Jump to content

இளமை புதுமை பல்சுவை


Recommended Posts

குறட்டையைக் கட்டுப்படுத்தும் ஸ்மார்ட் மெத்தை அறிமுகம்

 


குறட்டையைக் கட்டுப்படுத்தும் ஸ்மார்ட் மெத்தை அறிமுகம்
 

மனிதர்கள் உறங்கும் போது குறட்டை விடுவதைத் தானாகக் கட்டுப்படுத்தும் ஸ்மார்ட் மெத்தையை அமெரிக்க நிறுவனம் ஒன்று அறிமுகம் செய்துள்ளது.

இந்த ஸ்மார்ட் மெத்தையில் உறங்குபவர்களின் குறட்டை பிரச்சினை தானாக சரியாகிவிடும் எனவும் சௌகரியமான உறக்கம் கிடைக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது.

ஸ்லீப் நம்பர் எனும் குறித்த நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட் மெத்தை ஸ்லீப் நம்பர் 360 i10 என அழைக்கப்படுகிறது.

லாஸ் வேகாஸ் நகரில் நடைபெற்று வரும் சி.இ.எஸ். 2018 விழாவில் இந்த மெத்தை அறிமுகம் செய்துவைக்கப்பட்டுள்ளது.

இரவில் உறங்கும் போது உடல் அசைவுகளுக்கு ஏற்ப மெத்தையை தானாக மாற்றியமைத்துக்கொள்ளும் வகையில் இந்த மெத்தை வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஸ்மார்ட் மெத்தையில் ஒருவர் குறட்டை விடும் போது, இந்த மெத்தை அதில் உறங்குபவரின் தலையை ஏழு கோணம் அளவு உயர்த்தும். இவ்வாறு செய்யும் போது அடிப்படையில் ஒருவர் குறட்டை விட காரணங்களாக இருக்கும் உடல் அசைவுகள் மாற்றப்பட்டு குறட்டை கட்டுப்படுத்தப்படுகிறது.

மேலும், இந்த மெத்தை அதனை பயன்படுத்துவோரின் நேர வழக்கத்தை அறிந்து கொண்டு மெத்தையின் அடிப்பாகத்தை வெப்பமாக்கும். இதில் வழங்கப்பட்டிருக்கும் ஸ்மார்ட் அலாரம் அம்சம் உறங்குபவர் எழ வேண்டிய நேரத்தில் எழுப்பி விடும். CES வீட்டு உபயோகப் பொருட்கள் பிரிவில் சிறந்த கண்டுபிடிப்பிற்கான விருது ஸ்மார்ட் மெத்தைக்கு வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

புதிய ஸ்மார்ட் மெத்தையின் விற்பனை இவ்வாண்டில் ஆரம்பமாகவுள்ளது.

இதன் விலை 4000 டொலர்கள்.

 

 

http://newsfirst.lk/

 

 

Link to comment
Share on other sites

  • Replies 11.3k
  • Created
  • Last Reply

 

ஆண்களுக்கு இணையாக உலகப்போர்களில் பங்கேற்ற பிரிட்டிஷ் பெண்கள் படை

இரண்டு உலகப் போர்களை சந்தித்த, நூற்றாண்டைக் கொண்டாடும் பிரிட்டிஷ் பெண்கள் கடற்படைப் பிரிவு குறித்த சிறப்பு தொகுப்பு

Link to comment
Share on other sites

14 நாள்கள்

 

 

 

பிரியங்காவின் பிரச்னை முதல் தமிழ்நாட்டுப் பெண்களின் விழிப்பு உணர்வு வரை... இந்த இரண்டு வார காலத்தில் பெண்கள் உலகில் நிகழ்ந்தவை என்ன? அறிவோம்... ஆக்கபூர்வமாகச் செயல்படுவோம்!

16p1_1515391808.jpg

பிரியங்காவையும் விட்டுவைக்காத ஆணாதிக்க மோசடி!

பாலிவுட் நடிகைகளிலேயே மிகவும் தைரியமானவர் என அறியப்படும் பிரியங்கா சோப்ரா, பெண்களுக்கு எதிரான பாலியல் அத்துமீறல்களை எதிர்க்கும் `மீ டூ’ பிரசாரத்தில் பங்கெடுத்துக்கொண்டிருக்கிறார். சமீபத்தில், “நடிக்க வந்த புதிதில் என்னைத் தூக்கிவிட்டு நடிகர் அல்லது இயக்குநரின் கேர்ள் ஃப்ரெண்டை ஹீரோயினாக்கிப் படத்தைத் தொடர்வார்கள். இதுவும் ஆணின் அதிகார துஷ்பிரயோகம்தான். அந்த நேரத்தில் என் குடும்பம் என்னை அரவணைத்துக்கொண்டது. குடும்பம், நல்ல நட்பு என ஆதரவு எதுவுமில்லாத பெண்களின் பாடு திண்டாட்டம்தான்” எனக் கூறியுள்ளார் பிரியங்கா.

“தனக்கு நேர்ந்த கொடுமையைத் தானாக முன்வந்து சொல்வது என்பது எந்தப் பெண்ணுக்கும் எளிதானது அல்ல. ஆனால், துணை இருந்தால், அதை எளிதாக எதிர்கொள்ள முடியும். பெண்ணை எப்போதும் நான் பாதிக்கப்பட்டவளாகப் பார்ப்பதில்லை. தப்பிப் பிழைத்தவளாக, மீண்டு எழுந்தவளாகவே பார்க்கிறேன். பெண்கள் `ஏதோ வாழும்’ உலகம் வேண்டாம்; `செழித்து வாழும்' உலகம் வேண்டும்” என்றும் கூறியிருக்கிறார்.

பியூட்டி வித் ப்ரெயின்!


16p2_1515391832.jpg

புயலுக்கு நடுவே இரு பெண்கள்!

குல்பூஷன் ஜாதவ் - மரண தண்டனை விதிக்கப்பட்டு, பாகிஸ்தான் சிறையில் மார்ச் 2016 முதல் அடைக்கப்பட்டிருக்கும் விசாரணைக் கைதி. உளவாளி எனக் குற்றம்சாட்டப்பட்டிருக்கும் இவர், முன்னாள் இந்தியக் கடற்படை அதிகாரி. சர்வதேச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டில் விசாரணை நடைபெற்றுக்கொண்டிருக்கும் வேளையில், அவர் மனைவி சேத்னா மற்றும் தாய் அவந்தி இருவரையும் ஒருவழியாக பாகிஸ்தானிய சிறையில் சந்திக்க அனுமதித்தது அந்நாட்டு அரசு. தாலியை அகற்றி, பொட்டு, வளையல்களைக் கழற்றச்செய்து பெண்கள் இருவரையும் கண்ணாடிக்கு அப்பால் ஜாதவின் முன் நிறுத்தியது பாகிஸ்தான் சிறைத்துறை. தாய்மொழியான மராத்தியிலும் அவர்கள் உரையாடத் தடை செய்தது.

45 நிமிட சந்திப்புக்குப்பின் பாகிஸ்தானிய வெளியுறவுத்துறை அலுவலகத்தின் வாசலில் காத்திருந்த சேத்னா மற்றும் அவந்தியைச் சூழ்ந்துகொண்ட பாகிஸ்தான் ஊடக நிருபர்கள், `காதில் கி மா’ (கொலைகாரனின் தாய்) என கோஷம் எழுப்பினர். “ஆயிரக்கணக்கான அப்பாவி பாகிஸ்தானியர்களின் ரத்தக்கறை உங்கள் கொலைகார மகன் கைகளில் உள்ளதே, இப்போது உங்களுக்கு நிம்மதியா?” எனச் சரமாரியாகக் கேள்விகள் எழுப்பினர். பாகிஸ்தான் சென்று குல்பூஷனைச் சந்தித்த அவரது குடும்பத்தினர் கடும் மன உளைச்சலில் இருப்பதாக அமைச்சர் சுஷ்மா தெரிவித்திருக்கிறார். ஆரம்பம் முதலே குல்பூஷன் உளவாளி அல்ல என அவர் தரப்பும், இந்தியாவும் மறுத்துவந்திருக்கின்றன. பாகிஸ்தானோ, அவர் உளவாளியே எனச் சாதித்துவருகிறது. இரண்டு அப்பாவிப் பெண்கள் இந்தப் புயலுக்கு நடுவே சிக்கி, உளவியல் துன்புறுத்தலுக்கு ஆளாகியிருக்கிறார்கள்.

`எந்தப் போரிலும் முதல் பலி பெண்கள்தான்’ என்று ஹிலாரி கிளின்டன் சொன்னது எத்தனை உண்மை!


16p3_1515391849.jpg

மாதவிடாய் அனுகூல மசோதா!

நாட்டில் முதன்முறையாக `மாதவிடாய் அனுகூல மசோதா, 2017’ என்கிற தனிநபர் மசோதாவைத் தாக்கல் செய்திருக்கிறார் அருணாசலப் பிரதேசத்தைச் சேர்ந்த மக்களவை உறுப்பினர் நினாங் எரிங். `தனியார் மற்றும் அரசுத்துறைகளில் பணிபுரியும் பெண்களுக்கு மாதவிடாய் வேளையில், ஒவ்வொரு மாதமும் இரண்டு நாள்கள் ஊதியத்துடன் கூடிய மாதவிடாய் விடுப்பு வழங்க வேண்டும்' என்பதுதான் மசோதாவின் சாராம்சம். `மாதவிடாய் நாள்களில் பெண்கள் ஓய்வெடுக்கத் தகுந்த வசதிகளைப் பணியிடங்களில் செய்ய வேண்டும்' எனவும் மசோதா வலியுறுத்துகிறது.

ஏற்கெனவே இந்தோனேசியா, ஜப்பான், தாய்லாந்து, தென்கொரியா போன்ற நாடுகளில் இதுபோன்ற மாதவிடாய் விடுப்பு, தொழிலாளர் சட்டப்படி உள்ளது. 2017 ஜூலையில், மும்பையைச் சேர்ந்த ‘கல்ச்சர் மெஷின்’ என்ற நிறுவனம் பெண் தொழிலாளர்களுக்கு, ‘மாதவிடாய் முதல் நாள் விடுப்பு’ செயல் திட்டத்தை நடைமுறைப்படுத்தியது. அதைத் தொடர்ந்து மகளிர் அமைப்புகள் மாதவிடாய் விடுமுறை குறித்து விழிப்பு உணர்வை ஏற்படுத்த, இப்போது நாடாளுமன்றத்தில் மசோதா குறித்து விவாதிக்கப்படவிருக்கிறது. பெண்களை மேலும் அடிமையாக்கும் முயற்சி, பிற்போக்கான செயல்பாடு எனப் பெண்ணியவாதிகள் சிலர் இந்த மசோதா மற்றும் விடுப்புமீது விமர்சனங்கள் வைத்தாலும், மாதவிடாய் குறித்த வெளிப்படையான விவாதங்கள் நாட்டின் நாடாளுமன்றத்தில் நடப்பதே ஆரோக்கியமான முன்னெடுப்பு என்றுதான் கொள்ள வேண்டும்!

ஆபீஸ்ல ‘அந்த நாளுக்கு’ லீவு குடுப்பாங்க… வீட்டுலங்க எசமான்?


16p4_1515391868.jpg

புரட்சிப் பெண்மணி!

46 வயதுப் பெண். ரஷ்யாவின் மிகப்பெரிய இஸ்லாமிய ஊடக நிறுவனமான `இஸ்லாம்.ஆர்யூ’-வை வெற்றிகரமாக நடத்திவருபவர். சூஃபி இஸ்லாமியர் எனத் தன்னை அடையாளப்படுத்திக்கொள்பவர். ரஷ்யாவின் டாகிஸ்தான் மாகாண தலைமை முஃப்தி அஹ்மத் அப்துலேவின் மனைவி. முதல் கணவர் சையது முகம்மது அபுபக்கரோவை, வஹாபி முஸ்லிம் தீவிரவாதிகளின் கார் வெடிகுண்டுக்குத் தாக்குதலுக்குப் பறிகொடுத்தவர். வஹாபி இஸ்லாமுக்கு எதிராகக் குரல் கொடுத்து வரும் சமூகப் போராளி. இத்தனை முகங்கள்கொண்ட ஆய்னா கம்சதோவா, 2018 மார்ச் மாதம் நடக்கவிருக்கும் ரஷ்ய அதிபர் தேர்தலில் அதிபர் புடினை எதிர்த்துப் போட்டியிடவிருப்பதாக அறிவித்திருக்கிறார். 14 கோடி மக்கள்தொகையில், ஒரு கோடி  இஸ்லாமிய வாக்காளர்கள்கொண்ட ரஷ்யாவில் தான் வெற்றி பெற வாய்ப்பு மிகவும் குறைவு என்பதை அறிந்துவைத்திருக்கும் ஆய்னா, “நான் தேர்தலில் போட்டியிடுவது புடினுக்கு எதிராக அல்ல. பழைமைவாத வஹாபி இஸ்லாமுக்கு எதிரான என் குரலை உரக்கச் சொல்லவே தேர்தலில் போட்டியிடுகிறேன்” என்று தெரிவித்திருக்கிறார்.

`ரஷ்யா நம் நாடு. இதில் நாம் முஸ்லிம், கிறிஸ்தவர், காக்கேசியர், ரஷ்யர் எனப் பிரிந்துகிடந்தால், அரசு முடங்கிப்போகும்' என்றும் தன் முகநூல் பக்கத்தில் கூறியிருக்கிறார். வடக்கு ரஷ்யாவின் காகஸ்ஸஸ் மலைப் பகுதிகளில் தனி இஸ்லாமிய நாடு கோரி ஆயுதப் போராட்டம் மேற்கொண்டு இருக்கும் வஹாபி போராளிகளுக்கு எதிராக ரஷ்ய அதிபரின் நடவடிக்கைகள் அத்தனை கடுமையாக இல்லை என்பதை அவரது இந்த அறிக்கை உணர்த்துவதாகச் சொல்கிறது, அல்-ஜஸீரா செய்தி நிறுவனம்.

ரஷ்யாவில் ஒரு பெண்ணால் மீண்டும் புரட்சி மலரட்டுமே!


16p5_1515391888.jpg

கனிவு காட்டும் தெலங்கானா அரசு!

மாற்றுத்திறனாளிகளுக்கான நலத்திட்டங்கள் நிறையவே நடைமுறைப்படுத்தப்பட்டாலும், திருமணம் என வரும்போது ஒரு மனத்தடை சமுதாயத்தில் இருக்கவே செய்கிறது. இதைத் தகர்க்கும் முயற்சியின் ஒரு பகுதியாக, 2015-ம் ஆண்டு அப்போதைய ஒருங்கிணைந்த ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு, மாற்றுத்திறனாளிகளின் திருமண ஊக்கத்தொகையான 50 ஆயிரம் ரூபாயை ஒரு லட்சம் ரூபாயாக உயர்த்த தன்னால் இயன்ற அனைத்தும் செய்யப்போவதாக அறிவித்திருந்தார்.

