Jump to content

இளமை புதுமை பல்சுவை


Recommended Posts

“ஒரு மலையோரம் அங்கு கொஞ்சம் மேகம் அதன் அடிவாரம் ஒரு வீடு” - கவிதையாய் வாழ்க்கை வாழும் மக்கள்

கவிதையாய் வாழ்க்கை வாழும் இமயமலை மக்கள்படத்தின் காப்புரிமைSANDIPAN DUTTA

"ஒரு மலையோரம் அங்கு கொஞ்சம் மேகம் அதன் அடிவாரம் ஒரு வீடு உன் கைகோர்த்து என் தலைசாய்க்க அங்கு வேண்டுமடா என் கூடு"

இந்த வரிகளை அப்படியே உங்கள் மனக்கண்ணில் நிறுத்துங்கள் நினைத்துப் பார்க்கும் போதே மனதில் மழை பெய்கிறது அல்லவா? நிஜத்தில் அப்படியான வாழ்வை வாழ்ந்துக் கொண்டிருக்கிறார்கள் ஸ்பிட்டி பள்ளத்தாக்கு மக்கள்.

இப்பூவுலகில் அதிக உயரத்தில் இருக்கும் வசிப்பிடங்களில் இமயமலையில் அமைந்திருக்கும் இந்த பள்ளத்தாக்கும் ஒன்று.

தரிசான மலைகள், பாம்புபோல ஊர்ந்து செல்லும் ஆறுகள், பாலை போல காட்சித் தரும் குளிர்ச்சியான நிலப்பரப்பு என வேறொரு உலகத்திற்கு சென்றது போல இருக்கிறது ஸ்பிட்டி வேலி.

தபால் நிலையம்

இப்படியான நிலப்பரப்பில் வசிக்கும் ஒருவரது ஆன்மா எவ்வளவு நெகிழ்வுடன் இருக்கும்? அந்த நெகிழ்ச்சி வார்த்தைகளாக உருப்பெற்றால்... அப்படியான வார்த்தைகளை கொண்டு எழுதப்பட்ட வார்த்தைகளை சுமந்து செல்ல அங்கு செயல்படுகிறது ஒரு தபால் நிலையம்.

கவிதையாய் வாழ்க்கை வாழும் இமயமலை மக்கள்படத்தின் காப்புரிமைSANDIPAN DUTTA

கடல் மட்டத்திலிருந்து 4,440 மீட்டர் உயரத்தில் இருக்கும் ஹிக்கிம் கிராமத்தில் இருக்கிறது அந்த தபால் நிலையம். அங்கு சிறு சிறு குழுக்களாக இருக்கும் கிராமத்தை இந்த உலகத்துடன் இணைப்பது அந்த தபால் நிலையம்தான்.

Presentational grey linePresentational grey line

அந்த தபால் நிலையம் தொடங்கப்பட்ட 1983 ஆம் ஆண்டிலிருந்து அங்கு போஸ்ட்மாஸ்டராக இருக்கிறார் ரின்சென் செரிங்.

தபால் நிலையம்படத்தின் காப்புரிமைSANDIPAN DUTTA

அவர், "சாலைகள் மிகமோசமானதாக இருக்கும். வாகனங்கள் செல்ல முடியாது. கடிதங்களை சுமந்துக் கொண்டு நடந்து செல்ல வேண்டும். பனிப்பொழிவின் காரணமாக குளிர்காலங்களில் அடிக்கடி இந்த தபால் நிலையம் மூடப்படும்" என்கிறார்.

Spti Valleyபடத்தின் காப்புரிமைSANDIPAN DUTTA

இங்கிருந்து ஸ்பிட்டி பள்ளத்தாக்கு தலைநகரான கஸாவுக்கு சென்று வர 46 கிலோ மீட்டர் பயணம். இரண்டு தபால் ஊழியர்கள் கடிதங்களை மக்களிடம் கொண்டு சேர்க்கும் பணியை மேற்கொள்கிறார்கள்.

ஐந்து கிராமம், ஒரு பள்ளி

ஹிக்கிம் தபால் நிலையத்தை சார்ந்து இருக்கும் நான்கு, ஐந்து கிராமங்களில் மக்கள் தொகை குறைவுதான். கைபேசி சேவை இருக்கிறதென்றாலும், எல்லா நேரத்திலும் அது செயல்படாது. இணைய வசதி இன்னும் சென்று சேரவில்லை.

ஐந்து கிராமம், ஒரு பள்ளிபடத்தின் காப்புரிமைSANDIPAN DUTTA

இங்கு இருக்கும் கிராமங்களில் ஒன்று கோமிக். 4,587 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது இண்ட கிராமம். இங்கு 13 வீடுகள் மட்டுமே உள்ளன. ஒரு பள்ளி இருக்கிறது. அங்கு ஐந்து மாணவர்கள் மட்டுமே படிக்கிறார்கள். பழைய மடாலயம் ஒன்று உள்ளது, சிறு விவசாயபரப்பும் உள்ளது. அங்கு பார்லி மற்றும் பச்சை பட்டாணி விவசாயம் நடைபெறுகிறது.

பெளத்த நம்பிக்கை

கடும் பனிப்பொழிவின் காரணமாக ஆண்டுக்கு ஆறு மாதங்கள் ஸ்பிட்டி பள்ளதாக்குக்கும் வெளி உலகுக்குமான தொடர்பு துண்டிக்கப்படும்.

Presentational grey linePresentational grey line Spiti Valley கவிதையாய் வாழ்க்கை வாழும் இமயமலை மக்கள்படத்தின் காப்புரிமைSPITTI VALLEY

இங்குள்ள மக்கள் பெளத்தத்தின் மீது பெரும் நம்பிக்கை வைத்திருக்கிறார்கள். இந்தியாவின் பழைய மடாலயம் இங்கு உள்ளது. சிலர் இதனை ஆயிரம் ஆண்டுகள் பழமையானது என்கிறார்கள்.

https://www.bbc.com

Link to comment
Share on other sites

  • Replies 11.3k
  • Created
  • Last Reply

 

5 கின்னஸ் சாதனைகளை ஒரே நேரத்தில் முறியடித்த சேலம் கராத்தே வீரர்

சேலத்தை சேர்ந்த கராத்தே பயிற்சியாளர் ஒருவர் 5 வகை கின்னஸ் சாதனைகளை ஒரே நேரத்தில் முயறியடித்துள்ளார். சேலம் இளம்பிள்ளை பகுதியை சேர்ந்த நடராஜ், கராத்தே பயிற்சியாளர். பள்ளி மாணவர்களுக்கு கராத்தே கலையை இவர் கற்றுக்கொடுத்து வருகிறார். கின்னஸ் அமைப்பின் முறையான அனுமதி பெற்று இவர் இந்த சாதனை நிகழ்த்தி காட்டியுள்ளார்.

Link to comment
Share on other sites

Capture-76-780x405.jpg
 

2019 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெறவுள்ள உலக கிண்ண கிரிக்கட் போட்டிக்காக உருவாக்கப்பட்ட பாடலின் காணொளி இணையத்தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

அந்த பாடலில் இலங்கைக் கிரிக்கட் அணியின் முன்னாள் தலைவர் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் குமார் சங்கக்கார உள்வாங்கப்பட்டுள்ளமை சிறப்பு அம்சமாகும்.

 

https://newuthayan.com/

Link to comment
Share on other sites

அட்டிகஸ் - இன்ஸ்டாகிராமில் ஏழரை லட்சம் ஃபாலோயர்கள் வைத்திருக்கும் முகமூடி கவிஞன்!

 
 

7,50,000 இன்ஸ்டாகிராம் ஃபாலோயர்கள் இருந்தும் தன் அடையாளத்தை மறைத்தே வைத்திருக்கிறார் அட்டிகஸ்.  அவர் எழுதிய ஒரு புத்தகம் வௌியாகி விற்பனையில்  சக்கைப் போடு போட்டுள்ளது.

'ஸ்டேட்டஸ், ஸ்டேட்டஸ் சார்ந்த இடமாகிப் போனது சமூக வலைத்தளங்கள். ஃபேஸ்புக், ட்விட்டர், வாட்ஸ் அப் , இன்ஸ்டாகிராம் என அனைத்தும் ஸ்டேட்டஸ் மற்றும் ஸ்டோரி மயமாகிப்போனது. இவற்றின் வரவால் பல நல்ல விஷயங்களும் நடக்கின்றன. தங்கள் தனித்திறமைகளை உலகுக்கு நிரூபிக்க ஒரு வாய்ப்பாகவும் சமூக வலைத்தளங்கள் அமைகின்றன. ஃபேஸ்புக்கில் தான் எடுக்கப்போகும் கதையைப் பதிவிட்டு அதைப் படித்தவர்களே பணம் அனுப்பி எடுக்கப்பட்ட திரைப்படம் வெற்றிகரமாக ஓடிய கதையும் இந்தியாவில் உண்டு.

சமீபகாலமாக இன்ஸ்டாகிராமில் ஒரு முகம் தெரியாத கவிஞர் வைரலாகி வருகிறார். 'அட்டிகஸ்' என்ற பெயரில் கவிதைகளை இன்ஸ்டாகிராமில் பதிவிடுகிறார். இவரது கவிதைகள் இன்ஸ்டா உலகினருக்குப் பிடித்துப் போகவே ஃபாலோயர்ஸ் குவிந்துள்ளனர். ஆனால், அவர் தன் முகத்தையோ, முகவரியையோ வெளிப்படுத்தவில்லை.

அட்டிகஸ்

 

 

 

7,50,000 இன்ஸ்டாகிராம் ஃபாலோயர்கள் இருந்தும் தன் அடையாளத்தை மறைத்தே வைத்திருக்கிறார். அவர் எழுதிய ஒரு புத்தகம் விற்பனையில் சக்கைப் போடு போட்டுள்ளது.  இன்னொரு புத்தகமும் வெளிவர இருக்கிறது. எம்மா ராபேர்ட்ஸ் , கார்லி க்ரோஸ் போன்ற மிகப்பெரிய பிரபலங்கள் இவரை ஃபாலோ செய்ய, செம வைரலாகிப் போனார். இவருக்கென தனி ரசிகர் பட்டாளமே உண்டு. ரசிகர்கள் பலரும் இவர் எழுதிய கவிதைகளை பச்சை குத்திக்கொள்கின்றனர். பலரும் அவரது முகத்தைக் காட்டச் சொல்லிக் கேட்டனர். ஆனாலும், அவர் தன் அடையாளத்தை வெளியிட மறுக்கிறார்.  அவரது புனைப்பெயர் `அட்டிகஸ்’ என்பதைத் தவிர வேறேதுவும் தெரியவில்லை. இ.பி முகவரி மூலம் கண்டுபிடிக்கலாம் என்றால் தன் இடத்தை கொலம்பியா, கனடா, லாஸ் ஏஞ்சலீஸ் என மாற்றிக்கொண்டே இருக்கிறார்.  லாஸ் ஏஞ்சலீஸில் நடந்த இவரின் புத்தக (லவ்,ஹேர், தி வைல்ட்) வெளியீட்டு விழாவுக்கும் முகமூடி அணிந்தே சென்றார். அவர் இப்புத்தகத்தை மூன்றாகப் பிரிக்கிறார். அவற்றில் சில...

அட்டிகஸ்

 

காதல் (love)

என் இதயத்தை பிளந்து பார் 

அதில் நீ தெரிவாய்.

 

அவள் (her)

அவளுக்கு உயரங்கள்

எவ்வளவு அச்சமோ

அதே அளவிற்கு

சிறகுகள் விரித்து 

பறக்கவும் அச்சம்.

 

காடு (wild)

உன் பசியும் தாகமும்

மறந்து போகும் 

அளவிற்கு உன்

தேடல் இருக்கவேண்டும்.

 

ஏன் முகமூடி அணிந்தே இருக்கிறீர்கள் என்று ரசிகர் ஒருவர் கேட்டதற்கு, ``இதை அணிந்தால்தான் மக்களுடன் நெருங்கிய தொடர்பில் இருப்பதைப் போல உணர்கிறேன். எப்போது எழுத வேண்டும் என்பதற்காகவும், என்ன நினைக்க வேண்டும் என்பதற்காகவும் முகமூடி பயன்படுத்துகிறேன். என் கவிதைகள் என் அடையாளத்தைப் பதிவுசெய்வதற்காக  இருக்க வேண்டாம். எனக்காக என் கவிதைகளை மக்கள் படிக்கக்கூடாது. மேலும், எனக்குப் புகழ் மேல் நம்பிக்கை இல்லை. அத்தகைய வாழ்க்கையை நான் விரும்பவில்லை. ஒரு கட்டத்தில் மக்கள் நான் யாரெனத் தெரிந்து கொண்டாலும், முகமூடி அணிந்தே இருப்பேன். அப்படியே என்னைக் காட்டிக்கொள்ளவும் விரும்புகிறேன். நான் பணத்தை எதிர்பார்த்து எழுதுவதில்லை. எழுதுவதால் ஆறுதல் அடைகிறேன். சிலர் என் கவிதையைப் படிப்பதால் மனச்சோர்வு, துக்கங்கள் கண் காணாத இடத்துக்குச் சென்று விட்டது எனச் சொல்லும்போது கோடி ரூபாய் சம்பாதித்ததைப் போல உணர்கிறேன்" என்றார்.

