Jump to content

பாதுகாப்பற்ற புகையிரத கடவையால் பறிபோகும் உயிர்கள்


Recommended Posts

பாதுகாப்பற்ற புகையிரத கடவையால் பறிபோகும் உயிர்கள் - குளோபல் தமிழ்ச் செய்திகளிற்காக மயூரப்பிரியன்:-

யாழ்.மாவட்ட செயலகத்திற்கு அருகில் உள்ள கச்சேரி நல்லூர் வீதியில், உள்ள பாதுகாப்பற்ற புகையிரத கடவையை கடக்க முற்பட்ட காரினை புகையிரதம் மோதிய விபத்தில் காரில் சென்ற ஒருவர் உயிரிழந்ததுடன் மூவர் படுகாயமடைந்து இருந்தனர்.
 
பொறியியலாளரும் இரண்டு பிள்ளைகளின் தந்தையுமான வில்வராஜா சுதாகர் (வயது 41) என்பவர் உயிரிழந்துள்ளார். அவருடன் காரில் சென்ற அரவிந்தன் (வயது 28) , ஆதவன் (வயது 28 ) , கம்பதாஸன் (வயது 23) ஆகிய மூவரும் பாடுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
 
கச்சேரி நல்லூர் வீதியில் உள்ள இந்த பாதுகாப்பு அற்ற கடவையின் ஊடாக தினமும் பாடசாலை மாணவர்கள் , யாழ்.மாவட்ட செயலகத்தில் கடமையாற்றுபவர்கள் என பலர் சென்று வருகின்றனார்.
 
அக் கடவையில் பாதுகாப்பு கதவுகள் இல்லை. சிவப்பு விளக்கு ஒளிர்வதுடன் , சமிஞ்சை ஒலி எழுப்படும். அது மட்டுமே அக் கடவையில் புகையிரதம் வருவதற்காக அறிகுறி.
 
இந்த விபத்து சமிஞ்சை ஒலி எழுப்படாததே காரணம் என தெரிவிக்கபடுகின்றது. சமிஞ்சை ஒலி எழுப்பும் கருவி கடந்த தினங்களில் யாழில் பெய்த மழையினால் கடந்த மூன்று நாட்களாக பழுதடைந்து உள்ளது எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
 
புகையிரதம் வரும் போது கடவையினை மூடும் கதவுகள் இல்லை. புகையிரத திணைக்கள பாதுகாப்பு ஊழியர்களும் அதில் கடமையில் இல்லை.
 
சிவப்பு விளக்கினையும் சமிஞ்சை ஒலியினையும் கவனத்தில் கொண்டே புகையிரதம் வருகின்றது என பொதுமக்கள் அக் கடவையில் தரித்து நின்று செல்கின்றனர். குறித்த பகுதியில் உள்ள கடவை வீதி வளைவில் இருப்பதனால் தூரத்தில் வருபவர்களுக்கு சிவப்பு விளக்கு ஒளிர்வது தெரியாது. 
 
குறித்த கடவையினை பாதுகாப்பான கடவையாக ஆகும்மாறு அப்பகுதி மக்களால் தொடர்ந்து கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு வந்ததாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.
 
அதேபோன்று சோமசுந்தரம் அவனியூ வீதியிலும் பாதுகாப்பற்ற புகையிரத கடவையே உள்ளது. குறித்த கடவை ஊடாக தினமும் அதிகளவான பாடசாலை மாணவர்கள் செல்கின்றனர். அத்துடன் குறித்த கடவைக்கு மிக அருகில் தான் வடமாகாண முதலமைச்சர்  அலுவலகமும் உள்ளது. இக் கடவையையும் பாதுகாப்பான கடவையாக மாற்றும் மாறு கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டும் இதுவரை உரிய நடவடிக்கை இல்லை என அயலவர்கள் தெரிவித்தனர்.
 
