Jump to content

இளமை புதுமை பல்சுவை


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
On ‎9‎/‎24‎/‎2018 at 11:29 AM, குமாரசாமி said:

அது மிசின் செய்யுதெண்டு இஞ்சை கதைக்கினம்.  ?

மெஷின் வெட்டி ஓட்டுறது என்டால் ஒரு குறிப்பிட்ட் இணையத்தில் இருந்து மட்டும் தான் வெட்டி ஓட்டும் 
 

Link to comment
Share on other sites

  • Replies 11.3k
  • Created
  • Last Reply

அமெரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்ட அரிய வகை இருதலை பாம்பு

விஷமுள்ள அரிய இரட்டை தலை பாம்பு ஒன்று வெர்ஜீனியா மாநிலத்திலுள்ள தோட்டத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. இது ஆக்ரோஷமானது அல்ல. ஆனால் தலைகளை கொண்டு தாக்கக்கூடியது. இந்த இருதலை பாம்பு வனவிலங்கு மையத்தில் விடப்படும் என்று நம்பப்படுகிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ரதி said:

மெஷின் வெட்டி ஓட்டுறது என்டால் ஒரு குறிப்பிட்ட் இணையத்தில் இருந்து மட்டும் தான் வெட்டி ஓட்டும் 
 

அப்ப.... என்ரை தங்கச்சிக்கு எல்லா விசயமும் தெரியும்.

Link to comment
Share on other sites

‘காதலை அகௌரவப்படுத்தலாகாது’
 

image_879fef08f2.jpgபூங்கா ஒன்றில் காதல் ஜோடி, மிக அந்நியோன்னியமாக காதல்மொழி பகிர்ந்து கொண்டிருந்தது.

அப்போது ஒரு யுவதி அங்கே வந்தாள். இவர்களைப் பார்த்தவள், அதிர்ச்சியடைந்தாள். “ஏன்டா, நீ இன்னமும் திருந்தவேயில்லையா” என்றவள், கோபாவேசத்துடன் முறைத்தபடி, நடக்க ஆரம்பித்தாள்.

அவள் போனவுடன் “அட, இப்படி ஒரு சமாச்சாரம் இருக்கிறதா? நீ என்ன மனுஷன்” என்றபடி, கன்னத்தில் ஓங்கி அடித்துவிட்டு, அருகில் இருந்தவளும் நகர்ந்தாள்.

கன்னத்தைத் தடவியபடி, மிகவும் பரிதாபமாக அவன் நிற்க, அங்கு வந்த இன்னொரு யுவதி, “என்னடா, உன்னைக் காணுவதே அரிதாக இருக்கிறது. எங்கே போனாய்” என்று கேட்க, உடனே அவனும் தனது பாணியில், “அடி, உன்னை மறப்பேனா, பரீட்சைக்குப் படித்துவிட்டு இன்றுதான் வருகிறேன்” என்றான்.

“சரி சரி, வா மச்சான்” என்றபடி, அவன் இடையில் தனது கரத்தை இணைத்து நடக்க, இருவரின் பொழுதுபோக்கு ஆரம்பமானது.

தெருவில் காதல் மயக்கத்துடன் உலா வருபவர்கள் உண்மையான காதலர்கள் என்றா நீங்கள் எண்ணுகின்றீர்கள்? இளவயதில் அல்ல, முதுமையிலும் ஸ்திரமான காதலை எண்ணுபவர்கள் வீதியோரம் அலைந்து திரியமாட்டார்கள். களவியல் புதுமையல்ல;  அது கற்புடன் அமையவேண்டும். காதலை அகௌரவப்படுத்தலாகாது.

Link to comment
Share on other sites

20 வயதை நிறைவு செய்த கூகுள் ...ஸ்பெஷல் டூடுல்கள் ஒரு ரீவைண்ட்! #HBDGoogle

3274_thumb.jpg
 

'நானும் 90ஸ் கிட்தான் டா' என்பதை நினைவுபடுத்திக்கொண்டே டீன் ஏஜ்ஜை கடந்து 20வது வயதில் காலடி எடுத்து வைக்கிறது கூகுள்.

20 வயதை நிறைவு செய்த கூகுள் ...ஸ்பெஷல் டூடுல்கள் ஒரு ரீவைண்ட்! #HBDGoogle
 

'ஈட்... கூகுள்... ஸ்லீப்...' - இன்றைய இளைஞர்களின் வாழ்க்கை முறை இப்படித்தான் மாறிப்போயிருக்கிறது. அந்த அளவுக்குக் கூகுள் நம் வாழ்வோடு ஒன்றிப் போய்விட்டது. எந்த மொழியில், எந்தக் கேள்வி கேட்டாலும் அடுத்த நொடி அதை நமக்கு கற்றுத தரும் கூகுள், இன்று, 'நானும் 90ஸ் கிட்தான்டா' என்பதை நினைவுபடுத்திக்கொண்டே டீன் ஏஜ்ஜை கடந்து 20-வது வயதில் காலடி எடுத்து வைக்கிறது. 1998, செப்டம்பர் 4-ம் தேதி இந்நிறுவனம் பதிவு செய்யப்பட்டிருந்தாலும், செப்டம்பர்  27-ம் தேதியைத்தான் பிறந்தநாளாக கொண்டாடுகிறது கூகுள். கூகுளின் சிறப்பான விஷயங்களில் முதலிடம் பிடிப்பது டூடுல்கள்தாம். பிரபலங்களின் பிறந்தநாள், வரலாற்றின் முக்கிய தினங்கள், பிரபல விளையாட்டுப் போட்டிகள் என அனைத்திற்கும் கூகுளின் ஹோம் பேஜ்ஜில் டூடுல் ஒன்றை வைத்துக் கௌரவிப்பது வழக்கம். இது எப்போது இருந்து தொடங்கியது?

கூகுள் டூடுல்

முதன்முதலில், 1998-ம் ஆண்டு கூகுள் ஹோம் பேஜ்ஜில் 'பர்னிங் மேன்' டூடுல் வைக்கப்பட்டது. கூகுளின் நிறுவனர்களான லாரி பேஜ் மற்றும் செர்ஜி பிரின் ஆகிய இருவரும் நொவாடா பாலைவனத்தில் நடைபெறும் 'பர்னிங் மேன் பெஸ்டிவல்' என்ற திருவிழாவில் கலந்து கொள்ள  விரும்பினார்கள். அந்த நேரத்தில் கூகுளின் சர்வர் கிராஷ் ஆகிவிட்டால், தாங்கள் அலுவலகத்தில் இல்லை, சர்வர்கள் கிராஷ் ஆனாலும் இப்போது சரி செய்ய இயலாது என்பதைக்  கூகுள் வாடிக்கையாளர்களுக்கு எப்படித் தெரிவிப்பது என்று யோசித்தனர். அந்த யோசனையின் பலனாக வந்ததுதான் இந்த 'பர்னிங் மேன்' டூடுல். பர்னிங் மேன் லோகோவை  கூகுள் லோகோவில் உள்ள இரண்டாவது 'O' விற்குப் பின்னால் குறியீடாக வைத்து முதல் டூடுலை வடிவமைத்தனர். வாடிக்கையாளர்களும் இந்தக் குறியீட்டை புரிந்துகொண்டனர்.  அதன்பிறகு பல்வேறு டூடுல்களை உருவாக்கியது கூகுள் நிறுவனம், அவற்றுள் சிறப்பான சிலவற்றை இங்கே காணலாம்...

 

 

பேக்மேன், 2010

                 கூகுள் டூடுல்
இன்று பப்ஜி போன்ற வீடியோ கேம்களை விளையாடிக் கொண்டிருக்கும் 90-ஸ் கிட்ஸ்க்கு விதை போட்ட வீடியோ கேம்களில் முக்கியமான ஒன்று பேக்மேன் கேம். மே 21, 2010ம் ஆண்டு பேக்மேன்  கேமின் 30-வது பிறந்தநாளைக் கொண்டாடும் வகையில் இந்த டூடுல் அமைக்கப்பட்டது.  'க்ளிக் டு ப்ளே' என்ற வாசகத்தோடு இடம்பெற்ற இந்த டூடுலுக்கு மிகப்பெரிய வரவேற்பை மக்கள் வெளிப்படுத்தினர். இது ஏரோ கீ-க்களைக் கொண்டு விளையாடுவது போல வடிவமைக்கப்பட்டிருந்தது. பல நாள்கள் கழித்து பேக்மேன் விளையாட வைத்து தனது வாடிக்கையாளர்களுக்கு அதை நாஸ்டாலஜிக் மொமென்ட்டாக மாற்றியமைத்தது கூகுள். இதேபோல் ஸ்னேக் (Snake) கேம் டூடுலையும் வடிவமைத்தது குறிப்பிடத்தக்கது.