அட்டிகஸ்

அட்டிகஸ் என்பது கிரேக்க கலைஞர்களைக் குறிக்கிறது. இவரின் தாத்தா இந்தியாவில் வாழ்ந்தவர். இந்தியாவில் இருப்பதே பெருமை என்றும் கூறியுள்ளார். தன் எழுத்துகளில் பெண்களை மட்டுமே சித்திரிக்கிறார்; அதீதமாக வர்ணிக்கிறார் என அவர் எழுத்துக்கு விமர்சனம் வராமல் இல்லை. அவரின் பெரும்பாலான கவிதைகள் பெண்களின் காதல், மன சஞ்சல்ங்கள்,  இளமை பற்றியே இருக்கும். ஓர் ஆங்கிலப் பத்திரிகை வெளியிட்ட தலைசிறந்த இன்ஸ்டாகிராம் கவிஞர்களில், `அட்டிகஸ்’ முதல் இடத்தில் இருக்கிறார். கலோர் என்ற பத்திரிகை இவரை `அதிகம் பச்சைக்குத்தப்பட்ட கவிஞர்’ எனக் குறிப்பிட்டுள்ளது.

முகமூடி அணிந்தாலும் தான் செய்யும் புதுமைகளால் தனக்கென ஓர் அடையாளத்துடன் தனித்துத் தெரிகிறார். சீக்கிரம் முகத்தைக் காட்டுங்க பாஸ்!

https://www.vikatan.com/

Link to comment
Share on other sites

 

முட்டைகோஸ் சாப்பிடுவது புற்று செல்களை தடுக்குமா?- புதிய ஆய்வு

நமது உடலில் தோல் செல்கள் புதுப்பிக்கப்படுவது போலவே குடலில் உள்ள செல்களும் புதுப்பிக்கப்படும். குடலில் உள்ள செல்களுக்கு பாதுகாப்பான உணவு கிடைக்கவில்லையெனில் பாதிப்பு ஏற்படும். குடல் அழற்சி, புற்றுநோய் போன்றவைகூட ஏற்படும். அப்படியானால், குடல் செல்கள் பாதுகாப்புக்கு என்னென்ன உணவுகள் சாப்பிட வேண்டும்? முட்டைகோஸ், புரோகோலி ஆகியவை புற்று செல்களை ஒடுக்க உதவுமா என்பதை விளக்கும் காணொளி இது.

Link to comment
Share on other sites

44 ஆண்டுகள் கழித்து முடிக்கப்பட்ட ஒரு படகுப் பயணத்தின் கதை!

 

இது 44 ஆண்டுக்கால கனவு. இன்னும் சொல்லப்போனால், 44 ஆண்டுகளுக்கு முன்னர் முடிக்கப்படாத கனவின் தொடர்ச்சிதான் இந்தப் பயணத்தின் தொடக்கம். அது 1974-ம் ஆண்டு... கோடைக்காலம்.

44 ஆண்டுகள் கழித்து முடிக்கப்பட்ட ஒரு படகுப் பயணத்தின் கதை!
 

ல்ல மழை. வானம் சற்றே இருண்டிருந்தது. குளிர். அமெரிக்காவின் தென்கிழக்கில் ஒரு மிகச் சிறிய கடற்கரை நகரம் அது. கெட்சிகன் (Ketchikan) என்று அதைக் குறிப்பிடுவார்கள். வருடத்தின் பெரும்பாலான நேரங்களில் அங்கு மழை இருந்துகொண்டேதானிருக்கும். சற்று ஒல்லி. இரண்டு பக்க முனைகளும் நல்ல கூர்மை. மரத்தின் நிறத்தில் நல்ல நீளமாக இருந்தன அந்த இரண்டு படகுகளும். அதில் ஒன்று 43 வருடங்களுக்கு முன்னர் கட்டப்பட்டது. ஆனால், தற்போது கட்டியதுபோல சிறப்பாகச் செப்பனிடப்பட்டிருந்தது. இன்னொன்று புதிய படகுதான். அது பார்த்தவுடனே தெளிவாகத் தெரிந்தது. 

படகுப் பயணம்

பண்ட பாத்திரங்கள் அடுக்கப்பட்டன. இரண்டு நீல நிற பிளாஸ்டிக் கேன்கள் படகினுள் வைக்கப்பட்டன. அதில்தான் அவர்களுக்கான அடிப்படை உணவுப் பொருள்கள் இருக்கின்றன. மரப் பீப்பாயில் குடி தண்ணீர் நிரப்பப்பட்டது. எல்லாம் முடிந்து கிளம்புவதற்கு முன்னர் மொத்தப் படகும் மஞ்சள் நிற தார்ப்பாய் கொண்டு மூடப்பட்டது. முன்னால் ஒருவரும் பின்னால் ஒருவரும் உட்காரும் அந்த இடத்தைத் தவிர மற்ற அனைத்தும் மூடப்பட்டன. மெல்லிய சிரிப்போடும் பரவசத்தோடும், ஒருவித பதற்றத்தோடும் முதல் படகு கிளம்பியது. முன்னால் 65 வயது ஆலன் (Alan) உட்கார்ந்து துடுப்புப்போட, முன்னால் 63 வயதான அவருடைய தம்பி ஆன்டி (Andy) துடுப்புப் போட்டார். 
அடுத்த படகில் ஆலனின் மகன்கள் நேட் டேப்பன் (Nate Dappen) மற்றும் பென் டேப்பன் (Ben Dappen) கிளம்பினார்கள். அவர்கள் முகத்தில் அத்தனை சிரிப்பு. அவ்வளவு மகிழ்ச்சி. 

 

 

இது 44 ஆண்டுக்கால கனவு. இன்னும் சொல்லப்போனால், 44 ஆண்டுகளுக்கு முன்னர் முடிக்கப்படாத கனவின் தொடர்ச்சிதான் இந்தப் பயணத்தின் தொடக்கம். 

அது 1974-ம் ஆண்டு... கோடைக்காலம். 

அமெரிக்கா படகுப் பயணம்

ஆலனுக்கு இதை எப்படியாவது செய்திட வேண்டுமென்ற ஆசை. கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தார். 

அமெரிக்காவுக்கும் கனடாவுக்கும் இடையில் `இன்சைட் பாஸேஜ்’ (Inside Passage) என்று சொல்லக்கூடிய ஒரு கடல் வழி உண்டு. எத்திசையும் பரந்து விரிந்திருக்கும் கடல், ஆழம், ஆங்காங்கே சிறு சிறு தீவுகள், பெரு மலைகள் என அத்தனை அழகாக இருக்கும். கொஞ்சம் ஆபத்துகளும் நிறைந்ததுதான். இந்தப் பகுதியைக் கடக்க வேண்டும் என்பதுதான் ஆலனின் ஆசை.

பிடித்ததை செய்வதைவிட வாழ்க்கையில் வேறென்ன பெரிய நோக்கம் இருந்திட முடியும் என்பது ஆலன் வாழ்வின் அடிப்படைத் தத்துவம். உடனடியாகப் பயணத்துக்குத் தயாரானார். அவருடன் அவர் தம்பியும் கிளம்பத் தயாரானார். இதுகுறித்து தன் காதலி சாராவிடம் சொன்னார் ஆலன். 

சாராவுக்கு அது பிடித்திருந்தது. அவருக்கும் ஆலனுடன் போக வேண்டும் என்ற ஆசை. ஆனால், ஆலனுக்கும் அவருக்கும் பிறந்திருந்த நேட், அப்போது கைக்குழந்தை. தன் அப்பா, அம்மாவிடம் போய் விஷயத்தைச் சொன்னார் சாரா. அவர்கள் ஒரு மனோதத்துவ மருத்துவரிடம் சாராவை அழைத்துச் சென்றார்கள்!

பின்னர், சாராவும் பயணத்துக்குக் கிளம்பினார். 

பயணம்

அதுவரை காணாத காட்சிகளைக் கண்டார்கள். அது அத்தனையும் பேரழகு. இயற்கையின் ஆச்சர்யத்தை ஒவ்வொரு நொடியும் அனுபவித்தார்கள். இதோடு சேர்ந்து ஆலனுக்கு சாரா, சாராவுக்கு ஆலன் என ஒருவருக்கொருவர் பெருங்காதலைப் பகிர்ந்துகொண்டார்கள். இப்படியாக அவர்களின் அந்தப் பயணம் முடிந்தது.

பெரும் மகிழ்ச்சியோடு வாழ்ந்தார்கள். சின்ன வயதிலிருந்தே தங்களின் இரண்டு குழந்தைகளுக்குப் பயணக் கதைகளைச் சொல்லியே வளர்த்தார்கள். அவர்கள் வாழ்வை அவர்களே தேர்ந்தெடுக்கும் சுதந்திரத்தையும் அவர்களுக்குக் கொடுத்தார்கள். நேட் ஓர் ஆவணப்பட இயக்குநராக, காட்டுயிர் புகைப்படக்காரராக ஆனார். 

2015-ம் ஆண்டு நேட்டுக்கு திருமணம். தன் காதலியைக் கரம் பிடித்தார். திருமணம் முடிந்து எல்லோரும் குடும்பமாக உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தனர். அப்போது பழைய படகுப் பயணம் குறித்த பேச்சு வந்தது. பேசிக்கொண்டிருக்கும்போது...

"அந்தப் பயணத்தை முழுமையாக முடித்திருக்க வேண்டும். அதைச் செய்யவில்லை என்கிற வருத்தம் 40 ஆண்டுகளைக் கடந்தும், இன்னும் எனக்கிருக்கிறது" என்றார் ஆலன். 

அமெரிக்கா - கனடா கடல் பயணம்

"முழுமையாக முடிக்கவில்லையா?" - இது நேட்டின் கேள்வி.

"ஆமாம்...இன்னும் 300 மைல்கள் மிச்சமிருந்தன. அதற்குள் கோடை விடுமுறை முடிந்துவிட்டதால் சாரா கிளம்ப வேண்டிய சூழல். அவள் கிளம்பியதால் என்னாலும் தொடர முடியவில்லை. அவளுடனே நானும் திரும்பிவிட்டேன். நான் கிளம்பியதும் ஆன்டியும் கிளம்பிவிட்டான். அது ஒரு முடிவுபெறாத பயணமாகவே முடிந்துவிட்டது..." என்று சொல்லி சிரித்தார். ஆனால், ஆலனின் கண்களில் அது குறித்த சின்ன ஏக்கம் இருந்தது நேட்டுக்குப் புரிந்தது. 

அமெரிக்கா - கனடா கடல் பயணம்

அந்த நொடி நேட் முடிவு செய்துவிட்டார். தன் அப்பாவின் கனவை எப்படியாவது நிறைவேற்ற வேண்டுமென்று. ஆனால், நாளுக்கு நாள் ஆலனின் உடல் தளர்ந்துகொண்டே வந்தது. துரிதமாகப் பயண ஏற்பாடுகள் நடந்தன. பயணம் தொடங்கியது. 44 ஆண்டுகளுக்கு முன்னர் தாங்கள் விட்டிருந்த இடத்திலிருந்து பயணத்தைத் தொடங்கினார்கள். பயணத்தைத் தொடர்ந்தார்கள். பாதி வழியிலேயே நேட்டின் மனைவி பிரசவத்துக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட அவர் கிளம்ப வேண்டிய சூழல். ஆனால், ஆலன் பயணத்தை முடித்துவிட்டு வருகிறேன் என்று சொல்லிவிட்டார். 

ஆலனும், ஆன்டியும் தாங்கள் முடித்திடாத அந்தப் பயணத்தை முடித்தார்கள். ஆலனின் கண்களில் ஓரத்தில் பல ஆண்டுக்காலமாகத் தேங்கியிருந்த அந்த ஏக்கம் முற்றிலுமாக மறைந்துபோனது. 

கடல் பயணம்

Images Courtesy: Last Frontier Magazine: The Passage

நேட்டுக்குப் பெண் குழந்தைப் பிறந்தது. 

இன்று பெரும் மகிழ்ச்சியோடு வாழ்க்கையைக் கொண்டாடிக்கொண்டிருக்கிறது மொத்த குடும்பமும். 

https://www.vikatan.com

Link to comment
Share on other sites

நார்வேயில் பயணிகள் விமானம் மலையில் மோதி 141 பேர் பலி (29-8-1996)

 
நார்வேயில் பயணிகள் விமானம் மலையில் மோதி 141 பேர் பலி (29-8-1996)
 
நார்வே நாட்டில் மிகமோசமான விமான விபத்து 1996-ம் ஆண்டு இதே நாளில் (29-8-1996) நடந்தது. ரஷ்யாவின் நிலக்கரி சுரங்க நிறுவனத்திற்குச் சொந்தமான விமானம், மாஸ்கோவில் இருந்து ரஷ்யா மற்றும் உக்ரைன் தொழிலாளர்களை ஏற்றிக்கொண்டு 29-8-1996 அன்று நார்வேயின் ஸ்வால்பார்ட் விமான நிலையத்திற்கு சென்றுகொண்டிருந்தது.

இந்த விமானத்தில் 3 குழந்தைகள் உள்பட 130 பயணிகள், 11 விமான ஊழியர்கள் பயணம் செய்தனர். தரையிறக்கும்போது, விமானத்தை இயக்குவதில் ஏற்பட்ட சிறிய குளறுபடி காரணமாக, அருகில் உள்ள மலையில் மோதி நொறுங்கியது. இந்த விபத்தில் விமானத்தில் இருந்த 141 பேரும் கொல்லப்பட்டனர்.

இதே ஆகஸ்ட் 29-ம் நாளில் நடைபெற்ற வேறு சில முக்கிய நிகழ்வுகள் வருமாறு:-

1498 - வாஸ்கொடகாமா கோழிக்கோட்டில் இருந்து போர்த்துக்கல் திரும்ப முடிவு செய்தார்.

1825 - பிரேசிலைத் தனிநாடாக போர்ச்சுக்கல் அறிவித்தது.

1907 - கனடாவில் கியூபெக் பாலம் கட்டுமானப் பணியின்போது ஏற்பட்ட விபத்தில் 75 தொழிலாளர்கள் பலியாகினர்.

1944 - பொன்னம்பலம் தலைமையில் அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சி ஆரம்பிக்கப்பட்டது.

1949 - சோவியத் ஒன்றியம் ஜோ 1 என்ற தனது முதலாவது அணுகுண்டுச் சோதனையை கஜகஸ்தானில் நடத்தியது.

