Jump to content

தாயகம் தொடர்பான நூல்கள் அறிமுகம்


Recommended Posts

அம்மாவின் ரகசியம்

book_ammavinrakasiyam57.jpg - 12.04 Kb

வாசிக்கவென எடுத்துவைத்த நூல்களில் இன்று அதிகாலை என் கையில் அகப்பட்ட நூல் ‘அம்மாவின் ரகசியம்’. சுநேத்ரா ராஜகருணநாயகவின் இச் சிங்கள மொழியிலான படைப்பை தமிழில் தந்திருப்பவர் எம்.ரிஷான் ஷெரீப். வாசிப்பை இடறல் செய்யாத மொழிபெயர்ப்பு. எம்.ரிஷான் ஷெரீப்பை இதற்காக பாராட்டலாம்.

சிங்கள மொழியிலான ஆக்கங்களின் பரிச்சயம் ஈழத் தமிழர்களுக்கு மிகமிகக் குறைவு. சிங்கள மக்களின் வாழ்க்கைகூட மேலோட்டமாகவே தெரிந்திருக்கிறது அவர்களுக்கு. வாழ்க்கை அழைக்கும் பக்கங்களுக்கெல்லாம் ஓடிக்கொண்டிருக்கும் தேவை மூன்றாம் உலகினைச் சேர்ந்த பெரும்பாலானவர்களின் விதியாகியிருக்கிற இன்றைய காலகட்டத்தில், தார்மீக நியாயங்களின் காரணமாய் தம் தேசத்து அரசியலை வெறுத்து பல படைப்பாளிகளும் தம் தேசத்திலேயே அடையும் துன்பங்களும், புலம்பெயர்ந்து எதிர்கொள்ளும் மனநோக்காடுகளும் பெரும்பாலும் கவனமற்றே இருக்கின்றன. இதை மிக வன்மையாக பிரக்ஞைப் படுத்தியிருக்கிறது இப் படைப்பு.

இவ்வாண்டு(2015) கான்ஸ் சர்வதேச திரப்பட விழாவில் திரையிடப்பட்ட ஒரு விவரணப் படத்தை எழுதி இயக்கிய சர்மினி பெலி என்கிற இலங்கைப் பெண் ஏப்ரல் மாத ‘தி சிறீலங்கா றிப்போர்ட்டர்’ பத்திரிகைக்கு கொடுத்துள்ள அறிமுகப் பேட்டி, இதுபோல் அறநெறிகளின் மீதாக தம் வாழ்க்கையை நிறுத்தியுள்ள பல்வேறு படைப்பாளிகள், விமர்சகர்கள், ஊடகவியலாளர்களின் மனநிலையின் ஒட்டுமொத்தமான வெளிப்பாடாக இருப்பதை காணமுடியும். அவர், முப்பதாண்டுகளுக்கு மேலாக தான் இலங்கையில் வசித்த காலத்தில் பல கொலைகளையே கண்கூடாகக் கண்டதாகவும், இலங்கை அரசாங்கத்தின் அவ்வகையான ஒவ்வொரு கொடுமை நிகழ்த்தலுக்கும் தானும் ஒருவகையில் காரணமென்பதை தான் உணர்ந்திருப்பதாகவும் அதில் கூறுகிறார்.

http://www.geotamil.com/pathivukalnew/index.php?option=com_content&view=section&layout=blog&id=15&Itemid=62

Link to comment
Share on other sites

nallur.jpg

மங்கை பதிப்பகம் (கனடா) மற்றும் சிநேகா பதிப்பகம் (தமிழகம்) இணைந்து வெளியிட்ட நல்லூர் இராஜதானி நகர அமைப்பு (முதற் பதிப்பு: டிசம்பர் 1996) தற்போது மின்னூலாக .pdf கோப்பாக விற்பனைக்கு இங்கு கிடைக்கிறது. ஈழத்துத் தமிழ் மன்னர்களின் புகழ்பெற்ற இராஜதானிகளில் ஒன்றாக விளங்கிய நகர் நல்லூர். ஈழத்துத் தமிழ் மன்னர்கள் பற்றிய வரலாற்று நூல்கள் பல கிடைக்கின்றன. ஆனால், தமிழ் அரசர்களின் இராஜதானிகளாக விளங்கிய நகரங்களின் நகர அமைப்பு பற்றி நூல்களெதுவும் இதுவரையில் வெளி வரவில்லை. அந்த வகையில் இந்நூல் ஒரு முதல் நூல். கிடைக்கப் பெற்ற வரலாற்றுத் தகவல்கள், கள ஆய்வுத் தகவல்கள் மற்றும் திராவிடக் கட்டடக்கலை / நகர அமைப்புத் தகவல்கள், ஆய்வுகளின் அடிப்படையில் நல்லூர் இராஜதானியின் நகர அமைப்பு பற்றி ஆராயும் ஆய்வு நூல். எழுத்தாளர் செ. யோகநாதன் முன்னுரையில் குறிப்பிட்டதுபோல் பின்னாளில் இத்துறையில் ஆராய விளையும் எவருக்குமொரு முதனூலாக விளங்கும் நூலிது. இந்நூலின் திருத்திய இரண்டாவது பதிப்பு இன்னும் நூலாக வெளிவரவில்லை. ஆனால், இணைய இதழ்களான பதிவுகள், திண்ணை ஆகியவற்றில் தொடராக வெளிவந்துள்ளது. விரைவில் அதன் மின்னூல் பதிப்பினையும் இங்கு வாங்கலாம். நல்லார் இராஜதானி நகர அமைப்பு நூலின் முதற்பதிப்பினை $ 3 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும்.  அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம்.   வாங்க விரும்பினால்

இங்கு 

 http://www.geotamil.com/pathivukalnew/index.php?option=com_dms&task=view_document&category_id=2&id=2&Itemid=17

வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்'!

vng_kudivaravalan599.jpg

நீண்ட நாள்களாக வெளிவருவதாகவிருந்த எனது 'குடிவரவாளன்' நாவல் டிசம்பர் முதல் வாரத்தில், தமிழகத்தில் 'ஓவியா' பதிப்பகம் மூலமாக வெளிவரவுள்ளது. இந்நாவல் நான் ஏற்கனவே எழுதி தமிழகத்தில் வெளியான 'அமெரிக்கா' சிறுநாவலின் தொடர்ச்சி. 'பதிவுகள்', 'திண்ணை' ஆகிய இணைய இதழ்களில் ஆரம்பத்தில் 'அமெரிக்கா 2' என்னும் பெயரில் வெளியாகிப்பின்னர் 'குடிவரவாளன்' என்னும் பெயர் மாற்றம் பெற்ற படைப்பு.

இலங்கைத்தமிழ் அகதி ஒருவரின் நியூயார்க் தடுப்பு முகாம் வாழ்வினை 'அமெரிக்கா' விபரித்தால், இந்நாவல் நியூயோர்க் மாநகரில் சட்டவிரோதக் குடிகளிலொருவனாக சுமார் ஒரு வருட காலம் அலைந்து திரிந்த இலங்கைத்தமிழ் அகதியொருவனின் அனுபவங்களை விபரிக்கும்.

'ஓவியா' பதிப்பக வெளியீடாகத் தமிழகத்தில் டிஸம்பர் முதல் வாரத்தில் விற்பனைக்கு வெளிவரவுள்ளது.

Oviya Pathippagam
17-16-5A, K.K.Nagar,
Batlagundua - 642 202
Tamil Nadu, India

Phone: 04543 - 26 26 86
Cell: 766 755 711 4, 96 2 96 52 6 52
email: oviyapathippagam@gmail.com | vathilaipraba@gmail.com

Link to comment
Share on other sites

5 hours ago, Athavan CH said:

வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்'!

இணைப்பிற்கு நன்றி ஆதவன்.

குடிவரவாளன் நாவல் வாசிக்க வேண்டும் போலுள்ளது. pdfஇல் இப் புத்தகத்தை வாங்க முடியுமானால் இணைப்பைத் தரமுடியுமா?

Link to comment
Share on other sites

pathivukal .com 

இது கிரியின் இணைய தளம் .அதில் போய்ப்பார்க்கவும் ஜீவன் .

Link to comment
Share on other sites

நூல் அறிமுகம்: பல்வேறு பயன் தரும் பனைமரம் (MAN’S TROPICAL BOON-THE PALMYRA PALM)

நூல் அறிமுகம்: பல்வேறு பயன் தரும் பனைமரம்  (MAN’S TROPICAL BOON-THE PALMYRA PALM)

நுணாவிலூர் கா. விசயரத்தினம் (இலண்டன்)

இலக்கிய  ஆய்வு  நூலுக்கான  'எழுத்தாளர் ஊக்குவிப்பு மையம்'  வழங்கிய  'தமிழியல் விருது-2011' என்ற பரிசைப் பெற்ற, செந்தமிழ் செழிக்கும் யாழ் மண்ணில் நுணாவிலூர் எனும் பூங்காவில் மலர்ந்தெழுந்த நுணாவிலூர் கா. விசயரத்தினம் அவர்களால்  எழுதப்பட்ட 'பல்வேறு பயன் தரும் பனைமரம்' என்ற ஆய்வு நூலொன்று அண்மையில் வெளிவந்துள்ளது. இந்நூலில், பல்வேறு பயன் தரும் பனைமரம், சங்க இலக்கியங்களில் பவனி வரும் விலங்குகளும் பறந்து பறந்து கீதம் பாடும் பறவைகளும், புகழ் நாடாது ஊதியம் பெறாது தீந்தேன் தரும் தேனீக்கள், மண்ணின் மாண்பும் மரத்தின் மாட்சியும், ஐந்திணைகளில் அமைந்த பதினான்கு வகையான வேறுபட்ட கருப்பொருள்கள், தேசத்துக்குப் பொருத்தமான தொழில்நுட்ப முறைகள், தொல்காப்பியம்- அகநானூறு- சிலப்பதிகாரம் காட்டும் கரணவியல், ஆண் பெண் பேதம் பேசும் தமிழ் இலக்கியப் பாங்கு, உலகரங்கில் நேர்மையும் தலைமையும், கலப்புத் திருமணம், இயமராசன் தமிழனுக்கு அளித்த வரம், ஐக்கிய நாடுகள் அமைப்பு, உலக நெறியான மனித நேயம், குடும்பமும் ஒற்றுமையும், கல்வியின் வருங்காலம், பூவுலகைப் படித்தல், சொர்க்கம் தரும் சுகம், இலக்கியம் சார்ந்த போட்டிகள், மனிதநேயத் தொடர்புகள், சொர்க்கம்! நரகம்! மறுபிறப்பு! கற்பனையா? நிசமா?, உலக சமாதானம் பேசும் இலக்கியங்கள், மகப்பேற்றிலும் மகத்தான உலக சாதனை படைக்கும் பெண்கள், மனித உரிமைகள் அன்றும் இன்றும், சனப்பெருக்கம் உலகிற்கோர் ஏற்றம் ஆகியவை பற்றி அலசப்பட்டுப் பேசப்பட்டுள்ளன. இவை இலக்கியம், இதிகாசம், உலகரங்கு, வாழ்வியல், மனிதநேயம், விலங்கியல், வானியல், பொருளாதாரம், தாவரவியல் ஆகிய பொருட்பிரிவுகளின் அடக்கமாகும்.

மனிதனுக்குமுன் தோன்றிய பனைமரம், அதன் கதை, காணப்படும் நாடுகள், தோற்றுவாய், கிளைப்பனை, பனை பற்றிப் பேசும் இலக்கியங்கள், பனையின் சிறப்பு, பனை தரும் உணவுப்பொருட்கள் - பதநீர், நுங்கு, பனம்பழம், ஒடியல், பனங்கிழங்கு, பூரான், புழுக்கொடியல், பனஞ்சோறு, ஒடியற்பிட்டு, பனை தரும் உணவிலிப் பொருட்கள் - பனைஓலை, காவோலை, மனைமட்டை, பனை ஈர்க்கு, கங்குமட்டை, பன்னாடை, பணிவில், உலகில் சுமார் 14 கோடி பனைமரங்கள் வளர்ந்து கொண்டிருக்கும் செய்திகள் போன்ற பல விடயங்கள் கூறப்படுகின்றன.

சங்க நூல்களில் இலக்கியம், அறிவியல், வாழ்வியல், இயற்கை வளம், உயிரியல், அறவியல் போன்றவை நிரம்பி  வழிதலைக் காண்கின்றோம்.  இவையின்றி அவை  உயிர் பெறாதெனலாம். மண்ணைப் பார்த்து விலங்குகள் பவனி வருவதையும், விண்ணைப் பார்த்துப் பறவைகள் பறந்து கீதம் பாடுவதையும் கண்ணுற்று அளவிலா ஆனந்தமடைகிறோம். சங்க இலக்கியங்களான தொல்காப்பியம், அகநானூறு, புறநானூறு, கலித்தொகை, ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து, பரிபாடல், சிலப்பதிகாரம் ஆகிய நூல்களில் பல்வேறுபட்ட விலங்கினங்களும், பறவையினங்களும் பேசப்பட்டுள்ள பாங்கினையும் காணலாம்.