 

 

சார்லி சாப்ளின், 2011

ஏப்ரல் 16, 2011ம் ஆண்டு 'நகைச்சுவை உலகின் பிதாமகன்' சார்லி சாப்ளினின் 122-வது பிறந்தநாளை கொண்டாடும் வகையில் டூடுல் ஒன்றை வடிவமைத்தது கூகுள். அதுதான் கூகுளின் முதல் லைவ் டூடுல்.      

                                                

 

 

கையில் கூகுள் என்ற செய்தித்தாளுடன் சாப்ளின் இருக்கும் டூடுலில் ப்ளே பட்டன் ஒன்று இருந்தது. அந்த பட்டனை க்ளிக் செய்தவுடன் 2 நிமிட ப்ளாக் & ஒயிட் படம் ஒன்று ஓடும். நகைச்சுவை உலகில் புரட்சி செய்த சார்லி சாப்ளினுக்கு கூகுள் குறும்படம் வெளியிட்டு கௌரவித்தது மிகப் பெரிய அளவில் பேசப்பட்டது. லைவ் கூகுள் டூடுல்களுக்கு ஆரம்பமாக இருந்ததும் இந்த டூடுல்தான்.

பீத்தோவன், 2015 

கூகுள் டூடுல்

டிசம்பர் 17, 2015-ம் ஆண்டு இசையுலகின் மகாக் கலைஞன் பீத்தோவனின் 245-வது பிறந்தநாளை முன்னிட்டு சிறப்பான டூடுல் ஒன்றை வடிவமைத்தது கூகுள். பீத்தோவன், வாழ்க்கையின் ஏற்றத் தாழ்வுகள் மற்றும் இசையின் அற்புதங்கள் ஆகியவற்றை சுமார் 5 நிமிடத்திற்கு இசையுடன் கூடிய இன்ட்ராக்டிவ் வீடியோவாக செதுக்கியிருந்தது கூகுள். ஆகஸ்ட் 22, 2013-ம் ஆண்டு Claude Debussy என்ற பிரெஞ்ச் இசைக் கலைஞனின் 151-வது பிறந்தநாளன்றும் இதேபோல ஒரு டூடுலை வடிவமைத்தது குறிப்பிடத்தக்கது.

மை ஆஃப்ரோசென்ட்ரிக் லைஃப், 2016 (My afrocentric Life)

                கூகுள் டூடுல்

2009-ம் ஆண்டு முதல், 'டூடுல் 4 (ஃபார்) கூகுள்' என்ற பெயரில் பள்ளிக் குழந்தைகளுக்கு ஒரு போட்டியை நடத்தி வருகிறது கூகுள். இதில் நன்றாக வரையப்பட்டுள்ள படங்களை கூகுள் நிறுவனம் டூடுல்களாக மாற்றிவருகிறது. ஆரம்பத்தில் அமெரிக்க பள்ளிகளுக்கு மட்டுமே நடத்தப்பட்ட இந்தப் போட்டி, பின்னர் உலகம் முழுவதுமுள்ள குழந்தைகளுக்கு நடத்தப்பட்டு வருகிறது.

இந்தப் போட்டியின் மூலம், 2016-ம் ஆண்டில் தேர்வு செய்யப்பட்டதுதான் இந்த 'மை ஆஃப்ரோ சென்ட்ரிக் லைஃப்' டூடுல். 'ப்ளாக் லிவ் மேட்டர்ஸ் மூவ்மென்ட்' என்று சொல்லப்படும் கறுப்பின மக்கள் மீதான இனவெறிக்கு எதிரான போராட்டத்தை மையப்படுத்தி வரையப்பட்டது இது. அமெரிக்காவைச் சேர்ந்த அகிலா ஜான்சன் என்ற பள்ளி மாணவி, பென்சில், க்ரேயான்ஸ் மற்றும் மார்க்கர்கள் பயன்படுத்தி இரண்டு வாரங்களில் வரைந்ததுதான் இந்த டூடுல் புகைப்படம். இந்த டூடுலின் மூலம், சமூகப் பிரச்னைகளுக்கு குரல் கொடுக்கத் தொடங்கியது மக்கள் மத்தியில் கூகுளுக்கு நல்ல பெயரை பெற்றுத்தந்தது.

என்ஜாய் எவ்ரி மொமென்ட் ஆஃப் யுவர் லைஃப், 2016 (Enjoy Every Moment Of Your Life)

                               கூகுள் டூடுல்
இந்தியாவில், நடத்தப்பட்ட 'டூடுல் 4 கூகுள்' போட்டியில் தேர்வானதுதான் இந்த 'என்ஜாய் எவ்ரி மொமென்ட் ஆஃப் யுவர் லைஃப்' டூடுல். புனேவைச் சேர்ந்த 11 வயது மாணவி அன்விதா பிரசாந்த் (Anvita Prashant) என்பவர் இந்த டூடுலை வரைந்திருந்தார்.
இந்த டூடுலில் கூகுளின் ஒவ்வொரு எழுத்திலும் ஒரு குழந்தை, வாழ்க்கையை மகிழ்ச்சியாகக் கழிப்பது போன்று வரைந்திருந்தார். மரத்தில் படுத்திருப்பது போலவும், நீச்சல் அடிப்பது போலவும், பலூன் வைத்து விளையாடுவது போலவும் வரையப்பட்டிருந்த இந்த டூடுல், 'குழந்தைகள் தினமான' நவம்பர் 14, 2016 அன்று கூகுளின் ஹோம் பேஜ்ஜை அலங்கரித்தது.

சுதந்திர தினம், 2018

                   கூகுள் டூடுல்
இந்தியாவின் 72-வது சுதந்திர தினத்தைக் கௌரவிக்கும் வகையில் வண்ணமயமான ஒரு டூடுலை வடிவமைத்திருந்தது கூகுள். இந்த ஆண்டு ஆகஸ்ட் 15-ம் தேதி இந்த டூடுல் கூகுளின் ஹோம் பேஜ்ஜில் வைக்கப்பட்டது. இதில், இந்தியாவின் தேசிய பறவையான மயில், தேசிய விலங்கான புலி, தேசிய பழமான மாம்பழம், தேசிய மலரான தாமரை மற்றும் யானை ஒன்றும் இடம்பெற்றிருந்தன. டூடுலின் நடுவில் இரண்டு மயில்கள் இருக்க, இடதுபுறம் யானையும் வலதுபுறம் புலியும் நின்று டூடுலை அழகுபடுத்தின. டூடுலின் நடுவில் தாமரைகளும், மேல் பக்கம் வரிசையாக மாம்பழங்களும் இருந்தன. இந்த வண்ணங்கள் நிறைந்த டூடுல் இந்தியர்களைப் பெரிதும் கவர்ந்தது.  

கடந்த 20 வருடங்களில் 2000 டூடுல்களுக்கு மேல் கூகுளின் ஹோம் பேஜ்ஜில் இடம்பெற்றிருக்கின்றன.

https://www.vikatan.com

Link to comment
Share on other sites

1.23 பில்லியன் செலவில் தயாரான பாதணி

 

 

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

 

துபாயில் உலகிலேயே மிக அதிக விலையிலான ஒரு ஜோடி பாதணி தயாரிக்கப்பட்டுள்ளன. 

துபாயில் உலகிலேயே மிக அதிக விலையிலான ஒரு ஜோடி பாதணி தயாரிக்கப்பட்டுள்ளன. தங்கம் மற்றும் வைரக்கற்களால் தயாரான பாதணியின்  சுமார் 1.23 பில்லியன்  மதிப்பிடப்பட்டுள்ளது.

 இதன்மூலம் உலகிலேயே மிக அதிக விலை உயர்ந்த  பாதணி என்ற பெருமை பெற்றுள்ளது. குறித்த பாதணியில்  நூற்றுக்கணக்கான வைர கற்கள் பதிக்கப்பட்டுள்ளன. இதை ஜெட்டா துபாய் நிறுவனமும், பாசியன் ஜுவல்லரியும் இணைந்து தயாரித்துள்ளன. அதற்கு 9 மாத காலம் ஆனது.

