Jump to content

இளமை புதுமை பல்சுவை


Recommended Posts

இது ஒரு பல்சுவை திரி. நான் படித்தது பார்த்ததை பதிவிடுகிறேன்.:) இயன்றவரை யாழில் வேறு திரிகளில் வராத நிகழ்வுகளை பதிவிட முயற்சிக்கிறேன்.

 

 

கால்கள் இல்லை... நம்பிக்கை உண்டு: மாடலிங் துறையில் சாதிக்கும் சீசர்!

 

பிறக்கும்போதே இரண்டு கால்களும் இல்லாமல் பிறந்தவர் கென்யா சீசர் (23). ஆனால் தற்போதோ இவர் ஒரு வெற்றிகரமான உள்ளாடை மாடல்.

கென்யா 5 வயதாக இருக்கும்போது தாய்லாந்தைச் சேர்ந்த ஒரு அனாதை இல்லம் அவரை தத்து கொடுத்தது. அவர் தனது புதிய குடும்பத்துடன் (ஒரேகான்) போர்ட்லாந்து சென்றார். சக்கர நாற்காலி மற்றும் ஸ்கேட்டிங் போர்டை பயன்படுத்தி அவர் நடக்கக் கற்றுக்கொண்டார்.

girllls_vc3.jpg


கலிபோர்னியாக்ச் சேர்ந்தவரான கென்யா, தனது வாழ்க்கை குறித்து கூறுகையில், “மாடலிங் துறையில் சாதிக்க வேண்டும் என்ற எனது கனவு தற்போது நிறைவேறி இருக்கிறது. நான் முக்கியமாக தடகள உள்ளாடைகள் விளம்பரங்களில் நடிக்கிறேன். இது சில சமயம் வேடிக்கையாக இருக்கும். நான் வித்தியாசமாகவும், கவர்ச்சியாகவும் இருக்கிறேன். கவர்ச்சியாக உணர கால்கள் தேவை இல்லை. எனது வேலையை விரும்பி செய்து நான் சம்பாதிக்கிறேன். எனது அழகை மக்களிடையே காட்டுவதை விரும்புகிறேன். இது எனது பலத்தை காட்டுகிறது” என்கிறார்.

இந்த உள்ளாடை மாடலிங் துறை மூலம் தினமும் 65 ஆயிரம் ரூபாய் வரை வருமானம் ஈட்டி வருகிறார் கென்யா. பேஷன் துறையின் தடைகளை உடைத்து இவ்வாறு இவர் புகழ் பெறுவதன் மூலம்,  பெண்களுக்கு முன் உதாரணமாக இருக்கிறார்.

விளையாட்டின் மீதுள்ள ஆர்வத்தால், தற்போது 2018 பாரா ஒலிம்பிக் போட்டிக்கு பயிற்சி பெறுகிறார் கென்யா. வாழ்க்கையில் தனது பயணம் குறித்து, இவர் எழுதியுள்ள ஒரு புத்தகம் அடுத்த வருடம் (2016 ல்) வெளிவரவுள்ளது.

 

Link to comment
Share on other sites

  • Replies 11.3k
  • Created
  • Last Reply

சுரைக்காய் பணம், கிளிஞ்சல் காசு!

panda_2592668f.jpg
 

அம்மா கடைக்குப் போய் ஏதாவது வாங்கச் சொன்னாலோ, பேருந்து, ரயில் போன்றவற்றில் பயணம் செய்யும்போது டிக்கெட் வாங்கவோ, நொறுக்குத்தீனி வாங்கவோ வேண்டுமென்றால் என்ன வேண்டும்? காசு அல்லது பணம் வேண்டும் இல்லையா? பணம் என்றாலே அது காகித நோட்டாகவோ அல்லது சலசலக்கும் நாணயங்களாகவோ இருக்கும் என்றே நாம் நினைக்கிறோம்.

இன்றைக்குத்தான் பணம் அப்படி இருக்கிறது. ஆனால், காலங்காலமாகப் பணம் மாறி வந்த வடிவங்களைப் பற்றித் தேடினால், மிக ஆச்சரியமாக இருக்கிறது:

l ஒரு காலத்தில் வட அமெரிக்காவில் உள்ள ஹைதி தீவில் காய்கறிகூட பணமாகக் கருதப்பட்டிருக்கிறது என்றால் நம்ப முடிகிறதா? ஹைதியில் இன்றைக்கும் 'கௌர்டு' என்றே பணம் அழைக்கப்படுகிறது. கௌர்டு என்றால் சுரைக்காய் என்று அர்த்தம். 1807-ம் ஆண்டில் ஹைதியின் ஆளுநராக ஹென்றி கிறிஸ்டோபே இருந்தார். அப்போது, அந்தத் தீவின் கடன் அடைக்க முடியாத அளவுக்கு அதிகமாகிவிட்டது. ஆனால், நாட்டில் சுரைக்காய் மட்டும் ஏகபோகமாக விளைந்தது. பார்த்தார் ஹென்றி, தீவில் விளைந்த ஒவ்வொரு சுரைக்காயும் அரசுக்குச் சொந்தம் என்று அறிவித்தார். அரசின் பணியாளர்கள் ஒவ்வொரு கிராமமாகச் சென்று எல்லா சுரைக்காய்களையும் கொண்டுவந்தார்கள். 2.27 லட்சம் சுரைக்காய்களை அரசின் கஜானாவில் சேர்த்தார்கள். அதற்குப் பதிலாக விவசாயிகளுக்குப் பணம் கொடுக்கப்பட்டது. அதற்குப் பிறகுதான் அந்த நாட்டின் அதிகாரப்பூர்வ பணத்துக்கு ‘கௌர்டு’ என்ற பெயர் சூட்டப்பட்டது.

l அமெரிக்காவின் சில பகுதிகளில் புகையிலையும், மான் தோலும் பணமாகப் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. மான் தோலுக்கு ஆங்கிலத்தில் ‘Buckskin' என்று பெயர். இன்றைக்கும் ஆங்கிலத்தில் பணம் ‘Bucks' என்று அழைக்கப்படுவதற்கு இதுவே காரணம்.

l மேற்கு பசிஃபிக் பெருங்கடலில் இருக்கும் மைக்ரோனேசிய தீவில் மிகப் பெரிய சுண்ணாம்புப் பாறைகள் உள்ளன. அவை வெட்டியெடுக்கப்பட்டு நாணயமாகச் செதுக்கப்பட்டு பணமாகப் பயன்படுத்தப்பட்டுள்ளன. இந்த நாணயங்கள் எவ்வளவு பெரிதாக இருக்கின்றனவோ, அதற்கேற்ப மதிப்பு கூடும். 12 அடி சுற்றளவு கொண்ட நாணயங்கள்கூட இருந்திருக்கின்றன. தங்கள் அந்தஸ்தை வெளிப்படுத்த வீட்டுக்கு வெளியிலேயே இந்தப் பிரம்மாண்டமான நாணயங்களைக் காட்சிக்கு வைத்திருப்பார்களாம்.

l பண்டைய காலத்தில் ஆழமற்ற பசிஃபிக், இந்தியக் கடற்கரைகளில் சின்னச் சின்ன சோழிகள் (கிளிஞ்சல்) கிடைத்துக்கொண்டிருந்தன. இந்த சோழிகளே மிகப் பரவலாகவும் மிக நீண்ட காலத்துக்கும் பணமாகப் பயன்படுத்தப்பட்டுவந்தன. சீனாவில்தான் இந்தச் சோழிகள் முதலில் பணமாகப் பயன்படுத்தப்பட்டன. சீனாவின் சித்திர எழுத்தில் பணம் என்ற வார்த்தைக்கு சோழியே வரையப்படுகிறது. சீனா மட்டுமல்ல, இந்தியாவின் பல பகுதிகளிலும் சோழிகள் பணமாகப் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. ஆப்பிரிக்காவின் பல பகுதிகளில் 18-ம் நூற்றாண்டு வரை சோழிகள் பணமாகப் பயன்படுத்தப்பட்டுள்ளன.

l ஆஸ்திரேலியா பக்கத்தில் உள்ள ஃபிஜித் தீவில் திமிங்கிலத்தின் பல் பணமாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது. அதிலும் வெள்ளைப் பல்லைவிடச் சிவப்புப் பல்லுக்கு மதிப்பு ரொம்ப அதிகம். திமிங்கிலத்தின் பல் வரிசை ரம்பத்தைப் போலிருக்கும். அதிலிருந்து பற்கள் தனியாக உடைத்தெடுக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டுள்ளன.

l ‘ஆப்லாங்’ எனப்படும் ஒட்டியிருக்கும் இரட்டைக் கிளி்ஞ்சல்கள் இரண்டாகப் பிரிக்கப்பட்டு, வெட்டி பட்டை தீட்டப்பட்டு, சிறுசிறு பாசிமணிகளாக மாற்றப்பட்டன. இப்படி உருமாறிய பிறகு, அதற்குப் பெயர் வாம்பம். அதற்கு வெள்ளை என்று அர்த்தம். வட அமெரிக்காவில் இருந்த செவ்விந்தியப் பழங்குடிகள் வாம்பம்மைப் பணமாகப் பயன்படுத்தியுள்ளனர். அது மதிப்புமிக்கதாகக் கருதப்பட்டதற்கு முக்கிய காரணம், அந்த வகை கிளிஞ்சல்கள் எளிதாகக் கிடைக்கவில்லை. அத்துடன் அவற்றைப் பாசிமணியாக மாற்றுவதும் கஷ்டமாக இருந்தது. பொதுவாக வெள்ளைநிறப் பாசிமணிகள் பயன்படுத்தப்பட்டாலும், அதைவிடவும் அரிதாக இருந்த கறுப்புக் கிளிஞ்சல் பாசிமணி இரட்டை மதிப்புடையதாகக் கருதப்பட்டது. ஒரு காலத்தில் வங்கியில் கடனை அடைக்கக்கூட இந்த கிளிஞ்சல் பாசிமணிகள் பணமாகப் பயன்படுத்தப்பட்டுள்ளதைப் பார்க்கும்போது ஆச்சரியமாகத்தான் இருக்கிறது.

Link to comment
Share on other sites

இது பீச்சாங்கரை கிரிக்கெட் மாமு!

 
 
  • beach_2586983g.jpg
     
  • beach2_2586984g.jpg
     

ஈ.சி.ஆரின் மெரினாவாக ஆகிக்கொண்டிருக்கும் திருவான்மியூர் கடற்கரையில் கடலுடன் போட்டி போட்டுக்கொண்டு மக்களும் அலைமோதிக்கொண்டிருந்தார்கள். மக்கள் நெரிசல் மிகுந்த இடத்தைத் தாண்டி கொஞ்ச தூரம் போனால் அங்கே ஒரு ஆச்சரியம் காத்துக்கொண்டிருந்தது. பத்துப் பன்னிரண்டு பேர் சேர்ந்த கேங் ஒன்று கிரிக்கெட் விளையாடிக்கொண்டிருந்தது. கடற்கரையில் கிரிக்கெட் விளையாடுவதிலென்ன ஆச்சரியம் என்று கேட்கிறீர்களா? இது கடற்கரை கிரிக்கெட் இல்லை. ‘கரையில் பாதி கடலில் பாதி கலந்து ஆடும்’ கிரிக்கெட்.

