Jump to content

சமையல் செய்முறைகள் சில


Recommended Posts

காரசாரமான சேனைக்கிழங்கு வறுவல்

 

தயிர் சாதம், சாம்பார் சாதத்திற்கு சூப்பரான சைடு டிஷ் சேனைக்கிழங்கை வறுவல். இப்போது சேனைக்கிழங்கு வறுவல் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

 
காரசாரமான சேனைக்கிழங்கு வறுவல்
 
தேவையான பொருட்கள் :

சேனைக்கிழங்கு - 1/2 கப்
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
மல்லி தூள் (தனியா தூள்) - 1/2 டீஸ்பூன்
கரம் மசாலா - 1/2 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு

தாளிப்பதற்கு...

கடுகு - 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
எண்ணெய் - 2 டீஸ்பூன்

வறுத்து அரைப்பதற்கு...

வரமிளகாய் - 2
மல்லி(தனியா) - 1 டீஸ்பூன்
சோம்பு - 1/2 டீஸ்பூன்
பூண்டு - 4

செய்முறை :

* சேனைக்கிழங்கை சமமான துண்டுகளாக வெட்டி கொள்ளவும். நறுக்கிய சேனைக்கிழங்கை நன்கு கழுவி, ஒரு பாத்திரத்தில் போட்டு தண்ணீர் ஊற்றி, மஞ்சள் தூள் சேர்த்து அடுப்பில் வைத்து, கிழங்கு நன்கு வெந்ததும் அதனை இறக்கி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

* வறுத்து அரைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை, கடாயில் போட்டு பொன்னிறமாக வறுத்து குளிர வைத்து, மிக்ஸியில் போட்டு பொடி செய்து கொள்ள வேண்டும்.

* வேக வைத்துள்ள சேனைக்கிழங்கை ஒரு பௌலில் போட்டு, அத்துடன் பொடி செய்த தூள் சேர்த்து, மிளகாய் தூள், மல்லி தூள், கரம் மசாலா சேர்த்து பிரட்டி, 30 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.

* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, கறிவேப்பிலை போட்டு தாளித்த பின் ஊற வைத்துள்ள சேனைக்கிழங்கு, தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு மொறுமொறுவென்று வரும் வரை அடுப்பை மிதமான தீயில் வைத்து கிளறவும்.

* சூப்பரான சேனைக்கிழங்கு வறுவல் ரெடி!!!
Link to comment
Share on other sites

‘வாலன்டைஸ் டே’ ஸ்பெஷல்

ஹசினா செய்யது

 

* மாதுளை மாக்டெய்ல்
* ரோஸ் மூஸ்
* லவ் ரோஸ்
* லப்டப் பீட்சா
* பனீர் சாலட்
* பிரான் பெஸ்டோ ஸ்பெகட்டி
* ரெட் ஹார்ட்ஸ்
* பொட்டேட்டோ லவ் கேக்

p47.jpg

ருகிறதே வாலன்டைன்ஸ் டே! பிப்ரவரி 14 அன்று அன்புகலந்து பரிமாற அசத்தலான ரெசிப்பிகளை அளிக்கிறார் திருநெல்வேலியைச் சேர்ந்த சமையல் கலைஞர் ஹசினா செய்யது.


மாதுளை மாக்டெய்ல்

தேவையானவை:
 மாதுளைச் சாறு – 300 மில்லி
 சர்க்கரைப் பாகு – 10 மில்லி
 சோடா - 180 மில்லி
 ஸ்ட்ராபெர்ரி - 2
 மாதுளை முத்துகள் - அலங்கரிக்க

p47c.jpg

செய்முறை:
சோடாவைக்  குளிரவைக்கவும். ஸ்ட்ராபெர்ரியை இதய வடிவில் நறுக்கவும். மாதுளைச் சாறு, சர்க்கரைப் பாகு உடன் குளிர்ந்த சோடா சேர்த்து கலக்கவும். பின்பு ஸ்ட்ராபெர்ரி, மாதுளை முத்துகள் போட்டு ஜில்லென்று பரிமாறவும்.


ரோஸ் மூஸ்

தேவையானவை:
 கட்டித் தயிர் - 2 கப்
 குங்குமப்பூ – சிறிதளவு
 தேன், குல்கந்து - தலா
  2 டேபிள்ஸ்பூன்
 பால் - 6 டேபிள்ஸ்பூன்
 எண்ணெய் – ஒரு டேபிள்ஸ்பூன்
 ஜெலட்டின் - அரை டீஸ்பூன்
 சர்க்கரை - 4 டேபிள்ஸ்பூன்
அலங்கரிக்க:
 ரோஜா இதழ்கள் – சிறிதளவு
 பாதாம்பருப்பு – சிறிதளவு
 ரோஸ் வாட்டர் - ஒரு டீஸ்பூன்

p47d.jpg

செய்முறை:
கட்டித் தயிரை  ஒரு துணியில் கட்டி, இரவில் ஃப்ரிட்ஜில் வைத்து விடவும். மறுநாள் காலையில் தயிரை நன்றாக அடித்து கட்டி இல்லாமல் கடையவும். இதில் குல்கந்து, குங்குமப்பூ சேர்த்து கலந்து வைக்கவும். ஜெலட்டினுடன் ஒரு டேபிள்ஸ்பூன் தண்ணீர் கலந்து ஊறவிடவும். ஒரு பாத்திரத்தில் பால் மற்றும் சர்க்கரைச் சேர்த்து கொதிக்க விடவும், அடுப்பைவிட்டு இறக்கி ஜெலட்டினை பாலுடன் சேர்த்து கட்டித் தட்டாமல் கலக்கவும். பின்பு தயிர் கலவையுடன் சேர்த்து கலக்கவும். பின்பு ரோஜா இதழ்கள், ரோஸ் வாட்டர் கலந்து, எண்ணெய் தடவிய புட்டிங் டீரேயில் ஊற்றி 8 மணி நேரம் ஃப்ரிட்ஜில் வைக்கவும். செட்டான புட்டிங்கை ஒரு தட்டில் கவிழ்த்து, ரோஜா இதழ், பாதாம், தேன் ஆகியவற்றால் அலங்கரித்துப் பரிமாறவும்.


லவ் ரோஸ்

தேவையானவை:
மாவு செய்ய:
 மைதா மாவு - ஒன்றேகால் கப்
 சர்க்கரை - ஒரு டேபிள்ஸ்பூன்
 உப்பு - கால் டீஸ்பூன்
 குளிர்ந்த வெண்ணெய்  (உப்பு
   சேர்க்காதது) -  8 டேபிள்ஸ்பூன்
 குளிர்ந்த நீர் - 3 டேபிள்ஸ்பூன்

பூரணம் செய்ய:
 ஆப்பிள் - 2 (தோலுடன் நீளவாக்கில் மெலிதாக நறுக்கியது)
 சர்க்கரை - அரை கப்
 உருக்கிய வெண்ணெய் (உப்பு சேர்க்காதது) - 4 டேபிள்ஸ்பூன்
 எலுமிச்சைச்சாறு - 3 டேபிள்ஸ்பூன்
 மிக்ஸட் ஃப்ரூட் ஜாம் - கால் கப்

p47e.jpg

செய்முறை:
மாவுக்குத் தேவையான, மைதா மாவு மற்றும் உப்பு, சர்க்கரை ஒன்றாகச் சேர்த்துக் கலக்கவும். அதன் மேல் குளிர்ந்த வெண்ணெய் சேர்த்து, உதிரியாகப் பிசைந்து எடுக்கவும். பின்பு குளிர்ந்த நீரையும் சேர்த்து லேசாக பிசைந்துக் கொள்ளவும். இதை மூடிபோட்டு ஃபிரிட்ஜில் வைக்கவும். ஒரு மணி நேரத்துக்குப் பிறகு ஃப்ரிட்ஜில் இருந்து எடுத்த மாவை, மைதா மாவுத் தூவி கால் இன்ச் தடிமனில் பரப்பிக் கொள்ளவும். பரத்திய மாவை வட்டமான மூடியை வைத்து வட்ட வட்டமாக வெட்டி எடுக்கவும். வெட்டிய வட்ட வடிவ மாவை, வெண்ணெய் தடவிய கப் கேக் டிரேயில் கப் வடிவத்தில் அழுத்தி வைக்கவும். பின்பு இதை ஃப்ரிட்ஜில் வைக்கவும்.

பூரணம் செய்முறை:
நீளவாக்கில் வெட்டிய ஆப்பிள் துண்டுகளை, எலுமிச்சைச்சாற்றில் பிரட்டி எடுக்கவும். சிறிது வெண்ணெயையும், கால் கப் சர்க்கரையையும் ஆப்பிளின் மேல் ஊற்றி மைக்ரோவேவ் அவனில் ஒரு நிமிடம் வேக விடவும். மீதமுள்ள வெண்ணெயையும் சர்க்கரையையும் கலந்து, ஃப்ரிட்ஜில் வைத்து எடுத்த கப்பின் உள்பக்கமாக தடவிக் கொள்ளவும். பின்பு ஆப்பிள் துண்டுகளை (18) நீளவாக்கில் அடுக்கி வைத்து, மெதுவாக உருட்டி, ரோஜாப்பூ போல வடிவமைத்து, அதை ஃப்ரிட்ஜில் வைத்து எடுத்த கப்பின் உள்ளே வைக்கவும்.அதை 25-30 நிமிடங்கள் அவனில் வைத்து வேக விடவும். ஆறியவுடன் ஜாமை (அவனில்) வைத்து  லேசாகச் சூடாக்கி, பிரஷ் கொண்டு ஆப்பிளின் மேல் தடவிப் பரிமாறவும்.


லப்டப் பீட்சா

தேவையானவை:
 மைதா மாவு - 2 கப்
 ஈஸ்ட், சர்க்கரை - தலா ஒரு டேபிள்ஸ்பூன்
 வெதுவெதுப்பான வெந்நீர் -
2/3 கப் + 2 டேபிள்ஸ்பூன்
 உப்பு - அரை டீஸ்பூன்

டாப்பிங் செய்ய:
 தக்காளி சாஸ் - கால் கப்
 குடமிளகாய் (பச்சை, மஞ்சள்
  சிவப்பு ) – தேவைக்கு
 மொசேரல்லா சீஸ் துருவல் - அரை கப்
 பேசில், ஆரிகனோ, திரித்த மிளகாய் - தூவுவதற்கு

p47f.jpg

செய்முறை:
குடமிளகாயை இதய வடிவில் நறுக்கவும். ஒரு கப் மைதா மாவு, ஈஸ்ட், உப்பு, சர்க்கரை, வெந்நீர் சேர்த்து நன்றாகப் பிசையவும். மீதமுள்ள ஒரு கப் மைதா மாவை சிறிது சிறிதாக கலந்து பிசைந்து புரோட்டா மாவு பதத்துக்குப் பிசையவும். மாவை 15 நிமிடத்துக்கு துண்டில் சுற்றி வைக்கவும். பின்பு  இதய வடிவில் தேய்க்கவும். எண்ணெய் தடவிய பேக்கிங் தட்டின் மேல் வைத்து, அதன் மேல் தக்காளி சாஸ் தடவி, சீஸ் துருவல் தூவி,  இதய வடிவில் வெட்டிய குடமிளகாய்களை நன்றாக அடுக்கவும். பின்பு பேசில், ஆரிகனோ, திரித்த மிளகாய் ஆகியவற்றைத் தூவி, பின்பு இதை, 180 டிகிரி ஃபாரன்ஹீட் ஃப்ரீஹீட் செய்த அவனில் 12-15 நிமிடங்கள் பேக் செய்து சூடாக பரிமாறவும்.

குறிப்பு: ஆரிகனோ, திரித்த மிளகாய் இல்லையெனில், ரெடிமேட் பீட்சா ஆர்டர் செய்யும்போது கிடைக்கும் பாக்கெட் தூளைப் பயன்படுத்தலாம்.


பனீர் சாலட்

தேவையானவை:
 பனீர் - 200 கிராம்
 தர்பூசணி - 200 கிராம்
 லெட்டீஸ் இலை – 6
 கொத்துமல்லித் தழை – சிறிதளவு
 ஆலிவ் ஆயில் - 2 டேபிள்ஸ்பூன்
 பால்சாமிக் வினிகர் -
ஒரு டேபிள்ஸ்பூன்
 உப்பு, மிளகு – தேவைக்கு

p47g.jpg

செய்முறை:
பனீர், தர்பூசணியை இதய வடிவில் நறுக்கவும்.  மல்லித்தழையைப் பொடியாக நறுக்கவும். லெட்டீஸ் இலையின் மேல் சிறிதளவு உப்பு தூவி  வைக்கவும். ஆலிவ் ஆயில், பால்சாமிக் வினிகர், மிளகு சேர்த்து, நன்றாகக் கலக்கவும். லெட்டீஸ் இலையை தட்டில் பரப்பி அதன் மேல் தர்பூசணி, பனீர் என மாற்றி மாற்றி இரண்டு வரிசைகளாக அடுக்கவும். ஆலிவ் ஆயில் கலவையை அதன் மேல் பகுதியில் ஊற்றவும். இதை  ஃப்ரிட்ஜில் வைக்கவும். கொத்துமல்லித்தழை தூவிப் பரிமாறவும்.


