Jump to content

சமையல் செய்முறைகள் சில


Recommended Posts

உடல் எடையை குறைக்கும் பரங்கிக்காய் - சுக்கு சூப்

அதிகளவு உடல் பருமனால் அவதிப்படுபவர்கள் இந்த சூப்பை தினமும் குடித்து வந்தால் விரைவில் உடல் எடை குறைவதை காணலாம். இதன் செய்முறையை பார்க்கலாம்.

 
உடல் எடையை குறைக்கும் பரங்கிக்காய் - சுக்கு சூப்
 
தேவையான பொருட்கள் :

சுக்கு - ஒரு டேபிள்ஸ்பூன்
மிளகு - ஒரு டீஸ்பூன்
வெங்காயம் - 1
தக்காளி - 1
பரங்கிக்காய் - சிறிய துண்டு
மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை
உப்பு - தேவையான அளவு
கொத்தமல்லி தழை - சிறிதளவு

செய்முறை :

வெங்காயம் தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

சுக்கு, மிளகு இரண்டையும் சேர்த்து இடித்து கொள்ளவும்.

வெங்காயம், கொத்தமல்லி, தக்காளி, பரங்கிக்காயை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் வெங்காயம், தக்காளி, பரங்கிக்காய், சுக்கு, மிளகு போட்டு தண்ணீர் விட்டு மஞ்சள்தூள், உப்பு சேர்த்து வேகவிடவும்.

தண்ணீர் வற்றியதும் மேலும் 2 டம்ளர் தண்ணீர் சேர்த்து 5 நிமிடம் கொதித்ததும் கொத்தமல்லி தழை சேர்த்து இறக்கவும்.

தினமும் காலையில் சுக்கு சூப் குடிப்பதால் உடல் பருமன் குறையும். உடல் ஆரோக்கியம் பெறும்.

 

 

Link to comment
Share on other sites

சத்தான வரகு அரிசி கேரட் சாதம்

 Share  Tweet   அ-அ+

சிறுதானியங்களை அடிக்கடி உணவில் சேர்த்து கொள்வது உடலுக்கு மிகவும் நல்லது. இன்று வரகு அரிசி கேரட் வைத்து கேரட் சாதம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

சத்தான வரகு அரிசி கேரட் சாதம்
 
தேவையான பொருட்கள் :

கேரட் - 4
முந்திரி - தேவையான அளவு
உதிரியாக வடித்த வரகு அரிசி சாதம் - 2 கப்
வெங்காயம் - 2
பச்சைமிளகாய் - 4
எண்ணெய் - 6 ஸ்பூன்
கடுகு - 1 ஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிதளவு (வெட்டியது)

செய்முறை :
கேரட்டை துருவிக்கொள்ளவும்.

வெங்காயம், ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் கடுகு, கறிவேப்பிலை போட்டு தாளித்த பின்னர் நறுக்கிய வெங்காயம், ப.மிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும்.

வெங்காயம் நன்றாக வதங்கியதும் கேரட் துருவல், உப்பு சேர்த்து வதக்கி மூடி வைத்து வேக விடவும். 

கேரட் நன்றாக வெந்த பின்னர் வேக வைத்த வரகு அரிசியை அதில் சேர்த்து நன்றாக கிளறி அடுப்பை மிதமான தீயில் வைத்து 5 நிமிடம் கிளறி இறக்கி பரிமாறவும். 

சத்தான சுவையான வரகு அரிசி கேரட் சாதம் ரெடி. 
Link to comment
Share on other sites

வைட்டமின் டி சைவ உணவுகள்!

லும்புகள் உறுதியாக இருக்க உதவும் வைட்டமின் டி சூரிய கதிர்கள் மற்றும் சில தாவரங்களிலிருந்து நமக்குக் கிடைக்கிறது. காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரையில் வாரம் இருமுறை 15 நிமிடங்கள் சூரிய ஒளியில் நிற்பதாலும், பால், யோகர்ட், சீஸ், பனீர் உட்பட சில உணவுகளாலும் வைட்டமின் டி கிடைக்கப் பெறலாம். இத்தகைய உணவுப் பொருள்களைக் கொண்டு சுவையான, வித்தியாசமான ரெசிப்பிகளை இங்கே தயாரித்து வழங்குகிறார் சமையல் கலைஞர் சுதா செல்வகுமார்.

2.jpg

பனீர் டில்வாலே

தேவையானவை:  பனீர் துண்டுகள் - ஒரு கப், தயிர் - அரை கப், ஃப்ரெஷ் க்ரீம் - அரை கப், மிளகாய்த்தூள், மிளகுத்தூள், சீரகத்தூள் - தலா ஒரு டீஸ்பூன்,  இஞ்சி - பூண்டு விழுது - ஒரு டேபிள்ஸ்பூன், முந்திரி - 15, ஏலக்காய்த்தூள் - ஒரு சிட்டிகை, வெள்ளை எள், சோள மாவு - தலா 2 டேபிள்ஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

3.jpg

செய்முறை: முந்திரியைத் தண்ணீரில் அரை மணி நேரம் ஊறவைத்து, விழுதாக அரைத்து எடுக்கவும். தயிருடன் ஃப்ரெஷ் க்ரீம், இஞ்சி - பூண்டு விழுது, உப்பு, முந்திரி விழுது, ஏலக்காய்த் தூள், சீரகத்தூள், மிளகுத் தூள், மிளகாய்த்தூள் சேர்த்துக் கலக்கவும். இதனுடன் பனீர் துண்டுகளைச் சேர்த்துக் கலந்து அரை மணி நேரம் ஊறவைக்கவும். சோள மாவுடன் வெள்ளை எள் சேர்த்துக் கலக்கவும். ஊறிய பனீர் துண்டுகளைச் சோள மாவு - எள் கலவையில் புரட்டி எடுக்கவும். வாணலியில் எண்ணெய்விட்டுச் சூடாக்கி, பனீர் துண்டுகளைப் போட்டுப் பொன்னிறமாகப் பொரித்தெடுக்கவும்.

பனீர் பால்ஸ்

தேவையானவை: பனீர் துருவல் - 2 கப், வறுத்துப் பொடித்த பாதாம் -  ஒரு டேபிள்ஸ்பூன், பால் பவுடர் - கால் கப், ஏலக்காய்த்தூள் - ஒரு சிட்டிகை, நெய் - ஒரு டீஸ்பூன், கண்டன்ஸ்டு மில்க் - கால் கப், கலர் ஸ்ப்ரிங்கிள்ஸ் - சிறிதளவு (டிபார்ட்மென்ட் கடைகளில் கிடைக்கும்).

4.jpg

செய்முறை: பாத்திரத் தில் பனீர் துருவலுடன் கண்டன்ஸ்டு மில்க்  சேர்த் துச் சூடாக்கி, அடுப்பை சிறு தீயில் வைத்துக் கிளறவும். இதனுடன் நெய், பாதாம், ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கிளறி, பாத்திரத்தில் ஒட்டாமல் வரும்போது இறக்கவும். பிறகு, பால் பவுடர் சேர்த்துக் கலக்கவும். ஆறிய பிறகு சிறிய உருண்டைகளாக உருட்டி, கலர் ஸ்பிரிங்கிள்ஸில் புரட்டிப் பரிமாறவும்.

பனீர் ஸ்வீட் பூரி

தேவையானவை: கோதுமை மாவு - ஒரு கப், பனீர் துருவல் - ஒரு கப், காய்ச்சி ஆறவைத்த பால் - தேவையான அளவு, ஏலக் காய்த்தூள் - ஒரு சிட்டிகை, இனிப்பு சேர்க்காத கோவா - கால் கப், பொடித்த சர்க்கரை - கால் கப், வெனிலா எசன்ஸ் - சில துளிகள், வறுத்துப் பொடித்த முந்திரி - ஒரு டேபிள்ஸ்பூன், எண்ணெய் - தேவையான அளவு.

5.jpg

செய்முறை:  பனீர் துருவலுடன் பொடித்த சர்க்கரை, ஏலக்காய்த்தூள், முந்திரி, கோவா, வெனிலா எசன்ஸ் சேர்த்துக் கலக்கவும். இதுவே பூரணம். கோதுமை மாவுடன் பால்விட்டு பூரி மாவு போல பிசையவும். மாவை சிறிய உருண்டைகளாக்கி, பூரிகளாகத் தேய்க்கவும். ஒரு பூரியின் மீது சிறிதளவு பூரணம் வைத்து மற்றொரு பூரியால் மூடி, ஓரங்களைத் தண்ணீர் தொட்டு ஒட்டவும் (மைதா பேஸ்ட் தொட்டும் ஒட்டலாம்). வாணலியில் எண்ணெய்விட்டுச் சூடானதும் தயாரித்த பூரிகளை ஒவ்வொன்றாகப் போட்டுப் பொரித்தெடுக்கவும்.

சர்க்கரைவள்ளிக் கிழங்கு - பனீர் சாட்

தேவையானவை: பனீர் துண்டுகள் - அரை கப், வேகவைத்து, தோல் நீக்கி, சதுர துண்டுகளாக்கிய சர்க்கரைவள்ளிக் கிழங்கு - அரை கப், எலுமிச்சைப் பழம் - ஒன்று, சாட் மசாலாத்தூள், தோல் சீவி, துருவிய இஞ்சி - தலா ஒரு டீஸ்பூன், நறுக்கிய கொத்தமல்லித்தழை, நறுக்கிய பச்சை மிளகாய் - தலா ஒரு டீஸ்பூன், நெய் - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு.

6.jpg

செய்முறை: எலுமிச்சைப் பழத்தைச் சாறு பிழியவும். வாணலியில் நெய்விட்டுச் சூடானதும் பனீர் துண்டுகளைப் போட்டு பொன்னிறமாகப் பொரித்தெடுக்கவும். சர்க்கரைவள்ளிக் கிழங்கு துண்டுகளுடன், பனீர் துண்டுகள், சாட் மசாலாத்தூள், உப்பு, இஞ்சித் துருவல், பச்சை மிளகாய், கொத்தமல்லித்தழை சேர்த்துக் கலக்கவும். மேலே எலுமிச்சைச் சாறு சேர்த்துக் கிளறிப் பரிமாறவும்.

ஸ்டஃப்டு மஷ்ரூம்

தேவையானவை:  காளான் - 12, டூத் பிக், எண்ணெய், உப்பு -  தேவையான  அளவு.

ஸ்டஃபிங் செய்ய: நறுக்கிய சின்ன வெங்காயம் - கால் கப், சீஸ் துருவல் - 2 டேபிள்ஸ்பூன், இஞ்சி - பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன், தக்காளி - ஒன்று (பொடியாக நறுக்கவும்), பச்சை மிளகாய் விழுது - ஒரு டேபிள்ஸ்பூன், பிரெட் க்ரம்ஸ் - தேவையான அளவு, அரிசி மாவு, மைதா மாவு, கடலை மாவு - தலா ஒரு டேபிள்ஸ்பூன், மிளகாய்த்தூள், சோள மாவு - தலா ஒரு டீஸ்பூன்.

7.jpg

செய்முறை: மைதா மாவுடன் அரிசி மாவு, கடலை மாவு, சோள மாவு, உப்பு, மிளகாய்த்தூள் சேர்த்துக் கலக்கவும். இதை தண்ணீர்விட்டு கெட்டியாகக் கரைக்கவும். வாணலியில் எண்ணெய்விட்டுச் சூடானதும் வெங்காயம், தக்காளி, இஞ்சி - பூண்டு விழுது, பச்சை மிளகாய் விழுது சேர்த்து வதக்கவும். இதனுடன் உப்பு, சீஸ் துருவல் சேர்த்துக் கிளறி இறக்கவும்.  இதுவே ஸ்டஃப்பிங் மசாலா.

காளானை நன்கு அலசி, தண்டுப் பகுதியை நீக்கவும். ஒரு காளானின் நடுவே சிறிதளவு மசாலா வைக்கவும். இதன் மீது மற்றொரு காளான் வைத்து டூத் பிக்கால் நடுவே குத்தவும். இதே முறையில் மீதமுள்ள காளான்களையும் தயாரிக்கவும். பிறகு, காளான்களை மாவுக் கலவையில் முக்கி எடுத்து, பிரெட் க்ரம்ஸில் புரட்டி, 10 நிமிடங்கள் ஃப்ரிட்ஜில் வைத்து எடுக்கவும். வாணலியில் எண்ணெயைக் காயவிட்டு, காளான்களைப் போட்டுப் பொன்னிறமாகப் பொரித்தெடுக்கவும்.

மஷ்ரூம் கோஃப்தா கறி

தேவையானவை: பொடி யாக நறுக்கிய காளான் துண்டுகள் - ஒன்றரை கப், உருளைக்கிழங்கு - ஒன்று, பச்சை மிளகாய் - 2 (பொடியாக நறுக்கவும்), கொத்தமல்லித் தழை - தேவையான அளவு, வறுத்த கடலை மாவு - 2 டேபிள்ஸ்பூன், கரம் மசாலாத்தூள் - அரை டீஸ்பூன், வறுத்த கசகசா - ஒரு டீஸ்பூன், சீரகம் - அரை டீஸ்பூன், ஃப்ரெஷ் க்ரீம் - ஒரு டேபிள்ஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு. 

8.jpg

அரைக்க: பெரிய வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கவும்), பூண்டு - 6 பல், சீரகம் - அரை டீஸ்பூன், மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை, மல்லி (தனியா) - ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 4, ஏலக்காய் - ஒன்று, உப்பு - சிறிதளவு, தக்காளி - ஒன்று (பொடியாக நறுக்கவும்).

செய்முறை: உருளைக்கிழங்கை வேகவைத்து, தோல் உரித்து மசிக்கவும். அரைக்கக் கொடுத்துள்ள பொருள்களை ஒன்றாகச் சேர்த்து மிக்ஸியில் விழுதாக அரைத்து எடுக்கவும். வாணலியில் சிறிதளவு எண்ணெய்விட்டுச் சூடாக்கி, காளான்களைப் போட்டு வதக்கி இறக்கவும். இதனுடன் கடலை மாவு, கசகசா, உப்பு, மஞ்சள்தூள், மசித்த உருளைக்கிழங்கு, பச்சை மிளகாய் சேர்த்துப் பிசையவும். பிறகு, இந்தக் கலவையை சிறிய உருண்டைகளாக்கவும். வாணலியில் எண்ணெயைக் காயவிட்டு உருண்டைகளைப் போட்டுப் பொரித்தெடுக்கவும். இதுவே மஷ்ரூம் கோஃப்தா (அதிக எண்ணெய் வேண்டாதவர்கள் நான்ஸ்டிக் குழிப்பணியாரக் கல்லில்கூட இந்த உருண்டைகளை வேகவிட்டு எடுக்கலாம்).

மற்றொரு வாணலியில் சிறிதளவு எண்ணெய்விட்டுச் சூடாக்கி, சீரகம் தாளிக்கவும். இதனுடன் அரைத்த மசாலா சேர்த்து எண்ணெய் பிரிந்து வரும்வரை மிதமான தீயில்
வைத்துக் கிளறவும். பிறகு, உப்பு, கரம் மசாலாத்தூள், தேவையான அளவு தண்ணீர் சேர்த்துக் கொதிக்கவிடவும். கிரேவி கெட்டியாகும்போது கோஃப்தாக்களைப் போட்டு, ஒரு கொதிவிட்டு இறக்கவும். மேலே கொத்தமல்லித்தழை, ஃப்ரெஷ் க்ரீம் சேர்த்துப் பரிமாறவும்.

வெந்தயக்கீரை - காளான் கறி

தேவையானவை: நறுக்கிய காளான் துண்டுகள் - ஒரு கப், தக்காளி - 2 (பொடியாக நறுக்கவும்), ஆய்ந்த வெந்தயக்கீரை - கால் கப், மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை, பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம் - கால் கப், காய்ந்த மிளகாய் - 2, ஓமம் - அரை டீஸ்பூன், கரம் மசாலாத்தூள் - அரை டீஸ்பூன், கொத்தமல்லித்தழை - சிறிதளவு, இஞ்சி - பூண்டு விழுது -  ஒரு டீஸ்பூன், எண்ணெய், உப்பு  - தேவையான அளவு.

9.jpg

செய்முறை: வாணலியில் எண்ணெய்விட்டுச் சூடாக்கி, இஞ்சி - பூண்டு விழுது, சின்ன வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கவும். இதனுடன் காய்ந்த மிளகாய், மஞ்சள்தூள், உப்பு, கரம் மசாலாத்தூள், ஓமம், வெந்தயக்கீரை, காளான் சேர்த்துக் கிளறி மூடி வேகவிடவும் (சிறிதளவு நீர் தெளித்தும் வேகவிடலாம்).  காளான் வெந்ததும் கொத்தமல்லித்தழை தூவி இறக்கவும்.

