Jump to content

தாயகம் தொடர்பான நூல்கள் அறிமுகம்


Recommended Posts

அம்மாவின் ரகசியம்

book_ammavinrakasiyam57.jpg - 12.04 Kb

வாசிக்கவென எடுத்துவைத்த நூல்களில் இன்று அதிகாலை என் கையில் அகப்பட்ட நூல் ‘அம்மாவின் ரகசியம்’. சுநேத்ரா ராஜகருணநாயகவின் இச் சிங்கள மொழியிலான படைப்பை தமிழில் தந்திருப்பவர் எம்.ரிஷான் ஷெரீப். வாசிப்பை இடறல் செய்யாத மொழிபெயர்ப்பு. எம்.ரிஷான் ஷெரீப்பை இதற்காக பாராட்டலாம்.

சிங்கள மொழியிலான ஆக்கங்களின் பரிச்சயம் ஈழத் தமிழர்களுக்கு மிகமிகக் குறைவு. சிங்கள மக்களின் வாழ்க்கைகூட மேலோட்டமாகவே தெரிந்திருக்கிறது அவர்களுக்கு. வாழ்க்கை அழைக்கும் பக்கங்களுக்கெல்லாம் ஓடிக்கொண்டிருக்கும் தேவை மூன்றாம் உலகினைச் சேர்ந்த பெரும்பாலானவர்களின் விதியாகியிருக்கிற இன்றைய காலகட்டத்தில், தார்மீக நியாயங்களின் காரணமாய் தம் தேசத்து அரசியலை வெறுத்து பல படைப்பாளிகளும் தம் தேசத்திலேயே அடையும் துன்பங்களும், புலம்பெயர்ந்து எதிர்கொள்ளும் மனநோக்காடுகளும் பெரும்பாலும் கவனமற்றே இருக்கின்றன. இதை மிக வன்மையாக பிரக்ஞைப் படுத்தியிருக்கிறது இப் படைப்பு.

இவ்வாண்டு(2015) கான்ஸ் சர்வதேச திரப்பட விழாவில் திரையிடப்பட்ட ஒரு விவரணப் படத்தை எழுதி இயக்கிய சர்மினி பெலி என்கிற இலங்கைப் பெண் ஏப்ரல் மாத ‘தி சிறீலங்கா றிப்போர்ட்டர்’ பத்திரிகைக்கு கொடுத்துள்ள அறிமுகப் பேட்டி, இதுபோல் அறநெறிகளின் மீதாக தம் வாழ்க்கையை நிறுத்தியுள்ள பல்வேறு படைப்பாளிகள், விமர்சகர்கள், ஊடகவியலாளர்களின் மனநிலையின் ஒட்டுமொத்தமான வெளிப்பாடாக இருப்பதை காணமுடியும். அவர், முப்பதாண்டுகளுக்கு மேலாக தான் இலங்கையில் வசித்த காலத்தில் பல கொலைகளையே கண்கூடாகக் கண்டதாகவும், இலங்கை அரசாங்கத்தின் அவ்வகையான ஒவ்வொரு கொடுமை நிகழ்த்தலுக்கும் தானும் ஒருவகையில் காரணமென்பதை தான் உணர்ந்திருப்பதாகவும் அதில் கூறுகிறார்.

http://www.geotamil.com/pathivukalnew/index.php?option=com_content&view=section&layout=blog&id=15&Itemid=62

Link to comment
Share on other sites

nallur.jpg

மங்கை பதிப்பகம் (கனடா) மற்றும் சிநேகா பதிப்பகம் (தமிழகம்) இணைந்து வெளியிட்ட நல்லூர் இராஜதானி நகர அமைப்பு (முதற் பதிப்பு: டிசம்பர் 1996) தற்போது மின்னூலாக .pdf கோப்பாக விற்பனைக்கு இங்கு கிடைக்கிறது. ஈழத்துத் தமிழ் மன்னர்களின் புகழ்பெற்ற இராஜதானிகளில் ஒன்றாக விளங்கிய நகர் நல்லூர். ஈழத்துத் தமிழ் மன்னர்கள் பற்றிய வரலாற்று நூல்கள் பல கிடைக்கின்றன. ஆனால், தமிழ் அரசர்களின் இராஜதானிகளாக விளங்கிய நகரங்களின் நகர அமைப்பு பற்றி நூல்களெதுவும் இதுவரையில் வெளி வரவில்லை. அந்த வகையில் இந்நூல் ஒரு முதல் நூல். கிடைக்கப் பெற்ற வரலாற்றுத் தகவல்கள், கள ஆய்வுத் தகவல்கள் மற்றும் திராவிடக் கட்டடக்கலை / நகர அமைப்புத் தகவல்கள், ஆய்வுகளின் அடிப்படையில் நல்லூர் இராஜதானியின் நகர அமைப்பு பற்றி ஆராயும் ஆய்வு நூல். எழுத்தாளர் செ. யோகநாதன் முன்னுரையில் குறிப்பிட்டதுபோல் பின்னாளில் இத்துறையில் ஆராய விளையும் எவருக்குமொரு முதனூலாக விளங்கும் நூலிது. இந்நூலின் திருத்திய இரண்டாவது பதிப்பு இன்னும் நூலாக வெளிவரவில்லை. ஆனால், இணைய இதழ்களான பதிவுகள், திண்ணை ஆகியவற்றில் தொடராக வெளிவந்துள்ளது. விரைவில் அதன் மின்னூல் பதிப்பினையும் இங்கு வாங்கலாம். நல்லார் இராஜதானி நகர அமைப்பு நூலின் முதற்பதிப்பினை $ 3 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும்.  அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம்.   வாங்க விரும்பினால்

இங்கு 

 http://www.geotamil.com/pathivukalnew/index.php?option=com_dms&task=view_document&category_id=2&id=2&Itemid=17

வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்'!

vng_kudivaravalan599.jpg

நீண்ட நாள்களாக வெளிவருவதாகவிருந்த எனது 'குடிவரவாளன்' நாவல் டிசம்பர் முதல் வாரத்தில், தமிழகத்தில் 'ஓவியா' பதிப்பகம் மூலமாக வெளிவரவுள்ளது. இந்நாவல் நான் ஏற்கனவே எழுதி தமிழகத்தில் வெளியான 'அமெரிக்கா' சிறுநாவலின் தொடர்ச்சி. 'பதிவுகள்', 'திண்ணை' ஆகிய இணைய இதழ்களில் ஆரம்பத்தில் 'அமெரிக்கா 2' என்னும் பெயரில் வெளியாகிப்பின்னர் 'குடிவரவாளன்' என்னும் பெயர் மாற்றம் பெற்ற படைப்பு.

