Jump to content

தெருத்தம்பி - குஞ்சையாவின் குசும்பு அரசியல்.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Paanch said:

விக்கல் வந்தா தண்ணி குடிக்கணும். விக்கி வந்தா தண்ணி காட்டனும். இது தமிழ் அரசியல்வாதிகளின் பஞ்சா..! குஞ்சையா..?

குஞ்சைய்யா: பான்ஞ்.. இது பஞ்ச்...! நம்ம தெருத்தம்பி இப்ப கூலாகிடுவாப்போல. tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தெருத்தம்பி: குஞ்சைய்யா உங்களின் கிறிஸ்மஸ் செய்தி என்ன..

குஞ்சைய்யா: பாலன் பிறந்த இன்னன்னாளில் ஆவது மனிதர்கள் அவர் கொண்டு வந்த செய்தியை ஒருமுறை சரியா உள்வாங்கினால் போதும். நாம ஆளாளுக்கு நமக்கு விரும்பினதை எல்லாம்.. கிறிஸ்மஸ் செய்தி சொல்லத் தேவையில்லையேடாம்பி. tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாலன் பிறந்தபோது என்ன செய்தி கொண்டு வந்தவர், அப்படி ஏதும் கொண்டுவந்ததாய்த் தெரியல்லையேடாம்பி...!  :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குஞ்சய்யா. ஞான் மனசு உடைந்துபோய்ட்டன,. நம்ம அசின் குட்டியல்லோ சம்சாரிக்கபோகுது, ஒரு கருத்து பரையுங்கோ

:grin: :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, suvy said:

பாலன் பிறந்தபோது என்ன செய்தி கொண்டு வந்தவர், அப்படி ஏதும் கொண்டுவந்ததாய்த் தெரியல்லையேடாம்பி...!  :)

குஞ்சைய்யா: மோன சேதி சிம்பிள்.. அன்பே கடவுள்.. உயிர்களிடத்தில் அன்பு செய் என்றான்.. பாலன். அவ்வளவும் தான். அதில தான் உலக இயக்கமே இருக்குதடாம்பி. tw_blush:

4 hours ago, colomban said:

குஞ்சய்யா. ஞான் மனசு உடைந்துபோய்ட்டன,. நம்ம அசின் குட்டியல்லோ சம்சாரிக்கபோகுது, ஒரு கருத்து பரையுங்கோ

:grin: :grin:

குஞ்சைய்யா: இப்பதானா மோன உது உடையுது. ரெம்ப லேட்டு மோன. அசின் சேதாரப்பட்டு.. அதுவும் ராஜபக்ச குடும்பத்தால சேதாரப்பட்டே 6 ஆண்டுகள் ஓடிட்டு மோன. இப்ப சேதாரம் எவ்வளவுன்னாலும் பறுவாயில்லை நகை என்ற பெயரில 1% தங்கத்தோடு.. ஒன்று வந்தா காணும் என்றவன் கட்டிக்கிடுறான் மோன. இதுக்கெல்லாம் கவலைப்பட்டால்...!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தெருத்தம்பிக்கும்,குஞ்சைய்யாவுக்கும் இனிய நத்தார் புதுவருட வாழ்த்துக்கள் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, putthan said:

தெருத்தம்பிக்கும்,குஞ்சைய்யாவுக்கும் இனிய நத்தார் புதுவருட வாழ்த்துக்கள் 

குஞ்சைய்யா: ஏன்டாம்பி.. சேமமா இருக்கிறியே. வாழ்த்துக்களுக்கு நன்றி.. சேம் ரு யு. tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தெருத்தம்பி:  என்ன குஞ்சு.. சம்பந்தர் இஞ்சி துண்ட குரங்காட்டம் இப்ப ஒரு கிழமையா கத்திக்கிட்டே கிடக்கார்..?!