ஒரு தேன் கூட்டில் ஓர் இராணித் தேனீ, பல ஆயிரம் ஆண் தேனீக்கள், பல்லாயிரம் பெண் உழைப்பாளித் தேனீக்கள் ஆகிய மூவகைத் தேனீக்கள் ஒற்றுமையாக வாழ்கின்றன. ஒரு சாதாரணத் தேன் கூட்டில் இருபதாயிரம் (20,000) முதல் முப்பதாயிரம்; (30,000) வரையான தேனீக்கள் உள்ளன.

மண், மரங்களுக்கு முன்பும், மரங்கள் மனிதனுக்கு முன்பும் தோன்றியவை. மண்ணின்றி மரங்களில்லை. மரங்களின்றி மனித வாழ்வு நிறைவில்லை. மண், மரங்கள், மனிதன் ஆகிய மூன்றும் ஒன்றுடனொன்று இறுகிய தொடர்பிலுள்ளன. இவையின்றி உலகமுமில்லையெனலாம். நிலம் பற்றியும், மண் பற்றியும், மரங்கள் பற்றியும் சங்க இலக்கியங்களில் நிறையப் பேசப்பட்டுள்ளதையும் காண்கின்றோம். மரங்கள் முப்பத்தெட்டுக்கோடி (38,00,00,000) ஆண்டுகளுக்குமுன் தோன்றியவை.

கரணவியல் (சடங்கு முறைகள்) பற்றித் தொல்காப்பியம், அகநானூறு, சிலப்பதிகாரம் ஆகிய சங்க நூல்கள் காட்டும் வேறுபட்ட சடங்கு முறைகளையும் காண்கின்றோம். தொல்காப்பியர் காலத்திலும், அகநானூற்றுக் காலத்திலும் பார்ப்பான் மணவிழாவிற் பங்கேற்கவில்லை. ஆனால், சிலப்பதிகாரத்தில் முதன்முதலாகப் பார்ப்பான் பங்கேற்று, தம்பதியினர் தீவலம் வந்து, மணவிழா நிறைவு பெற்றுள்ளது.

தொல்காப்பியம், குறுந்தொகை, புறநானூறு, திருக்குறள், திருமந்திரம், மனுநீதி நூல், நீதிநெறி நூல்கள், பழமொழிகள், திருவாசகம், பாரதியார் கவிதைகள், கண்ணதாசன் பாடல்கள் ஆகிய நூல்களில் ஆண், பெண் ஏற்றத் தாழ்வுகள் தரப்பட்டுள்ளன. 

திருமணங்களிற் பல நடைமுறைகள் உள்ளன. அவற்றில் கலப்புத் திருமணம் ஒன்றாகும். அது பற்றி  இவை  ஒரு சிலவாகும்:- (1)  இணைப்புறவுக்  கலப்பு  மணம், (2) ntt;வேறு இனங்களுக்கிடையே நிகழும் திருமணம், (3) நாடுகடந்து சென்று அங்குள்ள ஆண், பெண்ணை மணம் புரிதல், (4) இனக் கலப்புத் திருமணம், (5) கணவன் மனைவி போன்று பிறரோடு இணைந்து வாழ்தல் ஆகியனவாம். கலப்புத் திருமணத்திலும் நன்மைகளும், தீமைகளும் உள. ஆனால் நீண்ட வாழ்நாளில் கலப்புத் திருமணத்தால் தீமைகளை விட அதிக நன்மைகளே கிட்டும் எனலாம்.

'குடும்பமும் ஒற்றுமையும;’ என்ற ஆக்கத்தில்- குடும்பம் என்பது கணவன், மனைவி, குழந்தைகள், உறவினர் எல்லாரும் ஒன்றுகூடி வாழும் ஒரு சமூக அமைப்பு. இதுவே இல்லற வாழ்க்கையுமாகும். அது அன்று நிலைத்திருந்தது. இன்று அது சிதைந்து, 'தனிக் குடித்தனம்' ஆகிவிட்டது. சங்ககால அறிவுரைகள், நம் முன்னோர் வாழ்ந்து விட்டுச் சென்ற வாழ்வியல் முறைகள், எச்சங்கள், பிறர் அனுபவங்கள் யாவும் எம்மை ஆற்றுப்படுத்தி நிற்க, குடும்பமும் ஒற்றுமையும் சீர்பெறும் என்பது திண்ணம்.

டாக்டர் சிவ தியாகராஜா அவர்களின் அணிந்துரையும், செல்வன். பிரவின் யெயராசா அவர்களின் அட்டைப்பட ஓவியமும் இந்நூலை மேலும் அலங்கரித்து நிற்கின்றன.

இந் நூலைப் பெற விரும்புவோர் தொடர்பு கொள்ள வேண்டிய விலாசம்:-

 K. Wijeyaratnam,
35,  Southborough  Road,
Bickley, Bromley,  Kent.  
BR1  2EA

Total pages:-   212
Publishers:-  Wijey Publication
Telephone No.  020  3489  6569
E-mail :-  wijey@talktalk.net 
Price per copy:- £3.99 + postage  charges.

http://www.geotamil.com/pathivukalnew/index.php?option=com_content&view=article&id=2298:-mans-tropical-boon-the-palmyra-palm&catid=14:2011-03-03-17-27-43&Itemid=62

Link to comment
Share on other sites

அர்ப்பண வாழ்வின் வலி சுமந்த மனிதன்: சொ.டேவிட் ஐயா!

அர்ப்பண வாழ்வின் வலி சுமந்த மனிதன்: சொ.டேவிட் ஐயா!

சமூகம் இயல் பதிப்பகம்' வெளியீடாக வெளிவந்திருக்கிறது 'அர்ப்பண வாழ்வின் வலி சுமந்த மனிதன்' என்னும் காந்தியம் அமைப்பின் ஸ்தாபகரானடேவிட் ஐயா அவர்கள் பற்றிய இச்சிறு நூல். பதிப்பாளர் எம்.பெளசர் 'இந்தத்தொகுப்புப் பிரதி, காந்தியம் தொடர்பான , டேவிட் ஐயா தொடர்பான ஒரு வரன்முறையான ஆய்வுப் பிரதியன்று. காந்தியம் தொடர்பாகவும், டேவிட் ஐயா தொடர்பாகவும் எழுதப்பட வேண்டி உள்ள விரிவான ஆய்வு முயற்சிகளுக்கான தொடக்கப்புள்ளியை அழுத்தி வலியுறுத்துவதே இத்தொகுப்பின் நோக்கமாகும்' நூல் பற்றிய பதிப்பாளர் குறிப்பில் கூறியிருக்கின்றார். நூலின் உள்ளடக்கம் பதிப்பாளரின் நோக்கத்தை நிறைவேற்றியிருக்கின்றதென்று நிச்சயமாக அடித்துக்கூறலாம்.

எட்டு கட்டுரைகளையும், கவிதையொன்றினையும் உள்ளடக்கியுள்ள இச்சிறு நூலின் கட்டுரைகளை எழுதியோர் விபரங்கள் வருமாறு: மு.பாக்கியநாதன் ('டேவிட் ஐயா மற்றும் காந்தியத்துடனான அனுபவப்பதிவு'), ஜென்னி ஜெயச்சந்திரன் ('காந்தியத்தில் எனது நினைவுப்பதிவு (1979-1983), பீ.ஏ.காதர் ('மனித நேயன் டேவிட் ஐயா! நினைவுகளும் பதிவுகளும்'), பீமன் ('டேவிட் ஐயாவின் பக்கங்களில் ஒன்று.', வ.ந.கிரிதரன் ('நாவலர் பண்ணை பற்றிய நினைவுகள்'), விஜயகுமாரன் (கவிதை:'தொண்ணூறு வயதுப்பயங்கரவாதியே! போய் வாரும் அய்யா!'), நிலாந்தன் ('டேவிட் ஐயா: அவருடைய வாழ்க்கையே அவருடைய செய்தியா? '), இ.பூபாலசிங்கம் ('நினைவு மீட்டல்'), மற்றும் 'காந்தளகம்' சச்சிதானந்தனின் ஆங்கிலக்கட்டுரை (David envisaged human emancipation through Tamil struggle')

காந்தியம் அமைப்பு பற்றி, அதன் ஸ்தாபகர் டேவிட் ஐயா பற்றி, மருத்துவர் ராஜசுந்தரம் பற்றி, காந்தியத்தின் நோக்கம், வேலைத்திட்டங்கள் பற்றி  எனக்காந்தியம் அமைப்பு பற்றிய பன்முகப்பார்வையினை இந்நூலின் கட்டுரைகள் வழங்குகின்றன. 

பதிப்பகம் பற்றிய விபரங்கள்:
Art of Socio Publication (சமூகம் இயல் பதிப்பகம்)
166 Plum Lane, london , SE18 3HF, UK

http://www.geotamil.com/pathivukalnew/index.php?option=com_conte

Link to comment
Share on other sites

மலையகமும் தமிழர்களும்!

மலையகமும் தமிழர்களும்!

– சித்தார்த்தன் சுந்தரம் இலங்கைத் தமிழர்களின் இன்னல்கள் காலங்காலமாகத் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன. இந்தியாவிலிருந்து இலங்கைக்குத் தொழில் நிமித்தம் புலம் பெயர்ந்தத் தொழிலாளிகளைக் ‘கூலிகள்’ என்றும் அவர்களது மொழி `கூலித்தமிழ்’ என்றும் அழைக்கப்பட்டு வந்ததாக `கூலித்தமிழ்’ என்கிற இந்நூலின் ஆசிரியர் மு. நித்தியானந்தன் தனது முன்னுரையில் குறிப்பிட்டிருக்கிறார். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பேசப்பட்டு வரும் வட்டாரத் தமிழ் பற்றி நாம் அறிந்திருந்தாலும் இந்தக் கூலித்தமிழ் பற்றி அறிந்திருப்பதற்கான வாய்ப்புகள் குறைவுதான். பத்தொன்பதாம் நூற்றாண்டில் தமிழகத்தின் பல பகுதிகளிலிருந்து…

Read the rest of this entry -  http://puthagampesuthu.com/2015/08/12/%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%95%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/

 

Link to comment
Share on other sites

புரிந்துகொள்ளுங்கள் நாங்கள் சிறுவர்கள்

siru_2_2621238a.jpg  

மேலும் விபரங்களுக்கு

http://www.yarl.com/forum3/topic/166800-%E0%AE%AA%E0%AF%81%

 

Link to comment
Share on other sites

  • 3 months later...

கனடா: 'அர்ப்பண வாழ்வின் வலி சுமந்த மனிதன் - சொ. அ. டேவிட் ஐயா' நூல் விற்பனைக்கு!

'அர்ப்பண வாழ்வின் வலி சுமந்த மனிதன் - சொ. அ. டேவிட் ஐயா' நூல் விற்பனைக்கு!

'அர்ப்பண வாழ்வின் வலி சுமந்த மனிதன் - சொ. அ. டேவிட் ஐயா என்னும் டேவிட் ஐயா பற்றிய அறிமுக நூலின் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான பிரதிகள் திரு. அலெக்ஸ் வர்மா அவர்களிடமுள்ளன. நூலின் விலை $10 (கனடியன்). நூலினை வாங்க விரும்புவோர் தொடர்பு கொள்ள வேண்டிய விபரங்கள் வருமாறு:

அலெக்ஸ் வர்மா:
தொலைபேசி எண்: 416 857 9773
மின்னஞ்சல்: alex.eravi@gmail.com

அலெக்ஸ் வர்மாவுடன் (Alex Varma) முகநூலில் நட்பு பேணுவோர் அவரது உட்பெட்டி வாயிலாகவும் அவருடன் தொடர்பு கொள்ளலாம்.

