Jump to content

நான் பார்த்த யாழ்ப்பாணம்


arjun

Recommended Posts

அண்மையில் யாழ்ப்பாணம் சென்றிருந்தபோது அங்கு பிடித்ததும், பிடிக்காததும் பற்றிய எனது அனுபவத்தை பற்றி எழுதவேண்டும்போல் இருந்தது....முதலில் பிடிக்காததை எழுதுகின்றேன்...
.
இரவு கொழும்பிலிருந்து புறப்பட்டு காலை ஏழுமணியளவில் யாழ்ப்பாணத்திற்குள்ளே....வந்து சேர்ந்ததுமே முதலில் பார்த்தது நாய்களைத்தான் பல ரோட்டில் அலைந்து திரிந்தன....மனிதரைவிட நாய்களே பெருமளவில் தென்பட்டன....அதில் பல குட்டைநாய்கள்...சிலவற்றிகு உடம்பில் மயிர் முழுதும் கொட்டிப்போய் புண்ணாகி இருந்தது....வீடு போய் சேர்வதற்குள் ஏகப்பட்ட நாய்களை கண்டுவிட்டேன்...ஏற்கனேவே நாய் என்றால் எனக்கு அலர்ஜி, கடித்தால் இருபத்தியொரு ஊசி போடவேண்டும்.....அதுவும் யாழ்ப்பாணத்து ஊசி என்றால் சொல்லதேவையில்லை.

ஒரு தடவை நடந்து போய்கொண்டிருக்கும்போது நடைபாதைக்கு குறுக்கே குட்டை நாய் ஒன்று காதை விடாமல் சொறிந்து கொண்டிருந்தது.....ரோட்டை cross பண்ணுவமென்றால் வாகனங்கள் விடாது போய்கொண்டிருந்தது......சிறிது கணம் நாயையே பார்த்துகொண்டிருந்துவிட்டு...படக்கென ஒரு சைட்டால் பாய்ந்து போய் திரும்பிப்பார்த்தால்....அதன் காதிலிருந்து ரத்தம் வழிந்துகொண்டிருந்தது.

இன்னுமொருமுறை....சைக்கிளில் போய்கொண்டிருக்கும்போது நாய் ஒன்று நடுரோட்டில் நின்றுகொண்டிருந்தது......நானும் தூரத்திலிருந்தே பெல் அடித்துக்கொண்டு போனேன்...அது சைட்டால் திரும்பிபார்த்துவிட்டு அப்படியே அசையாமல் நின்றது....எனக்கு ஒருபயம் நாய் கலைக்குமா.....கலைத்தால்....காலை தூக்க ஆயத்தமாக இருக்கவேணும் (பழைய எக்ஸ்பீரியன்ஸ்)...கிட்டபோய் நாயை விலத்தி நடுரோட்டால் எடுக்க நினைத்தபோது அதுவும் சடக்கென நடுரோட்டுக்கு வந்துவிட்டது......ஒருவாறு சமாளித்துக்கொண்டு வேலிக்கரையால் மரங்களுடன் தேய்படாமல் ஓடிவந்துவிட்டேன்.....இதில் முக்கியமான விடயம் எனக்கு பாலன்ஸ் பண்ண கொஞ்சம் கஷ்டமாக இருந்தது.....தொடந்து ஓடினால் சரியாகிவிடும். நாய்களினால் பல வீதி விபத்துக்கள் நடப்பதாக அங்கிருந்தவர்கள் கூறினார்கள்.....முன்புபோல் அல்லாமல் இப்போ நாம் தான் நாய்களை விலத்தி ஓடவேண்டும் அவ்வளவிற்கு நாய்களின் மனோபாவம் மாறிவிட்டது.

ஒருமுறை உறவினர் வீட்டுக்கு சென்றபோது அவர்கள் அங்கு இல்லை, பக்கத்து வீட்டில் விசாரிப்போம் என போனால் அவர்கள் gate திறந்திருந்தது..... படக்கென கேட்டை சாத்திகொழுவி விட்டு ஹலோ என்று கூப்பிட்டால்.....கருப்பும்,மண்ணிறமும் சேர்ந்த களரில் கடிநாய் ஒன்று பாய்ந்து வந்து எட்டி எட்டி பார்த்து குரைதுக்கொண்டிருந்தது.....வீட்டுகாரர் வந்து நாயை கலைக்காமல் யார் நீங்கள், யாரை பாக்கபோகிறீர்கள் என சாவகசமாக கேள்வி கேட்டுகொண்டிருந்தார்......நாய் விடாமல் குரைத்து நாம் பேசுவதை குழப்பிகொண்டிருக்க, வெயில் ஒருபக்கம் கொளுத்தி எரிய.......எனக்கென்றால்....நல்ல கட்டை ஒன்று எடுத்து அந்த நாய்க்கு இறுக்கினால் என்ன என்றிருந்தது.....அரைகுறை பதிலுடன் நானும் நண்பியும் புறப்பட்டுவிட்டோம்.

எமக்கு மூன்று நேரமும் உணவு சமைத்து தருபவர் எனது நண்பியின் அக்கா...நான் இருந்த வீட்டிலிருந்து....அக்கா வீட்டிற்கு பின்பாதையால் போகலாம். அவர்கள் வீட்டில் லக்கி என்ற பெயருடைய நாய் ஒன்று வளர்க்கிறார்கள்.....அதை இரவில் எல்லோரும் படுத்தபின் அவிழ்த்து விடுவார்கள்.......முதல்நாள் நண்பியுடன் (நண்பிக்கு லக்கியை ஏற்கனவே பழக்கம்) பின்னால் நடந்துபோகும் போது....லக்கி என்னைபாத்து பல்லை நெருமியபடி இருந்தது......அடுத்தநாள் தனியே போகவேண்டி வந்துவிட்டது....மெதுவாக எட்டிப்பார்த்தால் லக்கி கண்ணை மூடி படுத்திருந்தது.....நானும் மெதுவாக அடிவைத்து பின் பாய்ந்துகொண்டு போகும்போது.......தப்பவிட்டுவிட்டேன் என்ற மாதிரி குரைத்துதள்ளியது. அடுத்தநாள் நண்பியுடன் பக்கத்தில் ஒட்டியபடியே நடந்து போனேன்.....படுத்திருந்த நாய் பாய்ந்துதே ஒரு பாய்ச்சல்......நண்பி எனக்குமேல் சாய நான் தென்னைமரத்துடன் செருகுப்பட்டு என்கையில் சிராய்ப்பு......அவர்களும் அன்று பார்த்து நல்ல நீட்டு கைற்றில் கட்டியிருந்தார்கள்...அதன்பின் எப்பவுமே ரோட்டால் தான் சுற்றிப்போவேன்.

அத்துடன் யாழ்பாணத்தில் கள்வர்களின் தொல்லை அதிகம் அதனாலும் பலர் ஒன்றிற்கு மேற்பட்ட நாய்களை வளர்க்கிறார்கள். ஒருவர் கூறினார் தனக்கு மூன்று பெண்பிள்ளைகள் ஆண் துணை இல்லை, அதனால் வீட்டுக்கு வரும் நாய்களுக்கு சாப்பாடு போட்டுவருகிறாராம் அதனால் அவை இரவில் தனது வீட்டிலேயே தங்கிவிடுகின்றனவாம். இதில் ஒரு குட்டை நாயும் அடக்கம்.
மேலும் 2010இல் யாழ்பாணம் போயிருந்தபோது பல வீட்டு படலைகளிலும் தண்ணி போத்தல்களும் பிளாஸ்டிக் பைகளும் கட்டியிருந்தார்கள் அவை நாய்கள் gate இல் சிறுநீர் தவிர்ப்பதற்காக...அதே காட்சியை இன்று ஐந்து வருடங்களின் பின்னும் காணக்கூடியதாக தாக இருக்கிறது....