1995 - முல்லைத்தீவுக் கடற்பரப்பில் இலங்கைக் கடற்படையினரின் ஐரிஸ் மோனா என்ற கப்பலை விடுதலைப் புலிகள் மூழ்கடித்தனர்.

1997 - அல்ஜீரியாவில் ரைஸ் என்ற இடத்தில் 98 ஊர் மக்கள் இஸ்லாமியத் தீவிரவாதிகளினால் படுகொலை செய்யப்பட்டனர்.

தமிழ் திரைப்பட நடிகர் விஷால் (1977), அமெரிக்க பாடகர் மைக்கேல் ஜாக்சன் (1958) பிறந்த நாள்.
 

https://www.maalaimalar.com

Link to comment
Share on other sites

கண்டுபிடிப்புகளின் கதை: சாக்லெட்

 

 
inventionjpg

உலகம் முழுவதும் பரவலாகச் சுவைக்கப்படும் ஓர் இனிப்புப் பொருள் சாக்லெட்தான். டார்க் சாக்லெட், மில்க் சாக்லெட், நட்ஸ் சாக்லெட், ட்ரை ஃப்ரூட் சாக்லெட் என்று விதவிதமான சாக்லெட்கள் வந்துவிட்டன.

சாக்லெட் என்றதும் நம் நினைவுக்கு வருவது கட்டியாகச் சுவைத்துச் சாப்பிடக் கூடிய இனிப்புப் பொருள்தானே! ஆனால் கோகோ விதைகளிலிருந்து பெறப்படும் அனைத்துப் பொருட்களுக்குமே சாக்லெட் என்றுதான் பெயர். சாக்லெட்டின் வரலாற்றில், பெரும்பாலும் சாக்லெட் என்பது குடிக்கக்கூடிய பானமாகவே இருந்திருக்கிறது. கடந்த இரு நூற்றாண்டுகளுக்குள்தான் கடிக்கக்கூடிய சாக்லெட் உருவாகியிருக்கிறது.

 

மத்திய அமெரிக்காவில்தான் கோகோ மரங்கள் செழித்து வளர்ந்தன. 4 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இன்றைய மெக்சிகோ பகுதியில் வாழ்ந்த மக்கள், கோகோவைப் பயன்படுத்த ஆரம்பித்துவிட்டனர். மாயன் மக்களும் அஸ்டெக் மக்களும் கோகோவுக்கு மந்திர சக்தி இருப்பதாக நம்பினர்.

அதனால் குழந்தை பிறப்பு, திருமணம், இறப்பு போன்ற முக்கியமான நிகழ்ச்சிகளின்போது, கோகோவைப் பயன்படுத்தினர். விலைமதிப்புமிக்கப் பொருளாகக் கருதப்பட்ட கோகோ விதைகளைக் கொடுத்து, தேவையான பொருட்களையும் வாங்கிக்கொண்டனர்.

கோகோ விதைகளை வறுத்து, பொடித்து, தண்ணீரில் கலந்து குடித்தால் உடலுக்கு நல்லது என்று நினைத்தனர். ஆனால் இந்தக் கோகோ பானம் சுவையாக இல்லை, மிகவும் கசப்பாக இருந்தது. பிறகு இந்தப் பானத்தில் தேன், மிளகாய், மிளகு போன்றவற்றைச் சேர்த்துக் குடித்தனர். இது ‘கடவுளின் பானம்’ என்றும் அழைக்கப்பட்டது.

அஸ்டெக் மன்னரைச் சந்திக்க ஸ்பெயினைச் சேர்ந்த பயணி ஹெர்னாண்டோ கோர்டெஸ் வந்தார். அவரை வரவேற்று விருந்து அளிக்கப்பட்டது. அந்த விருந்தில் கோகோ பானமும் இருந்தது. அதை முதல்முறை சுவைத்த ஹெர்னாண்டோவுக்குச் சுவை பிடிக்கவில்லை. இப்படி ஒரு கசப்பான பானத்தை எப்படிக் கடவுளின் பானமாகச் சுவைக்கிறார்கள் என்று தோன்றியது.

சாக்லெட் பானத்துடன் ஸ்பெயின் வந்து சேர்ந்தவர், ‘இந்தப் பானம் பன்றிகளுக்கானது’ என்று எழுதினார். ஆனால், கோகோ பானத்தில் தேனையும் சர்க்கரையையும் சேர்த்துச் சுவைத்தவர்கள் பிரமாதமாக இருப்பதாகக் கூறினார்கள். அப்போதும் செல்வந்தர்களின் பானமாகத்தான் கோகோ இருந்தது.

17-ம் நூற்றாண்டின் இறுதியில் நீராவி இயந்திரம் கண்டுபிடிக்கப்பட்ட பிறகு, அதிக அளவில் மற்ற நாடுகளுக்கு கோகோ அனுப்பி வைக்கப்பட்டது. இதன்மூலம் ஐரோப்பா முழுவதும் சாக்லெட் பானம் பரவியது.

1828-ம் ஆண்டு டச்சு நாட்டைச் சேர்ந்த வேதியியலாளர், கோகோ விதைகளைத் தூளாக்கி, அவற்றிலிருந்து கோகோ வெண்ணெய்யின் அளவைப் பாதியாகக் குறைத்தார். கார உப்புகள் சிலவற்றைச் சேர்ந்தார். இதன் மூலம் கசப்புச் சுவை மறைந்தது. இவரது பானத்தை ‘டச்சு கோகோ’ என்று அழைத்தனர்.

ஃபிரான்கோய்ஸ் லூயி கைலர் என்ற 23 வயது ஸ்விட்சர்லாந்துக்காரர், திட வடிவில் சாக்லெட்டை உருவாக்கினார். பிரான்ஸ், இத்தாலி போன்ற நாடுகளுக்கும் இவர் மூலம் திட சாக்லெட் பரவியது.

1847-ம் ஆண்டு இன்றைய நவீன சாக்லெட்டை உருவாக்கியவர் ஜோசப் ஃப்ரை. கோகோ தூளைப் பசையாக மாற்றி, வெண்ணெய்யைக் கலந்து, அச்சுகளில் ஊற்றி திட சாக்லெட்டை உருவாக்கினார்.

1868-ம் ஆண்டு இங்கிலாந்தில் கேட்பரி என்ற சிறிய நிறுவனம் மிட்டாய்களையும் சாக்லெட்களையும் பெட்டிகளில் அடைத்து விற்பனை செய்ய ஆரம்பித்தது. சில ஆண்டுகளுக்குப் பிறகு மில்க் சாக்லெட்டை அறிமுகம் செய்தது. அது மக்களை மிகவும் கவர்ந்துவிட்டது. நெஸ்லே என்ற நிறுவனமும் சாக்லெட் தயாரிப்பில் இறங்கியது. அமெரிக்காவிலும் சாக்லெட் நிறுவனங்கள் தோன்றி, மிகப் பெரிய வியாபார நிறுவனங்களாக மாறின. ஓர் அமெரிக்கர் ஒரு மாதத்தில் குறைந்தது கால் கிலோ சாக்லெட்டையாவது சுவைக்கிறார்.

இன்று சாக்லெட் குறைந்த விலையில் கிடைப்பதால், உலகம் முழுவதும் செல்வாக்குப் பெற்ற இனிப்பாக வலம் வருகிறது. வீட்டிலேயே சாக்லெட்களை உருவாக்கும் விதத்தில் அதன் தயாரிப்பு முறையும் எளிதாகிவிட்டது. இனி சாக்லெட்டைச் சுவைக்கும்போது, சாக்லெட்டின் கதையையும் நினைத்துப் பாருங்கள்.

(கண்டுபிடிப்போம்)

https://tamil.thehindu.com

Link to comment
Share on other sites

 

பச்சோந்திகள் நிறம் மாறும் ரகசியம் தெரியுமா?

பச்சோந்தியின் செல்களுக்குள் நானோகிறிஸ்டல் என்ற செல்கள் உள்ளன. சிறிய முப்பட்டகம்போல, வேறுபட்ட அளவுகள், வடிவங்களில் இருக்கின்ற இந்த செல்கள்தான் நிறம் மாறுவதை எளிதாக்குகின்றன. பிற பச்சோந்திகளோடு தகவல் பரிமாற்றம் செய்வதே இவை நிறங்களை மாற்றுவதற்கு முக்கிய காரணமாகும். இதனை தெளிவாக விளக்கும் காணொளி.

Link to comment
Share on other sites

இயற்கையைத் தேடும் கண்கள் : குட்டிகளுக்காக ‘குட்டி’ வேட்டை!

 

 
iyarkaijpg

‘பெரிய பூனைகள்’ என்று சொல்லப்படும் சிங்கம், புலி ஆகியவற்றுக்கு அடுத்து நம் நாட்டில் தென்படும் முக்கியமான ஓர் உயிரினம், சிறுத்தைகள். ஆசியா, ஆப்பிரிக்கக் கண்டங்களில் இது அதிக அளவில் தென்படுகிறது. இந்தியாவில் கபினி, முதுமலை போன்ற பகுதிகளில் இவை அதிக எண்ணிக்கையில் உலா வருகின்றன.

மரங்கள் அடர்ந்த காடுகளில்தான் சிறுத்தை அதிகமாக இருக்கும். புலியைப் போன்றே, சிறுத்தையும் தனிமை விரும்பி. ஒரு மணி நேரத்துக்கு 40 கிலோ மீட்டர் வேகத்தில் ஓடக்கூடிய சிறுத்தை, ஒரு குதி குதித்தால், சுமார் 10 அடி உயரம்வரை பாயும்.

 

சிங்கம், புலியைப் போன்று வேட்டையாடிய இரையை, நிலத்தில் கிடத்திச் சாப்பிடாமல், மரத்தின் மேலே இழுத்துச் சென்று சாப்பிடும். ‘எங்கே ஒருவேளை தன்னைவிட பலசாலியான சிங்கமோ, புலியோ வந்து தன் இரையைப் பிடுங்கிச் செல்லுமோ’ எனும் பயம்தான் அதற்குக் காரணம்.

இந்தியாவில் தென்படக் கூடிய சிறுத்தைகளுக்கு, எங்கு மான்கள் அதிக அளவில் உள்ளனவோ, அங்குதான்  அதிக அளவில் இரையும் கிடைக்கும். ஆனால், ஆப்பிரிக்கச் சிறுத்தைகளுக்கு மான் மட்டும்தான் உணவு என்றில்லை. சுமார் 75 வகையான உயிரினங்கள், அங்குள்ள சிறுத்தைகளின் உணவுத் தேவையைப் பூர்த்தி செய்கின்றன.

வளர்ந்த சிறுத்தைகளுக்குப் பெரிய அளவிலான இரை, சிறுத்தைக் குட்டிகளுக்கு முயல், பன்றிக்குட்டி போன்ற சிறிய அளவிலான இரை. அப்படி ஒரு முறை, முயலை வேட்டையாடி, தன் குட்டிகளுக்காகத் தாய் சிறுத்தை தன் வாயில் கவ்விச் சென்ற நேரத்தில், இந்தப் படத்தை எடுத்தேன்.

காடுகள் அழிந்து வருவதாலும், அவற்றின் தோலுக்காகக் கள்ள வேட்டைக்கு உள்ளாவதாலும் சிறுத்தைகளின் எண்ணிக்கை வேகமாகக் குறைந்து வருகிறது.

கட்டுரையாளர், காட்டுயிர் ஒளிப்படக் கலைஞர்

https://tamil.thehindu.com/

Link to comment
Share on other sites

வரலாற்றில் இன்று : ஓகஸ்ட் 30
 

image_730c434dd3.jpg1918 : விளாடிமிர் லெனின் ஃபான்யா கப்லான் என்பவனால் சுடப்பட்டுப் படுகாயம் அடைந்தார்.

1941 : இரண்டாம் உலகப் போர் - லெனின்கிராட் மீதான தாக்குதல் ஆரம்பமாயிற்று.

1945 : பிரித்தானியரிடம் இருந்து ஹொங்கொங்கை ஜப்பான் விடுவித்தது.

1984 : டிஸ்கவரி விண்ணோடம் தனது முதலாவது பயணத்தை ஆரம்பித்தது.

1990 : தர்தாரிஸ்தான் ரஷ்ய சோவியத் சோசலிசக் குடியரசிடம் இருந்து விடுதலையை அறிவித்தது. ரஷ்யா இதுவரை அங்கிகரிக்கவில்லை.

1991 : அசர்பைஜான் சோவியத் ஒன்றியத்திடம் இருந்து விடுதலையை அறிவித்தது.

1992 : மண்டைதீவில் இலங்கைக் கடற்படையினரின் நீருந்து விசைப்படகு ஒன்று விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டது.

1999 : கிழக்குத் தீமோர் மக்கள் விடுதலைக்கு ஆதரவாக வாக்களித்தனர்.

http://www.tamilmirror.lk

Link to comment
Share on other sites

தசம புள்ளியை தவறாக புரிந்தமையால் வந்த வினை

 

 
 

தசம புள்ளியை தவறாக புரிந்து கொண்டமையின் காரணமாக தொழிலாளர் ஒருவர் 100 மடங்கு சம்பளத்தை அதிகமாக பெற்ற சம்பவமொன்று அவுஸ்திரேலியாவில் இடம்பெற்றுள்ளது.

aus.jpg 

தசம புள்ளியை தவறாக புரிந்துகொண்டதால், அவுஸ்திரேலியாவின் வடக்கு பிராந்தியத்திலுள்ள தொலைத்தூர கிராமத்தைச் சேர்ந்த தொழிலாளர் ஒருவருக்கு 4,921.76 அவுஸ்திரேலிய டொலர்களுக்கு பதிலாக 4,92,176 அவுஸ்திரேலிய டெலார்கள் சம்பளமாக வழங்கப்பட்டுள்ளது.

