெந்ததும் விரும்பிய வடிவில் வெட்டி எடுக்கவும்.

லஞ்ச் பாக்ஸிற்கு ஏற்ற, ஆரோக்கியமான முருங்கைக்கீரை ஆம்லெட் தயார்.

https://www.maalaimalar.com

Link to comment
Share on other sites

உடுப்பி முதல் உலகம் வரை! - கர்நாடகா தெருக்கடை ஸ்பெஷல்

 

 

பாரம்பர்ய சைவ உணவுகளுக்குப் பெரும்புகழ் பெற்றது உடுப்பி. நவீன உணவுகளுக்குப் பெருமை சேர்ப்பது பெங்களூரு. இப்படி கலாசாரமும் புதுமையும் கலந்த உணவு வகைகளைக் கர்நாடக மாநிலத்தின் பல பகுதிகளிலுள்ள தெருக்கடைகளில் ருசிக்கலாம்.  

p7a_1522473944.jpg

உலகத் தெருக்கடை உணவு வரிசையில் கர்நாடக மாநில ஸ்பெஷல் உணவுகளை எளிதாகச் செய்யும் விதத்தில் அழகிய படங்கள் மற்றும்  வீடியோக்களுடன் அளிக்கிறார் ஷார்ஜாவைச் சேர்ந்த சமையல் கலைஞர் லக்ஷ்மி வெங்கடேஷ். 

p7b_1522473968.jpg

வெண் மைசூர் மசாலா தோசையோ, மங்களூரு பன்னோ, மதுர் வடையோ, கோலி பஜ்ஜியோ... இனி நம் வீட்டிலேயே மணக்கும்... ருசிக்கும்!

மசாலா பிரெட்

தேவையானவை:

பிரெட் ஸ்லைஸ் - 10 (ஓரங்களை நீக்கவும்)
கேரட் துருவல் – அரை கப்
குடமிளகாய்,  வெங்காயம், முட்டைகோஸ் - தலா அரை கப்
தக்காளி - ஒன்று (பொடியாக நறுக்கவும்)
மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன்
சாட் மசாலாத்தூள் - அரை டீஸ்பூன்
டொமேடோ கெட்சப் - ஒரு டேபிள்ஸ்பூன்
பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை,  பச்சை மிளகாய் - சிறிதளவு
வெண்ணெய், எண்ணெய், உப்பு - தேவையான அளவு  

p7c_1522473996.jpg

செய்முறை:

வாணலியில் எண்ணெய்விட்டு வெங்காயம், தக்காளி, கேரட் துருவல்,  குடமிளகாய், முட்டைகோஸ்,  பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.  அதனுடன் மிளகாய்த்தூள், சாட் மசாலாத்தூள், டொமேட்டோ கெட்சப், உப்பு சேர்த்து வதக்கவும். பிறகு, கொத்தமல்லித்தழை சேர்த்துக் கிளறி இறக்கவும். பிரெட்டின் மீது சிறிதளவு வெண்ணெய் தடவவும். தோசைக்கல்லைக் காயவைத்து பிரெட்டைப் போட்டு இருபுறமும் டோஸ்ட் செய்து எடுக்கவும். அதன் மீது காய்கறிக் கலவையைப் பரப்பி பரிமாறவும். 

p7d_1522474045.jpg

உங்கள் மொபைலில் இந்த QR code-ஐ ஸ்கேன் செய்தும் வீடியோவைக் காணலாம்.

 


p7e_1522474066.jpg

கோலி பஜ்ஜி

தேவையானவை:

மைதா மாவு - ஒரு கப்
புளித்த தயிர் - அரை கப்
சமையல் சோடா - அரை டீஸ்பூன்
பல்லு பல்லாக நறுக்கிய தேங்காய்த் துண்டுகள் - ஒரு டேபிள்ஸ்பூன்
பச்சை மிளகாய் - 2 (பொடியாக நறுக்கவும்)
தோல் சீவி துருவிய இஞ்சி -
ஒரு டீஸ்பூன்
பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை - ஒரு டீஸ்பூன்
சர்க்கரை - ஒரு டீஸ்பூன்
எண்ணெய்,  உப்பு, தண்ணீர் - தேவையான அளவு

செய்முறை:

மைதா மாவுடன் புளித்த தயிர்,  சமையல் சோடா, உப்பு, சர்க்கரை,  தண்ணீர் சேர்த்துக் கெட்டியாகக் கரைத்து மூன்று மணி நேரம் ஊறவிடவும். பிறகு அதனுடன் பச்சை மிளகாய் துண்டுகள்,  தேங்காய்த் துண்டுகள், இஞ்சி,  கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை சேர்த்து மாவைக் கையால் நன்றாகக் கலக்கவும். வாணலியில் எண்ணெயைக் காயவிட்டு மாவைச் சிறிய போண்டாக்கள் போல  கிள்ளிப் போட்டுப் பொன்னிறமாகப் பொரித்தெடுக்கவும். 

p7f_1522474104.jpg

உங்கள் மொபைலில் இந்த QR code-ஐ ஸ்கேன் செய்தும் வீடியோவைக் காணலாம்.

 


p7g_1522474143.jpg

பிஸ்கட் ரொட்டி

தேவையானவை - மேல் மாவு செய்ய:

மைதா மாவு - ஒரு கப்
உப்பு - அரை டீஸ்பூன்
எண்ணெய் - 2 டீஸ்பூன்

ஸ்டஃபிங் செய்ய:

ரவை, தேங்காய்த் துருவல் - தலா அரை கப்
உளுத்தம்பருப்பு - 2 டேபிள்ஸ்பூன் (அரை மணி நேரம் ஊறவைக்கவும்)
பச்சை மிளகாய் - 5 (பொடியாக நறுக்கவும்)
பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை - சிறிதளவு
பெருங்காயத்தூள் -  கால் டீஸ்பூன்
மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு

செய்முறை:

மைதா மாவுடன் எண்ணெய், உப்பு சேர்த்துப் பிசிறவும். பிறகு சிறிது சிறிதாக தண்ணீர் சேர்த்து பூரி மாவைவிடச் சற்று கெட்டியாகப் பிசைந்து, அரை மணி நேரம் ஊறவைக்கவும். வாணலியில் எண்ணெய்விட்டுச் சூடாக்கி பச்சை மிளகாய், கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் தாளிக்கவும். அதனுடன் உளுத்தம்பருப்பு சேர்த்து நன்கு கிளறவும். பிறகு தேங்காய்த் துருவல் சேர்த்து நன்கு வதக்கவும். அதனுடன் மிளகாய்த்தூள், உப்பு, ரவையை சேர்த்து கிளறி இறக்கவும். இதுவே ஸ்டஃபிங்.
பிசைந்த மைதா மாவைச் சிறிய உருண்டைகளாக்கி வட்டமாகத் திரட்டவும். அதன் நடுவே சிறிதளவு ஸ்டஃப்பிங் வைத்து மூடி மீண்டும் சற்று கனமான பூரிகளாகத் திரட்டவும். வாணலியில் எண்ணெயைக் காயவிட்டு, அடுப்பை சிறு தீயில் வைத்து, திரட்டிய பூரிகளைப் போட்டுப் பொன்னிறமாகப் பொரித்தெடுக்கவும். 

p7h_1522474182.jpg

உங்கள் மொபைலில் இந்த QR code-ஐ ஸ்கேன் செய்தும் வீடியோவைக் காணலாம்.

 


p7i_1522474216.jpg

மங்களூர் பன்ஸ்

தேவையானவை:

மைதா மாவு - ஒரு கப்
பழுத்த வாழைப்பழம்  (பெரியது) - ஒன்று
தயிர் - 2 டேபிள்ஸ்பூன்
நெய் - ஒரு டேபிள்ஸ்பூன்
சர்க்கரை - கால் கப்
சமையல் சோடா - கால் டீஸ்பூன்
உப்பு - சிறிதளவு
எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை:

வாழைப்பழத்தின் தோலை நீக்கிவிட்டு ஃபோர்க்கின் பின்பகுதியால் நன்கு மசிக்கவும். அதனுடன் மைதா மாவு,  தயிர்,  சர்க்கரை,  உப்பு, நெய், சமையல் சோடா சேர்த்துப் பூரி மாவுப் பதத்துக்குப் பிசையவும் (தேவைப்பட்டால் சிறிது சிறிதாக தண்ணீர்விட்டுப் பிசையவும்).  மாவின் மேல் சிறிதளவு எண்ணெய் தடவி மூடி ஐந்து மணி நேரம் அப்படியே வைக்கவும். பிறகு மாவைச் சிறிய உருண்டைகளாக்கி பூரிகளாகத் தேய்க்கவும். வாணலியில் எண்ணெயைக் காயவைத்துத் திரட்டிய பூரிகளைப் போட்டு, அடுப்பை மிதமான தீயில் வைத்து, அதிகம் சிவக்காமல் பொரித்தெடுக்கவும்.  

p7j_1522474248.jpg

உங்கள் மொபைலில் இந்த QR code-ஐ ஸ்கேன் செய்தும் வீடியோவைக் காணலாம்.

