Jump to content

இளமை புதுமை பல்சுவை


Recommended Posts

வீட்டை நீங்களே அலங்கரிக்கலாம்!

 

 
9chgowegg%20candles

முட்டை ஓட்டில் செய்யப்பட்ட மெழுகுவர்த்திகள்

 

வீட்டைத் தங்கள் கைகளாலாலேயே அலங்கரிக்க நினைப்பவர்கள் இன்று அதிகரித்திருக்கிறார்கள். அப்படி அலங்கரிக்க நினைப்பவர்களுக்குப் பல யூடியூப் சேனல்கள் உதவுகின்றன. அந்த வகையில், ‘வென்ட்யூனோ ஆர்ட்’ என்ற யூடியூப் சேனல் வீட்டைக் கலை ரசனையுடன் எளிமையான வீட்டு உபயோகப் பொருட்களை வைத்து எப்படி அலங்கரிப்பது என்பதை விளக்குகிறது. உதாரணமாக, 14 வழிகளில் வீட்டை எளிமையாக எப்படி அலங்கரிப்பது என்பதை விளக்குகிறது இந்தக் காணொலி.

     
 
9chgowDIY%20Decor2

ஸ்ட்ராக்களில் ஒரு சுவர் அலங்காரம்

 

பழைய பாட்டிலைத் துணியால் ஓர் அழகான ‘பென், பென்சில் ஹோல்டராக மாற்றுவது, பிளாஸ்டிக் ஸ்ட்ராக்களை வைத்துச் சுவரை அலங்கரிப்பது, காகித மலர்களில் செய்யப்படும் சுவர் அலங்காரம், ஐஸ் குச்சிகள், மரத் துணி கிளிப்களில் அலங்காரப் பொருட்கள் போன்றவற்றை இந்தக் காணொலி விளக்குகிறது.

9chgowDIY%20Decor

ஹோல்டராக மாறியிருக்கும் பழைய பிளாஸ்டிக் பாட்டில்

 

அத்துடன், கலர் க்ரையான்கள், மொட்டை ஓட்டைவைத்து அலங்கார மெழுகுவர்த்திகள் செய்வது, பிளாஸ்ட்டிக் ஸ்பூன், கண்ணாடி க்ளாஸை வைத்து அலங்கார விளக்குச் செய்வது எப்படி என்பதற்கான வழிமுறைகளையும் இந்தக் காணொலி விளக்குகிறது.

 

http://tamil.thehindu.com

Link to comment
Share on other sites

  • Replies 11.3k
  • Created
  • Last Reply

அப்ப அமெரிக்காவைக் கண்டுபிடித்தது கொலம்பஸ் இல்லையா?

 
 

ஐரோப்பிய மற்றும் அமெரிக்க ஏகாதிபத்தியங்களின் பொருளாதார வளர்ச்சிக்கு ஆணிவேராகத் திகழ்ந்தவர்கள் ஆப்பிரிக்கர்கள். அட்லாண்டிக் கடல் பகுதியில் தனித்துவிடப்பட்டிருந்த அமெரிக்க கண்டங்களில் ஐரோப்பியர்கள் கோலோச்சுவதற்குத் தங்கள் வேர்வையோடு ரத்தத்தையும் விலையாகக் கொடுத்தவர்களும் அவர்களே. ஸ்பானிய மன்னர் ஃபெர்டினான்ட் அமெரிக்க பூர்வகுடிகளிடமிருந்து ஆக்கிரமித்த நிலப்பகுதியைப் பயனுள்ள வகையில் பயன்படுத்த முடிவுசெய்தார். அதற்காக அவரிடமிருந்த 200 ஆப்பிரிக்க அடிமைகளை அங்கே அனுப்பி உழைக்கவைத்தது முதலே அமெரிக்காவுடனான அவர்களின் தொடர்பு தொடங்கியதாகப் பழைய வரலாறு கூறுகிறது.

ஆப்பிரிக்கர்கள்

 

வரலாற்றின் பக்கங்களில் பாதி மட்டுமே படிக்கப்பட்டிருக்கிறது என்பதைத் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் தொடர்ச்சியாக நிரூபித்துக் கொண்டேயிருக்கிறார்கள். ஆப்பிரிக்காவுக்கும் அமெரிக்காவுக்குமான தொடர்பும் அடிமை வர்த்தகத்தில் தொடங்கியதில்லை, அதற்கும் 200 ஆண்டுகள் முன்பிருந்தே ராஜ்ஜியங்களுக்கு மத்தியிலான வர்த்தகத் தொடர்பு மூலமாகத் தொடங்கிவிட்டது. அதற்காகவே ஓர் அரசர் தனது அரச பதவியை இழந்து, ராஜ்ஜியத்தை இழந்து கடலோடியாகச் சுற்றித் திரிந்துள்ளார்.

அது ஆப்பிரிக்கக் கண்டத்தின் பெரும்பான்மைப் பகுதியை மாலி சாம்ராஜ்ஜியமாக மான்ஸா வம்சத்தினர் ஆண்டுகொண்டிருந்த காலம். 13ஆம் நூற்றாண்டின் இறுதியில் 9-வது மான்ஸா பேரரசரான இரண்டாம் அபூ பக்கரிக்குத் தனது சாம்ராஜ்ஜியத்தில் இருக்கும் நைஜர் ஆற்றுக்கு அப்பால் நிலப்பகுதி இருப்பதைப் போலவே அட்லாண்டிக் பெருங்கடலுக்கு அப்பாலும் நிலப்பகுதி இருக்குமோ என்ற சந்தேகம் தோன்றியது. அதைத்தேடி கப்பல் பயணம் மேற்கொள்ளவேண்டும் என்று முடிவுசெய்தார். தெற்கு ஆப்பிரிக்கக் காடுகளில் தொடங்கி சஹாரா முழுவதும் ஆண்டுகொண்டிருந்த அவருக்குத் தனது அகன்ற நிலப்பரப்போ அங்கிருக்கும் அளவில்லாத் தங்கமோ போதவில்லை. கண்ணிற்குப் புலப்படாத உண்மைகளைக் கண்டறியும் அறிவாற்றலின் மீதும், அபாயங்கள் நிறைந்த வீரதீரச் செயல்களின் மீதுமே ஆர்வமாக இருந்தார்.

கடற்பயணம்

Photo Courtesy: Leo and Diane Dillon

அட்லாண்டிக்கிற்கு அப்பால் என்ன இருக்கிறது என்பதை கண்டறிய 2000 கப்பல்களோடு மாலுமிகளை அனுப்பிவைக்கிறார் அபூ பக்கரி. மாலி சாம்ராஜ்ஜியத்தைப் பற்றி இபின் பட்டூட்டாவின் வரலாற்றுப் பதிவுகளில் குறிப்புகள் காணப்படுகின்றன.

"ஆய்வுப்பயணத்தின் மீதான ஆர்வத்தால், பேரரசர் சாட் ( Chad Lake)) ஏரிக்கரையோரங்களில் வாழ்ந்துகொண்டிருந்த கப்பல் பொறியாளர்களை வரவழைத்து டிஜொலிபா (நைஜர் நதிக்கு அவர்கள் வைத்த பெயர்) மற்றும் செனெகல் நதிகளில் பெரும் கடற்பயணத்தை நடத்துவதற்காக 2000 கப்பல்களைக் கட்டினார்."

2000 கப்பல்களில் மாலுமிகள், வணிகர்கள், கட்டட வல்லுநர்கள், கலைஞர்கள், போர் வீரர்கள், கல்வியிற் சிறந்தவர்கள் அனைவரும் 2 வருடங்களுக்குத் தேவையான உணவுப்பொருட்களோடு அனுப்பிவைக்கப்பட்டனர். பாதியளவு கப்பல்கள் செல்லும் வழியிலேயே அட்லாண்டிக் கடலின் சீற்றத்திற்குப் பலியாகிவிட்டது. மீதமிருந்த கப்பல்கள் அந்த நிலப்பகுதியை அடைந்தபோது கடலில் கலக்கும் பெரிய ஆற்றின் வேகமான நீரோட்டத்தில் சிக்கிச் சீரழிந்துவிட்டன. அனைத்திலும் தப்பிப் பிழைத்த ஒற்றைக் கப்பலின் மாலுமிகளிடம் பயணத் தகவல்களைப் பெற்றுக்கொண்டு இரண்டாம் அபூ பக்கரி அவரே கடற்பயணத்தை மேற்கொள்ள முடிவுசெய்தார். அவர் கண்களுக்கு அட்லாண்டிக்கின் சீற்றமோ, பெயர் தெரியாத ஆற்றின் (அமேசான் நதி) வேகமோ தெரியவில்லை. தெரிந்ததெல்லாம் அங்கு ஒரு நிலப்பகுதி இருக்கிறது என்பது மட்டும்தான். அங்கு வாழும் மக்களைப் பற்றி அறிந்துகொள்ள வேண்டுமென்ற அவரது அறிவுத்தாகம் இதைச்செய்யத் தூண்டியது.