குஞ்சைய்யா: 2009 மே க்குப் பிறகு தானே தனிக்காட்டு ராசான்னு எல்லாம் தன் வசப்பட்டிட்டு என்று கனவில குதிரை ஓட்டிக்கிட்டு இருக்கிறப்போ.. எவனோ தமிழ் மக்கள் பேரவைன்னு குறுக்கால போயிட்டான் டாம்பி. கிழவன் குப்புற விழுந்து கிடந்து கத்துது. நல்லா கத்தட்டும். சனங்கள் கத்தேக்க காது கேட்காத மாதிரி நடிச்சவரல்லோ.. இப்ப நல்லா கத்தட்டும். எனி சனம் காதைப் பொத்திடனும்... அப்ப தான் உதுங்கள் சாகிற சுடலை ஞானத்தோட சாகுங்கள். tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தெருத்தம்பி: குஞ்சு.. தமிழ் மக்கள் பேரவை பற்றி உங்கட பார்வை என்ன..?!

குஞ்சைய்யா: எடேய் தம்பி சதுரங்கத்தை இரண்டு பேர் விளையாடினால் தான் சுவாரசியம். ஒருத்தரே விளையாடினால்.. ?! எங்கட சட்டாம்பி அரசியல்வாதிகள் தனித்தாட்டன்களா.. 50/60 வருசமா விளையாடின சதுரங்கம் கொணந்தது ஒன்றுமில்லை, இனப்படுகொலை.. மட்டும் தான். எனி சனம் ஒருதரப்பில கூடி இருந்து விளையாடட்டும்.. அதில விருப்பமில்லாத அரசியலவாதிகள் குந்தி இருந்து விடுப்புப் பார்க்கட்டும். சம்பந்தர் 50 வருசமா விளையாடுற விளையாட்டை சனம் ஒரு வருசத்துக்கு விளையாடட்டுமேன். அதுதான் சனநாயகம். tw_blush:

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

தெருத்தம்பி: என்ன குஞ்சு.. இராணுவ மருத்துவ முகாமிற்கு.. புலி வருமுன்னு.. கூரையில.... முள்ளுக்கம்பி அடிச்சவையாம்.. உண்மையே..??!

குஞ்சைய்யா: வான் புலி வரும் என்று அடிச்சவங்கள்.. தரைப்புலி.. கடற்புலி.. கரும்புலி வராது என்று இருந்தவங்களாமோ...??! கேட்கிறவன் தமிழன் கேணயன்.. உலகம் மகா கேணயன் என்றால் சிங்களவன் வெள்ளிநிலாவில் கப்பல் விடுவான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தெருத்தம்பி: என்ன குஞ்சு.. தைப்பொங்கல் என்றால் என்னென்று தெரியாதவன் எல்லாம் தமிழருக்கு தைப்பொங்கல் வாழ்த்துச் சொல்லுறதில குறியா நிக்கிறாங்கள்.. என்ன சங்கதி..?!

குஞ்சைய்யா: வானம் பொங்கினால் இடி.. பூமி பொங்கினால் பூகம்பம்.. கடல் பொங்கினால் சுனாமி.. அருவி பொங்கினால் வெள்ளம்.. சூரியன் பொங்கினால் காந்தப்புயல்.. மீண்டும் தமிழன் பொங்கினால்... என்ன கேடு ஆகுமோன்னு தான்.. பொங்கல் பானைக்குள் தமிழனின் தலையை அமுக்கப் பார்க்கிறாங்கள். தட்ஸ் ஆல். tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தெருத்தம்பி: என்ன குஞ்சைய்யா.. கொழும்பில ஒன்று.. கிளிநொச்சில ஒன்று என்று.. வடிவேலு பாணில.. அது நாறல் வாயி.. இது நல்லவாயி கணக்கா.. சம்பந்தன் கிளிநொச்சி வந்தோடன சுருதி மாத்திட்டுது.....

குஞ்சைய்யா: உப்படி மாத்தி மாத்தி வாசிச்சு தானே 50 வருசமா அவை அரசியல் நடத்தினம். இடையில உவைட சுருதிக்கு சுதி கூட்டப் போன பொடியளும் சனமும் செத்தது தான் மிச்சம். tw_angry:

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

தெருத்தம்பி: என்ன குஞ்சு இப்ப தமிழீழத்தைக் கைவிடுற சீசனோ...??! ஆளாளுக்கு தனிய தனிய கைவிடுறாங்கள்..

