Jump to content

நாவல்: ‘விடமேறிய கனவு’


Recommended Posts

novel_2646905f.jpg
 

நடந்த இறுதிப் போரில் சிறைபிடிக்கப்பட்ட போராளிகள் அனுபவித்த சித்திரவதைக் கொடுமைகளின் பின்னணியில் ‘விடமேறிய கனவு’ என்ற நாவலை எழுதியிருக்கிறார் குணா கவியழகன்.

ஈழத்தில் களத்தில் நின்று போராடியவர்கள் கடைசியில் இயக்கத் தலைவர் இறந்துவிட்டார் என்ற செய்திக்குக்கூடக் காது கொடுக்காமல் தங்களது உயிரைக் காத்துக்கொள்வதற்காகச் சோற்றுப் பொட்டலங்களுக்கும் தண்ணீர் பாட்டிலுக்கும் கையேந்தி நிற்கிறார்கள்.

ஐ.நா.அமைப்போ, செஞ்சிலுவைச் சங்கமோ தங்களைப் பாதுகாக்கும் என்ற நம்பிக்கையும் பொய்த்துப்போனது. எதிரிகளாக இருந்தவர்களிடமே சரணடைந்து அவர்களிடம் உயிரை இரந்து நிற்கும் நிலைக்கு ஆளாகிவிட்டனர். இரவில் விலங்கிடப்பட்டும் பகலில் சித்திரவதைகளுக்கு ஆளாகியும் மரணத்தின் முன்னால் அவர்களது வாழ்க்கை ஊசலாடுகிறது, ராணுவத்துக்கும் புலனாய்வு அமைப்பினருக்கும் இடையே பந்தாடப்படுகிறது. இயற்பெயரையும் இயக்கப் பெயரையும் மாற்றிச் சொல்லித் தப்பிக்க முயல்கிறார்கள். ஒற்றராய் இருக்கக்கூடுமோ என்று தங்களவர்களையே சந்தேகிக்கவும் செய்கிறார்கள்.

எந்த நொடியிலும் மரணம் நிகழக்கூடும் என்றறிந்த பிறகு, மனித மனம் மரணத்தைத் தடுத்துவிட, குறைந்தபட்சம் அதைத் தள்ளிப்போட்டுவிட வாய்ப்புள்ள வழிகளையெல்லாம் ஒவ்வொன்றாகச் சூழலுக்குப் பொருத்திப் பார்த்து, ஏதோவொன்றைக் கைக்கொள்ளத் துடிக்கிறது. அதே நேரத்தில், எதிர் நிற்கும் மரணம் தம்மை ஆட்கொண்டு விடுவதற் குள், வாழ்வின் இனிமையையும் துயரையும் உணர்த்திய சகல நினைவுகளையும் மீட்டெடுத்துப் பார்த்துவிடவும் விழை கிறது. விரும்பி ஏற்றுக்கொண்ட மரணம்தான் என்றபோது கலங்காது உவகை கொண்டிருந்த மனம், மரணம் நெருங்கி வரும்போது மாறிநிற்கிறது. எதை அடைவதற்காக உயிரை விலை கொடுக்கும் துணிவு பிறந்ததோ அது கனவாகவே கரைந்துவிட்டது. இப்போது எஞ்சி நிற்பது உயிர் மட்டும்தான்.

இனிமேல் அடைய வாய்ப்பே இல்லாத லட்சியத்திற்காக உயிரை விடுவது விவேகமல்ல. எனினும் இதுவரை பேணிவந்த அறத்தை உயிரின் பொருட்டு இழப்பதிலும் உடன்பாடில்லை. இவ்விரண்டு உணர்ச்சிகளுக்கும் இடையிலான போராட்டம்தான் இந்த நாவலின் மையம்.

குணா கவியழகனின் இரண்டாவது நாவல் இது. முதல் நாவலான ‘நஞ்சுண்ட காடு’, விடுதலைக்காகக் கூடுதல் விலை கொடுப்பதே தோல்விதான் என்று முன்னறிவித்தது. இரண்டாவது நாவலான ‘விடமேறிய கனவு’, போரின் முடிவு சர்வ நிச்சயமாகப் போராளிகளுக்கு முன்கூட்டியே தெரிந்துவிட்ட பிறகும் ஏன் அவர்கள் தொடர்ந்து களத்தில் நின்றார்கள் என்ற கேள்வியை எழுப்பி, பதிலைத் தேடுகிறது. இந்தப் பதில் அரசியல்ரீதியானதல்ல. மாறாக, தனிமனிதனின் ஆழ்மனதில் குமிழியிடும் நுண்ணுணர்ச்சிகளின் ஆதாரத்தைப் பற்றிய விசாரணை. அதுவே இந்நாவலைப் போர் இலக்கியம் என்பதையும் தாண்டித் தனித்துவம் கொண்ட நாவலாக வெற்றிபெறச் செய்திருக்கிறது.

ஒரே எடுப்பில் படித்து முடித்துவிடுகிற வகையில் மிகச் சரளமான நடை. எனினும் பக்கங் களைப் புரட்டிப் போக நாம் கல்நெஞ்சினராக இருந்தால் மட்டுமே முடியும். நாவல் முழுவதும் தனக்குத்தானே கீறி மருந்திட்டுக்கொள்ளும் துயருற்ற நெஞ்சத்தின் சுய எள்ளலின் கரிப்புச்சுவை இழையோடி நிற்கிறது.

விடமேறிய கனவு

குணா கவியழகன்

வெளியீடு: அகல், ராயப்பேட்டை சென்னை-14

தொலைபேசி: 98843 22398

பக்கங்கள்: 256 விலை: ரூ.240

http://tamil.thehindu.com/general/literature/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%

 

Link to comment
Share on other sites

  • 6 months later...
  • கருத்துக்கள உறவுகள்

குணா. கவியழகனின் "விடமேறிய கனவு" நாவலை அண்மையில் படித்தேன். புனர்வாழ்வு எனும் போர்வையில் தடுப்பு முகாம்களிலும், இரகசியச் சிறைகளிலும் நடந்த அனுபவங்களோடு போரில் தோற்றதை நம்பமுடியாத போராளிகளின் மனநிலையையும் படம் பிடித்துக்காட்டியது.

இதனை வாசித்த இன்னொரு யாழ்கள உறவு முகாம் அனுபவங்கள் சலிப்பைத் தந்ததாக எழுதியிருந்தது ஆச்சரியத்தைத் தந்தது.

