Jump to content

கதை சொல்லத்தொடங்கிய கதை


Recommended Posts

 

 

 

 

இந்தக் கதைக்கும், கதைசொல்லியான எனக்கும் ஏதாவது ஒரு தொடர்பு இருக்கும் என்று, இந்தப் பிரதியை வாசிக்கும் போது  நீங்கள் நினைக்கக் கூடும் என்ற நினைப்போடுதான்   இப்பிரதியினை உருவாக்கத் தொடங்குகிறேன். எவ்வகையானதொரு  நோக்கு நிலையில்  நின்று நீங்கள் இதனை வாசிப்பீர்கள் என்ற ஒரு சந்தேகமும் என்னுள் எழாமல் இல்லை. ஏனென்றால் நான் கூட புதிய கதைசொல்லிகளின் கதைகளை, வாசிப்பின் ஆரம்ப காலங்களில் அதிகளவு ஈடுபாட்டுடன் வாசித்ததில்லை. பின்நவீனத்துவம் ,பெருங்கதையாடல்களின் முடிவு, பிரதியினை கட்டுடைத்தல், மையசிதைவு அல்லது மையமின்மை போன்ற பல்வேறு உத்திகளுடன் ஒரு கதையை ஆரம்பித்து நகர்த்துதல் என்ற பல்கோட்பாட்டு நிலையில், ஒரு சிறுகதைக்கான கட்டமைப்பு மீதான கரிசனம் அதிகரித்தபின் கண்ணில் படும் எந்த ஒரு பிரதியையும் வாசிக்க தவறியதில்லை. உண்மையில் இன்றைய இந்த நிலைக்கு நான் பாரிசில் சந்தித்த ஒரு ஈழக் கதைசொல்லி தான் காரணம்.

 

 

 

தொண்டைமனாற்று செல்வச்சன்னதி கோவிலில் இருந்து பருத்தித்துறை நோக்கி நீளும் அந்த பிரதான பாதையின் குறியீட்டு இலக்கம் சி 15. சன்னதி கோவிலின்  முகப்பில் இருந்து ஆரம்பித்தால் வரும் முற்சந்தியில் இடதுபக்கம் திரும்பி ஒரு ஐந்து நிமிட நடைதூரத்தில் இருக்கும்  வளைவினூடாக பயணித்து  அங்கிருந்து சுமார் இருபது நிமிட தூரத்தில் வயல்வெளிகளையும் கல் வீடுகளையும் சிறிய சிறிய பற்றைகளையும்  ஒரு தனியார் கல்வி நிலையத்தையும் கடந்தபின் யாழ் பருத்தித்துறை  பிரதான வீதியோடு நீங்கள் பயணித்துவந்த பாதை இணையும். அது ஒரு முற்சந்தியாகவும் அதன் மையத்தில் ஒரு நூலகமும் பிரதான வீதியின் அருகில் இரண்டு தனியார் கடைகளும், ஒரு பேருந்து தரிப்பிடமும் இருக்கும். 15 ம் கட்டையடி என்று அழைக்கப்படும். அந்த இடம் தான் இந்தக் கதை ஆரம்பிக்கும் தளம்.

 

 

 

இப்படித்தான் இந்தக் கதையின் ஆரம்பத்தினை ஆரம்பித்தேன். முழுதாக மூன்று மாதங்களும் பதினைந்து நாட்களும் இணைய இணைப்பு இல்லாமல் இருந்தமையால் இதை முழுதுமாகவே  மறந்துவிட்டிருந்தேன். பின்னொரு நாளில் மீண்டும் உத்வேகத்தோடு ஏதாவது எழுதிவிடவேண்டும் என்ற நிலையில் கோப்புக்களை பிரட்டித் தேடி எடுத்தபோது எழுதிக்  குறையில் நின்றிருந்த இந்தக் கதை  கண்ணுக்குள் உறுத்தியது. ஆரம்பித்த முறையையும், கதையின் கருவையும் மறந்துவிட்டிருந்த நிலையில் கதைக்காக, ஆரம்பித்த நாளிளிலிருந்த மனநிலைக்கு  என்னை கடத்திப்போக முயன்றேன். கால நீட்சி உணர்வுகளை சிதையப்பண்ணி இருந்தமையாலும், இலங்கையில் நடைபெறும் நாடாளுமன்ற தேர்தல் குறித்த அவதானங்களாலும் கதையினை கண்டடைதல் என்பது கொஞ்சம் சிரமமாகவே இருந்தது.

 

 

 

யாழ்ப்பாணத்திலிருந்து வந்து நின்ற பேருந்தில் 15 கட்டை இறக்கம் என்ற நடத்துனரின் குரலினைக்கேட்டு இருக்கையில் இருந்து எழுந்து வாசல்படியை அடைந்த நடேசன்  நிதானமாக பேருந்திலிருந்து இறங்கினான். நல்ல வெயில். முன்னர் போல வீதி வெறிச்சோடிக் கிடக்கவில்லை. வெயிலையும் பொருட்படுத்தாமல் கனரக வாகனங்களும் மொட்டார்சைக்கிள்களும் ஓரிரு சைக்கிள்களும் இடைவிடாது வீதியில் ஓடிக்கொண்டு இருந்தன.

 

 

 

அந்த இடத்தின் சூழலை மெதுவாக எடைபோட்டான் நடேசன். 15  மைல் என்று எழுதி அடையாளமிட்டு நடப்பட்டிருந்த கல்லை தேடினான். காணவில்லை. நேரே அந்தக் கல் இருந்த இடத்தை நோக்கி நடந்து போனான். கைகால்  குறண்டுவது போலவும் ஆமை தன்  தலை மற்றும் கால்களை உள்ளுக்குள் இழுத்துவிடுவது போலவும் தனக்குள் ஒடுங்கி விடுவதாயும் உணர்ந்தவன் மைல் கல் இருந்த இடம் நோக்கி  மெதுவாக நடக்கத்தொடங்கினான்.

 

 

 

சரியாக இருபத்து எட்டு ஆண்டுகளுக்கு முன், பதினைந்து  வயதில், பாடசாலை முடிந்த குதூகலத்துடன் மிக வேகமாக சைக்கிளில் வந்தவன் இதே சந்தியில் குழுமி நின்ற மக்கள் கூட்டத்தை கண்டதும் சைக்கிளை மெதுவாக நிறுத்தி அருகில் நின்ற பெரியவரிடம் என்ன நடந்தது என்று கேட்டான். காட்டிக் குடுத்தவனை ஊர்வலமாக கொண்டுவந்து கண்ணை கட்டி வைச்சிருக்கிறாங்கள் என்றார். சைக்கிளை ஓரமாக நிறுத்திவிட்டு கூட்டத்துக்குள் நுழைந்து ஒருவாறு கண்ணைக் கட்டிய அந்த நபரை பார்ப்பதற்கு வசதியாக நின்றுகொண்டான் நடேசன்.

 

 

 

புலம்பெயர்ந்த  பின்னான காலம் உண்மையில் எனக்கு ஒரு பொற்காலம் தான்.  கதை சொல்லி ஒருவரின் நெருக்கமும் இங்கே தான் கிடைத்தது. ஊரில் இருந்தவரை வாசிப்புக்களோ அல்லது இலக்கிய உரையாடல்களோ குறைந்த பட்சம் ஒரு புத்தகத்தைப் பற்றி கதைக்கவோ யாரும் இருந்தததில்லை. எந்த நேரமும் படி படி என்று ஆக்கினை செய்யும் அப்பாவின் குரலும், சாப்பிடு சாப்பிடு என்று தொடரும் அம்மாவின் குரலும் டேய் பான் வேண்டிவாடா, பருப்பு வேண்டிவாடா என்ற அக்காவின் குரலும் புகையிலை தோட்டத்தில் கெட்டு உடைத்தபடி நல்லதம்பி பேசும் தூசனங்களும் மட்டுமே இலக்கியங்களாக இருந்ததெனலாம். ஆக மிஞ்சிப்போனால் கடலைவாத்தி மேடையில் பேசின பேச்சுக்கள் மட்டும்தாம் மிகப்பெரிய இலக்கிய ஆதர்சமாக இருந்த காலம் அது.