இலங்கைத்தமிழ் அகதி ஒருவரின் நியூயார்க் தடுப்பு முகாம் வாழ்வினை 'அமெரிக்கா' விபரித்தால், இந்நாவல் நியூயோர்க் மாநகரில் சட்டவிரோதக் குடிகளிலொருவனாக சுமார் ஒரு வருட காலம் அலைந்து திரிந்த இலங்கைத்தமிழ் அகதியொருவனின் அனுபவங்களை விபரிக்கும்.

'ஓவியா' பதிப்பக வெளியீடாகத் தமிழகத்தில் டிஸம்பர் முதல் வாரத்தில் விற்பனைக்கு வெளிவரவுள்ளது.

Oviya Pathippagam
17-16-5A, K.K.Nagar,
Batlagundua - 642 202
Tamil Nadu, India

Phone: 04543 - 26 26 86
Cell: 766 755 711 4, 96 2 96 52 6 52
email: oviyapathippagam@gmail.com | vathilaipraba@gmail.com

Link to comment
Share on other sites

5 hours ago, Athavan CH said:

வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்'!

இணைப்பிற்கு நன்றி ஆதவன்.

குடிவரவாளன் நாவல் வாசிக்க வேண்டும் போலுள்ளது. pdfஇல் இப் புத்தகத்தை வாங்க முடியுமானால் இணைப்பைத் தரமுடியுமா?

Link to comment
Share on other sites

pathivukal .com 

இது கிரியின் இணைய தளம் .அதில் போய்ப்பார்க்கவும் ஜீவன் .

Link to comment
Share on other sites

நூல் அறிமுகம்: பல்வேறு பயன் தரும் பனைமரம் (MAN’S TROPICAL BOON-THE PALMYRA PALM)

நூல் அறிமுகம்: பல்வேறு பயன் தரும் பனைமரம்  (MAN’S TROPICAL BOON-THE PALMYRA PALM)

நுணாவிலூர் கா. விசயரத்தினம் (இலண்டன்)

இலக்கிய  ஆய்வு  நூலுக்கான  'எழுத்தாளர் ஊக்குவிப்பு மையம்'  வழங்கிய  'தமிழியல் விருது-2011' என்ற பரிசைப் பெற்ற, செந்தமிழ் செழிக்கும் யாழ் மண்ணில் நுணாவிலூர் எனும் பூங்காவில் மலர்ந்தெழுந்த நுணாவிலூர் கா. விசயரத்தினம் அவர்களால்  எழுதப்பட்ட 'பல்வேறு பயன் தரும் பனைமரம்' என்ற ஆய்வு நூலொன்று அண்மையில் வெளிவந்துள்ளது. இந்நூலில், பல்வேறு பயன் தரும் பனைமரம், சங்க இலக்கியங்களில் பவனி வரும் விலங்குகளும் பறந்து பறந்து கீதம் பாடும் பறவைகளும், புகழ் நாடாது ஊதியம் பெறாது தீந்தேன் தரும் தேனீக்கள், மண்ணின் மாண்பும் மரத்தின் மாட்சியும், ஐந்திணைகளில் அமைந்த பதினான்கு வகையான வேறுபட்ட கருப்பொருள்கள், தேசத்துக்குப் பொருத்தமான தொழில்நுட்ப முறைகள், தொல்காப்பியம்- அகநானூறு- சிலப்பதிகாரம் காட்டும் கரணவியல், ஆண் பெண் பேதம் பேசும் தமிழ் இலக்கியப் பாங்கு, உலகரங்கில் நேர்மையும் தலைமையும், கலப்புத் திருமணம், இயமராசன் தமிழனுக்கு அளித்த வரம், ஐக்கிய நாடுகள் அமைப்பு, உலக நெறியான மனித நேயம், குடும்பமும் ஒற்றுமையும், கல்வியின் வருங்காலம், பூவுலகைப் படித்தல், சொர்க்கம் தரும் சுகம், இலக்கியம் சார்ந்த போட்டிகள், மனிதநேயத் தொடர்புகள், சொர்க்கம்! நரகம்! மறுபிறப்பு! கற்பனையா? நிசமா?, உலக சமாதானம் பேசும் இலக்கியங்கள், மகப்பேற்றிலும் மகத்தான உலக சாதனை படைக்கும் பெண்கள், மனித உரிமைகள் அன்றும் இன்றும், சனப்பெருக்கம் உலகிற்கோர் ஏற்றம் ஆகியவை பற்றி அலசப்பட்டுப் பேசப்பட்டுள்ளன. இவை இலக்கியம், இதிகாசம், உலகரங்கு, வாழ்வியல், மனிதநேயம், விலங்கியல், வானியல், பொருளாதாரம், தாவரவியல் ஆகிய பொருட்பிரிவுகளின் அடக்கமாகும்.

மனிதனுக்குமுன் தோன்றிய பனைமரம், அதன் கதை, காணப்படும் நாடுகள், தோற்றுவாய், கிளைப்பனை, பனை பற்றிப் பேசும் இலக்கியங்கள், பனையின் சிறப்பு, பனை தரும் உணவுப்பொருட்கள் - பதநீர், நுங்கு, பனம்பழம், ஒடியல், பனங்கிழங்கு, பூரான், புழுக்கொடியல், பனஞ்சோறு, ஒடியற்பிட்டு, பனை தரும் உணவிலிப் பொருட்கள் - பனைஓலை, காவோலை, மனைமட்டை, பனை ஈர்க்கு, கங்குமட்டை, பன்னாடை, பணிவில், உலகில் சுமார் 14 கோடி பனைமரங்கள் வளர்ந்து கொண்டிருக்கும் செய்திகள் போன்ற பல விடயங்கள் கூறப்படுகின்றன.

சங்க நூல்களில் இலக்கியம், அறிவியல், வாழ்வியல், இயற்கை வளம், உயிரியல், அறவியல் போன்றவை நிரம்பி  வழிதலைக் காண்கின்றோம்.  இவையின்றி அவை  உயிர் பெறாதெனலாம். மண்ணைப் பார்த்து விலங்குகள் பவனி வருவதையும், விண்ணைப் பார்த்துப் பறவைகள் பறந்து கீதம் பாடுவதையும் கண்ணுற்று அளவிலா ஆனந்தமடைகிறோம். சங்க இலக்கியங்களான தொல்காப்பியம், அகநானூறு, புறநானூறு, கலித்தொகை, ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து, பரிபாடல், சிலப்பதிகாரம் ஆகிய நூல்களில் பல்வேறுபட்ட விலங்கினங்களும், பறவையினங்களும் பேசப்பட்டுள்ள பாங்கினையும் காணலாம்.

ஒரு தேன் கூட்டில் ஓர் இராணித் தேனீ, பல ஆயிரம் ஆண் தேனீக்கள், பல்லாயிரம் பெண் உழைப்பாளித் தேனீக்கள் ஆகிய மூவகைத் தேனீக்கள் ஒற்றுமையாக வாழ்கின்றன. ஒரு சாதாரணத் தேன் கூட்டில் இருபதாயிரம் (20,000) முதல் முப்பதாயிரம்; (30,000) வரையான தேனீக்கள் உள்ளன.