வீரர்களாக இருந்தவர்கள், இயக்கம் அழிந்த பின்னர் நடத்தப்பட்ட நிலையை நம்பும் மனநிலை பலருக்கு இல்லாமல் இருந்திருக்கலாம். அப்படியானவர்கள் இந்நாவலை வாசிக்க விரும்பமாட்டார்கள்.

..........

 

 

பொய்யொன்றே வாழ்வின் மெய்யோ – குணா.கவியழகனின் ‘விடமேறிய கனவு’ –

பாவண்ணன்

முதல் உலகப்போரையும் இரண்டாம் உலகப்போரையும் தொடர்ந்து வெளிவந்த இலக்கியங்களும் திரைப்படங்களும் அப்போர்களின் சாட்சியங்களாக இன்றும் விளங்குகின்றன. இரு தரப்பினரும் கொன்று குவித்த மக்களின் வலியையும் துயரங்களையும் இன்றளவும் அவை உலகத்துக்கு பறைசாற்றியபடி இருக்கின்றன. சீனப்புரட்சியையும் ரஷ்யப்புரட்சியையும் தொடர்ந்து அந்நாடுகளில் நிலவிய கடுமையான கண்காணிப்புகளையும் மீறி புரட்சியின் விளைவுகளைப்பற்றி எழுதப்பட்ட இலக்கியங்கள் மானுடத்தின் உலராத கண்ணீர்த்தடத்தை அடையாளப்படுத்தியபடி இருக்கின்றன. ரத்தத்தையும் கண்ணீரையும் சிந்தவைத்த போர்களும் புரட்சிகளும் அதிகாரத்தை அடைந்துவிட்டால் வெற்றியின் வரலாறாக மாறிவிடும். அதிகாரத்துக்கு அடிபணிந்துவிடும்போதோ அல்லது தன்வசம் இருக்கும் அதிகாரத்தை இழந்துவிடும்போதோ, அனைத்தும் தோல்வியின் வரலாறாக மாறிவிடும். உலகம் உருவான காலத்திலிருந்து மீண்டும்மீண்டும் நிகழும் மாறாத உண்மை இது.
வரலாற்றை அறிய விரும்பும் ஒவ்வொருவரும் அரசியல்வழிகளையும் கலைவழிகளையும் கற்றுத் தேர்ந்தால்மட்டுமே ஓரளவு சமநிலையான சித்திரத்தைக் கண்டடைய முடியும். அரசியல் கொள்கைகளால் ஆனவை. கலைகள் மனஎழுச்சிகளால் உருவானவை.
சேரசோழபாண்டியர்களின் வீரத்தையும் வெற்றியையும் பற்றிய ஏராளமான சித்திரங்கள் சங்ககாலச் செய்யுள்களில் தீட்டப்பட்டிருக்கின்றன. அவர்கள் ஆட்சிமுறையைப்பற்றிய தகவல்கள், இன்று கண்டெடுக்கப்பட்ட ஏராளமான கல்வெட்டுகளில் அடங்கியுள்ளன. இவை அனைத்தையும் கேள்விக்குட்படுத்தும் ‘அற்றைத்திங்கள் அவ்வெண்ணிலவில்’ என்னும் பாடலை எப்படி மறக்கமுடியும். எல்லா அறங்களையும் மீறி, தன்னைவிட மிகமிகச்சிறிய ஒரு வேளிர்குலத்தவன்மீது மூவராக இணைந்து போரிட்டுக் கொன்றழித்த கொடுமையின் கண்ணீர்க்கதையை அப்பாடல் முன்வைக்கிறது. எது மூவேந்தர்களின் உண்மையான முகம்? முன்சொன்ன தகவல்களிலிருந்து திரண்டெழும் முகமா? பாரிமகளிரின் கண்ணீர்க்கதையிலிருந்து திரண்டெழும் முகமா? இரண்டுமே உண்மை. ஒரு நாணயத்தின் இருபக்கங்கள்போல.
நாம் அனைவரும் சாட்சியாக நின்று பார்க்க, ஓர் இன அழிப்புப்போரை நிகழ்த்திமுடித்துவிட்டது இலங்கை அரசு. நம் சகோதரர்கள் லட்சக்கணக்கில் மாண்டுபோனார்கள். இலங்கை அரசின் தாகம் அப்போதும் அடங்கவில்லை. போர்த்தருணங்களில் கைதிகளாக பிடித்தவர்களையும் அடைக்கலமாக வந்தவர்களையும் வேலிமுகாம், கண்காணிப்பு முகாம், மறுவாழ்வு முகாம், சீர்திருத்த முகாம் என வெவ்வேறு பெயர்களில் ஆண்டுக்கணக்கில் அடைத்தும் வதைத்தும் சிறுகச்சிறுக கொன்றொழித்து தன் தாகத்தைத் தணித்துக்கொள்கிறது. இந்தப் பின்னணியில் விரிகிறது குணா.கவியழகனின் புதிய நாவலான ‘விடமுண்ட கனவு’. ஏற்கனவே ’நஞ்சுண்ட காடு’ நாவலை எழுதியவர். விசாரணைக்காக பிடித்துவரப்பட்டு முகாமில் அடைக்கப்பட்ட முன்னாள் போராளியான உருத்திரன், நேரடி விடுதலை என்பது வெறும் பொய்யுரை என்பதை அனுபவங்களால் உணர்ந்து, நண்பர்களுடன் திட்டம் தீட்டி தப்பித்துச் செல்லும் கதை.
உருத்திரன் அசைபோடும் பால்யகால நினைவுகள் வழியாக நாவலின் தொடக்கத்தில் ஒரு காட்சி இடம்பெறுகிறது. குழந்தைப்பள்ளியில் ஓடிப் பிடித்து விளையாடும் விளையாட்டில் தடுமாறி விழுந்து தோல்சிராய்ப்பால் ரத்தக்கசிவுடன் அழுகிறாள் ஒரு சிறுமி. அவளை அமைதிப்படுத்தி அழுகையை நிறுத்தி வகுப்புக்கு அழைத்துச் செல்கிறான் சிறுவனான உருத்திரன். தற்செயலாக அவர்களைக் காண்கிற ஆசிரியை அவள் அழுகைக்குக் காரணம் அவனே என பிழையாகப் புரிந்துகொண்டு அவன் கன்னத்தில் அடித்துவிடுகிறாள். ஆசிரியை முன்னால் உண்மையைச் சொல்லாத சிறுமி, தனிமையில் அவனுக்கு சாக்லெட்டுகள் கொடுத்து ஆறுதல் சொல்கிறாள். அவள் மனத்தில் தன்னைப்பற்றி உருவாகும் முக்கியத்துவத்தை அவன் மனம் விரும்புகிறது. ஆசிரியையிடம் வாங்கிய அடிகளையும் வசைகளையும் அந்த முக்கியத்துவம் மறக்கவைத்துவிடுகிறது. இப்படி பள்ளிவாழ்விலும் சமூகவாழ்விலும் பல அனுபவங்கள். தனக்கு அருகில் இருப்பவர்களை ஆறுதல்படுத்த, அவர்களுக்கு துணையாக நிற்க, அவர்களைக் காப்பாற்ற என பல காரணங்களுக்காக அடிகளும் வசைகளும் பெற்று, அந்தந்தத் தருணங்கள் வழங்கிய முக்கியத்துவங்களில் திளைத்த இளமையனுபவங்கள் கொஞ்சம்கொஞ்சமாக நாட்டைக் காக்கும் போராட்டத்துடன் அவனை இணைத்துவிடுகின்றன.