இதை சாதம், சப்பாத்திக்குத் தொட்டுக்கொள்ளலாம். பிரெட்டின் நடுவே வைத்து டோஸ்ட் செய்தும் சாப்பிடலாம்.

திங்கிரி டோல்மா

தேவையானவை: நறுக்கிய காளான் துண்டுகள் - ஒரு கப், பனீர் துண்டுகள் - அரை கப், பொடியாக நறுக்கிய வெங்காயம் - கால் கப், தக்காளி - 2 (பொடியாக நறுக்கவும்), இஞ்சி - பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன், மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன், வெண்ணெய், நெய் - தலா ஒரு டேபிள்ஸ்பூன், கரம் மசாலாத்தூள், வெள்ளை மிளகுத்தூள், சீரகத்தூள் - தலா அரை டீஸ்பூன், கொத்தமல்லித்தழை – சிறிதளவு, மஞ்சள்தூள் - சிறிதளவு, ஊறவைத்து அரைத்த முந்திரி விழுது - 2 டேபிள்ஸ்பூன், ஃப்ரெஷ் க்ரீம் - ஒரு டேபிள்ஸ்பூன், எலுமிச்சைச் சாறு - 3 டீஸ்பூன், (விரும்பினால்) தேன் - ஒரு டேபிள்ஸ்பூன்,  துருவிய பனீர் - அரை கப், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

10.jpg

செய்முறை: வாணலியில் நெய்விட்டுச் சூடாக்கி வெங்காயம், தக்காளி, இஞ்சி - பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். இதனுடன் காளான், சீரகத்தூள், உப்பு, மஞ்சள்தூள், மிளகுத்தூள், முந்திரி விழுது, கரம் மசாலாத்தூள், மிளகாய்த்தூள் சேர்த்துக் கிளறவும். பிறகு, பனீர் துண்டுகள், வெண்ணெய், ஃப்ரெஷ் க்ரீம், பனீர் துருவல், எலுமிச்சைச் சாறு சேர்த்துக் கிளறி இறக்கவும். மேலே கொத்தமல்லித்தழை சேர்க்கவும். விருப்பப்பட்டால் தேன் சேர்க்கவும்.

சப்பாத்தி, பரோட்டோ, நாண் ஆகியவற்றுக்கு சைட் டிஷ்ஷாகப் பயன்படுத்தலாம். பிரெட் நடுவே வைத்தும் சாப்பிடலாம். சாதத்தில் பிசைந்தும் சாப்பிடலாம்.

மஷ்ரூம் மசாலா டோஸ்ட்

தேவையானவை: பிரெட் ஸ்லைஸ்கள் – 10, குடமிளகாய் - ஒன்று (பொடியாக நறுக்கவும்), மஷ்ரூம் - 150 கிராம் (பொடியாக நறுக்கவும்), சோள மாவு (கார்ன்ஃப்ளார்), க்ரீன் சில்லி சாஸ், தக்காளி கெட்சப் - தலா ஒரு டேபிள்ஸ்பூன், இஞ்சி - பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன், சோம்பு - அரை டீஸ்பூன், நெய், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

111.jpg

செய்முறை: வாணலியில் எண்ணெய்விட்டுச் சூடானதும் குடமிளகாய், மஷ்ரூம் சேர்த்து வதக்கவும். இதனுடன் இஞ்சி - பூண்டு விழுது, உப்பு, சோம்பு சேர்த்துக் கிளறவும். பிறகு தக்காளி கெட்சப், க்ரீன் சில்லி சாஸ் சேர்த்து, அடுப்பை சிறு தீயில் வைத்துக் கிளறவும். காளான் நன்கு வெந்ததும், சோள மாவுடன் சிறிதளவு தண்ணீர்விட்டு கெட்டியாகக் கரைத்து ஊற்றிக் கிளறி இறக்கி ஆறவிடவும்.
பிரெட்டின் ஓரங்களை நீக்கிவிடவும். தோசைக்கல்லைக் காயவிட்டு, பிரெட் ஸ்லைஸ்களை ஒவ்வொன்றாக வைத்து, சுற்றிலும் நெய்விட்டு டோஸ்ட் செய்து எடுக்க வும். மேலே மஷ்ரூம் மசாலாவைத் தடவிப் பரிமாறவும்.

பிரெட்டை டோஸ்டரிலும் டோஸ்ட் செய்யலாம்.

ஆரஞ்சு புலாவ்

தேவையானவை: ஆரஞ்சுப் பழச்சாறு -  2 கப், பாஸ்மதி அரிசி - ஒரு கப், உடைத்த முந்திரி - ஒரு டேபிள்ஸ்பூன், பொடியாக நறுக்கிய வெங்காயத்தாள் -  கால் கப், பச்சை மிளகாய் - 2 (கீறவும்),  புதினா (அலசி, ஆய்ந்தது) - ஒரு டேபிள்ஸ்பூன், பச்சைப் பட்டாணி - 2 டேபிள்ஸ்பூன், பட்டை - சிறிய துண்டு, கிராம்பு, பிரியாணி இலை - தலா ஒன்று, பூண்டு - 8 பல், நெய், உப்பு - தேவையான அளவு.

12.jpg

செய்முறை: அரிசியை அரை மணி நேரம் ஊறவைத்து, வடிய விடவும். வாணலியில் சிறிதளவு நெய்விட்டுச் சூடானதும் அரிசியை லேசாக வறுத்து எடுக்கவும். குக்கரில் சிறிதளவு நெய்விட்டு பட்டை, கிராம்பு, பிரியாணி இலை தாளித்து பச்சை மிளகாய், பூண்டு, வெங்காயத்தாள், முந்திரி, பச்சைப் பட்டாணி, புதினா, உப்பு சேர்த்து வதக்கவும். இதனுடன் அரை கப் தண்ணீர், ஆரஞ்சுப் பழச்சாறு, அரிசி சேர்த்துக் கிளறி, குக்கரை மூடி 2 விசில்விட்டு இறக்கினால், ஆரஞ்சு புலாவ் ரெடி!

ஆரஞ்சுத் தோல் பச்சடி

தேவையானவை:  பொடியாக நறுக்கிய ஆரஞ்சுத் தோல் துண்டுகள் - ஒரு கப், வெல்லத்தூள் - 3 டேபிள்ஸ்பூன், அரிசி மாவு - ஒரு டீஸ்பூன், கடுகு - அரை டீஸ்பூன், உளுத்தம்பருப்பு  - அரை டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - ஒன்று, ஆரஞ்சு சுளைகள் - 2  (தோல், விதை நீக்கி உதிர்க்கவும்), மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை, புளிக்கரைசல் - கால் கப், எண்ணெய் - சிறிதளவு, உப்பு - ஒரு சிட்டிகை.

13.jpg

செய்முறை: குக்கரில் ஆரஞ்சுத் தோலுடன் சிறிதளவு தண்ணீர் ஊற்றி மூடி, 2 விசில்விட்டு இறக்கவும். வாணலியில் எண்ணெய்விட்டுச் சூடானதும் கடுகு, உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய் தாளிக்கவும். இதனுடன் வேகவைத்த ஆரஞ்சுத் தோல், புளிக்கரைசல், மஞ்சள்தூள், உப்பு சேர்த்து ஒரு கொதிவிட்டு, வெல்லத்தூள் சேர்த்துக் கிளறவும். பிறகு, அரிசி மாவில் சிறிதளவு தண்ணீர்விட்டுக் கெட்டியாகக் கரைத்து இதனுடன் சேர்த்து, ஒரு கொதிவிட்டு இறக்கவும். ஆரஞ்சு சுளையைச் சேர்த்து அலங்கரித்துப் பரிமாறவும்.

இனிப்பு, புளிப்பு சுவையுடன் வித்தியாசமாக இருக்கும் இந்தப் பச்சடி.

ஆரஞ்சு ஸ்குவாஷ்

தேவையானவை: ஆரஞ்சுப் பழச்சாறு - 4 கப் (விதை நீக்கி, வடிகட்டவும்), தண்ணீர் - 3 கப், சர்க்கரை - தேவையான அளவு,  கே.எம்.எஸ் பவுடர் (பொட்டாசியம் மெட்டா பை சல்பேட்) - கால் டீஸ்பூன், ஆரஞ்சு ஃபுட் கலர் - ஒரு துளி, சிட்ரிக் ஆசிட் - ஒரு டீஸ்பூன்.

14.jpg

செய்முறை: சர்க்கரையுடன் தண்ணீர் சேர்த்துக் கொதிக்கவிடவும். இதனுடன் சிட்ரிக் ஆசிட், கே.எம்.எஸ் பவுடர் சேர்த்துக் கிளறவும். பிசுக்கு பாகு பதம் வந்ததும் இறக்கி ஆறவிடவும். இதனுடன் ஆரஞ்சுப் பழச்சாறு, ஃபுட் கலர் சேர்த்துக் கலந்து, சுத்தமான பாட்டிலில் ஊற்றிவைக்கவும். இதுவே ஆரஞ்சு ஸ்குவாஷ். தேவையானபோது ஒரு கப் குளிர்ந்த தண்ணீரில் 3 டேபிள்ஸ்பூன் ஸ்குவாஷ்விட்டுக் கலந்து பருகவும்.

குறிப்பு: ஒவ்வொரு முறை பயன்படுத்தும்போதும் நன்கு குலுக்கிய பிறகு பயன்படுத்தவும். பல மாதங்கள் வரை நன்றாக இருக்கும். ஃப்ரெஷ்ஷாகப் பருக வேண்டுமானால் ஆரஞ்சு பழச்சாற்றுடன் சர்க்கரை, ஒரு சிட்டிகை உப்பு, ஒரு சிட்டிகை மிளகுத்தூள், புதினா இலை, ஐஸ்கட்டிகள் சேர்த்துப் பருகலாம்.

ஆரஞ்சு  ரசம்

தேவையானவை: ஆரஞ்சுப் பழச்சாறு -  ஒரு கப் (விதை நீக்கி, வடிகட்டவும்), துவரம்பருப்பு - ஒரு டேபிள்ஸ்பூன் (வேகவைக்கவும்), மிளகு - ஒரு டீஸ்பூன், சீரகம் - அரை டீஸ்பூன், மஞ்சள் தூள், பெருங்காயத்தூள் - தலா ஒரு சிட்டிகை, கடுகு - அரை டீஸ்பூன், பச்சை மிளகாய் - ஒன்று (பொடியாக நறுக்கவும்), கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை - சிறிதளவு, மல்லி (தனியா), வெந்தயம் - தலா அரை டீஸ்பூன், பூண்டு - 2 பல், எண்ணெய், நெய் - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு.

15.jpg

செய்முறை: வாணலியில் சிறிதளவு நெய்விட்டுச் சூடானதும் மிளகு, சீரகம், தனியா, வெந்தயம், பூண்டு, கறிவேப்பிலை சேர்த்து வறுத்து எடுக்கவும். ஆறிய பிறகு மிக்ஸியில் சேர்த்துப் பொடித்துக்கொள்ளவும். வாணலியில் எண்ணெய்விட்டு, காய்ந்ததும் கடுகு, பச்சை மிளகாய் தாளிக்கவும். இதனுடன் வேகவைத்த துவரம்பருப்பு, சிறிதளவு தண்ணீர், மஞ்சள்தூள், பெருங்காயத்தூள், உப்பு, அரைத்துவைத்த பொடி சேர்த்துக் கிளறி, ஒரு கொதிவிடவும். பிறகு, ஆரஞ்சுப் பழச்சாற்றை ஊற்றி நுரைத்து வரும்போது, மேலே கொத்தமல்லித்தழை தூவி இறக்கவும்.

ஃப்ரூட் யோகர்ட்

தேவையானவை: பப்பாளி கூழ் - அரை கப், கெட்டித் தயிர் - 2 கப், சர்க்கரை - அரை கப், தண்ணீர் - சிறிதளவு.

செய்முறை: சுத்தமான மெல்லிய துணியில் தயிரை ஊற்றி மூட்டையாகக் கட்டி வடிகட்டியில் வைக்கவும். வடிகட்டியைப் பாத்திரத்தின் மேல் வைத்து ஃப்ரிட்ஜில் 2 மணி நேரம் வைக்கவும். பிறகு தயிரிலுள்ள தண்ணீர் வடிந்து நன்கு கெட்டியாகிவிடும்.  சர்க்கரையுடன் சிறிதளவு தண்ணீர்விட்டுக் கொதிக்கவிடவும். சர்க்கரை கரைந்ததும், அடுப்பைக் குறைந்த தீயில் வைத்து, பப்பாளிக்கூழைச் சேர்த்துக் கிளறி இறக்கி ஆறவிடவும்.  இதனுடன் கெட்டியான  தயிர் சேர்த்துக் கலக்கவும். இதை அப்படியே சாப்பிடலாம் அல்லது மீண்டும் ஃப்ரிட்ஜில் வைத்து, குளிர்ந்த பிறகும் சாப்பிடலாம்.

16.jpg

குறிப்பு: மாம்பழம், ஸ்ட்ராபெர்ரி என சீஸனில் கிடைக்கும் பழங்கள் சேர்த்தும் இதைத் தயாரிக்கலாம்.

சீஸ் டிப்

தேவையானவை: கெட்டித் தயிர் - ஒரு கப், சீஸ் துருவல் - 4 டேபிள்ஸ்பூன், ஃபுட் வினிகர் - ஒரு டேபிள் ஸ்பூன், சர்க்கரை - ஒரு டீஸ்பூன், ஃப்ரெஷ் க்ரீம் - 2 டேபிள்ஸ்பூன், எலுமிச்சைச் சாறு - 3 டீஸ்பூன், உப்பு - ஒரு சிட்டிகை, ஆலிவ் எண்ணெய் - ஒரு டீஸ்பூன்.

17.jpg

செய்முறை: கொடுக்கப் பட்டுள்ள பொருள்களை ஒன்றாகச் சேர்த்து மிக்ஸியில் தண்ணீர்விடாமல் ஒரு சுற்று சுற்றி எடுக்கவும். இதுவே சீஸ் டிப். இதை பிரெட் மீது தடவி சாப்பிடலாம். சப்பாத்தி, நாண் உடன் தொட்டுக்கொள்ளலாம். சுவையும், சத்தும் நிறைந்தது.

சோயா பால்

தேவையானவை: சோயா பீன்ஸ் - ஒரு கப், குங்குமப்பூ, ஏலக்காய்த்தூள் - தலா ஒரு சிட்டிகை, சர்க்கரை - 2 டேபிள்ஸ்பூன்.

18.jpg

செய்முறை: சோயா பீன்ஸை முதல் நாள் இரவே ஊறவைக்கவும். மறுநாள் களைந்து தண்ணீரை வடியவிடவும். சோயாவுடன் தேவையான அளவு தண்ணீர் விட்டு மிக்ஸியில் அரைத்து, பெரிய கண் உள்ள வடிகட்டியில் அல்லது மெல்லிய துணியில் வடிகட்டவும்.  வடிகட்டிய சோயா பாலுடன் சிறிதளவு தண்ணீர்விட்டுக் கலந்து, கொதிக்கவைத்து இறக்கவும். பிறகு, மீண்டும் வடிகட்டி சர்க்கரை, ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கலக்கவும். மேலே குங்குமப்பூ தூவிப் பரிமாறவும்.

குறிப்பு: சர்க்கரைக்குப் பதிலாக வெல்லத்தூள் அல்லது வெல்லப் பாகு சேர்த்தும் பருகலாம். சோயா பத்து மணி நேரமாவது ஊறி இருக்க வேண்டும்.

லெட்டூஸ் காட்டி ரோல்ஸ்

தேவையானவை: லெட்டூஸ் இலை பெரியது - தேவையான அளவு, துருவிய சீஸ், துருவிய பனீர் - 2 டேபிள்ஸ்பூன், வெள்ளை மிளகுத்தூள் - ஒரு டீஸ்பூன், சப்பாத்தி - 4, தக்காளி சாஸ், சோயா சாஸ்,
பொடியாக நறுக்கிய வெங்காயத்தாள் - தலா 2 டேபிள்ஸ்பூன், முளைகட்டிய பச்சைப் பயறு - கால் கப், எண்ணெய் - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு.