 

 

 

 எழுத்தாளனின்  தகுதி என்ன எடுத்த  எடுப்பிலேயே அந்த கதைசொல்லியிடம் கேட்டேன். என்னை மேலும் கீழும் பார்த்த கதை சொல்லி தேநீரைக் குடித்தபடி இலகுவாக "ஒன்றுமில்லை. அப்படி இருந்தால் சொல்லுங்கள் நானும் இனிக் கடைப்பிடிப்பம்" என்று இலகுவாக நிறுத்தி விட்டு, நீங்கள் இப்போது வாசிக்கும் புத்தகம் என்ன என்று கேட்டார். புத்தகத்தை சொன்னேன். சிரித்துவிட்டு ஓய்வுநாளில் வீட்ட வாங்க தேவையான புத்தகங்களை எடுத்துசென்று வாசிங்க, என கூறினார். அடுத்த திங்கள் லீவு அன்று வருகிறேன் என்று கூறியபடி விடைபெற்றேன் கதைசொல்லியிடமிருந்து.

 

 

 

வாசலில் சைக்கிளைப் போட்டுவிட்டு ஓடிய நடேசன் தாயின் கையை இறுக்கிப்பிடித்தான். மகனின் முகத்தையும் கை நடுக்கத்தையும் கண்ட தாய் பதறி என்னடா நடந்தது ஏன் இப்படி ஓடிவாராய் முகம் எல்லாம் எல்லாம் வெளிறிக்கிடக்கு என்னாச்சப்பன். என கேட்டபடி தலையை தடவினார். அம்மா 15 கட்டை சந்தியில இயக்கம் ஒரு ஆளைக் கொண்டுவந்து வெட்டினவங்கள் அந்த இடமெல்லாம் ஒரே இரத்தம் அந்தாள் சாப்பிட்ட  சோறு கழுத்தால கொட்டுப்பட்டு ரத்ததில மிதந்து கிடந்தது. ஏனம்மா இப்படி வெட்டுகினம். எனக் கேட்டான். ஐயோ கடவுளே எப்ப நடந்தது நீ ஏன் அதப் பார்க்கப்போனனி. பேசாமல் வீட்ட வாறது தானே என்றபடி நடேசனை அழைத்துசென்று முதல் குளிச்சிட்டு வா. என்றபடி கிணற்றடிக்கு அனுப்பினாள். நீண்ட ஒரு தயக்கத்துடன் கிணற்றை நோக்கி சென்ற நடேசன், அலைந்த மனதுடன்  நீரை அள்ளி தலையில் ஊற்றி தோயத்தொடங்கினான்

 

 

 

போய் சாமி கும்பிட்டுவாங்கோ அதெல்லாம் ஒன்றுமில்லை. அம்மா சோறு தல்லாம் சாப்பிடலாம். என்று குளித்துவிட்டு வந்த நடேசனிடம் கூறினார். தாய் குழைத்து வைத்திருந்த சோற்றினை பார்த்த நடேசன் ஓங்காளித்து வாந்தி எடுத்தான். அன்றிலிருந்து ஐந்து நாட்கள் இந்திராணி மாவட்ட வைத்தியசாலையில் காச்சலுக்கு கிசிச்சை பெற்றான்.

 

 

 

ஊரின் நிலைமைகள் கொஞ்சம் கொஞ்சமாக மோசமாகத்தொடங்கின. எங்கும் தண்டனைகளும் கொலைகளும் நிறைந்து போயின. மக்களில் ஒரு சாராரும் கல்விமான்களில் ஒரு சாராரும் மௌனமாக இருந்தனர். மறுதரப்பினர் பொடியள் செய்வது சரி, இப்படி தண்டனைகள் கொடுத்தால் தான் எல்லோரும் திருந்துவினம் என்று கொக்கரித்து வழிமொழிந்தனர். நடேசன் தன் பதினாறாவது வயதில் சொந்த கிராமத்தை விட்டு தாய், தந்தையை, சகோதரியை  விட்டு வெளியேறினான்.

 

 

 

நான் பாரிஸில், நாட்கள், பொழுதுகள் இரவு பகல் என்றில்லாமல் வாசிக்கத்தொடங்கினேன். கண்டதெல்லாம், தெரிந்ததெல்லாம் வாசித்தேன். இந்த நாட்களில் கொஞ்சம் கொஞ்சமாக எழுதவும் தொடங்கி இருந்தேன் என்பதனை கூச்சத்துடன் சொல்லிக்கொள்கிறேன். எழுத ஆரம்பித்த நாட்களில் ஒவ்வொருவரும் கண்ணுக்குள் வருவார்கள் ஒரு பந்தியினை எழுதி முடிந்ததும் இவர் என்ன சொல்லுவார், அவர் என்ன நினைப்பர் ,இதைப் பார்த்தால் ஊரில என்ன நினைப்பினம் என யோசிக்கவும் வேண்டி வந்தது. ஒவ்வொருவருக்காவும் எழுத்தின் சாரத்துக்களை மாற்றி எல்லோரையும் திருப்திப்படுத்தும் வகையில் எழுதி முடித்து விட்டு, இரண்டு மூன்று நாட்களின் பின் மீண்டும் வாசிக்கையில் உயிரோட்டமில்லாத ஒரு சவக்களை உடைய எழுத்தாகவே அமைந்திருந்ததை உணர்ந்தும் கொண்டேன்.

 

 

 

பாரிஸ். உலக கலைகளின் இருப்பிடம். எந்த துறையை எடுத்தாலும் அதில் பாரிஸின் பங்களிப்பு பிரமிக்க வைக்கும். பாரிஸில் வாழ்ந்த அறிஞர்களை பட்டியலிட்டால் இந்த பக்கம் முழுவது நிறைந்துவிடும். பெருமை மிக்க பாரிஸில் தமிழர்களும் தம் கலைசார்ந்த நிகழ்வுக்கு பெரும் பங்களிப்பினை செய்துவந்தனர். மற்ற எந்த நாட்டிலும் இல்லாத வகையில் தமிழின் கலைகளில் பரிஸ்வாழ் தமிழர்களின் பங்களிப்பு குறிப்பிடத்தக்கதாகவும் வியக்கவைப்பதாகவும்  இருந்தது. இப்படிப்பட்ட ஒரு தளத்தில் நானும்  இயங்கத் தொடங்கினேன். அப்படியான ஒரு வாசிப்பு நாளில் பாரிஸில் இருந்து வெளியாகிய அம்மா ஓசை எக்ஸில் உயிர்மெய் குமுறல் எரிமலை சமர் என சில சஞ்சிகைகள் கிடைத்தன.

 

 

 

 நடேசன் தன்பதினேழாவது வயதில் ஊரை விட்டு வெளியேறினான்.  இருபதாவது வயதில் பாரிஸ் வந்தடைந்தான். பாரிஸ் நடேசனை "நாடா" வாக்கியது. இதிலிருந்து கதைமாந்தன் நாடா என்றே அழைக்கப்படுவான்.

 

 

 

வழமையான புலம்பெயர் வாழ்வியலை நாடாவும் அனுபவித்தான் கொண்டாடினான். பல நாடுகளுக்கும் சுற்றுலா தளங்களுக்கும் சென்றான். தமக்கைக்கும் திருமணம் பேசி  பரிஸுக்கே கூப்பிட்டான். திருமணம் முடித்தான். தாய் தந்தையரை அழைத்து தன்னோடு வைத்துக்கொண்டான். பாரிஸின் புறநகர் ஒன்றில் நிலவீடு வாங்கி சராசரியான ஒரு தமிழனாக தன்னையும் மாற்றிக்கொண்டான். பிள்ளைகளை இருவரும் வளர்ந்து தங்கள் அலுவல்களை தாங்களே செய்யும்  நிலைக்கு வந்துவிட்டிருந்தனர் .

