Jump to content

இளமை புதுமை பல்சுவை


Recommended Posts

‘அன்பைப் பகிர்வோருடன் இணைக’
 

image_23f3ee4be1.jpgமக்களில் பலர் எதிர்மறையான செய்திகளையே விரும்பிப் படிக்கிறார்கள். யாராவது கெட்டதனமாகப் பேசினால், அதனையே சுவாரஷ்யமாகக் கேட்பதுடன் அதை மிகைப்படுத்தி, அடுத்தவர்களுக்கும் சுவைபடச் சொல்கிறார்கள். 

தவறு எனத் தெரிந்தும், அதன் மேல் நாட்டம் கொள்வது, மனச் சேதத்தை உண்டுபண்ணும். எங்கேயோ உள்ள நடிகர், நடிகைகளின் வாழ்க்கையைத் துருவித் துருவி ஆராய்ந்து கொள்பவர்கள், தங்கள் வாழ்க்கையின் பக்கங்களில் நல்ல பதிவுகளை ஏற்படுத்த முனைவார்களாக. 

எண்ணங்களைத் தூய்மைப்படுத்த, நெஞ்சத்தை நேரிய சிந்தனையினுள் உள்நுழைத்தலே சாலச் சிறந்தது. எந்த நேரத்திலும் குற்றவியல் செய்திகளையும் பழிக்குப் பழிவாங்கும் தொலைக்காட்சி நாடகங்கள், கேவலமான மேடைப் பேச்சுகள், அவர்களின் சவால்கள் போன்றவைகளை அறவே தவிர்ப்பது மேலானது. 

தேவையற்ற முறையில் கூடிப் பேசுவோர், கூட்டத்திலிருந்து விலகுக. உங்களுக்கு பிடிக்காதவர்களுடன் விவாதித்து, அதில் வெற்றி பெற வேண்டும் எனும் நினைப்பைத்  தவிர்க்கவும். அன்பைப் பகிர்வோருடன் இணைக.    

Link to comment
Share on other sites

  • Replies 11.3k
  • Created
  • Last Reply

உலகில் பல இடங்களில் தெரிந்த 'பிளட் மூன்' - கண் கவரும் புகைப்படங்கள்

21ஆம் நூற்றாண்டின் மிகவும் நீண்ட சந்திர கிரகணத்தின்போது தென்பட்ட ’பிளட் மூனை’ பல்வேறு நாடுகளில் உள்ள மக்கள் கண்டு களித்தனர்.

ஆபிரிக்கா, மத்திய கிழக்கு நாடுகள், ஐரோப்பியா, ரஷ்யா, இந்தியா மற்றும் ஆஸ்திரேலியாவில் ’பிளட் மூன்’ தென்பட்டிருக்கும்.

கிரீஸ்

 

கிரீஸ் நாட்டில் ஏதென்ஸ அருகே உள்ள பொசாய்டன் ஆலயத்திற்கு பின் தெரிந்த பிளட் மூன்.

கிரீஸ்

 

கிரீஸ்

ஸ்ட்ராஸ்பர்க், பிரான்ஸ்

 

 

ஸ்ட்ராஸ்பர்க், பிரான்ஸ்

ஸ்விட்சர்லாந்து

 

nஸ்விட்சர்லாந்து மலைப்பகுதிக்கு மேல் மிளிரும் நிலா

அபுதாபியில் உள்ள சயத் கிராண்ட மசூதி

 

அபுதாபியில் உள்ள சயத் கிராண்ட மசூதி

சிட்னி, ஆஸ்திரேலியா

 

சிட்னி, ஆஸ்திரேலியா

தாய்வான் நாட்டில் தாய்பெயில் நிலாவை பார்க்க தொலைநோக்கியை அமைக்கின்றனர்

 

தாய்வான் நாட்டில் தாய்பெயில் நிலாவை பார்க்க தொலைநோக்கியை அமைக்கின்றனர்

பிற செய்திகள்:

https://www.bbc.com

Link to comment
Share on other sites

வலைபாயுதே

 

twitter.com/thirumarant:

சென்ற `பிக் பாஸ்’ போட்டியாளர்கள் கமலுக்குக் கொடுத்த அளவுக்கு மரியாதையை, இந்த சீஸன் போட்டியாளர்கள் கொடுக்கலையோன்னு தோணுது!

facebook.com/DSGauthaman:

டாய்லெட்டை ரெஸ்ட் ரூம்னு சொல்றது ஸ்டார் ஹோட்டலைப் பொறுத்தவரை சரியாத்தான் இருக்கு... கழுத, அங்கயே படுத்துத் தூங்கலாம்போல!

facebook.com/Khadar.FT:

`காச  தண்ணி மாதிரி செலவுபண்ணாதே’ன்னு சொன்ன காலம் போயி, `தண்ணிய காசு மாதிரி செலவுபண்ணு’ன்னு சொல்ற காலத்துக்கு வந்துட்டோம்.

106p1_1532422171.jpg

twitter.com/indhiratweetz:

உன்னைப் பார்க்கக் கிளம்புவதற்கும், நீ பார்ப்பதற்காகக் கிளம்புவதற்குமான கால இடைவெளிகள் சுவாரஸ்யங்களின் மிதவைக் குவியல்கள்.

twitter.com/mymindvoice:

வீட்டுல பஞ்சாயத்து பெருசாகும்போது செருப்ப மாட்டிக்கிட்டு வெளியே கிளம்பிப்போயிட முடியற வரமெல்லாம் ஆண்களுக்கு மட்டுமேயான ஆசீர்வாதம்... #பொறாமைகள்

twitter.com/SaranyaaaRaj:

`நன்றிகெட்ட உலகம்’ என்று விமர்சிக்கும் தகுதி, வேற்றுக்கிரகவாசிகளுக்கு மட்டுமே இருக்கிறது!

twitter.com/EraManimaaran:

நிர்வாகத்தில் தமிழகம் இரண்டாவது இடமாம்... இப்ப மற்ற மாநிலங்கள் எந்த நிலைமையில் இருக்கும்னு நல்லா தெரியுது.

106p2_1532422198.jpg

facebook.com/sharewithsalman:

கட்டடம் இடிஞ்சது சென்னையில... கடலூர்க்காரன், பெங்களூர்க்காரன், உசிலம்பட்டிக்காரன் எல்லாம் safe mark பண்ணிவெச்சிருக்கான். ஏதாச்சும் புதுசா காட்டுனா அமுக்கிடுறது.

twitter.com/HAJAMYDEENNKS:

எல்லாரும் குழந்தை வளர்க்கலாம்... ஒருசிலர்தான் குழந்தையாக வளர்க்கிறார்கள்!

twitter.com/Kozhiyaar:

அவனவன் புதுப்புது டெக்னிக்ல நூறு கோடி... இருநூறு கோடினு ஏமாத்திட்டி ருக்கான். இங்க ஒருத்தன் வந்து `ஆடி மாசம் கூழ் ஊத்தப்போறேன்’னு பழைய டெக்னிக்ல காசு கேட்டுட்டிருக்கான்!

facebook.com/RedManoRed

மிஸ்டர் கடைக்காரா!

எதை வாங்கினாலும் சில்லறைக்குப் பதிலாக ஹால்ஸ் மிட்டாய் தருகிறாயே... ஹால்ஸ் வாங்கிவிட்டு சில்லறை கேட்டால் என்ன தருவாய்?

twitter.com/ShivaP_Offl:

உண்மை தெரிந்த பிறகு கேட்கப்படும் அத்தனை பொய்களும் சுவாரஸ்யமாக இருக்கும்!

106p3_1532422216.jpg

twitter.com/thoatta:

பாண்டிராஜ்: கார்த்தி, உங்களுக்கு
5 அத்தை, 2 முறைப்பொண்ணுங்க.
ஹரி: கார்த்தி, உங்களுக்கு 5 அத்தை
10 முறைப்பொண்ணுங்க.
சுந்தர் சி : கார்த்தி, முறைப்பொண்ணுங்கள விடுங்க, உங்களுக்கு மொத்தம்
5 அத்தைங்க!

twitter.com/kathir_twits:

கல்யாணத்துக்கு கோட் போட்டுப் போறதுக்கு முன்னாடி, அங்கே வரும் கேட்டரிங் சர்வீஸ் பசங்க எந்த கலர் கோட் போட்டு வர்றாங்கன்னு விசாரிச்சுட்டுப் போறது ரொம்ப நல்லது!

 twitter.com/Kozhiyaar:

இதழ் முத்தங்களைவிட அதிக காதலை உணரவைப்பவை தலைகோதல்கள்!

twitter.com/BlackLightOfl:

ஸ்மார்ட்போனைப் பார்த்து சந்தோஷப்படுற ஒரே தாய், ஸ்மார்ட்போனைக் கண்டு பிடித்தவரின் தாயாகத்தான் இருக்கும்!

twitter.com/thoatta:

தங்கமகன் (1983) – 125 Days
உழவன் மகன் (1987) – 150 Days
தேவர்மகன் (1992) – 175 Days
பிதாமகன் (2003) – 125 days
நான் ஏழைத் தாயின் மகன் (2014)
– Still running successfully ?

106p4_1532422231.jpg

facebook.com/ Vinayaga Murugan

நான் பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் போது ஜெண்டில்மேன் திரைப்படம் வந்தது. பள்ளிக்கூடத்தை கட் அடித்துவிட்டுப் படத்துக்குப் போனால், அதில் அர்ஜுனைப் பார்த்துத் திகைப்பாக இருந்தது. அர்ஜுன் பன்னிரண்டாம் வகுப்பு மாணவனாக நடித்திருந்தார். ஸ்கூல் யூனிபார்ம் அணிந்து அவர் நடந்து வந்த காட்சியைப் பார்த்து லேசாக நெஞ்சுவலியே வந்தது. இரண்டாவது அட்டாக் இப்போது பிக்பாஸ் நிகழ்ச்சியைப் பார்த்து. அர்ஜுனை விடுங்க... பொன்னம்பலம் எல்லாம் ஸ்கூல் யூனிபார்மில் வந்தால் எப்படி இருக்கும்? அதுவும் கையில் ஒரு பேப்பரை வைத்துக்கொண்டு ‘ஓதாமல் ஒருநாளும் இருக்க வேண்டாம்’ என்று பாடினால்? இதுக்கெல்லாம் ஒரு முடிவே இல்லையா?

twitter.com/i_akaran:

ஒரு ஆட்டோவில் எழுதியிருந்த அற்புத வரிகள்:
 `மரண வாயிலில் நின்றால்கூட எதிரி முன் அழாதே...
அவனுக்குத் தேவை உன் மரணம் அல்ல; உன் அழுகைதான்!’

twitter.com/kumarfaculty:

`வாயில நல்லா வருது, பேசாம போயிரு’ என்பது, கெட்ட வார்த்தையின் டீஸர்...!

106p5_1532422302.jpg

facebook.com/ gazaliththuvam

மோடி பிரதமரானதும் நாட்டை கலர்ஃபுல்லா ஆக்குவார்னு பார்த்தால் நோட்டை கலர்ஃபுல்லா ஆக்கிட்டு இருக்காரு.

facebook.com/ Vinayaga Murugan

இந்த உலகமே மிகப்பெரிய வாடகை வீடு தான். நாம் எல்லாருமே அதில் வாடகைபாக்கி வைத்துள்ளவர்கள்தான்.
(ஆன்மிகப் பரிதாபங்கள்)

twitter.com/kathir_twits:

ராங் காலில் காதல் திருமணம் செய்த கடைசித் தலைமுறை நாமே!

twitter.com/mujib989898:

சிலரின் அறிவுரைகள் எகத்தாளமிக்கவை.

https://www.vikatan.com

Link to comment
Share on other sites

அன்றே சொன்னார் கவாஸ்கர்

 
 
 
gavaskar

புதுடில்லி: பாகிஸ்தானின் பிரதமராக இம்ரான் கான பொறுப்பு ஏற்பார் என கவாஸ்கர் கணித்தது தற்போது நடந்துள்ளது.

கடந்த 2012ல் இந்தியா, வங்கதேச அணிகள் மோதிய ஆசிய கோப்பை கிரிக்கெட் நடந்தது. அப்போது இந்திய அணி பேட்டிங் செய்தது. 38 ஓவர்கள் வீசப்பட்ட நிலையில் வர்ணனை செய்து கொண்டிருந்த பாகிஸ்தானின் ரமிஸ் ராஜா, முன்னாள் கேப்டன் இம்ரான் கான் போல ‘மிமிக்ரி’ செய்து பேசினார். இதைக் கேட்ட இந்தியாவின் கவாஸ்கர், ‘கவனமாக பேசுங்கள் ரமிஸ், அப்படியெல்லாம் ஜோக் செய்யாதீர்கள். பாகிஸ்தானின் அடுத்த பிரதமராக இம்ரான் கான் வரலாம்,’ என்றார்.

தற்போது இவர் சொன்னது நடந்தது. பாகிஸ்தான் அணிக்கு கடந்த 1992ல் உலக கோப்பை வென்று தந்த ‘ஆல் ரவுண்டர்’ இம்ரான் கான், புதிய பிரதமராக வரவுள்ளார். கவாஸ்கர் பேசிய அந்த வீடியோ ‘கிளிப்’ இணையதளத்தில் அதிகமாக பரவி வருகிறது.

 

http://sports.dinamalar.com

Link to comment
Share on other sites

திரையுலகில் தனக்கென தனி அடையாளத்தை படைத்த நடிகர் தனுஷ்…!

 
 

hqdefault.jpg

தனுஷ், பிரபல கிராமக்கதைகளின் இயக்குனர் கஸ்தூரிராஜா மற்றும் ராஜேஸ்வரி தம்பதிக்கு ஜூலை மாதம் 28 ஆம் திகதி, 1984 ஆம் ஆண்டில் பிறந்தார். இயக்குனர் செல்வா ராகவனின் தம்பி, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மருமகன் எனப் பல சிறப்பம்சங்களை உடைய அவர், தனது சகோதரர் செல்வராகவன் மூலமாகத் திரையுலகில் காலடி எடுத்து வைத்தார். ரஜனிகாந்தின் மகளான ஐஸ்வர்யாவைத் திருமணம் செய்துகொண்ட இவர். யாத்ரா மற்றும் லிங்கம் என்ற இரு மகன்கள் இருக்கிறார்கள்.

a.jpg

0274022-300x284.jpg

இவர் தனது பள்ளிப்படிப்பை சென்னையில் உள்ள ஆழ்வார்த் திருநகரில் இருக்கும் செயின்ட் ஜோன்ஸ் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் தொடர்ந்தார். தனது 12ஆம் வகுப்பை வெற்றிகரமாக முடித்த அவரை, அவரது சகோதரரும், இயக்குனருமான செல்வராகவன் அவர்கள், திரையுலகில் நுழையுமாறு வற்புறுத்தியதால், அவர் தனது படிப்பை அத்துடன் நிறுத்திக் கொள்ள விரும்பினார்.404327_129303123854761_1873696530_n-1.jp

தனது அண்ணனின் விருப்பத்தை ஏற்ற அவர், 2002 ஆம் ஆண்டில் ‘துள்ளுவதோ இளமை’ என்ற திரைப்படம் மூலமாக இருவரும் தமிழ்த் திரையுலகில் கால்பதித்தனர். அவரது தந்தையான கஸ்தூரிராஜா அவர்கள் இயக்கிய அப்படத்தின் திரைக்கதையை செல்வராகவன் எழுதி, தனுஷ் கதாநாயகனாக நடித்தார். அவர்கள் மூவரின் கூட்டணியில் வெளியான அப்படம், அமோக வெற்றிப் பெற்றதால், அடுத்த ஆண்டே அவர்கள் இருவரும் மீண்டும் ‘காதல் கொண்டேன்’ என்ற படத்தில் கைகோர்த்தனர். இப்படத்தை செல்வராகவன் அவர்கள் எழுதி இயக்கினார். இப்படம் அபார வெற்றிப் பெற்றதோடு மட்டுமல்லாமல், சிறந்த நடிகருக்கான ஃபிலிம்ஃபேர் விருதுக்காகப் பரிந்துரையும் செய்யப்பட்டது.

jdwmV2hijfjsi-300x201.jpg  5-2-300x188.jpg

‘காதல் கொண்டேன்’ படம் மூலமாக சிறந்த நடிகரென்ற பாராட்டைப் பெற்றதோடு மட்டுமல்லாமல் அவரது அற்புத நடிப்பைக் கண்ட இயக்குனர் வாசு அவர்கள், அவரது அடுத்தப் படமான ‘திருடா திருடி’ திரைப்படத்தில் ஒப்பந்தம் செய்தார். இப்படத்தில் அவர் ஏற்று நடித்த கதாபாத்திரம் இளைஞர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றதால் அவர் தொடர்ந்து, ‘புதுக்கோட்டையிலிருந்து சரவணன்’ , ‘சுள்ளான்’, ‘ட்ரீம்ஸ்’, ‘தேவதையைக் கண்டேன்’, ‘அது ஒரு கனாக்காலம்’, ‘புதுப்பேட்டை’, ‘திருவிளையாடல் ஆரம்பம்’ என தொடர்ந்து வெற்றிப் படங்களை கொடுத்தார்.