குஞ்சைய்யா: எங்கடையாக்கள்.. சிங்களவனை கண்டால்.. சொந்த தாய் தேப்பனையே கைவிடுவினம். அவ்வளவு விசுவாசம். அடிமைக்கு அடிமைப்புத்தி போகாதடாம்பி. ஆயிரம் பிரபாகரன் வந்தாலும் உதுகள் திருந்தாதுகள்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தெருத்தம்பி:  என்ன குஞ்சு... ஐநா மனித உரிமை ஆணையாளர் சிரியாவுக்கும் ஈழத்துக்கும் லிங்கு போட வந்தவரோ... ?! இலங்கையில்.. கைதிகளுக்கு (சும் பாசையில் சொன்னா புலி சந்தேக நபர்களுக்கு) பொதுமன்னிப்பு இல்லையாம்.. ஆனால்.. அமெரிக்கா குவாந்தம்பே சிறைச்சாலையையே மூடி.. ( பயங்கரவாதிகளை...)... பிடிச்சு வைச்சிருந்தவையை எல்லாம் விட்டிட்டுதே..?! அது எப்ப கடந்த மிலேனியத்திலையா நடந்தது..??!

குஞ்சைய்யா: ஐநா ஆணையத்தில் உள்ளதுங்க.. அது அது எங்க இருந்து வந்திச்சுதுகளோ.. அங்க அங்க உள்ள சங்கதிகளை இசைவுபடுத்தி விடயங்களை பார்க்கிற அறிவு மட்டும் தான் வைச்சிருக்குதுங்க. நிலைமைகளை.. சூழ்நிலைகளை.. தனித்துவங்களை அடையாளம் காணிற ஆய்வு திறனும் இல்லை தரவு சேகரிக்கும் திறனுமில்ல. இலங்கையில் போரை மனித அழிவை தடுக்க முடியாத.. சிரியாவில்.. ஈராக்கில் பெரும் மனித அழிவுகளை தடுக்க முடியாத.. மிகப்பெரிய மனித இடம்பெயர்வுகளை தடுக்க முடியாத.. பாங்கி மூனுக்கு கேம்பிரிஷ் கெளரவப்பட்ட அளிக்குதுன்னா.. உலகம் போறப் போக்கப் பாருடா தம்பி. நான் என்னத்தைச் சொல்ல..!!:rolleyes:

Link to comment
Share on other sites

  • 2 months later...
  • கருத்துக்கள உறவுகள்

தெருத்தம்பி: என்ன குஞ்சு வீடியோ பார்த்தியளே.. சம்பந்தர் எங்கட பொடிடுயளோட.. பேச்சு வார்த்தை நடத்திற திறத்தை..