 

 

 

அவ்வாறாதொரு நாளில், லாசெப்பல் சாப்பாட்டுக் கடையில் மதிய உணவினை சாப்பிட்டுக்கொண்டு இருந்தான். தம்பி  ஒரு மரக்கறி சாப்பாடு என்ற குரலினை கேட்டு நிமிர்ந்து பார்த்தான் நாடா. தனக்கு முன்னால் வந்தமர்ந்த நபரை எங்கேயோ பார்த்தது போன்ற நினைவு வர மீன்டும்  மீன்டும் யோசித்தான்,  உணவு வந்துவிட நிமர்ந்து மீண்டும் முன்னால் இருந்த நபரைப் பார்த்தான். அந்த நபரோ தன உணவிலேயே கவனமாக இருந்தார். சோற்றில் பீட்ரூட் கறியினை கலந்து குழைக்க  சோறு சிகப்பாகியது. முகத்தை நிமிர்ந்து பார்த்தான். குடல்மேல் எழும்பி தொண்டையை அடைத்தது. முகம் நினைவுக்கு வந்தது. வம்பில பிறந்தது என்றபடியே கதிரையை தள்ளி எழுந்த நாடா வாயைப்பொத்தியபடி ஓடிப்போய் கடைவாசலில் வாந்தி எடுத்தான். வாந்தியோடு சோறும் கலந்து வந்தது.

 

 

 

கண்கள் கலங்கி சிவந்து உதடுகள் துடிக்க, 15 கட்டை நினைவுக்கு வந்தது. குருதியில் மிதந்த சோறு நினைவுக்கு வந்தது. சன்னிதி கோவில் முகப்பிலிருந்து கழுத்தில் தொங்கிய  மட்டையோடு கைகள் கட்டப்பட்ட நிலையில்  பெருத்த மனிதர் நடந்துவர சனங்கள் கூட்டமாகவும், அந்தக் கூட்டத்தினிடையே   பெண்ணொருத்தியின் விம்மி அழும் குரலும் கேட்டது. அதன் பின் எதுவுமே நினைவில் வர மறுக்க ளர்ந்து ஒடுங்கிப் போய் கடையில் ஓரத்தில் இருந்த கதிரையில்  அமர்ந்தான் நாடாவாகிய நடேசன்

 

 

 

நடேசனுக்கு மிக நெருக்கமாக மக்கள் கூட்டத்தின் மத்தியில் அவர்கள் நின்றிருந்தார்கள். மக்கள் சுற்றி வர கூட்டமாக முனுமுனுத்தபடி நின்றனர். கைகள் பின்னால் கட்டப்பட நிலையில் கண்களை சுற்றி கறுத்த துணியால் கட்டியிருந்தனர். அவரின் பருத்த தேகத்திலிருந்து வியர்வை வழிந்துகொண்டிருந்தது. ஒரு பழைய சாரத்தினை மட்டும் கட்டியிருந்த அந்த மனிதர் கால்களில் வெள்ளைப் புழுதிபடிந்திருந்தது. அந்த வெள்ளை புழுதிகளில் வியர்வை கோடு கோடாக இறங்கிக் கொண்டிருந்தது. என்ன நடக்கபோகிறது என்று தெரியாமலேயே மௌனமாக அவமானப்படுத்தப்பட்ட ஒரு உணர்வற்ற நிலையில் அவரது உடல் குறுகி நின்றது. உடல் மொழியில் இருந்து  நாளை இந்த மக்கள் முன்னால் எப்படி நடமாடப்போகிறேன் என்ற கேள்வியே எழுவது போல இருந்தது நடேசனுக்கு.

 

 

 

ஒற்றையில் எழுதி வந்து எதோ வாசித்தார்கள் அவர்கள்.  தண்டனை வழங்க தீர்மானிக்கப்பட்டது என்ற சொல் மட்டும் தெளிவாக விளங்கியது நடேசனுக்கு. அவர்களில் இருவர் நடேசனை பின்னாலிருந்து தள்ளி, 15 மைல் கல்லின் மேல் கழுத்து இருக்கும்படி குனிய வைத்து பிடித்தனர் ஒருவன் தலைமுடியை இழுத்துப்பிடித்திருந்தான். கல்லின் மேல்பகுதியில் கழுத்து வாகாக பொருந்தி இருந்தது.

 

 

 

ஆளுக்கு நல்ல அடிவிழப்போகுது போல  அதுதான் ஆடாமல் அசையாமல் பிடிக்கினம் என நினைத்தபடி அவர்களையே பார்த்துக்கொண்டிருந்தான் நடேசன். சனங்களுக்கிடையில் இருந்து ஒருவன் நான்காவது ஆளிடம் ஒரு உரப்பையை கொண்டுவது கொடுத்தான். தனது பிஸ்ரலை கழட்டி அந்த ஆளிடம் கொடுத்துவிட்டு வளம் பார்த்து நின்றுகொண்டான் அந்த நான்காவது ஆள்.  உரப்பையை உதறியபோதுதான் நடேசனுக்கு விபரீதம் புரிந்தது. திரும்பி ஓட முயன்றான். பலவகை குரல்கள் சனக்கூட்டத்திருந்து கேட்டுக்கொண்டு இருக்க அந்த நான்காவது ஆள் கையில் இருந்த வாளை உயர்த்தி அந்த மனிதனின் கழுத்தில் சரியாக இறக்கினான்.

 

 

 

15ம் மைல் கல் ரத்தத்தில் குளித்தது. ஒருபக்கம் மலைபோல உடல் கிடந்தது துடித்துக்கொண்டு கிடக்க, தலையை கையில் பிடித்திருந்தவன் கிழே போட்டான். துள்ளி உருண்ட தலை  அடங்கியபோது நடேசனின் காலடியில் கிடந்தது. திடீரென மிக வேகமாக வந்து நின்ற  வானில் அந்த ஐவரும்  சிரித்தபடியே ஏறினர். வாகனத்தின் அடர்ந்த புகை அந்த கூட்டதிருந்த மக்களின் முகங்களை விட வெள்ளையாக இருந்தது. அவர்கள் போய் விட்டனர் . நடேசன் சைக்கிளை எடுத்து வீடு நோக்கி ஓடினான்.  அந்த தனியார் கல்விநிலைய சந்தியில் தலைவிரி கோலமாக தாயும் சிறு பெண் குழந்தையும் ஓடிவருதையும் கண்டான். வேறு எதுவும் காணவில்லை அல்லது உணரும் நிலையில் மனம் இருக்கவில்லை.

 

 

 

பாரிஸிலிருந்து வெளியாகும் ஏதாவது ஒரு சஞ்சிகைக்கு ஒரு கதை எழுதிவிட வேண்டும் என்ற ஆவல் எழுந்தது. புலம்பெயர் தமிழ் இலக்கியத்தளத்தில் சிறு சஞ்சிகைகளின் தாக்கம் வரையறைக்குற்பட்டதல்ல. அரசியல் என்றாலும் இலக்கியம் என்றாலும் மாற்றங்களை ஏற்படுத்தி கொண்டே இருப்பவை மட்டுமல்ல, சர்ச்சைகள் புதிய புதிய இலக்கிய முயற்சிகள் என சிறு சஞ்சிகைகளின் போக்குகள் அந்த சூழலை மாற்றி அமைத்துவிடும். அப்படியான சஞ்சிகைகள் கைக்கு கிடைத்ததும் அந்த சஞ்சிகைகளின் ஆசிரியர்களின் நட்பினை தேடி அலையத் தொடங்கினேன். ஏதாவது ஒரு சஞ்சிகையில் நானும் ஏதாவது ஒரு கதையை எழுதிவிட வேண்டும். எனது கதை சொல்லும் தகுதியை நிருபிக்கவேண்டும் என்ற ஆசை  பல மடங்கு பெரிதாகி நின்றது.