 


p7k_1522474316.jpg

பேளே ஹோளிகே

தேவையானவை:

மேல் மாவு செய்ய:

மைதா மாவு - ஒரு கப்
உப்பு,  மஞ்சள்தூள்  -  தலா கால் டீஸ்பூன்
எண்ணெய் - கால் கப்
தண்ணீர் - அரை கப்
அரிசி மாவு - கால் கப்

பூரணம் செய்ய:

கடலைப்பருப்பு - ஒரு கப்
வெல்லம் - ஒரு கப்
ஏலக்காய்த்தூள், நெய் - தலா கால் டீஸ்பூன்
மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்
எண்ணெய் - ஒரு டீஸ்பூன்

செய்முறை: 

மைதா மாவுடன் அரிசி மாவு,  உப்பு, மஞ்சள்தூள், தேவையான அளவு தண்ணீர் சேர்த்து பரோட்டா மாவு பதத்துக்குப் பிசையவும். மேலே எண்ணெய்விட்டு இரண்டு மணி நேரம் ஊறவிடவும். இதுவே மேல் மாவு. கடலைப்பருப்புடன் மஞ்சள்தூள், எண்ணெய் சேர்த்து மலர வேகவிடவும். வாணலியில் கடலைப்பருப்புடன் வெல்லம், ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கெட்டியாகக் கிளறி இறக்கவும். ஆறியதும் தண்ணீர் சேர்க்காமல் மிக்ஸியில் அரைத்தெடுக்கவும். இதுவே பூரணம். இதைச் சிறிய உருண்டைகளாக உருட்டவும். மேல் மாவில் சிறிதளவு எடுத்துத் தட்டி நடுவே  பூரண உருண்டை வைத்து மூடவும். இதை அரிசி மாவில் புரட்டி எடுத்து போளிகளாகத் தேய்க்கவும். தோசைக்கல்லைச் சூடாக்கி போளிகளைப் போட்டு, சுற்றிலும் நெய்விட்டு இருபுறமும் வேகவைத்து எடுக்கவும். பேளே ஹோளிகே தயார். இந்தப் போளிகளின் மேலே சிறிதளவு நெய்விட்டுப் பரிமாறவும். 

p7l_1522474361.jpg

உங்கள் மொபைலில் இந்த QR code-ஐ ஸ்கேன் செய்தும் வீடியோவைக் காணலாம்.

 


p7m_1522474398.jpg

மைசூர் மசாலா தோசை

தேவையானவை:

தோசை மாவு - 2 கப்
உருளைக்கிழங்கு பால்யா - அரை கப்
மிளகாய் சட்னி - கால் கப்
எண்ணெய் -  தேவையான அளவு

தோசை மாவு அரைக்க:

பச்சரிசி - அரை கப்
புழுங்கல் அரிசி - அரை கப்
உளுத்தம்பருப்பு - கால் கப்
கடலைப்பருப்பு - 2 டேபிள்ஸ்பூன்
அவல் - கால் கப்
உப்பு - தேவையான அலவு

உருளைக்கிழங்கு பால்யா செய்ய:

உருளைக்கிழங்கு - 2 (வேகவைத்து, தோல் நீக்கி மசிக்கவும்)
வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கவும்) 
பச்சை மிளகாய் - 2 (பொடியாக நறுக்கவும்)
கடலைப்பருப்பு - ஒரு டேபிள்ஸ்பூன்
பூண்டு - 4 பல்
முந்திரி - 5
மஞ்சள்தூள் - ஒரு டீஸ்பூன்
கடுகு, உளுத்தம்பருப்பு - தலா கால் டீஸ்பூன்
கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு

மிளகாய் சட்னி செய்ய:

காய்ந்த மிளகாய் - 10
வறுத்த கடலைப்பருப்பு - கால் கப்
பூண்டு - 5 பல்
புளிக்கரைசல் -  ஒரு டேபிள்ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு

செய்முறை:

தோசை மாவு அரைக்க கொடுத்துள்ள பொருள்களை ஒன்றாகச் சேர்த்துக் கழுவி, 2 மணி நேரம் ஊறவைத்து நைஸாக அரைத்தெடுக்கவும். அதனுடன் உப்பு சேர்த்துக் கரைத்து 8 மணி நேரம் புளிக்கவிடவும். மிளகாய் சட்னி செய்யக் கொடுத்துள்ள பொருள்களை ஒன்றாக சேர்த்து சிறிதளவு தண்ணீர் தெளித்து மிக்ஸியில் அரைத்தெடுக்கவும்.

வாணலியில் எண்ணெய்விட்டுச் சூடாக்கி கடுகு, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை முந்திரி சேர்த்து தாளிக்கவும். அதனுடன் மஞ்சள்தூள், பூண்டு, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். பிறகு வெங்காயம் சேர்த்துப் பொன்னிறமாக வதக்கவும்.  அதனுடன் மசித்த உருளைக்கிழங்கு, உப்பு சேர்த்து நன்கு கிளறவும். மேலே கொத்தமல்லித்தழை தூவி இறக்கவும்.  

தோசைக்கல்லைக் காயவைத்து மாவை மெல்லிய தோசைகளாக ஊற்றவும். சற்று வெந்ததும் ஒரு டீஸ்பூன் மிளகாய் சட்னியை அதன் மேல் தடவவும். 

நடுவில் உருளைக்கிழங்கு மசாலாவை வைக்கவும். சுற்றிலும் தேவையான அளவு எண்ணெய்விட்டுப் பொன்னிறமாக வெந்ததும் இரண்டாக மடித்து எடுக்கவும். மைசூர் மசாலா தோசை தயார். 

p7n_1522474451.jpg

உங்கள் மொபைலில் இந்த QR code-ஐ ஸ்கேன் செய்தும் வீடியோவைக் காணலாம்.

 

 

 


p7o_1522474490.jpg

மதுர் வடை

தேவையானவை:

ரவை, மைதா மாவு - அரை கப்
அரிசி மாவு - ஒரு கப்
மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன்
வெங்காயம் - 2 (பொடியாக  நறுக்கவும்)
பச்சை மிளகாய் - 2 (பொடியாக  நறுக்கவும்)
நறுக்கிய கறிவேப்பிலை,  கொத்தமல்லித்தழை - சிறிதளவு
பெருங்காயத்தூள் - 2 சிட்டிகை
சூடான எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்
எண்ணெய் – பொரிக்கத் தேவையான அளவு
உப்பு - ஒன்றரை டீஸ்பூன்

செய்முறை:

ரவையுடன் மைதா மாவு, அரிசி மாவு, உப்பு, பெருங்காயத்தூள், மிளகாய்த்தூள்,  பச்சை மிளகாய், கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை, வெங்காயம், சூடான எண்ணெய் சேர்த்துக் கலக்கவும். அதனுடன் தேவையான அளவு தண்ணீர்விட்டு  சப்பாத்தி மாவு பதத்துக்குப் பிசைந்து அரை மணி நேரம் மூடி வைக்கவும். வாணலியில் எண்ணெயைக் காயவைத்து, மாவைப் பெரிய எலுமிச்சை அளவு உருண்டைகளாக்கி எண்ணெய் தடவிய பிளாஸ்டிக் ஷீட்டில் தட்டிப் போடவும். கடாயில் எண்ணெயைக் காயவைத்து, அடுப்பை மிதமான தீயில் வைத்து, வடைகளைப் போட்டுச் சிவக்க பொரித்தெடுக்கவும். தேங்காய் சட்னி அல்லது கொத்தமல்லி சட்னியுடன் பரிமாறவும். 

p7p_1522474517.jpg

உங்கள் மொபைலில் இந்த QR code-ஐ ஸ்கேன் செய்தும் வீடியோவைக் காணலாம்.

 

https://www.vikatan.com

Edited by நவீனன்
Link to comment
Share on other sites

சூப்பரான கூனி இறால் வறுவல் செய்வது எப்படி

 

 
 

கூனி இறால் வறுவல் சாம்பார் சாதம், தயிர் சாதத்திற்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும். இன்று கூனி இறால் வறுவல் செய்முறையை பார்க்கலாம்.