வடக்குக்குக்கான  புகையிரத சேவைகள் ஆரம்பிக்கப்படும் போது கடவைகளை சரியாக நிர்வகிக்கும் பணிகளை புகையிரத திணைக்களம் மற்றும் அதன் அதிகாரிகள் செய்ய தவறி விட்டனர் என்ற குற்றசாட்டுக்கள் பரவலாக உள்ளான 
 
வடபகுதியில் அநேகமான இடங்களில் கிராமங்கள் ஊடாகவே புகையிரத பாதை செல்கின்றன. அதில் பல இடங்களில் பாதுகாப்பான புகையிரத கடவைகள் அமைக்கப்படவில்லை.
 
கடந்த அரசாங்கத்தினால் தேர்தலை முன்னிட்டு அவசரமாக வடக்கில் காங்கேசன் துறை வரையிலான புகையிரத பாதை அமைக்கப்பட்டு அதன் பணிகள் முழுமையாக பூர்த்தியடையாமல் புகையிரத சேவைகள் ஆரம்பிக்கப்பட்டன.
 
வடக்கில் பாதுகாப்பற்ற புகையிரத கடவையினால் பல விபத்துக்கள் ஏற்பட்டுள்ளன. அதனால் பல உயிரிழப்புக்களும் ஏற்பட்டுள்ளன. குறிப்பாக கிளிநொச்சி மாவட்டம் மற்றும் யாழ். மாவட்டத்திலே பெருமளவான விபத்துக்கள் ஏற்பட்டுள்ளன.
 
எனவே கிராமங்கள் ஊடகாவும் சன நடமாட்டம் அதிகமான வீதிகளிளும் உள்ள கடவைகள் பாதுகாப்பான கடவைகளாக மாற்றி அமைக்கப்படவேண்டும்.அதன் ஊடாகவே உயிரிழப்புக்களை தடுக்க முடியும்.

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/126162/language/ta-IN/article.aspx

Link to comment
Share on other sites

சுமந்திரன்  என்ன  செய்கிறார் ,சம்மந்தர்  என்ன  செய்கிறார் ஒரு  கடவை  போடும்  அளவுக்கு  நேரம்  இல்லாமல் உயிர்கள்  போய்க்கொண்டு   இருக்கிறது தமிழா  விழித்தெழு ...

 

இப்படி  ஒரு  குறுப்  வரும் பாருங்க .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ரயில காணாத மக்கள் கண்டிட்டினம்.. எனி மேல போய் சேருங்கோ. பாதுக்காப்பு.. கடவை.. இதெல்லாம் எதிர்பார்க்கப்படாது.

இந்த விபத்துக்கள் நடக்க ஆரம்பித்த போதே.. ஒரு குறிப்பிட்ட தமிழனின் எண்ணிக்கையை இவை பறிக்கும் என்று சொல்லியாச்சு. சிங்கள அரச இயந்திரத்தின்.. அசம்பந்தம்.. இன்னும் இன்னும் பல தமிழ் உயிர்களை அழிக்கும். சொறீலங்காவிடம் இருந்து விடுதலை வாங்காமல்.. நாங்கள் மேற்குல தரத்துக்கு பாதுகாப்புப் பற்றி கனவும் காண முடியாது. இதுதான் சொறிலங்காவில் தமிழரின் இன்றைய நிலை.  :rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புகையிர கடவைகளில் மக்கள் கவனித்து கவனமாக கடக்கவேண்டும்.

எடுத்தற்கெல்லாம்  அரசை குறைசொல்வது/கோரிக்கை வைப்பது எல்லாம் சோம்பேறித்தனம்.

 30 வருடங்களுக்கு முன்னர் எல்லா இடங்களிலும் பாதுகாப்பு கடவைகள் இல்லவேயில்லை.

