Jump to content

இளமை புதுமை பல்சுவை


Recommended Posts

 

'மாசு' என்பதை மையக்கருவாகக் கொண்டு பிபிசி நடத்திய 19ஆவது வார புகைப்படப் போட்டியில் தேர்வு செய்யப்பட்ட பிபிசி தமிழ் நேயர்களின் சிறந்த புகைப்படங்கள்.

 

'மாசு' என்பதை மையக்கருவாகக் கொண்டு பிபிசி நடத்திய 19ஆவது வார புகைப்படப் போட்டியில் தேர்வு செய்யப்பட்ட பிபிசி தமிழ் நேயர்களின் சிறந்த புகைப்படங்கள். பா. கார்த்திகேயன், சென்னை 'மாசு' என்பதை மையக்கருவாகக் கொண்டு பிபிசி நடத்திய 19ஆவது வார புகைப்படப் போட்டியில் தேர்வு செய்யப்பட்ட பிபிசி தமிழ் நேயர்களின் சிறந்த புகைப்படங்கள். Image captionசரவணன் வரதராஜன் 'மாசு' என்பதை மையக்கருவாகக் கொண்டு பிபிசி நடத்திய 19ஆவது வார புகைப்படப் போட்டியில் தேர்வு செய்யப்பட்ட பிபிசி தமிழ் நேயர்களின் சிறந்த புகைப்படங்கள். Image captionஎல். ராகவ பிரசன்னா #BBCTamilPhotoContest Image captionடாக்டர் எம். மகேஷ்வரன் #BBCTamilPhotoContest Image captionவெ. சசிகுமார் #BBCTamilPhotoContest Image captionஅஜய் வர்மா #BBCTamilPhotoContest Image captionமொஹமத் இஷ்ரத் #BBCTamilPhotoContest Image captionஸ்ரீதரன் சுப்பிரமணியன் #BBCTamilPhotoContest Image captionதா. ஜோனிஷ் #BBCTamilPhotoContest Image captionஸ்ரீநி

 

https://www.bbc.com

Link to comment
Share on other sites

  • Replies 11.3k
  • Created
  • Last Reply

எத்தனை செல்ஃபி எடுத்தாலும் நமக்கு நல்ல புரொஃபைல் படம் கிடைக்காதாம்... ஏன்?

 
 

மெமரி கார்டு முழுக்க நம்முடைய செல்ஃபிக்கள்தான். இருந்தும் எதை புரொஃபைல் படமாக வைப்பது என்பதை நம்மால் முடிவு செய்யவே முடியாது. 

உதாரணமாக, இரண்டு புகைப்படங்கள் எடுத்துக்கொள்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். அவற்றில் முதலில் எடுத்த புகைப்படமே உங்களுக்கு மிகவும் பிடித்திருக்கிறது, இரண்டாவது புகைப்படம் அவ்வளவாகப் பிடிக்கவில்லை. ஆனால் உங்கள் நண்பர்கள் இருவரோ, இரண்டாவது புகைப்படத்தில் தான் நீங்கள் அழகாக இருக்கிறீர்கள் என்று சொல்கிறார்கள். இப்போது இரண்டில் எதைத் தேர்வு செய்வது என்பதில் உங்களுக்குக் குழப்பம் வருமில்லையா? இனிமேல் குழப்பமே வேண்டாம். உங்கள் நண்பர்கள் சொன்ன இரண்டாவது புகைப்படத்தையே தேர்வு செய்யச் சொல்கிறது சமீபத்திய உளவியல் ஆய்வு ஒன்று.  நம்முடைய சிறந்த புகைப்படத்தினைத் தேர்வு செய்வதில் நாம் பெரும்பாலும் சொதப்பவே செய்வோம் என்று கண்டறிந்துள்ளனர் ஆராய்ச்சியாளர்கள்.

செல்ஃபி

நல்ல செல்ஃபி எடுப்பது எப்படி?

பிடிக்கும்...ஆனா பிடிக்காது:

சௌத் வேல்ஸ் பல்கலைக்கழகம் (University of South Wales) வெஸ்டர்ன் ஆஸ்திரேலியா பல்கலைக்கழகம் (University of Western Australia) மற்றும் சிட்னி பல்கலைக்கழகம் (University of Sydney) ஆகியவற்றைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் சிலர் 102 மாணவர்களைத் தேர்வு செய்து அவர்கள் ஒவ்வொருவரின் பேஸ்புக் அக்கௌன்ட்டிலிருந்தும் ஒரு டஜன் புகைப்படங்களைப் பெற்றனர். பின்பு அவற்றை, கவர்ச்சி (attractiveness), நம்பகத்தன்மை (trustworthiness), ஆளுமைத்திறன் போன்ற பல்வேறு வகைகளின் கீழ் அவர்களைக்கொண்டே,10க்கு மதிப்பெண்கள் தரச்சொல்லி கேட்டனர். அதைத்தொடர்ந்து, 160 அந்நியர்களைக் கொண்டு மேற்சொன்ன அதே மதிப்பீடுகளின் கீழ்  மதிப்பெண்கள் தரச்சொல்லி கேட்டனர். இறுதியில், பெறப்பட்ட அந்த இரண்டு முடிவுகளுமே ஒன்றுடன் ஒன்று பொருந்தாத வகையில் காணப்பட்டது. இதில் சுவாரஸ்யம் என்னவெனில், மாணவர்களைப் பொறுத்தவரையில் தங்களின் சிறந்த புகைப்படம் என்று கருதிய படங்களுக்கு, மற்றவர்களிடமிருந்து மிகக்குறைவான மதிப்பெண்களும், அவர்கள் பெரிதும் விரும்பாத புகைப்படங்களுக்கு அதிக மதிப்பெண்களும் கொடுக்கப்பட்டிருந்தன. இம்முடிவுகள் சுய விளக்கக் கோட்பாட்டிற்கு (Self-Presentation Theory) முரணாக இருப்பதைக் கண்டு ஆராய்ச்சியாளர்கள் வியந்தனர்.

இதுகுறித்த ஆராய்ச்சிகள் வெளிவருவதற்கு முன்பே வெளிநாடுகளைச் சேர்ந்த சில டேட்டிங் தளங்கள் (dating sites) இந்த உண்மையை அறிந்து வைத்திருந்தன. புகழ்பெற்ற இணையதளமான ‘ஓகே குபிட்’ (OKCupid), ‘எனது சிறந்த முகம்’ (My Best Face) என்ற ஆன்லைன் சேவையை வழங்கியது. அதில் யாரென்றே தெரியாத (anonymously) மற்றவர்கள் தருகின்ற மதிப்பெண்களைக் கொண்டு ஒருவரின் சிறந்த Profile Picture  தேர்வு செய்யப்பட்டது. அதேபோல, ‘டின்டர்’ (Tinder) என்ற டேட்டிங் ஆப், சில அல்காரிதம்களைப் பயன்படுத்தி பலரும் விரும்பக்கூடிய ஒருவரின் சிறந்த புகைப்படத்தினைத் தேர்வு செய்யும் வசதியினைக் கொண்டுவந்தது.

வெவ்வேறு கதைகள் சொல்லும் புகைப்படம்:

நாம் எடுத்த புகைப்படங்களைப் பார்த்து புளகாங்கிதம் அடைவதில் நீண்ட நேரத்தினை செலவழிக்கும் நாம், அவற்றிலிருந்து பலரும் விரும்பக்கூடிய ஒரு சிறந்த புகைப்படத்தினைத் தேர்வு செய்வதில் தோல்வி அடைவது எதனால்? இதற்கு ஆராய்ச்சியாளர்கள் கூறும் பதில் இதுதான்., “நம்மைப்பற்றி நாம் ஏற்கனவே கொண்டுள்ள அபிப்ராயத்தினை, நமது ஒவ்வொரு புகைப்படத்தின் முகபாவனையோடும்  நமது மனது ஒப்பிட்டுப் பார்க்கும்”. அதாவது,  உங்களை ஒரு நம்பத்தகுந்த மனிதர் (trustworthy person) என்று கருதுகிறீர்கள் என வைத்துக்கொள்வோம். அந்த எண்ணத்தோடு உங்களின் புகைப்படத்தினை பார்ப்பீர்களேயானால் அது உங்களுக்கு ஒரு நம்பத்தகுந்த மனிதராகவே தெரியும்.

செல்ஃபி

இதற்குக் காரணம், நாம் ஒவ்வொருவரும் நம்மை, ‘சராசரியினை விட உயர்ந்தவர்கள்’ (better-than-average effect)  என்று நினைப்பதன் விளைவாக இருக்கலாம் அல்லது பெரும்பாலும் நம்முடைய நேர்மறையான குணாதிசயங்களை வைத்தே நம்மை மதிப்பிடுவதன் விளைவாகவும் இருக்கலாம் என்கின்றனர் ஆய்வாளர்கள்.  புகைப்படத்தினைப் பார்ப்பதற்கு முன்பாகவே நம்மைப் பற்றிய சில அபிப்ராயங்களை வகுத்துக்கொண்டு அந்தத் தரத்திலிருந்து நம்மை வேறுபடுத்திப் பார்ப்பதற்கு நம் மனம் விரும்பாததால், நாம் பார்க்கும் எல்லா புகைப்படங்களுமே, ‘பார்த்தாலே பச்ச முகம், பால் வடியும் முகமாகவே’ தோன்றுகிறது. ஆனால் மற்றவர்களுக்கு அப்படித் தோன்றுவதில்லை என்பதே நிதர்சனம்.

நம்மைப் பொறுத்தவரையில் மட்டும் தான், அது ஒரே நபரின் 12 வெவ்வேறு புகைப்படங்கள். ஆனால் பிறருக்கோ அந்த 12 புகைப்படங்களும் 12 வெவ்வேறு கதைகளைச் சொல்லும்.

https://www.vikatan.com

Link to comment
Share on other sites

நாமே செய்யலாம் சுவர் அலங்காரம்

 

 
wood%20stick
shutterstock348369926
shutterstock712993309
wallribbon
wood%20stick
shutterstock348369926

வீட்டைக் கலை நயத்துடன் வைத்துக்கொள்வது என்பது ஒரு திறமை என்றே கூறலாம். பொதுவாக, வீட்டை அலங்கரிக்க வேண்டும் என்றால் அலங்காரப் பொருட்களை விலைக்கு வாங்கி வைப்பது வழக்கம். செலவு இல்லாமல் வீட்டை அலங்கரிக்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு நேரம் கிடைப்பதில்லை. கலை நயத்துடனும் நமக்குப் பிடித்த வகையிலும் சில அலங்காரங்களை வீட்டில் செய்ய வேண்டும் என்றால் டிஐஒய் (Do It Yourself) முறைகள் உதவும். குறைந்த நேரத்தில் உருவாக்கக்கூடிய சுவர் அலங்காரம் சிலவற்றைப் பார்க்கலாம்.

 

மரக் குச்சி சுவர் அலங்காரம்

பெரு நகரங்களில் வாழ்ந்தாலும் நம் கிராமங்களில் வாழ்வது போல இருக்க வேண்டும் என்று நினைத்தால் நாமே அதை உருவாக்க முடியும். மரம், பழுப்பு நிறம் போன்றவற்றை உபயோகித்தால் ஒரு பழமையான சூழல் கிடைக்கும். அந்த வகையில் நமக்கு எளிதில் கிடைக்கும் பொருள் குச்சிகள். அவற்றின் மூலம் சுவரில் நமக்குப் பிடித்த வடிவங்களாக உருவாக்கிக் கொள்ளலாம்.

தேவையான பொருட்கள்: குச்சிகள், கம்

வெவ்வேறு அளவுகளில் குச்சிகளைச் சேகரித்து வைத்துக்கொள்ளுங்கள். சிறிய அளவில் இருந்து பெரிய குச்சிவரை ஒவ்வொன்றையும் ஒட்டிக்கொள்ள வேண்டும். பிறகு பெரிய அளவில் இருந்து சிறிய குச்சிகள் வரை வரிசையாக ஒட்டிக்கொள்ள வேண்டும். தற்போது இரண்டையும் இணைத்தால் படத்தில் காட்டியுள்ளபடியான வடிவத்தை உருவாக்க முடியும். குறிப்பு: சுவரில் ஒட்டுவதற்கு முன்பு நாம் உருவாக்கிய வடிவத்தில் பின்புறத்தில் ஒரு குச்சியைக் கிடைமட்டமாக ஒட்ட வேண்டும்.

 

ஆணிச் சரம் சுவர் அலங்காரம்

பொதுவாக வீட்டில் ஆணி அடிக்க வேண்டும் என்றாலே அனைவர் மனதிலும் தயக்கம்தான் ஏற்படும். ஆனால், ஆணி அடிப்பதிலும் ஒரு கலை இருக்கிறது என்றால் அதைத் தவிர்க்க வேண்டிய தேவையே இல்லை. அந்த வகையில், ஆணியின் மூலம் உருவாக்க கூடிய டிஐஒய் சுவர் அலங்காரம் இதோ

தேவையான பொருட்கள்: ஆணி, கலர் நூல்கண்டு

ஆணிகளை உங்களுக்குத் தேவையான உருவத்தில் அடித்துக்கொள்ள வேண்டும். அதாவது, எழுத்துக்கள் வேண்டுமென்றால் அதன் வடிவத்தில் அடிக்க வேண்டும். முதலில் பென்சிலில் வரைந்துகொண்டு அடிப்பது நல்லது. பிறகு அனைத்து ஆணிகளையும் நூலால் கோத்தால் , நீங்கள் விருப்பப்பட்ட வடிவம் கிடைக்கும். அதன்பிறகு, இரண்டு ஆணிகளாக, குறுக்கே நூலை கட்ட வேண்டும். ஆணிகளை வைத்து நூல் பின்னல் போட்டது போன்ற அழகான தோற்றம் இதில் கிடைக்கும். இதை வீட்டின் படிக்கும் அறையில் செய்தால் அழகாக இருக்கும்.

 

டாட்ஸ் சுவர் அலங்காரம்

சுவர் அலங்காரம் என்றால், அய்யய்யோ! அதெல்லாம் நாம எப்படிச் செய்வது, அதற்கெல்லாம் கலை நயம் வேண்டும் என யோசிப்பவர்கள்கூடச் சுவர் அலங்காரம் செய்யும் வகையில் எளிமையான ஒரு சுவர் அலங்காரம் தான் டாட்ஸ். தேவையில்லாத கலர் பேப்பர்கள், கிப்ட் ராப்பர்களை வைத்திருந்தால் போதும் இதனை உருவாக்கிவிடலாம். பேப்பர்களை வட்டமாக வெட்டிக் கொள்ள வேண்டும். இதை எளிதில் செய்ய பஞ்சிங் இயந்திரம் தேவை. ஒரே அளவிலும் வெவ்வேறு அளவிலுமான வட்டங்கள் வரைந்து அதை வெட்டி வைத்து கொள்ளுங்கள். பின்பு, கேன்வாஸ் ஒன்றில் வரிசையாக கலர் பேப்பர்களை ஒட்ட வேண்டும் . பின்பு கேன்வாஸை ப்ரேம் செய்து மாட்டினால் வேலை முடிந்தது.

தேவையான பொருட்கள்: கலர் பேப்பர், கேன்வால், கம்

பேப்பர்களை ஒட்டும்போது நேர் கோட்டில் ஒட்ட வேண்டும். இங்கு உங்களுடைய கலை நயத்தைப் பயன்படுத்தி வெவ்வேறு விதமாக ஒட்டி , புதுப்புது உருவங்களை உருவாக்கலாம்.

 

ரிப்பன் சுவர் அலங்காரம்

ரிப்பன் உபயோகிப்பது இந்தக் காலத்தில் குறைந்து வந்தாலும், அலங்காரம் என்று வந்துவிட்டால் ஏதோ ஒரு இடத்தில் ரிப்பன் தேவைப்படத்தான் செய்கிறது. சாட்டின் ரிப்பன் , பிரிண்டட் ரிப்பன் என்று பல வகை இதில் வந்துவிட்டது. கிப்ட் வந்தால் அதில் பூ போன்ற பல வடிவங்களில் ரிப்பன் இருப்பதைக் காணலாம். அதை உபயோகித்து எளிய முறையில் வீட்டில் சுவர் அலங்காரம் உருவாக்கலாம்.

தேவையான பொருட்கள்: சார்ட் பேப்பர், ரிப்பன், கம்

குறிப்பு: இதுபோன்ற டிஐஒய் சுவர் அலங்காரம் உருவாக்குவதைவிட , வீட்டில் சரியான இடத்தில் வைப்பது அதற்கான அழகைக் கொடுக்கும்.

http://tamil.thehindu.com

Link to comment
Share on other sites

வெல்லுவதோ இளமை: கேட்ஸ் திறந்த ‘புதிய ஜன்னல்’

 

 
bill%20gates
 

பல நாட்களாகப் பட்டினி கிடந்த ஒருவருக்குத் திடீரென்று அறுசுவை விருந்து கிடைத்தால் எப்படியிருக்கும்? அப்படி இருந்தது வில்லியத்துக்கும் அவனுடைய நண்பர்களுக்கும்.

     

அதற்குக் காரணம் கணினி என்ற அறிவியல் அதிசயமே!

இன்றைக்கு ஒரு கணினி இருந்தால் போதும். அலுவலக வேலை பார்க்கலாம், பாட்டு கேட்கலாம், சினிமா பார்க்கலாம், மின்னஞ்சல் படிக்கலாம், நண்பர்களுடன் அரட்டையடிக்கலாம்... இவை எவையும் அன்றைய கணினியில் சாத்தியமல்ல! அன்றைக்குப் புழக்கத்தில் இருந்த கணினிகள் ஒவ்வொன்றும் அறையளவு பெரிதாக இருந்தன. அவற்றில் பாட்டு, திரைப்படம், மின்னஞ்சல், ஃபேஸ்புக்கெல்லாம் வராது. ஒரு ஒளிப்படத்தைக்கூடப் பார்க்க முடியாது. வெறும் எழுத்துகள்தாம்.

bill-gates-young%202
 

ஆனால், அந்தக் கணினிகள் அன்றைய தொழில்நுட்பத்தின் மிகப் பெரிய சாதனை. அவற்றைப் பயன்படுத்தி புரோக்ராம்கள் எனப்படும் நிரல்களை எழுதலாம். நாம் என்ன சொன்னாலும் கணினியைக் கேட்கச்செய்யலாம். அதனால்தான், வில்லியம் போன்ற அன்றைய இளைஞர்கள் பலருக்குக் கணினிகளை மிகவும் பிடித்திருந்தது. ஆர்வத்துடன் கற்றுக்கொண்டார்கள், விதவிதமான நிரல்களை எழுதிக் குவித்தார்கள்.

இத்தனைக்கும் வில்லியம் முழுக் கணினியைப் பயன்படுத்தவில்லை. அவனுடைய பள்ளியிலிருந்து ஒரு பெரிய கணினிக்கு இணைப்பு உருவாக்கப்பட்டிருந்தது. அதை வைத்து அந்தக் கணினியில் நுழைந்து நிரல்களை எழுதிப் பழகிக்கொண்டான். அவனுக்குச் சொல்லித் தரவும் அங்கே யாரும் இல்லை. அவனே புத்தகங்களை, கையேடுகளைப் புரட்டிப் பார்த்தான், ஏதோ எழுதிப் பார்த்தான், அவை பிரமாதமாக வேலை செய்வதைப் பார்த்து வியந்துபோனான். சரியான நிரல்கள், பிழையான நிரல்கள் என இரண்டுமே அவனுக்குப் புதிய விஷயங்களைக் கற்றுத்தந்தன.

திடீரென்று ஒருநாள், அவர்களுடைய கணினி இணைப்பு வேலைசெய்யவில்லை.

வில்லியமும் அவனுடைய நண்பர்களும் கணினியை மொத்தமாகப் பயன்படுத்தியதால் அதற்கு ஒதுக்கப்பட்டிருந்த நேரம் தீர்ந்துவிட்டது.

‘ஆனா, எங்களுக்கு கம்ப்யூட்டர் வேணுமே; நாங்க என்ன செய்யறது?’வில்லியம் பரிதாபமாகக் கேட்டான்.

tumblr-lsh-pwtp-rqla-young%202
 

‘பள்ளிக்கூடத்துக்காகக் கொடுத்த இலவச நேரம் முடிஞ்சிடுச்சு. இனிமே நீங்களே காசு கொடுத்துப் பயன்படுத்தினாதான் உண்டு.’

அதற்கு அவர்கள் சொன்ன வாடகைத் தொகை மிக அதிகம். ஆனாலும், வில்லியமும் அவனுடைய நண்பர்களும் தங்களுடைய பாக்கெட் மணி, சேமிப்பையெல்லாம் செலவழித்துத் தொடர்ந்து கணினியைப் பயன்படுத்திவந்தார்கள். ஆனால், முன்புபோல் எந்நேரமும் கணினியின் முன்னே கிடக்க முடியாது. கொடுக்கிற காசுக்குச் சிறிது நேரம்தான் பயன்படுத்த அனுமதி.

அதுவரை கணினியை இஷ்டம்போல் பயன்படுத்திப் பழகியிருந்த அவர்களுக்கு, இப்படிச் சிறிது சிறிதாகப் பயன்படுத்துவது பிடிக்கவில்லை. ‘இன்னும் இன்னும்’ என்று ஏங்கினார்கள்.

அப்போது அவர்கள் ஊரில் ‘கம்ப்யூட்டர் சென்டர் கார்ப்பரேஷன்’ (CCC ) என்ற நிறுவனத்திடம் சில கணினிகள் இருந்தன. ஆனால், அவையும் வாடகைக்குப் பெறப்பட்டவையே.

அந்தக் கணினிகளில் அவ்வப்போது சிறிய, பெரிய பிழைகள் தென்படும். அதுபோன்ற நேரத்தில் பிழை திருத்தப்படும்வரை CCC நிறுவனம் அந்தக் கணினிக்கு வாடகை தர வேண்டியதில்லை.

இதைத் தெரிந்துகொண்ட வில்லியம் யோசித்தான், ‘பிழைகள் தாமே வரும்வரை காத்திருக்க வேண்டுமா? நாமே உள்ளே நுழைந்து அந்தப் பிழைகளைக் கண்டுபிடித்தால் என்ன?’

 
 

இப்படித் தினந்தோறும் பிழைகளைக் கண்டுபிடித்துக்கொண்டே இருந்தால், அந்தக் கணினிகளுக்கு வாடகை தர வேண்டியதில்லை. CCCக்குப் பணம் மிச்சம்.

ஆனால், இதனால் வில்லியத்துக்கு என்ன லாபம்?

பிழையைக் கண்டுபிடிக்க நெடுநேரம் கணினி முன்னே உட்கார வேண்டும். இரண்டு, மூன்று பிழைகளைக் கண்டுபிடித்துச் சொல்லிவிட்டு மீதி நேரமெல்லாம் நிரல் எழுதிப் பழகலாமே.

வில்லியம் சொன்ன யோசனை CCC நிறுவனத்துக்கு மிகவும் பிடித்திருந்தது.அதன் பிறகு, வில்லியம் தொடர்ந்து மணிக்கணக்காகக் கணினிகளைப் பயன்படுத்தி மகிழ்ந்தான். பல தனித்துவமான நிரல்களை எழுதினான்.