Superb-Collections-Of-Sivakathikeyans-Se

தனது இளம் வயதில் திரையுலகில் நுழைந்த இவர், ‘மயக்கம் என்ன’, ‘3’, ‘எதிர் நீச்சல்’, ‘மரியான்’ போன்ற படங்களில் பாடலாசிரியராகவும், ‘3’, ‘எதிர் நீச்சல்’, போன்ற படங்களின் தயாரிப்பாளராகவும் உருவெடுத்தார். 2011 ஆம் ஆண்டில் அவர் நடித்த ‘ஆடுகளம்’ படத்தின் சிறந்த நடிகருக்காக ‘தேசிய விருது’, ‘தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருது’ மற்றும் ‘ஃபிலிம்ஃபேர் விருது’ வென்ற அவர், 2012ல் நடித்து வெளியான ‘3’ படத்தின் சிறந்த நடிகருக்கான ‘விஜய் விருதையும்’ வென்றுள்ளார். ‘3’ படத்தில் அவர் எழுதிப் பாடிய பாடலான ‘வய் திஸ் கொலவெறி ’ என்ற பாடல், யூட்யூப் இணையத்தளத்தில் வெளியாகி, சில மணி நேரங்களிலேயே அதிகளவில் பார்வையிடப்பட்டதால், ஓரிரு நாட்களிலேயே தேசிய அளவில் புகழ்பெற்றார்.

587552-dhanush-kajol-vip-2-1.jpg

குறுகிய காலத்தில் புகழின் உச்சிக்கே சென்ற நடிகர் தனுஷ் 2013 ஆம் ஆண்டு ஆனந்த் எல்.ரோய் அவர்கள் இயக்கிய பொலிவுட் திரைப்படமான ‘ரஞ்சனா’ என்ற படத்தில் நடிகை சோனம் கபூருடன் இணைந்து நடித்தார். வெளியான ஒரே வாரத்திலேயே 34 கோடி வசூல் சாதனைப் படைத்து, அமோக வெற்றிபெற்ற அப்படத்தை, ‘பொக்ஸ் ஆஃபிஸ் ஹிட்’ என்று அறிவித்தது. மேலும், அவரை ஹிந்தித் திரையுலகிலும் ஒரு அற்புத நடிகரென்ற முத்திரையைப் பதிக்கச் செய்தது.

Raanjhanaa-film-review-1-300x201.jpg Amitabh-Dhanush-Akshra-on-filmfare-Small

வுண்டர்பார் நிறுவனம் எப்படித் தொடங்கியது என்றால், செல்வா (செல்வராகவன்) அவருடைய அண்ணன் வாய்ப்புக்காக நிறைய நடிகர்களிடம் கதை சொல்லி, நிறைய தயாரிப்பு நிறுவனங்களின் படிகளில் ஏறி, இறங்கிக் கொண்டிருந்தார். ஆனால், அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. அப்போது ஒருநாள் தனுஷிடம் வருத்தப்பட்டு, ‘ஒருவேளை நாளைக்கு நாம் சினிமாவில் ஜெயித்துவிட்டோம் என்றால், நல்ல திறமைகளுக்கு வழியமைத்துக் கொடுக்க கண்டிப்பாக நாம் ஒரு தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்க வேண்டும்’ என்று சொன்னார். அதற்காகத் தொடங்கப்பட்டது வுண்டர்பார் ஃபிலிம்ஸ். நடிகர், பாடகர், பாடலாசிரியர் எனப் பன்முகம் கொண்ட அவர், ‘3’ மற்றும் ‘எதிர் நீச்சல்’ போன்ற படங்களைத் தயாரித்து, ஒரு சிறந்த தயாரிப்பாளர் என்றும் தன்னை நிரூபித்துள்ளார்.

maxresdefault-1-1024x576.jpg

இந்திய திரையுலகில் தனக்கென ஒரு அடையாளத்தை பதித்துக்கொண்ட தனுஷ் தமிழ் மற்றும் ஹிந்தி படங்களை தொடர்ந்து அவருக்கு ஹொலிவுட் படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது. கனடா நாட்டைச் சேர்ந்த இயக்குனர் கென் ஸ்கொட் இயக்கத்தில் “தி எக்ஸ்ட்ராஓர்டினரி ஜர்னி ஒப் பகிர் ”என்ற படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு பெல்ஜியம் நாட்டில் நடைபெற்று வருகிறது. பிரபல ப்ரெஞ்ச் நாவலான ‘The Extraordinary Journey Of The Fakir Who Got Trapped In An Ikea Cupboard’ திரைப்படமாக உருவாகி வருவது குறிப்பிடத்தக்கது.

The-Extraordinary-Journey-of-the-Fakir-U  

இன்று ஜூலை 28 நடிகர் தனுஷ் தனது பிறந்த நாளைக் கொண்டாடி வருகிறார். இதனை தனுஷ் ரசிகர்கள் விமரிசையாகக் கொண்டாடி வருகிறார்கள். மேலும், பல்வேறு திரையுலகினரும் தங்களுடைய சமூக வலைதளத்தில் பிறந்த நாள் வாழ்த்து தெ ரிவித்து வருகிறார்கள்.

Dhanusa-Aishwarya.jpg

http://metronews.lk

Link to comment
Share on other sites

`குடிசையோ, குப்பமேடோ; இது நம்ம ஊரு!’ - `வடசென்னை’ டீசரில் தெறிக்கவிடும் தனுஷ்

 

Link to comment
Share on other sites

‘காதல் குதூகலமானது’
 

image_587eb61848.jpgகாதலிப்பவன் கொடுத்து வைத்தவன் காதலிக்காதவன் விடுதலை பெற்றவன். எனினும், காதலின் போதைக்குள்ளும், சாதனைகள் புரிபவனே அதிபுத்திசாலியாக மாறுகின்றான். 

எதனையும் அனுபவித்துப்பார் என்று சொல்லுபவர்கள், பிரச்சினைகளுக்குள் பலரை வலிந்த இழுத்துத் தள்ளிவிடுவதும் உண்டு.

பல விடயங்களை நாங்களே முடிவுசெய்து, செய்ய வேண்டும். அடுத்தவனின் எண்ணப்படி செய்ய விழைவது, விழுந்து அல்லல்பட்டால் அவரை தூக்கி நிறுத்த, ஆலோசனை நல்கியவரே நழுவ விடுவதே அன்றாட காட்சியாகும். மென்மையான காதல் உணர்வு, ஒருவரை வசீகரப்படுத்தும்.

சிலர், அடுத்தவர்களது காதலை வரவேற்பவர்களாகவும் இருக்கின்றனர். காதலிக்கத் தெரியாதவனும் திருமணத்தின் பின்னர் மனைவியை முழுமையாக காதல் செய்வதை, தனது பூரணமான அன்பை முதுமையின் இறுதி இறப்பு வரை ஸ்திரமாகவே வைத்திருக்கிறான். காதல் குதூகலமானது.

Link to comment
Share on other sites

இளவரசர் சார்லஸ்- டயானா திருமணம் நடைபெற்ற நாள்: 29-7-1981

 

 

அ-அ+

இங்கிலாந்து ராணியின் மூத்த மகன் சார்லஸ். இவருக்கும் டயானவுக்கும் ஜுலை 29-ந்தேதி திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு வில்லியம், ஹாரி என்ற இரண்டு மகன்கள். டயானா சார்லஸ் உடன் விவாகரத்து பெற்று பின் விபத்து ஒன்றில் பலியானார்.

 
 
 
 
இளவரசர் சார்லஸ்- டயானா திருமணம் நடைபெற்ற நாள்: 29-7-1981
 
இங்கிலாந்து ராணியின் மூத்த மகன் சார்லஸ். இவருக்கும் டயானவுக்கும் ஜுலை 29-ந்தேதி திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு வில்லியம், ஹாரி என்ற இரண்டு மகன்கள். டயானா சார்லஸ் உடன் விவாகரத்து பெற்று பின் விபத்து ஒன்றில் பலியானார்.

இதே தேதியில் நடந்த முக்கிய நகழ்வுகள்:-

* 1967 - வெனிசுவேலா நாட்டின் 400-ம் ஆண்டு நிறைவு நாள் கொண்டாட்டங்களின் நான்காம் நாளில் அங்கு இடம்பெற்ற நிலநடுக்கத்தில் 500 பேர் பலியானார்கள்.

* 1987 - ஆங்கிலக் கால்வாயூடாக யூரோ சுரங்கம் அமைப்பதற்கான உடன்படிக்கையில் பிரிட்டன் பிரதமர் மார்கரட் தாட்சர், மற்றும் பிரான்ஸ் அதிபர் பிரான்சுவா மித்தரான் ஆகியோர் கையெழுத்திட்டனர்.

* 1987 - இலங்கை இனப்பிரச்சினைக்கான தீர்வாக இலங்கை - இந்திய ஒப்பந்தம் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்திக்கும் இலங்கை அதிபர் ஜே. ஆர். ஜெயவர்த்தனாவுக்கும் இடையில் கொழும்பில் கையெழுத்திடப்பட்டது.

* 1987 - இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி கொழும்பில் இடம்பெற்ற மரியாதை அணிவகுப்பின்போது இலங்கை ராணுவத்தினன் ஒருவனால் துப்பாக்கியால் தலையில் குத்தப்பட்டு காயம் அடைந்தார்.

* 1999 - இலங்கையின் தமிழ் அரசியல்வாதி நீலன் திருச்செல்வம் தற்கொலை தாக்குதலில் படுகொலை செய்யப்பட்டார்.

* 2005 - ஏரிஸ் (குறுங்கோள்) கண்டுபிடிக்கப்பட்டது.

https://www.maalaimalar.com

Link to comment
Share on other sites

 

எடை 375 கிராம் - உள்ளங்கை அளவே பிறந்த குழந்தை

அரை கிலோ கூட இல்லாமல் உள்ளங்கை அளவே பிறந்த குழந்தை. கர்ப்பத்தின் 25ஆம் வாரத்தில் பிறந்தபோது இந்தக் குழந்தையின் எடை 375 கிராம்.

Link to comment
Share on other sites

எந்த நாட்டில் எத்தனை புலிகள்? சர்வதேச புலிகள் தினம் ஏன்? #VikatanData

 

காட்டுக்கு அரசன் சிங்கம் என்றாலும், வனத்திற்குள் கம்பீரமாக தனி நடை போட்டு வாழ்ந்து வரும் ஓர் இனம் புலி. மணிக்கு 49 லிருந்து 65 கி.மீ வேகத்தில் பாய்ந்து செல்லும். சிங்கத்தைக் கூட தோற்கடிக்கும் ஆற்றல் படைத்தது புலி.

எந்த நாட்டில் எத்தனை புலிகள்? சர்வதேச புலிகள் தினம் ஏன்? #VikatanData
 

காட்டுக்கு அரசன் சிங்கம் என்றாலும், வனத்திற்குள் கம்பீரமாக தனி நடை போட்டு வாழ்ந்து வரும் ஓர் இனம் புலி. உணவுச் சங்கிலியில் முக்கிய இனமாகக் கருதப்படுகிறது. புலிகளைக் கூட்டம் கூட்டமாகக் காண்பது மிகவும் அரிது. புலிகள் ஒரு தனிமை விரும்பி. அதிலும் முக்கியமாக ஆண் புலி பெரும்பாலும் தனியாகத்தான்  வேட்டையாடும். புலிகள் மரம் ஏறும். நீச்சல் அடிக்கும். வேட்டை ஆடுவதில் புலிகளை மிஞ்ச முடியாது. இந்தியாவின் தேசிய விலங்கு புலி. தொன்றுதொட்டு சோழ அரசர்களின் அடையாளச் சின்னமாக விளங்கியது புலி. 

நம் முன்னோர்கள் புலிகளை நேரடியாகப் பார்த்திருப்பார்கள். தற்போதைய காலத்தில், காடுகளிலோ, புல்வெளிகளிலோ நேரடியாகப் புலிகளை பார்த்தவர்கள் மிகவும் அரிது. டி.வி. சேனல்களிலும், மிருகக் காட்சி சாலைகளிலும் நாம் புலியைப் பார்க்கிறோம். இனி வரும் சந்ததியினர் மிருகக் காட்சி சாலைகளிலாவது புலிகளைப் பார்க்க முடியுமா என்றால், கேள்விக் குறிதான்.

புலிகள்

 

 

உலகம் முழுவதும் 1900-களில் புலிகளின் எண்ணிக்கை  சுமார் 1 லட்சத்துக்கும் அதிகமாக இருந்ததாகக் கூறப்படுகிறது. புலிகள் தோலுக்காகவும், வியாபாரத்துக்காகவும் பல்வேறு காரணங்களுக்காகவும் வேட்டையாடப்பட்டது. எனவே 2000-களில் புலிகளின் எண்ணிக்கை 3000-4000 ஆக மாறிவிட்டது. தற்போதைய காலத்தில் எடுத்துக் கொண்டால் உலகிலேயே புலிகள் அதிகளவில் வசிக்கும் நாடுகளில் இந்தியா தான் முதலிடத்தில் உள்ளது. உலகம் முழுவதும் உள்ள புலிகளில் 60% புலிகள் இந்தியாவில் உள்ளன. 2014-ம் ஆண்டைக் காட்டிலும் 2016ல் அதன்  எண்ணிக்கை 30 சதவீதமாக அதிகரித்துள்ளது. தற்போது 2016-ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி உலகம் முழுவதும் 3,890 புலிகள் உள்ளன. 