 
 
 
 
சூப்பரான கூனி இறால் வறுவல் செய்வது எப்படி
 
தேவையான பொருட்கள் :

கூனி இறால் (Baby Prawns / Kooni) - 1 கப்
தேங்காய் எண்ணெய் - 3 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிதளவு
பூண்டு - 6 பல்
ப.மிளகாய் - 2
வெங்காயம் - 2
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - சிறிதளவு
இஞ்சி, பூண்டு விழுது - 1 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு

201804071115224220_1_Baby-Prawns-Roast._L_styvpf.jpg

செய்முறை :

பூண்டு, வெங்காயம், ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

கடாயை  அடுப்பில் வைத்து தேங்காய் எண்ணெய் ஊற்றி சூடானதும் பொடியாக நறுக்கிய பூண்டு, ப.மிளகாய், கறிவேப்பிலை போட்டு வதக்கவும்.

அடுத்து அதில் வெங்காயம், மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும்.

அடுத்து அதில் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து 3 நிமிடம் வதக்கவும்.

பிறகு மிளகாய் தூள் சேர்த்து வதக்கவும்.

அடுப்பை மிதமான தீயில் வைத்து கூனி இறாலை சேர்த்து 8 முதல் 10 நிமிடங்கள் வதக்கவும். கூனி இறால் விரைவில் வெந்து விடும்.

சூப்பரான கூனி இறால் ரெடி.

https://www.maalaimalar.com

Link to comment
Share on other sites

குழந்தைகளுக்கு விருப்பமான முட்டை சப்பாத்தி ரோல்அ-அ+

விடுமுறை நாட்களில் குழந்தைகளை வெளியில் அழைத்து செல்லும் போது முட்டை சப்பாத்தி ரோல் செய்து எடுத்து சென்றால் விரும்பி சாப்பிடுவார்கள்.

 
குழந்தைகளுக்கு விருப்பமான முட்டை சப்பாத்தி ரோல்
 
தேவையான பொருட்கள் :

பெரிய வெங்காயம் - 2
முட்டை - 3
மஞ்சள் தூள் - அரை ஸ்பூன்
பச்சை மிளகாய் - 1
மிளகு தூள் - 2 ஸ்பூன்
சப்பாத்தி - 4
லெமன் ஜூஸ் - தேவையான அளவு
எண்ணெய் - 4 ஸ்பூன்
கடுகு, உளுந்து, கறிவேப்பிலை - கொஞ்சம்
உப்பு - தேவையான அளவு
பொடியாக நறுக்கிய வெங்காயம் - சிறிதளவு

201804201522119806_1_egg-chapati-roll._L_styvpf.jpg

செய்முறை :

வெங்காயம், ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

முதலில் கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, உளுந்து, கறிவேப்பிலை போட்டு தாளித்த பின்னர் வெங்காயம், பச்சைமிளகாய் சேர்த்து வதக்கவேண்டும்.

வெங்காயம் நன்றாக வதங்கியதும் முட்டை உடைத்து ஊற்றி, மஞ்சள் தூள், உப்பு சேர்த்து முட்டை வெந்து உதிரி உதிரியாக வரும் வரை வதக்கவும்.

முட்டை வெந்தவுடன் கடைசியாக மிளகுதூள் சேர்த்து கிளறி அடுப்பில் இருந்து இறக்கி வைக்கவும்.

ஒரு தட்டில் மேல் ஒரு சப்பாத்தியை வைத்து நடுவில் சிறிது முட்டை பொரியலை பரப்பி, கொஞ்சம் வெங்காயம், அரை மூடி லெமன் ஜூஸ் தெளித்து ரோல் செய்து பரிமாறவும். இவ்வாறு அனைத்து சப்பாத்தியிலும் செய்யவும்.

சூப்பரான முட்டை சப்பாத்தி ரோல் ரெடி.

https://www.maalaimalar.com

Link to comment
Share on other sites

சூப்பரான ஸ்பைசி மட்டன் சாப்ஸ்

 
அ-அ+

தோசை, சப்பாத்தி, நாண், சாம்பார் சாதத்திற்கு தொட்டுக்கொள்ள இந்த ஸ்பைசி மட்டன் சாப்ஸ் சூப்பராக இருக்கும். இன்று இந்த மட்டன் சாப்ஸை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

 
 
 
 
சூப்பரான ஸ்பைசி மட்டன் சாப்ஸ்
 
தேவையான பொருட்கள் :

மட்டன் - அரை கிலோ
கறிவேப்பிலை - சிறிது
பச்சை மிளகாய் - இரண்டு
கரம் மசாலா தூள் - கால் தேக்கரண்டி
தனியா தூள் - ஒரு தேக்கரண்டி
மிளகு தூள் - ஒரு தேக்கரண்டி
இஞ்சி பூண்டு - ஒரு தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - இரண்டு தேக்கரண்டி

201804251506354092_1_spicy-mutton-chops._L_styvpf.jpg

செய்முறை :

மட்டனை நன்றாக கழுவி சுத்தம் செய்து துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.

கழுவிய மட்டனை குக்கரில் போட்டு அதில் உப்பு, தனியாதூள், இஞ்சி பூண்டு விழுது, மிளகு தூள், பச்சை மிளகாய், 1 கப் தண்ணீர் சேர்த்து குக்கரை மூடி வேக வைக்கவும்.

குக்கரை விசில் போனவுடன் குக்கர் மூடியை திறந்து வைக்கவும்.

ஒரு தவாவில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கறிவேப்பிலை போட்டு தாளித்த பின்னர் அதில் கரம் மசாலா தூள் சேர்த்து அதில் வேக வைத்த மட்டனை தண்ணீருடன் சேர்த்து தண்ணீர் வற்றி நன்கு சிவக்க வறுத்தெடுத்து பரிமாற வேண்டும்.

சுவையான ஸ்பைசி மட்டன் சாப்ஸ் ரெடி

https://www.maalaimalar.com/Health/Kitchenkilladikal/2018/04/25150635/1158970/spicy-mutton-chops.vpf

Link to comment
Share on other sites

பீட்சா ரெசிப்பி

 

 

ளைய தலைமுறையின் நவீன அடையாளம் பீட்சா. இதன் மேல் அடுக்கில் வைக்கப்படும் டாப்பிங்ஸைப் பொறுத்து இதன் ஊட்டச்சத்துகளும் கலோரிகளும் மாறுபடும். காளான், சீஸ், கீரை, சாஸேஜ், அன்னாசி... இப்படி எதுவும் பீட்சாவுக்குப் பெருமை சேர்க்கும். ஒரு ஸ்லைஸ் பீட்சாவின் எடை 100 கிராம் என்றால், அதில் 250 கலோரிகள் இருக்கும். பீட்சாவையும் சுவைக்க வேண்டும், கலோரியும் அதிகமாகக் கூடாது என்றால் என்ன செய்வது?  

p97a_1522392326.jpg

வீட்டிலேயே பீட்சா செய்யும்போது சீஸ் அளவைப் பாதியாகக் குறைக்கலாம். ரெஸ்டாரென்ட்டுகளிலும் `ஹாஃப் சீஸ்’ என்று கேட்டு வாங்கலாம். 

 

இதோ... இந்தியத் தன்மையுடன் இன்டர்நேஷனல் சுவை பீட்சா வகைகளை வீட்டிலேயே செய்து ருசிக்கும் விதமாகப் புதுப்புது வொரைட்டிகளில் அழகிய படங்களோடு நமக்களிக்கிறார் ஹைதராபாத்தைச் சேர்ந்த சமையல் கலைஞர் ப்ரியா சதீஷ். 