அபூ பக்கரி 2

Photo Courtesy: Global Research

இந்த முறை அவரோடு சிலரை மட்டுமே அழைத்துக்கொண்டார். மேலும் பல இழப்புகளைச் சந்திக்க அவரது மனம் தயாராக இல்லை. தனது தம்பியான கன்கோவூ மௌசாவை ( Kankou Moussa) மான்சா முசா ( Mansa Musa) என்ற பெயரோடு பேரரசராகப் பட்டம் சூட்டிவிட்டுத் தனது பயணத்திற்கான ஆயத்தங்களைச் செய்யத் தொடங்கினார். 1311-ம் ஆண்டு அவர் தொடங்கிய பயணம்  மான்சா முசாவின் ஆட்சியில் மாலியை உலகிலேயே செல்வச் செழிப்புமிக்கதொரு சாம்ராஜ்ஜியமாக மாற்றியது.

தென் அமெரிக்கா

Photo Courtesy: Atlanta Blackstar

சேகரிக்கப்பட்ட தகவல்களைக் கொண்டு புத்திசாலித்தனமாகக் கப்பல்களைச் செலுத்திய அபூ பக்கரி முந்தைய பயணத்தைவிடச் சுலபமாகவே அமெரிக்காவைச் சென்றடைந்தார். "போரே போம்பாக்" என்று அவரால் அழைக்கப்பட்ட இன்றைய பிரேசில் அவரது வருகைக்குப் பிறகு ஆப்பிரிக்காவுடன் பண்டமாற்று முறையில் பல்வேறு வணிக உறவுகளை மேற்கொண்டது. மாலி நாட்டில் இருந்த தங்கச் சுரங்கத்தின் பெயரால் அவர் அந்த நிலப்பகுதியை அழைத்ததன் காரணம், தங்கச் சுரங்கத்தைவிடப் பெரிய செல்வத்தை நல்கும் நாடாக பிரேசில் இருந்ததே. அங்கு வாழ்ந்துகொண்டிருந்த பூர்வகுடிகளான டூபிக்களுடன் (Tupis) வணிக உறவை வளர்த்துக்கொண்டார். 1314-ம் ஆண்டு மான்சா முசாவிற்கு வணிகப் பரிவர்த்தனை நிகழ்த்துவதற்காக உதவிகள் கேட்டுத் தகவல் அனுப்பினார். அதன்மூலம் கிடைத்த உதவிகளே சோளம், பீன்ஸ், வேர்கடலை, புகையிலை, பட்டு, சில பழ வகைகள் ஆகியவற்றை உலகம் அறியச்செய்தது. இவற்றைப் பரிமாற்றிக்கொண்டு அபூ பக்கரி அவர்களுக்கு அதுவரை பழக்கமில்லாத ஆடு, மாடு, கோழி வளர்ப்புகளைப் பழக்கப்படுத்தினார். அத்தோடு பயிர் வகைகள், சிறுதானிய வகைகளையும் அறிமுகப்படுத்தினார். இதன்மூலம் இருவரும் தங்களுக்குள் சுயச்சார்பில் பூர்த்தியடைந்துகொண்டனர். போரே போம்பாக்குடனான மாலி சாம்ராஜ்ஜியத்தின் வணிக உறவு அவர்களின் செல்வத்தை முன்பைவிடப் பல மடங்கு அதிகப்படுத்தியது.

மம்மி

Photo Courtesy: Atlanta Blackstar

இந்த வரலாறு உண்மையில்லை, புனையப்பட்டதென்று விமர்சிப்பவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். கொலம்பஸ் அமெரிக்கா செல்வதற்கு முன்பே அங்கு ஆப்பிரிக்கர்களின் உறவு இருந்தது என்பதை அனைவரும் ஒப்புக்கொள்வதில்லை. ஆனால் அதைக் கொலம்பஸே சொல்லிருப்பதாகச் சொல்கிறார் இந்த ஆராய்ச்சியில் முக்கியப் பங்குவகித்த டியெமோகோ கொனாடே ( Tiemoko Konate). டூபி இன மக்களின் ஆயுத நுனியில் வார்க்கப்பட்டிருந்த தங்கத்தை ஆய்வு செய்ததில் அது மேற்கு ஆப்பிரிக்காவின் தங்கத் தொல்லெச்சங்களோடு ஒத்துப்போவதும் அதன் காலம் கொலம்பஸ் சென்றதற்கு 100 ஆண்டுகள் முந்தையதாக இருந்ததும் இந்த வரலாற்றுக்கு ஆதாரமாகச் சொல்லப்படுகின்றன. அமெரிக்கப் புகையிலைகளை 1609-ம் ஆண்டில் விரிஜீனிய வணிகக் கம்பெனிதான் முதலில் வணிகம் செய்ததாகச் சொல்லப்படுகிறது. ஆனால், எகிப்திய மம்மிக்களை ஆய்வுசெய்ததில் அவர்களின் கல்லறையில் அமெரிக்கப் புகையிலைகளும் இருந்துள்ளன.

அட்லாண்டிக் பெருங்கடல்

Photo Courtesy: Atlanta Blackstar

 

பிரமிட் அமைப்பில் கட்டப்பட்டிருந்த கட்டடங்கள், அவர்களின் நிர்வாகக் கட்டமைப்பு, அதிநவீன காலக் கணிதம் ஆகிய அனைத்துமே ஆப்பிரிக்கக் கலாச்சாரத்தோடு ஒத்துப்போவதும் இதற்கான சாட்சிகள். தென் அமெரிக்காவின் மெக்சிகோவில் கண்டுபிடிக்கப்பட்ட ஓல்மெக் நாகரிகம் ( Olmec civilization) கூட ஆப்பிரிக்க நாகரிகத்தோடு ஒத்துப்போவதாகவும், அவர்கள் செதுக்கிய சிலைகளில் இருக்கும் அகன்ற வாயும், அடர்த்தியான தாடியும் கொண்ட கறுப்பு மனிதர்களின் சிலைகளும் இவற்றுக்கான அழுத்தமான ஆதாரங்களாக ஆராய்ச்சியாளர்கள் முன்வைக்கிறார்கள். இனி ஆப்பிரிக்கர்களின் வரலாற்றில் அவர்கள் அடிமைகளென்பது மட்டுமல்ல, அவர்கள் உலகை ஆள்வதற்கல்ல, அரவணைக்க முற்பட்டவர்கள் என்பதும் இனி பரவலாகப் பேசப்படும். ஏனோ அன்பாலும் அறிவாலும் ஆக்கத்தை விரும்பியவர்கள் வரலாற்றில் அழிக்கப்பட்டதே அதிகம். அதில் ஆப்பிரிக்கர்கள் ஆழமான காயங்களை அனுபவித்தவர்கள். இந்தக் கண்டுபிடிப்பு இனி உலக வரலாற்றில் அவர்களின் பங்கைப் பறைசாற்றும்.

https://www.vikatan.com

Link to comment
Share on other sites

உண்மையான மன உறுதி படைத்தவர்கள் யார் தெரியுமா? - நெகிழ்ச்சிக்கதை #FeelGoodStory

 
 

நெகிழ்ச்சிக் கதை

`உறுதியானவர்கள் யாரையும் கீழே தள்ளிவிட மாட்டார்கள்; கீழே விழுந்தவர்களைத் கைதூக்கி விடுவார்கள்’ - அமெரிக்க எழுத்தாளர் மைக்கேல் பி வாட்சன் (Michael P. Watson) குறிப்பிட்டிருக்கும் முத்தான வாசகம் இது. பிறருக்கு உதவுவதற்கு ஒரு மனம் வேண்டும். அது எல்லோருக்கும் வாய்ப்பதில்லை. சாலையில் நடக்கும்போது தடுக்கிவிழும் முதியவரைத் தூக்கிவிட சில கரங்களே நீள்கின்றன... வெறும் செய்தியாகப் படித்துக்கொண்டிருக்கையில், ஏதோ ஒரு நாட்டில் பூகம்பத்தில் மாண்டவர்களை நினைத்து சில நெஞ்சங்களே கலங்குகின்றன... பள்ளத்தில் விழுந்து அல்லாடும் குட்டியானையை நினைத்து வருத்தப்பட சில உள்ளங்களே இருக்கின்றன. பிறருக்காக இரங்கும் குணம் வாய்த்தவர்கள் இயற்கையிடம் வரம் வாங்கி வந்தவர்கள். அப்படி வரம் வாங்கி வந்த ஓர் இளைஞனின் கதை

 

சேல்ஸ்மேன்

அமெரிக்காவின் சிகாகோ நகரம். அங்கே ஒரு விற்பனைப் பிரதிநிதிகளுக்கான கூட்டம் இரண்டு நாள்கள் நடந்தது. அதில் கலந்துகொள்வதற்காக விற்பனைப் பிரதிநிதிகள் ஐந்து பேர் நியூ ஜெர்ஸியிலிருந்து வந்திருந்தார்கள். கூட்டம் நல்லபடியாக முடிந்தது. அடுத்த நாள் காலை 8 மணி விமானத்தைப் பிடித்தால், இரவு டின்னருக்கு வீட்டுக்குப் போய்விடலாம் என்பது அவர்கள் திட்டம். தங்கியிருந்த ஹோட்டலிலிருந்து ஒரு டாக்ஸி பிடித்தார்கள். விமானநிலைய வாசலுக்கு வந்து சேர்ந்தார்கள். விமானம் கிளம்ப இன்னும் அரை மணி நேரமே இருந்தது. ஐந்து பேரும் டிக்கெட்டையும் தங்கள் லக்கேஜையும் எடுத்துக்கொண்டு வேக வேகமாக நடந்தார்கள். 