மண், மரங்களுக்கு முன்பும், மரங்கள் மனிதனுக்கு முன்பும் தோன்றியவை. மண்ணின்றி மரங்களில்லை. மரங்களின்றி மனித வாழ்வு நிறைவில்லை. மண், மரங்கள், மனிதன் ஆகிய மூன்றும் ஒன்றுடனொன்று இறுகிய தொடர்பிலுள்ளன. இவையின்றி உலகமுமில்லையெனலாம். நிலம் பற்றியும், மண் பற்றியும், மரங்கள் பற்றியும் சங்க இலக்கியங்களில் நிறையப் பேசப்பட்டுள்ளதையும் காண்கின்றோம். மரங்கள் முப்பத்தெட்டுக்கோடி (38,00,00,000) ஆண்டுகளுக்குமுன் தோன்றியவை.

கரணவியல் (சடங்கு முறைகள்) பற்றித் தொல்காப்பியம், அகநானூறு, சிலப்பதிகாரம் ஆகிய சங்க நூல்கள் காட்டும் வேறுபட்ட சடங்கு முறைகளையும் காண்கின்றோம். தொல்காப்பியர் காலத்திலும், அகநானூற்றுக் காலத்திலும் பார்ப்பான் மணவிழாவிற் பங்கேற்கவில்லை. ஆனால், சிலப்பதிகாரத்தில் முதன்முதலாகப் பார்ப்பான் பங்கேற்று, தம்பதியினர் தீவலம் வந்து, மணவிழா நிறைவு பெற்றுள்ளது.

தொல்காப்பியம், குறுந்தொகை, புறநானூறு, திருக்குறள், திருமந்திரம், மனுநீதி நூல், நீதிநெறி நூல்கள், பழமொழிகள், திருவாசகம், பாரதியார் கவிதைகள், கண்ணதாசன் பாடல்கள் ஆகிய நூல்களில் ஆண், பெண் ஏற்றத் தாழ்வுகள் தரப்பட்டுள்ளன. 

திருமணங்களிற் பல நடைமுறைகள் உள்ளன. அவற்றில் கலப்புத் திருமணம் ஒன்றாகும். அது பற்றி  இவை  ஒரு சிலவாகும்:- (1)  இணைப்புறவுக்  கலப்பு  மணம், (2) ntt;வேறு இனங்களுக்கிடையே நிகழும் திருமணம், (3) நாடுகடந்து சென்று அங்குள்ள ஆண், பெண்ணை மணம் புரிதல், (4) இனக் கலப்புத் திருமணம், (5) கணவன் மனைவி போன்று பிறரோடு இணைந்து வாழ்தல் ஆகியனவாம். கலப்புத் திருமணத்திலும் நன்மைகளும், தீமைகளும் உள. ஆனால் நீண்ட வாழ்நாளில் கலப்புத் திருமணத்தால் தீமைகளை விட அதிக நன்மைகளே கிட்டும் எனலாம்.

'குடும்பமும் ஒற்றுமையும;’ என்ற ஆக்கத்தில்- குடும்பம் என்பது கணவன், மனைவி, குழந்தைகள், உறவினர் எல்லாரும் ஒன்றுகூடி வாழும் ஒரு சமூக அமைப்பு. இதுவே இல்லற வாழ்க்கையுமாகும். அது அன்று நிலைத்திருந்தது. இன்று அது சிதைந்து, 'தனிக் குடித்தனம்' ஆகிவிட்டது. சங்ககால அறிவுரைகள், நம் முன்னோர் வாழ்ந்து விட்டுச் சென்ற வாழ்வியல் முறைகள், எச்சங்கள், பிறர் அனுபவங்கள் யாவும் எம்மை ஆற்றுப்படுத்தி நிற்க, குடும்பமும் ஒற்றுமையும் சீர்பெறும் என்பது திண்ணம்.

டாக்டர் சிவ தியாகராஜா அவர்களின் அணிந்துரையும், செல்வன். பிரவின் யெயராசா அவர்களின் அட்டைப்பட ஓவியமும் இந்நூலை மேலும் அலங்கரித்து நிற்கின்றன.

இந் நூலைப் பெற விரும்புவோர் தொடர்பு கொள்ள வேண்டிய விலாசம்:-

 K. Wijeyaratnam,
35,  Southborough  Road,
Bickley, Bromley,  Kent.  
BR1  2EA

Total pages:-   212
Publishers:-  Wijey Publication
Telephone No.  020  3489  6569
E-mail :-  wijey@talktalk.net 
Price per copy:- £3.99 + postage  charges.

http://www.geotamil.com/pathivukalnew/index.php?option=com_content&view=article&id=2298:-mans-tropical-boon-the-palmyra-palm&catid=14:2011-03-03-17-27-43&Itemid=62

Link to comment
Share on other sites

அர்ப்பண வாழ்வின் வலி சுமந்த மனிதன்: சொ.டேவிட் ஐயா!

அர்ப்பண வாழ்வின் வலி சுமந்த மனிதன்: சொ.டேவிட் ஐயா!

சமூகம் இயல் பதிப்பகம்' வெளியீடாக வெளிவந்திருக்கிறது 'அர்ப்பண வாழ்வின் வலி சுமந்த மனிதன்' என்னும் காந்தியம் அமைப்பின் ஸ்தாபகரானடேவிட் ஐயா அவர்கள் பற்றிய இச்சிறு நூல். பதிப்பாளர் எம்.பெளசர் 'இந்தத்தொகுப்புப் பிரதி, காந்தியம் தொடர்பான , டேவிட் ஐயா தொடர்பான ஒரு வரன்முறையான ஆய்வுப் பிரதியன்று. காந்தியம் தொடர்பாகவும், டேவிட் ஐயா தொடர்பாகவும் எழுதப்பட வேண்டி உள்ள விரிவான ஆய்வு முயற்சிகளுக்கான தொடக்கப்புள்ளியை அழுத்தி வலியுறுத்துவதே இத்தொகுப்பின் நோக்கமாகும்' நூல் பற்றிய பதிப்பாளர் குறிப்பில் கூறியிருக்கின்றார். நூலின் உள்ளடக்கம் பதிப்பாளரின் நோக்கத்தை நிறைவேற்றியிருக்கின்றதென்று நிச்சயமாக அடித்துக்கூறலாம்.

