Jump to content

'ஸ்பெக்ரர்' பொன்ட் படத்தின் வசூல் வேட்டை ஆரம்பம்


Recommended Posts

'ஸ்பெக்ரர்' பொன்ட் படத்தின் வசூல் வேட்டை ஆரம்பம்
 

130084294677.jpgஜேம்ஸ்பொன்ட் வரி­சையில் புதிய திரைப்­ப­ட­மான ஸ்பெக்ரர் திரைப்­படம், கலக்­க­லாக தனது வசூல் வேட்­டையை ஆரம்­பித்­துள்­ளது.

 

டேனியல் கிறேக் 4 ஆவது தட­வை­யாக ஜேம்ஸ் பொன்ட் வேடத்தில் நடித்­துள்ள இப்­ப­டத்தை சாம் மெண்டிஸ் இயக்­கி­யுள்ளார்.  

 

லண்­ட­னி­லுள்ள ரோயல் அல்பர்ட் அரங்கில்  கடந்த 26 ஆம் திகதி திங்­கட்­கி­ழமை இரவு 8 மணிக்கு ஸ்பெக்ரர் படத்தின் முத­லா­வது காட்சி காண்­பிக்­கப்­பட்­டது.

 

பிரித்­தா­னிய முடிக்­கு­ரிய இள­வ­ரசர் வில்­லியம் உட்­பட பலர் இதில் கலந்­து­கொண்­டனர்.

 

அக்­காட்சி ஆரம்­ப­மாகி 15 நிமி­டங்­க­ளின்பின்  பிரிட்­டனில் 647 அரங்­கு­களில் இப்­படம் வெளி­யி­டப்­பட்­டது.

 

முதல் ­நாளில் இப்­படம் 41 லட்சம் ஸ்ரேலிங் பவுண்ட்ஸ்­களை வசூ­லித்­தது.

 

இப்­ப­டத்தின் விநி­யோக நிறு­வ­னமான சோனி பிக்சர்ஸ் நிறு­வனம், இந்த வசூல் கண்­களைக் கவர்­வ­தாக உள்­ள­தென வர்­ணித்­துள்­ளது.

 

ஜேம்ஸ்பொண்ட் திரைப்­பட வரி­சையில் ஸ்பெக்ரர் 24 ஆவது திரைப்­ப­ட­மாகும்.

 

டேனியல் கிறேக்­குடன் கிறிஸ்டோப் வால்ட்ஸ், லியா சேடொக்ஸ், பென் விஷோ, நயோமி ஹரிஸ், டேவ் பௌடிஸ்டா, மொனிக்கா பெலூசி, ரால்வ் பியன்ஸ் ஆகி­யோரும் இப்­ப­டத்தில் நடித்­துள்­ளனர்.

 

இப்­படம் 30 கோடி டொலர் சுமார் 4140 கோடி ரூபா) செலவில் தயா­ரிக்­கப்­பட்­டுள்­ளது.

 

130084294664.jpg

ஸ்பெக்ரர் வெளியீட்டு விழாவில் பிரெஞ்சு நடிகை லியா சேடொக்ஸ், பிரித்தானிய நடிகர் டேனியல் கிறேக், இத்தாலிய நடிகை மொனிக்கா பெலூசி...

....................................................................................................................................

 

அமெரிக்காவில் எதிர்வரும் 6 ஆம் திகதி இப்படம் வெளியிடப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

- See more at: http://www.metronews.lk/article.php?category=entertainment&news=13008#sthash.4o5Y51bo.dpuf
Link to comment
Share on other sites

படத்தின் பெயரை திரும்ப ஒருதரம் சொல்லும்படி இந்தியாகாரர்களை மிகவும் பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

படத்தின் பெயரை திரும்ப ஒருதரம் சொல்லும்படி இந்தியாகாரர்களை மிகவும் பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

 

ஆகாகா,

அது இலங்கை பேப்பர், சனியன்...:unsure:

Link to comment
Share on other sites

  • 3 weeks later...