 

புர்ஸ் அல் அராப் 7 நட்சத்திர ஆடம்பர ஹோட்டலில் இன்று இது அறிமுகப்படுத்தப்படுகிறது. 

https://www.ibctamil.com

Link to comment
Share on other sites

ஊர் சுற்றலாம் வாங்க!- இன்று உலக சுற்றுலா தினம்


 

 

world-tourism-day

 

 

ஆதி மனிதன் உணவுக்காகவும் தோதான உறைவிடத்துக்காகவும் ஒவ்வோர் இடமாக சுற்றித்திரிந்து பின்னர் வாழ்வதற்கு ஏற்ற சூழல் பொருந்திய ஓரிடத்தை தேர்வு செய்து அங்கே நாகரிகத்தை வளர்த்தான் அவனும் வளர்ந்தான்.

ஆதலால்.. பயணம் என்பது ஒவ்வொரு மனிதனின் மரபணுவிலுமே பொதிந்து கிடக்கிறது. அதன் பரினாம வளர்ச்சிதான் சுற்றுலா. இருக்குமிடத்தைவிட்டு ஓய்வுக்காகவோ இல்லை ஆன்மீகத் தேடலுக்காகவோ இல்லை ஆராய்ச்சிக்காகவோ நாம் வேறிடத்துக்கு செல்வதுதான் அகராதி சொல்லும் சுற்றுலாவுக்கான அர்த்தம்.

21-ம் நூற்றாண்டில் பரபரப்பான இயந்திர வாழ்க்கைக்கு இடையே யாருக்குத்தான் குறைந்தது 4 நாட்களாவது ஓய்வு எடுக்க சுற்றுலா செல்ல விருப்பம் இருக்காது.

தனி மனிதனின் வருமானம் பெருக பெருக இப்போதெல்லாம் கோடை விடுமுறைக்கு குடும்பத்துடன் அண்டை நாடான இலங்கைக்கும் சிங்கப்பூருக்குமாவது செல்வது இயல்பாகிவிட்டது. ஐரோப்பியர்கள் சுற்றுலா செல்வதில் கை தேர்ந்தவர்கள். தங்கள் வருமானத்தில் ஒரு பகுதியை வெளிநாட்டு சுற்றுலாக்காகவே என சேர்த்து வைக்கும் பழக்கம் அவர்களுக்கு உண்டு. கண்டம் விட்டு கண்டம் சுற்றிப் பார்ப்பது என்பது வெறும் பயணம் மட்டுமல்ல. அது வேறு ஒரு புதிய கலாச்சாரத்தை அறிந்து கொள்வதற்கான வாய்ப்பு. ஒரே உலகம் ஆனால், எத்தனை பாஷை எத்தனை உணவு எத்தனை எத்தனை பண்பாடுகள்.

அண்மையில் ஒரு விளம்பரம் பார்க்க நேர்ந்தது. அது ஒரு தனியார் விமான நிறுவனத்தின் விளம்பரம். அதில் முதல் கேள்வியே Why do you love the world? உனக்கு ஏன் உலகத்தைப் பிடிக்கும்? அதற்கு பயணிகளாக வரும் பலரும் கூறும் பதிலகள் இந்தக் கட்டுரைக்கு மிகவும் பொருத்தமானது.

பதில் 1: அது மிகவும் தத்துவார்த்தமான கேள்வி

பதில் 2: அதை எப்படி விவரிக்க முடியும்

பதில் 3: உலகம் மிக அழகானது

பதில் 4: ஏனென்றால் அதில் அத்தனை மனிதர்கள் இருக்கிறார்கள். சேக்ஸ்பியரின் வார்த்தைகளைப் போன்றது..

பதில் 5: உலகை நீங்கள் சுற்றிப் பார்க்கும்போதுதான் உங்களது மனது திறக்கும். பரந்துபட்ட பார்வை கிடைக்கும்.

பதில் 6: உலகை சுற்றிப் பார்த்த பின்புதான் எனக்கு ஒரு புதிய நம்பிக்கை வந்திருக்கிறது. நான் எங்கிருந்தாலும் என்னை நானாகவே அடையாளப்படுத்திக் கொள்ள முடிகிறது.

பதில் 7: இந்த உலகம் அற்புதமானது. நாம் அனைவரும் நம் தலைக்கு மீதான வானத்தை விரிவுப்படுத்திக் கொள்ள வேண்டும்.

பதில் 8: இந்த உலகம் மிகவும் பெரியது.

பதில் 9: இந்த உலகம் சிறியது

பதில் 10: இந்த உலகம் ஆச்சர்யங்களால் நிரம்பியது.

பதில் 11: உலகை சுற்றிப் பார்த்தால்தான் இந்த உலகம் உருண்டை என்பதே எனக்குத் தெரிகிறது.

பதில் 12:ஒவ்வொரு பகுதியிலிருக்கும் ஒவ்வொரு விதமான மக்கள் என்னை வசீகரிக்கின்றனர்

பதில் 13:மொத்த உலகமும் ஒரே குடும்பம்

பதில் 14: அப்படியே கட்டிப்பிடித்துக் கொள்ள வேண்டும்.

பதில் 15: இந்த உலகில் அவ்வளவு அழகு இருக்கிறது. ஒரே ஒரு வாழ்க்கை அத்தனையையும் பார்க்க போதுமானதல்ல.

பதில் 16: எந்த மனிதனும் தனியாக இல்லை. உலகில் அத்தனை ஆயிரம் கலாச்சாரங்கள் இருக்கின்றன. அதில் நமது பங்கும் இருக்கிறது என்ற உணர்வைத் தருகிறது.

பதில் 17: நீங்கள் தனித்துவமானவர். உங்களைப் போல் யாருமில்லை. இதை நீங்கள் இந்த உலகைச் சுற்றிப் பார்க்கும்போது உலகு உங்களுக்கு உணர்த்தும்.

இந்த பதில்கள் ஓவ்வொன்றும் என்னைப் பொருத்தவரை ஒரு தத்துவம். மனிதன் ஏன் பயணங்கள் மேற்கொள்ள வேண்டும் என்பதற்கு இதைவிட அழகாக தெளிவுரை கொடுக்க இயலாது.

சுற்றுலா வெறும் புத்துணர்ச்சிக்காக மட்டுமல்ல புதிய படிப்பினைகளுக்கானது. அறிவியல் தொழில்நுட்பம் வளர்ந்துவிட்ட காலத்தில் உலகை விட்டு விண்வெளியை சுற்றிப்பார்க மக்கள் ஆயத்தமாகிவிட்டனர்.

அதனால்தானோ என்னவோ இந்த ஆண்டுக்கான உலக சுற்றுலா தினத்துக்கான கருப்பொருள் "Tourism and the Digital Transformation" சுற்றுலாவும் தொழில்நுட்ப வளர்ச்சியும் என்பது நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது.

உலா சுற்றுலா நாளின் வரலாறு:

உலக சுற்றுலா நாள் (World Tourism Day) உலக சுற்றுலா நிறுவனத்தின் ஆதரவோடு செப்டம்பர் 27ம் நாளில் 1980ம் ஆண்டிலிருந்து உலகெங்கும் கொண்டாடப்பட்டு வருகிறது. 1979-ல் ஸ்பெயினில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் உலக சுற்றுலா நிறுவனத்தின் மூன்றாவது பொது சபை கூட்டத்தில் இதற்கான தீர்மானம் கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்பட்டது. 

சுற்றுலாவின் முக்கியத்துவத்தை உலகெங்கும் எடுத்துக்காட்டவும் சுற்றுலா எப்படி மக்களின் சமூக, கலாச்சார, அரசியல் மற்றும் பொருளாதாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதை எடுத்துக்காட்டவும் இந்நாள் சிறப்பிக்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு நாடும் ஒவ்வொரு ஆண்டை சுற்றுலா ஆண்டாக அறிவித்து சுற்றுலாவை மேம்படுத்தி வருகின்றன. 

1538024786.jpg

சுற்றுலா என்பது பொருளாதாரம்:

சுற்றுலாவை மேம்படுத்த எல்லா நாடுகளும் தனித் துறையை வைத்திருக்கின்றன. ஏனெனில் சுற்றுலா என்பது பொருளாதாரத்தை வளர்க்கக் கூடியது. ஆசிய நாடுகளான இலங்கை, தாய்லாந்து, இந்தோனேசியா போன்ற நாடுகளில் சுற்றுலா பொருளாதாரம் பெரும் பங்கு வகிக்கிறது. மூன்றாம் உலக நாடுகளின் சுற்றுலா பெரும் வருவாய் ஈட்டித்தரும் துறையாகப் பார்க்கப்படுகிறது. உலகின் இரண்டாவது மிகப்பெரிய தொழில் சுற்றுலா. 