எட்டு கட்டுரைகளையும், கவிதையொன்றினையும் உள்ளடக்கியுள்ள இச்சிறு நூலின் கட்டுரைகளை எழுதியோர் விபரங்கள் வருமாறு: மு.பாக்கியநாதன் ('டேவிட் ஐயா மற்றும் காந்தியத்துடனான அனுபவப்பதிவு'), ஜென்னி ஜெயச்சந்திரன் ('காந்தியத்தில் எனது நினைவுப்பதிவு (1979-1983), பீ.ஏ.காதர் ('மனித நேயன் டேவிட் ஐயா! நினைவுகளும் பதிவுகளும்'), பீமன் ('டேவிட் ஐயாவின் பக்கங்களில் ஒன்று.', வ.ந.கிரிதரன் ('நாவலர் பண்ணை பற்றிய நினைவுகள்'), விஜயகுமாரன் (கவிதை:'தொண்ணூறு வயதுப்பயங்கரவாதியே! போய் வாரும் அய்யா!'), நிலாந்தன் ('டேவிட் ஐயா: அவருடைய வாழ்க்கையே அவருடைய செய்தியா? '), இ.பூபாலசிங்கம் ('நினைவு மீட்டல்'), மற்றும் 'காந்தளகம்' சச்சிதானந்தனின் ஆங்கிலக்கட்டுரை (David envisaged human emancipation through Tamil struggle')

காந்தியம் அமைப்பு பற்றி, அதன் ஸ்தாபகர் டேவிட் ஐயா பற்றி, மருத்துவர் ராஜசுந்தரம் பற்றி, காந்தியத்தின் நோக்கம், வேலைத்திட்டங்கள் பற்றி  எனக்காந்தியம் அமைப்பு பற்றிய பன்முகப்பார்வையினை இந்நூலின் கட்டுரைகள் வழங்குகின்றன. 

பதிப்பகம் பற்றிய விபரங்கள்:
Art of Socio Publication (சமூகம் இயல் பதிப்பகம்)
166 Plum Lane, london , SE18 3HF, UK

http://www.geotamil.com/pathivukalnew/index.php?option=com_conte

Link to comment
Share on other sites

மலையகமும் தமிழர்களும்!

மலையகமும் தமிழர்களும்!

– சித்தார்த்தன் சுந்தரம் இலங்கைத் தமிழர்களின் இன்னல்கள் காலங்காலமாகத் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன. இந்தியாவிலிருந்து இலங்கைக்குத் தொழில் நிமித்தம் புலம் பெயர்ந்தத் தொழிலாளிகளைக் ‘கூலிகள்’ என்றும் அவர்களது மொழி `கூலித்தமிழ்’ என்றும் அழைக்கப்பட்டு வந்ததாக `கூலித்தமிழ்’ என்கிற இந்நூலின் ஆசிரியர் மு. நித்தியானந்தன் தனது முன்னுரையில் குறிப்பிட்டிருக்கிறார். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பேசப்பட்டு வரும் வட்டாரத் தமிழ் பற்றி நாம் அறிந்திருந்தாலும் இந்தக் கூலித்தமிழ் பற்றி அறிந்திருப்பதற்கான வாய்ப்புகள் குறைவுதான். பத்தொன்பதாம் நூற்றாண்டில் தமிழகத்தின் பல பகுதிகளிலிருந்து…

Read the rest of this entry -  http://puthagampesuthu.com/2015/08/12/%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%95%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/

 

Link to comment
Share on other sites

புரிந்துகொள்ளுங்கள் நாங்கள் சிறுவர்கள்

siru_2_2621238a.jpg  

மேலும் விபரங்களுக்கு

http://www.yarl.com/forum3/topic/166800-%E0%AE%AA%E0%AF%81%

 

Link to comment
Share on other sites

  • 3 months later...

கனடா: 'அர்ப்பண வாழ்வின் வலி சுமந்த மனிதன் - சொ. அ. டேவிட் ஐயா' நூல் விற்பனைக்கு!

'அர்ப்பண வாழ்வின் வலி சுமந்த மனிதன் - சொ. அ. டேவிட் ஐயா' நூல் விற்பனைக்கு!

'அர்ப்பண வாழ்வின் வலி சுமந்த மனிதன் - சொ. அ. டேவிட் ஐயா என்னும் டேவிட் ஐயா பற்றிய அறிமுக நூலின் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான பிரதிகள் திரு. அலெக்ஸ் வர்மா அவர்களிடமுள்ளன. நூலின் விலை $10 (கனடியன்). நூலினை வாங்க விரும்புவோர் தொடர்பு கொள்ள வேண்டிய விபரங்கள் வருமாறு:

அலெக்ஸ் வர்மா:
தொலைபேசி எண்: 416 857 9773
மின்னஞ்சல்: alex.eravi@gmail.com

அலெக்ஸ் வர்மாவுடன் (Alex Varma) முகநூலில் நட்பு பேணுவோர் அவரது உட்பெட்டி வாயிலாகவும் அவருடன் தொடர்பு கொள்ளலாம்.

நூலில் இடம் பெற்றுள்ள கட்டுரைகள் பற்றிய விபரங்கள் வருமாறு:

*டேவிட் ஐயா மற்றும் காந்தீயத்துடனான அனுபவப் பகிர்வு - மு. பாக்கியநாதன்
*காந்தீயத்தில் எனது நினைவுப் பதிவு (1979-1983) -ஜென்னி ஜெயச்சந்திரன்
*மனித நேயன் டேவிட் ஐயா! நினைவுகளும் பதிவுகளும் - பீ. ஏ. காதர்
*டேவிட் ஐயாவின் பக்கங்களில் ஒன்று -பீமன்
*நாவலர் பண்ணை பற்றிய நினைவுகள்! - வ. ந கிரிதரன்
*டேவிட் ஐயா: அவருடைய வாழ்க்கையே அவரின் செய்தியா? - நிலாந்தன்
*நினைவு மீட்டல் - இ. பூபாலசிங்கம்
*David Envisaged Human Emancipation Through Tamil Struggle - K. Sachithananthan

தகவல்: அலெக்ஸ் வர்மா

http://www.geotamil.com/pathivukalnew/index.php?option=com_content&view=article&id=3159:2016-02-08-02-03-05&catid=15:2011-03-03-19-55-48&Itemid=29

Link to comment
Share on other sites

ராஜாஜி ராஜகோபாலனின் முதல் சிறுகதை நூல் குதிரை இல்லாத ராஜகுமாரன்

Barack Obama

தெளிவத்தை ஜோசப்  

30 வருடங்களுக்கு மேலாக கனடாவில் வசிக்கும் ராஜகோபாலன் பேராசிரியர் சிவத்தம்பியின் ஊர்க்காரர். கரவெட்டி மண்ணின் மைந்தன். கனடா வாசியானாலும் தனது ஊர்ப்பற்று பற்றி அவரே இப்படிக் கூறுகின்றார். நேற்றைய தலைமுறையைச் சேர்ந்த நான் பல காலம் ஊரில் வாழ்ந்தவன் என்று சொல்வதிலும் பார்க்க ஊரோடு வாழ்ந்தவன் என்று சொல்வதில் தான் பெருமை கொள்கின்றேன். நான் நேசிக்கும் இந்த மண்ணின் மக்களுடைய அன்றைய கால வாழ்வின் ஒவ்வொரு அங்கங்களிலும் அவர்களுடன் கூடப் பயணித்திருக்கின்றேன். பிறந்து வளர்ந்து படித்த நாட்டை விட்டேகிய பிறகும் இந்த மக்களுடன் என் மனம் இன்றும் இறுக ஒன்றிப்போயிருப்பதற்கு இந்த ஊர் மண்ணின் வாசனைதான் காரணம் என்பேன். (இந்தத் தொகுதியின் என்னுரை)