பிரான் பெஸ்டோ ஸ்பெகட்டி

தேவையானவை:
 ஸ்பெகட்டி - 250 கிராம்
 ஆலிவ் ஆயில் - ஒரு டேபிள்ஸ்பூன்
 புதினா இலை – சிறிதளவு
 தக்காளி – பாதி
 இறால் மீன் - கால் கிலோ
 பெஸ்டோ சாஸ்,
  உப்பு, துளசி இலை, புதினா
  இலை, மல்லித்தழை – தேவைக்கு
 சீஸ் துருவல் - கால் கப்
 வால்நட் (அக்ரூட்) - கால் கப்
 பூண்டு - 4 பல்
 ஆலிவ் ஆயில் - 3 டேபிள்ஸ்பூன்

p47h.jpg

செய்முறை:
தக்காளியைப் பொடியாக நறுக்கவும். பெஸ்டோ சாஸ், துளசி இலை, புதினா இலை, மல்லித்தழை அனைத்தையும் மிக்ஸியில் ஒன்றாகச் சேர்த்து அரைக்கவும். தண்ணீருடன், ஆலிவ் ஆயில், உப்பு சேர்த்து கொதிக்க விட்டு, அதில் ஸ்பெகட்டி சேர்த்து வேகவிடவும். வெந்த ஸ்பெகட்டியை வடிகட்டவும்.  தண்ணீரையும் ஸ்பெகட்டியையும் தனியாக எடுத்துவைக்கவும். ஆலிவ் ஆயிலைச் சூடாக்கி, பூண்டு சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். இறால் மீன், தக்காளி சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும். அதன் மேல் பெஸ்டோ சாஸ் ஊற்றி 2 நிமிடம் கொதிக்கவிடவும். ஸ்பெகட்டி சேர்த்து நன்றாகக் கலக்கவும். 4 டேபிள்ஸ்பூன் ஸ்பெகட்டி, வேக வைத்த தண்ணீரையும் சேர்த்து நன்றாகக் கலக்கவும். புதினா, சீஸ் துருவல், வால்நட் துருவல் தூவிப் பரிமாறவும்.


ரெட் ஹார்ட்ஸ்
 
தேவையானவை:
 மைதா மாவு - ஒரு கப்
 பேக்கிங் பவுடர் - ஒன்றரை டீஸ்பூன்
 உப்பு - கால் டீஸ்பூன்
 ஆரிகானோ - 2 டேபிள்ஸ்பூன்
 பூண்டு - 2 பல்
 சீஸ் ஸ்பிரட் - கால் கப்
 சிவப்பு குடமிளகாய் - ஒரு கப்
 வெண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன்

p47i.jpg

p47j.jpg

செய்முறை:
பூண்டு, சிவப்பு குடமிளகாயை நறுக்கவும், மைதா மாவு, பேக்கிங் பவுடர், ஆரிகானோ ஆகியவற்றுடன் வெண்ணெய் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்துக்குப் பிசைந்து கொள்ளவும். குடமிளகாய், சீஸ், வெண்ணெய், பூண்டு சேர்த்துக் கலந்துவைத்துக் கொள்ளவும். சப்பாத்தி மாவை கால் இன்ச் தடிமனில் சதுரமாகத் தேய்க்கவும். அதன் மேல் சீஸ், குடமிளகாய் கலவையைச் சரிசமமாகப் பரப்பவும். சப்பாத்தி மாவின் மேல் சீஸ் தூவி, வலதுபுற ஓரத்தை உள்புறமாக மடிக்கவும். இதேபோன்று இடதுபுறமும் செய்யவும். பேக்கிங் ட்ரேயில் ஃபாயில் பேப்பர் பரப்பி, அதன் மேல் இதை வைக்கவும். இதை 20 நிமிடங்கள் ஃப்ரீசரில் வைக்கவும். அவனை 200 டிகிரி செல்சியஸில் 10 நிமிடங்கள் ஃப்ரீஹீட் செய்யவும். ஃப்ரீசரில் வைத்த மாவை எடுத்து, அதனுடைய கீழ்பகுதியை அழுத்தி ஹார்ட் வடிவில் கொண்டு வரவும். அரை இன்ச் கனமான துண்டுகளாக கூர்மையான கத்தியை வைத்து ரோலை வெட்டி எடுக்கவும். வெட்டி எடுத்த துண்டுகளை கால் இன்ச் இடைவெளி விட்டு ஃபாயில் பேப்பர் மேல் வைத்து, அதன் மேல் வெண்ணெய் தடவி 10 நிமிடங்கள் (பொன்னிறமாகும் வரை) அவனில் வைத்தெடுக்கவும். 10 நிமிடங்கள் ஆறவிட்டு பரிமாறவும்.


பொட்டேட்டோ லவ் கேக்

தேவையானவை:
 உருளைக்கிழங்கு - ஒன்றரை கிலோ
 வெங்காயம் - 2
 வெண்ணெய் - 60 கிராம்
 சீஸ் - 2 கப்
 மல்லித்தழை – சிறிதளவு
 உப்பு, மிளகு – தேவைக்கு

p47k.jpg

செய்முறை:
வெங்காயத்தைப் பொடியாக நறுக்கவும். சீஸைத் துருவவும். உருளைக்கிழங்கை வட்ட வட்டமாக மெல்லிதாகத் தோலுடன் நறுக்கவும். வெண்ணெயைச் சூடாக்கி  வெங்காயத்தை ஒரு நிமிடம் வதக்கவும். அவனை 200 டிகிரிக்கு சூடாக்கவும். ஒரு வட்ட வடிவப் பாத்திரத்தின் ஓரங்களில் வெண்ணெய் தடவவும். வட்டவடிவில் உருளைக்கிழங்குத் துண்டுகளை ஒன்றின் மேல் ஒன்றாக அடுக்கி அதன்மேல் உப்பு, மிளகு, வெங்காயம், சீஸ், கொத்துமல்லித்தழை தூவவும். இதை போலவே பாத்திரம் மேல் பாகம் நிரம்பும் வரை அடுக்கடுக்காக வைக்கவும். மேல்பாகத்தில் வெண்ணெய் தடவி வைக்கவும். ஃபாயில் பேப்பர் வைத்து மூடி ஒன்றரை மணி நேரம் அவனில் வைத்து பேக் செய்யவும். பின்பு ஃபாயில் பேப்பரை எடுத்து 30 நிமிடங்கள் அவனில் வைத்து முறுக விடவும். 10 நிமிடங்கள் ஆறவிட்டு வெளியே எடுத்துப் பரிமாறவும்.

குறிப்பு:
ஸ்பிரிங் / பொம் (Spring Foam) என்னும் பாத்திரத்தில் செய்தால் இன்னும் சுலபமாக இருக்கும்.''

- படங்கள்: எல்.ராஜேந்திரன்

Link to comment
Share on other sites

பசியை தூண்டும் சீரகம் - தனியா சூப்

வயிற்று கோளாளு, அஜீரணம் பிரச்சனை இருப்பவர்களுக்கு இந்த சீரகம் - தனியா சூப் மிகவும் நல்லது. இந்த சூப்பை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

 
 
 
 
பசியை தூண்டும் சீரகம் - தனியா சூப்
 
தேவையான பொருட்கள் :

சீரகம் - கால் கப்
தனியா (மல்லி) - கால் கப்
இஞ்சி - சிறிய துண்டு
மிளகு - 2 ஸ்பூன்
எலுமிச்சைப்பழம் - 2
கறிவேப்பிலை - 2 ஆர்க்கு
உப்பு - தேவைக்கு

செய்முறை :

* இஞ்சியை தோல் சீவி வைக்கவும்.

* எலுமிச்சை பழத்திலிருந்து சாறு பிழிந்து வைக்கவும்.

* தனியா (மல்லி), சீரகம், மிளகை சிறிது தண்ணீர் ஊற்றி ஊற வைக்கவும்.

* ஊறவைத்த பொருட்களுடன் கறிவேப்பிலை, இஞ்சி, சேர்த்து மிக்சியில் போட்டு நைசாக அரைத்து கொள்ளவும்.

* அரைத்த இந்த விழுதுடன் 2 கப் தண்ணீர் ஊற்றி நன்றாக கலந்த பின் வடிகட்டி சக்கையை எடுத்து விடவும்.

* வடிகட்டிய கரைசலை அடுப்பில் வைத்து நன்கு கொதித்ததும் இறக்கவும்.

* கடைசியாக எலுமிச்சை சாறு பிழிந்து சூடாக பரிமாறவும்.

* இந்த சூப் பசியை தூண்டும். உணவு நன்று செரிமானம் ஆகும். இந்த சூப் கெட்டியாக இருக்காது. கெட்டியாக வேண்டுமானால் சோளமாவு சேர்த்து கொள்ளலாம்.
Link to comment
Share on other sites

குடல் ரெசிப்பி

திவ்யா பிரமிள்

 

* குடல் மிளகு வறுவல்
* குடல் பிரியாணி
* குடல் மசால் தோசை
* மிளகாய் - வெங்காயம்
*குடல் வதக்கல்
* ஸ்பைஸி குடல் மசாலா
* குடல் தேங்காய்ப்பால் குழம்பு
* குடல் 65

p107.jpg

தூத்துக்குடியைச் சேர்ந்த சமையல் கலைஞரும் உணவுப் புகைப்பட நிபுணருமான திவ்யா பிரமிள், விதவிதமான மட்டன் ரெசிப்பிகளை வழங்கியிருக்கிறார்.


குடல் மிளகு வறுவல்

தேவையானவை:
 குடல் - 200 கிராம்
 சின்ன வெங்காயம் - 10
 மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்
 மிளகுத்தூள் - 1 டீஸ்பூன்
 சீரகத்தூள் - 1 டீஸ்பூன்
 முழு மிளகு - கால் டீஸ்பூன்
 சீரகம் - அரை டீஸ்பூன்
 சோம்பு – கால் டீஸ்பூன்
 சிறிய பச்சை மிளகாய் - ஒன்றில் பாதி
 எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்
 பட்டை - சிறிய துண்டு
 கறிவேப்பிலை, இஞ்சி-பூண்டு பேஸ்ட், உப்பு - சிறிதளவு

p107a.jpg

செய்முறை:
குக்கரில் குடலோடு ஒரு கப் தண்ணீர் ஊற்றி, இஞ்சி-பூண்டு பேஸ்ட், மஞ்சள் தூள், சிறிது உப்பு சேர்த்து 15 நிமிடங்கள் சிறு தீயில் வேகவைக்கவும். வெந்த குடலை தனியாக எடுத்துவைக்கவும். குடல் வேகவில்லை என்றால், மீண்டும் குக்கரில் தண்ணீர் ஊற்றி (தேவையெனில்) வேகவைக்க வேண்டும். குடல் வெந்தது போக மீதம் உள்ள தண்ணீரை நான்-வெஜ் உணவுகள் செய்யப் பயன்படுத்தலாம். வெறும் வாணலியில் கால் டீஸ்பூன் சீரகம் மற்றும் முழு மிளகைச் சேர்த்து லேசாக வறுத்து தட்டிவைக்கவும். பொடிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. வறுத்தால் குடல் வறுவல் மணம் நன்றாக இருக்கும்.

வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், லேசாக தட்டிய சோம்பு, பட்டை, பச்சை மிளகாய், மீதமிருக்கும் கால் டீஸ்பூன் சீரகம், கறிவேப்பிலை, நறுக்கிய வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கவும். இத்துடன் மஞ்சள் தூள், உப்பு, சீரகத்தூளையும் சேர்த்து நன்கு வதக்கவும். இதனுடன் வேக வைத்த குடல் மட்டும் சேர்த்து, 3 நிமிடங்கள் வதக்கி, மிளகுத்தூள் சேர்த்து மீண்டும் ஓரிரு நிமிடங்கள் வதக்கவும். பிறகு, தட்டி வைத்துள்ள மிளகு, சீரகம் சேர்த்து ஒரு நிமிடம் கிளறி இறக்கவும். குடல் மிளகு வறுவலில் எண்ணெய்க்கேற்ப சுவை கூடும். கொழுப்பு நிறைந்த குடலாக இருந்தால், எண்ணெய் குறைவாகச் சேர்த்தால் போதும்.


குடல் பிரியாணி

தேவையானவை:
 சீரகச் சம்பா அரிசி - 450 கிராம்
 மட்டன் எலும்புத்துண்டுகள் - 250 கிராம்
 குடல் - 250 கிராம்
 பெரிய வெங்காயம் - 2
 மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்
 மிளகாய்த்தூள் - 3 டீஸ்பூன்
 சீரகத்தூள் - 2 டீஸ்பூன்
 சோம்பு - 1 டீஸ்பூன்
 கொத்தமல்லித்தழை - அரை கப்
 புதினா - அரை கப்
 பட்டை - ஒரு பெரிய துண்டு
 கிராம்பு - 5
 ஏலக்காய் - 8
 பிரிஞ்சி இலை - 2
 பிரியாணி பூ - 2
 கடல்பாசி - 2 துண்டுகள்
 இஞ்சி-பூண்டு பேஸ்ட் - 2 டேபிள்ஸ்பூன்
 தயிர் - அரை கப்
 தேங்காய்ப்பால் - 1 கப்
 எலுமிச்சை - ஒன்றில் பாதி
 எண்ணெய், உப்பு - தேவையான அளவு

p107b.jpg

ஊற வைக்க:
 இஞ்சி-பூண்டு பேஸ்ட் - 2 டீஸ்பூன்
 தயிர் - கால் கப்
 மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்

செய்முறை:
குடல் மற்றும் மட்டனை ஒரு பாத்திரத்தில் இட்டு, ஊறவைக்க கொடுத்தவற்றோடு பிசிறி ஊறவைக்கவும். சீரகச் சம்பா அரிசியை 10 நிமிடங்கள் ஊறவைக்கவும். குக்கரில் எண்ணெய் ஊற்றி சூடானதும் பட்டை, கிராம்பு, சோம்பு, ஏலக்காய், பிரிஞ்சி இலை, கடல்பாசி, பிரியாணி பூ சேர்த்து வதக்கவும். அதிகம் வதக்கிவிட வேண்டாம். நீளமாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து நிறம் மாற வதக்கவும். இத்துடன் கீறிய மிளகாய், இஞ்சி-பூண்டு பேஸ்ட் சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும். இத்துடன் மஞ்சள்தூள், உப்பு, மிளகாய்த்தூள், சீரகத்தூள் சேர்த்து வதக்கி தயிர், கொத்தமல்லித்தழை, புதினா சேர்க்கவும். புதினா இலைகள் சுருங்கியதும் ஊறவைத்த குடலைச் சேர்த்து 5 நிமிடங்கள் வதக்கவும். இத்துடன் தேங்காய்ப்பால், ஒன்றரை கப் தண்ணீர் சேர்த்து எலுமிச்சைச் சாறு பிழிந்து உப்பு போட்டு குக்கரை மூடி 20 நிமிடங்கள் குறைந்த தீயில் வேகவிடவும். பிறகு, குக்கரை திறந்து ஊறவைத்த சீரகச் சம்பா அரிசியைச் சேர்த்து குக்கரை மூடி, குறைந்த தீயில் 10 நிமிடம் வேகவிடவும். பிறகு திறந்து பரிமாறவும். குடலில் இருந்து வெளிப்படும் கொழுப்பே போதுமானது. தனியே நெய் சேர்க்கவேண்டிய அவசியமில்லை.