விசாரணைமுகாம்களின் காட்சிகளாக சித்தரிக்கப்பட்டிருக்கும் மனத்தை நடுங்கவைக்கின்றன. தந்திரமான கேள்விகளை மாற்றிமாற்றிக் கேட்டுக் குழப்பி, சொல்லப்படும் பதில்களை ஆய்ந்து, வாய்தவறி விழுந்துவிடும் ஏதேனும் ஒரு சொல்லைப் பிடித்துக்கொண்டு அடித்தும் உதைத்தும் துப்பாக்கியால் மிரட்டியும் மேலும்மேலும் சொல்லென வதைக்கும் விசாரணைமுறைகள் மனமுருகும் வகையில் தீட்டப்பட்டுள்ளன. காவலர்களின் அடிகளால் கைகளும் கால்களும் உடைந்தவர்களாகவும் உடல்காயங்களால் அவதிப்படுகிறவர்களுமே சிறைக்கொட்டடிகளில் நிறைந்திருக்கிறார்கள். சிறுநீர் கழிக்க இயலாமல் வயிற்றுவலியால் துடிப்பவனை நடிப்பதாகச் சொல்லிப் புறக்கணித்து மரணமடைய வைத்துவிடுகிறார்கள். மருத்துவமனைக்கோ, அடுத்தகட்ட விசாரணைக்கோ அழைத்துச் செல்லப்படும் மனிதர்கள் ஒருபோதும் அறைகளுக்குத் திரும்பி வருவதில்லை. பதிவே இல்லாமல் அவர்கள் கொல்லப்பட்டுவிடுகிறார்கள். மரணம் ஒரு தினசரிக் காட்சியாக நகர்ந்துபோகிறது.
ஒவ்வொரு நாளும் குடிதண்ணீர் பாட்டில்களும் உணவுப்பொருட்களும் அவர்களைநோக்கி வீசியெறியப்படுகின்றன. சுகாதாரமற்ற அறைகளில் தங்கவைக்கப்படுகிறார்கள். பத்து பேர்கள் தங்கும் அறையில் ஐம்பது பேர்கள். எப்போதும் நிரம்பிவழிந்து துர்நாற்றமடிக்கும் கழிப்பறைகள். செத்துப்போன பிரபாகரனின் உருவப்படத்தைக் காட்டி அடையாளம் தெரிகிறதா என தந்திரமாகக் கேட்டு, மாறும் முக உணர்வுகளை உற்றுக் கவனித்து, அதற்குத் தகுந்தபடி தண்டனைமுறைகளை மாற்றும் தந்திரத்துக்கு சிறையில் உள்ள அனைவருமே பலியாகிறார்கள். இயக்கத்துடன் எவ்விதமான தொடர்புமற்றவர்கள் எப்படியாவது உயிர்பிழைத்து வெளியே போனால் போதும் என்று விடுதலைக்காகக் காத்திருக்கிறார்கள். இயக்கத்துடன் தொடர்புள்ளவர்கள் தம் தொடர்பு விவரங்களை குறைத்தும் மாற்றியும் சொல்லி விடுதலைக்கான வாய்ப்புக்காக ஏங்குகிறார்கள். பிழைத்திருக்கவேண்டும், உலகத்தில் ஏதேனும் ஒரு மூலையில் உயிர்த்திருக்கும் சொந்தபந்தங்களை என்றேனும் ஒருநாள் சந்தித்து ஒன்றுசேர்ந்துவிடவேண்டும் என்று ஒவ்வொரு கணமும் கனவுகளில் திளைத்திருக்கிறார்கள். அதன்பொருட்டு ஆபாசமான வசைகளையும் அடிஉதைகளையும் துன்பங்களையும் அவமானங்களையும் தாங்கிக்கொள்கிறார்கள். ராசு அண்ணர், சுரேன், சஞ்சயன், வர்மன், ரகு, பசீலண்ணை, சீலன், ஜீவா, வெடி பாலன் என ஒரு சிலருக்கு முகமும் பேரும் கொடுத்து நாவலுக்குள் உலவவிட்டிருக்கிறார் கவியழகன். வதைபடும் லட்சக்கணக்கான மனிதர்களின் அடையாளமாகவே அவர்களை நினைக்கத் தோன்றுகிறது.
தீதும் நன்றும் பிறர்தர வாரா என நாவலின் பிரதான பாத்திரமான உருத்திரன் அசைபோடும் வரிகள் முன்வைக்கும் ஒரு கேள்வி நாவலின் மையத்தை நோக்கி நம்மைச் செலுத்தும் ஒரு வழியாக விரிகிறது. விடுதலை இயக்கம் ஏன் தோற்றது என மாறிமாறி நண்பர்கள் தமக்குள் விவாதித்துக்கொள்ளும் அத்தியாயம் நாவலில் முக்கியமான ஒரு பகுதி. எல்லாவிதமான தரப்புகளையும் இந்த அத்தியாயம் தொகுத்து முன்வைத்திருக்கிறது. ”இயக்கம் என்பது வீட்டைப் பாதுகாக்கும் என்பதற்காகத்தான் நாட்டுக்காக போராளியானோம். ஆனால் கட்டாய ராணுவச்சேவை என்னும் பெயரில் வீட்டில் இருந்த ஒவ்வொருவரையும் அழைத்துச்சென்ற இயக்கம் எவ்விதமான பயிற்சியுமின்றி அவர்களை போர்முனையில் நிறுத்தி உயிர்துறக்கவைத்துவிட்டது. இயக்கத்தாலேயே வீட்டுக்குப் பாதுகாப்பு இல்லையென்றால் எப்படி களத்தில் போரிடமுடியும்?” என்னும் கேள்வி ஒரு தரப்பு. “போதிய ஆயுதங்களும் ஆட்களும் இல்லாமல் சண்டையைத் தொடங்கியிருக்கக்கூடாது” என்பது மற்றொரு தரப்பு. “நாம் பாதுகாப்புச் சண்டையிலேயே தொடர்ந்து நீடித்தது பெரிய பிழை. நாம் தாக்கும் சண்டையை நிகழ்த்தியிருக்கவேண்டும்” என்பது இன்னொரு தரப்பு. “பலம்தான் வெல்லும் பலம்தான் வெல்லும் என்று நொடிக்கொரு முறை சொல்லும் இயக்கம் நம்மைவிட ஆயிரம் மடங்கு பலமும் பல நாடுகளின் ஆதரவும் கொண்ட சிங்களப்படையை தவறாகக் கணித்தது பெரும்பிழை” என்பது மற்றுமொரு