இவர் எழுபதுகளில் எழுத்துலகப் பிரவேசம் செய்தவர் என்பதும் வீரகேசரி, தினகரன், அலை, மல்லிகை போன்ற ஏடுகளில் இவருடைய கதைகள் வெளிவந்தன என்பதும் குப்பிளான் ஐ.சண்முகனின் முன்னுரை மூலம் தெரிய வருகின்றன. இத்தொகுதியின் கதைகள் எதிலும் அந்தக் கதை வெளிவந்த ஆண்டோ கதை வெளிவந்த பத்திரிகை பற்றிய தகவலோ இடம்பெறவில்லை. தன்னூர்க்காரரும் நண்பருமான குப்பிளான் சண்முகத்திடமே விடாப்பிடியாக நின்று முன்னுரை பெற்றுக் கொண்டதாகவும் குறிக்கின்றார்.

ராஜாஜி ராஜகோபாலன். ஏறத்தாழ அரை நூற்றாண்டு காலத்துக்கு முன்னரேயே என்னோடு அறிமுகமானவர். இருவரும் ஒரே நிறுவனத்தில் ஒரே கிளையிலேயே பல ஆண்டுகளாக இணைந்து பணி புரிந்தோம் என்று தனதுரையை ஆரம்பிக்கின்றார் குப்பிளான் சண்முகன். ராஜகோபாலனது கவிதை நூல் ஒரு வழிப்போக்கனின் வாக்கு மூலம் 2014 இல் வெளி வந்துள்ளதாகவும் முன்னுரையில் குறிக்கின்றார் இவர்.

இந்த நூலை நாகர்கோவில் சுதர்சன் புக்ஸ் வெளியிட்டுள்ளது. காலச்சுவடு பதிப்பகத்தின் இன்னொரு இணைப்பதிப்பகமே சுதர்சன் புக்ஸ் என்பது நூலாசிரியரின் உரை மூலம் தெரிய வருகின்றது. 15 சிறுகதைகள் கொண்ட இத்தொகுதி ஈழத்துச்சிறுகதைத்துறைக்கும் தமிழ்ச்சிறுகதைத்துறைக்கும் ஒரு நல்ல படைப்பாளியை அடையாளம் காட்டி நிற்கிறது என்பதை தயக்கமின்றி கூறலாம். ராஜாஜி கோபாலனது இயற்கையான எழுத்தின் வளம் பாத்திரங்களின் ஊடாக அதை அழகுற வடிவமைத்துக் கொள்ளும் நுட்பம் போன்ற பல அம்சங்கள் இந்த அடையாளப்படுத்தலை அதற்கான தகுதியை உறுதி செய்கின்றன.

தன்னுடைய கதை மாந்தர்கள் பற்றி அவர் குறிப்பிடுவதை சற்றே கவனிப்போம். ஒவ்வொரு கதையிலும் வரும் மாந்தர்கள் குணங்களும் குற்றங்களும் உள்ளவர்கள். ஏனெனில் அவர்கள் எனது காலத்தில் என்னோடு வாழ்ந்த என்னைப்போன்ற சாதாரண மனிதர்கள். அவர்கள் தம் வாழ்வில் வெளிப்படுத்திய காதல், நட்பு, தியாகம் போன்ற உணர்வுகளை அடுக்கியே இக்கதைகளைக்கட்டி எழுப்பியிருக்கின்றேன். இக்கட்டுமானத்தில் காதலையும் காமத்தையும் அளவுக்கதிகமாக அள்ளி மெழுகி இடுகின்றேன் என்ற வாதங்கள் எழவும் கூடும். மனித வரலாறு காதலையும் காமத்தையும் பற்றித்தானே பெரும்பாலும் பேசுகிறது. இவை இரண்டும் இல்லாமல் மனித வாழ்க்கை எவ்வாறு ஆரம்பிக்கும் என்று கேட்கிறேன். இக்கதைகளில் வரும் மனிதர்களோடு நான் கைகோர்த்து உலாவியதைப் போலவே நீங்களும் உலாவ வேண்டும் என்றும் உணர வேண்டுமென்றும் விரும்பினேனேயன்றி என் எழுத்தால் உங்கள் மனதில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்த வேண்டுமென்றோ சமுதாயத்துக்கு ஏதேனும் படிப்பினையைப் புகட்ட வேண்டுமென்றோ அவர்களை உங்களுடன் நான் பேசவைக்க விரும்பவில்லை. மாறாக நான் அந்த மண்ணில் ஒருக்கால் வாழ்ந்து அனுபவித்த சூழலையும் இன்று நீங்கள் அங்கே இன்னும் ஒரு முறையாவது வாழக்கிடைக்க வேண்டுமென அவாவுறும் சூழலையும் எமக்கு உவப்பான மொழியில் உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்பினேன் என்கின்றார்.

இந்தக்கூற்றும் கூட படைப்பு இலக்கியத்துக்கான அவருடைய முக்கியத்துவத்தை இனம் காட்டுவதாகவே அமைகின்றது. இந்தப் 15 கதைகளில் 14 கதைகள் யாழ்ப்பாணத்தமிழ் மக்களின் வாழ்வியலைக் குறிப்பவை.

தலைப்புக்கதையான குதிரை இல்லாத ராஜகுமாரன் என்ற கதையானது அதில் வரும் விஜயா என்ற யாழ்தேவி ரயில் பெண் தன்னுடைய 32 வயதிலும் இன்னும் தன்னை பெண் பார்க்க வந்து போய்க் கொண்டிருப்பவர்களைப் பற்றிய நினைவலைகளில் மூழ்கி நிலை குலைவதை அழகாகக் காட்டுகிறது. கொழும்பு கோட்டையில் ரயில் ஏறி யாழ்ப்பாணத்தில் இறங்குகையில் கதையும் முடிகிறது.

வாசிப்பவனை அலுப்படையச் செய்யாமல் கதையுடன் கூட்டிச்செல்லும் இலாவகமான எழுத்து வன்மை கொண்டவர் இக்கதாசிரியர்.