அடுத்த ஜேம்ஸ்பாண்ட் படம் ஸ்பெக்டர். ஏன் பார்க்க வேண்டும் ? ஒரு சின்ன அலசல்!

 

'ஜேம்ஸ் பாண்ட் 007' கிட்டத்தட்ட உலகின் கடைசிநிலை சினிமா ரசிகர்கள் வரை எல்லோருக்கும் பிடித்தமான என்பதை விட பொறாமை வரவழைத்த ஒரு நாயகன். பாண்ட் வரிசையில் இதுவரை 23 படங்கள் வெளிவந்திருக்கின்றன. 24-வது படமாக வெளிநாடுகளில் வெளியாகி லைக்ஸும் விமர்சனங்களும் குவித்துக் கொண்டிருக்கிறது 'ஸ்பெக்டர்’.

Spectre1.jpg

இந்தியாவில் கொஞ்சம் லேட்டாக நவம்பர் 20-ல் ரிலீஸ்.ஜேம்ஸ்பாண்ட் படங்களிலேயே அதிக வசூல் குவித்தது மூன்று ஆண்டுகளுக்கு முன்பு வெளியான 'ஸ்கைஃபால்’ தான். ஸ்கைஃபால் படத்தின் பாடலுக்கு ஆஸ்கர் விருது கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது. ஆஸ்கர் கொடுத்த எதிர்பார்ப்புகளால் அதைத் தொடர்ந்து, ஸ்பெக்டருக்கும் ரசிகர்கள் ஆர்வமாகக் காத்திருக்கிறார்கள். அந்தப் படத்தை இயக்கிய சாம் மெண்டிஸ் தான் 'ஸ்பெக்டர்’ படத்தையும் இயக்கி இருப்பவர். இந்நிலையில் இந்தியாவில் இம்மாதம் வெளியாகவிருக்கும் ஸ்பெக்டர் படத்தை ஏன் பார்க்க வேண்டும்? இதோ ஒரு சின்ன அலசல்.

1. மெக்ஸிகோவில் நடைபெறும் 'டே ஆப் தி டெட்' திருவிழாவின் சலசலக்கும் மக்கள் கூட்டத்திலிருந்து, தி கிராண்ட் ஹோட்டல் லாபி பின்னர் ரூப் டாப் என எதிரியைக் கொல்லப் பறந்தோடும் நாயகன். சிட்டியின் மெயின் ஸ்கொயரில் ஹெலிகாப்டரில் நடைபெற்ற இந்த சண்டைக்காட்சியின் பைலட்டாக ரெட்புல் நிறுவனத்தின் ஏரோபாடிக் விமானி சுக் ஆரோன் பணியாற்றியுள்ளார். மேலும் இந்தக் காட்சிக்காக 107 மேக்கப் ஆர்டிஸ்டுகள் அவர்களுக்கு உதவியாக 1500 பேர், இவர்கள் தவிர 36 அடி உயரத்தில் 10 எலும்புக்கூடுகளும் பயன்படுத்தப்பட்டுள்ளன. இந்தக் காட்சியின் படப்பிடிப்பு நடந்தபோது தான் நாயகன் டேனியல் கிரேய்க் அடிபட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

specture%205.jpg

2. கேசினோ ராயல் படத்தில் வரும் போர்ட் மான்டியோவை இனி மறந்துவிடலாம், ரோம் நகரில் இருக்கும் டைபர் நதியின் கரையில் நடக்கும் கார் சேஸிங் இதுவரையிலான பாண்ட் பட கார் சேஸிங்குகளை பீட் செய்கிறது. ஜாகுவர் நிறுவனத்தின் பவர்ஃபுல் மாடலான Jaguar C-X75 மற்றும் ஆஸ்டன் மார்டினின் DP10 ரக கார்களும் முதன்முறையாக ஆக்சன் அட்டகாசங்களுக்கு பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இதுவரை இந்த மாடல் கார்கள் விற்பனைக்கு வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஜேம்ஸ்பாண்ட் படங்கள் என்றாலே கார்கள் தான் சிறப்பு. இந்தப் படம் இன்னும் கண்களுக்கு விருந்து தரும்.