 

 

இந்தியாவில் மட்டும் 2,226 புலிகள் உள்ளன. இந்தியாவுக்கு அடுத்து அதிகளவு புலிகள் உள்ள நாடு ரஷ்யா (433). இவை தவிர இந்தோனேஷியாவில் 371, மலேசியாவில் 250, நேபாளத்தில் 198, தாய்லாந்தில் 189, பங்களாதேஷில் 106, பூடானில் 103, சீனாவில் 7, வியட்நாமில் 5, லாவோஸ் நாட்டில் வெறும் 2 என்ற விதத்தில் புலிகள் எண்ணிக்கை இருந்து வருகிறது.

 

loader.gif
 

 

இந்தியாவில் மூன்றில் ஒரு பகுதி புலிகள் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியான தமிழகம், கேரளம், கர்நாடக மாநிலங்களில் வசிக்கின்றன. தமிழகத்தில் மட்டும் 229 புலிகள் உள்ளன. 2006ம் ஆண்டுக் கணக்கின்படி வெறும் 76 புலிகள்தான் தமிழகத்தில் இருந்தன. இதுவே 2010ம் ஆண்டு 163 ஆக அதிகரித்தது. தற்போது 229 ஆக உள்ளது.  

இந்தியாவில் புலிகளின் பாதுகாப்புக்காக 49 புலிகள் காப்பகங்கள் உள்ளன. அதில் ஆந்திர மாநிலத்தில் உள்ள நாகர்ஜுனாசாகர்- ஸ்ரீசைலம் புலிகள் காப்பகம்தான் மிகப் பெரியது. சுமார் 3 ஆயிரம் சதுர கிலோமீட்டர் பரப்பளவுக்கு மேல், இந்தக் காப்பகம் அமைந்துள்ளது. அதேபோல் மேற்குத் தொடர்ச்சி மலைகளில், கேஎம்டிஆர் என அழைக்கப்படும் களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம் தான் தமிழகத்தின் முதல் புலிகள் சரணாலயம்.  இந்தச் சரணாலயம் 1988-ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. சுமார் 895 சதுரகிலோ மீட்டர் பரப்பளவில் அமைந்திருக்கும் இந்தச் சரணாலயத்தில் மட்டும் 14 நதிகள் சிறியதும் பெரியதுமாக ஓடுகின்றன. நதிகளின் சரணாலயம் என்றும் இது அழைக்கப்படுகிறது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள முதுமலை, கடந்த 2009-ம் ஆண்டு புலிகள் காப்பகமாக அறிவிக்கப்பட்டது.

 

 

20 லிருந்து 26 வருடங்கள் வாழும் புலிகள், சுமார் 70 லிருந்து 120 செ.மீ வரை உயரம் கொண்டவை. இவற்றின் எடை ஆண் புலிகளுக்கு 90 லிருந்து 310 கிலோவும், பெண் புலிகளுக்கு 65 லிருந்து 170 கிலோவும் இருக்கும். 16 வாரங்களில் கர்ப்பகாலம் முடிந்து 2 லிருந்து 6 குட்டிகள் வரைப் போடும்.  மணிக்கு 49 லிருந்து 65 கி.மீ வேகத்தில் பாய்ந்து செல்லும். 10 மீட்டர் வரை உயரம் தாண்டும்.  சிங்கங்களைப் போன்று கூட்டமாக வேட்டையாடாமல் தனியாகவே வேட்டையாடும். ஒரே நேரத்தில் பதினெட்டு கிலோ எடை இறைச்சியை உண்ணும். அதிக நாட்கள் பசி தாங்கும். சிங்கத்தைக் கூட தோற்கடிக்கும் ஆற்றல் படைத்தது புலி. மனிதனை விட 6 மடங்கு கூர்மையான ஆற்றல் கொண்ட புலிக்கு 30 மைல் சுற்றளவை தனது எல்லையாக எடுத்துக்கொண்டு வாழும். அவற்றின் எல்லைக்குள் வேறொரு புலி வந்தால் அண்ணன் தம்பி வரப்பு பிரச்னை போன்று வெடித்து விடும்.

loader.gif
 

 

உலகம் முழுவதும் சுமத்ரான், சைபீரியன், மலேசியன், காஸ்பியன், ஜவான், பாலினீஸ், பெங்கால், இந்தோசீனா, தென்சீன புலிகள் என்று 9 வகையான புலிகள் இருந்தன. அதில் ஜவான், காஸ்பியன், தென்சீன புலி வகை முற்றிலும் ஒழிக்கப்பட்டு விட்டது. சுமத்ரான் வகை புலிகள் அழியும் நிலையில் இருக்கின்றன. உலகிலேயே இந்திய - வங்கதேச எல்லையில் உள்ள சுந்தரவனக்காடுளில்தான், புலிகள் அதிகளவில் வாழ்கின்றன. இவ்வகை புலிகள் "ராயல் பெங்காலி புலிகள்" என அழைக்கப்படுகின்றன. உலகம் முழுவதும் இதுவரை 93% புலிகள் அழிந்துவிட்டன. 

புலி

காலம் செல்ல செல்ல, புலிகள் அழிந்து கொண்டே வருவதால், புலிகள் இனத்தைப் பாதுகாப்பதற்காகவே, பாதுகாப்பதின் அவசியத்தை வலியுறுத்தி 2010-ம் ஆண்டில் இருந்து ஒவ்வொர் ஆண்டும் ஜூலை 29-ம் தேதியை சர்வதேச புலிகள் தினமாக கொண்டாட வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது. இருந்தும் உலகம் முழுவதும் தற்போது 3,890 புலிகளை மட்டுமே விட்டு வைத்திருக்கிறோம்.

இந்தியாவில் மட்டும் கடந்த 2016ம் ஆண்டில் ஜனவரி முதல் ஜூன் மாத காலகட்டத்தில் 74 புலிகள் இறந்துள்ளன. இந்தப் பட்டியலில் தமிழகத்திலும் 5 புலிகள் இறந்துள்ளன. அதேபோல், 2017ம் ஆண்டில் இந்தியாவில் 115 புலிகள் இறந்துள்ளன. மத்திய பிரதேசத்தில் 28 புலிகளும், மகாராஷ்டிராவில் 21 புலிகளும், அசாமில் 16 புலிகளும் இறந்துள்ளன. இந்த 3 மாநிலங்களில் தான் அதிகளவில் புலிகள் இறக்கின்றன. இந்தியாவில் 49 காப்பகங்கள் இருந்தும் புலிகள் அழிந்து போவதை பெரும்பாலும் தடுக்கவே முடியவில்லை. 

இந்தியாவில் அழிந்துவரும் புலியை பாதுகாப்பதற்காக மத்திய அரசு 1970ம் ஆண்டு புலிகளை வேட்டையாடுவதைத் தடை செய்தது. வேட்டையாடுபவர்களுக்கு அபராதத்துடன் கடுமையான சிறைத்தண்டனையும் வழங்கி வருகிறது. மேலும், 1973-ம் ஆண்டு புலிகள் பாதுகாப்புத் திட்டமும்  மேற்கொள்ளப்பட்டது. 

 

புலி

உலகளவில் "Animal Planet" சேனல் நடத்திய வாக்கெடுப்பில் உலகின் மிகப் பிடித்தமான விலங்காகப் புலி வெற்றி பெற்றது. வெளித்தோற்றத்திற்கு மட்டும் மிரட்டும் விதமாகவும், அச்சுறுத்தும் ஆற்றலுடையதாகவும் தோன்றினாலும் பழகுவதற்கு அமைதியாகவும் கூரிய சிந்தனை மற்றும் முடிவெடுக்கும் திறனும் கொண்டதாகப் புலிகள் இருப்பதால் அதுவும் நம்மைப் போன்றதே என்று உலகளாவிய வனவிலங்குக் கூட்டிணையப் பாதுகாப்பு அமைப்பின் சர்வதேச விலங்கினங்களின் அதிகாரியான கால்லம் ரேங்கின் கூறுகிறார்.

மனிதர்கள் ஒவ்வொருவரையும் அவர்கள் கைவிரல் ரேகை வித்தியாசப்படுத்திக் காட்டுவது போல், புலிகளின் கால் விரல் ரேகைகள் ஒவ்வொரு புலிக்கும் இடையேயும் பல்வேறு வித்தியாசத்தைக் காட்டும். மனிதர்களின் சுகாதாரமான வாழ்க்கைக்குச் சுத்தமான காற்றும் நீரும் அவசியம். அவை இரண்டையும் தருவது காடுகளே. அந்த காடுகளைக் காக்க உதவும் புலிகளை நாம் பாதுகாக்க வேண்டும். புலிகளைப் பாதுகாக்க அரசு மட்டும் இல்லாமல் அவர்களுடன் நாமும் இணைந்து விழிப்புஉணர்வை உண்டாக்கினால் புலிகளின் அழிவை மட்டுமின்றி, நம்மை நாமே பாதுகாத்துக் கொள்ள முடியும்.

 

https://www.vikatan.com

புலி

Link to comment
Share on other sites

விராட் கோலியுடன் விஜய் மல்லையா போஸ்?! - ரசிகர்களைக் குழப்பிய போட்டோ

 

இந்திய கிரிக்கெட் அணியின் அதிகாரபூர்வ இன்ஸ்டகிராம் பக்கத்தில் விராட் கோலி, விஜய் மல்லையாவுடன் இருப்பது போன்ற புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

விராட் கோலி

Photo Credit: Instagram/@indiancricketteam

 

 

இந்திய அணி, டி-20, ஒருநாள், டெஸ்ட் ஆகிய போட்டிகளில் பங்கேற்பதற்காக இங்கிலாந்து ன்றுள்ளது. டி-20, ஒருநாள் போட்டிகள் முடிவு பெற்றுள்ள நிலையில், ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் டெஸ்ட் போட்டிகள் தொடங்கவுள்ளது. அதற்கு முன்னதாக, இங்கிலாந்து எஸெக்ஸ் அணியுடன் மூன்று நாள் பயிற்சிப் போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டி டிராவில் முடிவடைந்தது. 

 

 

இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் அதிகாரபூர்வ இன்ஸ்டகிராம் பக்கத்தில், கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி, ரசிகர்களுடன் நிற்பது போன்ற புகைப்படம் ஒன்று பதிவேற்றப்பட்டது. அந்தப் படத்தில் விஜய் மல்லையா போன்ற தோற்றம் கொண்ட ஒருவரின் தோள் மீது விராட் கோலி கை வைத்து நிற்கிறார். இந்திய வங்கிகளில் 9,000 கோடிக்கும் மேல் கடன் பெற்றுவிட்டு இங்கிலாந்தில் தஞ்சமடைந்துள்ள விஜய் மல்லையாவுடன் கேப்டன் விராட் கோலி போஸ் கொடுப்பதா என நெட்டிசன்கள் ஒரு சிலர் பொங்கி எழுந்துவிட்டனர். இந்தப் புகைப்படம் சமூகவலைதளங்களில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. நெட்டிசன்கள் பலர் விராட் கோலிக்கு ஆதரவாகவும் சிலர் எதிராகவும் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். இந்த ‘புகைப்படத்தில் இருப்பவர் விஜய் மல்லையா அல்ல, அவரது சாயலில் இருப்பவர் மட்டுமே என்று ஒரு சில ரசிகர்களும் கருத்துத் தெரிவித்து வருகிறார். இந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

இந்திய அணியின் இன்ஸ்டாகிராம் பதிவு

https://www.vikatan.com

Link to comment
Share on other sites

இணையத்தை கலக்கும் தோனியின் புது ஹேர்ஸ்டைல் - யாருடைய ஐடியா இது?

 
 

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியின் புது ஹேர்ஸ்டைல் அவரது ரசிகர்களால் இணையத்தில் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது.

இணையத்தை கலக்கும் தோனி

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி. டி20 போட்டிகளில் அதிக கேட்சுகளை பிடித்த வீரர், அதிரடி ஆட்டத்துக்கு சொந்தக்காரர், அணியை வழிநடத்தி செல்வதில் வல்லவர், சாதனைகளின் நாயகன் என பல்வேறு புகழுக்கு சொந்தக்காரர். சமீபத்தில் இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி டி20 தொடரை கைப்பற்றியது. அதே போல ஒருநாள் தொடரை வென்று இங்கிலாந்து வெற்றிவாகை சூடியது. இரு அணிகளுக்கிடையேயான டெஸ்ட் தொடர் போட்டிகள் ஆகஸ்ட் 1-ம் தேதி தொடங்க உள்ளது. டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்ற தோனி, இங்கிலாந்திலிருந்து புறப்பட்டு இந்தியா திரும்பினார். இந்நிலையில் நாடு திரும்பியதும் ஹெர்ஸ்டைலை மாற்றியுள்ளார் தோனி.

 

 

ஹெர்ஸ்டைல்

அவருடைய இந்த புதிய ஹெர்ஸ்டைல் முதலில் இன்ஸ்டாகிராமில் பரவத்தொடங்கியது. இதைத்தொடர்ந்து ட்விட்டர், ஃபேஸ்புக், வாட்ஸ் அப் என அனைத்து சமூக வலைதளங்களிலும், வைரலாக பரவி வருகிறது. தோனியின் இந்த மாற்றத்தை ரசிகர்கள் வரவேற்றுள்ளனர். சமீபத்தில் வெள்ளை தாடியுடன் `சால்ட் அன் பெப்பர்' லூக்கில் வலம் வந்த தோனி தற்போது, வி ஷேப் ஹெர்ஸ்டைலுக்கு மாறியிருப்பது, ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. தோனிக்கு  இந்திய அணியின் ஆல்ரவுண்டர் ஹர்டிக் பாண்டியா தான் இந்த புது ஹெர்ஸ்டைலை பரிந்துரைத்துள்ளார். இது தொடர்பான புகைப்படத்தையும் ஹர்திக் பாண்ட்யா தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

https://www.vikatan.com

Link to comment
Share on other sites

சின்னச்சின்ன வரலாறு! –  : பிரெட் வின்னர்

brjpg

சிலதினங்களுக்கு முன் பேப்பரில் வந்த செய்திதான், இந்தக் கட்டுரையை எழுதவைத்திருக்கிறது. 14,500 வருடங்களுக்கு முன்னர் செய்யப்பட்ட ரொட்டித் துண்டுகள், அதாவது பிரெட் துண்டுகள், ஜோர்டான் நாட்டில் ஒரு கல் நெருப்பிடத்தில் இரண்டு நாட்களுக்கு முன்னர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.இவ்வளவு பழமை வாய்ந்த ஒரு உணவுப்பொருள் அன்றிலிருந்து இன்றுவரை தன் மவுசு குறையாமல் இருப்பதென்றால், இதன் வரலாறு என்னவாக இருக்கும்?

எகிப்தியன் அருங்காட்சியகம் ஒன்றில் 2543 முதல் 2435 பி.சியின் அரசர் லிட்ஜெரின் கல்லறையில் கண்டெடுக்கப்பட்ட ஒரு கல் சித்திரத்தில் , அரசர் ஒரு டேபிளில் அமர்ந்து எதிரே உள்ள ப்ரெட் துண்டுகளைச் சாப்பிடுவதுபோல் அமைக்கப்பட்டுள்ளது.

 

வரலாற்றில் இந்த ரொட்டித்துண்டுகள் நாடோடிகள் ஒரு சமூகமாக செயல்படத்தொடங்குவதற்குக் காரணியாக இருந்திருக்கின்றன.ஆசியாவின் மேற்க்குப்பகுதியிலிருந்து தொடங்கப்பட்டு வடக்கு மற்றும் மேற்கு திசைகளுக்கு ஊடுருவி, ஆப்ரிக்கா மற்றும் ஐரோப்பிய கண்டங்களுக்குள் சென்று சமூக வளர்ச்சிக்கு இவை துணையிருந்தன. இதேபோல் கிழக்கு ஆசியா அரிசியிலும், அமெரிக்கா சோளம் மூலமாகச் சமூக நிலைகளைக்காணத்தொடங்கின.