இது இவரின் வழமையான சம்பளத் தொகையினை விட 100 மடங்கு அதிகமாகும்.

குறித்த இந்த சம்பவமானது பணியாளர் ஒருவரின் தவறின் காரணமாகவே ஏற்பட்டுள்ளதாக தெரிவித்த அந்த பிராந்தியத்தின் தலைமை அதிகாரி, பணத்தை தவறுதலாக பெற்ற தொழிலாளி தொலைத்தூர கிராமத்தில் வசித்து வந்ததால், ஒருவாரம் கழித்து அவர் அந்த பணத்தை மீள் செலுத்தியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

http://www.virakesari.lk/

Link to comment
Share on other sites

”கிகி” நடனமாடிய பெண் விமான ஓட்டிகள் - வைரலாக பரவும் காணொளி

 

நகரும் விமானத்தில் இருந்து இறங்கிய பெண் விமான ஓட்டிகள் இருவர் ''கிகி'' நடனம் ஆடிய வீடியோ வைரலாகி வருகிறது

குறித்த வீடியோவில் மெக்ஸிகோ நகரத்தை சேர்ந்த அலிஜ்னெட்ரா மாண்ட்ரிகுயிஸ் என்ற பெண் விமான ஓட்டிகள், தனது உதவியாளருடன் டிரேக் என்பவரது மை பீலிங்ஸ் எனும் பாடலுக்கு ''கிகி'' நடனம் ஆடியுள்ளார்.

நகரும் விமானத்தின் அருகில் இவர்கள் இருவரும் துள்ளி குதித்து நடனமாடும் வீடியோ இணைய தளத்தில் வைரலாக பரவி வருகிறது.

201808300327081472_It-was-all-plane-sail

சமூக வலைதளத்தில் தற்போது ‘கிகி’ நடனம் சவால் பிரபலமாகி வருகிறது. ஓடும் காரில் இருந்து இறங்கி நடனமாட வேண்டும்.

இந்த சவாலை ஏற்று ஹொலிவூட் பிரபலங்கள் மற்றும் இந்திய நடிகர்- நடிகைகள், இளைஞர்கள் பலர் என ஓடும் காரில் இருந்து இறங்கி நடனமாடும் வீடியோக்களை பதிவிட்டு வருகிறார்கள். இதனால் ‘கிகி’ நடனம் வெளிநாடு முதல் கிராம பகுதி வரை பிரபலமாகி இருக்கிறது.

 

இந்நிலையில், நகரும் விமானத்தில் இருந்து இறங்கிய பெண் விமான ஓட்டிகள் இருவர் ''கிகி'' நடனம் ஆடி சவால் விடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது

http://www.virakesari.lk

Link to comment
Share on other sites

இன்பாக்ஸ்

 

 

p48a_1535457168.jpg

முதல் இந்திய பிரபஞ்ச அழகியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது முதல், இன்று வரை தனது ஆளுமையை அப்படியே வைத்திருப்பவர் சுஷ்மிதா சென். 25 வயதில் சிங்கிள் உமனாக ஒரு பெண் குழந்தையைத் தத்தெடுத்தபோது, மொத்த இந்தியாவும் சுஷ்மிதாவை நிமிர்ந்து பார்த்தது. பின்னர் மீண்டும் ஒரு கைக்குழந்தையைத் தத்தெடுத்து, இடுப்பில் ஒரு குழந்தை, கையில் ஒரு குழந்தையுடன் ஃபேஷன் முதல் சினிமா வரை வலம் வந்தார் இந்த ‘மாம் யுனிவர்ஸ்.’ கடைசியாக 2014-இல் ‘நிர்பாக்’ என்னும் வங்காளப் படத்தில் நடித்த அவர், தற்போது டிஜிட்டல் திரைக்குள் தடம் பதிக்கவிருக்கிறார். ஆமாம் அவர் நடித்துக்கொண்டிருக்கும் இரண்டு டிஜிட்டல் புராஜெக்டுகளில் ஒன்றை உறுதிப்படுத்திவிட்டார். வேறெங்குமில்லை. நெட்ஃப்ளிக்ஸ்தான்... வெப் சீரிஸ்தான். வெல்கம் பேக் சுஷ்!


p48b_1535457184.jpg

லகிலேயே மிக அதிகமாகச் சம்பாதிக்கும் விளையாட்டு வீராங்கனைகள் பட்டியலில் டாப் டென்னுக்குள் முன்னேறியிருக்கிறார் பி.வி.சிந்து.  ஃபோர்ப்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள சமீபத்திய பட்டியலின்படி சென்ற ஆண்டு மட்டுமே 59 கோடி ரூபாய்க்கு மேல் சம்பாதித்துள்ளார். இதில் மூன்று கோடி மட்டும்தான் சென்ற ஆண்டு விளையாடி ஜெயித்த தொகை. மீதி ஸ்பான்சர்கள் மூலம் கிடைத்தது! ஓடி ஓடி உழைக்கணும்...


p48c_1535457206.jpg

ணிரத்னத்தின் ‘செக்கச் சிவந்த வானம்’, சிவகார்த்திகேயனின் தயாரிப்பில் ‘கனா’, விக்ரமுடன் ‘சாமி ஸ்கொயர்’ என பிஸியாக நடித்துக்கொண்டிருக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ், கோபி நயினார் இயக்கும் படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார்.   பிஸியோ பிஸி!


16 ஆண்டுகளுக்கு முன்பு அமிதாப் பச்சன் நடித்து வெளியாகி ஹிட் அடித்த படம் `ஆங்க் கேன்.’ இப்போது அதே படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க முடிவு செய்திருக்கிறார்கள். முழுக்க சீனாவிலேயே தயாராகவிருக்கும் இந்தப்படத்தில் சுஷாங்க் ராஜ்புத் மற்றும் விக்கி கௌசல் முக்கிய வேடங்களில் நடிக்கவிருக்கிறார்கள். இவர்களோடு ஜாக்கிசானையும் நடிக்க வைக்கும் தீவிர முயற்சியில் இருக்கிறது படக்குழு. அபூர்வ சகோதரர்கள்!


p48d_1535457232.jpg

டந்த மாதம் வெளிவந்து டோலிவுட்டில் சக்கை போடு போட்ட தெலுங்குப் படம்  RX100. 4.2 கோடி பட்ஜெட்டில் எடுத்து 21 கோடி வசூல் செய்த இந்தப் படத்தில் முக்கிய ரோலில் வந்துபோனது யமஹா  RX100 பைக். தற்போது கேரளா வெள்ளத்தில் தத்தளிப்பதால், இந்த பைக்கை ஏலத்தில் விட்டு அதில் வரும் தொகையை கேரளாவுக்கு நிவாரண நிதியாக அளிக்க முடிவு செய்துள்ளனர் இப்படக்குழுவினர். RX100 படக்குழுவினரின் இந்த முயற்சிக்கு சமூக வலைதளங்களில் ஹார்ட்டின்கள் குவிகின்றன. மைலேஜ் கூடுது!


p48e_1535457254.jpg

மிதாப் பச்சன், டாப்ஸி நடிப்பில் 2016-ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம், ‘பிங்க்’. இப்படம் தமிழில் ‘பிங்க்’ என்ற பெயரிலேயே ரீமேக் ஆகவிருக்கிறது. அமிதாப் கேரக்டரில் நடிக்கவிருப்பது, அஜித் குமார். ‘தீரன் அதிகாரம் ஒன்று’ படத்திற்குப் பிறகு, ஹெச்.வினோத் இயக்கவிருக்கும் இப்படத்தில், டாப்ஸி கேரக்டரில் நடிக்க காஜல் அகர்வாலிடம் பேச்சுவார்த்தை நடக்கிறது. மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் இப்படத்தைத் தயாரிக்கிறார். கூல் காம்போ!

https://www.vikatan.com

Link to comment
Share on other sites

வரலாற்றில் இன்று : ஓகஸ்ட் 31
 

image_b527ec91e3.jpg1907 : ஆங்கிலேய - ரஷ்ய ஒப்பந்தம் - வடக்குப் பாரசீகத்தில் ரஷ்யாவின் ஆக்கிரமிப்பை ஐக்கிய இராச்சியமும், தென்கிழக்கு பாரசீகம் மற்றும் ஆப்கானித்தானில் பிரித்தானியாவின் ஆக்கிரமிப்பை ரஷ்சியாவும் அங்கிகரித்தன. திபெத்து மீது இரு வல்லரசுகளும் தலையிடுவதில்லை என முடிவெடுத்தன.

1920 : போலந்தில் கமரோவ் என்ற இடத்தில் சோவியத் போல்செவிக்குகளுடன் இடம்பெற்ற போரில் போலந்து வெற்றி பெற்றது.

1940 : அமெரிக்காவின் வர்ஜீனியாவில் விமானம் ஒன்று வீழ்ந்ததில், அதில் பயணம் செய்த அனைத்து 25 பேரும் உயிரிழந்தனர்.

1941 : இரண்டாம் உலகப் போர் - செர்பியத் துணை இராணுவப் படைகள் ஜேர்மனியப் படைகளை லோசினிக்கா சமரில் வென்றன.

1945 : ஆஸ்திரேலியாவில் லிபரல் கட்சி ஆரம்பிக்கப்பட்டது.

1957 : ஐக்கிய இராச்சியத்திடமிருந்து மலாயா கூட்டமைப்பு (இன்றைய மலேசியா) விடுதலை பெற்றது.

1958 : கம்போடிய மன்னர் நொரடோம் சீயனூக் மீதான கொலை முயற்சி தோல்வியடைந்தது.

1962 – டிரினிடாட் மற்றும் டொபாகோ ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து விடுதலை பெற்றது.

1963 : வடக்கு போர்ணியோ சுயாட்சி பெற்றது.

1978 : இலங்கையில் ஜனாதிபதி ஆட்சிமுறையை அறிமுகப்படுத்திய புதிய அரசியல் யாப்பு வெளியிடப்பட்டது.

1986 : சோவியத் ஆட்மிரல் நகீமொவ் என்ற பயணிகள் கப்பல் கருங்கடலில் சரக்குக் கப்பல் ஒன்றுடன் மோதி மூழ்கியதில், 423 பேர் உயிரிழந்தனர்.

1986 : கலிபோர்னியாவில் இரு விமானங்கள் வானில் மோதிக்கொண்டதில், 67 பேர் வானிலும் 15 பேர் தரையிலும் கொல்லப்பட்டனர்.

1987 : தாய்லாந்து விமானம் கோ பூகத் அருகே கடலில் வீழ்ந்ததில், 83 உயிரிழந்தனர்.

1991 : சோவியத் ஒன்றியத்தில் இருந்து கிர்கிஸ்தான் வெளியேறி தனிநாடானது.

1994 : ஐரியக் குடியரசு இராணுவம் போர்நிறுத்தத்தை அறிவித்தது.

1997 : வேல்ஸ் இளவரசி டயானா பாரிசில் வாகன விபத்தில் கொல்லப்பட்டார்.

1998 : வட கொரியா தனது முதலாவது செய்மதியை ஏவியது.

1999 : புவெனஸ் ஐரிசில் பயணிகள் விமானம் ஒன்று விமான நிலையத்தில் இருந்து புறப்படுகையில் விபத்துக்குள்ளாகியதில், 65 பேர் உயிரிழந்தனர்.

1999 : மாஸ்கோவில் குடியிருப்புகள் மீதான தொடர் குண்டுவெடிப்புகள் ஆரம்பித்தது.

2005 : பக்தாதில் அல் ஆயிம்மா பாலத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி, 953 பேர் உயிரிழந்தனர்.

2006 : 2004 ஆகத்து 22 இல் களவாடப்பட்ட எட்வர்ட் மண்ச்சின் அலறல் என்ற பிரபலமான ஓவியம் நோர்வேயில் கண்டுபிடிக்கப்பட்டது.

2016 : பிரேசில் அரசுத்தலைவர் டில்மா ரூசெஃப் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தில் தோல்வியடைந்து பதவியில் இருந்து அகற்றப்பட்டார்.

http://www.tamilmirror.lk

Link to comment
Share on other sites

'ஆடுகளால் உங்கள் முகத்தைப் படிக்க முடியும்'

 

 
03CHVANkanniGoatjpg

சிரிக்கும் மனித முகங்களையும் கோப முகங்களையும் ஆடுகளால் வேறுபடுத்திப் பார்க்க முடியும் என்கிறது ஓர் ஆய்வு. மகிழ்ச்சியாக இருக்கும் மனிதர்களின் படங்களை ஆடுகள் ஆர்வத்துடன் தேடும் என்றும் அந்த ஆய்வு தெரிவித்துள்ளது.

ஐரோப்பிய மற்றும் பிரேசில் ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட ஆய்வின் முடிவு பின்வருமாறு:

 

''இந்த ஆய்வுக்கு 20 வளர்ப்பு ஆடுகள் பயன்படுத்தப்பட்டன. அவற்றிடம் ஒரே மனிதரின் மகிழ்ச்சியான முகம் கொண்ட புகைப்படமும் கோபமான புகைப்படமும் காட்டப்பட்டன. 20 ஆடுகளுமே புன்னகை நிறைந்த முகத்தையே அணுக விரும்பின. தங்கள் மோவாயால் தொட்டன.

ஆடுகள் அனைத்தும் மகிழ்ச்சியான முகத்தைப் பார்க்கவும் அணுகவும் சராசரியாக 1.4 விநாடிகளை எடுத்துக்கொண்டன. கோபமான முகத்துக்கு 0.9 விநாடிகளை மட்டுமே எடுத்துக்கொண்டன.

அதாவது ஆடுகள் கோபமான முகத்தை விட மகிழ்ச்சியான முகத்தைப் பார்ப்பதில், 50% அதிகமான நேரத்தைச் செலவழிக்கின்றன. இதன்மூலம் கால்நடை விலங்குகள் தங்கள் சூழலை விளக்கும் நவீன மனதைக் கொண்டிருக்கின்றன என்பது தெரியவருகிறது''.