நூலில் இடம் பெற்றுள்ள கட்டுரைகள் பற்றிய விபரங்கள் வருமாறு:

*டேவிட் ஐயா மற்றும் காந்தீயத்துடனான அனுபவப் பகிர்வு - மு. பாக்கியநாதன்
*காந்தீயத்தில் எனது நினைவுப் பதிவு (1979-1983) -ஜென்னி ஜெயச்சந்திரன்
*மனித நேயன் டேவிட் ஐயா! நினைவுகளும் பதிவுகளும் - பீ. ஏ. காதர்
*டேவிட் ஐயாவின் பக்கங்களில் ஒன்று -பீமன்
*நாவலர் பண்ணை பற்றிய நினைவுகள்! - வ. ந கிரிதரன்
*டேவிட் ஐயா: அவருடைய வாழ்க்கையே அவரின் செய்தியா? - நிலாந்தன்
*நினைவு மீட்டல் - இ. பூபாலசிங்கம்
*David Envisaged Human Emancipation Through Tamil Struggle - K. Sachithananthan

தகவல்: அலெக்ஸ் வர்மா

http://www.geotamil.com/pathivukalnew/index.php?option=com_content&view=article&id=3159:2016-02-08-02-03-05&catid=15:2011-03-03-19-55-48&Itemid=29

Link to comment
Share on other sites

ராஜாஜி ராஜகோபாலனின் முதல் சிறுகதை நூல் குதிரை இல்லாத ராஜகுமாரன்

Barack Obama

தெளிவத்தை ஜோசப்  

30 வருடங்களுக்கு மேலாக கனடாவில் வசிக்கும் ராஜகோபாலன் பேராசிரியர் சிவத்தம்பியின் ஊர்க்காரர். கரவெட்டி மண்ணின் மைந்தன். கனடா வாசியானாலும் தனது ஊர்ப்பற்று பற்றி அவரே இப்படிக் கூறுகின்றார். நேற்றைய தலைமுறையைச் சேர்ந்த நான் பல காலம் ஊரில் வாழ்ந்தவன் என்று சொல்வதிலும் பார்க்க ஊரோடு வாழ்ந்தவன் என்று சொல்வதில் தான் பெருமை கொள்கின்றேன். நான் நேசிக்கும் இந்த மண்ணின் மக்களுடைய அன்றைய கால வாழ்வின் ஒவ்வொரு அங்கங்களிலும் அவர்களுடன் கூடப் பயணித்திருக்கின்றேன். பிறந்து வளர்ந்து படித்த நாட்டை விட்டேகிய பிறகும் இந்த மக்களுடன் என் மனம் இன்றும் இறுக ஒன்றிப்போயிருப்பதற்கு இந்த ஊர் மண்ணின் வாசனைதான் காரணம் என்பேன். (இந்தத் தொகுதியின் என்னுரை)

இவர் எழுபதுகளில் எழுத்துலகப் பிரவேசம் செய்தவர் என்பதும் வீரகேசரி, தினகரன், அலை, மல்லிகை போன்ற ஏடுகளில் இவருடைய கதைகள் வெளிவந்தன என்பதும் குப்பிளான் ஐ.சண்முகனின் முன்னுரை மூலம் தெரிய வருகின்றன. இத்தொகுதியின் கதைகள் எதிலும் அந்தக் கதை வெளிவந்த ஆண்டோ கதை வெளிவந்த பத்திரிகை பற்றிய தகவலோ இடம்பெறவில்லை. தன்னூர்க்காரரும் நண்பருமான குப்பிளான் சண்முகத்திடமே விடாப்பிடியாக நின்று முன்னுரை பெற்றுக் கொண்டதாகவும் குறிக்கின்றார்.

ராஜாஜி ராஜகோபாலன். ஏறத்தாழ அரை நூற்றாண்டு காலத்துக்கு முன்னரேயே என்னோடு அறிமுகமானவர். இருவரும் ஒரே நிறுவனத்தில் ஒரே கிளையிலேயே பல ஆண்டுகளாக இணைந்து பணி புரிந்தோம் என்று தனதுரையை ஆரம்பிக்கின்றார் குப்பிளான் சண்முகன். ராஜகோபாலனது கவிதை நூல் ஒரு வழிப்போக்கனின் வாக்கு மூலம் 2014 இல் வெளி வந்துள்ளதாகவும் முன்னுரையில் குறிக்கின்றார் இவர்.

இந்த நூலை நாகர்கோவில் சுதர்சன் புக்ஸ் வெளியிட்டுள்ளது. காலச்சுவடு பதிப்பகத்தின் இன்னொரு இணைப்பதிப்பகமே சுதர்சன் புக்ஸ் என்பது நூலாசிரியரின் உரை மூலம் தெரிய வருகின்றது. 15 சிறுகதைகள் கொண்ட இத்தொகுதி ஈழத்துச்சிறுகதைத்துறைக்கும் தமிழ்ச்சிறுகதைத்துறைக்கும் ஒரு நல்ல படைப்பாளியை அடையாளம் காட்டி நிற்கிறது என்பதை தயக்கமின்றி கூறலாம். ராஜாஜி கோபாலனது இயற்கையான எழுத்தின் வளம் பாத்திரங்களின் ஊடாக அதை அழகுற வடிவமைத்துக் கொள்ளும் நுட்பம் போன்ற பல அம்சங்கள் இந்த அடையாளப்படுத்தலை அதற்கான தகுதியை உறுதி செய்கின்றன.

தன்னுடைய கதை மாந்தர்கள் பற்றி அவர் குறிப்பிடுவதை சற்றே கவனிப்போம். ஒவ்வொரு கதையிலும் வரும் மாந்தர்கள் குணங்களும் குற்றங்களும் உள்ளவர்கள். ஏனெனில் அவர்கள் எனது காலத்தில் என்னோடு வாழ்ந்த என்னைப்போன்ற சாதாரண மனிதர்கள். அவர்கள் தம் வாழ்வில் வெளிப்படுத்திய காதல், நட்பு, தியாகம் போன்ற உணர்வுகளை அடுக்கியே இக்கதைகளைக்கட்டி எழுப்பியிருக்கின்றேன். இக்கட்டுமானத்தில் காதலையும் காமத்தையும் அளவுக்கதிகமாக அள்ளி மெழுகி இடுகின்றேன் என்ற வாதங்கள் எழவும் கூடும். மனித வரலாறு காதலையும் காமத்தையும் பற்றித்தானே பெரும்பாலும் பேசுகிறது. இவை இரண்டும் இல்லாமல் மனித வாழ்க்கை எவ்வாறு ஆரம்பிக்கும் என்று கேட்கிறேன். இக்கதைகளில் வரும் மனிதர்களோடு நான் கைகோர்த்து உலாவியதைப் போலவே நீங்களும் உலாவ வேண்டும் என்றும் உணர வேண்டுமென்றும் விரும்பினேனேயன்றி என் எழுத்தால் உங்கள் மனதில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்த வேண்டுமென்றோ சமுதாயத்துக்கு ஏதேனும் படிப்பினையைப் புகட்ட வேண்டுமென்றோ அவர்களை உங்களுடன் நான் பேசவைக்க விரும்பவில்லை. மாறாக நான் அந்த மண்ணில் ஒருக்கால் வாழ்ந்து அனுபவித்த சூழலையும் இன்று நீங்கள் அங்கே இன்னும் ஒரு முறையாவது வாழக்கிடைக்க வேண்டுமென அவாவுறும் சூழலையும் எமக்கு உவப்பான மொழியில் உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்பினேன் என்கின்றார்.

இந்தக்கூற்றும் கூட படைப்பு இலக்கியத்துக்கான அவருடைய முக்கியத்துவத்தை இனம் காட்டுவதாகவே அமைகின்றது. இந்தப் 15 கதைகளில் 14 கதைகள் யாழ்ப்பாணத்தமிழ் மக்களின் வாழ்வியலைக் குறிப்பவை.

தலைப்புக்கதையான குதிரை இல்லாத ராஜகுமாரன் என்ற கதையானது அதில் வரும் விஜயா என்ற யாழ்தேவி ரயில் பெண் தன்னுடைய 32 வயதிலும் இன்னும் தன்னை பெண் பார்க்க வந்து போய்க் கொண்டிருப்பவர்களைப் பற்றிய நினைவலைகளில் மூழ்கி நிலை குலைவதை அழகாகக் காட்டுகிறது. கொழும்பு கோட்டையில் ரயில் ஏறி யாழ்ப்பாணத்தில் இறங்குகையில் கதையும் முடிகிறது.

வாசிப்பவனை அலுப்படையச் செய்யாமல் கதையுடன் கூட்டிச்செல்லும் இலாவகமான எழுத்து வன்மை கொண்டவர் இக்கதாசிரியர்.

முதல் கதையாகிய மேலும் சில கேள்விகளில் வரும் பவானி மகள் ஸ்ருதி கறுத்தக்கொழும்பானில் வரும் சண்டைக்கார சரசுவதி என்று அனைவருமே யாழ்ப்பாண மண்ணின் சாதாரண மனிதர்கள்தான்.

குப்பிளான் ஐ.சண்முகன் இந்தத்தொகுப்பில் உள்ள கதைகளில் எனக்குப் பிடித்தமான கதைகள் இரண்டு என்கின்றார். ஒன்று ஆத்மார்த்தமான தத்துவத் தேடல்களைக் கொண்ட அலையில் வெளிவந்த விழிப்பு மற்றது புதிய வாழ்வியல் சூழல் பற்றியதான அந்த ஒருவனைத்தேடி என்ற இரண்டும். அந்த ஒருவனைத்தேடி கதையின் களம் யாழ்ப்பாணம் அல்ல அமெரிக்கா என்றாலும் பாத்திரங்கள் யாழ்ப்பாணத்தவர்கள்தான்.

நீண்ட நெடுங்காலமாக மகளுக்கு மாப்பிள்ளை தேடும் கனடாத் தம்பதியினரின் கதை. 30 வருடங்களுக்கு மேலாக கனடாவில் வாழும் ராஜகோபாலன் அங்குள்ள தமிழர் வாழ்வியலை வைத்து எழுதியுள்ள ஒரே கதை இது என்கிறார் குப்பிளான்.

பெண்ணின் தகப்பனார் வரப்போகும் புதிய மாப்பிள்ளையின் குடும்பம் பற்றி பெருமையடிப்பதை கதாசிரியர் இப்படி எழுதுகின்றார். இவையள் எங்கடை ஊர் ஆக்கள். முப்பது நாப்பது வருசத்துக்கு முந்தியே கனடாவுக்கு வந்திட்டினமாம். வந்த காலத்திலயிருந்தே வான் கூவரில் தான் இருக்கினமாம். டொராண்டோ சனங்களைப் போல் முட்டையிலை மயிர் புடுங்குற ஆக்கள் இல்லையெண்டு அறிஞ்சவன் நான்.

யாழ்ப்பாண மக்களின் வாழ்வியல் கோலங்களை அலாதியான வர்ணனைகளுடனும் நுட்பமான அவதானிப்புடனும் தனக்கேயுரிய தமிழ் நடையிலும் எள்ளலும் காதலும் கனிவும் ததும்பும் சொற்சித்திரங்களுடனும் கதை மாந்தர்களின் உரையாடல்களில் இயல்பாகவே இடம்பெறும் பிரதேசப் பேச்சு வழக்கில் வாசகர் மனம் கட்டுண்டு வாசிப்புச் சுகத்தை முழுமையாக நுகரும்படி நுட்பமாகக் கதையை நகர்த்திச் செல்லும் உத்தியில் ராஜாஜி கவர்ச்சியான தனது திறமையை வெளிப்படுத்தி இருக்கின்றார். என்னும் பதிப்புரைக் கூற்று முற்றிலும் உண்மை வெறும் புகழ்ச்சியல்ல என்பதை இவரை வாசிக்கும் அனைவரும் ஒத்துக்கொள்வார்கள்.

தேடி வாசிக்கப்பட வேண்டிய ஒரு நூல் இது.

நன்றி: வீரகேசரி ‘சங்கமம்’

 

http://www.nanilam.com/?p=7938

Link to comment
Share on other sites

books2_2789635f.jpg

இந்தியர்களின் விவசாய அறிவையும் உழைப்பையும் பயன்படுத்த நினைத்த ஆங்கிலேயர்கள் பல்வேறு நாடுகளுக்கு அவர்களைக் கொத்தடிமைகளாகக் கொண்டு சென்றனர். பஞ்சம் பிழைக்கச் செல்வதாக நினைத்துச் சென்ற மக்கள் அனுபவித்த துன்பங்கள் முடிவில்லாத தொடர்கதைகள். அவற்றில் இலங்கை மலையகத் தமிழர்களின் அனுபவங்களைப் பதிவு செய்துள்ளார் எழுத்தாளர் செ. கணேசலிங்கன். அவரது குடும்பத்தின் அனுபவங்களும் இதில் அடங்கும். 150 ஆண்டுகாலம் அடிமை வாழ்வில் அழுத்தப்பட்ட சமூகத்தின் நினைவுகளின் ஓவியம் இந்த நூல். -நீதி

இலங்கைத் தேயிலைத் தோட்ட அனுபவங்கள் 
செ.கணேசலிங்கன் விலை: ரூ. 60 
வெளியீடு: குமரன் பப்ளிஷர்ஸ் 
12/3, மெய்கை விநாயகர் தெரு, 
குமரன் காலனி 7வது தெரு, 
வடபழனி. சென்னை- 600 026.

http://tamil.thehindu.com/general/literature/%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%

Link to comment
Share on other sites

  • 8 months later...

யுத்த பூமி - Yutha Poomi

இலங்கையில் இனமோதல்கள் வெடித்த நிலைமையில் இலங்கையின் ஒருமைப்பாட்டைக் காக்கவும் அங்கு அமைதியை நிலைநாட்டவும் சென்ற இந்தியப்படை அங்குத் தமிழர்களுக்கு எதிராகச் செயல்பட்டது என்பதை மையமாக வைத்து எழுதப்பட்டுள்ள நாவல். 

