Jump to content

கத்தோலிக்க திருச்சபை இறந்த ஆத்துமாக்களை நினைவு கூறும் தினம் இன்று!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
கத்தோலிக்க திருச்சபையானது நவம்பர் மாதம் மூன்று விதமான ஆத்துமாக்களை நினைவு கூறுகின்றது ஒன்று வெற்றிக் கொண்ட ஆத்துமாக்கள் இரண்டாவது துன்புறும் ஆத்துமாக்கள் மற்றையது இவ்வுலகில் போராடும் ஆத்துமாக்கள்.
 
இவற்கமைய நேற்று முதலாம் திகதி கத்தோலிக்க திருச்சபையானது வெற்றிக் கொண்ட சகல புனிதர்களுடைய திருவிழாவைக் கொண்டாடியது.
 
இன்று 2ந் திகதி துன்புறும் மரித்த ஆத்துமாக்களை நினைவு கூர்ந்து இம்மாதம் முழுதும் விஷேடமாக இவர்களுக்காக செபிக்கின்றது.
 
இன்று திங்கள்கிழமை (02) அணைத்து சேமக்காலைகளிலும் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு மக்கள் தங்கள் உறவுகளின் கல்றைகளுக்குச் சென்று அவர்களுக்காக செபிப்பது வழமையாகும்.
 
இதற்கமைய மன்னார் மறைமாவட்டதில் கத்தோலிக்கர் செறிந்து வாழும் பேசாலை சேமக்காலையில் அருட்பணி செபமாலை அடிகளார் ஆத்துமாக்களுக்கான திருப்பலி ஒப்புக்கொடுப்பதையும் கல்லறைகளை மக்கள் தரிசித்து செபிப்பதையும் படங்களில் காண்கின்றீர்கள்.
unnamed (19) unnamed (20) unnamed (21) unnamed (22) unnamed (23) unnamed (24) unnamed (25) unnamed (26) unnamed (27) unnamed (28)

Share the post "கத்தோலிக்க திருச்சபை இறந்த ஆத்துமாக்களை நினைவு கூறும் தினம் இன்று! (படங்கள் இணைப்பு)"

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தச் சடங்கு பைபிளில் எங்கும் சொல்லப்படவில்லை அது போக கிறிஸ்தவர்கள் போற்றும் இயேசுவானவர் பூமியில் வாழும்போது இப்படி ஒரு சடங்கை அனுசரித்ததாகவோ அல்லது அனுசரிக்கும்படி கேட்டுக்கொண்டதாகவோ சரித்திரம் இல்லை! இறந்த ஆன்மாக்களுக்காக வேண்டுவது என்பது நகைப்புக்கிடமானது. ஒருவர் உயிருடன் வாழும்போது அவர் செய்த நன்மை தீமைகளே அவருக்கு சுவனமா அல்லது இபிலிசு வாழுகின்ற நரகமா எனத் தீர்மானிக்கப்படும். பாவமன்னிப்பின் நிச்சயத்தை ஒருவர் மரணம் அடையமுன்னர் பெற்றுக்கொள்ளவேண்டும். இதை வாலி சொல்லவில்லை உங்கள் கர்த்தர்தான் சொல்லி இருக்கிறாரு. 

 

Link to comment
Share on other sites

  • 1 month later...

ஒரு மனிதன் இறந்த பின் செல்லும் இடமாக கிறீஸ்தவர்கள் நம்புவது 
1.மோட்ஷம் 
2.உத்தரிக்கிறஸ்தலம் 
3.நரகம் 
அவர் அவர் செய்த பாவ புண்ணியங்களுக்கேற்ப இது தீர்மானிக்கப்படுகின்றது.

உத்தரிக்கிறஸ்தலதில் அவர்களுக்காண தண்டனை குடுக்கப்பட்ட பின் மோட்ஷம் அனுப்பப்படுவார்கள். அனேகமானவர்கள் உத்தரிக்கிறஸ்தலம் சென்று தான் மோட்ஷம் செல்லவேண்டியிருக்கும். ஒரு சிலரே நேராக  மோட்ஷம் செல்ல முடியும். இந்த உத்தரிக்கிறஸ்தலத்தில் இருக்கும் ஆத்துமாக்கள் மோட்ஷம் செல்ல வேண்டி அன்றாட திருப்பலிகளில் வேண்டுதல் செய்வதும், கார்த்திகை மாதத்தை அவர்களுக்கு சிறப்பாக ஒதுக்கி செபிப்பதும் இன்று நேற்று தொடங்கவில்லை. 