பிழைகளைக் கண்டுபிடிக்கும் நோக்கத்துடன் கணினியின்முன் அமர்ந்தாலும், அதன்மூலம் வில்லியம் கற்றுக்கொண்டவை ஏராளம். ஆரம்பத்தில் விளையாட்டாகக் கணினியைப் பயன்படுத்தியவன், சிறிது சிறிதாகப் பயனுள்ள நிரல்களை எழுதத் தொடங்கினான். கணினியைப் பயன்படுத்தி ஏகப்பட்ட விஷயங்களைச் சாதிக்க முடியும் என்பதைப் புரிந்துகொண்டான். அது பற்றி நிறையப் படிக்கத் தொடங்கினான்; நண்பர்களுடன் விவாதித்தான்.

இந்த ஆர்வம், வில்லியத்தின் தொழில் முயற்சிகளுக்கு வழிவகுத்தது. கணினியில் நிரல்களை எழுதுவது வெறும் பொழுதுபோக்கல்ல, அதைப் பயன்படுத்திப் பல பயனுள்ள விஷயங்களைச் செய்யலாம், அந்த நிரல்களைத் தேவையுள்ள நிறுவனங்களுக்கு விற்றுப் பணம் சம்பாதிக்கலாம் என்று அவன் நிரூபித்தான்.

அதே காலகட்டத்தில், கணினி களுக்கான வன்பொருள் (ஹார்டுவேர்) வசதிகளும் பெரிய அளவில் வளர்ந்தன. இதைப் பயன்படுத்திக்கொண்டு வில்லியம் தன்னுடைய தொழில் முயற்சிகளைச் செம்மையாக்கினான். அதன் மூலம், ‘ஒவ்வொரு மேசையிலும் ஒரு கணினி’ என்ற ஒரு புரட்சிக்கு அவன் முக்கியக் காரணமானான்.

அந்த வில்லியம், நாமெல்லாம் ‘பில் கேட்ஸ்’ என்ற பெயரில் நன்கறிந்த, உலகின் மிகப் பெரிய பணக்காரர்களில் ஒருவர்.

கணினித் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி பில் கேட்ஸ் நிறையப் பணம் சம்பாதித்தார் என்பது உண்மைதான். ஆனால், காசு சம்பாதிப்பதற்காக அவர் இந்தத் தொழிலுக்கு வரவில்லை. கணினிகளின்மீது அவருக்கிருந்த பேரார்வம்தான் அவரை இங்கே வரவைத்தது. இந்தத் துறையை இன்னும் பெரிய அளவில் வளர்ப்பது எப்படி என்ற கேள்விதான் அவரை முன்னேற்றியது.

‘உனக்குப் பிடித்த ஒரு வேலையைத் தேர்ந்தெடு; அதன்பிறகு நீ வாழ்நாள் முழுக்க வேலைசெய்ய வேண்டியதில்லை’ என்று சொல்வார்கள்; அப்படி இளம் வயதிலேயே மனத்துக்குப் பிடித்த ஒரு வேலையை விரும்பித் தேர்ந்தெடுத்துச் செய்து, அதன்மூலம் புகழும் பணமும் சம்பாதித்து, சமூகத்தின்மீது தாக்கத்தையும் உண்டாக்கிய அபூர்வமான மனிதர் பில் கேட்ஸ்.

(இளமை பாயும்)

http://tamil.thehindu.com

Link to comment
Share on other sites

உலக புத்தக மற்றும் பதிப்புரிமை நாள்: ஏப்.23

 
அ-அ+

உலக புத்தக மற்றும் பதிப்புரிமை நாள் (World Book and Copyright Day) அல்லது உலக புத்தக நாள் என்பது வாசித்தல், பதிப்பித்தல் மற்றும் பதிப்புரிமையூடாக அறிவுசார் சொத்துக்களைப் பாதுகாத்தல் போன்றவற்றை வளர்க்கும் நோக்குடன் ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல் மற்றும் பண்பாட்டு நிறுவனம் (யுனெஸ்கோ) ஆண்டுதோறும் ஏப்ரல் 23-ம் நாளன்று ஒழுங்கு செய்யும் ஒரு நிகழ்வு ஆகும். இது 1995-ம் ஆண்டு முதன் முதலாகக்

 
 
 
 
உலக புத்தக மற்றும் பதிப்புரிமை நாள்: ஏப்.23
 
உலக புத்தக மற்றும் பதிப்புரிமை நாள் (World Book and Copyright Day) அல்லது உலக புத்தக நாள் என்பது வாசித்தல், பதிப்பித்தல் மற்றும் பதிப்புரிமையூடாக அறிவுசார் சொத்துக்களைப் பாதுகாத்தல் போன்றவற்றை வளர்க்கும் நோக்குடன் ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல் மற்றும் பண்பாட்டு நிறுவனம் (யுனெஸ்கோ) ஆண்டுதோறும் ஏப்ரல் 23-ம் நாளன்று ஒழுங்கு செய்யும் ஒரு நிகழ்வு ஆகும்.

இது 1995-ம் ஆண்டு முதன் முதலாகக் கொண்டாடப்பட்டது. ஐக்கிய இராச்சியத்தில் உலக புத்தக நாள் ஆண்டுதோறும் மார்ச் மாதத்தின் முதலாவது வியாழக்கிழமை கொண்டாடப்படுகிறது.

பாரிஸ் நகரில் 1995 ஆகஸ்ட் 25 முதல் நவம்பர் 16 வரை நடந்த யுனெஸ்கோவின் 28-வது மாநாட்டில் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்படது. அத்தீர்மானம் வருமாறு, "அறிவைப் பரப்புவதற்கும், உலகெங்கிலும் உள்ள பல்வேறு கலாசாரங்கள் பற்றிய விழிப்புணர்வினைப் பெறுவதற்கும், புரிதல், சகிப்புத்தன்மை போன்றவற்றின் மூலம் மனிதர்களின் ஒழுக்கத்தினை மேம்படுத்தவும், புத்தகம் ஒரு சிறந்த கருவியாக உள்ளதால் ஏப்ரல் 23 உலக புத்தக தினமாக கொண்டாடப்படும்" என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

யுனெஸ்கோவுடன் இணந்து இந்நாளை வெற்றிகரமாகக் கொண்டாடுவதில் பல தனிப்பட்டவர்களும், அமைப்புக்களும் பங்களிப்புச் செய்கின்றன.

பின்வரும் அமைப்புக்கள் அவற்றுள் குறிப்பிடத்தக்கவை.

நூலகச் சங்கங்கள் மற்றும் நிறுவனங்களின் அனைத்துலகக் கூட்டமைப்பு

அனைத்துலகப் பதிப்பாளர் சங்கம் (International Publishers Association)

உலகெங்கிலும் இயங்கும் யுனெஸ்கோவுக்கான தேசிய ஆணையகங்கள் உலக இலக்கியத்துக்கான ஒரு குறியீடாகவே இந்நாள் தேர்வு செய்யப்பட்டதாக யுனெஸ்கோ அறிவித்துள்ளது.

1616-ம் ஆண்டு இந்நாளிலேயே மிகுவேல் டி செர்வண்டேஸ், வில்லியம் ஷேக்ஸ்பியர், இன்கா டி லா வேகா (Inca Garcilaso de la Vega) ஆகியோர் காலமானார்கள். இதே நாள் மொரிஸ் ட்ருவோன், ஹோல்டோர் லக்ஸ்னெஸ், விளாமிடிர் நபோகோவ், ஜோசெப் பிளா, மனுவேல் மெஜியா வலேஜோ ஆகிய எழுத்தாளர்களினதும் பிறந்த நாளாகவோ அல்லது இறந்த நாளாகவோ அமைகிறது.

இந்நாளைக் கொண்டாடும் எண்ணம் முதன் முதலாக ஸ்பெயின் நாட்டிலுள்ள கட்டலோனியாவில் உருவானது. இவர்கள் ஏப்ரல் 23-ம் நாளை சென். ஜார்ஜின் நாளாகக் கொண்டாடினர். இந்நாளில் ஆண்களும் பெண்களும் புத்தகத்தையும், ரோஜா மலரையும் தம்மிடையே பரிசாகப் பரிமாறிக் கொள்வார்கள். உலகப் புத்தக தினம் என்று ஒரு தினத்தை உருவாக்க வேண்டும் என்ற கருத்து சர்வதேச பதிப்பாளர் சங்கத்தால் முன்வைக்கப்பட்டு ஸ்பெயின் நாட்டு அரசால் யுனெஸ்கோவிற்கு பரிந்துரை செய்யப்பட்டது.

ரஷ்யப் படைப்பாளிகள் புத்தக உரிமைக்கும் (காப்புரிமை) முக்கியத்துவம் அளிக்கப்படவேண்டும் என்று கருதியதால் ஏப்ரல் 23 உலகப் புத்தகம் மற்றும் புத்தக உரிமை தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது.

https://www.maalaimalar.com

Link to comment
Share on other sites

வாழ்க்கையில் சில நேரங்களில் ரிஸ்க் எடுக்க வேண்டும்... ஏன்? உண்மைக்கதை #MotivationStory

 

கதை

`ந்த மனிதனுக்கு ரிஸ்க் எடுக்க தைரியமில்லையோ, அவனால் வாழ்க்கையில் எந்தச் சாதனையையும் செய்ய முடியாது’ - பிரபல அமெரிக்க குத்துச்சண்டை வீரர் முகமது அலி தன் வாழ்க்கை அனுபவத்திலிருந்து சொல்லியிருக்கும் பொன்மொழி இது. ரிஸ்க் எடுக்கும் துணிச்சல் இருந்ததால்தான் மறக்க முடியாத ஆளுமையாக பல லட்சம் பேர் மனதில் இன்றுவரை நிலைத்து நிற்கிறார் முகமது அலி. மன தைரியம் சாதனைகளை நிகழ்த்த உதவும் என்பது ஒருபுறமிருக்கட்டும். இன்றையச் சூழலில் அது இருந்தால்தான் பிரச்னைகளை எதிர்கொண்டு வாழவே முடியும். சில நேரங்களில் தைரியத்தோடு நாமெடுக்கும் ஒரு ரிஸ்க் நமக்கு மட்டுமல்லாமல், பிறருக்கும் உதவக்கூடும்; இன்னோர் உயிரையே காப்பாற்றக்கூட உதவலாம். இதை எடுத்துக்காட்டும் உண்மைக் கதை இது! 

அமெரிக்காவின் ஓஹியோ மாகாணத்திலிருக்கும் அண்ட்ஓவர் (Andover) என்ற சின்னஞ்சிறு ஊர் அது. காலைப் பொழுது. டாம் (Tom O'Connell) அப்போதுதான் தன் காலைச் சிற்றுண்டியை முடித்திருந்தார். அவருக்கு வேலைக்குச் செல்லும் அவசரம். மனைவி மெலிண்டாவின் நெற்றியில் முத்தமிட்டு விடைபெற்றார். அவருடைய மகள்கள் ஜெஸ்ஸிகாவும் சமந்தாவும் கோபத்தோடு பார்த்துக்கொண்டிருக்க, சிரித்தபடி அவர்களையும் தூக்கிக் கொஞ்சினார். கிளம்பினர். குட்டிப் பெண்கள் இருவரும் வாசல்வரை அப்பாவை வழியனுப்பப் போனார்கள். 

மழை

அந்தப் பகுதியில் கடந்த பத்து நாள்களாக மழை விளாசித் தீர்த்திருந்தது. அன்றைக்கு சூரியன் வானில் கிளம்பி வந்திருந்தாலும், அண்ட்ஓவர் மட்டும் ஈரம் உலராமல் இருந்தது. தெருக்களில் தண்ணீர் ஓடிக்கொண்டிருந்தது. அவர்கள் இருந்த தெருவையும் மழை வெள்ளம் விட்டுவைக்கவில்லை. ஒரு குட்டி ஆறுபோல மழை நீர் பெருக்கெடுத்துப் பாய்ந்தோடிக்கொண்டிருந்தது. அதோடு அந்தத் தெருவில், ஒரு பாதாளச் சாக்கடைக் குழி ஒன்று திறந்திருந்தது; அது வெளியே தெரியாதபடிக்கு மழை நீர் அதன் மேல் ஓடிக்கொண்டிருந்தது. இதெல்லாம் தெரிந்திருந்தும், சொல்லச் சொல்லக் கேட்காமல் முக்கிய வேலை என்று அலுவலகத்துக்குக் கிளம்பிப் போயிருந்தார் டாம்.

மெலிண்டா சமையற்கட்டில் ஏதோ வேலை செய்துகொண்டிருந்தார். அவருடைய கணவர் கிளம்பிப் போனதும் மகள்கள் ரப்பர் பந்து ஒன்றைவைத்து விளையாடிக்கொண்டிருந்தது நினைவுக்கு வந்தது. அவர்கள் என்ன செய்கிறார்கள் என்று பார்ப்பதற்காக சமையற்கட்டிலிருந்து வெளியே வந்தார். மூத்தவள் சமந்தா மட்டும் வாசலையே பார்த்தபடி நின்றுகொண்டிருந்தாள். ஜெஸ்ஸிகாவைக் காணவில்லை. 

அதே நேரத்தில், இரண்டு வீடுகள் தள்ளியிருந்த வீட்டு ஜன்னலிலிருந்து வெளியே பார்த்துக்கொண்டிருந்தார் ரே பிளான்கன்ஷிப் (Ray Blankenship) என்ற மனிதர். அவர் கையில் ஜூஸ் நிரம்பிய ஒரு கோப்பை இருந்தது. பத்து நாள் மழை ஊரை என்ன பாடுபடுத்தியிருக்கிறது என்பதே அவருக்கு யோசனையாக இருந்தது. அப்போதுதான் அதைக் கவனித்தார். `அட... அது யார்? யாரோ குழந்தை மாதிரி இருக்கிறதே... அது அந்தக் குட்டிப் பெண் ஜெஸ்ஸிகாதானே..!’ ஜெஸ்ஸிகாவை மழை நீர் அடித்துக்கொண்டு போவதை அவர் பார்த்துவிட்டார். 

வெள்ளம்

அப்போதுதான் ரே பிளான்கன்ஷிப்புக்கு இன்னும் கொஞ்ச தூரத்தில் ஒரு பாதாளச் சாக்கடைக்குழி இருப்பதும், அது திறந்திருப்பதும் நினைவுக்கு வந்தது. கிட்டத்தட்ட 30 அடி ஆழம்கொண்ட குழி. `அந்தக் குழிக்குள் இந்தக் குழந்தை விழுந்துவிட்டால்..! கடவுளே!’ ரே அடுத்து ஒரு கணம்கூட தாமதிக்கவில்லை. கையிலிருந்த ஜூஸ் டம்ளரைக் கீழே போட்டார். வெளியே பாய்ந்து ஓடினார். மழை வெள்ளம் அவரையே இழுத்துக்கொண்டு போய்விடும்போல இருந்தது. அவர் அந்தக் குழந்தையை நோக்கி மார்பளவு நீரில் வேக வேகமாக நடந்து போனார். எதையோ பிடித்துக்கொண்டு பேச்சு மூச்சில்லாமல் மிதந்துவந்த ஜெஸ்ஸிகாவை நெருங்கிவிட்டார். அதற்குள் மழை நீர் அவர் கழுத்தளவுக்கு வந்துவிட்டது. ரே பிளான்கன்ஷிப் ஜெஸ்ஸிகாவைத் தூக்கி தோளுக்கு மேல் வைத்துக்கொண்டார். தண்ணீர் தன்னை அடித்துக்கொண்டு போகாமலிருக்க ஏதாவது பிடி கிடைக்காதா என்று தேடினார். 

ரே பிளான்கன்ஷிப்பின் மனைவி, தன் கணவர் மழை வெள்ளத்தில் தத்தளிப்பதையும், ஒரு குழந்தையைக் கையில் பிடித்திருப்பதையும் பார்த்துவிட்டார். உடனே தொலைபேசிக்கருகே ஓடினார். போலீஸுக்கும் ஃபயர் சர்வீஸுக்கும் போன் செய்தார். 

ரே பிளான்கன்ஷிப்பும் குழந்தையும் மாட்டிக்கொண்ட இடத்திலிருந்து 20 அடி தூரத்தில் அந்தக் குழி இருந்தது. அவர் தன் கைக்குக் கிடைத்த தடுப்புச் சுவர் ஓரமாக இருந்த ஒரு கல்லைப் பிடித்துக்கொண்டு, இன்னொரு கையில் குழந்தையையும் தாங்கிக்கொண்டிருந்தார். எங்கே நழுவி குழிக்குள் விழுந்துவிடுமோ என்கிற பயம் அவருக்கு வந்தது. `இன்னும் கொஞ்ச நேரம்... கொஞ்ச நேரம்தான். யாராவது உதவிக்கு வந்துவிடுவார்கள்’ என்று குழந்தை ஜெஸ்ஸிகாவுக்குச் சொல்வதுபோல தனக்குத் தானே சொல்லிக்கொண்டார். பாய்ந்து வந்த வெள்ளம், ஜெஸ்ஸிகாவை அவரிடமிருந்து பிரித்துக்கொண்டு போய்விடுமோ என்கிற பயமும் அவருக்கு வந்தது. அவருக்கு மயக்கம் வரும்போல இருந்தது. அன்றைக்கு அவருக்கு நல்ல நேரம் விரைவிலேயே உதவிக்கு போலீஸும் ஃபயர் சர்வீஸும் வந்துவிட்டன. 

உதவி

வெள்ளத்தில் மிக மோசமாக பாதிக்கப்பட்டிருந்த ஜெஸ்ஸிகாவும் ரே பிளான்கன்ஷிப்பும் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்கள். தீவிர சிகிச்சைக்குப் பிறகு இருவரும் மீண்டெழுந்தார்கள். 

அது, 1989, ஏப்ரல் மாதம் 12-ம் தேதி. ஓஹியோவின் கடலோரக் காவல்படை கமாண்டர், ரே பிளான்கன்ஷிப்புக்கு ஓர் உயிரைக் காப்பாற்றியதற்காக விருது கொடுத்து கௌரவித்தார். அது, Coast Guard’s Silver Lifesaving Medal. ரே பிளான்கன்ஷிப் ஜெஸ்ஸிகாவை மட்டும் காப்பாற்றவில்லை; தன் உயிரையே பணயம் வைத்திருந்தார் என்பது பலருக்குத் தெரியாது. விஷயம் இதுதான்... அவருக்கு நீச்சல் தெரியாது! 

https://www.vikatan.com

Link to comment
Share on other sites

26 வயது விமானப் பணிப்பெண்ணை மணந்த 52 வயது பிரபல இந்தி நடிகர்! வைரலான நடன வீடியோ

 
 

52 வயதாகும் பிரபல இந்தி நடிகர் மிலிந்த் சோமன் 26 வயதான விமான பணிப்பெண்ணை மணந்துள்ளார். 

மிலிந்த் சோமன்

பிரபல இந்தி நடிகர் மிலிந்த் சோமன். மாடலாக  வாழ்க்கையைத் தொடங்கிய இவர் பிற்காலத்தில் நடிகராக உருவெடுத்தார். இதுவரை சுமார் 50 படங்கள் வரை நடித்துள்ள சோமன், தமிழில் பச்சைக்கிளி  முத்துச்சரம், பையா, அலெக்ஸ் பாண்டியன் உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார். இவர் ஏற்கெனவே, மிலன் என்ற பிரெஞ்ச் நடிகையைத் திருமணம் செய்திருந்த நிலையில், 2009-ம் ஆண்டு அவரை விவாகரத்து செய்தார். பின்னர் படங்களில் கவனம் செலுத்தி வந்த சோமன், சமீபத்தில் விமானப் பணிப்பெண்ணுடன் காதல் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்பட்டு வந்தது. 

இந்நிலையில், நேற்று தனது காதலி அங்கீதா கன்வாரை கரம்பிடித்துள்ளார் சோமன். மும்பை அலியாபக் என்ற இடத்தில் உறவினர்கள் முன்னிலையில் இவர்களது திருமணம் நடந்தது. அங்கீதா அசாம் மாநிலத்தைச் சேர்ந்தவர் என்பதால் அசாம் மக்கள் மரபுப்படி திருமணம் நடந்தது. அங்கீதாவுக்கு 26 வயதாகிறது என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக திருமணத்துக்கு முன் நடந்த மெஹந்தி நிகழ்ச்சியில் மணமக்கள் இருவரும் நடனமாடிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.

 

 

https://www.vikatan.com

Link to comment
Share on other sites

பிரன்ச் ஆடை வடிவமைப்பாளரின் தனித்துவமான ஆடை வடிவமைப்பு

 

அவர்களின் தனிப்பட்ட வடிவமைப்பும், நேர்த்தியான அழகு கலையும் அதற்கு துணை நிற்கின்றது. இதேப்போன்று தன் தனி திறமையால் உலக மக்களின் கவனத்தினை ஈர்த்துள்ளார் பிரன்ச் ஆடை வடிவமைப்பாளர் ஒருவர்.

ஆம்., பிரான்ஸ் நாட்டை சேர்ந்த Sylvie Facon என்பவர், தனது ஆடை வடிவமைப்புகளால் பெரும் பாராட்டுகளைப் பெற்று வருகின்றார். இவரது ஆடைகளின் தனிச்சிறப்பு என்னவென்றால்,. பொருட்களுடன் பின்னிப் பினைந்த வடிவமைப்பினை ஆடைகளில் வழங்குவது தான். அவரது படைப்புகள் ஒரு சில உங்கள் பார்வைக்கு.

DXr2_oRW4AcWJk5-362x400.jpg   DZsAqLCWAAASA5L-300x400.jpg

DYBWNo1WkAYVLyk-300x400.jpg                   DYBWNouXUAAG8KA-300x400.jpg

DZ0EGQoWsAEGg7R-399x400.jpg                     DZ0EHB0X4AA-iOd-200x202.jpg

DZwuDQTWsAA7wkG-320x400.jpg                  DZwuFKWX0AA4ltV-300x400.jpg

DZwuGDXXcAAG22z-300x400.jpg                  DZwuHvhXkAE9Ybi-320x400.jpg

 

DXfQ9iRV4AASUZl-200x267.jpg                 2-3-200x263.jpg

 

 

DXr3A-WWsAUt_rK-200x200.jpg

 
Link to comment
Share on other sites

உலகப் புத்தக நாள் ஏப்.23: துள்ளித் துளிர்த்த காதல்!

 

 
accidently%20love

கா

தலை உருகி மருகிச் சொல்லும் கதைப் புத்தகங்களுக்கு எப்போதுமே இளைஞர்கள் மத்தியில் தனி வரவேற்பு இருக்கும். ‘ஆக்ஸிடெண்ட்லி இன் லவ்’ என்ற புத்தகத்துக்கும் இளைஞர்கள் அமோக வரவேற்பு அளித்தார்கள். ஏனென்றால், இந்தக் கதையின் கரு, காதலும் காதல் நிமித்தமுமே.