 

 

 

ஒரு நாள்  தொடரூந்தில் தாஸ்தயேவ்ஸ்கியின் "அருவருப்பான விவகாரம் " என்ற புத்தகத்தை வாசித்துக்கொண்டிருந்தேன். திடீரென ஒரு குரல், தம்பி என்ன புத்தகம் வாசிக்கிறீங்க ? புத்தகத்தை காட்டிவிட்டு அவரைப் பார்த்தேன். திகைத்தேன். ஈழத்தின் மூத்த கதைசொல்லி. பழகினேன். பழகினார் . அன்று தொட்டு பலதும் கதைத்தோம். இலக்கியம் அரசியல் எல்லாம் கதைத்தோம். கொஞ்சம் கொஞ்சமாக எனக்குள்ளும் நம்பிக்கை வரத்தொடங்கியது நானும் என்றாவது ஒரு நாள் ஒரு கதையை எழுதி விடுவேன் என. இப்படியான நாளில் தான் அவரிடம் கேட்டேன் எழுத்தாளனின் தகுதி என்ன என்று.

 

 

 

கடையில் வேலை செய்யும் மனிதர் நடாவுக்கு இஞ்சி போட்ட தேநீர் கொண்டுவந்து கொடுத்தார். நடாவின் பார்வை கடைக்குள் திரும்பியது. அவன் அமைதியாக சாப்பிட்டுக்கொண்டு இருந்தான்.  மெதுவாக எழுந்து காசினை கொடுத்துவிட்டு கடையில் வேலை செய்யும் அந்த மனிதரிடமே யார் ஆள் என அவனைக் காட்டி கேட்டான் நாடா.

 

 

 

அவரைத் தெரியாதா இங்கை பெரிய ஆள். இயக்கத்தினர முக்கிய பொறுப்பு. இப்பவும் வேலை செய்கிறார். நல்ல காசு வைச்சிருக்கிறார். நல்ல மனுசன். ஏன் உங்களுக்கு அவரைத் தெரியுமோ என் கேட்டுவிட்டு கடையின் உள்ளே சென்றார். எனக்கு தெரியுமோ, எனக்கு அவனைத் தெரியுமோ, என்ன கேள்வி இது. எப்படி மறக்க. வெட்டிக்கொண்ட பாவியை எப்படி மறப்பது. அதுவும் ஒரு அப்பாவியை ..நல்ல மனுசனாம் சீ. அதில இப்பவும் இயக்கத்துக்கு வேற  வேலை செய்கிறானாம்.

 

 

 

நடாவுக்கு புழுதி படிந்திருந்த காலில் வியர்வைக் கோடுகள் நினைவுக்கு வந்தது. பசிக்குது என்று வந்த வேறொரு இயக்கப்பொடியனுக்கு ஒரு கிழமை ஒளிச்சு வைச்சிருந்து சாப்பாடு கொடுத்ததுதான் அந்த பெருத்த மனிதர் செய்த தப்பு. அதை  எல்லைத்தகராறு  காரணமாக ஏற்கனவே சண்டைபிடித்திருந்த பக்கத்து வீட்டுக்காரன்  பயன்படுத்தி தன் செல்வாக்கையும் சேர்த்து சொல்லிக்குடுத்து விட, இவங்களும் தங்கட ஆளைக் குளிரவைக்க என்றேல்லோ சொன்று போட்டவங்கள். அங்கை ஒரு அப்பாவியின் வாழ்க்கையை குலைத்துப்போட்டு இங்கை வந்து தாங்கள் மட்டும் சந்தோசமாக பிள்ளை குட்டிகளோடு.... கொஞ்சம் கூட குற்றவுணர்வு இல்லாமல் எப்படி இவங்களால் இருக்கமுடிகிறது.

 

 

 

கதையை திட்டமிட்டு எழுததொடங்கினேன். கொஞ்சம் கொஞ்சமாக கதை வளர்ந்தது. இப்போது எந்த சஞ்சலமும் இல்லை.கதை எப்படியாகவும் இருந்துவிடட்டும் எவரைப் பற்றிய நினைவுகளும் இல்லை. யார் என்ன சொன்னாலும் கதை எழுதி முடித்துவிடுவதுதான் என்ற வைராக்கியம் எழுந்து பூதாகராமாகி நின்றது.

 

 

 

மைல் கல் இருந்த  இடத்தை அடைந்த  நடேசன் அவ்விடத்திலேயே நின்றான். எந்த ஒரு அடையாளங்களும் இல்லாமல்  கல் இருந்த இடம் அழிந்துபோய் கிடந்தது. இதேபோலத்தானே அந்த மனிதரும் எந்த ஒரு தடயமும் இல்லாமல் மறைந்து போய் இருப்பார். இப்படி எத்தனை எத்தனை மனிதர்கள். நாளைய காலத்தில் எல்லாமும் இப்படித்தான் மறைந்து போகுமோ என  எண்ணிய நடேசன், அந்த மனிதரின் நினைவுகளை எப்படியாவது பதிவு செய்து விடவேண்டும் என தனக்குள் எண்ணிக்கொண்டான்.  அந்த மனிதரின் வரலாற்றை பதிவு செய்துவிடவேண்டும் என்ற நினைவு வந்ததும் மனதில் இருந்த பாரம் குறைவது போல உணரவே, ஆழமாக ஒருமுறை மூச்சினை இழுத்து விட்டான் நடேசன்.

 

 

 

திரும்பிப் பார்த்தான். வீடு செல்லும் பாதை நீண்டு கிடந்தது. நடந்து போவார் எவருமில்லை. எல்லோரும் வாகனங்களில் சென்று கொண்டிருந்தனர். மிக வேகமாக வீட்டை நோக்கி நடக்கத்தொடங்கினான் நடேசன்.

 

 

 

நான் கதையை எழுதி முடித்துவிட்டேன். எழுத்துப்பிழைகள் கொஞ்சம் இருந்ததை அவதானித்துவிட்டு அவற்றை திருத்தும் நோக்கில் கதையினை மீள வாசிக்கத்தொடங்கினேன். விரைவில் அந்தக் கதையினை பாரிஸில் வெளியாகும் சஞ்சிகை ஒன்றில் நீங்கள் வாசிக்கலாம்.

அந்தக் கதை இப்படி ஆரம்பித்திருந்தது.

 

 

 

பாரிஸின் பிரபல உணவு விடுதி ஒன்றில் அந்தக் கொலைகாரனை சந்திப்பேன் என்று கனவில் கூட நினைக்கவில்லை. எதிர்பாராமல் நிகழந்த அந்த சந்திப்பில் அவனுடைய கண்களில் இருந்து கொலைவாள் ஒன்று இறங்கி என்னை நோக்கி வருவதைக் கண்டேன்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Link to comment
Share on other sites

முற்றத்தில் மல்லிகை மலர்ந்து பல மாதங்கள் .வாசத்துடன் இப்போ ஒன்று மலர்ந்திருக்கு .

வாழ்த்துக்கள் தொடர்ந்து எழுதுங்கள் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தக் கதைக்கும்கதைசொல்லியான எனக்கும் ஏதாவது ஒரு தொடர்பு இருக்கும் என்றுஇந்தப் பிரதியை வாசிக்கும் போது  நீங்கள் நினைக்கக் கூடும் என்றநினைப்போடுதான்   இப்பிரதியினை உருவாக்கத் தொடங்குகிறேன்எவ்வகையானதொரு  நோக்கு நிலையில்  நின்று நீங்கள் இதனை வாசிப்பீர்கள் என்ற ஒரு சந்தேகமும் என்னுள் எழாமல் இல்லை. ஏனென்றால் நான் கூட புதிய கதைசொல்லிகளின் கதைகளைவாசிப்பின் ஆரம்ப காலங்களில் அதிகளவு ஈடுபாட்டுடன் வாசித்ததில்லை. பின்நவீனத்துவம் ,பெருங்கதையாடல்களின் முடிவுபிரதியினை கட்டுடைத்தல்மையசிதைவு அல்லது மையமின்மை போன்ற பல்வேறு உத்திகளுடன் ஒரு கதையை ஆரம்பித்து நகர்த்துதல் என்ற பல்கோட்பாட்டு நிலையில்ஒரு சிறுகதைக்கான கட்டமைப்பு மீதான கரிசனம் அதிகரித்தபின் கண்ணில் படும் எந்த ஒரு பிரதியையும் வாசிக்க தவறியதில்லை. உண்மையில் இன்றைய இந்த நிலைக்கு நான் பாரிசில் சந்தித்த ஒரு ஈழக் கதைசொல்லி தான் காரணம்.