இவ்வாறு அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆய்வு முடிவுகள் ராயல் சொஸைட்டி ஓப்பன் சைன்ஸ் இதழில் வெளியிடப்பட்டுள்ளன.

https://tamil.thehindu.com

Link to comment
Share on other sites

“மக்கள் இளவரசி டயானா” மலரும் நினைவுகள்…!

இளவரசி டயானா 1961 ஆண்டு ஜூலை மாதம் 1 ஆம் திகதி , பார்க் ஹவுஸ், சான்றிங்கம், நோர்ஃபோக் எனும் இடத்தில் பிறந்தார். ஸ்பென்சர்ஸ் குடும்பம் பல தலைமுறைகளாக அரச குடும்பத்துடன் நெருக்கமான நட்பு வைத்திருந்தனர். டயானா, புனித மேரி மேக்டலீன் தேவாலயத்தில் ஞானஸ்தானம் பெற்றார். அவருடன் பிறந்தவர்கள் சாரா, ஜேன் மற்றும் சார்லஸ் ஆகியோர். அவர் பிறக்கும் ஒரு வருடத்திற்க்கு முன் ஜேன் எனும் சகோதரன் இறந்து போனார். வாரிசுக்கான மோதல் டயானாவின் பெற்றோர்களுக்கு இடையில் வெறுப்பை தந்தது. டயானவிற்க்கு எட்டு வயதிருக்கும் போது பெற்றோர் விவாகரத்து பெற்றனர்.

                 50cde8dd3321ce9490200800-27892-217x300.j                          4d2539c3732c269b55cb97ddada8e5fc-300x300

டயானா முதலில் நோர்ஃபோக்கில் உள்ள ரிட்டில்ஸ்வர்த் ஹோல் பெண்கள் பாடசாலையில் படித்தார். பின்னர் செவனோக்ஸ், கென்டில், உள்ள “தி நியூ ஹை ஸ்கூல்லில்” படித்தார். 1973ல் லார்டு அல்தார்ப், டார்த்மவுத்தின் கோமாட்டி ரைய்னெவுடன் உறவு கொண்டார். தன் தந்தை டயானாவை எர்ல் ஸ்பென்சர்ராக நியமித்து; டயானா, லேடி டயானா என்றழைக்கப்பட்டார். டயானா மிகுந்த அமைதியானவர், இசையிலும், நடனத்திலும் விருப்பம் உள்ளவர். அவர் கல்வியில் பெரிதாக பிரகாசிக்க வில்லை. அதிக பாடங்களில் தோல்வியுற்றிருந்தார். ஆனால் அவருக்கு இசையின் மீது மிகுந்த ஆர்வம் இருந்தது. சிறந்த பியானோ கலைஞராக சிறந்து விளங்கினார்.

767-1024x808.jpg

டயானா நீச்சல், நீர் மூழ்குதல், பெல்லரினா எனும் கூட்டு நடன குழுவில் நடனம் ஆடும் முக்கிய பெண்ணாகவும் பிரகாசித்தார். அவர் பாலேட் நடனத்தை சிறிது காலம் பயின்றாலும் பின்னர் தன் உயரம் காரணமாக வெளியேறினார். டயானா முதன் முதலாக செவிலித்தாயாக அலெக்ஸான்றா எனும் பெண்ணிற்க்கு 17 வயதிருக்கும் போது வேலை செய்து வந்தார். அதன் பின்னர் அவர் சிறிது காலம், ஆரம்ப பள்ளியில் உதவியாளராக இருந்தார், தன் சகோதரி சாராவுக்கு உதவி செய்து வந்தார், விருந்தினர் கூட்டம், உபசரிக்கும் பெண்ணாக இருந்தார்.

princess-diana-tv-specials-1024x683.jpg

இதற்கிடையில் தான் வேல்ஸ் இளவரசர் சார்லஸ்யிற்கும் டயானாவிற்கும் காதல் மலரந்தது. இளவரசர் சார்லஸ் டையானாவின் மூத்த சகோதரி சாராவுடன் முன்னரே தொடர்பு வைத்திருந்தார், அதன் பின்னர் பல்வேறு நிகழ்வுகளுக்கு பின், பெப்ரவரி ஆறாம் திகதி 1981இல் இளவரசர் சார்லஸ் தம் காதலை கூற டயானாவும் ஏற்றுக்கொண்டார். பெப்ரவரி இருபத்தி நான்காம் திகதி, இருவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது, டயானா 30,000 பவுண்டு மதிப்புள்ள மோதிரத்தை தேர்வு செய்தார். அதே மோதிரம் பின்னர் கேத் மிடில்டன்னுக்கு 2010இல் நிச்சயதார்த்த மோதிரம் ஆனது. தன் நிச்சயதார்த்தை தொடர்ந்து டயானா தன் வேலைகளை விடுத்து, க்லேரன்ஸ் இல்லத்தில் சிறிது காலம் வசித்து வந்தார். அதன் பின்னர் தன் திருமணம் வரை பக்கிங்க்ஹாம் இல்லத்தில் வசித்து வந்தார். 1981, ஜூலை, இருபத்தி ஒன்பதாம் திகதி டயானாவுக்கும், வேல்ஸ் இளவரசர் சார்லஸ்க்கும் புனித போல் தேவாலயத்தில் திருமணம் நடந்தது.

prenses_diana_nin_dugun_pastasi_satiliyo               834239-300x178.jpg

இதன் மூலம் இருபது வயது டயானா வேல்ஸ் இளவரசி ஆனார். இத்திருமணத்தை 750 மில்லியன் மக்கள் தொலைக்காட்சியின் ஊடாகவும், அறுபது லட்சம் மக்கள் நேரடியாகவும் கண்டு கழித்தனர். டயானா இருபத்தி ஐந்து அடி நீளமுள்ள ஒன்பதாயிரம் பவுண் மதிப்புள்ள உடையை அணிந்து வந்தார்.

இளவரசர் சார்ல்சுடன் டயானா திருமண ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்ட நாளில் இருந்து டயானா பொது வாழ்வில் ஒரு முக்கிய புள்ளியாகக் கருதப்பட்டார். ஐக்கிய இராச்சியத்தில் மட்டுமல்லாமல் உலகளாவிய அளவில் இவர்களது திருமண வாழ்வு தொடக்கம் மணமுறிவு ஏற்படும் வரையில் ஊடகத் துறையில் அதிகம் பேசப்பட்டார். இவருக்கு வில்லியம்ஸ் மற்றும் ஹென்றி எனும் ஹரி என இரு மகன்கள் பிறந்தனர். இளவரசர் சார்லசை திருமணம் செய்ததில் இருந்து தன்னை பொது வாழ்வில் ஈடுபடுத்திக் கொண்டார் இளவரசி டயானா.

860x484.jpg

1995 ஆண்டு பி.பி.சி’யின் ஓர் செவ்வியில், இளவரசி டயானா சார்ல்சிற்கு துரோகம் செய்துவிட்டார். அவர் வேறு நபருடன் தகாத உறவில் ஈடுபட்டு வருகிறார் என்ற செய்தி வெளியானது. அதன் பிறகு இனிமேலும், அவரை எப்படி இளவரசியாக மக்கள் ஏற்றுகொள்வார்கள் என கேள்விகள் எழுந்தன.

இளவரசர் சார்லசும், டயானாவும் அதிகாரப்பூர்வமாக 1992ஆம் ஆண்டு பிரிந்தார்கள். இதற்கு பிறகு நான்கு வருடங்கள் கழித்து 1996ஆம் ஆண்டு இருவருக்கும் விவாகரத்து ஆனது. டயானாவிற்கும் வேறு ஓர் நபருக்கும் தொடர்பு இருந்தது என்று பல செய்திகள் தான் இதற்கு காரணம். விவாகரத்து ஆனதுடன், அவருக்கு வழங்கப்பட்டு வந்த இராஜ மரியாதை இரத்தானது.

Charles-Diana-Camilla-Parker-Bowles-8218

என்னத்தான் அரச குடும்பத்தில் வாழ்ந்தாலும் திருமணமான புதிதில் நிறைய மனநல பிரச்சினைகளும், பசியின்மை கோளாறு, தற்கொலை முயற்சிகள் போன்றவற்றில் சிக்கி தவித்ததாக டயானா தனது சுயசரிதையில் எழுதியிருக்கிறார். இவை அனைத்தையும் கடந்து தான் ஓர் நல்ல தாயாக இருந்ததாக மேலும் அவர் அதில் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

62b03e0432485e8d99b3711ca8cadb5f.jpg

உலகம் முழுதும் கண்ணிவெடிகளை எதிர்த்து நிறைய விழிப்புணர்வு ஏற்படுத்தினார் இளவரசி டயானா. மற்றும் எண்ணற்ற அறக்கட்டளைகளுக்கு நிறைய உதவியும் செய்தார்.

                        4e993b46f2df74244c983986494ec7a7-203x300                               GettyImages-52118972-199x300.jpg

தனிமையில் வாழ்ந்த டயானா பாரிஸ் நகரில், இரவு காரில் சென்று கொண்டிருந்த போது, ஓட்டுனர் குடித்துவிட்டு கட்டுப்பாட்டினை இழந்ததால் தான் விபத்து ஏற்பட்டு இளவரசி டயானா இறந்தார் என செய்திகள் வெளியாயின. பிறகு நீதிமன்றம், சாலை விதிகளை மீறி அவர் வண்டியை ஓட்டியது தான் விபத்திற்கு காரணம் என தனது தீர்ப்பில் கூறியது.

download.jpg

டயானா தனது ஆண் நண்பருடன் ஹோட்டலில் இருந்தது ஓர் செய்தியாளருக்கு தெரிந்து அவர் புகைப்படம் எடுத்துவிட்டதாகவும், அவரிடம் இருந்து தப்பிக்க முயலும் போது அவசரத்தில் அவர் சீட் பெல்ட்டை அணியாததாலும் தான் அவர் விபத்தின் போது இறந்ததற்கு காரணம் என்றும் அந்நாளில் செய்திகளில் கூறப்பட்டது.

நீண்ட காலமாக இழுத்தடிக்கப்பட்ட இவரது மரண விசாரணைகளின் இறுதி முடிவுகள் பதினொரு ஆண்டுகளுக்குப் பின்னர் ஏப்ரல் 2008 இல் வெளியிடப்பட்டது. இதன்படி இவரது மரணம் டயானாவின் ஓட்டுனர் சாலை சட்ட விதிகளை மீறியமையினாலும், பப்பராத்சிகளின் செய்கைகளினாலுமே விளைந்தது எனத் தீர்ப்புக் கூறப்பட்டது.

princess-diana-02-gty-jpo-170817_mn_4x3_

இளவரசி டயானா இறந்த சில மாதங்களில், கண்ணிவெடிகளை எதிர்ப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தியதற்காக அவருக்கு அமைதிக்கான நோபல்பரிசு வழங்கப்பட்டது.

பல்வேறுபட்ட செய்திகள், வதந்திகள், இரகசியங்கள் என பல வலைகளில் சிக்கித்தவித்த போதிலும் கூட, இன்று வரை டயானா வேல்ஸின் இளவரசி என்ற பெயருடன் தான் அழைக்கப்பட்டு வருகிறார். இன்று வரை ஒப்பற்ற புகழ் அவரது பெயரோடு ஒட்டிக்கொண்டு தான் இருக்கிறது.

http://metronews.lk

Link to comment
Share on other sites

 

விமானத்தை பின்பற்றி தாயகம் திரும்பும் வழிதவறிய பறவைகள்

இடம்பெயர்ந்து சென்று வழிதவறிய நார்த்தன் பால்டு இபிஸ் பறவை தாயகம் திரும்ப “வளர்ப்பு பெற்றோரால்“ கற்று கொடுக்கப்படுகிறது. வளர்ப்பு பெற்றோர் செல்லும் சிறிய ரக வானூர்திகளை பின்தொடர்ந்து சென்று அவை தாயகத்தை அடைவது பற்றிய காணொளி.

Link to comment
Share on other sites

வலைபாயுதே

 

 

twitter.com/Kozhiyaar

கைப்பேசி இருந்தும் ஜன்னல் வழியே ஒருவர் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தால், பேட்டரி குறைவாக இருக்கவே வாய்ப்புகள் அதிகம்!

twitter.com/iamkarki

எந்த ஃபங்ஷனா இருந்தாலும் காதுல போன் வச்சிட்டு, முகத்தை டென்ஷனா வச்சிட்டு, வேகமா நடந்தா போதும்... நல்லா வேலை செய்றான்னு முடிவு பண்ணிடறாங்க...

p112a_1535548264.jpg

twitter.com/HAJAMYDEENNKS

மனித உடலுக்கு திடீர்க் காய்ச்சல் வருவதுபோல முக்கொம்பு அணை திடீரென உடைந்துள்ளது. - எடப்பாடி பழனிச்சாமி. #இந்த எடுத்துக்காட்டுக்கு அந்த அணை உடைஞ்சதே பரவாயில்ல!

twitter.com/mohanramko

கொஞ்சம் மழை பெய்தாலும் ரோட்ல தண்ணி நிக்குது, ஆனா எவ்வளவு மழை பெய்தாலும் ஏரியில் மட்டும் நிக்க மாட்டேங்குது...

twitter.com/Timon_6826

சீமான் : தம்பிகளா, நாங்கலாம் அந்தக் காலத்துல பாகிஸ்தான் பார்டர்ல சிங்களர்களை எதிர்த்துப் போரிட்டமா அந்த நேரத்துல ஜப்பான் பிரதமர் டிரம்ப்தான் எங்களுக்கு ஆமைக் கறி வழங்கினார், அதைச் சாப்பிட்ட உடனே புத்துணர்ச்சி பெற்று ஒரே குண்டுல 100 ரஷ்யாகாரன் சுட்டோம்டா தம்பிகளா

தும்பிகள்: ஓ அப்படியாண்ணா...?

twitter.com/rahimgazali

நான் பிஜேபிக்கு அடிமையில்லை. எதிர்க்கவேண்டிய நேரத்தில் பிஜேபியை எதிர்ப்பேன் - எடப்பாடி. எப்ப எதிர்ப்பீங்க? மத்தியில் பிஜேபி ஆட்சி மாறினால் எதிர்ப்பேன்.

twitter.com/Thaadikkaran

சில்லறை இருக்கா என்ற கேள்விக்கு இல்லையென்ற பதிலுக்கு முன் பாக்கெட்டைத் தொட்டுப் பார்ப்பதுபோல பாவனை செய்வது அனிச்சை செயலாகிவிட்டது..!

twitter.com/smhrkalifa

தந்தையின் சட்டைப்பை என்னும் ஏ.டி.எம்-க்கு நம் தாயாரே பாஸ்வேர்டாக இருப்பார்கள்.

twitter.com/Kozhiyaar

ஒருவர் போன் பேசி முடிச்சிட்டு வந்த உடனே ‘யாரு போன்ல?’னு கேட்கிறத எல்லோரும் நிறுத்தினாதான் நாடு வல்லரசாகும்யா!

p112b_1535548291.jpg

twitter.com/BoopatyMurugesh

பூசாரி : அர்ச்சனை பண்ண பேர், நட்சத்திரம் சொல்லுங்கோ...