19.jpg

செய்முறை: ஒரு லெட்டூஸ் இலையை அலசி, பொடியாக நறுக்கவும். முளைகட்டிய பயறை ஆவியில் வேகவைத்து எடுக்கவும். வாணலியில் எண்ணெய்விட்டுச் சூடானதும் வெங்காயத்தாள் சேர்த்து வதக்கவும். இதனுடன் வெள்ளை மிளகுத்தூள், பச்சைப் பயறு, உப்பு, பனீர் துருவல், சோயா சாஸ், சீஸ் துருவல், நறுக்கிய லெட்டூஸ் இலை சேர்த்து வதக்கி இறக்கவும். ஒரு லெட்டீஸ் இலையின் மீது சப்பாத்தியை வைத்து, அதன் மீது தக்காளி சாஸ் தடவவும். அதன் மேல் சிறிதளவு லெட்டூஸ் மசாலா பரப்பி பாய் போல சுருட்டி, நடுவே டூத்பிக் குத்தி பரிமாறவும்.

லெட்டூஸ் மயோனைஸ்

தேவையானவை: நறுக்கிய லெட்டூஸ் - அரை கப், பச்சைப் பட்டாணி, கேரட் துண்டுகள் - தலா 2 டேபிள்ஸ்பூன், உப்பு - சிறிதளவு, மயோனைஸ் - ஒரு கப் (ரெடிமேடாகக் கிடைக்கிறது. நாமே தயாரிக்கவும் செய்யலாம்).

20.jpg

செய்முறை:  பட்டாணி, கேரட்டுடன் உப்பு சேர்த்து வேகவைத்து எடுக்கவும். மயோனைஸுடன் லெட்டூஸ், வேக வைத்த காய்கறிகள் சேர்த்துக் கலக்கி பரிமாறவும்.

மயோனைஸ் செய்முறை: தயிருடன் ஆலிவ் எண்ணெய், உப்பு, சர்க்கரை, எலுமிச்சைச் சாறு, ஃபுட் வினிகர் சேர்த்துக் கலக்கவும்.

மில்க் ஐஸ்க்ரீம்

தேவையானவை: காய்ச்சாத பால் - ஒரு லிட்டர், சர்க்கரை - கால் கப், ஆரஞ்சு சுளைகள் (தோல், விதை நீக்கி உதிர்க்கவும்), செர்ரிப்பழம்  - தேவையான அளவு, கண்டன்ஸ்டு மில்க் - அரை கப், வெண்ணெய் - 50 கிராம், சோள மாவு (கார்ன்ஃப்ளார்) - 2 டேபிள்ஸ்பூன், விரும்பிய ஐஸ்க்ரீம் எசன்ஸ், முந்திரித் துருவல், பிஸ்தா துருவல்  -  தலா 2 டேபிள்ஸ்பூன்.

21.jpg

செய்முறை: அடிகனமான பாத்திரத்தில் பாலை ஊற்றி, பாதியாகும் வரை கைவிடாமல் கிளறி, சுண்டக் காய்ச்சவும். இதனுடன் சர்க்கரை சேர்த்து, அடுப்பை சிறு தீயில் வைத்துக் கொதிக்கவிடவும். பிறகு, சிறிதளவு பாலில் சோள மாவைக் கரைத்துச் சேர்க்கவும். இதில் வெண்ணெய் சேர்த்துக் கிளறவும். 2 நிமிடங்கள் கழித்து கண்டன்ஸ்டு மில்க் சேர்த்துக் கிளறி இறக்கவும். இதனுடன் எசன்ஸ் சேர்த்துக் கலந்து ஆறவிடவும். பிறகு, சிறிதளவு நட்ஸ் துருவல் சேர்த்து நன்கு அடிக்கவும் (முட்டை அடிக்கும் கருவியால் அடிக்கலாம்). இந்தக் கலவையை மற்றொரு பாத்திரத்துக்கு மாற்றி ஃப்ரீசரில் 5 மணி நேரம் வைத்து எடுக்கவும். பிறகு, மீண்டும் நன்றாக அடிக்கவும். விருப்பமான மோல்டில் அல்லது கிண்ணத்தில் ஊற்றி, மீதமுள்ள நட்ஸ் துருவலை மேலே தூவி, ஃப்ரீசரில் வைத்து செட் செய்து எடுக்கவும். மேலே ஆரஞ்சு சுளைகள், செர்ரி பழம் சேர்த்து அலங்கரித்துப் பரிமாறவும்.

செலரி - சீஸ் சாஸ்

தேவையானவை: செலரி - தேவையான அளவு, பனீர் துருவல் – ஒரு டேபிள்ஸ்பூன்.

22.jpg

சீஸ் சாஸ் செய்ய:   துருவிய சீஸ் - ஒரு கப், வெண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன், காய்ச்சி ஆறவைத்த பால் - ஒரு கப், சோள மாவு (கார்ன்ஃப்ளார்) - 2 டேபிள்ஸ்பூன், உப்பு – ஒரு சிட்டிகை.

செய்முறை: பாலுடன் சோள மாவு சேர்த்துக் கரைக்கவும். வாணலியில் வெண்ணெய்விட்டுச் சூடாக்கி, அடுப்பை மிதமான தீயில் வைத்து, உருகியதும் சோள மாவு கரைசலை ஊற்றி கைவிடாமல் கலக்கவும். இதனுடன் சீஸ் துருவல், உப்பு சேர்த்துக் கெட்டியாகக் கிளறி இறக்கவும். இதுவே சாஸ். இதனுடன் செலரி, பனீர் துருவல் சேர்த்துக் கலந்து பரிமாறவும்.

ஆரஞ்சு ஃப்ளப்

தேவையானவை: ஆரஞ்சுப் பழச்சாறு - 2 கப், உலர்திராட்சை - ஒரு டேபிள்ஸ்பூன், ஆரஞ்சு ஜெல்லித்தூள் - ஒரு பாக்கெட், காய்ச்சிய பால் - ஒரு கப், ஃப்ரெஷ் க்ரீம் - அரை கப், கஸ்டர்ட் பவுடர் (ஆரஞ்சு ஃப்ளேவர்) - 2 டேபிள்ஸ்பூன்,  கண்டன்ஸ்டு மில்க் - கால் கப், டூட்டி ஃப்ரூட்டி - சிறிதளவு, உப்பு - ஒரு சிட்டிகை.

23.jpg

செய்முறை: பாலுடன் கஸ்டர்ட் பவுடரைச் சேர்த்துக் கரைத்துச் சூடாக்கி, அடுப்பைக் குறைந்த தீயில் வைத்துக் கிளறவும். சாஸ் போல கெட்டியாக வந்த வுடன் கண்டன்ஸ்டு மில்க், ஃப்ரெஷ் க்ரீம் சேர்த்துக் கிளறி இறக்கவும். மற்றொரு பாத்திரத்தில் ஆரஞ்சுப் பழச்சாற்றுடன் ஜெல்லித்தூள், உப்பு சேர்த்துச் சூடாக்கி, ஒரு கொதிவிட்டு இறக்கவும். இந்தப் பாத்திரத்தை குளிர்ந்த ஐஸ்கட்டிகள் நிரப்பிய பாத்தி ரத்துக்குள் வைக்கவும். கலவை நன்கு ஆறி, கெட்டியாகும்போது பால் கலவை சேர்த்து நன்கு அடிக்கவும் (முட்டை அடிக்கும் கருவியால் அடிக்கலாம்). கலவை நன்கு ஒன்றோடு ஒன்று கலந்து நுரைத்து வரும்போது விருப்பமான கிண்ணத்தில் ஊற்றவும். மேலே டூட்டி ஃப்ரூட்டி, காய்ந்த திராட்சை தூவி, ஃப்ரிட்ஜில் 2 மணி நேரம் வைத்து எடுத்துப் பரிமாறவும்.

லெட்டூஸ் கூல் சாலட்

தேவையானவை: லெட்டூஸ் இலைகள் - 4 (பொடியாக நறுக்கவும்), உலர்திராட்சை - 2 டேபிள்ஸ்பூன், பாதாம், பிஸ்தா துருவல் - தலா 2 டேபிள்ஸ்பூன், சர்க்கரை - சிறிதளவு, மிளகுத்தூள் - ஒரு டீஸ்பூன், எலுமிச்சைப் பழம் - ஒன்று, இளம் ஸ்வீட் கார்ன் முத்துகள் - 2 டேபிள்ஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

24.jpg

செய்முறை: எலுமிச்சைப் பழத்தைச் சாறு பிழியவும். லெட்டூஸ் இலைகளுடன் பாதாம், பிஸ்தா, சர்க்கரை, மிளகுத்தூள், உலர் திராட்சை, ஸ்வீட் கார்ன் முத்துகள், உப்பு சேர்த்துக் கலக்கவும். மேலே எலுமிச்சைச் சாறு பிழிந்து கலந்து, ஃப்ரிட்ஜில் அரை மணி நேரம் வைத்து எடுத்துப் பரிமாறவும்.

தயிர் - சீஸ் போண்டா

தேவையானவை: உருளைக்கிழங்கு - ஒன்று (வேகவைத்து, தோல் நீக்கி மசிக்கவும்), துருவிய சீஸ் - ஒரு கப், சோள மாவு (கார்ன்ஃப்ளார்), மைதா மாவு - தலா ஒரு டேபிள்ஸ்பூன், இஞ்சி - பூண்டு விழுது, மிளகாய்த்தூள் - தலா ஒரு டீஸ்பூன், கெட்டித்தயிர் - அரை கப், சாட் மசாலாத்தூள் - அரை டீஸ்பூன், ஆய்ந்த செலரி கீரை- ஒரு டேபிள்ஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

25.jpg

செய்முறை: சோள மாவுடன், மைதா மாவு, மிளகாய்த் தூள், உப்பு, இஞ்சி - பூண்டு விழுது, தேவையான அளவு தண்ணீர் சேர்த்துக் கெட்டியாகக் கரைக்கவும். உருளைக்கிழங்குடன் சீஸ் துருவல், உப்பு சேர்த்துப் பிசைந்து சிறிய உருண்டைகளாக்கவும். வாணலியில் எண்ணெயைக் காயவிட்டு, உருண்டைகளைக் கரைத்து வைத்த மாவு கலவையில் முக்கி எடுத்து எண்ணெயில் போட்டுப் பொன்னிறமாகப் பொரித்தெடுக்கவும். தயிருடன் சாட் மசாலாத்தூள் சேர்த்துக் கலக்கவும். இதில் பொரித்த சீஸ் போண்டாக்களைப் போட்டு, மேலே செலரி கீரை தூவிப் பரிமாறவும்.

சோயா‌ மில்க் ஷேக்

தேவையானவை: சோயா பால் - ஒரு கப்,  காய்ச்சி ஆறவைத்த பால் - அரை கப், சர்க்கரை - 2 டேபிள்ஸ்பூன், விருப்பமான ஃப்ரூட் கலவை - அரை கப் (தோல், விதை நீக்கியது).

26.jpg

செய்முறை: அடிகனமான பாத்திரத்தில் சோயா பால் ஊற்றிச் சூடாக்கி, அடுப்பைக் குறைந்த தீயில் வைத்துக் கிளறி ஒரு கொதிவிடவும். இதனுடன் பால், சர்க்கரை சேர்த்துக் கொதிக்கவைத்து இறக்கி ஆறவிடவும். பிறகு, பழத்துண்டுகளைச் சேர்த்து மிக்ஸியில் நுரைக்க அடித்து எடுக்கவும். ஐஸ்கட்டிகள் சேர்த்துப் பரிமாறலாம்.

குறிப்பு: சோயா பால் செய்முறை `சோயா பால்’ ரெசிப்பியில் தனியே குறிப்பிடப்பட்டுள்ளது.

செலரி சட்னி

தேவையானவை: செலரி கீரை - அரை கட்டு, நறுக்கிய கொத்தமல்லித்தழை, தேங்காய்த் துருவல் - தலா 2 டேபிள்ஸ்பூன்,  பச்சை மிளகாய் - 2, பூண்டுப் பல் - 2, தோல் சீவிய இஞ்சி -  சிறிய துண்டு, பொட்டுக்கடலை - ஒரு டேபிள்ஸ்பூன், கடுகு, உளுத்தம்பருப்பு - தலா அரை டீஸ்பூன், பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை, சீரகம் - அரை டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

27.jpg

செய்முறை: வாணலியில் எண்ணெய் விட்டுச் சூடானதும் பூண்டு, செலரி, கொத்த மல்லித்தழை, இஞ்சி, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி இறக்கவும். இதனுடன் தேங்காய்த் துருவல், பொட்டுக்கடலை, உப்பு, சிறிதளவு தண்ணீர்விட்டு நைஸாக அரைத்து எடுக்கவும். மற்றொரு வாணலியில் சிறிதளவு எண்ணெய்விட்டு காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு, சீரகம், பெருங்காயத்தூள், கறிவேப்பிலை  தாளித்து சட்னியுடன் கலந்து பரிமாறவும்.

செலரி சூப்

தேவையானவை:  நறுக்கிய செலரி கீரை - ஒரு கப் (அடிப்பகுதியை நீக்கிவிட்டு அலசி, தண்டு, இலையை நறுக்கவும்), சுக்குத்தூள் - அரை டீஸ்பூன், பச்சை மிளகாய் - ஒன்று (பொடியாக நறுக்கவும்), சோயா பீன்ஸ் - 2 டேபிள்ஸ்பூன், பூண்டு - 2 பல், தக்காளி - ஒன்று (பொடியாக நறுக்கவும்), சிவப்பு ராஜ்மா - 2 டேபிள்ஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

28.jpg

செய்முறை: சோயா, ராஜ்மாவை  ஆறு மணி நேரம் ஊறவைத்து, வேகவைத்து எடுக்கவும். இதனுடன், தக்காளி, பச்சை மிளகாய், பூண்டு,  முக்கால் கப் செலரி கீரை, உப்பு சேர்த்து மிக்ஸியில் போட்டு, தண்ணீர்விட்டு அரைத்து எடுத்து வடிகட்டவும். இதைச் சூடாக்கி ஒரு கொதிவிடவும். மீதமுள்ள செலரி இலைகளைத் தூவி, சுக்குத்தூள் சேர்த்து இறக்கிப் பரிமாறவும்.

லெட்டூஸ் பொரியல்

தேவையானவை: லெட்டூஸ் இலை - 10 (பொடியாக நறுக்கவும்), பெரிய வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கவும்), தக்காளி - ஒன்று (பொடியாக நறுக்கவும்), வேகவைத்த கடலைப்பருப்பு, பாசிப்பருப்பு - தலா ஒரு டேபிள்ஸ்பூன், இஞ்சி - பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன், கடுகு – கால் டீஸ்பூன், தேங்காய்த் துருவல் - 2 டேபிள்ஸ்பூன், காய்ந்த மிளகாய் - 2, எலுமிச்சைச் சாறு - 3 டீஸ்பூன், மஞ்சள்தூள் - சிறிதளவு, ஒன்றிரண்டாகப் பொடித்த வேர்க்கடலை - ஒரு டேபிள்ஸ்பூன், எண்ணெய், உப்பு -  தேவையான அளவு.

29.jpg

செய்முறை: வாணலியில் எண்ணெய்விட்டு கடுகு தாளித்து, காய்ந்ததும் வெங்காயம், தக்காளி, இஞ்சி - பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். இதனுடன் காய்ந்த மிளகாய், வேகவைத்த பருப்பு, உப்பு, மஞ்சள்தூள், வேர்க்கடலை சேர்த்துக் கிளறவும். பிறகு லெட்டூஸ் இலைகள் சேர்த்து வதக்கி, சிறிதளவு தண்ணீர் தெளித்து வேகவிடவும். நன்றாக வெந்து சுருண்டு வரும்போது தேங்காய்த்துருவல் சேர்த்துக் கிளறவும். மேலே எலுமிச்சைச் சாறு சேர்த்து இறக்கவும்.

குறிப்பு: பருப்புகளை 10 நிமிடங்கள் ஊறவைத்து, குழையாமல் வேகவிட்டு எடுக்கவும்.

Link to comment
Share on other sites

சத்தான காலை டிபன் திணை மிளகு பொங்கல்

 

அனைத்து தரப்பினரும் அடிக்கடி சிறுதானிங்களை உணவில் சேர்த்து கொள்வது நல்லது. இன்று திணை அரிசியை வைத்து பொங்கல் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

 
சத்தான காலை டிபன் திணை மிளகு பொங்கல்
 
தேவையான பொருட்கள் :

திணை அரிசி - ஒரு கப்,
பாசிப்பருப்பு - கால் கப்,
மிளகு -  2 டீஸ்பூன்,
உப்பு , நெய் -  தேவைக்கு,
கறிவேப்பிலை - சிறிதளவு,
பச்சை மிளகாய் -  2
சீரகம் - 2 டீஸ்பூன்,
இஞ்சித் துருவல் - சிறிதளவு,
முந்திரி - 10.

201709270912253894_1_thinairicepepperpon

செய்முறை :

ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

இஞ்சியை தோல் நீக்கி பொடியாக நறுக்கி கொள்ளவும்.