முதல் கதையாகிய மேலும் சில கேள்விகளில் வரும் பவானி மகள் ஸ்ருதி கறுத்தக்கொழும்பானில் வரும் சண்டைக்கார சரசுவதி என்று அனைவருமே யாழ்ப்பாண மண்ணின் சாதாரண மனிதர்கள்தான்.

குப்பிளான் ஐ.சண்முகன் இந்தத்தொகுப்பில் உள்ள கதைகளில் எனக்குப் பிடித்தமான கதைகள் இரண்டு என்கின்றார். ஒன்று ஆத்மார்த்தமான தத்துவத் தேடல்களைக் கொண்ட அலையில் வெளிவந்த விழிப்பு மற்றது புதிய வாழ்வியல் சூழல் பற்றியதான அந்த ஒருவனைத்தேடி என்ற இரண்டும். அந்த ஒருவனைத்தேடி கதையின் களம் யாழ்ப்பாணம் அல்ல அமெரிக்கா என்றாலும் பாத்திரங்கள் யாழ்ப்பாணத்தவர்கள்தான்.

நீண்ட நெடுங்காலமாக மகளுக்கு மாப்பிள்ளை தேடும் கனடாத் தம்பதியினரின் கதை. 30 வருடங்களுக்கு மேலாக கனடாவில் வாழும் ராஜகோபாலன் அங்குள்ள தமிழர் வாழ்வியலை வைத்து எழுதியுள்ள ஒரே கதை இது என்கிறார் குப்பிளான்.

பெண்ணின் தகப்பனார் வரப்போகும் புதிய மாப்பிள்ளையின் குடும்பம் பற்றி பெருமையடிப்பதை கதாசிரியர் இப்படி எழுதுகின்றார். இவையள் எங்கடை ஊர் ஆக்கள். முப்பது நாப்பது வருசத்துக்கு முந்தியே கனடாவுக்கு வந்திட்டினமாம். வந்த காலத்திலயிருந்தே வான் கூவரில் தான் இருக்கினமாம். டொராண்டோ சனங்களைப் போல் முட்டையிலை மயிர் புடுங்குற ஆக்கள் இல்லையெண்டு அறிஞ்சவன் நான்.

யாழ்ப்பாண மக்களின் வாழ்வியல் கோலங்களை அலாதியான வர்ணனைகளுடனும் நுட்பமான அவதானிப்புடனும் தனக்கேயுரிய தமிழ் நடையிலும் எள்ளலும் காதலும் கனிவும் ததும்பும் சொற்சித்திரங்களுடனும் கதை மாந்தர்களின் உரையாடல்களில் இயல்பாகவே இடம்பெறும் பிரதேசப் பேச்சு வழக்கில் வாசகர் மனம் கட்டுண்டு வாசிப்புச் சுகத்தை முழுமையாக நுகரும்படி நுட்பமாகக் கதையை நகர்த்திச் செல்லும் உத்தியில் ராஜாஜி கவர்ச்சியான தனது திறமையை வெளிப்படுத்தி இருக்கின்றார். என்னும் பதிப்புரைக் கூற்று முற்றிலும் உண்மை வெறும் புகழ்ச்சியல்ல என்பதை இவரை வாசிக்கும் அனைவரும் ஒத்துக்கொள்வார்கள்.

தேடி வாசிக்கப்பட வேண்டிய ஒரு நூல் இது.

நன்றி: வீரகேசரி ‘சங்கமம்’

 

http://www.nanilam.com/?p=7938

Link to comment
Share on other sites

books2_2789635f.jpg

இந்தியர்களின் விவசாய அறிவையும் உழைப்பையும் பயன்படுத்த நினைத்த ஆங்கிலேயர்கள் பல்வேறு நாடுகளுக்கு அவர்களைக் கொத்தடிமைகளாகக் கொண்டு சென்றனர். பஞ்சம் பிழைக்கச் செல்வதாக நினைத்துச் சென்ற மக்கள் அனுபவித்த துன்பங்கள் முடிவில்லாத தொடர்கதைகள். அவற்றில் இலங்கை மலையகத் தமிழர்களின் அனுபவங்களைப் பதிவு செய்துள்ளார் எழுத்தாளர் செ. கணேசலிங்கன். அவரது குடும்பத்தின் அனுபவங்களும் இதில் அடங்கும். 150 ஆண்டுகாலம் அடிமை வாழ்வில் அழுத்தப்பட்ட சமூகத்தின் நினைவுகளின் ஓவியம் இந்த நூல். -நீதி

இலங்கைத் தேயிலைத் தோட்ட அனுபவங்கள் 
செ.கணேசலிங்கன் விலை: ரூ. 60 
வெளியீடு: குமரன் பப்ளிஷர்ஸ் 
12/3, மெய்கை விநாயகர் தெரு, 
குமரன் காலனி 7வது தெரு, 
வடபழனி. சென்னை- 600 026.

http://tamil.thehindu.com/general/literature/%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%

Link to comment
Share on other sites

  • 8 months later...

யுத்த பூமி - Yutha Poomi

இலங்கையில் இனமோதல்கள் வெடித்த நிலைமையில் இலங்கையின் ஒருமைப்பாட்டைக் காக்கவும் அங்கு அமைதியை நிலைநாட்டவும் சென்ற இந்தியப்படை அங்குத் தமிழர்களுக்கு எதிராகச் செயல்பட்டது என்பதை மையமாக வைத்து எழுதப்பட்டுள்ள நாவல். 

Yutha Poomi - யுத்த பூமி

வகை : கதைகள் (Kathaigal - Tamil story)
எழுத்தாளர் : செங்கை. ஆழியான்
பதிப்பகம் : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
ISBN : 9788123409726
Pages : 130
பதிப்பு : 1
Published Year : 2006
விலை : ரூ.50

 

http://www.noolulagam.com/product/?pid=1760#details

Link to comment
Share on other sites

  • 9 months later...