குடல் மசால் தோசை

தேவையானவை:
 புளிக்காத தோசை மாவு - 2 கப்
 குடல் மிளகு வறுவல் - 3 டேபிள்ஸ்பூன் (பக்கம் 108-ல் உள்ள ரெசிப்பி பார்க்க)
 நெய்/எண்ணெய் - தேவையான அளவு

p107c.jpg

செய்முறை:
அடுப்பில் தோசைக்கல்லை வைத்து நெய்/எண்ணெய் விட்டு, ஒரு பெரிய கரண்டி மாவெடுத்து வட்டமாக ஊற்றவும். அதன்மீது குடல் மிளகு வறுவலை வைத்துப் பரப்பவும். பிறகு, மூடியால் மூடி மிதமான தீயில்  நிமிடங்கள் வேகவிடவும். பிறகு திருப்பிப் போட்டு சுற்றிலும் நெய்/எண்ணெய் விட்டு வேகவிட்டு எடுத்து, குடல் குழம்பு அல்லது சால்னாவோடு பரிமாறினால் சுவை அள்ளும்.

குறிப்பு:
குடல் உள்ள பகுதியை அதிகம் வேகவிட வேண்டியதில்லை.


மிளகாய் - வெங்காயம் குடல் வதக்கல்

தேவையானவை:
 குடல் - 100 கிராம்
 பெரிய வெங்காயம் - 2
 பச்சை மிளகாய் - 2
 கறிவேப்பிலை - சிறிது
 மஞ்சள்தூள் - சிறிது
 மிளகுத்தூள் - 1 டீஸ்பூன்
 எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்
 உப்பு - தேவையான அளவு

p107d.jpg

செய்முறை:
குடலை நன்கு கழுவி, பிரஷர் குக்கரில் தேவையான அளவு தண்ணீர், மஞ்சள்தூள், உப்பு போட்டு வேகவிட்டு, எடுத்து வடிகட்டி தனியாக வைக்கவும். வெங்காயம், பச்சை மிளகாயை பொடியாக நறுக்கவும்.
ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு கறிவேப்பிலை, நறுக்கிய பச்சை மிளகாய், பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும். வெங்காயத்தின் நிறம் மாறியதும் வேகவைத்த குடலை இத்துடன் சேர்த்து வதக்கவும். மிளகுத்தூள், உப்பு சேர்த்து 4 நிமிடங்கள் நன்கு வதங்கியதும் இறக்கி, ரசம் சாதத்துடன் பரிமாறவும்.

குறிப்பு:
குடலை வதக்கும்போது தீயை மிதமாக்கிக் கொண்டால் குடல் சட்டியில் ஒட்டாது. காரம் அதிகம் வேண்டாம் எனில், பச்சை மிளகாயை குறைத்துக்கொள்ளலாம். காரம் வேண்டும் எனில் மிளகாயை அதிகப்படுத்திக்கொள்ளலாம்.


ஸ்பைஸி குடல் மசாலா

தேவையானவை:
 குடல்  - 150 கிராம்
 சின்ன வெங்காயம் - 5
 தக்காளி - 1
 மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன்
 சீரகத்தூள் - 1 டீஸ்பூன்
 இஞ்சி-பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
 பச்சை மிளகாய் - 1
 நறுக்கிய கொத்தமல்லித்தழை - ஒரு டீஸ்பூன்
 கறிவேப்பிலை - சிறிதளவு
 பட்டை - சிறிய துண்டு
 கிராம்பு - 1
 சீரகம் - அரை டீஸ்பூன்
 உப்பு, எண்ணெய் - தேவையான அளவு

p107e.jpg

செய்முறை:
குடலை சிறிது சுடுநீர் ஊற்றி நன்கு கழுவி வைக்கவும். குக்கரை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றிச் சூடானதும் சீரகம், கறிவேப்பிலை, பட்டை, கிராம்பு, வெங்காயம், சேர்த்து நிறம் மாற வதக்கி அத்துடன் இஞ்சி-பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கவும். இத்துடன் நறுக்கிய தக்காளி, பச்சை மிளகாய், உப்பு, மிளகாய்த்தூள், சீரகத்தூள், குடல் சேர்த்து வதக்கவும். அரை கப் தண்ணீர் ஊற்றி மூடிபோட்டு, தீயைக் குறைத்து 15 நிமிடம் வேகவிடவும்.

பிரஷர் நீங்கியதும் மூடியைத் திறந்து, தண்ணீர் அதிகம் இருந்தால் கிரேவி பதத்துக்கு வற்றவைத்து கொத்தமல்லித்தழை தூவி பரிமாறவும்.

குறிப்பு:
குடலில் இருக்கும் கொழுப்பு, கலவையில் பிரிந்து மிதக்கும் என்பதால், எண்ணெயைக் குறைவாகவே சேர்க்கலாம்.


குடல் தேங்காய்ப்பால் குழம்பு

தேவையானவை:
 குடல் - அரை கிலோ
 தேங்காய் - அரை கப் (துருவியது)
 தக்காளி - 1
 சின்ன வெங்காயம் - 15
 இஞ்சி-பூண்டு பேஸ்ட் -  3 டீஸ்பூன்
 மிளகாய்த்தூள் - 4 டீஸ்பூன்
 தனியாத்தூள் - 2 டீஸ்பூன்
 மஞ்சள்தூள் - 1 டீஸ்பூன்
 சீரகம் - 2 டீஸ்பூன்
 சோம்பு - 1 டீஸ்பூன்
 பட்டை - ஒரு சிறிய துண்டு
 ஏலக்காய் - 3
 கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை - சிறிதளவு
 உப்பு, எண்ணெய் - சிறிதளவு

p107f1.jpg

செய்முறை:
தேங்காயை மிக்ஸியில் சேர்த்து, கால் கப் தண்ணீர் ஊற்றி அரைத்து, பால் எடுத்து வைக்கவும். சின்ன வெங்காயத்தில் ஐந்தை எடுத்து தோல் நீக்கி நறுக்கி வைக்கவும். மீதம் உள்ள வெங்காயத்தை உரித்து தனியே வைக்கவும். இந்த வெங்காயத்துடன் சீரகம், சோம்பு சேர்த்து விழுதாக அரைக்கவும்.

அடுப்பில் குக்கரை வைத்து எண்ணெய் ஊற்றி, சூடானதும் பட்டை, ஏலக்காய், கறிவேப்பிலை, நறுக்கிய  வெங்காயம் சேர்த்து வதங்கியதும் இஞ்சி-பூண்டு பேஸ்ட் சேர்த்து மீண்டும் வதக்கவும். இத்துடன் அரைத்து வைத்திருக்கும் விழுதைச் சேர்த்து வதக்கவும். விழுதில் பச்சை வாசனை நீங்கியதும், நறுக்கிய தக்காளியைச் சேர்த்து பாதி வேகும் வரை வதக்கவும். பிறகு, தேவையான உப்பு, மிளகாய்த்தூள், தனியாத்தூள், மஞ்சள்தூள் சேர்த்து வதக்கவும்.

இத்துடன் கழுவி வைத்துள்ள குடலைச் சேர்த்து, இரண்டரை கப் தண்ணீர் சேர்த்து மூடிபோட்டு, தீயை முற்றிலும் குறைத்து 15 நிமிடங்கள் வேகவிடவும். பிரஷர் நீங்கியதும் குடல் வெந்துவிட்டதா என்று பார்த்து, வேகவில்லை என்றால் மீண்டும் சிறு தீயில் வேகவிடவும். வெந்த குடலில் அதிக தண்ணீர் இருந்தால், சிறிது வற்றவிடவும்.

பிறகு, எடுத்து வைத்திருக்கும் தேங்காய்ப்பாலை குடலில் ஊற்றி 4 நிமிடங்கள் குறைந்த தீயில் கொதிக்க விடவும். அதிகம் கொதிக்க விட வேண்டாம். கொத்தமல்லித்தழை தூவி இறக்கவும். குழம்பு கெட்டியாக வேண்டுமானால் தேங்காய் சிறிதளவு விழுதாக அரைத்து குழம்பில் சேர்க்கலாம்.


குடல் 65

தேவையானவை:
 குடல் - 100 கிராம்
 கடலை மாவு - 3 டேபிள்ஸ்பூன்
 சோள மாவு - 2 டேபிள்ஸ்பூன்
 மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன்
 சீரகத்தூள் - 2 டீஸ்பூன்
 சோம்புத்தூள் - முக்கால் டீஸ்பூன்
 மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்
 எலுமிச்சைச் சாறு - 2 டீஸ்பூன்
 வினிகர் - 1 டீஸ்பூன்
 சோடா உப்பு - 1 டீஸ்பூன்
 எண்ணெய் - தேவையான அளவு
 உப்பு - தேவையான அளவு

குடல் வேகவைக்க:
 இஞ்சி-பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
 மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்

p107g.jpg

செய்முறை:
குடலை குக்கரில் சேர்த்து மஞ்சள்தூள், உப்பு, இஞ்சி-பூண்டு பேஸ்ட் சேர்த்து சிறு தீயில் வேகவைக்கவும். வெந்ததும், குடலை மட்டும் தனியாக எடுத்து வைக்கவும். குடல் வேகவில்லை என்றால், கூடுதலாக 5 அல்லது 10 நிமிடங்கள் சிறு தீயில் வேகவிடவும்.

தேவையானவற்றில் எண்ணெய் நீங்கலாக மற்ற அனைத்துப் பொருட்களையும் ஒரு பாத்திரத்தில் சேர்த்து, சிறிது நீர்விட்டு பேஸ்ட்டாகக் கரைக்கவும். பிறகு, கரைத்தவற்றில் வெந்த குடல் துண்டுகளைப் புரட்டி எடுத்து, சூடான எண்ணெயில் பொரித்து எடுக்கவும். 

Link to comment
Share on other sites

பன்னீர் - பச்சை பட்டாணி கட்லெட்

பட்டாணியில் போலிக் ஆசிட், நார்ச்சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ளது. மாலை நேரத்தில் ஸ்நாக்ஸ் சாப்பிட வேண்டுமென்று தோன்றினால், பச்சைப் பட்டாணியை வைத்து கட்லெட் செய்து சாப்பிடலாம்.

 
 
 
 
பன்னீர் - பச்சை பட்டாணி கட்லெட்
 
தேவையான பொருட்கள் :

பச்சை பட்டாணி - 3/4 கப்
அரிசி மாவு - 1/2 கப்
கடலை மாவு - 1/2 கப்
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
பச்சை மிளகாய் - 2
பன்னீர் - 1/4 கப் (துருவியது)
வெங்காயம் - 2
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை :

* பச்சை பட்டாணியை வேக வைத்து மசித்து கொள்ளவும்.

* வெங்காயம், தக்காளி, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* பன்னீரை துருவிக்கொள்ளவும்.

* ஒரு பௌலில் வேக வைத்து மசித்து வைத்துள்ள பச்சை பட்டாணியை போட்டு, அத்துடன் அரிசி மாவு, கடலை மாவு, மஞ்சள் தூள், வெங்காயம், பச்சை மிளகாய், பன்னீர், உப்பு, மற்றும் தண்ணீர் ஊற்றி, சற்று கெட்டியாக கலந்து கொள்ள வேண்டும்.

* பின் அந்த கலவையை கட்லெட் போல், தட்டையாகவும் சற்று தடிமனாகவும் தட்டி ஒரு தட்டில் வைத்துக் கொள்ள வேண்டும்.

* பிறகு ஒரு தவாவை அடுப்பில் வைத்து, அதில் ஓரளவு எண்ணெய் விட்டு, காய்ந்ததும், அதில் தட்டி வைத்துள்ள கட்லெட்டை, முன்னும், பின்னும் பொன்னிறமாக வேக வைத்து எடுக்க வேண்டும்.

* இப்போது பன்னீர் - பச்சை பட்டாணி கட்லெட் ரெடி!!!