திணை அரிசி, பாசிப்பருப்பை வெறும் வாணலியில் தனித்தனியாக வறுத்து கொள்ளவும்.

வறுத்த அரிசி, பருப்பை குக்கரில் போட்டு அதனுடன் சீரகம், பச்சை மிளகாய், இஞ்சி, உப்பு, 4 கப் தண்ணீர் சேர்த்து குழைய வேக விடவும்.

வாணலியில் நெய் விட்டு முந்திரி, கறிவேப்பிலை சேர்த்து தாளித்து பொங்கலுடன் சேர்த்து கலந்து பரிமாறவும்.

சத்தான காலை உணவு திணை மிளகு பொங்கல் ரெடி.
Link to comment
Share on other sites

சப்பாத்திக்கு அருமையான காராமணி கூட்டு

காராமணியில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது. இன்று சப்பாத்திக்கு தொட்டுக்கொள்ள சத்தான காராமணி கூட்டு செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

 
சப்பாத்திக்கு அருமையான காராமணி கூட்டு
 
தேவையான பொருட்கள் :

காராமணி - 200 கிராம்,
தேங்காய் துருவல் - 4 டீஸ்பூன்,
பச்சை மிளகாய் - 2,
துவரம்பருப்பு (வேக வைத்தது) - ஒரு கப்,
கடுகு, உளுத்தம்பருப்பு - தலா ஒரு டீஸ்பூன்,
எண்ணெய் - 2 டீஸ்பூன்,
உப்பு - தேவையான அளவு.

201709301054208211_1_blackeyedbeankootu.

செய்முறை :

காராமணியை தேவையான அளவு தண்ணீர் சேர்த்து, உப்பு போட்டு வேக வைத்து தனியே வைக்கவும்.

தேங்காய் துருவல், பச்சை மிளகாயை மிக்சியில் போட்டு நைசாக அரைத்து கொள்ளவும்.

வேக வைத்த காராமணியுடன் அரைத்த தேங்காய் விழுதை சேர்த்து, வேக வைத்த பருப்பையும் சேர்த்து அடுப்பில் வைத்து கொதிக்கவிடவும்.

மற்றொரு கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து அதை காராமணியில் கொட்டி சிறிது நேரம் கொதிக்கவிட்டு இறக்கவும்.

சத்தான காராமணி கூட்டு.
Link to comment
Share on other sites

சூப்பரான கோதுமை ரவை பிரியாணி

 

பிரியாணியை பிடிக்காதவர்கள் யாரும் இருக்க முடியாது. இன்று கோதுமை ரவை, காய்கறிகளை வைத்து சூப்பரான பிரியாணி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

 
 
சூப்பரான கோதுமை ரவை பிரியாணி
 
தேவையான பொருட்கள் :

கோதுமை ரவை- ஒரு கப்,
உருளைக்கிழங்கு - 1,
பச்சைப் பட்டாணி, நறுக்கிய கேரட், பீன்ஸ், - தலா கால் கப்,
வெங்காயம் - 2,
பச்சை மிளகாய் - 4,
இஞ்சி, பூண்டு - சிறிதளவு,
பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை, புதினா - தலா ஒரு கப்,
கடலை எண்ணெய் - ஒரு டீஸ்பூன்,
பட்டை, கிராம்பு, சோம்பு, உப்பு - தேவையான அளவு.

201710031523069392_1_wheatravabiryani._L

செய்முறை :

கோதுமை ரவையை வெறும் கடாயில் போட்டு நன்றாக வாசனை வரும் வரை வறுத்த பின் உப்பு சேர்த்து வேக வைத்து, உதிரியாக வடித்துக் கொள்ளவும்.

காய்கறிகளைப் பொடியாக நறுக்கி கொள்ளவும்.

பச்சை மிளகாய், பூண்டு, இஞ்சி, சோம்பு, பட்டை, கிராம்பு ஆகியவற்றை விழுதாக அரைத்துக் கொள்ளவும்.

கடாயில் எண்ணெய் விட்டு, சூடானதும் வெங்காயத்தை போட்டு நன்றாக வதக்கவும்.

வெங்காயம் நன்றாக வதங்கியதும் காய்கறிகளை சேர்த்து வதக்கவும். காய்கறிகள் நன்றாக வேக சிறிதளவு தண்ணீர் சேர்த்து வேக விடவும்.

காய்கறிகள் வெந்தவுடன் அதில் அரைத்த விழுதைச் சேர்த்து… புதினா, கொத்தமல்லித்தழை சேர்த்து வதக்கி, வேக வைத்த கோதுமை ரவையை சேர்த்துக் கிளறி இறக்கவும்.

சூப்பரான கோதுமை ரவை பிரியாணி ரெடி.
Link to comment
Share on other sites

காலையில் சத்தான உணவு ஓட்ஸ் வெஜிடபிள் சாண்ட்விச்

 

காலையில் சத்தான உணவை சாப்பிடுவது அன்றைய தினம் முழுவதும் புத்துணர்ச்சியுடன் வைக்க உதவும். இன்று ஓட்ஸ் சாண்ட்விச் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

 
 
காலையில் சத்தான உணவு ஓட்ஸ் வெஜிடபிள் சாண்ட்விச்
 
தேவையான பொருட்கள் :

கோதுமை பிரட் துண்டுகள் - 6
ஓட்ஸ் - அரை கப்,
புதினா, கொத்தமல்லி - ஒரு கட்டு,
பச்சைமிளகாய் - 3,
தக்காளி - 2,
உருளைக்கிழங்கு - 2
பெரிய வெங்காயம் - 3,
பச்சை பட்டாணி - கால் கப்,
கேரட் - 1,
மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன்,
கரம் மசாலாத்தூள் - அரை டீஸ்பூன்,
உப்பு - தேவையான அளவு.

201710040855292273_1_Oatssandwich._L_sty

செய்முறை :

உருளைக்கிழங்கை வேக வைத்து தோல் உரித்து மசித்து கொள்ளவும்.

கேரட்டை துருவிக்கொள்ளவும்.

பட்டாணியை வேக வைத்து கொள்ளவும்.

வெங்காயம், தக்காளி, ப.மிளகாய், கொத்தமல்லி, புதினாவை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

ஓட்ஸை பத்து நிமிடம் கொதிநீரில் ஊற வைத்து வடித்துக் கொள்ளவும்.

கடாயில் எண்ணெய் விட்டு சூடாதும் பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

வெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளி, கேரட் சேர்த்து வதக்கவும்.

கேரட் வெந்ததும் அதனுடன் மசித்த உருளைக்கிழங்கு, வேக வைத்த பச்சைப் பட்டாணி கலந்து கரம் மசாலாத்தூள், மிளகாய்த்தூள், ஊற வைத்த ஓட்ஸ், உப்பு கலந்து சுருள வதக்கவும்.

கடைசியாக கொத்தமல்லி, புதினா கலந்து இறக்கவும்.

கோதுமை பிரட் துண்டுகளை டோஸ்ட் செய்து கொள்ளவும்.

டோஸ்டு செய்த பிரெட் ஸ்லைஸ் நடுவே இந்தக் கலவையை வைத்துப் பரிமாறவும்.

சூப்பரான ஓட்ஸ் வெஜிடபிள் சாண்ட்விச் ரெடி.

இதற்கு தொட்டுக் கொள்ள தக்காளி சாஸ் நன்றாக இருக்கும்.
Link to comment
Share on other sites

சூப்பரான உருளைக்கிழங்கு உருண்டைக் குழம்பு

 

சாதம், புலாவ், நாண், சப்பாத்திக்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும் உருளைக்கிழங்கு உருண்டைக் குழம்பு. இன்று இந்த குழம்பை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

 
சூப்பரான உருளைக்கிழங்கு உருண்டைக் குழம்பு
 
தேவையான பொருட்கள் :  

உருளைக்கிழங்கு - 2,
நல்லெண்ணெய் - 2 டீஸ்பூன்,
கடலைப்பருப்பு - 50 கிராம்,
துவரம்பருப்பு - ஒரு டேபிள்ஸ்பூன்,
தக்காளி - 1,
காய்ந்த மிளகாய் - 3,
பூண்டு - 5 பல்,
சின்னவெங்காயம் - 30 கிராம்,
புளி  - அரை எலுமிச்சை அளவு,  
பூண்டு - 1 டேபிள்ஸ்பூன்,
மஞ்சள்தூள் - சிறிதளவு,
சோம்பு - ஒரு டீஸ்பூன்,
மல்லித்தூள் (தனியாத்தூள்) - ஒரு டீஸ்பூன்,
மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன்,
கறிவேப்பிலை - சிறிதளவு,
கொத்தமல்லித்தழை - சிறிதளவு,
உப்பு - தேவையான அளவு.

201710061308140152_1_potatourundaikuzham

செய்முறை :

பூண்டு, சின்ன வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

புளியை நன்றாக கரைத்து கொள்ளவும்.

உருளைக்கிழங்கை தோல் நீக்கி சதுரமான துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.

கடலைப்பருப்பு, துவரம்பருப்பை நன்றாக கழுவி ஒரு மணி நேரம் ஊறவைத்து பிறகு பூண்டு, காய்ந்த மிளகாய், சோம்பு, கொத்தமல்லித்தழை, உப்பு சேர்த்து கொரகொரவென தண்ணீர் விடாமல் அரைத்து கொள்ளவும்.

அரைத்த மாவில் வெங்காயத்தைச் சேர்த்து சிறுசிறு உருண்டைகளாக பிடித்து வைக்கவும்.

வாணலியில் எண்ணெய்விட்டு நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.

வெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளி, பூண்டு சேர்த்து வதக்கவும்.

அனைத்தும் நன்றாக வதங்கியதும் உருளைக்கிழங்கு, கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.

இத்துடன் மல்லித்தூள், மஞ்சள்தூள், மிளகாய்த்தூள் சேர்த்து வதக்கவும்.

சிறிது தண்ணீர்விட்டுக் கொதிக்கவிட்டு, உப்பு, கெட்டியாகக் கரைத்த புளித்தண்ணீர் சேர்த்துக் கொதிக்கவிடவும்.

கொதி வரும்போது 2 உருண்டைகளை உதிர்த்து குழம்பில் விடவும். மீதமுள்ள உருண்டையையும் குழம்பில் சேர்க்கவும். உருண்டைகள் வெந்ததும் இறக்கி பரிமாறவும்.

சூப்பரான உருளைக்கிழங்கு உருண்டைக் குழம்பு ரெடி.
Link to comment
Share on other sites

குழந்தைகளுக்கு சத்தான கேரட் - பீன்ஸ் சாதம்

 

குழந்தைகள் காய்கறிகள் சாப்பிட அடம் பிடிக்கும். கேரட், பீன்ஸை சாதத்துடன் சேர்த்து வெரைட்டி ரைஸாக செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள்.

 
குழந்தைகளுக்கு சத்தான கேரட் - பீன்ஸ் சாதம்
 
தேவையான பொருட்கள் :

தக்காளி விழுது (பியுரி) - 1/2 கப்
அரிசி - 3/4 கப்
எண்ணெய் - தேவையான அளவு
சீரகம் - 1 தேக்கரண்டி
வெங்காயம் - 1
இஞ்சி - பூண்டு விழுது - 1 தேக்கரண்டி
கேரட் - 2
பீன்ஸ் - 5டி கிராம்
உப்பு - தேவையான அளவு
மிளகாய் தூள் - 1/2 தேக்கரண்டி
எலுமிச்சை சாறு - 1 தேக்கரண்டி

201710070906572013_1_beanscarrotrice._L_

செய்முறை :

அரிசியை நன்றாக கழுவி ஊற வைக்கவும்.

வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

பீன்ஸ், கேரட்டை நீளவாக்கில் வெட்டிக்கொள்ளவும்.

குக்கரில் எண்ணெயை விட்டு சீரகம் சேர்த்து பொரிந்ததும் வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.

வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி - பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்

அடுத்து அதனுடன் கேரட், பீன்ஸ் சேர்த்து நன்றாக வதக்கி கொள்ளவும்.

வதங்கியதும் தாக்காளி விழுது, உப்பு, மிளகாய் தூள், எலுமிச்சை சாறு சேர்த்து கிளறி விட்டு ஊறவைத்த அரிசியையும் சேர்த்து 3 கப் தண்ணீர் விட்டு குக்கரை மூடிபோட்டு 3 விசில் வந்ததும் 10 நிமிடம் மிதமான தீயில் வைத்து வேகவிட்டு இறக்கவும்.

விசில் போனவுடன் குக்கர் மூடியை திறந்து நன்றாக கலந்து பரிமாறவும்.

சூப்பரான குழந்தைகளுக்கு சத்தான கேரட் - பீன்ஸ் சாதம் ரெடி.
Link to comment
Share on other sites

வெஜ் சப்பாத்தி ரோல்

 

sl526856.jpg

என்னென்ன தேவை?
 
கோதுமை மாவு - 2 கப்,
பெரிய வெங்காயம் - 2,
இஞ்சி-பூண்டு விழுது - 1/2 டீஸ்பூன்,
குடைமிளகாய் - 1,
கேரட் - 2,
முட்டைகோஸ் - சிறிது,
உருளைக்கிழங்கு - 1,
வெள்ளை மிளகுத்தூள் - 1/2 டீஸ்பூன்,
உப்பு - தேவைக்கு,
சோயா சாஸ் - 1/4 டீஸ்பூன்,
தக்காளி சாஸ் - 1 டீஸ்பூன்,
எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்.

 

எப்படிச் செய்வது?
 
கோதுமை மாவை பிசைந்து அரை மணி நேரத்திற்கு ஊறவைக்கவும். வெங்காயம், குடைமிளகாய், கேரட், முட்டைகோஸ், உருளைக்கிழங்கை மெல்லியதாக நீளவாக்கில் நறுக்கிக் கொள்ளவும். கடாயில் எண்ணெயை ஊற்றி இஞ்சி-பூண்டு விழுதை போட்டு சிவந்ததும், நறுக்கிய காய்கறிகளை சேர்த்து வதக்கவும்.

வெள்ளை மிளகுத்தூள், உப்பு சேர்க்கவும். கடைசியாக சோயா சாஸ், தக்காளி சாஸ் சேர்த்து வதக்கி வைத்துக் கொள்ளவும். மாவை சரிசம உருண்டைகளாக உருட்டி, மெல்லிய சப்பாத்திகளாக திரட்டி தோசைக்கல்லில் எண்ணெய் விட்டு சுட்டெடுக்கவும். ஒவ்வொரு சப்பாத்திக்குள்ளேயும் 2 டீஸ்பூன் மசாலாவை வைத்து ரோல் செய்யவும். நடுவில் கட் செய்து தக்காளி கெட்ச்சப்புடன் பரிமாறவும்.

Link to comment
Share on other sites

குழந்தைகளுக்கு விருப்பமான சிக்கன் பொடிமாஸ்

 

குழந்தைகளுக்கு சிக்கன் என்றால் மிகவும் பிடிக்கும். இன்று குழந்தைகளுக்கு பிடித்தமான சிக்கன் பொடிமாஸ் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

 
குழந்தைகளுக்கு விருப்பமான சிக்கன் பொடிமாஸ்
 
தேவையானப் பொருட்கள் :

சிக்கன் துண்டுகள் - அரை கிலோ,
சின்ன வெங்காயம் - 50 கிராம்,
பச்சை மிளகாய் - ஐந்து,
எண்ணெ‌ய் - அரை கப்,
கறிவேப்பிலை - இரண்டு கொத்து,
கடுகு - ஒரு டேபிள் ஸ்பூன்,
உளுந்து - அரை டீஸ்பூன்,
சீரகம் - ஒரு டேபிள் ஸ்பூன்,
கடலைப் பருப்பு - 4 டேபிள் ஸ்பூன்,
தேங்காய் துருவல் - தேவையான அளவு,
உப்பு - தேவையான அளவு.

201710091504018712_1_chickenpodimas._L_s

செய்முறை :

சிக்கனை நன்றாக கழுவி கொள்ளவும்.

சின்ன வெங்காயம், ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

சிக்கனை சிறிதளவு உப்பு சேர்த்து வேகவைத்து எடுத்துக்கொள்ளவும். வேக வைத்த சிக்கனை உதிர்த்து கொள்ளவும்.

அடுப்பில் வாணலியை வைத்து எ‌ண்ணெ‌ய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுந்து, சீரகம் சேர்த்து தாளிக்கவும்.

எல்லாம் நன்கு சிவந்ததும் பச்சை மிளகாய், வெங்காயம், கறிவேப்பிலை போட்டு இரண்டு நிமிடம் வதக்கவும்.