குஞ்சைய்யா: அதுவும் பார்த்தான்.. மைத்திரியோட பக்கத்தில குந்தி இருந்து.. காதும் வாயும் வைச்சு கொஞ்சிறதும் பார்த்தன்.. இப்படித்தான் அமிர்தலிங்கமும் பேசப் போன பொடியளுக்கு வேசம் போட்டிருப்பார் போல.. போனது இள ரத்தம்.. சொருகி இருந்ததை உருவி.. மண்டையில போட்டிருப்பாங்களோன்னு யோசிக்க வைக்குது. இவங்க எல்லாம் தமிழர்களுக்கு தலைவராம்.. சொல்லிக்கிறாய்ங்க தாங்களே தங்கட வாயால. :rolleyes:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இந்த இரண்டு சம்பவமும் அண்மையில் நடந்ததாகவே தெரிகின்றது. ஏனென்றால்... இது சம்பந்தமாக சமூக ஊடகங்களில் பல நூற்றுக் கணக்கானவர்கள்  அதனைப்  பற்றிய கருத்துக்களை பதிவு செய்த போதும்... ஒருவர் கூட, அந்த 800 ரூபாய்  வடை இரண்டு வருசத்துக்கு முன்பு வந்த காணொளி என்று தெரிவிக்கவில்லை. இத்தனைக்கும் அவர்கள் இலங்கையில் வசிப்பவர்கள். அப்படி இருக்க... பையன் எப்படி அது இரண்டு வருடத்துக்கு முன் பார்த்த காணொளி என்று சொன்னார் என்று தெரியவில்லை. சில வேளை மனப் பிராந்தியோ.... நானறியேன். 😂 "ஆடு களவு போகவில்லை. களவு போனமாதிரி கனவு கண்டேன்". என்ற கதை மாதிரி இருக்கு. 🤣
    • யாழில் திறந்து வைக்கப்பட்ட உயிர்காப்பு நீச்சல் பிரிவு! இனியபாரதி. யாழ்ப்பாணம் காங்கேசன்துறை பொலிஸாரினால் பிராந்திய உயிர்காப்பு நீச்சல் பிரிவு ஸ்தாபிக்கப்பட்டு இன்று வெள்ளிக்கிழமை(19) வடக்கு மாகாண பிரதிப் பொலிஸ்மா அதிபர் திலக்.சி.ஏ.தனபாலவினால்  திறந்து வைக்கப்பட்டது. கடற்கரையில் குளிக்கும் போது, விளையாட்டுக்களில் ஈடுபடும்போது உயிர் இறப்பு மற்றும் அசம்பாவிதங்கள் ஏற்படாது தடுக்கும் வகையில் குறித்த பிரிவு செயற்படவுள்ளது. இதன்போது குறித்த பகுதியில் குற்றச்செயல்களை கட்டுப்படுத்தும் வகையில் பொலிஸ் காவலரணும் திறந்து வைக்கப்பட்டது. குறித்த நிகழ்வில் காங்கேசன்துறை பிராந்திய மூத்த பொலிஸ் அத்தியட்சகர், உதவி பொலிஸ் அத்தியட்சகர்கள், காங்கேசன்துறை பிராந்திய பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகள், பொலிஸ் உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்துகொண்டனர். (ச) யாழில் திறந்து வைக்கப்பட்ட உயிர்காப்பு நீச்சல் பிரிவு! (newuthayan.com)
    • (இனியபாரதி)  யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் இதய சத்திர சிகிச்சையின் போது தவறிழைக்கப்பட்டதாக உறவினர்கள் குற்றச்சாட்டு தெரிவித்தனர். குறித்த சம்பவம் தொடர்பாக (18)இன்று யாழ் ஊடக அமையத்தில் நடத்திய ஊட சந்திப்பில் சத்ர சிகிச்சையின் போது இருந்த பெண்ணின் தாயார் மற்றும் சகோதரர் விடயம் தொடர்பாக கருத்து தெரிவித்தனர் யாழ் போதனா  மருத்துவமனையில் இதய சத்திரசிகிச்சை  மேற்கொள்ளப்பட்ட சுரேஸ்குமார் பாக்கியச்செல்வி வயது 44 ஜெயபுரம் தெற்கு பல்லவராயன்கட்டு என்ற குடும்பப் பெண் கடந்த 08 திகதி நடைபெற்ற இதயச் சத்திரசிகிச்சையின் போது உயிரிழந்துள்ளார். தவறுதலான முறையில் சத்திரசிகிச்சை நடைபெற்றதாகவும் உறவினர்கள்  குற்றச் சாட்டுகின்றனர். அரச  மருத்துவமனையில் சத்திர சிகிச்சைகாக பணம் கேட்டதாகவும் குற்றச்சாட்டுகின்றனர்.இவ்வாறான இந்தச் சம்பவத்திற்கு நீதி கிடைக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர். அத்தோடு இறந்த பெண் கணவனால் கைவிடப்பட்ட மிகவும் வறுமையான பெண் என உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.(ப) யாழ் போதனாவில் இதய சத்திர சிகிச்சையின் போது தவறிழைப்பு:உறவினர் குற்றச்சாட்டு! (newuthayan.com)