ஹரியாலி வீட் பீட்சா

தேவையானவை - பீட்சா பேஸ் செய்ய:

கோதுமை மாவு – ஒன்றரை கப்
ஈஸ்ட், சர்க்கரை, உப்பு – தலா ஒரு டீஸ்பூன்
வெதுவெதுப்பான நீர் – அரை கப்
ஆய்ந்த கீரை – ஒரு கப்
பச்சை மிளகாய் – 2
எண்ணெய் – ஒரு டேபிள்ஸ்பூன்

டாப்பிங் செய்ய:

பேசில் இலைகள் – ஒரு கப்
பொடியாக நறுக்கிய பார்ஸ்லே இலைகள் – ஒரு கப்
பைன் நட்ஸ் – கால் கப்
மொசரல்லா சீஸ் – கால் கப்
ஆலிவ் எண்ணெய் – கால் கப்பிலிருந்து அரை கப் வரை
ராக்கெட் இலைகள் - சிறிதளவு
ஆலிவ் - 10 (நறுக்கவும்)
மொசரல்லா சீஸ் துருவல் – ஒன்றரை கப்   

p97c_1522392382.jpg

அலங்கரிக்க:

பேசில் இலைகள், ராக்கெட் இலைகள், பார்ஸ்லே இலைகள், பீட்சா சீஸனிங் – சிறிதளவு

செய்முறை:

கீரையுடன் பச்சை மிளகாய் சேர்த்து விழுதாக அரைத்து எடுக்கவும். வெதுவெதுப்பான நீருடன் ஈஸ்ட், சர்க்கரை சேர்த்துக் கலந்து 10 நிமிடங்கள் ஊறவைக்கவும். கோதுமை மாவுடன் உப்பு, அரைத்த கீரை விழுது சேர்த்துக் கலக்கவும். அதனுடன் ஈஸ்ட் கலவை, எண்ணெய்விட்டு மிருதுவாகப் பிசையவும். இதை எண்ணெய் தடவிய பெரிய பவுலில் போட்டு, மூடி இரண்டு மடங்காகப் பொங்கி வரும் வரை அப்படியே வைக்கவும். பேசில் இலைகளுடன் பார்ஸ்லே இலைகள், பைன் நட்ஸ், கால் கப் மொசரல்லா சீஸ், ஆலிவ் எண்ணெய் சேர்த்து விழுதாக அரைத்து எடுக்கவும். இதுதான் பெஸ்டோ. மாவை நன்கு அழுத்திப் பிசைந்து இரண்டு பாகங்களாகப் பிரிக்கவும். ஒரு பாகத்தை 6 இன்ச் அளவு விட்டத்துக்குச் சப்பாத்தி போல தேய்க்கவும். அதன் மேலே போர்க் ஸ்பூனால் ஆங்காங்கே குத்திவிட்டு பெஸ்டோவைப் பரப்பவும். அதன் மீது சீஸ் துருவலைத் தாராளமாக தூவி, நறுக்கிய ஆலிவ், ராக்கெட் இலைகள் தூவவும். அதன்மீது சிறிதளவு சீஸ் துருவலைத் தூவி  180 டிகிரி ப்ரீஹீட் செய்த அவனுள் (oven) வைத்து 10 – 15 நிமிடங்கள் வரை பேக் செய்து எடுக்கவும். வெளியே எடுத்த பிறகு அலங்கரிக்கக் கொடுத்துள்ள பொருள்களைத் தூவி, சூடாகப் பரிமாறவும். இதே போல மீதமுள்ள மாவிலும் தயாரிக்கவும். 


p97d_1522392416.jpg

பீட்ரூட் ஹம்மஸ் நோ ஈஸ்ட் பான் பீட்சா

தேவையானவை - பீட்சா பேஸ் செய்ய:

மைதா மாவு - 2 கப்
பேக்கிங் பவுடர் - 2 டீஸ்பூன்
பீட்சா சீஸனிங் – ஒரு டேபிள்ஸ்பூன்
பால் – முக்கால் கப்
எண்ணெய் – கால் கப்
உப்பு – ஒரு டீஸ்பூன்  

ஹம்மஸ் செய்ய:

கொண்டைக்கடலை – முக்கால் கப்
பீட்ரூட் – ஒன்று (தோல் சீவி, பொடியாக நறுக்கவும்)
எள் - 2 டேபிள்ஸ்பூன்
ஆலிவ் எண்ணெய் - 4/5  டேபிள்ஸ்பூன்
எலுமிச்சைச் சாறு – ஒரு டீஸ்பூன்
உப்பு – அரை டீஸ்பூன்  

டாப்பிங் செய்ய:

பேசில் இலைகள் - சிறிதளவு
ஆலிவ் - 10 (நறுக்கவும்)
மொசரல்லா சீஸ் துருவல் - 2 கப்
சில்லி ஃப்ளேக்ஸ், பீட்சா சீஸனிங் - சிறிதளவு

செய்முறை:

கொண்டைக்கடலையை இரவு முழுவதும் ஊறவைக்கவும். மறுநாள் குக்கரில்  கொண்டைக்கடலையுடன் பீட்ரூட் சேர்த்து வேகவைத்து, 6 - 7 விசில்விட்டு இறக்கவும். ஆறியதும் திறந்து நீரை வடியவிட்டு, சிறிதளவு கடலையை அலங்கரிக்க தனியாக எடுத்துவைக்கவும்.  வெறும் வாணலியில் எள்ளைச் சேர்த்து வறுத்து எடுத்துச் சிறிதளவு தண்ணீர்விட்டு விழுதாக அரைக்கவும். அதனுடன் வேகவைத்த கொண்டைக்கடலை கலவை, எலுமிச்சைச் சாறு, உப்பு சேர்த்து, நடுநடுவே எண்ணெய்விட்டு விழுதாக அரைத்து எடுக்கவும் (தண்ணீருக்குப் பதிலாக, கடலையை வேகவைத்த தண்ணீரை ஊற்றியும் அரைக்கலாம்). மைதா மாவுடன் பேக்கிங் பவுடர், உப்பு, பீட்சா சீஸனிங், பால், எண்ணெய் சேர்த்து மிருதுவாகப் பிசைந்து மூடிவைக்கவும். அரை மணி நேரம் கழித்து மாவை எடுத்து மீண்டும் பிசையவும். பிறகு, மாவை இரண்டு அல்லது மூன்று பாகங்களாகப் பிரிக்கவும். ஒரு பாகம் மாவை எடுத்து, சப்பாத்தி போல திரட்டவும். பானை (Pan) சூடாக்கி, திரட்டிய சப்பாத்தியைப் போட்டு, அடுப்பை சிறு தீயில் வைத்து, லேசான பழுப்பு நிறமாக மாறும் வரை வேகவிட்டு எடுக்கவும்.

இதன்மீது கடலைக் கலவையைத் தடவி, மேலே சிறிதளவு சீஸ் துருவலைத் தூவவும். அத்துடன் எடுத்த வைத்த கடலை, ஆலிவ், பேசில் இலைகளைப் பரப்பவும். இறுதியாக மீதமுள்ள சீஸ் துருவலைத் தாராளமாக தூவி அதே பேனில் வைத்து மூடி, மூன்று நிமிடங்கள் வரை வேகவைத்து எடுக்கவும்.

மேலே சில்லி ஃப்ளேக்ஸ், பீட்சா சீஸனிங்கால் அலங்கரித்துச் சூடாகப் பரிமாறவும்.

இதே போல மீதமுள்ள மாவிலும் தயாரிக்கவும்.


p97e_1522392455.jpg

சாக்லேட் - ரசகுல்லா பீட்சா

தேவையானவை:

மைதா மாவு – ஒன்றரை கப்
சர்க்கரை - 2 டீஸ்பூன்
ஈஸ்ட், உப்பு – தலா ஒரு டீஸ்பூன்
வெதுவெதுப்பான நீர் – அரை கப் முதல் முக்கால் கப் வரை
எண்ணெய் – ஒரு டேபிள்ஸ்பூன்

சாக்லேட் கலவை செய்ய:

ஃப்ரெஷ் க்ரீம் – ஒரு கப்  
சாக்லேட் துருவல் – ஒரு கப்

டாப்பிங் செய்ய:

ரசகுல்லா -  10 (இரண்டாக நறுக்கவும்)
உலர்பழக் கலவை – அரை கப்
கிவிப்பழத் துண்டுகள் - சிறிதளவு

செய்முறை:

வாணலியில் க்ரீம் சேர்த்துச் சூடு செய்து இறக்கவும் (அதிகமாகச் சுட வைக்க வேண்டாம்). அதனுடன் சாக்லேட் துருவல் சேர்த்துக் கிளறி உருக்கவும். இதை ஆறவிட்டு ஃப்ரிட்ஜில் இரவு முழுவதும் வைத்து எடுக்கவும். வெதுவெதுப்பான நீரில் சர்க்கரை, ஈஸ்ட் சேர்த்துக் கரைத்து, பத்து நிமிடங்கள் அப்படியே வைக்கவும். மைதா மாவுடன் உப்பு, ஈஸ்ட் கலவை சேர்த்துக் கலக்கவும்.

அதனுடன் எண்ணெய் சேர்த்து மாவாகப் பிசைந்து மூடி வைக்கவும். மாவு இரு மடங்காக ஆன பிறகு மீண்டும் பிசைந்து இரண்டு பாகங்களாகப் பிரிக்கவும்.