நியோலிதிக் காலத்தில் , அதாவது 14600 முதல் 11600 வருடங்களுக்கு முன்பிருந்தே ரொட்டித்துண்டுகளை சாப்பிடும் பழக்கம் இருந்திருக்கிறது. இது எதைச்சொல்கிறது? நாம் நாடோடிகளாகக் கருதிய சமுதாயம் விவசாயத்தில் ஈடுபட்டிருக்கிறது. ஆக, அந்தக் காலகட்டத்திலேயே நாம் சமூகமாக வாழத்தொடங்கிவிட்டோம் .

எகிப்திய நாட்டுக் கல்லறைகளில் , இறந்தவருக்குக்காணிக்கையாகக் கூம்பு வடிவிலான ரொட்டித்துண்டுகள் வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.முதல் முதலாக , ப்ரெட்டை ஓவனில் வைத்து எடுக்கும் பழக்கமும் கிரேக்க நாட்டில் தான் ஆரம்பமாயிற்று.

தற்போது நாம் பல தானியங்களால் செய்யப்பட்ட ரொட்டித்துண்டுகளை விரும்பத் தொடங்கி இருக்கிறோம். ஆனால் வரலாறு படி , மிக அதிக வருங்களுக்கு வெள்ளை நிற ரொட்டித்துண்டுகள் பிரபுக்களின் உணவாகவும், கருப்பு நிற பல தானிய துண்டுகள் ஏழைகளின் உணவாகவும் பார்க்கப்பட்டு வந்தது. இருபதாம் நூற்றாண்டின் முடிவில் தான் நாம் தற்போது பார்க்கும் இந்த மாறுதல் ஏற்படத்தொடங்கியது.பலதானிய ரொட்டிகளின் முன்மாதிரிகள் நிறைய இருந்திருக்கின்றன.

கிரேக்கர்கள் பார்லியில் செய்யத்தொடங்கி பின் கோதுமைக்கு மாறினார்கள்.

பிரிட்டனில் ரொட்டி வகைகள் ஆசியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டன. பிரிட்டன் ஒரு வகையில் இந்த ரொட்டி இறக்குமதியை அதன் ஆட்சியின் கீழே இருந்த காலனிகளை அதன் கட்டுப்பாட்டிற்குள் வைத்துக் கொள்வதற்கும் உபயோகப்படுத்திக்கொண்டது .

ஒரு விதத்தில் பார்த்தால், ப்ரெட் அதாவது ரொட்டி நாம் அன்றாடும் உபயோகிக்கும் பல உவமானங்களில் தனி இடம் பெற்றிருக்கிறது. வீட்டில் சம்பாதிப்பவரை ப்ரெட் வின்னர் என்றும், பைபிளில் இயேசுவிடம் அன்றாட பிரெட்டைத் தருவதற்கான பிரார்த்தனையும், நம்மை ஏமாற்றுபவரை, என் வாயிலிருந்த ரொட்டியைப் பிடுங்கிவிட்டான் என்று கூறுவதும்... ஆக நம் அன்றாட உணவுத் தேவையை ரொட்டி மூலமாக நம்மால் கூற முடிகிறது. மற்றும் ஒரு சுவாரஸ்யமான செய்தி.

நாம் நம் தோழரை கம்பேனியன் என்றும் கூறுவோம் ஆங்கிலத்தில். இந்த வார்த்தையின் மூலம், காம் என்றால் லித்தியன் மொழியில் கூட அதேபோல் பானிஸ் என்றால் பிரெட். ஆக நம் உடன் நம் ஆகாரமான பிரெட் உணவைப் பகிர்ந்து உண்பவர் கம்பேனியன்.

அன்றாட உணவாக வீடுகளில் செய்யப்பட்ட இந்த பிரெட், வர்த்தக முறையில் தொடங்கப்பட்டது, வடக்கு இத்தாலி நாட்டில்தான். பதினைந்தாம் நூற்றாண்டில் முதல் ரொட்டிக்கடை "டாக்யூனம் சைண்டாடிஸ்" இங்கே தொடங்கப்பட்டது. முழுவதும் இயந்திர மயமாக்கப்பட்ட வணிக உற்பத்தி 1961ல் தொடங்கப்பட்டது. இதை சார்லிவூட் பிரெட் ப்ராசஸ் என்று பெயரிடப்பட்டு, மிகவும் குறைந்த விலையில் மிகவும் குறைந்த நேரத்தில் பிரட் செய்யும் முறை கண்டுபிடிக்கப்பட்டது.

அமெரிக்காவில் 1777ல் முதல் கோதுமை உற்பத்தி ஒரு பொழுதுபோக்காகத்தான் ஆரம்பிக்கப்பட்டது. ஆனால் அங்கே இருந்த ஏர்ல் ஆஃப் சாண்ட்விச் என்பவர் இரண்டு ரொட்டித்துண்டுகளுக்குள் மாமிசத்தை வைத்து அதற்கு தன் பெயரான சாண்ட்விச்சை சூட்டினார். இன்று வரை நாம் அவரைத்தான் கடித்து குதறிக்கொண்டிருக்கிறோம். 

அவ்வளவு நாடுகளும் இந்த ரொட்டியை தங்கள் பிரதான உணவாகக் கொண்டாடுவதற்கு காரணம் ஒன்று நிச்சயமாக இருக்கவேண்டும் அல்லவா. அந்தக்காரணம் , பிரெட்டில் கார்போஹைட்ரேட், மக்னீசியம், இரும்புச்சத்து ,செலினியம், விட்டமின் பி, ஃபைபர் என்று அனைத்தும் உள்ளது.

உணவாக மட்டுமின்றி பல நாட்டுப் பாரம்பர்யத்திலும் இந்த ரொட்டிக்குத் தனி இடமுண்டு. கிறித்துவர்கள் நற்கருணை கூட்டத்தில் வைன் மற்றும் ரொட்டித்துண்டை பயன்படுத்துவார்கள். யூதர்கள் சபத் அன்று சாலாக் என்ற ரொட்டி வகையை உபயோகப்படுத்துவார்கள். இவை விடுமுறைகளின் போது இஸ்ரேலியர்களின் பன்னிரெண்டு பழங்குடியினரை நினைவில் கொள்ளும் விதமாக பண்ணிரெண்டு பின்னல்களிட்ட ரொட்டி வகையை உபயோகிப்பார்கள். சில நேரங்களில், இவற்றின் மேலே ஒரு ஏணியும் வைக்கப்படும். இது இறைவனடியைச் சென்று அடையும் பாதையாக கொள்வார்கள்

நாம் தற்போது மிக அதிகம் விரும்பி உண்ணும் க்ரொய்சோண்ட் வகை ரொட்டிக்கான வரலாறு மிக அற்புதம். வியன்னா நாட்டை துருக்கியர்கள் 1683ல் முற்றுகை இட வந்தபோது, ஒரு ரொட்டி தயாரிப்பவர் தான் எச்சரிக்கை கொடுத்து வியன்னாவைக் காப்பாற்றினாராம். துருக்கியர்களை வென்ற வியன்னா நாட்டவர், துருக்கி நாட்டின் சின்னமான க்ரெசண்டை சித்தரிக்க முதல் முதலாக க்ரொய்சோண்ட் செய்யத்தொடங்கினார்களாம்.

எகிப்து நாட்டில் பல வருடங்களுக்கு முன் ப்ரெட் என்று ஒரு நாணயமும் இருந்தது.

மற்றும் ஒரு விசித்திரக்குறிப்பு. அந்தக்கால பேக்கர்களின் பேக்கர்ஸ் டசன் என்பது, பன்னிரண்டு பிரெட் துண்டுகளைக்குறிக்காதாம். அந்தக்கணக்கில் டஃஜன் என்பது பதிமூன்றாம்.என்னவோ நாம் வாங்கும் போது கொசுறாக ஒரு கை போடும் நம் நாட்டுப் பழக்கம் போலத்தான்!!!

நம் இந்திய வரலாற்றுக்கு வருவோம். மிக நிறையக் கதைகள் இதன் வரலாறை ஒட்டிச்சொல்லப்படுகிறது. பெர்ஷியாவிலிருந்து கெட்டி மைதா ரொட்டியாக அறிமுகமானதாக, மற்றும் அன்றைய ஆவாத் மாநிலத்தின் கோதுமை ரொட்டியாக வந்ததாக, கிழக்கு ஆப்பிரிக்க நாடுகள் தங்கள் பயணிகள் மூலம் நம் நாட்டிற்கு அறிமுகப்படுத்தியதாக....இப்படி நிறையக் கதைகள். இதில் சுவாரஸ்யம்... குருநானக், மணிகரன் என்ற இடத்திற்குச் சென்றபோது அவர் சீடர் மார்தனா சாப்பாடில்லாமல் வாடுவது கண்டு ஒரு பெரிய கல்லைத் தூக்கிப் பார்க்கச்சொல்ல, அதன் அடியில் கொதிக்கும் நீரூற்றைப் பார்த்தார்களாம். அதில் சப்பாத்தியை நனைக்கப்போன மார்தனா, கை தவறுதலாக அதை உள்ளே போட, அது நன்றாகப் பொரிந்து மேலே வர, அட நமது பூரி அப்போதுதான் பிறந்ததாம்.

கதைகள் உண்மையாக இல்லாதிருந்தாலும், சுவாரஸ்யமானவையே.

ஆக, சப்பாத்தி பிரெட்டின் இந்திய வடிவம். கதைகளை விடுத்து, 1857 சுதந்திரப்போராட்டத்தின் போது சிப்பாய் கலகத்தில் இந்த ரொட்டி மிக முக்கிய பங்கு வகுத்தது. சப்பாத்தி மூவ்மெண்ட் என்று கூறப்படும் இந்தக் கலகம் பிரிட்டிஷ் ராஜ்ஜியத்தை நன்றாக அசைத்துப்பார்த்தது. இண்டோரில் காலரா நோய் பரவ ஆரம்பிக்க, சப்பாத்தி நாட்கள் மற்றும் கடுமையான வானிலையைத்தாங்கக்கூடிய உணவானதால், பசியோடு இருந்த போராட்ட வீரர்களுக்குச் சப்பாத்தி வளையம் மூலம் செய்திகள் அனுப்பப்பட்டன. மெளலாவி அஹமதுல்லா இந்தச் சப்பாத்தி வளையத்தின் திறனை நன்கு அறிந்து கொண்டார். ரன்னர்ஸ் என்று சொல்லப்படும் நபர்களால் ரொட்டிகள் வீடுகளுக்கு அனுப்பப்படும். அதைப்பெற்றுக்கொண்ட வீடுகள் அதே ரன்னர் மூலம் வேறு சில ரொட்டிகளை கொடுக்க, ரன்னர்ஸ் அதை ஒரு தொடராக எடுத்துச்செல்வர். நடுவில் பிடிபட்டாலும் ஆங்கிலேயர்களால் இந்த ரொட்டிகளிலிருந்து எதுவும் கண்டுபிடிக்க முடியாது. இப்படி ரொட்டியைச் சுமந்து செல்பவர்கள் அதற்கான காரணம் பற்றி அறியமாட்டார்கள். ஆக ரொட்டி ஒரு தேசிய ஒருமைப்பாட்டின் சின்னமாக மாற்றப்பட்டது.

தற்போது இந்தியாவில் மிக அதிகமாக டயாபடிக் நோய் காணப்படுகிறது. ஒரு குழுவைச் சேர்ந்த சிலர், கோதுமை உணவால் இது நிகழ்வதாகவும், அதனால் நம் உணவுப் பழக்கத்திலிருந்து கோதுமையைத் தள்ளி வைக்க வேண்டும் என்றும் கூறுகிறார்கள்.

ஆக, ரொட்டியின் வருங்காலம் எப்படி இருக்கும்....உள்ளேயா வெளியேயா...? காலம்தான் சொல்ல வேண்டும். காலமே சொல்லும்!

https://tamil.thehindu.com

Link to comment
Share on other sites

 

கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற காத்திருக்கும் உலகின் மிகப் பெரிய ரோஜாப்பூ பிரமிட்

Link to comment
Share on other sites

வரலாற்றில் இன்று : ஜூலை 30
 
 

image_700c296f8f.jpg1905 : சிறப்புச் சார்புக் கோட்பாட்டை அறிமுகப்படுத்தும் ஐன்ஸ்டீனின் இயங்கும் பொருட்களின் மின்னியக்கவியல் ஆய்வுக் கட்டுரை வெளிவந்தது.

1910 : இலங்கையில் ஐந்து சத, செப்பு நாணயம் பயன்பாட்டில் இருந்து விலக்கப்பட்டது.

1908 : புவியில் மாபெரும் உந்த நிகழ்வு சைபீரியாவில் இடம்பெற்றது. எனினும் எவரும் உயிரிழக்கவில்லை.

1912 : கனடாவில் ரெஜினா என்ற இடத்தில் சூறாவளி தாக்கியதில் 28 பேர் கொல்லப்பட்டனர்.

1919 : நாவற்குழியூர் நடராசன், இலங்கைத் தமிழறிஞர், கவிஞர், வானொலி ஒலிபரப்பாளர் பிறந்த தினமாகும்.

1922 : டொமினிக்கன் குடியரசில் அமெரிக்க ஆக்கிரமிப்பை முடிவுக்குக் கொண்டு வர, இரு நாடுகளுக்கும் இடையில் வாசிங்டன் டி. சி.யில் ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.

1934 : ஹிட்லரின் அரசியல் எதிரிகளுக்கு எதிரான வன்முறை நீள் கத்திகளுடைய இரவு ஜேர்மனியில் நிகழ்ந்தது.

1937: உலகின் முதலாவது அவசரத் தொலைபேசி எண் (999) இலண்டனில் அறிமுகப்படுத்தப்பட்டது.

1941 : இரண்டாம் உலகப் போர் - நாட்சி ஜேர்மனியினர் உக்ரைனின் லுவோவ் நகரைக் கைப்பற்றினர்.

1944 : இரண்டாம் உலகப் போர் - முக்கிய துறைமுகம் அமெரிக்கப் படைகளிடம் வீழ்ந்ததை அடுத்து, செர்போர்க் சண்டை முடிவடைந்தது.

1956 : அமெரிக்காவின் இரண்டு விமானங்கள் அரிசோனாவில் மாபெரும் செங்குத்துப் பள்ளத்தாக்குப் பகுதியில், நடுவானில் மோதிக் கொண்டதில் அவற்றில் பயணம் செய்த 128 பேரும் உயிரிழந்தனர்.

1959 : அமெரிக்க வான்படை விமானம் ஒன்று ஜப்பானில் ஓக்கினாவாவில் பாடசாலை ஒன்றின் மீது வீழ்ந்ததில், 11 மாணவர்கள் உட்பட 17 பேர் உயிரிழந்தனர்.

1960 : கொங்கோ பெல்ஜியத்திடம் இருந்து விடுதலை பெற்றது.

1969 : சனத் ஜயசூரிய, இலங்கைத் துடுப்பாளர் பிறந்த தினமாகும்.

1971 : சோவியத்தின் சோயுஸ் 11, விண்கலத்தில் ஏற்பட்ட காற்றுக் கசிவினால் விண்வெளி வீரர்கள் மூவர் கொல்லப்பட்டனர்.