கோச்சிவரும் கவனம் என்பதை கவனத்திலெடுக்கவேண்டும்.:cool:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கோச் வரும் காலமும் இன்றைய காலமும் ஒன்றல்ல. கோச் வரும் காலத்தில் நிலக்கரியில் ஓடின ரயில்கள் இன்று மின்சாரத்தில் இயங்குது. பல மேன்மையான பாதுக்காப்பு முறைகள் நடைமுறையில் இருக்குது. மக்கள் புழக்கமும் இன்று அதிகம். தொடரூந்துகளின் வேகங்களும்.. வழித்தடங்களும்.. முன்னேற்றம் கண்டுள்ள நிலையில்.. விபத்துக்களை தடுக்க.. தொடரூந்தை இயக்குபவர்கள் தான் பாதுக்காப்பான வழிமுறைகளை அதிகரிக்க வேண்டுமே தவிர மக்களை சதா கவனமாக இருங்கள் என்று சொல்லிச் சாகடிக்க வேண்டியதில்லை.

சிந்தனையில் நல்ல நோக்கமிருந்தால்.. இந்த இழப்புக்களை தவிர்க்க போதிய அளவு முன்னேர்ப்பாடுகள் செய்யப்பட்டிருக்கும். அதுதான் முக்கியம். அது சொறீலங்காவில் இல்லை. :rolleyes:

இது குறித்து யாழ் தேவி கிளியில் வைத்து முதல் தமிழனை அடித்துக் கொன்ற போதே எழுதியாயிற்று. ஆனால்.. இன்னும் ஒரு பாதுகாப்பு மேம்பாடும் இல்லை. :rolleyes:

Link to comment
Share on other sites

இன்னும் இழப்புக்கள் தொடர விடுவதோ!

8019.jpg

எனது தந்தையார் அடிக்கடி சொல்லுகின்ற ஒரு விடயம், தேவையில்லா வேலையை ஒருவன் செய் வானாயின் தேவையுள்ள வேலையை செய்ய முடியாது போகும் என்று. 
இதற்குள் இருக்கக்கூடிய ஆழமான அர்த்தங்கள் புரியப்படுகின்றபோதுதான் தத்துவத்தின் தாற்பரியம் உணரப்படும். 

இன்று எங்கள் மண்ணில் தேவையில்லாத காரியங்களுக்கான நேர விரயங்களும் பணச் செலவுகளும் தாராளமாகி வருகின்றன. எத்தனையோ தேவைகள் இருக்கின்ற போதும், தேவையற்ற விடயங்களைச் செய்வதன் காரணமாக மனித சமூகம் நிம்மதியை இழக்கவும் நேரிடுகிறது.
எனவே, பொதுநிலையில் மக்களின் தேவைகள் என்ன என்பது பற்றி அரசியல் தலைவர்களும் அரச உயர் அதிகாரிகளும் சிந்திப்பது கட்டாயமானதாகும். 

இந்த வகையில் வட பகுதிக்கான புகையிரதப் பாதை அமைப்பும் புகையிரத சேவையும் வடபகுதி மக்களுக்கு மிகப்பெரும் நன்மை தருவதாகும். இருந்தும் பாதுகாப்பற்ற புகையிரதக் கடவைகளில் அவ்வப்போது ஏற்படுகின்ற மரணங்கள், புகையிரத சேவை இல்லாமல் இருந்திருக்குமாயின் என் பிள்ளை உயிரோடு இருந்திருப்பான் என்று நினைக்கின்ற அளவில் நிலைமையை உருவாக்கி விடுகின்றது.
புகையிரதப் பாதை அமைக்கப்படுகின்ற போது பாதுகாப்பான கடவைகளை உருவாக்குவது கட்டா யமானது. பாதுகாப்பான புகையிரதக் கடவைகளை அமைப்பதன் மூலமாக மனித உயிர்கள் பாதுகாக் கப்படுகின்றன. இருந்தும் வட பகுதிக்கான புகையிரதப் பாதை அமைப்பின்போது பாதுகாப்பான புகை யிரதக் கடவைகளை அமைப்பதில் மெத்தனப் போக்கு கடைப்பிடிக்கப்பட்டது. 