தெலங்கானா அரசின் முதல்வர் சந்திரசேகர் ராவ், ஜனவரி 1, 2018 முதல் மாற்றுத்திறனாளிகள் தங்களுக்குள் திருமணம் செய்துகொண்டாலோ, அல்லது மாற்றுத்திறனாளி ஒருவர், மாற்றுத்திறனாளி அல்லாத நபரை மணம் முடித்தாலோ, ஊக்கத்தொகை ஒரு லட்சம் ரூபாய் உடனடியாக வழங்கப்படும் என அரசு ஆணை பிறப்பித்திருக்கிறார். தமிழகத்தில் இந்த ஊக்கத்தொகை பட்டதாரிகளுக்கு 50 ஆயிரம் ரூபாய் மற்றும் 4 கிராம் தங்கமாகவும், பட்டதாரி அல்லாத மாற்றுத்திறனாளிகளுக்கு 25 ஆயிரம் ரூபாய் மற்றும் 4 கிராம் தங்கமாகவும் வழங்கப்படுகிறது.

தெலங்கானா வழியைத் தமிழகமும் பின்பற்றலாமே?


16p6_1515391911.jpg

திருவளர்ச்செல்வன் யூட்டோ நினகா... திருவளர்ச்செல்வி சிகரு ஒபட்டா!

ஜப்பானைச் சேர்ந்த காதல் ஜோடி சிகரு ஒபட்டா மற்றும் யூட்டோ நினகா. 2017, ஏப்ரல் 1 அன்று ஜப்பானில் சிறிய நிகழ்வு ஒன்றில் திருமணம் செய்துகொண்ட இருவரும், கடந்த டிசம்பர் 31 அன்று மதுரையில் தமிழ் முறைப்படி மீண்டும் திருமணம் செய்துகொண்டனர். ஆரஞ்சு வண்ண சட்டை அணிந்து அரக்கு வண்ணக் காஞ்சிப் பட்டும், தங்க நிற ரோஜா மாலையும் அணிந்து, அழகுக் குவியலாகக் காட்சி தந்தார் மணப்பெண் சிகரு. மாப்பிள்ளை யூட்டோ பளபள வெண்பட்டு வேட்டி சட்டை அணிந்து நெற்றியில் விபூதி குங்குமத்துடன் சாட்சாத் அழகிய தமிழ் மகனே தோற்கும் அளவுக்குக் கம்பீரத்துடன் தாலி கட்டினார். சிகருவின் தோழியான மதுரையைச் சேர்ந்த வினோதினி மற்றும் அவர் கணவர் வெங்கடேஷ் தம்பதி, வரவேற்பு உட்பட இந்தத் திருமணத்துக்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்திருந்தனர்.

ஜப்பானில் மொழியியல் படித்த சிகரு, தமிழால் ஈர்க்கப்பட, 2014 மற்றும் 2015-ல் தமிழகம் வந்திருக்கிறார். அழகு தமிழில் பேசும் சிகரு, தமிழ்ப் பண்பாடு தனக்கு மிகவும் பிடித்ததாகவும், அதனால்தான் இந்திய முறைப்படி திருமணம் செய்துகொள்ள விரும்பியதாகவும் தெரிவித்தார். சிகருவுக்கு தமிழ் கற்றுக்கொடுத்ததால் ஏற்பட்ட அறிமுகம் பின்னர் நெருங்கிய நட்பாகி, இன்று தன் குடும்பத்தில் ஒருவராகத்தான் சிகருவை தான் உணர்வதாகக் கூறுகிறார் அவரின் தோழி வினோதினி. நலுங்கு, வரவேற்பு, காசி யாத்திரை என தமிழ்த் திருமணச் சடங்குகள் அத்தனையும் செய்துகொண்ட இந்தக் காதல் ஜோடி, மதுரை மீனாட்சியம்மனையும் வழிபட்டனர்.

வாழ்த்துகள்... தமிழ்நாட்டு ஜப்பானிய மகளுக்கும் மகனுக்கும்!


16p7_1515391928.jpg

வியக்க வைக்கும் விழிப்பு உணர்வு!

சிஎஸ்டிஎஸ் (சென்டர் ஃபார் ஸ்டடி ஆஃப் டெவலப்பிங் சொசைட்டீஸ்) சமீபத்தில் வெளியிட்டிருக்கும் தேசிய தேர்தல் ஆய்வு முடிவுகள், பெண் வாக்காளர்களிடம் அதிகரித்துவரும் அரசியல் விழிப்பு உணர்வை உணர்த்துகின்றன. கடந்த 2016-ல் நடைபெற்ற தமிழக மற்றும் மேற்குவங்க தேர்தல்களில், பெண் வாக்காளர்களே வெற்றியை நிர்ணயம் செய்திருக்கின்றனர் என்று தெரிவிக்கிறது ஆய்வு முடிவு. கடந்த பத்தாண்டுகளில், படிப்பறிவு முன்னேற்றத்தாலும், தகவல் தொடர்பு சாதனங்கள் அதிகம் உபயோகிப்பதாலும் இந்த மாற்றம் ஏற்பட்டுள்ளது. 2014-ம் ஆண்டு ஆய்வு முடிவுகளில் 61% பெண்கள் செய்தி ஊடகங்கள் குறித்த விழிப்பு உணர்வுடன் இருப்பது தெரிய வந்திருக்கிறது.

தமிழ்நாட்டு அம்மணிங்கன்னா சும்மாவா?!

https://www.vikatan.com

Link to comment
Share on other sites

‘கடன்பெறுதலே உடன்பலன்தரும்’
 

image_9a646c72e2.jpgஒருவரிடம் சென்று பணம் அல்லது ஏதாவது பொருள் உதவிகளைப் பெற்றால், அவர்களை அறியாமலே ஒரு கூச்ச உணர்வுவந்து விடுகின்றது. 

மேலும், கடன்கொடுத்தவர் அல்லது இலவசமாக உதவி செய்தவர், சட்டவிரோத செயல்களில் ஈடுபடுபவராகவோ அல்லது நடத்தைகளில் மிகவும் மோசமான பேர்வழியாக இருந்தால், அவர்கள் செய்யும் இம்சைகள், உதவி பெற்றவர்களுக்குப் பெருத்த மன உழைச்சலைக் கொடுக்கும்.   

இரத்தல் ஒரு சிரமமான வேதனையை உண்டுபண்ணும். ஆயினும் சிலருக்கு இரத்தல் ஒரு பொருட்டே அல்ல; கடன்பெறுதலே உடன்பலன்தரும்; உழைப்பதைவிட இது சிரமமற்றது எனச் சிரம்தாழ்த்திப் பெறுவது சுதந்திர உணர்வற்ற கோழைத்தனம் என, இத்தகையோர் உணர்வதுமில்லை.  

நல்ல மனிதர்களிடம் மட்டும் உண்மையான பிரச்சினைகளைச் சொல்லி, பணஉதவி பெறலாம். அதை மீளச்செலுத்தினால் அதுவே சிறப்பு.

Link to comment
Share on other sites

மிகப் பழமையான சுரங்க ரெயில்பாதை லண்டனில் திறக்கப்பட்ட நாள்: 10-1-1863

 

அ+

லண்டனில் மிகப் பழமையான சுரங்க ரெயில்பாதை 1863-ம் ஆண்டு இதே நாளில் திறக்கப்பட்டது. இதே தேதியில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள்:- * 1806 - கேப் டவுனில் டச்சு குடியேறிகள் பிரித்தானியரிடம் சரணடைந்தனர். * 1810 – நெப்போலியன் பொனபார்ட் 14 ஆண்டுகளாகப் பிள்ளைகள் இல்லாத நிலையில் ஜோசப்பின் என்ற தனது முதல் மனைவியை

 
மிகப் பழமையான சுரங்க ரெயில்பாதை லண்டனில் திறக்கப்பட்ட நாள்: 10-1-1863
 
லண்டனில் மிகப் பழமையான சுரங்க ரெயில்பாதை 1863-ம் ஆண்டு இதே நாளில் திறக்கப்பட்டது.

இதே தேதியில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள்:-

* 1806 - கேப் டவுனில் டச்சு குடியேறிகள் பிரித்தானியரிடம் சரணடைந்தனர்.
 
*  1810 – நெப்போலியன் பொனபார்ட் 14 ஆண்டுகளாகப் பிள்ளைகள் இல்லாத நிலையில் ஜோசப்பின் என்ற தனது முதல் மனைவியை மணமுறிவு செய்தான்.
 
* 1840 - ஐக்கிய இராச்சியத்தில் முன்கட்டணம் செலுத்தப்படக்கூடிய கடித உறையுடன், சீரான பென்னி தபால் சேவை ஆரம்பித்துவைக்கப்பட்டது.
 
* 1861 - அமெரிக்க உள்நாட்டுப் போர்: புளோரிடா கூட்டமைப்பில் இருந்து விலகியது.

* 1863 - உலகின் மிகப் பழமையான சுரங்க ரெயில் பாதை லண்டனில் திறக்கப்பட்டது.
 
* 1881 - யாழ்ப்பாணம் சம்பத்தரிசியார் கல்லூரி ஆரம்பிக்கப்பட்டது.
 
* 1920 - முதலாம் உலகப் போரை முடிவுக்குக் கொண்டு வர கூட்டு நாடுகள் தமாது முதலாவது கூட்டத்தை ஆரம்பித்தன. வெர்சாய் ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.
 
* 1924 - பிரித்தானியாவின் நீர்மூழ்கிக் கப்பல் எல்-34 ஆங்கிலக் கால்வாயில் மூழ்கியதில் 43 பேர் கொல்லப்பட்டனர்.
 
* 1946 - லண்டனில் ஆரம்பமாகிய ஐக்கிய நாடுகளின் முதலாவது பொதுச்சபைக் கூட்டத்தில் 51 நாடுகள் பங்குபற்றின.
 
* 1962 - பெருவில் நிகழ்ந்த சூறாவளியில் 4000 பேர் வரை கொல்லப்பட்டனர்.
 
* 1974 - யாழ்ப்பாணத்தில் 4-வது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டின் இறுதி நாள் நிகழ்வில் 11 பொதுமக்கள் இலங்கை காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டுக்குக் கொல்லப்பட்டனர்.


* 1984 - 117 ஆண்டுகளின் பின்னர் வத்திக்கானும் ஐக்கிய அமெரிக்காவும் தூதரக உறவுகளை ஏற்படுத்திக் கொண்டன.
 
* 1989 - கியூபா படைகள் அங்கோலாவில் இருந்து வெளியேற ஆரம்பித்தன.
 
* 1995 - உலக இளைஞர் நாள் பிலிப்பைன்ஸ் நாட்டில் இடம்பெற்றது. 2001 - விக்கிப்பீடியா நியூபீடியாவின் கீழ் ஆரம்பிக்கப்படட்து. இது பின்னர் 5 நாட்களின் தனித்தளமாக இயங்க ஆரம்பித்தது. 2005 - தெற்கு ஆஸ்திரேலியாவில் அயர் குடாநாட்டில் இடம்பெற்ற காட்டுத்தீயில் சிக்கி 9 பேர் இறந்தனர். 113 பேர் காயமடைந்தானர்.
 
 
 

http://www.maalaimalar.com

Link to comment
Share on other sites

கடவுளிடமிருந்து கடிதம்... ‘உதவும் உள்ளமே உயர்வானது’ - உணர்த்தும் கதை! #FeelGoodStory

 

தன்னம்பிக்கை கதை

பிறருக்குக் கொடுக்க என்ன இருக்கிறதோ, அது மட்டும்தான் நம்மிடம் இருக்கிறது’ என்று சொல்கிறார் பிரபல சிலி எழுத்தாளர் இஸபெல் அலெண்டே (Isabel Allende). `எதைக் கொண்டு வந்தோம், கொண்டு போக...’ என்று தத்துவமெல்லாம் பேசினாலும், படித்தாலும்கூட சக மனிதர்கள்பால் அக்கறையுள்ளவர்கள் கொஞ்சம் குறைவாகத்தான் இருக்கிறார்கள். கொடுப்பதற்கு ஒரு மனம் வேண்டும். மற்றவர்களுக்கு உதவ வேண்டும் என்கிற எண்ணம் இருக்கிறவர்களுக்குத்தான் அந்த மனம் வாய்க்கும். உதவும் மனப்பான்மை உள்ளவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள். பல கோடி மனிதர்கள் வாழும் உலகில் அவர்களைத்தான் இயற்கை நேசிக்கிறது. அவர்களைத்தான் தேவதைகள் தேடிப்போய் வாழ்த்திவிட்டு வருகிறார்கள். இந்த அருமையான உண்மையை ஓர் எளிய கதை தெளிவாகச் சொல்கிறது. 

 

அது, அமெரிக்காவிலுள்ள ஒரு சிறு நகரம். அந்தப் பெண்மணியின் பெயர் ரோஸி! கஷ்டப்படுகிற மனுஷி. பொருத்தமான, நல்ல வேலை கிடைக்காமல் கஷ்டப்பட்டுகொண்டிருந்தார். ஒரு காலைப் பொழுதில் வெளியே போய்விட்டு வீடு திரும்பினார். வாசலில் இருந்த லெட்டர் பாக்ஸில் ஒரு கடித உறை கிடந்தது. எடுத்துப் பிரித்துப் பார்த்தார். கடித உறையில் ரோஸியின் பெயர் தெளிவாக எழுதப்பட்டிருந்தது. ஆனால், ஸ்டாம்ப்போ, போஸ்ட் ஆஃபிஸ் முத்திரையோ, அனுப்பியவர் முகவரியோ இல்லை. 

கடிதம்

ரோஸி கடிதத்தை எடுத்துப் பிரித்தார். அதில் இப்படி எழுதப்பட்டிருந்தது... `பிரியத்துக்குரிய ரோஸி... இன்று மாலையில் உன் வீட்டுப் பக்கம்தான் வருகிறேன். உன்னைப் பார்க்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். எப்போதும் அன்புடன்...’ என்று எழுதப்பட்டிருந்தது. அதற்குக் கீழே கையெழுத்துப் போடுமிடத்தில் இருந்த பெயரைப் பார்த்துதான் அதிர்ந்துபோனார் ரோஸி. `ஜீஸஸ்’ என்று எழுதியிருந்தது. பொதுவாகவே இப்படி ஓர் அனாமதேயக் கடிதம் வந்தால் நம்மில் பலர் என்ன செய்வோம்? `யாரோ கேலிக்காக எழுதியிருக்கிறார்கள்’ என்றோ, `இது என்ன பைத்தியக்காரத்தனமான விளையாட்டு?’ என்றோ நினைத்துக்கொண்டு வேறு வேலையைப் பார்க்கப் போய்விடுவோம். ஆனால், ரோஸி அப்படியில்லை.  

`ஐயய்யோ... இந்த நேரம் பார்த்து இயேசு நம்மைப் பார்க்க வருகிறாரே... அவருக்குக் கொடுப்பதற்கு ஒன்றும் இல்லையே..!’ என்று நினைத்தார். விருந்தினர்கள் வந்தால் கொடுப்பதற்கு எதுவும் இல்லாத சமையலறை அவர் நினைவுக்கு வந்தது. அவசரமாக தன் ஹேண்ட் பேக்கைத் திறந்து பார்த்தார். அதில் ஐந்தே ஐந்து டாலர் பணம் இருந்தது. `இதுவாவது இருக்கிறதே...’ என்று பெருமூச்சுவிட்டுக்கொண்டார் ரோஸி. 