ஆம், அலை வந்து மோதும் இடத்தில் நின்றுகொண்டு விளையாடினார்கள். ஆஃப் திசையிலும் ஸ்ட்ரெய்ட்டாகவும்தான் அடிக்கலாம். லெக் திசையில் கரை உயரும் வரை மட்டும் அடிக்கலாம். ஈஸியாக காற்று லெக் திசையில் பந்தை அடித்துக்கொண்டு போய்விடும் என்பதால் அப்படி ஒரு ஃபீல்டிங் ரெஸ்ட்ரிக்‌ஷன். அலைகளுக்கிடையில் இரண்டு மூன்று ஃபீல்டர்கள். அவர்களை ஃபீல்டர்கள் என்று சொல்வதா, பந்து பொறுக்கிப் போடுபவர்கள் என்று சொல்வதா? கொஞ்சம் சிரமம்தான்!

யார் தலைவர்?

சற்று நேரம் அவர்களது ஆட்டத்தைப் பார்த்தோம். ஏதோ விளையாட்டுக்காக விளையாடுவது போல் தெரியவில்லை. ஒவ்வொரு பந்துக்கும் தகராறு. அதுவும் வெவ்வேறு காம்பினேஷன்களில். அப்படி இருந்தும் கிண்டல் கேலிக்கும் கலாய்ப்புக்கும் கொண்டாட்டத்துக்கும் உற்சாகத்துக்கும் குறைவில்லை. இந்த கிரிக்கெட்டின் இன்னொரு விசேஷம், பலரும் நீச்சல் உடையில் இருந்தார்கள்!!!

சரி என்று ஃபீல்டிங் செய்துகொண்டிருந்தவரிடம் பேச்சு கொடுத்தால், அவர் ஆட்டத்தில் கவனம் செலுத்தியபடி ‘இந்த இன்னிங்ஸ் முடியட்டும் பாஸ். விலாவாரியா சொல்றோம்’ என்று பிகு செய்தபடி இப்படியும் அப்படியும் ஓடிக்கொண்டிருந்தாரே தவிர, பந்துதான் அவர் கண்ணுக்கும் கைக்கும் சிக்கவில்லை.

ஒரு இன்னிங்ஸ் முடிந்ததும் வந்தவர்களிடம் அறிமுகப்படுத்திக்கொண்டு பேசினோம். ‘உங்களில் யார் கேங் லீடர்’ என்று கேட்டதற்கு சிவா என்பவரை நோக்கிக் கையைக் காட்டினார்கள். ‘சொல்லுங்க சிவா, இப்படியொரு கிரிக்கெட் விளையாடணும்னு எப்படி உங்களுக்குத் தோணிச்சு?’

செக் போஸ்ட் பாய்ஸ்

‘நாங்க எல்லோரும் ரெண்டு வருஷமா இங்கே வாலிபால் விளையாடிட்டிருந்தோம். பீச்ல கூட்டம் ரொம்ப அதிகமானதால வேற என்ன பண்றதுன்னு யோசிச்சிக்கினு இருந்தப்ப இந்த ஐடியா வந்துச்சு. கரைக்கும் மேலே செடிகள் அடர்ந்திருப்பதால, இங்கே மக்கள் கூட்டம் வர மாட்டாங்க. ஆனால், அலை வந்து மோதுற எடம் மட்டும்தான் மண்ணு. அதனால அந்த இடத்தையே பிட்சாக்கிப் பிச்சுப்பிச்சு வாங்குறோம்’ என்றார்.

‘நீங்கள்லாம் எங்கேருந்து வர்றீங்க? எப்படிப் பழக்கம்?’ என்று கேட்டதற்கு கோரஸாக ‘நாங்க எல்லாம் வேளச்சேரி செக்போஸ்ட் பாய்ஸ்’ என்று கத்தினார்கள்.

‘சின்ன வயசிலேருந்து நாங்க ஃபிரண்ட்ஸ். இதிலே அண்ணன் தம்பி இருக்காங்க. பக்கத்து வீட்டுக்காரங்க இருக்காங்க. ஒண்ணாப் படிச்சவங்க இருக்காங்க. ஒண்ணா வேலை பாக்குறவங்க இருக்காங்க. வெவ்வேறு ஃபீல்டுல வேலை பாக்குறவங்க இருக்காங்க. ஆனாலும் எங்க எல்லோரையும் ஒண்ணா சேக்குறது வேளச்சேரி செக் போஸ்ட்டு ஏரியாவும் இந்த விளை யாட்டும்தான்’ என்றார் கேங்கின் காமெடியன் என்று சொல்லப்படும் ஜானகிராமன்.

போங்காட்டம்

‘ஒங்க கேங்லயே ரொம்ப போங்காட்டம் ஆடுறவர் யாரு?’ என்று கேட்டதற்கு ‘யாருக்கும் யாரும் சளைச்சவங்க இல்லை பாஸ். ஆனா ஓவர் போங்கு எங்க கேங் லீடர்தான்’ என்று சிவாவை நோக்கிக் கைகாட்டுகிறார்கள்.

‘என்ன மாதிரி போங்காட்டம் ஆடுவார்?’

‘அவரால அடிக்க முடியாத பால் எல்லாத்தையும் ஒய்டுன்னு சொல்லிடுவாரு. ரன் அவுட்ட ஒத்துக்க மாட்டார். 'நினைவிருக்கும் வரை' படத்தில பிரபுதேவா 98 ரன் எடுக்குறதுக்குள்ள நூறு தடவை அவுட்டாகியும் போங்காட்டம் ஆடுவாருல்ல அந்த மாதிரி. என்ன இவன் பத்து ரன்னத் தாண்டுனதில்ல’ என்றார் ஜானகிராமன்.

‘அப்புறம் எப்படித்தான் அவுட் ஆக்குவீங்க?’ என்று கேட்டால் ‘நாலு தடவைக்கு மேல போங்காட்டம் ஆடுனா பேட்டைப் பிடிங்கிடுவோம். இல்லன்னா நடு பிட்சுல உட்கார்ந்து ஸ்டிரைக் பண்ணுவோம். அப்புறம்தான் தல இறங்கி வருவாரு’ என்றார் கண்ணன்.

அப்படியாவது குளிக்கட்டுமே!

‘ரொம்ப காமெடியா ஒரு சம்பவம் சொல்லுங்களேன்’ என்று கேட்டால், ‘எதை பாஸ் சொல்லுறது? இதுவரைக்கு ஒரு கேட்ச கூடப் பிடிக்காத சுதாகரு ஒரே ஒரு தடவை கேட்ச் பிடிச்சப்போ, திருவான்மியூர் பீச்சில உயிரோட கரையொதுங்குன திமிங்கிலம் மாதிரி அதகளப்படுத்தினதச் சொல்றதா? இல்ல, ஸ்டம்புக்குப் பக்கத்திலேயே அலையில ஷாட்ட அடிச்சிட்டு நாலு ரன்னு ஓடுற வரைக்கும் பந்த அலைகிட்டருந்து பிடுங்குறதுக்கு நடக்குற மல்லுக்கட்ட பத்தி சொல்லுறதா?’ என்று அடுக்கிக்கொண்டே போனார் ஜானகிராமன்.

‘சரி, இப்படிக் கடல்ல ரெண்டு மூணு ஃபீல்டர்கள நிறுத்துறீங்களே, ஆபத்தில்லையா?’ என்று கேட்டதற்கு

‘அவங்கள்லாம் நீச்சல் வீரர்கள் பாஸ். அப்படிப்பட்டவங்களத்தான் நிறுத்துவோம். நாங்க என்ன நடுக்கடல்லயா ஃபீல்டிங் நிப்பாட்டுறோம். முழங்கால் அலையிலதானே. அப்புறம் ஒண்ணு பாஸ், அப்படியாச்சும் இந்தப் பசங்க குளிக்கட்டுமே’ என்று கலாய்த்த அருண்குமாரைப் போட்டுக் கும்முகிறார்கள் கடல் வீரர்கள்.

எனர்ஜி டானிக்

‘சரி, உங்க விளையாட்டப் பாக்குறப்போ நீங்கள்லாம் பயங்கரமா சண்டை போட்டுக்குற மாதிரி தெரியுதே. எப்படித்தான் சமாதானம் ஆவிங்க?’ என்ற கேள்விக்கு வீராசாமி இப்படிப் பதில் சொன்னார், ‘அதோ அந்த ரோடு தெரியுதுல்ல அதுவரைதான் பாஸ் சண்டையெல்லாமே. கரையைத் தாண்டிட்டா எல்லாமே மறந்துபோயிடும். சிரிச்சுப் பேசிக்கினு, கலாய்ச்சிக்கினு ஏரியாவுக்குப் போயிடுவோம். அப்படியும் சமாதானமாவலன்னா…’ என்று இழுத்தவரை அவசரமாக இடைமறித்து ‘டேய், பேப்பர்ல அதையெல்லாம் போட மாட்டாங்க’ என்றார் தினேஷ்.

‘ஒண்ணுதான் பாஸ், வாழ்க்கைய நாங்க ரொம்ப சந்தோஷமா வாழ்ந்துட்டுருக்கோம். வாரம் முழுக்க பொழப்புக்காக எவ்வளவோ ஓடுனாலும் ஞாயித்துக்கெழம இங்க வந்து விளையாடுற நேரம் இருக்கே, அதுதான் எங்க உடம்புக்கும் மனசுக்கும் நட்புக்கும் எனர்ஜி டானிக். வழக்கமா நம்மள மாதிரி இளைஞர்கள எல்லோருமே நெகட்டிவாதான் பாப்பாங்க.

ஆனா, நாங்கள்லாம் அப்படிக் கிடையாது. நீங்களே பாருங்க, எங்களுக்குள்ள தொழில்ரீதியாகவும் மத்த வகையிலேயும் எவ்வளவோ வேறுபாடுகள் இருந்தாலும் எவ்வளவு ஒத்துமையா இருக்கோம். அதுக்குக் காரணம் உண்மையான நட்பும் அந்த நட்புக்கு அப்பப்ப எனர்ஜி ஏத்திக்கிற மாதிரி, இப்படி வந்து விளையாடுறதும்தான். நட்ப லவ் பண்ணுங்க பாஸ், சந்தோஷமா இருக்கலாம்’ என்று சொல்லிவிட்டுச் சிரித்தபடி கண்ணடித்தார் சிவா.

வேளச்சேரி செக் போஸ்ட் பாய்ஸ்! உண்மையில் சந்தோஷத்துக்கு செக் போஸ்ட்டே இல்லாத பாய்ஸ்தான்!

Link to comment
Share on other sites

உலகின் எதிர்கால போக்குவரத்து ஹோவர்போர்டு: கால்களில் இறக்கை கட்டி பறக்கலாம்

 
ஹோவர்போர்டு மூலம் ஏரி மீது பறந்து செல்கிறார் அலெக்சாண்ட்ரூ டுரூ
ஹோவர்போர்டு மூலம் ஏரி மீது பறந்து செல்கிறார் அலெக்சாண்ட்ரூ டுரூ

உலகின் எதிர்கால போக்குவரத்தாக கருதப்படும் பறக்கும் பலகை என்ற ஹோவர்போர்டை கனடாவைச் சேர்ந்த இளைஞர் உருவாக்கியுள்ளார்.