Yutha Poomi - யுத்த பூமி

வகை : கதைகள் (Kathaigal - Tamil story)
எழுத்தாளர் : செங்கை. ஆழியான்
பதிப்பகம் : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
ISBN : 9788123409726
Pages : 130
பதிப்பு : 1
Published Year : 2006
விலை : ரூ.50

 

http://www.noolulagam.com/product/?pid=1760#details

Link to comment
Share on other sites

  • 9 months later...

நூல் அறிமுகம்: பெர்லின் நினைவுகள்

book_berlin_ninaaiavukal9.jpg

பொ கருணகரகரமூர்த்தியின் பெர்லின் நினைவுகள் மற்றைய புலம்பெயர்ந்த அனுபவங்கள்போல் சிதைந்து நாவல், சிறுகதை என உருமாறாது, கற்பனை கலக்காமல் அபுனைவாக தமிழ் இலக்கியப்பரப்பிற்கு வரவாகியுள்ளது.இதனால் இது நமது புலப்பெயர்ந்தோரது இலக்கியத்தில் முக்கியமான ஓரிடத்தைப் பிடித்துள்ளது. வாசிப்பதற்கான அவகாசத்தைத்தேடிப் பல காலங்களாக அடைகாத்து வைத்திருந்தேன். கடைசியில் அது கை கூடியது. நிச்சயமாக ஒரு டாக்சி ஓட்டுனராக அவர் முகம் கொடுத்த அனுபவங்கள் பலதரப்பட்டவை. டாக்சி ஓட்டுனராகப் பலரோடு பல தருணங்களில் ஏற்படும் சம்பவங்கள் மற்றவர்களுக்கு எக்காலத்திலும் ஏற்படாது. அதிலும் எத்தனை டாக்சி ஓட்டுனர்கள், அவர்போல் தனது அனுபவங்களை இலக்கியமாக்கும் மொழி தெரிந்தவர்கள்? அவரது மருத்துவராகும் எண்ணம் ஈடேறவில்லை என்பது உண்மை, ஆனால் அது தமிழ் இலக்கிய உலகத்திற்கு அதிஷ்டமாக அமைந்தது. மருத்துவரது நினைவுகள் அவர் இறந்தபின்போ அல்லது அவரது நோயாளிகள் இறந்தபின்போ மறைந்துவிடும். ஆனால் டாக்சி ஓட்டுனரான நண்பர் கருணாகரமூர்த்தியின் நினைவுகள் அழிவற்றவை. குறைந்தபட்சம் தமிழ்மொழியிருக்கும் வரையில் வாழும். இந்தப் புத்தகத்தில் இலங்கை நினைவுகளையும் பெர்லின் நினைவுடன் குழைத்து எழுதியது சுவையானது. அத்துடன் பல இலங்கையரது வாழ்வுகளை மற்றவர்களுடன் கலந்தது அவரது அகதித்தமிழ் வாழ்க்கையும் பதிவாக்கியுள்ளது.

இலங்கைத் தமிழர்கள் ஐரோப்பியநாடுகளுக்கு செல்லுவது எண்பத்து மூன்றுக்கு முன்பாகவே நடந்தது. ஓரளவு ஆங்கிலம் படித்தவர்கள் மேற்படிப்புக்காக மாணவர் விசா எடுத்துக்கொண்டு இங்கிலாந்து செல்வதும், மற்றவர்கள் ஜெர்மனி, பிரான்ஸ் எனச் செல்லத் தொடங்கியதற்கு 72 களில் உருவாகிய தரப்படுத்தலே முதலாவதாகவும், சீதனச் சந்தையில் சகோதரிகளின் வாழ்வு இரண்டாவதாகவும், உந்து சக்திகளாகின. ஆரம்பத்தில் விமான கட்டணத்திற்கு பணம் உள்ள பெற்றோர்கள், பிள்ளைகளை அனுப்பத்தொடங்கினார்கள். அதில் முக்கியமாக நான் பிறந்த தீவுப்பகுதியினரே முன்னணிப்படையினர். விவசாயம் செய்யாத தீவுப்பகுதியினர் அதுவரையிலும் இலங்கையின் தென்பகுதியில் புகையிலைக் கடை, உணவுக்கடைகளை நோக்கித் தொடங்கிய பிரயாணம் இன முறுகல்களால் தடைப்பட்டதும் ஐரோப்பா சென்றனர். அக்காலத்தில் ஏரோபுளட் என்ற சோவியத் விமானத்தில் ஏறி கிழக்கு பெர்னிலில் இறங்கிய பின், மேற்கு பெர்லினில் செல்வதற்கு அக்கால கிழக்கு- மேற்கு அரசியல் பனிப்போர் உதவியது. அப்படியாகச் சென்றவர்கள் போட்ட பாதையால் 83 பின்பு மற்றயவர்கள் நடந்தார்கள்.

 

பேராசிரியர் நுகுமான் தனது முகவுரையில்,இந்தப்புத்கத்தில் அரைவாசி ஜெர்மானியரின் பாலியல் நடத்தையைப்பற்றிப் பேசுகிறது என எழுதியது என்னைச் சிந்திக்க வைத்தது. மன்மதபாணங்கள் இதயத்தைத் துளைத்து, இரத்தத்தை வெப்பமாக்கும் இரவு என்பது காமத்திற்க்கான நேரம். இந்தக்காலத்தில் டாக்சியோடும்போது பாலியல் தேவைகளை விற்பவரும், வாங்குபவர்களும் வந்து போவார்கள். இது பெருநகரங்கள் எங்கும் நடக்கும். சென்னைகூட இதற்கு விதிவிலக்கால்ல. பெர்லின் நினைவுகள் 403 வது பக்கத்தை படித்து முடித்த பின்பு பேராசிரியர் நுகுமான் கூற்று உயர்வு நவிட்சியாக தெரிந்தது.

யாராவது தமிழர்கள் பெர்லினுக்கு செல்வதென்றால் அதற்கு முன்பாக படிக்கவேண்டியதாக இந்தப்புத்தகம் இருக்கிறது.அதற்கப்பால் ஐரோப்பாவில் சென்ற பலரது வாழ்க்கைகளில் நடந்த விடயங்கள் இங்கு சொல்லப்பட்டிருக்கிறது. அவுஸ்திரேலியா போன்ற  நாடுகளுக்க வந்த எமக்கு இப்படியான அனுபவங்கள் ஏற்படவில்லை. பிற்காலத்துத் தலைமுறையினர் இதன் மூலம் முந்தியவர்கள், வாழ்க்கையை நிலை நிறுத்தச் செய்த முயற்சிகள் மற்றும் தியாகங்களை அறிய உதவும் பதிவாகிறது.

யூதர்கள் அனுபவித்த கொடுமைகளையும் அதன் பின்பான தகவல்களும், அவைகள் நடந்த இடங்களை விவரிப்பதின் மூலம் அந்த விடயங்களை மீண்டும் நினைவுபடுத்த முடிகிறது. மானிடம் இப்படியான அவலங்களை மீண்டும் எதிர்கொள்ளாது இருப்பதற்காக ஒவ்வொரு தனிமனிதனுக்கும் இவை தெரியவேண்டும். பேர்லின் நகரத்தின் மக்களுக்கு அப்பால் அங்குள்ள பூங்காக்கள், நீர்நிலைகள், புல்வெளிகள், காடுகள், பறவைகள், மற்றும் மிருகங்கள் என ஒரு சூழலியல் விவரிப்பு என் போன்றவர்களுக்கு அங்கு செல்லும் அவாவைத் தூண்டுகிறது. படங்கள் கேக்கிற்கு மேல் வைத்த ஐசிங்காக அலங்கரிக்கிறது.

இந்தப்புத்கத்தில் உள்ள சில விடங்களைக் குறிப்பிடவேண்டும் முக்கியமாக எழுதிய மொழியின் தன்மை சரடாக இடறுகிறது. காவல்துறையின் சிறகம், அடுக்ககம், வெதுப்பகம், ஐஸ் திண்மம் மற்றும் அகவை எனத் தமிழ் பாவிக்கிறார். அதே நேரத்தில் 'சைட்பிட்டிங்', 'வின்டர்' என ஆங்கிலம் வருகிறது. அதே நேரத்தில் இவ்வளவு தூரம் தமிழேந்திபோல் வார்த்தைகளைப் பாவித்துவிட்டு ஜலக்கிரீடை என்றும் பாவிக்கிறார்.

எழுத்தாளர்களாகிய நாங்கள் எழுதியது மக்களிடம் செல்லும்போது அவர்கள் வாசிக்கவேண்டும் என்ற நோக்கத்திலே எழுதுகிறோம். பாவனையில் இல்லாத வார்த்தைகளோ, அதற்கப்பால் வட்டார வழக்குகள் என வரும்போது வாசிப்பின் போக்கில் இடறல் ஏற்படுகிறது. ஆங்கிலவார்த்தைகளைத் தொடர்ந்து தமிழ்ப்படுத்தும் வழக்கம் நம்மிடமில்லை. வட்டாரவழக்குகளோ அல்லது மற்றைய மொழிபேசுபவர்களையோ பாத்திரமாக அறிமுகப்படுத்தும்போது ஆங்கிலத்தில் ஓர் இரு வார்த்தைகளை அறிமுகப்படுத்தி விட்டு தொடர்ந்து வழக்கமான மொழியில் போவார்கள். உதாரணமாக ஸ்கொட்லாண்டைச் சேர்ந்த எழுத்தாளர் அவரது ஆங்கிலத்தில் எழுதும்போது அதை எப்படிப் படிக்க முடியும்?.இலக்கியத்தில் தமிழ் நாட்டவர்களும் இலங்கையர்களும் வட்டாரமொழியை புகுத்த முயற்சிப்பார்கள். எவ்வளவு முயற்சித்தாலும் உண்மைகளை முற்றாக இலக்கியத்தில் கொண்டுவரமுடியாது. இருவருக்கிடையே நடக்கும் முழு உரையாடலையும் எழுதினால் படிக்க முடியுமா? கதை சொல்லியின் நோக்கத்திற்கப்பால் உரையாடல் எழுதுவதில்லையே!

ரோனி மொறிசன் எழுதிய பிலவ்ட் நாவலில் Yonder (அப்பால் நிலம்) என்ற ஒரு சொல்லை பாவித்து அடிமை கறுப்பினத்தவர்கள் என்பதை கோடிகாட்டி விட்டு மற்றய பொதுவானவார்த்தைகளுடன் கதையை நகர்த்திக் கடந்து செல்கிறார். இதைவிட்டு முழு உரையாடலையும் கறுப்பின மக்களில் மொழியில் எழுதியிருந்தால் எப்படி வாசிக்கமுடியும்?

புத்தகத்தில் உள்ள மற்றைய ஒரு விடயத்தையும் இங்கு சொல்லவேண்டும். இருப்பினும் குறையாகவில்லை ஆனாலும் குறிப்பிடுதல் அவசியம். பல சம்பவங்கள் பல அத்தியாங்களில் ஒன்று இரண்டு எனக் காட்டில் மலர்ந்த மலராகச் சிதறியுள்ளன. அவற்றில் சம்பவங்கள் ஒவ்வொன்றையும் காட்சி -கதை ( Scene and Summary) என்ற தொடரில் எழுதியிருந்தால் புத்தகத்தை முடிக்கும்வரை கீழே வைக்கமுடியாததாக மாற்றியிருக்கலாம்.

எனது கூற்றைச் சிறிது விவரிக்கலாம். அத்தியாயமாக எழுதியபோது ஒவ்வொரு அத்தியாத்தின் ஆரம்பத்தில் ஒரு கதை சொல்வதற்கான 'நரேற்றிவ் ஆர்க்' (Narrative Arc)வைத்துச் சொல்லியிருக்கலாம். அதைவிட ஒவ்வொரு அத்தியாயத்திலும் முக்கியமான சம்பவங்கள் வரும்போது அதை எங்களுக்கு மேலும் காட்சிப்படுத்தியிருக்கலாம் (Dramatic) அத்துடன் அடுத்த அத்தியாயத்தில் வரும் சம்பவத்தை( Foreshadowing)) கொஞ்சம் பெண்ணின் பாவாடைக்கரைபோல் காட்டியிருந்தால் புத்தகத்தை மேலே கொண்டு சென்றிருக்கும்

டாக்சி விடயங்கள் முக்கியமாக அலைபேசி விடயங்கள் பெர்லினில் டாக்சியோடும் நோக்கமற்ற சாதாரண வாசகர்களுக்குக் கொஞ்சம் அதிகமாகி விட்டதோ என எண்ணினேன். தனது வாழ்க்கையின் கடினமான பகுதியை எமக்குக் கூறியதுடன் அதில் நகைச்சுவையைத்தூவிக் கடந்துவிடுவது கருணாகரமூர்த்தியால் மட்டும் முடிந்த காரியம்.

புதிப்பாளர்- காலச்சுவடு பதிப்பகம்

uthayam12@gmail.com

http://www.geotamil.com/pathivukalnew/index.php?option=com_content&view=article&id=4063:2017-08-03-05-12-12&catid=14:2011-03-03-17-27-43&Itemid=62

Link to comment
Share on other sites

  • 10 months later...

