Jump to content

தனிக்கவிதைகள்


Recommended Posts

விண்ணை அளந்திடும் புள்ளினம் போல் மனம்
எண்ணிலா எண்ணம் கொண்டு மிதந்திடும்;
மண்ணில் சூரியக் வெளிச்சமும் விழு முன்னே
கண்ணும் விழித்த கணமே துள்ளி எழ வைக்கும்;
திண்ணிய மனதுடன் எண்ணிய கருமத்தை
வண்ணமுறச் செய்திடும் துணிவையும் தந்திடும்;
தன்னைக் கற்றுணர்ந்து கொண்ட இலட்சியம்
உண்மையென நம்பி உழைக்கும் மனிதர்க்கு!

***

எழிலினை எதனிலும் கண்டு நயந்திடும் பார்வையும்
முழுமையிலா அவனியின் தன்மை உணர் புன்னகையும்
அழுக்காறு களைந்து பிறரை வாழ்த்திடும் உள்ளமும்
ஆழ்மனம் சொல்லும் வழி விலகாத வாழ்வும் கொள்ள
அளவில்லாக் களிப்பில் ஆன்மா முழுமை கொள்ளும்!

***

எல்லைகள் தெரியா விரிந்த வான வெளி - ஆங்கே
எல்லையாய் உந்தன் மனம் இடும் வேலி.
வண்ணங்கள் ஏழு அழகு வானவிலில் - உன்
எண்ணக் கனவின் வண்ணங்கள் எண்ணில;
கணந்தொறும் இவ்வுலகில் தேவைகளும் கணக்கில.
உள்ளத்தே உதித்த வண்ணக் கலவைகளை
அள்ளித் தெளித்திடு அன்புடன் நாள்தொறும்!
வையகமும் வளமாய் வண்ணப் பொலிவுறும்! - மனம்
எல்லையில்லாக் களிப்பினில் வானத்தே பறந்திடும்!

 
 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மல்லிகை வாசத்தின் கவிதைக்கும், 
அவரை நீண்ட நாட்களின் பின், களத்தில் காண்பதிலும் மிக்க மகிழ்ச்சி.:)

Link to comment
Share on other sites

மல்லிகை வாசத்தின் கவிதைக்கும், 
அவரை நீண்ட நாட்களின் பின், களத்தில் காண்பதிலும் மிக்க மகிழ்ச்சி.:)

மிக்க நன்றி தமிழ் சிறி. :) அடிக்கடி இங்கு வருவதுண்டு. வாசிப்பதோடு மட்டும் நிறுத்திக்கொள்வேன். இனிமேல் நேரம் கிடைக்கும் போது கண்டிப்பாகத் தொடர்ந்தும் எழுதுவேன். :)  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல வாசமுள்ள கவிதையுடன் வந்திருக்கின்றீர்கள்  மல்லிகை, வாழ்த்துக்கள்...!  :)

Link to comment
Share on other sites

நல்ல வாசமுள்ள கவிதையுடன் வந்திருக்கின்றீர்கள்  மல்லிகை, வாழ்த்துக்கள்...!  :)

கருத்துக்கும், என்றென்றும் வாழ்த்திடும் உள்ளத்துக்கும்  நன்றிகள்,  சுவி அண்ணா :) 

Link to comment
Share on other sites

  • 1 year later...

அழகு மனம்

சிந்தை கெடு  கொடும் வஞ்சனைத் தீயும்
ஊனினை,  உள்ளத்தை நலிவுறச்செய் கோபமும் 
அண்டை மானிடர் பால் கொள் பொறாமையும் 
அண்டமும் தனதே, சர்வமும் தானே எனும் கர்வமும் 
எண்ணத்தில் இவையனைத்தும் இல்லாத மனிதர்க்கு 
காணும் அனைத்தும் அழகுறத் தோன்றிடும் -  அவர் 
மனவுலகும் அழகாகும்; மகிழ்ச்சியில் மூழ்கிடும்!

***************************************

உறவுகளின் சங்கீதம்

உள்ளங்களில் ஊற்றெடுக்கும் அன்பெனும் ஜீவநதிகள்
தேசங்கள் கடந்து பாயாமல், சிறு குவளைகளுக்குள் தேங்கிடுமோ?