பிறகு, ஒரு பாகம் மாவை எடுத்துக் கனமான சப்பாத்தியாகத் திரட்டவும். மேலே ஃபோர்க் ஸ்பூனால் ஆங்காங்கே குத்திவிட்டு ப்ரீஹீட் செய்த அவனுள் (oven) வைத்து 10 முதல் 20 நிமிடங்கள் வரை `பேக்’ செய்து எடுக்கவும். அதன்மீது சாக்லேட் கலவையைப் பரப்பவும்.

இறுதியாக டாப்பிங் செய்யக் கொடுத்துள்ள பொருள்களைத் தூவி அலங்கரித்து முக்கோண வடிவில் வெட்டிப் பரிமாறவும்.

இதே போல மீதமுள்ள இன்னொரு ஒரு பாகம் மாவிலும் தயாரிக்கவும்.


p97f_1522392484.jpg

சீஸ் - எக் குழிப்பணியார பீட்சா

தேவையானவை:

பீட்சா பேஸ் செய்ய:

மைதா மாவு - 2 கப்
முட்டை - ஒன்று
வெதுவெதுப்பான பால் – கால் கப்
சர்க்கரை, ஈஸ்ட், வெண்ணெய் – தலா ஒரு டீஸ்பூன்
உப்பு – ஒரு டீஸ்பூன்  

டாப்பிங் செய்ய:

வெண்ணெய், மைதா மாவு – தலா 2 டேபிள்ஸ்பூன்
காய்ச்சி ஆறவைத்த பால் – அரை கப்
இத்தாலியன் சீஸனிங் – ஒன்றரை டேபிள்ஸ்பூன்
ஃப்ரெஷ் க்ரீம் - 2 டேபிள்ஸ்பூன்
மொசரல்லா சீஸ் – கால் கப்
பேசில் இலைகள் - சிறிதளவு
பொடியாக நறுக்கிய
கலர் குடமிளகாய் – ஒரு கப்
உப்பு – தேவையான அளவு

முட்டைப் பணியாரம் செய்ய:

முட்டை - 3
பொடியாக நறுக்கிய பார்ஸ்லே இலைகள் - சிறிதளவு
சீஸ் துருவல் - 2 டேபிள்ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு

செய்முறை:

வெதுவெதுப்பான பாலில் ஈஸ்ட், சர்க்கரை சேர்த்துக் கலந்து 10 நிமிடங்கள் அப்படியே வைக்கவும். மைதா மாவுடன் உடைத்த முட்டை, ஈஸ்ட் கலவை, உப்பு சேர்த்துக் கலக்கவும். அதனுடன் வெண்ணெய் சேர்த்துப் பிசைந்து, எண்ணெய் தடவிய பெரிய பவுலில் போட்டு ஒரு மணி நேரம் மூடி வைக்கவும். மாவு இரண்டு மடங்காகப் பொங்கிய பிறகு மீண்டும் நன்கு பிசைந்து இரண்டு சம பாகங்களாகப் பிரிக்கவும். உடைத்த முட்டையுடன் பார்ஸ்லே இலைகள், உப்பு, சீஸ் சேர்த்துக் கலக்கவும். குழிப்பணியாரக்கல்லைக் காயவைத்து முட்டைக் கலவையைக் குழிகளில் ஊற்றி வேகவிட்டு எடுக்கவும்.

வாணலியில் வெண்ணெயை லேசாக சூடாக்கி மைதா மாவு சேர்த்து வறுக்கவும். (மைதா மாவு நிறம் மாறக் கூடாது), அதனுடன் பாலை கொஞ்சம் கொஞ்சமாகச் சேர்த்து, கட்டி தட்டாதவாறு கைவிடாமல் கிளறவும். பிறகு ஃப்ரெஷ் க்ரீம், பேசில் இலைகள், உப்பு, இத்தாலியன் சீஸனிங், மொசரல்லா சீஸ் துருவல் சேர்த்துக் கிளறி இறக்கவும்.

இதுவே வொயிட் சாஸ். ஒரு பங்கு மாவைக் கனமான சப்பாத்தியாகத் தேய்த்து அதன் மீது வொயிட் சாஸ் தடவவும். பிறகு, அதன் மேலே கலர் குடமிளகாய், பேசில் இலைகள், குழிப்பணியாரம், சீஸ் துருவலைப் பரப்பி 180 டிகிரி ப்ரீஹீட் செய்த அவனுள் (oven) வைத்து 15 நிமிடங்கள் `பேக்’ செய்து எடுத்து, சூடாகப் பரிமாறவும்.

இதேபோல மீதமுள்ள இன்னொரு பாகம் மாவிலும் தயாரிக்கவும்.


p97g_1522392516.jpg

மசாலா வடகறி வீட் பீட்சா

பீட்சா பேஸ் செய்ய:

கோதுமை மாவு - 2 கப்
ஈஸ்ட், உப்பு – தலா ஒரு டீஸ்பூன்
வெதுவெதுப்பான நீர் – ஒரு கப்
எண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன்
சர்க்கரை - 2 டீஸ்பூன்

மசாலா வடகறி செய்ய:

வெங்காயம், தக்காளி – தலா 2 (பொடியாக நறுக்கவும்)
இஞ்சி - பூண்டு விழுது – ஒன்றரை டீஸ்பூன்
பச்சை மிளகாய் - 3 (பொடியாக நறுக்கவும்)
மசால் வடை - 7 (உதிர்க்கவும்)
பாவ் பாஜி மசாலாத்தூள் – ஒரு டீஸ்பூன்
பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை - சிறிதளவு
மொசரல்லா சீஸ் துருவல் – சிறிதளவு (அலங்கரிக்க)
எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு

செய்முறை:

வெதுவெதுப்பான நீருடன் சர்க்கரை, ஈஸ்ட் சேர்த்துக் கலந்து பத்து நிமிடங்கள் அப்படியே வைக்கவும். பிறகு கோதுமை மாவுடன் உப்பு, ஈஸ்ட் கலவை சேர்த்துக் கலக்கவும். அதனுடன் எண்ணெய்விட்டு மாவாகப் பிசைந்து, எண்ணெய் தடவிய பாத்திரத்தில் ஒரு மணி நேரம் அப்படியே வைக்கவும். மாவு இரண்டு மடங்காகப் பொங்கிய பிறகு மீண்டும் பிசைந்து இரண்டு சம பாகங்களாகப் பிரிக்கவும். ஒரு பங்கு மாவை ஆறு இன்ச் விட்டம், அரை முதல் ஒரு இன்ச் கனம் கொண்ட சப்பாத்தியாகத் தேய்த்து 180 டிகிரி ப்ரீஹீட் செய்த அவனுள் (oven) வைத்து 10 நிமிடங்கள் `பேக்’ செய்து எடுக்கவும். இதுவே பீட்சா பேஸ்.

வாணலியில் எண்ணெய்விட்டு வெங்காயம், இஞ்சி - பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். பிறகு பச்சை மிளகாய், தக்காளி சேர்த்து மேலும் வதக்கவும். அதனுடன் பாவ் பாஜி மசாலாத்தூள், உதிர்த்த மசால் வடை, தேவையான உப்பு தண்ணீர் சேர்த்து மூடி போட்டு ஐந்து நிமிடங்கள் வேகவிடவும். பிறகு, கொத்தமல்லித்தழை தூவி இறக்கவும். வடகறி தயார். பீட்சா பேஸ் மீது வடகறியைப் பரப்பவும். அதன் மேலே சீஸ் துருவல் தூவி, மறுபடியும் 10 நிமிடங்கள் `பேக்’ செய்து எடுத்துச் சூடாகப் பரிமாறவும்.

