Jump to content

'அழிப்புக்கு இஸ்ரேல், சமாதானத்திற்கு நார்வே'


I.V.Sasi

Recommended Posts

'அழிப்புக்கு இஸ்ரேல், சமாதானத்திற்கு நார்வே' சுப.வீரபாண்டியனுடன் ஒரு சந்திப்பு

பேட்டி: சுதா அறிவழகன்

உலைக்களம் போல மீண்டும் கொதிக்க ஆரம்பித்துள்ளது இலங்கை. யாழ்ப்பாணத்தில் நடைபெறும் பட்டினிச் சாவுகளும், ராணுவத் தாக்குதலில் அப்பாவித் தமிழர்கள் சிந்தி வரும் ரத்தமும் உலகத் தமிழர்களின் கண்களில் குருதி கொப்புளிக்கச் செய்கின்றன.

நார்வே சமரச முயற்சிகள், இந்தியாவின் மறைமுக பேச்சுவார்த்தைகள், தகிக்கும் தமிழக அரசியல் கட்சிகள், தமிழ் ஆர்வலர்கள், மக்களின் எண்ண ஓட்டங்கள் ஒருபுறம் இருக்க, ஈழத் தமிழர்களின் நிலை உண்மையிலேயே படு சோகமாக உள்ளது.

இருபது ஆண்டுகளுக்கும் மேலாக இழுபறியாக நீடித்துக் கொண்டிருக்கும் ஈழப் போராட்டத்தின் இறுதிக் கட்டம் இப்போது வந்து விட்டதோ என எண்ணத்தக்க அளவுக்கு அங்கு நிலைமை நெருக்கடியாகி வருகிறது.

இனிமேல் பேச்சே இல்லை, இனி தனித் தமிழ் ஈழமே ஒரே தீர்வு, ஈழத் தமிழர்களை ஒன்று திரட்டி, உலகத் தமிழர்களின் ஆதரவோடு அடுத்த ஆண்டுக்குள் தமிழ் ஈழத்தை அமைப்போம் என பிரபாகரன் முழங்கியிருக்கிறார்.

மறுபுறம், கடலில் கூட்டு ரோந்து செல்வோம், ராணுவ உதவி தாருங்கள், ரேடார் தாருங்கள் என்று இந்தியாவிடம் கெஞ்ச ஆரம்பித்திருக்கிறது இலங்கை. தராவிட்டால் பாகிஸ்தான், சீனா என இந்தியாவின் பகை நாடுகள் பக்கம் தனது பார்வையைத் திருப்பவும் அது தயாராக உள்ளது.

ஈழத்தில் நிலவும் இப்போதைய சிக்கலான சூழ்நிலையும், இந்தியா குறிப்பாக தமிழகத்தின் பங்கு அதில் இப்போது என்ன என்பது குறித்தும், நாம் என்ன செய்து கொண்டிருக்கிறோம், இன்னும் செய்ய வேண்டும், என்னதான் நடக்கப் போகிறது என்பதையும் விவரிக்கிறார் சுப.வீரபாண்டியன்.

தமிழகத்தின் தமிழார்வலர்களில் மிக முக்கியமான முகம் சுப.வீ. பேச்சில் இனிமை தெறிக்கும், எழுத்தில் நெருப்பு பறக்கும். ஈழத் தமிழர்கள் இன்னல்கள் குறித்து நம்முடன் சுபவீ பகிர்ந்து கொண்ட சில கருத்துக்களை இங்கே பதிவு செய்கிறோம்.

ஈழத்தின் தற்போதைய நிலை?

1950களில் அறவழியிலும், 1970களிலிருந்து ஆயுதம் தாங்கியும் போராட்டத்தைத் தொடர்ந்து வருகிறார்கள் ஈழத் தமிழர்கள். இந்தப் பிரச்சினையை எப்படி எடுத்துச் செல்வது என்பது குறித்த நல்ல முடிவை எடுக்க அவர்களை விட தகுதியானவர்கள் யாரும் இல்லை.