புள்ளினம் போல் தேசமெலாம் பறந்து திரிந்து உறவு கொண்டாடி
உள்ளம் மகிழாமல், தத்தம் கூண்டுகளுக்குள் நாம் முடங்கிடுவமோ?

புல்லாங்குழலின் துளைகளை அடைத்துவிட்டு, அதை மீட்ட
கோபியரும், கோபாலரும் மகிழும் கானம் பிறந்திடுமோ?

பிரிந்து பெரும் பிரவாகத்துடன் ஓடும் நதிகளின் சங்கமம் தான் அழகு!

விரிந்த வானத்தே பட்சிகள் கூடிப்பறந்திட தோன்றிடும் கோலமும் அழகு!
பரந்த உலகிலே பிரிந்த உறவுகள் எல்லாம் கூடிப் பேசி மகிழ்வதும் அழகே!

புல்லாங்குழலின் துளைகளில் விரல்கள் நர்த்தனமிட்டு, உட்சென்ற காற்றை இனிய கீதமாக்கும்.

நல்லுள்ளங்கள் நயமுடன் வார்த்தைகள் நவின்றிட பிறந்திடும் உறவெனும் உன்னத சங்கீதம்!

Link to comment
Share on other sites

  • 3 weeks later...

நள்ளிரவின் முழு நிலவொளியில் சலனமற்ற கடலோரம்,
வளைந்து கடலை வணங்கும் தென்னைமர ஓலை சாமரம் வீசும்;
குளிர்தென்றலும் மெல்ல வந்து மேனி தழுவி நழுவிச் செல்லும்;
கள்ளமுடன் முறுவல் பூக்கும் நிலவொளியில் ஒளி விண்மீன்கள்;
செல்லிடப் பேசியில் ஆர்ப்பாட்டமில்லா மெல்லிசையில் லயிக்கும் 
ஆழ்மனம் அமைதியின் எழிலினை நயந்து களிப்புறும், ஆர்ப்பரிக்கும்!
************************

சிறு சிறு துளிகள் மண்ணைத் தழுவி 
வெள்ளமாய் பாயும் மழையின் பிரவாகமும்,
வசந்தகாலம் கண்கவர் வண்ணமாய் மலர்ந்து 
காற்றினில் ஆடி மகிழும் மலர்களின் குதூகலமும்,
வானவெளியே எழில்மிகு கோலமென ஒருங்கே சேர்ந்து 
உல்லாசமாய் திரியும் பட்சிகளின் ஊர்வலக் காட்சியும்,
சுரங்கள் பல சேர்ந்து ராகமாகி காற்றலைகளில் 
பரவி காதோரம் செல்ல ஏற்படும் பரவசமும், 
அழகு தமிழ் சொற்கள் பொருள்பட சேர்ந்து 
கவிதையாய் பிறக்கையில் அதில் வரும் இன்பமும் 
உணர்ந்து ரசித்து அவற்றில் மூழ்கிடும் தருணங்கள் 
மானிடன் மனதில் தோன்றும் ஆணவத்தை அழித்திடும்;
ஒன்றாய் இணைந்து வாழ்தலின் அழகினை உணர்த்திடும்! 

***********************

 

 

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

தனிமைக்கு அருமருந்தாம் - அதுவே 
தன்னுள்ளே சிக்க வைக்கும் போதையுமாம்; 
தினந்தோறும் கடல்போல தகவல்களை அள்ளித் 
தந்திடினும் அதில் முத்துக் குளித்து அவற்றின் 
உண்மை தன்மையினை அறிந்திடுதல் கடினமாம்;
முகநூலாம் - நட்புக்கோர் நூலாம் - எனினும் அது ஓர் 
முகமன் நூலாம்; கலை அலங்காரம் செய்த முகம் போலாம்! :11_blush:

(கலை அலங்காரம் - Make-up)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இரசிக்கவும் சிந்திக்கவும் வைக்கும் அழகிய கவிதைகள்.தொடர்ந்து எழுதுங்கள் மல்லிகை வாசம் .....!  tw_blush:

Link to comment
Share on other sites

On 11/3/2017 at 8:03 PM, suvy said:

இரசிக்கவும் சிந்திக்கவும் வைக்கும் அழகிய கவிதைகள்.தொடர்ந்து எழுதுங்கள் மல்லிகை வாசம் .....!  tw_blush:

கருத்துக்கும், ஊக்கத்துக்கும் நன்றி சுவி அண்ணா :11_blush:

Link to comment
Share on other sites

  • 3 months later...