இதே போல மீதமுள்ள இன்னொரு பங்கு மாவிலும் தயாரிக்கவும்.


p97h_1522392546.jpg

மில்லட் பான்கேக் மஷ்ரூம் பீட்சா

தேவையானவை:

டார்ட் பேஸ் செய்ய:

சிறுதானிய கலவை மாவு – ஒரு கப்
காய்ச்சி ஆறவைத்த பால் – ஒரு கப்
முட்டை - ஒன்று
பேக்கிங் பவுடர் - 2 டேபிள்ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் - 2  டேபிள்ஸ்பூன்
ஆனியன் பவுடர் – ஒரு டீஸ்பூன்

பீட்சா செய்ய:

பீட்சா சாஸ் - 4 டேபிள்ஸ்பூன்
நறுக்கிய மஷ்ரூம் – ஒரு கப்
சோயா சாஸ் – ஒரு டீஸ்பூன்
ஆலிவ் – 6 (வட்டமாக நறுக்கவும்)
வெங்காயம் – 2 (பொடியாக நறுக்கவும்)
தக்காளி – 2 (பொடியாக நறுக்கவும்)
துருவிய பீட்சா சீஸ் – ஒரு கப்
பேசில் இலைகள் - சிறிதளவு

செய்முறை:

சிறுதானிய மாவுடன் ஆனியன் பவுடர், உப்பு, பேக்கிங் பவுடர் சேர்த்துக் கலக்கவும். உடைத்த முட்டையுடன் பால், எண்ணெய் சேர்த்து நன்கு அடித்து, மாவுக் கலவையுடன் சேர்த்துக் கலக்கவும். இதை ஐந்து நிமிடங்கள் ஊறவிடவும். வாணலியில் சிறிதளவு எண்ணெய்விட்டு மஷ்ரூம் துண்டுகள், சிறிதளவு உப்பு சேர்த்து வதக்கி தனியாக எடுத்து வைக்கவும். தோசைக்கல்லைக் காயவைத்துக் கரைத்த சிறுதானிய மாவை எடுத்துச் சிறிய கனமான தோசையாக ஊற்றி, சுற்றிலும் எண்ணெய்விட்டு இருபுறமும் வேகவைத்து எடுக்கவும். இதுதான் பான் கேக். மாவு முழுவதையும் இதேபோல் செய்துகொள்ளவும். ஒரு பான் கேக் மீது சிறிதளவு பீட்சா சாஸ், சோயா சாஸ் ஆகியவற்றைத் தடவவும். அதன்மீது வதக்கிய மஷ்ரூம், வெங்காயம், தக்காளி, ஆலிவ், பேசில் இலைகள் ஆகியவற்றைப் பரப்பவும். இதன் மேலே சீஸ் தூவி அலங்கரிக்கவும். தவாவைச் சூடாக்கி, அடுப்பை சிறு தீயில் வைத்து, பான் கேக்கை வைத்து சீஸ் உருகி வந்த பிறகு எடுத்துச் சூடாகப் பரிமாறவும்.  மற்ற பான் கேக்குகளையும் இதேபோல் செய்துகொள்ளவும்.


p97i_1522392570.jpg

எக் - ராகி டார்ட் பீட்சா

தேவையானவை:

டார்க் பேஸ் செய்ய:

ராகி மாவு (கேழ்வரகு மாவு) – அரை கப்
கோதுமை மாவு – ஒரு கப்
ஈஸ்ட், சர்க்கரை, உப்பு, எண்ணெய் – தலா ஒரு டீஸ்பூன்
வெதுவெதுப்பான நீர் – அரை கப் முதல் முக்கால் கப் வரை
டார்ட் டின் - தேவைக்கேற்ப

பீட்சா செய்ய:

பீட்சா சீஸனிங் - 3 டீஸ்பூன்
வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கவும்)
தக்காளி - 2 (பொடியாக நறுக்கவும்)
பொடியாக நறுக்கிய குடமிளகாய் – ஒரு கப்
ஆலிவ் – 7 (வட்டமாக நறுக்கவும்)
முட்டை – 4 அல்லது  5
சீஸ் துருவல் – ஒரு கப்
பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை - சிறிதளவு
பீட்சா சாஸ் - சிறிதளவு

செய்முறை:

வெதுவெதுப்பான நீரில் ஈஸ்ட், சர்க்கரை சேர்த்துக் கரைத்து 10 நிமிடங்கள் தனியாக வைக்கவும். ராகி மாவுடன் கோதுமை மாவு, உப்பு சேர்த்துக் கலக்கவும். அதனுடன் ஈஸ்ட் கலவை, எண்ணெய் சேர்த்துக் கெட்டியாகப் பிசையவும். இதை எண்ணெய் தடவிய பெரிய பவுலில் வைத்து மூடி போட்டு ஒரு மணி நேரம் அல்லது மாவு இரண்டு மடங்காக ஆகும் வரை அப்படியே வைக்கவும். பிறகு, மாவை மீண்டும் பிசைந்து சிறிய உருண்டைகளாக்கி வட்டமாகத் தேய்த்து டார்ட் டின்னின் அளவுக்கு ஏற்ப வெட்டிக்கொள்ளவும். இதை டார்ட் டின்னில் வைத்து ஆங்காங்கே போர்க் ஸ்பூனால் குத்திவிடவும். 180 டிகிரி ப்ரீஹீட் செய்த அவனில் (oven) இதை வைத்து 10 நிமிடங்கள் `பேக்’ செய்து எடுக்கவும். மீதமுள்ள மாவிலும் இதே போல் செய்துகொள்ளவும். இவைதான் டார்ட் பேஸ்.

டார்ட் டின்னில் உள்ள ஒரு டார்ட் பேஸ் மீது சிறிதளவு பீட்சா சாஸ் தடவவும். அதன் மீது சீஸ் துருவல், வெங்காயம், தக்காளி, குடமிளகாய், ஆலிவ், பீட்சா சீஸனிங் ஆகியவற்றைப் பரப்பவும். மேலே சிறிதளவு சீஸ் தூவி மைக்ரோவேவ் அவனுள் வைத்து ஐந்து நிமிடங்கள் வரை 180 டிகிரி டெம்பரேச்சரில் பேக் செய்து எடுக்கவும். அதன்மீது முட்டையை உடைத்து ஊற்றி மேலே சிறிதளவு கொத்தமல்லித்தழையைத் தூவவும். இதை மீண்டும் ஐந்து நிமிடங்கள் அல்லது முட்டை செட்டாகும் வரை  பேக் செய்து, டார்ட் டின்னைவிட்டு எடுத்துச் சூடாகப் பரிமாறவும். மற்ற டார்ட் பேஸ்களையும் இதே போல் செய்துகொள்ளவும்.


p97j_1522392599.jpg

அக்கி ரொட்டி பீட்சா

தேவையானவை:

அக்கி ரொட்டி செய்ய:

அரிசி மாவு – ஒரு கப்
பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் – 2 டீஸ்பூன்
பொடியாக நறுக்கிய வெங்காயம் - 4 டீஸ்பூன்
கேரட் துருவல் - 4 டேபிள்ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
சீஸ் துருவல் - 2 டேபிள்ஸ்பூன்
எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்
தண்ணீர் – தேவையான அளவு

பீட்சா செய்ய:

பீட்சா சாஸ் - 3 டேபிள்ஸ்பூன்
உதிர்த்த சோள முத்துகள் – அரை கப்
செர்ரி – 10 (இரண்டாக நறுக்கவும்)
நறுக்கிய குடமிளகாய் (பச்சை, மஞ்சள்) கலவை – அரை கப்
ஆலிவ் – 10 (வட்டமாக நறுக்கவும்)
துருவிய பீட்சா சீஸ் – அரை கப்
பேசில் இலைகள் - சிறிதளவு
பீட்சா சீஸனிங் - சிறிதளவு

செய்முறை:

அரிசி மாவுடன் பச்சை மிளகாய், வெங்காயம், கேரட், சீஸ், உப்பு, எண்ணெய் சேர்த்துக் கலக்கவும். அதனுடன் சிறிது சிறிதாக தண்ணீர் தெளித்துக் கெட்டியாகப் பிசையவும்.  பிசைந்த மாவை இரண்டு சம பாகங்களாகப் பிரித்து உருண்டைகளாக உருட்டவும். தோசைக்கல்லைக் காயவைத்து, எண்ணெய் தடவி, ஓர் உருண்டையை வைத்து வட்டமாகக் தடிமனான ரொட்டி போல தட்டவும். பிறகு, அடுப்பை சிறு தீயில் வைத்துச் சுற்றிலும் எண்ணெய்விட்டு இருபுறமும் வேகவைத்து எடுக்கவும். இதேபோல மற்றோர் உருண்டையையும் தட்டி வேகவிட்டு எடுக்கவும்.