பாதுகாப்பான புகையிரதக் கடவைகளை அமையுங்கள் என்று பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் செய்து பாதுகாப்பான கடவைகள் அமைக்கப்பட்ட சம்பவங்கள் நிறையவே நடந்துள்ளன. புகையிரதப் போக்கு வரத்துத் திணைக்களம் பொதுமக்களின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளிக்க வேண்டிய கடப்பாட்டை கொண்டிருந்த போதிலும் வடபகுதிப் பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் செய்து பாதுகாப்பான கடவைகளை அமையுங்கள் என்று போராட வேண்டிய துர்ப்பாக்கிய நிலையே இருந்தது.

பாதுகாப்பற்ற புகையிரதக் கடவையை கடக்க முற்பட்ட கார் ஒன்றை புகையிரத வண்டி மோதியதில் இளம் பொறியியலாளர் ஒருவர் கொல்லப்பட்ட சம்பவமும் மேலும் மூவர் காயம் அடைந்தமையும் மக்கள் மத்தியில் பெரும் கவலையையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

மக்கள் நடமாட்டம் அதிகமாகவுள்ள வீதியில் பாதுகாப்பான புகையிரதக் கடவைகள் அமைக்கப் பட வேண்டும் என்ற நியதிகள் இருந்த போதிலும் அந்த விடயம் எவராலும் கவனிக்கப்படாத நிலையில் தமிழ் மண் அருமந்த பொறியியலாளரை இழக்க வேண்டியதாயிற்று.

இதுபோல பாதுகாப்பற்ற புகையிரதக் கடவைகளில் முன்னரும் மரணங்கள் பல இடம்பெற்றுள்ளன என்பதால், வடபகுதியில் அமையப் பெற்ற புகையிரதப் பாதைகளின் கடவைகள் தொடர்பில் முக்கியமான தீர்மானங்கள் எடுக்கப்பட வேண்டும்.

இது தொடர்பில் உரியவர்கள் போக்குவரத்து அமைச்சுடனும் இலங்கைப் புகையிரதத் திணைக் களத்துடனும் பேச்சுவார்த்தை நடத்தி நிலைமைகளை செம்மைப்படுத்த வேண்டும். இல்லையேல் இழப்புகள் தவிர்க்க முடியாததாகி விடும்.      

http://www.valampurii.lk/valampurii/content.php?id=8019&ctype=news

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, குமாரசாமி said:

புகையிர கடவைகளில் மக்கள் கவனித்து கவனமாக கடக்கவேண்டும்.

எடுத்தற்கெல்லாம்  அரசை குறைசொல்வது/கோரிக்கை வைப்பது எல்லாம் சோம்பேறித்தனம்.

 30 வருடங்களுக்கு முன்னர் எல்லா இடங்களிலும் பாதுகாப்பு கடவைகள் இல்லவேயில்லை.

கோச்சிவரும் கவனம் என்பதை கவனத்திலெடுக்கவேண்டும்.:cool:

இதுவே நான் சொல்ல நினைத்ததும்! நன்றி!

இதுக்கேன் புகையிரதத் திணைக்களத்தை நோவான்? அவர்கள் மத்திய அரசு, தமிழர்கள் மேல் அக்கறை இருக்காது. வடமாகாண வீதி அபிவிருத்திச் சபை (RDA) என்ன செய்கிறது? ஒரு "நிறுத்து (STOP)"  பலகையை இரு பக்கமும் நாட்டி விட்டால் ரயில் சிக்னல்  வேலை செய்கிறதோ இல்லையோ, எல்லாரும் நின்று பார்த்துப் போக வேண்டிய கட்டாயம் வரும் தானே? இப்படி எளிய வழிகள் இருக்க இதிலயும் ஆக்களைப் பலி கொடுத்து அதை அரச எதிர்ப்பு அரசியலாக்கி, சாவிலயே அரசியல் செய்கிற சகதிக் கூட்டமாகி விட்டோம்!

Link to comment
Share on other sites

 

 

இந்த வீடியோவை முதல் 15 செக்கன்கள் பாருங்கள்.