இலங்கை இடப்பெயர்வின் குறுக்கு வெட்டுத் தோற்றத்தை காட்டும் குணா கவியழகனின் ’கர்ப்ப நிலம்’

 

 

புலிகளின் வேவு வாழ்க்கையை கண்முன் நிறுத்தும் 'அப்பால் ஒரு நிலம்

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கொதிக்கும் காய்ச்சலுடன், தாயின் முன்னிலையில் கண்ணீரை வென்ற ‘சஞ்சுமல் பாய்ஸ்’ வீரர் பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 29 மார்ச் 2024, 03:25 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஒவ்வொரு அணியிலும் ஒரு ரியல் ஹீரோ இருப்பார். அனைத்து நேரங்களிலும் அவர்களின் உதயம் இருக்காது, தேவைப்படும் நேரத்தில் அவர்களின் எழுச்சி அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்லும். அந்த வகையில் “சஞ்சுமெல் பாய்ஸ்” என்று அழைக்கப்படும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு நேற்றைய ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஒளிர்ந்தவர் ரியான் பராக் மட்டும்தான். ஜெய்ப்பூரில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 9-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியை 12 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 2ஆவது வெற்றி பெற்றது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. முதலில் பேட் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் சேர்த்தது. 186 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் சேர்த்து 12 ரன்களில் தோல்வி அடைந்தது. இந்த வெற்றியின் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சொந்த மைதானத்தில் இந்த சீசனில் தொடர்ந்து 2ஆவது வெற்றியைப் பெற்றுள்ளது. முதல் வெற்றி பெற்றவுடன் நிகர ரன்ரேட்டை ஒன்று என வைத்திருந்த ராஜஸ்தான், 2 வெற்றிகளில் 4 புள்ளிகள் பெற்றும் நிகர ரன்ரேட் 0.800 புள்ளியாகக் குறைந்துவிட்டது. டெல்லி கேபிடல்ஸ் அணி அடுத்தடுத்து இரு தோல்விகளைச் சந்தித்துள்ளது. இதனால் இன்னும் புள்ளிக்கணக்கைத் தொடங்க முடியாமல், நிகர ரன்ரேட்டும் மைனஸ் 528ஆக பின்தங்கியுள்ளது. இந்த ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஜொலித்தவர் ரியான் பராக் (45 பந்துகளில் 84 ரன்கள் 6சிக்ஸர்கள், 7பவுண்டரிகள்) மட்டும்தான். ஒரு கட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணி 3 விக்கெட் இழப்புக்கு 36 ரன்கள் என்று இக்கட்டான நிலையில் தடுமாறியது. ஆனால், 4வது பேட்டராக களமிறங்கிய ரியான் பராஸ், அஸ்வினுடன் ஜோடி சேர்ந்து 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும், ஜூரெலுடன் சேர்ந்து 52 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அணிக்கு கவுரமான ஸ்கோரை பெற்றுக் கொடுத்தார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES ஒரு கட்டத்துக்கு மேல் அதிரடி ஆட்டம்தான் ஸ்கோரை உயர்த்த கை கொடுக்கும் என்பதை அறிந்த ரியான் பராக் டெல்லி பந்துவீச்சாளர்களை வெளுக்கத் தொடங்கினார். ஒரு கட்டத்தில் 20 பந்துகளில் 16 ரன்கள் என்று மெதுவாக ஆடிய பராக் அதன்பின் பேட்டை சுழற்றத் தொடங்கினார். பராக் தான் சந்தித்த கடைசி 19 பந்துகளில் மட்டும் 58 ரன்களைச் சேர்த்தார். அதிலும் அதிவேகப்பந்துவீச்சாளர் நோர்க்கியா வீசிய கடைசி ஓவரில் மட்டும் 6 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என 25 ரன்களை பராக் சேர்த்தார். ராஜஸ்தான் அணியை ஒற்றை பேட்டராக கட்டி இழுத்து பெரிய ஸ்கோருக்கு கொண்டு வந்த ரியான் பராக் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த 3 சீசன்களிலும் ரியான் பராக் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. கடந்த சீசனில் 7 இன்னிங்ஸில் பராக் சேர்த்தது வெறும்78 ரன்கள்தான், 2022ம் ஆண்டு சீசனில் பராக் 14 இன்னிங்ஸ்களில் 148 ரன்கள் சேர்த்தார், 2021 சீசனில் 10 இன்னிங்ஸ்களில் 93 ரன்கள் என பராக் பேட்டிங் மோசமாகவே இருந்தது. இதனால் அணியில் இருந்தாலும் பல போட்டிகளில் ப்ளேயிங் லெவனில் இடம் பெறவில்லை. ஆனால், கடந்த ஆண்டில் உள்நாட்டுப் போட்டிகளில் ரியான் பாராக் தீவிரமான ஆட்டத்தால் கிடைத்த அனுபவம் ஆங்கர் ரோல் எடுத்து அணியை இக்கட்டான நிலையில் இருந்து மீ்ட்டுள்ளது. 2024 சீசன் தொடங்கியதில் இருந்தே பராக்கின் பேட்டிங்கில் முதிர்ச்சியும், பொறுப்புணர்வும் அதிகம் இருந்ததைக் காண முடிந்தது. முதல் ஆட்டத்திலும் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து பராக் 93 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது பெரிய ஸ்கோருக்கு கொண்டு சென்றது. அந்த ஆட்டத்திலும் பராக் 29 பந்துகளில் 43 ரன்கள் சேர்த்தார். இரு போட்டிகளிலும் தன்னுடைய ஆட்டத்தின் முதிர்ச்சியை, பொறுப்புணர்வை பராக் வெளிப்படுத்தியுள்ளார். அது மட்டுமல்லாமல் கடந்த 3 நாட்களாக ரியான் பராக்கிற்கு கடும் காய்ச்சல், உடல்வலி இருந்துள்ளது.ஆனால், மாத்திரைகளை மட்டும் உட்கொண்டு, அந்த உடல் களைப்போடு நேற்றைய ஆட்டத்தில் பராக் விளையாடினார் என ராஜஸ்தான் நிர்வாகம் தெரிவித்துள்ளது.   பட மூலாதாரம்,GETTY IMAGES தாயின் முன் சிறப்பாக ஆடியது மகிழ்ச்சி ஆட்டநாயகன் விருது வென்ற ரியான் பராக் பேசுகையில் “ என்னுடைய உணர்ச்சிப் பெருக்கு அடங்கிவிட்டது, என்னுடைய தாய் இந்த ஆட்டத்தை இங்கு வந்து நேரில் பார்த்தால் அவர் முன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறேன். என்னை இங்கு கொண்டுவருவதற்கு அவர் பல போராட்டங்களை சந்தித்துள்ளார். நான் சிறப்பாக ஆடுகிறேனோ இல்லையோ, என்னுடைய திறமை என்னவென்று எனக்குத் தெரியும், அதை ஒருபோதும் மாற்றியதில்லை. உள்நாட்டுப் போட்டிகளில் அதிகமான போட்டிகளில் பங்கேற்றேன், அதிகமான ரன்களும் குவித்தேன். டாப்-4 பேட்டராக வருபவர் ஆட்டத்தை கடைசிவரை எடுத்துச் செல்ல வேண்டும் அதை செய்திருக்கிறேன். முதல் ஆட்டத்தில் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்தேன். இன்று சஞ்சு செய்த பணியை நான் செய்தேன். நான் 3 நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் இருந்தேன். இந்த ஆட்டத்துக்காக கடினமாக உழைத்துள்ளேன். என்னால் விளையாட முடியும் என மனதை தயார் செய்து பேட் செய்தேன்” எனத் தெரிவித்தார். ஆட்டத்தை திருப்பிய பந்துவீச்சாளர்கள் ஒரு கட்டத்தில் ஆட்டம் டெல்லி கேபிடல்ஸ் கையில்தான் இருந்தது. அதை அவர்களிடம் இருந்து பறித்தது ராஜஸ்தான் பந்துவீச்சாளர்கள்தான். கடைசி 5 ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 60 ரன்கள் தேவைப்பட்டது. 16-வது ஓவரை வீசிய சஹல் 6 ரன்கள் மட்டுமே கொடுத்து அபிஷேக் போரெல் விக்கெட்டை கைப்பற்றினார். அஸ்வின் வீசிய 17-வது ஓவரில் டெல்லி பேட்டர் ஸ்டெப்ஸ் 2 சிக்ஸர்கள் உள்பட 19 ரன்கள் சேர்த்தால் ஆட்டம் பரபரப்பானது. ஆவேஷ் கான் 18-வது ஓவரை வீசியபோது, ஸ்டெப்ஸ் ஒரு பவுண்டரி உள்பட 9 ரன்களைச் சேர்த்து அணியை வெற்றி நோக்கி நகர்த்தினார். கடைசி இரு ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 32 ரன்கள் தேவைப்பட்டது. சந்தீப் சர்மா வீசிய 19-வது ஓவரில் முதல் இருபந்துகளில் பவுண்டரி, சிக்ஸர் என ஸ்டெப்ஸ் பறக்கவிட்டதால் ஆட்டம் டெல்லி பக்கம் சென்றது.அந்த ஓவரில் டெல்லி 15 ரன்கள் சேர்த்தது. கடைசி ஓவரில் டெல்லி வெற்றி பெற 17 ரன்கள் தேவைப்பட்டது.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெத்ஓவர் ஸ்பெஷலிஸ்ட் கடந்த முதல் ஆட்டத்திலும் டெத் ஓவரில் கடைசி ஓவரை ஆவேஷ்கான் வீசி வெற்றி தேடித்தந்ததால் இந்த முறையும் கேப்டன் சஞ்சு, ஆவேஷ் கானை பயன்படுத்தினார். கடைசி ஓவரை ஆவேஷ்கான் மிக அற்புதமாக வீசினார். நல்ல ஃபார்மில் இருந்த ஸ்டெப்ஸை ஒரு பவுண்டரி, சிக்ஸர்கூட அடிக்கவிடாமல், 3 பந்துகளை அவுட்சைட் ஆஃப்ஸ்டெம்பிலும் வீசினார். 4வது பந்தை ஸ்லாட்டில் வீசியும் ஸ்டெப்ஸ் அடிக்கவில்லை. 