பாதையோரமாக ஒரு ஆப்பிள் கடை இருந்தது. அந்த ஐந்து விற்பனைப் பிரதிநிதிகளில் முதலில் சென்றுகொண்டிருந்தவர், பாதையோரமாக வைத்திருந்த அந்தக் கடையின் மேசையை இடித்துவிட்டார். மேசையின் மேல் ஆப்பிள்கள் அழகாக அடுக்கிவைக்கப்பட்டிருந்தன. இடித்ததில், ஆப்பிள்கள் தரையில் விழுந்து சிதறி உருண்டன. இடித்தவர் அதைப் பார்த்தார்... விமானத்தைப் பிடிக்கவேண்டிய அவசரத்தை நினைத்தார். மேற்கொண்டு நடக்க ஆரம்பித்தார். மற்றவர்களும் அவருடன் வேகமாக நடந்தார்கள். அவர்களில் கடைசியாக வந்த ஒருவர் மட்டும் அப்படியே நின்றுவிட்டார். அந்த ஆப்பிள் கடையைப் பார்த்தார். கடைக்குக் காவலாக ஒரு 16 வயதுள்ள பெண் நிற்பது தெரிந்தது. அவள் எதையோ சொல்லி யாரையோ கூப்பிடுவதும் கேட்டது. அவருக்கு இதயத்தில் `சுரீர்’ என்று ஏதோ ஒரு வேதனை. அவ்வளவுதான்... வேகமாக ஓடினார். முன்னால் ஓடிக்கொண்டிருந்த தன் நண்பர்களில் ஒருவரின் தோளைத் தொட்டுக் கூப்பிட்டார். 

``ஜார்ஜ்! நான் அடுத்த ஃப்ளைட்ல வர்றேன். ஊருக்குப் போனதும் என் ஒயிஃப்கிட்ட போன் பண்ணிச் சொல்லிடு!’’ 

``ஏம்ப்பா?’’ 

``வந்து சொல்றேன். பை!’’ 

இப்போது அந்த விற்பனைப் பிரதிநிதி திரும்பி நடந்தார். தெருவோர ஆப்பிள் கடைக்கு அருகே வந்தார். தரையெங்கும் ஆப்பிள்கள் சிதறிக்கிடந்தன. இப்போதுதான் அந்தப் பெண்ணை அவர் நன்றாக கவனித்தார். அந்தப் பெண் பார்வையற்றவள் என்பது தெரிந்து அதிர்ந்துபோனார். அவள் இரு கைகளையும் எதையோ தேடுவதுபோல நீட்டிக்கொண்டிருந்தாள். அவள் கண்களிலிருந்து கண்ணீர் வழிந்து கன்னங்களில் இறங்கிக்கொண்டிருந்தது. ஆப்பிள்கள் சிதறியிருப்பதையும் அந்தப் பெண்ணையும் அந்தப் பக்கம் போன பலர் பார்க்கத்தான் செய்தார்கள். ஆனால், நிற்காமல் நகர்ந்துகொண்டே இருந்தார்கள். அவரவருக்கு அவரவர் வேலை! ஒருவர்கூட அந்தப் பெண்ணுக்கு உதவி செய்ய முன்வரவில்லை. 

ஆப்பிள்

அந்த விற்பனைப் பிரதிநிதி இளைஞர் தன் சுமையை ஓர் ஓரமாக வைத்தார். தரையில் மண்டியிட்டு, சிதறிக் கிடந்த ஆப்பிள்களில் ஒவ்வொன்றாகப் பொறுக்கியெடுத்தார். எல்லா ஆப்பிள்களையும் சேகரித்து மறுபடியும் அந்தத் தெருவோரக் கடை மேஜையில் அழகாக அடுக்கிவைக்க அந்தப் பெண்ணுக்கு உதவி செய்தார். அந்த ஆப்பிள்களில் சில அடிபட்டு, நசுங்கிப் போயிருப்பதையும் கவனித்தார். அவற்றைத் தனியாக ஒரு பழக்கூடையில் போட்டு வைத்தார். 

எல்லாம் முடிந்தது, மறுபடியும் அந்தக் கடை மேஜையில் பழங்கள் ஒழுங்காக அடுக்கப்பட்டுவிட்டன என்பதை உறுதி செய்துகொண்டார். தன் பர்ஸை எடுத்தார். அதிலிருந்து சில கரன்ஸிகளை உருவினார்... ``இந்தாம்மா... இதுல 40 டாலர் இருக்கு. வெச்சுக்கோ. உன் கடையை நாங்க சேதப்படுத்தினதுக்கு நஷ்ட ஈடுன்னு நினைச்சுக்கோ! சரியா?’’ என்று சொல்லி அந்தப் பணத்தைக் கொடுத்தார்.   

அந்தப் பெண் பணத்தை வாங்கிக்கொண்டாள். 

``ரொம்ப மோசமா உன் கடையை நாங்க சேதப்படுத்திடலைதானே... நான் கிளம்பவா?’’ அவர் தன் உடைமைகளை எடுத்துக்கொண்டபோது, அந்தப் பெண் கூப்பிட்டாள்... ``ஐயா...’’ 

``என்னம்மா?’’ 

``நீங்க கடவுளா?’’ 

அவர் ஒரு கணம் பார்வையிழந்த அந்தப் பெண்ணின் கண்களை உற்றுப் பார்த்தார். 

``இல்லைம்மா. அவர் ரொம்பப் பெரியவர். நல்லவர், நம்ம எல்லாருக்கும் அன்பானவர், நம்மை நேசிப்பவர், நம்ம மேல அக்கறை காட்டுறவர், அவர் எங்களை மாதிரி ஒருபோதும் ஆப்பிள்களைத் தட்டிவிட மாட்டார். வரட்டுமா?’’ 

 

அந்த இளைஞர் விமான நிலையத்தை நோக்கி மெதுவாக நடக்க ஆரம்பித்தார். அடுத்த விமானம் வருவதற்கு இன்னும் நிறைய நேரமிருந்தது. 

https://www.vikatan.com

Link to comment
Share on other sites

1935 – அமெரிக்கக் கண்டுபிடிப்பாளரான எட்வின் ஆர்ம்ஸ்ட்ரோங் உலகின் முதலாவது தனது பண்பலை ஒலிபரப்பை நியூ ஜேர்சியில் அறிமுகப்படுத்தினார்.

வரலாற்றில் இன்று….
ஜூன் 11

நிகழ்வுகள்

1774 – அல்ஜீரியாவின் தலைநகர் அல்ஜியேர்சில் இருந்து பிரெஞ்சு இராணுவத்தினரின் அச்சுறுத்தலுக்கு அஞ்சி யூதர்கள் அங்கிருந்து வெளியேறினர்.
1788 – ரஷ்ய நாடுகாண் பயணி கெராசிம் இஸ்மாயிலொவ் அலாஸ்காவை அடைந்தார்.
1805 – மிச்சிகனில் டிட்ராயிட் நகரத்தின் பெரும் பகுதி தீயில் அழிந்தது.
1837 – பொஸ்டனில் ஆங்கிலேயர்களுக்கும் ஐரிய மக்களுக்கும் இடையில் கலவரம் மூண்டது.
1901 – நியூசிலாந்து தன்னுடன் குக் தீவுகளை இணைத்துக் கொண்டது.
1935 – அமெரிக்கக் கண்டுபிடிப்பாளரான எட்வின் ஆர்ம்ஸ்ட்ரோங் உலகின் முதலாவது தனது பண்பலை ஒலிபரப்பை நியூ ஜேர்சியில் அறிமுகப்படுத்தினார்.
1937 – சோவியத் ஒன்றியத்தில் எட்டு இராணுவத் தலைவர்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.
1938 – இரண்டாம் சீன-ஜப்பானியப் போர்: ஜப்பானியப் படைகளை எதிர் கொள்ள சீன அரசு மஞ்சள் ஆற்றை பெருக்கெடுக்க விட்டதில் 500,000 முதல் 900,000 வரையான பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.
1940 – இரண்டாம் உலகப் போர்: பிரித்தானிய விமானங்கள் இத்தாலியில் ஜெனோவா மற்றும் டூரின் நகர்கள் மீது குண்டுகளை வீசின.
1940 – இரண்டாம் உலகப் போர்: மால்ட்டா மீது முதற் தடவையாக இத்தாலிய விமானங்கள் தாக்குதலை நடத்தின.
1963 – தெற்கு வியட்நாமில் மத விடுதலையை வலியுறுத்தி திக் குவாங் டுக் என்ற பௌத்த மதகுரு தனக்குத் தானே தீமூட்டித் தற்கொலை செய்து கொண்டார்.
1981 – ஈரானில் 6.9 ரிக்டர் நிலநடுக்கம் ஏற்பட்டதில் 2,000 வரையில் கொல்லப்பட்டனர்.
2002 – அன்டோனியோ மெயூச்சி என்பவரே தொலைபேசியை முதன் முதலில் கண்டுபிடித்தவர் என ஐக்கிய அமெரிக்கக் காங்கிரசினால் அறிவிக்கப்பட்டார்.
2004 – நாசாவின் கசீனி-ஹியூஜென்ஸ் விண்ணுளவி சனிக் கோளின் ஃபீபி துணைக்கோளை அண்டிச் சென்றது.
2007 – கடும் மழை, வெள்ளம் காரணமாக வங்காள தேசத்தில் 118 பேரும் தெற்கு சீனாவில் 66 பேரும் கொல்லப்பட்டனர்.