1972 : ஒருங்கிணைக்கப்பட்ட சர்வதேச நேரத்தில் ஒரு லீப் நொடி அதிகரிக்கப்பட்டது.

1977 : தென்கிழக்கு ஆசிய ஒப்பந்த அமைப்பு கலைக்கப்பட்டது.

1985 : பெய்ரூட்டில் 17 நாட்களாகக் கடத்தப்பட்டிருந்த, 39 அமெரிக்க விமானப் பயணிகள் விடுவிக்கப்பட்டனர்.

1990 : கிழக்கு மற்றும் மேற்கு ஜேர்மனிகள் தமது பொருளாதாரத்தை ஒருங்கிணைத்தன.

1997 : முதலாவது ஹரி பொட்டர் நூல் வெளியிடப்பட்டது.

1997 : ஆங்காங் நாட்டின் அதிகாரம் ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து சீனாவுக்குக் கைமாறியது.

2002 : பிரேசில் தனது ஐந்தாவது உதைப்பந்தாட்ட உலகக்கிண்ணத்தை வென்றது.

2013 : எகிப்தில் அரசுத்தலைவர் முகம்மது முர்சிக்கும், ஆளும் விடுதலை மற்றும் நீதிக் கட்சிக்கும் எதிரான போராட்டம் ஆரம்பமானது.

2015 : இந்தோனேசியாவின் மேடான் பகுதியில் இராணுவ வானூர்தி ஒன்று வீழ்ந்ததில், 116 பேர் உயிரிழந்தனர்.

http://www.tamilmirror.lk

Link to comment
Share on other sites

கால்பந்து போட்டியில் முதல் உலககோப்பையை வென்ற உருகுவே (30-7-1930)

 
அ-அ+

பீபாவின் முதல் உலகக்கோப்பை கால்பந்து போட்டி உருகுவேயில் நடந்தது. இதில் அமெரிக்கா, பிரான்ஸ், அர்ஜென்டினா, உருகுவே உள்ளிட்ட தென்அமெரிக்கா ( 7 நாடுகள்), ஐரோப்பியா (4 நாடுகள்), வடஅமெரிக்கா (2 நாடுகள்) 13 அணிகள் கலந்து கொண்டன. அரை இறுதிக்கு அர்ஜென்டினா, உருகுவே, அமெரிக்கா, யுகோஸ்லாவியா ஆகிய நாடுகள் தகுதிப் பெற்றது. இறுதி போட்டியில் உருகுவே- அர்ஜென்டினா மோதின. இதில் உருகுவே 4-2 என்ற கோல்கணக்கில்

 
 
 
 
கால்பந்து போட்டியில் முதல் உலககோப்பையை வென்ற உருகுவே (30-7-1930)
 
பீபாவின் முதல் உலகக்கோப்பை கால்பந்து போட்டி உருகுவேயில் நடந்தது. இதில் அமெரிக்கா, பிரான்ஸ், அர்ஜென்டினா, உருகுவே உள்ளிட்ட தென்அமெரிக்கா ( 7 நாடுகள்), ஐரோப்பியா (4 நாடுகள்), வடஅமெரிக்கா (2 நாடுகள்)  13 அணிகள் கலந்து கொண்டன.

அரை இறுதிக்கு அர்ஜென்டினா, உருகுவே, அமெரிக்கா, யுகோஸ்லாவியா ஆகிய நாடுகள் தகுதிப் பெற்றது. இறுதி போட்டியில் உருகுவே- அர்ஜென்டினா மோதின. இதில் உருகுவே 4-2 என்ற கோல்கணக்கில் வெற்றி பெற்று முதல் உலககோப்பையை வென்ற நாடு என்ற பெருமை பெற்றது.

இந்த போட்டியை 93 ஆயிரம் ரசிகர்கள் நேரில் கண்டு ரசித்தனர். இந்த தொடரில் மொத்தம் 70 கோல்கள் அடிக்கப்பட்டன. அர்ஜென்டினாவைச் சேர்ந்த கில்லர்மோ ஸ்டேபிள் 8 கோல் அடித்தார்.

https://www.maalaimalar.com

Link to comment
Share on other sites

அமெரிக்காவைப் பயமுறுத்தும் மனிதப் பல் பக்கூ மீன்கள்!

 

அதன் பற்கள் மனிதப் பற்களைப் போலவே இருக்கும். அதைப்போன்ற மீன்வகையை யாரேனும் பிடித்தால் நீர்நிலைகளில் திருப்பிவிடாமல் எங்களிடம் ஒப்படைக்கவும். அது ஒரு ஆக்கிரமிப்பு உயிரினம். அது அமெரிக்காவைச் சேர்ந்தது அல்ல.

அமெரிக்காவைப் பயமுறுத்தும் மனிதப் பல் பக்கூ மீன்கள்!
 

அவள் பெயர் கென்னடி ஸ்மித். வயது 11. தனது தாத்தா பாட்டியோடு கோப் ஏரிக்குச் சென்றிருந்தாள். அங்குதான் அவள் வார இறுதி நாட்களை அவர்களோடு ஆனந்தமாகக் கழிப்பாள். அன்றும் அவள் அப்படியொரு நாளாக நினைத்தே அங்கு சென்றாள். சென்று வழக்கம்போல் தனது தாத்தா தயார்செய்து கொடுத்த தூண்டிலை எடுத்துக்கொண்டு ஏரிக்கரைக்குச் சென்று அமர்ந்து தூண்டிலை வீசினாள்.நீண்டநேரம்...

ஒரு மீன்கூட சிக்கவில்லை. உதவி வேண்டுமாவென்று கேட்ட தாத்தாவிடம்கூட பதில் சொல்லாமல் அமைதியாகவே அமர்ந்திருந்தாள். சரி இன்னும் சிறிதுநேரம் பொறுத்துப் பார்ப்போமென்று நினைத்தாலோ என்னவோ! அதற்குப் பலனும் கிடைத்துவிட்டது. தூண்டிலில் ஏதோ மாட்டிவிட்டது. நல்ல கனமான மீனாகத்தான் மாட்டியிருக்கிறது. தூண்டிலை இறுக்கமாகப் பிடித்துக்கொண்டாள். விட்டுவிடக் கூடாதல்லவா!

தூண்டிலை வெளியே இழுத்தாள். கொஞ்சம் சிரமப்பட்டுத்தான். ஒரு அடிக்குக் குறையாத நீளமும், அரை அடி அகலமுமிருந்த அந்த மீனை இழுக்கப் பதினொரு வயதுப் பிள்ளைக்குச் சிறிது சிரமமாகத்தானே இருக்கும். இருந்தாலும் எடுத்துவிட்டாள். ஆனால், அந்த மீனில் ஒரு வித்தியாசத்தைக் கவனித்த கென்னடி உடனடியாக அதைத் தன் தாத்தாவிடம் கொண்டு சென்றாள்.

 

 

பக்கூ

அந்த மீனை வாங்கிப் பார்த்த கென்னடியின் தாத்தா ஓக்லஹோமா கேம் வார்டன்ஸ் (Oklahoma game wardens) அழைத்து விவரத்தைச் சொன்னார். அதிகாரிகள் விரைந்தனர். கென்னடியை அவள் தன் சுய முயற்சியால் பிடித்த அந்த மீனோடு அவளை ஒளிப்படம் எடுத்தார்கள். அதைப் பிடித்ததற்காக அவளைப் பாராட்டிவிட்டு மீனை வாங்கிக்கொண்டு விடைபெற்றுவிட்டார்கள். தான் ஆசையாகப் பிடித்த மீனை இழந்துவிட்ட வருத்தம்தான் கென்னடிக்கு. அவர்கள் போன சில மணிநேரங்களிலேயே அந்த அமைப்பின் அதிகாரபூர்வ ஃபேஸ்புக் கணக்கில் ஒரு பதிவும் அதிலிருந்த சிறு பெண்ணும் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. அந்தச் சிறுமிதான் கென்னடி ஸ்மித். அவளுக்குச் சந்தோஷம் தாங்கவில்லை. அந்தச் சந்தோஷம் அடங்குவதற்குள் உலகம் முழுவதுமான செய்திகளிலும், சமூக ஊடகங்களிலும் அதிசயமான மீனோடு நிற்கும் கென்னடியின் அந்தப் புகைப்படம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. அன்று அந்த மீனைப் பிடிக்கும்போதோ, அதை வைத்துக்கொண்டு ஒளிப்படத்திற்குப் போஸ் கொடுக்கும்போதோ அவள் நிச்சயம் நினைத்திருக்கவே மாட்டாள். கென்னடியை அப்படிப் பிரபலமாக்கியது எந்த மீன்?

 

 

ஓக்லஹோமா கேம் வார்டன்ஸ் சமூக வலைதளத்தில் வெளியிடப்பட்ட அந்தப் பதிவின் சுருக்கம்,

மனிதப் பற்களைப் போன்ற அமைப்பு

"ஜூலை 22-ம் தேதியில் காலை 9 மணியளவில் எங்களுக்குத் தகவல் வந்தது. கென்னடி ஸ்மித் என்ற சிறுமி பக்கூ (Pacu) என்ற ஒருவகை மீனைப் பிடித்துள்ளார். அதன் பற்கள் மனிதப் பற்களைப் போலவே இருக்கும். அதைப்போன்ற மீன்வகையை யாரேனும் பிடித்தால் நீர்நிலைகளில் திருப்பிவிடாமல் எங்களிடம் ஒப்படைக்கவும். அது ஒரு ஆக்கிரமிப்பு உயிரினம். அது அமெரிக்காவைச் சேர்ந்தது அல்ல." இந்தப் பக்கூ என்ற வகை மீன் அமெரிக்காவிற்குள் எப்படி நுழைந்தது? ஆக்கிரமிப்பு உயிரினமாக மாறியது?

பொதுவாக அமெரிக்காவில் வளர்ப்புப் பிராணிகள் மீதான ஈர்ப்பு அதிகம். அவர்கள் பல்வேறு வகையான உயிரினங்களைத் தங்கள் வளர்ப்பு உயிரினமாக வளர்க்கும் பழக்கம் கொண்டவர்கள். மீன்களிலும் அப்படித்தான். பிரானா என்ற வேட்டையாடி மீன் வகையின் குடும்பத்தைச் சேர்ந்தது பக்கூ. ஆனால், பிரானாவைப் போலவே வேட்டையாடியில்லை. தாவரங்களையும், பழங்கள், கடலை வகைகளையுமே அதிகமாகச் சாப்பிடும் பழக்கம் கொண்டவை. அழுகிய தாவரங்கள், முற்றிப்போய் மரத்திலிருந்து விழும் பழங்கள், கடலைகளை நன்றாகக் கொரித்துத் தின்பதற்காகவே அவை மனிதர்களைப் போன்ற பல் அமைப்பப் பெற்றுள்ளன. பொதுவாக பக்கூ மீன்களைப் பற்றிய ஒரு வதந்தி உண்டு. அமேசான் காடுகளுக்குள் மரங்களிலிருந்து நீர்நிலைகளில் விழும் பழங்களைச் சாப்பிட்டுப் பழகியதால், ஆண்கள் யாரேனும் நீந்திச் செல்லும்போது அவர்களின் விதைப் பைகளைப் பழங்கள், கடலைப் பொருட்களென்று எண்ணிக் கடித்துவிடும் என்பதே அந்த வதந்தி. ஆனால், அது உண்மையில்லை. இந்த விஷயம் அந்த மீன்களைப் பற்றிப் பரப்பப்பட்ட வதந்தியே என்கின்றனர் சில ஆராய்ச்சியாளர்கள். உண்மையில் இதுவரை யாரும் பக்கூ மீன்களால் அந்த மாதிரியான பாதிப்புகளை அனுபவித்ததாகப் பதிவாகவில்லை.

 

 

 

அமேசான் காடுகளில் வாழும் பக்கூ மீன்களைப் பிடித்து அமெரிக்க மக்களுக்கு விற்பனை செய்கிறார்கள். அவற்றை வாங்கி வளர்ப்பவர்கள் அதைப் பற்றி முழுமையாகத் தெரிந்துகொள்வதில்லை. விற்பவர்களும் எதையும் சொல்வதில்லை. சராசரியாக முழு வளர்ச்சியடைந்த ஒரு பக்கூ மீனின் அளவு குறைந்தபட்சம் 1.2 மீட்டரும் 40 கிலோ எடையும் கொண்டிருக்கும். இந்த அளவிற்கு அவை வளரும்போது அவற்றை வீட்டிலிருக்கும் சாதாரண வளர்ப்புத் தொட்டிகளுக்குள் வைத்துப் பராமரிக்கமுடியாது. அதனால், வளர்ப்பவர்கள் பக்கூ மீன்களை ஆற்றிலோ ஏரியிலோ விட்டுவிடுகிறார்கள். பொதுவாக அனைத்துண்ணிகளாக (Omnivores) இருப்பதால் அங்கு வாழப்பழகிக்கொண்டு அங்கிருக்கும் மற்ற பக்கூ மீன்களோடு இனப்பெருக்கம் செய்து தங்களுக்கான வாழிடத்தை உருவாக்கிக் கொள்கின்றன. அவற்றின் விரைவான அபரிமிதமான வளர்ச்சி அதே பகுதியிலிருக்கும் மற்ற மீன்களின் வாழ்வைக் கேள்விக்குறியாக்கி விடுகிறது. அதனால்தான், பக்கூ மீன்களை யாரேனும் கண்டால் அதைப் பிடித்துத் தனியாகப் பராமரித்துவிட்டு அந்த அமைப்புக்குத் தெரிவித்தால் அவர்கள் வந்து கொண்டுசென்று பாதுகாத்து அதை மீண்டும் அமேசான நதியிலேயே விட்டுவிடுவார்கள்.

அமெரிக்கா

எந்தவொரு உயிரினமும் இருக்கவேண்டிய இடத்திலிருக்காமல் வேற்று நிலத்தை ஆக்கிரமிக்கத் தொடங்கினால் இறுதியில் அந்நிலப்பகுதியைச் சேர்ந்த உயிரினங்களின் வாழ்வாதாரம் கேள்விக்குள்ளாக்கி விடுமென்பதைச் சந்தேகமின்றி நிரூபித்துள்ளது இந்த மனிதப் பற்களைக் கொன்ட பக்கூ.

https://www.vikatan.com

Link to comment
Share on other sites

பேசும் படம்:

 

 
1jpg

மெல்போர்னில் திறக்கப்பட்டுள்ள இனிப்பு அருங்காட்சியகம் ஒன்றில் லாலிபாப் போன்ற பந்துகளின் நடுவில் செல்ஃபி எடுக்கும் பெண்.

கடந்த வாரம் உள்ளூர் முதல் உலகம்வரை பெண்கள் சார்ந்து பல சம்பவங்கள் நடந்துள்ளன. துயரமும் மகிழ்ச்சியும் பெருமிதமும் நிறைந்த உணர்வுகளின்  கலவையான ஒளிப்படத் தொகுப்பு இது:

2jpg

பாரிஸில் 115 அடி உயரத்தில், பாதுகாப்பு உபகரணங்களின் உதவியின்றி, அந்தரத்தில் நடந்து ததியானா-மோஸியோ போங்கோங்கா (Tatiana-Mosio Bongonga ) பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தினார்.