    • வெள்ளத்தில் மூழ்கும் கிராமம்:கோடையில் கடும் நீர்ப்பஞ்சமும் ஏற்படும்! (மாதவன்) செம்மணியில் துடுப்பாட்ட மைதானம் அமையின் அயற்கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கும் ; கோடையில் கடும் நீர்ப்பஞ்சமும் ஏற்படும் - பொ. ஐங்கரநேசன் எச்சரிக்கை! செம்மணியில் முன்னர் உப்பளம் இருந்த பகுதியில் சர்வதேசத் துடுப்பாட்ட மைதானம் ஒன்றை அமைப்பதற்கான பகீரத முயற்சியில் நகர அபிவிருத்தி அதிகாரசபை ஈடுபட்டுள்ளது. ஏற்கனவே செம்மணியில் கட்டுமானங்களை மேற்கொள்வதற்குப் பல்வேறு தரப்பினராலும் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டபோது வடக்கு மாகாணசபை அவற்றை நிராகரித்திருந்தது. தற்போது  வடக்கு மாகாணசபையில் மக்கள் பிரதிநிதித்துவம் இல்லாத நிலையில் செம்மணியில் சர்வதேசத்தரத்தில் துடுப்பாட்ட மைதானம் ஒன்றை அமைப்பதற்கான முயற்சிகள் சாதக பாதகங்களை ஆராயாது முடுக்கிவிடப்பட்டுள்ளன. செம்மணியில் இத் துடுப்பாட்ட மைதானம் அமைந்தால் அயற்பிரதேசங்கள் மாரியில் வெள்ளத்தில் மூழ்கும் அபாயமும், கோடையில் கடும் நீர்ப்பஞ்சத்துக்கு ஆளாகும் அபாயமும் நேரிடும் என்று தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் எச்சரித்துள்ளார். செம்மணியில் சர்வதேசத் தரத்திலான துடுப்பாட்ட மைதானத்தை அமைப்பதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளமை தொடர்பாக பொ.ஐங்கரநேசன் விடுத்துள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு எச்சரித்துள்ளார். அந்த அறிக்கையில் அவர் மேலும் தெரிவிக்கையில், செம்மணி உப்பளப்பகுதி குடா நாட்டின் பிரதான கடல் நீரேரிகளில் ஒன்றான உப்பாற்றுக் கடல் நீரேரியை அண்டிய தாழ்வான ஈரநிலம் ஆகும். வெளிப்பார்வைக்கு முக்கியத்துவமற்ற வெட்டவெளியாகத் தென்படும் இப் பகுதி  சூழலியல்ரீதியாக இன்றிமையாத பங்களிப்புகளை வழங்கி வருகிறது. மாரியில் சுற்றயல் கிராமங்களில் இருந்து வரும் வெள்ள நீரைத்தேக்கி வைத்து  நிலத்தடி நீர் மட்டத்தைப் பேணுவதோடு, நிலம் உவராவதையும் தடுக்கிறது. கூடவே, மேலதிகநீரைக் குடாநாட்டின் இன்னுமொரு கடல்நீரேரியான யாழ்ப்பாணக் கடல் நீரேரிவழியாகக் கடலுக்குள் அனுப்புவதன் மூலம் குடியிருப்புகளையும் வயல் நிலங்களையும் வெள்ளத்தில் மூழ்காமல் பாதுகாக்கவும் செய்கிறது. அபிவிருத்தி முதலீட்டாளர்களின் வசதிகளையும் நலன்களையும் மாத்திரமே கருத்திற் கொள்வதாயின் அது நிலைபேறானதாக ஒருபோதும் அமையாது. அபிவிருத்தியில் சுற்றுச்சூழலினதும், அது சார்ந்த சமூகத்தினதும், நலன்கள் முன்னுரிமை பெறும்போதே அது நீடித்த – நிலையான - அபிவிருத்தியாக அமையும். அந்த வகையில் யாழ் நகரின் நுழைவாசல் என்பதற்காக மாத்திரமே செம்மணியில் துடுப்பாட்ட மைதானத்தை அமைப்பதற்கு முற்படுவது எவ்வகையிலும் ஏற்புடையது அல்ல. இதனை இதுவரையில் அபிவிருத்திகள் எதனையும் காணாத தீவகத்தின் பகுதிகளில் ஒன்றில்  நிறுவுவதே சாலச்சிறந்தது ஆகும். என்றும் தெரிவித்துள்ளார்.(ப) வெள்ளத்தில் மூழ்கும் கிராமம்:கோடையில் கடும் நீர்ப்பஞ்சமும் ஏற்படும்! (newuthayan.com)