இதை Surveyor சொல்லவில்லை......கிறீஸ்தவம் சொல்கின்றது.

ஒவ்வொரு மதமும் தமெக்கென்று ஒரு கோட்பாட்டுடன் செயல்படுகின்றது. சும்மா நகைக்குறது, கனைக்குறதுக்கு மதங்களை இழுப்பது பொருத்தமானதில்லை. 

 

Link to comment
Share on other sites

On 03/11/2015 at 7:10 AM, வாலி said:

இந்தச் சடங்கு பைபிளில் எங்கும் சொல்லப்படவில்லை அது போக கிறிஸ்தவர்கள் போற்றும் இயேசுவானவர் பூமியில் வாழும்போது இப்படி ஒரு சடங்கை அனுசரித்ததாகவோ அல்லது அனுசரிக்கும்படி கேட்டுக்கொண்டதாகவோ சரித்திரம் இல்லை! இறந்த ஆன்மாக்களுக்காக வேண்டுவது என்பது நகைப்புக்கிடமானது. ஒருவர் உயிருடன் வாழும்போது அவர் செய்த நன்மை தீமைகளே அவருக்கு சுவனமா அல்லது இபிலிசு வாழுகின்ற நரகமா எனத் தீர்மானிக்கப்படும். பாவமன்னிப்பின் நிச்சயத்தை ஒருவர் மரணம் அடையமுன்னர் பெற்றுக்கொள்ளவேண்டும். இதை வாலி சொல்லவில்லை உங்கள் கர்த்தர்தான் சொல்லி இருக்கிறாரு. 

 

உலகிலுள்ள எல்லா மதங்களும், சமூகப் பிரிவுகளும் தங்களுக்கு என்று சில பல சம்பிருதாயங்களை பின்பற்றி வருகின்றார்கள். இவை அவர்களின் புனித நூல்களில் கூறியும் இருக்கலாம் கூறாமலும் இருக்கலாம். ஆனால் அவை சரியோ பிழையோ  நீண்ட காலங்களாக நடைமுறையில் உள்ளன, அவர்கள் நம்பிக்கையுடன் அதைப் பின்பற்றி வருகின்றார்கள். இதனால் உங்களுக்கு என்ன வந்தது?

நீங்கள்தான் எல்லாம் தெரிந்தவர் என்ற மனப்பான்மையில் ஒருவரது மதநம்பிக்கையை கேலி செய்வது எக்காரணம்கொண்டும் ஏற்றுகொள்ள முடியாதது.

அவ்வாறான ஒரு மதப்பிரிவினரின் மதநம்பிக்கை மற்றும் அவர்களது சம்பிருதாயங்களை நகைப்புக்கிடமானது என்று கூறுவது ஒரு நல்ல மனிதனுக்கு அழகில்லை.

ஒருவரது மத நம்பிக்கையை எள்ளி நகையாடுவது கள உறவுகளுக்கிடையில் விரிசலை உண்டுபண்ணும். நிர்வாகம் இதைக் கவனிக்குமா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்


இப்ப கிறிஸ்மஸ் வரப்போகின்றது, ஏசு டிசம்பர் 25 பிறக்கவில்லை என கருத்தெழுத போகின்றார்கள்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, Surveyor said:

உலகிலுள்ள எல்லா மதங்களும், சமூகப் பிரிவுகளும் தங்களுக்கு என்று சில பல சம்பிருதாயங்களை பின்பற்றி வருகின்றார்கள். இவை அவர்களின் புனித நூல்களில் கூறியும் இருக்கலாம் கூறாமலும் இருக்கலாம். ஆனால் அவை சரியோ பிழையோ  நீண்ட காலங்களாக நடைமுறையில் உள்ளன, அவர்கள் நம்பிக்கையுடன் அதைப் பின்பற்றி வருகின்றார்கள். இதனால் உங்களுக்கு என்ன வந்தது?