தரப்பு. ”போராட்டம் நியாயமானது. நான் நேர்மையானவன் என்ற எண்ணம் வந்துவிட்டால் நான் எடுக்கும் முடிவை மக்கள்மீது திணிக்க தயங்கவே மாட்டேன். என் நேர்மை மீது நான் கொள்ளும் கர்வம் இது. இது வந்தால் என் தீர்மானம் அவர்களுக்கானதுதானே என்னும் பெருமையுணர்வு தோன்றும். இது பிழையாக என்னை வழிநடத்தும்” என்பது பிறிதொரு தரப்பு. சிங்களக் களப்பணியாளரான றுவான் முற்றிலும் புதிதான ஒரு கோணத்தில் இன்னுமொரு தரப்பைக் கட்டியெழுப்புகிறார். “எப்போதெல்லாம் தெற்கில் சிங்கள அடித்தட்டு மக்கள் அதிகாரத்துக்கு எதிராக குரலெழுப்புகிறார்களோ, அப்போதெல்லாம் அதை தமிழர்களைநோக்கி திசைதிருப்புவதில் வெற்றிகொள்கிறது சிங்கள அரசாங்கம். அங்கு தமிழர்கள் நசுக்கப்படும்போது இங்கு சிங்களர்கள் நசுக்கப்படுகிறார்கள். ஆனால் அது செய்தியாகிறது. இது செய்தியாவதில்லை. போர் என்பதே அரசாங்கம் நிகழ்த்தும் ஒரு பெரிய நாடகம்” என்பது அவர் தரப்பு. கலைநேர்த்தி குன்றாமல் எல்லா விமர்சனங்களையும் கச்சிதமான உரையாடல்கள் வழியாக முன்வைத்திருக்கும் கவியழகன் பாராட்டுக்குரியவர்.
ராணுவத்தினர் அனைவரையும் ஒரே வார்ப்பாகக் காட்டவில்லை கவியழகன். வன்னிப்போருக்குப் பிறகு கைக்குக் கிடைத்த தமிழ்ப்பெண்களை கதறக்கதற இழுத்துச் சென்று இன்பம் துய்த்ததை கைப்பேசியில் படம்பிடித்துவைத்துகொண்டு, மதுவிருந்துக்குப் பிறகான இரவுகளில் மீண்டும்மீண்டும் பார்த்து ரசிக்கும் ராணுவத்தினனும் இந்த நாவலில் இடம்பெறுகிறான். மாற்றுமுகாம்களில் வசிக்கும் சொந்தபந்தங்களை வாரத்துக்கு இரண்டு நாட்கள் சந்தித்துப் பேசவும் முள்வேலிகளை அகற்றவும் கைதியின் மனைவியோடு கைப்பேசியில் தொடர்புகொண்டு படுக்க வருமாறு அழைப்பு விடுக்கும் போலீஸ்மீது நடவடிக்கை எடுக்கவும் முயற்சி செய்யும் ராணுவத்தினனும் இடம்பெறுகிறான். இறுதிக்காட்சிகளில் கைதிகள் தப்பித்துச் செல்ல உதவும் ஒரு சிங்களப்பெண் போலீஸ்துறையைச் சேர்ந்தவள். பாதுகாப்பாக அவர்களை அழைத்துச் சென்று வண்டியில் ஏற்றிவிடுபவன் ஒரு சிங்கள ஆட்டோ டிரைவர். இறுதியாக, அவர்கள் அடைக்கலம் தேடிச் செல்வதுகூட ஒரு சிங்களப்போராளியின் வீட்டைநோக்கி.
கைதிகளில் மூத்தவரான ராசு அண்ணர் இடம்பெறும் காட்சிகள் நாவலின் முக்கியமான சித்தரிப்பு அடங்கிய பகுதியாகும். விவேகம் நிறைந்த அவருடைய பேச்சு எல்லோரையும் கவனிக்கவைக்கத் தூண்டும் தன்மை உடையது. சிங்கள மொழி அறிந்தவர் என்பதால் பல சமயங்களில் அவர் அதிகாரிகளுக்கும் விசாரணை மனிதர்களுக்கும் இடையே பாலமாக இருக்கிறார். அவருடைய வாதம் ஒருசில நன்மைகளை அதிகாரிகளிடமிருந்து பெற்றுத் தருகிறது. இயக்கம் பற்றியும் போர் பற்றியும் அவருக்கும் விமர்சனம் இருக்கிறது. அதிகாரிகள்மீது அவரும் கோபமுற்றவராக இருக்கிறார். ஆயினும், எதிர்ப்புகளை வெளிப்படையாகக் காட்டுவது தன் மரணத்தைத் தானே தேடிக்கொள்வதற்குச் சமம் என நினைக்கிறார். எவ்வகையிலேனும் உயிர்த்திருப்பதே இத்தருணத்தில் முக்கியம் என்பது அவர் எண்ணம். முகாமுக்கு வரும் ஒவ்வொருவரிடமும் இதையே அவர் திரும்பத்திரும்பச் சொல்லி அமைதிப்படுத்துகிறார். என்றேனும் ஒருநாள் காலத்தின் கட்டாயத்தால் விசாரணைமுகாம் நடவடிக்கைகள் ஒரு முடிவுக்கு வரும் என்பதில் அவருக்கு ஆழ்ந்த நம்பிக்கை இருக்கிறது. முகாமிலிருந்து தப்பித்துச் செல்பவர்களை அவர் தடுப்பதில்லை. அதே சமயத்தில் அதைத் தெரிந்துகொண்டதாகக் காட்டிக்கொள்வதும் இல்லை.
கடுமையான துயரங்களுக்கு நடுவிலும் அவர் காட்டும் ஆழமான விவேகமும் அமைதியும் அவரை மிகப்பெரிய மனிதராக எண்ணவைக்கிறது. துயர்தோய்ந்த இரவுத் தருணங்களில் அவர் பாடும் பாடலைக் கேட்டு சிறைக்கொட்டடியில் எல்லோரும் ஆறுதல் கொள்கிறார்கள். ’தர்மம் ஒரு வாழ்வின் பொய்யோ- சூதே அதன் உள்ளின் மெய்யோ’ என்று தொடங்கும் அந்தப் பாடல் கண்ணீர் வரவழைப்பதாக உள்ளது. ’பொய்யொன்றே வாழ்வின் மெய்யோ- இல்லை பொய்யே விதிதானோ‘ என்பது சரணத்தில் இடம்பெறும் ஒரு வரி. பொய்க்காரணங்களுக்காக ஆண்டுக்கணக்கில் நிகழும் விசாரணைகளையும் அவற்றை மேலும்மேலும் நீட்டி உலகத்தை நம்பவைப்பதற்காக அரசாங்கம் கட்டியுரைக்கும் பொய்களையும் மெல்லமெல்ல உயிர்துறக்கும் மனிதர்களையும் தினசரி வரலாற்றுச்சம்பவமாக கையறுநிலையில் நின்றபடி பார்க்கும் நம் மனத்தில் அந்த வரிகள் ஏற்படும் அதிர்வுகள் அளவற்றவை. அதுவே நாவலின் வெற்றி.