வெங்காயம் சற்று வதங்கியதும் சிக்கன் துண்டுகளைப் போட்டு, ஐந்து நிமிடம் வதக்கவும்.

கடைசியாக தேங்காய்த் துருவல் சேர்த்து இரண்டு நிமிடம் கழித்து இறக்கி பரிமாறவும்.

சூப்பரான கோழி பொடிமாஸ் ரெடி.
Link to comment
Share on other sites

மாலை நேர ஸ்நாக்ஸ் ஸ்பெஷல் தயிர் வடை

வடையை சட்னி வைத்து சாப்பிடுவதற்கு பதிலாக அதில் தயிர், மசாலா தூள், காரா பூந்தி சேர்த்து மாலை நேரத்தில் சாப்பிட்டால் சூப்பராக இருக்கும்.

 
 
மாலை நேர ஸ்நாக்ஸ் ஸ்பெஷல் தயிர் வடை
 
தேவையான பொருட்கள் :

முழு வெள்ளை உளுந்து - ஒரு கப்,
கெட்டித் தயிர் - 2 கப்,
பால் - அரை கப்,
பச்சை மிளகாய் - 2,
பாதாம், முந்திரி - தலா 8,
மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன்,
சீரகத்தூள் - அரை டீஸ்பூன்,
காரா பூந்தி - தேவைக்கு,
எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

201710121520034799_1_specialthayirvadai.

செய்முறை :

உளுந்தை நன்றாக கழுவி ஒரு மணி நேரம் ஊறவிட்டு, கொஞ்சம் கொஞ்சமாக நீர் தெளித்து, மாவு பொங்கி வர ஆட்டி எடுக்கவும்.

தயிரை நன்கு கடைந்து அதில் பாதியளவு எடுத்து… பால், சிறிது உப்பு சேர்த்துக் கலந்து வைக்கவும்.

முந்திரி, பாதாம், பச்சை மிளகாய் மூன்றையும் சேர்த்து நைஸான விழுதாக அரைக்கவும். இந்த விழுதுடன் சிறிதளவு உப்பு, மீதமுள்ள தயிர் சேர்த்து நன்கு கலக்கவும்.

வாணலியில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் உளுந்து மாவை கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து வடைகளாகத் தட்டி எண்ணெயில் போட்டு பொரித்தெடுக்கவும்.

பொரித்த வடைகளை பால் - தயிர் கலவையில் 10 நிமிடம் ஊறவைத்து எடுத்து, ஒரு அகலமான தட்டில் வைக்கவும். பரிமாறுவதற்கு 15 நிமிடம் முன்பு அதன் மேல் முந்திரி - தயிர் கலவையை ஊற்றி, மேலே சீரகத்தூள், மிளகாய்த்தூள் காரா பூந்தி தூவி பரிமாறவும்.

சூப்பரான ஸ்பெஷல் தயிர் வடை ரெடி.
Link to comment
Share on other sites

தயிர் சாதத்திற்கு சூப்பரான பூண்டு ஊறுகாய்

ஊறுகாயில் நிறைய வகைகள் உள்ளன. அதில் ஒன்றாக பூண்டு ஊறுகாயை எப்படி எளிமையான முறையில் வீட்டில் செய்வதென்று பார்க்கலாம்.

 
தயிர் சாதத்திற்கு சூப்பரான பூண்டு ஊறுகாய்
 
தேவையான பொருட்கள்:

பூண்டு - 1 கப்
எலுமிச்சை சாறு - 1/2 கப்
சீரகம் - 1 1/2 டேபிள் ஸ்பூன்
வெந்தயம் - 1 டேபிள் ஸ்பூன்
மல்லி - 2 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
மிளகாய் தூள் - 4 டேபிள் ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
நல்லெண்ணெய் - 1/4 கப்

201710131244285105_1_Garlicpickle._L_sty

செய்முறை :

பூண்டை தோல் உரித்து தனியாக வைக்கவும்.

சீரகம், வெந்தயம், மல்லியை தனித்தனியாக கடாயில் போட்டு வாசனை வரும் வரை வறுத்து ஆறியதும் மிக்சியில் போட்டு பொடித்து கொள்ளவும்.

ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் சிறிது எண்ணெயை ஊற்றி காய்ந்ததும், பூண்டை போட்டு வதக்க வேண்டும்.

பூண்டு வதங்கம் போதே அரைத்து வைத்துள்ள பொடியை போட்டு அதனுடன், உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள் சேர்த்து நன்கு கிளறிவிட வேண்டும்.

அடுத்து எலுமிச்சை சாற்றை விட்டு, நன்கு கெட்டியாகும் வரை அடுப்பில் வைக்க வேண்டும். சற்று கெட்டியானதும், இறக்கி அதனை குளிர வைத்து, ஒரு காற்றுப் புகாத பாட்டிலில் போட்டு, பயன்படுத்த வேண்டும்.

இப்போது பூணடு ஊறுகாய் தயார்!!!
Link to comment
Share on other sites

சப்பாத்திக்கு சத்தான பாலக் கீரை பருப்பு கூட்டு

சப்பாத்தி, சாதத்திற்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும் இந்த பாலக் கீரை பருப்பு கூட்டு. இந்த கீரை கூட்டை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

 
சப்பாத்திக்கு சத்தான பாலக் கீரை பருப்பு கூட்டு
 
தேவையான பொருட்கள் :

பாலக்கீரை - 2 கைப்பிடி,
துவரம்பருப்பு - 1/4 கப்,
தேங்காய்ப்பூ - 2 டேபிள்ஸ்பூன்,
பூண்டு பற்கள் - 4,
மிளகாய்ப்பொடி, மல்லிப்பொடி - தலா 1/2 டீஸ்பூன்,
சீரகப்பொடி- 1 டீஸ்பூன்,
மஞ்சள்பொடி, உப்பு, எண்ணெய் - தேவைக்கு

தாளிக்க :

காய்ந்த மிளகாய் - 2
கடுகு, உளுந்தம் பருப்பு - தலா 1/4 டீஸ்பூன்.

201710190916066793_1_palakkeeraiparuppuk

செய்முறை :

பாலக்கீரையை நன்றாக சுத்தம் செய்து வைக்கவும்.

சீரகப்பொடி, தேங்காய்ப்பூவை நைசாக அரைத்து கொள்ளவும்.

துவரம்பருப்பை நன்றாக கழுவி மஞ்சள்பொடி, பூண்டு சேர்த்து மூழ்கும் வரை நீர் விட்டு மலர வேகவைத்து எடுக்கவும்.

பாலக்கீரையை நறுக்கி நீர் சேர்த்து மல்லிப்பொடி, மிளகாய்ப்பொடி, உப்பு சேர்த்து சிறிது நேரம் வேக விட்டு இறக்கி மத்தினால் மசிக்கவும். அல்லது மிக்சியில் சுற்றவும்.

வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் காய்ந்த மிளகாய், கடுகு, உளுந்தம் பருப்பு போட்டு தாளித்து பருப்புடன் கீரை, அரைத்த தேங்காய் சேர்த்து கொதித்ததும் இறக்கிப் பரிமாறவும்.

சூப்பரான பாலக் கீரைக் கூட்டு ரெடி.

இந்தப் பாலக் கீரை கூட்டை சப்பாத்திக்கு சைடு டிஷ் ஆகவும் மதிய உணவுடனும் சேர்த்துச் சாப்பிடலாம்.
Link to comment
Share on other sites

சத்தான ப்ரோக்கோலி கேரட் சாலட்

 

ப்ரோக்கோலி, கேரட்டில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது. இன்று இது இரண்டையும் வைத்து சுவையான சாலட் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

 
சத்தான ப்ரோக்கோலி கேரட் சாலட்
 
தேவையான பொருட்கள் :

ப்ரோக்கோலி - 100 கிராம்
கேரட் - 50 கிராம்
பெங்களூர் தக்காளி - 1
பெரிய வெங்காயம் - 1
உப்பு - தேவையான அளவு
புதினா - சிறிதளவு
கொத்தமல்லித்தழை - சிறிதளவு
குடைமிளகாய் - 50 கிராம் விதைகள் நீக்கவும்
மிளகுத் தூள் - தேவையான அளவு.

201710201050340176_1_broccolicarrotsalad

செய்முறை :

ப்ரோக்கோலியை தண்டுடன் நறுக்கி வைக்கவும்.

வெங்காயம், புதினா, கொத்தமல்லி, குடைமிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

தக்காளியை துண்டுகளாக நறுக்கி வைக்கவும்.

நறுக்கிய ப்ரோக்கோலியைக் கடாயில் சேர்த்து அரை பதம் வேகும் வரை வதக்கவும்.

அதனுடன் நறுக்கிய குடைமிளகாயைச் சேர்த்து வதக்கி இறக்கவும்.

ஒரு பாத்திரத்தில் வதக்கிய குடைமிளகாய், ப்ரோக்கோலி, கேரட், தக்காளி, பெரிய வெங்காயம், போதுமான உப்பு, மிளகுத்தூளை சேர்த்து நன்றாக பிரட்டவும்.

கடைசியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை, புதினா சேர்த்து காய்கறிகள் மீது தூவினால் சுவையான ப்ரோக்கோலி சாலட் ரெடி.
Link to comment
Share on other sites

சில்லி_சப்பாத்தி

தேவையான பொருள்கள் -
சப்பாத்தி - 4
பெரிய வெங்காயம் - 2
தக்காளி - 1
பச்சை மிளகாய் - 1
தக்காளி சாஸ் - 2 மேஜைக்கரண்டி
மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி
சிவப்பு புட் கலர் - சிறிது
மல்லித்தழை - சிறிது
உப்பு - சிறிது
எண்ணெய் - 4 மேஜைக்கரண்டி

செய்முறை -

1.சப்பாத்தி, தக்காளி, வெங்காயம் மூன்றையும் சிறிய துண்டுகளாக வெட்டி வைக்கவும்.

2. பச்சை மிளகாயை இரண்டாக கீறி வைக்கவும். புட் கலரை சிறிது தண்ணீர் விட்டு கரைத்து வைக்கவும்.

3.அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் வெங்காயம், பச்சை மிளகாய் மற்றும் சிறிது உப்பு சேர்த்து வதக்கவும். வெங்காயம் வதங்கியவுடன் தக்காளி சேர்த்து வதக்கவும்.

4.தக்காளி நன்கு வதங்கியதும் மிளகாய் தூள், தக்காளி சாஸ், கரைத்து வைத்துள்ள கலர் தண்ணீர் எல்லாவற்றயும் சேர்த்து ஒரு நிமிடம் கிளறவும்.

5.பிறகு அதனுடன் சப்பாத்தி துண்டுகளை சேர்த்து நன்கு கிளறி இறுதியில் மல்லித்தழை தூவி அடுப்பை அணைக்கவும்.

சுவையான சில்லி சப்பாத்தி ரெடி.

 
Bild könnte enthalten: Essen
Link to comment
Share on other sites

முட்டை - சிக்கன் சப்பாத்தி ரோல்

 

பள்ளிக்குச் செல்லும் குழந்தைகளுக்கு, லன்ச் பாக்ஸில் வைத்து அனுப்ப ஏற்றது இந்த முட்டை - சிக்கன் சப்பாத்தி ரோல். இதன் செய்முறை இப்போது பார்க்கலாம்.

 
 
முட்டை - சிக்கன் சப்பாத்தி ரோல்
 
தேவையான பொருட்கள் :

சப்பாத்தி - 4,
முட்டை - 4,
சிக்கன் (எலும்பு இல்லாதது) - 300 கிராம்,
பெரிய வெங்காயம் - 2,
மிளகுதூள் - கால் டீஸ்பூன்,
மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை,
கொத்தமல்லி - சிறிதளவு,
உப்பு - சுவைக்கேற்ப.

அரைக்க :

மிளகு - கால் டீஸ்பூன்,
சோம்பு, சீரகம் (இரண்டும் சேர்த்து) - கால் டீஸ்பூன்,
இஞ்சி - ஒரு துண்டு,
பூண்டு - 3 பல்,
பட்டை - 1.

201710231237454123_1_chickeneggchapatiroll._L_styvpf.jpg

செய்முறை :

சிக்கனை சிறு துண்டுகளாக நறுக்கி, நன்கு கழுவி வைத்துக்கொள்ளுங்கள்.

வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

அரைக்கக் கொடுத்துள்ள பொருட்களை லேசாக நீர் விட்டு அரைத்து கொள்ளவும்.

கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் வெங்காயத்தை போட்டு வதக்கவும்.

வெங்காயம் நன்றாக வதங்கியதும் அரைத்த விழுது, மஞ்சள் தூள், மிளகுத்தூள் போட்டு நன்கு வதக்குங்கள். பச்சை வாசனை போனதும், சிக்கன் துண்டுகளையும் போட்டு, சிறிது உப்பு, கொத்தமல்லி போட்டு, சுருள சுருளக் கிளறி இறக்குங்கள்.

முட்டையுடன் மஞ்சள்தூள், உப்பு, மிளகுதூள் சேர்த்து அடித்துக்கொள்ளுங்கள்.

தோசைக்கல்லைக் காயவைத்து, தீயை நன்கு குறைத்துவைத்து, சப்பாத்தியை கல்லில் போட்டு, அதன் மேல் முட்டையை ஊற்றிப் பரப்பிவிட்டு, அந்த லேயர் மேல் சிக்கன் மசாலாவைத் தூவி, (தோசைக்கல்லில் இருக்கும்போதே) சப்பாத்தியை அப்படியே பாய் போல மெதுவாக சுருட்டுங்கள். கல்லின் சூட்டுக்கு, ரோல் நன்கு சிக்கன், முட்டை கலவையுடன் பிடித்துக்கொள்ளும். அப்படியே சுற்றிலும் எண்ணெய் விட்டு, திருப்பிவிட்டு வேகவிடுங்கள். இது வேக 5 நிமிடமாகும். வெந்தபிறகு சிறு துண்டுகள் போட்டுப் பரிமாறுங்கள்.

சூப்பரான முட்டை - சிக்கன் சப்பாத்தி ரோல் ரெடி.

குறிப்பு: மதியம் செய்து மிச்சமான சிக்கன் கிரேவி இருந்தாலும், இந்த சப்பாத்தி ரோல்ஸ் செய்யலாம். குழந்தைகள் விரும்பிச் சாப்பிடுவார்கள்
Link to comment
Share on other sites

சாதத்திற்கு அருமையான பேபி உருளை மோர்க்குழம்பு

 

மோர்க்குழம்பில் உருளைக்கிழங்கு சேர்த்து செய்தால் அருமையாக இருக்கும். இன்று இந்த மோர் குழம்பை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

 
 
 
 
சாதத்திற்கு அருமையான பேபி உருளை மோர்க்குழம்பு
 
தேவையான பொருட்கள் :

பேபி உருளைக்கிழங்கு - கால் கிலோ,
பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன்,
பெரிய வெங்காயம் - 2,
புளிக்காத மோர் - 200 மில்லி.

மோர்க்குழம்பு மசாலா செய்ய:

மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை,
பூண்டு - 5 பல்,
இஞ்சி - ஒரு இஞ்ச் அளவு,
தேங்காய்த் துருவல் - 2 டேபிள்ஸ்பூன்,
கடலைப்பருப்பு - ஒரு டேபிள்ஸ்பூன்,
துவரம்பருப்பு - ஒரு டேபிள்ஸ்பூன்,
பச்சரிசி - அரை டேபிள்ஸ்பூன்,
மல்லி (தனியா) - 1 டீஸ்பூன்,
பச்சை மிளகாய் - 2.

தாளிக்க:

எண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்,
கடுகு - 1 டீஸ்பூன்,
கறிவேப்பிலை - சிறிது,
கொத்தமல்லித்தழை - சிறிதளவு,
சீரகம் - 1 டீஸ்பூன்.

201710241244519686_1_potatomorkuzhambu._L_styvpf.jpg

செய்முறை :

வெங்காயம், கறிவேப்பிலை, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

தயிரை நன்றாக கரைத்து கொள்ளவும்.

ஒரு மணி நேரம் ஊறவைத்த கடலைப்பருப்பு, துவரம்பருப்பு, பச்சரிசியுடன் மல்லி (தனியா), பச்சை மிளகாய், பூண்டு, இஞ்சி, தேங்காய்த் துருவல், மஞ்சள்தூள் ஆகியவற்றைச் சேர்த்து மையாக அரைக்கவும்.

பேபி உருளையை தோல் சீவி இரு துண்டுகளாக நறுக்கவும்.

வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு தாளித்து நறுக்கிய வெங்காயம், சீரகம், கறிவேப்பிலை மற்றும் கொத்தமல்லித்தழையைச் சேர்த்து வதக்கவும்.