இதில் காட்டபடும் புகையிரத கடைவையில் எந்த விதமான தடையும் இல்லை. அபாயஒலி வரும் சமிஞ்சை இல்லை. சிக்னல் விளக்குகள் இல்லை.

இப்படிதான் ஜேர்மனியில் 40 வீதமான புகையிரத கடைவைகள் இருக்கிறது.

ஒரு வருடத்தில் சாராசரி 50 பேர் வரை இப்படியான விபத்தில் இறக்கிரர்கள்.

Link to comment
Share on other sites

உண்மையில் இது ஒரு நிர்வாக பிரச்சனை ஆகும். ஜன நடமாட்டம், அதிக போக்குவரத்து அதிகமாக உள்ள இடங்களில் பாதுகாப்பு போடுவது தொடரூந்து  திணைக்களத்தின் கடமை. யாழ் மாவட்ட செயலகத்திற்கு அண்மையில் என்னும் போது அதிக மக்கள் நடமாட்டம் உள்ள நகர்ப்புறம் ஆகும். அங்கு பாதுகாப்பு போடாதது  தொடரூந்து திணைக்களத்தின் பொறுப்பின்மையை காட்டி நிற்கிறது. நவீனன் நீங்கள்  இணைத்த காணொலியில் உள்ளது போல தொடரூந்து கடவைகள ஜேர்மனியில் ஒதுக்குப்புறமான கிராம. வயல்புறங்களில் இன்னமும். உள்ளது. 

ஆனால்  இவ்வாறான இடங்களில் பாதுகாப்பு கடவை வசதி ஏற்படுத்தாதற்காக அரசாங்கத்தை குற்றம் சாட்டும் உரிமை வரியிறுப்பாளராகிய மக்களுக்கு உண்டு. குறிப்பிட பிரதேசத்துற்கு பணி நிமித்தம் 1984 ல் சென்றுள்ளேன். வாகன நடமாட்டம் குறைந்த அந்த காலத்திலேயே  பாதுகாப்பு உள்ள கடவையாக அன்று இருந்தது. வாகனப்போக்குவரத்து அதிகமாக உள்ள தற்போதய நிலையில் அங்கு பாதுகாப்பு இல்லாத்து ஆச்சரியமாக உள்ளது.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சம்பவம் நடைபெற்ற இடம் எனக்கு மிகவும் பச்சரியமான இடம். இந்தக் கடவையை ஒட்டியதாக "எக்காளத் தொனி" சேர்ச் இருக்கு. சேர்ச் ஆவது சமூகசேவை என்ற வகையில் ஏதாவது பாதுகாப்பு ஏற்பாட்டினைச் செய்து இருக்கலாம். போதகர்மாருக்கு இளம் பெட்டைகளைச் சைட் அடிக்கிறதிலேயே நேரம் போயிடும். இதுகளைச் சிந்திக்க அவர்களுக்கு எங்க நேரமிருக்கு!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, வாலி said:

சம்பவம் நடைபெற்ற இடம் எனக்கு மிகவும் பச்சரியமான இடம். இந்தக் கடவையை ஒட்டியதாக "எக்காளத் தொனி" சேர்ச் இருக்கு. சேர்ச் ஆவது சமூகசேவை என்ற வகையில் ஏதாவது பாதுகாப்பு ஏற்பாட்டினைச் செய்து இருக்கலாம். போதகர்மாருக்கு இளம் பெட்டைகளைச் சைட் அடிக்கிறதிலேயே நேரம் போயிடும். இதுகளைச் சிந்திக்க அவர்களுக்கு எங்க நேரமிருக்கு!