மீ : அது இருக்கட்டும் சாமி சிலை ஒரிஜினலா, டூப்ளிகேட்டான்னு சொல்லுங்கோ...

twitter.com/amuduarattai

வாட்ஸ அப் செய்தியைக்கூட நம்புகிறார்கள். ஆனால், சீமான் சொன்னால்தான், சந்தேகக் கண்ணோடு பார்க்கிறார்கள்.

twitter.com/chithradevi_91

வங்கிகளில் நாம் போக வேண்டிய கவுன்டரைக் கண்டுபிடிக்கிறதைவிட பெரிய கஷ்டம் அந்த கவுன்டர்ல இருக்க வேண்டியவர் எங்க போனார்னு கண்டுபிடிக்கிறது...

p112e_1535548381.jpg

twitter.com/Thaadikkaran

பத்து நிமிஷம் பாஸ்டா வெச்சு தூங்குனாதான் சீக்கிரம் எந்திருப்போம்னு அலாரம் வச்சுக்கிட்டு, அலாரம் அடிச்சதும் இன்னும் பத்து நிமிஷம் இருக்குன்னு மீண்டும் தூங்குற தூக்கம் இருக்கே டிவைன்..!

twitter.com/ajay_aswa

முதலமைச்சர் பழனிசாமிக்குள் புகுந்த ஜெயலலிதாவின் ஆன்மா - ஆர்.பி. உதயகுமார்.

நீதிபதி ஆறுமுகசாமிக்கு இந்தச் செய்தி தெரியாதுபோல, பாவம் எல்லோரையும் கூப்பிட்டு விசாரிச்சுக்கிட்டு கெடக்காரு.

twitter.com/Stabbercell2

காசு கம்மியா இருந்தா மிஷின கட்டிப்புடிச்சு கொஞ்ச நேரம் அழுதுட்டு வருவானுங்க போல... #எவ்ளோ நேரம்டா!

p112c_1535548318.jpg

twitter.com/g4gunaa

உண்டியல் காசை எடுத்து கேரள மக்களுக்குத் தரலாமான்னு எம்புள்ளையைக் கேக்கலாம்தான். மொதல்ல அதிலேர்ந்து நீ எடுக்கறதை நிப்பாட்றா’ன்னு மானக்கேடா கேப்பா... வாணாம்.

twitter.com/indhiratweetz

‘லவ் யூ’ங்குறது அப்பாவோட தோள்ல சாய்ந்துக்குறது மாதிரி.

‘மிஸ் யூ’ங்குறது அம்மாவோட மடியில தலை வச்சுப் படுத்துக்குற மாதிரி.

twitter.com/rahimgazali

அழகிரி இட்லிக்கடை போடத்தான் லாயக்கு - சு.சாமி #இப்பப்பாருங்க துரை தயாநிதிக்கு கோபம் வந்து சு.சாமி ஒரு ஓசி இட்லின்னு சொல்லுவாரு.

சைபர் ஸ்பைடர்

https://www.vikatan.com

Link to comment
Share on other sites

சோவியத் யூனியனில் இருந்து உஸ்பெகிஸ்தான் விடுதலையான நாள்: 01-09-1991

 
அ-அ+

சோவியத் யூனியனில் இருந்து உஸ்பெகிஸ்தான் விடுதலையான நாள்: 01-09-1991

 
 
 
 
சோவியத் யூனியனில் இருந்து உஸ்பெகிஸ்தான் விடுதலையான நாள்: 01-09-1991
 
உஸ்பெகிஸ்தான் நாடு ஆசியாவில் உள்ள ஒரு நிலங்களால் சூழ்ந்துள்ள நாடாகும். இந்நாடு முன்பு சோவியத் யூனியனின் ஒரு பகுதியாக இருந்தது. 1991-ம் ஆண்டு செப்டம்பர் 1-ந்தேதி சோவியத் யூனியனில் இருந்து விடுதலை பெற்றது. இதன் வடக்கிலும் மேற்கிலும் கஜகிஸ்தானும் கிர்கிஸ்தான், தஜிகிஸ்தான் ஆகியன கிழக்கிலும் ஆப்கானிஸ்தான், துர்க்மெனிஸ்தான் ஆகியன தெற்கிலும் இதன் எல்லைகளாக அமைந்துள்ளன.

இதே தேதியில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள்:-

* 1902 – முதலாவது அறிவியல் புனை திரைப்படம்பிரான்சில் திரையிடப்பட்டது.

* 1914 - ரஷ்யாவின் சென் பீட்டர்ஸ்பெர்க் நகரம் பெட்ரோகிராட் எனப் பெயர் மாற்றப்பட்டது.

* 1923 - டோக்கியோ மற்றும் யொகோஹாமாவில் இடம்பெற்ற நிலநடுக்கத்தில் சுமார் ஒரு லட்சம் பேர் பலியானார்கள்.

* 1939 - இரண்டாம் உலகப்போர்: நாசி ஜெர்மனி போலந்தை தாக்கி போரை ஆரம்பித்து வைத்தது.

* 1951 - ஐக்கிய அமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகள் தமக்கிடையே பாதுகாப்பு ஒப்பந்தத்தை செய்து கொண்டன.

* 1969 - அல் கடாபி புரட்சியின் மூலம் லிபியாவின் ஆட்சியைக் கைப்பற்றினார்.

* 1970 - ஜோர்தான் மன்னர் உசேன் கொலை முயற்சி ஒன்றில் இருந்து தப்பினார்.

* 1972 - ஐஸ்லாந்தில் இடம்பெற்ற உலக சதுரங்கப் போட்டியில் அமெரிக்கரான பொபி பிஷர் ரஷ்யரான பொரிஸ் ஸ்பாஸ்கியை வென்று உலக கோப்பையை வென்றார்.

* 1979 - நாசாவின் பயனியர் 11 ஆளில்லா விண்கலம் சனி கோளை 21,000 கிமீ தூரத்தில் அடைந்தது. இதுவே முதன் முதலில் சனியை அடைந்த விண்கலம் ஆகும்.

https://www.maalaimalar.com

Link to comment
Share on other sites

நிறங்களால் நிரம்பியுள்ள மலேசியா முருகன் கோவில் (புகைப்படத் தொகுப்பு)

மலேசியா

FP

மலேசியாவின் பட்டுவா குகையில் உள்ள முருகன் கோவில் கண்ணை கவரும் வகையில் நிறங்களால் நிரம்பியுள்ளது.

பட்டுவா குகையில் உள்ள 272 படிக்கட்டுகளும் வண்ணங்களால் நிறைந்து அட்டகாசமாக காட்சியளிக்கிறது.

கோலாலம்பூரின் புறநகர் பகுதியில் இருக்கும் இந்த பட்டுவா குகை புகழ்பெற்ற புண்ணியஸ்தளமாகவும், சுற்றுலா தளமாகவும் உள்ளது.

இந்த தளம் பாரம்பரிய தளங்களுக்கான சட்டங்களால் பாதுகாக்கப்படுகிறது. எனவே இதற்கு அரசிடம் அனுமதி வாங்க தவறியதால் கோவில் நிர்வாகத்திற்கு பிரச்சனை ஏற்படலாம் என உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

மலேசியாபடத்தின் காப்புரிமைAFP மலேசியாபடத்தின் காப்புரிமைAFP மலேசியாபடத்தின் காப்புரிமைAFP மலேசியாபடத்தின் காப்புரிமைAFP மலேசியாபடத்தின் காப்புரிமைAFP மலேசியாபடத்தின் காப்புரிமைAFP மலேசியாபடத்தின் காப்புரிமைEPA மலேசியாபடத்தின் காப்புரிமைAFP

 

https://www.bbc.com/tamil/global-45380920

Link to comment
Share on other sites

 

பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள சீமராஜா படத்தின் டிரெய்லர் வெளியானது. 

Link to comment
Share on other sites

 

இசைக்கேற்ப நாம் நடனமாடுவது எப்படி?

உலகின் பல்வேறு பகுதிகளில் உள்ள மக்களை பலவகை இசைகளை கேட்கச் செய்த ஆராய்ச்சியாளர்கள், இசைக்கு மக்களின் மூளை எவ்வாறு எதிர்வினையாற்றுகிறது என்பதை கண்காணித்துள்ளனர் இந்த ஆய்வு முடிவுகள் மறுவாழ்வு மருத்துவ சிகிச்சைகளில் இசையை பயன்படுத்த உதவும்.

Link to comment
Share on other sites

அமெரிக்காவில் முதன்முதலாக ஏ.டி.எம். இயந்திரம் அமைக்கப்பட்ட நாள்: 2-9-1969

 
 
 
 
அமெரிக்காவில் முதன்முதலாக ஏ.டி.எம். இயந்திரம் அமைக்கப்பட்ட நாள்: 2-9-1969
 
அமெரிக்காவில் உள்ள முக்கிய நகரமான நியூயார்க்கில் முதன் முறையாக ஏ.டி.எம். இயந்திரம் அமைக்கப்பட்டது.

இதே தேதியில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள்:-

* 1951 - எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்கா இலங்கை சுதந்திரக் கட்சியை உருவாக்கினார்.

* 1958 - அமெரிக்காவின் விமானப்படை விமானம் ஒன்று சோவியத் ஆர்மீனியாவில் சுட்டு வீழ்த்தப்பட்டது.

* 1965 - பாகிஸ்தான் படையினர் இந்தியாவின் காஷ்மீருக்குள் நுழைந்தனர்.

* 1990 - மால்டோவாவின் ஒரு பகுதியான திரான்ஸ்னிஸ்திரியா தன்னிச்சையாக வெளியேறி தன்னை சோவியத்தின் ஒரு குடியரசாக அறிவித்தது. ஆனாலும் இதனை சோவியத் அதிபர் மிக்கைல் கொர்பசோவ் ஏற்கவில்லை. இன்று வரையில் இது எந்த நாட்டினாலும் அங்கீகரிக்கப்படவில்லை.

* 1992 - நிகராகுவாவில் இடம்பெற்ற நிலநடுக்கத்தில் குறைந்தது 116 பேர் உயிரிழந்தனர்.

* 1996 - பிலிப்பைன்ஸ் அரசுக்கும் மோரோ தேசிய விடுதலை முன்னணிக்கும் இடையில் அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது.

* 1998 - நோவா ஸ்கோசியாவில் சுவிட்சர்லாந்து விமானம் ஒன்று வீழ்ந்ததில் அதில் பயணம் செய்த அனைத்து 229 பேரும் கொல்லப்பட்டனர்.

* 2006 - ஈழப்போர்: யாழ்ப்பாணம் பருத்தித்துறை முனை கடற்சமரில் இலங்கைக் கடற்படையின் 2 டோரா படகுகள் கடற்புலிகளால் மூழ்கடிக்கப்பட்டன.

 

 

 

வியட்நாம் பிரான்சிடம் இருந்து விடுதலையான நாள்: 2-9-1945

 
அ-அ+

பிரான்ஸ் ஆதிக்கத்தில் இருந்த வியட்நாம் 1945-ம் ஆண்டு செப்.2-ந்தேதி விடுதலை பெற்றது.

 
 
 
 
வியட்நாம் பிரான்சிடம் இருந்து விடுதலையான நாள்: 2-9-1945
 
வியட்நாம் தென்கிழக்கு ஆசியாவில் உள்ள ஒரு கம்யூனிச நாடு ஆகும். இதன் எல்லைகளாக வடக்கே சீனா, வடமேற்கே லாவோஸ், தென்மேற்கே கம்போடியா ஆகிய நாடுகள் அமைந்துள்ளன. நாட்டின் கிழக்குக் கரையோரத்தில் தென் சீனக் கடல் உள்ளது. இதன் மக்கள் தொகை ஏறத்தாழ 85 மில்லியன்கள் ஆகும். இதுவே தென்கிழக்கு ஆசியாவில் மக்கள் தொகை மிகுந்த நாடு ஆகும். உலகில் மக்கள் தொகையில் 13-வது இடத்தையும் வகிக்கிறது. இதன் தலைநகரம் ஹனோய் ஆகும். ஹோ சி மின் நகரம் நாட்டின் மிகப்பெரிய நகரம் ஆகும். பிரான்ஸ் ஆதிக்கத்தில் இருந்த வியட்நாம் 1945-ம் ஆண்டு செப்.2-ந்தேதி விடுதலை பெற்றது.