வரும் காலத்தில் பறக்கும் கார், சிறிய ரக ஹெலிகாப்டர் ஆகியவை சந்தையில் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் அவற்றின் விலை எட்டாத உயரத்தில் இருக்கும் என்பது நிச்சயம். மேலும் இடவசதி உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் அவை நடைமுறைக்கு ஒத்துவராத விஷயமாகவே கருதப்படுகிறது.

அந்த குறையைப் போக்கும் வகையில் நினைத்தவுடன் எங்கிருந்து வேண்டுமானாலும் பறந்து செல்லும் வகையில் புதிய ஹோவர்போர்டை கனடாவின் கியூபெக் நகரைச் சேர்ந்த கேட்டலின் அலெக்சாண்ட்ரூ டுரூ (30) உருவாக்கியுள்ளார்.

வேகமாக, அவசரமாக செல்பவர் களை கால்களில் இறக்கை கட்டி பறக்கிறார் என்று சொல்வதுண்டு. அந்த கூற்றை அலெக்சாண்ட்ரூ உண்மையாக்கியுள்ளார். அவர் உருவாக்கியுள்ள ஹோவர் போட்டை கால்களில் கட்டிக் கொண்டு 16 அடி உயரத்துக்கு பறந்து செல்லலாம்.

இதற்கு முன்பு ஹோவர்போர்டில் 162 அடி தூரம் பயணித்தது உலக சாதனையாக இருந்தது. அதனை அலெக்சாண்ட்ரூ டுரூ முறியடித்துள்ளார். அவர் தனது ஹோவர்போட்டில் 905 அடி தொலைவு வரை பயணித்து புதிய உலக சாதனை படைத்துள்ளார்.

இதுகுறித்து அலெக்சாண்ட்ரூ டுரூ கூறியதாவது: மனிதர்களால் ஹோவர்போர்டு உதவியுடன் நீண்ட தொலைவுக்கு பறக்க முடியும் என்பதை நிரூபிக்கவே இந்த உலக சாதனையை நிகழ்த்தினேன். எனது ஹோவர்போட்டின் அடியில் 4 புரோபல்லர்கள் பொருத்தப் பட்டுள்ளன. அதன்மூலம் தற்போது 16 அடி உயரத்துக்கு பறக்க முடிகிறது. நமது கால்களின் மூலமாகவே ஹோவர்போர்டை கட்டுப்படுத்தலாம்.

தற்போது 12 மாதங்களில் சோதனை அடிப்படையில் இதனை உருவாக்கியுள்ளேன். எதிர்காலத்தில் அதிக உயரம் மற்றும் அதிக தொலைவுக்கு பறக்கும் வகையில் மேம்படுத்தப்படுத்த திட்டமிட்டுள்ளோம். பின்னர் அவற்றை வணிகரீதியில் விற்பனைக்கு கொண்டு வருவோம்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தனது கண்டுபிடிப்புக்கு காப்புரிமை கோரியுள்ள அலெக் சாண்ட்ரூ வீட்டின் வாசலில் பல்வேறு பன்னாட்டு நிறுவனங்கள் காத்திருக்கின்றன.

Link to comment
Share on other sites

இளம்பெண்களுடன் பங்கரா டான்ஸ் ஆடிய கனடா பிரதமர் (வீடியோ)

 

ஒட்டாவா: கனடாவின் புதிய பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜஸ்டின் ட்ருதியே, இந்திய - கனடியன் சங்கத்தினர் நடத்திய பாராட்டு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, இளம்பெண்களுடன் பங்கரா டான்ஸ் ஆடி அசத்தினார்.

 

43 வயதே ஆன கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ருதியே கனடாவின் இளம் வயது பிரதமர் ஆவார். இவர் முன்னாள் கனடா பிரதமர் பியர் ட்ருதியேவின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.

Link to comment
Share on other sites

'குன்' சிகரத்தைத் தொட்ட முதல் இந்தியப் பெண்!

 

பெண்கள் சாதனை படைப்பதற்கு முட்டுக்கட்டையாக இருந்த காலம் ’மலையேறிப் போச்சு’ என்பதற்கு, வாழும் எடுத்துக்காட்டாகத் திகழ்கிறார், மலையேறும் மங்கையான ஜீ.ஆர். ராதிகா.

தெலங்கானாவிலுள்ள, அதிலாபாத் மாவட்டக் காவல் துறையின் கூடுதல் கண்காணிப்பாளர் ஜீ.ஆர்.ராதிகா, காஷ்மீர் மலைத்தொடர்களிலுள்ள ’நுன்’ சிகரத்தைத் தொட்ட முதல் இந்தியப் பெண் என்ற சாதனையைப் படைத்துள்ளார்.

எவரெஸ்ட் சிகரத்தைத் தொட்ட எட்மண்ட் ஹிலாரியின் வாக்குமூலத்தைத்தான் ராதிகாவும் தருகிறார் -  ”நாம் மலைச்சிகரத்தை அடையவில்லை; நம் மனச் சிகரத்தை அடைந்திருக்கிறோம்” என்று.

radhika_vc1.jpg



யார் இவர்?

ஆந்திராவிலுள்ள, கடப்பாவில் ஒரு நடுத்தர குடும்பத்தில், இருபால் ஆசிரிய இணையருக்கு, இரண்டாவது மகளாகப் பிறந்தவர் ராதிகா. சிறு வயதிலிருந்தே, துணிச்சலும் குறும்புத்தனமும் கொண்டவரான ராதிகா, ஆங்கில இலக்கியம் கற்று, விரிவுரையாளராகப் பணியாற்றி வந்தார். பின்னர், தனக்கானக் களம் வேறு என்பதை உணர்ந்து கொண்டுக் காவல்துறையில் சேர்ந்தார் ராதிகா.

2012 ல் இரண்டு குழந்தைகளுக்குத் தாயாகிய அதே வேளையில், காவல் பணியிலும் கடமை தவறாது அனந்தபூரில் பணியாற்றிக் கொண்டிருந்தார் ராதிகா. அச்சமயம் நண்பர் ஒருவரின் மூலமாக, மலையேற்றம் குறித்து கேள்விப்பட்டு, விளையாட்டாக அதில் பயிற்சி மேற்கொண்டிருக்கிறார்.

அந்தப் பயிற்சிதான், இவருக்குள் உறங்கிக் கொண்டிருந்த சிகரம் தொடும் சாதனைப் பெண்ணைத் தட்டி எழுப்பியுள்ளது என்றால் அது மிகையல்ல. பயிற்சி முடிந்தவுடன், இலதாக்கிலுள்ள, ’கோலப் காங்ரி’ radhika_vc2.jpgமலையின் 5980 மீட்டர் உயரமுள்ள சிகரத்தைத் தொட்டுள்ளார். அதனைத் தொடர்ந்து, ஹிமாச்சலப் பிரதேசத்திலுள்ள, ’மெந்தோஸா’ மலையின் 6443 மீட்டர் உயரச் சிகரத்தை எட்டியுள்ளார்.

இவ்வாண்டு, காஷ்மீரிலுள்ள இரட்டை மலைகளான ’நுன்-குன்’ தொடரில், குன் எனப்படும் குன்றில் ஏறுவதற்காக, ஏழு பேர் கொண்ட அணியில் ஒருவராகப் பதிவு செய்தார் ராதிகா. பயணத்தின் பாதியிலேயே ஐந்து பேர் விலகிக் கொண்டனர்.

இதைக் கண்டு சற்றும் மனம் தளராத ராதிகா, தொடர்ந்து தன் வெற்றிப்படிகளை எடுத்து வைத்தார்.

இது குறித்து அவரிடம் கேட்கையில், ” ‘குன்’னில் ஏறுவது மற்ற மலைகளைப் போல் எளிமையானதல்ல, பனிப்பிளவுகள் எனப்படும் பெரும் விரிசல்கள் நுன் குன்னில் அதிகம். அது மட்டுமன்றி ‘பனிச்சுவர்’ எனப்படும் செங்குத்தான மலைப்பாங்கு இங்கு மிக அதிகம். ஒரு குறிப்பிட்ட இடத்தில் 300 மீட்டர் செங்குத்தான ஏற்றத்தை ஆறு கிலோ சுமையுடன் கடந்தேன்” என்று மெய்சிலிர்க்க வைக்கிறார் ராதிகா.

இவரது உற்சாகத்தைக் கண்டு பூரித்துப் போன, இவரின் அணியினர் ’ராதிகாவின் மன உறுதி அலாதியானது’ என்று பாரட்டுகின்றனர்.

''இதைச் சாதித்த முதல் இந்தியப் பெண் என்பதில் நான் பெருமிதம் கொள்கிறேன்; தொடர்ந்து இந்த முயற்சியைக் கைவிடாமல் மேற்கொள்வேன்.” என்று மகிழும் ராதிகா எவரெஸ்டையும் தன் இலக்குப் பட்டியலில் வைத்துள்ளார்.

எவரெஸ்ட் கனவு குறித்து இவரிடம் கேட்கையில், ”தற்சமயம் உறுதியிட்டுக் கூற முடியாது; ஆனால் கட்டாயம் என் எதிர்கால இலக்குகளில் எவரெஸ்ட்டும் உண்டு” என்கிறார் இந்தச் சாதனைப் பெண்மணி.

'மலைச் சிகரங்கள் மேலும் வளருவதில்லை. ஆனால் மனிதன் வளர்ந்து கொண்டே இருக்கிறான்’ என்ற ஹிலாரியின் வரிகளுக்கு ராதிகா போன்றோர், ஒரு வாழும் எடுத்துக்காட்டு.

Link to comment
Share on other sites

#மலைச் சிகரங்கள் மேலும் வளருவதில்லை. ஆனால் மனிதன் வளர்ந்து கொண்டே இருக்கிறான்#

பகிர்வுக்கு நன்றி

Link to comment
Share on other sites

ஆண்களுக்கும் வந்தாச்சு கிளீன் அப்!

 

பியூட்டி பார்லர் என்ற உடன் அனைவரது நினைவுக்கும் வருவது பெண்களும் அவர்கள் செய்யும் ஃபேசியலும்தான். தற்போதைய நிலையில் பல ஆண்களும் பியூட்டி பார்லர் நோக்கி படை எடுக்கின்றனர்.

ஆனால் பலருக்கு ஃபேசியல் செய்வதால் பலவிதமான தோல் பிரச்னைகள் வரும். அதுபோக, ஃபேசியலுக்கான நேரமும் அதிகம். இதன் குறைபாடுகளை நீக்க வந்ததே 'கிளீன் அப்'!

ஃபேசியலை விட குறைவான நேரத்தில் அதே பொலிவைத் தரக்கூடிய ஒரு செயல்தான் கிளீன் அப். நாற்காலியில் உட்கார வைத்து 'ஹேர் பேண்ட்' மாட்டி விட்டு, சற்று நேரம் முகத்தை மசாஜ்' செய்கின்றனர். பிறகு கிளென்ஸிங் மில்க்கைத் தடவி, முகத்தில் உள்ள தூசியை தேய்க்க ஆரம்பிக்கின்றனர்.

cleanup_vc1.jpg



சில நிமிடங்களில் முகத்தில் மேலோட்டமாக உள்ள மாசு வெளியேறிவிடுகிறது. அவசரமாக வெளியே செல்பவர்கள் இந்தக் கட்டத்தோடு நிறுத்திவிட்டும் செல்லலாம். சற்றே அதிகமான பொலிவு வேண்டும் என்று நினைப்பவர்கள்,, இதன் பிறகு சலூனில் வழங்கும் சிறப்பு பேக்கைப் போட்டுக்கொள்ளலாம்.