பொதுவாக, காதல் படங்களும் காதல் புத்தகங்களும் பெரும்பாலும் நமக்குப் பிடித்தவைதான். குறிப்பாக, சோகத்தில் முடியும் லைலா மஜ்னு வகைக் காதல். ஆனால், இப்போது காலம் மாறிவிட்டது. இன்று காதலை எப்படிச் சொல்வது என்று தயங்கி எந்த இளைஞனும் ‘இதயம்’ முரளியைப் போல் கையில் புத்தகத்துடன் தலையைக் குனிந்தபடி மருகித் திரிவதில்லை. ஒருவேளை அந்தக் காதல் தோல்வியில் முடிந்தாலும், அதற்காக அவர்கள் தாடி வளர்த்து சோகத்தில் மூழ்குவதில்லை. இன்றைய இளைஞர்கள் ‘அட்டகத்தி’ தினேஷைப் போல் காதலை எளிதாக எடுத்துக்கொண்டு வாழ்வை வீணடிக்காமல் மகிழ்ச்சியுடன் கடந்து செல்கிறார்கள்

நிகிதா சிங் எழுதியிருக்கும் ‘ஆக்ஸிடெண்ட்லி இன் லவ்’ என்ற புத்தகத்தில் இருக்கும் காதல் இன்றைய தலைமுறையினரின் காதல்தான். உணர்ச்சிக் கொந்தளிப்புகள் எவையுமின்றி, ‘எது நடந்தால்தான் என்ன?’ என்ற ரீதியில் வெகு சாதாரணமாகக் கடந்துசெல்லும் காதல் அது. சொல்லப்போனால் இந்தப் புத்தகத்தின் மையக் கருவை மணிரத்னம் சுட்டுவிட்டாரோ என்று சந்தேகத்தை ஏற்படுத்தும் அளவுக்கு இதன் கரு ‘ஓகே கண்மணி’ படத்தின் கதையுடன் ஒத்துப்போகிறது.

nikitha%20singh

நிகிதா சிங்

அந்தப் படம் பார்த்தவர் களுக்கு இந்தப் புத்தகத்தின் கதையைத் தனியாகச் சொல்லத் தேவையில்லைதான். இருந்தாலும், மற்றவர்களுக்காக இந்தக் கதையின் சுருக்கத்தைச் சொல்ல வேண்டியுள்ளது. ஒரு காலத்தில் மாடலிங் துறையில் கொடிகட்டி பறந்து, இன்று அதே துறையில் சரிவைச் சந்தித்துக்கொண்டிருக்கும் ஷவ்வி முகர்ஜி எனும் இளம் பெண்ணுக்கும் துஷார் மெகர் எனும் ஒளிப்படக் கலைஞனுக்கும் இடையேயான நிர்பந்தமற்ற காதல் வாழ்க்கைதான் இந்தக் கதை.

ஒரு போட்டோ சூட்டில் துஷாரைப் பார்த்த மாத்திரத்திலேயே இருவருக்குள்ளும் காதல் பற்றிக்கொள்கிறது. முதல் சந்திப்பின்போது இருவரும் மதுபோதையின் உச்சத்தில் இருந்தனர். அதனால், அவர்கள் அன்று பேசியதும் கூடிக் கலந்ததும் எந்த அளவுக்கு உண்மை என்று அவர்களுக்கு உறுதியாகத் தெரியவில்லை.

ஒருவித நெருக்கத்தை உணர முடிந்த அவர்களால் காதலை மங்கலாகவே உணர முடிகிறது. எனவே, காதல் கல்யாணம் என்ற சமூகக் கட்டுகளிலும் நிர்ப்பந்தங்களிலும் சிக்கிக் கொள்ளாமல் நெருக்கத்துடன் மட்டும் தங்கள் உறவைத் தொடர்வது என்று முடிவுசெய்து வாழ்கின்றனர். இறுதியில் சுவாரசியமும் இழுவையும் கலந்த சில பக்கங்களுக்குப் பிறகு காதலை உணர்ந்து இருவரும் இணைந்து வாழ ஆரம்பித்துக் கதையை முடித்துவைக்கிறார்கள்.

ரொம்பப் பிரமாதமான கதை இல்லை என்றாலும்கூட, சிக்கலற்ற வார்த்தைகளைக்கொண்டு வாசிப்பதற்கு எளிதான மொழியில் சுவாரசியமான சம்பவங்களைத் தொகுத்து வாசிக்கும் பொழுதுகளை நிகிதா சிங் எளிதாகக் கவர்ந்துகொள்கிறார். வாசிப்பு ஒரு சுவாரசியமான அனுபவம். ஆனால், வாசிக்கும் பழக்கம் இல்லாதவர்களுக்கு அது சிரமமான ஒன்றுதான். இந்தப் புத்தகம் அந்தச் சிரமத்தைக் களைந்து அவர்களையும் வாசிப்பைக் காதலிக்க வைக்கக்கூடும்.

http://tamil.thehindu.com

Bild könnte enthalten: eine oder mehrere Personen

எந்த வீட்டில் நூல் நிலையம் இருக்கிறதோ, அந்த வீட்டில்தான்....? #உலகபுத்தகதினம் | 

Link to comment
Share on other sites

பேசும் படம்

 

 
22CHLRMARINABEACH

கொளுத்தும் கோடை வெயிலில் சென்னை மெரினா கடற்கரையில் பணிபுரியும் மாநகராட்சி ஊழியர்கள் நிழலுக்கு ஒதுங்க இடமில்லாமல் ராட்டினத்தின் கீழ் அமர்ந்து மதிய உணவு சாப்பிடுகிறார்கள்.படம் வி. கணேசன்   -  The Hindu

டந்த வாரம் உள்ளூர் முதல் உலகம்வரை பெண்கள் சார்ந்து பல சம்பவங்கள் நடந்துள்ளன. துயரமும் மகிழ்ச்சியும் பெருமிதமும் நிறைந்த உணர்வுகளின் கலவையான ஒளிப்படத் தொகுப்பு இது.

22CHLRDABAYA

சவூதி அரேபியாவில் பெண்களுக்குத் தீவிரமான ஆடைக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் ‘அபயாஸ்’ என்ற புதுமையான உடைகளை அணிந்துகொண்டு உடற் பயிற்சிகளில் பெண்கள் ஈடுபட்டுவருகின்றனர்.   -  AFP

   
 
22CHLRDSPORTS

ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற 21-வது காமன்வெல்த் போட்டியில் இரட்டையர் பிரிவு ஸ்குவாஷ் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற தீபிகா பல்லிக்கல் - ஜோஷ்னா சின்னப்பா இருவரும் சென்னை திரும்பினர். படம்: ஜோதிராமலிங்கம்.   -  THE HINDU

22CHLRDSRIREDDY

ஸ்ரீரெட்டி (இடமிருந்து இரண்டவாது)என்ற குணச்சித்திர நடிகை, பிரபல தெலுங்கு நடிகர் மீது பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்து போராட்டத்தில் ஈடுபட்டார். அவருக்கு ஆதரவாக தெலுங்குத் திரையுலக குணச்சித்திர நடிகைகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.   -  The Hindu

22CHLRDDEEPIKA

அமெரிக்காவிலிருந்து வெளிவரும் ‘டைம்’ வார இதழ், உலக அளவில் செல்வாக்கு செலுத்தும் 100 நபர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்தப் பட்டியலில் பாலிவுட் நடிகை தீபிகா படுகோன் இடம்பெற்றுள்ளார்.   -  AP

http://tamil.thehindu.com

Link to comment
Share on other sites

உள்ளே போனால் தொலைந்துவிடுவோம் - இந்தியக் குகையில் ஒரு ரகசிய உலகம்

உலகின் மிக நீண்ட மணற்கல் குகை இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான மேகாலயாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த தனிச்சிறப்பு வாய்ந்த குகையை பார்வையிட விஞ்ஞானிகள் குழுவினருடன் சென்றார் பிபிசி நிருபர் செளதிக் பிஸ்வாஸ்.

தேவதைகளின் குகைபடத்தின் காப்புரிமைMARCEL DIKSTRA Image caption24.5 கிமீ நீளம் மற்றும் 13 சதுர கிமீ பரப்பளவை கொண்ட உலகின் நீண்ட குகை இந்தியாவில் உள்ளது

"பயணத்தில் நீங்கள் தனித்து போய்விட்டால் வெளியேறும் வழியை கண்டுபிடிக்க முடியாது" என்று, குகைக்கு செல்லும் கரடுமுரடான பாதையில் பயணத்தை தொடங்குவதற்கு முன்னரே பிரையன் டி. கார்ப்ரான் எங்களுக்கு முன்னெச்சரிக்கை விடுத்தார்.

காடுகளின் சரிவுகளில் மரங்கள், தாவரங்களுக்கு இடையே ஏறக்குறைய ஒரு மணிநேரம் கடந்து, குகையின் நுழைவாயிலை அடைந்தோம். உள்ளூர் காஷி மொழியில் 'க்ரெம் புரி' என்று அழைக்கப்படும் அந்த குகையை தமிழில் மொழிபெயர்த்தால் 'தேவதைகளின் குகை' என்று பொருள் வருகிறது.

கடல் மட்டத்திலிருந்து 4,025 அடி (1227 மீ) ஆழமான செங்குத்தான பள்ளத்தாக்கின் அடிவாரத்தில் அமைந்துள்ளது இந்த 'தேவதைகளின் குகை'. 24.5 கிமீ நீளமும் (15 மைல்), 13 சதுர கிமீ பரப்பளவையும் உள்ளடக்கிய இந்த குகை, ஜிப்ரால்டரைவிட இருமடங்கு பெரியது.

பூமியிலேயே மிக அதிக மழை பெய்யும் பகுதியாக அறியப்பெற்ற மாசிம்ராம் பசுமை சமவெளிகளில் 13 சதுர கிமீ பரப்பளவில் ஜிப்ரால்டர் விரிந்து பரந்துள்ளது.

வெனிசுவேலாவின் 18.7 கிமீ நீளம் கொண்ட 'இவாவரி யியூடா' என்ற குகையே இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் வரை உலகின் மிக நீண்ட குகையாக கருதப்பட்டது.

71 வயதிலும் சுறுசுறுப்பாக செயல்படும் பிரையன் டி. கார்ப்ரான் குகைகளைப் பற்றிய பல விஷயங்களை அறிந்திருக்கிறார். கிட்டத்தட்ட கால் நூற்றாண்டாக இந்த அழகிய மலை மாநிலத்தில் குகைகளை தேடும் முயற்சியில் அவர் ஈடுபட்டிருக்கிறார்.

தேவதைகளின் குகைபடத்தின் காப்புரிமைRONNY SEN

1992ம் ஆண்டு அவர் ஆய்வுகள் மேற்கொள்ளத் தொடங்கியபோது, மேகாலயாவில் ஒரு டஜன் குகைகள் மட்டுமே இருந்தன.

26 ஆண்டுகளில் 28 தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ள அவர், 30 ஆய்வாளர்கள் கொண்ட வலுவான சர்வதேச குழு ஒன்றை உருவாகியுள்ளார்.

புவியியலாளர்கள், நீர்வாழ் உயிரின நிபுணர்கள், உயிரியலாளர்கள், தொல்லியல் துறையை சேர்ந்தவர்கள் என பல்வேறு துறையை சேர்ந்த இந்த ஆராய்ச்சிக் குழு, மாநிலத்தில் 1,650 குகைகளை கண்டறிந்துள்ளது.

தற்போது உலகின் மிகவும் சிக்கலான குகை அமைப்புக்கள் கொண்ட இடமாக அறியப்படும் மேகாலயா மாநிலத்தில் நாட்டிலேயே மிக அதிகமான குகைகள் உள்ளது தெரியவந்துள்ளது.

சரி, இப்போது தேவதைகளின் குகைக்குள் செல்ல நாங்கள் தயாராகிவிட்டோம்.

வழிகாட்டுவதற்காக விளக்குகளை கொண்ட கடினமான தொப்பிகளை அணிந்த நாங்கள், இருளில் நுழைந்தோம். இடப்புறம் கீழ்ப்பகுதியில் சிறிய நடைபாதை உள்ளது. இந்த மூடப்பட்ட, இருண்ட குகை மீள முடியா அச்சத்தை (கிளாஸ்ட்ரோஃபோபியா) ஏற்படுத்தும்.

துளைகள் மூலம் உள்ளே செல்ல விரும்பினால், குகை ஆராய்ச்சி உடையை (cave suits) அணிந்திருக்க வேண்டும். அப்போது குகையின் வாயிலில் இருந்து தவழ்ந்தவாறே செல்லலாம். நான் அந்த பிரத்யேக உடையை அணியாததால், அந்த சந்தர்ப்பத்தை இழந்து விட்டேன்.

தேவதைகளின் குகைபடத்தின் காப்புரிமைMARCEL DIKSTRA Image captionவயிறு, கை-கால், முழங்காலை பயன்படுத்தி தவழ்ந்தவாறு செல்ல வேண்டும்

மர்மமான குகை

பிரதான நடைபாதையில், இரண்டு பெரிய பாறைகள் ஒன்றாக காணப்பட்டன. முன்னோக்கி செல்வதற்கு, அவற்றின்மீது ஏற வேண்டும் அல்லது அவற்றிற்கு நடுவே நீந்திச் செல்ல வேண்டும்.

நான் புத்திசாலித்தனமாக இரண்டு வழிகளிலும் முயற்சி செய்தேன், ஆனால் என்னுடைய காலணிகள் பாறைகள் இடையே சிக்கிக் கொண்டன. தண்ணீரில் மூழ்கியுள்ள பாறைகளைத் தாண்டிச் செல்கிறோம், அங்கு நீரோட்டம் மெதுவாக உள்ளது. மழைக்காலத்தில் நீரோட்டம் வேகமாகிவிடும்.

சுவரில் ஒரு பெரிய சிலந்தி இருப்பதை கண்டறிந்தார் பிரையன் கர்ப்ரான். அதுமட்டுமல்ல பாறையின் சுவர்களில் படிந்திருப்பது சுறாவின் பல் அச்சாக இருக்கலாம் என்று புவியியலாளர்கள் கருதுகின்றனர்.

"இந்தக் குகை பல ரகசியங்களை தன்னுள் மறைத்து வைத்துள்ளது" என்கிறார் அவர்.

ஒரு பெரிய வலையமைப்பில் ஒன்றோடொன்று இணைக்கப்பட்டுள்ள நூற்றுக்கணக்கான குறுகிய பாதைகளும், நீண்ட வழித்தடங்களையும் கொண்ட இந்த தேவதைகளின் குகை நம்பமுடியாத தனித்துவமான தோற்றத்தைக் கொண்டுள்ளது.

இந்த குகையில் வழக்கமாக பிற குகைகளில் காணப்படுவது போன்ற ஸ்டாலாக்டைட்டுகள் மற்றும் ஸ்டாலாக்மைட்டுகள் (Stlacktait & Stlagmait) கணப்படுகின்றன. அதாவது நிலத்தின் மேற்பரப்பில் இருந்து கனிமங்கள், நீர் போன்றவை குகையின் உச்சியில் கசிந்து ஏற்படும் தோற்றம் விதானம் போன்று இருக்கும், அதை ஸ்டாலாக்டைட் என்கிறோம். அதேபோல் நிலத்தின் கீழ்பரப்பில் இருந்து கசிவதால் ஏற்படும் தோற்றம் ஸ்டாலாக்மைட் எனப்படும்.

தவளைகள், மீன்கள், பிரம்மாண்ட சிலந்திகள் மற்றும் வெளவால்கள் என ஏராளமான உயிரினங்களும் இங்கு காணப்படுகின்றன.

"இந்த குகைகளை ஆய்வு செய்வது மிகவும் கடினமான சவால்" என்கிறார் சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த குகை மற்றும் குகை வரைபட நிபுணர் தாமஸ் அர்பென்ஸ்.

நிலத்தடி பயணம் மேற்கொள்பவர்களுக்கு வழங்கப்படும் குகையின் வரைபடத்தை உன்னிப்பாக கவனித்தால், குகை, அதன் பாதைகள், மேடு-பள்ளங்கள், பாறைகள் மற்றும் பெரிய பாறைகளின் எல்லைகளில் சர்வேயர் பெயர்களையும், குறிப்புகளையும் காணலாம்.

பிரையன் டி. கார்ப்ரான்படத்தின் காப்புரிமைRONNY SEN Image caption26 ஆண்டுகளாக குகைகளை தேடும் ஆராய்ச்சியில் ஈடுபட்டிருக்கிறார் பிரையன் டி. கார்ப்ரான்

உதாரணமாக, பள்ளத்தாக்கில் நடுப்பகுதியில் அமைந்துள்ள 'கிரேட் வொயிட் ஷார்க்' என்ற சாம்பல் பாறையை காணலாம். பார்ப்பதற்கு சுறா போன்ற தோற்றத்தில் இருக்கும்.

மணற்பாறைகளில் நடப்பது உண்மையிலுமே மிகப்பெரிய சவால். குறுகிய ஆபத்தான அச்சுறுத்தும் இடங்களில் தவழ்ந்து செல்லும் அனுபவம் கற்பனை செய்தே பார்க்க முடியாதது. அந்த அனுபவத்தை வார்த்தைகளால் விவரிப்பதும் சாத்தியமல்ல என்றே தோன்றுகிறது.

ஸ்லீப்பி லஞ்ச் (Sleepy Lunch) என்று பெயரிடப்பட்ட இடத்தில் ஆய்வாளர்கள் மதிய உணவு இடைவேளைக்காக தங்கினார்கள், அதில் ஒருவர் உண்மையிலுமே உறக்கம் வருவதை உணர்ந்தார்.

இந்த தேவதைகளின் குகையில் மனிதர்கள் வாழ்ந்தார்களா?

குகைகளை தேடி கண்டறியும் ஆய்வில் ஈடுபட்டுள்ள இத்தாலிய விஞ்ஞானி பிரான்செஸ்கோ சாவ்ரோ, சில சுறா பற்களை அடையாளம் கண்டதாகச் செல்கிறார்.

கண்டுபிடிக்கப்பட்ட சில எலும்புகள், 60 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு இருந்த கடல்வாழ் டைனோசர்களாக இருக்கலாம் என்றும் அவர் குறிப்பிடுகிறார்.

தேவதைகளின் குகைபடத்தின் காப்புரிமைRONNY SEN Image captionதேவதைகளின் குகை

இங்குள்ள குகைகளில் பல அணுகுவதற்கு மிகவும் கடினமான ஆபத்தானவைகளாக கருதப்படுகின்றன.

"இங்கு கண்டெடுக்கப்பட்டிருக்கும் பல பொருட்கள் அறிவியலாளர்களால் பகுப்பாய்வு செய்யப்பட்ட பிறகே, மனிதர்கள் இங்கு வாழ்ந்தார்களா என்பது தெரியவரும்" என்கிறார் செளரோ.

ஆனால் அதற்கான வாய்ப்புகள் கண்ணுக்கு எட்டிய வரையில் தெரியவில்லை என்கின்றனர் விஞ்ஞானிகள். ஏனெனில் ஆதி மனிதர்கள் வசிப்பதற்கு பெரிய அளவிலான குகைகளையே தேர்ந்தெடுப்பார்கள்.

அதோடு, மழைக்காலங்களில் தங்குவதற்கு இந்த இடம் பொருத்தமானது அல்ல. மேகாலயா அதிக மழை பெய்யும் இடமாக இருப்பதால், இங்குள்ள பெரும்பாலான குகைகளில் மனிதர்கள் வாழ்ந்திருப்பதற்கான சாத்தியங்கள் இல்லை என்றே சொல்லலாம்.

குகைகள் உருவாவது எப்படி?

மழைநீர் காற்றில் இருந்து கரியமில வாயுவை ஈர்ப்பதால் சுண்ணாம்புப் பாறைகள் கரைந்து வலுவிழந்துவிடும். பொதுவாக மணற்கல்லால் உருவாகும் குகைகள் அரியவை. ஏனெனில் இந்த வகை பாறைகளின் கரையும் திறன் குறைவு. தாழ்வான இடத்தில் இருக்கும் பாறைகளை கரைக்கவும், அதில் வெற்றிடத்தை உருவாக்கவும், மிக அதிகமான அளவு நீர் தேவைப்படும்.

தேவதைகளின் குகைபடத்தின் காப்புரிமைMARCEL DIKSTRA

உலகிலேயே மிக அதிகமான மழைப்பொழிவை கொண்ட மாநிலம் மேகாலயா. எனவே, இங்கு இத்தகைய மணற்குகைகள் வியத்தகு முறையில் உருவாக்கப்படுவது ஆச்சரியமளிக்கவில்லை.

தேவதைகளின் குகை போன்ற குகைகள், இந்த இடத்தின் உலகின் காலநிலை மற்றும் வாழ்க்கையை புரிந்து கொள்ள உதவுகின்றன.

"இவை புவியின் உட்பகுதியில் உள்ள சூழல் தொடர்பான பாதுகாக்கப்பட்ட தகவல்களை வழங்குகின்றன" என்று கூறுகிறார் மேகலயாவில் இருக்கும் குகைகளைத் ஆரயும் 'கிளவுட்ஸ் எக்ஸ்பேடிஷன்' அமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சைமன் ப்ரூக்ஸ்.

பூமி இந்த "மேற்பரப்பு காப்பகங்கள்" கிரகத்தின் மேற்பரப்பில் ஏற்பட்ட பனிச்சரிவு, எரிமலைகளின் செயல்பாடு, வெள்ளம் போன்ற இயற்கை நிகழ்வுகளின் தடயங்களை பாதுகாக்கின்றன.

மேகாலயாவில் இருக்கும் குகைகள் உலகெங்கும் உள்ள ஆராய்ச்சியாளர்களை ஈர்க்கின்றன. 31.1 கி.மீ நீளம் கொண்ட லயட் பிரா (Liat Prah) சுண்ணாம்பு குகை அமைப்பும் இந்த மலைத்தொடரில்தான் அமைந்துள்ளது. அதிகபட்ச உயரத்தில் இருந்து, குறைந்த உயரம் வரையிலான இந்த ஆழமான குகைகள் 317 மீட்டர் முதல் 97 மீட்டர் வரையிலானவை.

பெரும்பாலான குகைகளில் எப்போதுமே மனிதர்கள் வசித்ததே இல்லை என்பது உண்மையாக இருந்தாலும், போர்க்காலத்தில் தஞ்சம் புக சில குகைகள் பயன்பட்டால், சிலவற்றை வேட்டையாடுபவர்கள் பயன்படுத்தியதற்கான சான்றுகள் கிடைத்துள்ளன. அதோடு இறந்தவர்களை அடக்கம் செய்வதற்கும் சில குகைகள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

தேவதைகளின் குகையில் கிடைத்த சில பொருட்கள்படத்தின் காப்புரிமைRONNY SEN Image captionதேவதைகளின் குகையில் கிடைத்த சில பொருட்கள்

மேகாலயாவில் நிலக்கரி சுரங்கங்கள் மற்றும் சுண்ணாம்பு வர்த்தகம் இந்த குகைகளுக்கு மாபெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளன. (மேகாலயாவில் நிலக்கரி சுரங்கங்களைத் தடுப்பதற்காக, 2007இல் கார்ப்ரான் உச்சநீதிமன்றத்திற்கு சென்றார்.)