இதைவிடை நாய்களின் கழிவுகள் பெரும் தொல்லை....ரோட்டிலும் நடைபாதைகளிலும் கும்பம் கும்பமாக இருக்கும்....நடந்து போய்கொண்டிருக்கும்போது தூரத்தில் கண்டாலே வாயில் எச்சில் ஊறி துப்பத்தொடங்கி விடுவேன். நான் நிற்கும்போதே கனமழை பெய்யத்தொடங்கிவிட்டது......நினைத்தாலே அருவருக்கிறது. 
முன்பெல்லாம் கட்டாக்காலி நாய்களை பிடித்து கொண்டுபோய் பண்ணைகடலில் தள்ளிவிடுவார்கள். இந்த நாய்த்தொல்லைக்கு காரணம் மகிந்தராஜபக்ச என்கிறார்கள் அவரது ஆட்சியில் நாய்களை கொல்லக்கூடாது என சட்டமாம்....ஏன் என்ற காரணம் யாருக்கும் சரியாக தெரியவில்லை..:

நாய்கள் மட்டுமல்ல சில இடங்களில் மாடுகள் கூட ரோட்டில் அலைந்து திரிகின்றன, நானும் பக்கத்துவீட்டுபொண்ணும் ஒழுங்கையால் வந்துகொண்டிருக்கும் போது எமக்குமுன் மூன்று மாடுகள் வந்துகொண்டிருந்தன அவை போகும்வரை ஒரு கோயில் பக்கம் ஒதுங்கி நின்று பின் நடக்கத்தொடங்கினோம்...இதே நேரம் ஒதுங்க இடம் இல்லாமல் இருந்தால் எப்படி இருக்கும்....பக்கத்திலிருக்கும் வீடுகளுக்கும் போகமுடியாது gate சாத்தியிருக்கும், நாய்கள்வேறு, மாடு இடிக்காது என்று அலட்சியம் பண்ணாமலும் இருக்கமுடியாது..
...
மேலும் பிடிக்காதது தொடரும்....................

.

11059604_10153255506103354_9221149953513

12239908_10153255506203354_8560139081343

12247023_10153255506113354_2722578305117

12227686_10153255506243354_5254164921964

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தொடருங்கள் ...ஒருத்தருடனும் செல்பி எடுக்கவில்லையோ?

Link to comment
Share on other sites

4 hours ago, நவீனன் said:

ம்ம் தொடர்ந்து பகிருங்கள் அர்ஜுன்

குறிப்பிட மறந்துவிட்டேன் மனைவி எழுதிய  பதிவு இது நவீனன் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல புனைவல்லாத பதிவுகள்!

இந்த கட்டாக்காலி நாய்கள் வெறும் தொல்லை மட்டுமல்ல, மனித ஆரோக்கியத்திற்கும் கூடாதவை!. முக்கிய பிரச்சினை -றேபிஸ் எனப்படும் விசர் நோய். இலங்கையில் ஒவ்வொரு ஆண்டும் 50 பேர் றேபிசினால் இறக்கிறார்கள். அனேகமான கேஸ்கள் மட்டக்களப்பில் தான்! ஒன்று கொல்ல வேண்டும் அல்லது தடுப்பூசியும் போட்டு, இனப்பெருக்கத் தடுப்பும் செய்ய வேண்டும். கொல்லப் போனால் மிருககாருண்ய அமைப்புகள் தடுக்கின்றன. இனப்பெருக்கத் தடைக்கு சத்திர சிகிச்சை செய்யப் பணம் தேவை. அரசிடம் பணம் இல்லை. எப்போதும் வெளிநாட்டு என்.ஜி.ஓக்கள் தான் பண உதவி செய்கின்றன. தடுப்பூசியை கட்டாக்காலி நாய்களுக்கும் வீட்டு நாய்களுக்கும் போடும் பொறுப்பு ஏனோ உள்ளூர் சுகாதாரத்திணைக்களத்திடம் இருக்கிறது. பல சந்தர்ப்பங்களில் இது சரியாகச் செய்யப் படுவதில்லை! இத்தனை நாய்களுக்குப் போட்டோம் என்று பொய்க்கணக்குக் காட்டிக் காசு வாங்கிக் கொண்டு போய்க் கொண்டிருப்பார்கள். சில ஊழியர்கள் நாய் தானே என்ற அலட்சியத்தில் ஒரே ஊசியை பல நாய்களுக்கும் பயன் படுத்துவார்கள். இதனால் டிஸ்ரெம்பர் என்ற தொற்று நோய் நாய்களிடையே பரவி அவை இறக்கின்றன. இதில் ஒரு சுவாரசியமான ஒரு விடயம், இந்த டிஸ்ரெம்பர் நோயின் அறிகுறிகளும் றேபிஸ் போல இருப்பதால், பல நாய் உரிமையாளர்கள் தடுப்பூசி போட்டதால்  தங்கள் நாய்களுக்கு றேபிஸ் வந்து விட்டதாக நம்பி விடுகிறார்கள். இந்த நம்பிக்கையின் விளைவு: தடுப்பூசி போட அடுத்த முறை சுகாதார ஊழியர்கள் வரும் போது கட்டாக்காலி நாய்களையும் துரத்தி, வீட்டு நாய்களையும் ஒழித்து வைத்து விடுவார்கள்!    

இன்னொரு பிரச்சினை: கட்டாக்காலி நாய்களின் கழிவில் இருந்து வெளிவரும் புழுக்களில் அன்சைலொஸ்ரோமா எனும் புழு எமது உடலில் தோலில் தங்கி வாழ்வதால் சொறி சிரங்கு போன்ற நிலைமைகள் வரும்.   

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு வாசிக்கும் போதே அதரியும் உங்கள் மனைவியின் பதிவு என்று.தொடருங்கள்.

Link to comment
Share on other sites

2 hours ago, arjun said:

குறிப்பிட மறந்துவிட்டேன் மனைவி எழுதிய  பதிவு இது நவீனன் .

தெரியும் அர்யுன். நான் தொடருந்து பகிருங்கள் என்றதின் அர்த்தம் யாழ் கோட்டை பதிவையும். :)

Link to comment
Share on other sites

நானும் யாழ்ப்பாணம் போய் வந்த மாதிரி இருந்தது வாசிக்கும் பொழுது... நல்ல எழுத்து நடை.... அண்ணியையும் கூட்டி வாங்கோ யாழுக்கு.... 

இணைப்புக்கு நன்றி அ.அண்ணா :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, மீனா said:

நானும் யாழ்ப்பாணம் போய் வந்த மாதிரி இருந்தது வாசிக்கும் பொழுது... நல்ல எழுத்து நடை.... அண்ணியையும் கூட்டி வாங்கோ யாழுக்கு.... 

இணைப்புக்கு நன்றி அ.அண்ணா :)

அண்ணியை கூட்டி வாங்கோ.... Is she also anti tigers ? tw_tounge_wink:

Link to comment
Share on other sites

இன்று வரை ஊருக்கு போக கிடைக்காத என் போன்றவர்களுக்கு என்றே  எழுதப்பட்ட   அனுபவக் கதைகள்......

.

விடுதலை புலிகளால்  தேடப்பட்டவர்களும் ஊருக்கு போய் வந்து விட்டார்கள்

சிங்கள அரசால்  தேடப்பட்டவர்களும் ஊருக்கு போய் வந்து விட்டார்கள்

ஏன்  கருணா, டக்கிளஸால் தேடப்படவர்களும் ஊருக்கு போய் வந்து விட்டார்கள்

ஆனால் சாதி மாறி திருமணம் செய்தவர்கள் மட்டும் இன்னும் சேர்க்கப்படாடவர்களாகவே இன்றுவரை இருக்கிறார்கள்...