1538024839.jpg

ஊர் சுற்றலாம்..
சுற்றுலா செல்வது அவசியம் என்பதை உணர்த்துவதற்காகத்தான் பள்ளிகளில் சிறு வயதில் ஆண்டு தேர்வு விடுமுறை விடும்போதெல்லாம் ஆசிரியர்கள், "விடுமுறை முடிந்து வரும்போது நீங்கள் சுற்றுலா சென்ற இடத்தைப் பற்றி கட்டுரை எழுதி வாருங்கள்" என்று சொல்வார்கள்.
இப்போதெல்லாம் பயணங்கள் கேட்ஜட்ஸ்களிடம் சிக்கிக் கொண்டிருக்கிறது. ரயில் ஸ்நேகம் என்றொரு வார்த்தைக்கே இடமில்லாமல் போய்விட்டது. காரணம் பஸ், ரயில் என எதில் ஏறினாலும் யாரும் யாரையும் பார்ப்பதில்லை. பேசுவத்திலை. செல்போன், லேப்டாப், டேப் என ஏதாவது உபகரணத்தில் ஆழ்ந்து விடுகின்றனர். அருகில் யார் அமர்ந்திருக்கிறார்கள் என்பது கூட தெரிவதில்லை. இவ்வளவு ஏன் இறங்குமிடத்தைக் கூட தவறு விடச் செய்துவிடுகிறது இந்த உபகரணங்களின் ஆதிக்கம்.

1538024924.jpg

சுற்றுலா என்பது நீங்கள் வீட்டை விட்டு அந்தப் பயணத்துக்காக வாகனத்தில் ஏறுவதிலிருந்தே தொடங்கிவிடுகிறது. வழி நெடுகிலும் காணும் மக்கள், பார்க்கும் விவசாய நிலங்கள், கேட்கும் வார்த்தைகள் பேச்சுக்கள் எல்லாமே சுற்றுலாவின் ஓர் அங்கமே.சுற்றுலா செல்லும்போது கண்களையும், காதுகளையும், மனதையும் திறந்து வைத்துக் கொண்டு செல்லுங்கள்.

சுற்றுலா செல்ல மிக முக்கியமானது பணம். எனவே, வாழ்க்கையில் தேவைகள் குறையப் போவதில்லை ஆனால் அதற்கும் இடையில் சேமிக்கும் பழக்கம் அவசியம். சேமிக்கும் பணத்தில் சிறிய தொகையை சுற்றுலாவுக்காக பயன்படுத்துவது அதைவிட அவசியம்.

குயின் போல சுற்றலாம்..

இந்தியில் குயின் என்றொரு படம் வந்தது. கங்கனா ரனாவத் நடித்திருப்பார். நின்று போன திருமணத்தின் சோகத்தை மறக்க தனியாக ஹனிமூன் செல்வார். உலகம் அவருக்கு சிவப்பு கம்பளம் விரிக்கும். உள்ளத்துக்கு ஆறுதல் தரும். புதிய தேடல்கள் புதிய வழிகளைக் காட்டும். வாழ்க்கையின் அர்த்தத்தை உணர்த்தும். இதெல்லாம் சாத்தியமா என்று கேட்பவர்களுக்கு ஒரே ஒரு பதில்தான் இருக்கிறது. உலகம் பெண்களுக்கானதும்தான். பெண்களும் சுற்றுலா செல்கின்றனர். தனியாக செல்கின்றனர். 

1538024996.jpg

2007-ல் இலங்கையில் கொண்டாடப்பட்ட உலக சுற்றுலா தினத்தின் கருப்பொருள்  "சுற்றுலாக் கதவுகள் பெண்களுக்குத் திறக்கப்பட்டுள்ளன". இப்போது 11 ஆண்டுகள் கடந்துவிட்டன. பெண்களின் சுற்றுலாக்களும் பெருகிவிட்டன. சுற்றுலாவில் பாலின பேதம் வேண்டாம்.

ஒரு சினிமாப் பாடலில் வருவதுபோல் 'உலகம் அழகு கலைகளின் சுரங்கம்'. உலகைச் சுற்றுவோம். முடியாவிட்டால் நம்மூருக்கு அருகிலிருக்கும் இடங்களுக்காவது சுற்றுலா சென்று உடலுக்கு உள்ளத்துக்கும் புத்துணர்ச்சியைக் கொடுப்போம்.

 

https://www.kamadenu.in

Link to comment
Share on other sites

860 கிலோ ‘யானைப் பறவை’தான் உலகின் மிகப்பெரியது: ஆய்வாளர்களின் விவாதம் முடிவுக்கு வந்தது

 

 

 
varombi

யானைப் பறவை என்று சொல்லப்படும் வரோம்பி டைட்டான்.   -  படம்:ஏஎப்பி

உலகிலேயே மிகப்பெரிய பறவை எது ஆய்வாளர்கள் மத்தியில் நீண்ட விவாதம் எழுந்துவந்த நிலையில், மடகாஸ்கரில் வாழ்ந்த 860 கிலோ எடை கொண்ட யானைப் பறவைதான் உலகின் மிகப்பெரியது என்று தெரியவந்துள்ளது.

இதன் மூலம் ஆய்வாளர்கள் மத்தியில் நீண்டகாலமாக நீடித்து வந்த வாதம், ஆய்வுகள் முடிவுக்கு வந்துள்ளது.

 
 

உலகின் மிகப்பெரிய பறவையாக கருதப்படும் யானைப் பறவை வரோம்பி டைட்டான் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். கிழக்கு ஆப்பிரிக்காவில் உள்ள மடகாஸ்கர் தீவில் இந்தப் பறவை வாழ்ந்திருக்கலாம், அங்கு மனிதர்கள் மெல்லக் குடியேறியபின் அந்தப் பறவை அழிவைச் சந்தித்து இருக்கும் என்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த வரோம்பி டைட்டான் பறவையின் எலும்புகள், முட்டைகள், எச்சங்கள் ஆகியவற்றை கைப்பற்றி நடத்தப்பட்ட ஆய்வில் இந்தப் பறவையின் எடை ஏறக்குறைய 860 கிலோ இருந்திருக்கலாம், சராசரியாக 650 கிலோ எடை வரை இருந்திருக்கும் என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

அதாவது ஒட்டச்சிவிங்கியின் உயரம் வரை இந்தப் பறவை இருந்திருக்கும், ஆனால், பறக்கும் சக்தி இந்தப் பறவைக்கு இருந்திருக்காது. இந்த யானைப் பறவையின் முட்டை, கோழி முட்டையைக் காட்டிலும், 160 மடங்கு பெரிதாக இருந்திருக்கும் என்று தெரிவிக்கின்றனர்.

தற்போது வாழ்ந்து வரும் நெருப்புக் கோழியைக் காட்டிலும் 20 மடங்கு பெரிதாக வரோம்பி டைட்டான் பறவை வாழ்ந்திருக்கலாம். இந்தப் பறவை 19-ம் நாற்றாண்டில் மடகாஸ்கர் தீவில் வாழ்ந்திருக்கலாம்,

bonesjpg

மடகாஸ்கர் பகுதியில் ஆய்வாளர்கள கண்டுபிடித்த யானைப் பறவையின் எலும்புகள்

 

இந்த யானைப் பறவை அப்யோர்னிதிடே குடும்பத்தைச் சேர்ந்தது. இந்தக் குடும்பத்தில் 15 வகையான பறவைகள் இருந்த நிலையில் அதில் ஒருவகை வரோம்பி டைட்டான். இந்த பறவைக் குடும்பத்தில் மிகவும் பெரிதானது இந்த வரோம்பி டைட்டான் ஆகும். இந்த அப்யோர்னிதிடே வகைக் குடும்ப பறவைகள் மடகாஸ்கர் தீவில் ஏறக்குறைய 10 ஆயிரம் ஆண்டுகள் வரை வாழ்ந்திருக்கலாம், இந்தப் பறவை இனம் அழிந்து ஏறக்குறைய ஆயிரம் ஆண்டுகள் ஆகி இருக்கும் என்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த வரோம்பி டைட்டான் பறவை குறித்த ஆய்வுகளை லண்டனில் உள்ள ஜுவாலிஜிக்கல் சொசைட்டியின் பேராசிரியர் ஜேம்ஸ் ஹேன்ஸ்போர்டு மேற்கொண்டார். இந்தப் பறவை குறித்த ஆய்வு அறிக்கை ராயல் சொசைட்டி ஓபன் சையின்ஸ் பத்திரிகையில் வெளிவந்துள்ளது.