நூல் அறிமுகம்: பெர்லின் நினைவுகள்

book_berlin_ninaaiavukal9.jpg

பொ கருணகரகரமூர்த்தியின் பெர்லின் நினைவுகள் மற்றைய புலம்பெயர்ந்த அனுபவங்கள்போல் சிதைந்து நாவல், சிறுகதை என உருமாறாது, கற்பனை கலக்காமல் அபுனைவாக தமிழ் இலக்கியப்பரப்பிற்கு வரவாகியுள்ளது.இதனால் இது நமது புலப்பெயர்ந்தோரது இலக்கியத்தில் முக்கியமான ஓரிடத்தைப் பிடித்துள்ளது. வாசிப்பதற்கான அவகாசத்தைத்தேடிப் பல காலங்களாக அடைகாத்து வைத்திருந்தேன். கடைசியில் அது கை கூடியது. நிச்சயமாக ஒரு டாக்சி ஓட்டுனராக அவர் முகம் கொடுத்த அனுபவங்கள் பலதரப்பட்டவை. டாக்சி ஓட்டுனராகப் பலரோடு பல தருணங்களில் ஏற்படும் சம்பவங்கள் மற்றவர்களுக்கு எக்காலத்திலும் ஏற்படாது. அதிலும் எத்தனை டாக்சி ஓட்டுனர்கள், அவர்போல் தனது அனுபவங்களை இலக்கியமாக்கும் மொழி தெரிந்தவர்கள்? அவரது மருத்துவராகும் எண்ணம் ஈடேறவில்லை என்பது உண்மை, ஆனால் அது தமிழ் இலக்கிய உலகத்திற்கு அதிஷ்டமாக அமைந்தது. மருத்துவரது நினைவுகள் அவர் இறந்தபின்போ அல்லது அவரது நோயாளிகள் இறந்தபின்போ மறைந்துவிடும். ஆனால் டாக்சி ஓட்டுனரான நண்பர் கருணாகரமூர்த்தியின் நினைவுகள் அழிவற்றவை. குறைந்தபட்சம் தமிழ்மொழியிருக்கும் வரையில் வாழும். இந்தப் புத்தகத்தில் இலங்கை நினைவுகளையும் பெர்லின் நினைவுடன் குழைத்து எழுதியது சுவையானது. அத்துடன் பல இலங்கையரது வாழ்வுகளை மற்றவர்களுடன் கலந்தது அவரது அகதித்தமிழ் வாழ்க்கையும் பதிவாக்கியுள்ளது.

இலங்கைத் தமிழர்கள் ஐரோப்பியநாடுகளுக்கு செல்லுவது எண்பத்து மூன்றுக்கு முன்பாகவே நடந்தது. ஓரளவு ஆங்கிலம் படித்தவர்கள் மேற்படிப்புக்காக மாணவர் விசா எடுத்துக்கொண்டு இங்கிலாந்து செல்வதும், மற்றவர்கள் ஜெர்மனி, பிரான்ஸ் எனச் செல்லத் தொடங்கியதற்கு 72 களில் உருவாகிய தரப்படுத்தலே முதலாவதாகவும், சீதனச் சந்தையில் சகோதரிகளின் வாழ்வு இரண்டாவதாகவும், உந்து சக்திகளாகின. ஆரம்பத்தில் விமான கட்டணத்திற்கு பணம் உள்ள பெற்றோர்கள், பிள்ளைகளை அனுப்பத்தொடங்கினார்கள். அதில் முக்கியமாக நான் பிறந்த தீவுப்பகுதியினரே முன்னணிப்படையினர். விவசாயம் செய்யாத தீவுப்பகுதியினர் அதுவரையிலும் இலங்கையின் தென்பகுதியில் புகையிலைக் கடை, உணவுக்கடைகளை நோக்கித் தொடங்கிய பிரயாணம் இன முறுகல்களால் தடைப்பட்டதும் ஐரோப்பா சென்றனர். அக்காலத்தில் ஏரோபுளட் என்ற சோவியத் விமானத்தில் ஏறி கிழக்கு பெர்னிலில் இறங்கிய பின், மேற்கு பெர்லினில் செல்வதற்கு அக்கால கிழக்கு- மேற்கு அரசியல் பனிப்போர் உதவியது. அப்படியாகச் சென்றவர்கள் போட்ட பாதையால் 83 பின்பு மற்றயவர்கள் நடந்தார்கள்.

 

பேராசிரியர் நுகுமான் தனது முகவுரையில்,இந்தப்புத்கத்தில் அரைவாசி ஜெர்மானியரின் பாலியல் நடத்தையைப்பற்றிப் பேசுகிறது என எழுதியது என்னைச் சிந்திக்க வைத்தது. மன்மதபாணங்கள் இதயத்தைத் துளைத்து, இரத்தத்தை வெப்பமாக்கும் இரவு என்பது காமத்திற்க்கான நேரம். இந்தக்காலத்தில் டாக்சியோடும்போது பாலியல் தேவைகளை விற்பவரும், வாங்குபவர்களும் வந்து போவார்கள். இது பெருநகரங்கள் எங்கும் நடக்கும். சென்னைகூட இதற்கு விதிவிலக்கால்ல. பெர்லின் நினைவுகள் 403 வது பக்கத்தை படித்து முடித்த பின்பு பேராசிரியர் நுகுமான் கூற்று உயர்வு நவிட்சியாக தெரிந்தது.

யாராவது தமிழர்கள் பெர்லினுக்கு செல்வதென்றால் அதற்கு முன்பாக படிக்கவேண்டியதாக இந்தப்புத்தகம் இருக்கிறது.அதற்கப்பால் ஐரோப்பாவில் சென்ற பலரது வாழ்க்கைகளில் நடந்த விடயங்கள் இங்கு சொல்லப்பட்டிருக்கிறது. அவுஸ்திரேலியா போன்ற  நாடுகளுக்க வந்த எமக்கு இப்படியான அனுபவங்கள் ஏற்படவில்லை. பிற்காலத்துத் தலைமுறையினர் இதன் மூலம் முந்தியவர்கள், வாழ்க்கையை நிலை நிறுத்தச் செய்த முயற்சிகள் மற்றும் தியாகங்களை அறிய உதவும் பதிவாகிறது.

யூதர்கள் அனுபவித்த கொடுமைகளையும் அதன் பின்பான தகவல்களும், அவைகள் நடந்த இடங்களை விவரிப்பதின் மூலம் அந்த விடயங்களை மீண்டும் நினைவுபடுத்த முடிகிறது. மானிடம் இப்படியான அவலங்களை மீண்டும் எதிர்கொள்ளாது இருப்பதற்காக ஒவ்வொரு தனிமனிதனுக்கும் இவை தெரியவேண்டும். பேர்லின் நகரத்தின் மக்களுக்கு அப்பால் அங்குள்ள பூங்காக்கள், நீர்நிலைகள், புல்வெளிகள், காடுகள், பறவைகள், மற்றும் மிருகங்கள் என ஒரு சூழலியல் விவரிப்பு என் போன்றவர்களுக்கு அங்கு செல்லும் அவாவைத் தூண்டுகிறது. படங்கள் கேக்கிற்கு மேல் வைத்த ஐசிங்காக அலங்கரிக்கிறது.

இந்தப்புத்கத்தில் உள்ள சில விடங்களைக் குறிப்பிடவேண்டும் முக்கியமாக எழுதிய மொழியின் தன்மை சரடாக இடறுகிறது. காவல்துறையின் சிறகம், அடுக்ககம், வெதுப்பகம், ஐஸ் திண்மம் மற்றும் அகவை எனத் தமிழ் பாவிக்கிறார். அதே நேரத்தில் 'சைட்பிட்டிங்', 'வின்டர்' என ஆங்கிலம் வருகிறது. அதே நேரத்தில் இவ்வளவு தூரம் தமிழேந்திபோல் வார்த்தைகளைப் பாவித்துவிட்டு ஜலக்கிரீடை என்றும் பாவிக்கிறார்.