பிறப்புகள்

1838 – எம். சி. சித்திலெப்பை, ஈழத்துத் தமிழறிஞர் (இ. 1898)
1908 – சோ. இளமுருகனார், ஈழத்துப் புலவர் (இ. 1975)
1947 – லாலு பிரசாத் யாதவ், இந்திய அரசியல்வாதி
1957 – சுகுமாரன், தமிழகக் கவிஞர்

இறப்புகள்

1994 – அ. துரைராசா, பேராசிரியர், நாட்டுப்பற்றாளர், யாழ் பல்கலைக்கழகத் துணைவேந்தர் (பி. 1934)
1995 – பாவலரேறு பெருஞ்சித்திரனார், தமிழ்த்தேசியத்தந்தை(பி. 1933)
1993 – லெப்டினண்ட் கேணல் சாள்ஸ், கடற்புலிகளின் தாக்குதற் படைத் தளபதியான ஆனந்தராசா தவராஜா (பி. 1960)

http://metronews.lk

Link to comment
Share on other sites

ஒரு நாள் : 25 மணிநேரம்
image_6cacf1bbdc.jpg

எதிர்காலத்தில் பூமியில் ஒரு நாள் என்பது 24 மணி நேரத்திலிருந்து 25 மணி நேரமாக மாற வாய்ப்புள்ளதாக புவியியல் ஆய்வாளர் ஸ்டீபன் மேயர்ஸால்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

140 கோடி ஆண்டுகளுக்கு முன்னர் பூமிக்கு அருகில் நிலவு இருந்தது. தற்போது அது 44 ஆயிரம் கிலோமீற்றர் தூரம் விலகிச் சென்றுள்ளது. 140 கோடி ஆண்டுகளுக்கு முன்னர் பூமியில் ஒரு நாள் என்பது வெறும் 18 மணி நேரம் 41 நிமிடமாக இருந்தது. தற்போது 24 மணி நேரமாகவுள்ளது.

நிலவு வருடத்திற்கு 3.82 சென்டிமீற்றர் விலகிச்செல்கிறது. இதனால் சில மில்லியன் ஆண்டுகளுக்கு பின்னர், நிலவு அதிக தூரம் சென்றுவிடும். எனவே பூமியின் சுற்றும் வேகத்தில் மாறுபாடு ஏற்பட்டு, பூமியில் ஒரு நாள் என்பது 25 மணி நேரமாக மாறுமென, அமெரிக்காவின் விஸ்கான்சின் – மேடிசன் பல்கலைக்கழக ஆய்வாளராகவுள்ள ஸ்டீபன் மேயர்ஸ் கூறியுள்ளார்.

கடந்த சில நூற்றாண்டுகளாகவே பூமி சுற்றும் வேகம் 2 மில்லி நொடிகள் அதிகரித்து வருவது கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது பூமி தன்னைத்தானே சுற்றிக்கொள்ள 24 மணி நேரத்தை எடுத்துக்கொள்கிறது. இந்த நிலையில், 2 மில்லி நொடிகள், இன்னும் 6.7 மில்லியன் ஆண்டுகளில் ஒரு நிமிடமாக மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த கணக்கின் அடிப்படையில், இன்னும் 200 மில்லியன் ஆண்டுகளுக்குப் பின்னர் இது ஒரு மணி நேரமாக மாறும் எனக் கூறப்படுகிறது. எனவே, அப்போது ஒரு நாளைக்கு 24 மணி நேரம் என்பதுமாறி, 25 மணி நேரமாகிவிடும் என ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

http://www.tamilmirror.lk

 

Link to comment
Share on other sites

சின்ன சின்ன வரலாறு : மெழுகுவத்தியின் கதை!

 

 
3484405216646152536557614660543028061011

தலை எழுத்து, டெஸ்டினி,ஃபேட்...எப்படி வேண்டுமானாலும் சொல்லுங்கள். இது மனிதர்களுக்கு மட்டும் அல்ல பொருட்களுக்கும் உண்டு என்று நான் உணர்ந்த ஒரு நேரம்.....இருட்டை விலக்கி ஒளி கொடுப்பதாக இருந்த ஒரு அத்யாவஸ்யப் பொருளான மெழுகுவத்தி, தற்போது பிறந்த நாள் கொண்டாட்டம், பிரத்தியேக இரவுச் சாப்பாட்டு நேரம், மேரி மாதாவுக்குக் காணிக்கை என்று சில பல விசேஷ தருணங்களுக்கென்றும் ஆகிவிட்டது.

அப்படி இருந்தாலும் , மெழுகுவத்திகள் தங்கள் மிதமான ஒளியைக் கொடுப்பதில் குறை வைப்பதே இல்லை. இப்படி ஒரு நேர்மை குறையாத பொருளின் சரித்திரம் தெரிந்துகொள்வோமா? சுமார் ஐயாயிரம் வருடமாக உபயோகத்தில் உள்ள இதன் முதல் கண்டுபிடிப்பைப்பற்றி வரலாற்றுக் குறிப்புகள் எதுவும் இல்லை.ஆனால் முதலில் உபயோகப்படுத்தியவர்கள் எகிப்தியர்கள் என்று சில குறிப்புக்கள் சொல்கின்றன.

 

அப்போது தயாரிக்கப்பட்ட மெழுகுவத்தி, நாணல் புற்களை முறுக்கி இளக்கப்பட்ட மிருகக்கொழுப்பில் தோய்த்தெடுத்து எரியச்செய்யப்பட்டது.இந்த தீ பந்தம் ஆர்டமிஸ் எனும் எகிப்திய கடவுளுக்காக, பிரதி மாதம் ஆறாம் தேதி ( சந்திர மாதம்) களில் எரியவிடுவார்களாம். ரோமானியர்கள், 500 பிசி காலகட்டத்தில் தற்போது உபயோகத்தில் இருப்பது போன்ற மெழுகுவத்திகளை மிருகக்கொழுப்பில் இருந்து தயாரிக்கத்தொடங்கினார்களாம்.

எண்ணெய் விளக்குகள் அன்றாட உபயோகத்திலும், இந்த மெழுகுவத்திகள் முக்கிய தினங்களுக்கான உபயோகத்திற்கும் தவிர மிகவும் அதிகமாக பரிசாகவும் கொடுக்கப்பட்டதாம். சீனாவின் க்வின் வம்சத்தின் சமாதி 1990 ல் கண்டுபிடிக்கப்பட்டபோது, திமிங்கலங்களின் கொழுப்பிலிருந்து செய்யப்பட்ட மெழுகுவத்திகள் கண்டுபிடிக்கப்பட்டன.

இந்த வம்சம் நாடாண்டது 221-206 பிசி வரை. சீன மொழியில் தற்போது மெழுகுவத்தி என்ற வார்த்தைக்கு அந்தக்காலத்தில் அர்த்தம் ஜோதி. ஆக மெழுகுவத்தி தன்மைக்கு ஏற்றார்போல் நிஜமாகவே உருகி ஒரு பொழுதுபோக்குப் பொருளாக மாறிவிட்டது.எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன் என்று நம்மிடம் கதை கூடச் சொல்ல வாய்ப்பு உண்டு. சீனாவின் ஹான் வம்சம் வந்தபோது, மெழுகுவத்திகள் தேன் மெழுகில் செய்யத்தொடங்கியதற்கான சான்றுகள் நிறைய கண்டறியப்பட்டிருக்கின்றன.இவை சுருட்டி அமைக்கப்பட்ட காகித ரோல்களில் அடைக்கப்பட்டு அரிசியைப் பதப்படுத்தி செய்த திரிகளைக்கொண்டு ஆனவையே. நம் நாட்டுக் கதைக்கு வருவோம்.