(விடமேறிய கனவு. குணா கவியழகன். நாவல். அகல் வெளியீடு, 348-ஏ, டி.டி.கே.சாலை, ராயப்பேட்டை, சென்னை- 14. விலை. ரூ.240)

http://puthu.thinnai.com/?p=30205

Link to comment
Share on other sites

  • 2 months later...

இன்றுதான் விடமேறிய கனவு படித்து முடித்தேன். முடித்த தறுவாயில் அறிவைக் கொன்று உள்ளிற்குள் ஒரு கிளர்ச்சி. வாகை மரத்தைப் புறோபைல் படமாக உள்வர்களைத் தேடி இணைந்து செயற்படவேண்டும் போன்று தோன்றியது. 

கனடாவின் குமரன் புத்தகசாலையில் 'நஞ்சுண்ட காடு' மற்றும் 'அப்பால் ஒரு நிலம்' கிடைக்கவில்லை. 'விடமேறிய கனவு' மட்டும் கிடைத்தது. விலை 21 டொலர்கள். நிச்சயமாக இந்த விலைக்கேற்ற பங்கு எழுத்தாளரிற்குச் சென்றடையாது என்றது வெறுப்பேற்றியது.

குணா கவியளகனின் நாவல்களை நேரடியாக அவரிடம் பணம் கொடுத்துப் பெறுவதற்கு ஏதாவது வளிகள் உள்ளனவா?
 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 29 MAR, 2024 | 10:23 AM   காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவசரமாக தேவைப்படும் அத்தியாவசியபொருட்கள் மற்றும் மனிதாபிமான உதவிகளை காசாவிற்குள் அனுமதிப்பது தொடர்பில் இஸ்ரேல் உடனடியாக செயற்படவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது.   காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது. https://www.virakesari.lk/article/179954
    • தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - கிட்ணண் செல்வராஜ் Published By: VISHNU   29 MAR, 2024 | 01:56 AM 1700 ரூபா எனும் வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணண் செல்வராஜ் தெரிவித்தார். சம்பள விவகாரம் தொடர்பில் பெருந்தோட்டத்  தொழிலாளர்களை தெளிவூட்டும் வகையில் இன்று வியாழக்கிழமை (28) ஹப்புத்தளை பிட்டரத்தமலையில் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம் இதனை ஏற்பாடு செய்திருந்தது.  இதன்போதே அகில இலங்கைத் தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணன் செல்வராஜ் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “சம்பள நிர்ணய சபைக்கு 2000 ரூபா அடிப்படை சம்பளத்தை வழங்குவதற்கு ஏதுவான பிரேரணை கொண்டுசெல்லப்பட வேண்டும். அவ்வாறு கொண்டு செல்லும் பொழுது அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கமாகிய நாங்கள் முழுமையான ஆதரவினை தருவோம். அதைவிடுத்து 1700 ரூபாவுக்குள் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை வரையறுக்கக் கூடாது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு ஒரு நாளைக்கு 1700 ரூபாவை சம்பளமாக வழங்கினால் போதுமா? அதுப்போல அரசியல்வாதிகளுக்கு நாட்சம்பளமாக 1700 ரூபா வழங்கினால் போதுமா?  அதனால் 1700 ரூபா என்ற வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்குவதற்கு ஏதுவான நடவடிக்கைகளை அரசாங்கமும், அரசாங்கத்தோடு தூணாகவிருக்கும் மலையகத்தின் பினாமி அமைச்சரும் தொழிற்சங்கத் தலைவர்களும் உடனடியாக முன்னெடுக்க வேண்டும்.” என்று மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179943
    • Published By: VISHNU   29 MAR, 2024 | 01:27 AM கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் கிளிநொச்சி பாரதிபுர செபஸ்ரியார் வீதியின் பாலம் புனரமைத்தலுக்கான அடிக்கல் நாட்டு விழா வியாழக்கிழமை (28) இடம்பெற்றிருந்தது. குறித்த நிகழ்வில்  கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், வன்னி பாராளுமன்ற உறுப்பினர் திலீபன், ஒப்பந்ததாரர்கள், பிரதேச செயலாளர்கள், கிராம மக்கள் மற்றும் வீதி அதிகார சபை உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். இந்நிகழ்வில் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களினால் பாலம் புனரமைப்புக்கான திரைநீக்கம் செய்யப்பட்டு பின் பால புனரைப்புக்கான அடிக்கல்லும் நாட்டி வைத்தார்.குறித்த பாலமானது 15,329,888.18 நிதி பங்களிப்பில் 90நாட்கள் ஒப்பந்த அடிப்படையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட கல்மடு நகர் பகுதியில் அமைந்துள்ள மூலிகைப் பண்ணையின்  பிரதான வீதியினை புனரமைப்பதாகவும் அதற்குரிய நிதியினை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் தெரிவித்து அத்துடன் மேலும் தெரிவிக்கையில் பல சிறிய பாலங்கள் உடனடியாக புனரிப்பு செய்வதற்கான நடவடிக்கையினை  உடன் மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்ததுடன் இப்பகுதிகளில் உள்ள பலகிராமிய வீதிகளை புணரமைப்பு செய்வதற்குசம்பந்தப்பட்ட அமச்சுடன் கலந்துரையாடயிருப்பதாகவும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179939