இதே தேதியில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள்:-

* 1864 - அமெரிக்க உள்நாட்டுப் போர்: கூட்டமைப்புப் படைகள் அட்லாண்டாவை விட்டு விலகிய அடுத்த நாள் அமெரிக்கப் படைகள் அங்கு போய் சேர்ந்தன.

* 1870 - பிரான்சில் செடான் என்ற இடத்தில் இடம்பெற்ற போரில் பிரஷ்யப் படையினர் பிரான்சின் மன்னனான மூன்றாம் நெப்போலியனையும் அவனது படையினர் ஒரு லட்சம் பேரையும் கைது செய்தனர்.

* 1885 - வயோமிங் மாநிலத்தில் 150 வெள்ளையின சுரங்கத் தொழிலாளர்கள் வெளிநாட்டு சீனத் தொழிலாளர்களைத் தாக்கி அவர்களில் 28 பேரைக் கொன்று 15 பேரைக் காயப்படுத்தினர். பல நூற்றுக் கணக்கானோர் நகரை விட்டுத் தப்பியோடினர்.

* 1898 - பிரித்தானிய மற்றும் எகிப்தியப் படைகள் சூடானிய பழங்குடியினரைத் தாக்கி அந்நாட்டில் பிரித்தானிய மேலாண்மையை ஏற்படுத்தினர்.

* 1935 - புளோரிடாவில் இடம்பெற்ற சூறாவளியினால் 423 பேர் கொல்லப்பட்டனர்.

* 1939 - இரண்டாம் உலகப் போர்: போலந்து மீதான முற்றுகையை அடுத்து கதான்ஸ்க் நகரம் நாசி ஜெருமனியினரின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது.

* 1945 - இரண்டாம் உலகப் போர்: பசிபிக் போர் முடிவுக்கு வந்தது. ஜப்பானின் கடைசி அதிகாரபூர்வமான சரணடைதல் டோக்கியோ வளைகுடாவில் மிசூரி என்ற அமெரிக்கக் கப்பலில் நிகழ்ந்தது.

* 1945 - வியட்நாம், பிரான்சிடம் இருந்து விடுதலையை அறிவித்து, வியட்நாம் மக்களாட்சிக் குடியரசு என்ற பெயரில் (வடக்கு வியட்நாம்) ஹோ சி மின் தலைமையில் ஆட்சியை அமைத்தது.

* 1946 - பிரித்தானிய இந்தியாவில் ஜவகர்லால் நேரு தலைமையில் பிரதமரின் அதிகாரங்களுடன் இடைக்கால அரசு உருவானது.

https://www.maalaimalar.com/

Link to comment
Share on other sites

’கப்பல் அதன் ஆயுள் முடிந்தபின் என்னவாகும்?’- நம்பமுடியாத ஓர் அத்தியாயம் #ShipBreakingStories

 

5 வருசமா அவர்கூட வேல பார்க்கிறேன். என்னால் அவரது உடலை அடையாளம் காண முடியவில்லை. அவரது பல்லை வைத்துத்தான் என்னுடைய நண்பன் என்றே அடையாளம்  கண்டுபிடித்தேன்”

கடலுக்குப் பக்கத்தில் இருந்தாலும் துளியும் ஈரமோ கருணையோ இல்லாத ஒரு நிலப்பரப்பு.  மிகப் பிரமாண்டமாக இருக்கிற கப்பல்தான் அங்கிருக்கிற மக்களுக்குப் பணியிடம். எந்தப் பணியை  வாழ்வாதாரமாகக் கொண்டிருக்கிறார்களோ அதுவே அவர்களின் வீழ்ச்சிக்கும் காரணமாக இருக்கிறது. சொல்ல மறந்த கதைகளில் சொல்லப்பட வேண்டிய முக்கியமான கதை இது.

2000 ஆம் ஆண்டு. பிரேசில் நாட்டைச் சார்ந்த கப்பல் வெல்மா. தன்னுடைய வாழ்நாள் முழுவதும் கெமிக்கல் டேங்கராக பல நாடுகளுக்கும் பயணித்தது. பல வருடங்களாகப் பணியிலிருந்த கப்பல் இந்தியாவின் குஜராத்தை நோக்கி பயணத்தைத் தொடங்கியதும் அதிலிருந்த ஒவ்வொருவரும் உணர்ச்சிவசப்படுகிறார்கள். குஜராத்தின் அலாங் கடற்கரையை நெருங்க நெருங்க ஒவ்வொருவரின் கண்களிலும் கண்ணீர் எட்டிப் பார்க்க ஆரம்பிக்கிறது. ஒவ்வொருவரும் கப்பலோடு கண்ணீர் மல்கப் பேச ஆரம்பிக்கிறார்கள். கேப்டன் கப்பலின் இயந்திர அறையைத் தொட்டுத் தடவி கப்பலின் மேல் தளத்திற்கு வருகிறார்.  கேப்டன் மிகப் பெரிய கண்ணீர் அஞ்சலியுடன் வெளியேறுகிறார். கப்பலுக்கும் அதனோடு 30 ஆண்டுகள் பயணித்த மனிதர்களுக்குமான பிணைப்பு இன்னும் சில நொடிகளில் உடையப் போகிறது. மேற்கூறிய எல்லாவற்றிற்கும் ஒரு காரணமிருந்தது. பல ஆயிரம் டன் எடை கொண்ட வெல்மா கப்பல் உடைப்பதற்காக அலாங் நகருக்குக் கொண்டு வரப்பட்டிருக்கிறது. உணர்ச்சிமயமான காட்சிகள் மறைந்து,  இரும்பும் தகரமுமான ஒரு வாழ்வியல் பற்றிய கதை இங்கிருந்துதான் தொடங்குகிறது. 

கப்பல் உடைக்கும் அலாங்

 

 

அலாங் (ALANG) பல நாடுகளிலும் இருந்து உடைப்பதற்காகக் கப்பல்கள் வந்து கொண்டேயிருக்கிற இடம். மறுசுழற்சியில் கப்பல் மீண்டும் இரும்பாக மாறுகிற இடம். கப்பல்களை நம்பி சுமார் 40 ஆயிரம் மக்கள் அந்தப் பகுதியில் வசிக்கிறார்கள்.  அலாங் நகர வீதிகள் இரும்பும் இரும்பு சார்ந்தப் பகுதியாகவும் காட்சியளிக்கிறது. அலாங் கடற்கரையை ஒட்டிய 10 கிலோ மீட்டர்  நிலப்பரப்பு இரும்புகளாலும், தகரங்களாலும் சூழப்பட்டிருக்கிறது. இரும்பின் வாசம்தான் எல்லோருக்கும் சுவாசம். தினமும் காலை காளி தெய்வத்திற்கு படையலிட்டு வணங்கிய பிறகு கப்பல் உடைக்கிற பணியைத் தொடங்குகிறார்கள். அதற்கான பிரத்யேக உடைகளெல்லாம் இல்லை. சாதாரண சட்டையும் பேண்டும்தான்.  வந்திருக்கிற  கப்பலின் மின்சாரத்தைத் துண்டித்துவிட்டு  இருக்கிற தேவையற்ற பொருட்களை முதலில் அப்புறப்படுத்த வேண்டும். கப்பல் உடைப்பதில் முதல் பணியாக இருப்பது  இரும்பு மற்றும் இரும்பு இல்லாத பொருட்களை காந்தத்தின் உதவியுடன் பிரித்தெடுப்பதுதான். 

 
 

 

கப்பலில் அதிகம் பயன்படுத்தப்பட்டிருப்பது இரும்புகளும் பைப் லைன்களும்  கேபிள்களும்தான். இவற்றைப்  பிரித்து உடைத்து எடுக்க கேஸ் வெல்டிங் செய்தாக வேண்டும். எந்தப் பாதுகாப்பும் இல்லாமல் ஒவ்வொரு தளத்திலும் 100 பேருக்கு மேல் வெல்டிங்  பணியை செய்து கொண்டிருப்பார்கள். கப்பல் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் இடத்தைச் சுற்றியிருக்கிற பகுதியில் சுமார் 50 டிகிரி செல்ஸியஸ் அளவுக்கு வெப்பம் அதிகரிக்கும். கப்பல் எப்படிக் கட்டப்பட்டிருக்கும்  என்பது தெரிந்தால் மட்டுமே அதைப் பிரித்து உடைக்க முடியும். அவற்றைக் கண்டுபிடிப்பதிலும் அவற்றைத் தகர்ப்பதிலும் கேஸ் கட்டர்கள் திறமையானவர்கள்.  எங்கே வெல்டிங் செய்தால் எது உடையும் என்பது கேஸ் கட்டர்களுக்கு மட்டுமே தெரியும். இந்தத் தொழிலின் கதாநாயகர்கள் கேஸ் கட்டர்களாக இருக்கிறார்கள். இந்தத் தொழிலுக்கு வரும் ஒவ்வொரு மனிதருக்கும் ஒருநாள் கேஸ் கட்டராக வேண்டும் என்பதுதான் கனவாக இருக்கும்.

கப்பல் முழுமைக்கும் வெப்பம் சூழ்ந்திருக்க வெல்டிங் பணி  நடைபெறும் பொழுது எங்கே எப்போது அசம்பாவிதம் நிகழும் என்றே சொல்லிவிட முடியாது. வெல்டிங் செய்கிற ஸ்டீல் கம்பிகள் எங்கு எதைத் தாங்கி நிற்கிறது எனக் கணித்து விட இயலாது. திடீரென ஒரு ஸ்டீல் விழுந்தால் அதனைத் தொடர்ந்து இன்னொரு ஸ்டீல் உடைந்து விழும். நூற்றுக்கணக்கில் வேலை செய்து கொண்டிருக்கும் மனிதர்களில் யாராவது ஒருவரின் மீது அந்த ஸ்டீல் விழும். ஸ்டீல் ஏற்படுத்துகிற காயங்கள் அபாயகரமானவை. உடனடியாக மருத்துவமனைக்கும் கொண்டு செல்ல இயலாது. ஏனெனில் கப்பல் உடைக்கும் இடத்திலிருந்து ஒரு மணி நேரப்  பயணத்தில்தான் மருத்துவமனை. இங்குப் பணிபுரிகின்ற யாரும் உடலில் ஏற்படுகிற காயங்களைப் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை. கப்பலின் மிகப் பெரிய பாகங்கள் ஒவ்வொன்றும் பல டன் கொண்டவை. பிடிப்புகளை இழக்கிற  பொருட்கள் எதிர்பாராத நேரத்தில் திடீரென உடைந்து கீழே  விழும். அதில் மரணங்களும் எதிர்பாராததுதான். 

அலாங் இந்தியா

இருக்கிற வறுமைக்கு இந்தப் பணியை செய்தாக வேண்டும். நெருப்பிலும் அபாயத்திலும் பணிபுரிகின்ற மக்களுக்கு அடுத்து இன்னொரு அபாயம் இருக்கிறது. வந்திருக்கிற கப்பல் 30 ஆண்டுகளாக கெமிக்கல் டேங்கராக பயன்படுத்தப்பட்டது. கப்பலில் தேங்கியிருந்த கெமிக்கல்கள் வெப்பத்திற்குச் சூடாகி  வெளியேற ஆரம்பிக்கும். சில நேரங்களில் வெடிக்கவும் செய்யும். மனிதர்கள்  இருக்கத் தகுதியே இல்லாத இடத்தில் 100 மேற்பட்டோர் பணி செய்து கொண்டிருப்பார்கள். உண்மையில் கப்பல் வேலை அபாயங்களைக் கொண்டவை என்பதற்கு நடந்திருக்கிற சில சம்பவங்களை விவரிக்க வேண்டும். கப்பலில் கேஸ் வெல்டிங் செய்கிற ஒருவர் டேங்கரின் ஒரு பகுதி வெடித்துச் சிதறியதால் மிகுந்த காயத்திற்கு உள்ளாகிறார். உடனடியாக அவர் பாவான்நகரில் இருக்கிற ஒரு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்படுகிறார். ஆனால் அவரது உயிரைக் காப்பாற்றமுடியாமல் போய் விடுகிறது. மருத்துவமனையில் இருக்கும் அவரைப் பார்க்க அவரோடு பணி  புரிந்த நண்பர் ஒருவர் போகிறார். நண்பரின் உடலைப் பார்த்து விட்டு வெளியே வந்தவர் இப்படிச் சொல்கிறார். “5 வருசமா அவர்கூட வேல பார்க்கிறேன். என்னால் அவரது உடலை அடையாளம் காண முடியவில்லை. அவரது பல்லை வைத்துத்தான் என்னுடைய நண்பன் என்றே அடையாளம்  கண்டுபிடித்தேன்” என்கிறார். அந்த அளவிற்குத் தீ அவரது நண்பரைச் சிதைத்திருக்கிறது.   