3.'ஸ்பெக்டர்’ படத்துக்காக நான்காவது முறையாக பாண்ட் அவதாரம் எடுத்திருக்கிறார் டேனியல் கிரேய்க். சில மாதங்களுக்கு முன்புவரை இதுதான் டேனியலின் கடைசி பாண்ட் படம் என செய்திகள் வெளியாகின. ஒரு பேட்டியிலும் 'இப்போதைக்கு இன்னொரு ஜேம்ஸ் பாண்ட் படம் இல்லை என்றுதான் நினைக்கிறேன்’ எனச் சொல்லியிருந்தார் டேனியல் கிரேக். ஆனால், அவர் வேண்டாம் என்றாலும் பாக்ஸ் ஆபீஸ் ஹிட்டும், அவரது ரசிகர்களும் விடுவதாய் இல்லை.எனவே, பரவாயில்லை என அடுத்த படத்திற்கு ஒப்புக்கொண்டுள்ளார். எனவே டேனியலை நாம் 007 ஆகப் பார்க்க இன்னும் இரண்டு வாய்ப்புகளே. அதில் ஒன்று ஸ்பெக்டர். 

specture%203.jpg

4.  நிறையத் தேடல்களுக்குப் பிறகு 'பாண்ட் கேர்ள்’ வேடத்துக்குத் தேர்வு செய்யப்பட்டவர் பிரெஞ்ச் நடிகை லியா சீடவுக்ஸ் (Lea seydoux). இவருடன் போனஸாக இன்னொரு கேர்ளுக்கும் வாய்ப்பு தந்திருக்கிறது ஸ்பெக்டர். அவர்... இத்தாலிய நடிகை மோனிகா பெல்லுச்சி. உலக சினிமா ரசிகர்களை 'மெலினா’ படத்தில் கிறங்கடித்தவர். 50 வயதானாலும் ரொமான்ஸ் குயின் என்பதால் மோனிகா ரசிகர்களும் பாண்ட் படத்துக்காக ஆவலுடன் காத்திருக்கிறார்கள். டபுள் பொனான்ஸா!

5. 'ஸ்பெக்டரில்' சூப்பர் வில்லனாகக் களமிறங்குகிறார், கிறிஸ்டோப் வால்ட்ஸ். ட்ஜேங்கோ அன்செயிண்ட் (Django Unchained)  திரைப்படத்திற்காக இரண்டு ஆஸ்கர் விருதுகளை வென்றவர். ஜேம்ஸ் பாண்டின் வில்லனாகக் களமிறங்க எல்லோரும் வரிசையில் நிற்கிறார்கள். இவரோ, சாம் மெண்டிஸ்ஸின் கெஞ்சல்களுக்குப் பின்னர்தான் நடிப்பதற்கு ஒப்புக் கொண்டுள்ளார்.

http://www.vikatan.com/cinema/article.php?aid=54617

Link to comment
Share on other sites

"ஜேம்ஸ் பாண்ட், கொஞ்சம் கம்மியா முத்தம் கொடுங்க.." இப்படிக்கு இந்திய சென்சார் போர்டு!
 
  மும்பை: ஜேம்ஸ்பாண்ட் திரைப்படமான ஸ்பெக்டருக்கு இந்திய சென்சார் போர்டு யூ/ஏ சர்டிபிகேட் வழங்கியுள்ளது. மேலும், பாண்ட் கொடுக்கும் உதட்டு முத்த காட்சிகளின் அளவை குறைத்து வெட்டி வீசியுள்ளது. இது காங்கிரஸ் மற்றும் கருத்துரிமைவாதிகளிடமிருந்து எதிர்ப்பை கிளப்பியுள்ளது.
 