கையில் டாலர் பணம்

வீட்டுக் கதவைப் பூட்டினார். கையிலிருக்கும் பணத்தைக்கொண்டு என்ன வாங்கலாம் என்று யோசித்தபடியே நடந்தார். மார்க்கெட்டில் அவர் வைத்திருந்த பணத்தில் ஒரு பிரெட் பாக்கெட், சிறிது பால், கொஞ்சம் வான்கோழி இறைச்சி மட்டுமே வாங்க முடிந்தது. ரோஸியிடம் மீதமிருந்தது சில சென்ட் பணம் மட்டுமே. விருந்தினராக வருபவர் கடவுள். விருந்து வைக்க மிகக் குறைவான பொருள்கள். ஆனால், நிறைந்த மனத்தோடு வீடு திரும்பினார் ரோஸி. 

இயேசு எப்படியிருப்பார், அவரிடம் என்ன பேசலாம் என்றெல்லாம் யோசித்தபடி நடந்த ரோஸியை ஒரு குரல் தடுத்தது. ``மேடம்... எங்களுக்கு உதவி செய்ய முடியுமா?’’ 

ரோஸி திரும்பிப் பார்த்தார். சாலையோரமாக ஓர் ஆணும் அவர் மனைவியும் நின்றுகொண்டிருந்தார்கள். அழுக்காகிப் போய் கிழிந்திருக்கும் உடை, எண்ணெய் காணாத தலை. பார்க்கவே பரிதாபமாக இருந்தார்கள் அவர்கள். 

“மேடம்... எனக்கு வேலையில்லை. நானும் என் மனைவியும் தெருவுலதான் கிடக்கோம். ரொம்பக் குளிரா இருக்கு, அதைவிட ரொம்பப் பசியா இருக்கு. உங்களால முடிஞ்ச உதவியை எங்களுக்கு செய்ங்களேம்மா...’’ 

“ஐயா... எனக்கும் உங்களுக்கு உதவணும்னுதான் ஆசையா இருக்கு. ஆனா, நானும் உங்களை மாதிரி ஏழை. என்கிட்ட இப்போ இருக்குறது இந்த ரொட்டியும், கொஞ்சம் வான்கோழி இறைச்சியும், பாலும்தான். ஆனா, இன்னிக்கி சாயந்திரம் ஒரு முக்கியமான விருந்தாளி எங்க வீட்டுக்கு வர்றேன்னு சொல்லியிருக்காரு. அவருக்காகவெச்சிருக்கறதை எப்படி உங்களுக்குக் கொடுப்பேன் சொல்லுங்க...’’ 

பிரெட்

“பரவாயில்லை மேடம். எனக்கு உங்க நிலைமை புரியுது. ரொம்ப தேங்க்ஸ்’’ என்று சொன்ன அவர், தன் மனைவியை அழைத்துக்கொண்டு பக்கத்திலிருந்த ஒரு குறுகலான தெருவை நோக்கி நடந்தார். அவர் அப்படிச் சொன்னது ரோஸிக்கு இதயத்தில் லேசாக வலியை உண்டாக்கியது. “ஐயா... கொஞ்சம் நில்லுங்க...’’ என்றார். 

இருவரும் நின்றார்கள். “இந்தாங்க இந்த சாப்பாட்டை நீங்க ரெண்டுபேரும் சாப்பிடுங்க. வர்ற விருந்தாளிக்கு நான் வேற ஏதாவது குடுத்துக்குறேன்’’ என்று சொல்லி தன் கையிலிருந்ததையெல்லாம் அவரிடம் கொடுத்தார் ரோஸி. 

“ரொம்ப நன்றிங்கம்மா’’ என்று சொன்னபடி அவர் ரோஸி கொடுத்த உணவை வாங்கிக்கொண்டார். அப்போதுதான் ரோஸி கவனித்தார்... அந்தப் பெண் குளிரில் வெகுவாக நடுங்கிக்கொண்டிருந்ததை. உடனே தன் மேல் கோட்டைக் கழற்றி அந்தப் பெண்ணிடம் கொடுத்து, அணிந்துகொள்ளச் சொன்னார். “வீட்ல நான் இன்னொரு கோட்வெச்சிருக்கேன். அதை நான் போட்டுக்குறேன்’’ என்று சொல்லிச் சிரித்தார். 

 

பிறகு நிறைந்த மனதுடன் அவர்களிடம் விடைபெற்றுக்கொண்டு வீடு நோக்கி நடந்தார் ரோஸி. குளிரில் லேசாக உடல் நடுங்கியது. `இயேசு வந்தால் அவருக்கு என்ன கொடுப்பது, வீட்டில் வேறு என்ன இருக்கிறது, எதை விற்கலாம்?’ என்று யோசித்தபடி நடந்தார். வீட்டு வாசலில் இருந்த லெட்டர் பாக்ஸில் இன்னொரு கடிதம் இருந்தது. அதை எடுத்துப் பிரித்துப் படித்தார் ரோஸி. ‘அன்புள்ள ரோஸி, உன்னைச் சந்தித்ததில் மகிழ்ச்சி. நீ அளித்த அருமையான உணவுக்கும் கோட்டுக்கும் என் நன்றி. - ஜீஸஸ்’ என்று அதில் எழுதியிருந்தது.

https://www.vikatan.com

Link to comment
Share on other sites

நெருங்கும் பொங்கல்! கனடா, அமெரிக்காவுக்கு ஏற்றுமதியாகும் பானைகள்

 

80_17529.jpg

தமிழர் திருநாளாம் பொங்கல் தினத்தன்று புத்தாடை அணிந்து புதுப்பானை பொங்கலிட்டு மாவிலை தோரணம் கட்டி வாயிற்படியில் கரும்பு கட்டி வைத்து கொண்டாடி வருகிறோம். பொங்கல் பண்டிகை நெருங்கி வருகிறது. இதையொட்டி புதுப்பானை விற்பனை சூடு பிடித்துள்ளது.

 

இதைப்பற்றி பானை தயாரிப்பில் ஈடுபட்டுவரும் சேலத்தைச் சேர்ந்த கார்த்திக் கூறும்போது, ''நாங்க குலாலர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள். மண்பாண்டங்கள் செய்வது எங்களுடைய குலத்தொழில். தாத்தா, அப்பா காலத்திலிருந்து வாழையடி வாழையாக இந்தத் தொழில் செய்து வருகிறோம். 

நான் டிப்ளமோ எலெட்க்ட்ரிகல் அண்டு எலெக்ட்ரானிக்ஸ் முடித்துவிட்டு சேலம் மாநகராட்சியில் வேலை பார்த்து வந்தேன்.  சொந்தத் தொழில் செய்யலாம் என்று ஆர்வம் வந்ததையடுத்து அரசு வேலைக்கு முழுக்கு போட்டு விட்டு, எங்கள் குலத்தொழிலான மண் பாண்டத் தொழில் செய்ய தொடங்கினேன். தாத்தா, அப்பாவைப் போல அல்லாமல் தொழிலை விரிவாக்கி அதில் புதுமையைப் புகுத்தி தமிழர்கள் அதிகமாக வாழும் அமெரிக்கா, ஆஸ்திரேலியா, கனடா நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகிறேன்.

பொங்கல் பண்டிகைக்கு ஒரு மாதத்திற்கு முன்பே வெளிநாடுகளில் வாழும் தமிழர்கள் புதுப்பானை வாங்குவது சூடு பிடித்து விட்டது. தமிழகத்தை விட வெளிநாடுகளில் கலாசாரத்தைப் பேணிக் காக்கிறார்கள். வாசலில் கோலமிட்டு புதுப்பானையில் பொங்கல் வைப்பதை மரபாகவே கடைபிடித்து வருகிறார்கள். இந்தத் தொழில் மூலம் ஒரு மாதத்திற்கு குறைந்து ஒரு லட்சம் சம்பாதிக்கலாம். சின்ன வயதிலிருந்து இதைக் கற்றுக் கொள்ளவில்லையே என்ற வருத்தம் இருந்து வருகிறது. 

இந்தப் பானைகளைச் செய்வதற்கு முதலில் தரமான களிமண்ணை எடுத்து தண்ணீரில் கரைத்து வெள்ளைத் துணியால் வடித்து நிழலில் காய வைக்க வேண்டும். பிறகு தூய்மையான களிமண் கிடைக்கும். அத்தோடு மணல் சேர்ந்து நன்றாக மிதிக்க வேண்டும். பிறகு மண்ணை உருண்டை பிடித்து சக்கர ராட்டையில் சுற்றி தேவையான அளவில் தேவையான வடிவத்தில் உருவம் கொடுத்து செம்மண் பூசி சூளையில் வேக வைத்து எடுக்க வேண்டும். ஒரு ஆரோக்கியமான மனிதர் ஒரு நாளைக்கு 60 பானைகள் செய்ய முடியும்.

 

பல அளவுகளில் பானைகள் தயார் செய்து கொடுப்போம். என் மனைவி ஐஸ்வர்யா பானைகளுக்கு வர்ணங்கள் பூசி விற்பனை செய்கிறார். ஒரு பானை 50 ரூபாய் முதல் 400 ரூபாய் வரை விற்கப்படுகிறது. பொங்கல் நெருங்கி வருவதை அடுத்து பொங்கல் பானை விற்பனை சூடு பிடித்துவிட்டது. ஒவ்வொரு வருடமும் பொங்கல் பானை வாங்குவது அதிகரித்து வருகிறது'' என்றார்.

https://www.vikatan.com

Link to comment
Share on other sites

உறைந்துபோன நயாகரா ; பனிப்போர்வை போர்த்திய சகாரா! - பிரமிக்க வைக்கும் வானிலை நிகழ்வுகள்

 
 

கடுங்குளிரில் நடுங்கும் வடஅமெரிக்கா, சுட்டெரிக்கும் வெப்ப அலையில் தவிக்கும் சிட்னி, கன மழை, திடீர் வெள்ளத்தால் மிதக்கும் சிங்கப்பூர்... இந்த வரிசையில் 40 ஆண்டுகளுக்குப் பிறகு பனிப்போர்வையால் மூழ்கியுள்ளது சகாரா பாலைவனம். 

sahara

 

Sahara Desert


காலநிலை மாற்றங்களால் வெயில், பனி, மழை என எந்த வானிலை நிகழ்வாக இருந்தாலும் சற்று தீவிரமாகவே இருக்கிறது. வங்கதேசம், சீனா, அமெரிக்கா உள்ளிட்ட இடங்களில் தற்போது வரலாறு காணாத பனிப்பொழிவு நிலவி வருவதே இதற்கு உதாரணம். 

பூமியின் வளிமண்டலமும் பெருங்கடலும் வெப்பமடைவதால், வெப்பக்காற்றில் அதிக ஈரப்பதம் கலக்கிறது. இதன் விளைவாக மழையும் பனியும் புதிய உச்சங்களைத் தொடுகின்றன என்கிறார்கள் விஞ்ஞானிகள். எளிமையாகச் சொல்ல வேண்டும் என்றால் `காலநிலை மாற்றம் வானிலைக்கு கூடுதல் `கிக்’ (kick ) கொடுத்து வளிமண்டல சுழற்சியைப் பாதிக்கிறது.

 

 

எது எப்படியோ ஆப்பிரிக்காவின் சகாரா பாலைவனத்தில் பனிப்பொழிவு ரசிக்க வைக்கும் நிகழ்வாக உள்ளது. 1979-ம் ஆண்டு கடைசியாக அங்கு பனிமழை பொழிந்ததாக உள்ளூர் மக்கள் தெரிவித்துள்ளனர். அதன் பிறகு, கடந்த 2016-ம் மிதமான பனிப்பொழிவு நிகழ்ந்தது. கடந்த ஒரு வாரமாகப் பனிப்பொழிவு அதிகரித்து, பாலைவன சிவப்பு மணலின் மீது அழகாக வெள்ளைப் படலம் படர்ந்திருக்கிறது. இந்தக் காட்சியைச் சுற்றுலாப் பயணிகள் புகைப்படம் எடுத்து பகிர்ந்து வருகின்றனர். 

Mohamed I.Adams @Mohamed_Adams
Folgen @Mohamed_Adams folgen
Mehr

Sahara Snow!! ❄️ (Captured by Karim Bouchetata/Geoff Robinson)

DTKopSZW4AA8Nid.jpg
DTKopWqX0AAkhys.jpg
DTKopWzWkAAh2N6.jpg
DTKopWyX4AAlt0v.jpg
1 Antwort 3 Retweets 4 Gefällt mir
Antworten
1
Retweeten
3
 
Gefällt mir
4
 
  1. Neue Unterhaltung

 

 

இதே போன்று கடந்த சில வாரங்களுக்கு முன் உலகின் எழில் கொஞ்சும் பேரருவிகளில் ஒன்றான நயாகரா நீர்வீழ்ச்சியின் ஒரு பகுதி, பனியில் உறைந்தது. பனிக் குவியல்கள், வெண்மை போர்த்திய மரங்கள் என நயாகராவின் அழகைக் கண்டுகளிக்க சுற்றுலாவாசிகள் அங்கு குவிந்தனர்.

நயாகரா

Niagara Falls

 

 பசுமை இல்ல வாயுக்கள் வளிமண்டலத்தில் கலப்பதால் நாளுக்கு நாள் புவி வெப்பமடைந்து வருகிறது. இது நீடித்தால் வானிலை நிகழ்வுகள் இன்னும் தீவிரம் காட்டும். 

https://www.vikatan.com

Link to comment
Share on other sites

உறைபனியில் தினமும் ஒரு மணி நேரப் பள்ளிப் பயணம்! - மனதை உலுக்கும் ஏழைச் சிறுவனின் புகைப்படம்

 
 

சீனாவில் கடுமையான பனிப்பொழிவு நிலவி வருகிறது. இந்நிலையில் பனிப்பொழிவில் நனைந்து, தலை முழுக்க வெள்ளைப்பூத்து, பள்ளிக்கு வந்த ஏழைச் சிறுவனின் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

poor chinese boy
 

 

இதுகுறித்து சீன உள்ளூர் ஊடகங்கள் வெளியிட்ட செய்தி பின்வருமாறு: 

சீனாவின் யுனான் மாகாணத்தில் ஸாடோன்ங் என்னும் கிராமம் உள்ளது. அந்தக் கிராமத்தில் வசிக்கும் வாங் ஃப்யூமன் என்னும் சிறுவன், சுமார் 4.5 கி.மீ தொலைவில் அமைந்துள்ள பள்ளிக்கூடத்தில் படித்து வருகிறார். மிகவும் ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்த வாங் ஃப்யூமன் பள்ளிக்குத் தினமும் நடந்தே செல்வார். இன்று காலை வழக்கம்போல பள்ளிக்கு நடந்து சென்றுள்ளார். ஃப்யூமன் வகுப்பறைக்குள் நுழைந்ததும் மாணவர்கள் அனைவரும் சிரிக்கத் தொடங்கிவிட்டனர். ஃப்யூமனுக்கு என்னவென்றே புரியவில்லை. அப்போது வகுப்பறைக்கு வந்த ஆசிரியை மாணவர்களை அமைதிப்படுத்தியுள்ளார்.

