Jump to content

பக்கத்து வீட்டு அழகிய அரக்கி.


Recommended Posts

பக்கத்து வீட்டு அழகிய அரக்கி.

புதிதாக குடிவந்த எனக்கு பக்கத்து வீட்டுக்காரர்களின் அறிமுகம் இல்லாத காலமது. பக்கத்து வீட்டை ஒரு காரில் சிலர் வந்திறங்கியது எனது கவனத்தை ஈர்க்கவில்லை.

 

ஆனால் சில நிமிடங்களில் பக்கத்து வீட்டில் இருந்து வந்த "மியாவ்" என்னை நிலை குலைத்தது. அந்தக்குரல் அவ்வளவு இனிமை. அது பூனையில்லை, பூனையைக் கூப்பிடும் ஒரு பெண்ணின் குரல். குரலே இப்படியென்றால் அவள் எப்படி இருப்பாள்? மனமும் அலையத் தொடங்கியது. அவள் வீட்டில் இருக்கும் போது எப்போதும் கதைத்துக் கொண்டிருப்பாள். குரல் என்னைக் கொல்லும். எனக்கோ எப்படியாவது அவளைப் பார்த்து விட ஆசை. நடுவே மதில் எட்டிப் பார்த்தால் ஏதாவது ஏடாகூடமாகி விடுமோ என்ற பயம். அப்படியும் வீட்டுக்குள்ளிருந்து யன்னலில் ஏறி நின்று பார்த்தேன். குரல் கேட்டது, அவளைப் பார்க்க முடியவில்லை. தினமும் இது ஒரு சித்திரவதை எனக்கு. கடவுள் நம்பிக்கையற்ற நானே கடவுளே ஒரு தடவை அவளைக் காட்டு என்று வேண்டிக்கொண்டேன்.

 

கடவுளும் என்னைக் கும்பிடாதவனை மதிப்பதில்லை என்றான். சரி அந்தாளை நானே மதிப்பதில்லை, அந்தாள் ஏன் என்னை மதிக்கப் போகுது என்றுவிட்டு வேதாளத்தை மரத்தில ஏறவிட்ட விக்கிரமாதித்தன் போல எனது முயற்சி தொடர்ந்தது. ம்கும் பார்க்க முடியவில்லை. போர்ட்டிக்கோவில் குந்தியிருந்து எதையாவது வாசித்தாலும் அந்தக் குரல் வாசித்தது மூளைக்கு போகாமல் தடுத்தது. மறுபடியும் காதலில் வீழ்ந்தது போலிருந்தது.

 

இப்படியே சில நாட்கள் கடந்தது.

 

ஒருநாள் சமையல் பஞ்சியில் கடையில் சாப்பாடு வாங்கி வந்துகொண்டிருந்தேன். பக்கத்து வீட்டு வாசலில் அன்ரியுடன் எனது பைங்கிளி. அவள் குரலை விட அவள் அழகோ அழகு. என் இதயமும் அதிகமாக துடித்தது. கதைப்பமா என்றால் அவளை முதல் முறை கண்டதால் கஸ்டமாயிருந்தது, ஒரு புன்னகையுடன் தாண்டலாமென்ற முடிவுடன் நான். ஆனால் அதிசயமாக அவள் ஒரு சிரிப்புடன் என்னை மேற்கொண்டு செல்லாமல் தடுத்தாள்.

 

நீங்கதானே பக்கத்து வீட்டு போர்ட்டிக்கோவில இருந்து சிகரட் குடிக்கிறது என்றாள். என்னடா இது ஆரம்பமே ரோதனையாக் கிடக்குது என்று யோசித்தபடி "எப்படித் தெரியும்" என்றேன். நான்தான் கொய்யாமரத்தில ஏறி உங்களப் பார்த்திருக்கேனே என்றாள். அடி கள்ளி.

 

அன்றிலிருந்து காலையில் கொய்யாமரம் குட்மோர்ணிங் சொல்லும், அர்த்தமில்லாத கதைகள் பேசி சந்தோசம் தரும். ஏன் குட்நைட்கூட சொல்லும். மனம் இலகுவாயிருக்கும் அவளுடன் கதைக்கும்போது.

 

வீட்டிற்குள் வந்து தானாக ப்ரிஜ்ஜை திறந்து சொக்லேட் எடுக்குமளவு அதிகாரம் அவளுக்கு. சந்தோசமாக சில வாரங்கள் போனது. ஆனாலும் ஒரு நாள் வந்து அங்கிள் நாங்கள் நாளைக்கு  ...... நாட்டிற்கு போகிறோம் அடுத்த முறை வரும்போது மீற் பண்ணுவமென்றாள். நான் இங்கு இருக்க மாட்டேன் என்று இந்த 4 வயது கிழவிட்ட சொல்ல நானும் விரும்பவில்லை - மறுபடியும் சந்திப்போம் என்றேன்.

 

மதிலுக்கு மேல கொய்யா மரத்தில இருந்து அழகிய அரக்கி இப்பவும் குட்மோர்ணிங் சொல்வது போலுள்ளது.

 

தனது பேரப்பிள்ளைகளை எப்பவாவது சில வருடத்திற்கு ஒரு முறை சில கிழமைகள் சந்திக்கும் பக்கத்து வீட்டு அன்ரிக்கும், பேரப்பிள்ளைகளை காணத் துடிப்பவர்களிற்கும் இது சமர்ப்பணம். சில கிழமைகள் பழகிய எனக்கே எதையோ இழந்தது போலிருந்தது அரக்கியின் பிரிவு. அவர்களிற்கு எப்படியோ.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்களின் சமர்ப்பணத்தில் நானும் கொஞ்சம் கிள்ளிக் கொள்கின்றேன்....!  :)

Link to comment
Share on other sites

1 minute ago, suvy said:

உங்களின் சமர்ப்பணத்தில் நானும் கொஞ்சம் கிள்ளிக் கொள்கின்றேன்....!  :)

நன்றி சுவி

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

நல்ல உத்தி. கதை எழுதிய விதம் அருமை.வாழ்த்துக்கள் ஜீவன்

Link to comment
Share on other sites

1 hour ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

நல்ல உத்தி. கதை எழுதிய விதம் அருமை.வாழ்த்துக்கள் ஜீவன்

நன்றி 


இது கற்பனையில்லை உண்மைச் சம்பவம்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இதுதான சிங்கள இனவாதம்  படித்து படித்து பலமுறை  சொல்லியிள்ளோம் ?
    • காசிக்குப் போறவை திரும்ப வந்து அதிக காலம் உயிரோடு இருப்பதில்லை என்று சொல்வார்கள். உண்மையா என்று தெரியவில்லை. ஆனால் என நபர் ஒருவர் அங்கு சென்றுவந்து 3 ஆண்டுகளில் இறந்துவிட்டார்.
    • கடந்த மாவீரர் தினத்திலும் ஐயா வந்து சிறிய சொற்பொழிவாற்றி இருந்தார்.
    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.