Jump to content

இளமை புதுமை பல்சுவை


Recommended Posts

மருத்துவமனையில் திருமணம்...காதலியை கரம்பிடித்த கேன்சர் நோயாளி!

 

இங்கிலாந்தில் கேன்சர் நோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ரே கெர்ஷா தனது காதலியை மருத்துவமனையிலேயே மணம்முடித்துள்ளார்.

மணம்

இங்கிலாந்தில் வசிக்கும் ரே கெர்ஷா மற்றும் ட்ரேசி புரூக்ஸ் இருவரும் அடுத்த வருடம் திருமணம் செய்துகொள்வதாக முடிவு செய்திருந்தனர். இதனிடையே கடந்த மார்ச் மாதம் ரே கெர்ஷா கேன்சர் நோயால் பாதிக்கப்பட்டார். இதையடுத்து ஸ்பிரிங் ஹில் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். மேலும், கேன்சர் நோயால் பாதிக்கப்பட்ட அவர் சில நாள்கள் மட்டுமே உயிர் வாழ்வார் என தெரிவிக்கப்பட்டது.

 

இந்நிலையில், இருவரும் திருமணம் செய்து கொள்வதாக முடிவு செய்யப்பட்டது. 24 மணி நேரங்களில் திருமணத்துக்குத் தேவையான அனைத்தும் வரவழைக்கப்பட்டது. இதில் மிக முக்கியமாக பல தன்னார்வலர்களும் 'கிப்ட் ஆப் வெட்டிங்' என்ற அமைப்பும் இணைந்து பணியாற்றியுள்ளன. பலர் தாமாக முன்வந்து திருமணத்துக்குத் தேவையான பொருள்களை வழங்கியுள்ளனர். இதையடுத்து தனது காதலியின் விரலில் ரே மோதிரத்தை அணிவித்தார். மருத்துவமனை ஊழியர்கள், மணமக்களின் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் சூழ இத்திருமணம் நடந்துள்ளது. இன்னும் சில நாள்களே இணைந்து வாழும் இத்தம்பதிக்கு சமூகவலைதளங்களில் வாழ்த்துகள் குவிகிறது.

http://www.vikatan.com/

Link to comment
Share on other sites

  • Replies 11.3k
  • Created
  • Last Reply
‘இது ஒன்றும் புதுமையும் அல்ல’

image_3301de01af.jpgஓர் அடர்ந்த காடு; காட்டை ஊடறுத்து அகன்ற நெடுஞ்சாலை; இளைஞர் ஒருவர் தனது மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருக்கின்றார். சற்றுநேரத்தில் சிங்கங்களின் கூட்டம் ஒன்று சாலையின் குறுக்கே சென்று, அடுத்த பக்கமாய் போய்க் கொண்டிருந்தது. 

மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த இளைஞர், புன்முறுவலுடன் வண்டியை நிறுத்தித் திரும்பிப் பார்க்கின்றார். எல்லாச் சிங்கங்களும் சென்ற பின்பு, தனது பயணத்தைத் தொடர்கின்றார். 

திரைப்படத்தில் வரும் இக்காட்சி நிஜமானது. வர்ணனையாளர் சொல்கின்றார், “இங்குள்ள மக்கள், விலங்குகளின் வாழ்வுடன் தங்களையும் இணைத்துக் கொண்டுவிட்டார்கள். இது ஒன்றும் புதுமையும் அல்ல. 

விலங்குகளுக்கான உணவு காடுகளில் இருப்பதனால், அவை ஊர் மனைகளில் நுழையமாட்டாது. இதுவே உண்மை. காடுகளை அழிப்பதனால்தான் பிரச்சினைகள் உருவாகும்.  

Link to comment
Share on other sites

கைகொடுத்த ட்ரம்ப்... தட்டிவிட்ட மனைவி... வைரல் வீடியோ!

 
 

இஸ்ரேல் விமான நிலையத்தில், அமெரிக்க அதிபர் ட்ரம்ப், தன் மனைவி மெலானியா ட்ரம்ப்புக்கு கைகொடுத்தபோது, அவர் ‘ரியாக்ட்’ செய்த விதம், வைரல் வீடியோவாகப் பரவிவருகிறது.

ட்ரம்ப்


அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், தன் வெளிநாட்டு சுற்றுப்பயணத்தை மேற்கொண்டுவருகிறார். நேற்று இஸ்ரேல் நாட்டுக்கு ட்ரம்ப் தன் மனைவி மெலானியாவுடன் வந்திறங்கினார். அப்போது விமானத்தில் தரையிறங்கியதிலிருந்தே, மனைவியைக் கண்டுகொள்ளாத ட்ரம்ப், மீடியா கூட்டம் அருகில் வந்தவுடன் வேகமாகத் தன் மனைவிக்குக் கைகொடுக்க முயன்றார். ஆனால், அதை உடனே தவிர்த்து, ட்ரம்ப்பின் கையைத் தட்டிவிட்டார், மெலானியா. 

 
89920_thumb.jpg


தற்போது, சமூக வலைதளங்களில் கடும் விமர்சனங்களுடன் வைரலாகப் பரவிவருகிறது இந்த வீடியோ. ட்ரம்ப் பதவியேற்ற நாளிலிருந்தே, அவரது நடவடிக்கைகளும் அவரது மனைவி மெலானியாவின் நடவடிக்கைகளும் ஒபாமா தம்பதிகளுடன் ஒப்பிட்டு விமர்சனங்கள் எழுந்துவந்த வண்ணம் உள்ளன. 'இந்த முறையும் ஒபாமா தன் மனைவி மிச்சேல் ஒபாமாவை எவ்வாறு மரியாதையுடன் நடத்துகிறார்' என்ற வீடியோ, சரமாரியாகப் பரவிவருகிறது.


ட்ரம்ப்-மெலானியா ட்ரம்ப்பைப் பொறுத்தவரை இந்த மாதிரியான சம்பவங்கள் தொடர்ந்த வண்ணம் உள்ளன. மேலும், ட்ரம்ப் பதவியேற்ற நாளிலிருந்து, மெலானியா ட்ரம்ப் வெள்ளை மாளிகையில் வந்து தங்கவே இல்லை. தன்னுடைய நியூயார்க் இல்லத்திலேயே வசித்துவருகிறார். அமெரிக்க ஊடகங்கள், இதுகுறித்து பல யூகங்களை வெளியிட்டுவருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
 

 

 

Link to comment
Share on other sites

பாம்பு, முயல், மந்திரி..! குருவின் வார்த்தைகளில் உண்மை உணர்ந்த சைதன்யன் கதை!

 

சைதன்யன்! நாமதேவரின் குருகுலத்தின் மிகச் சிறந்த மாணவன் அதிபுத்திசாலி. மற்ற மாணவர்களைவிட குரு அவனை அதிகம் நேசிப்பார். நாமதேவர் தனக்குத் தெரிந்த வித்தைகள் அனைத்தையும் சைதன்யனுக்கு பயிற்றுவித்திருந்தார். சைதன்யனுக்கு18 வயது ஆனதும் குரு அவனை அழைத்தார்.

சைதன்யா "நீ தெரிந்துகொள்ள வேண்டிய அத்தனை வித்தைகளையும் கற்றுக் கொண்டாய். இனிமேல் நீ இங்கிருக்க வேண்டிய தேவை இல்லை. எனவே உன்னை பெற்றெடுத்த தாய் தந்தையரிடம் சென்று அவர்களுக்கு பணிவிடை செய்! உன்னுடைய வாழ்வில் கடவுள் எப்போதும் உனக்குத் துணை இருப்பார்'' என்று சொல்லி ஆசீர்வதித்தார்.

சைதன்யன்

சைதன்யனும் குருவின் பாதத்தில் விழுந்து வணங்குகிறான். பின்னர் குருவிடம்,"குருவே, நீங்கள் எனக்கு கற்றுக் கொடுக்கவேண்டிய வித்தை ஒன்று மீதமிருக்கிறது" என்றான். குரு,'என்ன வித்தை அது?' என்று அதிர்ச்சியுடன் கேட்டார் . 'ஆம். குருவே, எத்தனையோ வித்தைகளைக் கற்றுக் கொடுத்த நீங்கள் கடவுளைக் காணும் வித்தையை மட்டும் எனக்குக் கற்றுக் கொடுக்கவில்லையே' என்றான்.

இதைக் கேட்டதும் மெல்லப் புன்னைகைத்தபடியே, "உன்னுடைய சந்தேகத்துக்கு இப்போது என்னால் விடை அளிக்க முடியாது. இப்போது நீ எனக்கு ஒரு உதவி செய்ய வேண்டும்" என்கிறார் நாமதேவர்.

''என்ன குருவே, நீங்கள் என்ன சொன்னாலும், உடனே நிறைவேற்றத் தயாராக இருக்கிறேன்" என்கிறான் சைதன்யன்.

நாமதேவரோ, "வடக்குத் திசையில் ஒரு வனம் உள்ளது. அதைக் கடந்ததும் பவானிபுரம் என்று ஒரு இடம் உள்ளது. அங்கு சென்று என் சகோதரனைச் சந்தித்து நலம் விசாரித்து வா" என்கிறார்.

அடுத்த நாளே குருவின் மனைவி அளித்த உணவோடு, குருவின் சகோதரனைக் காண புறப்பட்டான் சைதன்யன்.

காட்டு வழியே பாதி தூரம் சென்றதும், மிகுந்த தாகம் எடுத்தது சைதன்யனுக்கு.

காட்டில் தண்ணீர் எங்கே இருக்கிறது என்று தேடத் தொடங்கினான். சரியாக, அந்த நேரத்தில் வயது முதிர்ந்த பார்வையிழந்த மனிதன் காட்டில் எதோ இலைகளை முகர்ந்துப் பார்த்து பறித்துக் கொண்டிருந்தான்.

அவன் அருகில் சென்ற சைதன்யன் , "ஐயா எனக்கு மிகுந்த தாகமாக உள்ளது. இங்கே குடிப்பதற்கு தண்ணீர் எங்கே கிடைக்கும்? என்று வினவினான். அருகில் ஒரு கிணறு இருக்கிறது என்று கூறினார். அந்த பார்வையற்ற முதியவர். அதோடு நில்லாமல், "பாம்புக் கடிக்கான மூலிகை பறிக்கவே நான் இங்கு வந்தேன், நீயும் காட்டு வழியே பயணிக்கிறாய். உனக்கும் தேவைப்படும்" என்று சில மூலிகைகளையும் அவனுக்குத் தருகிறார்.

குரு

அதை வாங்கிக் கொண்டு முதியவர் சொன்ன கிணற்றுக்குச் சென்று தண்ணீர் குடித்து தன் தாகம் போக்குகிறான். மேலும் தான் கொண்டு வந்திருந்த உணவையும் சாப்பிட்டுவிட்டு வந்த களைப்பில், அங்கேயே உறங்கி விடுகிறான்.

அயர்ந்து தூங்கிக் கொண்டிருக்கும்போது அவன் மீது எதோ இடிப்பது போல் உணரவே கண்விழிக்கிறான் சைதன்யன். அப்போது ஒரு முயல் ஒன்று வேகமாக ஓடிக் கொண்டிருந்தது. அதே நேரம் மரத்தில் எதோ சத்தம் கேட்கவே மேலே பார்க்கிறான். பெரிய கிளை ஒன்று முறிந்து கீழே விழுவதற்குத் தயாராக இருந்தது. கண நேரத்தில் விலகி உயிர்த் தப்பினான் சைதன்யன்.

மீண்டும் தன் பயணத்தைத் தொடர்ந்தான் சைதன்யன். சரியாக இருட்டும் நேரத்தில் சுசாந்தம் என்னும் நகரை அடைந்தான். அங்கே உணவில்லாமல் பசியால் வாடிய ஒரு குடும்பத்தைக் கண்டான். தன்னிடம் மீதமிருந்த உணவை அவர்களுக்குத் தானம் செய்தான். அப்படியே அங்கே ஒரு சத்திரத்தில் இரவு தங்கினான்.

சத்திரத்தில் உறங்கிக் கொண்டிருக்கும்போது சரியாக நள்ளிரவில் ஒரு அலறல் சத்தம் கேட்டு கண்விழித்தான். அப்போது சத்திரத்தில் முதியவர் ஒருவரை பாம்பு கடித்துவிட, இரவு நேரத்தில் என்ன செய்வது என்பதையறியாமல் அங்குள்ள அனைவரும் தவிப்பதைக் கண்டான்.

உடனே தன்னிடம் இருந்த மூலிகையைக் கொண்டு அவரது உயிரைக் காப்பாற்றினான். உயிர் பெற்று எழுந்தவர் வேறு யாரும் அல்ல. மாறுவேடத்தில் குடிமக்களின் நிலையை அறிய வந்த மந்திரி.

சைதன்யனுக்கு தன் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்தார் மந்திரி. மேலும் சைதன்யனிடம் "என் உயிரைக் காப்பாற்றிய உனக்கு நான் எதாவது கைம்மாறு செய்யவேண்டும். நீ என்னுடன் வந்துவிடு அரசரிடம் சொல்லி உனக்கு ஒரு வேலை வாங்கித் தருகிறேன்'' என்கிறார்.

உடனே சைதயன் நான் நிறைவேற்ற வேண்டிய கடமை ஒன்று மீதம் இருக்கிறது. அது முடிந்ததும் நானே உங்களை வந்து சந்திக்கிறேன் என்று கூறி அங்கிருந்து விடை பெறுகிறான்.

மறுநாள் பவானிபுரத்தை அடைந்து குருவின் சகோதரரைக் கண்டு நலம் விசாரித்து அறிந்துகொள்கிறான். பின்னர் அங்கிருந்து விடைபெற்று குருகுலத்துக்கே திரும்புகிறான். குருவிடம் அவர் சகோதரரின் நலம் பற்றியும் செல்லும் வழியில் தனக்கு நிகழ்ந்த நிகழ்வுகள் பற்றியும் பிரமிப்போடு கூறுகிறான்.

சரி ஏற்கெனவே நான் கூறியது போல் நீ வீட்டுக்குச் சென்று உன் பெற்றோருக்குத் தொண்டு செய்யக் கிளம்பு என்கிறார் குருதேவர்.

குருவே, நான் அன்றே கேட்டது போல் கடவுளைப் பார்க்கும் வித்தையைக் கற்றுக் கொண்டு இங்கிருந்து கிளம்புகிறேன் " என்கிறான் சைதன்யன்.

உடனே குருவோ, ''நீதான் கடவுளைக் கண்டு விட்டாயே'' என்கிறார்.

''நான் எங்கே கடவுளைக் கண்டேன்'' என்று பரிதாபத்தோடு கேட்டான் சைதன்யன்.

கோயில்

மகனே, "கடவுளுக்கு தனித்த உருவம் கிடையாது. ஆனால், அனைத்து உருவிலும் கடவுள் இருக்கிறார். உனக்கு தாகம் எடுத்த நேரம் பார்த்து கிணற்றின் பாதையைச் சொன்ன முதியவர் உனக்குக் கடவுள்!. யாருக்காவது தேவைப்படும் என்று நடுக்காட்டில் கிணறு தோண்டியிருக்கிறானே அவன் கடவுள்! கணநேரத்தில் போக வேண்டிய உன் உயிரைக் காப்பாற்றிய அந்த முயல் கடவுள்! பாம்புக் கடியிலிருந்து நீ ஒருவனைக் காப்பாற்றினாயே அவனுக்கு நீதான் கடவுள்! என்கிறார்.

குருவின் வார்த்தைகளில் இருந்த உண்மையைப் புரிந்துகொண்டான் சைதன்யன். அவரின் காலில் விழுந்து வணங்கி விடை பெற்றான்.

 

தன் பெற்றோரைச் சந்தித்தான். பின்பு, அவர்களை அழைத்துக் கொண்டு மந்திரியைச் சந்தித்தான். அவர் கூறியது போலவே அரசாங்க வேலை கொடுத்து உதவினார். தன் குடும்பத்துடன் மிகுந்த மகிழ்ச்சியோடு வாழ்ந்தான்.

http://www.vikatan.com

Link to comment
Share on other sites

தாவரங்களிலிருந்து உருவாக்கப்பட்ட பேட்டரி கார்

உலகிலேயே முற்றிலும் மறுசுழற்சி செய்ய ஏற்றத்தக்க முதல் கார் இதுதான் என கண்டுபிடிப்பாளர்கள் தெரிவிக்கின்றனர். இது ஒருமணி நேரத்திற்கு 80 கி.மீ., வேகத்தில் செல்லக்கூடியது. மூன்று பேட்டரிகள் இதில் உள்ளன. இதனை வைத்து 100 கி.மீ., வரை செல்லலாம்.