ஏலக்காய் எண்ணெயிலிருந்து தயாரிக்கப்பட்ட மெழுகுவத்திகளை நாம் ஆலயங்களில் உபயோகிக்கத்தொடங்கினோம். சரி... நாம் இவ்வளவு கஷ்டப்பட்டு மெழுகுவத்திகள் தயாரிப்பில் இருக்க, அலெஸ்கா மாகாணத்தில் யுலேகான் எனும் வகை மீனைக் காய வைத்து அப்படியே எரித்து உபயோகப்படுத்தினார்களாம்.

நாம் இப்போதும் ஒரு குச்சியில் காய்ந்த மீனைச் சொருகி அதை மெழுகுவத்தியாக உபயோகிக்கலாம். ஆப்பிரிக்கா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் மிக அதிக வருடங்களுக்குப்பின் தான் மெழுகுவத்தி உபயோகத்திற்கு வந்தது. காரணம் இவர்கள் ஆலிவ் எண்ணெயைக் கொண்டு விளக்குகள் உபயோகித்தார்கள். ரோமப் பேரரசின் வீழ்ச்சிக்குப்பின் இந்த எண்ணெய் கிடைப்பது அரிதான போது, மெழுகுவத்திகள் இங்கேயும் எரியத்தொடங்கின .

ஐரோப்பிய நாடுகளின் முதல் மெழுகுவத்தி, ஆடு அல்லது மாட்டின் கொழுப்பைக் கொண்டு தயாரிக்கப்பட்டன. ஆனால் இதன் உற்பத்தி உண்டாக்கும் துர்நாற்றம் ,அரசாங்க ஆணையில் போய் முடிந்தது. தொழிற்சாலைகள் மூடப்பட்டன. அதன் பின்னர் , மாற்றாக தேனீக்களின் மெழுகு கொண்டு தயாரிக்கத்தொடங்கின.

ஆனால் இந்த மெழுகின் அதீத விலையால், மெழுகுவத்திகள் தேவாலயங்களில் மற்றும் அரசவை நிகழ்ச்சிகளுக்கு மட்டும் என்று வரையறுக்கப்பட்டன இங்கிலாந்து மற்றும் பிரான்ஸ் நாடுகளில் பதிமூன்றாம் நூற்றாண்டுகளில் மெழுகுவத்திகள் தலைகாட்டத் தொடங்கின. லண்டனில் 1330 ல் தொடங்கப்பட்ட தி வாக்ஸ் சாண்ட்லர்ஸ் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட மெழுகுவத்திகள் தெரு விளக்காக உபயோகிக்கப்பட்டன.

மிருகக்கொழுப்பில் தொடங்கப்பட்டு, தேனீ மெழுகிற்கு மாறி, பின் ஆடு மாடு கொழுப்பிற்கு தாவி பின் ஸ்பெர்ம் திமிங்கிலங்களின் தலைகளில் இருந்து எடுக்கப்படும் ஸ்பெர்மாசெடி எனும் எண்ணெய்க்குச் சென்று ,பின் ரேப்சீடிலிருந்து கிடைக்கும் எண்ணெய்க்குத் தாவி,ஒரு வழியாக 19ம் நூற்றாண்டை அடைந்தபோது மெழுகுவத்திகள் தயாரிப்பு ஒரு மாபெரும் உற்பத்தித் தொழிலாக உருவெடுத்தன.

1848 ல் முதன் முதலாக ஜேம்ஸ் எங்க் என்பவரால் பாரஃபின் வாக்ஸிலிருந்து மெழுகுவத்திகள் தயாரிப்பு தொடங்கியது. பாரஃபின் மிகவும் சுலபமாக எரிந்து போகக்கூடிய தன்மை கொண்டது. ஒரு மெழுகுவத்தியை ஏற்றி வைத்த அடுத்த நிமிடமே அது எரிந்து முடித்துவிட்டால் அதன் உபயோகம் மட்டுப்படும். அந்த நூற்றாண்டின் முடிவில் கண்டுபிடிக்கப்பட்ட ஸ்டிரின் பாரஃபின்னுடன் கலக்கப்பட்டு இந்தப் பிரச்சினைக்கு ஒரு முடிவு காணப்பட்டது.

தற்போது தயாரிக்கப்படும் மெழுகுவத்திகளில் 60% பாரஃபின் , 35% ஸ்டியரிக் அமிலம் , 5% தேனீ மெழுகு சேர்க்கப்பட்டு செய்யப்படுகின்றன. 1990 க்குப்பிறகு இதிலும் சில மாற்றங்கள் செய்யப்பட்டன. தேவை என்று பார்க்கப்பட்ட மெழுகுவத்தி இப்போது அலங்காரப்பொருளாக பார்க்கப்படுவதால் நிறம் ,மணம் ,குணம் என்று பல்வேறு மாறுதல்கள் தலைக்காட்டத்தொடங்கின.ஃப்ளாக் சீட், சோயா,பனை எண்ணெய் எனப் பலவிதமான கலவைகள் தேவைக்குத் தகுந்தபடி தற்போது சேர்க்கப்படுகின்றன.

மெழுகுவத்திகள் ஒரு காலத்தில் நேரம் கணிப்பதற்கு. உபயோகப்படுத்தப்பட்டன. மெழுகுவத்திகளின் உடலில் ஆங்காங்கே வெட்டுக்கள் போடப்படும். அவை நேரக்கணக்கைச் சொல்லும். ஆக தன் நேரத்தையும் நம் நேரத்தையும் கணக்கில் வைத்திருக்கும் மெழுகுவத்திகள் இன்னும் நிறையக் காலம் எரிந்தபடி இருக்கட்டும்.

http://tamil.thehindu.com

Link to comment
Share on other sites

`எந்த மதத்தையும் சார்ந்திருக்கிறது பாவமில்ல பிரதர்..!’ - விஸ்வரூபம் - 2 படத்தின் ட்ரெய்லர்

 
 

கமல்ஹாசனின் விஸ்வரூபம்-2 படத்தின் ட்ரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது. 

கமல்

 

கமல்ஹாசன் இயக்கி, நடித்த `விஸ்வரூபம்' திரைப்படம், பல்வேறு தடைகளுக்குப் பிறகு கடந்த 2013-ல் வெளியானது. இந்தப் படத்தின் முதல் பாகம் எடுக்கும்போதே, இரண்டாம் பாகத்துக்கான 40 சதவிகித படப்பிடிப்பும் முடிந்துவிட்டதாகக் கூறப்பட்டது. இதனால் விஸ்வரூபம்-2 படம் விரைவில் வெளியாகும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்துக்கொண்டிருந்தனர். இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியான நிலையில், பல்வேறு காரணங்களால் படத்துக்கான வேலைகள் பாதியில் நின்றன. பிக்பாஸ் ரியாலிட்டி ஷோ, அரசியல் கட்சி வேலைகள் என கமல் பிஸியாக இருந்ததால், விஸ்வரூபம் - 2 படத்தின் வேலைகள் பாதியில் நின்றன.  

அதன்பின்னர், விஸ்வரூபம் -2 படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பை நடிகர் கமல் சமீபத்தில் தொடங்கி முடித்தார். சென்னை ராணுவப் பயிற்சி மையத்தில் நடந்த இறுதிக்கட்ட படப்பிடிப்பில் கமலுடன், ஆண்ட்ரியா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். ஷூட்டிங்கின்போது எடுத்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகின. பரபரப்பாக ஷூட்டிங்கை நடத்தி முடித்து, போஸ்ட் புரொடக்‌ஷன்ஸ் வேலைகள் நடந்து வந்தன.

இந்தநிலையில், விஸ்வரூபம் - 2 படத்தின் ட்ரெய்லரை நடிகர் கமலின் மகளும் நடிகையுமான ஸ்ருதி ஹாசன் தற்போது வெளியிட்டார். தமிழ் பதிப்புக்கான ட்ரெய்லரை ஸ்ருதி வெளியிட, இந்தி பதிப்புக்கான ட்ரெய்லரை அமீர்கானும், தெலுங்கு பதிப்புக்கான ட்ரெய்லரை ஜூனியர் என்.டி.ஆரும் வெளியிட்டனர். படம் ஆகஸ்ட் 10-ம் தேதி வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

 

 
Link to comment
Share on other sites

  • 2 weeks later...

 

காதலர்களால் கொண்டாடப்படும் சுரங்க ரயில் பாதை

 

மேற்கு யுக்ரேனில் உள்ள சுரங்க ரயில் பாதை, உலக அளவில் காதல் ஜோடிகள் மத்தியில் வேகமாக பிரபலம் அடைந்து வருகிறது.