 

பின் குறிப்பு;  அண்ணி வாறது முக்கியமில்லை  அண்ணிட நண்பியின் அக்காவையும் யாழுக்கு கூட்டி வரவும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தொடர்ந்து பதியுங்கள் அண்ணா. வாசிக்க ஆவல்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ரதி said:

தொடர்ந்து பதியுங்கள் அண்ணா. வாசிக்க ஆவல்

அடுத்தது இலையான் மொய்க்கும் கதை வரும்.:cool:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்ப்பாணம் இன்னும் வெளிநாட்டு தமிழர்கள் அங்க போய் பந்தா காட்டும் நிலைக்கு தாழ்ந்தப்பட்டு தான் வைக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் என்பது தாங்கள் போக விடுப்புக்காட்டிற இடமா இருக்கனும்.. தங்களை மதிக்காத நிலைக்கு.. அதிகம் முன்னேறி அபிவிருத்தி அடைந்துவிடக் கூடாது.. இதில் எம்மவர்களே மிகவும் கவனமாக இருக்கும் போது சிங்களவன்.. எப்படி இருப்பான்.

அண்மைய யாழ்ப்பாண காணொளிகளில் கண்டதை வைச்சு காண்கிற போது யாழ்ப்பாணம்.. இன்னும் இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன்னேற அனுமதிக்கப்படாது போலவே உள்ளது. tw_astonished:tw_anguished:

சீனக் குக்கிராமங்கள் எல்லாம் நவீனமயமாகி வரும் நிலையில்.. யாழ்ப்பாணம் மட்டும் இன்றும் அதே பழைய சீன்களோடு.. பாசிபிடித்த கட்டடங்களோடு.. மதில்களோடு.. குட்டைநாய்களோடு............................................................... இதுதான் வெளிநாட்டுக்கு ஓடியந்த தமிழர்களுக்கும் தேவை. பந்தாகாட்ட. தாங்கள் ஓடியாந்ததை பொருளாதார ரீதியில்.. நியாயப்படுத்த. :rolleyes:

Link to comment
Share on other sites

யாள்பானம் பெரிய நகரமாக இருக்குமென்னு பத்திர்க்கை செய்திகல படிக்கும்பொது நினைச்சிட்டுந்தேன். பார்த்தா பக்கா கிராமமா இருக்கு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 24/11/2015 00:22:27, nedukkalapoovan said:

யாழ்ப்பாணம் இன்னும் வெளிநாட்டு தமிழர்கள் அங்க போய் பந்தா காட்டும் நிலைக்கு தாழ்ந்தப்பட்டு தான் வைக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் என்பது தாங்கள் போக விடுப்புக்காட்டிற இடமா இருக்கனும்.. தங்களை மதிக்காத நிலைக்கு.. அதிகம் முன்னேறி அபிவிருத்தி அடைந்துவிடக் கூடாது.. இதில் எம்மவர்களே மிகவும் கவனமாக இருக்கும் போது சிங்களவன்.. எப்படி இருப்பான்.

அண்மைய யாழ்ப்பாண காணொளிகளில் கண்டதை வைச்சு காண்கிற போது யாழ்ப்பாணம்.. இன்னும் இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன்னேற அனுமதிக்கப்படாது போலவே உள்ளது. tw_astonished:tw_anguished:

சீனக் குக்கிராமங்கள் எல்லாம் நவீனமயமாகி வரும் நிலையில்.. யாழ்ப்பாணம் மட்டும் இன்றும் அதே பழைய சீன்களோடு.. பாசிபிடித்த கட்டடங்களோடு.. மதில்களோடு.. குட்டைநாய்களோடு............................................................... இதுதான் வெளிநாட்டுக்கு ஓடியந்த தமிழர்களுக்கும் தேவை. பந்தாகாட்ட. தாங்கள் ஓடியாந்ததை பொருளாதார ரீதியில்.. நியாயப்படுத்த. :rolleyes:

100 வீதம் உண்மை.

Link to comment
Share on other sites

On 11/23/2015, 6:22:27, nedukkalapoovan said:

யாழ்ப்பாணம் இன்னும் வெளிநாட்டு தமிழர்கள் அங்க போய் பந்தா காட்டும் நிலைக்கு தாழ்ந்தப்பட்டு தான் வைக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் என்பது தாங்கள் போக விடுப்புக்காட்டிற இடமா இருக்கனும்.. தங்களை மதிக்காத நிலைக்கு.. அதிகம் முன்னேறி அபிவிருத்தி அடைந்துவிடக் கூடாது.. இதில் எம்மவர்களே மிகவும் கவனமாக இருக்கும் போது சிங்களவன்.. எப்படி இருப்பான்.

அண்மைய யாழ்ப்பாண காணொளிகளில் கண்டதை வைச்சு காண்கிற போது யாழ்ப்பாணம்.. இன்னும் இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன்னேற அனுமதிக்கப்படாது போலவே உள்ளது. tw_astonished:tw_anguished:

சீனக் குக்கிராமங்கள் எல்லாம் நவீனமயமாகி வரும் நிலையில்.. யாழ்ப்பாணம் மட்டும் இன்றும் அதே பழைய சீன்களோடு.. பாசிபிடித்த கட்டடங்களோடு.. மதில்களோடு.. குட்டைநாய்களோடு............................................................... இதுதான் வெளிநாட்டுக்கு ஓடியந்த தமிழர்களுக்கும் தேவை. பந்தாகாட்ட. தாங்கள் ஓடியாந்ததை பொருளாதார ரீதியில்.. நியாயப்படுத்த. :rolleyes:

நெடுக்கருக்கு பதில் எழுதுவது நேர விரயம் .எதற்கு எடுத்தாலும் உப்பு கூட அல்லது குறைய என்று குற்றம் பிடிக்கும் பேர்வழிகளில் ஒருவர் .பிறந்த வீட்டை சொந்த மண்ணை பார்க்கபோவது பந்தா காட்ட என்று ஒருவர் நினைத்தால் அவருக்கு ஏதோ பிரச்சனை .

போராட்டம் எனறவுடன் நாட்டை விட்டு ஓடி வந்ததற்கு நாட்டிற்கு இன்னமும் திரும்பவில்லை போலிருக்கு .நாட்டில் முப்பதுவருடங்கள்  போர் நடந்துதும் மறந்து விட்டது போலிருக்கு .போர் முடிந்தும் ராஜபக்சா ஆட்சியில் பயந்து போயிருந்த மக்கள் இப்போ தான் சற்று நிம்மதியாக ஏதோ செய்ய தொடங்குகின்றார்கள் அதுவும் தம்பிக்கு பிடிக்கவில்லை போலிருக்கு . 

அரசாங்கம் ரோட்டை போட்டால் குற்றம் ரெயினை விட்டால் குற்றம் .அபிவிருத்தி என்ற பெயரில் சுத்துகின்றார்கள் என்று ஒரு பக்கம் புலம்பல் எதுவும் செய்யாவிட்டால் ஒதுக்கிவிட்டார்கள் என்று கூச்சல்  .

மனைவியின் பதிவிற்கு நியாயம் கற்பிக்கவில்லை உண்மை அதுதான் .என்னை திட்டும் அவசரத்தில் பிடிக்காத பக்கம் என்று மனைவி எழுதியதையும் கவனிக்கவில்லை போலிருக்கு .

எதற்கும் நெடுக்கரே நேரில் ஒருக்கா போய்வந்து பின்னர் கருத்து எழுதவும் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, arjun said:

நெடுக்கருக்கு பதில் எழுதுவது நேர விரயம் .எதற்கு எடுத்தாலும் உப்பு கூட அல்லது குறைய என்று குற்றம் பிடிக்கும் பேர்வழிகளில் ஒருவர் .பிறந்த வீட்டை சொந்த மண்ணை பார்க்கபோவது பந்தா காட்ட என்று ஒருவர் நினைத்தால் அவருக்கு ஏதோ பிரச்சனை .

போராட்டம் எனறவுடன் நாட்டை விட்டு ஓடி வந்ததற்கு நாட்டிற்கு இன்னமும் திரும்பவில்லை போலிருக்கு .நாட்டில் முப்பதுவருடங்கள்  போர் நடந்துதும் மறந்து விட்டது போலிருக்கு .போர் முடிந்தும் ராஜபக்சா ஆட்சியில் பயந்து போயிருந்த மக்கள் இப்போ தான் சற்று நிம்மதியாக ஏதோ செய்ய தொடங்குகின்றார்கள் அதுவும் தம்பிக்கு பிடிக்கவில்லை போலிருக்கு . 