விலைக்கு ஏற்றது போல பேக்கின் எண்ணிக்கையும், விலையும் அதிகரிக்கும். பொலிவு நிலைத்திருக்கும் காலமும் அதிகமாகும். பேக் போட்டுக்கொள்வதால் அடித்தோலில் இருக்கும் மாசு சுத்தமாகிறது.

இதைச் செய்வதால் எந்தவிதமான தோல் பிரச்னையும் வராது, எந்தவிதமான எரிச்சலும் இருக்காது, மேலும் முகத்தில் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கச் செய்யப்படும் மசாஜ் செய்து துவங்குவதால், முகப்பொலிவு அதிகரிக்குமாம். நமது பட்ஜெட்டுக்கு ஏற்றது போல 100 ரூபாயில் இருந்து கிளீன் அப் பேக்கேஜ்கள் துவங்குகிறது.

கிளீன் அப் இல் உள்ள ஒரே குறை, செய்துவிட்டு உச்சி வெயிலில் செல்வதை தவிர்க்க வேண்டும். இல்லையேல் பொலிவு குறைந்துவிடும் என்கிறார்கள்

http://www.vikatan.com/news/article.php?aid=53131

Link to comment
Share on other sites

நீங்களே செய்யலாம்: அழகான பொம்மையாகும் சாக்ஸ்!

 
ns_2592657f.jpg
 

வீட்டில் பயன்படுத்தாத சாக்ஸ் இருந்தால் என்ன செய்வீர்கள்? தூக்கி எறிந்துவிடுவீர்கள், அல்லது பொருட்களைத் துடைக்கப் பயன்படுத்துவோம் இல்லையா? இனி, அப்படிச் செய்யாதீர்கள். பயன்படுத்தாத சாக்ஸில் அழகான பொம்மை செய்யலாம். சாக்ஸில் பொம்மை செய்ய நீங்கள் தயாரா?

தேவையான பொருட்கள்

சாக்ஸ், பொத்தான்கள், இரண்டு ரப்பர் பேண்டுகள், சிறிய துணி (சால்வைக்காக), மணிகள், பசை, கத்தரிக்கோல்.

செய்முறை

சாக்ஸ்ஸைப் பாதியாக வெட்டிக்கொள்ளுங்கள். கீழ்ப்பகுதியில் பருத்தியை வைத்து நிரப்புங்கள்.

படத்தில் காட்டப்பட்டுள்ளது போல் ரப்பர் பேண்டுகளைப் போடுங்கள்.

பொம்மை மீது சிறிய துணியைச் சால்வையாகப் போர்த்துங்கள்.

கண்களுக்காக மணிகளை நடுவில் ஒட்டுங்கள்.

அதை இன்னும் அழகுப்படுத்த பொம்மை மீது பொத்தான்களை ஒட்டுங்கள்.

இப்போது அழகான பொம்மை தயாராகிவிட்டது.

இந்தப் பொம்மையை வைத்து நீங்கள் விளையாடலாம், அல்லது உங்கள் நண்பர்களுக்குப் பரிசாகக் கொடுக்கலாமே!

http://tamil.thehindu.com/society/kids/நீங்களே-செய்யலாம்-அழகான-பொம்மையாகும்-சாக்ஸ்/article7788176.ece

Link to comment
Share on other sites

பெண்களுக்கு வாக்குரிமை பெற்றுத்தந்த நியூயார்க் பேரணி!

 

1915 -ம் வருடம் இதேநாள்- 23, அக்டோபர் -  சுமார் 25 ஆயிரம் பெண்கள் நியூயார்க்கில் ஐந்தாவது நிழற் சாலையில் ஒன்று சேர்ந்தனர்.

தேர்தலில் தங்களுக்கு வாக்களிக்கும் உரிமை வேண்டும் என்ற கோஷமிட்ட அவர்கள், மாலை மூன்று மணி முதல் ஏழு மணிவரை நகரில் பேரணியாக வந்தனர். 'விமன் சஃபரேஜ்'  என அவர்கள் உருவாக்கிய இந்த பெண்கள் வாக்குரிமை போராட்டக் குழுவிற்கு, அழகழகான போஸ்டர்களை வடிவமைத்து நியூயார்க் பள்ளி மாணவிகள் தங்கள் ஒத்துழைப்பை தந்தனர்.

neyyork%20600.jpg

ரேடியோ, தொலைக்காட்சி என்று தகவல் தொழில்நுட்பம் வளர்ச்சி அடையாத காலத்தில் இதுபோன்ற பரேட் (நகர்வலம்) வருவதுதான் சமூக கருத்தினை பரப்ப பெரிதும் கை கொடுத்தது. பொதுத்தேர்தலுக்கு 10 நாட்கள் முன்பாக துவங்கப்பட்ட இந்த பரேட் மிக பெரிய சர்சையை உண்டாக்கியது.  இதில் இரண்டாயிரத்துக்கு மேற்பட்ட ஆண்களும் கலந்து கொண்டு தங்களது ஆதரவினை தந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. வாக்குரிமைக் கோரி பெண்கள் நடத்திய இந்த பேரணியில், சுமார் இரண்டரை லட்சம் பேர் கூடி தமது ஆதரவினை வெளிப்படுத்தினர்.

neyyork%20600%202.jpg

இதன் வெளிப்பாடாக நவம்பர் மாதம் இதுதொடர்பாக பொதுவாக்கெடுப்பு நடந்தது. ஆனால் அது இவர்களுக்கு சாதகமாக இல்லை. ஆனால் மீண்டும் 1917-ம் ஆண்டு மறுமுறை தேர்தல் வந்த சமயம் மீண்டும் ஒரு பேரணியை நிகழ்த்தினர் இந்த 'விமன் சஃபரேஜ்' அமைப்பினர்.

பொதுவாக்கெடுப்பில் சுமார் 10 லட்சம் வாக்குகள் பெற்று பெண்களுக்கான வாக்குரிமையை பெற்றனர். பெண்களுக்கு வாக்குரிமை பெற்று தந்த உன்னத நாளாக இந்நாளை கொண்டாடுகின்றனர் நியூயார்க் பெண்கள்.

http://www.vikatan.com/news/article.php?aid=54138

Link to comment
Share on other sites

வாட்ஸ் அப் கலக்கல்: வெட்ட வெட்ட துளிர்க்கும் தோனி!

 

 
Link to comment
Share on other sites

ஸ்மார்ட் போன் நனைந்து விட்டதா? கவலை எதுக்கு... அரிசி இருக்கு!

யுத பூஜை அன்று அனைவரும் கார், பைக்கை எல்லாம் குளிப்பாட்டுவார்கள் என தெரிந்ததோ என்னவோ, என் செல்லக்குட்டி ராகவன், காலையிலேயே ஒரு பக்கெட் தண்ணீரில் என் ஸ்மார்ட் போனை குளிப்பாட்டிட்டான்.

விளைவு, போனுக்கு ஜலதோஷம், எனக்கு வீட்டிலேயே பூஜை... போன் ஆன் ஆகுது, Incoming call வருது; ஆனா touch screen work ஆகலை; Touch screen work ஆகாம போன்ல எதையுமே பண்ண முடியல; Phone ஐ unlock கூட பண்ண முடியலை;

Cellphone200.jpgதிருதிரு-னு முழிச்சுட்டு இருக்கும் போதுதான் ஆபத்பாந்தவன் Google - ஞாபகம் வந்தது.

இப்படி போன் தண்ணீரில் நனைந்து விட்டால், phone back cover, sim card, memory card, battery எல்லாத்தையும் கழற்றி விட்டு, ஒரு air lock cover-ல அரிசிய போட்டு, அதுக்கு phone-ஐ போட்டால், phone-க்குள் இருக்கும் தண்ணீரை அரிசி உறிஞ்சி விடுமாம். அரிசியால LCD Screen க்கு பின்னால் இருக்கும் தண்ணீரை கூட உரிஞ்ச முடியும் என்று Google கூறியது.

air lock cover-க்கு எங்கே போவது என நினைக்கையில், "பேசாம phoneஐ அரிசி பாத்திரத்துக்குள்ளேயே போட்டுட்டா என்ன?" என அம்மா கேட்க, phoneஐ அரிசி பாத்திரத்துக்குள் போட்டு புதைச்சுட்டு, 'திக்திக்' மனதோட அரை மணி நேரம் கழித்து எடுத்து பார்த்தேன்.

WOW... Touch Screen இப்போ நல்லா ஒர்க் ஆகுது. உடனே outgoing calls போகுதா, key pad work ஆகுதா, music play ஆகுதா-னு எல்லாம் செக் பண்ணிணேன். Rear Camera lensல தண்ணீர் திரை போல தெரிந்தது. மறுபடியும் அரை மணி நேரம், அரிசியின் உதவி தேவைப்பட, இப்போ என் phone- perfectly alright.

எதிர்பாராம உங்களில் யாராவது மழையில் போனுடன் நனைந்து விட்டால், இந்த தகவல் உபயோகமாக இருக்கும் என நினைத்து Share செய்தேன்

http://www.vikatan.com/news/article.php?aid=54089

 

Link to comment
Share on other sites

ம்ம்... நல்லாய் தான் இருக்கு! தொடருங்கோ சகோ!!

உங்கள் வரவுக்கும் ஊக்கத்திற்கும் நன்றி:)

#மலைச் சிகரங்கள் மேலும் வளருவதில்லை. ஆனால் மனிதன் வளர்ந்து கொண்டே இருக்கிறான்#

பகிர்வுக்கு நன்றி

உங்கள் கருத்துக்கும் வரவுக்கும் நன்றி ஜீவன் சிவா:)

பச்சை தந்து ஊக்கம் தந்த நிழலி, நுணாவிலான், மீனா, sunmoon, தமிழினி, ஜீவன் சிவா, vasanth1,க்கும் நன்றிகள்:)

Link to comment
Share on other sites

'அழகு என்பது சரும நிறத்தில் இல்லை!' - விழிப்புணர்வு வீடியோ

 

'அழகு என்பது, வெள்ளை சருமம்தான்' என்கின்றன பெண்களை குறிவைத்து எடுக்கப்படும் விளம்பரங்கள். ஆண்களின் வெற்றிக்குக்கூட ஃபேர்னெஸ் கிரீம் காரணமாகும் என்கின்றன சில விளம்பரங்கள். இதில் நடிப்பவர்கள் பிரபல நடிகர்கள். 'நமது அபிமான நடிகரே சொல்லும்போது, நாம் பயன்படுத்தினால்தான் என்ன' என்று நினைக்கின்றனர் பொதுமக்கள்.