 

ஃப்யூமனை பார்த்த ஆசிரியை கண்கலங்கிவிட்டார். காரணம் சுமார் ஒரு மணிநேரம் பனியில் நடந்துவந்ததால் ஃப்யூமனின் தலை முழுக்க பனி போர்த்தியிருந்தது. கன்னங்கள் சிவந்து, புருவங்களிலும் பனிப் பூத்திருந்தது. ஃப்யூமன் அணிந்திருந்த சட்டை மிகவும் லேசான சட்டை என்பதால் அவர் கை கால்களும் பனியில் சிவந்திருந்தன. ஃப்யூமனைப் போட்டோ எடுத்து இணையத்தில் பகிர்ந்த ஆசிரியை ‘சீனாவில் ஒருசில பகுதிகளில் இன்று காலை மைனஸ் 9 டிகிரி செல்சியஸ் குளிர் நிலவியது. பனிப்பொழிவில் ஒரு மணி நேரம் நடந்து வந்த சிறுவனின் முகம் என்னைக் கண்கலங்க வைத்துவிட்டது’ என்று பதிவிட்டிருந்தார். ஆசிரியையின் பதிவால் சீனாவைச் சேர்ந்த பலர் ஃப்யூமனுக்கு உதவ முன்வந்துள்ளனர்.

https://www.vikatan.com

Link to comment
Share on other sites

பழம்பெரும் நடிகர் ஆர்.எஸ். மனோகர் இறந்த தினம்: 10-1-2006

 
அ-அ+

ரா. சு. மனோகர் அல்லது ஆர். எஸ். மனோகர் பழம்பெரும் நாடக, திரைப்பட நடிகர். இவர் இருநூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். ராமசாமி சுப்ரமணிய மனோகர், 1925-ம் ஆண்டு ஜுன் 29-ம் திகதி தமிழ்நாடு, நாமக்கலில் சுப்ரமணிய ஐயர் மற்றும் ராசலட்சுமி அம்மாள் தம்பதியினருக்கு மகனாகப் பிறந்தார். இவருடைய இயற்பெயர் லட்சுமி நாராயணன். இவர் தன்னுடைய பள்ளிப் பருவத்தில் மனோகரா நாடகத்தில் நடித்ததால், மனோகர் என்னும் பெயர் பெற்றார். சென்னையிலுள்ள

 
பழம்பெரும் நடிகர் ஆர்.எஸ். மனோகர் இறந்த தினம்: 10-1-2006
 
ரா. சு. மனோகர் அல்லது ஆர். எஸ். மனோகர் பழம்பெரும் நாடக, திரைப்பட நடிகர். இவர் இருநூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.

ராமசாமி சுப்ரமணிய மனோகர், 1925-ம் ஆண்டு ஜுன் 29-ம் திகதி தமிழ்நாடு, நாமக்கலில் சுப்ரமணிய ஐயர் மற்றும் ராசலட்சுமி அம்மாள் தம்பதியினருக்கு மகனாகப் பிறந்தார். இவருடைய இயற்பெயர் லட்சுமி நாராயணன். இவர் தன்னுடைய பள்ளிப் பருவத்தில் மனோகரா நாடகத்தில் நடித்ததால், மனோகர் என்னும் பெயர் பெற்றார். சென்னையிலுள்ள பச்சையப்பன் கல்லூரி முன்னாள் மாணவராவார்.

வண்ணக்கிளி, கைதி கண்ணாயிரம், வல்லவனுக்கு வல்லவன், வல்லவன் ஒருவன, இரு வல்லவர்கள், ஆயிரத்தில் ஒருவன், உலகம் சுற்றும் வாலிபன், பல்லாண்டு வாழ்க, அடிமைப் பெண், காவல்காரன், இதயக்கனி, அதிசய பெண் உள்பட பல படங்களில் நடித்துள்ளார்.

மனோகர் பல்வேறு நாடகங்களை அரங்கேற்றி நடித்துள்ளார். அவற்றுள் இலங்கேசுவரன், சாணக்கிய சபதம், சூரபத்மன், சிசுபாலன், இந்திரசித், சுக்ராச்சாரியார், நரகாசுரன் மற்றும் திருநாவுக்கரசர் நாடகங்கள் குறிப்பிடத்தக்கவையாகும். இவர் 2006-ம் ஆண்டு ஜனவரி 10-ந்தேதி மரணம் அடைந்தார்.

http://www.maalaimalar.com

Link to comment
Share on other sites

ஐ ஃபோன் கடந்துவந்த கடினமான பாதையில் நான்கு மைல்கல்கள்

ஸ்டீவ் ஜாப்ஸ்படத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionமிகவும் அரிய வகை புற்றுநோயால் ஸ்டீவ் ஜாப்ஸ் இறந்தார்

சரியாக 11 வருடங்களுக்கு முன்னால் சிலிக்கன் வேலியில், நீல நிற ஜீன்ஸ், கருப்பு நிற சட்டை அணிந்து வந்த அவர் தனது கால் சட்டைப் பையில் இருந்து ஒரு சிறு இயந்திரத்தை எடுத்து ''புரட்சிக்கான ஒரு துண்டு இது'' என குறிப்பிட்டார். அவர் சொன்னது சரிதான்.

அந்த மனிதர் பெயர் ஸ்டீவ் ஜாப்ஸ். அந்த கையடக்க இயந்திரம்தான் முதல் ஆப்பிள் ஐஃபோன்.

ஐ ஃபோன் பயன்பாட்டுக்கு வந்து 11 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் அந்த திறன்பேசி உருவான கடினமான பாதையின் நான்கு மைல் கல்களாக இருந்த முக்கிய முடிவுகள் இவை:

சான் ஃபிரான்சிஸ்கோவில் மாஸ்கோன் மையத்தில் ஜனவரி 9,2007 அன்று அறிமுகப்படுத்தப்பட்ட அந்த ஐஃபோன் வரலாற்றின் முதல் திறன்பேசி கிடையாது. ஐபிஎம், மோட்டோரோலா, சோனி போன்ற நிறுவனங்கள் ஏற்கனவே சில வகை கைப்பேசிகளை விற்றுவந்தன. வெறும் அழைப்புகள் மற்றும் குறுந்தகவல்கள் அனுப்புவதை விடவும் அதிக அம்சங்கள் கொண்ட செல்பேசிகள் அவை.

ஆனால் ஐஃபோன் மற்ற கைப்பேசிகளில் இருந்து பார்க்கவும், அதனை பயன்படுத்தும் போது உணர்வதிலும், அந்த செல்பேசி செயல்படும் விதத்திலும் வித்தியாசமாக இருந்தது. இன்று வரை அது நமது வாழ்வியல் முறைகளில் கூட மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

எந்த புதுமை முயற்சிகளையும் போலவே பல தோல்விகள், பிரிவுகள், பிளவுகள், சறுக்கல்கள் ஆகியவற்றுக்குப் பிறகே ஐ ஃபோன் கனவு நனவானது. வெளியிடப்படுவதற்கு முன்பு இரண்டாண்டு காலமாக அபாயகரமான, இரக்கமற்ற அதிரடி முடிவுகளும் மேற்கொள்ளப்பட்டன.

1. கைப்பேசி உருவாக்குவதா இல்லையா?

1997-இல் ஸ்டீவ் ஜாப்ஸ் ஆப்பிள் நிறுவனத்துக்கு திரும்பினார். முன்னதாக அந்த நிறுவனத்தை உருவாக்கிய ஸ்டீவ் ஜாப்ஸை அதே நிறுவனமே வெளியேற்றியிருந்தது. மீண்டும் நிறுவனத்துக்குள் வந்தபிறகு ஸ்டீவ் சில திட்டங்களை ரத்து செய்தார் மேலும் குறிப்பிட்ட சில திட்டங்களில் மட்டும் நிறுவனம் கவனம் செலுத்தச் செய்தார். ஆகவே ஆப்பிள் நிறுவனத்துக்குள் எந்த திட்டமாவது செயல்பாட்டுக்கு வரவேண்டுமெனில் ஸ்டீவிடமிருந்து பச்சை சிக்னல் பெறுவது மிகவும் அவசியமாக இருந்தது.

அந்த காலகட்டங்களில் ஸ்டீவ் செல்பேசிகளை வெறுத்தார். ஆகவே அதில் கவனம் செலுத்தவில்லை ஆனால் இசைத் துறையில் நிறைய வாய்ப்புகள் இருப்பதைப் பார்த்தார். ஆகவே 2001-ல் ஐ பாட் வந்தது.

ஐஃபோன்

ஆனால் சில புது பல்லூடக செல்பேசிகளில் எம்பி3 இசைகளை கேட்கக்கூடிய வசதி இருந்தது. அவற்றை ஐ பாடுக்கு அச்சுறுத்தலாகப் பார்த்தார் ஸ்டீவ் ஜாப்ஸ். ஆகவே 2005-இல் மோட்டோ ஆர் ஓ கே ஆருக்கு தயக்கத்துடன் ஒப்புதல் சொன்னார். அந்த மோட்டோரோலா நிறுவனத்தின் செல்பேசியில் ஆப்பிள் நிறுவனத்தின் ஐ டியூன்கள் இடம்பெற்றன. விசைப்பலகை மற்றும் திரை இருப்பது போன்ற மேம்பட்ட ஐ பாடாக அந்த மோட்டோரோலா மாடல் இருந்தது.

''மோட்டோரோலாவுடன் கூட்டு சேர்வது ஐ பாடுக்கு நிலவும் அச்சுறுத்தலை சமாளிக்கும் எளிய முயற்சியாக இருந்தது'' என 2017-இல் வெளியான தனது புத்தகமான 'தி ஒன் டிவைஸ் - த சீக்ரட் ஹிஸ்டரி ஆஃப் த ஃபோன்' என்ற நூலில் பிரைன் மெர்ச்சன்ட் எழுதியுள்ளார்.

ஆனால் மோட்டோரோலா நிறுவனத்தின் அந்த மாடல் பரவலான பயன்பாட்டுக்கு வருவதற்கு முன்பாக டெமோ காட்டும்போதே சரியாக செயல்படவில்லை. மேலும் ஐ பாட் விற்பனையையும் மந்தமாக்கியது. இவை ஸ்டீவை அவரின் முடிவுகளை மறுபரிசீலனைக்கு உள்ளாக்கச் செய்தன. ஆப்பிள் தனது முதல் சொந்த செல்பேசியை உருவாக்க வேண்டுமென அவர் முடிவெடுக்கத் தூண்டின.

2. மேக் செல்பேசி VS ஐ போன் செல்பேசி

ஆப்பிள் இன்ஃபினிட் லூப் வளாகத்தின் ஆராய்ச்சியாளர்கள் ஐ ஃபோனை உருவாக்க இரண்டு சாத்தியமான வழிகளைப் பார்த்தார்கள். முதலாவதாக ஏற்கனவே இருக்கும் ஐ பாட்டில் அலைபேசி அம்சங்களைச் சேர்க்கலாம் என்றார்கள். அந்த செயல்திட்டத்திற்கு பி1 என்ற குறியீட்டுப் பெயர் வைத்தனர். இரண்டாவதாக மேக் மென்பொருள் மூலமாக பல்வகை தொடுதிரையை வைத்து பரிசோதிக்கும் செயல்திட்டத்திற்கு பி2 என குறியீட்டுப் பெயர் வைக்கப்பட்டது. ''ஆகவே ஆப்பிளுக்குள்ளேயே இரண்டு செயல்திட்டங்களும் ஐ ஃபோனாக மாற கடும் போட்டி போட்டன'' என்கிறார் மெர்ச்சன்ட்.

ஐஃபோன்

பி1 குழுவானது ஐ பாடுக்குள் செல்பேசி அம்சங்களை திணிக்க முயன்றது. ஐ பாடுக்குள் இருக்கும் ரோட்டரி சக்கரம் பாடல்களை தேடி கேட்க உதவும். அதனை செல்பேசி பயன்பாட்டுக்கு மாற்ற அதே சக்கரம் மூலம் எண்கள் மற்றும் எழுத்துக்களை சுழற்ற திட்டமிடப்பட்டது. ஆனால் அது தொந்தரவாக இருந்தது. ஒரு குறுஞ்செய்தி அல்லது இமெயில் அனுப்ப ஒவ்வொரு எழுத்தையும் தட்டச்சு செய்ய வேண்டும். ஐ பாட் குழு தோல்வியடைந்தது.

மறுப்பக்கம் பி2 குழு ஒரு முன்மாதிரியை உருவாக்கியது. ஒரு பெரிய தொடுதிரையானது மனிதர்கள் அந்த திரையில் தொடுவதன் மூலம் இயங்கியது. மாதிரி செயல்பாட்டை பார்த்த ஸ்டீவ் ஜாப்ஸ் அதனை நம்பத் தயாரானார். '' இதைத்தான் நான் செல்பேசியில் புதிய அம்சமாக சேர்க்க விரும்பினேன்'' என ஜாப்ஸ் கூறினார்.

ஆகவே பயனர் இடைமுகத்தை வடிவமைக்கவும், பெரிய தொடுதிரையை செல்பேசிக்காக கடன் அட்டை அளவிற்கு குறைக்கவும் பொறியியலாளர்கள் தூக்கமில்லாத இரவுகளை செலவழித்தனர். இறுதியில் ஐ ஃபோனின் எக்ஸ் இயக்க முறைமைக்கு நிரல்கள் வெற்றிகரமாக எழுதப்பட்டன.

3. விசைப்பலகை வைக்கலாமா அல்லது வேண்டாமா?

2006-ஆம் ஆண்டு வாக்கில் வெளிவந்த மேம்படுத்தப்பட்ட செல்பேசிகளான மோட்டோ க்யூ, பிளாக்பெரி மற்றும் நோக்கியா இ62 போன்றவற்றில் அடிப்படை இணைய அணுகல் இருந்தது. ஆப்பிளின் சொந்த ஐ பாடில் வீடியோ வசதிகள் மற்றும் விளையாட்டுகள் இருந்தன. ஆனால் ஐ ஃபோனில் ஆப்பிள் நிறுவனம் வீடியோ பார்ப்பதற்கு நல்ல வசதிகள் மற்றும் பபயனருடன் ஊடாடும் வசதியை ஏற்படுத்த விரும்பியது.

ஐஃபோன்

2007-இல் முதல் ஐ போனை அறிமுகப்படுத்திய போது, ஜாப்ஸ் நான்கு சமகால செல்பேசிகளை திரையில் சுட்டிக்காட்டினார். அவர் பேசுகையில் '' இதில் பிரச்னை என்னவெனில் இவை மிகவும் கீழே இருக்கின்றன'' எனக் கூறியவாறு அந்த நான்கு செல்பேசிகளின் விசைப்பலகையை சுட்டிக்காட்டினார். '' நீங்கள் விரும்பினாலும் சரி விரும்பாவிட்டாலும் சரி இந்த விசைப்பலகைகள் எப்போதும் இருக்கின்றன. இந்த கட்டுப்பட்டுப் பொத்தான் பிளாஸ்டிக்கில் செய்யப்பட்டு பொருத்தப்பட்டிருக்கின்றன. ஒவ்வொரு செயலுக்கும் வித்தியாசமான பயனர் இடைமுகம் தேவை. மேலும் அதற்கான பிரத்யேக பொத்தான்கள் தேவைப்படும்'' எனச் சொன்னார் ஸ்டீவ்.