Link to comment
Share on other sites

சர்வதேச யோகா தினம்

வரலாற்றில் இன்று….
ஜூன் 21

நிகழ்வுகள்

1621 – பிராக் நகரில் 27 உயர்குடி செக் இனத்தவர்கள் தூக்கிலிடப்பட்டனர்.
1734 – கியூபெக்கில் மொண்ட்றியால் நகரில் மரீ-ஜோசெப் அஞ்சலிக் என்ற கறுப்பின அடிமைப்பெண், அவளது எசமானின் வீட்டைத் தீயிட்டுக் கொழுத்தியமைக்காகவும், அதனால் நகரின் பெரும் பகுதி அழிந்தமைக்காகவும் குற்றம் சாட்டப்பட்டு மக்கள் மத்தியில் சித்திரவதை செய்யப்பட்டுத் தூக்கிலிடப்பட்டாள்.
1788 – நியூ ஹாம்சயர் ஐக்கிய அமெரிக்காவின் 9வது மாநிலமாக இணைந்தது.
1798 – ஐரியத் தீவிரவாதிகளின் எழுச்சி பிரித்தானியாவினால் முறியடிக்கப்பட்டது.
1898 – குவாம் தீவை ஐக்கிய அமெரிக்கா ஸ்பெயினிடம் இருந்து கைப்பற்றியது.
1940 – இரண்டாம் உலகப் போர்: பிரான்ஸ் ஜெர்மனியிடம் வீழ்ந்தது.
1942 – இரண்டாம் உலகப் போர்: லிபியாவின் டொப்ரூக் நகரம் இத்தாலி, மற்றும் ஜெர்மனியப் படைகளிடம் வீழ்ந்தது.
1945 – இரண்டாம் உலகப் போர்: ஒகினவா சண்டை முடிவுற்றது.
1970 – பிரேசில் இத்தாலியை 4-1 என்ற கோல் கணக்கில் தோற்கடித்து உதைபந்தாட்ட உலகக் கிண்ணத்தை வென்றது.
1990 – மன்னாரில் கொண்டச்சி இராணுவ முகாம் விடுதலைப் புலிகளால் தாக்கி அழிக்கப்பட்டது.
1999 – அப்பிள் கணினி நிறுவனம் தனது முதல் iBook இனை வெளியிட்டது.

2002 – உலக சுகாதார நிறுவனம் ஐரோப்பாவை போலியோ நோய் அற்ற கண்டமாக அறிவித்தது.
2004 – விண்கப்பல் ஒன்று (SpaceShipOne) தனது முதலாவது தனியாரினால் ஆதரவளிக்கப்பட்ட விண்பயணத்தை முடித்துக்கொண்டது.
2006 – புளூட்டோவின் புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட துணைக்கோள்கள் நிக்ஸ் மற்றும் ஹைட்ரா எனப் பெயரிடப்பட்டது.

பிறப்புகள்

1905 – ஜான் பவுல் சாட்டர், பிரெஞ்சு எழுத்தாளர், தத்துவவாதி, நோபல் பரிசு பெற்றவர் (இ. 1980)
1947 – ஷிரின் எபாடி, நோபல் பரிசு பெற்ற ஈரானியர்
1953 – பெனாசிர் பூட்டோ, பாகிஸ்தான் முன்னாள் பிரதமர்

இறப்புகள்

1970 – சுகர்னோ, இந்தோனீசியாவின் அதிபர் (பி. 1901)
2001 – கே. வி. மகாதேவன், இசையமைப்பாளர் (பி. 1918)

சிறப்பு தினம்

உலக இசை தினம்
கனடா – தேசிய பழங்குடிகள் தினம்
கிறீன்லாந்து – தேசிய தினம்
சர்வதேச யோகா தினம்

http://metronews.lk/

Link to comment
Share on other sites

வாட்ஸ்அப் கலக்கல்: மோடி வீடியோ

 

 
modi

பிரதமர் நரேந்திர மோடி பிட்னஸ் வீடியோவை வெளியிட்டதும், மீம்ஸ் கிரியேட்டர்கள் வழக்கம்போல விதவிதமான மீம்ஸ்களையும் வீடியோக்களையும் வெளியிடத் தொடங்கினர்.

mem%201%204
 
mem%208
mem%201%202
mem%201%206
mem%201%203
mem%201%205

 

Link to comment
Share on other sites

‘உள்ளுணர்வுகள் பல சமிக்ஞைகள் செய்யும்’
 

image_299fc57286.jpgஎல்லோருடைய அறிவுக்குள்ளும் இறைவன் பிரவேசிக்கின்றார். சிலர் அதைப் புரிந்துகொண்டு, தங்கள் திறமையை, வலுவை, முயற்சியை ஸ்திரப்படுத்திக் கொள்கின்றார்கள். ஆண்டவன் ஆசீர்வாதத்தை உணர்வதும் புரிவதும் அவர் நல்கும் அருளால் மட்டுமே முடியும். 

பல சமயங்களில் நாங்கள் சிக்கல்கள் நிறைந்த நிலையில் இருக்கும்போது, உள்ளுணர்வுகள் பல சமிக்ஞைகள் செய்யும். அதன் அறிவுறுத்தல்களை உணர்ந்து, நல்ல முடிவுகளை எடுத்த, நல்ல அனுபவங்களை உணர்ந்திருப்பீர்கள். 

அறிவும் மனமும் ஒன்று சேர்ந்தால், மனித பலம் விரிவடையும். நெஞ்சத்தைப் பல தேவையற்ற பாதைகளில் சஞ்சரிக்க விட்டால், மூளை குழம்பிப்போகும். 

மனிதன் இத்தகைய நிலையில் அமைதியுடன் இருந்தாலே போதும். உள்ளே ஒரு வெளிச்சம் உருவாகியே தீரும். முடியாததை முடிக்கும் ஆற்றல் உங்களிடம் உண்டு. பிறர் மூளைகளைக் கடன் வாங்க வேண்டாம். உங்களை, நீங்கள் நம்பாது விட்டால், காலம் பூராவும் இரவல் மூளைகளுடன் தான் உறவாட வேண்டியிருக்கும். உங்களைவிட உங்களுக்குச் சிறந்த நண்பர் யார் உளர்?

Link to comment
Share on other sites

எவற்றையெல்லாம் மனிதன் இழக்கக் கூடாது? - பாடம் சொல்லும் கதை #MotivationStory

 

தைரியத்தோடு எதிர்கொள்பவர்களைத்தான் இயற்கையும் வாழ்த்துகிறது. இந்த நியதியை சுட்டிக்காட்டும் கதை ஒன்று

எவற்றையெல்லாம் மனிதன் இழக்கக் கூடாது? - பாடம் சொல்லும் கதை #MotivationStory
 

தன்னம்பிக்கை கதை

`அன்புக்கு மிகச் சிறந்த ஆதாரம் நம்பிக்கை’ - அழுத்தமாகச் சொல்கிறார் அமெரிக்க உளவியல் நிபுணரும் கட்டுரையாளருமான ஜாய்ஸ் பிரதர்ஸ் (Joyce Brothers). அன்புக்கு மட்டுமல்ல... ஆபத்தான தருணங்களில்கூட அது கைகொடுக்கும். `நம்பினார் கெடுவதில்லை’ என்பது நம் முன்னோர் வாக்கு. இயற்கை, எப்போதுமே தன்னை நம்பியவர்களைக் கைவிடுவதில்லை. நம் எல்லோருக்குமே நம்பிக்கைதான் ஆதாரம். `எப்போது இந்த உலகம் சுழல்வதை நிறுத்துமோ!’ என்று நாம் யோசிக்க ஆரம்பித்தால் நிம்மதி பறிபோய்விடும். `நல்ல காலம் பிறக்காமலா போகும்?’, `மகளுக்கு நல்ல வரன் அமையத்தான் போகுது’, `அடுத்த வருஷம் `நீட்’ல பையன் பாஸாகிடுவான்’... இப்படியான நேர்மறை எண்ணங்களும், அவை தொடர்பான நம்பிக்கையும்தான் நம்மை இயக்கிக்கொண்டிருக்கின்றன; வாழவைத்துக்கொண்டிருக்கின்றன. எப்படிப்பட்ட மோசமான சூழலிலும் இவற்றை இழக்காமல், தைரியத்தோடு எதிர்கொள்பவர்களைத்தான் இயற்கையும் வாழ்த்துகிறது; அரவணைத்துக்கொள்கிறது. இந்த நியதியைச் சுட்டிக்காட்டும் கதை ஒன்று...   

படகு

அவர்களுக்கு அண்மையில்தான் திருமணமாகியிருந்தது. தேனிலவுப் பயணமாக எங்கெங்கோ சுற்றிவிட்டு, ஊர் திரும்பிக்கொண்டிருந்தார்கள். வழியில் ஒரு ஏரியைக் கடக்கவேண்டியிருந்தது. ஒரு படகை வாடகைக்கு எடுத்தார்கள். வாடகைக்கு எடுத்த படகை மறு கரையில் விட்டுவிட வேண்டும் அல்லது ஒரு படகோட்டியை உடன் அழைத்துச் செல்ல வேண்டும். படகோட்டி வந்தால், கூடுதலாக கட்டணம் செலுத்தவேண்டியிருக்கும்... இது படகுக்காரர்கள் சொன்ன முக்கியமான விதிமுறை. கணவனுக்கு நன்றாகப் படகு ஓட்டத் தெரியும். அவன் ஒரு ராணுவ வீரனும்கூட. எனவே, அவனே படகைச் செலுத்துவதற்கு ஒப்புக்கொண்டான். 