 
3jpg

பீகாரில் கிராமக் காவலர்களாக இருக்கும் ‘கிராம ரக்ஷா தல்’ ஊழியர்கள், காவல் துறையினருக்கு இணையான சலுகைகள் தங்களுக்கும் வேண்டும் என அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

4jpg

மும்பையில் பைகுல்லா மகளிர் சிறையில் வழங்கப்பட்ட உணவால் அங்கிருந்த கைதிகளுக்கு ஒவ்வாமை ஏற்பட்டது. இதற்காக மருத்துவமனைக்குச் அழைத்துச் செல்லப்பட்டவர்களில் ஒரு கைதியின் நான்கு மாதக்  குழந்தையும் அடக்கம்.

https://tamil.thehindu.com/

Link to comment
Share on other sites

கிறிஸ்டோபர் நோலன்... நேர விளையாட்டுக்களின் மாய வித்தகன்...! #HBDChristopherNolan

 

மனித மனம் மிகவும் சிக்கலானது. இருத்தலியல் பிரச்னைகள், குழப்பமான அகநிலை எனப் பல பிரச்னைகள் இவரின் நாயகர்களுக்கு எப்போதும் இருக்கும். இது உண்மைதான், ஆனால் இதை மட்டும் வைத்து படம் எடுத்தால், அது சலிப்பை ஏற்படுத்தும். ஆனால் இதுதான் இலக்கு. இதை நோக்கிச் செல்ல நோலன் தேர்ந்தெடுத்த சிக்கலான பாதைதான் திரைக்கதை விளையாட்டு.

கிறிஸ்டோபர் நோலன்... நேர விளையாட்டுக்களின் மாய வித்தகன்...! #HBDChristopherNolan
 

நீங்கள் சென்று சேர வேண்டிய இடத்திற்கு இரண்டு பாதைகள் இருக்கின்றன. ஒன்று நேர் வழி. வழியில் ரசிக்க, பயணத்தில் சுவாரஸ்யம் கூட்ட என எதுவும் கிடையாது. மற்றொரு வழி, ஆறு போல வளைந்து நெளிந்து, பார்த்து ரசிக்கப் பல விஷயங்களை தன்னுள் புதைத்து நீள்கிறது. அதில் தோன்றும் காட்சிகளும் நம்ப முடியாதவை. ஒருமுறை பார்த்தால் புரியாதவை. நீங்கள் எந்தப் பாதையை தேர்ந்தெடுப்பீர்கள்? உங்களை விடுங்கள். இந்த கிறிஸ்டோஃபர் நோலன் என்ன செய்வார் தெரியுமா? 

இவரைப் பற்றி தெரியாதவர்கள்கூட, "அட அந்தாளு, சுத்தி சுத்தி போற ரூட்லதான் போவாரு!" என்பார்கள். ஆம், அவர் படங்களின் திரையோட்டமும் இத்தகையதுதான். சுற்றி அடித்துக் குழப்பும் பாதைதான் இவரின் தேர்வு... ஆனால், அதோடு இதன் சுவாரஸ்யம் முடிந்து விடுவதில்லை. அந்த நீண்ட நேரம் எடுக்கும் பாதையைக்கூட, நேராக ஓடும் பாதையை கடக்கத் தேவைப்படும் நேரத்தில் கடந்துவிட முடியுமா? அப்படி வேகமாகச் செல்லும்போது நின்று ரசித்தால் மட்டுமே புரியக்கூடிய விஷயங்களைப் புரிந்து கொள்ள முடியுமா? முடிய வேண்டும்... இதுதான் அவர் சினிமா ரசிகர்களிடம் எதிர்பார்ப்பது. ஒரு சினிமா ரசிகனாக அவர் கூறிய இந்த விஷயம் மிகப் பிரபலம்.

Christopher Nolan

 

 

"ஒரு படம் பிடிப்பதும் பிடிக்காமல் போவதும் அவரவர் அகநிலை மற்றும் உள் உணர்வு சார்ந்த விஷயம். ஆனால், ஒவ்வொரு முறையும் நான் ஒரு படத்திற்கு செல்லும்போது, 'படத்தை எடுத்தவர்கள் அர்ப்பணிப்போடுதான் இதை எடுத்திருக்கிறார்கள்; இது ஒரு சிறந்த படம் என்பதை அவர்கள் உறுதியாக நம்பியிருக்கிறார்கள்; அதன் பிறகே அதை மக்களுக்காக வெளியிட்டு இருக்கிறார்கள்' என்பதை நான் உணர வேண்டும். அதை நான் ஏற்றுக் கொள்ளாமலும் போகலாம், ஆனால், அந்த நம்பிக்கை, அந்த அர்ப்பணிப்பு அவசியம். அதை நான் ஒரு படத்தில் உணரவில்லை என்றால் திரையரங்கில் நான் அதற்காக செலவான நேரத்தை வீணடித்ததாகவே உணர்வேன்!"

 

 

இந்த விஷயத்தைத்தான் ஓர் இயக்குநராக தன் எல்லாப் படங்களிலும் கொடுக்க முயல்கிறார். அதனால்தான் அவர் யாரும் பயணிக்காத அந்தப் பாதையை தயக்கமின்றி தேர்ந்தெடுக்கிறார். குறிப்பாக, நேரத்தை வைத்து அவர் செய்யும் மாயங்கள் அதி அற்புதமானவை. இந்த நேரத்தை எப்படியெல்லாம் தன் படங்களில் வித்தியாசமாகப் பிரதிபலிக்கலாம் என்பதே அவரின் சிந்தனையோ என எண்ணத் தோன்றும். இந்த நேர விளையாட்டுதான் அவரின் படங்களை அதிக சுவாரஸ்யமாக்குபவை. 

Christopher Nolan - Following

உதாரணமாக அவரின் முதல் முழு நீளத் திரைப்படம் என்றால் அது 'ஃபாலோயிங்'. இது பலருக்கும் தெரியாத ஒன்று. (இதை வைத்துத்தான் தமிழில் 'வாமணன்' என்ற படத்தை எடுத்தார்கள் என்பது வேறு விஷயம்). இந்தப் படத்தை லீனியர் முறையில் தெளிவாக எடுத்தால் ஒரு கிளாசிக் நோயர் (Noir) படம். ஆனால், நோலன் அதைச் செய்யவில்லை. படத்தின் மொத்த கதையையும், 4 இடங்களில் இருந்து தனித்தனியே அணுகுகிறார். அதையும் கிட்டத்தட்ட 15 முறை கிராஸ்கட் செய்து தலைசுற்ற வைக்கிறார். ஆனால், உற்று நோக்கினால் எது எப்போது நடந்தது என்பதை நம்மால் புரிந்து கொள்ள முடியும். தாடி, மீசை மாற்றங்கள், உருவத் தோற்றம் என அதற்கான க்ளூக்களை ஆங்காங்கே சிதற விட்டிருப்பார்.

 

 

இதுவரை அவர் எடுத்த படங்களின் மாஸ்டர்பீஸ் என்று பெரும்பாலானவர்கள் கருதுவது 'மெமன்டோ'. கிட்டத்தட்ட நம்மூர் 'கஜினி' படத்திற்கு இதுதான் இன்ஸ்பிரேஷன். படத்தின் திரைக்கதை சற்றே குழப்பம் வாய்ந்தது. ஒரு முழு நீளக் கதை. அதை இரண்டு டைம்லைனில் சொல்கிறார். தலைச்சுற்றல் அதோடு நிற்கவில்லை. படத்தின் முதல் காட்சி, கதைப்படி இறுதி காட்சி. அதில் ஆரம்பித்து படம் பின்னோக்கி நகர்கிறது. இன்னொரு டைம்லைன், கறுப்பு வெள்ளையில் கதையின் முதல் காட்சியில் ஆரம்பித்து முன்நோக்கி நகர்கிறது. இரண்டும் ஓர் இடத்தில் சந்திக்கின்றன. அதுதான் கதையின் மையப் பகுதி. அங்கேதான் படமும் முடிந்து போகிறது. படத்தை ஒரு காட்சி விடாமல் கவனித்திருந்தால் மட்டுமே நோலன் சொல்ல வருவதைப் புரிந்து கொள்ள முடியும். ஒரு சில இடங்களில் படத்தில் புதிய நினைவுகளை ஏற்படுத்திக் கொள்ள முடியாமல் தவிக்கும் நாயகனின் நிலைமையில்தான் நாமும் இருப்போம். இந்தக் குழப்பியடிக்கும் யுக்திக்கு உடந்தை அவரின் சகோதரரான ஜொனதன் நோலன். அவருடன் சேர்ந்து சில படங்களில் திரைக்கதை எழுதியவர். இவரின் சிறுகதைதான் 'மெமன்டோ' என்ற படமானது.

Christopher Nolan Memento

உங்களுக்கு ஒரு டைரி கிடைக்கிறது. அதை எழுதியவர், நீங்கள் வைத்திருந்த நோட்புக் ஒன்றைக் குறித்து பேசுகிறார். அந்த நோட்புக் படித்தபோது அவருக்கு ஏற்பட்ட அனுபவங்களை தன் டைரியில் குறிப்பிட்டுள்ளார். அதில் நீங்கள் மூழ்கத் தொடங்க, திடீரென ஒரு வரி, உங்கள் பெயரை குறிப்பிட்டு, நீங்கள் என் டைரியை படிக்கிறீர்கள் என்பது எனக்குத் தெரியும் என்று வருகிறது. அப்போது என்ன செய்வீர்கள்? அந்த டைரியை தூக்கி போட்டு விட்டு ஓடிவிட மாட்டீர்கள்? அந்த எண்ண ஓட்டத்தைத்தான் 'தி ப்ரெஸ்டீஜ்' படம் பார்த்த அனைவருக்கும் கடத்தியிருப்பார் நோலன். ஒரு பெரிய மேஜிக் நிபுணர். அவரின் திறமை வாய்ந்த இரண்டு சிஷ்யர்களுக்கு 'யார் பெரியவர்?' என்ற சண்டை. நம்பர் ஒன் இடத்தைப் பிடிக்க அவர்கள் எந்த எல்லைக்கும் தயார். ஒரு நாவலை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட இந்தப் படத்தின் ப்ரீமியர் ஷோவை பார்த்துவிட்டு, நாவலின் எழுத்தாளர் சொன்ன விஷயம், "நான் நாவலை எழுதும் போது எனக்கு ஏன் இதெல்லாம் தோன்றவில்லை" என்பதுதான்!

நோலன் படங்களில் பலராலும் வரவேற்கப்பட்ட படம் என்றால் அது 'இன்செப்ஷன்'. கனவுகள் குறித்து பி.ஹெச்.டி., பட்டம் பெருமளவிற்கு விஷயங்களை அதில் சேர்த்திருப்பார். கனவுக்குள் கனவு, அதனால் ஓடிக் கொண்டிருக்கும் நேரத்தில் சிக்கல், ஒரு திருட்டு, மனமாற்றம் என சுவாரஸ்யம் சேர்த்திருப்பார். கூடுதலாக இதில் மேஸ் விளையாட்டுகள், முரண்பாடு போலத் தோற்றமளிக்கும் மெய்யுரை என இறங்கி அடித்திருப்பார். இந்தப் படம் நடக்கும் களம் நமக்கு மிகவும் புதியது. இருந்தும் அது குறித்து நமக்கு எதுவும் அறிமுகப் பாடம் எடுக்காமல் அப்படியே கதை சொல்ல ஆரம்பித்து விடுவார். இங்கேயும் நேரக் கோட்பாடுகள் கொண்டு வந்து அதன் மூலம் பதற்றம் மற்றும் பரபரப்பை கூட்டியிருப்பார்.

Christopher Nolan Inception

அதற்கடுத்து அவர் நேரத்தை வைத்து விளையாடிய படம் 'இன்டர்ஸ்டெல்லர்'. கனவுகள் மூலம் நம்மைச் சீண்டியவர், இந்த முறை விண்வெளியில் குதித்திருந்தார். இதிலும் திரைக்கதை மிகுந்த பாராட்டுதலுக்குரியது. நம் உலகைக் காக்க, நம் பால்வெளி தாண்டிய பயணம் ஒன்றைச் செய்கிறது ஒரு குழு. கோள்களின் இடையே உள்ள கால நேர வித்தியாசங்களை வைத்து இந்தச் சாகசப் பயணத்திற்கு சுவாரஸ்யம் சேர்த்திருப்பார். இதனிடையே அப்பா-மகள் பாசம், அறிவியல் பாடங்கள் என நம்மை நெகிழச் செய்திருப்பார். இந்தப் படத்தின் அறிவியல் தெளிவிற்காக புகழ்பெற்ற விஞ்ஞானி கிப் தோர்ன் அவர்களின் உதவியுடன் படத்தை எடுத்திருப்பார். பலர் இந்தப் படத்தில் பேசப்பட்ட அறிவியல் நம்பகத்தன்மை உடையது எனப் பாராட்டியுள்ளனர். அடுத்தாக இவரின் சமீபத்திய படம் 'டன்கிர்க்'. ஒரு பயணச் சீட்டின் பின் எழுதிவிடும் அளவிற்குத்தான் இதன் கதை இருக்கும். ஆனால், அதையும் மூன்று கோணங்களில் அணுகி, மூன்று டைம்லைன்கள் வைத்து அனைத்தையும் ஒரே கோட்டில் இணைத்து முடித்திருப்பார்.

இந்த நேர விளையாட்டுகள் பெரிதாக இல்லாமல் அவர் எடுத்த படங்களும் சிறப்பானவை தான். 'பேட்மேன்' சூப்பர்ஹீரோவை வைத்து ட்ரைலாஜியாக இவர் எடுத்த படங்கள், தொய்வடைந்த சூப்பர்ஹீரோ ஜானரை தூக்கி நிறுத்தியது. பல வருடங்கள் கழித்து பேட்மேன் கதாபாத்திரம் ப்ளாக்பஸ்டர் வெற்றியைப் பெற்றது. இதற்கு மிக முக்கியக் காரணம், பேட்மேனையும் குறைகள் கொண்ட ஒரு சாமானியனாக காட்டியதுதான். அவனுக்கும் ஆசைகள் உண்டு, காதல் உண்டு, தோல்விகள் உண்டு என்று இயல்பாகக் கதையை கடத்தியவர். முக்கியமாக, இதன் இரண்டாம் பாகத்தில் ஜோக்கர் எனும் வில்லன் மூலம் பல தத்துவார்த்தங்களை எடுத்துரைத்திருப்பார். அதுவரை சூப்பர்ஹீரோ படம் என்றால் தெறித்து ஓடிய பலரை "பேட்மேன் என்னோட ஃபேவரைட் சூப்பர்ஹீரோ" என்று சொல்ல வைத்தார்.

Christopher Nolan - The Dark Knight

"நான் மகிழ்ச்சியாய் இருக்க, என்னிடமே நான் பொய்களைச் சொல்லி கொள்ள வேண்டுமா?"

"நாம் கண்களை மூடிக் கொள்வதால் உலகம் இருட்டி விடுமா என்ன?"

"அவர்கள் முட்டாள்களாக்கப்பட வேண்டும் என்பதையே விரும்புகிறார்கள்!"

"சில நேரங்களில் மக்கள் அதிகம் எதிர்பார்க்கிறார்கள். அவர்களின் நம்பிக்கைகள் அனைத்தும் நிஜமாக வேண்டும் என்று பேராசை படுகிறார்கள்." 