    • `உங்க பேரு இறந்தவங்க லிஸ்ட்ல இருக்கு; ஓட்டுப்போட முடியாது!' - அதிர்ச்சியில் உறைந்த பெண் வாக்காளர்! ராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட ராமேஸ்வரத்தில் உள்ள வாக்குச்சாவடி ஒன்றில் வாக்களிக்கச் சென்ற வயதான வாக்காளரின் பெயர், இறந்தவர்கள் லிஸ்ட்டில் சேர்க்கப்பட்டிருந்ததால், வாக்களிக்க முடியாமல் அதிர்ச்சியடைந்து திரும்பிய சம்பவம் அரங்கேறியுள்ளது.   ராமநாதபுரம் நாடாளுமன்றத் தொகுதியில் திமுக கூட்டணி, பாஜக கூட்டணி இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. பாஜக கூட்டணி சார்பில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும், திமுக கூட்டணி சார்பில் நவாஸ்கனியும் போட்டியிடுகின்றனர். இந்நிலையில் இன்று காலை முதல் தொகுதிக்குட்பட்ட பல்வேறு இடங்களில் விருவிருப்பான வாக்குப்பதிவு நடைபெற்றது. மாலை 3 மணி வரை ராமநாதபுரம் தொகுதிக்குட்பட்ட 6 சட்டமன்ற தொகுதிகளிலும் சேர்த்து 52.46 சதவிகித வாக்குகள் பதிவாகியிருந்தது. இந்நிலையில் ராமநாதபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ராமேஸ்வரத்தில் உள்ள வாக்குச்சாவடி ஒன்றில் வாக்களிக்க சென்ற வயது முதிர்ந்த பெண் ஒருவரின் பெயர், இறந்தபோன வாக்காளர் லிஸ்ட்டில் இடம்பெற்றிருந்தததால் வாக்களிக்க முடியாமல் திரும்பினார். துளசிபாவா மடம் பகுதியை சேர்ந்த காளியம்மாள் (65) என்பவர் வாக்காளர் அடையாள அட்டை மற்றும் பூத் சிலிப்புடன் தனது பகுதியில் உள்ள வாக்குப்பதிவு மையத்திற்கு வாக்களிக்க சென்றுள்ளார்.         வாக்குப்பதிவு மையம் உ.பாண்டி     வாக்குச்சாவடி உ.பாண்டி வரிசையில் காத்திருந்த காளியம்மாள் வாக்குப்பதிவு மையத்தினுள் சென்று தனது பூத் சிலிப்பைக் கொடுத்துள்ளார். அதனை வாங்கிப் பார்த்த தேர்தல் பணியாளர், வாக்காளர் பட்டியலில் தேடி பார்த்தபோது, காளியம்மாளின் பெயர் இறந்தவர்களின் லிஸ்ட்டில் சேர்க்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இது குறித்து காளியம்மாளிடம் கூறிய தேர்தல் பணியாளர், அவரை வாக்களிக்க அனுமதிக்காமல் திருப்பி அனுப்பினார். உயிரோடு இருந்து ஓட்டுப்போட ஆர்வத்தோடு வந்த தன்னை, இறந்தவர்கள் லிஸ்ட்டில் சேர்த்திருப்பதை அறிந்த காளியம்மாள் அதிர்ச்சியடைந்ததுடன், வாக்களிக்க முடியாமல் போன வேதனையுடனும் வாக்குப்பதிவு மையத்திலிருந்து வெளியேறினார். `உங்க பேரு இறந்தவங்க லிஸ்ட்ல இருக்கு; ஓட்டுப்போட முடியாது!' - அதிர்ச்சியில் உறைந்த பெண் வாக்காளர்! | name in the dead voters list ramanathapuram woman failed to cast her vote - Vikatan
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.