மாவீரர் நாளில் உரையாற்றியபோது விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் மிகத் தெளிவாகவே சொல்லியுள்ளார். தனி தமிழ் அரசே ஒரே தீர்வு, சரியான தீர்வு என்பதை அவர் சொல்லி விட்டார். இதை இறுதிப் போர் அறிவிப்பாகவே நான் கருதுகிறேன்.

நார்வே மத்தியஸ்தக் குழு கடைசி சமாதான முயற்சியாக வன்னித் தீவுக்குச் சென்று புலிகள் இயக்கத்தின் தலைவர்களை சந்திக்கும் முயற்சிக்கும் இலங்கை அரசு முட்டுக் கட்டை போட்டு விட்டது. இந்த நிலையில், இலங்கை அரசிடம் நீதியை எதிர்பார்க்க முடியாது.

இப்போதைய நிலையில், எங்களுடைய நியாயமான போராட்டத்திற்கு ஆதரவு தாருங்கள் என்ற ஒன்றை மட்டுமே உலகத்திடமிருந்து புலிகள் எதிர்பார்க்கிறார்கள். அதற்கு வாய்மொழி ஆதரவையும், உணர்வு வழி ஆதரவையும் தமிழக மக்கள் வழங்க வேண்டும்.

தமிழக மக்கள் ஒரணியில் திரண்டால் மட்டுமே இந்தப் பிரச்சினையில் இந்திய அரசு இறங்கி வரும். இந்திய அரசு இறங்கி வந்தால் மட்டுமே, ஈழப் போராட்டத்தில் நியாயம் இருப்பதை, புரிந்தோ அல்லது புரியாமலோ, குறைந்தபட்சம் ஈழத் தமிழர்களின் உணர்வுகளைப் புரிந்து கொண்டு அப்போராட்டத்திற்கு ஆதரவு தர உலக சமுதாயம் முன்வரும்.

ஈழப் பிரச்சினையில் தமிழக அரசின் அணுகுமுறை?

ஈழத் தமிழர்கள் பிரச்சினையில் தமிழக அரசின் அணுகுமுறை வரவேற்புக்குரியதாகவே உள்ளது. ஆனால் அது மட்டும் போதுமானதாக இருக்கிறதா என்பதுதான் இப்போதைய கேள்வி. தற்போது உள்ளதை விட ஆதரவு கூட வேண்டும் என்று எதிர்பார்க்கிறேன்.

கடந்த கால ஆட்சியில் தமிழ் ஈழத்திற்கு எதிரான மிகக் கடுமையான நிலை எடுக்கப்பட்டது. ஆனால் இந்த அரசு ஏறத்தாழ வெளிப்படையாகவே ஆதரவு தருகிறது. சட்டசபையில், ஈழத் தமிழர்கள் மீதான தாக்குதலைக் கண்டித்து ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டதே இதற்குச் சான்று.

செஞ்சோலை படுகொலைச் சம்பவமாகட்டும், மட்டக்களப்பு படுகொலைச் சம்பவமாகட்டும், தமிழக முதல்வர் கண்டித்துக் குரல் கொடுத்துள்ளார். இதை ஒரு நல்ல தொடக்கமாகவே நான் பார்க்கிறேன்.

தனித் தமிழ் ஈழம் அமைவதை வரவேற்கிறீர்களா என்று கேட்கப்பட்ட கேள்விக்கு முதல்வர் கருணாநிதி பதிலளிக்கையில், தமிழர்களுக்குத் தனி ஈழம் அமைந்தால் மகிழ்ச்சியே என்பதை ஏற்கனவே தெளிவாக கூறியுள்ளேன். அதேசமயம், அனைவருக்கும் ஏற்புடைய தீர்வு உண்டானால் அதை விட மகிழ்வேன் என்று கூறியுள்ளார்.

தீர்வு ஏற்படும் வரை தமிழர்கள் மீதான வன்முறைத் தாக்குதல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும் என்றும் கருணாநிதி கருத்து தெரிவித்துள்ளார்.