அரசாங்கம் ரோட்டை போட்டால் குற்றம் ரெயினை விட்டால் குற்றம் .அபிவிருத்தி என்ற பெயரில் சுத்துகின்றார்கள் என்று ஒரு பக்கம் புலம்பல் எதுவும் செய்யாவிட்டால் ஒதுக்கிவிட்டார்கள் என்று கூச்சல்  .

மனைவியின் பதிவிற்கு நியாயம் கற்பிக்கவில்லை உண்மை அதுதான் .என்னை திட்டும் அவசரத்தில் பிடிக்காத பக்கம் என்று மனைவி எழுதியதையும் கவனிக்கவில்லை போலிருக்கு .

எதற்கும் நெடுக்கரே நேரில் ஒருக்கா போய்வந்து பின்னர் கருத்து எழுதவும் .

ஒன்றைச் சொல்லிக் கொண்டு இன்னொன்றைச் செய்வது தான் வீண் வேலை. எழுதுவது நேர விரயம் என்றால்.. எது எழுதத் தூண்டியது.. அங்கு பேசப்பட்ட யதார்த்தம் தான். வெளிநாட்டில் உள்ளவர்களில்.. உங்களில்.. எத்தனை பேர் தாயக அடங்காப்பற்றில்... அங்கு இப்போ நல்லாட்சி திரும்பி விட்டது என்ற களிப்பிலும்.. தாயகத்தை முன்னேற்றவும் என்று நிரந்தரமாகப் போய் இருக்கிறீர்கள். நீங்கள் போகவில்லை.. உண்மையான தாயகப் பற்றுள்ளவன் போராட்ட காலத்திலேயே தாயகம் திரும்பி இருக்கிறான். நிரந்தரமாகத் திரும்பி இருந்திருக்கிறான். அதில் சிலரைச் சொல்லலாம்.. ஒருவர் யோகரட்ணம் யோகி.. இன்னொருவர் போராசிரியர் துரைராஜா. அவர்கள் மக்கள்.. மண் என்று போனார்கள்.. நீங்கள்.. உங்கள் உறவுகள் போவது கட்டுரையும் கதையும் என்ற போர்வையில் உங்கள் பந்தாவை இனங்காட்டவே அன்றி வேறில்லை. அந்த மக்களின் வறுமையும்.. போராட்டக் காயங்களும் தான் உங்கள் செழிப்பு மிகுதியை வெளிக்காட்ட தோதான களம் என்பதை தெரிந்து போகிறீர்கள். இந்த பந்தாவை.. கனடாவில்.. பணக்கார வெள்ளைகளிடம் ஏன் காட்டமுடியவில்லை. ஏன்னா அவனுக்கு தெரியும் நீங்கள் கனடாவில் யாருன்னு. அவன் அகதின்னு அல்லது குடியேறி என்று... மூஞ்சில துப்பி அனுப்புவான்.

இங்கு.. நீங்கள் கட்டுரை கதைக்கு அப்பால்.. எதை அந்த மண்ணுக்காக ஆக்கினீர்கள்.. என்று சொல்லலாம். சொல்ல முடியவில்லையே.. ஏன்..???!

நாங்கள் போராட்ட காலத்தில் 70-80% தத்தை அந்த மண்ணில் கழித்தவர்கள். 30 வருட போராட்ட வரலாற்றில் 25 வருடங்களை அந்த மண்ணில் ஆக்கிமிப்புக்கள்.. நில விடுவிப்புக்கள் இவை இரண்டையும் உணர்ந்தவர்கள். எமக்குத் தெரியும்.. எது சுதந்திரமானது.. எது பந்தாவானது என்று.. எது பயங்கரமானது.. எது காட்சிப்படுத்தலானது.. எது.. யதார்த்தமானது என்று. எங்களிடம் நடிப்புகள்.. நாடகங்கள் அவசியமில்லை. யதார்த்தம் என்பதை எங்களுக்கு இனங்காண எங்களாலேயே முடியும்.

நாம் மண்ணை முற்றாகப் பிரிந்தில்லை. மண்ணோடு அதன் நினைவொடு.. அதன் இயக்கத்தோடு தான் இயங்கிக் கொண்டிருக்கிறோம். அந்த வகையில்.. யாரும் பந்தாவுக்கு போய் வந்து தங்களின் சுய இன்ப துன்ப விருப்பு வெறுப்புக்களை வைச்சுப் புனையும் புனைவுகளில் உண்மையை தரிசிக்க வேண்டிய நிலையில்.. நாங்கள் இல்லை. 

கதை கதையாகவே இருக்கட்டும். அதை யதார்த்தம் என்றும் நியாயம் என்றும்.. அதிமதிப்பீடு அளிப்பதை நீங்கள் மற்றும் சில போய் வாற பந்தி விசுவாசிகள்.. கைவிட்டாலே.. அத்தகைய ஆக்கத்துக்குள் வர வேண்டிய அவசியம் இருந்திருக்காது.  tw_blush: 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தப் படங்காட்டல்கள் தேவையில்லை. போர் என்பதன் தாக்கம் எப்படி இருக்கும் என்று தெரிந்து கொண்டு தான் என்ன விலை கொடுத்தாலும் விடுதலை என்ற அந்த விலைமதிக்க முடியாத பொக்கிசத்தை உருவாக்க பாடுபட்டார்கள் பலர். இப்படி சகடை.. விமானத்தால்.. பீப்பா குண்டு போட்டு உடைத்த..  அதே சிங்களவனே.. உலக நாடுகளிடம்.. உதை பயங்கரவாதிகளின் நடவடிக்கை என்று காட்டி.. காசு வாங்கி... பழைய..கட்டிடத்துக்கு சீமேந்து வேலை செய்து வர்ணம் பூசிக்காட்ட என்று யாரும் போராடப் போகவில்லை. இதுதான் அந்த மக்களின் தேவை என்றிருந்தால்.. அந்த மண் போராட வேண்டிய தேவையே இல்லை ஏனெனில்.. இந்த இரண்டு நிலைக்கும் முந்தைய நிலை இது இரண்டையும் விட அவ்வளவு மோசமில்லை.

இன்று ஒரு குழந்தையிடம் இதனைக் காட்டிலுனாலும் அது கூகிளில் தேடி விபரம் அறியும்... உண்மை எது என்று ஆராய முற்படும். நீங்கள் படம் காட்ட பந்தா காட்ட யாழில் அதனை நம்ப ஒரு சில சிங்கள அடியேந்திகள் இருக்கலாம்.. மக்கள்.. எல்லாம் அறிவார்கள். tw_blush:

Link to comment
Share on other sites

முதலாவது நெடுக்கர் விரும்பும் யாழ் ஸ்டேசன் 

இரண்டாவது மக்கள் விரும்பும் யாழ் ஸ்டேசன் .

நெடுக்கு தம்பிக்கு ஒரு கொசுறு செய்தி -

நானும் யோகியும் ஒரு நாள் இடைவெளியில் தான் இந்தியா சென்றோம் .

யோகி சொந்த இயக்கத்தால் நகம் புடுங்கபட்டு பங்கருக்குள் அடைக்கப்பட்டு இருந்தார்.

எனக்கும் ஏறக்குறைய அந்த நிலை வந்தது ஒருவாறு தப்பி வந்துவிட்டேன் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, arjun said:

முதலாவது நெடுக்கர் விரும்பும் யாழ் ஸ்டேசன் 

இரண்டாவது மக்கள் விரும்பும் யாழ் ஸ்டேசன் .

நெடுக்கு தம்பிக்கு ஒரு கொசுறு செய்தி -

நானும் யோகியும் ஒரு நாள் இடைவெளியில் தான் இந்தியா சென்றோம் .

யோகி சொந்த இயக்கத்தால் நகம் புடுங்கபட்டு பங்கருக்குள் அடைக்கப்பட்டு இருந்தார்.

எனக்கும் ஏறக்குறைய அந்த நிலை வந்தது ஒருவாறு தப்பி வந்துவிட்டேன் .