நீங்கள்தான் எல்லாம் தெரிந்தவர் என்ற மனப்பான்மையில் ஒருவரது மதநம்பிக்கையை கேலி செய்வது எக்காரணம்கொண்டும் ஏற்றுகொள்ள முடியாதது.

அவ்வாறான ஒரு மதப்பிரிவினரின் மதநம்பிக்கை மற்றும் அவர்களது சம்பிருதாயங்களை நகைப்புக்கிடமானது என்று கூறுவது ஒரு நல்ல மனிதனுக்கு அழகில்லை.

ஒருவரது மத நம்பிக்கையை எள்ளி நகையாடுவது கள உறவுகளுக்கிடையில் விரிசலை உண்டுபண்ணும். நிர்வாகம் இதைக் கவனிக்குமா?

நீங்கள் எனக்கும் நிர்வாகத்துக்கும் வகுப்பெடுத்தது போதும்.  பைபிளிலும் சொல்லப்படவில்லை, அறிவியலிலும் இதற்கு இடமில்லை எனவே இது நகைப்புக்கிடமானதே. 

உதாரணமக இந்துக்களின் சனிபகவான் விரதம் பற்றி வந்த இணைப்பு ஒன்றை அறிவியலுக்கு முரணானது என நிர்வாகம் நீக்கியிருந்தது. அது இந்துக்களின் நம்பிக்கையும் சம்பிரதாயத்திலும் கைவைக்கும் செயல் இல்லையா?  

3 hours ago, colomban said:


இப்ப கிறிஸ்மஸ் வரப்போகின்றது, ஏசு டிசம்பர் 25 பிறக்கவில்லை என கருத்தெழுத போகின்றார்கள்.

 

கொழும்பான் உண்மையில் இயேசு டிசம்பர் 25 பிறக்கவில்லை, பைபிளில் கூறப்பட்ட காலத்தைப் பார்த்தால் அது மார்ச் இறுதியில் அல்லது ஏப்பிரல் தொடக்கத்தில் ஆக இருக்க வேண்டும். ஆனால் இயேசு இப்பூமியில் பிறந்தார் என்பது நிச்சய்மான ஒன்று.  இயேசு எப்போது பிறந்தார் என்பது முக்கியமல்ல அவர் பிறந்தார் என்பதே முக்கியம். அந்தவகையில் ஒருவன் மனம் திரும்பி இயேசுவை ஏற்றுக் கொள்ளும் எந்த நாளும் கிறிஸ்மஸ் திருநாளே. எனவே டிசம்பர் 25 கொண்டாடுவதில் தப்பில்லை. 

Link to comment
Share on other sites

 

On 13.12.2015 at 5:04 PM, வாலி said:

நீங்கள் எனக்கும் நிர்வாகத்துக்கும் வகுப்பெடுத்தது போதும்.  பைபிளிலும் சொல்லப்படவில்லை, அறிவியலிலும் இதற்கு இடமில்லை எனவே இது நகைப்புக்கிடமானதே. 

உதாரணமக இந்துக்களின் சனிபகவான் விரதம் பற்றி வந்த இணைப்பு ஒன்றை அறிவியலுக்கு முரணானது என நிர்வாகம் நீக்கியிருந்தது. அது இந்துக்களின் நம்பிக்கையும் சம்பிரதாயத்திலும் கைவைக்கும் செயல் இல்லையா?  

கொழும்பான் உண்மையில் இயேசு டிசம்பர் 25 பிறக்கவில்லை, பைபிளில் கூறப்பட்ட காலத்தைப் பார்த்தால் அது மார்ச் இறுதியில் அல்லது ஏப்பிரல் தொடக்கத்தில் ஆக இருக்க வேண்டும். ஆனால் இயேசு இப்பூமியில் பிறந்தார் என்பது நிச்சய்மான ஒன்று.  இயேசு எப்போது பிறந்தார் என்பது முக்கியமல்ல அவர் பிறந்தார் என்பதே முக்கியம். அந்தவகையில் ஒருவன் மனம் திரும்பி இயேசுவை ஏற்றுக் கொள்ளும் எந்த நாளும் கிறிஸ்மஸ் திருநாளே. எனவே டிசம்பர் 25 கொண்டாடுவதில் தப்பில்லை. 