"உலகில் 60சதவிகித்தினர் கறுப்பு நிறமே, 40 சதவிகித்தினர்தான் வெள்ளை சருமத்தினர். அதனால், மீதம் இருக்கின்ற 60 சதவிகித்தினோர் அழகு இல்லை என்றாகிவிடுமா?" என்று கேட்கிறார் 'விமன் ஆஃப் வொர்த்' என்ற என்.ஜி.ஒ-வின் நிறுவனர் கவிதா இம்மானுவேல்.

girls_vc1.jpg

 

எம்.ஓ. பி. வைஷ்ணவா பெண்கள் கல்லூரில், இரு நாட்களாக நடந்துகொண்டிருக்கிற (22,23 செப்டம்பர் 2015) ப்யூட்டிஃபுல் (BEYOUTIFUL - Be You, Be Beautiful) எனும் விழிப்புஉணர்வு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, நேற்று சிறப்புரையாற்றினார், கவிதா இம்மானுவேல். "கறுப்பாக இருப்பவர்களும் அழகுதான். அழகு என்பது தோற்றம், சரும நிறம், கூந்தல் போன்ற அடையாளங்களால் நிர்ணயிக்கப்படுவது இல்லை. அது, ஆரோக்கியம், மகிழ்ச்சி, மனம் போன்ற பண்புகளால் நிர்ணியிக்கப்படுவது. எல்லோரும் அழகுதான். ஒவ்வொருவருமே தனித்துவமான அழகுதான்" என்கிறார்.

மேலும், "உங்களின் தோற்றத்தைப் பற்றி கவலைகொள்ள தேவை இல்லை. கறுப்போ, மாநிறமோ, வெள்ளையோ, எதுவாயினும் அது இயற்கையாகவே அமைந்தது. இதை மாற்ற, ஃபேர்னெஸ் கிரீம்கள், அழகு சிகிச்சைகள் என்று எதுவும் செய்துகொள்ள தேவை இல்லை. உங்களின் சருமநிறத்தை நீங்கள் முழுமையாக ஏற்றுக்கொண்டு, உங்களைப் பற்றிய தாழ்வான எண்ணங்களைக் கைவிடுங்கள். நடிகை நந்திதா தாஸ், பத்திரிக்கையாளர் குல் பனாக் போன்றோரும் 'டார்க் இஸ் பியூட்டிஃபுல்' என்ற விழிப்பு உணர்வை மக்களுக்கு அறிவுறுத்துகின்றனர். மீடியா தொடர்பான வீடியோ மற்றும் படங்களில், இனி கறுப்பு மற்றும் மாநிறத் தோல் உடையவர்களும் நடிக்கலாம். அதற்கான வழிகாட்டுதலுக்கு மீடியா முன்வர வேண்டும்" என்றும்  வேண்டுகோள் வைத்தார்.

girls_vc2.jpg



*ஆரோக்கியமான சருமம் வேண்டுமே தவிர வெள்ளையான சருமம் தேவை இல்லை.

*ஆரோக்கியமான உடல் தேவையே தவிர சைஸ் ஜீரோ வேண்டாம்.

*சீரான உடற்பயிற்சி அவசியம் அதற்காக, உணவுகளைத் தவிர்க்க வேண்டாம். துரித உணவுகளை உண்ண வேண்டாம்.

*மனதளவில் நாம் அழகு என்ற உணர்வு முக்கியமே தவிர மெலிந்த உடல், வெள்ளை நிற சருமம், உயரம் போன்றவை மட்டுமே அழகல்ல.

*தன் தோற்றம் பற்றிய சுயவிமர்சனம், தாழ்வு மனப்பான்மை தேவை இல்லை. நாம் எப்படி இருக்கிறோமோ, அதை மன மகிழ்வுடன் அப்படியே ஏற்றுக்கொள்வது முக்கியம்.

1.2 பில்லியன் சரும நிறங்களை முழுமையாகக் கொண்டாடுவோம் என்கிறது 'விமன் ஆஃப் வொர்த்'-தின் டீசர். நம் நிறத்தை முழு மனதுடன் ஏற்றுக்கொள்வோம். நாம் அனைவரும் பேரழகுதான்.

 

 

 

 

http://www.vikatan.com/news/article.php?aid=52767

 

Link to comment
Share on other sites

R.K.Laxman: மொழிகளைத் தாண்டி அனைவரையும் கவர்ந்த அற்புதமான கலைஞர்!

 

மொழிகளைத் தாண்டி அனைவரையும்  கவர்ந்த அற்புதமான கலைஞர்கள் உருவாவது அபூர்வம். p11b.jpgஅப்படி உருவான ஒருவர்... ராசிபுரம் கிருஷ்ணசாமி லஷ்மண்; சுருக்கமாக ஆர்.கே.லஷ்மண். அவரது 'காமன் மேன்’ - இந்தியனின் மனசாட்சி. காலை செய்திதாளில் பார்க்கும் அவரது கார்ட்டூன், அந்த நாள் முழுவதும் நம்மைக் கலகலப்பாக வைத்திருக்கும். அவரின் பிறந்த தினம் இன்று(அக்.:24)

dot.jpgஒருமுறை பிரதமர் நேருவைக் கிண்டல் செய்து ஒரு கார்ட்டூனைப் போட்டுக்கொடுத்துவிட்டு வீட்டுக்குச் சென்றுவிட்டார் லஷ்மண். அடுத்த நாள் காலை, பிரதமர் அலுவலகத்தில் இருந்து அவருக்கு போன். மறுமுனையில் பேசியவர், பிரதமர் நேரு. 'உங்கள் கார்ட்டூனை நான் மிகவும் ரசித்தேன். அதில் என்னை நீங்கள் நகைச்சுவையாகச் சித்திரித்திருந்த விதம் அருமை. எனக்கு நீங்கள் வரைந்த அந்த ஓவியத்தை என்லார்ஜ் செய்து தர முடியுமா? நான் அதை ஃப்ரேம் செய்துவைத்துக்கொள்ள விரும்புகிறேன்’ எனக் கேட்டார்.   

dot.jpgநேருவுக்கு இருந்த அந்த நகைச்சுவை உணர்வு, அவரது மகள் இந்திரா காந்தியிடம் இல்லை. நெருக்கடி காலத்தின்போது, இந்திராவை நேரில் சந்தித்தார். 'சுதந்திரமாக கார்ட்டூன் போடுவதில் ஏராளமான பிரச்னைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது’ என லஷ்மண் சொல்ல... 'சட்டத்தின் முன் அனைவரும் சமம்’ என அதட்டலாகப் பதில் சொல்லித் திருப்பி அனுப்பிவிட்டார் இந்திரா. அதனால் இந்தியாவைவிட்டு சில காலம் வெளியே இருக்கவேண்டிய சூழல். இந்திரா தேர்தலை அறிவித்த நேரம், நாடு திரும்பினார். அதன் பிறகு பிரதமராக வந்த மொரார்ஜி தேசாயும் ஆர்.கே.ல‌ஷ்மணின் கார்ட்டூன்களை நகைச்சுவை விமர்சனங்களாக எடுத்துக்கொள்ளவில்லை.

p11a.jpg 

dot.jpg'காமன் மேன்’ - சாமானிய இந்தியன்தான் லஷ்மண் கார்ட்டூன்களின் ஆதர்ச அடையாளம். அந்த 'காமன் மேன்’ உருவம் ல‌ஷ்மணின் சிந்தனையில் அத்தனை சுலபமாகப் பிறந்துவிடவில்லை. 'இந்தியன் எப்படி இருப்பான்?’ என ஒரே ஒரு சித்திரம் மூலம் வரைந்து காட்டிவிட முடியாது. ஏனெனில், சிலர் தாடி வைத்திருப்பார்கள்; சிலர் பெரிய மீசை வைத்திருப்பார்கள். வட இந்தியர்கள் ஒருவிதமாக ஆடை உடுத்துவார்கள். தென் இந்தியர்கள் வேறு மாதிரி உடை உடுத்துவார்கள். அதனால் காமன் மேனை உருவாக்க ஆரம்பத்தில் நான் நிறையவே சிரத்தை எடுக்கவேண்டியிருந்தது’ எனச் சொல்லியிருக்கிறார் ல‌ஷ்மண். பூனாவில் இருக்கும் ஒரு கல்லூரியில் இவரது சாமானியனுக்கு, 10 அடி உயரத்தில் சிலை ஒன்று அமைத்திருக்கிறார்கள்.

p11c.jpg

dot.jpg எத்தனையோ இந்தியப் பிரதமர்களை ல‌ஷ்மண் வரைந்திருக்கிறார் என்றாலும், அவருக்குப் பிடித்தமானவர் தேவகவுடா. அவர் பிரதமராக இருந்த சமயத்தில் பல முக்கியமான கூட்டங்கள் நடக்கும்போது, அசதி காரணமாகத் தேவகவுடா தூங்கிவிடுவார். அதை வைத்து லஷ்மண் அவரை தன் கேலிச் சித்திரங்களில் செம ஓட்டு ஓட்டியிருக்கிறார். ஒருமுறை லஷ்மணைச் சந்திக்க வேண்டும் என தேவகவுடா கூப்பிட்டு அனுப்பினார். ஆனால், அந்தச் சந்திப்பின்போதும் தேவகவுடா சற்று கண் அயர்ந்ததுதான் ஹைலைட்.

dot.jpg பிற்காலத்தில் மகசேசே விருதை பெற்றிருந்தாலும், ஆரம்பக் கட்டத்தில் லஷ்மணுக்கு ஓவியம் வரைவதற்கான திறமை போதாது என, பம்பாயின் ஜெ.ஜெ ஸ்கூல் ஆஃப் ஆர்ட்ஸ் நிராகரித்ததாம். அதனால், தத்துவத்தின் பக்கம் அவரது கவனம் திரும்பியது. மைசூர் மகாராஜா கல்லூரியில் சேர்ந்தார். அந்தக் காலத்தில்தான் மக்கள் கூடும் பார்க், மார்க்கெட், ரயில்வே ஸ்டேஷன் என சென்று, கண்களில் படும் காட்சிகளை மணிக்கணக்கில் ஓவியங்களாகத் தீட்டி பயிற்சி எடுத்தார். சிறுசிறு பத்திரிகைகளில் ஓவியம் வரையும் வாய்ப்புகள் வரத் தொடங்கின. இவரது அண்ணன் ஆர்.கே.நாராயணும், தன் ஆங்கில நாவல்களுக்கு ஓவியம் வரையும் வாய்ப்புகளை இவருக்குக் கொடுத்தார்.

dot.jpgபட்டப் படிப்பை முடித்துவிட்டு, இந்துஸ்தான் டைம்ஸில் வேலைக்குச் சேரும் முடிவோடுp11d.jpgடெல்லி சென்றார் லஷ்மண். 'இத்தனை இளம் வயதில் கார்ட்டூனிஸ்ட் ஆக முடியாது’ என அவரைத் திருப்பி அனுப்பிவிட்டார்கள். மும்பையின் ஃப்ரீ பிரஸ் ஜர்னல் பத்திரிகையின் கதவுகளைத் தட்டி வேலை கேட்க... இவரது திறமையைக் கண்டுகொண்ட அந்தப் பத்திரிகையின் ஆசிரியர், 'இதுதான் உன் ஸீட்... போய் உட்கார்ந்துகொள்’ என ஒரு ஸீட்டைக் காட்டினார். அவர் காட்டிய ஸீட்டுக்குப் பக்கத்து ஸீட்டில் உட்கார்ந்திருந்தவர் யார் தெரியுமா? பால் தாக்கரே.