இதில், பேபி உருளையைச் சேர்த்து வதக்கவும்.

பின்னர் அரைத்த மசாலாவைச் சேர்த்து நன்கு வதக்கவும்.

பெருங்காயத்தூள், சிறிது தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும்.

உருளைக்கிழங்கு நன்றாக வெந்தவுடன் கடைசியாக புளிக்காத மோரைச் சேர்த்து இறக்கவும்.

சூப்பரான பேபி உருளை மோர்க்குழம்பு ரெடி.

குறிப்பு: வெள்ளைப்பூசணி, சுரைக்காய், , வாழைத்தண்டு, புடலங்காயிலும் மோர்க்குழம்பு செய்யலாம்.
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குட்டி குட்டி கிழங்கில் செய்யும் மோர் குழம்பு அருமையாய் இருக்கும்.....!  tw_blush:

Link to comment
Share on other sites

நாள்பட்ட சளியை குணமாக்கும் தூதுவளைக் குழம்பு

ஆஸ்துமா, நாள்பட்ட சளி, இருமலால் பாதிக்கப்பட்டவருக்கு நலம் தரும் ஆரோக்கிய உணவு இந்த தூதுவளைக் குழம்பு. இதன் செய்முறை இப்போது பார்க்கலாம்.

 
நாள்பட்ட சளியை குணமாக்கும் தூதுவளைக் குழம்பு
 
தேவையான பொருட்கள் :

முள் நீக்கிய தூதுவளை இலை - ஒரு கைப்பிடி,
மிளகு - ஒரு டீஸ்பூன்,
துவரம் பருப்பு - ஒரு டீஸ்பூன்,
பச்சரிசி - ஒரு டீஸ்பூன்,
காய்ந்த மிளகாய் - 1,
பெருங்காயம் - சிறிதளவு,
புளி - சிறு நெல்லிக்காய் அளவு,
மஞ்சள்தூள் - 2 சிட்டிகை,
கடுகு - அரை டீஸ்பூன்,
உப்பு - தேவையான அளவு,
நல்லெண்ணெய் - ஒரு டீஸ்பூன்.

201710260904028096_1_thuthuvalaikulambu._L_styvpf.jpg

செய்முறை :

புளியை நீரில் ஊறவைத்து, கரைத்து வடிகட்டிக்கொள்ளவும்.

மிளகு, துவரம் பருப்பு, பச்சரிசி, காய்ந்த மிளகாய் இவற்றை தனித்தனியே வெறும் கடாயில் வறுத்துக்கொள்ளவும்.

தூதுவளைக் கீரையை ஒரு சொட்டு நல்லெண்ணெய் விட்டு வதக்கி, வறுத்து வைத்த பொருட்களுடன் அரைத்துக்கொள்ளவும்.

கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, பெருங்காயம் சேர்த்து வறுத்து, அரைத்த விழுது, உப்பு, புளிக் கரைசல் சேர்த்து, பச்சை வாசனை போகும் வரை கொதிக்கவைத்து இறக்கி சூடாக சாதத்துடன் பரிமாறவும்.

தேவையெனில் தாளிக்கும்போது பொடியாக நறுக்கிய பூண்டு, வெங்காயம் சேர்த்துக்கொள்ளலாம்.
Link to comment
Share on other sites

தயிர் சாதத்திற்கு சூப்பரான வெங்காய ஊறுகாய்

மாங்காய், எலுமிச்சை, பூண்டு ஊறுகாய் சாப்பிட்டு இருப்பீங்க. வெங்காயத்தில் ஊறுகாய் செய்தால் சூப்பராக இருக்கும். இன்று இதன் செய்முறையை பார்க்கலாம்.

 
தயிர் சாதத்திற்கு சூப்பரான வெங்காய ஊறுகாய்
 
தேவையான பொருட்கள் :

புளி - எலுமிச்சை அளவு
பெரிய வெங்காயம் - அரை கிலோ
வெல்லம் - ஒரு டேபிள்ஸ்பூன்
எண்ணெய் - 5 டேபிள்ஸ்பூன்
வெந்தயப்பொடி- ஒரு டீஸ்பூன்
பெருங்காயத்தூள்- ஒரு டீஸ்பூன்
மிளகாய்த்தூள் - ஒன்றரை டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன்

201710271246146359_1_onionpickle._L_styvpf.jpg

செய்முறை :

வெங்காயத்தை நீளமாக நறுக்கி நறுக்கி வைத்துக்கொள்ளவும்.

அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் விடாமல் புளியைச் சேர்த்து லேசாக வதக்கி ஆறியதும் சிறிது தண்ணீர் ஊற்றி பேஸ்ட் போன்று மிக்ஸியில் அரைத்துக்கொள்ளவும்.

அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் நறுக்கிய வெங்காயத்தைச் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.

இத்துடன் புளி பேஸ்ட், வெந்தயப் பொடி, பெருங்காயத்தூள், மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், உப்பு சேர்த்து மசாலா வாசனை போகும் வரை வதக்கவும்.

எண்ணெய் சுருண்டு வந்ததும் பொடித்த வெல்லம் சேர்த்து கிளறி இறக்கவும்.

சூப்பரான வெங்காய ஊறுகாய் ரெடி.

ஆறியதும் கண்ணாடி பாட்டிலில் போட்டு வைத்தால் சீக்கிரம் கெட்டுப்போகாது.
Link to comment
Share on other sites

சூப்பரான ஸ்நாக்ஸ் சிக்கன் லாலிபாப்

 

விடுமுறை நாட்களில் குழந்தைகளுக்கு விருப்பமான சிக்கனை வைத்து சூப்பரான சிக்கன் லாலிபாப் செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள்.

 
சூப்பரான ஸ்நாக்ஸ் சிக்கன் லாலிபாப்
 
தேவையான பொருட்கள்:  

சிக்கன் விங்ஸ் - 1/2 கிலோ (தோல் நீக்கப்பட்டது)
எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு
சோள மாவு - 2 டேபிள் ஸ்பூன்
சோயா சாஸ் - 2 டேபிள் ஸ்பூன்
வினிகர் - 1 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
இஞ்சி பேஸ்ட் - 2 டீஸ்பூன்
பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
அஜினமோட்டோ - 1/4 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு

மாவிற்கு...

மைதா - 6 டேபிள் ஸ்பூன்
சோள மாவு - 6 டேபிள் ஸ்பூன்
பொடியாக நறுக்கிய கொத்தமல்லி - 1 டேபிள் ஸ்பூன்
பொடியாக நறுக்கிய பூண்டு - 1 டேபிள் ஸ்பூன்
பொடியாக நறுக்கிய இஞ்சி - 1 டேபிள் ஸ்பூன்
வினிகர் - 1 டேபிள் ஸ்பூன்
மிளகாய் தூள் - 1 டேபிள் ஸ்பூன்
முட்டை - 1
அஜினமோட்டோ - 1/2 டீஸ்பூன்
ஆரஞ்சு நிற கேசரி பவுடர் - 1/2 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
தண்ணீர் - தேவையான அளவு

201711011523036427_1_chickenlollipop._L_styvpf.jpg

செய்முறை :

முதலில் சிக்கன் விங்ஸை நன்கு நீரில் சுத்தமாக கழுவி, அதில் உள்ள நீரை முற்றிலும் வடித்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் ஒரு சிக்கன் விங்ஸை எடுத்து, அதனை கத்தியால் கீறி, அதன் நடுலே உள்ள ஒல்லியான எலும்பை நீக்கிவிட்டு, நல்ல தடிமனான எலும்பின் ஒரு பக்கமாக, சதைப்பற்றைக் கொண்டு வர வேண்டும். இதுப்போன்று அனைத்து சிக்கன் விங்ஸையும் செய்து கொள்ள வேண்டும்.

ஒரு பாத்திரத்தில் சிக்கன் விங்ஸை போட்டு பின் அதனுடன் சோள மாவு, சோயா சாஸ், வினிகர், மிளகாய் தூள், இஞ்சி பூண்டு பேஸ்ட், அஜினமோட்டோ, உப்பு  போட்டு, நன்கு பிரட்டி, 2 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.

பின்பு ஒரு பாத்திரத்தில் மாவிற்கு கொடுத்துள்ள அனைத்து பொருட்களையும் போட்டு, நன்கு கெட்டியான மாவாக தேவையான அளவு தண்ணீர் சேர்த்து பிசைந்து கொள்ள வேண்டும்.

சிக்கனானது 2 மணிநேரம் நன்கு ஊறியப் பின்னர், ஒரு அகன்ற வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், ஒவ்வொரு சிக்கன் துண்டையும் பிசைந்து வைத்துள்ள மாவில் பிரட்டி எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்தால், சுவையான சிக்கன் லாலிபாப் ரெடி!!!
Link to comment
Share on other sites

வெண்டைக்காய் காரகுழம்பு செய்வது எப்படி?

 

வெண்டைக்காய் வைத்து காரக்குழம்பு செய்தால் சூப்பராக இருக்கும். இன்று இந்த வெண்டைக்காய் காரகுழம்பு செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

 
வெண்டைக்காய் காரகுழம்பு செய்வது எப்படி?
 
தேவையான பொருட்கள் :

வெண்டைக்காய் - 250 கிராம்
பூண்டு - 10 பற்கள்      
சாம்பார் பொடி - 2 ஸ்பூன்
புளி - 1 உருண்டை
வெங்காயம் - 1
தக்காளி - 1
நல்லெண்ணைய் - 3 ஸ்பூன்
கடுகு, உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
வெந்தயம்  - 1/2 டீஸ்பூன்
பெருங்காயம் - 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிதளவு
அரைத்த தேங்காய் - 3 ஸ்பூன்
சீரகம், மிளகு - 1 1/2 டீஸ்பூன்

201710311301148066_1_ladiesfingerkarakulambu._L_styvpf.jpg

செய்முறை :

தக்காளியை அடுப்பில் சுட்டு அரைத்துக்கொள்ளவும்.

வெண்டைக்காயை சமமான துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.

புளியை கரைத்து கொள்ளவும்.

வெட்டிய வெண்டைக்காயை வெறும் கடாயில் போட்டு 5 நிமிடம் வதக்கவும்.

வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

தேங்காய், சீரகம், மிளகை மிக்சியில் போட்டு நைசாக அரைத்து கொள்ளவும்.

வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுத்தம்பருப்பு, வெந்தயம், பெருங்காயம், கறிவேப்பிலை, போட்டு தாளிக்கவும்

அடுத்து அதில் வெங்காயம் போட்டு வதக்கவும்.

வெங்காயம் நன்றாக வதங்கியதும் அரைத்த தக்காளி போட்டு நன்கு வதக்கியதும் சாம்பார் பொடி, உப்பு, வதக்கிய வெண்டைக்காய் போட்டு நன்கு கிளறவும். நன்கு கொதிக்கும் போது கரைத்த புளி ஊற்றவும்.

பின் அரைத்த விழுதை போட்டு மீதி உள்ள எண்ணெய் ஊற்றி குழம்பை மிதமான தீயில் வைக்கவும்.

குழம்பு வற்றி ஓரங்களில் எண்ணெய் பரிந்து வரும் போது இறக்கி பரிமாறவும்.

சுவையான  வெண்டைக்காய் காரகுழம்பு ரெடி.
Link to comment
Share on other sites

பலாப்பழ கேசரி

பலாப்பழ கேசரி

தேவையான பொருள்கள்

பலாப்பழத் துண்டுகள் -2 கப்
சீனி- 1 கப்
ரவை – 1 கப்
முந்திரிப்பருப்பு – 15
நெய் – 4 தேக்கரண்டி
பால் – 1 கப்
ஏலக்காய் – 4

செய்முறை

சிறிது நெய் விட்டு ரவையையும் முந்திரிப் பருப்பையும் பொன்னிறமாக வறுத்து ஆற வைக்கவும்

பலாப்பழத்தைப் பொடியாக நறுக்கி வைக்கவும்.

சட்டியில் பால், சீனி சேர்த்து நன்கு கொதிக்க வைத்து சீனி கரைந்தவுடன் , ரவை , சீனி சேர்த்துக் கிளரவும்.

ரவை வெந்து கேசரிப் பதம் வந்தவுடன் பலாப்பழத்துண்டு , முந்திரி, நெய் ,ஏலக்காய் சேர்த்து நன்கு கிளறி இறக்கவும். சுவையான பலாபழ கேசரி தயார்.