5-வது பந்தை ஃபுல்டாசாகவும், கடைசிப்பந்தில் ஃபுல்டாசாக வீசி டெல்லி பேட்டர்களை கட்டிப்போட்டார் ஆவேஷ் கான். அதிரடியாக ஆடிய அஸ்வின் நெருக்கடியான கட்டத்தில் பேட்டிங் வரிசையில் தரம் உயர்த்தப்பட்டு நடுவரிசையில் அஸ்வின் நேற்று களமிறக்கப்பட்டார். ரியான் பராக்கிற்கு நல்ல ஒத்துழைப்பு அளித்து அஸ்வின் ஸ்ட்ரைக்கை மாற்றி, 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும் அமைத்துக் கொடுத்தார். ரியான் பராக் தன்னுடைய முதல்பாதி இன்னிங்ஸில் ரன் சேர்க்க திணறினார், ஆனால் அஸ்வின் அனாசயமாக 3 சிக்ஸர்களை வெளுத்தார். குறிப்பாக குல்தீப், நோர்க்கியா ஓவர்களில் அஸ்வின் 3 சிக்ஸர்களைப் பறக்கவிட்டார். அஸ்வின் அடித்த திடீர் சிக்ஸால்தான் ராஜஸ்தான் ரன்ரேட் 6 ரன்களைக் கடந்தது. அஸ்வின் தன்னுடைய பணியில் சிறிதும் குறைவி்ல்லாமல் சிறிய கேமியோ ஆடி 19 பந்துகளில் 29 ரன்கள் சேர்த்து பெவிலியன் சென்றார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெல்லிக்கு தொல்லையாகிய சஹல் ராஜஸ்தான் அணி தொடக்கத்திலேயே பர்கர், போல்ட் இருவருக்கும் 6 ஓவர்களை வீசச் செய்து பவர்ப்ளேயோடு முடித்துவிட்டது. இதனால் 14 ஓவர்கள்வரை நல்ல ஸ்கோர் செய்யலாம் என டெல்லி பேட்டர்கள் நினைத்திருக்கலாம். டேவிட் வார்னரும் களத்தில் இருந்தார். ஆனால், ஆவேஷ் கான் ஆஃப் சைடில் விலக்கி வீசி வார்னரை அடிக்கச் செய்து ஆட்டமிழக்கச் செய்தார். மிக அருமையாக பந்துவீசிய சஹல் இரு இடதுகை பேட்டர்களான கேப்டன் ரிஷப் பந்த், போரெல் இருவரையும் வெளியேற்றினார். 4 ஓவர்கள் வீசிய சஹல் 19 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார், இவரின் பந்துவீச்சில் ஒரு சிக்ஸர் மட்டுமே அடிக்க முடிந்தது, பவுண்டரி ஒன்றுகூட அடிக்கவில்லை. சஹல் 7 டாட் பந்துகளையும் வீசியதை கணக்கிட்டால் 2 ஓவர்களில்தான் சஹல் 19 ரன்களை வழங்கியுள்ளார். இரு முக்கியமான பேட்டர்களை சஹல் தனது பந்துவீச்சின் மூலம் வெளியேற்றியது டெல்லி அணிக்கு பெரிய பின்னடைவாக மாறியது. நடுங்கவைத்த பர்கர் ராஜஸ்தான் அணிக்கு இந்த சீசனில் கிடைத்த பெரிய பலம் டிரென்ட் போல்ட், ஆன்ட்ரூ பர்கர் ஆகிய இரு இடதுகை வேகப்பந்துவீச்சாளர்கள்தான். போல்ட் இந்த ஆட்டத்தில் விக்கெட் ஏதும் எடுக்காவிட்டாலும், பர்கர் இரு விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதிலும் ரிக்கி புயிக்கு பர்கர் வீசிய பவுன்ஸர் சற்று தவறியிருந்தால் ஹெல்மெட்டை பதம் பார்த்திருக்கும், ஆனால், கிளவ்வில் பட்டு சாம்சனிடம் கேட்சானது. அதேபோல நல்ல ஃபார்மில் இருந்த மார்ஷ்(23) விக்கெட்டையும் பர்கர் தனது அதிவேகப்பந்துவீச்சில் வீழ்த்தினார். தொடக்கத்திலேயே மார்ஷ், ரிக்கி புயி விக்கெட்டுகளை வீழ்த்தி டெல்லிக்கு பெரிய சேதாராத்தை பர்கர் ஏற்படுத்தினார். மணிக்கு சராசரியாக 148கி.மீ வேகத்தில் பந்துவீசும் பர்கர், பெரும்பாலான பந்துகளை துல்லியமாக, லைன் லென்த்தில் கட்டுக்கோப்பாக வீசுவது ராஜஸ்தான்அணிக்க பெரிய பலம்.   பட மூலாதாரம்,GETTY IMAGES வாய்ப்புகளை தவறவிட்ட டெல்லி அணி டெல்லி அணி பந்துவீச்சிலும்சரி, பேட்டிங்கிலும் சரி கிடைத்த வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்தி இருந்தால் வெற்றி கிடைத்திருக்கும். பந்துவீச்சில் தொடக்கத்திலேயே ராஜஸ்தான் பேட்டர்கள் ஜெய்ஸ்வால்(5), பட்லர்(11), சாம்ஸன்(15) என 3 முக்கிய பேட்டர்களையும் முகேஷ் குமார், குல்தீப், கலீல் அகமது வீழ்த்திக் கொடுத்தனர். இந்த நெருக்கடியை தொடர்ந்து ஏற்படுத்தி தக்கவைத்திருந்தால், ராஜஸ்தான் அணி ஸ்கோர் 120 ரன்களை கடந்திருக்காது. 14 ஓவர்கள் வரை ராஜஸ்தான் அணி 100 ரன்களைக் கூட கடக்கவில்லை. ஆனால், கடைசி 5 ஓவர்களில் அதிலும் டெத் ஓவர்ளில் டெல்லி பந்துவீச்சு மோசமானதை, பராக் பயன்படுத்தி வெளுத்து வாங்கினார். கலீல் அகமது, அக்ஸர் படேல் தவிர எந்தப் பந்துவீச்சாளரும் வாய்ப்பைப் பயன்படுத்தவில்லை. அதேபோல பேட்டிங்கிலும், பவர்ப்ளேயில் 59 ரன்களும், 12 ஓவர்களில் 100 ரன்களை எட்டி டெல்லி அணி வெற்றி நோக்கி சீராக சென்றது. ஆனால், ஒரு கட்டத்தில் ரிஷப் பந்த், போரெல், வார்னர் ஆகியோர் 25 ரன்களுக்குள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தது டெல்லிக்கு பின்னடைவாக மாறியது. கடைசி 5 ஓவர்களில் 60 ரன்களை எட்டுவதற்கும் ஸ்டெப்ஸ் கடுமையாக முயன்று வெற்றிக்கு அருகே கொண்டு சென்றார். ஸ்டெப்ஸுடன் நல்ல பவர் ஹிட்டர் பேட்டர் இருந்தால் ஆட்டம் திசைமாறியிருக்கும். டெல்லி அணியில் வார்னர்(49), ஸ்டெப்ஸ்(44) தவிர எந்த பேட்டரும் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. https://www.bbc.com/tamil/articles/clm7pvlmprko
    • Published By: DIGITAL DESK 3   29 MAR, 2024 | 09:47 AM   உலகில் வாழும் கிறிஸ்தவர்கள் இன்று யேசுக்கிறிஸ்துவின் பாடுகள், மரணத்தை நினைவு கூர்ந்து புனித வெள்ளியை அனுஷ்டித்து வருகின்றனர். இயேசுவின் மறைவு புனித வெள்ளியாக இன்று அனுசரிக்கப்படுகிறது. அவர் உயிர்த்தெழுந்த நாள் 'ஈஸ்டர்' ஞாயிறாக அனுஷ்டிக்கப்படுகின்றது. யேசுக்கிறிஸ்து இறந்தது துக்க நிகழ்வு என்றாலும், அதனால் மனித குலத்திற்கு விளைந்த நன்மைகளை வைத்தே 'புனித வெள்ளி' என்றழைக்கின்றனர் கிறிஸ்தவர்கள். வரலாற்றில் முக்கிய நிகழ்வான இயேசு கிறிஸ்துவின் பாடுகள், மரணம், உயிர்ப்பை உலகளவில் கிறிஸ்தவர்கள் நினைவு கூர்ந்து வருகின்றனர். அந்தவகையில் இயேசு கிறிஸ்து உயிர்விட்ட நாளை இன்று உலகிலுள்ள அனைத்து கிறிஸ்தவர்களும் இன்று 'பெரிய வெள்ளி'யாக நினைவு கூருகின்றனர். பெரிய வெள்ளி, புனித வெள்ளி, Good Friday என்று சொல்லும் போதே இயே­சுவின் மர­ணம் தான் சர்வ உலக மக்களின் நினை­விலும் வரும். அந்த நாளுக்கு பெரி­ய­வர்கள் அல்­லது முன்­னோர்கள் சரி­யாக பெய­ரிட்­டுள்­ளனர். நல்ல வெள்ளி, புனித வெள்ளி, எல்லா வெள்­ளி­க­ளிலும் பெரிய வெள்ளி என்று மிகவும் பொருத்­த­மா­கவே பெய­ரிட்­டுள்­ளனர். ஆனால், அந்த பெயர்­களின் அடிப்­ப­டையில் அந்த நாள் அனுஷ்­டிக்­கப்­ப­டு­கின்­றதா என்று கேட்டால் இல்லை என்­றுதான் சொல்­ல­வேண்டும். ஒரு கெட்ட மனி­த­னு­டைய மர­ண­மா­யி­ருந்­தாலும் அதற்கு அனு­தா­பப்­ப­டு­கிற உல­கமே நாம் வாழும் இவ்­வு­லகம். ஒரு மனி­த­னுக்கும் தீங்கு நினை­யாமல் எல்லா மனித வாழ்­விலும் நன்மை செய்த தேவ­கு­மாரன் இயே­சுவின் மரண நாளுக்கு வைக்­க­வேண்­டிய பெயரை வைக்­காமல் அந்த நாளுக்கு நல்ல நாள் என்றும், புனித நாள் என்றும், பெரிய நாள் என்றும் ஏன் பெய­ரிட்­டார்கள்? ஆம் பிரி­ய­மா­ன­வர்­களே, இந்த நாள் உல­கத்­தி­லுள்ள எல்லா மனி­தர்­க­ளுக்கும் நல்ல நாள். ஏனென்றால், ஜீவ கால­மெல்லாம் மரண பயத்­தி­னாலே அடி­மைத்­த­னத்­திற்­குள்­ளா­ன­வர்கள் யாவ­ரையும் விடு­தலை பண்­ணும்­ப­டிக்கு தேவ­கு­மா­ரனாம் இயேசு சர்­வத்­தையும் படைத்­தவர், சர்­வத்­தையும் ஆளுகை செய்ய வேண்­டி­யவர். பிள்­ளைகள் மாமி­சத்­தையும் இரத்­தத்­தையும் உடை­ய­வர்­க­ளா­யி­ருக்க அவரும் நம்­மைப்போல் மாமி­சத்­தையும் இரத்­தத்­தையும் உடை­ய­வ­ராகி மர­ணத்தின் அதி­ப­தி­யா­கிய பிசா­சா­ன­வனை தம்­மு­டைய மர­ணத்­தினால் அழிக்கும் படிக்கும், நம்மை மரண பயத்­தி­லி­ருந்து விடு­விக்­கும்­ப­டிக்கும் மர­ணத்­துக்­கே­து­வான ஒன்றும் அவ­ரிடம் காணப்­ப­டாத போதும், மரணம் மனித வாழ்வில் பயத்­தையோ அடி­மைத்­த­னத்­தையோ கொடுக்­கக்­கூ­டாது என்று காண்­பிக்கும் படிக்கும் மர­ணத்தை ஏற்றுக் கொண்டார். பிரி­ய­மா­ன­வர்­களே, இந்த உலகில் வாழும் எல்லா மனி­த­னுக்கும் மரணம் என்­பது மாமி­சத்­துக்கும் இரத்­தத்­துக்­கும்தான். நம்­மு­டைய ஆவி, ஆத்­து­மா­வுக்­கல்ல. சரீ­ரத்தில் இரத்த ஓட்டம் நின்று சரீரம் செய­லற்றுப் போவ­துதான் மரணம். எனவே பரி­சுத்த வேதா­கமம், ‘ஆத்­து­மாவைக் கொல்ல வல்­ல­வர்­க­ளா­யி­ராமல், சரீ­ரத்தை மாத்­திரம் கொல்­லு­கி­ற­வர்­க­ளுக்கு நீங்கள் பயப்­பட வேண்டாம்; ஆத்­து­மா­வையும் சரீ­ரத்­தையும் நர­கத்­திலே அழிக்க வல்­ல­வ­ருக்கே பயப்­ப­டுங்கள்’ (மத் 10:28) என்று சொல்­கி­றது. மேலே சொல்­லப்­பட்­ட­து­போல மரண பயத்­தினால் பிசா­சா­னவன் யாவ­ரையும் அடி­மைப்­ப­டுத்­தி­யி­ருந்தான். நம் இயேசு சிலுவை மர­ணத்தை ஏற்றுக் கொண்டு உல­கி­லுள்ள எல்லா மனி­தர்­க­ளுக்கும் ‘இவ்­வு­லகில் மரணம் என்­பது வெறும் சரீ­ரத்­திற்கே சொந்­த­மா­னது’ என்ற உண்­மையை தெளி­வு ­ப­டுத்­தினார். எனவே உல­கத்­தி­லுள்ள எந்த மனு­ஷனும் மனு­ஷியும் இயே­சுவின் மர­ணத்தை ஏற்றுக் கொள்ளும் போது, மரண பயத்­திற்கு நீங்­க­லாகி பிசாசின் அடி­மைத்­த­னத்­திற்கு நீக்­க­லாக்­கப்­ப­டு­கி­றார்கள். ஆக­வேதான் அதை நல்ல வெள்ளி (Good Friday) என்று உலகம் அழைக்­கி­றது. அடுத்து புனித வெள்ளி என்று ஏன் சொல்­லு­கிறோம்? தேவன் மனி­தனை தம்­மைப்போல் வாழும்­ப­டி­யாயும், பரி­சுத்த சந்­த­தியை உரு­வாக்­கும்­ப­டி­யாயும் படைத்தார். ஆனால் முதல் மனிதன் ஆதாமின் கீழ்­ப­டி­யாமை, மீறு­த­லினால் உல­கத்தில் பாவம் வந்­தது. எல்லா மனி­தர்­க­ளையும் பாவம் ஆளுகை செய்­தது. ஒரு மனித வாழ்­விலும் புனிதம் (பரி­சுத்தம்) இல்லை. பாவம் கழு­வப்­ப­ட­வில்லை. ‘இரத்தம் சிந்­து­த­லினால் மாத்­தி­ரமே