ஜேம்ஸ்பாண்ட் வரிசை திரைப்படங்களில் தற்போது வெளியாகி சக்கைபோடு போட்டுவரும் திரைப்படம் ஸ்பெக்டர். உலகமெங்கும் வெற்றிநடைபோட்ட இப்படம் வரும் வெள்ளிக்கிழமை, இந்தியாவில் ரிலீசாகிறது.
James Bond will kiss less in India
 இப்படத்துக்கு இந்திய சென்சார் வாரியம், யூ/ஏ சர்டிபிகேட் கொடுத்துள்ளது. ஆனால் சில நிபந்தனைகளோடுதான் சர்டிபிகேட் தரப்பட்டுள்ளது. படத்தில் இடம்பெற்ற 4 முத்த காட்சிகள், 2 வசனங்கள் வெட்டுக்கு உள்ளாகியுள்ளனவாம். அந்த கட் செய்யப்பட்ட காட்சிகளில், ஜேம்ஸ்பாண்ட் கதாப்பாத்திரத்தில் நடிக்கும், டேனியல் கிரேக், நடிகைகளுக்கு நீண்ட நேரம் உதத்தோடு உதடு சேர்த்து முத்தம் கொடுத்திருந்தாராம். முத்த காட்சியை மொத்தமாக நீக்க கோராத, சென்சார் போர்டு, தேவையில்லாமல் நீண்ட நேரமாக, அவர் வாய் விளையாட்டு காட்டுவதாக குற்றம்சாட்டியுள்ளது.
 
எனவே, முத்தக்காட்சிகளின் நீளத்தில் சுமார் 50 சதவீதம் கட் செய்யப்பட்டுள்ளதாம். அதேபோல, ஆங்கிலத்தில் 'எப்' என்ற வார்த்தையில் தொடங்கும், வசனங்களும், 'ஏ' என்ற வார்த்தையில் தொடங்கி ஹோல் என்ற வார்த்தையில் முடியும், கட் செய்யப்பட்டுள்ளனவாம். இதனிடையே, சென்சார் வாரியம், இந்துமயமாகிவிட்டதாக கருத்துரிமைவாதிகள் சமூக வலைத்தளங்களில் கருத்து கூறிவருகிறார்கள்.
 
எழுத்தாளரும், இயக்குநருமான, ஷ்ரிஷ் குண்டர் கூறுகையில், "ஜேம்ஸ்பாண்ட் உலகை காப்பாற்றுவார். ஆனால் ஜேம்ஸ்பாண்டை இந்திய சென்சார் போர்டிடம் இருந்து காப்பாற்றமுடியவில்லை" என்று கூறியுள்ளார்.

Read more at: http://tamil.filmibeat.com/news/james-bond-will-kiss-less-india-037667.html
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கடந்த மாவீரர் தினத்திலும் ஐயா வந்து சிறிய சொற்பொழிவாற்றி இருந்தார்.
    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
    • இருக்க‌லாம் பெருமாள் அண்ணா ஜெய‌ல‌லிதாவுக்கு க‌ருணாநிதிக்கு கோடி காசு அவ‌ங்க‌ட‌ கால் தூசுக்கு ச‌ம‌ம்..............ஜெய‌ல‌லிதா சொத்து குவிப்பு வ‌ழ‌க்கில் எத்த‌னை ஆயிர‌ம் கோடி  2ஜீ ஊழ‌லில் அக்கா க‌ணிமொழி அடிச்ச‌து எவ‌ள‌வு...............இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ருக்கு தேர்த‌லுக்காக‌ 600 கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து என்ர‌  ம‌ன‌சில் வீர‌ப்ப‌ன் எப்ப‌வும்  என் குல‌சாமி🙏🙏🙏...................................
    • வீரப்பன் இறந்த பின்தான் அதிகஅளவான  இயற்கை வள சுரண்டல்கள் அந்த காடுகளில் நடைபெறுவதாக எங்கோ படித்த நினைவு .
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.