தேவதைகளின் குகையில் வெப்பநிலை எப்போதும் 16-17 டிகிரிக்கு இடைப்பட்ட நிலையிலேயே இருக்கும். இங்கு ஆக்ஸிஜன் பற்றாக்குறை இல்லை, ஏனெனில் இந்தக் குகையின் சிறிய பிளவுகள், விரிசல்கள் மற்றும் இரண்டு நுழைவாயில்கள் வழியாக காற்றோட்டம் நன்றாகவே இருக்கிறது.

"குகையின் உள்ளே இருக்கும்போது கவனமாக இருங்கள்" என்று எச்சரிக்கை விடுக்கிறார் கார்ப்ரான்.

"குகைக்குள் எந்தவொரு ஆபத்தான சவால்களையும் நீங்கள் எதிர்கொள்ள முடியாது."

https://www.bbc.com

Link to comment
Share on other sites

கடவுளாக இருந்த மனநல மருத்துவரைச் சைத்தானாக முன்னிறுத்திய மாத்திரை... ஒரு நிஜ திகில் கதை!

 
 

திகில் படங்களில், கதைகளுக்கு எந்த அளவுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டுமோ, அதே அளவு அது நடக்கும் இடங்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். காட்டில் மாட்டிக்கொண்ட நண்பர்கள் கூட்டம், வீட்டின் நிலவறையில் ஒளிந்திருக்கும் மர்மம் என ஒரு சில கதைகளை அது நடக்கும் இடத்தைக் குறிப்பிடாமல் வெளியே சொல்லவே முடியாது. தமிழில் சந்திரமுகி பங்களா, பீட்சா பேய் வீடு தொடங்கி பல படங்களை இந்த வரிசையில் இணைத்துக் கொள்ளலாம். அந்த வகையில் பழைய மனநல காப்பகங்களைச் சுற்றி நடக்கும் கதைகள் மிகவும் திகிலானவை. அப்படியொரு கதைதான் இதுவும். என்ன ஒரு வித்தியாசம், இது நிஜத்தில் நடந்த கதை!

1936-ம் ஆண்டு நம் கதையின் நாயகன் டாக்டர். வால்டர் ஃப்ரீமேன் அமெரிக்காவின் ஜார்ஜ் வாஷிங்டன் மருத்துவமனையில் மனநல மருத்துவராக வேலை பார்க்கிறார். அவருக்கு ஒரு மிகப்பெரிய லட்சியம் உண்டு. இந்த உலகில் மனநல காப்பகங்களே இருக்கக் கூடாது என்பது அவரது எண்ணம். மனநலமின்றி தவிப்பவர்களை சிகிச்சை என்ற பெயரில் வதைத்து, அவர்களைப் பார்த்துக்கொள்ள நிறைய பணியாளர்கள், இதெல்லாம் எதற்கு? மனநலம் இல்லாதவர்களை குணப்படுத்திவிட்டால் இதற்கான தேவைகளே இருக்காதே! அதற்காக அவர் ஒரு வழிமுறையையும் கண்டறிந்தார். அது மிகவும் சுலபமான வழிமுறைதான், ஆனால், கொடூரமானது. 

மனநல அறுவை சிகிச்சை

நோயாளி ஸ்ட்ரெட்சரில் படுத்திருப்பார். வாயில் கார்டு (Guard) ஒன்று மாட்டியிருப்பார்கள். நெற்றியில் ஜெல்லி போன்ற ஒரு பொருள் இருக்கும். திடீரென எலெக்ட்ரிக் ஷாக் கொடுக்கப்படும். நோயாளி உடனே அரை மயக்க நிலைக்குச் சென்று விடுவார். பின்னர், அவர் இடது கண்ணுக்கு மேலே, புருவமும், மூக்கின் முடிவும் சந்திக்கும் இடத்தில் ஒரு தடிமனான ஊசி (Icepick) உள்ளே செலுத்தப்படும். அது நேரே, நெற்றிக்கதுப்பின் வழியே உள்ளே சென்று மூளையின் மடல்களைத் தொடும். அங்கே மூளையின் நரம்புகளைப் பிரித்து எடுப்பதுபோல ஒரு சில இடங்களில் இவர் நோண்டுவார். அவ்வளவுதான், சிகிச்சை முடிந்தது. மயக்க மருந்து, மருத்துவமனையில் தங்க வேண்டும் என்று எந்தத் தேவையும் கிடையாது. வீட்டுக்குச் சென்று விடலாம். இதிலேயே நோயாளிகள் குணமாகி விடுவார்கள். அல்லது அவ்வாறு டாக்டர். வால்டர் நினைத்துக்கொண்டார். இதற்கு அவர் Prefrontal Lobotomy என்று பெயர் வைத்தார். தற்போது இது transorbital leucotomy என்று அறியப்படுகிறது. இது நோயாளிகளின் பிரமைகளை அழிக்கிறது என்று அவர் உறுதியாக நம்பினார். ஆனால், இது மிகப்பெரிய பின்விளைவுகளை ஏற்படுத்தப் போகிறது என்று அப்போது அவருக்குத் தெரிந்திருக்கவில்லை.

அறுவை சிகிச்சை வரைபடம்அவரிடம் இந்தச் சிகிச்சை பெற்ற அனைத்து நோயாளிகளும், இயல்பு வாழ்க்கைக்கு திரும்பினர். டாக்டர். வால்டர் மற்றும் அவரது உதவியாளர் டாக்டர். ஜேம்ஸ் வாட்ஸ் இருவரும் தொடர்ந்து பலருக்கு இதே சிகிச்சையை அளித்தனர். பத்திரிகைகள் இவர்கள் நிகழ்த்தும் இந்தச் சிகிச்சை குறித்து கடுமையான விமர்சனங்களை முன் வைத்தன. ஆனால், நோயாளிகள் குணமாகிறார்கள் எனும்போது பெரிய பிரச்னைகள் எதுவும் வரவில்லை. கடினமான ஒன்றாக இருந்தாலும், மக்கள் இந்தச் சிகிச்சையை வரவேற்கத் தொடங்கினார்கள் என்பதுதான் உண்மை. காலம் முழுவதும் நம் அன்புக்குரியவர்கள் மனநலமில்லாதவர்களாக இருக்க வேண்டியதில்லை. இந்தச் சிகிச்சைக்கு மயக்க மருந்து தேவையில்லை. அறுவைசிகிச்சை தேவையில்லை. ஏதோ ஓர் அறையும், இருபது நிமிடங்களுமே போதுமானது. யார்தான் பின்னர் இதை வரவேற்க மாட்டார்கள்?

டாக்டர் வால்டர் பின்னர் இதை வேறு சில டாக்டர்களுக்கும் செய்து காட்ட, ஒரு சிலர் வாந்தி எடுத்து ஓடினர். இருந்தும் 400 நோயாளிகளுக்கு இந்தச் சிகிச்சையை வால்டர் அளித்தார். ஒரு சிலர் இறந்து போயினர். இருந்தும் அந்தச் சதவிகிதம் மிகவும் குறைவுதான் என்பதால், வால்டர் புகழின் உச்சியிலேயே இருந்தார். தன்னைக் கடவுளாக உணர்ந்தார். எலெக்ட்ரிக் ஷாக் வைத்த பிறகு, அரை மயக்க நிலைக்குப் போகாமல் இருந்தாலும், இவர் சிகிச்சை அளிப்பதை நிறுத்தவில்லை. இந்த முறை, இவரின் கொடூர எண்ணத்தைப் பார்த்து உதவியாளர் ஜேம்ஸ் அவர்களே அரண்டுதான் போனார். ஆனால், மக்கள் வால்டரை முழுமையாக நம்பினர். மனநல பிரச்னைகளில் இருந்து விடிவு காலம் வந்துவிட்டதாகவே அவர்கள் கருதினர்.

டாக்டர் வால்டர் மற்றும் டாக்டர் வாட்ஸ்

Photo Courtesy: Harris A Ewing

டாக்டர் வால்டர் அவர்களின் இந்தச் சிகிச்சையைப் பெற்றவர்களில் ஒன்றிரண்டு பிரபலங்களும் அடக்கம். அப்போதைய புகழ்பெற்ற நடிகர், ஆஸ்கர் விருது வென்ற வார்னர் பாக்ஸ்டர் அவர்களும் மனச்சோர்வு அடைந்து பின்னர், வால்டர் அவர்களிடம் இந்தச் சிகிச்சையை பெற்றுக்கொண்டார். புகழ்பெற்ற அமெரிக்க தொழிலதிபர் மற்றும் அரசியல்வாதியான ஜோசப் கென்னடி சீனியர் அவர்களின் மூத்த மகள் ரோஸ்மேரி கென்னடிக்கு சிறுவயதில் இருந்தே மனநல பிரச்னை. அவருக்கு 23 வயதானபோது, டாக்டர் வால்டரைப் பற்றி அறிந்துகொள்ள, ரோஸ்மேரிக்கும் இதே சிகிச்சை அளிக்கப்பட்டது. இவர் வேறு யாருமல்ல, புகழ்பெற்ற அமெரிக்க ஜனாதிபதி ஜான் F. கென்னடி அவர்களின் சகோதரி.

ரோஸ்மேரி கென்னடி

Photo Courtesy: Hulton-Deutsch Collection/CORBIS

அதே நேரத்தில் மனநல மருத்துவ அறிவியல் தன் அடுத்த கட்டத்துக்குச் செல்லத் தயாரானது. ஆனால், துரதிர்ஷ்டவசமாக, மனநல துறையில் அதுவரை முக்கிய இடத்தில் பயணித்த வால்டருக்கு அந்த அடுத்தகட்டத்தில் இடம் கிடைக்கவில்லை. சந்தையில் தொராஸின் (Thorazine) என்று ஒரு மாத்திரை அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த மாத்திரை மனநல நோயாளிகளைக் கட்டுக்குள் வைத்துக் குணப்படுத்துவதாக பல்வேறு ஆராய்ச்சிகள் மூலம் தெரிய வர, மக்களும் பிற மனநல மருத்துவர்களும் இப்போது அதன்பின் சென்றனர். ஏற்கெனவே வால்டரின் கொடூர சிகிச்சை முறைக்கு அவர் மனைவி கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தார். இதனிடையே ஒரு விபத்தில் அவர் மகனைப் பறிகொடுக்க, குடும்பத்தில் இருந்த நிம்மதியும் வால்டரை விட்டுப் பறிபோனது. அவரின் உதவியாளர் வாட்ஸ், இந்தக் கொடூர சிகிச்சை முறையை நிறுத்துமாறு வால்டருக்கு அறிவுரை வழங்க, அதை ஏனோ வால்டரால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. அதுவரை கடவுளாக எல்லோராலும் பார்க்கப்பட்ட வால்டர், ஒரு சைத்தானாக முன்னிறுத்தப்பட்டார். அவரும் அப்படியே நினைத்துக்கொண்டார்.

அதன் பிறகுதான் வால்டருக்குப் பல உண்மைகள் புரிய ஆரம்பித்தன. மனநலம் பாதித்தவர்களுக்கு தான் அளித்த சிகிச்சை அவர்களைப் பூரண குணமடைய செய்ததா என்ற கேள்வி அவருக்குள் சிம்மாசனம் இட்டு அமர்ந்தது. 1960-ம் ஆண்டில் ஒரு நெடும் பயணம் மேற்கொண்டார். அவர் சிகிச்சை அளித்த நோயாளிகள், சுயநினைவுடன் இருந்தாலும், கிட்டத்தட்ட ஒரு நடைப்பிணம் போலவே இருக்கிறார்கள் என்ற உண்மையை உணர்ந்துகொண்டார். அதாவது, முன்னர் மனநலம் இன்றி தவித்தபோது அவர்களைப் பேணிப் பாதுகாக்க ஒருவர் தேவையாக இருந்தது. இப்போது அந்தத் தேவை இருக்கவில்லை, ஆனால், அவர்கள் இயல்பாகவும் இருக்கவில்லை. தங்கள் வேலையை தாங்களே செய்துகொண்டாலும், சுயமாகச் சிந்திக்க முடியாமல், சரியாகப் பேச முடியாமல்... மிகவும் கொடுரமான ஒரு தண்டனையை அவர்கள் அனுபவித்து வருவதைக் கண்டு வால்டர் மிகவும் வருந்தினார். வால்டர் அளித்த சிகிச்சைக்குப் பிறகு, சிறிது காலம் நலமாக இருந்தவர்கள், பின்னர் இப்படி ஆகிப்போயினர். இதில் ரோஸ்மேரி கென்னடியும் அடக்கம். இறக்கும் வரை, அவரும் ஒரு நடைப்பிணமாகவே வாழ்ந்தார்.

டாக்டர் வால்டர் ஃப்ரீமேன் கல்லறை

 

மிகப்பெரிய அற்புதத்தை நிகழ்த்தியதாக ஒரு காலத்தில் புகழப்பட்ட வால்டர் 1972-ம் ஆண்டு இவ்வுலகை விட்டு மறைந்தார். அவர் கல்லறையில் அவர் கொண்டுவந்த சிகிச்சை முறையின் நினைவாக ஒரு பெரிய துளையிடப்பட்டது. சைக்கோசர்ஜரியில் (Psychosurgery) ஒரு பெரும் மைல்கல்லாகக் கருதப்பட்ட வால்டரின் சிகிச்சை முறை 1950-களிலேயே வீழ்ச்சியைக் காணத் துவங்கி, பின்னர் ஒருநாள் அழிந்தே போனது. பல நாடுகள் அதற்குத் தடையும் விதித்தன. வால்டர் நினைத்ததுபோலவே, மனநல மருத்துவமனையில் நோயாளிகள் குறைந்தனர். ஆனால், அதை அவரின் சிகிச்சை முறை செய்யவில்லை. தொராஸின் (Thorazine) என்ற அந்த ஒற்றை மாத்திரை செய்தது. சொல்லப்போனால், அந்த ஒற்றை மாத்திரைதான் அவர் வாழ்வையே புரட்டிப் போட்டது. அவரையும் கொன்றது.

https://www.vikatan.com

Link to comment
Share on other sites

நெட்டிசன் நோட்ஸ்: உலக புத்தக தினம்; கைவிடாத ஒரே நண்பன்

 

 
kjmpng

 புத்தக தினம் இன்று உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இதனைத் தொடர்ந்து நெட்டிசன்கள் தங்கள் கருத்துகளைப் பதிவிட்டு வருகிறார்கள். அவற்றின் தொகுப்பு இன்றைய நெட்டிசன் நோட்ஸில்....

அம்மனூர் ரூபன்

‏கடந்த காலங்களை கண் முன் நிறுத்துபவை காகிதங்களே!

அசுரன்

‏#உலகபுத்தகதினம் புத்தகம் இல்லை எனில் கிறுக்கன் ஆகியிருப்பேன்...

மிஸ்டர்.டவுசர்பாண்டி

‏ஓருவனை திருத்தம் செய்வது என்றால்  எழுத்துகளால்  மட்டுமே முடியும்

Athisayam Athish

‏புத்தகம் ஒரு ஈடுஇணையற்ற சிற்பி!

உன் அகத்திற்கு புது திசையினை தரும்

உன் இலக்கிற்கு உத்வேகத்தை தரும்

உன்னை மெல்ல செதுக்கி பட்டைதீட்டி உலகிற்கு உன் அறிவினை ஒளியாய் தரும்!

ARUN KANDHASAMY

‏#உலகபுத்தகதினம். ஒரு மனிதனின் வாழ்க்கையை மாற்றும் சக்தி புத்தகத்திற்கு மட்டுமே உண்டு.

கௌதம்ராம்

‏#உலகபுத்தகதினம்

ஆனந்த விகடன் கூட முழுசா படிக்க முடியல

மொபைல் போன் ஆக்கிரமிப்பு செய்கிறது

படிக்கனும் இனிவரும் காலங்களிலாவது

ஆப்பாயிலிசம்

‏ஒரு குழந்தைக்கு நீங்கள் வாங்கித்தரும் ஆகச் சிறந்த பரிசு ஒரு புத்தகம்தான் என்றார் வின்ஸ்டன் சர்ச்சில்.

பயங்கரமான போராட்ட ஆயுதங்கள் எவை என கேட்கப்பட்டபோது புத்தகங்கள்தான் என்றாராம் மார்டின் லூதர்சிங்.

புத்தகங்களைப் படிப்போம்..! பரிசளிப்போம்!!

Narayani

‏புத்தகம் மட்டும் இல்லைனா ... என்னவா இருந்திருப்பமோ தெரியல. டிவி,வீடியோ,பிடிச்ச புத்தகங்கள்ல இருந்து தேர்ந்தெடுக்கச் சொன்னா, என் வாக்கு புத்தகத்துக்கே. #உலகபுத்தகதினம்.

Kondalraj Ramamoorthy

‏தனிமையில் இனிமையும், இனிமையில் சிந்தனையும் ஊட்டி, உன் வாழ்வில் உன் இதயத்தில் புதைந்து கிடக்கும் உயிரில்லா உணர்வுகளை வெளிக்கொணர்ந்து ஒளி வீசுவது #புத்தகம் #உலகபுத்தகதினம்

யாரோ   இவள்

என்னை தனிமையில் இருந்து காப்பாற்றியவன் !

துரோகம் செய்யாத நம்பகமான  நண்பன்..!  #புத்தகம்

கிறுக்கன்   

‏ஓதல் இல்லையெனில்

பல நூற்றாண்டு முன் நடந்த மோதலும் தெரிய வாய்ப்பில்லை .....

சிமிழன்

‏மனிதர்களை விட புத்தகங்களை அதிகமாக நேசியுங்கள். உங்களின் எல்லா சூழ்நிலைக்கும் ஆறுதலும், புத்துணர்ச்சியும், எப்பொழுதும் உங்களைக் காயப்படுத்தாததும் அவை மட்டுமே.

திவாகரன்

‏கண்ணாடியில் முகப் பொலிவைத் தேடாது புத்தகங்களில் அகப் பொலிவைத் தேடத் தொடங்கும் நொடியில் ஒருவன் அறிவு சார்ந்த தேடலின் பயணத்தைத் தொடங்குகிறான்!

தமிழ்தலைமகன்

‏தனிமையில் நான் கொண்டாடும் காதலி "புத்தகம்"

இளவரசி M.E..,   

‏சில புத்தகங்களைச் சுவைப்போம்… சிலவற்றை அப்படியே

விழுங்குவோம்… சில புத்தகங்களை மென்று ஜீரணிப்போம்!

உடலுக்கு எப்படி உடற்பயிற்சியோ அதுபோல மனதுக்குப் பயிற்சி புத்தக வாசிப்பு!

Chandru MayaS

‏உலக வரைபடத்திலுள்ள மூலைமுடுக்குகளுக்கெல்லாம் போக விரும்புகிறாயா, ஒரு நூலகத்துக்குச் செல்...!

- டெஸ்கார்டஸ்.

அன்புடன் கதிர் ✍

‏நாளும் நல்லதை கற்றுக்கொடுக்கும் பொக்கிஷம் புத்தகங்கள் !!!

#உலகபுத்தகதினம்

வெளிச்சம்

‏தேடித்தேடி படித்தலின் போதை தெளியாமலிருப்பவர்கள் வரம் பெற்றவர்கள்.

லதா கார்த்திகேசு

‏படுகுழிகளில் இருந்து  மீட்கும் பாலம்

Marina

‏இந்தியாவின் உண்மையான வரலாறு தெரியவேண்டுமெனில் அம்பேத்கர் & பெரியார் புத்தகங்களைப் படித்தால் தான் முடியும்.

கிருனிகா

‏படிக்க முடிந்தவைகள் எல்லாமே

#புத்தகங்கள் அல்ல, படித்தவற்றை வாழ்வியலில் புகுத்திக்கொள்ள முடிந்திருப்பது அவசியம்... 

B.uma maheshwari   

‏நம் மனசாட்சியை அடிக்கடி

விழித்திருக்க வைப்பது ஒரு நல்ல புத்தகத்தின்

பங்கு அதிகம் #WorldBookDay

CSK UK♔

‏போதும் என்று நொந்துபோய், புதுவாழ்வைத் தேடுகிறீர்களா… ஒரு புதிய புத்தகத்தை வாங்கி வாசிக்கத் தொடங்கு…!

Journalist AK

‏எந்த காலகட்டத்திலும்  நம்மைக்  கைவிடாத ஒரே நண்பன்,

" புத்தகம் "

செல்வம் அரசுப்பள்ளி ஆசிரியன்..

‏ஒரு புத்தகம் என்பது கடந்த காலத்திற்கும், எதிர்காலத்திற்குமான இணைப்பு, தலைமுறைகள் மற்றும் கலாச்சாரங்களுக்கு இடையிலான பாலம்” என்கிறது யுனெஸ்கோ அமைப்பின் உலக புத்தக தினம் தொடர்பான இணையப் பக்கம்.

கும்புடுறேன் சாமி

இந்த இணையதளம்லாம் வந்த பிறகு புத்தம் படிக்கும் பழக்கம் எல்லாம் குறைந்து விட்டது மறுபடியும் தொடங்க வேண்டும்.

http://tamil.thehindu.com

Link to comment
Share on other sites

வில்லியம் ஷேக்ஸ்பியர் இறந்த தினம்: ஏப்.23- 1616

 
அ-அ+

வில்லியம் சேக்சுபியர் (26 ஏப்ரல் 1564- 23 ஏப்ரல் 1616)[a] ஒரு ஆங்கிலக் கவிஞரும் நாடக ஆசிரியருமாவார். ஆங்கில மொழியின் மிகப்பெரும் எழுத்தாளர் என்றும் உலகின் மிகப் புகழ்வாய்ந்த நாடக ஆசிரியர் என்றும் இவர் குறிப்பிடப்படுகிறார். அநேக சந்தர்ப்பங்களில் இங்கிலாந்தின் தேசியக் கவிஞர் என்றும் இவர் அழைக்கப்படுகிறார். வாழும் அவரது படைப்புகளில் 38 நாடகங்கள், 154 செய்யுள் வரிசைகள், இரண்டு நெடும் விவரிப்பு கவிதைகள், மற்றும்

 
 
 
 
வில்லியம் ஷேக்ஸ்பியர் இறந்த தினம்: ஏப்.23- 1616
 
வில்லியம் சேக்சுபியர் (26 ஏப்ரல் 1564- 23 ஏப்ரல் 1616)[a] ஒரு ஆங்கிலக் கவிஞரும் நாடக ஆசிரியருமாவார்.

ஆங்கில மொழியின் மிகப்பெரும் எழுத்தாளர் என்றும் உலகின் மிகப் புகழ்வாய்ந்த நாடக ஆசிரியர் என்றும் இவர் குறிப்பிடப்படுகிறார். அநேக சந்தர்ப்பங்களில் இங்கிலாந்தின் தேசியக் கவிஞர் என்றும் இவர் அழைக்கப்படுகிறார்.