நார்வே குழுவின் சமரச முயற்சிகள்?

நார்வே குழுவின் முயற்சிகள் நம்பகத் தன்மை உடையது என்று கூறி விட முடியாது. அதாவது அமெரிக்காவுக்கு இரு முகங்கள் உண்டு. அழிப்புக்கு இஸ்ரேல், சமாதானத்திற்கு நார்வே என்பதே அது.

கடந்த நான்கு ஆண்டுகளாக நடந்து வந்த பேச்சுவார்த்தையே ஒரு இழுத்தடிப்பு நடவடிக்கைதான். இந்தப் பேச்சுவார்த்தையில் ஒரு முன்னேற்றமும் ஏற்படவில்லை.

முக்கியச் சாலையான ஏ9 நெடுஞ்சாலையைத் திறக்க இலங்கை அரசு ஒப்புக் கொள்ளவே இல்லை. இதன் மூலம் பேச்சுவார்த்தைக்கான கதவை இலங்கை அரசு மூடி விட்டது. இரு தரப்பிலும் இனி பேச்சுவார்த்தையே இருக்காது என்றே நான் நம்புகிறேன்.

இரு தரப்பும் இறுதிப் போருக்குத் தயாராகி விட்டன என்றுதான் நான் கருதுகிறேன்.

சிவசங்கர மேனன், நாராயணன் ஆகியோரின் பங்கு?

முன்பு ரொமேஷ் பண்டாரி, ஜே.என்.தீக்ஷித் போன்ற அதிகாரிகளும், இப்போது சிவசங்கர மேனன், எம்.கே.நாராயணன் போன்ற அதிகாரிகளும் ஈழப் பிரச்சினையை மேலும் சிக்கலாக்கி விட்டனர்.

சிவசங்கர மேனனும், நாராயணனும் ஈழப் போராட்டத்திற்கு ஆதரவாக இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். பண்டாரி, தீக்ஷித் கூறிய யோசனைகளைக் கேட்டுத்தான் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி தவறான முடிவை எடுத்தார்.

அதிகாரிகள் என்னதான் அரசுகளுக்கு அறிவுரை சொன்னாலும், மக்கள் எழுச்சி பேரலைக்கு முன்பு, இந்த திசை திருப்பும் செயல்கள் நீண்ட நாளைக்கு தாக்குப் பிடிக்க முடியாது.தி தமிழர் ஆதரவு அதிகாரிகளான ஜி.பார்த்தசாரதி போன்றவர்களை இதுபோன்ற முயற்சிகளில் ஈடுபடுத்துவது நல்லது என கருதுகிறேன்.

அதிகாரிகள் அதிகாரிகளாகவே இருக்க வேண்டும். அரசின் கொள்கைகளை முடிவு செய்யும் வேலையை அவர்கள் செய்யக் கூடாது.

கருணாநிதியை தூது அனுப்பினால் சாதிக்க முடியுமா?

முதல்வர் கருணாநிதியால் இலங்கை அரசை நிர்ப்பந்திக்க முடியாது. இந்திய அரசை மட்டுமே கருணாநிதியால் நிர்ப்பந்திக்க முடியும். அதை கருணாநிதி செய்ய, கட்சி பேதமின்றி தமிழகத்தில் உள்ள அத்தனை பேரும் ஓரணியில் திரண்டு, அந்த புதிய மாற்றத்தை ஏற்படுத்த துணை புரிய வேண்டும்.

மற்றப் பிரச்சினைகளைக் கூட பிறகு வைத்துக் கொள்வோம். ஆனால் ஈழப் பிரச்சினையில், எல்லோரும் ஒன்றுபட வேண்டும். பாமக, மதிமுக போன்ற கட்சிகள் போராட்டங்களை நடத்தி வருகின்றன. அதிமுக, காங்கிரஸ் ஆகிய கட்சிகளும் வெளிப்படையாக எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்குக் கூட இந்த இரு கட்சிகளும் ஆதரவு தெரிவித்துள்ளன. இதை வரவேற்கிறேன்.