எழுத்தாளர்களாகிய நாங்கள் எழுதியது மக்களிடம் செல்லும்போது அவர்கள் வாசிக்கவேண்டும் என்ற நோக்கத்திலே எழுதுகிறோம். பாவனையில் இல்லாத வார்த்தைகளோ, அதற்கப்பால் வட்டார வழக்குகள் என வரும்போது வாசிப்பின் போக்கில் இடறல் ஏற்படுகிறது. ஆங்கிலவார்த்தைகளைத் தொடர்ந்து தமிழ்ப்படுத்தும் வழக்கம் நம்மிடமில்லை. வட்டாரவழக்குகளோ அல்லது மற்றைய மொழிபேசுபவர்களையோ பாத்திரமாக அறிமுகப்படுத்தும்போது ஆங்கிலத்தில் ஓர் இரு வார்த்தைகளை அறிமுகப்படுத்தி விட்டு தொடர்ந்து வழக்கமான மொழியில் போவார்கள். உதாரணமாக ஸ்கொட்லாண்டைச் சேர்ந்த எழுத்தாளர் அவரது ஆங்கிலத்தில் எழுதும்போது அதை எப்படிப் படிக்க முடியும்?.இலக்கியத்தில் தமிழ் நாட்டவர்களும் இலங்கையர்களும் வட்டாரமொழியை புகுத்த முயற்சிப்பார்கள். எவ்வளவு முயற்சித்தாலும் உண்மைகளை முற்றாக இலக்கியத்தில் கொண்டுவரமுடியாது. இருவருக்கிடையே நடக்கும் முழு உரையாடலையும் எழுதினால் படிக்க முடியுமா? கதை சொல்லியின் நோக்கத்திற்கப்பால் உரையாடல் எழுதுவதில்லையே!

ரோனி மொறிசன் எழுதிய பிலவ்ட் நாவலில் Yonder (அப்பால் நிலம்) என்ற ஒரு சொல்லை பாவித்து அடிமை கறுப்பினத்தவர்கள் என்பதை கோடிகாட்டி விட்டு மற்றய பொதுவானவார்த்தைகளுடன் கதையை நகர்த்திக் கடந்து செல்கிறார். இதைவிட்டு முழு உரையாடலையும் கறுப்பின மக்களில் மொழியில் எழுதியிருந்தால் எப்படி வாசிக்கமுடியும்?

புத்தகத்தில் உள்ள மற்றைய ஒரு விடயத்தையும் இங்கு சொல்லவேண்டும். இருப்பினும் குறையாகவில்லை ஆனாலும் குறிப்பிடுதல் அவசியம். பல சம்பவங்கள் பல அத்தியாங்களில் ஒன்று இரண்டு எனக் காட்டில் மலர்ந்த மலராகச் சிதறியுள்ளன. அவற்றில் சம்பவங்கள் ஒவ்வொன்றையும் காட்சி -கதை ( Scene and Summary) என்ற தொடரில் எழுதியிருந்தால் புத்தகத்தை முடிக்கும்வரை கீழே வைக்கமுடியாததாக மாற்றியிருக்கலாம்.

எனது கூற்றைச் சிறிது விவரிக்கலாம். அத்தியாயமாக எழுதியபோது ஒவ்வொரு அத்தியாத்தின் ஆரம்பத்தில் ஒரு கதை சொல்வதற்கான 'நரேற்றிவ் ஆர்க்' (Narrative Arc)வைத்துச் சொல்லியிருக்கலாம். அதைவிட ஒவ்வொரு அத்தியாயத்திலும் முக்கியமான சம்பவங்கள் வரும்போது அதை எங்களுக்கு மேலும் காட்சிப்படுத்தியிருக்கலாம் (Dramatic) அத்துடன் அடுத்த அத்தியாயத்தில் வரும் சம்பவத்தை( Foreshadowing)) கொஞ்சம் பெண்ணின் பாவாடைக்கரைபோல் காட்டியிருந்தால் புத்தகத்தை மேலே கொண்டு சென்றிருக்கும்

டாக்சி விடயங்கள் முக்கியமாக அலைபேசி விடயங்கள் பெர்லினில் டாக்சியோடும் நோக்கமற்ற சாதாரண வாசகர்களுக்குக் கொஞ்சம் அதிகமாகி விட்டதோ என எண்ணினேன். தனது வாழ்க்கையின் கடினமான பகுதியை எமக்குக் கூறியதுடன் அதில் நகைச்சுவையைத்தூவிக் கடந்துவிடுவது கருணாகரமூர்த்தியால் மட்டும் முடிந்த காரியம்.

புதிப்பாளர்- காலச்சுவடு பதிப்பகம்

uthayam12@gmail.com

http://www.geotamil.com/pathivukalnew/index.php?option=com_content&view=article&id=4063:2017-08-03-05-12-12&catid=14:2011-03-03-17-27-43&Itemid=62

Link to comment
Share on other sites

  • 10 months later...

இலங்கை இடப்பெயர்வின் குறுக்கு வெட்டுத் தோற்றத்தை காட்டும் குணா கவியழகனின் ’கர்ப்ப நிலம்’

 

 

புலிகளின் வேவு வாழ்க்கையை கண்முன் நிறுத்தும் 'அப்பால் ஒரு நிலம்

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • காசிக்குப் போறவை திரும்ப வந்து அதிக காலம் உயிரோடு இருப்பதில்லை என்று சொல்வார்கள். உண்மையா என்று தெரியவில்லை. ஆனால் என நபர் ஒருவர் அங்கு சென்றுவந்து 3 ஆண்டுகளில் இறந்துவிட்டார்.
    • கடந்த மாவீரர் தினத்திலும் ஐயா வந்து சிறிய சொற்பொழிவாற்றி இருந்தார்.
    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
    • இருக்க‌லாம் பெருமாள் அண்ணா ஜெய‌ல‌லிதாவுக்கு க‌ருணாநிதிக்கு கோடி காசு அவ‌ங்க‌ட‌ கால் தூசுக்கு ச‌ம‌ம்..............ஜெய‌ல‌லிதா சொத்து குவிப்பு வ‌ழ‌க்கில் எத்த‌னை ஆயிர‌ம் கோடி  2ஜீ ஊழ‌லில் அக்கா க‌ணிமொழி அடிச்ச‌து எவ‌ள‌வு...............இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ருக்கு தேர்த‌லுக்காக‌ 600 கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து என்ர‌  ம‌ன‌சில் வீர‌ப்ப‌ன் எப்ப‌வும்  என் குல‌சாமி🙏🙏🙏...................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.