 

தொண்டைமனாற்று செல்வச்சன்னதி கோவிலில் இருந்து பருத்தித்துறை நோக்கி நீளும் அந்த பிரதான பாதையின் குறியீட்டு இலக்கம் சி 15. சன்னதி கோவிலின் முகப்பில் இருந்து ஆரம்பித்தால் வரும் முற்சந்தியில் இடதுபக்கம் திரும்பி ஒரு ஐந்து நிமிட நடைதூரத்தில் இருக்கும்  வளைவினூடாக பயணித்து  அங்கிருந்துசுமார் இருபது நிமிட தூரத்தில் வயல்வெளிகளையும் கல் வீடுகளையும் சிறிய சிறிய பற்றைகளையும்  ஒரு தனியார் கல்வி நிலையத்தையும் கடந்தபின் யாழ்பருத்தித்துறை  பிரதான வீதியோடு நீங்கள் பயணித்துவந்த பாதை இணையும்அது ஒரு முற்சந்தியாகவும் அதன் மையத்தில் ஒரு நூலகமும் பிரதான வீதியின் அருகில் இரண்டு தனியார் கடைகளும்ஒரு பேருந்து தரிப்பிடமும் இருக்கும்15 ம் கட்டையடி என்று அழைக்கப்படும். அந்த இடம் தான் இந்தக் கதை ஆரம்பிக்கும் தளம்.

 

  

இப்படித்தான் இந்தக் கதையின் ஆரம்பத்தினை ஆரம்பித்தேன். முழுதாக மூன்று மாதங்களும் பதினைந்து நாட்களும் இணைய இணைப்பு இல்லாமல் இருந்தமையால் இதை முழுதுமாகவே  மறந்துவிட்டிருந்தேன்பின்னொரு நாளில் மீண்டும் உத்வேகத்தோடு ஏதாவது எழுதிவிடவேண்டும் என்ற நிலையில்கோப்புக்களை பிரட்டித் தேடி எடுத்தபோது எழுதிக்  குறையில் நின்றிருந்த இந்தக் கதை  கண்ணுக்குள் உறுத்தியதுஆரம்பித்த முறையையும்கதையின் கருவையும் மறந்துவிட்டிருந்த நிலையில் கதைக்காகஆரம்பித்த நாளிளிலிருந்த மனநிலைக்கு  என்னை கடத்திப்போக முயன்றேன்கால நீட்சி உணர்வுகளைசிதையப்பண்ணி இருந்தமையாலும்இலங்கையில் நடைபெறும் நாடாளுமன்ற தேர்தல் குறித்த அவதானங்களாலும் கதையினை கண்டடைதல் என்பது கொஞ்சம் சிரமமாகவே இருந்தது.

 

 

 

யாழ்ப்பாணத்திலிருந்து வந்து நின்ற பேருந்தில் 15 கட்டை இறக்கம் என்ற நடத்துனரின் குரலினைக்கேட்டு இருக்கையில் இருந்து எழுந்து வாசல்படியை அடைந்த நடேசன்  நிதானமாக பேருந்திலிருந்து இறங்கினான். நல்ல வெயில். முன்னர் போல வீதி வெறிச்சோடிக் கிடக்கவில்லை. வெயிலையும் பொருட்படுத்தாமல் கனரக வாகனங்களும் மொட்டார்சைக்கிள்களும் ஓரிரு சைக்கிள்களும் இடைவிடாது வீதியில் ஓடிக்கொண்டு இருந்தன.

 

 அந்த இடத்தின் சூழலை மெதுவாக எடைபோட்டான் நடேசன்15  மைல் என்று எழுதி அடையாளமிட்டு நடப்பட்டிருந்த கல்லை தேடினான். காணவில்லை. நேரே அந்தக் கல் இருந்த இடத்தை நோக்கி நடந்து போனான். கைகால்  குறண்டுவது போலவும் ஆமை தன்  தலை மற்றும் கால்களை உள்ளுக்குள்இழுத்துவிடுவது போலவும் தனக்குள் ஒடுங்கி விடுவதாயும் உணர்ந்தவன் மைல் கல் இருந்த இடம் நோக்கி  மெதுவாக நடக்கத்தொடங்கினான்.

 

 

 சரியாக இருபத்து எட்டு ஆண்டுகளுக்கு முன்பதினைந்து  வயதில்பாடசாலை முடிந்த குதூகலத்துடன் மிக வேகமாக சைக்கிளில் வந்தவன் இதே சந்தியில் குழுமி நின்ற மக்கள் கூட்டத்தை கண்டதும் சைக்கிளை மெதுவாக நிறுத்தி அருகில் நின்ற பெரியவரிடம் என்ன நடந்தது என்று கேட்டான். காட்டிக் குடுத்தவனை ஊர்வலமாக கொண்டுவந்து கண்ணை கட்டி வைச்சிருக்கிறாங்கள் என்றார். சைக்கிளை ஓரமாக நிறுத்திவிட்டு கூட்டத்துக்குள் நுழைந்து ஒருவாறு கண்ணைக் கட்டிய அந்த நபரை பார்ப்பதற்கு வசதியாக நின்றுகொண்டான் நடேசன்.

  

 புலம்பெயர்ந்த  பின்னான காலம் உண்மையில் எனக்கு ஒரு பொற்காலம் தான்.  கதை சொல்லி ஒருவரின் நெருக்கமும் இங்கே தான் கிடைத்ததுஊரில்இருந்தவரை வாசிப்புக்களோ அல்லது இலக்கிய உரையாடல்களோ குறைந்த பட்சம் ஒரு புத்தகத்தைப் பற்றி கதைக்கவோ யாரும் இருந்தததில்லை. எந்த நேரமும் படி படி என்று ஆக்கினை செய்யும் அப்பாவின் குரலும்சாப்பிடு சாப்பிடு என்று தொடரும் அம்மாவின் குரலும் டேய் பான் வேண்டிவாடாபருப்பு வேண்டிவாடா என்ற அக்காவின் குரலும் புகையிலை தோட்டத்தில் கெட்டு உடைத்தபடி நல்லதம்பி பேசும் தூசனங்களும் மட்டுமே இலக்கியங்களாக இருந்ததெனலாம். ஆக மிஞ்சிப்போனால் கடலைவாத்தி மேடையில் பேசின பேச்சுக்கள் மட்டும்தாம் மிகப்பெரிய இலக்கிய ஆதர்சமாக இருந்த காலம் அது.

  

 எழுத்தாளனின்  தகுதி என்ன எடுத்த  எடுப்பிலேயே அந்த கதைசொல்லியிடம் கேட்டேன்என்னை மேலும் கீழும் பார்த்த கதை சொல்லி தேநீரைக் குடித்தபடி இலகுவாக "ஒன்றுமில்லை. அப்படி இருந்தால் சொல்லுங்கள் நானும் இனிக் கடைப்பிடிப்பம்" என்று இலகுவாக நிறுத்தி விட்டுநீங்கள் இப்போது வாசிக்கும் புத்தகம் என்ன என்று கேட்டார். புத்தகத்தை சொன்னேன். சிரித்துவிட்டு ஓய்வுநாளில் வீட்ட வாங்க தேவையான புத்தகங்களை எடுத்துசென்று வாசிங்கஎன கூறினார். அடுத்த திங்கள் லீவு அன்று வருகிறேன் என்று கூறியபடி விடைபெற்றேன் கதைசொல்லியிடமிருந்து.