அழுக்காறு
**************
மல்லிகையின் நறுமணம் கண்டு முல்லை மலர் வாடுவதில்லை;
பென்குயினின் மிடுக்குநடை கண்டு அன்னம் தன் அழகு நடையை மறப்பதில்லை;
ஆழ்கடல் வாழ் மீனினங்கள் காணும் அழகை
வானவெளியே வலம் வரும் புள்ளினங்கள் காணாது வருந்துவதில்லை.
நம் ஒவ்வோர்க்கும் தனித்தனி ஆற்றலை அளித்தனன் இறைவன்.
நம் தனித்துவமே நம் எல்லோர்க்கும் ஆபரணங்களாம் - எனினும்
தங்கத்தில் பதித்த மணிவைரம் ஒளிர்வதால் தங்கத்தின் மதிப்பு குறைவதுமில்லை; இரண்டும் சேர்ந்து அழகாய் மிளிர தவறியதுமில்லை.
பெருமை மிகு மானிட ஜாதிக்கு
பொறாமை எனும் புற்றுநோய் வீணே.
அழுக்காறு எனும் அழுக்கினை அகற்றி
அன்பு எனும் பாலத்தில் அனைவரும் இணைய, உள்ளத்தில் ஆனந்த நதி சலனமின்றிப் பாய்ந்திடுமே! 

Link to comment
Share on other sites

18 hours ago, கஜந்தி said:

அருமை

நன்றி கஜந்தி ?

Link to comment
Share on other sites

  • 11 months later...

போலிப் புன்னகையும், பசப்பு மொழியும் அலங்கரித்த மானுடம் பேருடனும், புகழுடனும் சீர்பெற்று வாழ்ந்திடும்.
இவை அல்லால், அது வாழும் கலை தெரியாப் பொருள் எனப் பெயர் பெறும்!

*******************

நல்லவரையும், நன்மையையும் மட்டும் வேண்டி நிற்க இது சொர்க்கம் அல்ல, பூலோகம்; வல்லவன் தான் வாழ்வான் என கீதை சொல்லும் மார்க்கம்!

*********************

நலிந்தோரை நசுக்கிய வலியவர் சொல்வதே தர்மமாம் - ஆதலால் 'தர்மமே இறுதியில் வெல்லும்' என்று சொல்வதும் நிஜம் தான் போலும்! 🤔 🤡🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முன்பெல்லாம் நீங்கள் நிறைய எழுதுவீங்கள் .......பின் இப்போதுதான் மீண்டும் தொடர்ந்து வருகின்றீர்கள்,சந்தோசமாய் இருக்கு மல்லிகை வாசம். நல்ல கவிதைகள்.....இன்னும் நிறைய எழுதுங்கள் வாசிக்க ஆவல் .....!  😁 

Link to comment
Share on other sites

  • 2 months later...

நிஜங்களை தேடித்தேடி தினந்தினம் பயணம்
நீதி, நியாயங்கள் அருகிவிட்ட உலகில்.
நிலையில்லா வாழ்வில் நிலைத்திடா நிஜங்களால் நலிந்திடும் மனதில் நிம்மதியேது?
'நினைவினில் பரம்பொருள் ஒன்றே நிலையெனக் கொள்ளல் நல'மென ஞானியர் நவின்றது 
நடைமுறை வாழ்வினில் நமக்கு ஒவ்வுமா?
நர்த்தனமாடிடும் நடராஜன் அவன் ஆட்டுவிப்பில் 
நாமும் ஓர் பொம்மையென நம்நிலை உணர்ந்து 
நாள்தொறும் நம்கருமம் நலமுடனே ஆற்றுதலும்,
நிஜம் இதுவேயென உணர்தலும் நிம்மதி தரும்.

Link to comment
Share on other sites

சிறு சிறு கவிதைகள் நன்றாக உள்ளன. தொடர்ந்து எழுதுங்கள்.

Link to comment
Share on other sites

10 hours ago, Lara said:

சிறு சிறு கவிதைகள் நன்றாக உள்ளன. தொடர்ந்து எழுதுங்கள்.