 

 

கப்பல் பல தளங்களைக் கொண்டது. மூன்றாவது தளத்தில் வெல்டிங் வேலை செய்து கொண்டிருந்த ஒருவர் திடீரென காணாமல் போகிறார். இரண்டு நாள் என அவரைத் தேடியவர்கள் அதன் பிறகு அவரை அப்படி விட்டுவிட்டார்கள். நான்கு நாட்கள் கழித்து அவர் அணிந்திருந்த சட்டை கடலில் மிதந்து கரைக்கு வந்திருக்கிறது. அதன் பிறகே அவர் கப்பலில் இருந்து காயங்களுடன் கடலில் விழுந்த தகவல் கிடைத்திருக்கிறது.  இது போன்ற பல வழக்குகள் அலாங் நகரில் இருக்கிற காவல் நிலையத்தில் பதியப்பட்டுள்ளது.  முறையாகப் பயிற்சி பெறாத, தொழில் தெரியாத மனிதர்களே இந்தத் தொழில் அதிகம் ஈடுபடுகின்றனர். பணியை மேற்கொள்ளும் ஒப்பந்ததாரர்கள் வேலை சீக்கிரம் முடிய வேண்டும், பணம் சம்பாதிக்க வேண்டும் என்கிற ஆர்வத்தில் வேலையை வாங்குவதால் அதிக விபத்துகளைப் பணியாளர்கள் சந்திக்கிறார்கள்.  கப்பல் உடைக்கிற பணியில் இருக்கிற பலருடைய முதுமை பருவம் பார்வை இல்லாமலே இருப்பதுதான் மிகப் பெரிய கொடுமை. கேஸ், நெருப்பு, எனத் தீ ஜுவாலைகளில் பணி செய்கிற ஒவ்வொருடைய உடலிலும் ஒரு பாதிப்பு இருக்கிறது. அதில் கண் பார்வை முதல் இடத்தில் இருக்கிறது. இதில் இன்னொரு முக்கியமான விஷயம் 2004 ஆம் ஆண்டுக் கணக்கின்படி ஒரு நாளைக்கு ஒரு இறப்பு என ஆண்டுக்கு 300 மேலான இறப்புகள் கப்பல் உடைக்கும் நகரில் கணக்கிடப்பட்டிருக்கிறது. “ஒரு நாளைக்கு ஒரு கப்பல், ஒரு நாளைக்கு ஒரு சாவு” என்கிற ரீதியில்தான் கப்பல் உடைக்கும் இடங்கள் செயல்பட்டன.  இந்தத் தொழிலில் அதி நவீன பொருட்கள் எதுவும் 2005 ஆண்டு  ஆண்டிற்கு முன்பு வரை நிறுவப்படவில்லை. எல்லா வேலைகளையும் மனித இனம் மட்டுமே செய்ய வேண்டியிருந்தது. 

அலாங்

கப்பல் உடைக்கும் தொழிலில், கப்பலிலிருக்கிற எல்லா இடங்களும் ஆபத்துதான். கெமிக்கல் கப்பலில் இருக்கிற இரும்புகள் தவிர்த்து மற்ற எல்லாப் பொருட்களுமே விஷக் கழிவுகள்தான். கப்பல், உடைக்க அனுப்பப்படுகிறது என்றது கப்பல் உரிமையாளர்கள் கப்பலில் இருக்கிற எந்தக் கழிவுகளையும் அப்புறப்படுத்தாமல் அப்படியே இந்தியாவிற்கு அனுப்பிவிடுகிறார். அதனுடைய கழிவுகள் கடற்கரையில் கொட்டப்பட்டு கடற்கரை மட்டுமன்றி மக்களையும் அவர்களின் ஆரோக்கியத்தையும் சீரழித்துவிடுகிறது.பழைய கப்பல்களில் ஆஸ்பெஸ்டாஸ் மற்றும் கன உலோகங்கள் தொழிலாளர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்துகின்றன. வெடிப்பு, நெருப்பு, மூச்சுத்திணறல், வீக்கம், புற்று நோய், மற்றும் நச்சுத்தன்மையிலிருந்து நோய்கள்  ஏற்படுகின்றன. 1980 களின் நடுப்பகுதியில் வளர்ந்த நாடுகளில் இறுதியாகத் தடை செய்யப்பட்ட வரை, அஸ்பெஸ்டோஸ் கப்பல் கட்டுமானத்தில் பெரிதும் பயன்படுத்தப்பட்டது. ஒரு கப்பலிலிலிருந்து பிரித்தெடுக்கப்படுகிற அஸ்பெஸ்ட்டாஸ் எடை மட்டுமே 20 டன். 600 கப்பல்கள் ஆண்டுக்கு அலாங் கடற்கரையில் உடைக்கப்படுகின்றன. 12 மில்லியன் கிலோ அஸ்பெஸ்ட்டாஸ் கடற்கரையில் கொட்டப்படுகின்றன. 

1300 டிகிரி செல்ஸியஸ் வெப்பத்தில் இரும்புகள் சூடாகும்  பொழுது வெளியாகிற வாயுக்களும், புகையும் நேரடியாக நுரையீரலைப் பாதிக்கின்றன. இங்குப் பணி  புரிகிற நான்கில் ஒருவருக்கு புற்றுநோய் இருந்தது  கண்டறியப்பட்டது.  உலகின் பல நாடுகளிலும் கப்பல் உடைக்கும் பணி தடை செய்யப்பட்டது.  வளர்ந்த நாடுகள் பலவும் உடைக்க இருக்கிற கப்பல்களை விஷ கழிவுகளுடன்  ஏழ்மையான நாடுகளுக்கு அனுப்பி விடுகிறார்கள். உலகத்தில் கப்பல் உடைக்கும் தொழிலில் இருப்பது ஆசிய நாடுகள்தான். இந்தியா, சீனா, பங்களாதேஷ், பாகிஸ்தான். அலாங் தான் உலகின் மிகப் பெரிய கப்பல் உடைக்கும் இடம்.  கடந்த 2016 ஆம் ஆண்டு பாகிஸ்தானில் இருக்கிற Gadani கப்பல் உடைக்கும் இடத்தில் ஆயில் டேங்கர் வெடித்து  26 பேர் இறந்தனர். அதனை அடுத்துக் கடந்த 2017 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் எல்பீஜி டேங்கர் வெடித்து 7 பேர் இறந்தனர். பாகிஸ்தான் அரசு உடனடியாக கப்பல் உடைக்கும் தொழிலைத் தற்காலிகமாக நிறுத்தி வைத்தது. தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்தால் மட்டுமே தொடர்ந்து இயங்க அனுமதிக்கப்படும் என  அறிவித்தது. 

பாகிஸ்தான் கப்பல் உடைக்கும் இடம்

இப்போது உலக நாடுகள் பலவும் கப்பல் உடைப்பதில் பல விதி முறைகளைக் கொண்டு வந்திருக்கின்றன. கனடா போன்ற நாடுகள் விஷக் கழிவுகளை ஏற்றுமதி செய்வதை தடை செய்திருக்கிறது. சர்வதேச கடல் எல்லைகளைக் கடக்கிற கப்பல்கள் பலவும் பலகட்ட சோதனைகளுக்கு பிறகே அந்தந்த நாட்டின் எல்லைகளுக்குள் அனுமதிக்கப்படுகின்றன. விஷக் கழிவுகள் இருக்கிற கப்பல்கள் உடனடியாக திருப்பிவிடப்படுகின்றன. இந்தியா 2003 ஆம் ஆண்டிற்குப் பிறகு கப்பல் உடைக்கும் தொழிலில் பல கட்டுப்பாடுகளை விதித்தது.  டிசம்பர் 31, 2005 அன்று பிரான்ஸ் நாட்டைச் சார்ந்த  Clemenceau என்னும் கப்பல் உடைப்பதற்காகக் கொண்டு வரப்பட்டது. ஆனால் கப்பலில் அதிக விஷக் கழிவுகள் இருப்பது கண்டறியப்பட்டதால் 2006 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 6 தேதி உச்ச நீதிமன்றம்  Clemenceau கப்பலைத் திருப்பி அனுப்ப உத்தரவிட்டது.  தொழிலாளர்களின் பாதுகாப்பு, சுற்றுப்புறச் சூழல் போன்றவற்றிற்கு இந்திய அரசு  முக்கியத்துவம் கொடுக்க ஆரம்பித்தது.  இந்தியாவில் இந்தத் தொழிலுக்கு மிகப் பெரிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதால் ஆண்டுக்கு 20 கப்பல்கள் என்கிற விகிதத்தில் கப்பல் உடைக்கும் பணி இப்போது  நடைபெறுகிறது.  2017 ஆம் ஆண்டுக் கணக்கின்படி அலாங் நகரில்  11 பேர் இறந்திருப்பதாக அறிவித்திருக்கிறது. 

பல பேருடைய உயிரையும் வாழ்வையும் பறித்த கப்பல் உடைக்கும் தளம் இப்போதும் செயல்படுகிறது.        

https://www.vikatan.com

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • உங்களுக்கு இந்தியா பற்றி நான் தந்திருப்பது தரவுகளை. நீங்கள் மேலே அலம்பியிருப்பது இந்தியா தொடர்பான உங்கள் ஆத்திரக் கருத்துக்களை. இந்தியா மீது அபிமானம் எனக்கும் இல்லை - ஆனால், தரவுகளை நோக்கித் தான் ஒரு நாட்டின் முன்னேற்றம் பற்றிய கருத்துக்கள் வர வேண்டும், அந்த நாட்டை விரும்புகிறோமா வெறுக்கிறோமா என்பதை ஒட்டியல்ல. பொருளாதார வளர்ச்சி ஊழலால் பெரிதும் பாதிக்கப் பட்டிருக்கிறது இந்தியாவில். ஆனால், மனித வளம் அதையும் மீறி இந்தியாவை முன்னேற்றி வருகிறது. இந்தியா போன்ற கலாச்சாரப் பின்னணி கொண்ட, ஆனால் மனித வளம் மிகக் குறைந்த பாகிஸ்தானிலோ. வங்க தேசத்திலோ இந்தியாவில் இருப்பது போன்ற வளர்ச்சி இல்லை - இது உங்களுக்குக் கசக்கலாம், ஆனால் யதார்த்தம் அது தான்.
    • அருமையான கண்ணோட்டம் அழகான சிந்தனைகள் ......நல்லாயிருக்கு ......!  👍 இந்தக் கவிதையை நீங்கள் யாழ் அகவை 26 ல் பதியலாமே .......இப்பவும் நிர்வாகத்தில் சொன்னால் மாற்றிவிடுவார்கள்.........நாளையுடன் திகதி முடியுது என்று நினைக்கிறேன்.........!  
    • சீமானை எதிர்ப்பவர்கள் தங்களை அதிபுத்திசாலிகளாகவும் சீமானை ஆதரிப்பவர்கள்  கண்மூடித்தனமாக உணர்ச்சிகரமான பேச்சுக்களுக்கு மயங்கி சீமானை ஆதரிப்பது போலவும் ஒரு மாயை நிலவுகிறது.நாங்கள் சீமானை ஆதரிப்பதற்கு காரணம் தமிழ்த்தேசியத்தின் இருப்பைத் தக்கவைத்துக் கொள்ள வேண்டும் .அதை அடுத்த சந்ததிக்கு கடத்த வேண்டும்.இல்லாவிட்டால் ஆரியத்தை விட திராவிடமே தற்போதைய நிலையில் தமிழ்த்தேசியத்தை அழிப்பதில் முன்நிற்கிறார்கள்.ஆரியம் வட இந்தியாவில் நிலை கொண்டிருப்பதால் அதன் ஆபத்து பெரிய அளவில் இருக்காது.ஆனால் தமிழ்நாட்டுக்குள் இருந்து கொண்டு தமிழ்ப்பற்றாளர்களாக காட்டிக்கொண்டு தமிழ்த்தேசியத்தை இல்லாதொழிப்பதற்கு திராவிடம் அயராது வேலை செய்கிறது.சீமானின் எழுச்சி அவர்களின் இருப்பை கேள்விக்குள்ளாக்குகிறது.முன்பும் ஆதித்தனார் சிலம்புச்செல்வர் கிபெவிசுவநாதம் பழ நெடுமாறன் போன்றோர் தமிழ்த்தேசியத்தை முன்னெடுத்திருந்தாலும் அவர்கள் இயக்கமாக இயங்கினார்களே ஒழிய தேர்தல் அரசியலில் கவனத்தை பெரிய அளவில் குவிக்க வில்லை.திராவிடத்திற்கும் தமிழ்த்தேசிய இயக்கங்கள் இருப்பதில் பிரச்சினை இல்லை.அவர்கள் தேர்தல் அரசியலில் ஈடுபடுவது தமது தேர்தல் அரசியலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்ற காரணத்தினாலே தமிழ்த்தேசியத்தை மூர்க்கமாக எதிர்க்கிறார்கள்.
    • நல்ல கருத்து எனது  கேள்விக்கு உங்களிடமிருந்து  தான்  சரியான  பதில் வந்திருக்கிறது   ஆனால் நீங்கள்  குறிப்பிடும்  (ஊரில் சொந்தவீட்டில் கிணத்து தண்ணி அள்ளி குடிச்சு காணிக்க வாற மாங்கா தேங்காவித்து வீட்டுத்தேவைக்கு மரக்கறி தோட்டம்கூட வச்சு வாழும் மக்களை பார்த்து கேட்கிறார்கள்) இவர்கள்  எத்தனை  வீதம்?? இவர்கள் 50 க்கு  அதிகமான  வீதம்இருந்தால் மகிழ்ச்சியே...  
    • இதையே தான் நானும் சுட்டிக் காட்டியிருக்கிறேன்: தமிழ் நாட்டில் தமிழின் நிலை, யூ ரியூபில் சீமான் தம்பிகளின் பிரச்சார வீடியோக்கள் பார்ப்போரைப் பொறுத்த வரையில் கீழ் நிலை  என நினைக்க வைக்கும் பிரமை நிலை. உண்மை நிலை வேறு. இதை அறிய நான் சுட்டிக் காட்டியிருக்கும் செயல் திட்டங்களை ஒரு தடவை சென்று தேடிப் பார்த்து அறிந்த பின்னர் எழுதுங்கள். மறு பக்கம், நீங்கள் மௌனமாக சீமானின் பாசாங்கைக் கடக்க முயல்வதாகத் தெரிகிறது. மொழியை வளர்ப்பதென்பது ஆட்சியில் இருக்கும் அரசின் கடமை மட்டுமல்ல, ஆட்சிக்கு வர முனையும் எதிர்கட்சியின் கடமையும் தான். தமிழுக்கு மொளகாய்ப் பொடி லேபலில் இரண்டாம் இடம் கொடுத்தமைக்குக் கொதித்த செந்தமிழன் சீமான், தானே மகனுக்கு தமிழ் மூலம் கல்வி கொடுக்கத் தயங்குவதை "தனிப் பட்ட குடும்ப விவகாரம்" என பம்முவது வேடிக்கை😂!
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.