பாவப்­பி­ரா­யச்­சித்தம் உண்டு’ என்­பது உலகில் வாழும் அநே­க­மானோர் ஏற்றுக் கொள்ளும் ஒன்று. ஆகவே, தேவ­னு­டைய ஆதி விருப்­பத்­தின்­படி இயேசு சிலு­வையில் சிந்­திய இரத்தம் மாத்­தி­ரமே மனித வாழ்வின் பாவத்தை கழுவி பரி­சுத்­த­மாக்­கி­யது. இரண்டாம் ஆதாம் என்று அழைக்­கப்­படும் இயே­சுவின் கீழ்­ப­டிதல், தாழ்­மையின் மூலம் உலகில் கிரு­பையும், சத்­தி­யமும் வந்­தது. யார் இயேசு மூலம் வந்த கிரு­பையைக் கொண்டு சத்­தி­யத்தை பின்­பற்­று­கி­றார்­களோ அவர்கள் வாழ்வில் கீழ்­ப­டிவும், தாழ்­மையும் காணப்­படும். இயே­சுவின் கீழ்­ப­டிவும் தாழ்­மையும் முழு­மையாய் கல்­வாரி சிலு­வையில் காட்­டப்­ப­டு­கி­றது. இயேசு அங்கே சிந்­திய இரத்­தத்­தி­னால்தான் நாம் பரி­சுத்­த­மாக்­கப்­பட்டோம். ஆக­வேதான் புனித (பரி­சுத்த) வெள்ளி என்று அந்நாள் போற்­றப்­ப­டு­கி­றது. பிரி­ய­மா­ன­வர்­களே, எத்­த­னையோ வெள்­ளிக்­கி­ழ­மைகள் இருக்க இந்­நாளை மட்டும் ஏன் பெரிய வெள்ளி என்று சொல்­கிறோம்? இந்த நாள் மனித வாழ்வில் மரண பயத்தை நீக்கி, அடி­மைத்­தன நுகத்தை முறித்து, மனித வாழ்வில் சாப­மாக வந்த பாவத்தைக் கழுவி, ஆசிர்­வா­தத்தை உண்­டாக்கி, மனி­தனை சிந்­தனை செய்ய வைத்த நாள். இது துக்­கத்தின் நாளும் அல்ல, சந்­தோ­ஷத்தின் நாளும் அல்ல. இது அர்ப்­ப­ணிப்பின், தீர்­மா­னத்தின் நாள். இயே­சுவின் மர­ணத்தில் நம்மை பங்­குள்­ள­வர்­க­ளாக்கும் நாள். நம்­மு­டைய பாவ, சாப, தரித்­திர, மரண வல்­ல­மையை முறி­ய­டித்த நாள். நாம் நம் இயே­சுவின் மர­ணத்தை ஏற்று அதில் நாம் பங்­கு­டை­ய­வர்­க­ளா­கிறோம் என்­ப­துதான் நம் வாழ்வில் நாம் எடுத்த தீர்­மா­னங்­களில் மிகவும் பெறு­ம­தி­யான, விலை­ம­திக்க முடி­யாத தீர்­மானம். நம் வாழ்வில் நாம் எடுக்கும் வெற்றியான தீர்மானத்தின் நாள்தான் நம் வாழ்வின் பெரிய நாளாய் இருக்கும். ஆகவே, இந்த நாள் நல்ல, புனித, பெரிய நாளாய் என் வாழ்வில் அமைந்துள்ளது. உங்கள் வாழ்விலும் அமைய இயேசுவோடு கூட நீங்கள் சிலுவையில் அறையப்பட உங்களை ஒப்புக் கொடுக்கும் தீர்மானம்; உங்கள் பாவ, சாப, பலவீனங்களை சிலுவையில் அறைந்து இயேசுவின் தேவ, தூய பண்புகளை உங்கள் வாழ்வில் கொண்டு வரும். இந்நிலையில், இலங்கையைப் பொருத்தவரையில் மக்கள் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகின்ற நிலையில், கிறிஸ்தவர்கள் புனித வாரத்தை அனுஷ்டிக்கின்றனர். மக்கள் தற்போது எதிர்நோக்கியுள்ள இன்னல்களில் இருந்து விடுபட அனைவரும் பிரார்த்திப்போமாக ! சிலுவையைப் பெற்றுக் கொள்வோம்! ஜெயமாய் வாழ்வோம்! ஆமென்! பெரிய வெள்ளிக்கிழமையை முன்னிட்டு கொழும்பு-13 புதுச்செட்டித் தெரு புனித வியாகுல மாதா ஆலயத்தில் யேசுவின் பாடுகளை நினைவு கூர்ந்து சிலுவைப்பாதை இடம்பெற்றதை படங்களில் காணலாம். (படப்பிடிப்பு :- ஜே.சுஜீவகுமார்) https://www.virakesari.lk/article/179948
    • கணேசமூர்த்தியின் இந்த விபரீத முடிவுக்கு வைகோ தான் காரணம்..!  
    • ஓயாத நிழல் யுத்தங்கள்-5 வியட்நாம் கதை இரண்டாம் உலகப் போரின் பின்னர், இரு துருவங்களாகப் பிரிந்து நின்ற உலக நாடுகளில், இரு அணுவாயுத வல்லரசுகளின் நிழல் யுத்தம் பனிப்போராகத் தொடர்ந்தது. அந்தப் பனிப்போரின் மையம், அண்டார்டிக் கண்டம் தவிர்ந்த உலகின் எல்லாக் கண்டங்களிலும் இருந்தது. தென்கிழக்கு ஆசியாவில், உலக வல்லரசுகளின் பனிப்போரின் தீவிர வடிவமாகத் திகழ்ந்த வியட்நாம் போர் பற்றிப் பார்ப்போம். வியட்நாம் மக்களின் வரலாற்றுப் பெருமை பொதுவாகவே ஆசியக் கலாச்சாரங்களில் பெருமையுணர்வு (pride) ஒரு கலாச்சாரப் பண்பாகக் காணப்படுகிறது. வியட்நாமின் வரலாற்றிலும் கலாச்சாரத் தனித்துவம், தேசிய அடையாளம் என்பன காரணமாக ஆயிரம் ஆண்டுகளாக அதன் அயல் நாடுகளோடு போராடி வாழ வேண்டிய நிலை இருந்திருக்கிறது. பிரதானமாக, வடக்கேயிருந்த சீனாவின் செல்வாக்கிற்கு உட்படாமல் வியட்நாமியர்கள் தனித்துவம் பேணிக் கொண்டிருந்தனர். ஆனால், வியட்நாம் என்பது ஒரு தேசிய அடையாளமாக திரளாதவாறு, மத, பிரதேச வாதங்களும் அவர்களுக்குள் நிலவியது. கன்பூசியஸ் நம்பிக்கைகளைப் பின்பற்றிய வட வியட்நாமிற்கும், சிறு பான்மைக் கிறிஸ்தவர்களைக் கொண்ட தென் வியட்நாமிற்குமிடையே கலாச்சார வேறு பாடுகள் இருந்தன. இந்த இரு தரப்பில் இருந்தும் வேறு பட்ட மலைவாழ் வியட்நாமிய மக்கள் மூன்றாவது ஒரு தரப்பாக இருந்திருக்கின்றனர். 19 ஆம் நூற்றாண்டில், ஐரோப்பிய காலனித்துவம் இந்தோ சீனப் பகுதியில் கால் பதித்த போது, வியட்நாம், லாவோஸ், கம்போடியா ஆகிய பகுதிகள் பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் வந்தன. காலனித்துவத்தை எதிர்ப்பதிலும் கூட, வியட்நாமின் வடக்கிற்கும், தெற்கிற்குமிடையே வேறுபாடு இருந்திருக்கிறது. எனினும், பிரெஞ்சு ஆதிக்கத்தை வியட்நாமியர் தொடர்ந்து எதிர்த்து வந்தனர். இரண்டாம் உலகப் போரின் போது, 1945 இல் ஜப்பான் பிரான்சிடமிருந்து இந்தோ சீனப் பிராந்தியத்தை பொறுப்பெடுத்த போது, பிரெஞ்சு ஆட்சியில் கூட நிகழாத வன்முறைகள் அந்தப் பிராந்திய மக்கள் மீது நிகழ்த்தப் பட்டன.   அதே ஆண்டின் ஆகஸ்டில், ஜப்பான் தோல்வியடைந்து சரணடைந்த போது, உள்ளூர் தேசியத் தலைமையாக இருந்த வியற் மின் (Viet Minh) என அழைக்கப் பட்ட கூட்டணியிடம் ஆட்சியை ஒப்படைத்து வெளியேறியது. இதெல்லாம் நடந்து கொண்டிருந்த காலப் பகுதியில், உலக கம்யூனிச இயக்கத்தினால் ஈர்க்கப் பட்டிருந்த ஹோ சி மின் நாடு திரும்பி வட வியற்நாமில் கம்யூனிச ஆட்சியை பிரகடனம் செய்கிறார். இந்தக் காலப் பகுதி, உலகம் இரு துருவங்களாகப் பிரிவதற்கான ஆரம்பப் புள்ளிகள் இடப் பட்ட ஒரு காலப் பகுதி. முடிந்து போன உலகப் போரில் பங்காளிகளாக இருந்த ஸ்ராலினின் சோவியத் ஒன்றியமும், மேற்கு நாடுகளும் உலக மேலாண்மைக்காகப் போட்டி போட ஆரம்பித்த காலம் இந்த 1940 கள் - சீனாவின் மாவோ இன்னும் அரங்கிற்கே வரவில்லை என்பதைக் கவனிக்க வேண்டும். மீண்டும் ஆக்கிரமித்த பிரான்ஸ் கம்யூனிச விரிவாக்கத்திற்கு ஹோ சி மின் ஆட்சி வழி வகுக்கலாமெனக் கருதிய பிரிட்டன், ஒரு படை நடவடிக்கை மூலம் தென் வியட்நாமைக் கைப்பற்றி, தென் வியட்நாமை மீளவும் பிரெஞ்சு காலனித்துவ வாதிகளிடம் கையளித்தது. ஒரு கட்டத்தில், வியட்நாமை பிரெஞ்சு ஆட்சியின் கீழ் இருக்கும் ஒரு சுதந்திர தேசமாக அங்கீகரிக்கும் ஒப்பந்தம் கூட பிரான்சுக்கும், வியற் மின் அமைப்பிற்குமிடையே கைச்சாத்தானது. ஆனால், இந்த ஒப்பந்தத்தின் ஆயுட்காலம் வெறும் 2 மாதம் தான். பிரெஞ்சுப் படைகள் வடக்கை நோக்கி முன்னேற, வியற் மின் பின்வாங்க பிரெஞ்சு வியட்நாம் போர் ஆரம்பித்தது. இந்தப் போரில், முழு வியட்நாமும் பிரெஞ்சு ஆதிக்கத்தை எதிர்க்கவில்லையென்பதையும் கவனிக்க வேண்டும். வியட்நாமின் அரச வாரிசாக இருந்த பாவோ டாய் (Bao Dai), பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் ஒரு தனி தேசமாக வியட்நாம் தொடர்வதை இறுதி வரை ஆதரித்து வந்தார். தொடர்ந்த யுத்தம் 1954 இல் ஒரு சமாதான ஒப்பந்தத்துடன் முடிவுக்கு வந்த போது, லாவோஸ், கம்போடியா ஆகிய நாடுகள் பிரான்சிடமிருந்து சுதந்திரமடைந்தன. புதிதாக வியட்நாம் தலைவராக நியமிக்கப் பட்ட டியெம், தென் வியட்நாமைத் தனி நாடாகப் பிரகடனம் செய்ததோடு, வடக்கில் இருந்த வியற் மின் தரப்பிற்கும், தென் வியட்நாமிற்கும் போர் மீண்டும் மூண்டது. அமெரிக்காவின் வியட்நாம் பிரவேசம் அமெரிக்கா, உலகப் போரில் பாரிய ஆளணி, பொருளாதார இழப்பின் பின்னர் தன் படைகளை இந்தோ சீன அரங்கில் இருந்து வெகுவாகக் குறைத்துக் கொண்டு, ஐரோப்பிய அரங்கில் கவனம் செலுத்தத் தீர்மானித்திருந்தது (இதனால், 50 களில் வட கொரியா தென் கொரியா மீது தாக்குதல் தொடுத்த போது கூட உடனடியாக சுதாரிக்க இயலாமல் அமெரிக்கப் படைகளின் பசுபிக் தலைமை தடுமாறியது). அமெரிக்கா ஏற்கனவே பிரிட்டனின் காலனித்துவத்தில் இருந்து விடுபட்ட ஒரு நாடு என்ற வகையில், அந்தக் காலப் பகுதியில் ஒரு காலனித்துவ எதிர்ப்பு மனப் பாங்கைக் கொண்டிருந்தமையால், பிரெஞ்சு, பிரிட்டன் அணிகளின் வியட்நாம் மீதான தலையீட்டில் பங்கு கொள்ளாமல் விலகியிருந்தது. இத்தகைய காலனித்துவ எதிர்ப்பின் விளைவாக, உலகில் கம்யூனிச மேலாதிக்கம் உருவாகும் போது எதிர் நடவடிக்கையின்றி இருக்க வேண்டிய சங்கடமான நிலை அமெரிக்காவிற்கு. இப்படியொரு நிலை உருவாகும் என்பதை ஏற்கனவே உணர்ந்திருந்த அமெரிக்க வெளியுறவுத் துறையின் அதிகாரியான ஜோர்ஜ் கெனன், 1947 இலேயே Policy of Containment என்ற ஒரு வெளியுறவுக் கொள்கை ஆவணத்தை தயாரித்து வெளியிட்டிருந்தார். ட்ரூமன் கொள்கை (Truman Doctrine) என்றும் அழைக்கப் படும் இந்த ஆவணத்தின் அடி நாதம்: “உலகின் எந்தப் பகுதியிலும் மக்கள், பிரதேசங்கள் சுதந்திரம், ஜனநாயகம் என்பவற்றை நாடிப் போராடினால், அமெரிக்காவின் ஆதரவு அவர்களுக்குக் கிடைக்கும்” என்பதாக இருந்தது. மறைமுகமாக, "தனி மனித அடக்கு முறையை மையமாகக் கொண்ட கம்யூனிசம் பரவாமல் தடுக்க அமெரிக்கா உலகின் எந்த மூலையிலும் செயல்படும்" என்பதே ட்ரூமன் கொள்கை.   