ராஜபக்ஷேவின் கூட்டு ரோந்து யோசனை?

இது இந்தியாவை மீண்டும் இப்பிரச்சினைக்குள் இழுக்க ராஜபக்ஷே தீட்டிய சதி. எப்படியாவது இந்தியாவை ஈழப் பிரச்சினைக்குள் இழுத்து விட வேண்டும் என்று நினைத்தே அவர் அப்படி ஒரு யோசனையைக் கூறினார். ஆனால் இந்தியா புத்திசாலித்தனமாக கூட்டு ரோந்து முடியாது என்று கண்டிப்பாக கூறி விட்டது.

இலங்கையின் இறையாண்மையில் வேறு யாரும் தலையிட முடியாது என்று கூறும் இலங்கை அரசு, இந்தியாவுடன் கூட்டு ரோந்து மேற்கொள்வது மட்டும் எப்படி அந்நாட்டு இறையாண்மையில் தலையிடுவது ஆகாது என்று கருதுகிறது என்று தெரியவில்லை.

இந்தியாவுக்கு ராஜபக்ஷே மேற்கொண்ட பயணம் ஒரு மாபெரும் தோல்விப் பயணம் என்பதே எனது கருத்து.

தனி ஈழம் தவிர்த்த வேறு திட்டங்களை புலிகள் ஏற்பார்களா?

முழு சுயாட்சி கொண்ட தன்னாட்சி திட்டம் ஒன்றை புலிகள் ஏற்கனவே தெளிவாக பரிந்துரைத்தனர். ஆனால் அதுகுறித்து விவாதம் நடத்த இலங்கை அரசு தயாராக இல்லை.

தனித் தமிழ் ஈழம் தவிர்த்து, விடுதலைப் புலிகளால், ஈழத் தமிழர்களால் ஏற்றுக் கொள்ளப்படக் கூடிய வேறு எந்தத் தீர்வு ஏற்பட்டாலும் எனக்கு மகிழ்ச்சியே.

ஈழப் பிரச்சினையில் தமிழக கட்சிகளின் பங்கு?

கடந்த காலத்தில் ஈழப் பிரச்சினையில் கடும் போக்கை கடைப்பிடித்த அதிமுக இப்போது வெளிப்படையாக ஆதரவு தெரிவிக்காவிட்டாலும் கூட எதிர்ப்பு தெரிவிக்காமல் உள்ளது. இது வரவேற்புக்குரியது.

மதிமுக முன்பை விட தீவிரமாக இப்பிரச்சினையில் கருத்து தெரிவித்து வருகிறது. அதற்கு முரணாக கூட்டணிக் கட்சியான அதிமுக கருத்து தெரிவிக்காமல் இருப்பதைப் பார்க்க வேண்டும்.

போபாலில் ராஜபக்ஷே தொடங்கி வைத்த மேயர்கள் மாநாட்டில் தமிழகத்தைச் சேர்ந்த 6 மேயர்களும் பங்கேற்காமல் புறக்கணித்தனர். புறக்கணிப்பு என்ற நேரடியான காரணத்தையே அவர்கள் சொல்லியிருக்கலாம். இருப்பினும் இந்த 6 மேயர்களில் 2 பேர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில் இப்போது முன்பை விட மிகப் பெரிய அளவில் ஈழப் போராட்டத்திற்கு ஆதரவான நிலை காணப்படுகிறது. திமுக வெளிப்படையாக ஆதரவு தெரிவித்து பேசி வருகிறது. அதேபோல ஈழப் பிரச்சினை தொடர்பாக இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை.