வாழும் அவரது படைப்புகளில் 38 நாடகங்கள், 154 செய்யுள் வரிசைகள், இரண்டு நெடும் விவரிப்பு கவிதைகள், மற்றும் பல பிற கவிதைகள் அடங்கும். அவரது நாடகங்கள் உலகில் ஒவ்வொரு பெரிய மொழியிலும் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. வருடந்தோறும் வேறு எந்த ஒரு நாடகாசிரியரின் நாடகங்களை விடவும் அதிகமாக நடத்தப்படுகிறது.

இதே தேதியில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள்:-

* 1867 - சக்கரம் ஒன்றில் படங்களைச் செருகி தொடர் படமாகக் காட்டக்கூடிய சோயிட்ரோப் (zoetrope) என்ற கருவிக்கான காப்புரிமத்தை வில்லியம் லிங்கன் என்பவர் பெற்றார்.
 
* 1896 - நியூயார்க் நகரில் உள்ள புகழ்பெற்ற கோஸ்டர் அண்ட் பயால்ஸ் மண்டபத்தில் (Koster and Bial's Music Hall) "வாட்வில்லி" குழுவினரால் "இரண்டு அழகிகள் குடை நாட்டியம் ஆடுவது" போன்ற காட்சி காண்பிக்கப்பட்டது. இதுதான் விட்டாஸ்கோப் என்ற ஆரம்பகால திரைப்படம் காட்டும் கருவி மூலம் திரையில் காண்பிக்கப்பட்ட முதல் காட்சி ஆகும்.

* 1905 - யாழ்ப்பாணத்திற்கு முதன் முதலில் தானுந்து கொண்டுவரப்பட்டது.
 
* 1932 - நெதர்லாந்தில் 153-ஆண்டுகள் பழமையான டி ஆட்ரியான் என்ற காற்றாலை தீயில் எரிந்து அழிந்தது.
 
* 1940 - மிசிசிப்பியில் நாட்செஸ் என்ற இடாத்தில் இரவு விடுதி ஒன்று தீப்பற்றியதில் 198 பேர் கொல்லப்பட்டனர்.
 
* 1941 - இரண்டாம் உலகப் போர்: ஜெர்மனியின் முப்படைகள் தாக்குதலை ஆரம்பிக்க முன்னர் கிரேக்க மன்னர் இரண்டாம் ஜோர்ஜ் ஏதன்ஸ் நகரை விட்டு வெளியேறினார் *
 
1948 - அரபு-இஸ்ரேல் போர், 1948: இஸ்ரேலின் முக்கிய துறைமுகம் ஹைஃபா பாலஸ்தீனர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்டது.
 
* 1966 - முதலாம் உலகத் தமிழாராய்ச்சி மாநாடு கோலாலம்பூரில் நிறைவடைந்தது.
 
* 1982 - கொங்க் குடியரசு அமைக்கப்பட்டது.

* 1984 - எயிட்ஸ் வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது.
 
* 1987 - ஐக்கிய அமெரிக்காவின் கொனெக்ரிகட் மாநிலத்தில் பிரிட்ஜ்போர்ட் என்ற இடத்தில் கட்டிடம் ஒன்று இடிந்து வீழ்ந்ததில் 28 கட்டிடத் தொழிலாளர்கள் கொல்லப்பட்டனர்.
 
* 1990 - நமீபியா ஐநா மற்றும் பொதுநலவாய நாடுகள் அமைப்புகளில் சேர்க்கப்பட்டது.
 
* 1993 - இந்திய அரசியல் கட்சி இந்திய தேசிய லீக் உருவானது.
 
* 1993 - இலங்கையின் பாதுகாப்பு அமைச்சர் லலித் அத்துலத்முதலி கொழும்பில் குண்டுவெடிப்பில் கொல்லப்பட்டார்.
 
* 1993 - எரித்தீரியாவில் இடம்பெற்ற வாக்கெடுப்பில் எதியோப்பியாவில் இருந்து பிரிவதற்கு எரித்திரியர்கள் பெருமளவில் ஆதரவாக வாக்களித்தனர்.
 
* 1997 - அல்ஜீரியாவில் ஒமாரியா என்ற இடத்தில் 42 கிராம மக்கள் படுகொலை செய்யப்பட்டனர்.

https://www.maalaimalar.com

Link to comment
Share on other sites

‘நல்ல நோக்கம், நல்ல மனதில் இருந்தே உருவாகும்’
 

image_f566e3abd6.jpgநீங்கள் ஒரு நல்ல காரியத்தைச் செய்ய ஆரம்பியுங்கள்.அதன்பின்னர் தொடர்ந்தும் நல்ல கருமங்கள் செய்ய வாய்ப்புகள் உருவாகிப் பின்தொடரும். ஒரு கெட்டவன் தீய செயலைச் செய்தால், அவனைத் தொடர்ந்து வரும் சிக்கல்கள், பேரிழப்புகள் சொல்லில் அடங்காது.

நாங்கள் செய்ய ஆரம்பிக்கும் நல்ல காரியங்கள், எங்கள் எண்ணங்களின் வலுவால், எந்த இடர்களையும் உடைத்து எறியும். திடீரென வெற்றிபெற, வாழ்க்கை ஒரு திரைப்படக் கதையல்ல.

நாங்கள் மெருகேறக் காலம், கொஞ்ச அவகாசம் கேட்கிறது. நீ, சீர்மையான அனுபவங்களைப் பெறுவதற்கே, இந்தக் கால அவகாசமாகும். எனவே, வெற்றிகளைக் குவிக்க நிதானம், பொறுமை அவசியமாகும்.

நல்ல நோக்கம், நல்ல மனதில் இருந்தே உருவாகும். எனவே, எண்ணங்கள்தான் செய்யும் தொழிலுக்கு முதலாவது மூலதனமாகும். இது பொருளைவிட மேலானது.பணம் படைத்தவர் பத்துப் பணக்காரரை உருவாக்க மாட்டார். நல்லவர்களால்த்தான் பத்து நல்லவர்களை உருவாக்க முடியும்.

Link to comment
Share on other sites

விமர்சனங்களை எதிர்கொள்வது எப்படி? - நம்பிக்கைக் கதை #MotivationStory

 
 

கதை

`ங்களை யாரும் விமர்சனம் செய்யாமல் இருக்க வேண்டுமா? எதையும் செய்யாதீர்கள்; எதையும் பேசாதீர்கள்; ஒன்றுமே செய்யாமல் இருங்கள்!’ - கொஞ்சம் கடுமையாகவே சொல்லியிருக்கிறார் அமெரிக்க எழுத்தாளரும் தத்துவவியலாளருமான எல்பர்ட் ஹப்பார்டு (Elbert Hubbard). நீங்கள் செய்கிற வேலையில் யாராவது குறை கண்டுபிடிக்கிறார்களா? அதற்காகக் கவலையேபடாதீர்கள். `நாம் வேலை செய்கிறோம்; செய்த வேலையில்தானே குறை சொல்கிறார்கள்’ என்று திருப்திபட்டுக்கொள்ளுங்கள். அதற்காகத் திரும்பத் திரும்ப தப்பும் தவறுமாக ஒரு வேலையைப் பார்க்க வேண்டும் என்று அர்த்தப்படுத்திக்கொள்ளக் கூடாது. தவறுகளைக் களையவும், ஒரு செயல் மேம்பட உதவுவதும்தான் விமர்சனம். ஒரு நேர்மையான விமர்சகர், தனிநபர் தாக்குதலில் இறங்க மாட்டார்; அவருடைய விமர்சனம் படைப்பாளியின் திறமையை அடையாளம் காட்டுவதாக இருக்கும்; படைப்பாளி தன் திறமையை வளர்த்துக்கொள்ள உதவுவதாக இருக்கும். விமர்சனத்தை எதிர்கொள்வதற்குக்கூட ஒரு பக்குவம் தேவைப்படுகிறது. யாராவது நம்மை ஏதாவது சொல்லிவிட்டால் `நான் யார் தெரியுமா, என்னைப் போய் குறை சொல்லலாமா?’ என்கிற ரேஞ்சுக்கு எகிறுகிறவர்களைப் பார்க்கிறோம். `நான் மட்டுமா தப்பு செய்யறேன்... மத்தவங்களும்தான் செய்றாங்க..’ என்று அடுத்தவர் மேல் விரலை நீட்டுபவர்களும் இருக்கிறார்கள். நம்மை யாராவது விமர்சனம் செய்யும்போது அதன் உண்மைத் தன்மையை ஆராய வேண்டும். உண்மையிலேயே நம் மீது தவறு இருந்து, அதை ஒருவர் சுட்டிக்காட்டியிருந்தால் அதைக் களைய முன் வரவேண்டும். இது, இறங்கி வருவதல்ல; வளர்ச்சிப் பாதையில் மேலே மேலே போவதற்கான வழி. இந்த யதார்த்தத்தை அடையாளம் காட்டுகிறது ஒரு மேதையின் வாழ்வில் நடந்த கதை.உலே புல்

அந்தச் சிறுவனுக்கு வயது ஐந்து. ஆனால், மேதை. அப்படித்தான் சொல்ல வேண்டும். பின்னே... அந்த வயதிலேயே அம்மா பாடுகிற அத்தனைப் பாடல்களையும் தன் கையிலிருக்கும் வயலினில் அட்சரம் பிசகாமல் அப்படியே இசைத்துவிடுகிறானே! அவனின் வயலின் இசையைக் கேட்டவர்களெல்லாம் மெய்மறந்து போனார்கள். அந்தச் சிறுவன் வேறு யாருமல்ல... 19-ம் நூற்றாண்டில் வயலின் இசையில் தனி முத்திரை பதித்த உலே புல் (Ole Bull). நார்வேயின் மேற்குக் கடற்கரை நகரமான பெர்ஜெனில் (Bergen) பிறந்தவர் உலே புல். ஒன்பது வயதிலேயே உள்ளூர் ஆர்கெஸ்ட்ரா ஒன்றில் சேர்ந்து முதல் மேடை ஏறிவிட்டார். தந்தைக்கு, உலே புல்லை எப்படியாவது ஓர் அரசாங்க அதிகாரியாக்கிப் பார்த்துவிட வேண்டும் என்று ஆசை. அவருக்கு 18 வயது ஆனபோது நார்வேயிலிருந்த பழம்பெருமை வாய்ந்த கிறிஸ்டியானியா பல்கலைக்கழகத்தில் (University of Christiania) சேர்த்துவிட்டார். ஆனால், அவருக்குப் படிப்பில் நாட்டமில்லை. மனம் முழுக்க இசைதான் நிரம்பியிருந்தது. தேர்வில் தோற்றுப் போனார். அப்பாவை எதிர்த்துக்கொண்டு, ஓர் இசைப் பள்ளியில் போய்ச் சேர்ந்தார்.

ஐரோப்பாவில் இந்த வகை இசைப் பள்ளிகளை `Musical Lyceum' என்று சொல்வார்கள். உலே புல் வயலின் வாசிப்பதில் அசாத்தியத் திறமை வாய்ந்தவர். உண்மையில் அவருடைய கலைத் திறமைக்குத் தீனி போடுவதாக இசைப் பள்ளி அமையவில்லை. அங்கிருந்த ஆசிரியர்களைவிட இசையில் கில்லியாக இருந்தார் உலே புல். அவர் சேர்ந்திருந்த பள்ளியின் இயக்குநருக்கு உடம்பு சரியில்லாமல் போய்விட, தகுதியான ஆள் வேறு யாரும் இல்லாததால், அந்தப் பொறுப்பு புல்லிடம் வந்தது. சிறு வயதிலேயே பெரிய பதவி. பொறுப்பு வந்ததும் தான் முழுமையடைந்துவிட்டதாகவே நினைத்துவிட்டார் புல். `இனிமேல் என்ன... வரிசையாக இசைக் கச்சேரிகளை (Concert) நிகழ்த்திவிட வேண்டியதுதான்’ என்கிற முடிவுக்கும் வந்துவிட்டார். வரிசையாக இசை நிகழ்வுகளை நடத்த ஒரு பயணத்தையும் ஏற்பாடு செய்துவிட்டார். உண்மையில், அந்த வயதில், பிரமாண்டமான வயலின் இசை நிகழ்வுகளை மேற்கொள்வதற்கு அவர் தயாராகியிருக்கவில்லை. வயலின் இசைப்பதில் தனித்துவம் இருந்தாலும், மேடையில் இசைத்து, பார்வையாளர்களை வசியப்படுத்தும் வித்தை அவருக்கு அப்போது கைவந்திருக்கவில்லை. அதாவது, அவர் போதுமான பயிற்சி பெற்றிருக்கவில்லை.

அந்த இசைப் பயணத்தில் அவர் இரண்டாவதாகச் சென்ற இடம் இத்தாலியிலிருக்கும் மிலன் (Milan) நகரம். ஓர் இளம் வயலின் கலைஞன்... நார்வேயிலிருந்து வந்திருக்கிறார்... என்னதான் வாசிக்கிறார் என்று பார்த்துவிடுவோமே... என விதவிதமான காரணங்களால் கூடியிருந்தது கூட்டம். உலே புல் மேடையில் ஏறினார். கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேர நிகழ்வு. கூட்டத்தில் எந்தச் சலசலப்பும் இல்லை. நிகழ்வின் முடிவில் லேசாகக் கரவொலி... அவ்வளவுதான். நிகழ்வு முடிந்தது.

கதை

அடுத்த நாள் மிலன் நகரிலிருந்து வெளிவரும் பிரபல நாளிதழ் ஒன்றில், உலே புல்லின் இசை நிகழ்வு குறித்த விமர்சனம் வெளியாகியிருந்தது. அதை எழுதியிருந்தவர் இத்தாலியிலேயே பிரபலமான விமர்சகர். அவர் இப்படிக் குறிப்பிட்டிருந்தார்... `உலே புல் முறையான பயிற்சி பெறாத இசைக்கலைஞர். அவர் வைரமாக இருக்கலாம்... இறுகிக் கல்லாகக் கிடக்கும், பட்டை தீட்டப்படாத வைரம்!’

இந்த விமர்சனத்தைப் படித்து ஆடிப்போய்விட்டார் உலே புல். இதற்கு இரண்டுவிதமாக எதிரிவினையாற்ற அவருக்கு வாய்ப்புகள் இருந்தன. ஒன்று, கோபப்படுவது; மற்றொன்று, கற்றுக்கொள்வது. நல்லவேளையாக இரண்டாவதைத் தேர்ந்தெடுத்தார் புல். அந்தப் பத்திரிகை அலுவலகத்தின் முகவரியை விசாரித்தார். ஒரு வாடகை காரை ஏற்பாடு செய்துகொண்டு அந்த அலுவலகத்துக்குப் போனார். ரிசப்ஷனில் அவர் தன் பெயரைச் சொன்ன சிறிது நேரத்துக்கெல்லாம் நேரே வந்துவிட்டார், அந்தப் பத்திரிகையின் ஆசிரியர். வரவேற்றார். ``என்ன விஷயம் சொல்லுங்க...’’ என்று கேட்டார்.

``ஒண்ணுமில்லை. இன்னிக்கி உங்க பேப்பர்ல என் நிகழ்ச்சியைப் பத்தின விமர்சனம் வந்திருக்கு. அதை எழுதினவரைப் பார்க்கணும்...’’

``அவரைப் பார்த்து... சண்டை எதுவும் போடப் போறீங்களா?’’

``அதெல்லாம் இல்லை. சும்மா ரெண்டு வார்த்தை பேசணும். அவ்வளவுதான்...’’

ஒரு கணம் பத்திரிகை ஆசிரியர், புல்லின் முகத்தைக் கூர்ந்து பார்த்தார். அதில் கடுகடு தன்மை, கோபம் எதுவும் தெரியவில்லை. ஒரு முடிவுக்கு வந்தவராக, ``என்கூட வாங்க...’’ என்று ஓர் அறைக்கு அழைத்துப் போனார்.

வயலின்

அந்தத் தனியறையில் உட்கார்ந்திருந்தார் அந்த விமர்சகர். பெரிய ஃப்ரேம் கண்ணாடி அணிந்துகொண்டு, நடுங்கும் விரல்களால் பேப்பரில் ஏதோ எழுதிக்கொண்டிருந்தார் அவர். வயது எப்படியும் 70-க்கு மேலிருக்கும். `இந்த முதியவரா என் நிகழ்வுக்கு விமர்சனம் எழுதியவர்?’ ஆச்சர்யப்பட்டுப் போனார் புல். ஆசிரியர், ``நீங்கள் பேசிக்கொண்டிருங்கள்...’’ என்று சொல்லிவிட்டுப் போய்விட்டார்.

அந்த விமர்சகரின் எதிரே அமர்ந்துவிட்டாலும், உலே புல்லுக்குப் பேச்சே வரவில்லை. `இந்த மனிதர், தன் வாழ்க்கையில், தன் அனுபவத்தில் என் நிகழ்வைப்போல எத்தனை பார்த்திருப்பார்... எவ்வளவு எழுதியிருப்பார்..?’ நினைக்க நினைக்க அவருக்கு வியர்க்க ஆரம்பித்தது.

``என்ன... விமர்சனத்தைப் படிச்சுட்டு என்னைத் திட்டிட்டுப் போகலாம்னு வந்தீங்களா?’’

``இல்லை சார்... நான் என்னென்ன தப்பு செஞ்சேன்னு கேட்டுத் தெரிஞ்சுக்கிட்டு, திருத்திக்கலாம்னு வந்தேன்.’’

முதியவர் நெகிழ்ந்து போனார். கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் உலே புல்லுக்குப் பாடம் எடுத்தார்.

தன் ஓட்டல் அறைக்குத் திரும்பிய உலே புல் முதல் வேளையாக அடுத்து நிகழ்த்தவிருந்த தன் அத்தனை நிகழ்ச்சிகளையும் கேன்சல் செய்தார். வீடு திரும்பினார். அடுத்த ஆறு மாதங்கள்... பல தேர்ந்த வயலின் ஆசிரியர்களைத் தேடிப் போய் பல நுணுக்கங்களைக் கற்றுக்கொள்வதுதான் அவருடைய வேலையாக இருந்தது. கற்றுக்கொண்டு வந்ததை மணிக்கணக்காக வீட்டில் உட்கார்ந்து பயிற்சி செய்தார். தன் தவறுகளைத் திருத்திக்கொண்டார். பல சூட்சுமங்கள் புரியப் புரிய இசை வாசிப்பில் கற்பனை பெருக்கெடுத்து ஓடியது. அதன் பிறகு அவர் மேடையேறி, வயலின் இசையை நிகழ்த்தியபோது பரவசத்தில் திளைத்தார்கள் பார்வையாளர்கள். இசை நிகழ்வை நிகழ்த்த வரச் சொல்லி அக்கம் பக்க நாடுகளிலிருந்தெல்லாம் அழைப்புகள் குவிந்தன. ஐரோப்பாவில், அவருக்கென்று ஒரு பெரிய ரசிகர் பட்டாளம் திரண்டபோது உலே புல்லுக்கு வயது வெறும் 26.

https://www.vikatan.com/

Link to comment
Share on other sites

சச்சின் என்பது, பெயரல்ல; அது ஓர் உணர்வு... உற்சாகம்... உத்வேகம்! #HappyBirthdaySachin

 
 

ஒட்டுமொத்த இந்தியாவும் ஒரு நிமிடம் எந்த வேலையும் செய்யாமல் `ஸ்டன்னாகி' நின்றிருக்கிறதா? மதங்கள் கடந்து இந்தியா முழுக்க ஆலயங்களில் ஒற்றை மனிதனுக்காக பிரார்த்தனைகள் நடத்தப்பட்டிருக்கின்றனவா? பங்கு வர்த்தகம் சில நிமிடம் நிறுத்திவைக்கப்பட்டிருக்கிறதா? பள்ளி, கல்லூரிகள், அலுவலகங்கள் ஸ்தம்பித்திருக்கின்றனவா? கூட்டம் கூட்டமாக மக்கள் தெருக்களில் டி.வி-யின் முன்னால் நின்றதால் டிராஃபிக் ஜாம் ஆகியிருக்கிறதா? இது அத்தனையும் சச்சின் என்னும் ஒற்றை மனிதனுக்காக நடந்திருக்கின்றன.

கிரிக்கெட் கடவுள், ரன் மெஷின், லிட்டில் மாஸ்டர், மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கருக்கு, இன்று 45-வது பிறந்த நாள். கிரிக்கெட்டிலிருந்து சச்சின் ஓய்வுபெற்று கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டன. ஆனால், சச்சின்... சச்சின்... சச்சின் என்கிற கோஷம் இன்னமும் காதுகளில் எதிரொலித்துக்கொண்டேயிருக்கிறது. 

சச்சின்

எங்கே, எவ்ளோ, எப்போ..? சச்சினின் 100 சத கிராப்! 

சச்சினுடன் டிராவிட், கங்குலி, ஷேவாக் என உன்னதமான பல கிரிக்கெட்டர்கள் விளையாடியிருக்கிறார்கள்; சதங்கள் அடித்திருக்கிறார்கள். இந்தியாவுக்கு பல வெற்றிகளைத் தேடித்தந்திருக்கிறார்கள். ஆனால், சச்சின் அடித்தால்தான் இந்தியாவுக்கே கொண்டாட்டம். சச்சின் களத்தில் நிற்பதுதான் ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் நம்பிக்கை. சச்சின் சதம் அடித்தால்தான் அது தலைப்புச்செய்தி என, சச்சின் என்பது வெறும் பெயரல்ல... அது பல கோடி இந்தியர்களுக்கு ஓர் உணர்வு... உற்சாகம்... மிகப்பெரிய உத்வேகம். 

``நாங்கள் இந்தியாவுக்கு எதிராகத் தோற்கவில்லை. சச்சின் டெண்டுல்கர் என்னும் தனிமனிதருக்கு எதிராகத் தோல்வி அடைந்திருக்கிறோம்'' 1998-ம் ஆண்டு சென்னை டெஸ்ட்டில் சச்சினின் அதிரடி சதத்தால் ஆஸ்திரேலியா தோல்வியடைந்தபோது ஆஸ்திரேலியாவின் கேப்டன் மார்க் டெய்லர் சொன்ன வார்த்தைகள் இவை. ஆமாம்... கிரிக்கெட் இன்னும் பல சிறந்த வீரர்கள் உருவாக்கலாம்; பல சாதனைகள் முறியடிக்கப்படலாம். ஆனால், இன்னொரு சச்சின் டெண்டுல்கரை மட்டும் இனி கிரிக்கெட் உலகம் பார்க்க முடியாது.

Sachin  Tendulkar

உலகக்கோப்பை தொடர் தோல்விகள், தோள்பட்டை - முதுகு காயங்கள், முன்னாள் வீரர்களின் கடுமையான விமர்சனங்கள், கேப்டன் பொறுப்பிலிருந்து நீக்கம்... என சச்சினின் 24 ஆண்டுகால கிரிக்கெட் வாழ்க்கையில் கசப்பான பல சம்பவங்களும் அடக்கம். ஆனால், ஒருமுறைகூட அவர் நிதானம் தவறிப் பேசியதில்லை. மைதானத்தில் யாரையும் பார்த்து முறைத்ததில்லை. பந்து வீச்சாளர்களுக்கு கெட்டவார்த்தைகளால் பதில் சொன்னதில்லை. நடுவர்களைத் திட்டி வெளியேறியதில்லை. பேட்டிகளில் எந்த வீரரையும் குறை சொன்னதில்லை என சச்சினின் பேட்டிங் மட்டுமல்ல, அவர் ஆட்டத்தில் கடைப்பிடித்த ஒழுங்குதான் உலகம் முழுக்க அவருக்குப் பல கோடி ரசிகர்களை உருவாக்கியது.