சிறிது காலத்திலேயே லஷ்மணுக்கும் பத்திரிகை நிர்வாகத்துக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், ஒருநாள் திடீரென வேலையை உதறிவிட்டு வீதியில் இறங்கி நடக்க ஆரம்பித்தார். அன்று பஸ் ஸ்ட்ரைக் என்பதால்... வெகுதூரம் போக முடியவில்லை. அதனால் எதிரில் இருந்த டைம்ஸ் ஆஃப் இந்தியா பத்திரிகையின் உள்ளே சென்று வேலை கேட்டார். டைம்ஸோடு இப்படி ஆரம்பித்த பந்தம், அரை நூற்றாண்டு தாண்டி செழித்து வளர்ந்தது.

dot.jpgஎந்தச் சூழ்நிலையிலும் கருத்துச் சுதந்திரத்தின் குரல்வளை நெறிபடுவதை அனுமதிக்கவே மாட்டார். பாபர் மசூதி இடிப்புச் சம்பவம் இந்தியா எங்கும் கலவரங்களைப் பற்றவைக்க, வட இந்தியாவில் வாகனங்களைத் தீயிட்டுக் கொளுத்தும் போக்கு வாடிக்கையானது. அதைக் கண்டிக்கும் விதமாக ல‌ஷ்மண் ஒரு கார்ட்டூன் வரைந்தார். அதில் சிலர் ரயில்கள், கார்கள் போன்றவற்றைத் தீயிட்டுக் கொளுத்திக்கொண்டிருக்க, ஒருவன் இரு சக்கர வாகனம் ஒன்றைக் கொளுத்தவே திணறிக்கொண்டிருப்பான். அவனிடம், 'என்னடா ராம பக்தன்னு சொல்ற. இதைக்கூட உன்னால் கொளுத்த முடியலையா?’ எனச் சலித்துக்கொள்வார்கள் சகாக்கள். இந்த கார்ட்டூனுக்கு இந்து அமைப்புகளிடம் கடும் ஆட்சேபம் கிளம்பியது. மன்னிப்புக் கேட்கச் சொல்லி வற்புறுத்தினார்கள். ஆனால், எதற்கும் வளைந்துகொடுக்கவில்லை லஷ்மண். அந்த கார்ட்டூனுக்காக வழக்கை எதிர்கொண்டவர் நீதிமன்றம் சென்றபோது, எதிர்தரப்பு வழக்குரைஞரே லஷ்மணிடம் ஆட்டோகிராப் வாங்கியிருக்கிறார். அந்த வழக்குப் பின்னர் நீர்த்துப்போனது!  

dot.jpgலஷ்மணுக்கு, காகங்களை வரைய மிகவும் பிடிக்கும். 'காகங்களைப் போன்ற புத்திசாலிப் பறவைகளே இல்லை’ என வியந்து பேசுவார். 2003-ம் ஆண்டில் இருந்தே உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த லஷ்மண், என்றும் தன் ரசிகர்களைவிட்டுப் பிரிய மாட்டார். காகங்களும், காக்காய்ப் பிடிக்கும் அரசியல்வாதிகளும் இருக்கும் வரை இவரின் கேலிச்சித்திரங்கள் மக்களின் மனதில் நிழலாடிக்கொண்டுதான் இருக்கும்!

http://www.vikatan.com/news/article.php?aid=54146

Link to comment
Share on other sites

கவர்ச்சி விளம்­பரம் ஒட்­டப்­பட்ட வாக­னத்தை செலுத்த மறுத்த சாரதி பணி­நீக்கம்
 

கவர்ச்­சி­யான விளம்­பரம் ஒட்­டப்­பட்ட வாக­னத்தை செலுத்த மறுத்­த­தால்,  20 வரு­டங்­க­ளாக பணி­யாற்­றி­ய ஊழி­யரை  ஜேர்­ம­னிய நிறு­வனம் வெளி­யேற்­றியுள்­ளது. 

12860i3.jpg

 

கோப்பி விற்பனை செய்யும் ஜேர்ம­னிய  நிறுவனம் ஒன்றில்  49 வயதான ரொபர்ட் என்ற நபர் கடந்த 20 வருடங்களாக கார் சார­தி­யாக பணியாற்றி வந்துள்ளார்.

 

நிறுவனத்தில் இருந்து கோப்பி அடங்கிய பெட்டிகளை எடுத்து சென்று வேறு இடத்தில் விநி­யோ­கம் செய்து வருவது இவரது முக்கிய பணியாகும்.

 

இந்நிலையில், கடந்த மாதம் ரொபர்ட் செலுத்­தவேண்டிய காரில் புதிதாக ஒரு விளம்பரம் ஒன்று ஒட்டப்பட்டது.

 

அதில், ஆடை எதுவும் அணியாமல் வெறும் காலணிகளை மட்டுமே அணிந்தவாறு ஒரு பெண் கோப்­பி கொட்டை களுக்குள் புதைந்து இருப்பது போன்ற ஒரு விளம்பரத்தை பார்த்து சாரதி ரொபர்ட் அதிர்ச்சியடைந்தார்.

 

இதுகுறித்து நிறுவன உயர் அதிகாரியிடம் விளக்கம் கேட்டபோது, இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

 

பின்னர், பாலியல் தொழிலாளிகளை ஏற்றிக்கொண்டு செல்வதுபோல் உள்ள அந்த காரை செலுத்த ரொபர்ட் மறுத்துள்ளார்.

 

இதனால், ஆத்திரமடைந்த நிறுவன அதிகாரி எந்தவித முன் அறிவிப்பும் இன்றி அவரை பணியிலிருந்து நீக்கியுள்ளனர்.

 

நிறுவனத்தின் செயலால் அதிர்ச்சி யடைந்த ரோபர்ட், நிறுவனத்திற்கு எதிராக வழக்கு தொடர்ந்துள்ளார்.

 

இந்த வழக்கு தொடர்பான இறுதி விசாரணை அண்மையில் நீதிமன்றத்திற்கு வந்துள்ளது.

 

நீதிபதியிடம் பேசிய ரொபர்ட், தான் ஒரு ஓரினச்சேர்க்கையாளர் என்பதால் தான் தன்னை பணியிலிருந்து நீக்க நிறுவனம் இவ்வாறு ஒரு நடவடிக்கையை எடுத்துள்ளது.

 

இதே நிறுவனத்தில் பணியில் உள்ள பிற ஊழியர்களுக்கு இதுபோன்ற ஒரு ஆபாச விளம்பரம் ஒட்டப்பட்டுள்ள கார்கள் வழங்கப்படவில்லை என்பது தன் மீதான தனிப்பட்ட வெறுப்புக்கு உதாரணம் என புகார் கூறியுள்ளார்.

 

ரொபர்ட்டின் 20 ஆண்டுகால பணியில் எந்தவித தவறும் இல்லாததால், அவரை முன் அறிவிப்பின்றி பணியிலிருந்து நீக்கியது சரியானதல்ல.

 

மேலும், இந்த ஆண்டு இறுதி வரை அவருக்கு நிறுவனம் ஊதியம் அளிக்க வேண்டும்.

 

ஆண்டு இறுதியில் அவருடனான பணி ஒப்பந்தத்தை ரத்து செய்து சட்டப்பூர்வமாக பணியிலிருந்து நீக்கலாம் என நிறுவனத்திற்கு உத்தரவிட்டுள்ளது.

- See more at: http://www.metronews.lk/article.php?category=lifestyle&news=12860#sthash.C7Ppmrys.dpuf
Link to comment
Share on other sites

இவர் சொல்வதையும் கேட்டுதான் பாருங்களேன்:cool: யாரையும் புண்படுத்தஅல்ல இது ஒரு நகைச்சுவை பதிவு:)

Link to comment
Share on other sites

படகுப் பள்ளிக்கூடம் ! (வீடியோ)

 

ரு பள்ளிக்கூடம், நதியில் மிதக்கும் படகில் நடக்கிறது என்றால் ஆச்சர்யமாக இருக்கிறதுதானே... அது எப்படி, எங்கே என்று தெரிந்துகொள்ளலாம்...

boat%20school01.jpg

நாம், விடுமுறை நாட்களில் சுற்றுலா செல்வோம். நதிக்கரை என்றால், அங்கு உள்ள படகில் ஏறி ஜாலியா ஒரு ரவுண்டு போய் வருவோம். ஆனால், புனிதத் தலமான வாரணாசியில் உள்ள சிறுவர்களோ, தினமும் படகில் ஏறுகிறார்கள். ஏன் தெரியுமா? இவர்களின் பள்ளிக்கூடமே அந்தப் படகுதான். காலை 9 மணிக்கு தொடங்கும் இந்த பள்ளிக்கூடத்தில் சுமார் 70 மாணவர்கள் படிக்கிறார்கள்.

boat%20school02.jpg

இந்தப் படகுப் பள்ளியில், நூலகம் மற்றும் கம்ப்யூட்டர்களும் உள்ளன. படிப்பு தவிர, இந்திய மொழிகள் பலவற்றைச் சொல்லித்தருகிறார்கள். சூரிய மின்சக்தியால் இயங்கும் இந்தப் படகுப் பள்ளிக்கூடத்தை, 'குடியா' என்னும் தொண்டு நிறுவனம் நடத்திவரும் அஜித் சிங் என்பவர், ஐந்து வருடங்களுக்கு முன்பு தொடங்கினார். மீனவர்கள் அதிகம் வசிக்கும் பகுதி என்பதால், படகுகள் ஓட்டுவது தொழிலாக இருக்கிறது. பிள்ளைகள் பள்ளிக்குச் செல்லாமல், கங்கை நதிக்கரையில் தேங்காய், பூ, மெழுகுவர்த்திகள் விற்றார்கள்.



அஜித் சிங் முதல்முறை இங்கு வந்தபோது, பள்ளிக்கூடம் செல்லாமல் பூ, பழங்கள்  விற்ற சிறுவர்களைக் கண்டதும், இவர்களுக்கு படிப்பு சொல்லித்தர வேண்டும் எனத் தீர்மானித்தார். கங்கை நதிக் கரையோரம், பழைய படகு ஒன்றில் பள்ளிக்கூடம் தொடங்கினார். முதலில் ஐந்து மாணவர்கள் மட்டுமே சேர்ந்தனர். மெல்ல மெல்ல பல மாணவர்கள் இந்தப் பள்ளியில் சேர ஆரம்பித்தனர். இடம் பற்றாக்குறை ஏற்படவே, பள்ளியைப் பெரிய படகுக்கு மாற்றினார்.

நான்கு ஆசிரியர்களைக்கொண்ட இந்தப் படகுப் பள்ளிக்கூடத்தில், மாணவர்கள் ஜாலியாக பாடங்கள் கற்கிறார்கள். அவ்வப்போது இந்தப் பள்ளிப் படகு, கங்கை நதியில் ஜாலி டிரிப் அடிப்பதும் உண்டு.

http://www.vikatan.com/news/article.php?aid=52422

Link to comment
Share on other sites

கங்கையை அளந்தவன்!

 
 
 
gangai_2587065f.jpg
 

“கங்கையைப் பற்றி ஆராய்ச்சி செய்வதற்காக ஒரு இந்திய பல்கலைக்கழகத்துக்குச் சென்று கங்கை நதி தொடர்பான வரைபடங்கள் வேண்டும் என்று கேட்டேன். அதற்கு அங்கு இருந்த பேராசிரியர் ஒருவர், 'நீ என்ன சி.ஐ.ஏ. ஏஜென்ட்டா? எதற்கு அதையெல்லாம் கேட்கிறாய்?' என்றார். நான் எனது ஆய்வு குறித்துக் கூறினேன். ஆனால், பலன் இல்லை.” - இந்தியாவின் மிகப் பெரிய புனித நதியாக மதிக்கப்படும் கங்கை பற்றி பத்து ஆண்டுகள் ஆய்வு செய்த அந்தோனி ஆக்சியவட்டியிடம் கேட்கப்பட்ட கேள்விதான் இது.