இதைத்தான் மேலே சொல்லி இருக்கிறேன். உங்களுக்கு யாழ்ப்பாண மக்களும்... மண்ணும் விடுதலை ஆவதில்.. நவீன மயமாவதில் விருப்பமில்லை. அந்தப் பழைய நிலையை மெல்ல மெருகூட்டி காட்டி அந்த மக்களை மகா மட்டமான உலகில் வைச்சிருக்கனும்.இல்லாட்டி நீங்க எப்படி பந்தா காட்டிறது. எப்படி போய் வாறது. 

இன்று நாடு என்ற ஒன்று எம்மிடம் இருந்திருப்பின்.. 

lisbon-portugal-oriente-train-station-li

displaymedia3.png

நாங்கள் இப்படி வளர்ந்திருப்போம். நீங்கள் உடைந்ததை பூசிக்காட்டினதை விட இந்த நவீனத்தை இன்னும் அதிகம் மக்கள் வரவேற்றிருப்பார்கள்.. அதுவும் பூரண சுதந்திரச் சூழலில்..! 

யோகி விடயமாக.. ஒருவேளை நீங்கள் சொல்வது உண்மை என்று வைச்சுக் கொண்டால்.. யோகி நகம் புடுங்கினதுக்கு பயந்து.. நாட்டை விட்டு ஓடேல்ல. கடைசி வரை தான் தன் கொள்கையில்.. உறுதியானவன்.. என்று மண்ணில் நின்று காட்டி நகம் புடுங்கினவைக்கே பாடம் எடுத்தார் பாருங்க. அவன்.. போராளி. நீங்க.. பந்தாவாளி. tw_blush: இப்ப புரியுதா வேறுபாடு. 

Link to comment
Share on other sites

ஓடேலா அல்ல ஓட விடல .

லண்டனில் எவரை கேட்டாலும் சொல்லுவார்கள் யோகியின் உற்ற நண்பர் யார் என்று அவரிடம் போய் நடந்ததை கேட்கவும் .

தமிழ்கவியின் ஊழிகாலம் வாசிக்கும் போது இதை விட புதிய விடயங்கள் அறிந்தேன் பாஸ் என்று ஒரு விடயம் இல்லாவிட்டால் எப்பவோ முக்கால்வாசி சனம் அரச கட்டுப்பாட்டு பகுதிக்குள் ஓடியிருக்கும் .

அப்ப நீங்கள் நகம் புடுங்ய சிங்கள இராணுவத்திற்கு போய் பாடம் எடுத்து போராளியாக மாறுங்க .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாஸ் இல்லாமலும் அகதி அந்தஸ்துக்கு சனம் ஓடினதுதான்..இந்திய படை காலம் பற்றி புல்லுப்புடுங்கி தமிழ்கவிக்கு தெரியாது போல.

சொறீலங்கால  பாஸ்போட் விசா இல்லைன்னா சிங்களவன் எல்லாம் இத்தாலில.தமிழன் கனடாவில.

யோகி ஓடனுன்னு நினைச்சிருந்தா ஓடி இருக்கலாம். கருணவால்..முடிஞ்சது.. ஆனால் யோகிக்கி கொள்கை.. மண்..மக்கள்..தான் முக்கியமானார்கள். ???

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அரசியல் சாராத சொந்தமான படைப்புகள் ஆக்கங்களில் கூட தேவையற்று அரசியலைத் திணித்து சலிப்பூட்டும் நிலை இப்ப கொஞ்ச நாட்களாக யாழில் அதிகரித்துக் காணப்படுகிறது. திரிக்குத் தேவையற்ற கருத்துக்களை அகற்றுவதோடு மட்டும் நின்று விடாமல், நிர்வாகம் இது குறித்து உரிய நடவடிக்கைகள் ஏதாவது எடுக்க வேண்டும் என்பது என் அபிப்பிராயம்! 