 

 

அது மாலை நேரம். ஏரியின் பாதி தூரத்தை அவர்கள் கடந்திருந்தார்கள். திடீரென்று காற்று பலமாக வீசியது. புயல் கிளம்பியதுபோல இருந்தது. காற்றில் படகு வேகமாக அசைய ஆரம்பித்தது. கணவன் அந்தச் சூழலிலும் கலங்காமல் அப்படியே உட்கார்ந்திருந்தான். மனைவிதான் மிகவும் பயந்துபோயிருந்தாள். கொஞ்ச நேரத்திலேயே, `அவ்வளவுதான் நாம இன்னிக்கி காலி’ என்கிற அளவுக்கு அவள் நம்பிக்கையை இழந்திருந்தாள். உண்மையில், அந்தப் பலமான காற்றைத் தாங்கிக்கொள்ளும் அளவுக்கு அவர்கள் சென்ற படகு வலுவானதில்லை. எந்த நேரத்திலும் அது, காற்றால் அடித்து, சுருட்டப்பட்டு ஏரியில் மூழ்கிப் போகலாம். 

அந்தப் பெண் பயந்து அலறிக்கொண்டிருந்தாள். அவனோ, அமைதியாக காற்றுக்கு ஏற்ப துடுப்பைப் போடுவது, சற்று நேரம் சும்மா இருப்பதுமாக இருந்தான். அவன் முகம் ஒரு சஞ்சலமுமில்லாமல், அமைதியாகயிருந்தது. அவள் கணவனைப் பார்த்துச் சொன்னாள்... ``ஏங்க... உங்களுக்குக் கொஞ்சம்கூட நடுக்கமே வரலையா? ஒருவேளை இதுவே நம்ம கடைசி நிமிஷமாக இருக்கலாம். அடிக்கிற காத்தைப் பார்த்தா, நாம கரைக்குப் போய்ச் சேருவோம்னே எனக்குத் தோணலை. இந்த நேரத்துல ஏதாவது அதிசயம் நடந்து நாம தப்பிச்சாத்தான் உண்டு. இல்லைன்னா, இந்த ஏரியிலேயே மூழ்கிப் போயிட வேண்டியதுதான்.’’ 

அவன் பதில் பேசாமல் அமைதியாக இருந்தான். 

கைத்துப்பாக்கி

``இவ்வளவு பேசுறேனே... உங்க காதுல விழலை... உங்களுக்கு என்ன பைத்தியம் புடிச்சிடுச்சா... உங்களுக்குப் பயமாவே இல்லியா?’’ 

இப்போது அவன் அவளைப் பார்த்துச் சிரித்தான். சட்டென்று தன் பாக்கெட்டிலிருந்த கைத்துப்பாக்கியை எடுத்தான். அதன் ட்ரிக்கரில் விரலை வைத்தான். மனைவி, அவன் என்ன செய்யப் போகிறான் என்று விநோதமாகப் பார்த்தாள். அவன் துப்பாக்கியை எடுத்து அவளுடைய நெற்றிப்பொட்டில் வைத்தான். இப்போது ட்ரிக்கரை ஓர் அழுத்து அழுத்தினால் போதும். அவள் உயிர் போய்விடும். 

அவன் கேட்டான்... ``இப்போ உனக்கு பயமாயில்லையா?’’ 

அவள் மென்மையாகச் சிரித்தபடி சொன்னாள்... ``நான் ஏன் பயப்படணும்? நீங்க என் கணவர். உங்க கையிலதானே துப்பாக்கி இருக்கு? நீங்க என்னைக் காயப்படுத்த மாட்டீங்க, எந்த அளவுக்கு என்னை விரும்புறீங்கனு எனக்குத் தெரியும்...’’

அமைதியான படகு 

``அதே பதில்தான் என்கிட்டயும் இருக்கு டார்லிங். இயற்கை என்னை விரும்புதுனு எனக்கு நல்லாத் தெரியும். அது கையிலதான் இந்தப் புயல் காத்து இருக்கு. அதுனால எது நடந்தாலும் அது நல்லதுக்குத்தான். நாம பிழைச்சோம்னா நல்லது; பிழைக்கலைன்னாலும் அதுவும் ஏதோ ஒருவகையில நம்ம நல்லதுக்காகத்தான் இருக்கும்னு நினைச்சுக்கணும். ஏன்னா, எல்லாமே இயற்கையோட கையிலதான் இருக்கு. அது நமக்கு எதிராக எதையும் செய்யாது...’’ 

அவன் சொல்லி முடித்தான். அதுவரை அந்தப் படகை அலைக்கழித்துக்கொண்டிருந்த பயங்கரக் காற்று, அவர்களைக் கடந்து போய்க்கொண்டிருந்தது. 

https://www.vikatan.com

Link to comment
Share on other sites

புளூட்டோவின் சாரண் என்ற துணைக்கோள் கண்டுபிடிக்கப்பட்ட நாள்: ஜூன் 22- 1978

அ-அ+

புளூட்டோவின் சாரண் என்ற துணைக்கோள் 1978-ம் ஆண்டு ஜூன் 22-ம் தேதி கண்டுபிடிக்கப்பட்டது. இதே தேதியில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள்:- * 1898 - ஸ்பானிய- அமெரிக்கப் போர்: அமெரிக்கக் கடற்படையினர் கியூபாவில் தரையிறங்கினர். * 1911 - ஐந்தாம் ஜார்ஜ் ஐக்கிய இராச்சியத்தின் மன்னனாக முடி சூடினான். * 1940 - இரண்டாம் உலகப் போர்: பிரான்ஸ் கட்டாயமாக நாசி ஜெர்மனியுடன் அமைதி உடன்பாட்டுக்கு

 
 
புளூட்டோவின் சாரண் என்ற துணைக்கோள் கண்டுபிடிக்கப்பட்ட நாள்: ஜூன் 22- 1978
 
புளூட்டோவின் சாரண் என்ற துணைக்கோள் 1978-ம் ஆண்டு ஜூன் 22-ம் தேதி கண்டுபிடிக்கப்பட்டது.

இதே தேதியில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள்:-

* 1898 - ஸ்பானிய- அமெரிக்கப் போர்: அமெரிக்கக் கடற்படையினர் கியூபாவில் தரையிறங்கினர்.
 
* 1911 - ஐந்தாம் ஜார்ஜ் ஐக்கிய இராச்சியத்தின் மன்னனாக முடி சூடினான்.
 
* 1940 - இரண்டாம் உலகப் போர்: பிரான்ஸ் கட்டாயமாக நாசி ஜெர்மனியுடன் அமைதி உடன்பாட்டுக்கு ஒப்புக் கொண்டது.
 
* 1941 - இரண்டாம் உலகப் போர்: ஜெர்மனிப் படையினர் சோவியத் ஒன்றியத்தை முற்றுகையிட்டனர்.
 
* 1941 - சோவியத் ஆக்கிரமிப்புக்கு எதிரான லித்துவேனியாவின் விடுதலைப் போர் ஆரம்பமானது.

* 1962 - எயார் பிரான்சின் போயிங் விமானம் மேற்கிந்தியத் தீவுகளில் கௌதலூபே தீவில் விபத்துக்குள்ளாகியதில் 113 பேர் கொல்லப்பட்டனர்.
 
* 1978 - புளூட்டோவின் சாரண் என்ற துணைக்கோள் கண்டுபிடிக்கப்பட்டது.
 
* 1986 - மெக்சிகோவில் இடம்பெற்ற உலகக்கோப்பை கால்பந்தாட்டப் போட்டியில் ஆர்ஜெண்டீனா வீரர் மரடோனா நூற்றாண்டுக்கான கோலைப் போட்டார்.
 
* 2002 - மேற்கு ஈரானில் இடம்பெற்ற 6.5 ரிக்டர் அளவு நிலநடுக்கத்தில் 261 பேர் கொல்லப்பட்டனர்.
 
Link to comment
Share on other sites

இன்பாக்ஸ்

 

 

36p1_1529389809.jpg

 ராஜு முருகனின் `ஜிப்ஸி’யில் ‘ஜீவாவின் ஜோடியாக நடிக்கும், ஆப்பிள் மாதிரி இருக்கும் பெண் யார்?’ என, கடந்த வாரம் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரைப் பார்த்து எல்லோருமே கேட்டார்கள். அந்த ஆப்பிள் பெண் வேறு யாருமல்ல... 'மிஸ்.ஹிமாச்சல் பிரதேஷ்' நடாஷா சிங்!  ``படித்தது இன்ஜினீயரிங். பிடித்தது மாடலிங்’’ என்று சொல்லும் நடாஷா, ஹிமாச்சலப்பிரதேசத்திலிருந்து மாடலிங்குக்காக மும்பைக்கு இடம்பெயர்ந்தவர். ``தமிழ்ப்படங்கள் நிறைய பார்த்திருக்கேன். தமிழ் சினிமாவுல நடிப்பேன்னு கனவுலகூட எதிர்பார்க்கலை. நாகப்பட்டினத்தில் ஷூட்டிங்கை வேடிக்கை பார்த்த மக்கள் என்கிட்ட அதுக்குள்ள ஆட்டோகிராஃப் வாங்கிட்டாங்க. செம ஆச்சர்யமா இருக்கு!’’ என்று படபடக்கிறார் நடா. அடடா!