நதியின் விஸ்தீரணம்

இவர் யார் என்று அறிமுகப்படுத்துவதற்கு முன்பு, கங்கை நதிக்காக ஏன் இவர் பத்து ஆண்டுகள் செலவிட்டார் என்பதைக் கொஞ்சம் பார்த்துவிடலாம்.

காலம்காலமாக இந்தியாவின் முக்கியமான நதியாக மதிக்கப்பட்டு வருகிறது கங்கை. அது ஒரு நதி மட்டுமல்ல. அது இந்தியர்களின் கலாச்சாரம். உலகத்தின் பார்வையில் அது ஓர் ஆச்சர்யம். அதனால்தான், முன்னாள் பிரதமர் ஜவாஹர்லால் நேரு, 'தொடர்ந்து மாற்றங்களைக் கண்டு வந்தாலும், அது இன்னும் அதே கங்கைதான்' என்றார்.

உத்தராகண்ட் மாநிலம் கங்கோத்ரி பனிச்சிகரத்தில் தொடங்கி மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவுக்குள் நுழைந்து வங்கக் கடலை அடையும்வரை கங்கையின் நீளம் சுமார் 2,500 கிலோமீட்டர்.

கங்கையின் இந்த நீள, அகலத்தை கடைசியாக 1964-ல் அப்போதைய அரசு அதிகாரிகள் வரைபடமாகப் பதிவு செய்தனர். ஆனால், அது முழுமையான வரைபடமாகவும் இருக்கவில்லை. அதற்குப் பிறகு 50 ஆண்டுகளாக, கங்கை நதி செல்லும் தடத்தைப் புதிதாக யாரும் வரைபடமாகப் பதிவு செய்யவில்லை.

யார் இந்த அந்தோனி?

இந்நிலையில், 50 ஆண்டுகளுக்குப் பிறகு கங்கை செல்லும் தடம், அது காலம்தோறும் பயணிக்கும் தடங்கள் எப்படியெல்லாம் மாறியிருக்கின்றன, அதன் கரையோரத்தில் ஏற்பட்டிருக்கும் மாற்றங்கள், அது செல்லும் இடங்களில் உள்ள நிலத்தடி நீர்மட்டம் எவ்வாறு மாறுபட்டிருக்கிறது என்பது உள்ளிட்ட பல விஷயங்களை உள்ளடக்கி முழுமையான வரைபடமாகப் பதிவு செய்துள்ளார் அந்தோனி ஆக்சிய‌வட்டி.

இவர் அடிப்படையில் ஒரு கட்டிடக் கலைஞர், வரைபடங்கள் உருவாக்குபவர். கொலம்பியா பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக இருந்த அவர், தற்போது அலகாபாத் பல்கலைக்கழகத்தில் வருகைதரு பேராசிரியராக இருக்கிறார்.

நியூயார்க்கைச் சேர்ந்த இவர், பத்து ஆண்டுகளுக்கு முன்பு இந்தியா வந்தார். கங்கையை வரைபடமாக 2004-ல் பதிவு செய்யத் தொடங்கியபோது இவருடைய வயது 23! பத்து ஆண்டுகளுக்குப் பிறகு தன்னுடைய 33-வது வயதில் கங்கையை வரைபடமாகப் பதிவு செய்யும் இவருடைய முயற்சி ‘கேஞ்சஸ் வாட்டர் மெஷின்: டிசைனிங் நியூ இண்டியாஸ் ஏன்சியன்ட் ரிவர்' எனும் தலைப்பில் புத்தகமாகப் பலன் தந்திருக்கிறது.

நிதிநல்கை தந்த வாய்ப்பு

டெல்லியில் கடந்த வாரம் நடைபெற்ற ‘சி.எம்.எஸ். வாதாவரன் சுற்றுச்சூழல் மற்றும் வனஉயிர் திரைப்பட விழா'வின்போது இந்தப் புத்தகம் வெளி யிடப்பட்டது. அப்போது அவரைச் சந்தித்து உரையாடியதிலிருந்து...

"நான் அமெரிக்காவின் மிஸிஸிபி நதிக் கரையோரத்தில் பிறந்தேன். இத்தாலியில் உள்ள டைபர் நதிக் கரையோரத்தில் வளர்ந்தேன். அதனால் நதிக் கரையோரங்களில் தோன்றிய நகரங்களின் தோற்றமும் வளர்ச்சியும் பற்றி சின்ன வயசிலிருந்தே ஆர்வம் இருந்தது.

கட்டிடக் கலை தொடர்பான பட்டப்படிப்பை முடித்தவுடன், இந்தியாவில் கங்கைக் கரையோரம் உள்ள நகரங்களைப் பற்றி ஆய்வு செய்ய நினைத்தேன். அதற்கு அமெரிக்க அரசிடமிருந்து ஜே.வில்லியம் ஃபுல்பிரைட் நிதிநல்கை கிடைத்தது. அதன் காரணமாக, நான் இந்தியா வந்தேன்.

பல இடங்களில் கங்கை நதியின் வரைபடங்களைத் தேடி அலைந்தேன். எங்குமே கங்கை நதி தொடர்பான முழுமையான வரைபடம் கிடைக்கவில்லை. கிடைத்த சில வரைபடங்களும் 50 ஆண்டுகளுக்கு முந்தையவையாக இருந்தன. சமீபகால வரைபடங்கள் எதுவும் இல்லை. எனவே, நாம் ஏன் கங்கை நதி தொடர்பான முழுமையான வரைபடத்தை உருவாக்கக் கூடாது என்று எண்ணம் தோன்றியது.

நடந்து நடந்து...

அந்த எண்ணம் முழுமையடைய பத்து ஆண்டுகள் ஆனது. மூன்று மாதங்கள், ஆறு மாதங்கள் என்று தங்கி ஆய்வு செய்துவிட்டு மீண்டும் அமெரிக்காவுக்குச் சென்று விடுவேன். அந்த பத்து ஆண்டுகளில் சுமார் 23 முறை இந்தியாவுக்கு வந்தேன். அது 'கூகுள் எர்த்' தொழில்நுட்பம் இல்லாத காலம். எனவே நடந்தும், படகில் சென்றும், பேருந்துகளில் பயணித்தும் இந்த வரைபடத்தை உருவாக்கியுள்ளேன். வரைபடம் என்றால் வெறுமனே நதி செல்லும் தடங்களை மட்டுமே பதிவு செய்யாமல், அந்த நதி பாய்கிற இடங்களில் ஏற்பட்டுள்ள விவசாய வளர்ச்சி, நகரங்களின் வளர்ச்சி, நிலத்தடி நீர் வளம், நதியின் கலாச்சார மாற்றங்கள், அந்த நதி தொடர்பான அரசியல் விவாதங்கள் உள்ளிட்ட பல விஷயங்களையும் பதிவு செய்தேன்.

1854-ம் ஆண்டு கங்கை கால்வாய் கட்டப்பட்டு, அதன் வழியாக கங்கை நதி செலுத்தப்பட்டபோதுதான் கங்கை நதிப் படுகையில் பாசன முறை வளம் சேர்க்கும் விதமாக மாறியது. அதனால்தான் இந்தப் பகுதியை கங்கை நீர் இயந்திரம் (கேஞ்சஸ் வாட்டர் மெஷின்) என்கிறோம்" என்றார்.

இந்த ஆய்வை மேற்கொள்வதற்காக பனாரஸ் நகரத்தில் உள்ள 'பாஷா பாரதி' எனும் கல்வி நிலையத்தில் ஆறு வார கால இந்தி மொழிப் பயிற்சி பெற்றிருக்கிறார். 'தற்போது கங்கை நதிக்கு உள்ள முக்கியமான பிரச்சினை என்ன' என்று கேட்டபோது, அவர் சொன்ன பதில் இது:

"கங்கை நதி மட்டும் என்றல்ல... எல்லா நதிகளுக்குமே உள்ள பிரச்சினை மாசுபாடுதான். இந்த மாசுபாடுகளை ஆராய எனது நண்பர்கள் சிலர் இந்தியாவுக்கு வர முயற்சித்தபோது அவர்களுக்கு விசா மறுக்கப்பட்டது.

எல்லா நதிகளுக்கும் சில பிரச்சினைகள் இருக்கின்றன. குறிப்பாக கங்கைக்கு, அது செல்லும் இடங்களில் விவசாயத்துக்கும், நிலத்தடி நீர் வளத்துக்கும் ஏற்பட்டுள்ள பிரச்சினைதான் முக்கியப் பிரச்சினை.

காரணம், கங்கையின் தடங்களில் நிலத்தடி நீரை ஆழ்துளை கிணறு போட்டு அதிகளவில் உறிஞ்சி வருகின்றனர். உத்தரப் பிரதேச மாநிலத்தில் மட்டும் சுமார் 30 லட்சம் ஆழ்துளைக் கிணறுகள் இருக்கின்றன என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்!" என்றார்.

வளம் பெருக்கும்

சரி, உங்களுடைய இந்தப் பணி இந்தியர்களுக்கு எப்படி உதவும்? "கங்கையைச் சுத்தம் செய்ய பல திட்டங்கள் தீட்டப்படுகின்றன. ஆனால், முழுமையான வரைபடம் இல்லாமல் அதைச் சாத்தியப்படுத்த முடியாது. அந்த வகையில் என் பணி நிச்சயமாக இந்தியாவுக்கு உதவும்" என்றார்.

"இத்தனை ஆண்டு ஆய்வில் கங்கை உங்களுக்குள் ஏற்படுத்திய புரிதல் என்ன என்று நீங்கள் என்னிடம் கேட்டால், அதற்கு 1808-ம் ஆண் டில் இந்தியாவில் ஆங்கிலேய அரசு அதிகாரியாக இருந்த ஜேம்ஸ் ஜான்ஸன் என்பவரின் எண்ண ஓட்டத்தைத்தான் பதிலாகச் சொல்வேன். அவர் இப்படிச் சொல்கிறார்: "கங்கை என்பது நோய் உண்டாக்குவதாகவும் (வெள்ளம், வறட்சி) அதே சமயம் வளத்தைப் பெருக்குவதாகவும் (விவசாயம்) இருக்கிறது!"

அதன்படி பார்த்தால், 'இன்க்ரெடிபிள் இந்தியா' என்று சொல்வதுபோல, 'இன்க்ரெடிபிள் கங்கா!'" என்றுதான் சொல்லவேண்டும் என்று புன்னகைக்கிறார் அந்தோனி ஆக்சியவட்டி.

துப்பாக்கிக்கு பதில் சொன்ன நேரம்

"இந்த ஆய்வின்போது எனக்கு நிறைய சுவாரஸ்யமான அனுபவங்கள் கிடைத்தன. அதில் ஒன்று திக்குத் தெரியாத காட்டில் துப்பாக்கி ஏந்திய பெண்களிடம் நான் மாட்டிக் கொண்டது.

வாரணாசியில் இருந்து அலகாபாத் செல்லும் தடத்தில் ஆசியாவிலேயே மிகப்பெரிய கால்வாய் என்று சொல்லப்படும் நாராயண்பூர் கால்வாய் உள்ளது. இந்தக் கால்வாய் கங்கை நதி செல்லும் தடத்தில் அமைந்துள்ளது. இதை ஒளிப்படம் எடுப்பதற்காக காட்டுக்குள் தன்னந்தனியாகச் சென்றேன்.