இந்த வரோம்பி டைட்டான் பறவை குறித்து ஆய்வாளர் ஜேம்ஸ் ஹேஸ்போர்டு கூறுகையில், ‘‘17-ம் நூற்றாண்டில் இந்தப் பறவை மடகாஸ்கர் தீவில் வாழ்ந்திருக்கலாம். உலகிலேயே இதுதான் மிகப்பெரிய பறவை இனம் வரோம்பி டைட்டான் என்பது நாங்கள் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. இலைகள், காய்கறிகள், சிறு உயிரினங்கள், ஆகியவற்றைத் தின்று இந்த டைட்டான் வாழ்ந்திருக்கிறது.

மனிதர்களின் செயல்பாடுகள், வேட்டையாடுதல் இயற்கை சீற்றங்களால் டைட்டான் பறவை அழிவைச் சந்தித்தது. வரோம்பி டைட்டானின் எச்சம்தான் தற்போதுள்ள நெருப்புக்கோழி, வாத்து’’ இவ்வாறு ஹென்றி தெரிவித்தார்.

https://tamil.thehindu.com

Link to comment
Share on other sites

அனுஷ்கா  உடுத்தும் பனாரஸ் சில்க் புடவைகளின் பின்னிருக்கும் சமூக அக்கறை!

 

 
red_banaras

பச்சை நிற பனாரஸ் சந்தேரி சில்க் புடவையில் அசத்தும் அனுஷ்கா ஷர்மா!

anushka_banaraS_chanderi.jpg

பாலிவுட் பிரபல நடிகையும், இந்திய கிரிக்கெட் அணித்தலைவர் விராட் கோலியின் மனைவியுமான அனுஷ்கா ஷர்மா சமீபத்தில் ப்ரியதர்ஷினி குளோபல் அகாதெமி விருது விழாவில் கலந்து கொண்டார். அவ்விழாவில் அனுஷ்கா ஷர்மாவிற்கு ஸ்மிதா பட்டீல் விருது வழங்கப்பட்டது. உள்துறை அமைச்சர் நிதின் கட்கரி மற்றும் அமைச்சர் பியூஷ் கோயலிடமிருந்து விருதைப் பெற்றுக் கொண்டார் அனுஷ்கா.

விழாவின் ஹைலைட் அனுஷ்கா விருது பெறுவது அல்ல. விருது பெற்றுக் கொள்வதற்காக அவர் அணிந்து வந்த புடவை தான். அன்றைய தினம் அடர் பச்சை நிற பனாரஸ் சந்தேரி சில்க் புடவையில் அசத்தினார் அனுஷ்கா. பச்சை நிற பனாரஸில் உடல் முழுவதும் தங்கப் பொட்டு சரிகை வேலைப்பாடுகள் அள்ளித் தெளிக்கப்பட்டிருந்தன. பனாரஸ் நெசவே கொள்ளை அழகென்றால் இதில் பனாரஸ் நெசவுடன் சந்தேரி ஸ்டைலையும் கலந்திருந்தார்கள் நெசவாளர்கள். எனவே புடவை லைட் வெயிட்டுடன் கண்களுக்கு விருந்தானது. அழகான ராயல் பச்சை நிற பனாரஸ் சந்தேரி சில்க் புடவைக்குத் தோதாக கிளாஸிக் ஸ்டைலில் தலைமுடியை வகிடெடுத்துப் படிய வாரிக் கொண்டையிட்டு  பொருத்தமான ஒப்பனைகளும் பச்சை நிற பிந்தியுமாக அனுஷ்கா உள்ளம் கவர்ந்தார். அன்று அவரது ஒப்பனை மொத்தமும் புடவையின் அழகுக்கு மேலும் மெருகூட்டுவதாகவே இருந்தது. அழகான பச்சை நிற குந்தன் கற்கள் பதிக்கப்பட்ட கைவளைகள், கழுத்தை ஒட்டினாற் போல பச்சை நிறக் கற்கள் பதித்த சோக்கர் (நெக்லஸ்), புடவை கிராண்டாக இருப்பதால் காதுகளுக்கு ஒற்றை மரகதக்கல் தோடு என்று ஆடம்பரத்தில் எளிமை என அசத்தினர் அனுஷ்கா ஷர்மா.

green_banaras.jpg

விருது விழாவிற்கு மட்டுமில்லை. அனுஷ்கா, விராட் தம்பதியினர் இத்தாலியில் திருமணம் முடிந்து இந்தியாவில் தங்கள் மும்பை நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு அளித்த ரிஷப்சனிலும் கூட அனுஷ்கா அழகான சிவப்பு நிற பனாரஸ் கைத்தறி சில்க் புடவையே உடுத்தி வந்து பாந்தமாக தரிசனம் தந்தார். முன்பெல்லாம் வட இந்திய ஸ்டைலில் வெஸ்டர்ன் உடைகளிலும், காக்ரா சோளி, லெஹங்காவிலும் மட்டுமே பார்க்க வாய்த்த அனுஷ்கா ஷர்மா தற்போது இந்தியப் பாரம்பரிய உடையான புடவைகளில் வலம் வருவது அவரது ரசிகர்களுக்கு இனிய சர்ப்ரைஸ். அதற்கேற்றார் போல அடுத்து வரவிருக்கும் அவரது புதிய திரைப்படமான ‘சுய் தாஹியின்’ தீம் மேட் இன் இந்தியா என்பதாகவே இருப்பதால் அதற்குப் பொருத்தமாக இப்போதெல்லாம் அடிக்கடி இந்திய கைத்தறிப் பட்டுப் புடவைகளை உடுத்திக் கொண்டு வலம் வரத் தொடங்கி இருக்கிறார் அனுஷ்கா.

http://www.dinamani.com/lifestyle

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, குமாரசாமி said:

அப்ப.... என்ரை தங்கச்சிக்கு எல்லா விசயமும் தெரியும்.

 

எனக்குத் தெரிஞ்சு நவீனன் என்னும் ஒரு உறவு வேலை மினக்கெட்டு செய்திகளை இணைக்கிறார்.அவ்வளவு தான் ?

Link to comment
Share on other sites

அறிவுடன் ஞானம் என்றுதான் அழிந்தது?
 

image_1312344358.jpgஓர் அறிஞரை மட்டுமல்ல, பல அறிஞர்களின் முகம் எதுவெனப் பலருக்கும் தெரியாது. அவர் ஊர், அவர் குடும்பம் எங்கே உள்ளது? எப்படி அவர் சிருஷ்டிகளை உற்பத்தி செய்தார் என்பதையே அறியாது, முகம் அறியாது, அவர் சொன்னவற்றை மட்டும் உள்வாங்கி இரசிக்கிறார்கள். 

அறிவாளிகள் தாம் இறந்த பின்னரும், பேசிய வண்ணம் இருக்கின்றனர். இந்த ஞான உற்பத்தி இயந்திரம் பழுதடைவதேயில்லை.பெருமையுடன் பேச மட்டும் அவர்கள் வாய் மௌனிக்கிறது. 

மெழுகென உருகித் தேய்ந்தாலும், அவள் தந்த ஒளி மட்டும், அணையாமல் இருப்பது விந்தையல்ல. 

காலம் என்றும் கரைவதில்லை. ஏனெனில், அது வாழ்வாங்கு வாழ்வோரைத் தொடர்ந்து உருவாக்குகின்றது.

எனவே, காலம் தீர்க்காயுசுதான். சுற்றிக் கொண்டே ஓடியபடி சடங்கள் தான் அழியும். அறிவுடன் ஞானம் என்றுதான் அழிந்தது? அது பலராலும் எமக்கு வழங்கப்பட்டதால்த்தான், இன்று சாதாரணமானவர்கள் கூட, உண்மை தேடும் ஆராய்ச்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றார்கள். இவர்கள் கூட அருவம்போல்த்தான் இயங்குகின்றார்கள்.  