இது நோலன் படங்களில் வரும் சில வசனங்கள். மனித மனம் மிகவும் சிக்கலானது. இருத்தலியல் பிரச்னைகள், குழப்பமான அகநிலை எனப் பல பிரச்னைகள் இவரின் நாயகர்களுக்கு எப்போதும் இருக்கும். இது உண்மைதான், ஆனால் இதை மட்டும் வைத்து படம் எடுத்தால், அது சலிப்பை ஏற்படுத்தும். ஆனால் இதுதான் இலக்கு. இதை நோக்கிச் செல்ல நோலன் தேர்ந்தெடுத்த சிக்கலான பாதைதான் திரைக்கதை விளையாட்டு. பாட்டி வடை சுட்டக் கதைதான் என்றாலும், அதை காகத்தின் பார்வையிலிருந்து ஒரு காட்சி, பாட்டியின் பார்வையில் இருந்து ஒரு காட்சி, நரியின் பார்வையில் இருந்து ஒரு காட்சி, உச்சமாக, வடையின் பார்வையில் இருந்தே ஒரு காட்சி என வைத்தால், அந்தப் பழைய கதையே சுவாரஸ்யமாகி விடுகிறது அல்லவா? அதுதான் நோலன் மேஜிக்!

இன்று இந்தச் சமகால ஜீனியஸிற்கு பிறந்தநாள். 49வது வயதில் அடியெடுத்து வைக்கிறார். இன்றைய நிலையில் மனிதரின் அடுத்தப் பட அறிவிப்பிற்காக உலகமே காத்து கொண்டிருக்கிறது. இந்த முறை எந்த ஜானர், என்ன விளையாட்டு விளையாடப் போகிறார் என்பதைத் தெரிந்து கொள்ள இவரின் ரசிகர்களும் ஆவலுடன் இருக்கின்றனர். சீக்கிரம் நல்ல செய்தி சொல்லுங்க நோலன்!

https://cinema.vikatan.com

Link to comment
Share on other sites

‘மனவலிமையே மேலானது’
 

image_f5c2e505de.jpgவலிமை என்பது உடல்வலிமை என எண்ணலாகாது.சித்தத்தைச் சுத்தமாக வைத்திருப்பதால், உருவாகும் மனவலிமையே மேலானது. தேகசுகம் தேவையானதுதான். இன்று மட்டுமல்ல, எமக்கு முன்னர் வாழ்ந்தவர்களின் வலிமைமிகு எண்ணங்களின் வழிகாட்டல்களில்தான், இன்று இந்தப் பூமி, நிலைபெற்று வாழ்ந்துவருவது கண்கூடு. 

மனிதர்கள் கண்டபடி வாழ்ந்தால், இந்தப்பூமி வாழ்ந்துவிடுமா? ஒழுக்கம் பற்றிய கல்வியும் வாழ்க்கை முறையும் மிகவும் பழைமையானவை என்பதை அறிவீர்களாக. 

மனதைப் பக்குவப்படுத்தல் மூலம், வலிமை எளிதில் எம்மைப் பற்றிக்கொள்ளும். எல்லா மதங்களுமே மனப்பக்குவப்படுத்தலின் முக்கியத்துவத்தை வலியுறுத்துகின்றன. 

தியானம், யோகம், கட்டுப்பாடான வாழ்க்கையை நாம் கண்டுகொள்ளாமல் இனியும் இருக்கக்கூடாது. உலக ஷேமம் முதன்மையானது. ஒவ்வொருவரும் இணைந்து செயற்பட்டால் புவனம் புனிதமாகும்; இனிமை பெறும்.  

Link to comment
Share on other sites

வரலாற்றில் இன்று : ஜூலை 31
 

image_93baf32623.jpg1805 : இந்திய விடுதலைப் போராட்ட வீரர் தீரன் சின்னமலை பிரித்தானியரால் தூக்கிலிடப்பட்டார்.

1865 : உலகின் முதலாவது குறுகிய அகல தொடருந்துப் பாதை ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து மாநிலத்தில் அமைக்கப்பட்டது.

1938 : கிரேக்கம், துருக்கி, ருமேனியா, யுகோசுலாவியா ஆகிய நாடுகளுடன் பல்கேரியா அமைதி உடன்பாட்டிற்கு வந்தது.

1954 : ஆர்டிடோ டெசியோ என்பவர் தலைமையிலான இத்தாலிய குழு ஒன்று கே - 2 கொடுமுடியை எட்டியது.

1964 : சந்திரனின் முதலாவது மிக அருகில் எடுக்கப்பட்ட படங்களை ரேஞ்சர் 7 விண்கலம் பூமிக்கு அனுப்பியது.

1971 : அப்போலோ 15 விண்வெளி வீரர்கள் லூனார் ரோவர் வண்டியை சந்திரனில் செலுத்தி சாதனை புரிந்தனர்.

1976 : வைக்கிங் 1 விண்கலத்தினால் செவ்வாய்க் கோளில் எடுக்கப்பட்ட புகழ்பெற்ற மனித முகம் படத்தை நாசா வெளியிட்டது.

1987 : ஆல்பர்ட்டா மாநிலத்தில் எட்மன்டன் நகரில் இடம்பெற்ற சூறாவளியில் சிக்கி 27 பேர் உயிரிழந்தனர்.

1988 : மலேசியாவில் பாலம் ஒன்று உடைந்து வீழ்ந்ததில் 32 பேர் கொல்லப்பட்டு 1,674 பேர் படுகாயமடைந்தனர்.

1992 : நேபாளத் தலைநகர் கத்மந்துவில் தாய்லாந்து விமானம் ஒன்று வீழ்ந்ததில் 113 பேர் கொல்லப்பட்டனர்.

2006 : பிடெல் காஸ்ட்ரோ தனது அதிகாரத்தை தற்காலிகமாக தனது சகோதரர் ராவுல் காஸ்ட்ரோவிடம் ஒப்படைத்தார்.

2006 : ஈழப்போர் - திருகோணமலையில் இடம்பெற்ற கிளைமோர் தாக்குதலில் 19 இராணுவத்தினர் கொல்லப்பட்டனர்.

2007 : வட அயர்லாந்தில் பிரித்தானிய இராணுவம் தனது மிக நீண்ட கால இராணுவ நடவடிக்கைகளை நிறுத்தி அங்கிருந்து வெளியேறியது.

http://www.tamilmirror.lk/

Link to comment
Share on other sites

கண்ணைக் கவரும் இந்த ஓவியங்கள் 'உயிரோடு' நடமாடியது எப்படி?

கண்காட்சிகளில் கலைப்படைப்புகளை நீங்கள் பார்த்துக்கொண்டே நடக்கலாம். ஆனால் கண்காட்சியில் ஓவியங்கள் நடந்து செல்வதை பார்த்திருக்கிறீர்களா? இவை மனித உடல்களில் வரையப்பட்ட உயிரோவியங்கள்…

ஆஸ்டிரியாவின் க்லாகேன்ஃபர்ட் நகரில் அண்மையில் நடமாடும் ஓவிய கண்காட்சி நடைபெற்றது. அந்த நாட்டில் நடைபெறும் 21வது உலக உடலோவிய விழா இது.

ஓவியம்

 

 

ஓவியர்கள் தங்கள் மாடல்களின் உடலில் மனம் கவரும் வண்ணம், வண்ணமயமான ஓவியங்களை தீட்டி, அவர்களை உயிரோவியங்களாக உலாவ விட்டனர். இந்த கலைப்படைப்புகள் காண்போரின் உள்ளத்தை கொள்ளைக் கொண்டன.

ஓவியம்

 

 

ஓவியம்

 

 

ஓவியம்

 

 

ஓவியம்

 

1998ஆம் ஆண்டு இந்த கலைவிழா தொடங்கப்பட்டது. தற்போது 50 வெவ்வேறு நாடுகளை சேர்ந்த கலைஞர்கள் இதில் பங்கேற்கின்றனர். ஓவியம்

 

தேர்ந்தெடுக்கப்படும் ஓவியங்களுக்கு விருதும், பரிசும் வழங்கப்படுகின்றன. ஏர்பிரஷிங், சிறப்பு மெருகூட்டல் (ஸ்பெஷல் எபெக்ட்ஸ்), முக ஓவியம் உட்பட 12 பிரிவுகளில் விருதுகள் வழங்கப்படுகின்றன.

ஓவியம்

 

இந்த மாடல்கள் வண்ணமயமான ஆடைகளை அணிந்திருப்பதுபோல் முதல் தோற்றத்தில் தோன்றும். ஆனால் கவனமாக பார்த்தால், வண்ண ஓவியங்களே அவர்கள் உடல்களை அலங்கரித்திருப்பது தெரியும்.

ஓவியம்

 

ஓவியர் ஒருவர் தனது மாடலின் உடலில் தூரிகையால் ஓவியம் தீட்டுகிறார்.

ஓவியம்

 

விருது வழங்கப்படும் சில பிரிவுகளில் பங்கேற்கும் ஓவியங்களை தீட்டுவதற்கு இரு நாட்கள் அவகாசம் வழங்கப்படுகிறது.

ஓவியம்

 

இந்த திருவிழாவில் தினமும் ஒரு மையக் கருத்தின் அடிப்படையில் ஓவியங்கள் வரையப்படுகின்றன.

ஓவியம்

 

முக ஓவியம் என்ற பிரிவில் இடம்பெற்ற கலைப் படைப்புகள் மிகவும் சிறப்பாக இருந்தன. கலைஞர்கள் தங்கள் மாடல்களின் முகங்களிலும், கழுத்திலும் அழகான படங்களை வரைந்திருந்தார்கள்.

ஓவியம்

 

உயிரோவியங்கள் ஒவ்வொன்றும் தனித்தன்மை வாய்ந்தவைகளாக இருக்கின்றன. பேசும் உயிரோவியங்கள் பேசாமலேயே பல கதைகளை கூறுகின்றன. ஓவியம்

 

தலையில் பட்டாம்பூச்சி பறக்கிறது.

ஓவியம்

 

உடலின் மேல் ஓவியம், தலைக்கு மேல் பறக்கும் பட்டாம்பூச்சி

ஓவியம்

 

கைக்குள் முகம்

ஓவி

 

 

இந்த திருவிழாவில் உடலோவியம், ஒப்பனை, புகைப்படம், சிறப்பு மெருகூட்டல் (ஸ்பெஷல் எஃபக்ட்), ஏர்பிரஷ் போன்றவற்றிற்கான பயிற்சி வகுப்புகளும் நடத்தப்பட்டன.

 

https://www.bbc.com

Link to comment
Share on other sites

வரிக்குதிரைகளைக் காப்பாற்ற நாடோடியாக மாறிய கென்யா பழங்குடிகள்! - நெகிழ்ச்சிக் கதை

 
 

வரலாற்றின்படி இந்த மூன்று இனத்தவர்களும் வடக்கு கென்யாவின் வன விலங்குகளுடன் நல்லிணக்கத்தோடு வாழ்ந்தவர்கள். இவர்கள் அரை மேய்ச்சல்வாதிகள் (Semi-Pastoralists). அப்பகுதியில் மட்டுமே காணக்கூடிய கால்நடைகளை வளர்த்துக் கொண்டிருந்தார்கள்.

வரிக்குதிரைகளைக் காப்பாற்ற நாடோடியாக மாறிய கென்யா பழங்குடிகள்! - நெகிழ்ச்சிக் கதை
 

ஜீப்ராக்கள். ஆப்ரிக்காவின் தனித்தன்மை வாய்ந்த குதிரை இனம். அதிலும் கிரேவி ஜீப்ராக்கள் அதிகச் சிறப்பு வாய்ந்தவை. மற்ற வரிக்குதிரைகளில் உடலிலிருக்கும் நீள்வரிக் கோடுகளைவிட இவற்றிலிருக்கும் கோடுகள் கொஞ்சம் சன்னமாக இருக்கும். இன்று கென்யாவில் மட்டுமே பெருவாரியாக வாழ்ந்துவரும் கிரேவி ஜீப்ராக்கள் சில பத்தாண்டுகளுக்குமுன் வரையிலும் ஆப்ரிக்காவின் பல பகுதிகளில் வாழ்ந்துகொண்டிருந்தன. ஆனால் வேட்டை, வாழிடம் குறைதல், வாழிடங்களில் மனித ஆக்கிரமிப்புகளென்று பல்வேறு காரணங்களால் எண்ணிக்கையில் சுருங்கித் தற்போது கென்யாவின் வடக்குப் பகுதியில் மட்டுமே வாழ்கின்றன. உலகளவில் அவற்ற்றின் தற்போதைய எண்ணிக்கை 3000 மட்டுமே. அதில் 90% வடக்குக் கென்யாவின் சம்புரு (Samburu), மார்சாபிட் (Marcabit), இசியோலோ (Isiolo), மெரு (Meru), லைகிபியா (Laikipia)போன்ற மாவட்டஙகளில் வாழ்கின்றன. ஆங்காங்கே சில காப்பிடங்களில் மீதி 10% கிரேவி ஜீப்ராக்கள் வாழ்ந்துகொண்டிருக்கின்றன.

கென்யாவிற்குச் செல்லும் சுற்றுலாப் பயணிகள் அதிகமாகப் பார்ப்பது சில பகுதிகளைத்தான். மசாய் மாரா காட்டுமான்களின் இடப்பெயர்வு காட்சி, அம்போசெலி யானைக்கூட்டம் கிளிமஞ்சாரோவின் மலைத்தொடரில படர்ந்திருக்கும் பனிப்போர்வைகளால் சூழப்பட்ட அழகான காட்சி, ரிஃப்ட் பள்ளத்தாக்கு ஏரிகளில் கூட்டமாகக் கூடியிருக்கும் ஃப்ளெமிங்கோ (Flemingo) பறவைகள் போன்றவை அவற்றில் முக்கியமானவை. ஆனால் சம்புரு (Samburu), ரெண்டிலே (Rendille), டுர்கானா (Turkana) போன்ற பழங்குடி மக்கள் வாழும் வடக்கு கென்யாவின் இந்தப் பகுதிகள் பெரும்பாலும் வேட்டைக்காரர்களைத் தவிர மற்றவர் கண்களுக்குப் பட்டதில்லை. இந்த மூன்று பழங்குடியினங்களின் வாழ்வும் ஒன்றுக்கொன்று பின்னிப் பிணைந்தவை.

வரலாற்றின்படி இந்த மூன்று இனத்தவர்களும் வடக்கு கென்யாவின் வன விலங்குகளுடன்  நல்லிணக்கத்தோடு வாழ்ந்தவர்கள். இவர்கள் அரை மேய்ச்சல்வாதிகள் (Semi-Pastoralists). அப்பகுதியில் மட்டுமே காணக்கூடிய கால்நடைகளை வளர்த்துக் கொண்டிருந்தார்கள். அவை அப்பகுதியின் மோசமான தட்பவெப்பநிலையிலும் இயல்பாகத் தகவமைத்துக் கொள்ளும் திறன்கொண்டவை. அந்த மாடுகளுக்கான மேய்ச்சல் நிலங்களாக இவர்கள் ஒரே பகுதியை வைத்திருந்ததில்லை. தொடர்ச்சியாக இடம்மாறிக் கொண்டேயிருந்தனர். புதுப்புது நிலப்பகுதிகளைத் தேடிச் சென்றுகொண்டேயிருந்தனர். அதன்மூலம் முன்பு பயன்படுத்தப்பட்ட நிலங்கள் புத்துயிர்பெற அவகாசம் கொடுத்தனர்.