    • புவி வெப்பமயமாதலால், துருவப் பனிக்கட்டிகள் வேகமாக உருகி வருகின்றன. திடமான பனிக்கட்டி உருகுவதால் பூமியின் மையப்பகுதியில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக பூமியின் சுழற்சி வேகம் அதிகரித்து அதன் மூலம் பூமியின் நேரம் மாறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், இன்னும் சில ஆண்டுகளில் பூமியின் நேரம் ஒரு நாளைக்கு ஒரு நொடி வீதம் குறையும் என்று விஞ்ஞானிகள் தற்போது கணித்துள்ளனர் ஒரு வினாடி என்பது மிக குறுகிய காலப்பகுதி என்ற போதிலும், அது கணினி பயன்பாட்டில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர். https://thinakkural.lk/article/297441
    • கொதிக்கும் காய்ச்சலுடன், தாயின் முன்னிலையில் கண்ணீரை வென்ற ‘சஞ்சுமல் பாய்ஸ்’ வீரர் பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 29 மார்ச் 2024, 03:25 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஒவ்வொரு அணியிலும் ஒரு ரியல் ஹீரோ இருப்பார். அனைத்து நேரங்களிலும் அவர்களின் உதயம் இருக்காது, தேவைப்படும் நேரத்தில் அவர்களின் எழுச்சி அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்லும். அந்த வகையில் “சஞ்சுமெல் பாய்ஸ்” என்று அழைக்கப்படும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு நேற்றைய ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஒளிர்ந்தவர் ரியான் பராக் மட்டும்தான். ஜெய்ப்பூரில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 9-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியை 12 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 2ஆவது வெற்றி பெற்றது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. முதலில் பேட் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் சேர்த்தது. 186 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் சேர்த்து 12 ரன்களில் தோல்வி அடைந்தது. இந்த வெற்றியின் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சொந்த மைதானத்தில் இந்த சீசனில் தொடர்ந்து 2ஆவது வெற்றியைப் பெற்றுள்ளது. முதல் வெற்றி பெற்றவுடன் நிகர ரன்ரேட்டை ஒன்று என வைத்திருந்த ராஜஸ்தான், 2 வெற்றிகளில் 4 புள்ளிகள் பெற்றும் நிகர ரன்ரேட் 0.800 புள்ளியாகக் குறைந்துவிட்டது. டெல்லி கேபிடல்ஸ் அணி அடுத்தடுத்து இரு தோல்விகளைச் சந்தித்துள்ளது. இதனால் இன்னும் புள்ளிக்கணக்கைத் தொடங்க முடியாமல், நிகர ரன்ரேட்டும் மைனஸ் 528ஆக பின்தங்கியுள்ளது. இந்த ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஜொலித்தவர் ரியான் பராக் (45 பந்துகளில் 84 ரன்கள் 6சிக்ஸர்கள், 7பவுண்டரிகள்) மட்டும்தான். ஒரு கட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணி 3 விக்கெட் இழப்புக்கு 36 ரன்கள் என்று இக்கட்டான நிலையில் தடுமாறியது. ஆனால், 4வது பேட்டராக களமிறங்கிய ரியான் பராஸ், அஸ்வினுடன் ஜோடி சேர்ந்து 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும், ஜூரெலுடன் சேர்ந்து 52 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அணிக்கு கவுரமான ஸ்கோரை பெற்றுக் கொடுத்தார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES ஒரு கட்டத்துக்கு மேல் அதிரடி ஆட்டம்தான் ஸ்கோரை உயர்த்த கை கொடுக்கும் என்பதை அறிந்த ரியான் பராக் டெல்லி பந்துவீச்சாளர்களை வெளுக்கத் தொடங்கினார். ஒரு கட்டத்தில் 20 பந்துகளில் 16 ரன்கள் என்று மெதுவாக ஆடிய பராக் அதன்பின் பேட்டை சுழற்றத் தொடங்கினார். பராக் தான் சந்தித்த கடைசி 19 பந்துகளில் மட்டும் 58 ரன்களைச் சேர்த்தார். அதிலும் அதிவேகப்பந்துவீச்சாளர் நோர்க்கியா வீசிய கடைசி ஓவரில் மட்டும் 6 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என 25 ரன்களை பராக் சேர்த்தார். ராஜஸ்தான் அணியை ஒற்றை பேட்டராக கட்டி இழுத்து பெரிய ஸ்கோருக்கு கொண்டு வந்த ரியான் பராக் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த 3 சீசன்களிலும் ரியான் பராக் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. கடந்த சீசனில் 7 இன்னிங்ஸில் பராக் சேர்த்தது வெறும்78 ரன்கள்தான், 2022ம் ஆண்டு சீசனில் பராக் 14 இன்னிங்ஸ்களில் 148 ரன்கள் சேர்த்தார், 2021 சீசனில் 10 இன்னிங்ஸ்களில் 93 ரன்கள் என பராக் பேட்டிங் மோசமாகவே இருந்தது. இதனால் அணியில் இருந்தாலும் பல போட்டிகளில் ப்ளேயிங் லெவனில் இடம் பெறவில்லை. ஆனால், கடந்த ஆண்டில் உள்நாட்டுப் போட்டிகளில் ரியான் பாராக் தீவிரமான ஆட்டத்தால் கிடைத்த அனுபவம் ஆங்கர் ரோல் எடுத்து அணியை இக்கட்டான நிலையில் இருந்து மீ்ட்டுள்ளது. 