அர்ஜூன், சிறுபிள்ளைகளுக்கு எட்டாத விடயங்களை விளங்கப் படுத்துவதில் நேரத்தை விரயமாக்காமல் நாம் ஆவலுடன் வாசிக்கும் உங்கள் மனைவியின் ஆக்கத்தை தொடர்ந்து இணையுங்கள்! 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • LSG vs CSK: லக்னௌ விரித்த வலையில் விழுந்த சிஎஸ்கே - ஆட்டத்தை முடித்த 3 விக்கெட் கீப்பர்கள் பட மூலாதாரம்,SPORTZPICS 2 மணி நேரங்களுக்கு முன்னர் வலிமையான பேட்டிங் வரிசை, பந்துவீச்சு பலம் இருந்தும் லக்னௌவின் தொடக்க வரிசையை அசைக்கக்கூட சிஎஸ்கே அணியால் முடியவில்லை. அதேநேரம், சிஎஸ்கே பேட்டர்கள் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக வியூகம் அமைத்து களத்தில் செட்டில் ஆகவிடாமல் லக்னெள அணி திட்டமிட்டுக் காலி செய்துள்ளது. சிஎஸ்கே அணியை கடினமாகப் போராடி லக்னெள அணி வீழ்த்தவில்லை. கனகச்சிதமான திட்டங்களை முன்கூட்டியே வகுத்து, எந்த பேட்டரை எப்படி வீழ்த்த வேண்டுமெனத் தீர்மானித்து தங்கள் திட்டங்களை வெற்றிகரமாகச் செயல்படுத்தி வெற்றி கண்டுள்ளது. ஆட்டத்தைப் பார்த்தபோது, லக்னெள அணியின் பந்துவீச்சு, ஃபீல்டிங், பேட்டிங்கில் இருந்த ஒழுக்கம், கட்டுக்கோப்பு அனைத்தும் சிஎஸ்கே அணியில் மிஸ்ஸிங். தொடக்க வரிசை பேட்டர்களைகூட வீழ்த்துவதற்கு சிரமப்பட்டது, அதன்பின்பும் நெருக்கடி கொடுக்க முடியாமல் தோல்வியை ஒப்புக்கொண்டுள்ளது. லக்னெள அணியின் 3 விக்கெட் கீப்பர்களான கேப்டன் கே.எல்.ராகுல், குயின்டன் டீ காக், நிகோலஸ் பூரன் ஆகிய 3 பேரும் சேர்ந்து ஒட்டுமொத்த சிஎஸ்கே அணியின் ஆட்டத்தை முடித்துவிட்டனர். லக்னெளவில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 34வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது லக்னெள சூப்பர் ஜெயின்ட்ஸ் அணி.   பட மூலாதாரம்,SPORTZPICS முதலில் பேட் செய்த சிஎஸ்கே அணி 6 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் சேர்த்தது. 177 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய லக்னெள அணி 6 பந்துகள் மீதமிருக்கையில் 2 விக்கெட்டுகளை இழந்து 180 ரன்கள் சேர்த்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம், லக்னெள அணி 7 போட்டிகளில் 4 வெற்றி, 3 தோல்வி என 8 புள்ளிகளுடன் 5வது இடத்தில் இருக்கிறது. 8 புள்ளிகள் பெற்றாலும் நிகர ரன்ரேட்டில் 0.123 என்று குறைவாகவே இருக்கிறது. அடுத்தடுத்த போட்டிகளில் பெறும் வெற்றி நிகர ரன்ரேட்டை உயர்த்தும். அதேநேரம், சிஎஸ்கே அணி 7 போட்டிகளில் 4 வெற்றி, 3 தோல்விகள் என 8 புள்ளிகளுடன் 3வது இடத்தில் நீடிக்கிறது. சிஎஸ்கே அணியின் நிகர ரன்ரேட் வலுவாக இருப்பதால், 0.529 எனத் தொடர்ந்து 3வது இடத்தைத் தக்க வைத்துள்ளது. லக்னெள அணியின் வெற்றிக்கு கேப்டன் கே.எல்.ராகுல்(82), டீகாக்(54) முதல் விக்கெட்டுக்கு 134 ரன்கள் சேர்த்து வலுவான அடித்தளம் அமைத்து, இதுதவிர கேப்டனுக்குரிய பொறுப்புடன் கே.எல்.ராகுல் பேட் செய்து 82 ரன்கள் சேர்த்தது முக்கியக் காரணங்களில் ஒன்று. இரு பேட்டர்களும், சிஎஸ்கே பந்துவீச்சாளர்கள் செட்டில் ஆவதை அனுமதிக்காமல் ஷாட்களை அடித்து அழுத்தம் கொடுத்து வந்தனர். நடுப்பகுதி ஓவர்களில் சிஎஸ்கே எப்போதுமே நன்றாகப் பந்துவீசக் கூடியது. இதைத் தெரிந்து கொண்டு ராகுல், டீகாக் நடுப்பகுதி ஓவர்கள் யார் வீசினாலும் அந்த ஓவர்களை குறிவைத்து அடித்ததால், சிஎஸ்கேவின் அந்த உத்தியும் காலியானது. லக்னெள ரன்ரேட்டை குறையவிடாமல் கொண்டு சென்ற ராகுல், டீகாக் ஒரு கட்டத்தில் கவனக் குறைவால் விக்கெட்டை வீழ்த்தினர் என்றுதான் சொல்ல வேண்டும். சிஎஸ்கே பந்துவீச்சு சிறப்பாக இருந்தது எனக் கூறுவது சரியானதாக இருக்க முடியாது. குறிப்பிடப்பட வேண்டிய அம்சமாக, சிஎஸ்கே அணிக்காக லக்னெள அணி “ஹோம் ஓர்க்” செய்து முன்கூட்டியே திட்டமிட்டுக் களமிறங்கியது. அந்தத் திட்டங்களை வெற்றிகரமாகச் செயல்படுத்தியது வெற்றிக்கு முக்கியக் காரணம். ஏனென்றால், லக்னெள அணியின் சரியான திட்டமிடலால்தான், 90 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து சிஎஸ்கே அணி தடுமாறியது. கடைசி 4 ஓவர்களில் லக்னெள பந்துவீச்சாளர்கள் துல்லியமாகப் பந்துவீசியிருந்தால், சிஎஸ்கே அணி 120 ரன்களில் சுருண்டிருக்கும். மொயீன் அலியை ஹாட்ரிக் சிக்ஸ் அடிக்க அனுமதித்தது, தோனியின் கடைசி நேர கேமியோ ஆகியவை சிஎஸ்கே ஸ்கோரை உயர்த்தியது. ஒட்டுமொத்தத்தில் சிஎஸ்கேவுக்கு எதிராக லக்னெள அணி செயல்படுத்திய திட்டங்களை சிஎஸ்கே பேட்டர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை.   பதிலடி கொடுத்த ராகுல்-டீகாக் பட மூலாதாரம்,SPORTZPICS இந்த ஐபிஎல் சீசனில் லக்னெள தொடக்க ஆட்டக்காரர்கள், டீ காக், கே.எல்.ராகுல் இருவரும் பவர்ப்ளே ஓவர்களை சரியாகப் பயன்படுத்தவில்லை, பவர்ப்ளே ஓவர்களுக்குள் ஆட்டமிழந்து விடுகிறார்கள், விரைவாக ரன்களை சேர்ப்பதில்லை என்ற விமர்சனங்கள் எழுந்தன. கடந்த 6 ஆட்டங்களில் பெரும்பாலும் நிகோலஸ் பூரனின் அதிரடியால்தான் பெரிய ஸ்கோர் கிடைத்தது என்று கிரிக்கெட் விமர்சகர்கள் விமர்சித்தனர். ஆனால், நேற்றைய ஆட்டத்தில் கே.எல்.ராகுல், டீகாக் இருவரும் அந்த விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுத்தனர். முதல் விக்கெட்டுக்கு 134 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். 10.5 ஓவர்களில் இருவரால் லக்னெள அணி 100 ரன்களை தொட்டது. கே.எல்.