 

 

கிரேவி ஜீப்ரா

கடந்த பத்து ஆண்டுகளாகத் தங்கள் பாரம்பர்யமான இயற்கையைப் புதுப்பிக்கும் கலாச்சாரத்தைத் தவிர்த்து, சூழலியல் சமநிலை ஏற்பட வேண்டியதன் முக்கியத்துவத்தை மறந்து வாழத் தொடங்கிவிட்டனர். ஒரே இடத்தில் வாழ்ந்து ஒரே பகுதியில் மாடுகளையும் மற்ற கால்நடைகளையும் வளர்க்கத் தொடங்கினர். தொடர்ச்சியான மேய்ச்சலும், மாறிக்கொண்டேயிருந்த காலநிலையும் அவர்களின் நிலங்களைத் தரிசாக்கத் தொடங்கின. கென்யாவில் அதுவும் அவர்களின் கிராமங்களுக்கு அருகிலேயே வாழ்பவைதான் கிரேவி ஜீப்ராக்கள். பழங்குடிகள் பல்வேறு கிராமங்களாகப் பிரிந்து ஆங்காங்கே தங்களுக்கான மேய்ச்சல் நிலங்களை வகுத்துக்கொண்டு ஒரே பகுதியில் வாழத்தொடங்கிவிட்டதால் ஜீப்ராக்கள் குறுகிய மேய்ச்சல் பகுதியையே பயன்படுத்திக் கொள்ளவேண்டிய சூழலுக்குத் தள்ளப்பட்டன. இறுதியில் ஜீப்ராக்களின் எண்ணிக்கையும் போதிய வாழிடமின்மையால் அதிகமாகக் குறைந்தன. பழங்குடிகளின் கால்நடைகளும் தரிசாகிவிட்ட மேய்ச்சல் நிலங்களால் பெரிதும் பாதிக்கப்பட்டன. அத்தோடு முற்றிலுமாக வறண்டுவிட்ட வடக்கு கென்யாவில் வறட்சியால் மக்கள் பாதிக்கப்பட்டனர்.

 

 

வறட்சிக்கான காரணங்கள் உள்ளூரைச் சேர்ந்த சிலரால் ஆராயப்பட்டது. உள்ளூரைச் சேர்ந்த சிலர் இணைந்து கிரேவி ஜீப்ரா அறக்கட்டளையை (Grevy Zebra Trust) 2007-ம் ஆண்டு தொடங்கினர். நீண்டகாலத்திற்கு ஏற்றவாறான நிலப் பயன்பாட்டை ஊக்குவிக்கும் விதமாக மக்களின் வாழ்க்கைமுறைய மாற்ற அவர்கள் முயற்சி செய்தனர். அவர்கள் தங்கள் கலாசாரத்தை, இயற்கையோடு இயைந்த வாழ்வை மீட்டெடுக்க முயன்றனர். அங்கு வாழ்ந்த பழங்குடிகளையே பணிக்கு அமர்த்திக்கொண்டார்கள். கால்நடைகள் மேய்ச்சலுக்குப் பயன்படுத்தும் நிலப்பகுதிகளையும், ஜீப்ராக்கள் மற்றும் அவற்றின் வாழிடங்களையும் கண்காணித்தனர். இதன்மூலம் நீண்டகால பயன்பாட்டிற்கான இயற்கை மற்றும் கலாச்சார பாரம்பரியத்தைப் பாதுகாக்க முனைந்தனர்.

சுற்றுச்சூழல் பாதுகாவலரும், வனவிலங்கு ஆர்வலருமான திரு.அலெக்ஸ் டுட்லே (Alec Dudley) தற்போது கென்யாவில் தங்கி ஜீப்ராக்களுக்காக வடக்கு கென்யா பழங்குடியின மக்கள் மாற்றிவரும் வாழ்க்கைமுறை அதனால் விளைந்துள்ள நன்மைகளைப் பதிவுசெய்து கொண்டிருக்கிறார்.

கென்யா

ஆலன் சவோரி என்ற சூழலியலாளரின் கூற்றுப்படி சிறப்பான கால்நடை பராமரிப்பிற்கும் அவற்றின் மூலம் நன்மை பயப்பதற்கும் இடம் மாறிக்கொண்டேயிருக்க வேண்டும். அப்போதுதான் அவற்றுக்குத் தேவையான மேய்ச்சல் நிலங்கள் தொடர்ச்சியாகக் கிடைத்துக் கொண்டேயிருக்கும். அதுமட்டுன்மின்றி கால்நடைகள், ஜீப்ராக்கள் என்று மேய்ச்சல் நிலங்களை மாறி மாறிப் பயன்படுத்தும்போது அந்நிலப் பகுதிக்கு நன்றாக உரமூட்டிப் பண்பட வைத்துவிடும் என்கிறார் அலெக்ஸ் டுட்லே. அதை மீண்டும் ஜீப்ராக்கள் பயன்படுத்தும் அவை விட்டுச் சென்றபின் மீண்டும் மக்க, என்று சுழற்சிமுறையில் விலங்குகளும் மனிதர்களும் நிலங்களை மாற்றி மாற்றிப் பயன்படுத்த வேண்டுமென்கிறார் அலெக்ஸ். ஒரு குறிப்பிட்ட நிலப்பகுதியைச் சொந்தமாக்கி வாழ்வதென்பது மேய்ச்சல்வாதிகளின் வாழ்க்கைமுறை இல்லை. தொடர்ச்சியான மேய்ச்சல் நிலங்களைத் தரிசாக்கிவிடும், அங்கு மீண்டும் புற்களே வளராது. அவை வளர்வதற்கான அவகாசம் அங்கே கொடுக்கப்படாமல் போவதால் ஏற்படும் விளைவு இது. ஆகவேதான் மேய்ச்சல்வாதிகள் தொடர்ச்சியாக இடம்மாறிக் கொண்டேயிருக்க வேண்டும்.

 

 

கிரேவி ஜீப்ரா அறக்கட்டளையைச் சேர்ந்தவர்கள் வெஸ்ட்கேட், கலாமா, நமுன்யாக் போன்ற பகுதிகளில் இதைப் போன்ற நிலங்களைப் பராமரித்து வருகிறார்கள். அதன்மூலம் கால்நடைகளுக்கும், ஜீப்ராக்களுக்குமான மேய்ச்சல் நிலங்கள் அழியாமல் பாதுகாக்கிறார்கள். புற்களின் அளவு குறையும்போதே இந்தப் பகுதிகளில் மேய்ச்சலுக்குத் தடைவிதிக்கப்படுகின்றது. மீண்டும் நிலை மாறும்போது தடை நீக்கப்படுகிறது. நான்கு மாதங்களுக்கு ஒருமுறை பழங்குடியினத் தலைவர்களின் குழு கூட்டப்பட்டு அறக்கட்டளை சார்பில் அவரவர்களுக்கான மேய்ச்சல் நிலப்பகுதிகளும், விலங்குகளுக்கான நீர்நிலைகளும் ஒதுக்கப்படுகிறது. 2017-ம் ஆண்டு கென்யாவில் கடுமையான வறட்சி ஏற்பட்டது. அப்போதுதான் இந்த முயற்சிகளின் பயன்களைப் பற்றி மக்களால் புரிந்துகொள்ள முடிந்தது, கடுமையான வறட்சியால் சில பகுதிகள் பாதிக்கப்பட்டன. ஆனால், சில பகுதிகளில் தேவைக்கு அதிகமான புற்கள் வளர்ந்திருந்தன. அது அப்பகுதியில் வாழ்பவர்களுக்குத் தேவையானதுபோக அதிகமாகவே இருந்தது. இது பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டவர்களை அரவணைக்க உதவியது. அத்தோடு அவதிப்பட்ட ஜீப்ராக்களுக்கு இடமளித்ததோடு அவை சுதந்திரமாக பழகுவதற்காக அவற்றோடு தங்கள் கால்நடைகளையும் சுதந்திரமாகத் திறந்துவிட்டனர். இது கிரேவி ஜீப்ராக்களை அந்த மக்களின் பகுதிக்குள் வந்து மேய்ந்துகொள்ளவும், அவர்களின் கால்நடைகளோடு இணைந்து மேயவும் உதவியது. இப்போது ஜீப்ராக்களும் அப்பகுதியின் பழங்குடி மக்களும் ஒருவருக்கொருவர் இணைந்தே வாழ்ந்துவருகின்றனர். இதனால், எண்ணிக்கையில் தொடர்ச்சியாகக் குறைந்துவந்த கிரேவி ஜீப்ராக்களின் எண்ணிக்கை 2015-ம் ஆண்டில் 2500 ஆக் இருந்தது. தற்போது அங்கு மட்டுமே அவை 3000 வாழ்கின்றன. இதற்குக் காரணம் அந்த மக்கள் தங்கள் நிலப்பகுதியையும் அதில் வாழும் விலங்கையும் புரிந்துகொண்டதே.

கிரேவி ஜீப்ரா அறக்கட்டளை

Photo Courtesy: James Warwicky

தற்போது அறக்கட்டளையைச் சேர்ந்தவர்கள் புற்களுக்கான விதைகளைச் சேகரித்து வருகிறார்கள். வறட்சிக் காலங்களில் தாமே செயற்கையாக வளர்ப்பதற்காக. அத்தோடு உணவுத் தட்டுப்பாட்டால் சிரமப்படும் ஜீப்ராக்களுக்காக அவர்களே புற்கட்டுகளை வழங்கிக் கொண்டிருக்கிறார்கள். இதில் அவர்கள் பள்ளிக் குழந்தைகளையும், பழங்குடிக் குழந்தைகளையும்கூட இணைத்து கல்வியாகவும் போதித்து வருகின்றனர். அத்தோடு சுற்றுச்சூழலுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபடுவோரை தடுப்பதிலும், அவர்களைத் தடுப்பதன் முக்கியத்துவத்தை மக்களுக்கு விழிப்பு உணர்வு செய்வதிலும்கூட முனைந்துள்ளனர் கிரேவி ஜீப்ரா அறக்கட்டளையைச் சேர்ந்தவர்கள். ஜீப்ராக்களைத் தங்களோடு சேர்த்து வாழ வைப்பது மட்டுமின்றி அவற்றின் எண்ணிக்கை, நடவடிக்கைகள், தேவைகளைக் கண்காணிப்பதிலும் பழங்குடியின மக்கள் இணைந்து பணியாற்றி வருகிறார்கள். வாம்பா (Wamba) என்ற பகுதியில் 29 குழுக்கள் இதைப்போல் கண்காணித்து வருகின்றனர். அதில் அதிகமான எண்ணிக்கையிலிருப்பது பெண்களே. அதிலும் அதிகமாக இருப்பவர்கள் விதவைகளும், சிங்கிள் மதர்களுமே என்பது குறிப்பிடத்தக்கது. இதன்மூலம் பழங்குடியின மக்கள் கலாச்சாரமென்ற பெயரில் பிற்போக்குத்தனமாகச் செயல்படாமல், முற்போக்குச் சிந்தனைகளுடன் நடந்துகொள்வதைப் புரிந்துகொள்ள முடிகிறது. அங்கு வாழும் ஒவ்வொரு பழங்குடியினத்திலிருந்தும் ஜீப்பராக்களுக்காக ஒரு தூதரை (Zebra Ambassadors) நியமித்துள்ளார்கள் அறக்கட்டளையைச் சேர்ந்தவர்கள்.

99 சதவிகித கிரேவி ஜீப்ராக்கள் தேசியப் பூங்காக்கள், பாதுகாக்கப்பட்ட பகுதிகள் போன்றவற்றிற்கு வெளியே பாதுகாப்பில்லாமலே வாழ்ந்து வருகின்றன. பல நூறு வருடங்களாக விலங்குகளோடு இணக்கமாக வாழ்ந்துவரும் அப்பகுதியைச் சேர்ந்த பழங்குடி மக்களின் கையில்தான் அந்த விலங்குகளின் பாதுகாப்பும் உறைந்துள்ளது. அந்தப் பழங்குடியின மக்களும் தங்களுக்குள்ளிருந்த வேறுபாடுகளை மறந்து, பொறுப்புணர்ந்து செயல்பட்டு வருகிறார்கள்.

மேய்ச்சல் நிலம்

Photo Courtesy: James Warwicky

தங்களை நாகரிகமானவர்களாகக் காட்டிக்கொள்ளும் நகர மக்களைவிட ஜீப்ராக்களைக் காப்பாற்றத் தங்கள் வாழ்க்கைமுறையையே மாற்றிக்கொண்ட இந்தப் பழங்குடிகள் நிச்சயம் மேன்மையானவர்களே.

https://www.vikatan.com

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தினமுரசு ஒரு ஜனரஞ்சக பத்திரிகை என்பதில் சந்தேகமேயில்லை. அதில் அற்புதன் எழுதிவந்த துரையப்பா முதல் அற்புதன் வரை எனும் தொடர் பல நிகழ்வுகளை சொல்லி வந்தது. இதற்காகவே அந்த பத்திரிகையை வாங்கி தொடர் தொடராக வாசித்து வந்தேன். அவற்றையெல்லாம் கட்டி பத்திரமாக இன்றும் வைத்திருக்கின்றேன். கதையை வாசித்தவர்களுக்கு கொலையாளி யாரெனெ தெரிந்திருக்கும்.
    • தினமுரசு பத்திரிகையில் ஈழமக்கள் முன்னணியில் இருந்து தொடர்கதையாக எழுதி வந்த பத்திரிகையாளர் அற்புதன் எமது போராட்டம் எப்படி யார்யார் தொடங்கினார்கள்.                   எமது போராட்டம் பற்றிய உடனடி கள தகவல்களுடன் தினமுரசு பத்திரிகை வெளிவந்து கொண்டிருந்தது.துரோக கும்பலில் உள்ளவர்களால் எழுதப்பட்டாலும் ஒவ்வொரு கிழமை வெளிவந்த பத்திரிகையையும் வாங்கி வாசித்து பலருக்கும் வாசிக்க கொடுத்து சேர்த்து வைத்திருந்தேன்.                  பலரும் ஒவ்வொரு கிழமையும் எப்படா தினமுரசு வரும் என்று காவல் இருந்து வாங்கி வாசித்துக் கொண்டிருந்த காலத்தில் திடீரென பத்திரிகையாளர் அற்புதன் சுட்டுக் கொல்லப்பட்டார்.                அவரது கொலை அவர்களது இயக்கமான ஈபிடிபி யே காரணம் என எல்லோராலும் பேசப்பட்டது.டக்ளஸ் ஏற்கனவே அற்புதனை எச்சரிகை செய்தும் தொடர்ந்தும் பல உண்மைகளை எழுதியதால்த் டக்ளசால் கொல்லப்பட்டாக சொல்கிறார்கள்.                             அற்புதனின் தினமுரசு பத்திரிகையை வாசிக்காதவர்கள் எமது போராட்ட ஆரம்ப வரலாறு தெரியாதவர்கள் இந்த தொடரை பாருங்கள்.                 வரலாற்றை அறிந்து கொள்ளுங்கள்.   பாகம்1    
    • உள்ளதைத்தான் சொல்லியிருக்கின்றீர்கள். இப்ப ஜேர்மனியிலை எதுக்கெடுத்தாலும் தொட்டால் பட்டால் புட்டின் தான் குற்றவாளி.அந்த மாதிரி மக்களை மூளைச்சலவை செய்துகொண்டு போகின்றார்கள். இணக்க அரசியலுக்கு பெயர் போன ஜேர்மனி இப்படி ஆகிவிட்டது. உள்ளதைத்தான் சொல்லியிருக்கின்றீர்கள்.  
    • அத்துடன் மாவீரர் நாளில் மிகுந்த சனத்தை  பார்க்க கூடியதாக இருந்தது. (வன்னியில் என நினைக்கிறேன்)      
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.