Link to comment
Share on other sites

பார் ஃபேபியன் லாகெர்விஸ்ட் 10

 

 
pity_3167266f.jpg
 
 
 

நோபல் பரிசு பெற்ற ஸ்வீடன் இலக்கியவாதி

ஸ்வீடனைச் சேர்ந்த புகழ்பெற்ற படைப்பாளியும் இலக்கியத்துக்கான நோபல் பரிசை வென்றவருமான பார் ஃபேபியன் லாகெர்விஸ்ட் (Par Fabian Lagerkvist) பிறந்த தினம் இன்று (மே 23). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:

* ஸ்வீடனில் ஸ்மாலாந்து என்ற இடத்தில் பிறந்தார் (1891). ஆழ்ந்த மத நம்பிக்கை கொண்ட குடும்பம் என்பதால், ஆரம்பத்தில் பாரம்பரிய மதக் கல்வி இவருக்கு வழங்கப்பட்டது. பள்ளிப் படிப்புக்குப் பிறகு உபாசலா பல்கலைக்கழகத்தில் சேர்ந்து பயின்றார். பின்னர், பாரீஸ் சென்ற இவர், பாப்லோ பிகாசோவின் படைப்புகளால் கவரப்பட்டு மத்திய காலக் கலைகளைப் பயின்றார்.

* 1930 வரை பிரான்சிலும் இத்தாலியிலும் வாழ்ந்தார். இந்திய, சீன இலக்கியங்கள் பயின்றார். உலகப் புகழ்பெற்ற பல படைப்புகளை ஆர்வத்துடன் வாசித்தார்.

* 14 வயதிலேயே உள்ளூர் பத்திரிகைகளுக்கு கட்டுரைகள், கடிதங்கள் எழுதினார். ‘ஃபிரம்’, ‘ஸ்டாக்லோகன்’ உள்ளிட்ட பல சமூக ஜனநாயக இதழ்களில் நிறைய எழுதினார். 1909-ம் ஆண்டில் மட்டும் 13 கவிதைகளை எழுதி வெளியிட்டார். தொடர்ந்து மேலும் 7 கவிதைகள் வெளிவந்தன.

* 1916-ல் இவரது முதல் கவிதைத் தொகுதி வெளியிடப்பட்டது. நன்மை மற்றும் தீமை குறித்த அடிப்படைக் கேள்விகள் இவரது படைப்புகளின் அடிநாதமாக விளங்கின. உலகப் போர்களில் இவர் சந்தித்த, கேள்விப்பட்ட மரணங்கள், அவலங்கள் ஆகியவை இவரது எழுத்துக்களில் பிரதிபலித்தன.

* பெரிதாக எந்தக் காரணமுமே இல்லாமல் ஒரு யுத்தம் லட்சக்கணக்கான மக்களைக் கொன்று குவிக்கும் நிலையில் இந்த உலகில் ஒரு மனிதன் எவ்வாறு அர்த்தமுள்ள வாழ்க்கையை வாழ முடியும் என்று தனது படைப்புகள் மூலம் இவர் கேள்வி எழுப்பினார்.

* ‘காட்ஸ் தாட்’ என்ற முதல் நாவலை 1912-ல் வெளியிட்டார். ‘தி ஹாங்மான்’ என்ற நாவல் பின்னாளில் நாடகமாக அரங்கேற்றப்பட்டது. 1944-ல் வெளிவந்த இவரது ‘ட்வார்கென்’ (ட்வார்ஃப்) என்ற நாவல் மிகவும் பாராட்டப்பட்டது.

* அடுத்து இவர் எழுதிய ‘பராபஸ்’ (Barabbas) என்ற நாவல் சிறந்த இலக்கியப் படைப்பாகக் கருதப்பட்டது. பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு உலகம் முழுவதும் பிரபலமடைந்தது. இது 1961-ல் திரைப்படமாகத் தயாரிக்கப்பட்டது. தொடர்ந்து சிறுகதைகள், நாவல்கள், நாடகங்கள் என ஏராளமாக எழுதினார். பத்திரிகைகளில் இலக்கிய விமர்சனக் கட்டுரைகளும் எழுதி வந்தார்.

* இவரது படைப்புகளில், ‘மோடிவ்’, ‘ஆங்கெஸ்ட்’, ‘காவோஸ்’, ‘தி எட்டனர்ல் ஸ்மைல்’, ‘கஸ்ட் ஆஃப் ரியாலிட்டி’ உள்ளிட்ட நாவல்கள், ‘தி லாஸ்ட் மேன்’, ‘தி டிஃபிகல்ட் ஹவர்’ உள்ளிட்ட நாடகங்கள், ‘தி மேரேஜ் ஃபீஸ்ட்’ உள்ளிட்ட சிறுகதைத் தொகுப்புகள் குறிப்பிடத்தக்கவை. ‘கெஸ்ட் ஆஃப் ரியாலிட்டி’ இவரது சுயசரிதை நூல்.

* 1951-ம் ஆண்டில் இலக்கியத்துக்கான நோபல் பரிசு இவருக்கு வழங்கப்பட்டது. கவிதைகள், நாவல்கள், நாடகங்கள், சிறுகதைகள், கட்டுரைகள் என இலக்கியத்தின் அத்தனை களங்களிலும் முத்திரை பதித்தார்.

* ஏறக்குறைய 50 ஆண்டுக்காலம் ஸ்வீடன் நாட்டு இலக்கியத் துக்குப் பல விதங்களிலும் மகத்தான பங்களிப்பை வழங்கிய பார் ஃபேபியன் லாகெர்விஸ்ட் 1974-ம் ஆண்டு 83-வது வயதில் மறைந்தார்.

http://tamil.thehindu.com

Link to comment
Share on other sites

நெஞ்சை மயக்கும் நெருப்பாறு

ஹவாயிலுள்ள புலமா பாலி சரிவில் உருகி ஓடும் கொதிநிலையில் இருக்கும் எரிமலைக்குழம்பு இது.


உலகின் மிகவும் கொந்தளிப்பான எரிமலையான கீலவேயா எரிமலையில் இருந்து இது வழிந்தோடி வருகிறது.


1983ஆம் ஆண்டு முதலே கீலவேயா எரிமலை இப்படி எரிமலைக்குழம்பை கக்கிக்கொண்டிருக்கிறது.


பூமியில் தொடர்ச்சியாக நீண்டகாலம் நீடிக்கும் எரிமலை வெடிப்பாக இது பார்க்கப்படுகிறது.


இந்த எரிமலைக்குழம்பு 6.4 கிலோமீட்டர் தொலைவு பயணித்து இறுதியில் கடலில் கலக்கிறது.

Link to comment
Share on other sites

வரலாற்றில் இன்று: மே 24
 
ethiopia.jpg1798: பிரித்தானிய ஆட்சிக்கு எதிராக அயர்லாந்தில் கிளரச்சி ஆரம்பித்தது.
 
1832: முதலாவது கிறீஸ் இராஜ்ஜியம் லண்டன் மாநாட்டில் பிரகடனப்படுத்தப்பட்டது.
 
1844: சாமுவேல் மோர்ஸ் முதலாவது டெலிகிராவ் தகவலை அமெரிக்காவின் பழைய உயர் நீதிமன்ற கட்டிடத்திலிருந்து அமெரிக்க தலைநகரிலுள்ள தனது உதவியாளர் அல்பிரட் வெய்லுக்கு அனுப்பினார்.
 
1948: அரபு - இஸ்ரேல் யுத்தத்தில் இஸ்ரேலின் கிப்புட்ஸ் நகரை எகிப்து கைப்பற்றியது.
 
1976: முதலாவது கொன்கோர்ட் விமான சேவை  லண்டனிலிருந்து வாஷிங்டனுக்கு ஆரம்பிக்கப்பட்டது.
 
1980: ஈரானில் பணயக் கைதிகளாக வைக்கப்பட்டிருந்த அமெரிக்கர்களை விடுவிக்குமாறு சர்வதேச நீதிமன்றம் கோரியது. எனினும் அடுத்த ஜனவரி வரை அக்கைதிகள் விடுவிக்கப்படவில்லை.
 
1991: எத்தியோப்பியாவிடமிருந்து எரித்திரியா சுதந்திரம் பெற்றது.
 
1991: எத்தியோப்பியாவிலுள்ள யூதர்களை வெளியேற்றுவதற்கான நடவடிக்கையை இஸ்ரேல் ஆரம்பித்தது.
 
1994: 1993 ஆம் அண்டின் உலக வர்த்தக நிலைய குண்டுத்தாக்குதலில் குற்றவாளிகளாக காணப்பட்ட நால்வருக்கு 240 வருடகால சிறைத்தண்டனை அனுபவிக்கப்பட்டது.
 
2000: தென் லெபனானிலிருந்து 22 வருடங்களின்பின் இஸ்ரேலிய படைகள் வெளியேறின.
 
2001: 15 வயதான ஷேர்ப்பா டெம்பா டிஷேரி எவரெஸ்ட் சிகரத்தில் ஏறிய மிக இளமையான நபர் எனும் சாதனைக்குரியவரானார்.
 
2002: அமெரிக்காவும் ரஷ்யாவும் மொஸ்கோ உடன்படிக்கையில் கையெழுத்திட்டன.

2006: விக்கிமேப்பியா ஆரம்பிக்கப்பட்டது.

2007: யாழ்ப்பாணத்தின் நெடுந்தீவில் இலங்கைக் கடற்படைத்தளத்தைக் கடற்புலிகள் தாக்கியளித்தனர்.

2007: கொழும்பில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் இரண்டு இராணுவத்தினர் உயிரிழந்து நால்வர் காயமடைந்தனர்.

http://www.tamilmirror.lk

Link to comment
Share on other sites

'தவறான எண்ணங்களை விடவும், குழப்பம் நல்லது!' #WednesdayWisdom

 
 

குழப்பம்

"வாழ்க்கையில் மிக முக்கியமான தருணம், இரண்டு வழிகள் உங்களுக்கு எதிரே தெரிகின்றன. இரண்டில் எதில் செல்வது என்ற தெளிவான முடிவில்லை. குழப்பம் உங்களை சூழ்ந்திருக்கிறது. ஏதேதோ கணக்கிட்டு ஒரு பாதையில் செல்கிறீர்கள். அந்த வழியில் சிறிது தூரம் சென்ற பின் சின்ன வளைவு இருக்கிறது. இன்னும் கொஞ்ச தூரம் சென்றதும் இன்னொரு வளைவு இருக்கிறது. இப்படியே ஏகப்பட்ட வளைவுகள் அதிலெல்லாம் திரும்பி, திரும்பி தொடங்கின இடத்துக்கே வந்து சேர்கிறீர்கள்.

இப்போது நீங்கள் தொடங்கிய இடத்தில் இன்னொரு வழி புதிதாக முளைத்திருக்கிறது. ஆக, திரும்பவும் உங்களுக்கு இரண்டு வழிகள். புதிய வழியில் செல்ல முடிவெடுக்கிறீர்கள். அது முடிவற்று சென்றுகொண்டேயிருக்கிறது. நீங்கள் செல்ல வேண்டியது என நினைத்திருக்கும் இடம் வருவதற்கான அறிகுறியே தெரியவில்லை. திரும்பிச் சென்றுவிடலாமா என்று யோசிக்கிறீர்கள். இன்னும் சிறிது தூரம் செல்வோம் எனத் தொடர்கிறீர்கள். நீங்கள் சென்று சேர்ந்திருக்கும் இடம், கனவிலும் திட்டமிடாதது. உங்களின் குணங்களுக்கு கொஞ்சம் ஒத்துவராத சூழல். அப்போது நீங்கள் என்ன செய்வீர்கள்?"

இது கூட்டம் ஒன்றில் பேச்சாளர் பேசியது. அவரின் கேள்விக்கு யாரும் பதில் சொல்லவில்லை. கூட்டத்தில் கலந்துகொண்டவர்களில் சிலருக்கு புரியவில்லை. இன்னும் சிலருக்கு புரிந்ததைப் போல இருந்தது.

'குழப்பாக இருக்கிறதா?' எனக் கேட்டார் பேச்சாளர். எல்லோரும் 'ஆமாம்' என்பதுபோல தலையசைத்தனர்.  

'இப்போது நீங்கள் இருந்ததுதான் சரியானது. தனக்கு புரியாத ஒன்றை, புரிந்ததைப் போல அதற்கு பதில் அளிக்காமல் அந்த விஷயத்தில் இன்னும் கொஞ்சம் தெளிவு வருவதற்காக காத்திருந்தீர்களே இதுவே சரியானது. தவறான பாதையைத் தேர்ந்தெடுப்பதற்குப் பதில், அங்கேயே நிற்பதே மேலானது' என்றார் பேச்சாளர்.

தன்னம்பிக்கை

'ஒரே இடத்தில் நிற்பது தேங்குவதற்கு சமம்' என்று ஒருவர் எழுந்து கூறினார். அதற்கு பேச்சாளர்,

"நீங்கள் சொல்வது உண்மைதான். உங்களுக்கு ஒவ்வாத இடத்தைச் சேர்ந்து கரைந்தே போவதற்குப் பதில் தேங்குவது நல்லதுதானே. இது உங்களின் தன்னம்பிக்கையைச் சிதைப்பதற்காக இப்படி சொல்லவில்லை. தவறான வழியில் செல்வதும் ஒரு வகையில் உங்கள் மீது நம்பிக்கை இழக்காமல் செய்வதுதான். தவறான வழியின் பயணம் செய்தவர் முடிவில் தன் மீது மட்டுமல்ல, உலகத்தின் மீதே நம்பிக்கையை இழந்திருப்பார். தன் லட்சியம் புதையுண்டு போனதாக புலம்புவார். அருகில் வாழும் மனிதர்களை நேசிக்காத வாழ்க்கைக்கு தள்ளப்படுவார். அதற்குப் பதில் இரண்டு வழிகள் தொடங்கிய இடத்தில் நிற்பதே நல்லது" என்றார்.

"ஒரே இடத்தில் முடங்கி, மக்கிப் போவதைவிட நகர்ந்துகொண்டிருப்பது நல்லதுதானே" என்று தயக்கத்துடன் கேட்க,

"நிச்சயம் நல்லது. ஒருபோதும் தன்னால் சரியான வழியைக் கண்டுபிடிக்க முடியாது என நினைப்பவருக்கு நிச்சயம் நல்லதுதான்." என்றதும் கூட்டம் அமைதியானது. பின் அவரே தொடர்ந்தார்.

குழப்பங்களே சரியான வழியைத் தேர்ந்தெடுக்கச் செய்யும். குழப்பம் என்பது அருகில் என்ன நடக்கிறது என்பதை அறிந்துகொள்ள முடியாத மயக்கம் அல்ல. அது உரையாடல். தான் செல்ல வேண்டிய வழி எதுவென, தனக்கு இதுவரை தெரிந்த தகவல்களைக் கொண்டு தன்னுடன் நடத்தும் உரையாடல். தன்னிடம் இருக்கும் தகவல்கள் போதவில்லை எனும்போது, சூழலிலிருந்து அவற்றைப் பெறுகிறோம். சூழல் என்பது மனிதர்களாக இருக்கலாம்; இயற்கையாக இருக்கலாம். அதன்பின் நாம் ஒரு வழியைத் தேர்ந்தெடுக்கிறோம். அப்படிச் செல்லும்போது கூடுதல் தகவல் கொண்டவராக புதிய வேகத்தில் நம் பயணம் இருக்கும். இதையே எல்லாவற்றிலும் பொருத்திப் பார்க்கலாம். தவறான எண்ணங்கள், தவறான பழக்கங்கள், தவறான உறவுகள் ஆகியவற்றைவிட குழப்பமே நல்லது" என்றார்.

 

கூட்டத்தில் கலந்துகொண்டவர்களுக்கு குழப்பம் நீங்கியது. தன்னம்பிக்கை என்பது தவறான வழிகளைத் தவிர்ப்பதாலும் கிடைக்கும்.

http://www.vikatan.com

 

Link to comment
Share on other sites

குறைந்த ஆக்ஸிஜன்... நடுங்கும் குளிர்... பனிப்பொழிவு... இமயமலையின் பிள்ளைகள் "ஷெர்பாக்கள்"!

 

கொஞ்சம் மூச்சைப் பொறுமையாக உள் இழுத்துக் கொள்ளுங்கள். அப்படியே இருங்கள்... இன்னும் சில நொடிகள்... இன்னும்... இன்னும் கொஞ்சம்... இப்போது அப்படியே மிக மெதுவாக வெளிவிடுங்கள். அப்படியே சில நொடிகள்... மீண்டும் மெதுவாக இழுங்கள்... இப்படியாக எவ்வளவு நேரம் செய்ய முடிகிறது?... எவ்வளவு கஷ்டமாக இருக்கிறது? இது மாதிரி நூறு மடங்கு கஷ்டமாக இருக்கும், பனி சூழ்ந்த எவரெஸ்ட் மலையின் அடிவாரத்தை நீங்கள் அடையும்போதே. இன்னும் மலையேறத் தொடங்கினால்... தலை சுற்றும்... பத்து கைகள் உங்கள் கழுத்தை நெரிப்பது போல் இருக்கும். கண்கள் வெளி வருவது போல் தோன்றும். குடல்... வாய் வரை வந்து செல்லும். உயிர் இருக்கிறதா என்ற சந்தேகம் வரலாம்... இந்த அறிகுறிகளோடு இருக்கும் ஏ.எம்.எஸ் ( Altitude Medical Sickness ) நிலை மிக சகஜமாக ஏற்படும். இதையெல்லாம், கடந்து நீங்கள் மலையேற வேண்டும். அந்தக் கடுங்குளிரைத் தாங்க வேண்டும். எதிர்வரும் ஆபத்துக்களைக் கடக்க வேண்டும். இதையெல்லாம் கடந்து உயிர் பிழைத்தால், அந்த எவரெஸ்ட் உச்சியை அடையலாம். 