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி அஞ்சலி செலுத்தினார் Published By: VISHNU    19 APR, 2024 | 06:46 PM   மறைந்த முன்னாள் ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் பிரதியமைச்சருமான பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இறுதி அஞ்சலி செலுத்தினார். வெள்ளிக்கிழமை (19) முற்பகல் அவரது பூதவுடல் வைக்கப்பட்டுள்ள மத்துகம யடதொலவத்தையில் உள்ள அவரது வீட்டிற்குச் சென்ற ஜனாதிபதி, பூதவுடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தியதுடன், குடும்ப உறுப்பினர்கள் மற்றும் பிரதேசவாசிகளுக்கு தனது அனுதாபத்தை தெரிவித்தார். இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்த, ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் பாராளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன உட்பட பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்பாட்டாளர்கள் ஆகியோர் உடன் சென்றிருந்தனர். https://www.virakesari.lk/article/181481
    • இரான் மீது இஸ்ரேல் தாக்குதல்: ஜோ பைடனின் பேச்சை மீறியதால் சிக்கலில் பெஞ்சமின் நெதன்யாகு பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், ஜெரெமி போவன் பதவி, பிபிசி சர்வதேச ஆசிரியர் 6 மணி நேரங்களுக்கு முன்னர் இரானின் எல்லைக்குள் இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல் நடத்தியிருப்பதாக இரு அமெரிக்க அதிகாரிகள் பிபிசியின் அமெரிக்க கூட்டு நிறுவனமான சிபிஎஸ் செய்தி தொலைக்காட்சியிடம் தெரிவித்துள்ளனர். இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து ஏராளமான விமானங்களை ரத்து செய்திருப்பதாக இரான் அரசு செய்தி நிறுவனம் கூறியுள்ளது. இஸ்ஃபஹான் பகுதியில் தாக்குதல் நடந்திருப்பதாக இரானிய ஊடகமான ஃபார்ஸ் தெரிவிக்கிறது. இஸ்ஃபஹான் பகுதி இரானின் அணுசக்தித் தளங்கள் மற்றும் ராணுவ விமான தளம் உள்ளது ஆகியவற்றின் இருப்பிடமாகும். சில நாட்கள் முன்பு, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு பெரும் அழுத்தத்திற்கு ஆளாகியிருந்தார். கடந்த ஏப்ரல் 1ஆம் தேதி காஸாவில் உள்ள ‘உலக மத்திய சமையலறையில்’ (வேர்ல்ட் சென்ட்ரல் கிச்சன்) பணிபுரியும் ஏழு மனிதநேய உதவிப் பணியாளர்கள், இஸ்ரேலிய ராணுவத்தால் கொல்லப்பட்டனர். இந்நிகழ்வால் இஸ்ரேல் மீது அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அதிருப்தி அடைந்தார். மேலும், நட்பு நாடாக இருப்பினும் இஸ்ரேலின் நடவடிக்கைகள் அமெரிக்க அதிபர் ஜோ பைடனை பொறுமை இழக்கச் செய்தது. அதே நாளில், சிரியாவின் டமாஸ்கஸ் நகரில் உள்ள இரானிய தூதரக வளாகத்தை இஸ்ரேல் தாக்கியது. அந்தத் தாக்குதலில் ஒரு மூத்த ராணுவ ஜெனரல் மற்றும் ஆறு அதிகாரிகளுக்கு மேல் கொல்லப்பட்டனர். தூதரகங்கள் மீதான தாக்குதல்களைத் தடை செய்யும் சட்ட மரபுகள் செயல்பாட்டில் இருப்பினும், அதை மீறி இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. ‘இரான் விதிகளை மீறி தூதரக கட்டடத்தை ராணுவ புறக்காவல் நிலையமாக மாற்றியதால்தான் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டது’ என இஸ்ரேல் தரப்பில் ஏற்றுக்கொள்ள முடியாத காரணம் சொல்லப்பட்டது. அந்தத் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க இரான் உறுதிபூண்டது. அதற்கு முன்னரும் மூத்த ராணுவ தளபதிகள் மீதான தாக்குதல் நடத்தப்பட்டபோது ‘பதிலடி கொடுக்கப்படும்’ என்று வார்த்தைகளில் மட்டுமே இரான் தெரிவித்தது. ஆனால், அவை செயல்படுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.   அமெரிக்கா ஆவேசம் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,அமெரிக்கா தனக்கு வழங்கிய ஆயுதங்களைப் பயன்படுத்தி இஸ்ரேல் காஸாவில் பேரழிவுத் தாக்குதலை நிகழ்த்தியிருக்கிறது. அமெரிக்காவை தளமாகக் கொண்ட தொண்டு நிறுவனமான ‘வோர்ல்டு சென்ட்ரல் கிச்சனில்’ பணிபுரியும் குழுவை இஸ்ரேல் தாக்கியது. மனிதநேய உதவிப் பணியாளர்கள் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து ஏற்பட்ட சீற்றத்தால் இரானுக்கு வெளியே, டமாஸ்கஸ் மீது நடத்தப்பட்ட தாக்குதல் பெரிதாகக் கண்டு கொள்ளப்படவில்லை. அமெரிக்க அதிபர் ஜோ பைடன் எழுதிய ஆவேசமான அறிக்கை ஒன்றை வெள்ளை மாளிகை வெளியிட்டது. அவர் ‘சீற்றம்டைந்தார், மனமுடைந்து விட்டார்’. இப்படி நடப்பது முதல்முறை அல்ல. உதவிப் பணியாளர்கள் மற்றும் பாலத்தீன குடிமக்களைப் பாதுகாக்க இஸ்ரேல் போதுமான நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை, என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது. இஸ்ரேல் பிரதமருடன் ஒரு காட்டமான தொலைபேசி உரையாடலில், பைடன், பெரும் சலுகைகளைக் கோரினார். காஸாவுக்கு பெருமளவு மனிதாபிமான உதவிகள் கிடைக்க வேண்டும் என்றார். வடக்கு காஸாவில் உணவின்றிப் பட்டினியால் இறக்கும் குழந்தைகள் வசிக்கும் பகுதியில் இருந்து ஒரு மணிநேரத்திற்கும் குறைவான தூரத்தில் இஸ்ரேல் அதிகமான எல்லைக் கடப்புகளைத் திறக்க வேண்டும் என்றார். அஷ்டோதில் உள்ள கொள்கலன் துறைமுகத்தையும் திறக்க வேண்டும் என்று கோரியுள்ளார். இந்தச் சூழல் மாறும் என பிரதமர் நெதன்யாகு பைடனுக்கு உறுதியளித்தார். அது வெறும் சமாளிப்பு மட்டுமே.   இருபுறமும் அழுத்தத்தில் இருந்த நெதன்யாகு பட மூலாதாரம்,GETTY IMAGES வெள்ளை மாளிகையின் சீற்றத்தை எதிர்கொள்ளும் அதே வேளையில் நெதன்யாகு, மற்றொருபுறம் இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் தன்னை ஆதரித்து தனது கூட்டணியை அதிகாரத்தில் வைத்திருக்கும் தீவிர தேசியவாதிகளின் அழுத்தத்திற்கும் ஆளாகியுள்ளார். காஸாவில் மனிதாபிமான உதவிகள் கிடைப்பதை மட்டும் அவர்கள் எதிர்க்கவில்லை. காஸாவில் இந்தப் போர் யூதர்களை மீண்டும் குடியமர்த்துவதற்கான விலைமதிப்பற்ற வாய்ப்பை இஸ்ரேலுக்கு வழங்கியிருப்பதாக அவர்கள் திடமாக நம்புகிறார்கள். கடந்த 2005ஆம் ஆண்டில் இஸ்ரேலில் இருந்து ஒருதலைப்பட்சமாக அங்குள்ள யூதர்களின் குடியிருப்புகள் அரசால் காலி செய்யப்பட்டு இடித்துத் தள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது. கடந்த வார இறுதியில், அமெரிக்கா இஸ்ரேல் மீதான அழுத்தத்தை அதிகரித்தது. வியாழன் அன்று, அமெரிக்காவின் உயர்மட்ட மனித உரிமை அதிகாரியான சமந்தா பவர், “காஸாவின் சில பகுதிகளை பஞ்சம் பாதித்துள்ளது என்பதே உண்மை," என்றார். காஸாவை ஆறு மாதமாக இஸ்ரேல் முற்றுகையிட்டு வைத்திருந்தது, அப்பகுதியில் உலகிலேயே மிக மோசமான உணவு நெருக்கடி சூழலை உருவாக்கியது என்பது இஸ்ரேலின் ஆதரவு நாடுகளுக்கும் எதிரி நாடுகளுக்கும் தெளிவாகவே தெரிந்திருக்கும். மற்றொருபுறம், ஆயுதங்கள் வழங்கும் அமெரிக்கா அதைப் பயன்படுத்த இஸ்ரேலுக்கு நிபந்தனைகளை விதிக்கும் என்ற யூகமும் இருந்தது.   அமெரிக்காவின் மனநிலை பட மூலாதாரம்,UGC கடந்த சனிக்கிழமை (ஏப்ரல் 13) காலை, இஸ்ரேல் மீது இரான் தாக்குதல் நடத்துவதற்கு சில மணிநேரங்களுக்கு முன்பு, தி’ நியூயார்க் டைம்ஸ்’ ஊடகம் பெரும் சீற்றத்தை எதிரொலித்து ஒரு தலையங்கம் வெளியிட்டது. குறிப்பாக அமெரிக்க காங்கிரஸில் உள்ள ஜனநாயகக் கட்சியின் முக்கியப் பிரமுகர்கள் மத்தியில் இந்தச் சீற்றம் காணப்பட்டது. இஸ்ரேலுக்கு ஆயுதங்களை வழங்குவதில் இடைநிறுத்தம் செய்யக் கோரியும் பெஞ்சமின் நெதன்யாகுவை தாக்கியும் அத்தலையங்கம் அமைந்திருந்தது. “இஸ்ரேலுக்கான ராணுவ உதவி நிபந்தனையற்றதாக இருக்கக்கூடாது,” என்ற தலைப்பின் கீழ், அப்பத்திரிகையின் ஆசிரியர் குழு, அமெரிக்கா உடனான ‘நம்பிக்கையின் பிணைப்பை’ உடைத்ததற்காக நெதன்யாகுவையும் அவரது அரசின் கீழ் செயல்படுபவர்களையும் கடுமையாகச் சாடியுள்ளது. “இஸ்ரேலுக்கு அமெரிக்கா ஆதரவளிப்பதும் நாட்டை தற்காத்துக் கொள்ள நினைப்பதும் சரிதான். ஆனால் அதற்காக அதிபர் பைடன் ‘நெதன்யாகு இரட்டை முகத்துடன் மேற்கொள்ளும் தந்திரமான அரசியல் விளையாட்டுகளை அனுமதிக்க வேண்டும்’ என்பது அர்த்தம் இல்லை,” என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.   இரானின் தாக்குதல், நெதன்யாகுவுக்கு கிடைத்த வாய்ப்பு படக்குறிப்பு,இஸ்ரேல் மீது இரான் ஏவிய ஏவுகணைகள் அதன்பின் இரான் இஸ்ரேல் மீது முதல் நேரடித் தாக்குதலை நடத்தியது. இது பிரதமர் நெதன்யாகுவுக்கு ஒரு வாய்ப்பை வழங்கியது. ஆனால், தற்போது அதற்கு பதிலடி கொடுக்க வேண்டாம் என்று அமெரிக்கா கூறியதை மீறி ஏவுகணைத் தாக்குதல் நடத்தியுள்ளது இஸ்ரேல். ராணுவ ஒத்துழைப்பின் குறிப்பிடத்தக்க ஒருங்கிணைந்த செயல்பாடாக, அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் பிற மேற்கத்திய நட்பு நாடுகள் இரானால் ஏவப்பட்ட 300க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளைச் சுட்டு வீழ்த்துவதற்கு இஸ்ரேலுக்கு உதவின. காஸாவில் நடக்கும் இஸ்ரேலின் தாக்குதல்களைக் கடுமையாக விமர்சித்தவர் ஜோர்டான் நாட்டின் மன்னர் அப்துல்லா. ஆனால் இஸ்ரேலுக்கு ஆபத்து வந்தபோது, ஜோர்டானின் விமானப்படை பாதுகாப்பு நடவடிக்கையில் இணைந்தது, இஸ்ரேலை நோக்கி வந்த ஏவுகணைகளை வீழ்த்தியது. இஸ்ரேலுக்கு வழங்கப்படும் ராணுவ உதவிக்கு நிபந்தனைகள் விதிக்கும் சூழல் மாறி ஒற்றுமையின் உறுதியான வெளிப்பாடு அப்போது பிரதிபலித்தது. இது பிரதமர் நெதன்யாகுவுக்கு ஒரு புதிய அரசியல் வாய்ப்பை வழங்கியுள்ளது. குறைந்தப்பட்சம் ஓரிரு நாட்களுக்கு தலைப்புச் செய்திகளில் காஸாவின் பெயர் அடிபடாது.   மேற்கத்திய நாடுகளின் நிலைப்பாடு என்ன? பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு,இரானின் ஏவுகணைகளை இடைமறித்த இஸ்ரேலின் அயர்ன் டோம் அதேநேரம் பிரதமர் நெதன்யாகு மீதான அழுத்தம் அதிகரித்துவிட்டது. இஸ்ரேலின் அடுத்த நகர்வுகள் அந்த அழுத்தத்தை இரட்டிப்பாக்கும். அடுத்து என்ன நடக்க வேண்டும் என்பதை அதிபர் பைடன் மிகத் தெளிவாகக் கூறியிருக்கிறார். இரானின் தாக்குதலை முறியடித்த வெற்றியை மட்டும் இஸ்ரேல் எடுத்துக்கொள்ள வேண்டும், ‘ஆனால் திருப்பி அடிக்கக்கூடாது’ என்றார். இந்த நிலையில்தான் இரான் எல்லைக்குள் இஸ்ரேல் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இஸ்ரேலுக்கு அமெரிக்கா வழங்கும் ஆதரவு என்பது ‘இரும்புக் கவசம்’ போன்றது என்பதை பைடன் மீண்டும் நினைவுபடுத்தினார். கடந்த அக்டோபர் 7ஆம் தேதி அன்று நடத்தப்பட்ட ஹமாஸ் தாக்குதலுக்குப் பிறகு அவரது நிலையான கொள்கை வெளிப்பட்டது. காஸாவில் பேரழிவையும் கொடிய விளைவுகளையும் ஏற்படுத்தப் பயன்படுத்தப்பட்ட ஆயுதங்களை இஸ்ரேலுக்கு அமெரிக்காதான் வழங்கியது என்ற போதிலும் அதிபர் பைடனும் அவரது நிர்வாகமும் மத்திய கிழக்கில் நடக்கும் போரை நிறுத்தக் கடுமையாக உழைத்துள்ளனர். அக்டோபரில் இருந்து ஆயுதங்கள் மற்றும் பிற நாடுகள் அளித்த ஆதரவையும் இஸ்ரேல் ஏற்றுக்கொண்டது. ஜோ பைடனின் எச்சரிக்கைகளையும் கோபத்தையும் புறக்கணித்து அவரின் அவநம்பிக்கைக்கு ஆளானது. இரானுக்கு எதிராகச் செயல்பட, இஸ்ரேலுக்கு முன்னெப்போதும் இல்லாத ராணுவ ஒத்துழைப்பை சில ஆதரவு நாடுகள் வழங்கின. இதன்மூலம் இஸ்ரேல் மீண்டும் ஒருமுறை ஜோ பைடனின் ‘பதிலடி கொடுக்க வேண்டாம்’ என்ற அறிவுரையைப் புறக்கணித்தது. ஜோ பைடனை போலவே பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் மற்றும் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோங் ஆகியோர் இரான் தாக்குதலுக்கு எதிராகப் போர் விமானங்களை அனுப்பினர். இருவரும் இரானை கண்டித்தனர். மேலும் இஸ்ரேலிடம் பதில் தாக்குதல் செய்ய வேண்டாம் என்பதை வலியுறுத்தினர். அவர்கள் இஸ்ரேலில் நீண்ட கால நம்பிக்கைகள் மற்றும் செயல்பாடுகளுக்கு எதிராக யோசிக்கத் தொடங்கிவிட்டனர். இஸ்ரேல்-இரான் பகை இஸ்ரேல் மீது நடத்தப்படும் தாக்குதல்களுக்கு சீற்றத்துடன் பதிலடி கொடுக்க வேண்டும் என்று இஸ்ரேல் ஆழமாக நம்புகிறது. மேலும், இரான் இஸ்ரேலின் மிகவும் ஆபத்தான எதிரி என்றும் யூத அரசை அழிப்பதில் இரான் குறியாக உள்ளது என்றும் பெஞ்சமின் நெதன்யாகு நம்புகிறார். அவரது ஆட்சியில் பலமுறை இந்த நம்பிக்கை வெளிப்படுத்தப்பட்டது. அதன் விளைவாக இஸ்ரேல் மக்கள் பலர் இதே கருத்தை முன்வைக்கின்றனர். கடந்த 1979இல் இரானில் நடந்த இஸ்லாமிய புரட்சிக்குப் பின்னர் இஸ்ரேலுடன் பல வருடப் பகை நீடித்தது. அதன் பிறகு இப்போது இரான் முதன்முறையாக இஸ்ரேல் மீது நேரடித் தாக்குதல் தொடுத்துள்ளது. நீண்ட காலமாக நடந்து கொண்டிருக்கும் மறைமுகப் போர் தற்போது வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது. தற்போதைய தாக்குதலைத் தொடங்குவதற்கு முன்னதாகவே, பதில் தாக்குதல் நடத்தப்படுமா என்பது கேள்வி அல்ல, எப்போது, எப்படி நடத்தப்படும் என்பதுதான் கேள்வி என்று இஸ்ரேல் கூறியது. தீவிரமான போர்ச்சூழல் உருவாகாமல், எப்படி பதில் தாக்குதல் நடத்துவது என்று இஸ்ரேலின் போர்க்குழு அமைச்சரவை விவாதித்து வந்தது. இரான் தீவரமான போர்ச்சூழலை விரும்பவில்லை என்று சொன்னாலும், அதற்கேற்ப பதிலளிக்கும். எந்தவொரு அனுமானமும் இன்றி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இரு தரப்பினரும் ஏற்கெனவே மற்றவரின் நோக்கங்களைத் தவறாக மதிப்பிட்டுள்ளனர் என்பதே நிதர்சனம். பெஞ்சமின் நெதன்யாகுவும் அவரது அரசாங்கமும் மீண்டும் ஒருமுறை இஸ்ரேலுக்கு ஆதரவாக நின்ற நாடுகளின் விருப்பங்களைப் புறக்கணிப்பதில் குறியாக உள்ளனர். இஸ்ரேலின் தீவிர தேசியவாதக் கூட்டாளிகள், இரான் மீது கொடூரத் தாக்குதல் நடத்தக் கோரினர். அவர்களில் ஒரு தரப்பினர் இஸ்ரேல் ‘வெறியுடன் செயல்பட வேண்டும்’ என்றனர்.   