ராகுல் அதிரடியாக பேட் செய்ய, டீகாக் வழக்கத்துக்கு மாறாக மிகவும் நிதானமாக தேவையான ஷாட்களை மட்டும் ஆடினார். ராகுல் ஷார்ட் பால் வீசப்பட்டால் நம்பிக்கையுடன் பிக்-அப் ஷாட்களை ஆடி சிஎஸ்கே பந்துவீச்சை வெளுத்து வாங்கினார். குறிப்பாக பதீராணா பலமுறை யார்கர் வீச முயன்றும் ராகுல் அவர் பந்துவீச்சை நொறுக்கினார். தீபக் சஹர் வீசிய 2வது ஓவரிலிருந்தே ராகுல் பவுண்டரிகளாக விளாசத் தொடங்கி, மிட்விக்கெட்டில் சிக்ஸரும் அடித்து சிஎஸ்கேவுக்கு அதிர்ச்சி அளித்தார். முஸ்தபிசுர் ரஹ்மான் பந்துவீச வந்தபோதும் அவரையும் ராகுல் விட்டு வைக்கவாமல் பவுண்டரிகளாக விளாசினார். பட மூலாதாரம்,SPORTZPICS பவர்ப்ளேவில் 5வது, 6வது ஓவரில் ராகுல், டீகாக் இருவரும் இணைந்து சிஸ்கர், பவுண்டர்களாக விளாசியதால் விக்கெட் இழப்பின்றி பவர்ப்ளேவில் லக்னெள 54 ரன்கள் சேர்த்தது. ஜடேஜா வீசிய 9வது ஓவரில் டீ காக் அடித்த ஷாட்டை ஷார்ட் தேர்டு திசையில் இருந்த பதீராணா எளிமையான கேட்சை பிடிக்கத் தவறவிட்டார். இந்த கேட்ச் தவறவிட்டதற்கான விலையை கடைசியில் சிஎஸ்கே கொடுக்க நேர்ந்ததது. ஜடேஜாவின் அடுத்த ஓவரில் டீகாக் பவுண்டரியும், ராகுல் பவுண்டரியும் விளாசி, ராகுல் 31 பந்துகளில் அரைசதத்தை எட்டினார். நிதானாமாக ஆடிய டீகாக் 41 பந்துகளில் அரைசதம் அடித்தார். இருவரையும் பிரிக்க முடியாமல் கேப்டன் கெய்க்வாட், தோனி இருவரும் பல பந்துவீச்சாளர்களை மாற்றிப் பயன்படுத்தியும் ஒன்றும் நடக்கவில்லை. முஸ்தபிசுர் வீசிய 15வது ஓவரின் கடைசிப் பந்தில் ஸ்லோ பவுன்ஸரை அடிக்க முற்பட்டு, டீகாக் தேவையின்றி தனது விக்கெட்டை இழந்தார். அடுத்ததாக, பதீராணா பந்துவீச்சில் ராகுல் அடித்த ஷாட்டில் பேக்வேர்ட் பாயின்ட் திசையில் ஜடேஜா அற்புதமான கேட்சை பிடித்தார். இரு விக்கெட்டுகள் விழுந்ததால் சிஎஸ்கே ஏதேனும் மாயம் செய்யும் என ரசிகர்கள் நினைத்தனர். ஆனால், நிகோலஸ் பூரன், ஸ்டாய்னிஷ் ஜோடி அதற்கு இடம் அளிக்கவில்லை. அதிலும் நிகோலஸ் பூரன் ஒரு சிக்ஸர், 3 பவுண்டரிகள் அடித்து சிஎஸ்கே திட்டத்தை உடைத்தெறிந்தார். பூரன் 22 ரன்களிலும், ஸ்டாய்னிஷ் 7 ரன்களிலும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.   கட்டுக்கோப்பான பந்துவீச்சு பட மூலாதாரம்,SPORTZPICS லக்னெள அணியின் பந்துவீச்சு நேற்றைய ஆட்டத்தில் நேர்த்தியாகவும், கட்டுக்கோப்பாகவும் இருந்தது. யாஷ் தாக்கூர், மோசின்கான், ரவி பிஸ்னோய் 3 பேரும் கடைசி 4 ஓவர்களில்தான் ரன்களை வழங்கினர். மற்ற வகையில் தொடக்கத்தில் சிஎஸ்கே பேட்டர்களுக்கு கொடுத்த நெருக்கடியை விடாமல் பிடித்துச் சென்றனர். நடுப்பகுதி ஓவர்களில் சிஎஸ்கே பேட்டர்கள் விஸ்வரூபம் எடுக்கலாம் என்பதைக் கருதி, குர்ணல் பாண்டியா, ரவி பிஸ்னோய், ஸ்டாய்னிஷ், மாட் ஹென்றி, என வேகப்பந்துவீச்சு, சுழற்பந்துவீச்சு எனக் கலவையாக பந்துவீசி பேட்டர்களை செட்டில் ஆகவிடாமல் தடுத்தனர். இந்த சீசனில் நடுப்பகுதி ஓவர்களில் சிறப்பாக பேட் செய்து வரும் ஷிவம் துபே விக்கெட்டை ஸ்டாய்னிஷ் எடுத்துக் கொடுத்தார். ரூ.8 கோடிக்கு வாங்கப்பட்ட உ.பி. வீரர் சமீர் ரிஸ்வியை பிஸ்னோய் பந்துவீச்சில் ராகுல் ஸ்டெம்பிங் செய்து வெளியேற்றி கட்டுக்கோப்பாகக் கொண்டு சென்றனர். இதனால் பவர்ப்ளே ஓவர்களில் சிஎஸ்கே அணி விக்கெட்டுகளை இழந்து 51 ரன்கள் சேர்த்த நிலையில், அடுத்த 10 ஓவர்களில் 62 ரன்கள் மட்டுமே சேர்த்தது. 7வது ஓவரிலிருந்து 13வது ஓவர் வரை சிஎஸ்கே அணி 36 ரன்கள் மட்டுமே சேர்த்தது. அதில் ஒரு பவுண்டரிகூட அடிக்கவிடாமல் லக்னெள பந்துவீச்சாளர்கள் துல்லியமாகவும், நெருக்கடி தரும் விதத்திலும் பந்துவீசினர். நடுப்பகுதி 10 ஓவர்களில் 5 ஓவர்களை ரவி பிஸ்னோய், குர்ணல் பாண்டியா இருவரும் பந்துவீசி 29 ரன்கள் மட்டுமே கொடுத்தனர். அதிலும் செட்டில் ஆன பேட்டர் ரஹானே விக்கெட்டையும் குர்ணல் பாண்டியா வீழ்த்தினார்.   ஹோம் ஓர்க் செய்ததன் பலன் பட மூலாதாரம்,SPORTZPICS லக்னெள பந்துவீச்சு குறித்து கேப்டன் ராகுல் கூறுகையில், “சிஎஸ்கே போன்ற வலிமையான அணியை எதிர்கொள்ள நாங்கள் திட்டமிட்டுக் களமிறங்கினோம். எங்கள் திட்டங்களைச் சிறிதுகூட தவறுசெய்யாமல் செயல்படுத்தினோம். எந்த பேட்டரையும் செட்டில் ஆகவிடாத வகையில் பந்துவீச வேண்டும் என முடிவு செய்தோம். அதற்கு ஏற்றார்போல் நடுப்பகுதியில் சுழற்பந்துவீச்சு, வேகப்பந்துவீச்சு என மாறி, மாறி பந்துவீசி, ஒரு பந்துவீச்சுக்கு பேட்டர் செட்டில் ஆகாமல் தடுத்தோம். எங்கள் திட்டங்களுக்குத் தக்க வகையில் ஆடுகளம் இருந்தது, சிஎஸ்கே பேட்டர்களும் அதற்கேற்ப எதிர்வினையாற்றியதால் எளிமையாக முடிந்தது. என்ன விதமான உத்திகளைக் கையாள்வது, பந்துவீசுவது, எவ்வாறு பேட் செய்வது, என்பதை முன்கூட்டியே ஆலோசித்து, ஹோம் ஓர்க் செய்துதான் களமிறங்கினோம். வேகப்பந்துவீச்சு, சுழற்பந்துவீச்சு எனக் கலந்து பயன்படுத்த வேண்டும், குறிப்பாக சிஎஸ்கேவின் எந்த பேட்டரையும் செட்டில் ஆகவிடாமல் பந்துவீச முடிவு செய்தோம். ஒவ்வொரு வீரரும் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பணியை சிறப்பாகச் செய்தனர். குறிப்பாக பந்துவீச்சாளர்கள் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பணியை சிறப்பாகச் செய்தனர். இல்லாவிட்டால், அணி ஒட்டுமொத்தமாக வீணாகியிருக்கும். திட்டங்களைச் சிறப்பாகச் செயல்படுத்தினோம், தீவிரமாகப் பயிற்சி எடுத்ததன் பலன் கிடைத்தது,” எனத் தெரிவி்த்தார்.   சிஎஸ்கே சறுக்கியது எங்கே? பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே அணியின் மோசமான தொடக்க பேட்டர்கள், நடுப்பகுதி பேட்டர்களின் சொதப்பல், பல் இல்லாத பந்துவீச்சு, மோசமான ஃபீல்டிங் ஆகியவை தோல்விக்கான காரணங்கள். ரச்சின் ரவீந்திரா முதல் இரு போட்டிகளைத் தவிர வேறு எந்த ஆட்டத்திலும் ஜொலிக்கவில்லை. கான்வே இல்லாத வெற்றிடத்தை சிஎஸ்கே நன்கு உணர்கிறது. ரஹானே இதுவரை தொடக்க ஆட்டக்காரராக களமிறங்காத நிலையில் இப்போது வழங்கப்பட்டிருக்கும் பணியால் புதிய பந்தில் பேட் செய்ய முடியாமல் திணறுவது தெரிகிறது. புதிய பந்து நன்றாக ஸ்விங் ஆகும்போது, அதை டிபெண்ட் செய்து ஆடுவதற்கே ரஹானே முயல்கிறாரே தவிர, பவர்ப்ளேவுக்கு ஏற்றார்போல் அடித்து ஆட முடியவில்லை. ஆக சிஎஸ்கே அணியின் தொடக்க வரிசை சிக்கலில் இருக்கிறது. கேப்டன் கெய்க்வாட் நேற்றைய ஆட்டத்தில் ஆங்கர் ரோல் எடுக்காமல் 17 ரன்னில் யாஷ் தாக்கூர் பந்துவீச்சில் அவுட்ஸ்விங்கில் எட்ஜ் எடுத்து ஆட்டமிழந்தது பெரிய பின்னடைவு. பவர்ப்ளே ஓவர்களுக்குள் 51 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்தது, அடுத்த 31 ரன்கள் சேர்ப்பதற்குள் 3 விக்கெட்டுகளை இழந்தது என சிஎஸ்கே