இமயமலைப் பிள்ளைகள் - ஷெர்பாக்கள்(Credits : National Geographic )

மிக சமீபத்தில் " ஐந்தே நாட்களில் எவரெஸ்ட் சிகரத்தில் இரண்டு முறை ஏறி இந்தியப் பெண் அன்ஷு ஜம்சென்பா சாதனை " என்ற செய்தியை மிகச் சாதாரணமான பெட்டிச் செய்தியாகத் தான் கடந்திருப்போம். ஆனால், அந்தப் பெட்டிச் செய்தியில் இடம் பிடிக்க, அன்ஷூ தன் உயிரை அடமானம் வைத்து தான் செய்திருப்பார் என்பது நம்மில் எத்தனைப் பேர் உணர்ந்திருப்போம்?... ஆனால், நம்முடைய இந்தக் கதை அன்ஷூவைப் பற்றியதல்ல... இமயமலையின் பாதுகாவலர்களாகவும், அன்ஷூ போன்ற சாதனையாளர்களின் பாதுகாப்பு அரண்களாகவும், தங்கள் உயிர்களைப் பணயம் வைத்து நமக்கான சாகச அனுபவங்களை வழங்கும், அசாத்திய நாயகர்களான " ஷெர்பா " எனும் மாமனிதர்களைப் பற்றியது. 

" ஷெர்பா " ... இமயமலைப் பகுதிகளில் மலையேறுபவர்களின் போட்டோக்களைப் பார்த்தீர்கள் என்றால், மலையேறுபவர்களின் பின்னே , முதுகில் பெரும் சுமைகளோடும், முகம் முழுக்கப் பெரும் வெடிப்புகளோடும், சிறிய கண்களோடும், அழகான சின்ன சிரிப்போடும் இருப்பவர்கள் தான் ஷெர்பாக்கள். பொதுவாக, ஷெர்பாக்கள் என்றால் இமயமலையின் "சுமை தூக்கிகள்" என்று இமயமலை சென்று வந்தவர்களேக் கூட சொல்வதுண்டு. ஆனால், இதைவிட அவர்களை இழிவுபடுத்திட முடியாது. ஷெர்பாக்கள் சுமை தூக்கிகள் அல்ல... ஷெர்பாக்கள் இமயமலையின் பூர்வகுடிகள். உலகின் மிகச் சிறந்த வரலாற்றை சுமந்து நிற்கும் ஓர் இனம், இன்று உலகம் முழுக்கவே சுமை தூக்கிகளாக மட்டுமே அறியப்படுகிறது. 

வெடித்த முகம், சின்ன சிரிப்போடு ஷெர்பாக்கள்

சமதளங்களில் பல கிமீ தூரங்களை மிகச் சாதாரணமாக ஓடிக் கடக்கும் ஆரோக்கியமான, வலிமையான ஒருவர் இமயமலைப் பகுதிகளில் நடக்கவே சிரமப்படுவார்கள். காலை நடைப்பயிற்சிக்கூட செய்யாதவர்களால், இமயமலைப் பகுதிகளில் எழுந்து நிற்கக் கூட முடியாது. ஆனால், ஷெர்பாக்கள் அந்தக் கடுமையான சூழல்களில் மிகச் சாதாரணமாக சுற்றிச் சுழல்வார்கள். இது மிகவும் ஆச்சர்யமான விஷயம். ஷெர்பாக்களால் மட்டும் இது எப்படி சாத்தியப்படுகிறது என்பதை அறிய இதுவரை பல ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. அதில் முக்கியமாக இரண்டு ஆராய்ச்சிகளைச் சொல்லலாம். 

கடந்த 2013 ஆம் ஆண்டிலிருந்து இதுவரை இரண்டு முக்கிய ஆராய்ச்சிகளை மேற்கொண்டுள்ளனர். பிரபல மொபைல் போன் தொழிலதிபர் ஜான் காடுவெல், உலகின் மிகச் சிறந்த ஆராய்ச்சியாளர்களை ஒன்றிணைத்து, அவர்களுக்குத் தேவையான நிதியுதவியை வழங்கி ஓர் ஆராய்ச்சியை செய்யச் செய்தார். திபெத் பகுதிகளில் மக்கள் தோன்றி சராசரியாக 30 ஆயிரம் ஆண்டுகள் இருக்கும் என்று சொல்லப்படுகிறது. அதேபோல், அங்கு மக்கள் நிரந்தரமாக வசிக்கத் தொடங்கி கிட்டத்தட்ட 9 ஆயிரம் ஆண்டுகள் ஆகியிருக்கும் என்று சொல்லப்படும் நிலையில், ஷெர்பாக்களுக்கு இயல்பிலேயே அந்தச் சூழலுக்கு ஏற்ற உடல்வாகு இருக்கிறது. 

சுமை தூக்கிகள் ஷெர்பாக்கள்(Credits: Extreme Everest/ UCL)

ஆனால், ஷெர்பாக்களை ஆராய்ந்தால் " ஹைபோக்ஸியா " ( Hypoxia ) என்ற ஆக்ஸிஜன் குறைபாடு நிலையில், மருத்துவமனைகளில் இருக்கும் நோயாளிகளுக்கான தீர்வை கண்டுபிடிக்க முடியும் என்று சொல்லப்பட்டது. இந்த இரண்டு ஆராய்ச்சிகளும் ஷெர்பாக்களின் உடற்கூறுகள் குறித்து சில விஷயங்களை உறுதிப்படுத்தியிருக்கின்றன. 

மனித செல்களில் எனர்ஜி உருவாக்கத்துக்கு முக்கியமாக இருப்பது " மைட்டோகாண்ட்ரியா " ( Mitochondria ). ஷெர்பாக்களின் மைட்டோகாண்ட்ரியாக்கள் , குறைந்தளவிலான ஆக்ஸிஜனைக் கொண்டே அதிக எனர்ஜியை உற்பத்தி செய்கிறது. மேலும், ஷெர்பாக்களின் நாவின் கீழ் இருக்கும் ரத்த நாளங்கள் உட்பட பல சிறிய ரத்த நாளங்களை ஆராய்ந்தபோது, சாதாரண மனிதர்களைக் காட்டிலும் அந்தப் பகுதிகளில் கூட அவர்களுக்கு சீரான ரத்த ஓட்டம் இருக்கிறது. அதாவது, உடலின் எல்லாப் பகுதிகளுக்கு எந்தவித தடைகளுமின்றி சீரான ரத்த ஓட்டம் இருக்கிறது. 

பொதுவாக மலையேறும்போது, அதிக ஆக்ஸிஜன் தேவைக்கு, அதிக சிவப்பணுக்கள் அவசியப்படும். அதிக சிவப்பணுக்களைச் செலுத்தும் போது ரத்தம் அடர்த்தியாக இருக்கும். ஆனால், ஷெர்பாக்களின் ரத்தமோ அடர்த்திக் குறைவாகவே இருக்கிறது. அதே சமயம், சாதாரண மனிதர்களைவிட 30 சதவீதம் கூடுதலான சக்தியை ஷெர்பாக்களால் வெளிப்படுத்த முடிகிறது. ஆராய்ச்சியின் முடிவில், ஷெர்பாக்களுக்கு உடலில் அதிக ஆக்ஸிஜன் உருவாகிறது என்பது மட்டுமல்ல, இருக்கும் ஆக்ஸிஜனை முழுமையாக உபயோகப்படுத்தும் திறனே, ஷெர்பாக்களை அந்த உயரங்களிலும் மிகச் சாதாரணமாக இயங்க வைக்கிறது என்று சொல்லப்பட்டிருக்கிறது. இன்னும், தொடர் ஆராய்ச்சிகளை மேற்கொண்டு, ஷெர்பாக்களைப் படித்தால், மூச்சுத் திணறலால் பாதிக்கப்படும் மனிதர்களுக்கு, ஆக்ஸிஜன் ஓட்டத்தை சீராக்க முடியும் என்று நம்பப்படுகிறது.

ஷெர்பா ஒரு ஆதி இனம்

ஷெர்பாக்கள் குறித்த இந்த ஆராய்ச்சிகள் ஒருபக்கம் பலரின் கவனத்தை ஈர்த்தாலும்... சில நிறுவனங்கள் தங்களின் தேவைகளுக்காக ஷெர்பாக்களைக் கொண்டு ஆராய்ச்சி செய்து ஆதாயத்தைத் தேடிக் கொள்கிறார்கள். ஆனால், ஷெர்பாக்களின் வாழ்க்கை நிலையோ மிகவும் மோசமானதாக இருப்பதாக குரல் எழுப்புகின்றனர். 

ஓர் ஆண்டுக்கு கிட்டத்தட்ட 600 பேர் வரை எவரெஸ்ட் சிகரத்தை அடைய முயற்சியை மேற்கொள்கிறார்கள். இவர்கள் ஒவ்வொருவரையும் பத்திரமாக அழைத்துச் சென்று வருவது ஷெர்பாக்கள் தான். ஆனால், அவர்களுக்குத் தேவையான பாதுகாப்பு உபகரணங்களை அரசாங்கம் சரிவர செய்து கொடுப்பதில்லை என்று குற்றம்சாட்டப்படுகிறது. நேபாளில் இமயமலையின் பல்வேறு பகுதிகளில் மெற்கொள்ளப்படும் மலையேற்ற பயிற்சிகளின் மூலம் மட்டும் ஆண்டுக்கு 360 மில்லியன் அமெரிக்க டாலர்கள் வரை வருமானம் கிடைக்கிறது. இது நேபாளின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2 சதவீதமாகும். ஷெர்பாக்களுக்கு அரசாங்கம் வழங்கும் இன்ஷூரன்ஸ் தொகையும் போதவில்லை என்றும் சொல்லப்படுகிறது. இதுவரை கிட்டத்தட்ட 120 ஷெர்பாக்கள் இந்த அபாயகரமான பயணங்களில் தங்கள் உயிர்களை இழந்துள்ளனர்.

 மிக சமீபத்திய செய்தி இது... " எவரெஸ்ட் சிகரத்தின் உச்சியில் இருந்த 'ஹிலாரி முனை' முற்றிலுமாக அழிந்துவிட்டது " .  " மலையேறுபவர்களால் இமயமலைப் பகுதிகளில் அதிக குப்பைகள் சேருகின்றன ..." என்ற செய்தியையும்  படிக்கிறோம். 
தாங்கள் பல்லாயிரம் ஆண்டுகளாய் வாழ்ந்த மலை மாசடைந்து கொண்டிருக்கிறது, தாங்கள் சாமியாக கும்பிடும் மலையின் மொத்த அதிகாரமும் அரசாங்கத்திடம் உள்ளது, இயற்கை தங்களுக்கு அளித்த ஆச்சர்ய உடற்கூறுகளை லாப நோக்கத்திற்காக பல நிறுவனங்கள் கூறு போட்டு ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கிறார்கள், பிழைப்புக்காக உயிரைப் பணயம் வைத்து மேற்கொள்ளும் பயணங்கள் ஆபத்து மிகுந்தவையாக இருக்கின்றன, சமூகத்தில் சரியான அங்கீகாரம் இல்லை... இருந்தும்... அந்தச் சின்னக் கண்களின் வழி அழகாக சிரித்தபடி, முதுகில் மூட்டைகளை சுமந்துகொண்டு, இன்றும் மலையேறத் தயாராகிறார்கள்... இந்த இமயமலைப் பிள்ளைகள். 

ஷெர்பா இமயமலைப் பிள்ளைகள்


ஷெர்பா சில துளிகள் :

1. அபா ஷெர்பா & ஃபுபா டஷி என்ற இரு ஷெர்பாக்கள் தான் இதுவரை 21 முறை எவரெஸ்ட் பயணத்தை மேற்கொண்டுள்ளனர். இது தான் ஷெர்பாக்கள் மத்தியில் உலக சாதனை. 

2. மூன்று மாதத்தில் தோராயமாக ஐந்து லட்சம் ரூபாய் வரை ஷெர்பாக்கள் சம்பாதிப்பார்கள். ஆனால், அதற்கு அவர்கள் தங்கள் உயிரைப் பணயம் வைக்க வேண்டும். 

 

3. சமீப காலங்களில், இன்றைய தலைமுறை ஷெர்பாக்கள் பலரும் புலம்பெயரத் தொடங்கியுள்ளனர். அமெரிக்காவின் நியூயார்க் நகரில் மட்டும் 2500 ஷெர்பாக்கள் இருப்பதாக சொல்லப்படுகிறது. 

http://www.vikatan.com

Link to comment
Share on other sites

நீல் ஆம்ஸ்ட்ரோங் சந்திரனில் இருந்து மண்ணெடுத்து வந்த பை ஏலத்தில்...!

 

 

சந்திரனில் முதன் முதலாக காலடி வைத்த ‘நாசா’ விண்வெளி வீரர் நீல் ஆம்ஸ்ட்ரோங் மற்றும் அவருடன் சென்ற புஷ் ஆல்டிரின் ஆகியோர் சந்திரனிலிருந்து மண் எடுத்துவந்த பை ஏலத்துக்கு விடப்படவுள்ளது.

201705241018079570_bag._L_styvpf.gif

குறித்த ஏலம் எதிர்வரும் ஜுலை மாதம் 12 ஆம் திகதி நடைபெறவுள்ளது.

அப்பல்லோ- 2 விண்கலம் மூலம் 48 ஆண்டுகளுக்கு முன்பு சந்திரனுக்கு சென்று, அங்கிருந்து 500 கிராம் மண் மற்றும் 12 பாறை படிவங்கள் போன்றவை கொண்டுவரப்பட்டன. இவை நினைவு சின்னங்களாக கருதப்படுகிறது.

201705241018079570_Neil-Armstrongs-moon-

இந்நிலையில் சந்திரனில் இருந்து மண் எடுத்து வருவதற்கு பயன்படுத்தப்பட்ட ‘பை’ எதிர்வரும் ஜூலை 12 ஆம் திகதி  நிவ்யோர்க்கில் உள்ள ‘சோத்பீ’ மையத்தில் ஏலம் விடப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த பை சுமார் 56 கோடி ரூபாவிற்கு ஏலம் போகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

http://www.virakesari.lk

Link to comment
Share on other sites

அனைத்து மகளிர் ஆப்கன் தொலைக்காட்சி ஆரம்பம்

பெண்களுக்காக பெண்களாலேயே நடத்தப்படும் தொலைக்காட்சி சேவை ஒன்று ஆப்கானிஸ்தானில் தனது ஒளிபரப்பை துவங்கியிருக்கிறது.


சான் தொலைக்காட்சியில் நிகழ்ச்சித் தயாரிப்பவர்கள் மற்றும் நிகழ்ச்சித்தொகுப்பாளர்கள் அனைவருமே பெண்கள்.


சமூக ஊடகங்களில் மிகப்பெரிய விளம்பர பிரச்சாரத்துக்குப்பின் இந்த தொலைக்காட்சி சேவை துவக்கப்பட்டுள்ளது.

Link to comment
Share on other sites

80 வயதை கொண்டாடிய பிரிட்டனின் மிக பழமையான மூவர்
-

image_d944f6fb65.jpg

பிரிட்டனின் மிக  பழமையான மூன்று பெண்மணிகள், தமது 80ஆவது பிறந்த தினத்தை அண்மையில் கொண்டாடியுள்ளனர். 

ஒரே பிரசவத்தில் மூவராகப் பிறந்து, 80 ஆண்டுகளை கடந்தும் இன்றும் ஒற்றுமையாக வாழ்ந்துவரும் பிரிட்டனைச் சேர்ந்த இந்த மூன்று பெண்மணிகள் நூறு வயதை தாண்டியும் வாழ வேண்டுமென, சமூக ஆர்வலர்கள் இவர்களை வாழ்த்தியுள்ளனர்.

பிரிட்டனைச் சேர்ந்த மேரி புலக்ஸுஹம், மார்கரட் கொலமன் மற்றும் ஜோர்னியா லீச் ஆகிய மூவரும்  1937 ஆம் ஆண்டு மே மாதம் 20ஆம் திகதி, மாபேல் புலக்ஸுஹம் என்பவருக்கு மகள்களான பிறந்துள்ளனர்.

ஒரு குழந்தையை மட்டுமே எதிர்பார்திருந்த மாபேல்  புலக்ஸுஹக்கு, பிரவச தினத்தன்று பாரிய அதர்ச்சி காத்திருந்தது. மருத்துவ தாதி ஒருவர், ஒரு குழந்தையை முதலில் எடுத்து செல்ல,  மேலும் இரு தாதிகள் அவரை  பின்தொடர்ந்துள்ளனர்.