மதிமுகவைச் சேர்ந்த வேளச்சேரி மணிமாறன் மீது கூட விடுதலைப் புலிகளை ஆதரித்துப் பேசியதற்காக வழக்கு போடப்படவில்லை. ஏ.கே.47 ஏந்தி தனித் தமிழ்நாட்டை உருவாக்கத் தயங்க மாட்டோம் என்று கூறியதாகத்தான் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

எனவே, தமிழகத்தில் ஈமிழத் தமிழர்களுக்கு ஆதரவாக கிட்டத்தட்ட அனைத்துக் கட்சிகளும் ஓரணியில் திரண்டு நிற்கும் நிலை உள்ளது என்பதை சொல்லியாக வேண்டும் என்றார் சுப.வீரபாண்டியன்

படைப்புகளை அனுப்ப:

கவிதை, கட்டுரை, சிறுகதை என படைப்பிலக்கியத்தின் எந்தக் கூறுகளிலும் உங்களது ஆக்கங்களை அனுப்பலாம். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: ak.khan@greynium.com

http://thatstamil.oneindia.in/specials/art...vee_061209.html

படைப்புகளை அனுப்பும்போது, நீங்கள் எந்த எழுத்துருவை பயன்படுத்தியுள்ளீர்கள் என்பதை அறியத் தரவும்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • Published By: RAJEEBAN   29 MAR, 2024 | 03:40 PM   அதிகாரபகிர்வு உரிய முறையில் சரியான விதத்தில் இடம்பெற்றால்தான் பொருளாதார வளர்ச்சி சாத்தியம் என்பதை சிங்கள மக்கள் புரிந்துகொள்ள வேண்டும் என அரசியல் செயற்பாட்டாளர் ராஜ்குமார் ரஜீவ்காந்  வேண்டுகோள் விடுத்துள்ளார். கொழும்பில் தூய்மையான அரசியல் கலாச்சாரத்தை ஏற்படுத்துவதற்காக மார்ச் 12 இயக்கம் ஏற்பாடு செய்திருந்த தூய்மையான அரசியலுக்காக ஒன்றிணைவோம் என்ற நிகழ்வில் உரையாற்றுகையில் அவர் இதனை தெரிவித்தார். அவர் தனது உரையில் மேலும் தெரிவித்துள்ளதாவது, தூய்மையான ஒரு எதிர்காலத்தினை  தூய்மையான அரசியலிற்கான ஒரு தேவைப்பாட்டினை அரசிடமிருந்து மக்கள் நீண்டகாலமாக  எதிர்பார்க்கின்றனர். இலங்கைதொடர்ந்து பல வருடங்களாக பொருளாதார ரீதியில் பின்னடைவுகளை சந்தித்துவந்தாலும் 2022ம் ஆண்டு மிக மோசமான அடியை சந்தித்தது 2022 பொருளாதார பிரச்சினை என்பது வெறுமனே 2022 ம் ஆண்டு வந்தது அல்ல இது மிகநீண்டகாலமாக தீர்க்கவேண்டிய பிரச்சினைகளை தீர்க்காமல் அந்த பிரச்சினைகளை மையமாக வைத்து அதன் ஊடாக அரசியல் இலாபம் தேடிக்கொண்டிருந்தவர்களால் எடுத்துக்கொண்டுவரப்பட்டு பின்னர் அது ஒரு பூகம்பமாக வெடித்தது. அதுதான் நாங்கள் அனைவரும் எதிர்நோக்கிய மோசமான பொருளாதார  நெருக்கடி. அதன் பிற்பாடு நாங்கள் மீட்சியை அடைந்துவிட்டோம் என சிலர் கூறினாலும் கூட நாங்கள் உண்மையான மீட்சியை அடையவில்லை. சிறந்த ஒரு பொறிமுறை ஊடாக நாங்கள் அடையவேண்டிய இலக்குகள் இன்னமும் உள்ளன. சமத்துவம் என்ற வார்த்தையை வைத்து நாங்கள் இலங்கையின் ஒட்டுமொத்த  பிரச்சினையையும் அடையாளம் காணமுடியும். சமத்துவமற்ற ஜனநாயகத்தினால் நாங்கள் எந்தவொரு முன்னேற்றத்தையும் அடைந்துவிட