பேட்டர்கள் ஒட்டுமொத்தமாகத் தவறு செய்தனர். பட மூலாதாரம்,SPORTZPICS ஜடேஜா 4வது வீரராக களமிறக்கப்பட்டாலும், அவர் சிங்கில், 2 ரன்கள் எடுக்கத்தான் முக்கியத்துவம் அளித்தாரே தவிர, பவுண்டரி, சிக்ஸருக்கு பெரிதாக முயலவில்லை. டி20 போட்டிகளில் பவுண்டரி, சிக்ஸர்தான் அணியின் ஸ்கோரை பெரிதாக உயர்த்தும், ரன்ரேட்டை குறையவிடாமல் கொண்டு செல்லும். அதைச் செய்ய ஜடேஜா, மொயீன் அலி தவறிவிட்டனர். நடுப்பகுதி ஓவர்களில் மொயீன் ஜடேஜா களத்தில் இருந்தபோதிலும் 7வது ஓவரில் இருந்து 13வது ஓவர்கள் வரை ஒருபவுண்டரிகூட சிஎஸ்கே அடிக்காதது ரன்ரேட்டை கடுமையாக இறுக்கிப் பிடித்தது. ஜடேஜா ஆங்கர் ரோல் எடுத்து 34 பந்துகளில் அரைசதம் அடித்தாலும், அவரிடம் இருந்து தேவையான பவுண்டரிகள், சிக்ஸர்கள் அரிதாகவே வந்தன. மொயீன் அலி தொடக்கத்தில் நிதானமாக ஆடி கடைசி நேரத்தில் பிஸ்னோய் ஓவரில் ஹாட்ரிக் சிக்ஸர்கள் அடித்து 30 ரன்களில் ஆட்டமிழந்தார். சிஎஸ்கே அணியில் நேற்று ஜடேஜா, மொசின் அலி என இரு சுழற்பந்துவீச்சாளர்கள் இருந்தும் ஜடேஜாவுக்கு மட்டுமே வாய்ப்பு கிடைத்தது. மொசின் அலி ஒரு ஓவர் வீசி 5 ரன்கள் என சிறப்பாகப் பந்துவீசியும் தொடர்ந்து வாய்ப்பு வழங்கவில்லை. ஆனால், சுமாராகப் பந்துவீசிய தேஷ்பாண்டே, முஸ்தபிசுர் இருவருக்கும் தொடர்ந்து வாய்ப்புகள் வழங்கப்பட்டன. மொசின் அலிக்கு கூடுதலாக சில ஓவர்கள் வழங்கி இருக்கலாம்.   பல் இல்லாத பந்துவீச்சு பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே அணியில் முஸ்தபிசுர் ரஹ்மானை தவிர மற்ற பந்துவீச்சாளர்கள் அனைவரும் பேட்டர்களுக்கு நெருக்கடி தரும் அளவுக்கு அனைத்து ஆடுகளங்களிலும் துல்லியமாகப் பந்துவீசுவோர் அல்ல. பந்துவீச்சில் வேரியேஷன், ஸ்லோ பவுன்ஸர்கள், நக்குல் பால், ஷார்ட் பால், பவுன்ஸர் என வேரியேஷன்களை வெளிப்படுத்தி பேட்டர்களுக்கு நெருக்கடி கொடுக்கும் அளவுக்கு பந்துவீச்சு இல்லை என்பதுதான் நிதர்சனம். சிஎஸ்கே அணி தனது வெற்றியை பந்துவீச்சிலும் சரி, பேட்டிங்கிலும் சரி நடுப்பகுதி ஓவர்களில்தான் எதிரணியிடம் இருந்து கபளீகரம் செய்கிறதே தவிர டெத் ஓவர்களிலோ அல்லது பவர்ப்ளே ஓவர்களிலோ அல்ல. அதிலும் மே 1ஆம் தேதிக்குப் பின் முஸ்தபிசுர் ரஹ்மான் சொந்த நாட்டுக்குத் திரும்புகிறார் என்பதால், சிஎஸ்கே பந்துவீச்சு இன்னும் பலவீனமாகும். கான்வே தொடரிலிருந்து முழுமையாக விலகிவிட்டது பேட்டிங்கில் சிஎஸ்கேவுக்கு பெரிய அடி. அவருக்குப் பதிலாக இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளர் ரிச்சார்ட் கிளீசனை சிஎஸ்கே வாங்கியுள்ளது. மே 1ஆம் தேதிக்குப் பின் முஸ்தபிசுர் சென்றபின் அவருக்குப் பதிலாக பந்துவீச்சாளரை வாங்க முக்கியத்துவம் அளிக்குமா அல்லது பேட்டருக்கு முக்கியத்துவம அளிக்குமா என்பது எதிர்பார்ப்பாக இருக்கிறது. பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கூறுகையில், “நாங்கள் பேட்டிங்கை நன்றாக ஃபினிஷ் செய்தோம். இன்னும் கூடுதலாக 15 முதல் 20 ரன்கள் சேர்த்திருக்க வேண்டும். பவர்ப்ளேவில் விக்கெட்டுகள் வீழ்த்த முடியாமல் இருக்கும் சிக்கலைத் தீர்க்க வேண்டும். அதற்கு விரைவாகத் தீர்வும் காண்போம். பவர்ப்ளேவில் விக்கெட் வீழ்த்தினால் நிச்சயமாக எதிரணி கவனமாக ஆடுவார்கள், ரன் சேர்ப்பும் குறையும். இந்த ஆட்டத்தில் தொடக்கத்தில் சரியாக பேட்டிங் செய்ய முடியால் திணறியது, 15வது ஓவர் வரை சிரமம் நீடித்தது. சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தோம். இதுபோன்ற ஆடுகளங்களில், இரவு நேர பனிப்பொழிவு இருப்பதால், 190 ரன்களாவது சேர்ப்பது பாதுகாப்பானது,” எனத் தெரிவித்தார். தோனியின் 101 மீட்டர் சிக்ஸர் சிஎஸ்கே அணியின் முன்னாள் கேப்டன் தோனி, இந்த சீசன் முழுவதும் கலக்கி வருகிறார். லக்னௌ ரசிகர்களும் தோனியின் ஆட்டத்தைக் கண்டு ரசித்தனர். 9 பந்துகளைச் சந்தித்த தோனி 2 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என 28 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார். அதிலும் யாஷ் தாக்கூர் வீசிய கடைசி ஓவரில் லாங்-ஆன் திசையில் இமாலய சிக்ஸர் விளாசினார் இந்த சிக்ஸர் 101 மீட்டர் உயரம் சென்றது. இந்த ஐபிஎல் சீசனிலேயே அதிக உயரத்துக்கு அடிக்கப்பட்ட, மிகப்பெரிய சிக்ஸர் இதுதான். தோனியின் கடைசி நேர கேமியோவில் 28 ரன்கள், பிஸ்னோய் ஓவரில் மொயீன் அலி ஹாட்ரிக் சிக்ஸர் உள்பட 30 ரன்களும் இல்லாவிட்டால் சிஎஸ்கே ஸ்கோர் 125 ரன்கள்தான் என்பது குறிப்பிடத்தக்கது. https://www.bbc.com/tamil/articles/cx03y922278o
    • யார் அந்த ஸ்ரீதரன்? சோசல் காசுதரும் அதான் யுனிவேர்சல் கிரடிட் நான்கு பேரில் தரும் புரோக்கரோ?
    • ஆமாம் நானும் விரும்புகிறேன்   நடக்குமா??  நடக்காது ஓருபோதும்.  நடக்கப்போவதில்லை,....காரணம் தமிழ்நாட்டு மக்கள் விரும்பவில்லை    சீமானை முதல்வர் ஆக்க தமிழ்நாட்டு மக்கள் விரும்பவில்லை   6.23 கோடி வாக்குகளில். குறைந்தது 3.5 கோடி வாக்குகள். பெற்றால் தான்   முதல்வர் ஆக முடியும் அது தனி கட்சி அல்லது பல கட்சிகளின் கூட்டமைப்பு      தனியா போட்டி இடும் சீமான் 0.3 கோடி வாக்குகளைப் பெற்று எப்படி  முதல்வர் ஆகலாம்??   சீமான் தலைமையில் எந்தவொரு கட்சியும். கூட்டணி அமைக்காது   சீமான் தான்  மற்ற கட்சிகளின் தலைமையில் கூட்டணி அமைக்கலாம்   அப்படி அமையும் கூட்டணியில். சீமானுக்கு முதல்வர் பதவி கிடைக்காது  சீமான் வென்றால் தேர்தல் ஆணையம் நல்லது,....வாக்கு எண்ணும் மெசினும். நல்லது    சீமான் தோற்கும்போது இவை இரண்டுமே கூடாது      மேலும் என்னை சீமான் எதிர்ப்பாளர். என்று ஏன் முத்திரை குற்ற வேண்டும்  ...?? ஒருவர் வெல்லும் வாய்ப்புகள் இல்லை என்று கருத்து எழுதும் போது   அவரின் எதிர்ப்பாளர். என்பது சரியான கருத்தா?? இல்லையே?? 
    • கொழும்பான் கூட்டுனா அது கொத்து, கனடால அடிச்ச அது தமிழன் கெத்து  இதுக்கு யாழில குத்தி முறிந்து கொடுக்கிறோம் பாரு சூ... (சப்பாத்து)
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.