முதலில் கொண்டுச் சென்ற குழந்தையை அரவணைத்த மாபேல், ஏனைய இரு தாதிகளும் கொடுத்த குழந்தைகளை பார்த்து அதிர்ந்துபோனார். பின்னரே, அவருக்கு மூன்று குழந்தைகளை ஒரே பிரசவத்தில் பிறந்ததாக அறிவிக்கப்பட்டது. இதனைக் கேள்வியுற்ற அவர், மகிழ்வின் உச்சிக்கே சென்றுவிட்டார்.

தான் ஒரு குழந்தையையே எதிர்பார்திருந்ததாகவும் எனினும், இறைவனின் அருளால் தனக்கு மூன்று பிள்ளைகள் கிடைத்ததாகவும் அவர் அப்போது தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையிலேயே, மேற்படி மூவரும் தமது 80ஆவது பிறந்த தினத்தை கொண்டாடியுள்ளனர்.

பிரிட்டனில் வாழ்ந்துவரும் மிக பழைமையான மூவர் இவர்களென அந்நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது.

image_de21c85335.jpg

  •  

http://www.tamilmirror.lk

Link to comment
Share on other sites

ஃபேஸ்புக் கோடிங் எழுத மார்க்குக்கு எவ்வளவு நேரம் ஆனது தெரியுமா?

 
 

மார்க்

மார்க் சக்கர்பெர்க் தனது ஃபேஸ்புக் வாலில் எழுதும் எல்லாமே வைரல்தான். நேற்று அவர் பதிவு செய்த இரண்டு பதிவுகளும் 14 ஆண்டுகால ஃபேஸ்புக் பயணத்தை நினைவு கூறும் விதமாக அமைந்தது. இயர் ஆஃப் ட்ராவலுக்கு நடுவே கேம்ப்ரிட்ஜ் பல்கலைகழகத்துக்குள் சென்ற அவர், ஹார்வர்ட் நினைவுகளை மனைவி பிரிசில்லாவுடன் ஃபேஸ்புக் லைவ் மூலம் பகிர்ந்து கொண்டார்.

“H33... இந்த அறைக்குள் நாம் இப்போது செல்ல இருக்கிறோம். 13 வருடங்களுக்கு முன்னர், இங்கு தான் நான் கல்லூரியில் படிக்கும் போது தங்கியிருந்தேன். அதன் பிறகு இப்போது தான் முதல் முறையாக இங்கு திரும்ப வருகிறேன்” எனக் கூற, பிரிசில்லா அதனை சரி செய்து 14 ஆண்டுகள் என்கிறார். ஆனால் மார்க் ”வருடத்தை அதிகரித்து சொல்லாதே 13 வருடங்கள்தான்” என காமெடியுடன் ஆரம்பிக்கிறார்.

 

 

”இங்கு கல்லூரி படிக்கும் காலத்தில் மேலும் இரண்டு மாணவர்களுடன் இணைந்து இந்த அறையில் தங்கியிருந்தேன். நான் இருந்தபோது இருந்த இந்த அறைக்கும், தற்போது உள்ள அறைக்கும் கொஞ்சம் தான் வித்தியாசம் இருக்கிறது. மற்றபடி எதுவுமே மாறவில்லை. அப்படியேதான் இருக்கிறது.

கதவைத் திறந்து உள்ளே சென்றால், உங்கள் கண்ணில் முதலில் படுவது இந்த டெஸ்க் தான். இந்த டெஸ்க்கின் மேலே உள்ள புகைப்படம் நான் வைத்தது அல்ல. இப்போது யாரோ வைத்திருக்கிறார்கள். ஆனால் இந்த டெஸ்க் மட்டும் மாறவே இல்லை. இதே இடத்தில் தான் எனது சிறிய கணினியை வைத்துக்கொண்டு இரண்டே வாரங்களில் ஃபேஸ்புக்கின் கோடிங்கை எழுதி முடித்தேன்.

 

இதில் மூன்று பேர் தங்கியிருந்தோம். அதில் ஒருவர் ஃபேஸ்புக்கின் துணை நிறுவனராக ஜஸ்டின். அவர் நிறைய கல்லூரிகளில் படித்து பட்டம் பெற்றவர். தற்போது அசானா எனும் தனது சொந்த நிறுவனத்தை நடத்தி வருகிறார். இன்னொருவர் கிறிஸ். இவர் ஒரு ஸ்மார்ட்டான  நபர். கனெக்ட் எனும் ஃபேஸ்புக் மந்திரத்துக்கு சரியான நபர் இவர் தான். க்றிஸ் தற்போது ஃபேஸ்புக்கின் ப்ராடக்ட் மேனேஜராக உள்ளார்.

அடுத்து நாம் இருப்பது ஒரு குறுகலான அறை. இந்த அளவு ஒரு கர்ப்பமான பெண் செல்லும் அளவுக்கு தான் இருக்கும். இந்த சுவரில் தான் எங்களுக்கு தோன்றிய விஷயங்களை எழுதி வைப்போம்” என்கிறார் மார்க்.

அதன்பின் தற்போது அங்கு தங்கியிருக்கும் மாணவர்களுடன் உரையாடினார் மார்க். அதன்பின் பேசிய பிரிசில்லா தனது ஹார்வர்டு அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார். 

தான் தொடர்ச்சியாக கோடிங் (Coding) எழுதிக் கொண்டிருந்ததையும், பக்கத்தில் இருந்த ஷவரில் இருந்து வெளியேறிய நீராவியின் சூடு எல்லாம் சேர்ந்து கணினி ரிப்பேர் ஆனதையும் நினைவு கூர்ந்த மார்க், இதனால் தான் டேட்டா சென்டர்களை குளுமையான இடத்தில் மைனஸ் 30 டிகிரியில் அமைத்தேன் என்றார். ”இங்கு வந்தது அளவில்லாத மகிழ்ச்சியைத் தருகிறது” என்று வைவ்வை முடிக்கிறார் மார்க். இந்த வீடியோவை 12 மணிநேரத்தில் 53 லட்சம் பேர் பார்த்துள்ளனர். அதற்கு முன்பு பதிவிட்ட புகைப்படத்தை 1.5 லட்சம் பேர் லைக் செய்துள்ளனர். இன்ஸ்டாகிராமில் தட்டிய தனி ஒருவன் ஸ்டில்லும் செம.

படிச்ச காலேஜுக்கு திரும்பப் போறது ஆஸம். அதுலயும் உலகமே வியக்குற ஃபேஸ்புக் உருவாக்குன அந்த காலேஜுக்கு மார்க் திரும்ப போய் பாக்குறது ”வாவ் வாட் எ ஃப்ளாஷ்பேக்” ரகம் தான்.

http://www.vikatan.com

Link to comment
Share on other sites

புதுப் புத்தகத்துக்கு ஜீன்ஸ் அட்டை!

 

 
craft_1_3167416f.jpg
 
 
 

கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கும் தேதி நெருங்கிக்கொண்டிருக்கிறது. புதிதாக வாங்கிய நோட்டு, புத்தகங்களை முகர்ந்து பார்த்து மாணவர்கள் மகிழும் தருணம் இது. அதைவிடப் புத்தகங்களுக்கு அழகாக அட்டை போட்டு தினுசு தினுசான லேபிள் ஒட்டுவதில் சிறார்கள் ஆர்வம் காட்டுவார்கள். வழக்கமாக பிரவுன் கலர் காகிதத்தில் அட்டை போடுவது சிறார்களின் வாடிக்கை. ஆனால், இப்போது ஜீன்ஸ், பனியன் எனத் துணிகளில் அட்டை போடும் அளவுக்கு வசதிகள் வந்துவிட்டன. இந்தத் துணி அட்டைகள் தண்ணீரில் நனையாது என்பது ஆச்சரியம்.

உங்கள் அம்மா, அப்பா பள்ளியில் படித்த காலத்தில் செய்தித் தாள்களில் அட்டை போடுவதுதான் பழக்கம். லேபிள் ஒட்ட வேண்டுமென்றால் வெள்ளைத் தாளைச் சிறியதாக வெட்டி ஒட்டிவிடுவார்கள். பிறகு பிரவுன் கலர் அட்டை, பேப்பர் அட்டை, பசையுடன் கூடிய லேபிள் எனக் காலத்துக்கு ஏற்ப அட்டைகள் அறிமுகமாயின. ஆனால், இப்போது புதிதாக அறிமுகமாகியுள்ள துணி அட்டைகளில் பசை தடவ வேண்டியதில்லை. ஒட்ட வேண்டியதில்லை. குழந்தைகளை இழுத்துப் பிடித்துச் சட்டை போடுவதுபோல புத்தகங்களுக்கும், இந்தத் துணி அட்டையை இழுத்துப் பிடித்துப் போர்த்திவிடலாம்.

2_3167722a.jpg

உங்களுக்கு மிகவும் பிடித்த நோட்டு, புத்தகங்களுக்கெல்லாம் ஆடை உடுத்தும் புதிய உத்தியை உருவாக்கியவர் கோவையைச் சேர்ந்த சங்கரசுப்பு பிச்சை. இவர் நவீன அச்சுத் துறையில் 30 ஆண்டுகளாகப் பணியாற்றிவருகிறார். 5 மாதங்களுக்கு முன்பு நடந்த புத்தகக் கண்காட்சியின்போது இந்தப் புதுவித உத்தியுடன் கூடிய துணி அட்டையை அறிமுகப்படுத்தினார் அவர். எதற்காக இந்த முயற்சி என அவரிடம் கேட்டோம்.

“2 ஆண்டுகளுக்கு முன்பு நானும் என் மனைவியும் அமெரிக்கா போயிருந்தோம். அங்கே பள்ளியில் படிக்கும் குழந்தைகள் நோட்டுப் புத்தகங்களுக்கு விநோதமான இந்தத் துணி அட்டையைப் பயன்படுத்தியதைப் பார்த்தேன். இதை ஏன் இங்கு பயன்படுத்திப் பார்க்கக் கூடாது என்று நினைத்தேன். இப்போது பள்ளி திறக்கும் காலம் என்பதால் நோட்டு புத்தகங்களுக்கு ஏற்ற இந்தத் துணி அட்டையை அறிமுகப்படுத்தினேன். பார்ப்பதற்கு நம்ம ஊர் பனியன் போல உள்ள இந்தத் துணி அட்டை, உண்மையில் பனியன் துணி அல்ல. இது பேப்ரிக் வகையைச் சேர்ந்தது. தண்ணீரில் நனையாது. கிழியாது. அச்சிட்டால் அழியாது” என்கிறார் சங்கரசுப்பு.

1_3167723a.jpg

இப்போது இதே துணியைப் பயன்படுத்தி ஒரு புத்தகம் முழுமைக்கும் பயன்படுத்த ஒரு மாதிரி உறையைத் தயாரித்துவருகிறார் இவர். அந்த அட்டையைப் போட்ட பிறகு நோட்டோ புத்தகமோ தண்ணீருக்குள் விழுந்தாலும் ஒன்றும் ஆகாதாம். அதை சிறிது நேரம் காய வைத்தால் போதும். எதுவும் ஆகாது. தண்ணீரில் நனையாத இந்தத் துணி அட்டைகள் செய்வதில் சங்கரசுப்பு ஈடுபட்டுள்ளார்.

நோட்டு, புத்தகங்களுக்கு இப்படியொரு பாதுகாப்பு!

http://tamil.thehindu.com

Link to comment
Share on other sites

விக்டோரியா மகாராணி பிறந்த தினம்: மே 24- 1819

 

விக்டோரியா (அலெக்சாண்ட்ரினா விக்டோரியா மே 24, 1819 – ஜனவரி 22, 1901) பெரிய பிரித்தானியாவும், அயர்லாந்தும் இணைந்த ஐக்கிய இராச்சியத்தின் அரசியாக 1837-ம் ஆண்டு ஜூன் 20-ம் நாள் முதலும், இந்தியாவின் முதல் பேரரசியாக 1876 மே 1-ம் நாள் முதலும் இறக்கும் வரையில் இருந்தவர். இவரது ஆட்சிக்காலம் 63 ஆண்டுகளும் 7 மாதங்கள்.

 
விக்டோரியா மகாராணி பிறந்த தினம்: மே 24- 1819
 
விக்டோரியா (அலெக்சாண்ட்ரினா விக்டோரியா மே 24, 1819 – ஜனவரி 22, 1901) பெரிய பிரித்தானியாவும், அயர்லாந்தும் இணைந்த ஐக்கிய இராச்சியத்தின் அரசியாக 1837-ம் ஆண்டு ஜூன் 20-ம் நாள் முதலும், இந்தியாவின் முதல் பேரரசியாக 1876 மே 1-ம் நாள் முதலும் இறக்கும் வரையில் இருந்தவர். இவரது ஆட்சிக்காலம் 63 ஆண்டுகளும் 7 மாதங்கள். இதுவரை பிரிட்டன் அரசை ஆண்டதில் இதுதான் அதிக வருடம். இவரது ஆட்சிக்காலத்தை மையமாகக் கொண்ட ஒரு காலப்பகுதி விக்டோரியா காலப்பகுதி எனப்படுகிறது.

விக்டோரியா ஆட்சிப் பொறுப்பு ஏற்ற காலத்திலேயே ஐக்கிய இராச்சியம் அரசியல்சட்ட முடியாட்சி ஆகிவிட்டது. இதில் அரசியோ அரசனோ மிகக் குறைந்த அரசியல் அதிகாரத்தையே கொண்டிருந்தனர். எனினும் விக்டோரியா ஒரு மிக முக்கியமான குறியீட்டு நபர் என்னும் நிலையில் மிகத் திறமையாகவே பணியாற்றி வந்தார். இவரது காலம் தொழிற்புரட்சியின் உயர்நிலையாகும். இது ஐக்கிய இராச்சியத்தில், சமூக, பொருளியல், தொழில்நுட்ப வளர்ச்சிகளை ஏற்படுத்தியது. இவருடைய காலத்திலேயே பிரித்தானியப் பேரரசு பெரிதும் விரிவடைந்து அதன் உச்ச நிலையை எட்டியதுடன், அக்காலத்தின் முன்னணி உலக வல்லரசு ஆகவும் திகழ்ந்தது.

இவர் முழுவதுமாக ஜெர்மானிய வழியினர். மூன்றாம் ஜார்ஜின் பேத்தியும், இவருக்கு முன் ஆட்சியில் இருந்த நான்காம் வில்லியத்தின் பெறாமகளும் ஆவார். இவர் தனது காலத்தில் தனது ஒன்பது பிள்ளைகளுக்கும், 42 பேரப் பிள்ளைகளுக்கும், ஐரோப்பாவின் பல பகுதிகளிலும் திருமணம் செய்து வைத்ததன் மூலம், ஐரோப்பாவை ஒன்றிணைத்தார். இது அவருக்கு, "ஐரோப்பாவின் பாட்டி" என்னும் பட்டப் பெயரை ஈட்டிக் கொடுத்தது. இவர் புனித ரோமன் பேரரசின், பேரரசியான மரியா தெரேசாவின் இரண்டு விட்ட சகோதரியும் ஆவார்.

63 ஆண்டுகள், ஏழு மாதங்களுக்கு இரண்டு நாட்களுக்கு விக்டோரியா மகாராணி பிரிட்டனையும் அதன் காலணிகளையும் ஆண்டார்.உலகில் மிக அதிக நாள் ராணியாக இருந்த வரலாற்றையும் இவர் படைத்துள்ளார்.

 

 

தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார் நினைவு தினம்: மே 24- 1981

 
 
 

''உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு'' என்று முழங்கி உலகத்துத் தமிழர்களை மொழியால் இணைத்து ஒரு குடையின் கீழ் கொண்டுவர வேண்டுமென அல்லும் பகலும் பாடுபட்டவர் தமிழர் தந்தை சி.பா. ஆதித்தனார். இவர் 1905-ம் ஆண்டு செப்டம்பர் 27-ம் தேதி தூத்துக்குடி மாவட்டம் காயாமொழியில் பிறந்தார். சி.பா.ஆதித்தனாரின் தந்தை அவருடைய தந்தையும் புகழ்பெற்ற வழக்கறிஞர்.

 
 
 
 
தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார் நினைவு தினம்: மே 24- 1981
 
''உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு'' என்று முழங்கி உலகத்துத் தமிழர்களை மொழியால் இணைத்து ஒரு குடையின் கீழ் கொண்டுவர வேண்டுமென அல்லும் பகலும் பாடுபட்டவர் தமிழர் தந்தை சி.பா. ஆதித்தனார். இவர் 1905-ம் ஆண்டு செப்டம்பர் 27-ம் தேதி தூத்துக்குடி மாவட்டம் காயாமொழியில் பிறந்தார். சி.பா.ஆதித்தனாரின் தந்தை அவருடைய தந்தையும் புகழ்பெற்ற வழக்கறிஞர்.