காஸாவில் தொடரும் மனிதாபிமானப் பேரழிவு படக்குறிப்பு,அமெரிக்காவின் உயர்மட்ட மனித உரிமை அதிகாரியான சமந்தா பவர், “காஸாவின் சில பகுதிகளை பஞ்சம் பாதித்துள்ளது என்பதே உண்மை," என்றார். இவையனைத்திற்கும் மத்தியில் காஸாவில் மனித உரிமை மீறல் மற்றும் பேரழிவு தொடர்கிறது. காஸா மீண்டும் சர்வதேச கவனம் பெறும். இஸ்ரேலின் ராணுவம் காஸாவில் இன்னமும் பொதுமக்களைக் கொன்று வருகிறது. மற்றொருபுறம் மேற்குக் கரையில் பாலத்தீனர்களுக்கும் யூத குடியேற்றவாசிகளுக்கும் இடையே மீண்டும் வன்முறை வெடித்துள்ளது. ஹெஸ்பொல்லாவுடன் இஸ்ரேலுக்கு மீண்டும் எல்லைப் போர் தீவிரமடையலாம். இஸ்ரேல் தாக்குதல் நடத்தினால் இன்னும் கடுமையாக பதிலடி கொடுக்கப்படும் என இரான் உறுதியளித்துள்ளது. அதன் ஆயுதப் படைகளின் தலைமை அதிகாரியான ஹொசைன் பாகேரி, இஸ்ரேல் மீதான தாக்குதல் கட்டுப்பாடுகளுடன் நடத்தப்பட்டது, ஆனால் இஸ்ரேல் பதிலடி கொடுத்தால் ‘மிகப் பெரிய’ பதிலடியை திருப்பிக் கொடுப்போம் எனக் கூறியிருக்கிறார். இஸ்ரேல் இரான் மீது தாக்குதல் நடத்தினால் உதவ மாட்டோம் என அமெரிக்கா உறுதிபடத் தெரிவித்துள்ளது. ஆனால் இஸ்ரேலின் பாதுகாப்பிற்கான ‘இரும்புக் கவசமாகச்’ செயல்பட்ட ஜோ பைடன் அரசு இஸ்ரேலிய தாக்குதலுக்கு இரான் பதிலடி கொடுத்தால், ஆதரவாக நிற்காது என்பதை நம்புவது கடினம். இந்தச் சூழ்நிலை மத்திய கிழக்குப் பகுதியில் தீவிரமான போர்ச் சூழலையும் சர்வதேச நெருக்கடியையும் ஏற்படுத்தும். https://www.bbc.com/tamil/articles/cd19j8p3n4vo
    • Published By: RAJEEBAN    19 APR, 2024 | 05:53 PM   உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில்  சர்வதேச விசாரணைகளை முன்னெடுக்கவேண்டும் என  சமூகம் மற்றும் மத நிலையத்தின் ஆராய்ச்சி குழு வேண்டுகோள் விடுத்துள்ளது. உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் இன்னமும் நீதிக்காக காத்திருத்தல்  பொருளாதார சமூக கலாச்சார  பொருளாதார சட்ட கண்ணோட்டம் என்ற அறிக்கையை இன்று வெளியிட்டுள்ள  சமூகம் மற்றும் மத நிலையத்தின் ஆராய்ச்சி இந்த அறிக்கையில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த சர்வதேச விசாரணையை கோரியுள்ளது. சமூகம் மற்றும் மத நிலையத்தின் ஆராய்ச்சி அமைப்பு மேலும் தெரிவித்துள்ளதாவது உயிர்த்த ஞாயிறு படுகொலைகளை இலங்கையில் யுத்தத்தின் பின்னர்  தேவாலயங்களையும்  ஹோட்டல்களையும் இலக்குவைத்து இடம்பெற்ற மிகவும் பயங்கரமான வெளிப்படையான  சம்பவம் என குறிப்பிடலாம். அதன் மூலம் ஏற்பட்ட பேரழிவை நாங்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெளிவுபடுத்தியுள்ளோம். ஐந்து வருடங்களின் பின்னர் இன்னமும் பாதிக்கப்பட்டவர்களிற்கு நீதி கிடைக்கவில்லை. இதன் காரணமாக  உயிர்த்த ஞாயிறுதாக்குதல் காரணமாக பாதிக்கப்பட்டவர்களிற்கான  நீதியை நிலைநாட்டுவதற்கு அவசியமான சில பரிந்துரைகளை முன்வைக்கின்றோம். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான அனைத்து  நீதிமன்ற வழக்குகளையும் துரிதப்படுத்தவேண்டும். சர்வதேச விசாரணைகளை மேற்கொண்டு  தாக்குதலிற்கு காரணமானவர்களிற்கு எதிராக வழக்குதாக்கல் செய்யவேண்டும்  குறிப்பாக சூத்திரதாரிகளிற்கு எதிராக . உயிர்த்த ஞாயிறுதாக்குதல் காரணமாக பாதிக்கப்பட்ட அனைவருக்கும் போதியளவு  இழப்பீடு துரிதமாக சென்றடைவதை உறுதி செய்யவேண்டும். உயர்நீதிமன்றம்  நஸ்டஈடுவழங்குமாறு உத்தரவிட்டவர்கள்  அந்த இழப்பீட்டை உடனடியாக வழங்குவதை உறுதி செய்யவேண்டும். உயிர்த்தஞாயிறுதாக்குதலில் நிலாந்த ஜெயவர்த்தனவின் தொடர்புகுறித்து  உரிய குற்றவியல் விசாரணையை முன்னெடுக்கவேண்டும். உயிர்த்த ஞாயிறு தொடர்பான அனைத்து அறிக்கைகளையும் பகிரங்கப்படுத்தவேண்டும் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்  ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அனைத்து பரிந்துரைகளும் நடைமுறைப்படுத்துவதை உறுதி செய்யவேண்டும். இதேவேளை  உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்று ஐந்து வருடங்களாகின்றன தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதி என தெரிவித்த சமூகம் மற்றும் மத நிலையத்தின் ஆராய்ச்சி பிரிவின் சுரேன் பெரேரா இன்னமும் பொறுப்புக்கூறல் இடம்பெறவில்லை என குறிப்பிட்டார். உள்நாட்டு பொறிமுறைகள் தோல்வியடைந்துவிட்டதால் சர்வதேச பொறிமுறைகள் அவசியமாக உள்ளன என குறிப்பிட்ட அவர்  நீதியை பெற்றுக்கொள்வதற்காக சர்வதேச  பொறிமுறைகளை நாடும் நோக்கம் உள்ளதாகவும் குறிப்பிட்டார். உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களிற்கு நீதியை பெற்றுக்கொள்வதற்காக கலப்பு பொறிமுறை  ஒன்று உகந்ததாகயிருக்கும் எனவும் அவர் தெரிவித்தார். முக்கிய  சூத்திரதாரியை கண்டுபிடிப்பதற்கு  சர்வதேச அமைப்புகளின் உதவியை கோhரவேண்டும் எனவும் குறிப்பிட்ட அவர் தற்போதைய ஜனாதிபதி ஸ்கொட்லாண்ட் யார்டின் உதவி குறித்து குறிப்பிட்டுவந்துள்ளதை சுட்டிக்காட்டினார். https://www.virakesari.lk/article/181475
    • இந்த இரண்டு வருசத்துல உண்மையிலேயே 1900க்கு மேல போகாமல் இருந்திருந்தால் தான் செய்தி....
    • பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,ஆஸ்திரேலியாவின் கிரேட் பேரியர் ரீஃப் பகுதியில் பல பவளப்பாறைகள் அழிந்து வருகின்றன. கட்டுரை தகவல் எழுதியவர், ஜார்ஜினா ரன்னார்ட் பதவி, பிபிசி காலநிலை நிருபர் 4 மணி நேரங்களுக்கு முன்னர் கடல் வெப்பம் தொடர்ந்து அதிகரித்து வருவதால், உலகெங்கிலும் உள்ள பவளப் பாறைகள் வெண்மையாகி அழிந்து வருகின்றன. அமெரிக்க தேசிய பெருங்கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகம் (NOAA) வெளியிட்ட தகவலின்படி நான்காவது முறையாக உலகின் பெரும்பாலான பவளப் பாறைகள் வெண்மையடையும் ஆபத்தில் உள்ளன. கடல் நீர் வெப்பமடைவதால், பவளப்பாறை அழுத்தத்தை உணர்ந்து வெண்மையாக மாறும்போது ப்ளீச்சிங் (Bleaching) ஏற்படுகிறது. கடல் வாழ்வியல் மற்றும் மீன்பிடித்தல் துறையில் முக்கியப் பங்காற்றும் பவளப்பாறைகள், அதன் மூலம் ஆண்டுதோறும் டிரில்லியன் கணக்கான டாலர்கள் வருவாயை உருவாக்குகிறது. கடல்பரப்பின் வெப்பநிலை பல மாதங்களாக அதிகரித்து வருகின்றன. ஆனால் இந்த வெப்பம் கடல் வாழ்வை எவ்வாறு பாதிக்கிறது என்பதற்கான முதல் உலகளாவிய சான்று இதுவாகும். அமெரிக்க தேசிய பெருங்கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகம் (NOAA) அனைத்து கடல்களிலும் (அட்லாண்டிக், பசிபிக் மற்றும் இந்திய பெருங்கடல்) உள்ள பவளப் பாறைகள் அழுத்தத்தை உணர்கின்றன என்பதை உலகளவில் விஞ்ஞானிகளிடம் இருந்து பெற்ற அறிக்கைகள் மூலம் உறுதிப்படுத்தியது. வெண்மையடைந்த பவளப் பாறைகள் புகைப்படங்களில் அழகாக இருக்கும். ஆனால் பாறைகளை ஆய்வு செய்ய ஆழ்கடலுக்குச் செல்லும் விஞ்ஞானிகள், அவை நோய்வாய்ப்பட்டு அழிந்து வருவது தெளிவாகத் தெரிகிறது என்று கூறுகிறார்கள்.   காலநிலை மாற்றத்தின் விளைவு பட மூலாதாரம்,AIMS படக்குறிப்பு,பார்க்க அழகாக இருக்கும் இந்தப் பவளப்பாறை, வெண்மையடைந்து, அழிந்து வருகிறது. அமெரிக்கா, ஆஸ்திரேலியா, கென்யா, பிரேசில் ஆகிய நாடுகளில் உள்ள விஞ்ஞானிகள் பிபிசி செய்தியிடம், தாங்கள் மிகவும் நேசிக்கும் பவளப்பாறைகள் கடல் வெப்பத்தால் அச்சுறுத்தப்படுவதை அல்லது கொல்லப்படுவதைப் பார்த்தபோது, அச்சம் மற்றும் கோபம் ஏற்பட்டதாகக் கூறினார்கள். கடந்த ஆண்டு கரீபியன் பகுதியில், ஃப்ளோரிடா கடற்கரையில் உள்ள தண்ணீர் மிகவும் சூடாக இருந்ததை அப்பகுதி மக்கள் கண்டபோது, முதல் எச்சரிக்கை அறிகுறிகள் தென்பட்டன. அந்த வெப்பம் தெற்கு அரைக்கோளம் நோக்கி நகர்ந்தது. ஆஸ்திரேலியாவின் கிரேட் பேரியர் ரீஃப் (பெருந்தடுப்புப் பவளத்திட்டு) மற்றும் தான்சானியா, மொரிஷியஸ், பிரேசில், பசிபிக் தீவுகள் மற்றும் செங்கடல், பாரசீக வளைகுடாவில் உள்ள கடற்கரைகள் உட்பட உலகின் பாதிக்கும் மேற்பட்ட பவளப்பாறைகளை இது இப்போது பாதித்துள்ளது. கடந்த ஆகஸ்டில் உலகளாவிய சராசரி கடல் வெப்பநிலை அதன் அதிகபட்ச அளவைத் தாண்டியது, அதிலிருந்து கிட்டத்தட்ட ஒவ்வொரு நாளும் கடல் வெப்பம் சராசரியைவிட அதிகமாக உள்ளது. பட மூலாதாரம்,GETTY IMAGES நாம் எண்ணெய், நிலக்கரி மற்றும் வாயுக்களை எரிக்கும்போது வெளிப்படும் பசுமைக்குடில் வாயுக்கள் கடல்களால் உறிஞ்சப்படுகின்றன. இந்த காலநிலை மாற்றத்தால் கடல் மேற்பரப்பு வெப்பநிலை உயர்கிறது. இயற்கையான காலநிலை நிகழ்வான எல் நினோவும் கடந்த ஜூன் முதல் உலகளவில் அதிகரித்த வெப்பநிலைக்கு ஒரு காரணமாக இருந்தது. இருப்பினும் இப்போது அது பலவீனமடைவதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன. விஞ்ஞானி நீல் கான்டின், ஆஸ்திரேலியாவின் கடல் அறிவியல் நிறுவனத்திற்காக, பிப்ரவரியில் 10 நாட்களுக்கு கிரேட் பேரியர் ரீஃப் மீது ஒரு விமானத்தில் பயணம் செய்து ஆய்வு மேற்கொண்டார். ஐநா பாரம்பரிய தளமாக அறிவிக்கப்பட்டுள்ள இந்த கிரேட் பேரியர் ரீஃப் 2,000 கிமீ வரை பரவி அமைந்துள்ளது. "கிரேட் பேரியர் ரீஃப் மரைன் பூங்காவின் மூன்று பகுதிகளிலும் மிக அதிக அளவிலான பவளப் பாறைகளின் ப்ளீச்சிங் நிகழ்வை நாங்கள் முதன்முறையாக ஆவணப்படுத்தியுள்ளோம்" என்று டாக்டர் கான்டின் கூறுகிறார். இந்த ப்ளீச்சிங் அளவுகள் நிறைய பவளங்களைக் கொல்லக்கூடும், என்றும் அவர் எச்சரிக்கிறார்.   பவளப்பாறைகளை பாதுகாக்க முடியுமா? பவளப்பாறை பூமிக்கு இன்றியமையாதது. கடலின் கட்டடக் கலைஞர் என்று செல்லப்பெயர் பெற்ற இது, மொத்த கடல் உயிரினங்களின் வசிப்பிடங்களில் 25% பவளப்பாறைகளைச் சார்ந்துள்ளது. அழுத்தத்தை உணரும் ஒரு பவளப்பாறை தொடர்ந்து இரண்டு மாதங்களுக்கு அதன் வெப்ப வரம்பிற்கு மேல் 1 டிகிரி செல்ஷியஸ் வெப்பநிலையை அனுபவித்தால் அது இறந்துவிடும். நீரில் 2 டிகிரி செல்ஷியஸ் அதிகமாக இருந்தால், அது ஒரு மாதம் வரை மட்டுமே உயிர் வாழும். அது இறந்தவுடன், பவள இரைச்சலைப் பயன்படுத்திப் பயணிக்கும் மீன் போன்ற உயிரினங்கள் தங்கள் வசிப்பிடங்களுக்குச் செல்லும் வழியைக் கண்டுபிடிக்கத் திண்டாடும். முப்பது ஆண்டுகளாக விஞ்ஞானி ஆன் ஹாகெட் ஆஸ்திரேலியாவின் லிசார்ட் தீவில் ஆழ்கடல் ஆய்வில் ஈடுபட்டுள்ளார். இது நெட்ஃபிளிக்ஸ் திரைப்படமான சேசிங் கோரலில் (Chasing coral) இடம்பெற்ற ஒரு அழகான பவளப் பாறை. பிப்ரவரி முதல் இந்தப் பாறை மீண்டும் பரவலாக வெண்மையடைந்து வருகிறது. பல ஆராய்ச்சியாளர்களைப் போலவே, 1998ஆம் ஆண்டு முதன் முதலாக பவளம் வெண்மையாக மாறியதைக் கண்டு அவர் அதிர்ச்சியடைந்தார். "இப்போது இது மீண்டும் நடக்க அனுமதிக்கப்படுவதால் நான் கோபமாக இருக்கிறேன்," என்று ஆஸ்திரேலிய அருங்காட்சியகத்தின் லிசார்ட் தீவு ஆராய்ச்சி நிலையத்திலிருந்து அவர் கூறுகிறார்.   பட மூலாதாரம்,AUSTRALIAN INSTITUTE OF MARINE SCIENCE படக்குறிப்பு,பவளம் இறந்தால், அது மீன்களை பாதிக்கிறது. ஒரு பவளப் பாறையால் வெப்ப அழுத்தத்தில் இருந்து மீள முடியும். ஆனால் அதற்கு நேரம் தேவை. அதாவது பல ஆண்டுகள். அழுத்தத்தை உணரும்போது, அது நோயால் பாதிக்கப்படுகிறது மற்றும் எளிதில் இறக்கவும் கூடும். "ஒரு வாய்ப்பு கொடுக்கப்பட்டால், அந்த பவளப் பாறைகளை மீட்க முடியும். ஆனால் தீவிரமான ப்ளீச்சிங் அடிக்கடி நடப்பதால், பவளப் பாறைகளை மீட்பதற்கான வாய்ப்புகள் குறைந்து வருகின்றன" என்கிறார் ஆஸ்திரேலியாவின் சிட்னி தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் டாக்டர் எம்மா கேம்ப். கடைசியாக 2014-2016ஆம் ஆண்டில் உலகளாவிய ப்ளீச்சிங் இருந்தது. அப்போதிருந்து, கடல் வெப்பநிலை மிகவும் அதிகரித்துவிட்டது. இதனால் அமெரிக்க தேசிய பெருங்கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகம் மூன்று புதிய வெப்ப எச்சரிக்கை நிலைகளை அறிமுகப்படுத்த வேண்டியிருந்தது. சூழலியல் நிபுணர் டேவிட் ஒபுரா, இந்தியப் பெருங்கடலில் உள்ள நூற்றுக்கணக்கான ரேஞ்சர்கள், விஞ்ஞானிகள் மற்றும் மீன்பிடி சமூகங்களிடம் இருந்து பவளப்பாறைகள் வெண்மையடைவதைக் குறித்த செய்திகளைப் பெறுகிறார். இந்த நிகழ்வு பிப்ரவரியில் மடகாஸ்கரில் தொடங்கியது, பின்னர் தான்சானியா மற்றும் கொமோரோஸ் வரை பரவியது. மீனவர்கள் பவளப் பாறைகளை நன்றாக அறிவார்கள், அதில் ஏதேனும் மாற்றம் நடந்தால் உடனடியாகத் தெரியும் என்று அவர் கூறுகிறார். https://www.bbc.com/tamil/articles/cv2re3x51njo
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.