இந்த ட்ரூமன் கொள்கையின் முதல் பரீட்சார்த்தக் களமாக தென் வியட்நாம் இருந்தது எனலாம். 1956 இல், டியேம் தென் வியட்நாமை சுதந்திர நாடாக பிரகடனம் செய்த சில மாதங்களில், அமெரிக்காவின் இராணுவ ஆலோசனையும், பயிற்சியும் தென் வியட்நாமின் படைகளுக்கு வழங்க அமெரிக்கா ஏற்பாடுகளைச் செய்தது. தொடர்ந்து, 1961 இல், சோவியத் ஒன்றியத்திடமிருந்து கடும் சவால்களை எதிர் கொண்ட அமெரிக்க அதிபர் கெனடி, அமெரிக்காவின் விசேட படைகளை தென் வியட்நாமிற்கு அனுப்பி வைக்கிறார். விரைவாகவே, பகிரங்கமாக தென் வியட்நாமில் ஒரு அமெரிக்கப் படைத் தலைமயகப் பிரிவு வியட்நாமின் (US Military Assistance Command Vietnam- MACV) நடவடிக்கைகளுக்காகத் திறக்கப் படுகிறது. கெனடியின் கொலையைத் தொடர்ந்து அமெரிக்க அதிபரான லிண்டன் ஜோன்சன், நேரடியான அமெரிக்கப் படை நடவடிக்கைகளை வியட்நாமில் ஆரம்பிக்க அனுமதி அளித்தது 1965 பெப்ரவரியில். இந்த நடவடிக்கைக்கு அமெரிக்க காங்கிரஸ் அனுமதி அளித்திருந்தது குறிப்பிடத் தக்கது. Operation Rolling Thunder என்ற பெயருடன், வட வியட்நாம் மீது தொடர் குண்டு வீச்சு நடத்துவது தான் அமெரிக்காவின் முதல் நடவடிக்கை.  வடக்கும் தெற்கும் 1954 இன் ஜெனீவா ஒப்பந்தம், வியட்நாமை வடக்கு தெற்காக 17 பாகை அகலாங்குக் கோட்டின் படி இரு நாடுகளாகப் பிரித்து விட்டிருந்தது. 10 மாதங்களுக்குள் இரு பாதிகளிலும் இருக்கும் வியட்நாமிய மக்கள் தாங்கள் விரும்பும் பாதிக்கு நகர்ந்து விடுமாறும் கோரப் பட்டிருந்தது. வடக்கிலும் தெற்கிலும் இருந்து பழி வாங்கல்களுக்கு அஞ்சி மக்கள் குடிபெயர்ந்த போது குடும்பங்கள், உறவுகள் பிரிந்தன. ஹோ சி மின்னின் கம்யூனிச வழியை ஆதரித்த மக்கள், வடக்கு நோக்கி நகர்ந்தனர், இவர்களில் பலர் வியற் கொங் என அழைக்கப் பட்ட கம்யூனிச ஆயுதப் படையில் சேர்ந்தனர். தென் வியட்நாமில், கம்யூனிச வடக்கை ஆதரித்த பலர் தங்கவில்லையாயினும், நடு நிலையாக நிற்க முனைந்தவர்களே நிம்மதியாக வசிக்க இயலாத கெடு பிடிகளும், கைதுகளும் தொடர்ந்தன. இந்த நிலையில், வடக்கின் கம்யூனிச ஆயுதப் பிரிவான வியற் கொங், வியட்நாமின் அடர்ந்த காடுகளூடாக Ho Chi Minh trail எனப்படும் ஒரு இரகசிய வினியோக வழியை உருவாக்கி, தென் வியட்நாமை உள்ளிருந்தே ஆக்கிரமிக்கும் வழிகளைத் தேடியது.  இந்த இரகசிய காட்டுப் பாதை வட வியட்நாமில் இருந்து 500 கிலோமீற்றர்கள் வரை தெற்கு நோக்கி லாவோஸ் மற்றும் கம்போடியா நாடுகளினூடாக நகர்ந்து தென் வியட்நாமில் 3 - 4 இடங்களில் எல்லையூடாக ஊடறுத்து உட் புகும் வழியை வியற் கொங் போராளிகளுக்கு வழங்கியது. இந்த வினியோக வழியை முறியடிக்கும் இரகசிய யுத்தமொன்றை, அமெரிக்க விசேட படைகள் லாவோஸ் காடுகளில் வியட்நாம் ஆக்கிரமிக்கப் படும் முன்னர் இருந்தே முன்னெடுத்து வந்தன. சின்னாபின்னமான வியட்நாம் மக்கள் பனிப்போர் காலத்தில் அமெரிக்கா நடத்திய யுத்தங்களுள், மிக உயர்வான பொது மக்கள் அழிவை உருவாக்கியது வியட்நாம் போர் தான். 1965 முதல் 1975 வரையான வியட்நாம் யுத்தத்தில் கொல்லப் பட்ட மக்கள் தொகை 2 மில்லியன்கள்: வியட்நாமியர், கம்போடியர், லாவோஸ் நாட்டவர் இந்த 2 மில்லியன் பலிகளில் அடங்குகின்றனர். இதை விட 5.5 மில்லியன் பொது மக்கள் காயமடைந்தனர். வாழ்விடங்கள், பயிர்செய்கை நிலங்கள் அழிக்கப் பட்டன. இந்த 10 வருட யுத்தத்தில், அமெரிக்காவின் நேரடிப் பிரசன்னம் 1972 வரை நீடித்த அமெரிக்க வியட்நாம் யுத்தம். இந்தக் காலப் பகுதியில், அமெரிக்கப் படைகள் மட்டுமன்றி, பசுபிக்கில் அமெரிக்காவின் நேச அணியைச் சேர்ந்த தென் கொரியா, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளின் படைகளும் பெருமளவில் யுத்தத்தில் பங்கு பற்றின. இந்தப் படைகளும், அமெரிக்கப் படைகளுடன் சேர்ந்து வியட்நாம் மக்களுக்கெதிரான கொடூர வன்முறைகளை நிகழ்த்தினாலும், குறிப்பிடத் தக்க பாரிய வன்முறைகளை அமெரிக்கப் படைகளே செய்தன. இந்த வன்முறைகள் பற்றி ஏராளமான சாட்சியங்களும், அவற்றின் அடிப்படையிலான நூல்களும் வெளிவந்திருக்கின்றன. வியட்நாம் போரில், அமெரிக்கப் படைகள் பொது மக்களை நடத்திய விதத்திற்கு மிகச் சிறந்த உதாரணமான சம்பவம் மை லாய் (My Lai) படுகொலைச் சம்பவம். 1968 இல், ஒரு மார்ச் மாதம் காலையில் மை லாய் கிராமத்தில் நூற்றுக் கணக்கான வியட்நாமிய பொது மக்களைச் சுற்றி வளைத்த அமெரிக்கப் படைப்பிரிவின் அணியொன்று, மிகக் குறுகிய நேர விசாரிப்பின் பின்னர் அவர்களைச் சரமாரியாகச் சுட்டுக் கொன்றது. கொல்லப் பட்ட மக்கள் ஒரு 500 பேர் வரை இருப்பர், அனைவரும் நிராயுத பாணிகள், பெரும்பாலானோர் பெண்களும் குழந்தைகளுமாக இருந்தனர். இந்தப் படுகொலை பாரிய இரகசியமாக அல்லாமல், நூற்றுக் கணக்கான அமெரிக்கப் படையினரின் முன்னிலையில் நடந்தது. அந்த நடவடிக்கைப் பகுதியில், உலங்கு வானூர்தி விமானியாக சுற்றித் திரிந்த ஹியூ தொம்சன் என்ற ஒருவரைத் தவிர யாரும் இதைத் தடுக்க முயலவில்லை. தொம்சன், தன்னுடைய உலங்கு வானூர்தியை அமெரிக்கப் படைகளுக்கும் கொல்லப் படவிருந்த மக்கள் கூட்டத்திற்குமிடையில் தரையிறக்கி ஒரு சிறு தொகையான சிவிலியன்களைக் காப்பாற்றினார். காயமடைந்த சிலரை உலங்கு வானூர்தி மூலம் அகற்றிய பின்னர், மேலதிகாரிகளுக்கும் மை லாய் படுகொலை பற்றித் தெரிவித்தார் தொம்சன். மிகுந்த தயக்கத்துடன் விசாரித்த அமெரிக்க படைத்துறை, படு கொலை பற்றிச் சாட்சி சொன்னவர்களைத் தண்டனை கொடுத்து விலக்கி வைத்தது. படு கொலைக்குத் தலைமை தாங்கிய படை அதிகாரி வில்லியம் கலி, 3 வருடங்கள் கழித்து இராணுவ நீதி மன்றில் சிறைத் தண்டனை விதிக்கப் பட்டாலும், 3 நாட்கள் மட்டுமே சிறையில் கழித்த பின்னர் மேன்முறையீடு, பிணை என இன்று வரை சுதந்திரமாக உயிரோடிருக்கிறார். இந்தப் படுகொலையில் சரியாக நடந்து கொண்ட விமானி தொம்சனையும் இன்னும் இருவரையும் 1998 இல் - 30 ஆண்டுகள் கழித்து- அமெரிக்க இராணுவம் விருது கொடுத்துக் கௌரவித்தது. இத்தகைய சம்பவங்கள் மட்டுமன்றி, ஒட்டு மொத்தமாக வியட்நாம் மக்களை வகை தொகையின்றிக் கொன்ற நேபாம் குண்டுகள் (Napalm - இது ஒரு பெற்றோலியம் ஜெல்லினால் செய்யப் பட்ட குண்டு), ஏஜென்ற் ஒறேஞ் எனப்படும் இரசாயன ஆயுதத் தாக்குதல் என்பனவும் அமெரிக்காவின் கொலை ஆயுதங்களாக விளங்கின. 1972 இல், அமெரிக்காவில் உள்ளூரில் வியட்நாம் போருக்கெதிராக எழுந்த எதிர்ப்புகளால், அமெரிக்கா தன் தாக்குதல் படைகளை முற்றாக விலக்கிக் கொண்ட போது 58,000 அமெரிக்கப் படையினர் இறந்திருந்தனர். இதை விட இலட்சக் கணக்கான உயிர் தப்பிய அமெரிக்கப் படையினருக்கு, PTSD என்ற மனவடு நோய் காரணமாக, அவர்களால் சாதாரண வாழ்க்கைக்குத் திரும்ப இயலாத நிலை ஏற்பட்டது. வியட்நாம் போரின் முடிவு அமெரிக்காவின் படை விலகலுக்குப் பின்னர், படிப்படியாக அமெரிக்காவின் தென் வியட்நாமிற்கான நிதி, ஆயுதம், பயிற்சி என்பன குறைக்கப் பட்டன. 1975 ஏப்ரலில், வடக்கு வியட்நாமின் படைகள் மிக இலகுவாக தெற்கு வியட்நாமின் சாய்கன் நகரை நோக்கி நெருங்கி வந்த போது, அமெரிக்காவின் ஆதரவாளர்கள், அமெரிக்கப் பிரஜைகள் ஆகியோரை Operation Frequent Wind  என்ற நடவடிக்கை மூலம் அவசர அவசரமாக வெளியேற்றினார்கள். தெற்கு வியட்நாமை ஆக்கிரமித்த வடக்கு வியட்நாம், மேலும் முன்னேறி, கம்போடியாவையும் ஒரு கட்டத்தில் ஆக்கிரமித்து, இந்தோ சீனப் பிரதேசத்தை ஒரு தொடர் கொலைக் களமாக வைத்திருந்தது. இந்தப் பிரதேசங்களில் இருந்து கடல் வழியே தப்பியோடிய மக்கள் “படகு மக்கள்” என அழைக்கப் பட்டனர். இன்று றொஹிங்கியாக்களுக்கு நிகழும் அத்தனை அனியாயங்களும் அவர்களுக்கும் நிகழ்ந்தன. -          தொடரும்
    • தமிழ்நாட்டில் நடக்கும் அநிஞாயங்கள் பாலியல் வல்லுறவுகள் கூட்டு பாலியல் கொலை கொள்ளை என்று திராவிட கும்பல்களால் தினமும் செய்திகள் வருகின்றன. எவருமே அதைப்பற்றி அக்கறை கொள்வதில்லை. ஆனால் சீமானைப்பற்றி ஏதாவது நல்ல செய்தி வந்தால் உடனே கூட்டமாக சேர்ந்து தாக்குதல் நடக்குது. என்ன கூட்டமோ?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.