டென்னிஸ், கால்பந்து, தடகளம் எனப் பல்வேறு விளையாட்டுகளில் பல காலம் கோலோச்சிய வீரர்கள் இருக்கிறார்கள். சாதனைகள் படைக்கும் வேகத்தில் அவர்கள் சறுக்கிய வரலாறு அதிகம். போதைமருந்து சர்ச்சைகள் முதல் பெண் சகவாசங்கள் வரை பல்வேறு காரணங்களால் தடம் தெரியாமல் பல வீரர்கள் அழிந்திருக்கிறார்கள். ஆனால் சச்சின், கிரிக்கெட் ஆடிய 24 ஆண்டுகளும் உச்சத்தில்தான் இருந்தார். காரணம், அவர் கிரிக்கெட்டை பேட்டால் விளையாடியவர் அல்ல... இதயத்தால் விளையாடியவர். 

எல்லோரும்தான் கிரிக்கெட் ஆடுகிறார்கள்... சதம் அடிக்கிறார்கள். ஆனால், சச்சினின் ஆட்டத்தில் இருந்த பர்ஃபெக்‌ஷனை மற்றவர்களின் ஆட்டத்தில் முழுமையாகப் பார்க்க முடிந்ததில்லை. சச்சினின் ஒவ்வொரு ஸ்ட்ரோக்கும் க்ளாஸ் ரகம். அவர் அடிக்கும் பெளண்டரிகள்  எல்லாமே கூஸ்பம்ப் மொமன்ட்டுகள்தான். கிரிக்கெட்டைக் கண்டபடி ஆடியவர்களுக்கு மத்தியில் ஃபீல்டர்களுக்கு இடையில் பந்தை விரட்டும் வித்தையைச் சொல்லிக்கொடுத்தவர் சச்சின்தான்.

Sachin Tendulkar

பொடியன் டு பிதாமகன்!

16 வயதில் சின்னப் பொடியனாக பாகிஸ்தான் மைதானத்துக்குள் நுழைந்தபோது, முதல் போட்டியில் 15 ரன்கள் அடித்த சச்சின் வக்கார் யூனிஸ் பந்தில் க்ளீன் போல்டு. ``நான் என்னவெல்லாம் திட்டங்களோடு மைதானத்துக்குள் நுழைந்தேனோ அது எதுவுமே நிறைவேறவில்லை என விரக்தியடைந்தேன். `சர்வதேச கிரிக்கெட் விளையாட நான் தகுதியானவனல்ல' என்ற எண்ணம் அப்போது எழுந்தது. மறுபக்கம் `அடுத்த வாய்ப்பு கிடைத்தால் நிச்சயம் சாதிப்பேன்!' என்று எண்ணமும் தோன்றியது. அடுத்த டெஸ்ட்டில் 59 ரன் அடித்தேன்’’ என்று தனது முதல் பயண அனுபவத்தைப் பற்றிச் சொல்வார் சச்சின்.

பாகிஸ்தான் பயணத்தில் முதல் மூன்று டெஸ்ட் போட்டிகளும் டிராவாக, நான்காவது டெஸ்ட்டில் வெற்றிபெறும் வெறியுடன் ஆடியது பாகிஸ்தான். இந்தியா 34 ரன்னுக்கு நான்கு விக்கெட்டுகளை இழந்து பரிதாபமான நிலையில் இருந்தபோது களம் இறங்கிய சச்சினின் மூக்கை வக்கார் யூனிஸின் பந்து பதம்பார்த்தது. மூக்கில் கட்டோடு அன்று விளையாடிய சச்சின், இந்தியாவைத் தோல்வியிலிருந்து காப்பாற்றினார். 

Sachin Tendulkar

``1990-ம் ஆண்டு இங்கிலாந்து சுற்றுப்பயணத்தின்போது எனக்கும் சச்சினுக்கும் ஒரே அறைதான். அப்போது சச்சினை வியப்போடு பார்த்துக்கொண்டிருப்பேன். `எழுதுவது, சாப்பிடுவது என்பது எல்லாவற்றுக்குமே இடதுகைப் பழக்கம்கொண்ட இந்தப் பையன், கிரிக்கெட் பேட்டை மட்டும் வலது கையில் பிடித்து ஆடுகிறானே!' என வியப்பாக இருக்கும். இரண்டு கைகளிலுமே சக்திகொண்டவன் சச்சின் என்பதை அப்போதுதான் புரிந்துகொண்டேன். அப்படிப்பட்டவர்களை எளிதில் சமாளிக்க முடியாது’’ என்று சொன்னார் கபில்தேவ். 

ஷார்ஜாவில் மணல் சூறாவாளிக்கு இடையில் அவர் அடித்த சதம், மிக வேக மைதானமான பெர்த் மைதானத்தில் அவர் அடித்த சதம், தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக அடித்த ஒருநாள் கிரிக்கெட்டின் முதல் 200 ரன், வங்கதேசத்துக்கு எதிரான 100-வது சதம் என சச்சினின் ஒவ்வொரு சதமும் பலவித நெருக்கடிகளுக்கிடையே அடிக்கப்பட்டவைதான். 

சரிவில் இருந்து மீண்டவன்!

டென்னிஸ் எல்போ பிரச்னையால் சச்சின் சிக்கித்தவித்தபோது `எண்டுல்கர்’ எனத் தலைப்பிட்டு ஆங்கில நாளிதழ் ஒன்று முதல் பக்க செய்தி வெளியிட்டது. ஒட்டுமொத்த மீடியாவும் அவர் ஓய்வுபெறலாம் என கட்டுரைகள் வெளியிட்ட நேரம் அது. ``சிகிச்சை முடிந்ததும் பயிற்சி செய்ய ஆரம்பித்தேன். ஆனால், என்னால் சரியாக விளையாட முடியவில்லை. அந்த நேரம் மனம் உடைந்துவிட்டேன். தூக்கம் வராமல் தவித்தேன். விடியற்காலை 3 மணிக்கெல்லாம் காரை எடுத்துக்கொண்டு மும்பை வீதிகளில் தனியாகச் சுற்ற ஆரம்பித்தேன். என்னால் ஒரு இடத்தில் இருக்க முடியவில்லை. `கடவுளே என்னை கிரிக்கெட் விளையாட விடு. இல்லையென்றால் கொன்றுவிடு. கிரிக்கெட் விளையாடாமல் என்னால் ஒரு நாள், ஒரு நிமிடம்கூட இருக்க முடியாது’ எனக் கதறி அழுதேன். கிரிக்கெட்டைத் தவிர எனக்கு எதுவும் தெரியாது’’ என ஒரு பேட்டியில் தெரிவித்திருந்தார் சச்சின். டென்னிஸ் எல்போ காயத்திலிருந்து மீள கடுமையாகப் போராடினார் சச்சின். அறுவைசிகிச்சைகள் முடிந்ததும் உடனே விளையாடவும் வந்துவிட்டார். பேட்டின் எடையைக் குறைத்து, ஆட்டத்தின் ஸ்டைலை மாற்றி, புதிய ஸ்ட்ரோக்குகளை விளையாட முயன்று என மீண்டும் ஜீரோவில் இருந்து ஆரம்பித்தார் சச்சின். டென்னிஸ் எல்போ காயத்துக்குப் பிறகுதான் கிரிக்கெட்டில் பல உச்சங்களைத் தொட்டார். 

சச்சின்

அந்த நடை!

``பல சதங்கள் அடித்திருக்கிறேன். பல சாதனைகள் படைத்திருக்கிறேன். ஆனால், வாழ்க்கையில் ஒரே ஒருமுறைதான் வீரநடை நடந்திருக்கிறேன். ஷார்ஜாவில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சதம் அடித்து இந்தியாவை இறுதிப்போட்டிக்குத் தகுதிபெற வைத்தப் பிறகு வீரநடை நடந்து பெவிலியனுக்குப் போனேன். அப்போது என் மனதில் நான் ஒரு விவியன் ரிச்சர்ட்ஸ் போல உணர்ந்தேன்’’ என்று சொல்லியிருக்கிறார் சச்சின். டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன் குவித்த வீரர் என்ற பிரையன் லாராவின் சாதனையைக் கடந்தபோது சச்சின் இப்படிச் சொன்னார், ``வெற்றி என்பது ஒரு பயணம். அதன் நடுவில் கற்கள் வீசப்படும். அதை மைல்கற்களாக மாற்றக் கற்றுக்கொண்டால் தொடர்ந்து வெற்றிபெறலாம்’’ என்றார். 

ஒரே அலுவலகத்தில் நீண்டகாலம் வேலை செய்பவர்களுக்கு வேலையில் ஒருவிதமான சலிப்பு ஏற்படும். விளையாட்டு வீரர்களுக்கும் இது அடங்கும். ஆனால், 24 ஆண்டுகளாக எந்தவிதமான சலிப்பும் இல்லாமல் புதிதாகக் களம் இறங்கும் பேட்ஸ்மேனைப்போல் ஆடுவது சச்சினின் சுபாவம். கிரிக்கெட் மைதானத்தில் எந்தப் பக்கமாகவும் ஷாட்டுகளை அடிக்கும் திறன் படைத்த சச்சின், ஓய்வுபெறும் நாள் வரை நெட் பிராக்ட்டீஸ்களைத் தவறவிட்டதில்லை. காயங்களால் அவதிப்பட்ட சச்சின் பலமுறை ஃபார்ம் இல்லாமல் திணறியிருக்கிறார். ஆனால், மீண்டும் அவர் சதங்கள் அடிக்க அவருக்கு துணை நின்றது எக்காரணத்தைக்கொண்டும் அவர் பயிற்சியை விடாததுதான். 

 

இன்னமும் இந்தியா விளையாடும் மேட்சுகளில் நான் ஸ்ட்ரைக்கராக, ஸ்டைலிஷாக பேட்டைப் பிடித்தபடி, ஒற்றைக்காலில் சச்சின் நின்றுகொண்டு இருப்பதுபோலவே இருக்கிறது. இன்றல்ல... கிரிக்கெட்டின் இறுதிவரை சச்சின் கொடுத்த நம்பிக்கையை வேறு எந்த இந்தியனும் எப்போதும் கொடுக்கவே முடியாது!

https://www.vikatan.com

Bild könnte enthalten: eine oder mehrere Personen und Text

Link to comment
Share on other sites

என் ஆடையைச் செய்தது யார்... ஃபேஷன் புரட்சி வரலாறு தெரியுமா?

 
 
Chennai: 

ஏப்ரல் 23 முதல் `ஃபேஷன் புரட்சி வாரம் (Fashion Revolution Week). 90 நாடுகள் பங்குபெறும் இந்தப் புரட்சி வாரம், மிகவும் கோலாகலமாகத் தொடங்கியிருக்கிறது. `ஃபேஷன்கிற பேர்ல பலரும் பண்ற அட்டகாசமே தாங்க முடியல. இதுல புரட்சி வேறயா?' என்று நீங்கள் முணுமுணுப்பது கேட்கிறது. ஆனால், இந்தப் புரட்சியின் நோக்கம், மாற்றம் அனைத்தும் மனதை நிச்சயம் நெகிழவைக்கும்.

ஃபேஷன்

சம்பவம் நடைபெற்ற ஆண்டு : 2013
நாள் : 23, 24.
இடம் : சவர் உபாஸிலா (Savar Upazila), டாக்கா மாவட்டம், பங்களாதேஷ்.

ஆடை தொழிற்சாலைகள், வங்கி, குடியிருப்புகள், மேலும் பல கடைகள் நிரம்பிய `ராணா பிளாசா' எனும் கட்டடம் அது. சிறுவர்கள் ஆனந்தமாக ஒருபுறம் விளையாடிக்கொண்டிருக்க, மறுபுறம் வங்கிக்கும் அங்கு இருந்த கடைகளுக்கும் மக்கள் கூட்டம் அலைமோதியது. அங்கே இருந்த ஆடை தொழிற்சாலையில் பணிபுரியும் ஊழியர்களின் எண்ணிக்கையோ மூவாயிரத்துக்கும் அதிகம்.

இந்தப் பரபரப்பான நாளில்தான் சிறியளவு விரிசலை கண்டது அந்தக் கட்டடம். விரிசலைக் கண்டதும், அடிதளத்தில் அமைந்திருந்த வங்கியும், கடைகளும் மூடப்பட்டன. மாலை நேரம், வேலை முடிந்து அனைத்து ஊழியர்களும் சந்தோஷமாக வீடு திரும்பினர். குடியிருப்புகளில் துள்ளி விளையாடிய குழந்தைகளின் கூட்டமும் கலைந்தது. அமைதியான இரவில் கைக்குழந்தையின் அழுகை மற்றும் அலறல் கேட்டுக்கொண்டே உறங்கியது, விரிசலுடைய கட்டடம்.

அடுத்த நாள் காலை 7 மணி. நேரம் ஆகிவிட்டதே என்ற பரபரப்புடன் ஊழியர்கள் அனைவரும் தங்களின் தொழிற்சாலையை நோக்கி ஓடிக்கொண்டிருந்தனர். கடிகாரத்தில் நேரமும் இவர்களுடன் போட்டிபோட்டுக்கொண்டு ஓடியது. சிலரின் கைகளில் கைக்குழந்தைகள் வேறு. 8:57 நிமிடம். அனைவரின் ஓட்டமும் நின்றது. கொஞ்சமும் எதிர்பாராதவிதமாக அந்தக் கட்டடம் முழுவதும் இடிந்து தரைமட்டமானது. கண்ணிமைக்கும் நேரத்தில் நிகழ்ந்த இந்தச் சம்பவம், ஒட்டுமொத்த உலகையும் உலுக்கியது. கட்டடத்துக்குள் சிக்கி உயிரிழந்தவர்களை மீட்கும் பணி, ஏப்ரல் 24-ம் தேதி தொடங்கி மே 13-ம் தேதி வரை நீடித்தது. இதில் 1,134 பேர் உயிரிழந்தனர். 2,500 பேர் பலத்த காயங்களோடு உயிருடன் மீட்கப்பட்டனர். விரிசல் இருப்பது தெரிந்தும், அதைப் பொருட்படுத்தாமல்போன இந்தக் கட்டடத்தின் உரிமையாளரை என்ன சொல்வது!

Campaign

இந்தச் சம்பவத்தின் நினைவாகத் தொடங்கியதுதான், `ஃபேஷன் புரட்சி தினம்'. இது லாபமில்லா உலகளாவிய இயக்கம். 2014-ம் ஆண்டு முதல் ஏப்ரல் மாதம்தோறும் பல நிகழ்வுகளைத் தொகுத்து வழங்கி, மக்களுக்கு விழிப்புஉணர்வையும் ஏற்படுத்திவருகிறது.

நோக்கம்:

நீங்கள், அன்றாடம் உடுத்தும் உடைகளை யார் செய்திருப்பார்கள் என என்றைக்காவது சிந்தித்ததுண்டா? அப்படிச் சிந்திக்கவைக்கும் முயற்சிதான் இந்தப் புரட்சியின் நோக்கம். உலகின் டாப் 20 பணக்காரர்களில் 6 பேர், ஆடை தொழில்முனைவோர்கள். அந்தத் தொழிற்சாலையில் பணிபுரியும் ஊழியர்கள் பலர் தங்களின் அன்றாட தேவைகளைப் பூர்த்திசெய்வதற்குக்கூட அவர்களின் தினக்கூலி போதாது. பருத்தி விவசாயிகள், நூல் நூற்பவர்கள், நெசவாளர்கள், சாய தொழிலாளர்கள், துணி தைப்பவர்கள் என இத்தனை தொழிலாளர்களை கடந்துதான் துணி விற்பனையாளர்களின் கைகளுக்கு வந்தடைகிறது. இதில், 80 சதவிகிதத் தொழிலாளர்கள், 18 முதல் 24 வயதுடைய பெண்களே. இதில் பெரும்பாலானவர்கள் வறுமைக்கோட்டுக்குக் கீழே இருப்பவர்கள்.  இப்படி வந்தடைந்த ஆடைகளிலிருந்து நாம் தேர்ந்தெடுப்பது எத்தனை? அதிலும் சிறு கடைகள் என்றால் பேரம் பேசாமல் வாங்குவோமா? பொதுமக்கள் இவற்றைப் பற்றிச் சிந்திக்க வேண்டும் என்பதற்காக, ஃபேஷன் புரட்சி இயக்கம், #whomademyclothes எனும் பிரசாரத்தை ஒவ்வோர் ஆண்டும், ஏப்ரல் மாதத்தில் நடத்திவருகிறது. இதில், தங்களின் ஆடை எவ்வாறு உற்பத்தியாகிறது என்பது முதல், தொழிலாளர்களின் நிலைமை வரை அனைத்தும் மக்கள் பார்வைக்குக் கொண்டுவரப்படுகின்றன.

Whomademyclothes

`Who made my Clothes?' அதாவது `யார் என்னுடைய துணியைச் செய்தது?' என்ற பொதுமக்களின் ஹேஷ்டேக் கேள்விக்கு, `I made your clothes.' அதாவது `உங்கள் துணியைச் செய்தது நான்' என்று தொழிலாளர்கள் பலர் பதிலளிப்பதும் இந்தப் பிரசாரத்தின் ஓர் அங்கம்.

அந்த வகையில், 2015-ம் ஆண்டு ஏப்ரல் 24-ம் நாள் நடைபெற்ற பிரசாரம், சற்று வித்தியாசமானது. `The 2 Euro T-Shirt - A Social Experiment' எனும் டைட்டில்கொண்ட அந்தப் பிரசார வீடியோவில், `இரண்டு யூரோவுக்கு டீ-ஷர்ட் இங்கு இருக்கிறது' என்று எழுதியிருக்கும் ஓர் இயந்திரம், மக்கள் அதிகம் நடமாடும் பகுதியில் வைக்கப்படுகிறது. `2 யூரோக்கு டீ-ஷர்ட்டா!' என்ற ஆச்சர்யத்துடன் வைக்கப்பட்டிருந்த இயந்திரத்தை நோக்கிச் சென்ற மக்களுக்கு மேலும் ஓர் ஆச்சர்யம் காத்திருந்தது. 

அந்த ஆச்சர்யம் என்னவென்று காண, கீழுள்ள காணொலியைக் காணவும். 

இதில், ஆடை உற்பத்தி செய்யும் தொழிலாளர்களின் வாழ்க்கைமுறையைப் படமாக்கப்பட்டக் காட்சிகள் அமைந்திருக்கும். `இதன் பிறகும் இந்த ஆடைகளை 2 யூரோவுக்கு வாங்க ஆசைப்படுகிறீர்களா?' என்ற கேள்வியையும் முன்வைத்திருப்பார்கள். அதற்குக் கிடைத்த ஒரே பதில், `இல்லை' என்பதுதான். 6.5 மில்லியன் பார்வையாளர்களைப் பெற்று இந்தக் காணொலி குறிப்பிட்ட ஆண்டின் `கேன்ஸ் லயன்ஸ் விருதையும்' தட்டிச் சென்றது.

 

இதேபோல் இந்த ஆண்டும், ஏப்ரல் 23 முதல் 29 வரை `Fashion Revolution Week' கொண்டாடப்பட உள்ளது. #whomademyclothes பிரசாரமும் அமைதியாகத் தொடங்கியது.

https://www.vikatan.com

Link to comment
Share on other sites

Bild könnte enthalten: Text

#வரலாற்றில்_இன்று
ஏப்ரல் 24, 1990 - ஹபிள் விண்வெளித் தொலைநோக்கி விண்ணில் செலுத்தப்பட்ட தினம் இன்று.

Link to comment
Share on other sites

ஓராண்டு தடையினால் கட்டிட தொழிலாளியாக மாறிய டேவிட் வார்னர்

தென்ஆப்ரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியின்போது பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் ஓராண்டு தடை விதிக்கப்பட்டுள்ள ஆஸ்த்ரேலிய வீரர் டேவிட் வார்னர் கட்டிட தொழிலாளியாக மாறியுள்ளார். #DavidWarner #BallTamperingIssue #constructionworker

ஓராண்டு தடையினால் கட்டிட தொழிலாளியாக மாறிய டேவிட் வார்னர்
 
 
சிட்னி:
 
தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக கடந்த மாதம் நடைபெற்ற டெஸ்ட் போட்டியின்போது பந்தை சேதப்படுத்தியதாக ஆஸ்திரேலியாவின் கேப்டன் ஸ்டீவன் ஸ்மித், துணை கேப்டன் டேவிட் வார்னர் மற்றும் பான்கிராப்ட் ஆகியோர் மீது குற்றம் சாட்டப்பட்டது. இதில் ஸ்மித் மற்றும் வார்னருக்கு ஓராண்டு தடையும், பான்கிராப்ட்டுக்கு 9 மாதங்கள் தடையும் விதிக்கப்பட்டது. 
 
இதனால் ஆஸ்திரேலியாவின் ஒப்பந்த பட்டியலில் இருந்தும் இவர்கள் நீக்கப்பட்டனர். தவிர, ஐ.பி.எல் போட்டியில் இருந்தும் ஸ்மித், வார்னருக்கு தடை விதித்து பிசிசிஐ நடவடிக்கை எடுத்தது.
 
பெரிய சர்ச்சைக்குள்ளான இந்த விஷயத்தில், தாங்கள் பெற்ற தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்போவதில்லை என்று மூவரும் அறிவித்தனர். செய்தியாளர் சந்திப்பின்போது மக்களிடமும், ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்திடமும் தாங்கள் செய்த தவறுக்கு மன்னிப்பு கேட்டுக் கொண்டனர். 
 
201804240149593980_1_warner2304._L_styvpf.jpg
 
இந்நிலையில், கிரிக்கெட்டில் இருந்து ஒதுங்கி இருக்கும் வார்னர் தனது உடலை ஃபிட்டாக வைத்துக் கொள்ள கட்டிட தொழிலாளியாக மாறியுள்ளார். சிட்னி நகரில் 10 மில்லியன் டாலர் செலவில் வார்னர் ஒரு வீடு கட்டி வருகிறார். தற்போது இந்த வீட்டின் கட்டுமான பணிகளை வார்னரும் இணைந்து செய்து வருகிறார். வார்னரின் மனைவி கேண்டிஸ் வார்னர், கட்டுமான பணிகள் செய்யும் தனது கணவர் மற்றும் குழந்தைகளின் புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் ஷேர் செய்துள்ளார். #DavidWarner #BallTamperingIssue #constructionworker
 
Link to comment
Share on other sites

வானொலியை கண்டுபிடித்த மார்க்கோனி பிறந்த நாள்: ஏப்.25-1874

 
 
 

மார்க்கோனி என்ற குலீல்மோ மார்க்கோனி வானொலியைக் கண்டு பிடித்தவர். நீண்ட தூரம் ஒலிபரப்பப்படும் வானொலியின் தந்தை எனப்படுபவர். கம்பியற்ற தகவல்தொடர்பு முறை மற்றும் மார்க்கோனி விதி ஆகியவற்றை உருவாக்கியவர். இக்கண்டுபிடிப்பிற்காக 1909-இல் இயற்பியலுக்கான நோபல் பரிசை கார்ல் பெர்டினாண்ட் பிரவுன் உடன் இணைந்து பெற்றார். இவர் ஒரு தொழில் முனைவர், தொழிலதிபர், மற்றும் 1897-ல் மார்க்கோனி வானொலி நிறுவனத்தின் நிறுவனர், வானொலி'மற்றும் அதனோடு தொடர்புடைய கருவிகளை உருவாக்கியவர்.