விசைப்பலகையின்றி ஐஃபோன் செல்பேசியை உருவாக்கவேண்டும் என்பது ஸ்டீவின் முக்கிய முன் நிபந்தனையாக இருந்தது. பிபிசியின் டேவ் லீயிடம் டோனி ஃபாடெல் கூறுகையில் விசைப்பலகை குறித்த சண்டை நான்கு மாதங்களுக்கு நீடித்தது என்றார்.

''விசைப்பலகைக்கு ஆதரவானவர்களிடம் பேசும்போது ஜாப்ஸ் ஒரு முறை '' எங்கள் கருத்தை ஒப்புக்கொள்ளாதவரையில் இந்த அறைக்குள் நீங்கள் மீண்டும் வர முடியாது. இந்த குழுவில் இருக்க விருப்பமில்லையென்றால் இருக்க வேண்டாம்.'' என்றார். அதன் பின்னர் ஒரு நபர் அந்த அறைக்கு வெளியே அனுப்பப்பட்டார். அதன் பிறகு அனைவரும் அவரது கருத்தின் தீவிரத்தை உள்வாங்கிக்கொண்டு வழிக்கு வந்தார்கள்'' என்றார் ஃபாடெல்.

அதனால் இன்றைய திறன்பேசிகளுக்கு எல்லாம் ஆதாமாக இருப்பது அன்றைய ஐ -போனின் முதல் தொடுதிரை திறன் பேசியே.

4. தொடு பேனா வேண்டுமா இல்லை புறக்கணிக்கலாமா?

ஸ்டீவால் இன்னொரு விஷயம் சரி செய்யப்பட்டது. ஐ ஃபோனை இயக்க உங்களுக்கு ஒரு விரல் தேவை. ஆனால் ஆப்பிள் நிறுவனத்தின் அப்போதைய தலைமை செயல் நிர்வாகிகளில் ஒருவரான ஃபாடெல் கூறுகையில் '' ஐ போனை நாம் தொடு பேனா உதவியுடன் இயக்க வேண்டும். ஏனெனில் அதுதான் சரியானது என நமக்குத் தெரியும்'' எனச் சொல்லியிருந்தார்.

நீங்கள் உங்கள் விரலை மட்டும் பயன்படுத்துங்கள் என தத்துவார்த்தக் குறிப்போடு ஸ்டீவ் பேசினாலும் ஒரு நாள் நாம் தொடு பேனாவை பயன்படுத்தும் நிலை வரும் என நாங்கள் அறிந்திருந்தோம் என ஃபாடெல் பிபிசி செய்தியாளர் லீயிடம் கூறினார்.

ஐஃபோன்

ஸ்டீவ் தொடு பேனாவை வெறுத்தார். ஆனால் முரண்பாடாக ஜாப்ஸை தொடர்ந்து செயல் தலைவரான டிம் குக் காலத்தில் 2015-ஆம் ஆண்டு ஆப்பிள் பென்சில் அறிமுகப்படுத்தப்பட்டது.

மேலும், பல போர்ட் ரூம் சந்திப்புகள், தொழில்நுட்பவாதிகளின் அறிவியல் பூர்வமான சண்டைகள், சாத்தியமற்ற காலக்கெடுகள் மற்றும் நவீன காலத்தின் விரைவான இயக்கங்கள் குறிப்பிடத்தக்க ஒரு விஷயத்தை உருவாக்கின.கேமரா, ஒலி மெயில், வைஃபை, புளூடூத், பிரத்யேக சஃபாரி உலாவி, கூகுள் மேப்ஸ், 3.5 அங்குல தொடுதிரை என பல அம்சங்களுடன் முதல் ஐ ஃபோன் வெளியானது.

ஒரு சிறு தகவல் :-

முதல் ஐ போன் என்பது ஆப்பிள் நிறுவனத்தால் அறிமுகப்படுத்தப்படவில்லை, அது டிசம்பர் 2006 -ஆம் ஆண்டு சிஸ்கோ நிறுவனத்தால் அறிமுகப்படுத்தப்பட்டது. எழுத்தெண்கள் நிறைந்த சலிப்பூட்டும் வடிவம் கொண்டது அந்த செல்பேசி. சில வாரங்கள் கழித்து ஸ்டீவ் ஜாப்ஸ் மேடையில் '' ONE MORE THING'' என ஐபோனை அறிமுகப்படுத்தினார்.

http://www.bbc.com

Link to comment
Share on other sites

‘நினைவுகளை மீட்க நேரங்களை ஒதுக்கவும்’
 

image_290a5d08ed.jpgமௌனமாக இருப்பது நல்ல நினைவுகளை மீட்பதற்கும் காரணமாகின்றது. சதா கடமைகளை ஓய்வின்றிச் செய்யும் நாம், நல்ல நினைவுகளையும் மீட்டுப்பார்க்க நேரங்களை ஒதுக்குதல் வேண்டும். 

நல்ல சம்பவங்களை மனதில் நிறுத்தினால் அதன் மூலம் வும் ஆனந்தமும் உருவாகும். நிர்ச் சிந்தனையுடன் எதையும் நினைத்துக் கொள்ளாமல் இருப்பது கடினம்.  

ஆனால், தனிமையில் நல்ல சிந்தனைகளையே மீட்டுப் பார்த்தால், வீண் சலனங்கள் கரைந்து விடும். கலகலப்பான சந்தர்ப்பங்களில் அனைவருடனும் மனம்விட்டுப் பேசவேண்டும். 

 இறைவனை வழிபடும்போது, நிசப்தமாக அவருடன், உங்கள் எண்ணங்களைச் சமர்ப்பித்து விடுங்கள். தூயசிந்தனையுடன் மௌனமான பிரார்த்தனை கடவுளினால் ஏற்றுக்கொள்ளப்பட்டு, ஆசீர்வதிக்கப்படுவீர்கள்.  

அமைதி, பக்தியையும் பேரன்பையும் விசாலமாக்குகின்றது.

Link to comment
Share on other sites

2013 : பிர­தம நீதி­ய­ரசர் சிராணி பண்­டா­ர­ நா­யக்­க­வுக்கு எதி­ராக குற்­ற­வியல் பிரே­ரணை நிறை­வேற்றம்

வரலாற்றில் இன்று…

ஜனவரி – 10

 

1055 : கிழக்கு ரோமா­னிய இராஜ்­ஜி­ய­மான பைசண்டைன் பேர­ர­சி­யாக தியோ­டோரா முடி சூடினார்.

1569 : இங்­கி­லாந்தில் முத­லா­வது லொத்தர் சீட்­டி­ழுப்பு பதி­வா­கி­யது.

varalaru-shirani-bandaranayake1.jpg1693 : சிசி­லியில் எட்னா எரி­மலை வெடித்­த­தை­ய­டுத்து இடம்­பெற்ற பாரிய பூகம்­பம், சிசிலி மற்றும் மோல்ட்­டாவின் பல பகு­தி­களை அழித்­தது.

1779 : மணிப்­பூரின் மன்­ன­ராக சிங்-தாங் கோம்பா முடி­சூ­டினார்.

1782 : பிரித்­தா­னியர் சேர் எட்வேர்ட் ஹியூஸ் மற்றும் சேர் ஹெக்டர் மன்ரோ தலை­மையில் திரு­கோ­ண­ம­லையைக் கைப்­பற்­றினர்.
1787 : யுரேனஸ் கோளின் இரண்டு துணைக்­கோள்கள் கண்­டு­பி­டிக்­கப்­பட்­டன.

1851 : சீனாவில் குயிங் அர­சிற்­கெ­தி­ராக ஹொங் க்சியூகான் என்­பவர் தலை­மையில் தாய்பிங் என்ற இரா­ணுவக் குழு ஆரம்­பிக்­கப்­பட்­டது.

1861 : அமெ­ரிக்க உள்­நாட்டுப் போர்: அல­பாமா ஐக்­கிய அமெ­ரிக்­காவில் இருந்து வில­கி­யது.

1878 : முதற்­த­ட­வை­யாக போத்­தலில் அடைத்து பால் விற்­கப்­பட்­டது.

1922 : நீரி­ழி­வுக்கு மருந்­தாக இன்­சுலின் மனி­தரில் முதன்­மு­தலில் பயன்­ப­டுத்­தப்­பட்­டது.

1942 : இரண்டாம் உலகப் போரில் நெதர்­லாந்­துக்கு எதி­ராக ஜப்பான் போர் பிர­க­டனம் செய்­தது.

1942 : இரண்டாம் உலகப் போர்: ஜப்பான் கோலா­லம்­பூரைக் கைப்­பற்­றி­யது.

1943 : ஐக்­கிய அமெ­ரிக்­காவும் ஐக்­கிய இராச்­சி­யமும் சீனாவின் மீதான நில உரி­மையை இழந்­தன.

1946 : என்வர் ஹோக்ஸா அல்­பே­னி­யாவின் சர்­வா­தி­கா­ரி­யாகத் தன்னை அறி­வித்து அதனைக் குடி­ய­ர­சாக்­கினார்.

1962 : பெருவில் இடம்­பெற்ற சூறா­வளி கார­ண­மாக 4,000 பேருக்கு மேல் இறந்­தனர்.

1972 : கிழக்கு பாகிஸ்தான் பங்­க­ளாதேஷ் எனப் பெயர் மாற்றம் செய்­யப்­பட்­டது.

varalru-bangaladesh-copy.jpg1998 : அல்­ஜீ­ரி­யாவில் நூற்­றுக்கும் மேற்­பட்ட பொது­மக்கள் கொல்­லப்­பட்­டனர்.

2007 : செயற்கைக் கோள் தகர்ப்பு ஏவு­கணைச் சோத­னையை சீனா நடத்­தி­யது.

2013 : இலங்­கையின் பிர­தம நீதி­ய­ரசர் சிராணி பண்­டா­ர­நா­யக்­க­வுக்கு எதி­ராக நாடா­ளு­மன்­றத்தில் குற்­ற­வியல் பிரே­ரணை நிறை­வேற்­றப்­பட்­டது. குற்­ற­வியல் பிரே­ர­ணைக்கு ஆத­ர­வாக 155 வாக்­கு­களும் எதி­ராக 49 வாக்­கு­களும் அளிக்­கப்­பட்­டன.

2014 : ஹம்­பாந்­தோட்­டை­யி­லுள்ள மத்­தள மஹிந்த ராஜ­பஷ சர்­வ­தேச விமான நிலை­யத்­தி­லி­ருந்து புறப்­பட்ட துபாய் விமா­ன­மொன்று மயி­லொன்­றுடன் மோதி­யதால் அவ­ச­ர­மாக தரை­யி­றக்­கப்­பட்­டது.

2017 : மொரகஹகந்த நீர்த்தேக்கத்துக்கு நீர் நிரப்பும் நடவடிக்கையை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆரம்பித்து வைத்தார்.

2017 : இலங்கைக்கு மீண்டும் ஜி.எஸ்.பி. பிளஸ் சலுகை வழங்குவதற்கு ஐரோப்பிய ஆணைக்குழு பரிந்துரை செய்தது.

 

 

http://metronews.lk

Link to comment
Share on other sites

மகிழ்ச்சி குறையாமல் வாழ்வது எப்படி? பூனை சொன்ன பாடம்! #MotivationStory

 
 

மகிழ்ச்சி கதை

ந்த வாழ்க்கையில ஒரே ஒரு மகிழ்ச்சிதான் இருக்கிறது. அது, நேசிப்பது, பிறரால் நேசிக்கப்படுவது’ என்கிறார் ஃபிரெஞ்ச் நாவலாசிரியை ஜார்ஜ் சேண்ட் (George Sand). நம்மை எல்லோரும் விரும்பவேண்டுமென்றால் அதற்கு ஒரே ஒரு வழிதான் உண்டு. அது, நாம் பிறரை விரும்புவது. அதிலும், பிறருக்கு உதவும் மனப்பான்மை உள்ளவர்கள்தான் அதிகம் நேசிக்கப்படுகிறார்கள். தான், தன்னலம் என்று வாழ்கிறவர்களிடம் சந்தோஷம் நிரந்தரமாகத் தங்குவதில்லை. பிறரைப் பற்றிய யோசனைகூட இல்லாத மனிதர்களிடம் மகிழ்ச்சி நீடித்திருப்பதில்லை. அதைத் தக்கவைத்துக்கொள்வது ஒன்றும் பிரம்ம சூத்திரமில்லை. கொஞ்சம் விரிவான பார்வை இருந்தாலே போதும், சந்தோஷம் என்கிற அபூர்வ சக்தியை என்றென்றும் நம்முடனேயே வைத்துக்கொள்ளலாம். அது எப்படி என்று விளக்குகிறது இந்தச் சிறிய கதை

 

அது லண்டனிலுள்ள ஒரு மனநல மருத்துவரின் கிளினிக். அவரைப் பார்க்க ஒரு பெண்மணி வந்திருந்தார். அந்த ஊரிலுள்ள அனைவருக்கும் அவரைத் தெரியும். அவர் கணவர் பரம்பரைப் பணக்காரர். சொத்து, நிலம் எதற்கும் குறைவில்லை. மருத்துவர் ஒரு புன்முறுவலோடு அவரை வரவேற்றார். அவருக்கு என்ன பிரச்னை என்று விசாரித்தார். பெண்மணி நேரடியாக விஷயத்துக்கு வந்தார்... ``டாக்டர்... எனக்குத் திரும்பிப் பார்க்குறப்போ, என் மொத்த வாழ்க்கையுமே வெறுமையாத் தெரியுது. இந்த வாழ்க்கைக்கு ஒரு அர்த்தமும் இல்லைங்கிற எண்ணம் தினமும் என்னைப் பாடாகப் படுத்துது...’’

மனநல மருத்துவர் அந்தப் பெண்மணியின் பிரச்னையைப் புரிந்துகொண்டார். ஒரு கணம் யோசித்தார். ``ஒரு நிமிஷம்...’’ என்றவர் காலிங் பெல்லை அடித்தார். உதவியாளரிடம் ``மேரியை வரச் சொல்லுங்க’’ என்று சொல்லியனுப்பினார். 

மகிழ்ச்சியான மனநல மருத்துவர்

சிறிது நேரத்தில், டாக்டர் குறிப்பிட்ட மேரி உள்ளே வந்தார். அவருக்கு எப்படியும் 65 வயதுக்கு மேல் இருக்கலாம் என்பதைத் தோற்றத்தைவைத்தே பணக்காரப் பெண்மணிக்குத் தெரிந்தது. கொஞ்சம் குண்டாக, வாயெல்லாம் சிரிப்பாக உள்ளே நுழைந்திருந்தார் மேரி. டாக்டர், பணக்காரப் பெண்மணியை மேரிக்கு அறிமுகப்படுத்திவைத்தார். பிறகு அவரிடம், ``இவங்க மேரி... நம்ம கிளினிக்கைப் பெருக்குற, துடைக்கிற வேலை பார்க்குறாங்க. மேரி, அவங்களோட வாழ்க்கையில மகிழ்ச்சியைக் கண்டுபிடிச்சாங்கனு சொல்லச் சொல்றேன். கொஞ்சம் கவனமாக் கேளுங்க. அதுக்கு அப்புறம் பேசுவோம்’’ என்றார் டாக்டர். அந்தப் பெண்மணிக்கு அதில் கொஞ்சமும் விருப்பமில்லை. `நாம் ஒரு டாக்டரிடம் ஆலோசச்னைக்கு வந்தால், அவர் வேறு ஒருவரைக் கூப்பிட்டு எதையோ சொல்லச் சொல்கிறாரே...’ என்றுகூடத் தோன்றியது. ஆனாலும் அமைதியாக `சரி’ என்பது போலத் தலையை அசைத்தார். 