வருகைக்கும், ஊக்குவிப்புக்கும் நன்றி லாரா. 😊

Link to comment
Share on other sites

மல்லிகை வாசம் உங்கள் கவிதை அருமையாக இருக்கின்றது. 

நாமும் ஓர் பொம்மையென நம்நிலை உணர்ந்து 
நாள்தொறும் நம்கருமம் நலமுடனே ஆற்றுதலும்,
நிஜம் இதுவேயென உணர்தலும் நிம்மதி தரும்.

இது தான் நிஜம்.

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
On 5/4/2019 at 5:10 PM, ஜெகதா துரை said:

மல்லிகை வாசம் உங்கள் கவிதை அருமையாக இருக்கின்றது. 

நன்றி ஜெகதா. 

*****************************************

தன்னலம் மறுத்திட்ட உயர் இலட்சிய மறவர்,
துர்க்குணம் அறியாத் தம் தொழில் ஆற்றி வாழ்
நம் சகமனிதர், இல்லறம் வளர்த்த அன்புத் தாய்மார், 
வானுயர் விருட்சங்களாய் வளர்ந்து - இப்புவிக்கு 
வளம் தரவல்ல இளஞ்சிறு தளிர்கள் - சிறார்கள்
இன்ன நல்லுயிர்கள் இன்று நம்முடனில்லை - எனினும் 
நினைவுதனில் கலையாது நிலைத்திருக்கும் அவர் தியாகம்! 🙏🙏🙏