 

  

வாசலில் சைக்கிளைப் போட்டுவிட்டு ஓடிய நடேசன் தாயின் கையை இறுக்கிப்பிடித்தான். மகனின் முகத்தையும் கை நடுக்கத்தையும் கண்ட தாய் பதறி என்னடா நடந்தது ஏன் இப்படி ஓடிவாராய் முகம் எல்லாம் எல்லாம் வெளிறிக்கிடக்கு என்னாச்சப்பன். என கேட்டபடி தலையை தடவினார். அம்மா 15 கட்டை சந்தியில இயக்கம் ஒரு ஆளைக் கொண்டுவந்து வெட்டினவங்கள் அந்த இடமெல்லாம் ஒரே இரத்தம் அந்தாள் சாப்பிட்ட  சோறு கழுத்தால கொட்டுப்பட்டு ரத்ததில மிதந்து கிடந்தது. ஏனம்மா இப்படி வெட்டுகினம். எனக் கேட்டான். ஐயோ கடவுளே எப்ப நடந்தது நீ ஏன் அதப் பார்க்கப்போனனி. பேசாமல் வீட்ட வாறது தானே என்றபடி நடேசனை அழைத்துசென்று முதல் குளிச்சிட்டு வா. என்றபடி கிணற்றடிக்கு அனுப்பினாள். நீண்ட ஒரு தயக்கத்துடன் கிணற்றை நோக்கி சென்ற நடேசன்அலைந்த மனதுடன்  நீரை அள்ளி தலையில் ஊற்றி தோயத்தொடங்கினான்

 

 

 

போய் சாமி கும்பிட்டுவாங்கோ அதெல்லாம் ஒன்றுமில்லை. அம்மா சோறு தல்லாம் சாப்பிடலாம். என்று குளித்துவிட்டு வந்த நடேசனிடம் கூறினார். தாய் குழைத்து வைத்திருந்த சோற்றினை பார்த்த நடேசன் ஓங்காளித்து வாந்தி எடுத்தான். அன்றிலிருந்து ஐந்து நாட்கள் இந்திராணி மாவட்ட வைத்தியசாலையில் காச்சலுக்கு கிசிச்சை பெற்றான்.

 

 

ஊரின் நிலைமைகள் கொஞ்சம் கொஞ்சமாக மோசமாகத்தொடங்கின. எங்கும் தண்டனைகளும் கொலைகளும் நிறைந்து போயின. மக்களில் ஒரு சாராரும் கல்விமான்களில் ஒரு சாராரும் மௌனமாக இருந்தனர். மறுதரப்பினர் பொடியள் செய்வது சரிஇப்படி தண்டனைகள் கொடுத்தால் தான் எல்லோரும் திருந்துவினம் என்று கொக்கரித்து வழிமொழிந்தனர். நடேசன் தன் பதினாறாவது வயதில் சொந்த கிராமத்தை விட்டு தாய்தந்தையைசகோதரியை  விட்டு வெளியேறினான்.

 

 

நான் பாரிஸில்நாட்கள்பொழுதுகள் இரவு பகல் என்றில்லாமல் வாசிக்கத்தொடங்கினேன். கண்டதெல்லாம்தெரிந்ததெல்லாம் வாசித்தேன். இந்த நாட்களில் கொஞ்சம் கொஞ்சமாக எழுதவும் தொடங்கி இருந்தேன் என்பதனை கூச்சத்துடன் சொல்லிக்கொள்கிறேன். எழுத ஆரம்பித்த நாட்களில் ஒவ்வொருவரும் கண்ணுக்குள் வருவார்கள் ஒரு பந்தியினை எழுதி முடிந்ததும் இவர் என்ன சொல்லுவார்அவர் என்ன நினைப்பர் ,இதைப் பார்த்தால் ஊரில என்ன நினைப்பினம் என யோசிக்கவும் வேண்டி வந்தது. ஒவ்வொருவருக்காவும் எழுத்தின் சாரத்துக்களை மாற்றி எல்லோரையும் திருப்திப்படுத்தும் வகையில் எழுதி முடித்து விட்டு,இரண்டு மூன்று நாட்களின் பின் மீண்டும் வாசிக்கையில் உயிரோட்டமில்லாத ஒரு சவக்களை உடைய எழுத்தாகவே அமைந்திருந்ததை உணர்ந்தும் கொண்டேன்.

 

  பாரிஸ். உலக கலைகளின் இருப்பிடம். எந்த துறையை எடுத்தாலும் அதில் பாரிஸின் பங்களிப்பு பிரமிக்க வைக்கும். பாரிஸில் வாழ்ந்த அறிஞர்களை பட்டியலிட்டால் இந்த பக்கம் முழுவது நிறைந்துவிடும். பெருமை மிக்க பாரிஸில் தமிழர்களும் தம் கலைசார்ந்த நிகழ்வுக்கு பெரும் பங்களிப்பினை செய்துவந்தனர். மற்ற எந்த நாட்டிலும் இல்லாத வகையில் தமிழின் கலைகளில் பரிஸ்வாழ் தமிழர்களின் பங்களிப்பு குறிப்பிடத்தக்கதாகவும் வியக்கவைப்பதாகவும் இருந்ததுஇப்படிப்பட்ட ஒரு தளத்தில் நானும்  இயங்கத் தொடங்கினேன்அப்படியான ஒரு வாசிப்பு நாளில் பாரிஸில் இருந்து வெளியாகிய அம்மா ஓசைஎக்ஸில் உயிர்மெய் குமுறல் எரிமலை சமர் என சில சஞ்சிகைகள் கிடைத்தன.

  

  நடேசன் தன்பதினேழாவது வயதில் ஊரை விட்டு வெளியேறினான்.  இருபதாவது வயதில் பாரிஸ் வந்தடைந்தான்பாரிஸ் நடேசனை "நாடாவாக்கியது.இதிலிருந்து கதைமாந்தன் நாடா என்றே அழைக்கப்படுவான்.

 

 

 

வழமையான புலம்பெயர் வாழ்வியலை நாடாவும் அனுபவித்தான் கொண்டாடினான். பல நாடுகளுக்கும் சுற்றுலா தளங்களுக்கும் சென்றான். தமக்கைக்கும் திருமணம் பேசி  பரிஸுக்கே கூப்பிட்டான்திருமணம் முடித்தான்தாய் தந்தையரை அழைத்து தன்னோடு வைத்துக்கொண்டான்பாரிஸின் புறநகர் ஒன்றில்நிலவீடு வாங்கி சராசரியான ஒரு தமிழனாக தன்னையும் மாற்றிக்கொண்டான். பிள்ளைகளை இருவரும் வளர்ந்து தங்கள் அலுவல்களை தாங்களே செய்யும் நிலைக்கு வந்துவிட்டிருந்தனர் .

 

 

அவ்வாறாதொரு நாளில்லாசெப்பல் சாப்பாட்டுக் கடையில் மதிய உணவினை சாப்பிட்டுக்கொண்டு இருந்தான். தம்பி  ஒரு மரக்கறி சாப்பாடு என்ற குரலினைகேட்டு நிமிர்ந்து பார்த்தான் நாடாதனக்கு முன்னால் வந்தமர்ந்த நபரை எங்கேயோ பார்த்தது போன்ற நினைவு வர மீன்டும்  மீன்டும் யோசித்தான்,  உணவு வந்துவிட நிமர்ந்து மீண்டும் முன்னால் இருந்த நபரைப் பார்த்தான். அந்த நபரோ தன உணவிலேயே கவனமாக இருந்தார். சோற்றில் பீட்ரூட் கறியினை கலந்து குழைக்க  சோறு சிகப்பாகியதுமுகத்தை நிமிர்ந்து பார்த்தான்குடல்மேல் எழும்பி தொண்டையை அடைத்ததுமுகம் நினைவுக்கு வந்தது. வம்பில பிறந்தது என்றபடியே கதிரையை தள்ளி எழுந்த நாடா வாயைப்பொத்தியபடி ஓடிப்போய் கடைவாசலில் வாந்தி எடுத்தான். வாந்தியோடு சோறும் கலந்து வந்தது.