வேகவைத்த ரொட்டியின் மீது சிறிதளவு பீட்சா சாஸ் தடவவும். அதன்மீது சோள முத்துகள், செர்ரி, ஆலிவ், குடமிளகாய் ஆகியவற்றை அடுக்கவும். மேலே சீஸ் துருவல், பேசில் இலைகள் தூவி அலங்கரிக்கவும். தோசைக்கல்லைக் காயவிட்டு ரொட்டி பீட்சாவை வைத்து மூடி, அடுப்பை சிறு தீயில் வைத்து, சீஸ் உருகும் வரை வேகவிட்டு எடுக்கவும். மேலே சிறிதளவு பீட்சா சீஸனிங் தூவி, சூடாகப் பரிமாறவும். மற்றொரு ரொட்டியையும் இதேபோல் செய்துகொள்ளவும்.


p97k_1522392623.jpg

டோஃபு - மஷ்ரூம் பன் பீட்சா

தேவையானவை:

ஸ்வீட் பன் (அ) பர்கர் பன் - 4 
வெங்காயம், தக்காளி – தலா 2 (பொடியாக நறுக்கவும்)
பச்சை மிளகாய் – 2 (பொடியாக நறுக்கவும்)
பொடியாக நறுக்கிய கலர் குடமிளகாய் – அரை கப்
பொடியாக நறுக்கிய மஷ்ரூம் – அரை கப்
துருவிய டோஃபு – அரை கப்
பீட்சா சீஸனிங் – ஒன்றரை டேபிள்ஸ்பூன்
சில்லி ஃப்ளேக்ஸ் - சிறிதளவு
எண்ணெய் – 2 டேபிள்ஸ்பூன்
வெண்ணெய் - 6-8 டேபிள்ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
சீஸ் துருவல் - தேவையான அளவு

செய்முறை:

தோசைக்கல்லைக் காயவைத்துச் சிறிதளவு வெண்ணெய் தடவவும். அதன்மீது பன்னை வைத்து அடுப்பைச் சிறு தீயில் வைக்கவும். `மேஷர்’ கொண்டு பன்களின் மேற்பகுதியை அழுத்தி, பன்னை பீட்சா பேஸ் போல ஆக்கவும். மற்ற பன்களையும் அதேபோல செய்யவும். வாணலியில் எண்ணெய்விட்டு வெங்காயத்தைச் சேர்த்து நன்கு வதக்கி தக்காளி, பச்சை மிளகாய் சேர்த்து மேலும் வதக்கவும். அதனுடன் குடமிளகாய், மஷ்ரூம், டோஃபு துருவல், உப்பு சேர்த்து வதக்கவும். பிறகு, சீஸனிங் தூவிக் கிளறி இறக்கவும். பன்களின் மீது இந்தக் கலவையைப் பரப்பி, மேலே சீஸ் துருவலைத் தாராளமாகத் தூவவும். தோசைக்கல்லைச் சூடாக்கி பன் பீட்சாக்களை ஒவ்வொன்றாக வைத்து மூடி போட்டு சீஸ் உருகத் தொடங்கும்போது எடுத்து, மேலே சில்லி ஃப்ளேக்ஸ், சீஸனிங் தூவிப் பரிமாறவும்.


p97l_1522392651.jpg

பனீர் அண்டு பைனாப்பிள் காக்ரா பீட்சா

தேவையானவை:

சிறிய காக்ரா - 6 (ரெடிமேடாகக் கடைகளில் கிடைக்கும்)
விதை நீக்கி, பொடியாக நறுக்கிய தக்காளி – கால் கப்
கலர் குடமிளகாய் கலவை – கால் கப்
வேகவைத்த சோள முத்துகள் – கால் கப்
பொடியாக நறுக்கிய பனீர் துண்டுகள் – கால் கப்
பொடியாக நறுக்கிய அன்னாசித் துண்டுகள் – கால் கப்
பச்சை மிளகாய் - 2
பீட்சா சீஸனிங் – ஒரு டேபிள்ஸ்பூன்
துருவிய பீட்சா சீஸ் – கால் கப்
பீட்சா சாஸ் - 5 டீஸ்பூன்
பேசில் இலைகள் - சிறிதளவு
உப்பு – தேவையான அளவு

செய்முறை:

தக்காளியுடன் குடமிளகாய், சோள முத்துகள், பனீர் துண்டுகள், பச்சை மிளகாய், அன்னாசித் துண்டுகள், பீட்சா சீஸனிங், உப்பு சேர்த்துக் கலந்து தனியாக வைக்கவும். காக்ராவின் மீது சிறிதளவு பீட்சா சாஸைத் தடவவும். அதன்மீது தக்காளி கலவையைப் பரப்பவும். மேலே சீஸ் துருவல், பேசில் இலைகள் தூவி அலங்கரிக்கவும். மைக்ரோவேவ் அவனில் காக்ரா ஒரு நிமிடம் அல்லது சீஸ் உருக ஆரம்பிக்கும் வரை வைத்து, பிறகு எடுத்துச் சூடாகப் பரிமாறவும்.

எல்லா காக்ராக்களையும் இப்படியே செய்துகொள்ளவும்.    

https://www.vikatan.com

Link to comment
Share on other sites

கிராமத்து ஸ்பெஷல் உப்புக்கறி

 

ஆயிரம் வகை உணவு இருந்தாலும் உப்புக்கறிக்கு ஈடாகாது. பழைய கஞ்சியை உப்புக்கறியோடு சாப்பிடும்போது சுவையே அலாதியாக இருக்கும். இன்று இதன் செய்முறையை பார்க்கலாம்.

 
கிராமத்து ஸ்பெஷல் உப்புக்கறி
 
தேவையான பொருட்கள் :

வெள்ளாட்டுக்கறி - ஒரு கிலோ
எண்ணெய் - 200 மில்லிகிராம்
சோம்பு - ஒரு டீஸ்பூன்
சின்ன வெங்காயம் - 200 கிராம்
காய்ந்த மிளகாய் - 150 கிராம்
மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்
தண்ணீர் - 150 மில்லி
சீரகம் - ஒரு டீஸ்பூன்
கறிவேப்பிலை, புதினா, கொத்தமல்லித்தழை - தேவைக்கேற்ப
உப்பு - தேவையான அளவு

201804281503377332_1_uppu-kari-mutton._L_styvpf.jpg

செய்முறை :

கறியை நன்றாக சுத்தம் செய்து துண்டுகளாக வெட்டி வைக்கவும்.

சின்ன வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி வைக்கவும்.

மண்சட்டியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் சோம்பு போட்டு தாளித்த பின்னர் நறுக்கிய சின்ன வெங்காயம், காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை ஆகியவற்றைச் சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும்.

வெங்காயம் நன்றாக வதங்கியதும் சுத்தம் செய்த ஆட்டுக்கறியை போட்டு வதக்கவும்.

அடுத்து அதில் சீரகம், மஞ்சள்தூள், உப்பு ஆகியவற்றைச் சேர்த்து மொத்தமாகக் கிளறிவிடவும்.

தண்ணீர் ஊற்றி, கறி நன்றாக வேகும்வரை மண்சட்டியை மூடிவைக்கவும்.

சிறிது நேரம் கழித்துப் பார்த்தால் ஆட்டுக்கறியில் உள்ள தண்ணீர் எல்லாம் வற்றி கமகம மணத்துடன் உப்புக்கறி, நாக்கில் எச்சில் ஊறும் அளவுக்குத் தயாராகி இருக்கும்.

அந்த நேரத்தில், கொத்தமல்லி மற்றும் புதினா இலைகளைத் தூவி, இறக்கி சிறிது நேரத்துக்குப் பிறகு சாப்பிடவும்.

சூப்பரான உப்புக்கறி ரெடி.

https://www.maalaimalar.com

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதை செய்து பார்க்கத் தான் இருக்கு 
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, ரதி said:

இதை செய்து பார்க்கத் தான் இருக்கு 
 

வெள்ளாட்டு இறைச்சிக்கு எங்க போவியல்? ?‍♂️

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, Nathamuni said:

வெள்ளாட்டு இறைச்சிக்கு எங்க போவியல்? ?‍♂️

வெள்ளை நிற ஆட்டை பிடிச்சா சரி.......

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Nathamuni said:

வெள்ளாட்டு இறைச்சிக்கு எங்க போவியல்? ?‍♂️

41 minutes ago, MEERA said:

வெள்ளை நிற ஆட்டை பிடிச்சா சரி.......

 

எங்கடை சனத்துக்கு செம்மறி இறைச்சியை வெள்ளாட்டு இறைச்சி எண்டு சொல்லி குடுத்துப்பாருங்கோ...ஜம் ஜம் எண்டு பொச்சடிச்சு சாப்பிடுவினம். ஒரு கோதாரியும் தெரியாது :grin:

Link to comment
Share on other sites

சூப்பரான இறால் ஊறுகாய் செய்வது எப்படி

 
அ-அ+

எலுமிச்சை, மாங்காய், வடுமாங்காய், நெல்லிக்காய் ஊறுகாய் சாப்பிட்டு இருப்பீங்க. இன்று அசைவ பிரியர்களுக்கு விருப்பமான இறால் ஊறுகாய் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

 
 
 
 
சூப்பரான இறால் ஊறுகாய் செய்வது எப்படி
 
தேவையான பொருட்கள்

இறால் - கால் கிலோ
இஞ்சி பூண்டு விழுது - 2 தேக்கரண்டி
மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - 1 தேக்கரண்டி
நல்லெண்ணெய் - 200 கிராம்
வினிகர் - 1/2 கப்
உப்பு - 1 தேக்கரண்டி

றுத்து பொடிக்க

கடுகு - 1 ஸ்பூன்
சோம்பு - 1 ஸ்பூன்
வெந்தயம் - 1/2 ஸ்பூன்

201804281143379689_1_prawn pickle._L_styvpf.jpg

செய்முறை

இறாலை சுத்தமாக கழுவி கொள்ளவும்.