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கடைசி இடத்தில் ஆர்சிபி; தவறு நடந்தது எங்கே? கேப்டன் கூறுவது என்ன? பட மூலாதாரம்,SPORTZPICS ஒரு மணி நேரத்துக்கு முன்னர் வீடியோ கேம்ஸிஸ் கிரிக்கெட் பார்த்த, விளையாடிய உணர்வு ஆர்சிபி, சன்ரைசர்ஸ் இடையிலான ஆட்டத்தின்போது ரசிகர்களுக்கு ஏற்பட்டிருக்கக்கூடும். 38 சிக்ஸர்கள், 43 பவுண்டரிகள், ஒரே போட்டியில் 549 ரன்கள், 4 பந்துவீச்சாளர்கள் 50 ரன்களுக்கு மேல் வாரி வழங்கிய சோகம், அதிகபட்ச ஸ்கோர் என நேற்றைய ஐபிஎல் டி20 ஆட்டத்தில் நிகழ்த்தப்பட்ட சாதனைகளை பட்டியலிடலாம். ஆட்டத்தைப் பார்க்க வந்த ரசிகர்களுக்கு கழுத்துவலி கூட வந்திருக்கலாம். ஏனென்றால், கிட்டத்தட்ட 40 ஓவர்களில் 9 ஓவர்களில் வெறும் சிக்ஸர், பவுண்டரிகளாகவே அடிக்கப்பட்டது. மிகச்சிறிய மைதானமான சின்னசாமி ஆடுகளத்தில் பந்துவீச்சாளர்கள் எப்படி வீசினாலும் பேட்டை நோக்கித்தான் வந்தது என்பதால் பேட்டர்கள் கருணையற்றவர்களாக மாறினர். யாருக்கு எப்படி பந்துவீசுவது எனத் தெரியாமல் ஆர்சிபி பந்துவீச்சாளர்களும், சன்ரைசர்ஸ் பந்துவீச்சாளர்களும் திணறி நின்றதைக் காண முடிந்தது.   பட மூலாதாரம்,GETTY IMAGES முதலில் பேட் செய்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 287 ரன்கள் குவித்தது. 288 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய ஆர்சிபி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 262 ரன்கள் சேர்த்து தோல்வி அடைந்தது. இந்த வெற்றியின் மூலம் சன்ரைசர்ஸ் அணி 6 போட்டிகளில் 4 வெற்றி, 2 தோல்வி என 8 புள்ளிகளுடன் 4வது இடத்துக்கு முன்னேறியது. நிகர ரன்ரேட்டிலும் பெரிய ஸ்கோர் அடித்தும் பெரிய முன்னேற்றமில்லாமல் 0.502 ஆக இருக்கிறது. டி20 போட்டிகளில் 250ரன்களுக்கு மேல் அதிகமுறை அடித்த அணி என்ற பெருமையை சன்ரைசர்ஸ் அணி நேற்று பெற்றது. ஆர்சிபி அணியைப் பொருத்தவரை இவ்வளவு பெரிய ஸ்கோரை அடித்தும் தோல்வி அடைந்த முதல் அணியாக மாறிவிட்டது. 7 போட்டிகளில் ஒரு வெற்றி, 6 தோல்விகள் என 2 புள்ளிகளுடன் ஆர்சிபி அணி கடைசி இடத்தில் நீடிக்கிறது.   பட மூலாதாரம்,GETTY IMAGES தொடக்கத்திலேயே அதிரடி காட்டிய ஹைதராபாத் வீரர்கள் சன்ரைசர்ஸ் அணிக்கு மிகப்பெரிய ஸ்கோரை அமைத்துக் கொடுத்தவர்களில் முக்கியமான பேட்டர் டிராவிஸ் ஹெட் 102 (41பந்துகள், 8சிக்ஸர், 9பவுண்டரி). ஏற்கெனவே ஆஸ்திரேலிய அணிக்கு டெஸ்ட் சாம்பியன்ஷிப், உலகக் கோப்பையை வென்றதில் முக்கிய பங்கு வகித்த ஹெட், நேற்றைய ஆட்டத்தில் முதல் சதத்தைப் பதிவு செய்து ஆட்டநாயகன் விருது வென்றார். 39 பந்துகளில் சதம் அடித்து, அதிவேக சதம் அடித்த 4வது பேட்டர் என்ற பெயரை ஹெட் பதிவு செய்தார். சன்ரைசர்ஸ் அணிக்காக அதிவேகமாக சதம் அடித்த முதல் பேட்டர் என்ற பெயரை ஹெட் பெற்றார். இதற்கு முன் வார்னர் 43 பந்துகளில் சதம் அடித்திருந்தார். மற்றொரு பேட்டர் ஹென்ரிச் கிளாசன் அசுரத்தனமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இந்த சீசன் முழுவதும் பந்துவீச்சாளர்களுக்கு சிம்மசொப்னமாக திகழ்ந்துவரும் கிளாசன் 31 பந்துகளில் 67 ரன்கள்(7சிக்ஸர், 2 பவுண்டரி) அடித்து ஆட்டமிழந்தார். இது தவிர மார்க்ரம் 32(17பந்துகள், 2சிக்ஸர்கள், 2 பவுண்டரிகள்), அப்துல் சமது37(10 பந்துகள் 3 சிக்ஸர்கள், 4பவுண்டரிகள்) என ரன்கள் சேர்த்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர். இந்த 4 பேட்டர்கள் அடித்த ஸ்கோர்தான் மற்றவகையில் பெரிதாக எந்த பேட்டரும் ஸ்கோர் செய்யவில்லை.   பட மூலாதாரம்,SPORTZPICS சன்ரைசர்ஸ் கேப்டன் கூறியது என்ன? சன்ரைசர்ஸ் கேப்டன் கம்மின்ஸ் கூறுகையில் “ நானும் பேட்டராக இருந்திருக்கலாம் என நினைக்க வைக்கிறது. மும்பைக்கு எதிரான ஆட்டத்துக்குப் பிறகு இப்போது மீண்டும் பெரிய ஸ்கோர் அடித்துள்ளோம். போட்டி பேட்டர்கள் ராஜ்ஜியமாகமாறி வருகிறது. இந்த ஆடுகளத்தை படிக்க நானும் முயற்சித்தேன். எங்கள் ஆட்டம் மகிழ்ச்சியாக இருக்கிறது. 4 வெற்றிகள் பெற்றுள்ளோம். பேட்டர்களுக்கு முழுசுதந்திரம் அளித்துள்ளோம். அதனால்தான் பெரிய ஸ்கோர் வருகிறது” எனத் தெரிவித்தார் ஆர்சிபி கொடுத்த பதிலடி ஆர்சிபி அணியிலும் கேப்டன் டூப்பிளசிஸ் 28 பந்துகளில் 62 ரன்கள்(4சிக்ஸர், 7பவுண்டரி), விராட் கோலி 42 (2சிக்ஸர், 6பவுண்டரி), தினேஷ் கார்த்திக் 35 பந்துகளில் 85(7சிக்ஸர், 5 பவுண்டரி) என விளாசினர். இதில் ஆர்சி அணியில் நடுவரிசை பேட்டர்கள் ரஜத் பட்டிதார், வில் ஜேக்ஸ், சவுகான் ஆகிய மூவவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்காமல் தங்களின் பங்களிப்பை வெளிப்படுத்தி இருந்தால், ஆர்சிபி அணி ஒருவேளை வென்றிருக்கலாம். சன்ரைசர்ஸ் அடித்த ஸ்கோருக்கு தாங்கள் எந்த விதத்திலும் சளைத்தவர்கள் இல்லை என்று ரீதியில்தான் கடைசி நேரத்தில் தினேஷ் கார்த்திக் ஆக்ரோஷமான பேட்டிங்கை வெளிப்படுத்தினார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES நிகழ்த்தப்பட்ட சாதனைகள் இந்த ஆட்டத்தில் சில சுவையான சம்பவங்கள் நடந்துள்ளன. ஐபிஎல் வரலாற்றிலேயே ஒரு அணி சேர்த்த அதிகபட்ச ஸ்கோரான 287 ரன்களை சன்ரைசர்ஸ் அணி பதிவு செய்தது. இதற்கு முன் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக இந்த சீசனில் 277 ரன்கள் சேர்த்ததுதான் சாதனையாக இருந்தது, தன்னுடைய சாதனையை அந்த அணியை முறியடித்தது. ஆடவர் டி20 போட்டியில் சேர்க்கப்பட்ட அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும். ஓட்டுமொத்தமாக நேற்றைய ஆட்டத்தில் 549 ரன்கள் சேர்க்கப்பட்டு சாதனை படைக்கப்பட்டது. இதற்கு முன் ஹைதராபாத்தில் இந்த சீசனில் நடந்த மும்பை இந்தியன்ஸ், சன்ரைசர்ஸ் இடையிலான ஆட்டத்தில் ஒட்டுமொத்தமாக 523 ரன்கள் சேர்க்கப்பட்டதுதான் அதிகபட்சமாக இருந்தநிலையில் அந்த சாதனை முறியடிக்கப்பட்டது. ஆர்சிபி அணிக்கு எதிராக நேற்றைய ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் அணி 22 சிக்ஸர்களை விளாசி, ஒரு இன்னிங்ஸில் ஒரு அணிக்கு எதிராக அடிக்கப்பட்டஅதிகபட்ச சிக்ஸர்களைப் பதிவு செய்தது. இதற்கு முன் 2013-இல் புனே வாரியர்ஸ் அணிக்கு எதிராக ஆர்சிபி 21 சிக்ஸர்களை