* இதனை தக்காளி சாஸ் உடன் தொட்டு சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.
Link to comment
Share on other sites

மாலை நேர ஸ்நாக்ஸ் வெண்டைக்காய் சிப்ஸ்

 

மாலையில் டீ அல்லது காபி குடிக்கும் போது காரமாக எதையேனும் சாப்பிட வேண்டுமென்று தோன்றும். அப்போது சற்று வித்தியாசமாக வெண்டைக்காய் சிப்ஸ் செய்து சுவையுங்கள்.

 
 
மாலை நேர ஸ்நாக்ஸ் வெண்டைக்காய் சிப்ஸ்
 
தேவையான பொருட்கள் :

பிஞ்சு வெண்டைக்காய் - 20,
கரம்மசாலா தூள் - கால் டீஸ்பூன்,
மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்,
மிளகாய் தூள் - கால் டீஸ்பூன்,
பெருங்காயத் தூள் - கால் டீஸ்பூன்,
அரிசி மாவு - 1 டீஸ்பூன்,
சோள மாவு (கார்ன்ஃப்ளவர்) - கால் டீஸ்பூன்,
கடலை மாவு - 3 டீஸ்பூன்,
எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை :

* வெண்டைக்காயை நீரில் கழுவி, துணியால் நன்றாக துடைத்து விட்டு, நீள துண்டுகளாக்கிக் கொள்ள வேண்டும். வெண்டைக்காயில் சிறிதும் தண்ணீர் இருக்கக்கூடாது.

* நறுக்கிய வெண்டைக்காயை ஒரு பாத்திரத்தில் போட்டு, அத்துடன் கரம் மசாலா, அரிசி மாவு, மல்லித் தூள், சோள மாவு, மிளகாய் தூள் போட்டு, தேவையான அளவு உப்பு சேர்த்து, சிறிது தண்ணீர் தெளித்து நன்கு பிரட்டி 15 நிமிடம் ஊற வைக்கவும்.

* கடாயில் எண்ணெய் வைத்துக் காய்ந்ததும், வெண்டைக்காய்களை அதில் சிறிது, சிறிதாகப் போட்டுப் பொரித்தெடுக்கவும். வித்தியாசமான சுவையில் அசத்தும், இந்த சிப்ஸ்.
Link to comment
Share on other sites

செட்டிநாடு ஸ்டைல் காளான் குழம்பு

சைவ பிரியர்களுக்கு காளான் மிகவும் பிடிக்கும். இன்று செட்டிநாடு ஸ்டைல் காளான் குழம்பு செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

 
செட்டிநாடு ஸ்டைல் காளான் குழம்பு

தேவையான பொருட்கள் :

காளான் - 300 கிராம்
வெங்காயம் - 2
தக்காளி - 2
மஞ்சள் தூள் - 1/4 ஸ்பூன்
கொத்துமல்லி விதை(தனியா) - 1 ஸ்பூன்
சீரகம் - 3/4 ஸ்பூன்
சோம்பு - 1/2 ஸ்பூன்
பட்டை- 2 இன்ச் துண்டு
கிராம்பு - 2
ஏலக்காய் - 2
காய்ந்த மிளகாய் - 5 (அ) காரத்துக்கேற்ப
தேங்காய் - கால் மூடி
எண்ணெய்
உப்பு
கறிவேப்பிலை, கொத்துமல்லி இலை

செய்முறை :

* ஒரு வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* கடாயில் ஒரு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும் தனியா, சீரகம், பட்டை, கிராம்பு, சோம்பு, ஏலக்காய் போட்டு பொரிந்ததும் வெங்காயம், காய்ந்த மிளகாய் சேர்த்து வதக்கவும்.

* அடுத்து அதில் தக்காளி சேர்த்து வதக்கவும்.

* தக்காளி நன்றாக மசிந்ததும் தேங்காய்த்துருவல் சேர்த்து வதக்கி ஆறவைக்கவும். அனைத்தும் நன்றாக ஆறியதும் அதை மிக்சியில் போட்டு நன்றாக அரைத்து கொள்ளவும்.

* காளானை நன்கு கழுவி, நீரில்லாமல் துடைத்து சற்றே பெரிய துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.

* கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் கடுகு போட்டு தாளித்த பின் வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.

* அடுத்து அதில் அரைத்த மசாலா, மஞ்சள்தூள், உப்பு, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.

* குழம்பு நன்றாக கொதி வந்ததும், காளான் துண்டுகளை சேர்த்து அடுப்பை மிதமான தீயில் வைக்கவும்.

* குழம்பு திக்கான பதம் வந்து எண்ணெய் பிரிய ஆரம்பித்தவுடன் கொத்துமல்லி இலை தூவி அடுப்பிலிருந்து இறக்கவும்.

* சூப்பரான காளான் குழம்பு ரெடி.

* இந்த குழம்பு சாதம், தோசை, இட்லி இவற்றுக்கு பொருத்தமாய் இருக்கும்.
Link to comment
Share on other sites

 
சிதம்பரம் கத்திரிக்காய் கொத்சு!
 
 
E_1486716782.jpeg
 

இட்லிக்கு, தேங்காய் சட்னி, சாம்பார் மற்றும் இட்லி பொடியை மட்டுமே சுவைத்தவர்கள், சிதம்பரம் நடராஜர் கோவில், மேல ரதவீதி மற்றும் எஸ்.பி. கோவில் தெருவிலுள்ள, இரவு நேர சாலையோர கடைகளுக்கு சென்றால், இட்லிக்கு தொட்டுக் கொள்ள, சுவைமிகுந்த கத்தரிக்காய் கொத்சை ருசிக்கலாம்.


மிதக்கும் நல்லெண்ணெய்க்கு நடுவே, கடுகு, கறிவேப்பிலை கலந்த மசாலுடன் மிதக்கும் கத்தரிக்காயை பார்த்தாலே, நாவில் நீர் ஊறும். தோசை, சப்பாத்தி, அடை தோசை என, எல்லாவற்றுக்கும் தொட்டுக் கொள்ளலாம். புளியோதரை, தயிர் சாதம் மற்றும் பழைய கஞ்சிக்கு ஏற்ற, பொருத்தமான சைடு டிஷ் இது!


சிதம்பரம் நடராஜருக்கு படைக்கப்படும் நைவேத்தியங்களில், கொத்சுவும் உண்டு; சாம்பார் சாதத்தோடு சேர்த்து படைப்பர். அவ்வகையில், சிதம்பரத்தில் இந்த உணவு பிரபலம்.


சிறிதளவு தனியா, கடலைப் பருப்பு, மிளகாய் வற்றல், வெந்தயம் மற்றும் பெருங்காயம் ஆகியவற்றை ஒன்றாக வறுத்து, பொடியாக்க வேண்டும்.
நல்லெண்ணெயில் சிறிய வெங்காயத்தை பொன்னிறமாக வதக்கி, நான்கு துண்டாக நறுக்கிய பிஞ்சு கத்திரிக்காயையும் சேர்த்து, வதக்க வேண்டும். அதில், இடித்து வைத்த பொடி, புளி கரைத்த நீர், மிளகாய் பொடி, சிறிதளவு உப்பு மற்றும் மஞ்சள் சேர்த்து, வேக விட வேண்டும். நன்கு வெந்து, கத்தரிக்காய் மசிந்து, மசாலாவோடு, சேர்த்து தொக்கு போல இருக்கும். அப்பதத்தில் கடுகு, கறிவேப்பிலை தாளித்துக் கொட்டி, இறக்கினால், மணமணக்கும் கொத்சு தயார்!


தினமும் சட்னி, சாம்பார் செய்ய அலுத்துக் கொள்பவர்கள், கொத்சு செய்து வைத்துக் கொண்டால், ஒரு வாரம் வரை பயன்படுத்தலாம். புளிச் சேர்ப்பதால் கெட்டுப் போகாது.

Link to comment
Share on other sites

காரசாரமான பச்சை மிளகாய் சட்னி

 

இட்லி, தோசைக்கு தொட்டு கொள்ள காரசாரமான சட்னி இருந்தால் சூப்பராக இருக்கும். இன்று காரசாரமான பச்சை மிளகாய் சட்னி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

 
 
காரசாரமான பச்சை மிளகாய் சட்னி
 
தேவையான பொருட்கள் :

பச்சை மிளகாய் - 10
பூண்டு - 10 பல்
வெங்காயம் - 1 பெரியது
புளி - நெல்லிக்காய் அளவு
எண்ணெய் - 1 ஸ்பூன்
உப்பு - தேவைக்கு

தாளிக்க :

எண்ணெய் - 1 ஸ்பூன்
கடுகு, உளுந்தம் பருப்பு - கால் தேக்கரண்டி
கறிவேப்பிலை - சிறிதளவு

செய்முறை :

* பூண்டை தோல் நீக்கி வைக்கவும்.

* வெங்காயத்தை பெரிய துண்டுகளாக வெட்டி கொள்ளவும்.

* கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் பச்சை மிளகாய், பூண்டு சேர்த்து வதக்கவும்.

* அடுத்து அதில் வெங்காயத்தை சேர்த்து 2 நிமிடம் வதக்கவும்.

* அடுத்து அதில் புளி சேர்த்து 2 நிமிடம் வதக்கி ஆற வைக்கவும்..

* நன்றாக ஆறியதும் உப்பு சேர்த்து மிக்சியில் போட்டு நைசாக அரைக்கவும். தேவைப்பட்டால் சிறிது தண்ணீர் சேர்த்து கொள்ளலாம்.

* கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுந்தம் பருப்பு, கறிவேப்பிலை போட்டு தாளித்து சட்னியில் கொட்டவும்.

* சுவையான பச்சைமிளகாய் சட்னி ரெடி.

* இதனை இட்லி, தோசையுடன் சேர்த்து சாப்பிட சூப்பராக இருக்கும்,
Link to comment
Share on other sites

சூப்பரான மசாலா வடை குழம்பு

வித்தியாசமான குழம்பு செய்து சாப்பிட நினைப்போருக்கு மசாலா வடை குழம்பு ஏற்ற ஒன்றாக இருக்கும். இப்போது இந்த குழம்பை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

 
 
 
 
சூப்பரான மசாலா வடை குழம்பு
 
தேவையான பொருட்கள் :

மசாலா வடை - 10
வெங்காயம் - 2
பச்சை மிளகாய் - 3
மல்லிப் பொடி - 2 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 1 1/2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1 சிட்டிகை
துருவிய தேங்காய் - 5 டீஸ்பூன்
சோம்பு - 1/2 டீஸ்பூன்
முந்திரி - 5
இஞ்சி - சிறு துண்டு
எண்ணெய் - 2 டீஸ்பூன்
கிராம்பு - 2
மிளகு - 1/4 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
கொத்தமல்லி - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு

செய்முறை :

* வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* வாணலியை அடுப்பில் வைத்து, அதில் சோம்பு மற்றும் முந்திரியை சேர்த்து வறுத்த பின் அதில் தேங்காய் சேர்த்து நன்கு வதக்கி, பின் இஞ்சி சேர்த்து வதக்கி இறக்கி, குளிர வைத்த பின் மிக்ஸியில் போட்டு நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

* அதே வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கறிவேப்பிலை, கிராம்பு, மிளகு சேர்த்து தாளித்த பின் வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து, வெங்காயம் பொன்னிறமாகும் வரை வதக்கி விட வேண்டும்.

* பின் அதில் மிளகாய் தூள், மல்லித் தூள் மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து நன்கு வதக்கி, அத்துடன் அரைத்து வைத்துள்ள தேங்காய் பேஸ்ட் மற்றும் உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்.

* அடுத்து அதில் 3 டம்ளர் தண்ணீர் ஊற்றி நன்கு கொதிக்க விடவும்.

* குழம்பானது நன்கு கொதிக்க ஆரம்பித்ததும், அதில் மசாலா வடைகளைப் போட்டு, ஒரு கொதி வந்ததும் கொத்தமல்லி தழை துவி இறக்கினால், மசால் வடை குழம்பு ரெடி!!!

* இந்த குழம்பை சாதம், சப்பாத்திக்கு தொட்டு கொள்ள சூப்பராக இருக்கும்.
Link to comment
Share on other sites

சூப்பரான ஸ்நாக்ஸ் சோயா 65

 

குழந்தைகளுக்கு சோயா மிகவும் பிடிக்கும். மாலையில் காபியுடன் சாப்பிட சூப்பரான சோயா 65 செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

 
 
சூப்பரான ஸ்நாக்ஸ் சோயா 65
 
தேவையான பொருட்கள் :

சோயா உருண்டைகள் - 100 கிராம்
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 - 2 டீஸ்பூன்
சிக்கன் 65 மசாலா -  3 டீஸ்பூன்
கெட்டித் தயிர் - 1 டேபிள்ஸ்பூன்
சோளமாவு - 1 டேபிள்ஸ்பூன்
மைதா மாவு - 1 டேபிள்ஸ்பூன்
எண்ணெய் - பொரிக்க தேவைக்கு.
உப்பு - தேவைக்கு.

செய்முறை :

* சோயா உருண்டைகளை கொதிக்கும் நீரில் 30 நிமிடம் போட்டு நன்றாக ஊறி பெரிதாக வந்ததும் நன்கு பிழிந்து எடுக்கவும்.


* ஒரு பாத்திரத்தில் ஊற வைத்த சோளாயை போட்டு அத்துடன் தயிர், சிக்கன் 65 மசாலா, சோளமாவு, மைதா மாவு, உப்பு சேர்த்து நன்கு பிரட்டி 15 நிமிடம் ஊறவைக்கவும்..

* கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் ஊற வைத்துள்ள சோயா உருண்டைகளை போட்டு பொரித்து எடுக்கவும்.

* சூப்பரான சோயா 65 ரெடி.

* சூடாகப் பரிமாறவும். ஸ்நாக்ஸ் போலும் சாப்பிடலாம்,
Link to comment
Share on other sites

சன்டே ஸ்பெஷல்: ஆந்திரா மசாலா சிக்கன் பிரை

 

மிகவும் எளிதில் செய்யகூடிய சிம்பிளான சிக்கன் பிரை இது. இந்த ஆந்திரா மசாலா சிக்கன் பிரையை நாளை (ஞாயிற்றுகிழமை) செய்து வீட்டில் உள்ளவர்களை அசத்துங்கள்.

 
 
 
 
சன்டே ஸ்பெஷல்: ஆந்திரா மசாலா சிக்கன் பிரை
 
தேவையான பொருட்கள் :

சிக்கன் - அரை கிலோ
வெங்காயம் - 1 (1/2 + 1/2)
ப.மிளகாய் - 4
எண்ணெய் - 2 மேஜைக்கரண்டி
மஞ்சள் தூள் - 1 தேக்கரண்டி
மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி
கரம்மசாலாதூள் - அரை தேக்கரண்டி
உப்பு - தேவைக்கு
மிளகு தூள் - 1 ஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிதளவு
கொத்தமல்லி - சிறிதளவு

அரைக்க :

தனியா - 1 ஸ்பூன்
பட்டை - 1 துண்டு
கிராம்பு - 2
பூண்டு - 5 பல் பெரியது
இஞ்சி - 1 துண்டு
வெங்காயம் - 1/2 (பாதி)

செய்முறை :

* ப.மிளகாயை நீளவாக்கில் வெட்டி கொள்ளவும்.

* சிக்கனை சிறிய துண்டுகளாக வெட்டி நன்றாக கழுவி வைக்கவும்.

* கொத்தமல்லி, பாதி வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* ஒரு பாத்திரத்தில் கழுவிய சிக்கன், மிளகாய் தூள், மஞ்சள் தூள், கரம் மசாலா தூள், உப்பு சேர்த்து அரை மணிநேரம் ஊற விடவும்.

* அரைக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை மிக்சியில் போட்டு நைசாக அரைத்து கொள்ளவும்

* கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் மீதிஉள்ள பாதி வெங்காயம், ப.மிளகாயை போட்டு நன்றாக வதக்கவும்.

* வெங்காயம் சிறிது வதங்கியதும் அரைத்த விழுதினை போட்டு 5 நிமிடம் வதக்கவும்.

* அனைத்து பொருட்களும் நன்றாக வதங்கிய பிறகு, ஊறவைத்துள்ள சிக்கனை போட்டு வதக்கவும். அடுப்பை மிதமான தீயில் வைக்கவும்.

* சிக்கன் நன்றாக வெந்தவுடன் மிளகு தூள் சேர்த்து 5 நிமிடம் வதக்கவும்.

* கடைசியாக கறிவேப்பிலை, கொத்தமல்லி சேர்த்து கிளறி இறக்கி பரிமாறவும்.

* சுவையான எளிதில் செய்யக்கூடிய ஆந்திரா மசாலா சிக்கன் பிரை ரெடி.

* இதை சாதம், பிரியாணி போன்றவையுடன் சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும்.
Link to comment
Share on other sites

உடலுக்கு குளிர்ச்சி தரும் முள்ளங்கி சூப்

முள்ளங்கியில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது. இது உடலுக்கு குளிர்ச்சியை தரும். முள்ளங்கியை வைத்து சத்து நிறைந்த சூப் செய்வது எப்படி என்று பார்க்லகாம்.

 
 
 
 
உடலுக்கு குளிர்ச்சி தரும் முள்ளங்கி சூப்
 
தேவையான பொருட்கள் :

முள்ளங்கி - 1
சீரகம் - 1 டீஸ்பூன்
பச்சை மிளகாய் - 1
இஞ்சி -1 டீஸ்பூன்
பூண்டு - 1 டீஸ்பூன்
மிளகு தூள் - தேவைக்கு
கொத்தமல்லி தழை - சிறிது

செய்முறை :

* முள்ளங்கி, ப.மிளகாய், இஞ்சி, பூண்டு, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* குக்கரில் முள்ளங்கி, சீரகம், ப.மிளகாய், இஞ்சி, பூண்டை போட்டு அதனுடன் 1 1/2 டம்ளர் தண்ணீரில் ஊற்றி குக்கரில் மூடி 1 விசில் வரும் வரை வேக வைக்கவும்.

* விசில் போனவுடன் குக்கர் மூடியை திறந்து மத்து வைத்து வேகவைத்தை நன்றாக மசித்து கொள்ளவும். ஒரு வடிகட்டில் வைத்து சூப்பை தனியாக வடிகட்டி கொள்ளவும்.

* அடுப்பில் வடிகட்டிய சூப்பை வைத்து 10 நிமிடம் மிதமான தீயில் கொதிக்க விடவும்

* கடைசியாக மிளகுதூள், கொத்தமல்லி தழை தூவி பரிமாறவும்.

* சத்தான முள்ளங்கி சூப் ரெடி.
Link to comment
Share on other sites

வாழைக்காய் பொடிமாஸ் செய்வது எப்படி

வாழைக்காய் வறுவல் செய்து சாப்பிட்டு இருப்பீர்கள். வாழைக்காயில் பொடிமாஸ் செய்தால் சூப்பராக இருக்கும். இப்போது வாழைக்காய் பொடிமாஸ் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

 
 
வாழைக்காய் பொடிமாஸ் செய்வது எப்படி
 
தேவையான பொருட்கள் :

வாழைக்காய் - 1,
தேங்காய் - 3 பல்,
சீரகம் - 1/2 டீஸ்பூன்,
பச்சைமிளகாய் - 2,
எலுமிச்சைச்சாறு - 1/2 டீஸ்பூன்,
வெங்காயம் - 1,
உப்பு - தேவைக்கு,
கடுகு - சிறிது,
கறிவேப்பிலை - 1 ஆர்க்கு,
எண்ணெய் - தேவைக்கு.

செய்முறை :

* குக்கரில் வாழைக்காயை தோல் உரிக்காமல் போட்டு வேகவைத்து, தோல் நீக்கி உதிர்த்து கொள்ளவும்.

* தேங்காயை சீரகம் சேர்த்து கொரகொரப்பாக அரைத்து கொள்ளவும்.

* வெங்காயம், ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* கடாயில் எண்ணெய் விட்டு சூடானதும் அதில் கடுகு போட்டு தாளித்த பின் வெங்காயம், பச்சைமிளகாய் சேர்த்து வதக்கவும்.

* வெங்காயம் நன்றாக வதங்கியதும் அதில் உதிர்த்த வாழைக்காயை சேர்த்து வதக்கவும்.

* வெங்காயம், வாழைக்காய் நன்றாக சேர்ந்து வரும் போது அரைத்த தேங்காய் கலவை, உப்பு சேர்த்து 5 நிமிடம் பிரட்டவும்.

* கடைசியாக கறிவேப்பிலை, எலுமிச்சை சாறு சேர்த்து நன்றாக கிளறி பரிமாறவும்.

* இந்த வாழைக்காய் பொடிமாஸ் சாம்பார் சாதத்திற்கு சூப்பராக இருக்கும்.

கத்திரிக்காய் தேங்காய் புளிக்குழம்பு

 

கத்திரிக்காய் புளிக்குழம்பு மிகவும் அருமையாக இருக்கும். இப்போது கத்திரிக்காய் தேங்காய் புளிக்குழம்பு செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

 
 
கத்திரிக்காய் தேங்காய் புளிக்குழம்பு
 
தேவையான பொருட்கள் :

நீளமான கத்திரிக்காய் - 5 (நறுக்கியது)
தேங்காய் - 1/2 கப் (துருவியது)
எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
கடுகு - 1 டீஸ்பூன்
வெந்தயம் - 1/4 டீஸ்பூன்
உளுந்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை
கறிவேப்பிலை - சிறிது
வெங்காயம் - 1
மிளகாய் தூய் - 1 ஸ்பூன்
தனியா தூள் - அரை ஸ்பூன்
பூண்டு - 10 பற்கள்
மிளகாய் தூள் - 3 டேபிள் ஸ்பூன்
தண்ணீர் - தேவையான அளவு
புளிச்சாறு - 2 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு

செய்முறை :

* வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* கத்தரிக்காயை நீளவாக்கில் வெட்டிக்கொள்ளவும்.

* முதலில் தேங்காயை மிக்ஸியில் போட்டு, தண்ணீர் ஊற்றி நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

* வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, உளுந்தம் பருப்பு, வெந்தயம் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளித்த பின் வெங்காயம், பூண்டு சேர்த்து நன்கு வதக்கவும்.

* வெங்காயம் நன்றாக வதங்கிய பின் கத்திரிக்காய் சேர்த்து வதக்க வேண்டும்.

* பிறகு அதில் மிளகாய் தூய், தனியா தூள் சேர்த்து கிளறி, தேவையான அளவு தண்ணீர், புளிச்சாறு, உப்பு சேர்த்து, குறைவான தீயில் 10 நிமிடம் நன்கு கொதிக்க விட வேண்டும்.

* இறுதியில் அரைத்து வைத்துள்ள தேங்காயை சேர்த்து கிளறி, 10 நிமிடம் பச்சை வாசனை போக கொதிக்க விட்டு இறக்கினால், கத்திரிக்காய் தேங்காய் புளிக்குழம்பு ரெடி!!!
Link to comment
Share on other sites

காய்கறிகள் சேர்த்த பொரிச்ச குழம்பு

வீட்டிற்கு திடீரென விருந்தாளி வந்து விட்டால் இந்த பொரிச்ச குழம்பை விரைவில் செய்து அசத்தலாம். இப்போது இந்த குழம்பை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

 
 
காய்கறிகள் சேர்த்த பொரிச்ச குழம்பு
 
தேவையான பொருட்கள் :

காய்கறிகள் (கேரட், பீன்ஸ், புடலங்காய், உருளைக்கிழங்கு) - 1/4 கிலோ,
பாசிப்பருப்பு - 1 கப்,
புளி - சிறிது,
மஞ்சள் தூள், பெருங்காயம் - 1/4 டீஸ்பூன்,
தேங்காய்த் துருவல் - 4 டீஸ்பூன்,
எண்ணெய், கடுகு, கறிவேப்பிலை, உப்பு - தேவைக்கு.

அரைக்க...

உளுந்தம்பருப்பு - 2 டீஸ்பூன்,
துவரம்பருப்பு - 2 டீஸ்பூன்,
மிளகு - 1/2 டீஸ்பூன்,
காய்ந்தமிளகாய் - 3

BCC71A9E-68CF-444B-9889-42CE0CA8C8C3_L_s

செய்முறை :

* கடாயை அடுப்பில் வைத்து சூடானதும் அதில் அரைக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை வாசனை வரும் வரை நன்றாக வறுத்து ஆற வைத்து மிக்சியில் போட்டு பொடித்து கொள்ளவும்.

* புளியை சிறிது தண்ணீர் ஊற்றி கரைத்து கொள்ளவும்.

* பாசிப்பருப்பை வேகவைத்து கடைந்து கொள்ளவும்.

* கொத்தமல்லி, காய்கறிகளை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* கடாயில் எண்ணெய் விட்டு சூடானதும் அனைத்து காய்கறிகளையும் போட்டு நன்கு வதக்கவும்.

* காய்கறிகள் நன்றாக வெந்ததும் அதில் கடைந்த பருப்பை ஊற்றவும்.

* அடுத்து அதில் மஞ்சள் தூள், பெருங்காயம் சேர்த்து, உப்பு, புளிக்கரைசல் ஊற்றவும்.

* எல்லாம் சேர்ந்து வரும் போது அரைத்த பொடியை 2 அல்லது 3 டீஸ்பூன் போடவும்.

* மற்றொரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் கடுகு, கறிவேப்பிலை போட்டு தாளித்து, தேங்காய்த் துருவல் சேர்த்து சிவக்க வறுத்து காய்கறிகள் கலவையில் கொட்டி கலக்கவும்.

* கடைசியாக கொத்தமல்லி தழை சேர்த்து இறக்கி பரிமாறவும்.
Link to comment
Share on other sites

சூப்பரான சைடு டிஷ் லெமன் ஃபிஷ் பிரை

குழந்தைகளுக்கு மீன் மிகவும் பிடிக்கும். சாம்பார் சாதம், தயிர் சாதத்திற்கு சூப்பரான சைடு டிஷ் லெமன் ஃபிஷ் பிரை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

 
 
 
 
சூப்பரான சைடு டிஷ் லெமன் ஃபிஷ் பிரை
 
தேவையான பொருட்கள் :

மீன் துண்டுகள் - அரை கிலோ (துண்டு மீன்)
சின்னவெங்காயம் - 50 கிராம்
இஞ்சி-பூண்டு விழுது - ஒன்றரை டீஸ்பூன்
பச்சைமிளகாய் - அரை டீஸ்பூன்
எண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன்
கரம் மசாலாத்தூள் - அரை டீஸ்பூன்
மிளகுத்தூள் - அரை டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
கறிவேப்பிலை - சிறிதளவு

மீனை ஊற வைப்பதற்கு:

எலுமிச்சைச் சாறு - அரை டேபிள்ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்
மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன்

81278383-D68B-43B4-833E-B992092C8E93_L_s

செய்முறை :

* சின்ன வெங்காயம், ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* மீனை நன்றாகக் கழுவி சுத்தம் செய்து அதிலிருக்கும் நீரை வடித்து வைத்துக்கொள்ளவும்.