 
 
 
 
வானொலியை கண்டுபிடித்த மார்க்கோனி பிறந்த நாள்: ஏப்.25-1874
 
மார்க்கோனி என்ற குலீல்மோ மார்க்கோனி வானொலியைக் கண்டு பிடித்தவர். நீண்ட தூரம் ஒலிபரப்பப்படும் வானொலியின் தந்தை எனப்படுபவர். கம்பியற்ற தகவல்தொடர்பு முறை மற்றும் மார்க்கோனி விதி ஆகியவற்றை உருவாக்கியவர்.

இக்கண்டுபிடிப்பிற்காக 1909-இல் இயற்பியலுக்கான நோபல் பரிசை கார்ல் பெர்டினாண்ட் பிரவுன் உடன் இணைந்து பெற்றார். இவர் ஒரு தொழில் முனைவர், தொழிலதிபர், மற்றும் 1897-ல் மார்க்கோனி வானொலி நிறுவனத்தின் நிறுவனர், வானொலி'மற்றும் அதனோடு தொடர்புடைய கருவிகளை உருவாக்கியவர்.

மார்க்கோனி 1874-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 25-ல் இத்தாலிய நாட்டில் பொலொனா நகரில் பிறந்தவர். தந்தை கைசப் மார்க்கோனி. தயார் ஆனி ஜேம்சன்-அயர்லாந்தைச் சேர்ந்தவர். இவருடைய தந்தை ஓர் இத்தாலியப் பெருமகன். எனவே, மார்க்கோனி இளமையிலேயே வசதியான வாழ்க்கையைப் பெற்றார். போலக்னோ, புளோரன்ஸ், லெகார்ன் முதலிய ஊர்களில் தனிப்பட்ட முறையில் இவருடைய ஆரம்பக் கல்வி அமைந்தது.

இளமைப் பருவத்தில் இவர்க்கு படிப்பில் ஆர்வம் அதிகம். வீட்டிலேயே இருந்து நூல் நிலையத்தில் இருந்த அறிவியல் நூல்களைப் படித்தறிந்தார். வளர்ந்த பிறகும் இவர் பல்கலைக் கழகக் கல்வி எதனையும் பயிலவில்லை. இவருக்கு வீட்டிலேயே ஆசிரியர்கள் வந்து கல்வி கற்பித்தனர். இயற்பியலில் குறிப்பாக மின்சார இயலில் இவருக்கு அதிக நாட்டம் ஏற்பட்டது. 1905-ல் மார்க்கோனி ஓபிரெயின் என்பவரை மணந்தார். இவர்களுக்கு மூன்று மகள்களும் ஒரு மகனும் பிறந்தனர். ஒரு மகள் சில வாரங்களிலேயே இறந்தார். சில ஆண்டுகளுக்குப் பின் இருவரும் திருமண முறிவு செய்து கொண்டு பிரிந்தனர்.

மார்க்கோனி தன் இல்லத்திலும் தனியே ஆய்வுகளைச் செய்து வந்தார். எப்பொருளின் மூலமாக வேண்டுமானாலும் மின்காந்த அலைகள் பாயும் என்ற கருத்தை தன் ஆய்வின் மூலம் வெளிப்படுத்தினார். 1894-ல் மின் அலைகள் மூலமாக சைகைகளை (சிக்னல்) அனுப்பிக் காட்டினார். வானொலி அலைகளைக் கொண்டு கம்பியில்லாத் தந்தி முறையை உருவாக்குவதில் ஈடுபட்டார். இந்த முறையை இவருக்கு முன்பே 50 ஆண்டுகளாகப் பலரும் முயற்சி செய்து வந்தாலும் அதற்கான முடிவுகள் எட்டப்படவில்லை. ஆனால் மார்க்கோனி அதற்கான 1895-ம் ஆண்டு ஏறத்தாழ ஒன்றரை கி.மீ அளவுக்குச் செய்தியை அனுப்பக்கூடிய திசைதிரும்பும் மின்கம்பம் (Directional Antenna) என்ற கருவி மூலம் தொடர்பு ஏற்படுத்துவதில் வெற்றி பெற்றார். இந்த அரிய முயற்சியில் இத்தாலி அரசாங்கம் எந்தவித அக்கறையும் செலுத்தவில்லை.

எனவே, லண்டன் சென்ற மார்க்கோனி அங்கு தன்னுடைய ஆய்வினைப் பற்றிய செய்திகளை விளக்கினார். ஆங்கில அஞ்சல் நிலையத்தின் முதன்மைப் பொறியாளர் வில்லியம் ஃப்ரீஸ் என்பவர் இவருடைய ஆய்வுகளில் ஆர்வம் செலுத்தி ஊக்கம் கொடுத்தார். பல தொடர் ஆராய்ச்சிகளுக்குப் பிறகு 1897-ம் ஆண்டு மார்ச் மாதம் மோர்ஸ் அலை வடிவை 6 கி.மீ தூர அளவுக்குச் செலுத்தும் வகையில் மின்காந்த அலை பரப்பியை (Transmitter) உருவாக்கினார். 1897-ல் மே 13-ந்தேதி நீரின் வழியாக நீங்கள் தயாரா? என்ற செய்தியை சுமார் 14 கி. மீ தூரத்திற்கு செலுத்துகின்ற ஒலிபரப்பியை உருவாக்கினார்.

இவருடைய இந்த ஆய்வில் மனங்கவர்ந்த ஃப்ரீல் பொது மக்களிடையே கம்பியில்லாத் தந்தி முறை (Telegraph without wire) என்ற தலைப்பில் 11 டிசம்பர் 1896-ல் டாய்ன்பீ கூடத்தில் சொற்பொழிவாற்றி விளக்க ஏற்பாடு செய்தார். பிறகு அதன் விளக்கங்களை ராயல் கழகத்திற்கு வழங்கவும் துணை புரிந்தார். 1897-ல் 'மார்க்கோனி நிறுவனம்' இங்கிலாந்தில் தொடங்கப்பட்டது.1897-ல் கரையிலிருந்து கப்பலுக்கு 18 மைல் தூரம் தொடர்பு அமைத்துக் காட்டினார். 1899-ல் ஆங்கிலக் கால்வாயைத் தாண்டி இங்கிலாந்திற்கும் ஃபிரான்சுக்கும், எந்தவிதக் கால நிலையிலும் இயங்கும், கம்பியிலாத் தொடர்பை 200 மைல் சுற்றளவுக்கு உண்டாக்கினார்.

இவற்றைக் கவனித்த இத்தாலி அரசாங்கம், பிறகுதான் மார்க்கோனி மீது கவனத்தைச் செலுத்தியது. அதன் விளைவாக இவர் பிறந்த மண்ணில் 1897-ல் ஜூலை மாதம் லாஸ்பீசியா(La Spezia) என்ற இடத்தில் தன்னுடைய ஆய்வு பற்றிய பல சோதனைகளைச் செய்து காண்பித்தார். அங்கு அரசு தனக்களித்த உதவியுடன் ஸ்டீசர் என்னுமிடத்தில் மார்க்கோனி, வானொலி நிறுவனம் ஒன்றை உருவாக்கினார். அவர் அங்கிருந்து செய்தி சுமார் 20.கி.மீ. அப்பால் இருந்த போர்க்கப்பல்களுக்கு எட்டியது. 1898-ல் கிழக்குக் காட்வின் என்ற கப்பலில் தன்னுடைய நிறுவனத்தின் பெயரில் வானொலிக்கருவி ஒன்றை அமைத்திருந்தார். சில காலத்திற்குப் பிறகு அக்கப்பலின் மேல் மற்றொரு மரக்கலம் மோதியது. அதனால் அக்கப்பல் மூழ்கும் நிலை ஏற்பட்டது. உடனே மார்க்கோனி அதில் அமைந்திருந்த வானொலிச் சாதனம் மூலம் அதில் இருந்தவர்கள் கடலில் மூழ்கும் அபாய நிலையைக் குறித்த செய்தியைப் பரப்பினார்.

அதை அறிந்த கலங்கரை விளக்கப் பகுதியில் இருந்த உயிர் மீட்புப் படகுகள் அவர்களைக் காப்பாற்றினர். 1905-ல் வர்த்தகக் கப்பல்கள், போர்க் கப்பல்கள் பல மார்க்கோனியின் கம்பியற்ற தகவல் தொடர்பு கருவியை நிறுவி, கரை நிலையங்களுடன் தொடர்பு கொண்டன. மார்க்கோனியின் அரிய சாதனங்கள் அடுத்து இங்கிலாந்து மற்றும் இத்தாலி கடற்படைக்கு அதிகமாகப் பயன்பட்டன.

https://www.maalaimalar.com/

Link to comment
Share on other sites

சக மனிதனை நேசிக்க வேண்டும்... ஏன்? நெகிழ்ச்சிக் கதை #FeelGoodStory

 

கதை

றியாமையிலிருந்து உருவாவதுதான் இனவெறி’ - இத்தாலியைச் சேர்ந்த பிரபல கால்பந்தாட்ட வீரர் மரியோ பேலோடெல்லி (Mario Balotelli) தன் வாழ்க்கை அனுபவத்திலிருந்து உணர்ந்து சொன்ன வாசகம் இது. இனவெறிக்கு எந்தத் துறையும் விதிவிலக்கல்ல. விளையாட்டு, கல்வி, இலக்கியம், பொருளாதாரம்... என அத்தனைத் துறைகளிலும் மூக்கை நுழைத்துவிடக்கூடிய விஷ ஜந்து அது. ஒரு மனிதன் பிறந்த குலத்தைவைத்து அவனை அடையாளப்படுத்துவதையும், பேதம் பாராட்டுவதையும்விட மோசமான செயல் வேறொன்று இருக்க முடியாது. இன்றைய பரபரப்பான வாழ்க்கை ஓட்டத்துக்கு ஈடு கொடுக்கும் நாம், நம்மைப்போல் ஒருவரை, சக மனிதரை இனப் பாகுபாடு காட்டி ஒதுக்கிவைப்பதும், அதிகபட்ச இனவெறியில் உடல்ரீதியாகத் துன்புறுத்துவதும் இன்றைக்கும் உலகம் முழுக்கப் பல இடங்களில் நடக்கிற கொடுமை. இனவெறியால் பாதிக்கப்பட்டவரின் வலியை வெறும் வார்த்தைகளில் விவரிப்பது கடினம். அதன் உச்சபட்சமான வேதனையை விவரிக்கும் கதை இது.

`சாதியிலே மதங்களிலே சமயநெறி களிலே

சாத்திரச்சந் தடிகளிலே கோத்திரச்சண் டையிலே

ஆதியிலே அபிமானித் தலைகின்ற உலகீர்

அலைந்தலைந்து வீணேநீர் அழிதல்அழ கல்லவே...’ - அழுத்தம் திருத்தமாகச் சொல்கிறார் வள்ளலார். `சாதிகள், மதங்கள், சமயநெறிகள், சாத்திரங்கள், பிறந்த குலம்... இப்படிப் பல பிரிவினைகளை வைத்துக்கொண்டு, ஒருவருக்கொருவர் சண்டையிட்டு அழிவது அழகல்ல...’ என்பது இதன் பொருள். ஆனால், எத்தனை மகான்களும் ஞானிகளும் வலியுறுத்தினாலும் இந்த இனவெறியை மட்டும் மனிதர்களிடமிருந்து அப்புறப்படுத்த முடியவில்லை என்பதே நிதர்சனம். இனவெறியின் உச்சகட்ட பேரழிவுகளை இந்த உலகம் பார்த்திருக்கிறது. அவற்றில் முக்கியமானது `இனப்படுகொலை’ (The Holocaust) என வர்ணிக்கப்படும், இரண்டாம் உலகப்போரின்போது நாஜி வதை முகாம்களில் நடந்த படுகொலைகள். இந்த இனப்படுகொலையைப் பற்றி மறைந்த கியூபாவின் முன்னாள் தலைவர் ஃபிடல் காஸ்ட்ரோ இப்படி வர்ணித்தார்... `இந்த இனப்படுகொலையோடு வேறு எதையுமே ஒப்பிட முடியாது.’

சர்ச்

குழந்தைகள், பெண்கள், முதியவர்கள், நோயாளிகள்... என்று பாரபட்சம் பார்க்காமல் யூத இன மக்களைக் கொன்று குவித்த படுகொலை அது. ஹிட்லரின் நாஜிப்படைகளால் ஐரோப்பாவில் திட்டமிட்டு நடத்தப்பட்ட கொடூரம் அது. அந்த வதை முகாம்கள் நம் கற்பனைக்கு அப்பாற்பட்ட கொடுமைகளை அரங்கேற்றியவை. ஐரோப்பாவிலிருந்த வதை முகாம்களில் கிட்டத்தட்ட 60 லட்சம் யூதர்கள் கொல்லப்பட்டார்கள். `1941- 1945-ம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் ஐரோப்பாவில் இருந்த யூத இன மக்களில் மூன்றில் இரண்டு பங்கு மக்கள் இந்த இனப்படுகொலையில் அழிந்து போனார்கள்’ என்கிறது வரலாறு. இரண்டாம் உலகப்போருக்குப் பின்னர் இந்த கொடிய சிறைகளிலிருந்து தப்பித்தவர்கள் வெகு சொற்பம். அவர்களில் பலர் உற்றார், உறவினர், உடைமைகளை இழந்தவர்கள்; மனநிலை பாதிக்கப்பட்டவர்கள்; வாழ்க்கையையே பறிகொடுத்தவர்கள். அப்படி ஒரு முகாமிலிருந்து மீண்டு வந்த பெண்ணின் கதை ஒன்று...

***

மன்ஹாட்டன் (Manhattan) அமெரிக்காவின் நியூயார்க் நகரிலிருக்கும் ஒரு பகுதி. அங்கே ஒரு சர்ச் இருந்தது. அதன் பாதிரியாராக கில்மர் மையர்ஸ் (Kilmer Myers) என்பவர் இருந்தார். அமைதியான பகுதி; அன்பான மனிதர்கள்; ஞாயிறுதோறும் தேவாலயத்தில் கூடிவிடும் கூட்டம்; அவரிடம் மனமுவந்து தங்கள் பிரச்னையைச் சொல்லும் எளிய மனிதர்கள்... அவர் அந்த சர்ச்சுக்கு பாதிரியாராகப் பொறுப்பேற்றுக்கொண்டதிலிருந்து அருமையாகப் போய்க்கொண்டிருந்தது தேவாலயச் செயல்பாடுகள். அண்மைக்காலமாக அவருக்கு புதிதாக ஒரு பிரச்னை... அதுவும் ஒரு பெண்ணின் வடிவில்!

தினமும் மாலை நான்கு மணியானால் போதும்... அந்தப் பெண் தேவாலயத்துக்கு வந்துவிடுவாள். உள்ளே வர மாட்டாள். வாசலில் நின்றுகொண்டு இயேசு கிறிஸ்துவை திட்டித் தீர்ப்பாள். முதல் நாள் அந்தப் பெண் தேவாலய வாசலில் நின்று திட்டிக்கொண்டிருந்தபோது பாதிரியார் பதறிப் போனார். என்னென்னமோ சொல்லி, அந்தப் பெண்ணைத் தடுக்கப் பார்த்தார். அந்தப் பெண் அவரைப் பொருட்படுத்தவேயில்லை. மனமார இயேசுவைத் திட்டித் தீர்த்துவிட்டு, கிளம்பிப் போனாள்.

பாதிரியார்

கில்மர் மையர்ஸ் பாதிரியார், அங்கே நின்று வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த ஒருவரிடம், ``இந்தப் பெண் யாருனு உங்களுக்குத் தெரியுமா?’’ என்று விசாரித்தார்.

``இப்போதான் இங்கே குடிவந்திருக்காங்க. பேரு எம்மா (Emma). ஐரோப்பாவுல ஏதோ ஒரு வதை முகாம்ல இருந்தாங்களாம். போர் முடிஞ்சிடுச்சுல்ல... அதான் வெளியே வந்துட்டாங்க. அவங்க பேசுறதைப் பெருசா எடுத்துக்காதீங்க ஃபாதர். பாவம்...’’

இப்போது எம்மா அனுபவித்திருந்த வலியையும் வேதனையையும் பாதிரியார் புரிந்துகொண்டார். ஆனால், எத்தனை நாள்களுக்குத்தான் பொறுத்துக்கொள்ள முடியும். எம்மா மாலை நான்கு மணிக்கு சர்ச் வாசலுக்கு வருவதும், இயேசுவைத் திட்டுவதும் நாள் தவறாமல் நடந்தது. அவளைத் தெரிந்தவர்கள் கண்டுகொள்ள மாட்டார்கள். தெரியாதவர்கள் பாதிரியாரிடம்தான் வந்து கேட்பார்கள். இந்த நிகழ்வு தொடர்ந்துகொண்டிருக்க ஒரு கட்டத்தில் அயர்ந்து போனார் பாதிரியார்.

ஒருநாள் எம்மா, வழக்கம்போல இயேசுவின் மேல் வசை பாடிக்கொண்டிருந்தாள். பாதிரியார் கில்மர் அவளருகே போனார். அன்பான குரலில் இப்படிச் சொன்னார்... ``மேடம்... தினமும் இப்படி வாசல்ல நின்னு திட்டுறீங்களே... உங்களுக்குக் கால் வலிக்கலை? அதோட இயேசுவுக்குக் கேட்குமோ, என்னவோ... நீங்க ஏன் உள்ளே போய் அவர்கிட்டயே நின்னு திட்டக் கூடாது?’’

பிரார்த்தனை

இப்படிச் சொல்லிவிட்டு பாதிரியார் வேறு பக்கம் போய்விட்டார். அதற்குள் யாரோ கூப்பிட்டது கேட்க, சர்ச்சின் பின்புறமுள்ள தன் அறைக்குப் போனார். ஒரு மணி நேரம் கழித்து அவர் திரும்பி வந்தார். எம்மா வாசலில் இல்லை. `இந்தப் பெண்மணி எங்கே போயிருப்பாள்?’ என்ற யோசனையோடு சர்ச்சுக்குள் நுழைந்தார். உள்ளே சிலுவைக்குக் கீழே மண்டியிட்டு அமர்ந்து, அப்படியே சிலைபோல எதையோ முணுமுணுத்து வேண்டிக்கொண்டிருந்தாள். பாதிரியார் மெள்ள அவள் தோளைத் தொட்டார். எம்மா திரும்பி அவரைப் பார்த்தாள். கண்களைத் துடைத்துக்கொண்டு இப்படிச் சொன்னாள்... ``பாவம்... இந்த இயேசுவும் எங்களை மாதிரி கஷ்டப்பட்டவருதானே!’’

குறிப்பு: எழுத்தாளர் மேகி ரோஸ் (Maggie Ross) தன்னுடைய `The Fire of Your Life' நூலில் இந்தச் சம்பவத்தைக் குறிப்பிட்டிருக்கிறார்.

https://www.vikatan.com

Link to comment
Share on other sites

 
 
 

பிரபலங்களின் திருமண ஒளிப்படங்கள்!!

நாட்டின் முன்னாள் மற்றும் தற்போதைய அரச தலைவர், தலைமை அமைச்சர்கள் உள்ளிட்ட சில பிரபலங்களின் திருமண ஒளிப்படங்கள் சில சமூக வலைத்தளங்களில் பதிவிடப்பட்டுள்ளன.

அதற்கு சிலர் நகைச்சுவையான கருத்துக்களைப் பதிவிட்டு வருகின்றனர்.

31172200_2028602624020319_2973997267427531172123_2028602860686962_77666561867529

31164080_2028602887353626_8086121691089931345248_2028602937353621_59750265221451

31317726_2028602687353646_4499037736446931206545_2028602767353638_18559120621699

31206486_2028602824020299_10270935442480

http://newuthayan.com/

Link to comment
Share on other sites

'மெத்தட் ஆக்டிங்'கால் மேஜிக் செய்பவன்! #HappyBirthDayAlPacino

 
 

தமிழ் சினிமாவில் உச்சம் தொட்ட நடிகர்களை ஹாலிவுட் கலைஞர்களோடு ஒப்பிட்டுப் பாராட்டுவது வழக்கம். ஹாலிவுட் சினிமா விரும்பிகளுக்கு `தி காட்ஃபாதர்' படத்தைப் பற்றி நான் சொல்லித்தான் தெரியவேண்டுமென்ற அவசியம் இல்லை. அதில் நடித்த முக்கியமான இரு நடிகர்கள், மார்லன் பிராண்டோ, அல் பசினோ.  நடிகர் திலகம் சிவாஜியை `தமிழ் சினிமாவின் மார்லன் பிராண்டோ' எனக் கொண்டாடுபவர்கள், கமல்ஹாசனை ‘தமிழ் சினிமாவின் அல் பசினோ’ என்று கொண்டாட வேண்டும் என்பார்கள். 

கமல்ஹாசனுடன் ஒப்பிட்டுக் கொண்டாடும் அளவுக்கு அவர் என்ன அவ்வளவு பெரிய நடிகரா... என்று கேட்டால், ஆம் அல் பசினோ மாபெரும் நடிகர் என்பதைத் தாண்டி ஹாலிவுட் சினிமாவின் மகத்தான கலைஞன் என்று சொல்லலாம். 77 வயதைக் கடந்து 78-வது வயதில் அடியெடுத்து வைக்கும் இந்த கலைக் காதலனுக்கு இன்று பிறந்தநாள். தற்போது வெளியாகும் படங்களைப் போல் வெறும் பிரமாண்டத்தை மட்டுமே நம்பாமல், நடிப்பை மட்டுமே ஆதாய ஸ்ருதியாகக் கொண்டு படங்கள் வெளிவந்த காலம் அது...  

Al pacino

இவர் பிறந்த கொஞ்ச நாள்களிலேயே இவரது தாயும் தந்தையும் பிரிந்துவிட்டனர். அதற்குப் பின்னர், தனது தாயின் அரவணைப்பில்தான் வளர்ந்தார். குடும்பத்தின் ஏழ்மையும் வறுமையும் இவரது பள்ளிப் படிப்பை பாதியிலேயே துண்டித்தது. அப்போது இவருக்கு வயது 17. தன் வயிற்றுப் பசிக்காகப் பல இடங்களில் வேலை செய்தார். பழைய படங்களைப் பார்க்கும் பழக்கத்தைக்கொண்ட அல் பசினோ, அதில் வரும் கதாபாத்திரங்களைப் போல் வீட்டில் இருக்கும் தாத்தா பாட்டியிடம் நடித்துக்காட்டுவார். இவருள் இருக்கும் நடிகனை உணர்ந்த பாட்டியும் தாத்தாவும் இவருக்கு மேலும் தன்னம்பிக்கை ஊட்டினர். அதன் பின்னர் ஆக்டிங் பள்ளியில் சேர்ந்த அல் பசினோ தன்னுள் இருந்த நடிகனைக் கொஞ்சம் கொஞ்சமாகச் செதுக்க ஆரம்பித்தார்.  