அடித்த நிலையில் அதை சன்ரைசர்ஸ் முறியடித்துவிட்டது. இந்த ஆட்டத்தில் இரு அணிகளும் சேர்ந்து 38 சிக்ஸர்களை விளாசின. டி20 போட்டியில் அதிக பட்சமாக 262 ரன்கள் சேர்த்தும் தோல்வி அடைந்த முதல் அணி என்ற பெயரை ஆர்சிபி பெற்றது. இதற்குமுன் 2023ம் ஆண்டில் செஞ்சூரியனில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக 258 ரன்களை மேற்கிந்தியத்தீவுகள் சேர்த்தும் தோல்வி அடைந்ததுதான் அதிகபட்ச ஸ்கோராக இருந்தது. ஆர்சிபி அணியில் பந்துவீச்சாளர்கள் டாப்ளி(68), யாஷ் தயார்(51), லாக்கி பெர்குஷன்(52), விஜயகுமார்(64) என 4 பந்துவீச்சாளர்கள் 50 ரன்களுக்கு மேல் வாரி வழங்கினர். ஒரு போட்டியில் 4 பந்துவீச்சாளர்கள் 50 ரன்களுக்கு மேல் விட்டுக்கொடுத்தது இதுதான் முதல்முறை. சன்ரைசர்ஸ் அணியில் நேற்று மட்டும் 4 பேட்டர்கள் ஒரு சதம் பார்ட்னர்ஷிப்பும் உள்பட, 50 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். ஐபிஎல் வரலாற்றில் இது 2வது முறையாக நடக்கிறது. இதற்கு முன் 2008-இல் ஆர்சிபிக்கு எதிராக கொல்கத்தா அணியின் 4 பேட்டர்கள் 50 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்திருந்தனர்.   பட மூலாதாரம்,SPORTZPICS ஆர்சிபி இதயத்தை உடைத்த ஹெட் ஆர்சிபி அணி நேற்றைய ஆட்டத்தில் முறையான சுழற்பந்துவீச்சாளர்கள் இல்லாமல் களமிறங்கியது. டிராவிஸ் ஹெட், அபிஷேக் சர்மா என இரு இடதுகை பேட்டர்கள் களத்துக்கு வந்ததும் பகுதிநேர சுழற்பந்துவீச்சாளரான ஜேக்ஸை பந்துவீசச் செய்து சோதிதித்துப் பார்த்தது. முதல் இரு ஓவர்கள் மட்டும் பொறுமை காத்த ஹெட், அபிஷேக் அடுத்தடுத்த ஓவர்களில் பவுண்டரி, சிக்ஸர்களாக அடிக்கத் தொடங்கினர். எந்தப் பந்துவீச்சாளர் பந்துவீசினாலும் ஹெட், அபிஷேக் பேட்டிலிருந்து பவுண்டரி, சிக்ஸர்களாக பறந்தன. ஆர்சிபிக்காக முதல்முறையாக களமிறங்கிய பெர்குஷன் 5-ஆவது ஓவரில் ஹெட் சிக்ஸர்களாக விளாசி 18 ரன்களையும், யாஷ் தயால் ஓவரில் பவுண்டரி, சிக்ஸர் என 20 ரன்களையும் சேர்த்தார். 20 பந்துகளில் ஹெட் அரைசதம் அடித்தார். பவர்ப்ளே ஓவரில் சன்ரைசர்ஸ் 76 ரன்கள் சேர்த்தது. பவர்ப்ளேயில் சன்சைர்ஸ் சேர்த்த 3வது அதிகபட்ச ரன்களாகும். இதற்குமுன் மும்பை அணிக்கு எதிராக 81 ரன்கள், சிஎஸ்கேவுக்கு எதிராக 77ரன்களும் சேர்த்திருந்தது. 7.1 ஓவர்களில் சன்ரைசர்ஸ் அணி 100 ரன்களை தொட்டது. அபிஷேக் சர்மா 34 ரன்களில் டாப்ளே பந்துவீச்சில் பெர்குஷனிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். முதல் விக்கெட்டுக்கு ஹெட், அபிஷேக் 108 ரன்கள் என வலுவான அடித்தளம் அமைத்தனர். கிளாசன் சிக்ஸர் மழை 2-ஆவது விக்கெட்டுக்கு கிளாசன் களமிறங்கி ஹெட்டுடன் சேர்ந்தார். முதல் 5 பந்துகளில் 3 ரன்கள் சேர்த்து மெதுவாகத் தொடங்கிய கிளாசன், அதன்பின் வாண வேடிக்கை நிகழ்த்தினார். டி20 போட்டிகளில் ஆபத்தான பேட்டராக கருதப்படும் கிளாசன், ஆர்சிபி பந்துவீச்சாளர்களை நேற்று வதம் செய்தார். பெர்குஷன், யாஷ் தயால் ஓவரில் சிக்ஸர்களும், பவுண்டரிகளும் கிளாசன் பேட்டிலிருந்து பறந்தன. மறுபுறம் டிராவிஸ் ஹெட்டும் சிக்ஸர், பவுண்டரி மழை பொழிந்து, 39 பந்துகளில் தனது முதல் சதத்தைப் பதிவு செய்தார். டிராவிஸ் ஹெட் 102 ரன்கள் சேர்த்தநிலையில் பெர்குஷன் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். 2வது விக்கெட்டுக்கு இருவரும் 57 ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர். அதிரடியாக ஆடிய கிளாசன் 23 பந்துகளில் அரைசதம் அடித்தார். 14.1 ஓவர்களில் சன்ரைசர்ஸ் அணி 200 ரன்களைத் தொட்டது. கிளாசன் 67 ரன்கள் சேர்த்தநிலையில் பெர்குஷன் பந்துவீ்ச்சில் விக்கெட்டை பறிகொடுத்தார். இந்த கிளாசன், ஹெட் ஆகிய இரு பேட்டர்களும் ஆட்டமிழந்து சென்றபின் ஆர்சிபி பந்துவீச்சாளர்கள் நிம்மதி பெருமூச்சுவிட்டனர். கடைசி நேரத்தில் களமிறங்கிய அப்துல் சமது, மார்க்ரம் இருவரும் சூப்பர் கேமியோ ஆடி ஸ்கோரை உயர்த்தினர். கடைசி இரு ஓவர்களில் மட்டும் இருவரும் 46 ரன்களைக் குவித்தனர்.   பட மூலாதாரம்,GETTY IMAGES கடைசி வரை போராடியது பெருமை ஆர்சிபி கேப்டன் டூப்பிளசிஸ் கூறுகையில் “இது முறையான டி20 ஆடுகளம். இன்று சேர்த்த ரன்களை பார்த்தால் வேடிக்கையாக இருக்கிறது. அதுவே சாதனையாக மாறிவிட்டது. இந்த ஆடுகளத்தில் 270 ரன்கள்கூட சேஸிங் செய்யக்கூடியதுதான். இந்த ஆடுகளத்தில் பந்துவீச்சாளர்கள் பந்துவீசுவது கடினம். பாவம் பந்துவீச்சாளர்கள் பல நுணுக்கங்களை பயன்படுத்தி வீசியும் பயன் இல்லை. பேட்டர்கள் பக்கமே ஆட்டம் தொடர்ந்து போவது கடினம்தான். வித்தியாசமாக சந்திக்க வேண்டும். எங்கள் பேட்டிங்கில் சில தவறுகள் உள்ளன. அதை சரிசெய்வோம். பவர்ப்ளேக்குப்பின் நாங்கள் தவறுகளைத் திருத்த வேண்டியுள்ளது. ஆனால் கடைசிவரை எங்கள் வீரர்கள் போராடியது பெருமையாக இருந்தது. பந்துவீச்சைப் பொருத்தவரை பந்துவீச்சாளர்கள் எப்போதும் மனதை உற்சாக வைத்திருக்கவேண்டும்” எனத் தெரிவித்தார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES ஆர்சிபிக்கு நம்பிக்கை அளித்த தினேஷ் கார்த்திக் ஆர்சிபியும் பதிலடி கொடுக்க முயன்று, விக்கெட்டுகளை இழந்திருந்த தருணத்தில் தினேஷ் கார்த்திக் களமிறங்கி, அரங்கில் இருந்த ரசிகர்களுக்கு தனது பேட்டால் விருந்தளித்தார். லாம்ரோருடன் சேர்ந்து 59 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த டிகே, சன்ரைசர்ஸ் பந்துவீச்சை துவம்சம் செய்தார். உனத்கட், மர்கண்டே வீசிய 13 மற்றும் 14வது ஓவர்களில் மட்டும் தினேஷ் கார்த்திக், லாம்ரோர் சேர்ந்து 46 ரன்கள் சேர்த்தனர். டிகே அடித்த ஷாட்களால் ரன்ரேட்டும் வேகமாக உயர்ந்தது, ரசிகர்களுக்கும் ஆர்சிபி வென்றுவிடும் என்ற நம்பிக்கை வந்தது. 23 பந்துகளில் டிகே அரைசதம் அடித்தார். லாம்ரோர் 19 ரன்னில் கம்மின்ஸ் பந்துவீச்சில் போல்டாகினார். அடுத்துவந்த ராவத்துடன் சேர்ந்து தினேஷ் கார்த்திக் வெளுத்துவாங்கினார். அனுஜ் ராவத்துடன் சேர்ந்து 7-வது விக்கெட்டுக்கு 63 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த தினேஷ் கார்த்திக் 83 ரன்னில் நடராஜன் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார். தினேஷ் கார்த்திக் களத்தில் இருந்தவரை ஆர்சிபி ரசிகர்களுக்கு வெற்றி கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையோடு காத்திருந்தனர். ஆனால் அவர் வெளியேறியபின், ரசிகர்களும் கலையத் தொடங்கினர். தினேஷ் கார்த்திக் கடைசிவரை போராடியும், ஆர்சிபி 25 ரன்களில் தோற்றது. https://www.bbc.com/tamil/articles/cj5l2j16y69o