சி.பா ஆதித்தனார் என்றால் இன்றும் தமிழ்நாட்டு வழக்கறிஞர்களிடையே, ஒரு தனி மரியாதை உண்டு. சி.பா. ஆதித்தனாரின் தாயார் கனகம் அம்மையார், கணவருக்கும் மகனுக்கும் வேண்டிய உதவிகளைச் செய்து, அவர்களின் சமூகத் தொண்டுகளுக்கும் ஊக்கமூட்டும் குடும்பத் தலைவியாக இருந்து வந்தார்.

வசதிமிக்க குடும்பம் என்பதால் தங்கள் சொத்துகளை மேலும் பெருக்கிக்கொண்டே சி.பா. ஆதித்தனார் சென்றிருக்க முடியும். ஆனால், தமிழர்களுக்கு நற்பெயர் ஏற்பட வேண்டும் என்பதுதான் அவரின் குறிக்கோளாக இருந்தது. மற்ற பணக்காரப் பிள்ளைகளைப் போல இல்லாமல் படிப்பு நேரம் போக, இதர நேரங்களில் பகுதி நேர வேலைகளைச் செய்து, அதில் கிடைத்த வருமானத்தில் பல ஏழைகள் நல முறை வாழவும் அவர்தம் பிள்ளைகள் படிப்பைத் தொடரவும் சி.பா. ஆதித்தனார் உதவிக்கரம் நீட்டினார்.

பிரிட்டனில் இருந்தபோது பெருஞ்சேவை ஆற்றி வந்த சி.பா. ஆதித்தனாரைச் சிங்கப்பூர் தொழில் மன்னர் உ. ராமசாமி நாடாருக்குப் பெரிதும் பிடித்திருந்தது. அதனால், அவரின் மகள் கோவிந்தம்மாளை திருமணம் செய்துகொடுத்து, தம் மருமகனாக்கி கொண்டார். 1933-ம் ஆண்டு சிங்கப்பூரில் சி.பா. ஆதித்தனார், கோவிந்தம்மாள் திருமணம் மிகச் சிறப்பாக நடந்தேறியது.

சிங்கப்பூரில் வழக்குரைஞராக பணியாற்றியபோதே, தமிழ்மக்களின் பொது நலத்திலும் அதிக அக்கறை கொண்டிருந்தார் சி.பா. ஆதித்தனார். வெள்ளைக்காரர்கள் செய்த சூழ்ச்சி, சி.பா. ஆதித்தனாரைப் பெரிதும் வாட்டிற்று. தமிழ் வளர்ச்சி குறித்தும், மொழி வளர்ச்சியில் தமிழர் காட்ட வேண்டிய ஈடுபாடு பற்றியும் தம்முடைய வாழ்நாளெல்லாம் திட்டம் வகுத்துக் கொண்டிருந்த தமிழன்பர் சி.பா. ஆதித்தனார். உயர்தமிழ் படித்தவர்கள் சாதாரண மக்கள், மொழியில் முடியாத அளவுக்குத், தமிழ்மொழியின் நடையைக் கடினப்படுத்தியதை அவர் விரும்பவில்லை.

இந்த நிலையில், சிங்கப்பூர் ஜப்பானியரிடம் வீழ்ச்சி கண்டது. இது சி.பா. ஆதித்தனாரைப் பெரிதும் வேதனைக்குள்ளாக்கியது. சிங்கப்பூரில் வழக்குரைஞராகப் பணியாற்றியதாலும் தமிழர் முன்னேற்றத்துக்குப் பாடுபட்ட சி.பா. ஆதித்தனார், ஜப்பானியக் காலக்கொடுமைகளைத் தாளாமல் ஆதித்தனார், குடும்பத்துடன் தமிழகம் வந்தடைந்தார்.

மொழி வளர்ச்சிக்குப் பாடுபடுவதும், தமிழர் மேம்பாட்டுக்குப் பாடுபடுவதும் தம்முடைய வாழ்க்கையில் தாம் ஆற்ற வேண்டிய தொடர்பணிகளாக இருக்க வேண்டுமெனத் தமிழகம் வந்ததும் முடிவெடுத்த சி.பா. ஆதித்தனார், மதுரை முரசு, தமிழன், தந்தி- பின்னர்- தினத்தந்தி ஆகிய ஏடுகளை எளிய தமிழில் வெளியிட்டார். மாணவர்களுக்கென ‘வெற்றி நிச்சயம்’ என்னும் இயக்கத்தைத் தொடங்கி, அவர்களிடையே கல்வி நாட்டத்தை ஏற்படுத்தினார்.

சாதியால் பிரிந்து கிடந்த 'தமிழர் சமுதாயம்' மொழியால் ஒன்றுபட வேண்டுமெனப் பெரிதும் விரும்பினார். அந்தக் குறிக்கோளில் ''நாம் தமிழர்"  இயக்கத்தைச் சி.பா. தொடங்கி வைத்தார். 1967ஆம் ஆண்டு, தமிழகச் சட்ட மன்ற நாயகனாக அவரை முன்மொழிந்தார். அப்போதைய கல்வி அமைச்சர் நாவலர் இரா.நெடுஞ்செழியன் பொதுப்பணி அமைச்சராக அப்போதிருந்த மு. கருணாநிதி, வழிமொழிந்தார்.

சபாநாயகராகப் பொறுப்பேற்ற சி.பா. ஆதித்தனார், பதவிக்கு வந்த உடனடியாக சட்டமன்ற உறுப்பினர்கள் இருமொழியில் பேசலாம் என்னும் விதியில் சில மாற்றங்களைச் செய்தார். இரு மொழியில் மன்றத்தில் பேசலாம் என்னும் விதி இருந்தால், பெரும்பாலானோர் ஆங்கிலத்திலேயே பேசியது அவருக்குப் பிடிக்கவில்லை. தமிழ் அறவே தெரியாதவர் மட்டுமே ஆங்கிலத்தில் பேசலாம் என அவர் விதி வகுத்தார்.

'தமிழ் இதழியல்' துறை வளர்ச்சிக்கு ‘இதழாளர் கையேடு’ அவர் உருவாக்கிய மிகச்சிறந்த வழிகாட்டி என்று செய்தியாளர்கள் இன்றும் கூறுவர். ‘எளிய தமிழ்’ என்பது கொச்சை நீக்கப்பட்ட மொழி நடையே என அவர் உறுதியாக நம்பினார். மிகப் பெரிய வாக்கியங்களை எழுதாமல், சிறு சிறு தொடர்களால் அவற்றை அமைக்க வேண்டுமென அவர் கூறுவார்.

மாதம் ஒரு நாவல் திட்டத்தை ‘ராணிமுத்து’ என்னும் பெயரில் வெளியிட்டபோதுகூட எளிய மொழிக்கே அவர் முக்கியத்துவம் தந்தார். வாராந்திர ராணியும் அவர் தொடங்கிய ஏடுதான். தம்முடைய எழுபத்தாறாவது வயதில், தமிழர் தந்தை ஆதித்தனார் மறைந்தாலும் ‘நல்ல தமிழர்‘ என்பது எளிய மொழியில் எல்லாருக்கும் ஏற்ற வகையில் இருக்க வேண்டுமென கூறிச் சென்றிருப்பதை நாம் நினைவில் நிறுத்த வேண்டும்.

http://www.maalaimalar.com

Link to comment
Share on other sites

உலகின் மிகப்பெரிய விமானத்தின் சோதனை ஓட்டம் வெற்றி!

உலகின் மிகப்பெரிய விமானத்தின் சோதனை ஓட்டம் இங்கிலாந்தில் வெற்றிகரமாக நடைபெற்றது.

ஏர்லேண்டர்

உலகின் மிகப்பெரிய விமானம் என்னும் அங்கீகாரத்தினை ‘ஏர்லேண்டர்-10’ விமானம் பெற்றுள்ளது. ஏர்லேண்டர் விமானங்களில் இந்த ‘ஏர்லேண்டர்-10’ மூன்றாவது விமானமாகும். பயணிகள் பயன்பாட்டுக்கு இந்த ஏர்லேண்டர்- 10 விமானத்தைப் பயன்படுத்தலாமா என்பது குறித்த சோதனை தற்போது நிகழ்த்தப்பட்டது.

இந்தச் சோதனையில் தன் முதல் பயணத்தை வெற்றிகரமாக நிறைவு செய்தது ‘ஏர்லேண்டர்-10’. இங்கிலாந்தில் உள்ள கார்டிங்டன் விமானப்படை தளத்தில் இருந்து சோதனை ஓட்டத்துக்கு செலுத்தப்பட்டது விமானம். இருபதாயிரம் அடி உயரத்தில் ஐந்து நாள்கள் தொடர்ந்து பறந்து தனது சோதனைப் பயணத்தை சாதனைப் பயணமாக நிறைவு செய்தது ‘ஏர்லேண்டர்’. 

 

விமானம், ஹெலிகாப்டர், விண்கலம் ஆகியவற்றின் தொழில்நுட்பங்களின் கூட்டுக்கலவையே ‘ஏர்லேண்டர்-10’. தற்போது இந்தப் புதிய ரக விமானத்தின் சோதனை வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளதால், பயணிகளுக்கான பயன்பாட்டுக்குக் கொண்டுவருவது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது. முன்னதாக ‘ஏர்லேண்டர்’ விமானத் தயாரிப்புகளின் முதல் விமானம் அமெரிக்க ராணுவத்தின் உளவுத்துறையின் கீழ் பயன்படுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

http://www.vikatan.com

 

 

’ஸ்பிரிங் பொட்டேட்டோ' சாப்பிடலாமா..? #NewSnack

 
 

springfood_19323.jpg

ஒரு அழகான மாலைப்பொழுது...சுள்ளுனு அடிக்கிற சூரியனின் தாக்கம் கொஞ்சம் குறையும் வேளை... அப்படியே ஒரு ஈவ்னிங் ஸ்நாக்ஸ் சாப்பிடணும்னு ஆசைப்பட்டால், திருவல்லிக்கேணி பக்கம் அப்டியே போயிட்டு வாங்க பாஸ். அள்ளும் மசாலா வாசனை நம்ம கால்களை கட்டி இழுத்திடும்.

வழக்கம் போல ஏதோ ஒரு பானி பூரி கடையிலிருந்துதான் மசாலா வாசனை வருதுன்னு நினைச்சு ஏமாந்துறாதீங்க ப்ரெண்ட்! அது நம்ம ஸ்நாக்ஸ் லிஸ்ட்டில் ‘புதுசு கண்ணா...புதுசு..!’ ஆமாங்க. சும்மா...உருளைக்கிழங்கை ஒரு குச்சியில் செருகி அப்படியே செதில் செதில்லா ஒரு மெஷின்குள்ள வச்சு வெட்டி எடுத்து மசாலா தூவி பொறிச்சு எடுத்தா, ‘ஸ்பிரிங் பொட்டேட்டோ’. 

இந்த ‘ஸ்பிரிங் பொட்டேட்டோ’ மேல இன்னும் கொஞ்சம் தூக்கலா மசாலா தெளிச்சு கூடவே மயோனைஸ் சாஸ் வச்சு தர்றாங்க. வெறும் 40 ரூபாய் தான்னு அத்தன மக்களும் இந்த புதுவிதமான ரோலை ஆசையா வாங்கி சாப்பிட்டு போறாங்க. ஆனா, அவ்வளவு மசாலாவிலும், எண்ணெயிலும் மூழ்கி எழுந்த உருளைக்கிழங்கு உடல்நலத்திற்கு எவ்வளவு ஆரோக்கியம் தரும்னு யோசிங்க மக்களே!

 

http://www.vikatan.com

Link to comment
Share on other sites

ஜென் கதை: ஒலியில்லாத இசை

தியானம் என்பது எதையும் யாசிப்பது அல்ல. தனக்குள் மூழ்கி, தன்னைத்தானே அறிந்து கொள்வதே ஆகும். மவுனம் என்பது நிசப்தமான சங்கீதம். இதை உணர்த்தும் ஆன்மிக கதையை பார்க்கலாம்.

 
ஜென் கதை: ஒலியில்லாத இசை
 
அது ஒரு மிகப்பெரிய புத்த மடாலயம். அந்த மடாலயத்துக்குள் பிரமாண்டமான புத்தர் சிலை ஒன்று இருந்தது. அந்த புத்தரின் சிலை கைகளை உயர்த்தி அருள்பாலிப்பது போல் இருக்கும். ஒரு வயதான துறவி தினமும் அந்த புத்த மடாலயத்துக்கு வந்து, புத்தரின் சிலை முன்பாக நீண்ட நேரம் அமர்ந்திருப்பார்.

அவர் அப்படி அமர்ந்திருக்கும் நேரம் முழுவதும், துறவின் பார்வை புத்தரின் முகத்தை நோக்கியபடியே இருக்கும். அந்த காட்சியைப் பார்ப்பவர் களுக்கு, அவர்கள் இருவருக்கும் ஏதோ உரையாடல் நடப்பதைப் போலத் தெரியும்.

துறவி தினமும் வருவார், புத்தரின் முன்பாக நெடு நேரம் அமர்ந்து முகத்தை நோக்கியபடி இருப்பார். பிறகு எழுந்து சென்று விடுவார். இதனை அந்த மடாலயத்தின் தலைமை குரு கவனித்துக் கொண்டே இருந்தார். அன்றும் வழக்கம் போல் வந்த துறவி, தன்னுடைய செயல்களை சரியாகச் செய்து விட்டு எழுந்து செல்ல எத்தனித்தார். அப்போது அவரை எதிர்கொண்டார் மடாலயத்தின் தலைமை குரு.

201705241539434487_buddha._L_styvpf.gif

‘ஐயா! உங்களை தினந்தோறும் இங்கு பார்க்கிறேன். நெடுநேரம் தியானம் செய்கிறீர்கள். புத்தரின் முகத்தை நோக்கியபடியே இருக்கிறீர்கள். புத்தர் உங்களிடம் என்ன சொன்னார்?’ என்று கேட்டார்.

அதற்கு அந்தத் துறவி, ‘புத்தர் எப்போதும் எதுவும் சொல்ல மாட்டார். ஆனால் அமைதியாகக் கேட்டுக் கொண்டிருப்பார்’ என்றார் அந்த துறவி.

மடாலய குருவுக்கு ஆச்சரியம். ‘அப்படியா! அது சரி.. அவரிடம் நீங்கள் என்ன சொன்னீர்கள்?’ என்று அடுத்த கேள்வியைக் கேட்டார்.

‘நானும் எதுவும் சொல்ல மாட்டேன். அமைதியாகக் கேட்டுக் கொண்டிருப்பேன்’ என்றார் துறவி.

அவரது பதிலில் இருந்து உண்மையை அறிந்து கொண்டார் மடாலய குரு.

ஆம்! தியானம் என்பது எதையும் யாசிப்பது அல்ல. தனக்குள் மூழ்கி, தன்னைத்தானே அறிந்து கொள்வதே ஆகும். மவுனம் என்பது பேச்சை நிறுத்துவது என்பதல்ல. அது ஒரு நிசப்தமான சங்கீதம்.

இதைத் தான் பாரதியார், ‘தனிமையுண்டு அதிலே சாரம் இருக்குதம்மா’ என்றார்.

http://www.maalaimalar.com

Link to comment
Share on other sites

 

நம் வாழ்வை மாற்றிய முக்கியமான டெக்னாலஜிகளை கொஞ்சம் ரீவைண்ட் செய்து பார்ப்போம்

Link to comment
Share on other sites

‘நடுங்கி வாழ்வது வாழ்க்கையே அல்ல’
 

முறைகேடாக வாழ்ந்து வருபவர்களை, நேர்மையுடன் வாழ்பவர்கள் கவலையுடன் நோக்குவார்கள். 

“என்ன இந்த மனுஷன் எங்களைப்போல வாழ்ந்தால், எவ்வளவு காசுக்காரனாக இருந்திருக்கலாம். சும்மா கடமை, கண்ணியம், கட்டுப்பாடு எனச் சொல்லி என்னத்தைச் சாத்தித்து விட்டார்” எனத் தன்னைப் போல, வாழ்பவர்களுடன் சொல்லிக் கொள்வதுண்டு.  

வாழ்க்கையென்றால் என்ன என்று, முதற்கண் புரிந்து கொள்ள வேண்டும். அடுத்து, என்ன நடக்கப்போகின்றது என அஞ்சி, நடுங்கி வாழ்வது ஒரு வாழ்க்கையே அல்ல; இத்தகையோர் வெளியே சிரித்துக் கும்மாளமடித்தாலும், அவர்களின் உள்மனம், சதா சலனம், சஞ்சலம் கொண்டதாகவே இருக்கும்.   

விடுபட முடியாத போலியானதும் போக்கிரித்தனமானதுமான வாழ்க்கை  வாழ்ந்தால் துன்பமே வாழ்க்கையை  ஆக்கிரமித்திருக்கும்.

Link to comment
Share on other sites

வரலாற்றில் இன்று: மே 25
 
bangladesh%281%29.jpg1837: பிரித்தானிய ஆட்சிக்கு எதிராக கனடாவின் கியூபெக் மாநிலத்தில் கிளர்ச்சி இடம்பெற்றது.
 