இதற்கிடையில், தன் 21-வது வயதில் தன் தாயை இழந்தார். அதன்பிறகு ஒரு வருட இடைவெளியில் தாத்தாவையும் பாட்டியையும் இழக்க நேர்ந்தது. வறுமையின் கோர முகம் அல் பசினோவை பதம் பார்த்தது. நிரந்தரமான வேலையில்லை, கையில் பணமில்லை, சொந்தம் என்று சொல்ல ஒருவரும் இல்லை. இப்படிப் பல ‘இல்லை’களைக்கொண்ட அல்பசினோவிடம் இருந்தது ‘நடிப்பு’ என்ற ஒன்றே ஒன்று மட்டும்தான். 

1969-ல் `Me, Natalie' எனும் படத்தில் சிறு வேடத்தில் நடிக்க வாய்ப்பு வந்தது. பின்னர் இரண்டு வருட காத்திருப்புக்குப் பின் இரண்டாவது படத்தில் நடிக்கும் வாய்ப்பு வந்தது. இம்முறை பெரிய வாய்ப்பு. படத்தின் லீடிங் ரோல் இவர்தான். அந்தப்படம் பல பாராட்டுகளைப் பெற்றது. பின், வந்தது மூன்றாவது பட வாய்ப்பு. அது வரலாற்றை திரும்பிப் பார்க்க வைக்கும்படியான வாய்ப்பு. அதுதான் `தி காட்ஃபாதர்' படம். 

தற்போது வெளிவரும் `டான்' படங்களுக்கு இன்ஸ்பிரேஷனாக இருக்கும் படம் `தி காட்ஃபாதர்'. இதன் பாதிப்பிலும் பாணியிலும் எல்லா மொழிகளிலும் படங்கள் வெளியாகியிருக்கின்றன. இன்னும் வெளிவந்துகொண்டே இருக்கின்றன. ஆனால், `காட்ஃபாதர்' படம் வெளிவந்த ஆண்டு 1972. ஏறத்தால 10 மணி நேரம் கொண்ட படத்தை, மூன்று பாகங்களாக வெளியிட்டார்கள். 

Al pacino

தமிழ் சினிமாவிலும் இந்தப் படத்தின் சாயலில் பல படங்கள் வெளியாகியிருக்கின்றன. அது நம்ம ஊர் ஃப்ளேவரிலும் திரைக்கதையில் சிறு மாறுதல்களுடன் வெளிவந்தன. `தேவர்மகன்' படம் தொடங்கி `கபாலி' வரை... தமிழில் வந்த பல டான் படங்களில் ‘காட்ஃபாதர்’ சாயல் உண்டு. இப்படியொரு மகத்தான படத்தில், நேர்த்தியான நடிப்பை வெளிக்காட்டியவர்தான், இந்த அல் பசினோ. மார்லன் பிராண்டோவுக்குப் பிறகு, அல் பசினோதான் காட்ஃபாதராக நடித்தார். காட்ஃபாதராகவே வாழ்ந்தும் இருப்பார். 

இன்று வெற்றி நாயகனாக ஹாலிவுட் சினிமாவில் வலம் வந்தாலும் அன்று அல் பசினோவுக்கு ‘தி காட்ஃபாதர்’ மூன்றாவது படம். அதற்கு முன் இவர் நடித்த இரண்டு படங்களைப் பார்த்த பின், அதன் தயாரிப்பு நிறுவனத்துடன் சண்டையிட்டு, அல் பசினோவை `காட்ஃபாதர்' படத்தில் நடிக்க வைத்தார், இயக்குநர் ஃப்ரான்சிஸ் ஃபோர்டு கொப்பல்லா. படப்பிடிப்பு தளத்தில் அல் பசினோவைப் பார்த்து தயாரிப்பு நிறுவனம், `இந்தக் குழந்தை இங்க என்ன பண்ணுது, முதல்ல இவனை வெளியில் அனுப்புங்கள்' என்று நக்கலாகச் சொல்லியிருக்கிறது. 

இவர்தான் காட்ஃபாதர் கதாபாத்திரத்தில் நடிக்கப்போகிறார் என்று தெரிந்தவுடன், இவரைப் படத்திலிருந்து நீக்க மூன்று முறை முயன்றும் உள்ளது. ஆனால், படத்தின் இயக்குநர் ஃப்ரான்சிஸ் போர்டு கொப்பல்லாதான் இவருக்குள் இருந்த நடிகனை அடையாளம் கண்டு, படத்தில் இவரை தக்கவைத்தது. இவரது நம்பிக்கைக்குக் கிடைத்த பலன்தான் இன்னமும் `காட்ஃபாதர்' படத்தைப் பற்றி நாம் பேசிக்கொண்டிருக்கிறோம். இனிமேலும் பேசுவோம்.  

Al pacino

அதன் பின்னர் தேர்ந்தெடுத்த கதாபாத்திரங்களில் மட்டுமே நடிக்கத் தொடங்கினார், அல் பசினோ. காட்ஃபாதர் படத்தோடு சேர்த்துப் பல படங்களில் நடித்து, தன்னைத் தேர்ந்த நடிகனாக ஹாலிவுட்டில் அடையாளம் காட்டினார். முதல் படத்திலேயே அபார நடிப்பை வெளிக்காட்டிய பின், அடுத்தடுத்து நடித்தப் படங்களைப் பார்க்க ரசிகர்கள் ஆவலாக காத்திருந்தனர். சிறந்த நடிகனாக ஏற்றுக்கொள்ளவும் தொடங்கினார்கள். ரசிகர்களின் காத்திருப்புக்கு இவர் கொடுத்த பரிசே இவரின் படங்கள். உதாரணத்துககு `Scarecrow', `Serpico', `Scarface', `...And justice for all', `Scent of a woman', `The devil's advocate', நோலன் இயக்கிய `Insomnia' எனப் பல படங்கள். Classical acting, Stanislavski's System, Method acting, Meisner technique, Practical Aesthetics... இப்படி வெளிக்காட்டும் நடிப்பில் பல வகைகள் உள்ளன. இதில் அல் பசினோ பின்பற்றுவது `மெத்தட் ஆக்டிங்'.  

அதென்ன மெத்தட் ஆக்டிங்? ஒரு வரியில் சொல்வதென்றால், `கதாபாத்திரத்தை உள்வாங்கி நடிப்பது'. அதற்குப் பெயர்தான் மெத்தட் ஆக்டிங். கதை கேட்கும்போதே, தன் கதாபாத்திர வடிவமைப்பைப் பற்றி தெரிந்துகொள்வதில்தான் மெத்தட் ஆக்டர்களின் ஆர்வம் அதிமாக இருக்கும். இவர்களின் முக்கியமான குணாதிசியங்களில் ஒன்று, இந்த ரக நடிகர்கள் வசனங்களை மனப்பாடம் செய்ய மாட்டார்கள். அதற்கு `Improvisation' என்ற இன்னொரு பெயரும் உண்டு. வசனத்தின் கருவையும் நோக்கத்தையும் ஞாபகத்தில் வைத்துக்கொண்டு, அந்தச் சூழ்நிலைக்குத் தகுந்தாற்போல் வசனங்களை அவர்களே சேர்த்து பெர்ஃபார்ம் செய்வார்கள். இவர்களுக்குப் பெயர்தான் மெத்தட் ஆக்டர்ஸ். 

இந்த மெத்தட் ஆக்டிங்கில் தலை சிறந்து விளங்குபவர் அல் பசினோ. ஒருசில நடிப்பு ஆர்வக்கோளாறுகளை உற்றுக் கவனித்தால் ஒரே மாதிரியான நடிப்பையும் வசனங்களின் உச்சரிப்பையும் முக பாவனைகளையும் கவனிக்க முடியும். ஆனால், அல் பசினோவிடம் டெம்ப்ளேட்டான நடிப்பைப் பார்க்கவே முடியாது. பல வெரைட்டியான நடிப்பை வெளிக்காட்டக் கூடியவர். இவர் நடித்த படங்களைப் பட்டியலிட்டால், அந்தப் படத்தில், அந்தக் கதாபாத்திரத்தில் இவர் மட்டும்தான் நடிக்க முடியும் என்ற எண்ணம் கண்டிப்பாக நம் அனைவருக்கும் தோன்றும். இப்படி ரசிகனுக்குத் தோன்றவைப்பதுதான் ஒரு நடிகனுக்குக் கிடைக்கும் வெற்றி. வேறொரு நடிகரால் அந்த கதாபாத்திரத்தில் நடிக்க முடியுமெனில், நாம் ஏன் இதில் நடிக்க வேண்டுமென்ற எண்ணம் ஏற்படும் படங்களில் அல் பசினோ கண்டிப்பாக நடிக்க மாட்டார்.  

அல் பசினோ

இவரின் நடிப்பில் என்னை பெர்சனலாக பாதித்த படம், `Scent of a woman'. இது, பல விருதுகளைப் பெற்ற படம் என்ற காரணத்துக்காக அல்ல. தன் குரலுக்குள் ஒளிந்திருக்கும் கம்பீரத்தை அவ்வளவு அழகாகப் பயன்படுத்தியிருப்பார். யதார்த்தம் சூழ்ந்திருக்கும் இந்தப் படத்தில் `தன் பெயர் அல் பசினோ' என்பதை மறந்து ஃப்ராங்க் ஸ்லேடாகவே வாழ்ந்திருப்பார். படத்தில், பார்வையற்ற குருடனாக வாழ்வதைச் சாபமாக நினைக்கும் ஃப்ராங்க் ஸ்லேட், தான் எதற்காக வாழ்கிறேன் என்பதற்கான விளக்கம்தான் இந்தப் படம்.  

`தி டெவில்ஸ் அட்வகேட்' படத்தில் கடவுளைப் பற்றி ஒரு விளக்கம் கொடுப்பார். `கடவுளைப் பற்றி நான் ஒரு விளக்கம் தர்றேன். கடவுளுக்கு வேடிக்கையென்றால் நிறைய பிடிக்கும். மனிதனுக்கு வரமாக உள்ளுணர்வைக் கொடுப்பார். அதற்குப் பின் அவர் என்ன செய்கிறார்? அவருடைய பொழுதுபோக்குக்காக விதிமுறைகளை நேரெதிராக நிர்ணயிப்பார். `பார்... ஆனால் தொடாதே, தொடு... ஆனால் ருசிக்காதே, ருசி... ஆனால் விழுங்காதே... நீ ஒரு முடிவில் இருந்து இன்னொரு முடிவை எடுக்கும்போது அவர் என்ன செய்கிறார்? நீ செய்வதையெல்லாம் பார்த்து சிரித்துக்கொண்டிருப்பார். அவரை வழிபட வேண்டுமா? கண்டிப்பாக முடியாது.' இப்படி ஒவ்வொரு வசனமும் அவரது மனதில் இருந்து பேசுவதைப்போல் அவ்வளவு ஆழமாக வெளிப்படும்.  

80 வயதை நெருங்கியும், நடிப்பு என்ற கலை தாகத்தை நிறுத்திக்கொள்ளாமல், இன்னமும் படங்களில் நடித்துக்கொண்டிருக்கிறார் அல் பசினோ. வரலாறு இவரை என்றும் நினைவில் கொள்ளும். பிறந்தநாள் வாழ்த்துகள் அல் பசினோ. 

https://cinema.vikatan.com

Link to comment
Share on other sites

அறைக்கு வெளியே குவிந்திருந்த ரோஜா மலர்கள்! இனுக்காவுக்கு பிரியா விடைகொடுத்த சிங்கப்பூர்!

உலகின் கடைசி வெப்ப மண்டல துருவக் கரடியான இனுக்கா, கருணைக்கொலை செய்யப்பட்டுள்ளதாக இன்று சிங்கப்பூர் உயிரியல் பூங்கா நிர்வாகம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. 

இனுக்கா

குழந்தைப் பருவத்தில் இனுக்கா...

பனிக்கரடி... கடும் உறைபனி சூழ்ந்த ஆர்டிக் பகுதியில் காணப்படும் ஒருவகை கரடி இனம். ஆனால் இனுக்கா என்னும் பனிக்கரடியின் பிறப்பும் இறப்பும் அப்படியிருக்கவில்லை. சிங்கப்பூர் உயிரியல் பூங்காவில் 1990-ம் ஆண்டு டிசம்பர் 26-ம் தேதி நனூக் எனும் கனடா ஆண் கரடிக்கும் ஷீபா என்னும் ஜெர்மன் பெண் கரடிக்கும் பிறந்த சுட்டி ஆண் கரடிதான் இந்த இனுக்கா. சிங்கப்பூர் உயிரியல் பூங்காவில் இனுக்காவுக்காகச் செயற்கை உறைபனி பகுதி உருவாக்கப்பட்டது. எப்போதும் துருதுருவென விளையாடிக்கொண்டிருக்கும்   இனுக்காவை காண ஒவ்வொரு விடுமுறை தினத்துக்கும் கூட்டம் அலைமோதும். அரசியல் தலைவர்களின் பிறந்தநாளைப் போன்று இனுக்காவின் பிறந்தநாள் விமரிசையாகக் கொண்டாடப்படுவது வழக்கம்.

இனுக்கா
 

உயிரியல் பூங்கா நிர்வாகம் இனுக்கா மீது அதீத கவனம் காட்டியது. ஆனாலும், பனிக்கரடியை வெப்ப மண்டலத்தில் வைத்து வளர்ப்பது இயற்கைக்கு மாறானது என்று விலங்கு நல ஆர்வலர்கள் எதிர்ப்புக் குரல் எழுப்பினர். விலங்கு நல ஆர்வலர்கள் எதிர்ப்பைத் தொடர்ந்து `இனிமேல் உயிரியல் பூங்காவில் பனிக்கரடி வளர்க்கப்படாது. இனுக்காவே கடைசி’ எனச் சிங்கப்பூர் உயிரியல் பூங்கா அறிவித்தது. விலங்கு நல ஆர்வலர்கள் பயந்ததுபோல் இனுக்காவின் மென்மையான வெள்ளை நிற அழகிய ரோமங்கள் பிறந்து சில ஆண்டுகளிலேயே உதிரத் தொடங்கின. ஆனாலும், அதன் சேட்டைகள் குறையவில்லை. 

இனுக்கா
 

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இனுக்காவின் 27வது பிறந்தநாளை மிகப் பிரமாண்டமாகக் கொண்டாடியது உயிரியல் பூங்கா நிர்வாகம். கடந்த இரண்டு ஆண்டுகளாக இனுக்காவின் துள்ளல், சேட்டைக் குறைந்துவிட்டது. ஒரே இடத்தில் நீண்ட நேரம் படுத்துக்கொண்டிருக்கிறது. மூட்டுவலி, பற்கள் தொடர்பான பிரச்னைகளால் பாதிக்கப்பட்டது. தீவிர சிகிச்சை அளித்த பிறகும் இனுக்காவின் உடல் நலத்தில் முன்னேற்றம் இல்லை. உடல் முழுவதும் பச்சை நிற பூஞ்சை பரவியது. எனவே, இனுக்காவை கருணைக் கொலை செய்ய சிங்கப்பூர் உயிரியல் பூங்கா முடிவெடுத்தது. அதற்கான அறிவிப்பையும் இனுக்காவை காணும் கடைசி வாய்ப்பையும் மக்களுக்கு அளித்தனர். கடந்த வாரம் முழுவதும் சிங்கப்பூர் உயிரியல் பூங்காவில் வழக்கத்தைவிடக் கூட்டம் அலைமோதியது.

 

With a heavy heart, we bade farewell to our beloved senior polar bear Inuka this morning. Despite the best efforts of his care team, Inuka's condition worsened and the difficult but necessary decision not to revive him from anesthesia was made on humane grounds.

Farewell Inuka, you will always live in our memories.

Bild könnte enthalten: im Freien

 

இன்று காலை 7 மணிக்கு மயக்க மருந்தின் உதவியுடன் அதற்கு விடைகொடுக்கப்பட்டதாக உயிரியல் பூங்கா அறிவித்துள்ளது. இனுக்காவின் மறைவு குறித்து செய்தியாளர்களைச் சந்தித்த வனவிலங்கு காப்பக அதிகாரி கண்ணீருடன் பேசியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தும்விதமாக இருந்தது.  

இனுக்கா
 

இனுக்காவின் அறை வெளியே `GetWellSoon Inuka’, Love you Inuka', Miss u Inuka' என்று குழந்தைகள் எழுதி வைத்த கடிதங்களும் பலகைகளும், ரோஜா மலர்களும் நிறைந்துள்ளன. ஆனால், அறையின் உள்ளே இனுக்கா இல்லாமல் வெறிச்சொடிக் கிடந்தது. உலகின் ஒரே வெப்பமண்டல பனிக்கரடிக்கு இணையத்தில் மிஸ் யூ-க்கள் குவிகின்றன!

https://www.vikatan.com

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "பதவி உங்களுக்குப் பெருமை தருவதை விட நீங்கள் தான் அதைப் பெருமை படுத்த வேண்டும்." புறநானுறு 75. அரச பாரம்! [படியவர்: சோழன் நலங்கிள்ளி] "மூத்தோர் மூத்தோர்க் கூற்றம் உய்த்தெனப் பால்தர வந்த பழவிறல் தாயம் எய்தினம் ஆயின், எய்தினம் சிறப்புஎனக் குடிபுரவு இரக்கும் கூரில் ஆண்மைச் 5 சிறியோன் பெறின்அது சிறந்தன்று மன்னே! மண்டுஅமர்ப் பரிக்கும் மதனுடை நோன்தாள் விழுமியோன் பெறுகுவன் ஆயின், ஆழ்நீர் அறுகய மருங்கின் சிறுகோல் வெண்கிடை என்றூழ் வாடுவறல் போல நன்றும் 10 நொய்தால் அம்ம தானே; மையற்று விசும்புஉற ஓங்கிய வெண்குடை முரசுகெழு வேந்தர் அரசுகெழு திருவே," பாடலின் பின்னணி: ஒரு சமயம் நலங்கிள்ளி தன் அரசவை அறிஞர்களுடன் கலந்துரையாடிக் கொண்டிருந்த பொழுது எத்தகைய அரசு முறை சிறந்தது என்பது பற்றிப் பேச்செழுந்தது. “பரம்பரை பரம்பரையாக மூத்தோர் இறக்க அதற்கு அடுத்து உள்ள இளையோர் அரசுரிமைப் பெற்று பதவி ஏற்க , பதவி பெறுவது ஒன்றும் பெருமை இல்லை . அது யார் கைக்கு வருகிறது என்பதை பொறுத்து தான் அந்த பதவிக்கே மரியாதை / பெருமை வருகிறது . ஆட்சித் திறனின்றி மக்களுக்கு வரிச் சுமையை அதிகமாக்கும் சிறியோனின் கைகளில் சேர்ந்தால் அது நலிவு அடைகிறது . ஆண்மையும் தகுதியும் உடையவன் கையில் வந்தால் அது பொலிவு பெறுகிறது " என்று தன் கருத்தை இப்பாடலில் நலங்கிள்ளி கூறுகிறான். "ஒரேயடியாக உச்சிக்குப் போய் விட வேண்டு மென்று முயற்சி தான் உலகின் பெரும் துன்பங்களுக்குக் காரணமாக அமைகிறது" உச்சிக்குப் போவது அவ்வளவு பெரிதான விடயம் அல்ல ! தொடர்ந்து முயற்சிக்கும் எவருமே உச்சிக்கு ஒரு நாள் போய்விட முடியும். ஆனால் கடினமானது எதுவென்றால், உச்சியிலே தொடர்ந்து இருக்க முயல்வது தான்! இந்த ஒரு கருத்தை நகைச்சுவையோடு தன்னுடைய புத்தகத்தில் "ஜான் மாக்ஸ்வெல்" சொல்லியிருப்ப தாகப் படித்துள்ளேன் அவர் சொல்லும் கதை இது. ஒரு நாள் ஒரு காட்டு வான்கோழியும், எருதும் சந்தித்துப் பேசிக் கொண்டிருந்தன. எதிரே தெரிந்த உயரமான மரத்தை ஏக்கத்துடன் பார்த்துப் பெருமூச்சு விட்டுக் கொண்டே வான்கோழி சொன்னது: "அந்த மரத்தின் உச்சிக்குப் போய்விட வேண்டும் என்ற ஆசை எனக்கிருக்கிறது! ஆனால் அதற்குத் தேவையான சக்தியோ, சத்தோ என்னிடம் இல்லை." எருது சொன்னதாம்! "என்னுடைய சாணியை கொஞ்சம் சாப்பிட்டுத் தான் பாரேன்! அதில் ஏகப்பட்ட சத்து இருக்கிறது!" வான்கோழியும், நம்பிக்கையோடு சாணியைச் சாப்பிட்டுப் பார்க்க ஆரம்பித்ததாம்! எருது சொன்ன மாதிரியே அது ஊட்டச்சத்து மிகுந்ததாகத் தான் இருந்தது. மரத்தின் அடிவாரம் வரை போகக் கூடிய தெம்பு வந்து விட்டது. மறுநாள், இன்னும் கொஞ்சம் சாணியைச் சாப்பிட மரத்தின் கீழ்க் கிளை வரை போக முடிந்தது. அடுத்தநாள், அதற்கும் அடுத்த நாள் என்று சாணியைச் சாப்பிட்டு, நான்காவது நாள் ஒருவழியாக மரத்தின் உச்சிக் கிளைக்குப் போய் உட்கார முடிந்தது. உச்சிக்குப்போய் உட்கார்ந்த பெருமிதத்தோடு வான்கோழி சுற்றும் முற்றும் பார்த்துக் கொண்டே சந்தோஷத்தில் குரல் எழுப்பியதாம்!  காட்டில் வேட்டையாட வந்த ஒருவன் கண்ணில் பட, துப்பாக்கியால் சுட்டானாம்.. வான் கோழி பணால்! உயரத்திலேயிருந்து, ஒரே தோட்டாவில் கீழே வந்தாயிற்று! [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]  
    • எல்லாம் ப‌ண‌த்துக்காக‌ தான் ஈழ‌ ம‌ண்ணில் சிங்க‌ள‌ ராணுவ‌ம் நாட்டு ப‌ற்றினால் போர் புரிந்த‌வையா இல்ல‌வே இல்லை எல்லாம் காசுக்காக‌ ஈழ‌ ம‌ண்ணில் வ‌ந்து ப‌ல‌ ஆயிர‌ம் சிங்க‌ள‌ இராணுவ‌ம் ப‌லி ஆனார்க‌ள்.........................   ர‌ஸ்சியா விவ‌கார‌த்தில் ஈழ‌ த‌மிழ‌ர்க‌ள் ர‌ஸ்சியா போகாம‌ல் இருப்ப‌து ந‌ல்ல‌ம்......................................
    • சகோதரிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.