 

கண்கள் கலங்கி சிவந்து உதடுகள் துடிக்க, 15 கட்டை நினைவுக்கு வந்தது. குருதியில் மிதந்த சோறு நினைவுக்கு வந்தது. சன்னிதி கோவில் முகப்பிலிருந்து கழுத்தில் தொங்கிய  மட்டையோடு கைகள் கட்டப்பட்ட நிலையில்  பெருத்த மனிதர் நடந்துவர சனங்கள் கூட்டமாகவும்அந்தக் கூட்டத்தினிடையே  பெண்ணொருத்தியின் விம்மி அழும் குரலும் கேட்டதுஅதன் பின் எதுவுமே நினைவில் வர மறுக்க தளர்ந்து ஒடுங்கிப் போய் கடையில் ஓரத்தில் இருந்த கதிரையில்  அமர்ந்தான் நாடாவாகிய நடேசன்

 

 

நடேசனுக்கு மிக நெருக்கமாக மக்கள் கூட்டத்தின் மத்தியில் அவர்கள் நின்றிருந்தார்கள். மக்கள் சுற்றி வர கூட்டமாக முனுமுனுத்தபடி நின்றனர். கைகள் பின்னால் கட்டப்பட நிலையில் கண்களை சுற்றி கறுத்த துணியால் கட்டியிருந்தனர். அவரின் பருத்த தேகத்திலிருந்து வியர்வை வழிந்துகொண்டிருந்தது. ஒரு பழைய சாரத்தினை மட்டும் கட்டியிருந்த அந்த மனிதர் கால்களில் வெள்ளைப் புழுதிபடிந்திருந்தது. அந்த வெள்ளை புழுதிகளில் வியர்வை கோடு கோடாக இறங்கிக் கொண்டிருந்தது. என்ன நடக்கபோகிறது என்று தெரியாமலேயே மௌனமாக அவமானப்படுத்தப்பட்ட ஒரு உணர்வற்ற நிலையில் அவரது உடல் குறுகி நின்றது. உடல் மொழியில் இருந்து  நாளை இந்த மக்கள் முன்னால் எப்படி நடமாடப்போகிறேன் என்ற கேள்வியே எழுவது போல இருந்தது நடேசனுக்கு.

 

  ஒற்றையில் எழுதி வந்து எதோ வாசித்தார்கள் அவர்கள்.  தண்டனை வழங்க தீர்மானிக்கப்பட்டது என்ற சொல் மட்டும் தெளிவாக விளங்கியது நடேசனுக்கு.அவர்களில் இருவர் நடேசனை பின்னாலிருந்து தள்ளி, 15 மைல் கல்லின் மேல் கழுத்து இருக்கும்படி குனிய வைத்து பிடித்தனர் ஒருவன் தலைமுடியை இழுத்துப்பிடித்திருந்தான். கல்லின் மேல்பகுதியில் கழுத்து வாகாக பொருந்தி இருந்தது.

 

  

ஆளுக்கு நல்ல அடிவிழப்போகுது போல  அதுதான் ஆடாமல் அசையாமல் பிடிக்கினம் என நினைத்தபடி அவர்களையே பார்த்துக்கொண்டிருந்தான் நடேசன்.சனங்களுக்கிடையில் இருந்து ஒருவன் நான்காவது ஆளிடம் ஒரு உரப்பையை கொண்டுவது கொடுத்தான். தனது பிஸ்ரலை கழட்டி அந்த ஆளிடம் கொடுத்துவிட்டு வளம் பார்த்து நின்றுகொண்டான் அந்த நான்காவது ஆள்.  உரப்பையை உதறியபோதுதான் நடேசனுக்கு விபரீதம் புரிந்ததுதிரும்பி ஓடமுயன்றான்பலவகை குரல்கள் சனக்கூட்டத்திருந்து கேட்டுக்கொண்டு இருக்க அந்த நான்காவது ஆள் கையில் இருந்த வாளை உயர்த்தி அந்த மனிதனின் கழுத்தில் சரியாக இறக்கினான்.

 

 

 

15ம் மைல் கல் ரத்தத்தில் குளித்தது. ஒருபக்கம் மலைபோல உடல் கிடந்தது துடித்துக்கொண்டு கிடக்கதலையை கையில் பிடித்திருந்தவன் கிழே போட்டான். துள்ளி உருண்ட தலை  அடங்கியபோது நடேசனின் காலடியில் கிடந்தது. திடீரென மிக வேகமாக வந்து நின்ற  வானில் அந்த ஐவரும்  சிரித்தபடியே ஏறினர்.வாகனத்தின் அடர்ந்த புகை அந்த கூட்டதிருந்த மக்களின் முகங்களை விட வெள்ளையாக இருந்ததுஅவர்கள் போய் விட்டனர் . நடேசன் சைக்கிளை எடுத்துவீடு நோக்கி ஓடினான்.  அந்த தனியார் கல்விநிலைய சந்தியில் தலைவிரி கோலமாக தாயும் சிறு பெண் குழந்தையும் ஓடிவருதையும் கண்டான்.வேறுஎதுவும் காணவில்லை அல்லது உணரும் நிலையில் மனம் இருக்கவில்லை.

 

  

பாரிஸிலிருந்து வெளியாகும் ஏதாவது ஒரு சஞ்சிகைக்கு ஒரு கதை எழுதிவிட வேண்டும் என்ற ஆவல் எழுந்தது. புலம்பெயர் தமிழ் இலக்கியத்தளத்தில் சிறு சஞ்சிகைகளின் தாக்கம் வரையறைக்குற்பட்டதல்ல. அரசியல் என்றாலும் இலக்கியம் என்றாலும் மாற்றங்களை ஏற்படுத்தி கொண்டே இருப்பவை மட்டுமல்ல,சர்ச்சைகள் புதிய புதிய இலக்கிய முயற்சிகள் என சிறு சஞ்சிகைகளின் போக்குகள் அந்த சூழலை மாற்றி அமைத்துவிடும். அப்படியான சஞ்சிகைகள் கைக்கு கிடைத்ததும் அந்த சஞ்சிகைகளின் ஆசிரியர்களின் நட்பினை தேடி அலையத் தொடங்கினேன். ஏதாவது ஒரு சஞ்சிகையில் நானும் ஏதாவது ஒரு கதையை எழுதிவிட வேண்டும். எனது கதை சொல்லும் தகுதியை நிருபிக்கவேண்டும் என்ற ஆசை  பல மடங்கு பெரிதாகி நின்றது.

 

ஒருநாள்  தொடரூந்தில் தாஸ்தயேவ்ஸ்கியின் "அருவருப்பான விவகாரம் " என்ற புத்தகத்தை வாசித்துக்கொண்டிருந்தேன்திடீரென ஒரு குரல்தம்பி என்ன புத்தகம் வாசிக்கிறீங்க புத்தகத்தை காட்டிவிட்டு அவரைப் பார்த்தேன். திகைத்தேன். ஈழத்தின் மூத்த கதைசொல்லி. பழகினேன். பழகினார் . அன்று தொட்டு பலதும் கதைத்தோம். இலக்கியம் அரசியல் எல்லாம் கதைத்தோம். கொஞ்சம் கொஞ்சமாக எனக்குள்ளும் நம்பிக்கை வரத்தொடங்கியது நானும் என்றாவது ஒரு நாள் ஒரு கதையை எழுதி விடுவேன் என. இப்படியான நாளில் தான் அவரிடம் கேட்டேன் எழுத்தாளனின் தகுதி என்ன என்று.