* ஒரு பாத்திரத்தில் கழுவிய மீனை போட்டு அதனுடன் எலுமிச்சைச் சாறு, உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள் சேர்த்து நன்கு பிரட்டி 30 நிமிடங்கள் ஊறவிடவும்.
* கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் நறுக்கிய சின்ன வெங்காயம், நறுக்கிய பச்சைமிளகாயை சேர்த்து நன்றாக வதக்கவும்.

* வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி-பூண்டு விழுது, கறிவேப்பிலை சேர்த்து பச்சை வாசனை போகும்வரை நன்றாக வதக்கவும்.

* அடுத்து அதில் மிளகுத்தூள், கரம் மசாலாத்தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து கலக்கிவிட்டு, கலவையை பேனில் சமமாக பரப்பி அதன் மேல் மீன் துண்டுகளை வைத்து அடுப்பை சிறு தீயில் வைத்து மூடி போட்டு வேக விடவும்.

* மீன் ஒரு புறம் வெந்தவுடன் திருப்பிப் போட்டு மறுபுறமும் வேக விட்டு இறக்கவும்.

* மீனுடன் மசாலாக் கலவையும் சேர்த்து சூடாகப் பரிமாறவும்.

* லெமன் ஃபிஷ் பிரை, சாதத்துடன் சாப்பிட சுவையான சைடு டிஷ்.
Link to comment
Share on other sites

சத்து நிறைந்த கொள்ளு கார அடை

 

உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள், டயட்டில் இருப்பவர்கள் கொள்ளுவை அடிக்கடி உணவில் சேர்த்து கொள்ளலாம். இன்று கொள்ளு அடை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

 
 
 
 
சத்து நிறைந்த கொள்ளு கார அடை
 
தேவையான பொருட்கள் :

கொள்ளு - 2 கப்,
அரிசி - 1/4 கப்,
காய்ந்த மிளகாய் - 5,
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.

தாளிக்க...

எண்ணெய் - 1 டீஸ்பூன்,
கடுகு - 1/4 டீஸ்பூன்,
சீரகம் - 1/4 டீஸ்பூன்,
சோம்பு - 1/4 டீஸ்பூன்,
உடைத்த உளுந்தம் பருப்பு - 1 டீஸ்பூன்,
வெங்காயம் - பாதி
இஞ்சி - சிறிய துண்டு,
பெருங்காயம் - சிறிதளவு.

6AEFDD72-EF49-4EAA-986B-D29C87DD6C51_L_s

செய்முறை :

* வெங்காயம், இஞ்சியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* கொள்ளு, அரிசியினை சேர்த்து 4 முதல் 5 மணி நேரம் ஊற வைத்துக் கொள்ளவும். ஊற வைத்த பொருட்களை நன்றாக கழுவி அத்துடன் காய்ந்த மிளகாய் சேர்த்து கொர கொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.

* அரைத்த மாவில் தேவையான அளவு உப்பு, தண்ணீர் சேர்த்து அடை மாவு பதத்தில் கலந்து வைக்கவும்.

* கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து தாளித்து மாவில் சேர்த்து நன்றாக கலக்கவும்.

* தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் மாவை ஊற்றி சுற்றி சிறிது எண்ணெய் ஊற்றி வெந்ததும் திருப்பி போட்டு வேக வைத்து எடுக்கவும்.

* சுவையான சத்தான கொள்ளு அடை ரெடி.
Link to comment
Share on other sites

சூப்பரான ஸ்நாக்ஸ் பட்டாணி பருப்பு வடை

பருப்பு வடையை விட பட்டாணி பருப்பில் வடை செய்வதால் சூப்பராக இருக்கும். இன்று பட்டாணி பருப்பில் வடை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

 
சூப்பரான ஸ்நாக்ஸ் பட்டாணி பருப்பு வடை
 
தேவையான பொருட்கள் :

பட்டாணிப் பருப்பு - 200 கிராம்,
கடலைப் பருப்பு - 50 கிராம்,
அரிசி - ஒரு டேபிள்ஸ்பூன்,
பெரிய வெங்காயம் - ஒன்று,
பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை,
கறிவேப்பிலை, கொத்தமல்லி - தலா ஒரு டேபிள் ஸ்பூன்,
இஞ்சித் துண்டுகள் - சிறிய துண்ட
பச்சை மிளகாய் - 2,
உப்பு - தேவைக்கேற்ப,
எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு.

0ECF54C2-3B74-449D-A96E-75CFF291AA56_L_s

செய்முறை :

* இஞ்சி, வெங்காயம், கறிவேப்பிலை, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* பட்டாணிப் பருப்பு, கடலைப்பருப்பு, அரிசி மூன்றையும் 2 மணி நேரம் ஊறவைத்து, உப்பு, பெருங்காயத்தூள், பச்சை மிளகாய் சேர்த்து கெட்டியாக, கொரகொரப்பாக அரைத்து கொள்ளவும்.

* அரைத்த மாவில் நறுக்கிய வெங்காயம், இஞ்சி, கறிவேப்பிலை, கொத்தமல்லி சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.

* கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் பிசைந்த மாவை வடைகளாகத் தட்டி போட்டு பொரித்து எடுக்கவும்.

* மாலை நேர ஸ்நாக்ஸ் பட்டாணி பருப்பு வடை ரெடி.
Link to comment
Share on other sites

இரும்பு சத்து நிறைந்த குதிரைவாலி கேப்பைக் கூழ்

இரும்புச் சத்து குறைபாடு, எலும்பு வலிமைக்கு உகந்தது குதிரைவாலி கேப்பைக் கூழ். பெண்களுக்கு உகந்த இந்த கூழை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

 
 
 
 
இரும்பு சத்து நிறைந்த குதிரைவாலி கேப்பைக் கூழ்
 
தேவையான பொருட்கள் :

குதிரைவாலி அரிசி - 50 கிராம்,
கேழ்வரகு மாவு - 200 கிராம்,
உப்பு - சுவைக்கேற்ப,
சின்ன வெங்காயம் - 10,
தயிர் - கால் கப்,
தண்ணீர் - தேவையான அளவு.

7D8ED113-0EFA-49C6-9940-45110CE133CA_L_s

செய்முறை:

* தயிரை நன்றாக கடைந்து கொள்ளவும்.

* சின்ன வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* முதல் நாள் இரவே கேழ்வரகு மாவில் தண்ணீர் ஊற்றி, தோசை மாவுப் பதத்துக்குக் கரைத்து (புளிப்பதற்காக) மூடிவைக்கவும்.

* குதிரைவாலி அரிசியை நன்றாகக் களைந்து, தண்ணீர் விட்டு வேக வைத்துக்கொள்ளவும்.

* அரைப் பதத்தில் வெந்ததும், அதனுடன் ஊறவைத்த கேழ்வரகு மாவைச் சேர்த்து, கெட்டியாகும் வரை கிளறவும்.

* தண்ணீரில் கையை நனைத்துவிட்டு, கூழைத் தொட்டுப்பார்த்தால், அது கையில் ஒட்டாமல், அல்வா பதத்தில் இருக்க வேண்டும்.

* பிறகு, தயிர், பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம், வெந்த கூழ் மூன்றையும் சேர்த்து, தேவையான உப்பு போட்டு, தண்ணீர் விட்டுக் கரைத்துப் பருகவும்.

* உடலுக்கு குளிர்ச்சி தரும் கூழ் இது.
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்லகாலம் கடலைவடையில் கடலைப்பருப்பும் சேர்த்தது விட்டிர்கள், இல்லையெனில் கடலைவடை  கஞ்சி வடையாய் போயிருக்கும்...!  tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, நவீனன் said:

இரும்பு சத்து நிறைந்த குதிரைவாலி கேப்பைக் கூழ்

இரும்புச் சத்து குறைபாடு, எலும்பு வலிமைக்கு உகந்தது குதிரைவாலி கேப்பைக் கூழ். பெண்களுக்கு உகந்த இந்த கூழை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

 
 
 
 
இரும்பு சத்து நிறைந்த குதிரைவாலி கேப்பைக் கூழ்
 
தேவையான பொருட்கள் :

குதிரைவாலி அரிசி - 50 கிராம்,
கேழ்வரகு மாவு - 200 கிராம்,
உப்பு - சுவைக்கேற்ப,
சின்ன வெங்காயம் - 10,
தயிர் - கால் கப்,
தண்ணீர் - தேவையான அளவு.

7D8ED113-0EFA-49C6-9940-45110CE133CA_L_s

செய்முறை:

* தயிரை நன்றாக கடைந்து கொள்ளவும்.

* சின்ன வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* முதல் நாள் இரவே கேழ்வரகு மாவில் தண்ணீர் ஊற்றி, தோசை மாவுப் பதத்துக்குக் கரைத்து (புளிப்பதற்காக) மூடிவைக்கவும்.

* குதிரைவாலி அரிசியை நன்றாகக் களைந்து, தண்ணீர் விட்டு வேக வைத்துக்கொள்ளவும்.

* அரைப் பதத்தில் வெந்ததும், அதனுடன் ஊறவைத்த கேழ்வரகு மாவைச் சேர்த்து, கெட்டியாகும் வரை கிளறவும்.

* தண்ணீரில் கையை நனைத்துவிட்டு, கூழைத் தொட்டுப்பார்த்தால், அது கையில் ஒட்டாமல், அல்வா பதத்தில் இருக்க வேண்டும்.

* பிறகு, தயிர், பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம், வெந்த கூழ் மூன்றையும் சேர்த்து, தேவையான உப்பு போட்டு, தண்ணீர் விட்டுக் கரைத்துப் பருகவும்.

* உடலுக்கு குளிர்ச்சி தரும் கூழ் இது.

இந்த கூழ் எப்படி வெள்ளை நிறத்திலிருக்குது?

Link to comment
Share on other sites

மாலை நேர ஸ்நாக்ஸ் முந்திரி பக்கோடா

மாலையில் பள்ளியில் இருந்து வரும் குழந்தைகளுக்கு முந்திரி பக்கோடா செய்து கொடுக்கலாம். இப்போது இந்த முந்திரி பக்கோடாவை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

 
 
மாலை நேர ஸ்நாக்ஸ் முந்திரி பக்கோடா
 
தேவையான பொருட்கள் :

கடலை மாவு - ஒரு கப்,
அரிசி மாவு - 3 டேபிள்ஸ்பூன்,
பச்சை மிளகாய் - 3
புதினா - சிறிதளவு
முழு முந்திரி - 100 கிராம்,
உப்பு - தேவைக்கேற்ப,
நெய் - ஒரு டேபிள்ஸ்பூன்,
எண்ணெய் -  பொரிப்பதற்கு தேவையான அளவு.

F82F739F-1A81-4235-87D3-45E103BEB806_L_s

செய்முறை :

* ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்

* புதினாவை அரைத்து கொள்ளவும்.

* ஒரு பாத்திரத்தில் கடலை மாவு, அரிசி மாவு, .ப.மிளகாய், புதினா விழுது, முந்திரி, உப்பு சேர்த்து பொருட்களையும் ஒன்றாக சேர்த்து சிறிது சிறிதாக தண்ணீர் தெளித்துப் உதிரியாக பிசைந்து கொள்ளவும்.

* கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் அடுப்பை சிம்’மில் வைத்து, பிசைந்து வைத்த மாவை பக்கோடாக்களாக கிள்ளிப் போட்டு பொரித்து எடுக்கவும்.

* எண்ணெயை வடியவிட்டு காற்றுப்புகாத டப்பாவில் பத்திரப்படுத்தவும்.

* சூப்பரான முந்திரி பக்கோடா ரெடி.
Link to comment
Share on other sites

சூப்பரான செட்டிநாடு காளான் மசாலா

செட்டிநாடு முறையில் காளான் மசாலா செய்தால் சூப்பராக இருக்கும். செய்வதும் மிகவும் எளிமையானது. இன்று இந்த செட்டிநாடு காளான் மசாலா செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

 
 
 
 
சூப்பரான செட்டிநாடு காளான் மசாலா
 
தேவையான பொருட்கள் :

காளான் - அரை கிலோ
எண்ணெய் - இரண்டு டீஸ்பூன்
பட்டை - ஒன்று
லவங்கம் - ஒன்று
ஏலக்காய் - ஒன்று
சின்ன வெங்காயம் - 200 கிராம்
தக்காளி - இரண்டு
இஞ்சி, பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன்
பச்சை மிளகாய் - இரண்டு
கறிவேப்பில்லை - சிறிதளவு
மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்
மிளகாய் தூள் - இரண்டு டீஸ்பூன்
தனியா தூள் - இரண்டு டீஸ்பூன்
உப்பு - தேவைகேற்ப
மிளகு தூள் - அரை டீஸ்பூன்
சீரக தூள் - அரை டீஸ்பூன்
சோம்பு தூள் - அரை டீஸ்பூன்
கரம் மசாலா - அரை டீஸ்பூன்
கொத்தமல்லி - சிறிதளவு

924264E8-5368-46AB-AB12-6C84684EF03F_L_s

செய்முறை :

* வெங்காயம், கொத்தமல்லி, தக்காளி, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை, லவங்கம், ஏலக்காய் சேர்த்து தாளித்த பின் சின்ன வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.

* வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி, பூண்டு விழுது, பச்சை மிளகாய், கறிவேப்பில்லை சேர்த்து வதக்கவும்.

