Jump to content

'இந்திய டி20 அணியை வீழ்த்துவது சிரமம்!' - சொல்கிறார் ஆஸி. அணியின் ஆலோசகர்!


Recommended Posts

'இந்திய டி20 அணியை வீழ்த்துவது சிரமம்!' - சொல்கிறார் ஆஸி. அணியின் ஆலோசகர்!

 

டி20 கிரிக்கெட் உலகக் கோப்பை இந்தியாவில் நடக்கவுள்ளது. இதனை முன்னிட்டு அனைத்து நாட்டு வீரர்களும் இந்தியாவில் எப்படி விளையாடுவது என தயாராகி வருகிறார்கள். அதில் ஆஸ்திரேலிய அணி ஒரு படி மேலே சென்று, இந்திய அணியின் முன்னாள் வீரரும், தமிழகத்தைச் சேர்ந்தவருமான ஸ்ரீதரன் ஸ்ரீராமை ஆஸ்திரேலிய அணிக்கு ஆலோசகராக நியமித்துள்ளது. மைக் ஹஸ்ஸியுடன் இணைந்து,  ஸ்ரீதரன் ஸ்ரீராம் ஆஸ்திரேலிய அணிக்குப் பயிற்சியளிப்பார்.

இந்தியாவில் இந்திய அணியை வீழ்த்த, ஆஸ்திரேலிய அணிக்குப் பயிற்சியளிக்க ஆயத்தமாகிக் கொண்டிருந்த ஸ்ரீதரனிடம் பேசினேன்...

sritharan%20sriram.jpg

ஆஸ்திரேலிய அணிக்கு ஆலோசகர் பதவி எப்படி கிடைத்தது?

 ’’ஐ.பி.எல் போட்டிகளின்போது நிறைய ஆஸ்திரேலிய வீரர்களை நன்கு தெரியும். ஆஸி அணியின் கேப்டன் ஆரோன் பின்ச், வார்னர் போன்ற வீரர்களுடன் டெல்லி டேர்டெவில்ஸ் அணியில் பழகிய அனுபவம் உள்ளது. அந்தப் பரிச்சயம் ஒருவேளை உதவியிருக்கலாம். ஆஸ்திரேலிய அணிக்கு, இந்தியாவில் நடக்க இருக்கும் உலகக் கோப்பை தொடரின்போது இந்திய மைதானங்கள் மற்றும் அதன் தன்மை குறித்தும்,  இங்கு எப்படி விளையாடுவது என்பது குறித்தும் ஆலோசனை வழங்க வேண்டியது என் பணி. மைக் ஹஸ்ஸியுடன் இணைந்து விளையாடியிருக்கிறேன். ஆஸி அணியின் சிறந்த வீரர்களில் அவரும் ஒருவர். இப்போது அவரோடு இணைந்து ஆஸ்திரேலியாவுக்காக பணியாற்றவிருப்பது ஆர்வத்தைத் தூண்டுகிறது!’’

ஆஸ்திரேலிய அணியின் பலம் என்ன?

’’ஆஸ்திரேலிய அணியில் சமீபத்தில் முக்கிய வீரர்கள் ஓய்வை அறிவித்துள்ளனர். சில வீரர்களுக்கு காயம் என்ற நிலையில் உள்ளது. பிக் பேஷ் போட்டிகள் துவங்க உள்ளன. அதில் சிறந்த ஆஸ்திரேலிய அணி வீரர்கள் அடையாளம் காணப்படுவார்கள். அதனால் இப்போதைய  அணியை வைத்து எந்த தீர்மானத்துக்கும் வரமுடியாது. அணியின் தலைமைப் பயிற்சியாளருடன் பேசிய பிறகே அணி வீரர்களுடனான எனது பணி துவங்கும்!’’

t20%20india%20team2015-600.jpg

சொந்த மண்ணில் டி20 உலகக் கோப்பையை எதிர்கொள்ளவிருக்கும் இந்திய அணியின் வெற்றி வாய்ப்புகள் என்ன?

’’இந்திய டி20 அணி பலமான அணி. இந்தியாவில் கோலி, ரெய்னா, தோனி போன்ற வீரர்கள் எந்த நேரத்திலும் சிறப்பாக ஆடக்கூடியவர்கள். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும். அதனால் இந்திய அணியை சொந்த மண்ணில் வீழ்த்த மற்ற அணிகள் கடுமையாக போராட வேண்டும்!”

அதெல்லாம் சரி.. இப்போது நீங்கள் ஆஸி ஆலோசகர். ஒருவேளை இந்தியா - ஆஸ்திரேலியா மோதினால், அன்று உங்கள் மனநிலை என்னவாக இருக்கும்?

’’நான் இந்தியன். இந்திய அணியைப் பிடிக்கும். ஆனால், ஒரு புரொஃபஷனலாக ஆஸ்திரேலிய அணிக்கு ஆலோசனை வழங்கும் பணியை சரியாக செய்வேன். எனக்குக் கொடுக்கப்பட்ட வேலையை நான் சரியாகச் செய்ய வேண்டும். வெற்றி, தோல்வி என்பது நான் தரும் ஆலோசனைகளைத் தாண்டி களத்தில் ஆடும் வீரர்களையும், அப்போதைய சூழலையும் பொறுத்தது. டி20 போட்டிகளில் எப்போது வேண்டுமானாலும் ஆட்டம் மாறலாம். அப்போது யார் சிறப்பாக செயல்படுகிறார்களோ அவர்கள் தான் வெற்றி பெறுவார்கள்!’’

http://www.vikatan.com/news/sports/56496-it-is-verty-difficult-to-defeat-india-t20.art

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.