மேரி ஒரு நாற்காலியில் வசதியாக உட்கார்ந்துகொண்டார். பேச ஆரம்பித்தார்... ``மூணு மாசத்துக்கு முன்னாடி என் கணவர் மலேரியா ஜுரம் வந்து இறந்துபோயிட்டார். அதுக்கும் மூணு மாசத்துக்கு முன்னாடி என் ஒரே மகன் ஒரு விபத்துல இறந்துபோயிட்டான். வாழ்றதுல ஒரு அர்த்தமும் இல்லை; வாழ்க்கையில பிடிப்பே இல்லாமப் போயிடுச்சு. என் கணவர் போனதுக்கப்புறம் என்னால சரியா சாப்பிட முடியலை, தூங்க முடியலை. என் முகத்துலருந்து சிரிப்பு காணாமப் போயிடுச்சு. சமயத்துல செத்துப் போயிடலாமானுகூட தோண ஆரம்பிச்சிடுச்சு. 

அந்த நேரத்துலதான் அது நடந்தது. ஒருநாள் வேலை முடிஞ்சு வீட்டுக்கு நடந்து வந்துக்கிட்டு இருந்தேன். பாதி தொலைவு வந்தப்புறம் திரும்பிப் பார்த்தேன். ஒரு பூனைக்குட்டி பின்னாலேயே நடந்து வந்துக்கிட்டு இருக்குறது தெரிஞ்சுது. நான் அதை கவனிக்காத மாதிரி நடக்க ஆரம்பிச்சேன். கொஞ்சம் தூரம் போனதுக்கு அப்புறம் பார்த்தா, மறுபடியும் அந்தப் பூனைக்குட்டி பின்னாடியே வந்துக்கிட்டு இருந்துச்சு. அது ரொம்ப களைச்சுப் போயிருந்துச்சு. வெளியில குளிர் வேற ரொம்ப அதிகமா இருந்துதா... அது லேசா நடுங்கிக்கிட்டு இருந்துச்சு. சரி அதை வீட்டுக்குத் தூக்கிட்டுப் போலாம்னு முடிவு பண்ணினேன். 

கூடைக்குள் பூனை

வீட்டுக்கு வந்து ஒரு பிளேட்ல கொஞ்சம் பாலை ஊத்தினேன். அவ்வளவுதான் அந்தப் பூனைக்குட்டி வேக வேகமா மொத்தப் பாலையும் நக்கிக் குடிச்சிடுச்சு. அப்புறம் லேசா முறைச்சுப் பார்க்குற மாதிரி என்னைப் பார்த்துக்கிட்டே என் கால்கிட்ட வந்து உரசுற மாதிரி நின்னுச்சு. வாலை லேசா காத்துல வீசுற மாதிரி அசைச்சுக்கிட்டே என்னைப் பார்த்தது. பசி தீர்ந்த அதோட திருப்தி எனக்கு நல்லாத் தெரிஞ்சுது. ரொம்ப நாள் கழிச்சு அன்னிக்கித்தான் என் முகத்துல சிரிப்பு வந்தது. 

அதுக்கப்புறம் நான் யோசிச்சேன்... `ஒரு பூனைக்குட்டிக்கு உதவி செஞ்சாலே நமக்கு மகிழ்ச்சியும் சிரிப்பும் வருதே... மத்தவங்களுக்கு நம்மால ஆன உதவிகளைச் செஞ்சா எவ்வளவு மகிழ்ச்சி கிடைக்கும்.’ அதை ஃபாலோ பண்ண ஆரம்பிச்சேன். இன்னிக்கி என்னைவிட நல்லா சாப்பிடுற, நிம்மதியாத் தூங்குற, சந்தோஷமா வாழுற யாருமே கிடையாதுனுதான் நான் நினைக்கிறேன். நான் மத்தவங்களுக்கு உதவி செய்யறதின் மூலமா என் மகிழ்ச்சியைக் கண்டுபிடிச்சேன்.’’ மேரி சொல்லி முடித்தார். 

அந்தப் பணக்காரப் பெண்மணிக்குக் கண்களில் நீர் சுரந்தது. அவருக்குத் தன் வாழ்க்கை ஏன் வெறுமையாகவும், அர்த்தமில்லாததாகவும் இருக்கிறது என்பதும் புரிந்தது. 

 

 

https://www.vikatan.com

Link to comment
Share on other sites

பனி அலை.... பார்த்திருக்கிறீர்களா? (காணொளி)

 

 

கடலில் அலைகள் பொங்குவதைப் பார்த்திருப்பீர்கள். ஆனால், உறை பனியில் அலைக்கு நிகரான சக்தி வாய்ந்த பனி அலைகளைப் பார்த்திருக்கிறீர்களா?

 

மேற்கத்தேய நாடுகள் பலவும் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு உறை பனி காலநிலையால் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது. நயாகரா நீர்வீழ்ச்சியே உறைந்து போயிருப்பதையும் நீங்கள் அறிந்திருக்கக் கூடும்.

இன்னிலையில், கடும் குளிர் தாக்குதலுக்கு உள்ளாகியிருக்கும் அமெரிக்காவின் கரோலினாவின் கடற்கரை ஒன்றில், இறுகிப் போயிருக்கும் பனிக் கட்டிகள், கடலடி அலைகளால் பெயர்த்தெறியப்படும் காட்சி இணைய தளத்தில் பரவி வருகிறது.

இக்காட்சியை ஒலியுடன் கேட்டுப் பாருங்கள்!

http://www.virakesari.lk/

Link to comment
Share on other sites

பல வண்ணங்களில் பொங்கல் பானைகள்! விற்பனையில் அசத்தும் பட்டதாரிகள்

 
 

பொங்கல் பண்டிகைத் தமிழர்களின் முக்கிய திருநாள், பொங்கல் திருநாளில் கிராமங்கள் நகரங்கள் என்ற வேறுபாடு இல்லாமல் புதுப் பானையில் பொங்கல் வைப்பது ஸ்பெஷல்! தருமபுரி மாவட்டம் தண்டுகாரம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பட்டதாரி இளைஞர்கள் பட்டாபி, பொன்மொழி, ராஜா, அருள்குமார் ஆகிய இளைஞர்கள் கூட்டாகச் சேர்ந்து வண்ண வண்ண கலர்களில் பொங்கப் பானைகளை விற்பனை செய்து பொதுமக்களின் கவனத்தை ஈர்த்து அசத்தியுள்ளனர். 

பொங்கல் பானை

 

தருமபுரி அரசுக் கலைக்கல்லூரி முன்பாகப் புளியமரத்தடியில் வண்ண வண்ண கலர்களில் அடுக்கி வைக்கப்பட்ட பானைகளை ஆண்களும் பெண்களும் சிறுவர்களும் விருப்பமுடன் பொங்கல் பானையை வாங்கிச் செல்கின்றனர். விற்பனையில் பிசியாக இருந்த இளைஞர் பட்டாபியிடம் பேசினோம். ''நான் முதுநிலை சமூகப் பணி பட்ட மேற்படிப்பைப் படித்துள்ளேன். நானும் பொன்மொழி, ராஜா, அருள்குமார் நான்கு பேரும் ஒன்றிணைந்து ரூ.25,000 முதலீடு செய்து பொங்கல் பானைகளைக் கொள்முதல் செய்து பானைகளுக்கு மக்கள் விரும்பும் விதமாக வண்ணங்களைத் தீட்டி விற்பனை செய்தோம். கடந்த ஆண்டு நாங்கள் எதிர்பார்த்தைவிட பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. அதே திட்டமிடலில் இந்த ஆண்டும் ரூ.50,000 முதலீடு செய்து நல்ல தரமான பானைகளைச் செய்ய நாங்களே நேரடியாகக் கேட்டு கொள்முதல் செய்தோம். கடந்த ஒரு மாதமாக நானும் என் நண்பர்களும் இரவு நேரங்களில் பானைக்கு வண்ணங்களைத் தீட்டிப் பாதுகாத்து வந்தோம். இப்போது விற்பனைக்காகக் கொண்டு வந்துள்ளோம். 

பொங்கல் பானை

எங்களிடம் 7 விதமான பானைகள் உள்ளன. சாதாரண பானையைவிட 25% சதவிகிதம் மட்டுமே கூடுதலாக விற்பனை செய்கிறோம். 20 ரூபாய் பானை 30 ரூபாய்க்கும் 70 ரூபாய் பானை 110 ரூபாய்க்கும் 170 ரூபாய் பானை 250 ரூபாய்க்கும் விற்பனை செய்கிறோம். இது வெளி மார்க்கெட் விலையைவிட மிகக் குறைவுதான். நாங்களே உற்பத்தியாளர்களிடமிருந்து நேரடியாக வாங்கியதால் இந்த ஆண்டு பானைகளை  குறைவான விலைக்கு விற்பனை செய்ய முடிகிறது. மற்ற நண்பர்கள் கல்லூரிக்குப் படிக்கச் சென்றுள்ளதால் விடுமுறை நாள்களில் வந்து விற்பனையைப் பார்த்துக்கொள்வார்கள்'' என்றார் பட்டாபி.

கல்லூரியில் படிக்கும் நாள்களில் பொழுதுபோக்கு, விளையாட்டு போன்ற விஷயங்களில் கவனம் செலுத்தாமல் சுயமாகத் திட்டமிட்டு பொங்கல் பானை விற்பனையில் மக்களின் கவனத்தை ஈர்த்துள்ள தருமபுரி இளைஞர்களின் செயல் பாராட்டுக்குரிய விஷம்தான். 

https://www.vikatan.com

Link to comment
Share on other sites

'இந்திய பெருஞ்சுவர்' ராகுல் டிராவிட்: சுவாரஸ்ய தகவல்கள் #HappyBirthdayDravid

 
 
 
 

1990களின் பிற்பகுதியிலும், 2000 முதல் 2011-ஆம் ஆண்டு வரையிலும், இந்திய கிரிக்கெட் அணி விளையாடிய போட்டிகளில் அணி தடுமாறிக் கொண்டிருக்கும்போது, பெரும்பாலானோர் கேட்கும் ஒரு முக்கிய கேள்வி, ராகுல் டிராவிட் இன்னமும் களத்தில் உள்ளாரா என்பதுதான்.

Rahul Dravid celebratesபடத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionராகுல் டிராவிட்

இந்திய அணியில் பல நட்சத்திர பேட்ஸ்மேன்கள், அதிரடி ஆட்டக்காரர்கள் இருந்தபோதிலும், இறுதிவரை ஆட்டமிழக்காமல் அணிக்கு வெற்றி தேடித்தருவது, டெஸ்ட் போட்டிகளில் தோல்விகளை தவிர்ப்பது ஆகியவை ராகுல் டிராவிட்டால் மட்டுமே சாத்தியம் என்ற திடமான நம்பிக்கையே இந்த கேள்வியின் பின்னணியாக இருந்தது.

டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகள் ஆகிய இரு வடிவங்களிலும் 10,000 ரன்களை கடந்தவர், டெஸ்ட் போட்டிகளில் அதிக அளவு கேட்ச்கள் (210) பிடித்தவர் என்று பல சாதனைகள் டிராவிட் வசம் உள்ளன.

தனது அற்புத தடுப்பாட்டத்தால் 'வால்' (தடுப்புச் சுவர்) என்று கிரிக்கெட் ஆர்வலர்கள் மற்றும் விமர்சகர்களால் அழைக்கப்படும் முன்னாள் இந்திய கிரிக்கெட் கேப்டனான ராகுல் டிராவிட், இன்று (வியாழக்கிழமை) தனது 45-ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

ராகுல் டிராவிட்டின் ஆரம்ப நாட்கள் குறித்து பிபிசி தமிழிடம் நினைவுகூர்ந்த மூத்த பத்திரிக்கையாளரான விஜய் லோக்பாலி ''ஆரம்பத்தில் ஒரு நல்ல தடுப்பாளராக மட்டும் அறியப்பட்ட ராகுல் டிராவிட், தனது பேட்டிங் முறையில் பல மாற்றங்கள் செய்து ஒருநாள் போட்டிகளுக்கான உலக கோப்பையில் சிறந்த பங்களிப்பை அளித்தார். அணிக்காக பல போட்டிகளில் அவர் விக்கெட் கீப்பிங் பணியையும் மேற்கொண்டது மறக்கமுடியாது'' என்று கூறினார்.

'இந்திய பெருஞ்சசுவர்' ராகுல் டிராவிட்படத்தின் காப்புரிமைIAN KINGTON

'அணியின் நலனே எப்போதும் முக்கியம்'

''பலமுறைகள் தனது இயற்கையான பேட்டிங் முறையை மாற்றி அணிக்காக தியாகம் செய்தவர் டிராவிட். அவரது பல சிறப்பு அம்சங்களால் எந்த கேப்டனும் அவரை தனது அணியில் வைத்துக்கொள்ள விரும்புவார்'' என்று விஜய் லோக்பாலி தெரிவித்தார்.

இந்திய கிரிக்கெட் அணிக்காக ராகுல் டிராவிட் பல சாதனைகளும், தியாகங்களும் செய்திருந்தாலும், அவருக்கு கிடைக்க வேண்டிய அங்கீகாரம் கிடைத்ததா என்று கேட்டதற்கு ''இல்லை என்றுதான் கூற வேண்டும். ஓய்வுபெறும் முன்பு அவருக்கு முறையான பிரியாவிடை போட்டி கூட கிடைக்கவில்லை'' என்று அவர் கூறினார்.

''அவர் அதிரடி ஆட்டக்காரர் இல்லை என்று கருதப்பட்டதால் பல சமயங்களில் அவருக்கு கிடைக்க வேண்டிய அங்கீகாரங்கள் கிடைக்கவில்லை. ஆனால், அணியின் நலனை மட்டுமே முக்கியமாக கருதி விளையாடிய ஒரு தன்னலமற்ற வீரர் ராகுல்'' என்று அவர் மேலும் கூறினார்.

'இந்திய பெருஞ்சசுவர்' ராகுல் டிராவிட்படத்தின் காப்புரிமைAFP

டிராவிட் கேப்டன்ஷிப் மீதான விமர்சனம் ஏன்?

ராகுல் டிராவிட்டின் தலைமை பண்பு பற்றி பேசிய விஜய் லோக்பாலி கூறுகையில், ''ஆரம்பத்தில் வெளிநாட்டு பயணம் மற்றும் உள்நாட்டு தொடர்களில் ராகுலின் கேப்டன்ஷிப் சிறப்பாக இருந்ததாக கூறப்பட்டது. ஆனால், 2007 உலக கோப்பையில் இந்தியா தோல்வியுற்றவுடன் அவர் மீது எழுந்த குற்றச்சாட்டுகள் சரியல்ல'' என்று குறிப்பிட்டார்.