2024 சீசன் தொடங்கியதில் இருந்தே பராக்கின் பேட்டிங்கில் முதிர்ச்சியும், பொறுப்புணர்வும் அதிகம் இருந்ததைக் காண முடிந்தது. முதல் ஆட்டத்திலும் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து பராக் 93 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது பெரிய ஸ்கோருக்கு கொண்டு சென்றது. அந்த ஆட்டத்திலும் பராக் 29 பந்துகளில் 43 ரன்கள் சேர்த்தார். இரு போட்டிகளிலும் தன்னுடைய ஆட்டத்தின் முதிர்ச்சியை, பொறுப்புணர்வை பராக் வெளிப்படுத்தியுள்ளார். அது மட்டுமல்லாமல் கடந்த 3 நாட்களாக ரியான் பராக்கிற்கு கடும் காய்ச்சல், உடல்வலி இருந்துள்ளது.ஆனால், மாத்திரைகளை மட்டும் உட்கொண்டு, அந்த உடல் களைப்போடு நேற்றைய ஆட்டத்தில் பராக் விளையாடினார் என ராஜஸ்தான் நிர்வாகம் தெரிவித்துள்ளது.   பட மூலாதாரம்,GETTY IMAGES தாயின் முன் சிறப்பாக ஆடியது மகிழ்ச்சி ஆட்டநாயகன் விருது வென்ற ரியான் பராக் பேசுகையில் “ என்னுடைய உணர்ச்சிப் பெருக்கு அடங்கிவிட்டது, என்னுடைய தாய் இந்த ஆட்டத்தை இங்கு வந்து நேரில் பார்த்தால் அவர் முன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறேன். என்னை இங்கு கொண்டுவருவதற்கு அவர் பல போராட்டங்களை சந்தித்துள்ளார். நான் சிறப்பாக ஆடுகிறேனோ இல்லையோ, என்னுடைய திறமை என்னவென்று எனக்குத் தெரியும், அதை ஒருபோதும் மாற்றியதில்லை. உள்நாட்டுப் போட்டிகளில் அதிகமான போட்டிகளில் பங்கேற்றேன், அதிகமான ரன்களும் குவித்தேன். டாப்-4 பேட்டராக வருபவர் ஆட்டத்தை கடைசிவரை எடுத்துச் செல்ல வேண்டும் அதை செய்திருக்கிறேன். முதல் ஆட்டத்தில் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்தேன். இன்று சஞ்சு செய்த பணியை நான் செய்தேன். நான் 3 நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் இருந்தேன். இந்த ஆட்டத்துக்காக கடினமாக உழைத்துள்ளேன். என்னால் விளையாட முடியும் என மனதை தயார் செய்து பேட் செய்தேன்” எனத் தெரிவித்தார். ஆட்டத்தை திருப்பிய பந்துவீச்சாளர்கள் ஒரு கட்டத்தில் ஆட்டம் டெல்லி கேபிடல்ஸ் கையில்தான் இருந்தது. அதை அவர்களிடம் இருந்து பறித்தது ராஜஸ்தான் பந்துவீச்சாளர்கள்தான். கடைசி 5 ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 60 ரன்கள் தேவைப்பட்டது. 16-வது ஓவரை வீசிய சஹல் 6 ரன்கள் மட்டுமே கொடுத்து அபிஷேக் போரெல் விக்கெட்டை கைப்பற்றினார். அஸ்வின் வீசிய 17-வது ஓவரில் டெல்லி பேட்டர் ஸ்டெப்ஸ் 2 சிக்ஸர்கள் உள்பட 19 ரன்கள் சேர்த்தால் ஆட்டம் பரபரப்பானது. ஆவேஷ் கான் 18-வது ஓவரை வீசியபோது, ஸ்டெப்ஸ் ஒரு பவுண்டரி உள்பட 9 ரன்களைச் சேர்த்து அணியை வெற்றி நோக்கி நகர்த்தினார். கடைசி இரு ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 32 ரன்கள் தேவைப்பட்டது. சந்தீப் சர்மா வீசிய 19-வது ஓவரில் முதல் இருபந்துகளில் பவுண்டரி, சிக்ஸர் என ஸ்டெப்ஸ் பறக்கவிட்டதால் ஆட்டம் டெல்லி பக்கம் சென்றது.அந்த ஓவரில் டெல்லி 15 ரன்கள் சேர்த்தது. கடைசி ஓவரில் டெல்லி வெற்றி பெற 17 ரன்கள் தேவைப்பட்டது.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெத்ஓவர் ஸ்பெஷலிஸ்ட் கடந்த முதல் ஆட்டத்திலும் டெத் ஓவரில் கடைசி ஓவரை ஆவேஷ்கான் வீசி வெற்றி தேடித்தந்ததால் இந்த முறையும் கேப்டன் சஞ்சு, ஆவேஷ் கானை பயன்படுத்தினார். கடைசி ஓவரை ஆவேஷ்கான் மிக அற்புதமாக வீசினார். நல்ல ஃபார்மில் இருந்த ஸ்டெப்ஸை ஒரு பவுண்டரி, சிக்ஸர்கூட அடிக்கவிடாமல், 3 பந்துகளை அவுட்சைட் ஆஃப்ஸ்டெம்பிலும் வீசினார். 4வது பந்தை ஸ்லாட்டில் வீசியும் ஸ்டெப்ஸ் அடிக்கவில்லை. 