அப்போது துப்பாக்கி ஏந்திய மூன்று பெண்கள் எதிர்ப்பட்டனர். அவர்கள் துப்பாக்கியைக் காட்டியதால் உடனே கைகளை மேலே உயர்த்திக்கொண்டேன். என்ன செய்வதென தெரியாமல், 'ஆப்கா தேஷ் பஹுத் சுந்தர் ஹை!' (உங்களுடைய நாடு மிகவும் அழகாக இருக்கிறது) என்று சொன்னேன். அதற்கு அவர்கள் சிரித்துவிட்டனர். பிறகு நான் விவரங்களைக் கூறிய பிறகு, மேற்கொண்டு செல்ல என்னை அனுமதித்தனர். அவர்கள் நக்சலைட்டுகள் என்பது சில நாட்கள் கழித்துத்தான் எனக்குத் தெரிய வந்தது" என்கிறார் அந்தோனி ஆக்சியவட்டி.

antony_2587066a.jpg

அந்தோனி ஆக்சியவட்டி

http://tamil.thehindu.com/society/lifestyle/கங்கையை-அளந்தவன்/article7769935.ece

Link to comment
Share on other sites

12042880_933263966722298_569753452265580

முன்னைய காலகட்டத்தில் உலகின் அதிவேகப் பந்துவீச்சாளர்களில் ஒருவராக விளங்கிய மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், தற்போதைய நேர்முக வர்ணனையாளருமான இயன் பிஷப்பின் பிறந்தநாள்.
Happy Birthday Ian Bishop

Link to comment
Share on other sites

12033050_933530826695612_611261871055463

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர், சகலதுறை வீரர், இலங்கை அணிக்காக விளையாடிய மிகச் சில தமிழ் வீரர்களில் ஒருவர் ரஸல் ஆர்னல்டின் பிறந்தநாள்.

இப்போது அனைவரும் ரசிக்கும் நேர்முக வர்ணனையாளர்களில் ஒருவராக விளங்குகிறார்.
Happy Birthday Russel Arnold

12049237_959082354164174_801680745903729

Link to comment
Share on other sites

பள்ளத்தில் சிக்கிய குட்டி யானையை மீட்ட தாய் யானை!

 

கோவை : கோவையில் குழியில் பள்ளத்தில் சிக்கிக்கொண்ட குட்டி யானையை இடைவிடாத முயற்சியால் நீண்ட நேர போராட்டத்துக்கு பின் மீட்டு தன்னோடு தாய் யானை அழைத்துச் சென்றது காண்போரை உருகச் செய்தது.

கோவை துடியலூரை அடுத்த வரப்பாளையம் பகுதியில் உள்ள வாழைத்தோட்டத்துக்கு நேற்று இரவு வந்த காட்டு யானை ஒன்று, அங்கேயே குட்டியை ஈன்றது.சிறிது நேரத்துக்குப் பின் எழுந்து நடக்கத் தொடங்கிய குட்டி யானையை பாதுகாப்பாக தனது கால்களுக்கிடையே வைத்துக்கொண்டு காட்டுக்குள் அழைத்துச் சென்றது தாய் யானை.

elepahant%20pic.jpg

அப்போது எதிர்பாராத விதமாக அங்கிருந்த சிறிய பள்ளமொன்றில் குட்டி யானை சிக்கியது. பள்ளத்தில் இறங்கி ஏற முயன்றபோது குட்டி யானையால் ஏற முடியவில்லை.

குட்டி யானையை மேலே கொண்டுவர தாய் யானை முயற்சித்தும் முடியவில்லை. உடனே அருகில் இருந்த மரங்களை முறித்துபோட்டும், அங்கிருந்த மணலை சரித்துவிட்டும் பள்ளத்தை சற்று மேடாக்கியது. அப்போதும்  குட்டி யானையால் வெளியே வர முடியவில்லை. பின்னர் மீண்டும் மண்ணை சரித்துவிட்டு பள்ளத்தை சாய்தளம் போல் ஆக்கியது. இதையடுத்து குட்டி யானையை தன் நிழலில் வைத்து பத்திரமாக மேலே கொண்டுவந்தது.

pic%20of%20elepahant.jpg

சில மணி நேரங்கள் நடந்த இந்த முயற்சியின்போது யானை மிகச் சத்தமாக பிளிறியதால் அப்பகுதியினர் அங்கு கூடினர். கூட்டத்தைப் பார்த்து பயந்து யானை அங்கிருந்து நகராமல் விடாமுயற்சியோடு குட்டி யானையைப் பத்திரமாக மீட்டது அங்கிருப்பவர்களை நெகிழச்செய்தது.

குட்டி யானையை மீட்ட மகிழ்ச்சியில், அங்கு கூடியிருந்த மக்களை நோக்கி தும்பிக்கையை உயர்த்தி மகிழ்ச்சியோடு சத்தமிட்டு அங்கிருந்து புறப்பட்டது.  தாய் யானையின் காலுக்கு அடியில் பாதுகாப்பாக  காட்டை நோக்கி நடை போட்டது குட்டி யானை.

http://www.vikatan.com/news/article.php?aid=54198

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எப்படித் தான் இப்படி விதம் விதமாக இணைப்புகளை தேடி இணைக்கிறீர்களோ தெரியாது.அத்தனையும் முத்துக்கள்...எல்லா இணைப்புகளுக்கும் சேர்த்து நன்றிகள் பல.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வணக்கம் வாத்தியார்...........! பெண் : முதல் கனவே முதல் கனவே மறுபடி ஏன் வந்தாய் நீ மறுபடி ஏன் வந்தாய் விழி திறந்ததும் மறுபடி கனவுகள் வருமா வருமா விழி திறக்கையில் கனவென்னை துரத்துது நிஜமா நிஜமா ஆண் : முதல் கனவு முதல் கனவு மூச்சுள்ள வரையில் வருமல்லவா கனவுகள் தீர்ந்து போனால் வாழ்வில்லை அல்லவா கனவலவே கனவலவே கண்மணி நானும் நிஜம் அல்லவா சத்தியத்தில் முளைத்த காதல் சாகாது அல்லவா ஆண் : எங்கே எங்கே நீ எங்கே என்று காடு மேடு தேடி ஓடி இரு விழி இரு விழி தொலைத்து விட்டேன் பெண் : இங்கே இங்கே நீ வருவாய் என்று சின்ன கண்கள் சிந்துகின்ற துளிகளில் துளிகளில் உயிர் வளர்ப்பேன் ஆண் : தொலைந்த என் கண்களை பார்த்ததும் கொடுத்து விட்டாய் கண்களை கொடுத்து இதயத்தை எடுத்து விட்டாய் பெண் : இதயத்தை தொலைத்ததற்கா என் ஜீவன் எடுக்கிறாய் பெண் : ஊடல் வேண்டாம் ஓடல்கள் ஓசையோடு நாதம் போல உயிரிலே உயிரிலே கலந்து விடு ஆண் : கண்ணீர் வேண்டாம் காயங்கள் வேண்டாம் ஆறு மாத பிள்ளை போல மடியிலே மடியிலே உறங்கி விடு பெண் : நிலா வரும் நேரம் நட்சத்திரம் தேவை இல்லை நீ வந்த நேரம் நெஞ்சில் ஒரு ஊடல் இல்லை வன பூக்கள் வேர்க்கும் முன்னே வர சொல்லு தென்றலை வர சொல்லு தென்றலை ஆண் : தாமரையே தாமரையே நீரில் ஒளியாதே நீ நீரில் ஒளியாதே தினம் தினம் ஒரு சூரியன் போல வருவேன் வருவேன் அனுதினம் உன்னை ஆயிரம் கையால் தொடுவேன் தொடுவேன் பெண் : சூரியனே சூரியனே தாமரை முகவரி தேவை இல்லை விண்ணில் நீயும் இருந்து கொண்டே விரல் நீட்டி திறக்கிறாய் மரக்கொத்தியே மரக்கொத்தியே மனதை கொத்தி துளை இடுவாய் உள்ளத்துக்குள் விளக்கடித்து தூங்கும் காதல் எழுப்புவாய்.......! --- முதல் கனவே முதல் கனவே ---  
    • என்ன சொல்ல வருகிறீர்கள்....ஜேர்மனியில் சட்டம் தான் ஆட்சி செய்கிறது   குற்றம் செய்தால் சட்டப்படி சிறைத்தண்டனை உண்டு  எனக்கு தெரிந்த பலர் அனுபவித்து உள்ளார்கள்  வேறு கடவுச்சீட்டு பாவித்து  பயணம் செய்ய முற்பட்டபோது கையும் மெய்யுமாக. பிடிபட்டுள்ளார்கள்....இங்கே கூடாதா வாழ்க்கை என்ற பலரும் ஊரிலுள்ள உறவினர்கள் நண்பர்கள்.     ....அழைத்து விட்டுள்ளார்கள் .. .ஏன்?? எதற்காக?? இப்போது கூட  இங்கே வருவதற்கு நிறைய பேர் முயற்சிகள் செய்கிறார்கள்   கோடிக்கணக்கில் பணம் செலவு செய்து    ஆரம்பத்தில் குமாரசாமி அண்ணை  சொன்ன விடயங்களை நானும் அனுபவித்து உள்ளேன்  .. உதாரணமாக பக்கத்து சிற்றிக்கு  போவதற்கு தடை  ....அந்த நேரத்தில் பல தமிழர்கள்  பல சிற்றிகளில். வெவ்வேறு பெயர்களில் பதிந்து பணம் எடுத்துள்ளார்கள். மட்டுமல்ல  பிரான்ஸ் பெல்சியம,. ... ....போன்ற பல நாடுகளில் கூட பதிந்து பணம் எடுத்து உள்ளார்கள்  இவையெல்லாம் உறுதியாக கண்டு பிடிக்கப்பட்டது  அதற்கு ஏற்ப நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது  ..  குறிப்பு,   ...இலங்கை கடவுச்சீட்டுகளில் ...எல்லா நாடுகளுக்குமான. இலங்கை பாஸ்போர்ட் இல்    ஜேர்மனியில் உள்ள இலங்கை தூதரகம்.  ......இலங்கைக்கு மட்டுமே திரும்பி போகலாம்” என்று அடித்து கொடுக்கிறது    கொழும்பு விமான நிலையத்தில் திரும்ப வரும் போது  பல மணிநேரம் மறித்து  பணம் பறிக்கிறார்கள்  .....முதலாவது உங்கள் நாட்டை திருத்த முயற்சிகள் செய்யுங்கள் 
    • Bhakshak (தமிழில் மொழிமாற்றம் செய்துள்ளார்கள்) என்று ஒரு திரைப்படம் சமீபத்தில் இணையத்தில் பார்த்தேன்.அனாதை இல்லத்தில் சிறுமிகளை எப்படித் துன்புறுத்துகிறார்கள் என்பதை விளக்குகிறார்கள். முடிந்தால் பாருங்கள்
    • மயிலம்மா என்று கதையைத் தொடங்கி அஞ்சலையை கலியாணம் கட்டி…, அதுசரி சுவியர் உங்கள் உண்மையான பெயர் வாமன் இல்லையே?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 3 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 31 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.