முடியாது. இலங்கையில் இலவசக்கல்வி வழங்கப்படுகின்றது இந்த இலவசக்கல்வி ஊடாக தங்களுடைய இலக்கினை ஒரு பணக்கார மாணவன் அடைந்துகொள்ளும்;  தன்மையும் ஏழை மாணவன் அடைந்துகொள்ளும் முறைக்கும் இடையில் பாரிய வேறுபாடு காணப்படுகின்றது. அடித்தட்டுமக்கள் இவ்வளவு சிரமங்களை எதிர்கொள்கின்றனர் ஏன் அவர்கள் இவ்வளவு பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ளவேண்டியுள்ளது என்பதை சற்றே சிந்தித்து பார்த்தால் சமத்துவமற்ற நிலையே இதற்கு காரணம் என்பது புலப்படும். வருமானசமத்துவம் இன்மை அதிகரித்துவருகின்றது செல்வந்தர்கள் மேலும் செல்வந்தர்களாகின்றனர்  வறியவர்கள் மேலும் வறியவர்களாகின்றனர். இங்கு காணப்படுகின்ற ஜனநாயகத்தில் தமிழர்கள் முஸ்லீம்கள்  ஒருபோதும் அதிகாரம் செலுத்துவதில்லை. சிங்களவர்கள் கொண்டுவருகின்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள்தான் அதிகாரம் செலுத்துகின்றார்கள. நாங்கள் பங்காளிகள் இல்லையா என்ற கேள்வி  தமிழ் முஸ்லீம்கள் மத்தியில் காணப்படுகின்றது. வடக்குகிழக்கில் தமிழ் மக்களின் நிலங்கள் அடாத்தாக கைப்பற்றப்படுகின்றன இதற்கு பொலிஸார் துணைபோகின்றனர். இனங்களுக்கு இடையில் சமத்துவம் இன்மையே இதற்கு காரணம் மற்றைய சமூகங்களிற்கு அதிகாரங்கள் சென்றடையவில்லை. கொரோனா காலத்தில் முஸ்லீம்மக்களின் உடல்கள் எரியூட்டப்பட்டன அவர்கள் பழிவாங்கப்பட்டார்கள் இதற்கு யாராவது பொறுப்புக்கூறச்செய்யப்பட்டார்களா  சிறுபான்மை சமூகங்களின் இடங்களை பிடித்து  பௌத்த மக்களை கவர்ந்து நாயகர்களாக மாறி தேர்தல்களில் வெற்றிபெறுகின்றனர் ஆனால் அவர்களை வெற்றிபெறச்செய்தவர்களின் வாழ்க்கை மாற்றமடையாமல் வறுமையில் நீடிக்கின்றது. இந்த உணர்வு அரசியலை என் சகோதரசிங்கள மக்கள் புரிந்துகொள்ளவேண்டும். சரியான முறையில்  அதிகாரபகிர்வு இடம்பெற்றால்தான் பொருளாதார வளர்ச்சி சாத்தியம் என்பதை நீங்கள் நம்பவேண்டும். மீண்டும் மீண்டும் இந்த விடயங்களை  கூறி எங்களை எத்தனை காலமாக எங்களை ஏமாற்றப்போகின்றீர்கள். புரிந்துணர்வுதான் இந்த ஜனநாயகத்திற்கு மிகவும் அவசியமானது. https://www.virakesari.lk/article/179972
    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்
    • சீமானுக்கு எதிராக பொங்கி எழுபவர்கள் யாரென்று பார்த்தால் சிங்கள ஆக்கிரமிப்பையும் கிந்திய ஆக்கிரமிப்பை பற்றியும் வாயே திறக்காதவர்கள் தான் 🤣
    • எம் ஜிஆர் ,  கருணாநிதி , நெடுமாறன்,திருமாளவன்,வைகோ,துரைமுருகன் போன்றோர் செய்யாத ஈழ அரசியலையா சீமான் செய்து விட்டார்? அதிலும் பழ நெடுமாறன்  ஒருபடி மேலே......! நான் தமிழன். நீங்கள் ஈழத்து திராவிடர்களா?😁
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.