    • எதிர்த்தும் பெற தெரியாது. சேர்ந்தும் பெற தெரியாது.  இரண்டையும் விட சுலபமான வழி என்ன என்பதை நீங்கள் கூறலாமே!    அல்லது நீங்கள்  கூறலாமே!   
    • "வாலிபத்தில் தவற விட்டவைகளை  ... " ஏன் அனுபவித்ததாக இருக்கக் கூடாது?      
    • டிசம்பர் 2014 இல், ஓக்லாண்ட் இன்ஸ்டிடியூட் [Oakland Institute] ஒரு கள ஆய்வு இலங்கையின் வடக்கு கிழக்கில் நடத்தியது. போரின் பின் அதன் நிழலும், போருக்குப் பிந்தைய இலங்கையில் நீதிக்கான போராட்டம் பற்றியது அது [The Long Shadow of War: the Struggle for Justice in Postwar Sri Lanka,] பருந்து போல நிறைந்த இராணுவ சூழலில் மக்கள் எதிர்கொள்ளும் இன்னல்கள் மற்றும் துயரங்கள் பற்றியது அது. அத்துடன் பல வழிகளில்  அரசாங்க நிறுவனங்கள், அரசின் ஆசீர்வாதத்துடனும் பாதுகாப்புடனும்  செயல்படுத்தப்பட்ட தீவிரமான நில அபகரிப்பு மீது முக்கிய கவனம் செலுத்தியது.  வடக்கு மற்றும் கிழக்கில் பல்வேறு உத்திகள் மூலம் அரசாங்கம் கையாளும் தந்திரங்களையும் அடக்குமுறைகளையும்  2015 ஆண்டு தங்கள் அறிக்கை மூலம் அம்பலப்படுத்தியது அதில் நில அபகரிப்பு மற்றும் இராணுவமயமாக்கல் ஆகியவற்றுக்கு இடையேயான தொடர்பு மற்றும் அதன் தொடர்ச்சியான பயன்பாட்டை வெளிப்படுத்தியது.  நீர்ப்பாசனத் திட்டங்கள் மற்றும் வன்முறை போன்ற நில அபகரிப்புக்கான பழைய உத்திகளுடன் புதிதாக  புத்த கோவில்கள் அமைத்தல், தொல்பொருள் உருவாக்கம் உள்ளிட்ட புதிய முறைகள், பாதுகாப்புகள், உயர் பாதுகாப்பு வலயங்கள் மற்றும் சிங்களமயமாக்க சிறப்பு பொருளாதார வலயங்கள் என பல வழிகளில்  வடக்கு மற்றும் கிழக்கு - தமிழர்களின் பாரம்பரிய தாயகம் - கட்டாயத்தால் பறிப்பட்டுக்கொண்டு இருப்பதை எடுத்துக்காட்டியது. கொழும்பில் எந்த தமிழரும் நிலத்தை அபகரித்து குடியேறவில்லை. அது சிங்களவரின் பாரம்பரிய நிலமும் அல்ல. இலங்கையின் மன்னர் ஆட்சியை எடுத்துக்கொண்டால்,       Anuradhapura period (377 BCE–1017) Polonnaruwa period (1056–1232) Transitional period (1232–1505) இங்கு Jaffna Kingdom , Kingdom of Gampola , Kingdom of Kotte , Kingdom of Sitawaka , & Vanni Nadu என் நாம் அறிகிறோம்  The Kingdom of Kandy was a monarchy on the island of Sri Lanka, located in the central and eastern portion of the island. It was founded in the late 15th century and endured until the early 19th century. Initially a client kingdom of the Kingdom of Kotte, Kandy gradually established itself as an independent force during the tumultuous 16th and 17th centuries, allying at various times with the Jaffna Kingdom, the Madurai Nayak dynasty of South India, Sitawaka Kingdom, and the Dutch colonizers to ensure its survival. / கண்டி இராச்சியம் சேனாசம்பந்தவிக்கிரமபாகு என்பவனால் உருவாக்கப்பட்டது (1467- 1815)  கொழும்பு வை எடுத்துக்கொண்டால்  பதினாறாம் நூற்றாண்டுக்கு முந்திய காலப்பகுதியில் கோட்டை அரசின் ஒரு பகுதியாகவும், இந்தியத் தமிழர் மற்றும் இசுலாமிய வர்த்தகர்களின் ஒரு தளமாகவும் விளங்கிய இவ்விடம், பொ.ஊ. பதினாறாம் நூற்றாண்டுக்குப் பின்னர், போர்த்துக்கேயரின் வரவுக்குப் பின்னரே முக்கியத்துவம் பெறத் தொடங்கியது. அதாவது இங்கு சிங்களவர் பெரிதாக இருக்கவில்லை . இது உங்களுக்கு ஆச்சரியமாகக் கூட இருக்கலாம் , ஆனால் அதுவே உண்மை . இந்தியத் தமிழர் மற்றும் இசுலாமிய வர்த்தகர்களின் பேச்சு மொழி அதிகமாக தமிழே! 2001 சனத்தொகை கணக்கெடுப்பின்படி கொழும்பு நகர மக்கள் தொகையியல் இன அடிப்படையில் பின்வருமாறு காணப்படுகிறது. இல    இனம்    சனத்தொகை    மொத்த % 1    சிங்களவர்    265,657    41.36 2    இலங்கைத் தமிழர்    185,672    28.91 3    இலங்கைச் சோனகர்    153,299    23.87 4    இலங்கையின் இந்தியத் தமிழர்    13,968    2.17 5    இலங்கை மலேயர்    11,149    1.73 6    பறங்கியர்    5,273    0.82 7    கொழும்புச் செட்டி    740    0.11 8    பரதர்    471    0.07 9    மற்றவர்கள்    5,934    0.96 10    மொத்தம்    642,163    100 இதில் நீங்கள் கவனிக்க வேண்டியது 2001 இல் கூட சிங்களவரை விட [41.36] மற்றவர்களின் கூட்டுத்தொகையே கூட! Traveller Ibn Battuta who visited the island in the 14th century, referred to it as Kalanpu. Arabs, whose prime interests were trade, began to settle in Colombo around the eighth century AD mostly because the port helped their business by the way of controlling much of the trade between the Sinhalese kingdoms and the outside world. It was popularly believed that their descendants comprised the local Sri Lankan Moor community, but their genetics are predominantly South Indian [தென் இந்தியர் - ஆகவே தமிழே அங்கு கூடுதலாக பேசப்பட்டுள்ளது]  இதை ஒருக்கா முழுமையாக பாருங்கள். அதைத்தான், இலங்கை அரசு இன்று பின்பற்றுகிறது போல புரிகிறது. Israel’s Occupation: 50 Years of Dispossession  [amnesty international அறிக்கை]   Since the occupation first began in June 1967, Israel’s ruthless policies of land confiscation, illegal settlement and dispossession, coupled with rampant discrimination, have inflicted immense suffering on Palestinians, depriving them of their basic rights.    THE WORST THING IS THE SENSE OF BEING A STRANGER IN YOUR OWN LAND AND FEELING THAT NOT A SINGLE PART OF IT IS YOURS. Raja Shehadeh, Palestinian lawyer and writer     நன்றி 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.