5-வது பந்தை ஃபுல்டாசாகவும், கடைசிப்பந்தில் ஃபுல்டாசாக வீசி டெல்லி பேட்டர்களை கட்டிப்போட்டார் ஆவேஷ் கான். அதிரடியாக ஆடிய அஸ்வின் நெருக்கடியான கட்டத்தில் பேட்டிங் வரிசையில் தரம் உயர்த்தப்பட்டு நடுவரிசையில் அஸ்வின் நேற்று களமிறக்கப்பட்டார். ரியான் பராக்கிற்கு நல்ல ஒத்துழைப்பு அளித்து அஸ்வின் ஸ்ட்ரைக்கை மாற்றி, 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும் அமைத்துக் கொடுத்தார். ரியான் பராக் தன்னுடைய முதல்பாதி இன்னிங்ஸில் ரன் சேர்க்க திணறினார், ஆனால் அஸ்வின் அனாசயமாக 3 சிக்ஸர்களை வெளுத்தார். குறிப்பாக குல்தீப், நோர்க்கியா ஓவர்களில் அஸ்வின் 3 சிக்ஸர்களைப் பறக்கவிட்டார். அஸ்வின் அடித்த திடீர் சிக்ஸால்தான் ராஜஸ்தான் ரன்ரேட் 6 ரன்களைக் கடந்தது. அஸ்வின் தன்னுடைய பணியில் சிறிதும் குறைவி்ல்லாமல் சிறிய கேமியோ ஆடி 19 பந்துகளில் 29 ரன்கள் சேர்த்து பெவிலியன் சென்றார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெல்லிக்கு தொல்லையாகிய சஹல் ராஜஸ்தான் அணி தொடக்கத்திலேயே பர்கர், போல்ட் இருவருக்கும் 6 ஓவர்களை வீசச் செய்து பவர்ப்ளேயோடு முடித்துவிட்டது. இதனால் 14 ஓவர்கள்வரை நல்ல ஸ்கோர் செய்யலாம் என டெல்லி பேட்டர்கள் நினைத்திருக்கலாம். டேவிட் வார்னரும் களத்தில் இருந்தார். ஆனால், ஆவேஷ் கான் ஆஃப் சைடில் விலக்கி வீசி வார்னரை அடிக்கச் செய்து ஆட்டமிழக்கச் செய்தார். மிக அருமையாக பந்துவீசிய சஹல் இரு இடதுகை பேட்டர்களான கேப்டன் ரிஷப் பந்த், போரெல் இருவரையும் வெளியேற்றினார். 4 ஓவர்கள் வீசிய சஹல் 19 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார், இவரின் பந்துவீச்சில் ஒரு சிக்ஸர் மட்டுமே அடிக்க முடிந்தது, பவுண்டரி ஒன்றுகூட அடிக்கவில்லை. சஹல் 7 டாட் பந்துகளையும் வீசியதை கணக்கிட்டால் 2 ஓவர்களில்தான் சஹல் 19 ரன்களை வழங்கியுள்ளார். இரு முக்கியமான பேட்டர்களை சஹல் தனது பந்துவீச்சின் மூலம் வெளியேற்றியது டெல்லி அணிக்கு பெரிய பின்னடைவாக மாறியது. நடுங்கவைத்த பர்கர் ராஜஸ்தான் அணிக்கு இந்த சீசனில் கிடைத்த பெரிய பலம் டிரென்ட் போல்ட், ஆன்ட்ரூ பர்கர் ஆகிய இரு இடதுகை வேகப்பந்துவீச்சாளர்கள்தான். போல்ட் இந்த ஆட்டத்தில் விக்கெட் ஏதும் எடுக்காவிட்டாலும், பர்கர் இரு விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதிலும் ரிக்கி புயிக்கு பர்கர் வீசிய பவுன்ஸர் சற்று தவறியிருந்தால் ஹெல்மெட்டை பதம் பார்த்திருக்கும், ஆனால், கிளவ்வில் பட்டு சாம்சனிடம் கேட்சானது. அதேபோல நல்ல ஃபார்மில் இருந்த மார்ஷ்(23) விக்கெட்டையும் பர்கர் தனது அதிவேகப்பந்துவீச்சில் வீழ்த்தினார். தொடக்கத்திலேயே மார்ஷ், ரிக்கி புயி விக்கெட்டுகளை வீழ்த்தி டெல்லிக்கு பெரிய சேதாராத்தை பர்கர் ஏற்படுத்தினார். மணிக்கு சராசரியாக 148கி.மீ வேகத்தில் பந்துவீசும் பர்கர், பெரும்பாலான பந்துகளை துல்லியமாக, லைன் லென்த்தில் கட்டுக்கோப்பாக வீசுவது ராஜஸ்தான்அணிக்க பெரிய பலம்.   பட மூலாதாரம்,GETTY IMAGES வாய்ப்புகளை தவறவிட்ட டெல்லி அணி டெல்லி அணி பந்துவீச்சிலும்சரி, பேட்டிங்கிலும் சரி கிடைத்த வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்தி இருந்தால் வெற்றி கிடைத்திருக்கும். பந்துவீச்சில் தொடக்கத்திலேயே ராஜஸ்தான் பேட்டர்கள் ஜெய்ஸ்வால்(5), பட்லர்(11), சாம்ஸன்(15) என 3 முக்கிய பேட்டர்களையும் முகேஷ் குமார், குல்தீப், கலீல் அகமது வீழ்த்திக் கொடுத்தனர். இந்த நெருக்கடியை தொடர்ந்து ஏற்படுத்தி தக்கவைத்திருந்தால், ராஜஸ்தான் அணி ஸ்கோர் 120 ரன்களை கடந்திருக்காது. 14 ஓவர்கள் வரை ராஜஸ்தான் அணி 100 ரன்களைக் கூட கடக்கவில்லை. ஆனால், கடைசி 5 ஓவர்களில் அதிலும் டெத் ஓவர்ளில் டெல்லி பந்துவீச்சு மோசமானதை, பராக் பயன்படுத்தி வெளுத்து வாங்கினார். கலீல் அகமது, அக்ஸர் படேல் தவிர எந்தப் பந்துவீச்சாளரும் வாய்ப்பைப் பயன்படுத்தவில்லை. அதேபோல பேட்டிங்கிலும், பவர்ப்ளேயில் 59 ரன்களும், 12 ஓவர்களில் 100 ரன்களை எட்டி டெல்லி அணி வெற்றி நோக்கி சீராக சென்றது. ஆனால், ஒரு கட்டத்தில் ரிஷப் பந்த், போரெல், வார்னர் ஆகியோர் 25 ரன்களுக்குள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தது டெல்லிக்கு பின்னடைவாக மாறியது. கடைசி 5 ஓவர்களில் 60 ரன்களை எட்டுவதற்கும் ஸ்டெப்ஸ் கடுமையாக முயன்று வெற்றிக்கு அருகே கொண்டு சென்றார். ஸ்டெப்ஸுடன் நல்ல பவர் ஹிட்டர் பேட்டர் இருந்தால் ஆட்டம் திசைமாறியிருக்கும். டெல்லி அணியில் வார்னர்(49), ஸ்டெப்ஸ்(44) தவிர எந்த பேட்டரும் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. https://www.bbc.com/tamil/articles/clm7pvlmprko
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.