 

  கடையில் வேலை செய்யும் மனிதர் நடாவுக்கு இஞ்சி போட்ட தேநீர் கொண்டுவந்து கொடுத்தார். நடாவின் பார்வை கடைக்குள் திரும்பியது. அவன் அமைதியாக சாப்பிட்டுக்கொண்டு இருந்தான்.  மெதுவாக எழுந்து காசினை கொடுத்துவிட்டு கடையில் வேலை செய்யும் அந்த மனிதரிடமே யார் ஆள் என அவனைக் காட்டி கேட்டான் நாடா.

 

 

 

அவரைத் தெரியாதா இங்கை பெரிய ஆள். இயக்கத்தினர முக்கிய பொறுப்பு. இப்பவும் வேலை செய்கிறார். நல்ல காசு வைச்சிருக்கிறார். நல்ல மனுசன். ஏன் உங்களுக்கு அவரைத் தெரியுமோ என் கேட்டுவிட்டு கடையின் உள்ளே சென்றார். எனக்கு தெரியுமோஎனக்கு அவனைத் தெரியுமோஎன்ன கேள்வி இது. எப்படி மறக்க. வெட்டிக்கொண்ட பாவியை எப்படி மறப்பது. அதுவும் ஒரு அப்பாவியை ..நல்ல மனுசனாம் சீ. அதில இப்பவும் இயக்கத்துக்கு வேற  வேலைசெய்கிறானாம்.

 

 நடாவுக்கு புழுதி படிந்திருந்த காலில் வியர்வைக் கோடுகள் நினைவுக்கு வந்தது. பசிக்குது என்று வந்த வேறொரு இயக்கப்பொடியனுக்கு ஒரு கிழமை ஒளிச்சு வைச்சிருந்து சாப்பாடு கொடுத்ததுதான் அந்த பெருத்த மனிதர் செய்த தப்பு. அதை  எல்லைத்தகராறு  காரணமாக ஏற்கனவே சண்டைபிடித்திருந்த பக்கத்துவீட்டுக்காரன்  பயன்படுத்தி தன் செல்வாக்கையும் சேர்த்து சொல்லிக்குடுத்து விடஇவங்களும் தங்கட ஆளைக் குளிரவைக்க என்றேல்லோ சொன்று போட்டவங்கள். அங்கை ஒரு அப்பாவியின் வாழ்க்கையை குலைத்துப்போட்டு இங்கை வந்து தாங்கள் மட்டும் சந்தோசமாக பிள்ளை குட்டிகளோடு.... கொஞ்சம் கூட குற்றவுணர்வு இல்லாமல் எப்படி இவங்களால் இருக்கமுடிகிறது.

  

கதையை திட்டமிட்டு எழுததொடங்கினேன். கொஞ்சம் கொஞ்சமாக கதை வளர்ந்தது. இப்போது எந்த சஞ்சலமும் இல்லை.கதை எப்படியாகவும் இருந்துவிடட்டும் எவரைப் பற்றிய நினைவுகளும் இல்லை. யார் என்ன சொன்னாலும் கதை எழுதி முடித்துவிடுவதுதான் என்ற வைராக்கியம் எழுந்து பூதாகராமாகி நின்றது.

 

  

மைல்கல் இருந்த இடத்தை அடைந்த  நடேசன் அவ்விடத்திலேயே நின்றான்எந்த ஒரு அடையாளங்களும் இல்லாமல்  கல் இருந்த இடம் அழிந்துபோய்கிடந்ததுஇதேபோலத்தானே அந்த மனிதரும் எந்த ஒரு தடயமும் இல்லாமல் மறைந்து போய் இருப்பார்இப்படி எத்தனை எத்தனை மனிதர்கள். நாளைய காலத்தில் எல்லாமும் இப்படித்தான் மறைந்து போகுமோ என  எண்ணிய நடேசன்அந்த மனிதரின் நினைவுகளை எப்படியாவது பதிவு செய்து விடவேண்டும் என தனக்குள் எண்ணிக்கொண்டான்.  அந்த மனிதரின் வரலாற்றை பதிவு செய்துவிடவேண்டும் என்ற நினைவு வந்ததும் மனதில் இருந்த பாரம் குறைவது போல உணரவேஆழமாக ஒருமுறை மூச்சினை இழுத்து விட்டான் நடேசன்.

 

  

திரும்பிப் பார்த்தான். வீடு செல்லும் பாதை நீண்டு கிடந்தது. நடந்து போவார் எவருமில்லை. எல்லோரும் வாகனங்களில் சென்று கொண்டிருந்தனர். மிக வேகமாக வீட்டை நோக்கி நடக்கத்தொடங்கினான் நடேசன்.

 

 

 

நான் கதையை எழுதி முடித்துவிட்டேன். எழுத்துப்பிழைகள் கொஞ்சம் இருந்ததை அவதானித்துவிட்டு அவற்றை திருத்தும் நோக்கில் கதையினை மீள வாசிக்கத்தொடங்கினேன். விரைவில் அந்தக் கதையினை பாரிஸில் வெளியாகும் சஞ்சிகை ஒன்றில் நீங்கள் வாசிக்கலாம்.

அந்தக் கதை இப்படி ஆரம்பித்திருந்தது.

 

  பாரிஸின் பிரபல உணவு விடுதி ஒன்றில் அந்தக் கொலைகாரனை சந்திப்பேன் என்று கனவில் கூட நினைக்கவில்லை. எதிர்பாராமல் நிகழந்த அந்த சந்திப்பில் அவனுடைய கண்களில் இருந்து கொலைவாள் ஒன்று இறங்கி என்னை நோக்கி வருவதைக் கண்டேன்.

 

 

Link to comment
Share on other sites

அன்பும் நன்றியும் அர்ஜுன் அண்ணா, மற்றும் சசி -வர்ணம் அண்ணை 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கதை கன நினைவுகளைப் புரட்டிப் போடுது....!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

லாம்ப் போஸ்ற் காலங்களை கதை நினைவுக்கு கொண்டுவந்தது. எனக்கும் ஒன்றிரண்டு தண்டனைகளை நேரடியாகப் பார்த்த அனுபவம் இருக்கின்றது.  ஆனால் அவை அப்போது பெரிய தாக்கத்தைத் தரவில்லை. 

15ம் கட்டை மொட்டைப் புளியடியா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 இடைவெளிவிட்டு எழுதியிருந்த பந்திகளைப் பார்த்த கோபத்தில் இவர் என்ன இப்படிப் போடுவது. நாமும் வாசிக்காமலே கருத்தைத் திட்டி எழுதிவிடுவோம் என எண்ணியபடி கடந்து வந்தால் சசி இடைநிறுத்திவிட்டார். வித்தியாசமான சிந்தனை. வாழ்த்துக்கள் மகனே.

Link to comment
Share on other sites

லாம்ப் போஸ்ற் காலங்களை கதை நினைவுக்கு கொண்டுவந்தது. எனக்கும் ஒன்றிரண்டு தண்டனைகளை நேரடியாகப் பார்த்த அனுபவம் இருக்கின்றது.  ஆனால் அவை அப்போது பெரிய தாக்கத்தைத் தரவில்லை. 

15ம் கட்டை மொட்டைப் புளியடியா?

வாத்தியார் சுவி ஐயா அம்மா மற்றும் கிருபன் அண்ணை 

கருத்துகளுக்கு அன்பும் நன்றியும். 

அம்மா எழுத்துருவை பெரிதாக முயற்சி செய்தேன் வரவில்லை அப்படியே விட்டுவிட்டேன்.

கிருபன் அண்ணை மொட்டைப் புளியடியை கடந்து வல்லைப் பக்கம் வரும் போது வரும் சந்தி. உண்மையில் அந்த இடத்தில் அப்படி ஒரு சம்பவம் நடக்கவில்லை ஆனால்  ஒரு நபரை கழுத்தில டைனமெற் மாலையாக போட்டு வெடிக்கவைத்தார்கள். அது சந்தியில் இருந்து நீண்ட தொலைவில் நடந்தது 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.