* அடுத்து அதில் தக்காளி சேர்த்து நன்றாக வதக்கவும்.

* பின், அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், தனியா தூள், உப்பு, மிளகு தூள், சீரக தூள், சோம்பு தூள், கரம் மசாலா சேர்த்து கலந்து தண்ணீர் சிறிதளவு ஊற்றி கொதிக்கவிடவும்.

* பிறகு அதில் காளான் சேர்த்து வதக்கவும். காளான் 10 நிமிடத்தில் வெந்து விடும்.

* காளான் நன்றாக சுருங்கி வந்ததும் இறக்கி கொத்தமல்லி தூவி பரிமாறவும்.

* சூப்பரான சூப்பரான செட்டிநாடு காளான் மசாலா ரெடி.
Link to comment
Share on other sites

மசாலா ஆம்லெட்

குழந்தைகள் விரும்பி சாப்பிடக்கூடிய சுவையான மசாலா ஆம்லெட் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

 
 
மசாலா ஆம்லெட்
 
தேவையான பொருட்கள்:

முட்டை - 2
வெங்காயம் - 2
தக்காளி - சிறிதளவு
நறுக்கப்பட்ட மிளகாய் - 2 டீஸ்பூன்
குடைமிளகாய் - 2 சிறிதளவு
கொத்தமல்லி இலை - 2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை
மிளகாய் தூள் - ½ தேக்கரண்டி
மிளகு தூள் - சிறிதளவு
கரம் மசாலா தூள் - ½ தேக்கரண்டி
எண்ணெய் - 1 முதல் 2 தேக்கரண்டி
உப்பு - சிறிது


செய்முறை:

* முதலில் வெங்காயம், தக்காளி, குடைமிளகாய், கொத்தமல்லி இலை முதலியவற்றை வெட்டி வைக்கவும்.

* ஒரு சிறிய கிண்ணத்தில், மஞ்சள் தூள், உப்பு, மிளகாய் தூள், மிளகு தூள் மற்றும் கரம் மசாலா தூள் சேர்த்து கொஞ்சம் தண்ணீர் விட்டு கலந்து வைக்கவும்.

* ஒரு கிண்ணத்தில் முட்டைகளை உடைத்து ஊற்றி, மசாலா விழுது சேர்த்து நன்றாகக் கலக்கவும்.

* வெட்டி வைத்த அனைத்தையும் இவற்றுடன் சேர்த்து கலந்து, கடாயில் எண்ணெய் விட்டு முட்டை கலவையை ஊற்றி இரண்டு பக்கமும் நன்றாக வேக விட்டு எடுக்கவும்.

* சுவையான மசாலா ஆம்லெட் தயார்.
Link to comment
Share on other sites

கோதுமை பிரெட் வெஜிடபுள் உப்புமா

 

டயட்டில் இருப்பவர்கள் அடிக்கடி கோதுமையில் செய்த உணவுகளை எடுத்து கொள்வது நல்லது. அந்த வகையில் இன்று கோதுமை பிரெட் வெஜிடபுள் உப்புமா செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

 
 
 
 
கோதுமை பிரெட் வெஜிடபுள் உப்புமா
 
தேவையான பொருட்கள் :

கோதுமை பிரெட் - 15
கேரட், பட்டாணி, பீன்ஸ் - மூன்றும் சேர்த்து 150 கிராம்,
பச்சை மிளகாய் - 5
வெங்காயம் - 2,
கடலைப் பருப்பு, கடுகு, உளுந்தம் பருப்பு, இஞ்சி, மஞ்சள் தூள் - சிறிதளவு,
உப்பு, எண்ணெய், மிளகாய் தூள் - தேவைக்கேற்ப.
கொத்தமல்லி - சிறிதளவு

8D200316-6C6C-4A5D-BB29-4F4488DE45D1_L_s

செய்முறை :

* பிரெட்டை சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும். பின்னர் அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், உப்பு சேர்த்து, சிறிது தண்ணீர் விட்டு கிளறி வைக்கவும்.

* காய்கறிகள், கொத்தமல்லி, வெங்காயம், ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்

* இஞ்சியை துருவிக்கொள்ளவும்.

* கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, உளுந்து, கடலைப் பருப்பு போட்டு தாளித்த பின் அதில் வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி சேர்த்து நன்றாக வதக்கவும்.
* வெங்காயம் நன்றாக வதங்கிய பின்னர் காய்கறிகளைப் போட்டு நன்றாக வதக்கவும். காய்கறிகள் வேக சிறிது தண்ணீர் ஊற்றி மூடி வைக்கவும்.

* காய்கறிகள் வெந்தவுடன் அதில் பிரெட் துண்டுகளைப் போட்டு நன்றாக கிளறி மூடி போட்டு மிதமான தீயில் வேகவிடவும்.

* வெந்ததும் கொத்தமல்லி தூவி இறக்கி சூடாகப் பரிமாறவும்.