1865: அமெரிக்காவின் அலபாமா மாநிலத்தில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 300 பேர் பலி.
 
1946: ட்ரான்ஸ் ஜோர்தான் நாடாளுமன்றம் முதலாம் அப்துல்லாவை அமீராக தெரிவு செய்தது.
 
1953: அமெரிக்காவின் முதலாவதும் கடைசியுமான அணு ஆட்லரி சோதனை நடைபெற்றது.
 
1961: பிரிட்டனைச் சேர்ந்த ஜோ பிரவுன் தலைமையிலான குழுவொன்று உலகின் 3ஆவது மிக உயரமான சிகரமான கஞ்சன்ஜுங்காவின் உச்சியை முதல் தடவையாக அடைந்தது.
 
1961: தசாப்தத்தின் இறுதிக்குள் அமெரிக்கர்கள் சந்திரனை அடைவார்கள் என அமெரிக்க ஜனாதிபதி ஜோன் எவ்.கென்னடி சூளுரைத்தார்.
 
1963: ஆபிரிக்காவில் வெள்ளையின ஆட்சிக்கு எதிராக குரல் கொடுப்பதற்காக எத்தியோப்பிய தலைநகர் அடிஸ் அபாபாவில் 32 நாடுகள் ஒன்றிணைந்து ஆபிரிக்க ஐக்கிய ஸ்தாபனத்தை ஸ்தாபித்தன.
 
1979: அமெரிக்க விமானமொன்று விபத்துக்குள்ளானதால் 271 பேர் பலி.
 
1981: பஹ்ரெய்ன், குவைத், ஓமான், கட்டார், சவூதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய நாடுகள் இணைந்து வளைகுடா கூட்டுறவு சபையை ஸ்தாபித்தன.
 
1985: பங்களாதேஷில் வீசிய சூறாவளியினால் சுமார் 10,000 பேர் பலி.
 
1997: சியாரா லியோன் ஜனாதிபதி டெஜான் கப்பா சதிப்புரட்சி மூலம் பதவியிலிருந்து நீக்கப்பட்டார்.
 
2001: அமெரிக்காவைச் சேர்ந்த 32 வயதான எரிக் வீஹென்மாயர் பார்வையற்ற முதல் நபரானார்.

2002: சீன விமானமொன்று தாய்வான் நீரிணையில் வீழ்ந்ததால் 225 பேர் பலி.

2002: மொசாம்பிக்கில் தொடருந்து ஒன்று விபத்துக்குள்ளாகியதில் 197பேர் கொல்லப்பட்டனர்.

http://www.tamilmirror.lk

Link to comment
Share on other sites

‘என்னைப் பத்தி படமெடுக்க என்ன இருக்கு?’ - மறுத்த டி.எம்.எஸ்.. விடாத விஜயராஜ்! #TMS

 

TMS

‘சந்திர ஈரமும் சூரிய வீரியமும்

சேர்த்துச் செய்த சுடர்கவிதை

டி.எம்.சௌந்தர்ராஜன்!' - பாடகர் திலகம் டி.எம்.சௌந்தர்ராஜனின் சிம்மக்குரலுக்கு அடிமையான கோடானுகோடி ரசிகர்களில் ஒருவரின் கவிதை இது!

தெள்ளத்தெளிவான தமிழ் உச்சரிப்புடன் தமிழ்த் திரையுலகை இன்றைக்கும் ஆட்கொண்டிருக்கும் இசை ஆளுமை டி.எம்.எஸ் அவர்களின் நினைவுநாள் இன்று.

எம்.ஜி.ஆர்., சிவாஜி, ஜெய்சங்கர் என ஆரம்பித்து, சத்யராஜ், விஜய்காந்த் வரைக்கும் தமிழ்த் திரையுலகின் முன்னணி கதாநாயகர் ஒவ்வொருவருக்கும் பொருத்தமாகத் தனித்தனிக் குரலில் பின்னணி பாடி, காலத்தால் அழியாத கலைஞனாக நிலைத்துநிற்கிறார் டி.எம்.எஸ்! 

சௌராஷ்டிரக் குடும்பத்தில் பிறந்து வளர்ந்து, ஒட்டுமொத்த உலகத் தமிழர்களையும் தனது கந்தர்வக் குரலால் கட்டிப்போட்ட மாபெரும் கலைஞன். இந்தாண்டு ஜனவரி மாதம், அவரின் உருவம் பதித்த தபால்தலையை வெளியிட்டுக் கௌரவித்துள்ளது மத்திய அரசு.

அவரது சாதனையை ஆவணப்படுத்தும்விதமாக, ‘இமயத்துடன்!’ என்ற தலைப்பில், தொலைக்காட்சி நெடுந்தொடர் ஒன்றைத் தயாரித்து இயக்கியுள்ளார் தமிழ்த் திரையுலகைச் சேர்ந்த விஜயராஜ். 

டி.எம்.எஸ்-ஸின் வாழ்க்கை வரலாற்றைப் பதிவுசெய்யும் பணிக்காக, கிட்டத்தட்ட 13 வருடங்கள் அந்த மாபெரும் கலைஞனுடனேயே உண்டு, உறங்கி, நெடுந்தொலைவு பயணித்தவர் விஜயராஜ். டி.எம்.எஸ்-ஸின் சாதனைகள் குறித்த திரைத்துறைப் பிரபலங்களின் பெருமைகளையும் இந்த நெடுந்தொடரில் பதிவுசெய்துள்ளார். மறக்க முடியாத அந்த நாள்களை மகிழ்வும் நெகிழ்வுமாக மீட்டெடுக்கிறார்...

'‘ ‘தமிழ்நாடு அரசுத் திரைப்படக் கல்லூரியில் நடிப்பு, ஒளிப்பதிவு முடித்து 1996-ம் ஆண்டில் வெளியே வந்தேன். ‘சினிமா போன்று இல்லாமல் வித்தியாசமாக ஏதாவது செய்ய வேண்டும்’ என்ற எண்ணத்தில் இருந்தேன். அப்போதுதான், டி.எம்.எஸ்-ஸோட வாழ்க்கை வரலாற்றை அவரை வைத்தே ஆவணப் பதிப்பாகப் பண்ணவேண்டும் என்ற எண்ணம் வந்தது. உடனே, டி.எம்.எஸ் ஐயாவைச் சந்தித்துப் பேசினேன். ஆனால், அவரோ சற்றும் பிடிகொடுக்கவில்லை. ‘என்னைப் பற்றி படம் எடுக்க என்ன இருக்கு? செத்தா தூக்கிப்போட்டுட்டுப் போங்க. அதான், நான் பாடிய பாடல்கள் இருக்கே. ரசிகர்களுக்கு அது போதும்!’ எனச் சொல்லிவிட்டார். ஆனாலும், எட்டு மாதங்கள் தொடர்ந்து அவரோடு அலைந்து திரிந்து, அவரை ஒருவழியாகச் சம்மதிக்க வைத்தேன். 

‘டி.எம்.எஸ். ஒரு சகாப்தம்’ என்ற பெயரில், 13 வாரத் தொடர் ஒன்றை முதன்முதலில் எடுத்தேன். டி.எம்.எஸ். அவர்கள் கதை சொல்வதுபோல் அமைந்திருந்த இந்தத் தொடரை 1999-ல் பார்த்த, மறைந்த முதல்வர் ஜெயலலிதா ரொம்பவே பாராட்டினாங்க. ‘டி.எம்.எஸ். அவர்கள் நம் தமிழ்த் திரையுலகுக்குக் கிடைத்த ஒரு பொக்கிஷம். எனவே, அவரைப் பற்றி இன்னும் விரிவா, பொக்கிஷம் மாதிரியான பயோகிராஃபி ஒன்றை ஒரு மெகா தொடரா பண்ணுங்க….’ என்று சொல்லி ஊக்குவித்து, எங்கள் உழைப்பை அடுத்த கட்டத்துக்கு நகர்த்திச் சென்றவர் அவர்தான்.

TMS

(டி.எம்.எஸ், இளையராஜா ஆகியோருடன் விஜயராஜ்)

அதன்பிறகு 2001-லிருந்து 2013 வரை பதின்மூன்று வருடங்களில் பல்வேறு சிரமங்கள், போராட்டங்களுக்கிடையே கடும் உழைப்போடு ‘இமயத்துடன்….’ என்ற தலைப்பில் 150 வாரத் தொடரை எடுத்து முடித்தோம்’’ என்று பெருமை பொங்கச் சொல்லும் விஜயராஜ், இத் தொடரைத் தயாரிப்பதற்கான பெரும்பங்கு பண உதவியை நண்பர்கள் செய்தனர் என நன்றியோடு குறிப்பிடுகிறார். 

டி.எம்.எஸ். முதன்முதலில் மைக் முன் நின்று பாடிய பாடலில் ஆரம்பித்து, எம்.ஜி.ஆர். – சிவாஜியின் திரைப் பாடல்களுக்கு உயிர் கொடுத்து முன்னணித் திரை இசைக் கலைஞராக ஜொலித்தது வரையிலான அனைத்துக் காலகட்டங்களும் ‘இமயத்துடன்…’ தொடரில் பதிவாகியிருக்கின்றன. 40 ஆண்டுகளுக்கும் மேலாக திரைத்துறையில் டி.எம்.எஸ்.ஸோடு பழகியவர்கள், நண்பர்கள், பல்துறைச் சாதனையாளர்களையெல்லாம் சம்பவ இடத்துக்கே சென்று சந்தித்து, அவர்களோடு டி.எம்.சௌந்தரராஜனைக் கலந்துரையாடச் செய்து படமாக்கியிருப்பதுதான் இத்தொடரின் ஸ்பெஷல்! 

‘‘டி.எம்.சௌந்தர்ராஜன் பிறந்து வளர்ந்த வீடு, அவர் படித்த செயின்ட் மேரிஸ் ஸ்கூல், வரதராஜ பெருமாள் கோயில்…. என மதுரையில் படப்பிடிப்பை ஆரம்பித்தோம். 1946-ல் ‘கிருஷ்ண விஜயம்’ படத்துக்காக கோவையிலுள்ள சென்ட்ரல் ஸ்டூடியோவில்தான் டி.எம்.எஸ். தனது முதல் திரைப் பாடலைப் பாடினார். இப்போது அந்த ஸ்டூடியோ பூட்டப்பட்டு புதர்மண்டி சிதிலமடைந்து கிடக்கிறது. அந்த ஸ்டூடியோவில் அவர் பாடிய அறையில் மறுபடியும் டி.எம்.எஸ்.ஸைப் பாடவைத்துப் படம்பிடிக்க முடிவுசெய்தோம். இதற்காகச் சுமார் ஒன்றரை வருடங்கள் அலைந்து திரிந்து அனுமதி வாங்கி, ஸ்டூடியோவைத் திறந்து சுத்தம் செய்து, அதே அறையில் டி.எம்.எஸ். அவர்களை  பாட வைத்தோம். 50 வருடங்களுக்கு முன் தனது கலையுலகப் பிரவேசத்துக்கு பிள்ளையார் சுழி போட்ட அந்த இடத்தில் அவரை மறுபடியும் நிற்கவைத்தபோது, அவரது முகத்தில் பரவிய பரவச உணர்வுகளை வார்த்தைகளில் விவரிக்க முடியாது. உணர்ச்சிபூர்வமான அந்தத் தருணங்களை அப்படியே பதிவுசெய்திருக்கிறோம். பின்னர், அதே கோவையில் உள்ள ‘பட்சி ராஜா ஸ்டூடியோ’விலும் பாட வைத்தோம். இந்த ஸ்டூடியோவில்தான் எம்.ஜி.ஆருக்காக முதன்முதலில், ‘எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே…’ பாடலைப் பாடியிருந்தார் டி.எம்.எஸ். 

TMS

சேலம் மாடர்ன் தியேட்டர்ஸில் படமாக்கவும் பல காலம் காத்திருக்க வேண்டியிருந்தது. ‘தேவகி’ படத்தில் அவர் நடித்த ஸ்டூடியோவிலும் ஷூட் செய்தோம். 

கேரளாவிலுள்ள எம்.ஜி.ஆரின் சொந்த ஊரான ‘குழல் மன்னம்’ (பாலக்காடு) பகுதியில், எம்.ஜி.ஆர். தமது மனைவி சதானந்ததேவியோடு வாழ்ந்த வீட்டிலும் படப்பிடிப்பு நடத்தினோம். எம்.ஜி.ஆர். அரசியலுக்குச் சென்றபிறகு ‘தன்னை சரியாகக் கவனிக்கவில்லை’ என்ற வருத்தம் டி.எம்.எஸ்ஸுக்கு இருந்தது. ஆனாலும், எம்.ஜி.ஆரோடு பழகிய நினைவுகளில் ஆழ்ந்ததில், டி.எம்.எஸ். அவர்கள் ரொம்பவே உணர்ச்சி வசப்பட்டுவிட்டார். எம்.ஜி.ஆரின் உறவுகளோடு கலகலப்பாகப் பேசிச் சிரித்ததில் பழைய வருத்தங்கள் எல்லாம் மறைந்துவிட்டன. எந்த இடத்திலும் டாக்குமென்டரி ஃபீல் வந்துவிடக்கூடாது என்பதற்காக ரொம்பவே மெனக்கெட்டு எடுத்திருக்கிறோம். சுருக்கமாகச் சொன்னால், இந்த மெகா தொடர் டி.எம்.எஸ். என்கிற தனி ஆளுமையின் சரித்திரமாக மட்டுமல்லாமல், தமிழ் சினிமாவின் வரலாற்றையே சொல்வதுபோல் இருக்கும்.’’ – ஒரு சாதனையாளனின் சரித்திரத்தைச் சரியாகவும் முழுமையாகவும் பதிவுசெய்துவிட்ட திருப்தியோடு பேசுகிறார் விஜயராஜ்.

திரையுலகில் டி.எம்.சௌந்தர்ராஜனோடு முரண்பட்டு இருந்ததாகச் சொல்லப்படும் டி.ராஜேந்தர், இளையராஜா ஆகியோரோடும் டி.எம்.எஸ்-ஸை உரையாட வைத்து, வதந்திகளை உடைத்தெறிந்திருப்பதைப் பெருமையாகவே நினைக்கிறார் விஜயராஜ்.

‘‘டி.எம்.எஸ். பாடிய பாடல்களின் பழைய ஆடியோ, வீடியோக்கள் அவ்வளவு எளிதில் கிடைக்கவில்லை. யாரேனும் வைத்திருந்தாலும், தர மனம் இருக்காது. ஆனால், மலேசியாவிலுள்ள தாமஸ் என்கிற தமிழர், பீட்டா டேப்பில் டி.எம்.எஸ்-ஸின் எல்லா ரெக்கார்டுகளையும் பத்திரப்படுத்தி வைத்திருந்ததைக் கேள்விப்பட்டு, அங்கே சென்றோம். தன்னிடமிருந்த அத்தனை பாடல்களையும் எங்களுக்குத் தந்து உதவியதோடு, ‘டி.எம்.எஸ். ஐயா அவர்களின் பாடல்களை வைத்துதான் நாங்கள் பிழைக்கிறோம். அதனால், இந்த ஆடியோ - வீடியோ கிளிப்ஸ்களை உங்களுக்குத் தருவது உதவி அல்ல; நாங்க அவருக்குச் செய்ற கைம்மாறு’ என்று தாமஸ் சொன்னது எங்களை நெகிழவைத்தது'' என்று உணர்ச்சிப் வசப்படுகிறார் விஜயராஜ்.

லதாமங்கேஷ்கர் – டி.எம்.எஸ் சந்திப்பின்போது, ‘'நான் சிவாஜி கணேசனின் ரசிகை. அவர் எங்கள் குடும்ப நண்பர். அவரோட குரலிலேயே பாடி, அவரின் பாடல்களுக்கு உயிர் கொடுத்தவர் நீங்க. அதனால, உங்கமேலே எப்பவுமே எனக்குப் பெரிய மதிப்பும் மரியாதையும் உண்டு’' என்று உணர்ச்சிவசப்பட்டாராம் லதாமங்கேஷ்கர். 

‘‘திரைப் படங்கள், சீரியல்கள் இயக்குவதற்கான வாய்ப்புகள் எனக்கு நிறைய வந்தன. எல்லாவற்றையும் மறுத்து ஒதுக்கிவிட்டு ஒரு தவம் போல் வைராக்கியத்தோடு இந்தத் தொடரை இயக்கியிருக்கிறேன். இதை முழுமையாக முடித்து வெளியிடுவதில் இருந்த தடங்கல்கள் யாவும் நீங்கிவிட்டன. விரைவில், தனியார் தொலைக்காட்சி ஒன்றில், ‘இமயத்துடன்….’ தொடரை ரசிகர்கள் பார்த்து ரசிக்கலாம். டி.எம்.எஸ். அவர்கள் வாழ்ந்த காலத்திலேயே இப்படியொரு பெருமுயற்சியைச் செய்துமுடித்ததும், அதனை டி.எம்.எஸ். அவர்களே பார்த்துப் பாராட்டியதுமே எனக்குப் பெரும் மனநிறைவாக இருக்கிறது’’ என்கிறார் விஜயராஜ் கண்கள் பனிக்க.