நன்றாக கழுவிய இறாலில் கொஞ்சம் உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள், இஞ்சி பூண்டு விழுது போட்டு பிசறி அரை மணிநேரம் ஊற வைக்கவும்.

ஒரு கடாயில் பாதி எண்ணெய் விட்டு காய்ந்ததும் இறலை போட்டு நன்கு சிவக்க பொறித்து எடுத்து ஆற வைக்கவும்.

இறாலை பொரித்த எண்ணெயுடன் மீதி எண்ணெயை ஊற்றி சூடானதும் இஞ்சி பூண்டு விழுதை போட்டு பச்சை வாசம் போகும் வரை வதக்கவும்.

அடுத்து பொரித்த இறால் மஞ்சள் தூள், மிளகாய் தூள் போட்டு 5 நிமிடம் கிளறி விடவும்.

பின்பு அதில் வினிகர், உப்பு சேர்த்து இறக்கி விடவும்.

கடைசியாக அதன் மேல் வறுத்து பொடித்த பொடியை போட்டு நன்றாக கிளறி ஆற வைத்து பாட்டிலில் போட்டு வைக்கவும்.

ஊறுகாய்க்கு மேலே 1 இஞ்ச் உயரத்திற்கு எண்ணெய் இருக்க வேண்டும்.

பாட்டிலின் வாயை வெள்ளை துணியால் மூடி மூன்று நாள் கழித்து உபயோகப்படுத்தலாம். உப்பு காரம், புளிப்பு போன்றவை அவரவர் ருசிக்கேற்ப்ப சேர்த்துக் கொள்ளலாம். இந்த ஊறுகாய் 2 மாதம் வரை கெடாமல் இருக்கும்.

சூப்பரான இறால் ஊறுகாய் ரெடி.

https://www.maalaimalar.com/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
23 hours ago, Nathamuni said:

வெள்ளாட்டு இறைச்சிக்கு எங்க போவியல்? ?‍♂️

 

வெள்ளாட்டில் சமைத்ததால் தான் ருசியாய் இருக்குமா?
 

Link to comment
Share on other sites

சூப்பரான வடு மாங்காய் ஊறுகாய்

 
அ-அ+

தயிர் சாதம், சாம்பார் சாதத்திற்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும் இந்த வடு மாங்காய் ஊறுகாய். இன்று இந்த ஊறுகாய் செய்முறையை பார்க்கலாம்.

 
சூப்பரான வடு மாங்காய் ஊறுகாய்
 
தேவையான பொருட்கள் :

பிஞ்சு மாங்காய்கள் - ஒரு கிலோ
மிளகாய்ப்பொடி - 50 கிராம்
கடுகு பொடி - 25 கிராம்
நல்லெண்ணெய் - 4 ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு

201804301503286015_1_mavadu-pickle._L_styvpf.jpg

செய்முறை

மாங்காய் காம்களை நீக்கி நன்கு கழுவித்துடைத்து ஈரமில்லாமல் வைக்கவும்.

இந்த வடு மாங்காயில் நல்லெண்ணெய் போட்டு பிரட்டி, கடுகுத்தூள், மிளகாய்த்தூள், உப்பு மேலாக பரவலாகப் போட்டு காற்று போகாமல் மூடி வைக்கவும்.

தினமும் ஒருமுறை குலுக்கி விடவும். நன்றாக ஊற 10 நாட்களாவது ஆகும்.

10 நாட்கள் கழித்து எடுத்து சாப்பிடலாம்.

சூப்பரான வடு மாங்காய் ஊறுகாய் ரெடி.

https://www.maalaimalar.com

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வ‌ள‌ந்து வ‌ரும் க‌ட்சி தொட‌ர்ந்து பாராள‌ம‌ன்ற‌ தேர்த‌லில்   ஆண்க‌ளுக்கு 20 / பெண்க‌ளுக்கு 20  ச‌ட்ட‌ம‌ன்ற‌ தேர்த‌லில் ஆண்க‌ளுக்கு 120 / பெண்க‌ளுக்கு 120 இதில் யார் ஒட்டை எப்ப‌டி பிரிப்ப‌து வெற்றிய‌ இல‌க்காக‌ ப‌ய‌ணிக்கும் க‌ட்சி புல‌வ‌ர் அண்ணா தேர்த‌ல் ஆணைய‌த்தின் கூத்துக‌ளை விப‌ர‌மாய் எழுதி இருக்கிறார் முடிந்தால் ப‌தில் அளியுங்கோ இந்த‌ தேர்த‌ல் விதிமுறை இந்த‌ முறை தான் பார்க்கிறேன் த‌மிழ் நாட்டில் ஒரே நேர‌த்தில் ம‌ற்ற‌ மானில‌ங்க‌ளில் பிரித்து பிரித்து வைப்ப‌து...................2019க‌ளிம் இந்த‌ விதிமுறை இருந்த‌ மாதிரி தெரிய‌ வில்லை................................ அண்ணாம‌லையில் ஆட்க‌ள் காசு கொடுக்க‌ போன‌ இட‌த்தில் பிடி ப‌ட்டு த‌லைய‌ காட்டாம‌ தெறிச்சு ஓடின‌வை ஓம் யூன்4ம் திக‌தி பாப்போம்...............................
    • இப்படிக்கு இந்த தரவுகள் அனைத்தும்  தமிழ்நாட்டில் நேரடியாக இரு கண்களாலும் பார்த்து சேகரிக்கப்பட்டது. 🤣
    • நீங்கள் மீள மீள பொய்யை சொல்வதால் உண்மை ஆகாது. 1.தேசிய அல்லது குறைந்தது  மாநில கட்சி அந்தஸ்து இருந்தால் மட்டுமே நிரந்தர சின்னம். 2. மாநில கட்சி அந்தஸ்துக்கு ஒன்றில் 10% வாக்கு அல்லது 2% வாக்கும் இரு லோக்சபா சீட்டில் வெற்றியும் அடைந்திருக்க வேண்டும். 3. இது இரெண்டும் நாதக வுக்கு இல்லை. 4. மாநில கட்சி அந்தஸ்து இல்லாவிடின் - தேர்தல் அறிவிக்கப்பட்டு யார் முதலில் கோருகிறார்களோ அவர்களுக்கே சின்னம் கொடுக்கப்படும். 5. சீமான் அசட்டையாக தூங்கி கொண்டிருக்க ஏனையோர் (திமுக) தந்திரமாக சுயேட்சை மூலம் அந்த சின்னத்தை கோரி விட்டது. 6. வாசனுக்கு இப்படி யாரும் செய்யவில்லை. 7. திருமாவின் சின்னத்தையும், வைகோவின் சின்னத்தையும் இன்னொரு தக்க காரணம் சொல்லி மடக்கினாலும், திருமா போராடி வென்றார். வைகோ விட்டு விட்டார். 8. சீமானும் சுப்ரீம் கோர்ட் வரை போனார். முடியவில்லை. 9. தேர்தல் ஆணையம் களவு செய்கிறதெனில் சுப்ரீம் கோர்ட்டும் அதை ஆமோதித்ததா? உண்மையில் இதில் ஆணையத்தின் எந்த பாரபட்சமும் இல்லை, சீமானின் சோம்பேறித்தனத்தை பாவித்து திமுக சின்னத்தை சுயேட்சை மூலம் தந்திரமாக முடக்கி விட்டது. இதை பற்றி யாழில் பல்வேறு திரிகளில் பல பக்கம் எழுதியுள்ளேன். தங்களை அப்பக்கங்கள் நோக்கி பணிவுடன் திசை காட்டி அமைகிறேன்.
    • திருநெல்வேலி மக்களவை தொகுதியில் பாஜகவின் நயினார் நாகேந்திரன் வெற்றிபெறுவார் என ஊகிக்கின்றேன்.
    • ஏன் அந்தக்கவலை? தமிழ்நாட்டில் பிஜேபி ஆட்சிக்கு வந்தால் அப்படி என்ன பெரிதாக கெடுதல் நடந்து விடும்?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.