அணியின் தோல்விக்கு கேப்டன் மட்டுமே காரணம் என்று கூறமுடியாது என்று கூறிய அவர், பல போட்டிகளில் துணை கேப்டனாக டிராவிட் செயலாற்றினார் என்பதை மறக்கமுடியாது என்றும் தெரிவித்தார்.

எதிர்காலத்தில் இந்திய அணியின் பயிற்சியாளராக ராகுல் நியமிக்கப்படுவாரா என்று கேட்டதற்கு, ''அவ்வாறு நியமிக்கப்பட்டால் அவர் சிறப்பாக செயல்படுவர். பல இளம் வீரர்களுக்கு ரோல்மாடலாக செயல்படும் அவர் அணியை நன்கு வழிநடத்துவார்'' என்று விஜய் லோக்பாலி குறிப்பிட்டார்.

சக சாதனையாளர்களுடன் ராகுல் டிராவிட்படத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionசக சாதனையாளர்களுடன் ராகுல் டிராவிட்

ரோலர்கோஸ்டரில் ஏற அஞ்சிய டிராவிட்

ராகுல் டிராவிட் உடன் கர்நாடகா மற்றும் இந்திய கிரிக்கெட் அணிகளில் இணைத்து நீண்ட காலம் விளையாடிய வெங்கடேஷ் பிரசாத் பிபிசி தமிழிடம் பேசுகையில் , ''மிகவும் தீவிர கிரிக்கெட் ஆர்வலரான டிராவிட், என்றும் தனது அணிக்காகவே விளையாடினார். அவரது முதல் டெஸ்ட் போட்டி லார்ட்ஸ் மைதானத்தில் நடந்தது. சாதிக்க வேண்டும் என்ற உணர்வு அப்போதே அவரிடம் வெளிப்பட்டது,'' என்று தெரிவித்தார்.

''பொதுவாக அமைதியாக காணப்படும் டிராவிட், மற்றவர்கள் பேசுவதை உன்னிப்பாக கவனிப்பார். பேட்டிங் செய்யும்முன் நீண்ட பயிற்சி மேற்கொள்வார்'' என்று பிரசாத் தெரிவித்தார்.

''ஒரு வெளிநாட்டு பயணத்தின்போது ரோலர்கோஸ்டர் சாகச பயணத்தில் பங்கேற்க டிராவிட் அச்சம் கொண்டார். ஆலன் டொனால்ட் போன்ற வேகப்பந்துவீச்சாளர்களை சந்திப்பதுபோல் எண்ணிக் கொள்ளுங்கள் என்று கூறி அவரை சம்மதிக்க வைத்தேன்'' என்று வெங்கடேஷ் பிரசாத் நகைச்சுவையாக குறிப்பிட்டார்.

குடும்பத்தினருடன் ராகுல் டிராவிட்படத்தின் காப்புரிமைTWITTER Image captionகுடும்பத்தினருடன் ராகுல் டிராவிட்

19 வயதுக்குட்பட்டோருக்கான இந்திய அணியின் பயிற்சியாளராக தற்போது செயல்பட்டு வரும் ராகுல் டிராவிட், இந்திய அரசால் வழங்கப்படும் பத்மஸ்ரீ மற்றும் பத்மபூஷன் போன்ற உயரிய விருதுகளை பெற்றுள்ளார்.

டிராவிட்டுடன் இளம் வயதில் விளையாடிவரும், முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரருமான சுஜித் சோமசுந்தர் டிராவிட் குறித்து நினைவலைகளை நம்முடன் பகிர்ந்து கொண்டார்.

'' 15 மற்றும் 17 வயதுகுட்பட்டவர்களுக்கான கர்நாடகா மாநில அணிகளில் நானும், டிராவிடும் இணைந்து விளையாடியுள்ளோம். ஆரம்பம் முதலே அமைதியன சுபாவம் கொண்ட அவர், எப்போதும் கிரிக்கெட் ஆட்ட நுணுக்கங்கள் பற்றியே அவர் தீவிரமாக சிந்தித்துக் கொண்டிருப்பார்'' என்று ஆரம்ப நாட்களை நினைவு கூர்ந்தார்.

ஐவர் அணியில் மத்தியில் டிராவிட்படத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionஐவர் அணியில் மத்தியில் டிராவிட்

கன்னடம் அவருக்கு தாய்மொழி இல்லையென்பதால், டிராவிட்டுக்கு அந்த மொழியில் சரளமாக உரையாட வராது. நாளடைவில் அவர் சற்று கன்னடத்தில் உரையாட கற்றுக்கொண்டார் என்று சுஜித் சோமசுந்தர் குறிப்பிட்டார்.

''ஒரு சிறுவனாக நான் கிரிக்கெட் விளையாட கற்றுக் கொண்டபோது, என்னை மிகவும் கவர்ந்த வீரர் டிராவிட். பின்னர், 2011-இல் அவருடன் உரையாட எனக்கு வாய்ப்பு கிடைத்தது.. கிரிக்கெட் பற்றி பல விஷயங்களை அவருடன் எளிதாக ஆலோசிக்க முடியும் '' என்று டிராவிட் குறித்து இந்திய மற்றும் தமிழக கிரிக்கெட் வீரர் விஜய்சங்கர் பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.

டிராவிட்டின் சிறந்த இன்னிங்ஸ் எது?

''2003-ஆண்டு நடந்த அடிலெய்ட் டெஸ்ட் போட்டியில் அணிக்கு வெற்றி தேடித்தந்த டிராவிட்டின் பேட்டிங் எனக்கு மிகவும் பிடித்தமான இன்னிங்க்ஸ்'' என்று இந்திய மற்றும் தமிழக கிரிக்கெட் வீரர் விஜய்சங்கர் தெரிவித்தார்.

கிரேக் சேப்பலுடன் ராகுல் டிராவிட்படத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionகிரேக் சேப்பலுடன் ராகுல் டிராவிட்

''கொல்கத்தா டெஸ்ட் போட்டியில் விவிஎஸ் லக்ஷ்மனுடன் இணைந்து டிராவிட் ஆடிய இன்னிங்ஸ் மிக சிறப்பான இன்னிங்க்ஸ். இங்கிலாந்தில், 2011-ஆம் ஆண்டில் அனைத்து இந்திய வீரர்களும் தடுமாறி கொண்டிருந்த போது டிராவிட் மூன்று சதங்கள் எடுத்தது மறக்கமுடியாத ஒன்று'' என்று விஜய் லோக்பாலி தெரிவித்தார்.

''டிராவிட் ஆடிய பல சிறப்பான போட்டிகள் இருந்தாலும், அவர் தனது தொடக்க டெஸ்ட் போட்டியில் லார்ட்ஸ் மைத்தனத்தில் பேட்டிங் செய்ய கடினமான சூழலில் 95 ரன்கள் எடுத்தது அற்புதமான பங்களிப்பு'' என்று வெங்கடேஷ் பிரசாத் குறிப்பிட்டார்.

1999-ஆம் ஆண்டில் நியூஸிலாந்தில் டிராவிட்டின் பல டெஸ்ட் மற்றும் ஒருநாளில் போட்டி இன்னிங்க்ஸ்கள் அவருக்கு பெரும் புகழை பெற்றுத்தந்தது.

1999 உலக கோப்பையில் அதிக அளவு ரன்கள் குவித்தவர் என்று பெருமை ராகுல் டிராவிட் வசம் உள்ளது.

இவற்றை தவிர பல போட்டிகளில் சச்சின், கங்குலி, லக்ஷ்மன், சேவாக், யுவராஜ் சிங் என பல வீரர்களுடன் இணைந்து டிராவிட் அணிக்கு ஏராளமான ரன்கள் குவித்ததையும், நீண்ட பார்ட்னர்ஷிப்களை உருவாக்கியதையும் கிரிக்கெட் ஆர்வலர்கள் இன்றளவும் நினைவுகூர்கின்றனர்.

கொல்கத்தா டெஸ்ட் போட்டியில் விவிஎஸ் லக்ஷ்மனுடன் இணைந்து டிராவிட்படத்தின் காப்புரிமைGETTY IMAGES

கிரிக்கெட் தவிர வேறு என்ன பொழுதுபோக்கு?

ராகுல் டிராவிட்டின் சாதனைகள் மற்றும் விளையாட்டு பயணம் குறித்து Rahul Dravid: A Biography என்ற வாழ்க்கை வரலாறு புத்தகம் எழுதிய பத்திரிக்கையாளர் வேதம் ஜெய்சங்கர், ராகுல் டிராவிட் குறித்த சில சுவராஸ்யமான அம்சங்களை பிபிசி தமிழிடம் பகிர்ந்து கொண்டார்.

''கிரிக்கெட் தவிர புத்தகங்கள் படிப்பது ராகுல் டிராவிட்டின் மிகவும் விருப்பமான பொழுதுபோக்கு. குறிப்பாக சுயசரிதை புத்தகங்களை அவர் விரும்பி படிப்பார்'' என்று வேதம் ஜெய்சங்கர் குறிப்பிட்டார்.

''தனது குழந்தைகள் படிப்பதற்காக தன் வீட்டை அவர்கள் படிக்கும் பள்ளிக்கு அருகில் மாற்றிய டிராவிட் ஒரு நல்ல தந்தை மற்றும் சாதனையாளராக இருந்தபோதிலும் அவர் மிகவும் எளிய மனிதராக வாழ்ந்து வருகிறார்'' என்று அவர் தெரிவித்தார்.

''முன்பொரு முறை தனது மகனை பெங்களூருவில் நடந்த ஒரு அறிவியல் கண்காட்சிக்கு அழைத்து சென்ற டிராவிட், மக்களோடு மக்களாக வரிசையில் காத்திருந்தார். இது புகைப்படமாக வெளிவந்து பெரும் வியப்பை ஏற்படுத்தியது'' என்று வேதம் ஜெய்சங்கர் கூறினார்.

தன்னை சூப்பர் ஸ்டாராக கருதாத டிராவிட்படத்தின் காப்புரிமைGETTY IMAGES

தன்னை சூப்பர் ஸ்டாராக கருதாத டிராவிட்

அவரை மற்றவர்கள் சூப்பர் ஸ்டாராக பார்த்தாலும், தன்னை அவர் ஒருபோதும் சூப்பர் ஸ்டாராக கருதியதில்லை என்று கூறிய வேதம் ஜெய்சங்கர், இளம் வீரர்களுக்கு ஆலோசனைகள் வழங்குவது, ஊக்குவிப்பது போன்றவற்றை மிகவும் ஆர்வமாக டிராவிட் செய்துவருவதை சுட்டிக்காட்டினார்.

''டிராவிட் குறித்த வாழ்க்கை வரலாறு புத்தகத்தை நான் எழுத போவதாக நான் கூறியவுடன், ஏன் என்னை வைத்து புத்தகம் எழுதவேண்டும் என்று தனது அதிர்ச்சியை டிராவிட் வெளிப்படுத்தினார் . பின்னர், அது குறித்து விளக்கியவுடன் சம்மதித்த அவர் எனக்கு மிகவும் நல்ல ஒத்துழைப்பு அளித்தார்'' என்று நினைவுகூர்ந்தார்.

விக்கெட் கீப்பிங் பணியை அணிக்காக மேற்கொண்ட டிராவிட்படத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionவிக்கெட் கீப்பிங் பணியை அணிக்காக மேற்கொண்ட டிராவிட்

194 ரன்களில் சச்சின்: டிக்ளேர் செய்த டிராவிட் - ஏன்?

''கேப்டனாக இருந்தபோது தன் மனதில் சரியென்று தோன்றியதை பல சமயங்களிலும் டிராவிட் துணிச்சலாக முடிவெடுத்தார். முல்தான் டெஸ்ட் போட்டியில் சச்சின் 194 ரன்களில் விளையாடிக் கொண்டிருந்தபோது அணியின் ஆட்டத்தை முடித்துக் கொள்வதாக அறிவித்ததும் அவ்வாறான துணிச்சலான மற்றும் அணியின் நலனை கருத்தில் கொண்டு எடுக்கப்பட்ட முடிவுதான்'' என்று வேதம் ஜெய்சங்கர் குறிப்பிட்டார்.

அதற்கான விளக்கத்தை பலமுறை டிராவிட் அளித்ததையும் அவர் நினைவுகூர்ந்தார்.

இளையவர்களின் ரோல்மாடல் ராகுல் டிராவிட்

'இந்திய பெருஞ்சுவர்' ராகுல் டிராவிட் : சுவாரஸ்ய தகவல்கள்படத்தின் காப்புரிமைGETTY IMAGES

ரஹானே, சஞ்சு சாம்சன், கருண் நாயர், விஜய் சங்கர் என பல இளம் வீரர்கள் டிராவிட்டிடம் கிரிக்கெட் பயிற்சி மற்றும் ஆலோசனைகள் பெற்றுள்ளார்கள்.

இளைய வீரர்களுக்கு ரோல் மாடலாக விளங்கும் டிராவிட், ரிக்கி பாண்டிங், சச்சின் டெண்டுல்கர், யூனிஸ் கான் மற்றும் ஷேன் வாட்சன் போன்ற அனுபவம் வாய்ந்த மூத்த வீரர்களின் அபிமானத்தையும், பாராட்டுகளையும் வெகுவாக பெற்றுள்ளார்.

விமர்சனங்களை கடந்து வெற்றி பெற்ற டிராவிட்

ஆரம்ப நாட்களில் டிராவிட் ஒருநாள் போட்டிகளில் சிறந்த வீரராக கருதப்படவில்லை. அவரால் ரன்ரேட் விகிதத்தை அதிகரிக்க முடியாது என்றும், டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே அவரால் சோபிக்க முடியும் என்றும் சிலர் விமர்சனம் செய்தனர்.

ஆனால், நாளடைவில் இத்தகைய கருத்துகளை பொய்யாக்கிய ராகுல் டிராவிட் ஒருநாள் போட்டிகளில் 10,000 அதிகமான ரன்கள் குவித்ததும், ஐபிஎல் டி20 தொடர்களில் முக்கிய பங்காற்றியதும் அளப்பரிய சாதனைகளாகும்.

ராகுல் டிராவிட்படத்தின் காப்புரிமைPUNIT PARANJPE

தனது டெஸ்ட் வாழ்வில் மொத்தம் 31,258 பந்துகளை டிராவிட் எதிர்கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கெளரவ டாக்டர் பட்டத்தை நிராகரித்த டிராவிட்

கடந்த ஆண்டு தனக்கு பெங்களூரு பல்கலைக்கழகம் கெளரவ டாக்டர் பட்டம் வழங்க முன் வந்ததை நிராகரித்த டிராவிட், தான் விளையாட்டுத் துறையில் இன்னும் ஏராளமான ஆராய்ச்சிகள் செய்த பின் டாக்டர் பட்டம் பெற்றுக் கொள்ளப் போவதாக தெரிவித்தார்.

அண்மையில் பெங்களூருவில் நடைபெற ஒரு நிகழ்ச்சியில் பேசிய ராகுல் டிராவிட், "தோல்வியைப் பற்றி பேச எனக்குத் தகுதியுள்ளது. நான் 604 சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ளேன். ஆனால் அதில் 410 போட்டிகளில், 50 ரன்களை தாண்டவில்லை.'' என்று தன்னடக்கத்துடன் குறிப்பிட்டார்.