 

தமிழ்த் திரை இசையுலகின் சகாப்தமாக விளங்கிய டி.எம்.சௌந்தர்ராஜன் எனும் மாபெரும் கலைஞனுக்கு மறைவு என்பதே கிடையாது. காற்றுள்ளவரை இந்தக் கந்தர்வக் குரலும் ஒலித்துக்கொண்டேயிருக்கும்!

 

Link to comment
Share on other sites

பசி தீர குப்பையைக் கிளறி சாப்பிட்ட யானை... கலங்கிய கிராம மக்கள்!

 
 

யானை

யானைகள் ஆச்சர்யமானவை. எப்போதும் நாம் அதை தலை உயர்த்திதான் பார்த்திருப்போம். அதற்கு அதன் உருவம் ஒரு காரணம் என்றாலும், நம் மனதில் அவற்றின் மீதிருக்கும் ஆச்சர்யமும் முக்கிய காரணம். அந்த யானைகளை தெருக்களுக்கு அழைத்து வந்து பிச்சை எடுக்க வைத்தான் மனிதன் என்ற குற்றச்சாட்டே நம்மை நெருடும். இப்போது, அதனினும் மோசமான ஒரு நிலைக்கு அந்த விலங்கை நாம் தள்ளியிருக்கிறோம். சென்ற வாரம் நீலகிரியில் நடந்த ஒரு சம்பவம் அதை உறுதிப்படுத்தியிருக்கிறது.

நீலகிரி பகுதியில் யானைகள் அதிகம். அதில் ஒரு யானை, உணவு கிடைக்காமல் அலைந்திருக்கிறது. வேறு எங்கும் உணவு கிடைக்காமல், சாலைக்கு நடுவே ஓடியிருக்கிறது. அங்கே குப்பைகள் கொட்டப்பட்ட ஓர் இடத்தை நோக்கி  வந்திருக்கிறது. குப்பைகளை கிளறி, அதில் தனக்கு எதாவது சாப்பிட கிடைக்காதா என அந்த பசியால் வாடிய விலங்கு தேடியிருக்கிறது. அதில் இருந்த சில கழிவுகளை வேறு வழியின்றி அந்த யானை சாப்பிடிருக்கிறது. வேறு வழியில்லை. உயிர் வாழ வேண்டும் என்பதுதானே அத்தனை உயிர்களின் நோக்கமும்?

இதை அங்கிருக்கும் உள்ளூர்வாசிகள் வீடியோ எடுத்திருக்கிறார்கள். ஏனெனில், இது ஒரு சாதாரணமான நிகழ்வு அல்ல. “யானைப் பசிக்கு சோளபொரி” என்பார்கள். அந்த மாதிரிதான் ஆகியிருக்கிறது. இத்தனைக்கும், சம்பவம், நடந்த இடம் காட்டுக்கு மிக அருகில் இருக்கும் இடம். காட்டுக்குள்ளே யானைக்கு உணவு கிடைக்காத அளவுக்கு அதை நாம் சீரழித்திருக்கிறோம். வறட்சியால் தண்ணீரும் கிடைப்பதில்லை. அதனால், விலங்குகள் விரைவில் சோர்வடைகின்றன. 

 

ஒரு யானைக்கு தினமும் 250 கிலோ வரை உணவு வேண்டும். அவை செரிக்கத் தண்ணீரும் வேண்டும். யானையின் உணவில் 60% புற்கள்தான். ஆனால், வறட்சியால் காடுகளில் எங்கேயும் புற்கள் இல்லை. தண்ணீரும் இல்லை. யானைகள் என்ன செய்யும்? இது போன்ற குப்பைகளைக் கூட தேடித்தான் பார்க்கும். அதுவும் போதாமல் மடிந்துதான் போகும்.

கடுமையான வறட்சியின் காரணமாக தமிழக - கேரள எல்லைக் காடுகளில் 50 யானைகள் உட்பட நூற்றுக்கும் அதிகமான வனவிலங்குகள் செத்து மடிந்துள்ளன. கடந்த 3 மாதங்களில் மட்டும் முதுமலை, சத்தியமங்கலம், கோவைக் காடுகளில் 46 யானைகள் இறந்துள்ளன. சில மாத குட்டிகளில் தொடங்கி, 30 வயதான யானைகள் வரை இறந்துப் போயுள்ளன. இந்த இறப்புகளுக்கெல்லாம் முதன்மையான காரணமாக வறட்சி இருக்கிறது. 

பசியாலும், தாகத்தாலும் வாடும் விலங்குகள் மக்கள் வசிக்கும் பகுதிக்கு வரத்தான் செய்யும். அதன் கோவத்தை நாம் புரிந்துகொள்ள வேண்டும். அதன் இருப்பிடமான காட்டுக்குள் மனிதன் புகுந்து சர்வ நாசத்தையும் செய்கிறோம். விலங்குகள் அதை செய்தால் நம்மால் பொறுக்க முடியவில்லை. மனிதனின் எல்லை மீறலுக்குப் பேராசையே காரணம். ஆனால், விலங்குகளின் வருகைக்கு உயிர் வாழ வேண்டியதே காரணம். 

இந்தப் பூமி மனிதர்களுக்கானது மட்டுமேயில்லை. அப்படி வாழ மனிதர்களாலும் முடியாது. இனியாவது, உயிர்ச்சங்கிலியை புரிந்துகொண்டு, இயற்கையின் விதிப்படி நாம் வாழ வேண்டும். இல்லையேல், இன்று யானைகளையும், பிற விலங்குகளையும் துரத்தும் மரணம் மனிதர்களையும் துரத்தும். அப்போது நாம் ஓடி ஒளிய பூமியில் ஓர் இடம் கூட கிடைக்காது.

http://www.vikatan.com

Link to comment
Share on other sites

நெட்டிசன் நோட்ஸ்: வைகோ ஜாமீனில் விடுதலை- திரும்பி வந்துட்டன்னு சொல்லு!

 

 
பட உதவி: சுக்ரன் சிவா ட்விட்டர் பக்கம்.
பட உதவி: சுக்ரன் சிவா ட்விட்டர் பக்கம்.
 
 

தேச துரோக வழக்கில் கைது செய்யப்பட்டு 52 நாட்கள் சிறையில் இருந்த வைகோ இன்று(வியாழக்கிழமை) ஜாமீனில் வெளிவந்துள்ளார். ட்விட்டரில் வைகோ ட்ரெண்டான நிலையில் அது குறித்த கருத்துகளின் தொகுப்பு இன்றைய நெட்டிசன் நோட்ஸில்...

மாயவரத்தான்.... @mayavarathaan

வைகோ ஜாமீனில் விடுதலை. #சிங்கம் திரும்ப வந்திருச்சேய்ய்ய்ய்ய்.....

விக்கி 2.0‏ @mudichavikki

கட்டப்பா ஏன் பாகுபலிய கொன்னாருனு கூட தெரிஞ்சுடுச்சு...

ஆனா இவர் ஏன் ஜெயிலுக்கு வம்படியாகப் போனார்,

ஏன் இவராகவே ஜாமீனில் வந்தார்னு தெரியல #Vaiko.

Latha @Latha95735021

வைகோ ஜீ, சீமான் ஓவரா கத்தறார்.

கூட்டு சேருங்க.. உங்க வேலைய காட்டுங்க!

Hasan @smhrkalifa

நீர் வெளிவந்ததும்தான் தமிழக மீம்ஸ் கிரியேட்டர்களுக்கு கிடைக்கும் விடியல். #Vaiko

S.Chithambaram @ias1india

வைகோ அவர்களை சிறையில் வைத்திருப்பது தேவையில்லாத செலவு தான். - அரசு

இன்னும் எத்தனையோ பேர் சிறையில் இருக்கிறார்களே...விடுவித்து செலவை குறைக்கலாமே?

VïñothKumar‏ @avavinoth

வைகோவுக்கு ஜாமீனில் விடுதலை,

அரசையே செலவு செய்ய வைத்த சிங்கம் வருதுடா.. #Vaiko

RAJESH KUMAR‏ @rajeshselvamc

விஜயகாந்த் இல்லைனா என்ன... அடுத்த இலக்கு ரஜினிகாந்த்..! #வைகோ.

vaiko_3168078a.jpg

VASANTH sp‏ @v_tharai

ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்ததை வரவேற்கிறேன்.

வாங்க தலைவா...

அதிமுக வினர் ரொம்ப பண்றாங்க..

திமுக வினர் ரொம்ப பேசுறாங்க.. #vaiko #mdmk

ANSIF ANEESH‏ @AnsifAneesh

சிறைப்பறவை அண்ணன் வைகோ...

நீண்ட நாள் சிறைவாசம் கழித்த தமிழக அரசியல்வாதி இவரே...! #Vaiko

Hasan Kalifa‏ @smhrkalifa

கிரேக்கத்தின் கிரகமே, அரிஸ்டாட்டலின் அரிச்சுவடியே, நாஸ்ட்டார்டாமின் நாதசுரமே, நீ வருக

மக்களுக்கு மகிழ்ச்சியை அள்ளித்தருக. #Vaiko

RAMAKRISHNAN V‏ @Ram13021991

#Vaiko நல்ல மனிதர். தமிழர் பிரச்சனைகளுக்கு அஞ்சாமல் குரல் கொடுப்பவர். தமிழக அரசியலில் அவரின் பேச்சாற்றல் மற்றும் பங்களிப்பு முக்கியமானது.

அன்புடன்_சைப்‏ @SuhuSaif

களம் இறங்கினார் வைகோ. பிரம்மாஸ்திரம் விரைவில் ஏவப்படும்.

நாம் தமிழருடன் கூட்டணி..

King David‏ @india6am

#Vaiko #MDMK இனிமே அறிக்கை பறக்கும்; மறியல் வெடிக்கும்.

தங்க.இளவரசன்‏ @elasan89

புழலில் இருந்து வைகோ விடுதலை.

கைப்பிள்ளை அருவாளோடு கிளம்பிட்டாரே.. இனி எத்தனை கட்சி பறக்கப் போகுதோ தெரியலையே?

vaiko1_3168077a.jpg

SarcasticDude@Kartiktweaks

வைகோ ஜாமீனில் விடுதலை.

குருநாதா நீங்க இல்லாத நேரமா பார்த்து ரஜினி அரசியலுக்கு வரப்போறாராம் குருநாதா.

வந்து உங்க கெத்த காட்டுங்க குருநாதா..

CSK வாழவந்தார்‏ @IamVavar

ரஜினி அரசியலுக்கு வர்றார்னா கட்சிகதான் பயப்படுது. ஆனா வைகோ வெளியவர்றார்னா நாடே நடுங்குது பார்த்தியா.. அதாம்லே வர்கீசு!

சுபாஷ்‏ @su_boss2

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ ஜாமின் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல்.

வைகோ: அவுத்து விடலாம்ல?

ஜட்ஜ்: கட்டவே இல்ல போங்க.
vaiko3_3168079a.jpg

யுகராஜேஸ் @yugarajesh2

ரஜினிய போய் பார்த்திட்டு நானும் ரஜினியும் நீண்டக் கால நண்பர்கள்னு வைகோ பேட்டி தரப்போறதை நினைச்சா தான் லைட்டா பீதியாவுது.

ஆலங்காட்டான்‏ @alangatan

யார் பேரைக் கேட்டா பூமி அதிர்ந்து, மீம் கிரியேட்டர்களுக்கு சந்தோசமாகவும் அரசியல் தலைவர்களுக்குலாம் அள்ளு விடுதோ அவர் பேர்தான் 'வைகோ'. #VaikoisBack

iamkumar_sk

யாருப்பா அது கட்சி ஆரம்பிக்கறப் போறன்னு சொன்னது.

நான் வந்துட்டனு சொல்லு; திரும்பி வந்துட்டன்னு சொல்லு!