 பிரச்சனை எங்கேயோ இருக்க, யாரையோ வம்பிக்கிளுக்கிறார் வாலியார். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மக்கள் நடமாட்டம் உள்ள.. போக்குவரத்து அதிகம் உள்ள இடங்களில் உள்ள தொடரூந்துக் கடவைகளிற்கு கூடுதல் பாதுகாப்பு அளிக்க வேண்டியது தொடரூந்து சேவையை மேற்கொள்பவர்களின் பொறுப்பு. ஏலவே இவை சுட்டிக்காட்டப்பட்டும்.. இன்னும் ஒரு காத்திரமான நடவடிக்கைகள் இல்லாமை என்பது.. ஆட்சியாளர்களினதும் அவர்களின் தொடரூந்து திணைக்களத்தினதும்.. செயற்திறனற்ற.. தமிழ் மக்கள் மீதான அக்கறையற்ற செயலையே இனங்காட்டுகிறது.

இன்று அதிக இலாபம் ஈட்டும் வடக்கு தொடரூந்துச் சேவை வடக்கு மக்களை பாதுக்காக்க உருப்படியான எந்த வேலைத்திட்டத்தையும் எடுக்க முன்வராமை அதன் மாற்றாந்தாய்.. பணப்பறிப்பு கொள்கையையே அப்பட்டமாக இனங்காட்டுகிறது.

வடக்கு தொடரூந்து சேவை ஆரம்பித்த பின் கொல்லப்படும் இரண்டாவது யாழ் இந்து மாணவ சமூகத்தைச் சேர்ந்தவர் இவர்.

இங்கிலாந்தில் மக்கள் அதிகம் நடமாடும் இடங்களில் பாதுகாப்பான கடவைகளே அமைக்கப்பட்டுள்ளன. மேற்படி விபத்துக்குரிய வீதி பிரதான வாகன இயக்க வழித்தடத்தை கொண்டது. அங்கு பாதுகாப்பற்ற தொடரூந்துக் கடவை என்பது கொலைப் பொறி போன்றது. இது தெரிந்தே அனுமதிக்கப்பட்டிருப்பதாகவே தோன்றுகிறது. தற்செயல் என்று சொல்ல முடியாது. அதுவும் மக்கள் ஆபத்தை இனங்காட்டிய பின் நடவடிக்கைகள் இல்லை என்பது மோசமான அரச நிர்வாக இயந்திரமே வடக்கு மக்களுக்கு பரிசளிக்கப்பட்டுள்ளதை இனங்காட்டுகிறது.

இந்த நிலை விரைந்து மாற்றப்படா விடில்.. வடக்கு மக்களை விபத்துக்களும்.. போதையும்.. சமூகச் சீர்கேடுகளும் அழிக்கப் போதுமானது. குண்டுகளை விட இவை மோசமான கொலைக்கருவிகளாகும். இவை செயற்படுவது தெரியாமலே கொல்லும். :rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த இடத்தில் முன்பு புகையிரதக் கடவை ஒன்று இருந்தது!

அந்தக் கடவைக்கும் இடையால புகுந்து, (சைக்கிளையும்) தூக்கிக்கொண்டு போனது இன்னும் நினைவிருக்கின்றது!:cool:

இந்த இடத்தில் கடவையோன்று.. நிச்சயம் வைக்கப்பட்டிருக்க வேண்டும்!