இதுதான் ராகுல் டிராவிட். மிகச் சிறந்த தடுப்பாட்டம், மிளிரும் ஆட்ட நுணுக்கம், வசீகரமான பேட்டிங் பாணி, தலைமை பண்பு, தன்னலமற்ற ஆட்டபாணி, இவை மட்டுமல்ல , தன்னடக்கமும் டிராவிட்டை குறிக்கிறது என்று கூறுகிறார்கள் விளையாட்டு ஆர்வலர்கள்.

 

http://www.bbc.com

 

Link to comment
Share on other sites

 

கிரிக்கெட் வீரர் ஜவஹர்லால் நேருவை உங்களுக்கு தெரியுமா? 1953-இல் டெல்லியில் நன்கொடை திரட்ட நடந்த போட்டி ஒன்றில் நேரு விளையாடினார்.

Link to comment
Share on other sites

பட்டம் விடும் திருவிழா: விண்ணில் பறந்த பிரம்மாண்ட பட்டங்கள் (புகைப்படத் தொகுப்பு)

 
 
 
 

29ஆவது சர்வதேச பட்டம் விடும் திருவிழா அகமதாபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், பல்வேறு வடிவங்களிலான பட்டங்களுடன் மக்கள் பங்கேற்றனர். இந்த விழாவில் பங்கேற்ற கண்கவர் பட்டங்களை தொகுத்தளிக்கிறோம்.

பட்டம் விடும் திருவிழாபடத்தின் காப்புரிமைKALPIT BHACHECH

29ஆவது சர்வதேச பட்டத்திருவிழா அகமதாப்பத்தில் நடைபெற்றது.

விஜய் ரூபாணிபடத்தின் காப்புரிமைKALPIT BHACHECH

மாநில முதல்வர் விஜய் ரூபாணி, இந்த நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.

பட்டம் விடும் திருவிழாபடத்தின் காப்புரிமைKALPIT BHACHECH

பாகிஸ்தானில் சிறைபட்டுள்ள குல்பூஷன் ஜாதவை விடுவிக்க வேண்டியும் பட்டம் பறக்கவிடப்பட்டது.

பட்டம் விடும் திருவிழாபடத்தின் காப்புரிமைKALPIT BHACHECH

அமெரிக்கா, கனடா, சீனா உள்ளிட்ட 44 நாடுகளை சேர்ந்த 150 பேர் இதில் பங்கேற்றனர்.

பட்டம் விடும் திருவிழாபடத்தின் காப்புரிமைKALPIT BHACHECH

இந்தியாவின் 20 மாநிலங்களிலிருந்து வந்த பட்டம் விடுவோரும், இந்த திருவிழாவில் கலந்துகொண்டனர்.

பட்டம் விடும் திருவிழாபடத்தின் காப்புரிமைKALPIT BHACHECH

பல்வேறு வடிவங்களில் இருந்த, பிரம்மாண்ட பட்டங்கள், மக்களை அதிகம் கவர்ந்தது.

http://www.bbc.com

Link to comment
Share on other sites

 

இரண்டாம் உலகப்போரின் போது லண்டனில் பிபிசி அலுவலகத்துக்கு வெளியே ஒரு பெட்டியில் தனித்து விடப்பட்ட குழந்தை, தன்னை காப்பாற்றியவரை ஏழு தசாப்தங்களுக்குப் பிறகு தற்போது சந்தித்துள்ளது.

Link to comment
Share on other sites

வலைபாயுதே

 

 

twitter.com/idumbaikarthi

கவலைப்படாதடா. ஒரு பொண்ணு உன்னைத் தேடி வந்து ப்ரபோஸ் பண்ணுவா!

தட் தாமரை தமிழகத்தில் மலர்ந்தே தீரும் மொமன்ட்.!

twitter.com/udanpirappe

எனி ஹெல்ப் ஷாலினியோட, பொலிட்டிகல் வெர்ஷன்  நம்ம வைகோதான்.

எவன் அரசியலுக்கு வரேன்னு சொன்னாலும், முதல் ஆளா போய் நிக்குறாப்ல!

twitter.com/thoatta

ஒரு எலுமிச்சை 5 ரூபாய்க்கு விக்குது. ஆனா, நூறு எலுமிச்சை சக்தி கொண்ட பாத்திரம் விளக்குற சோப்பு பத்து ரூபாய்தான்னு விற்கிறான், அதே லாஜிக்தான் ஆன்மிக அரசியலும்!

twitter.com/SairSairam

பெண்களை ஆப்பிள் ஐபோன் வாங்கிக் கொடுத்தும் சமாளிக்க முடியாமல் தவிக்கும் இதே ஆண்கள்தான்... அன்று வெறும் அல்வா மட்டும் கொடுத்து சமாதானம் செய்தனர்!

p120a_1515578871.jpg

twitter.com/manivannan7402

பெண்களுக்கு நீளமான கூந்தல் இருப்பதை ஷாம்பு விளம்பரத்தில்தான் பார்க்க முடிகிறது.

facebook.com/Santhosh Narayanan

அம்மா இல்லாத நாளில் தற்காலிகத் தாயாகப் பதவியேற்ற தகப்பன், கடைசியில் ஒரு ‘நைஸ் தோசை’ வராமல் தன் சாம்ராஜ்ஜியத்தை இழக்கிறான்.

twitter.com/ArunPandiyanMJ

வடிவேலு, கவுண்டமணி எப்படி போட்டோ கமென்ட் மெட்டீரியலோ... அதே மாதிரி சீமான் ஒரு பயங்கரமான வீடியோ கமென்ட் மெட்டீரியல்!

twitter.com/SettuOfficial

ஒரு மழை இரவில் இருவரும் கை கோத்து நடக்கையில் காதல் மட்டுமே தேங்கியிருந்தது சாலையில்!

p120b_1515578899.jpg

twitter.com/m3rcel

மக்களுக்குத் தொந்தரவு இல்லாம டிரைவருங்க போராட்டம் பண்ணணுமாம். வெள்ளம் வந்தப்ப டிரைவர்களுக்குத் தொந்தரவு தராம நீங்க நீந்திப் போனீங்களா?!

twitter.com/SettuOfficial

இந்த மீடியாவுல வேலை பாக்குறவங்க தொல்லை தாங்க முடியல. எவன் பர்த்டே வந்தாலும் அவன்கூட எடுத்த போட்டோவ தூக்கிட்டு வந்திடறாங்க ஸ்கூல் குழந்தைங்க மாதிரி!

facebook.com/Senthil Vel

நாம் பயன்படுத்தும் பல்வேறு சேவைகள் தொடர்பாக வரும் அலைபேசி அழைப்புகள் ஆங்கிலத்திலும், சில நேரம் ஹிந்தியிலும் மட்டுமே இருக்கின்றன.. நான் தொடர்ச்சியாக அவர்களிடம் ஆங்கிலத்தில் உரையாடுவதைத் தவிரித்து, தமிழ் மட்டுமே தெரியும் என்று சொல்லுவது வழக்கம். காரணம், நுகர்வோரின் தாய்மொழி என்னவென்று தெரியாமல் ஏன் நிறுவனங்கள் இவ்வாறு செயல்பட வேண்டும் என்பது. மற்றொரு காரணம், தமிழில் மட்டுமே உரையாடும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்தால் மட்டுமே, ஏராளமான தமிழ் பேசும் இளைஞர்களுக்கு வேலை கிடைக்கும்..

twitter.com/writernaayon

உன்னைப்போலவே ஒருத்தி கடந்து செல்கிறாள். இம்முறை அந்தத் தவற்றைச் செய்யமாட்டேன்!

p120c_1515578921.jpg

twitter.com/Kannan_Twitz

தன்னை எதிர் நோக்கி வரும் பெண்ணைக் கண்டுகொள்ளாத மாதிரியும் கடக்க வேண்டும், அதே சமயம் கடப்பதற்குள் ஒரு முறையேனும் பார்த்துவிட வேண்டும். #உத்தமன்

twitter.com/CreativeTwitz

தமிழகத்தில் கடும் நிதி நெருக்கடி இருந்தாலும் வேட்டி, சேலை ஏழைகளுக்குத் தொடர்ந்து வழங்கப்படுகின்றன - ஜெயக்குமார் // என்னது வேட்டியா, அப்ப அது இட்லித் துணி இல்லையா?!

twitter.com/HAJAMYDEENNKS

இன்ஜினீயரிங் காலேஜ்ல படிச்சிட்டு சும்மா இருப்பது எப்படின்னு ஒரு கோர்ஸ் சொல்லிக்கொடுக்கலாம், படித்து முடித்ததும் உதவும்...!

https://www.vikatan.com

Link to comment
Share on other sites

விண்­வெ­ளியில் தனது உயரம் 9 சென்­ரி­மீற்றர் அதி­க­ரித்­து­விட்­டதால் மீண்டும் பூமிக்குத் திரும்­பு­வ­தற்கு சிரமம் ஏற்­ப­டலாம் எனக் கூறிய ஜப்­பா­னிய விண்­வெளி வீரர்; பொய்­யான தகவல் என ஒப்­புக்­கொண்­ட­துடன் மன்­னிப்பும் கோரினார்

சர்­வ­தேச விண்­வெளி நிலை­யத்­துக்குச் சென்ற பின்னர் தனது உயரம் வெகு­வாக அதி­க­ரித்­து­விட்­டதால் மீண்டும் பூமிக்குத் திரும்­பு­வ­தற்கு சிர­மப்­பட நேரி­டலாம் எனக் கூறிய ஜப்­பா­னிய விண்­வெளி வீரர் ஒருவர், இத்­த­கவல் தவ­றா­னது என ஒப்­புக்­கொண்­டுள்­ள­துடன், மன்­னிப்பும் கோரி­யுள்ளார்.

Japan.jpg
ஜப்­பா­னிய விண்­வெளி வீர­ரான நோரிஷிஜ் கனாய் (54), கடந்த டிசெம்பர் மாதம் சர்­வ­தேச விண்­வெளி நிலை­யத்­துக்குச் சென்றார்.
அமெ­ரிக்க விண்­வெளி வீரர் ஸ்கொட் டிங்கிள், ரஷ்ய விண்­வெளி வீரர் அன்டன் ஷ்கப்­லெரோவ் ஆகி­யோ­ருடன் ஜப்­பானின் நோரிஷிஜ் கனாய் கடந்த டிசெம்பர் மாதம் கஸ­கஸ்­தா­னி­லி­ருந்து ரஷ்­யாவின் சோயுஸ் விண்­வெளி ஓடத்தின் மூலம் சர்­வ­தேச விண்­வெளி நிலை­யத்­துக்குச் சென்­றனர்.

6 மாத காலம் இவர்கள் சர்­வ­தேச விண்­வெளி நிலை­யத்தில் தங்­கி­யி­ருப்பர். இந்­நி­லையில், சர்­வ­தேவ விண்­வெளி நிலை­யத்­துக்கு வந்­த­வுடன் தனது உயரம் திடீ­ரென அதி­க­ரித்­து­விட்­ட­தாக ஜப்பானிய விண்­வெளி வீர­ரான நோரிஷிஜ் கனாய் கடந்த திங்­கட்­கி­ழமை தெரி­வித்தார்.

Japan1.jpg
“சர்­வ­தேச விண்­வெளி நிலை­யத்தில் எனது உய­ரம் அளக்­கப்­பட்­டது. 3 வாரங்­க­ளுக்குள் எனது உயரம் 9 சென்­ரி­மீற்றர் (3.5 அங்­குலம்) அதி­க­ரித்­து­விட்­டது. பாட­சாலைக் காலத்தில் தவிர இத்­த­கைய வளர்ச்­சியை நான் உணர்ந்­த­தில்லை.

(6 மாதங்­களின் பின்) பூமிக்குத் திரும்­பு­வ­தற்கு முயற்­சிக்கும் போது, சோயுஸ் விண் ஓடத்தில் உடலை திணிக்க முடி­யாமல் போகலாம் என சற்று கவ­லை­ய­டை­கிறேன்” என நோரிஷிஜ் கனாய் டுவிட்டர் மூலம் தெரி­வித்தார்.

kanai.jpg
விண்­வெ­ளியில் புவி­யீர்ப்பு அற்ற நிலை கார­ண­மாக விண்­வெளி வீரர்­களின் முது­கெ­லும்பு நீட்­சி­ய­டை­வதால் அவர்­களின் உயரம் 2 சென்­ரி­மீற்றர் வரை அதி­க­ரிப்­ப­தா­கவும் ஆனால், பூமிக்குத் திரும்­பி­ய­வுடன் அந்த உயர அதி­க­ரிப்பு மறைந்­து­விடும் எனவும் விஞ்­ஞா­னிகள் தெரி­வித்­துள்­ளமை குறிப்­பி­டத்­தக்­கது.

இந்­நி­லையில், நோரிஷிஜ் கனாய் தனது உயரம் 9 சென்­ரி­மீற்­றர்கள் அதி­க­ரித்­துள்­ள­தாக கூறி­யதால் இது தொடர்­பான செய்­திகள் உலகின் பல நாடு­களின் ஊட­கங்­களில் வெளி­யா­கின. ஆனால், தனது உயரம் 9 சென்­றி­மீற்றர் அதி­க­ரித்­து­விட்­டது என தான் கூறி­யமை தவ­றா­னது என நேற்று முன்­தினம் அவர் ஒப்­பு­க்­கொண்டார்.

“பிழையான அளவீடு பெரும் விவகாரமாகி விட்டது. இந்த பொய்யான செய்திக்கு நான் மன்னிப்பு கோர வேண்டும்” என நோரிஷிஜ் கனாய் தெரிவித்துள்ளார். மேற்படி தவறான அளவீடு எவ்வாறு இடம்பெற்றது என்பது குறித்து அவர் விபரிக்கவில்லை.

http://metronews.lk

Link to comment
Share on other sites

‘உலகை வென்ற மனிதன்’
 

image_a5adb6c26d.jpgதேவையற்ற ஆசைகளைத் துறக்கச் செய்வதே உன்னதமான ஆன்மீகம். ஆன்மாவின் வலுவை ஆன்மீக ஈர்ப்பு வரவேற்கின்றது. 

ஆனால், முறையற்ற ஆசைகளை நிறைவேற்ற ஆன்மீகத்தை ஒரு கருவியாகக் கருதினாலே அது ஆபத்தாக முடியும். 

நியாயமான முறையில் எவரும் பொருளீட்டலாம். ஆனால் அறிவு, கல்வியில் உயர்நிலையில் உள்ளவர்களில் சிலர் ஆன்மாவைத் தூய்மைப்படுத்தும் விடயத்தில் மனம்போனபடி, வாழ்வை மேற்கொண்டு, தங்களைத் தாங்களே வீழ்த்திக் கொள்வது அபத்தம். பிறர் துன்பங்களைத் துடைப்பவனே ஆன்மீகவாதி. 

 சேமித்தல் என்பது தூயநோக்கத்துடன் ஆற்றும் பணிகள்தான். வாழப்பிறந்த மனிதன், வாழ்க்கைப் பயணத்தில் வரும் இடையூறுகளுக்காகத் தனது பிறவியின் நோக்கத்தை நோகடிக்கவியலாது.  

வாழும் நல்மார்க்கத்தைத் தௌந்தவனே உலகை வென்ற மனிதன்.  

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.