* சூப்பரான கோதுமை பிரெட் வெஜிடபுள் உப்புமா ரெடி.
Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கணேசமூர்த்தியின் இந்த விபரீத முடிவுக்கு வைகோ தான் காரணம்..!  
    • ஓயாத நிழல் யுத்தங்கள்-5 வியட்நாம் கதை இரண்டாம் உலகப் போரின் பின்னர், இரு துருவங்களாகப் பிரிந்து நின்ற உலக நாடுகளில், இரு அணுவாயுத வல்லரசுகளின் நிழல் யுத்தம் பனிப்போராகத் தொடர்ந்தது. அந்தப் பனிப்போரின் மையம், அண்டார்டிக் கண்டம் தவிர்ந்த உலகின் எல்லாக் கண்டங்களிலும் இருந்தது. தென்கிழக்கு ஆசியாவில், உலக வல்லரசுகளின் பனிப்போரின் தீவிர வடிவமாகத் திகழ்ந்த வியட்நாம் போர் பற்றிப் பார்ப்போம். வியட்நாம் மக்களின் வரலாற்றுப் பெருமை பொதுவாகவே ஆசியக் கலாச்சாரங்களில் பெருமையுணர்வு (pride) ஒரு கலாச்சாரப் பண்பாகக் காணப்படுகிறது. வியட்நாமின் வரலாற்றிலும் கலாச்சாரத் தனித்துவம், தேசிய அடையாளம் என்பன காரணமாக ஆயிரம் ஆண்டுகளாக அதன் அயல் நாடுகளோடு போராடி வாழ வேண்டிய நிலை இருந்திருக்கிறது. பிரதானமாக, வடக்கேயிருந்த சீனாவின் செல்வாக்கிற்கு உட்படாமல் வியட்நாமியர்கள் தனித்துவம் பேணிக் கொண்டிருந்தனர். ஆனால், வியட்நாம் என்பது ஒரு தேசிய அடையாளமாக திரளாதவாறு, மத, பிரதேச வாதங்களும் அவர்களுக்குள் நிலவியது. கன்பூசியஸ் நம்பிக்கைகளைப் பின்பற்றிய வட வியட்நாமிற்கும், சிறு பான்மைக் கிறிஸ்தவர்களைக் கொண்ட தென் வியட்நாமிற்குமிடையே கலாச்சார வேறு பாடுகள் இருந்தன. இந்த இரு தரப்பில் இருந்தும் வேறு பட்ட மலைவாழ் வியட்நாமிய மக்கள் மூன்றாவது ஒரு தரப்பாக இருந்திருக்கின்றனர். 19 ஆம் நூற்றாண்டில், ஐரோப்பிய காலனித்துவம் இந்தோ சீனப் பகுதியில் கால் பதித்த போது, வியட்நாம், லாவோஸ், கம்போடியா ஆகிய பகுதிகள் பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் வந்தன. காலனித்துவத்தை எதிர்ப்பதிலும் கூட, வியட்நாமின் வடக்கிற்கும், தெற்கிற்குமிடையே வேறுபாடு இருந்திருக்கிறது. எனினும், பிரெஞ்சு ஆதிக்கத்தை வியட்நாமியர் தொடர்ந்து எதிர்த்து வந்தனர். இரண்டாம் உலகப் போரின் போது, 1945 இல் ஜப்பான் பிரான்சிடமிருந்து இந்தோ சீனப் பிராந்தியத்தை பொறுப்பெடுத்த போது, பிரெஞ்சு ஆட்சியில் கூட நிகழாத வன்முறைகள் அந்தப் பிராந்திய மக்கள் மீது நிகழ்த்தப் பட்டன.   அதே ஆண்டின் ஆகஸ்டில், ஜப்பான் தோல்வியடைந்து சரணடைந்த போது, உள்ளூர் தேசியத் தலைமையாக இருந்த வியற் மின் (Viet Minh) என அழைக்கப் பட்ட கூட்டணியிடம் ஆட்சியை ஒப்படைத்து வெளியேறியது. இதெல்லாம் நடந்து கொண்டிருந்த காலப் பகுதியில், உலக கம்யூனிச இயக்கத்தினால் ஈர்க்கப் பட்டிருந்த ஹோ சி மின் நாடு திரும்பி வட வியற்நாமில் கம்யூனிச ஆட்சியை பிரகடனம் செய்கிறார். இந்தக் காலப் பகுதி, உலகம் இரு துருவங்களாகப் பிரிவதற்கான ஆரம்பப் புள்ளிகள் இடப் பட்ட ஒரு காலப் பகுதி. முடிந்து போன உலகப் போரில் பங்காளிகளாக இருந்த ஸ்ராலினின் சோவியத் ஒன்றியமும், மேற்கு நாடுகளும் உலக மேலாண்மைக்காகப் போட்டி போட ஆரம்பித்த காலம் இந்த 1940 கள் - சீனாவின் மாவோ இன்னும் அரங்கிற்கே வரவில்லை என்பதைக் கவனிக்க வேண்டும். மீண்டும் ஆக்கிரமித்த பிரான்ஸ் கம்யூனிச விரிவாக்கத்திற்கு ஹோ சி மின் ஆட்சி வழி வகுக்கலாமெனக் கருதிய பிரிட்டன், ஒரு படை நடவடிக்கை மூலம் தென் வியட்நாமைக் கைப்பற்றி, தென் வியட்நாமை மீளவும் பிரெஞ்சு காலனித்துவ வாதிகளிடம் கையளித்தது. ஒரு கட்டத்தில், வியட்நாமை பிரெஞ்சு ஆட்சியின் கீழ் இருக்கும் ஒரு சுதந்திர தேசமாக அங்கீகரிக்கும் ஒப்பந்தம் கூட பிரான்சுக்கும், வியற் மின் அமைப்பிற்குமிடையே கைச்சாத்தானது. ஆனால், இந்த ஒப்பந்தத்தின் ஆயுட்காலம் வெறும் 2 மாதம் தான். பிரெஞ்சுப் படைகள் வடக்கை நோக்கி முன்னேற, வியற் மின் பின்வாங்க பிரெஞ்சு வியட்நாம் போர் ஆரம்பித்தது. இந்தப் போரில், முழு வியட்நாமும் பிரெஞ்சு ஆதிக்கத்தை எதிர்க்கவில்லையென்பதையும் கவனிக்க வேண்டும். வியட்நாமின் அரச வாரிசாக இருந்த பாவோ டாய் (Bao Dai), பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் ஒரு தனி தேசமாக வியட்நாம் தொடர்வதை இறுதி வரை ஆதரித்து வந்தார். தொடர்ந்த யுத்தம் 1954 இல் ஒரு சமாதான ஒப்பந்தத்துடன் முடிவுக்கு வந்த போது, லாவோஸ், கம்போடியா ஆகிய நாடுகள் பிரான்சிடமிருந்து சுதந்திரமடைந்தன. புதிதாக வியட்நாம் தலைவராக நியமிக்கப் பட்ட டியெம், தென் வியட்நாமைத் தனி நாடாகப் பிரகடனம் செய்ததோடு, வடக்கில் இருந்த வியற் மின் தரப்பிற்கும், தென் வியட்நாமிற்கும் போர் மீண்டும் மூண்டது. அமெரிக்காவின் வியட்நாம் பிரவேசம் அமெரிக்கா, உலகப் போரில் பாரிய ஆளணி, பொருளாதார இழப்பின் பின்னர் தன் படைகளை இந்தோ சீன அரங்கில் இருந்து வெகுவாகக் குறைத்துக் கொண்டு, ஐரோப்பிய அரங்கில் கவனம் செலுத்தத் தீர்மானித்திருந்தது (இதனால், 50 களில் வட கொரியா தென் கொரியா மீது தாக்குதல் தொடுத்த போது கூட உடனடியாக சுதாரிக்க இயலாமல் அமெரிக்கப் படைகளின் பசுபிக் தலைமை தடுமாறியது). அமெரிக்கா ஏற்கனவே பிரிட்டனின் காலனித்துவத்தில் இருந்து விடுபட்ட ஒரு நாடு என்ற வகையில், அந்தக் காலப் பகுதியில் ஒரு காலனித்துவ எதிர்ப்பு மனப் பாங்கைக் கொண்டிருந்தமையால், பிரெஞ்சு, பிரிட்டன் அணிகளின் வியட்நாம் மீதான தலையீட்டில் பங்கு கொள்ளாமல் விலகியிருந்தது. இத்தகைய காலனித்துவ எதிர்ப்பின் விளைவாக, உலகில் கம்யூனிச மேலாதிக்கம் உருவாகும் போது எதிர் நடவடிக்கையின்றி இருக்க வேண்டிய சங்கடமான நிலை அமெரிக்காவிற்கு. இப்படியொரு நிலை உருவாகும் என்பதை ஏற்கனவே உணர்ந்திருந்த அமெரிக்க வெளியுறவுத் துறையின் அதிகாரியான ஜோர்ஜ் கெனன், 1947 இலேயே Policy of Containment என்ற ஒரு வெளியுறவுக் கொள்கை ஆவணத்தை தயாரித்து வெளியிட்டிருந்தார். ட்ரூமன் கொள்கை (Truman Doctrine) என்றும் அழைக்கப் படும் இந்த ஆவணத்தின் அடி நாதம்: “உலகின் எந்தப் பகுதியிலும் மக்கள், பிரதேசங்கள் சுதந்திரம், ஜனநாயகம் என்பவற்றை நாடிப் போராடினால், அமெரிக்காவின் ஆதரவு அவர்களுக்குக் கிடைக்கும்” என்பதாக இருந்தது. மறைமுகமாக, "தனி மனித அடக்கு முறையை மையமாகக் கொண்ட கம்யூனிசம் பரவாமல் தடுக்க அமெரிக்கா உலகின் எந்த மூலையிலும் செயல்படும்" என்பதே ட்ரூமன் கொள்கை.   இந்த ட்ரூமன் கொள்கையின் முதல் பரீட்சார்த்தக் களமாக தென் வியட்நாம் இருந்தது எனலாம். 1956 இல், டியேம் தென் வியட்நாமை சுதந்திர நாடாக பிரகடனம் செய்த சில மாதங்களில், அமெரிக்காவின் இராணுவ ஆலோசனையும், பயிற்சியும் தென் வியட்நாமின் படைகளுக்கு வழங்க அமெரிக்கா ஏற்பாடுகளைச் செய்தது. தொடர்ந்து, 1961 இல், சோவியத் ஒன்றியத்திடமிருந்து கடும் சவால்களை எதிர் கொண்ட அமெரிக்க அதிபர் கெனடி, அமெரிக்காவின் விசேட படைகளை தென் வியட்நாமிற்கு அனுப்பி வைக்கிறார். விரைவாகவே, பகிரங்கமாக தென் வியட்நாமில் ஒரு அமெரிக்கப் படைத் தலைமயகப் பிரிவு வியட்நாமின் (US Military Assistance Command Vietnam- MACV) நடவடிக்கைகளுக்காகத் திறக்கப் படுகிறது. கெனடியின் கொலையைத் தொடர்ந்து அமெரிக்க அதிபரான லிண்டன் ஜோன்சன், நேரடியான அமெரிக்கப் படை நடவடிக்கைகளை வியட்நாமில் ஆரம்பிக்க அனுமதி அளித்தது 1965 பெப்ரவரியில். இந்த நடவடிக்கைக்கு அமெரிக்க காங்கிரஸ் அனுமதி அளித்திருந்தது குறிப்பிடத் தக்கது. Operation Rolling Thunder என்ற பெயருடன், வட வியட்நாம் மீது தொடர் குண்டு வீச்சு நடத்துவது தான் அமெரிக்காவின் முதல் நடவடிக்கை.  வடக்கும் தெற்கும் 1954 இன் ஜெனீவா ஒப்பந்தம், வியட்நாமை வடக்கு தெற்காக 17 பாகை அகலாங்குக் கோட்டின் படி இரு நாடுகளாகப் பிரித்து விட்டிருந்தது. 10 மாதங்களுக்குள் இரு பாதிகளிலும் இருக்கும் வியட்நாமிய மக்கள் தாங்கள் விரும்பும் பாதிக்கு நகர்ந்து விடுமாறும் கோரப் பட்டிருந்தது. வடக்கிலும் தெற்கிலும் இருந்து பழி வாங்கல்களுக்கு அஞ்சி மக்கள் குடிபெயர்ந்த போது குடும்பங்கள், உறவுகள் பிரிந்தன. ஹோ சி மின்னின் கம்யூனிச வழியை ஆதரித்த மக்கள், வடக்கு நோக்கி நகர்ந்தனர், இவர்களில் பலர் வியற் கொங் என அழைக்கப் பட்ட கம்யூனிச ஆயுதப் படையில் சேர்ந்தனர். தென் வியட்நாமில், கம்யூனிச வடக்கை ஆதரித்த பலர் தங்கவில்லையாயினும், நடு நிலையாக நிற்க முனைந்தவர்களே நிம்மதியாக வசிக்க இயலாத கெடு பிடிகளும், கைதுகளும் தொடர்ந்தன. இந்த நிலையில், வடக்கின் கம்யூனிச ஆயுதப் பிரிவான வியற் கொங், வியட்நாமின் அடர்ந்த காடுகளூடாக Ho Chi Minh trail எனப்படும் ஒரு இரகசிய வினியோக வழியை உருவாக்கி, தென் வியட்நாமை உள்ளிருந்தே ஆக்கிரமிக்கும் வழிகளைத் தேடியது.  இந்த இரகசிய காட்டுப் பாதை வட வியட்நாமில் இருந்து 500 கிலோமீற்றர்கள் வரை தெற்கு நோக்கி லாவோஸ் மற்றும் கம்போடியா நாடுகளினூடாக நகர்ந்து தென் வியட்நாமில் 3 - 4 இடங்களில் எல்லையூடாக ஊடறுத்து உட் புகும் வழியை வியற் கொங் போராளிகளுக்கு வழங்கியது. இந்த வினியோக வழியை முறியடிக்கும் இரகசிய யுத்தமொன்றை, அமெரிக்க விசேட படைகள் லாவோஸ் காடுகளில் வியட்நாம் ஆக்கிரமிக்கப் படும் முன்னர் இருந்தே முன்னெடுத்து வந்தன. சின்னாபின்னமான வியட்நாம் மக்கள் பனிப்போர் காலத்தில் அமெரிக்கா நடத்திய யுத்தங்களுள், மிக உயர்வான பொது மக்கள் அழிவை உருவாக்கியது வியட்நாம் போர் தான். 1965 முதல் 1975 வரையான வியட்நாம் யுத்தத்தில் கொல்லப் பட்ட மக்கள் தொகை 2 மில்லியன்கள்: வியட்நாமியர், கம்போடியர், லாவோஸ் நாட்டவர் இந்த 2 மில்லியன் பலிகளில் அடங்குகின்றனர். இதை விட 5.5 மில்லியன் பொது மக்கள் காயமடைந்தனர். வாழ்விடங்கள், பயிர்செய்கை நிலங்கள் அழிக்கப் பட்டன. இந்த 10 வருட யுத்தத்தில், அமெரிக்காவின் நேரடிப் பிரசன்னம் 1972 வரை நீடித்த அமெரிக்க வியட்நாம் யுத்தம். இந்தக் காலப் பகுதியில், அமெரிக்கப் படைகள் மட்டுமன்றி, பசுபிக்கில் அமெரிக்காவின் நேச அணியைச் சேர்ந்த தென் கொரியா, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளின் படைகளும் பெருமளவில் யுத்தத்தில் பங்கு பற்றின. இந்தப் படைகளும், அமெரிக்கப் படைகளுடன் சேர்ந்து வியட்நாம் மக்களுக்கெதிரான கொடூர வன்முறைகளை நிகழ்த்தினாலும், குறிப்பிடத் தக்க பாரிய வன்முறைகளை அமெரிக்கப் படைகளே செய்தன. இந்த வன்முறைகள் பற்றி ஏராளமான சாட்சியங்களும், அவற்றின் அடிப்படையிலான நூல்களும் வெளிவந்திருக்கின்றன. வியட்நாம் போரில், அமெரிக்கப் படைகள் பொது மக்களை நடத்திய விதத்திற்கு மிகச் சிறந்த உதாரணமான சம்பவம் மை லாய் (My Lai) படுகொலைச் சம்பவம். 1968 இல், ஒரு மார்ச் மாதம் காலையில் மை லாய் கிராமத்தில் நூற்றுக் கணக்கான வியட்நாமிய பொது மக்களைச் சுற்றி வளைத்த அமெரிக்கப் படைப்பிரிவின் அணியொன்று, மிகக் குறுகிய நேர விசாரிப்பின் பின்னர் அவர்களைச் சரமாரியாகச் சுட்டுக் கொன்றது. கொல்லப் பட்ட மக்கள் ஒரு 500 பேர் வரை இருப்பர், அனைவரும் நிராயுத பாணிகள், பெரும்பாலானோர் பெண்களும் குழந்தைகளுமாக இருந்தனர். இந்தப் படுகொலை பாரிய இரகசியமாக அல்லாமல், நூற்றுக் கணக்கான அமெரிக்கப் படையினரின் முன்னிலையில் நடந்தது. அந்த நடவடிக்கைப் பகுதியில், உலங்கு வானூர்தி விமானியாக சுற்றித் திரிந்த ஹியூ தொம்சன் என்ற ஒருவரைத் தவிர யாரும் இதைத் தடுக்க முயலவில்லை. தொம்சன், தன்னுடைய உலங்கு வானூர்தியை அமெரிக்கப் படைகளுக்கும் கொல்லப் படவிருந்த மக்கள் கூட்டத்திற்குமிடையில் தரையிறக்கி ஒரு சிறு தொகையான சிவிலியன்களைக் காப்பாற்றினார். காயமடைந்த சிலரை உலங்கு வானூர்தி மூலம் அகற்றிய பின்னர், மேலதிகாரிகளுக்கும் மை லாய் படுகொலை பற்றித் தெரிவித்தார் தொம்சன். மிகுந்த தயக்கத்துடன் விசாரித்த அமெரிக்க படைத்துறை, படு கொலை பற்றிச் சாட்சி சொன்னவர்களைத் தண்டனை கொடுத்து விலக்கி வைத்தது. படு கொலைக்குத் தலைமை தாங்கிய படை அதிகாரி வில்லியம் கலி, 3 வருடங்கள் கழித்து இராணுவ நீதி மன்றில் சிறைத் தண்டனை விதிக்கப் பட்டாலும், 3 நாட்கள் மட்டுமே சிறையில் கழித்த பின்னர் மேன்முறையீடு, பிணை என இன்று வரை சுதந்திரமாக உயிரோடிருக்கிறார். இந்தப் படுகொலையில் சரியாக நடந்து கொண்ட விமானி தொம்சனையும் இன்னும் இருவரையும் 1998 இல் - 30 ஆண்டுகள் கழித்து- அமெரிக்க இராணுவம் விருது கொடுத்துக் கௌரவித்தது. இத்தகைய சம்பவங்கள் மட்டுமன்றி, ஒட்டு மொத்தமாக வியட்நாம் மக்களை வகை தொகையின்றிக் கொன்ற நேபாம் குண்டுகள் (Napalm - இது ஒரு பெற்றோலியம் ஜெல்லினால் செய்யப் பட்ட குண்டு), ஏஜென்ற் ஒறேஞ் எனப்படும் இரசாயன ஆயுதத் தாக்குதல் என்பனவும் அமெரிக்காவின் கொலை ஆயுதங்களாக விளங்கின. 1972 இல், அமெரிக்காவில் உள்ளூரில் வியட்நாம் போருக்கெதிராக எழுந்த எதிர்ப்புகளால், அமெரிக்கா தன் தாக்குதல் படைகளை முற்றாக விலக்கிக் கொண்ட போது 58,000 அமெரிக்கப் படையினர் இறந்திருந்தனர். இதை விட இலட்சக் கணக்கான உயிர் தப்பிய அமெரிக்கப் படையினருக்கு, PTSD என்ற மனவடு நோய் காரணமாக, அவர்களால் சாதாரண வாழ்க்கைக்குத் திரும்ப இயலாத நிலை ஏற்பட்டது. வியட்நாம் போரின் முடிவு அமெரிக்காவின் படை விலகலுக்குப் பின்னர், படிப்படியாக அமெரிக்காவின் தென் வியட்நாமிற்கான நிதி, ஆயுதம், பயிற்சி என்பன குறைக்கப் பட்டன. 1975 ஏப்ரலில், வடக்கு வியட்நாமின் படைகள் மிக இலகுவாக தெற்கு வியட்நாமின் சாய்கன் நகரை நோக்கி நெருங்கி வந்த போது, அமெரிக்காவின் ஆதரவாளர்கள், அமெரிக்கப் பிரஜைகள் ஆகியோரை Operation Frequent Wind  என்ற நடவடிக்கை மூலம் அவசர அவசரமாக வெளியேற்றினார்கள். தெற்கு வியட்நாமை ஆக்கிரமித்த வடக்கு வியட்நாம், மேலும் முன்னேறி, கம்போடியாவையும் ஒரு கட்டத்தில் ஆக்கிரமித்து, இந்தோ சீனப் பிரதேசத்தை ஒரு தொடர் கொலைக் களமாக வைத்திருந்தது. இந்தப் பிரதேசங்களில் இருந்து கடல் வழியே தப்பியோடிய மக்கள் “படகு மக்கள்” என அழைக்கப் பட்டனர். இன்று றொஹிங்கியாக்களுக்கு நிகழும் அத்தனை அனியாயங்களும் அவர்களுக்கும் நிகழ்ந்தன. -          தொடரும்
    • தமிழ்நாட்டில் நடக்கும் அநிஞாயங்கள் பாலியல் வல்லுறவுகள் கூட்டு பாலியல் கொலை கொள்ளை என்று திராவிட கும்பல்களால் தினமும் செய்திகள் வருகின்றன. எவருமே அதைப்பற்றி அக்கறை கொள்வதில்லை. ஆனால் சீமானைப்பற்றி ஏதாவது நல்ல செய்தி வந்தால் உடனே கூட்டமாக சேர்ந்து தாக்குதல் நடக்குது. என்ன கூட்டமோ?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.