புங்கக் குளத்தில் ' தபால் புகையிரதம்' நிற்பது.. இந்தக் கடவையிலிருந்து பார்க்கும் போது தெரியும்! 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • மிகவும் மேலோட்டமாக விடயங்களை விளங்கிக் கொண்டு இங்கே பகிர்கிறீர்கள். மேற்கு வங்கம் பங்களாதேஸ் பிரச்சினையில் அக்கறையாக இருந்தது உண்மை தான், ஆனால் அந்த மாநிலம் சொல்லித் தான் இந்திரா பங்களாதேசைப் பாகிஸ்தானில் இருந்து பிரித்தார் என்பது தவறு. இந்திரா, பாகிஸ்தானுடன் போர் நடந்த காலப் பகுதியில், பாகிஸ்தானைப் பலவீனப் படுத்த எடுத்துக் கொண்ட முன்னரே திட்டமிட்ட ஒரு நடவடிக்கை இது. இலட்சக் கணக்கான பங்களாதேச அகதிகள் மேற்கு வங்கத்தினுள் குவிந்ததும் ஒரு சிறு பங்குக் காரணம். இந்தியாவை அமெரிக்காவின் US Trade Representative (USTR) என்ற அமைப்பு வளரும் நாடுகள் பட்டியலில் இருந்து அகற்றியிருப்பது உண்மை. ஆனால், இது IMF போன்ற உலக அமைப்புகளின் முடிவல்ல. இந்தியாவின் ஏற்றுமதி வர்த்தகம் அதிகரிக்கும் போது, அமெரிக்காவின் USTR அமைப்பு இந்தியாவின் உற்பத்திப் பொருட்களைப் பற்றி விசாரிக்கவும், சட்டங்கள் இயற்றவும் கூடியவாறு இருக்க வேண்டும். இப்படிச் செய்ய வேண்டுமானால் இந்தியாவை இந்தப் பட்டியலில் இருந்து அகற்றினால் தான் முடியும், எனவே அகற்றியிருக்கிறார்கள். இதன் அர்த்தம் இந்தியா உலக வர்த்தகத்தில் அதிக பங்கைச் செலுத்த ஆரம்பித்திருக்கிறது என்பது தான், எனவே இந்தியா வர்த்தக ரீதியில் வளர்கிறது என்பது தான் அர்த்தம். ஆனால், மனித அபிவிருத்திச் சுட்டெண்ணைப் (HDI) பொறுத்த வரை இந்தியா இன்னும் வளர்ந்து வரும் நாடு தான். இந்தியாவை விடப் பணக்கார நாடான கட்டாரும் வளர்ந்து வரும் நாடு தான்.   
    • ஓம். உணர்வு இல்லவே இல்லை என சொல்லவில்லை.  ஆனால் சதவீதம் வீழ்ந்துள்ளது என நினைக்கிறேன்.
    • வருகை, கருத்துக்கு நன்றி நெடுக்ஸ். இப்போ ஊபரும் வந்துள்ளது. ஆனால் கார் மட்டும்தான். ஆட்டோ என்றால் பிக் மிதான். கொழும்பில் பிக் மி யில் மோட்டார் சைகிளிலும் ஏறி போகலாம். அந்த பகுதி ஒரு இராணுவ கண்டோன்மெண்ட் போல இருக்கிறது என சொல்லி உள்ளேனே? நேவி வியாபாரம் செய்வதையும் சொல்லி உள்ளேன். நான் போன சமயம் சுத்தமாக இருந்தது. சிலவேளை முதல் நாள் துப்பரவு செய்தனரோ தெரியவில்லை🤣. கொழும்பில் இது முன்பே வழமை. யாழில் இந்த போக்கு புதிது. நாம் இருக்கும் போது சேவை என இருந்த்ஃ துறை இப்போ சேர்விஸ் என ஆகி வருகிறது. ஆனால் நாடெங்கும் இதுவே நிலை என எழுதியுள்ளேன்.
    • Published By: RAJEEBAN   29 MAR, 2024 | 12:22 PM   உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னணியில் உள்ள விடயங்களை கண்டுபிடிப்பதற்கான முக்கிய தடையாக முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவே காணப்படுகின்றார் என கத்தோலிக்க திருச்சபையின்  பேச்சாளர் அருட்தந்தை சிறில் காமினி பெர்ணான்டோ தெரிவித்துள்ளார். ஊடகமொன்றிற்கு வழங்கிய பேட்டியில் இதனை அவர் தெரிவித்துள்ளார். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்று  பலமாதங்ளின் பின்னர் ஜனாதிபதியான பின்னர் கோட்டாபய ராஜபக்ச செய்த எடுத்த முதல் நடவடிக்கை உயிர்த்தஞாயிறு தாக்குதல் குறித்து விசாரணைகளை மேற்கொண்ட உண்மையை கண்டறியும் ஆணைக்குழுவை செயல்இழக்கச்செய்ததே என அவர் குறிப்பிட்டுள்ளார். உயிர்த்தஞாயிறுதாக்குதல் சூத்திரதாரிகள்யார்  என்பது யார் தனக்கு தெரியும் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்திருப்பது குறித்து கருத்து தெரிவித்துள்ள  அருட்தந்தை  சுயாதீன ஆணைக்குழுவை நியமித்தால் மாத்திரமே உண்மை வெளிவரும் என குறிப்பிட்டுள்ளார். ஷானி அபயசேகர தலைமையிலான ஆணைக்குழுவை மீண்டும் நியமிக்கவேண்டும் சர்வதேசஅளவில் விசாரணை இடம்பெறவேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். இதனை செய்தால் மைத்திரிபாலசிறிசேன அதன் முன்னிலையில் தோன்றி சூத்திரதாரி யார் என்ற உண்மையை தெரிவிக்க முடியும் எனவும் அருட்தந்தை தெரிவித்துள்ளார்.  நீங்கள் கோட்டாபய ராஜபக்சவை சூத்திரதாரி என தெரிவிக்கின்றீர்களா என செவ்வி காண்பவர் கேள்விஎழுப்பியவேளை அருட்தந்தை சிறில் ஆம் அது தெளிவான விடயம் என குறிப்பிட்டுள்ளார். உயிர்த்த ஞாயிறுதாக்குதலில் பொதுமக்கள் கொல்லப்பட்டதை எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளர்கள் வாக்குகளை பெறுவதற்காக பயன்படுத்தக்கூடும் என தெரிவித்துள்ள அருட்தந்தை சிறில்பெர்ணான்டோ ஆட்சிமாற்றத்தின் போது அரசியல் வஞ்சகர்கள் மீண்டும் தெரிவு செய்யப்பட்டால் அது ஏற்கனவே பொருளாதார நெருக்கடி சட்டமொழுங்கின்மையினால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள நாட்டிற்கு மேலும் பேரழிவாக அமையும் எனவும் குறிப்பிட்டுள்ளார். அமைப்புமுறையில் பாரிய மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே உண்மை வெளிவரும் அமைப்பு முறை மாற்றம் ஏற்படுவதற்கு அரசியல் நிர்வாகம் முற்றாக மறுசீரமைக்கப்படுவது அவசியம் எனவும் அவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/179961
    • அனைத்து ஆசிய நாடுகளிடமும் பிரதமர் விடுத்த கோரிக்கை! ஆசியாவிற்கான BOAO மன்றத்தின் வருடாந்த மாநாட்டில் பிரதமர் தினேஷ் குணவர்தன பங்கேற்றுள்ளார். சீனாவின் ஹைனான் நகரில் நடைபெற்ற மாநாட்டில் கலந்து கொண்ட பிரதமர் விசேட உரை ஒன்றை நிகழ்த்தினார். வருமானத்தை சமமாகப் பகிர்ந்தளிக்கும் வறுமையற்ற ஆசியாவைக் கட்டியெழுப்ப அர்ப்பணிப்புடன் செயற்படுமாறு அனைத்து ஆசிய நாடுகளிடமும் பிரதமர் தினேஷ் குணவர்தன கோரிக்கை விடுத்துள்ளார். விவசாய வளர்ச்சி மற்றும் உணவுப் பாதுகாப்பை உறுதிப்படுத்த புதிய முயற்சிகள் தேவை என்றும், இது வறுமையை ஒழிப்பது மட்டுமல்லாமல் சமூக நல்லிணக்கம் மற்றும் அமைதியை உறுதி செய்யும் என்றும் பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே கொழும்பு துறைமுகம், ஹம்பாந்தோட்டை துறைமுகம் மற்றும் கொழும்பு துறைமுக நகரத்தை விஸ்தரிப்பது தொடர்பில் பிரதமர் விளக்கமளித்ததாகவும் பிரதமர் அலுவலகம் மேலும் தெரிவித்துள்ளது. https://thinakkural.lk/article/297561
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.