வாலி இஞ்சை ஒருத்தரும் வகுப்பெடுக்கவில்லை,

அரைகுறை விளக்கத்துடன் வந்து சொறிவேலை பார்க்கவேண்டாம் என்றுதான் கூறியுள்ளேன்.

ஒவ்வொரு கிறிஸ்தவனும் இறக்கும் போது என்ன நம்பிக்கையுடன் இறக்கின்றான், கிறிஸ்தவத்தின் அடி நுனி, பைபிள் என்றால் என்ன? போன்ற அடிப்படை விளக்கம் இல்லாமல் அலம்பவேண்டாம் என்பதே எனது வேண்டுகோள்.

சும்மா அங்கையிங்கை பொறுக்கினதை வைத்து கதைப்பதில் வேலையில்லை. சரியான விளக்கத்தை பெற்றுவிட்டு கதைக்கவேண்டும். சும்மா பொதுவெளியில் நகைக்க முன்னர்.................

.

இத்துடன் உங்களுடன் நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை.    

 

 

*****

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
51 minutes ago, Surveyor said:

 

வாலி இஞ்சை ஒருத்தரும் வகுப்பெடுக்கவில்லை,

அரைகுறை விளக்கத்துடன் வந்து சொறிவேலை பார்க்கவேண்டாம் என்றுதான் கூறியுள்ளேன்.

ஒவ்வொரு கிறிஸ்தவனும் இறக்கும் போது என்ன நம்பிக்கையுடன் இறக்கின்றான், கிறிஸ்தவத்தின் அடி நுனி, பைபிள் என்றால் என்ன? போன்ற அடிப்படை விளக்கம் இல்லாமல் அலம்பவேண்டாம் என்பதே எனது வேண்டுகோள்.

சும்மா அங்கையிங்கை பொறுக்கினதை வைத்து கதைப்பதில் வேலையில்லை. சரியான விளக்கத்தை பெற்றுவிட்டு கதைக்கவேண்டும். சும்மா பொதுவெளியில் நகைக்க முன்னர்.................

.

இத்துடன் உங்களுடன் நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை.    

 

 

*****

எனக்கு நீங்கள் ஒருவரும் பைபிள் சொல்லித் தரவேண்டாம். சொறிவேலை பார்த்தது நானல்ல. மீண்டும் சொல்கிறேன் பைபிளில் இப்படி ஒரு சடங்கோ, கருத்தோ எழுதப்படவில்லை.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • காசிக்குப் போறவை திரும்ப வந்து அதிக காலம் உயிரோடு இருப்பதில்லை என்று சொல்வார்கள். உண்மையா என்று தெரியவில்லை. ஆனால் என நபர் ஒருவர் அங்கு சென்றுவந்து 3 ஆண்டுகளில் இறந்துவிட்டார்.
    • கடந்த மாவீரர் தினத்திலும் ஐயா வந்து சிறிய சொற்பொழிவாற்றி இருந்தார்.
    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
    • இருக்க‌லாம் பெருமாள் அண்ணா ஜெய‌ல‌லிதாவுக்கு க‌ருணாநிதிக்கு கோடி காசு அவ‌ங்க‌ட‌ கால் தூசுக்கு ச‌ம‌ம்..............ஜெய‌ல‌லிதா சொத்து குவிப்பு வ‌ழ‌க்கில் எத்த‌னை ஆயிர‌ம் கோடி  2ஜீ ஊழ‌லில் அக்கா க‌ணிமொழி அடிச்ச‌து எவ‌ள‌வு...............இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ருக்கு தேர்த‌லுக்காக‌ 600 கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து என்ர‌  ம‌ன‌சில் வீர‌ப்ப‌ன் எப்ப‌வும்  என் குல‌சாமி🙏🙏🙏...................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.