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நானும் போட்டியில் குதித்துள்ளேன்!   # Question Team1 Team 2 No Result Tie Prediction 1) ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் முன்னணியில் வரும் நான்கு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும். தவறான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் குறைக்கப்படும்.     No Result Tie     CSK     Select CSK CSK   DC     Select DC Select   GT     Select GT Select   KKR     Select KKR KKR   LSG     Select LSG Select   MI     Select MI Select   PBKS     Select PBKS Select   RR     Select RR RR   RCB     Select RCB Select   SRH     Select SRH SRH 2) முதல் நான்கு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக.             #1 - ? (சரியான பதில்: +4 புள்ளிகள், தவறான பதில்: -4 புள்ளிகள் )         RR   #2 - ? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3 புள்ளிகள் )         KKR   #3 - ? (சரியான பதில்: +2 புள்ளிகள், தவறான பதில்: -2 புள்ளிகள்)         CSK   #4 - ? (சரியான பதில்: +1 புள்ளி, தவறான பதில்: -1 புள்ளி )         SRH 3) ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? (சரியான பதில்: +2 புள்ளிகள், தவறான பதில்: -2 புள்ளிகள்)         PBKS 4) மே 21, வெள்ளி 19:30 அஹமதாபாத் Qualifier 1 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3 புள்ளிகள்) Qualifier 1: 1st placed team v 2nd placed team         RR 5) மே 22, புதன் 19:30 அஹமதாபாத் Eliminator போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3 புள்ளிகள்) Eliminator: 3rd placed team v 4th placed team         CSK 6) மே 24 வெள்ளி 19:30 சென்னை Qualifier 2 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3 புள்ளிகள்) Qualifier 2: Loser of Qualifier 1 v Winner of Eliminator         KKR 7) Final போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +5 புள்ளிகள், தவறான பதில்: -5 புள்ளிகள்) Final: Winner of Qualifier 1 v Winner of Qualifier 2         KKR 😎 இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஓட்டங்களை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி)         SRH 9) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் குறைந்த ஓட்டங்களை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி)         GT 10) இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் (Orange cap) பெறும் வீரர் யார்? ( சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்)         Sanju Samson 11) இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் (Orange cap) எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி, கேள்வி 10 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )         RCB 12) இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் (Purple cap) பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்)         Yuzvendra Chahal 13) இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் (Purple cap) பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி, கேள்வி 12 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )         MI 14) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள் )         Virat Kohli 15) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி, கேள்வி 14 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )         RCB 16) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்)         Jasprit Bumrah 17) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி, கேள்வி 16 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )         MI 18) இந்த தொடரில் சிறந்த் ஆட்டக்காரர் (Player of the Series) யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்)         Sanju Samson 19) இந்த தொடரில் சிறந்த் ஆட்டக்காரர் (Player of the season) எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி, கேள்வி 18 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )         RR 20) இந்த தொடரில் Fair Play Award யை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி)         SRH
    • பையன்,  இந்த 800 ரூபா  வீடியோ post செய்யப்பட்டது 10.04.2024 என்று tim tense இன் யூருப் தளத்தில் உள்ளது. நீங்கள் எப்படி இந்த வீடியோவை சென்ற  வருடம் மே மாதத்தில்  பார்திருப்பீர்கள்?  காலப்பயணம்(time travel) சென்றீர்களா? 
    • 1)    ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் முன்னணியில் வரும் நான்கு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும். தவறான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் குறைக்கப்படும்.    CSK, KKR, RR,SRH 2)    முதல் நான்கு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக.       #1 - ? (சரியான பதில்: +4 புள்ளிகள், தவறான பதில்: -4  புள்ளிகள் ) RR     #2 - ?  (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3 புள்ளிகள் ) KKR     #3 - ?  (சரியான பதில்: +2 புள்ளிகள், தவறான பதில்: -2  புள்ளிகள்) CSK     #4 - ?  (சரியான பதில்: +1 புள்ளி, தவறான பதில்: -1 புள்ளி ) SRH 3)    ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? (சரியான பதில்: +2 புள்ளிகள், தவறான பதில்: -2  புள்ளிகள்) RCB 4)   மே 21, வெள்ளி 19:30 அஹமதாபாத்  Qualifier 1 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3  புள்ளிகள்) Qualifier 1: 1st placed team v 2nd placed team RR 5)    மே 22, புதன் 19:30 அஹமதாபாத் Eliminator போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3  புள்ளிகள்) Eliminator: 3rd placed team v 4th placed team SRH 6)   மே 24 வெள்ளி 19:30  சென்னை Qualifier 2 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3  புள்ளிகள்) Qualifier 2: Loser of Qualifier 1 v Winner of Eliminator CSK 7)    மே 26, ஞாயிறு இறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +5 புள்ளிகள், தவறான பதில்: -5  புள்ளிகள்) Final: Winner of Qualifier 1 v Winner of Qualifier 2 RR 8 ) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஓட்டங்களை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி) SRH 9)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் குறைந்த ஓட்டங்களை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி) RCB 10)    இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் (Orange cap) பெறும் வீரர் யார்? ( சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள் Virat Kohli 11)    இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் (Orange cap) எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி, கேள்வி 10 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) RCB 12)    இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் (Purple cap) பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்) Yusvendra Chahal 13)    இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் (Purple cap) பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி,  கேள்வி 12 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) RR 14)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள் ) Virat Kholi 15)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி,  கேள்வி 14 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) SRH 16)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்) Jasprit Bumrah 17)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி,  கேள்வி 16 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) MI 18)    இந்த தொடரில் சிறந்த் ஆட்டக்காரர் (Player of the Series) யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்) Virat Kohli 19)    இந்த தொடரில் சிறந்த் ஆட்டக்காரர் (Player of the season) எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி,  கேள்வி 18 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) CSK 20)    இந்த தொடரில் Fair Play Award யை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி) SRH
    • பையன்.... பத்திரிகைகள் எல்லாம் அண்மையில் நடந்த செய்தியாகத்தான் குறிப்பிடுகின்றன. அத்துடன்  இரண்டு வருடத்துக்கு முன்பு வந்த செய்தி  என்றால்,  "வடை மாத்தையா"வை 😂  அப்போ கைது செய்யாமல் இப்போ ஏன் கைது செய்துள்ளார்கள். அந்த நேரம்  இவை ஏன், சமூக வலைத்தளங்களில் அலசப் படவில்லை போன்ற கேள்விகள் எழுகின்றன.
    • நேரங்கெட்ட நேரத்தில சனியன் தலைக்கேறுவதுபோல ஈரானிய சனாதிபதி இலங்கைக்கு போகப்போகிறார். அங்கே நம்ம நானாக்கள் "இஸ்ரேலுக்கே ஏவுகணை ஏவிய எங்கள் ஈரானிய சனாதிபதிக்கு ஜெயவேவா "" சொல்லுவதற்கு ஆயத்தமாக இருப்பதாகக் கேள்வி.  😁
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.