tamil.thehindu

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Posts

    • கணேசமூர்த்தியின் இந்த விபரீத முடிவுக்கு வைகோ தான் காரணம்..!  
    • ஓயாத நிழல் யுத்தங்கள்-5 வியட்நாம் கதை இரண்டாம் உலகப் போரின் பின்னர், இரு துருவங்களாகப் பிரிந்து நின்ற உலக நாடுகளில், இரு அணுவாயுத வல்லரசுகளின் நிழல் யுத்தம் பனிப்போராகத் தொடர்ந்தது. அந்தப் பனிப்போரின் மையம், அண்டார்டிக் கண்டம் தவிர்ந்த உலகின் எல்லாக் கண்டங்களிலும் இருந்தது. தென்கிழக்கு ஆசியாவில், உலக வல்லரசுகளின் பனிப்போரின் தீவிர வடிவமாகத் திகழ்ந்த வியட்நாம் போர் பற்றிப் பார்ப்போம். வியட்நாம் மக்களின் வரலாற்றுப் பெருமை பொதுவாகவே ஆசியக் கலாச்சாரங்களில் பெருமையுணர்வு (pride) ஒரு கலாச்சாரப் பண்பாகக் காணப்படுகிறது. வியட்நாமின் வரலாற்றிலும் கலாச்சாரத் தனித்துவம், தேசிய அடையாளம் என்பன காரணமாக ஆயிரம் ஆண்டுகளாக அதன் அயல் நாடுகளோடு போராடி வாழ வேண்டிய நிலை இருந்திருக்கிறது. பிரதானமாக, வடக்கேயிருந்த சீனாவின் செல்வாக்கிற்கு உட்படாமல் வியட்நாமியர்கள் தனித்துவம் பேணிக் கொண்டிருந்தனர். ஆனால், வியட்நாம் என்பது ஒரு தேசிய அடையாளமாக திரளாதவாறு, மத, பிரதேச வாதங்களும் அவர்களுக்குள் நிலவியது. கன்பூசியஸ் நம்பிக்கைகளைப் பின்பற்றிய வட வியட்நாமிற்கும், சிறு பான்மைக் கிறிஸ்தவர்களைக் கொண்ட தென் வியட்நாமிற்குமிடையே கலாச்சார வேறு பாடுகள் இருந்தன. இந்த இரு தரப்பில் இருந்தும் வேறு பட்ட மலைவாழ் வியட்நாமிய மக்கள் மூன்றாவது ஒரு தரப்பாக இருந்திருக்கின்றனர். 19 ஆம் நூற்றாண்டில், ஐரோப்பிய காலனித்துவம் இந்தோ சீனப் பகுதியில் கால் பதித்த போது, வியட்நாம், லாவோஸ், கம்போடியா ஆகிய பகுதிகள் பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் வந்தன. காலனித்துவத்தை எதிர்ப்பதிலும் கூட, வியட்நாமின் வடக்கிற்கும், தெற்கிற்குமிடையே வேறுபாடு இருந்திருக்கிறது. எனினும், பிரெஞ்சு ஆதிக்கத்தை வியட்நாமியர் தொடர்ந்து எதிர்த்து வந்தனர். இரண்டாம் உலகப் போரின் போது, 1945 இல் ஜப்பான் பிரான்சிடமிருந்து இந்தோ சீனப் பிராந்தியத்தை பொறுப்பெடுத்த போது, பிரெஞ்சு ஆட்சியில் கூட நிகழாத வன்முறைகள் அந்தப் பிராந்திய மக்கள் மீது நிகழ்த்தப் பட்டன.   அதே ஆண்டின் ஆகஸ்டில், ஜப்பான் தோல்வியடைந்து சரணடைந்த போது, உள்ளூர் தேசியத் தலைமையாக இருந்த வியற் மின் (Viet Minh) என அழைக்கப் பட்ட கூட்டணியிடம் ஆட்சியை ஒப்படைத்து வெளியேறியது. இதெல்லாம் நடந்து கொண்டிருந்த காலப் பகுதியில், உலக கம்யூனிச இயக்கத்தினால் ஈர்க்கப் பட்டிருந்த ஹோ சி மின் நாடு திரும்பி வட வியற்நாமில் கம்யூனிச ஆட்சியை பிரகடனம் செய்கிறார். இந்தக் காலப் பகுதி, உலகம் இரு துருவங்களாகப் பிரிவதற்கான ஆரம்பப் புள்ளிகள் இடப் பட்ட ஒரு காலப் பகுதி. முடிந்து போன உலகப் போரில் பங்காளிகளாக இருந்த ஸ்ராலினின் சோவியத் ஒன்றியமும், மேற்கு நாடுகளும் உலக மேலாண்மைக்காகப் போட்டி போட ஆரம்பித்த காலம் இந்த 1940 கள் - சீனாவின் மாவோ இன்னும் அரங்கிற்கே வரவில்லை என்பதைக் கவனிக்க வேண்டும். மீண்டும் ஆக்கிரமித்த பிரான்ஸ் கம்யூனிச விரிவாக்கத்திற்கு ஹோ சி மின் ஆட்சி வழி வகுக்கலாமெனக் கருதிய பிரிட்டன், ஒரு படை நடவடிக்கை மூலம் தென் வியட்நாமைக் கைப்பற்றி, தென் வியட்நாமை மீளவும் பிரெஞ்சு காலனித்துவ வாதிகளிடம் கையளித்தது. ஒரு கட்டத்தில், வியட்நாமை பிரெஞ்சு ஆட்சியின் கீழ் இருக்கும் ஒரு சுதந்திர தேசமாக அங்கீகரிக்கும் ஒப்பந்தம் கூட பிரான்சுக்கும், வியற் மின் அமைப்பிற்குமிடையே கைச்சாத்தானது. ஆனால், இந்த ஒப்பந்தத்தின் ஆயுட்காலம் வெறும் 2 மாதம் தான். பிரெஞ்சுப் படைகள் வடக்கை நோக்கி முன்னேற, வியற் மின் பின்வாங்க பிரெஞ்சு வியட்நாம் போர் ஆரம்பித்தது. இந்தப் போரில், முழு வியட்நாமும் பிரெஞ்சு ஆதிக்கத்தை எதிர்க்கவில்லையென்பதையும் கவனிக்க வேண்டும். வியட்நாமின் அரச வாரிசாக இருந்த பாவோ டாய் (Bao Dai), பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் ஒரு தனி தேசமாக வியட்நாம் தொடர்வதை இறுதி வரை ஆதரித்து வந்தார். தொடர்ந்த யுத்தம் 1954 இல் ஒரு சமாதான ஒப்பந்தத்துடன் முடிவுக்கு வந்த போது, லாவோஸ், கம்போடியா ஆகிய நாடுகள் பிரான்சிடமிருந்து சுதந்திரமடைந்தன. புதிதாக வியட்நாம் தலைவராக நியமிக்கப் பட்ட டியெம், தென் வியட்நாமைத் தனி நாடாகப் பிரகடனம் செய்ததோடு, வடக்கில் இருந்த வியற் மின் தரப்பிற்கும், தென் வியட்நாமிற்கும் போர் மீண்டும் மூண்டது. அமெரிக்காவின் வியட்நாம் பிரவேசம் அமெரிக்கா, உலகப் போரில் பாரிய ஆளணி, பொருளாதார இழப்பின் பின்னர் தன் படைகளை இந்தோ சீன அரங்கில் இருந்து வெகுவாகக் குறைத்துக் கொண்டு, ஐரோப்பிய அரங்கில் கவனம் செலுத்தத் தீர்மானித்திருந்தது (இதனால், 50 களில் வட கொரியா தென் கொரியா மீது தாக்குதல் தொடுத்த போது கூட உடனடியாக சுதாரிக்க இயலாமல் அமெரிக்கப் படைகளின் பசுபிக் தலைமை தடுமாறியது). அமெரிக்கா ஏற்கனவே பிரிட்டனின் காலனித்துவத்தில் இருந்து விடுபட்ட ஒரு நாடு என்ற வகையில், அந்தக் காலப் பகுதியில் ஒரு காலனித்துவ எதிர்ப்பு மனப் பாங்கைக் கொண்டிருந்தமையால், பிரெஞ்சு, பிரிட்டன் அணிகளின் வியட்நாம் மீதான தலையீட்டில் பங்கு கொள்ளாமல் விலகியிருந்தது. இத்தகைய காலனித்துவ எதிர்ப்பின் விளைவாக, உலகில் கம்யூனிச மேலாதிக்கம் உருவாகும் போது எதிர் நடவடிக்கையின்றி இருக்க வேண்டிய சங்கடமான நிலை அமெரிக்காவிற்கு. இப்படியொரு நிலை உருவாகும் என்பதை ஏற்கனவே உணர்ந்திருந்த அமெரிக்க வெளியுறவுத் துறையின் அதிகாரியான ஜோர்ஜ் கெனன், 1947 இலேயே Policy of Containment என்ற ஒரு வெளியுறவுக் கொள்கை ஆவணத்தை தயாரித்து வெளியிட்டிருந்தார். ட்ரூமன் கொள்கை (Truman Doctrine) என்றும் அழைக்கப் படும் இந்த ஆவணத்தின் அடி நாதம்: “உலகின் எந்தப் பகுதியிலும் மக்கள், பிரதேசங்கள் சுதந்திரம், ஜனநாயகம் என்பவற்றை நாடிப் போராடினால், அமெரிக்காவின் ஆதரவு அவர்களுக்குக் கிடைக்கும்” என்பதாக இருந்தது. மறைமுகமாக, "தனி மனித அடக்கு முறையை மையமாகக் கொண்ட கம்யூனிசம் பரவாமல் தடுக்க அமெரிக்கா உலகின் எந்த மூலையிலும் செயல்படும்" என்பதே ட்ரூமன் கொள்கை.   இந்த ட்ரூமன் கொள்கையின் முதல் பரீட்சார்த்தக் களமாக தென் வியட்நாம் இருந்தது எனலாம். 1956 இல், டியேம் தென் வியட்நாமை சுதந்திர நாடாக பிரகடனம் செய்த சில மாதங்களில், அமெரிக்காவின் இராணுவ ஆலோசனையும், பயிற்சியும் தென் வியட்நாமின் படைகளுக்கு வழங்க அமெரிக்கா ஏற்பாடுகளைச் செய்தது. தொடர்ந்து, 1961 இல், சோவியத் ஒன்றியத்திடமிருந்து கடும் சவால்களை எதிர் கொண்ட அமெரிக்க அதிபர் கெனடி, அமெரிக்காவின் விசேட படைகளை தென் வியட்நாமிற்கு அனுப்பி வைக்கிறார். விரைவாகவே, பகிரங்கமாக தென் வியட்நாமில் ஒரு அமெரிக்கப் படைத் தலைமயகப் பிரிவு வியட்நாமின் (US Military Assistance Command Vietnam- MACV) நடவடிக்கைகளுக்காகத் திறக்கப் படுகிறது. கெனடியின் கொலையைத் தொடர்ந்து அமெரிக்க அதிபரான லிண்டன் ஜோன்சன், நேரடியான அமெரிக்கப் படை நடவடிக்கைகளை வியட்நாமில் ஆரம்பிக்க அனுமதி அளித்தது 1965 பெப்ரவரியில். இந்த நடவடிக்கைக்கு அமெரிக்க காங்கிரஸ் அனுமதி அளித்திருந்தது குறிப்பிடத் தக்கது. Operation Rolling Thunder என்ற பெயருடன், வட வியட்நாம் மீது தொடர் குண்டு வீச்சு நடத்துவது தான் அமெரிக்காவின் முதல் நடவடிக்கை.  வடக்கும் தெற்கும் 1954 இன் ஜெனீவா ஒப்பந்தம், வியட்நாமை வடக்கு தெற்காக 17 பாகை அகலாங்குக் கோட்டின் படி இரு நாடுகளாகப் பிரித்து விட்டிருந்தது. 10 மாதங்களுக்குள் இரு பாதிகளிலும் இருக்கும் வியட்நாமிய மக்கள் தாங்கள் விரும்பும் பாதிக்கு நகர்ந்து விடுமாறும் கோரப் பட்டிருந்தது. வடக்கிலும் தெற்கிலும் இருந்து பழி வாங்கல்களுக்கு அஞ்சி மக்கள் குடிபெயர்ந்த போது குடும்பங்கள், உறவுகள் பிரிந்தன. ஹோ சி மின்னின் கம்யூனிச வழியை ஆதரித்த மக்கள், வடக்கு நோக்கி நகர்ந்தனர், இவர்களில் பலர் வியற் கொங் என அழைக்கப் பட்ட கம்யூனிச ஆயுதப் படையில் சேர்ந்தனர். தென் வியட்நாமில், கம்யூனிச வடக்கை ஆதரித்த பலர் தங்கவில்லையாயினும், நடு நிலையாக நிற்க முனைந்தவர்களே நிம்மதியாக வசிக்க இயலாத கெடு பிடிகளும், கைதுகளும் தொடர்ந்தன. இந்த நிலையில், வடக்கின் கம்யூனிச ஆயுதப் பிரிவான வியற் கொங், வியட்நாமின் அடர்ந்த காடுகளூடாக Ho Chi Minh trail எனப்படும் ஒரு இரகசிய வினியோக வழியை உருவாக்கி, தென் வியட்நாமை உள்ளிருந்தே ஆக்கிரமிக்கும் வழிகளைத் தேடியது.  இந்த இரகசிய காட்டுப் பாதை வட வியட்நாமில் இருந்து 500 கிலோமீற்றர்கள் வரை தெற்கு நோக்கி லாவோஸ் மற்றும் கம்போடியா நாடுகளினூடாக நகர்ந்து தென் வியட்நாமில் 3 - 4 இடங்களில் எல்லையூடாக ஊடறுத்து உட் புகும் வழியை வியற் கொங் போராளிகளுக்கு வழங்கியது. இந்த வினியோக வழியை முறியடிக்கும் இரகசிய யுத்தமொன்றை, அமெரிக்க விசேட படைகள் லாவோஸ் காடுகளில் வியட்நாம் ஆக்கிரமிக்கப் படும் முன்னர் இருந்தே முன்னெடுத்து வந்தன. சின்னாபின்னமான வியட்நாம் மக்கள் பனிப்போர் காலத்தில் அமெரிக்கா நடத்திய யுத்தங்களுள், மிக உயர்வான பொது மக்கள் அழிவை உருவாக்கியது வியட்நாம் போர் தான். 1965 முதல் 1975 வரையான வியட்நாம் யுத்தத்தில் கொல்லப் பட்ட மக்கள் தொகை 2 மில்லியன்கள்: வியட்நாமியர், கம்போடியர், லாவோஸ் நாட்டவர் இந்த 2 மில்லியன் பலிகளில் அடங்குகின்றனர். இதை விட 5.5 மில்லியன் பொது மக்கள் காயமடைந்தனர். வாழ்விடங்கள், பயிர்செய்கை நிலங்கள் அழிக்கப் பட்டன. இந்த 10 வருட யுத்தத்தில், அமெரிக்காவின் நேரடிப் பிரசன்னம் 1972 வரை நீடித்த அமெரிக்க வியட்நாம் யுத்தம். இந்தக் காலப் பகுதியில், அமெரிக்கப் படைகள் மட்டுமன்றி, பசுபிக்கில் அமெரிக்காவின் நேச அணியைச் சேர்ந்த தென் கொரியா, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளின் படைகளும் பெருமளவில் யுத்தத்தில் பங்கு பற்றின. இந்தப் படைகளும், அமெரிக்கப் படைகளுடன் சேர்ந்து வியட்நாம் மக்களுக்கெதிரான கொடூர வன்முறைகளை நிகழ்த்தினாலும், குறிப்பிடத் தக்க பாரிய வன்முறைகளை அமெரிக்கப் படைகளே செய்தன. இந்த வன்முறைகள் பற்றி ஏராளமான சாட்சியங்களும், அவற்றின் அடிப்படையிலான நூல்களும் வெளிவந்திருக்கின்றன. வியட்நாம் போரில், அமெரிக்கப் படைகள் பொது மக்களை நடத்திய விதத்திற்கு மிகச் சிறந்த உதாரணமான சம்பவம் மை லாய் (My Lai) படுகொலைச் சம்பவம். 1968 இல், ஒரு மார்ச் மாதம் காலையில் மை லாய் கிராமத்தில் நூற்றுக் கணக்கான வியட்நாமிய பொது மக்களைச் சுற்றி வளைத்த அமெரிக்கப் படைப்பிரிவின் அணியொன்று, மிகக் குறுகிய நேர விசாரிப்பின் பின்னர் அவர்களைச் சரமாரியாகச் சுட்டுக் கொன்றது. கொல்லப் பட்ட மக்கள் ஒரு 500 பேர் வரை இருப்பர், அனைவரும் நிராயுத பாணிகள், பெரும்பாலானோர் பெண்களும் குழந்தைகளுமாக இருந்தனர். இந்தப் படுகொலை பாரிய இரகசியமாக அல்லாமல், நூற்றுக் கணக்கான அமெரிக்கப் படையினரின் முன்னிலையில் நடந்தது. அந்த நடவடிக்கைப் பகுதியில், உலங்கு வானூர்தி விமானியாக சுற்றித் திரிந்த ஹியூ தொம்சன் என்ற ஒருவரைத் தவிர யாரும் இதைத் தடுக்க முயலவில்லை. தொம்சன், தன்னுடைய உலங்கு வானூர்தியை அமெரிக்கப் படைகளுக்கும் கொல்லப் படவிருந்த மக்கள் கூட்டத்திற்குமிடையில் தரையிறக்கி ஒரு சிறு தொகையான சிவிலியன்களைக் காப்பாற்றினார். காயமடைந்த சிலரை உலங்கு வானூர்தி மூலம் அகற்றிய பின்னர், மேலதிகாரிகளுக்கும் மை லாய் படுகொலை பற்றித் தெரிவித்தார் தொம்சன். மிகுந்த தயக்கத்துடன் விசாரித்த அமெரிக்க படைத்துறை, படு கொலை பற்றிச் சாட்சி சொன்னவர்களைத் தண்டனை கொடுத்து விலக்கி வைத்தது. படு கொலைக்குத் தலைமை தாங்கிய படை அதிகாரி வில்லியம் கலி, 3 வருடங்கள் கழித்து இராணுவ நீதி மன்றில் சிறைத் தண்டனை விதிக்கப் பட்டாலும், 3 நாட்கள் மட்டுமே சிறையில் கழித்த பின்னர் மேன்முறையீடு, பிணை என இன்று வரை சுதந்திரமாக உயிரோடிருக்கிறார். இந்தப் படுகொலையில் சரியாக நடந்து கொண்ட விமானி தொம்சனையும் இன்னும் இருவரையும் 1998 இல் - 30 ஆண்டுகள் கழித்து- அமெரிக்க இராணுவம் விருது கொடுத்துக் கௌரவித்தது. இத்தகைய சம்பவங்கள் மட்டுமன்றி, ஒட்டு மொத்தமாக வியட்நாம் மக்களை வகை தொகையின்றிக் கொன்ற நேபாம் குண்டுகள் (Napalm - இது ஒரு பெற்றோலியம் ஜெல்லினால் செய்யப் பட்ட குண்டு), ஏஜென்ற் ஒறேஞ் எனப்படும் இரசாயன ஆயுதத் தாக்குதல் என்பனவும் அமெரிக்காவின் கொலை ஆயுதங்களாக விளங்கின. 1972 இல், அமெரிக்காவில் உள்ளூரில் வியட்நாம் போருக்கெதிராக எழுந்த எதிர்ப்புகளால், அமெரிக்கா தன் தாக்குதல் படைகளை முற்றாக விலக்கிக் கொண்ட போது 58,000 அமெரிக்கப் படையினர் இறந்திருந்தனர். இதை விட இலட்சக் கணக்கான உயிர் தப்பிய அமெரிக்கப் படையினருக்கு, PTSD என்ற மனவடு நோய் காரணமாக, அவர்களால் சாதாரண வாழ்க்கைக்குத் திரும்ப இயலாத நிலை ஏற்பட்டது. வியட்நாம் போரின் முடிவு அமெரிக்காவின் படை விலகலுக்குப் பின்னர், படிப்படியாக அமெரிக்காவின் தென் வியட்நாமிற்கான நிதி, ஆயுதம், பயிற்சி என்பன குறைக்கப் பட்டன. 1975 ஏப்ரலில், வடக்கு வியட்நாமின் படைகள் மிக இலகுவாக தெற்கு வியட்நாமின் சாய்கன் நகரை நோக்கி நெருங்கி வந்த போது, அமெரிக்காவின் ஆதரவாளர்கள், அமெரிக்கப் பிரஜைகள் ஆகியோரை Operation Frequent Wind  என்ற நடவடிக்கை மூலம் அவசர அவசரமாக வெளியேற்றினார்கள். தெற்கு வியட்நாமை ஆக்கிரமித்த வடக்கு வியட்நாம், மேலும் முன்னேறி, கம்போடியாவையும் ஒரு கட்டத்தில் ஆக்கிரமித்து, இந்தோ சீனப் பிரதேசத்தை ஒரு தொடர் கொலைக் களமாக வைத்திருந்தது. இந்தப் பிரதேசங்களில் இருந்து கடல் வழியே தப்பியோடிய மக்கள் “படகு மக்கள்” என அழைக்கப் பட்டனர். இன்று றொஹிங்கியாக்களுக்கு நிகழும் அத்தனை அனியாயங்களும் அவர்களுக்கும் நிகழ்ந்தன. -          தொடரும்
    • தமிழ்நாட்டில் நடக்கும் அநிஞாயங்கள் பாலியல் வல்லுறவுகள் கூட்டு பாலியல் கொலை கொள்ளை என்று திராவிட கும்பல்களால் தினமும் செய்திகள் வருகின்றன. எவருமே அதைப்பற்றி அக்கறை கொள்வதில்லை. ஆனால் சீமானைப்பற்றி ஏதாவது நல்ல செய்தி வந்தால் உடனே கூட்டமாக சேர்ந்து தாக்குதல் நடக்குது. என்ன கூட்டமோ?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.