36p2_1529389851.jpg

ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் ‘அவதார்’ படத்தின் இரண்டு மற்றும் மூன்றாம் பாகங்கள் தயாராகி வருகின்றன. இதில் முக்கியமான கேரக்டரில் ‘டைட்டானிக்’ நாயகி கேத் வின்ஸ்லெட் நடிக்கிறார். ரசிகர்கள் பல வருடங்களாக எதிர்பார்த்து வந்த கேமரூன் -வின்ஸ்லெட் காம்போ 20 வருடங்கள் கழித்து இப்படத்தில் இணைந்திருக்கிறார்கள். தண்ணீருக்கு அடியில் படமாக்கப்பட்ட முதல் காட்சியிலேயே ஏழு நிமிடங்கள் மூச்சைப் பிடித்து நடித்து அசத்தியிருக்கிறார், வின்ஸ்லெட். ‘டைட்டானிக்’லயும் தண்ணி, இங்கேயும் தண்ணியா?


36p3_1529389867.jpg

தோனியின் குட்டிப்பொண்ணு ஸிவா தோனிதான் இன்ஸ்டா உலகின் இளவரசி. திரும்பிய பக்கமெல்லாம் தோனியின் மனைவி சாக்‌ஷி போட்ட வீடியோக்கள் மற்றும் போட்டோக்களை ஷேர்செய்து மகிழ்கிறார்கள் தோனி ரசிகர்கள். ``நிறைய பாலிவுட் வாய்ப்புகளும் வருகின்றன. அவளின் அப்பாதான் வேண்டாம் என்கிறார்’’ என்று சிரிக்கிறார் சாக்‌ஷி. தெறி பேபி!


‘அயர்ன்மேன்’, ‘அவெஞ்சர்ஸ்’ படங்களைப் பார்த்தவர்களுக்கு ராபர்ட் டவுனி ஜூனியருடன் முதன்மைப் பாத்திரமாய் வரும் JARVIS, FRIDAY என்ற ஆர்ட்டிஃபிஷியல் இன்டலிஜென்ஸ் தொழில்நுட்பம் பற்றிய அறிமுகம் தேவையில்லை. ‘அவெஞ்சர்ஸ்’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, இப்படத்தின் இரண்டாம் பாகத்தில் நடித்துவரும் ராபர்ட், தன் மனைவி சுசன் டவுனியுடன் இணைந்து ஆர்ட்டிஃபிஷியல் இன்டலிஜென்ஸ் பற்றிய ஆவணப் படம் ஒன்றைத் தயாரிக்கவிருக்கிறார். ‘சர்வைவா’ மொழிபெயர்த்து அனுப்பவா, தல?


36p4_1529389901.jpg

திருமணத்துக்கு முன் நான்கைந்து மியூசிக் ஆல்பங்களை வெளியிடும் முடிவில் களமிறங்கியிருக்கிறார் இலியானா. `பெலி தஃபா’ என்ற அவர் ஆல்பம் ஏற்கெனவே ஹிட்டடித்த நிலையில், காதலர் நீபோனைத் திருமணம் செய்தபிறகு, ரசிகர்களைத் தன் குரலால் மயக்கப்போகிறாராம். சினிமா வாய்ப்புகளுக்கு முன்னர் கோவாவில் சிறிய அளவுகளில் பாண்ட்களில் பாடி வந்த அனுபவத்தை இசை ஆல்ப வெளியீட்டின் மூலம் புதுப்பிக்கிறார் இலி இந்தி,  ஆங்கிலப் பாடல்களில் பாப் மற்றும் மென்மையான ராக் இசையில் புது ஆல்பத்துக்கான பணி ஜூலையில் தொடங்குகிறதாம். மியூசிக்கலி!


36p5_1529389920.jpg

தெலுங்கில் தொடர்ந்து ஹிட் படங்களைக் கொடுத்த நடிகர்களில் ஒருவர், நானி. ஆனால், சமீபகாலமாக அவருடைய படங்கள் சொல்லிக்கொள்ளும்படியான வெற்றியைப் பெறவில்லை. தவிர, விஜய் தேவரகொண்டா, வருண் தேஜ், சாய் தரம் தேஜ் என இளம் ஹீரோக்களின் வருகையும் நானியின் சினிமா வாழ்க்கையை பாதித்திருக்கிறது. தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்க ஒப்பந்தம் ஆகியிருக்கும் நானி, நல்ல கதைகள் அமைந்தபிறகே நடிப்பில் தீவிரம் காட்டலாம் என முடிவெடுத்திருக்கிறாராம். ஸ்ரீரெட்டி புகார் என்னாச்சு?


36p6_1529389937.jpg

ழகி கிம் கர்தாஷியனைவிட அதிகம் சம்பளம் வாங்கும் மாடல் யார் தெரியுமா? கென்டால் ஜென்னர் என்ற அமெரிக்க டிவி நடிகைதான். உலகின் அதிக சம்பளம் வாங்கும் மாடல்கள் பட்டியலில் அவருக்கு  நம்பர் 1 இடம் கொடுத்தி ருக்கிறது ‘ஃபோர்ப்ஸ்’ பத்திரிகை. கிம் கர்தாஷியன் உறவினர்தான் இந்த ஜென்னர் என்பது குறிப்பிடத்தக்கது. சினிமாவைவிட டிவியில் அதிகம் சம்பாதிக்க முடியும் என நிரூபித்த வகையில் கென்டால் எல்லோரையும் ஆச்சர்யப்படவைக்கிறார். செம குலாபி!


36p7_1529389949.jpg

பாலிவுட்டின் லேட்டஸ்ட் சென்சேஷன் `லஸ்ட் ஸ்டோரீஸ்’ படம்தான். பாலிவுட்டின் படா படா இயக்குநர்களான அனுராக் காஷ்யப், ஜோயா அக்தர், திபாகர் பானர்ஜி மற்றும் கரண் ஜோஹர் இதில் இணைந்திருக்கிறார்கள். இந்தியப் பெண்களின் செக்ஸ் மற்றும் ரிலேஷன்ஷிப் பற்றிய பார்வையை நான்கு குறும்படங்களின் கலவையாக அலசியிருக்கிறது இந்தப் படம். தியேட்டரில் ரிலீஸ் ஆகாமல் `நெட்ஃபிளிக்ஸ்’ இணையதளத்தில் ரிலீஸ் ஆகியிருக்கும் இந்தப் படத்துக்கு உலகெங்கிலும் பாசிட்டிவ் விமர்சனங்கள் குவிவதால் தியேட்டர் ரிலீஸுக்குத் தயாராகிவருகிறார் படத்தின் தயாரிப்பாளர் ரோனி ஸ்க்ரூவாலா. வெல்டன்....வெல்கம்!

https://www.vikatan.com

Link to comment
Share on other sites

962 – எயார் பிரான்சின் போயிங் விமானம் மேற்கிந்தியத் தீவுகளில் கௌதலூபே தீவில் விபத்துக்குள்ளாகியதில் 113 பேர் கொல்லப்பட்டனர்.

வரலாற்றில் இன்று….
ஜூன் 22

நிகழ்வுகள்

1593 – குரொவெசியர்கள் சிசாக் என்ற இடத்தில் இடம்பெற்ற சமரில் துருக்கியர்களை வென்றனர்.
1633 – அண்டத்தின் மையம் பூமி அல்ல, சூரியன் என்ற தனது அறிவியல் கொள்கையை கலிலியோ கலிலி ரோமின் அரசுப்படைகளின் வற்புறுத்தலின் பேரில் திரும்பப் பெற்றுக் கொண்டார்.
1658 – போர்த்துக்கேயரிடம் இருந்து ஒல்லாந்தர் யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றினர்.
1783 – ஐஸ்லாந்தின் லாக்கி எரிமலையிலிருந்து வெளியேற்றிய நச்சு வளி பிரான்சின் ல ஹாவ்ரா நகரைத் தாக்கியது.
1812 – முதலாம் நெப்போலியன் ரஷ்யாவின் மீது போரை அறிவித்து முற்றுகையிட்டான்.
1815 – நெப்போலியன் பொனபார்ட் இரண்டாம் தடவையாக பதவியிழந்தான். 4 வயதான இரண்டாம் நெப்போலியன் இரண்டு வாரங்களுக்கு ஆட்சியில் அமர்ந்தான்.
1825 – பிரித்தானிய நாடாளுமன்றம் நிலமானிய முறையை நீக்கியது.
1848 – பாரிசில் தொழிலாளர்களின் ஜூன் நாட்களின் எழுச்சி ஆரம்பமாயிற்று. ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர்.
1866 – ஆஸ்திரிய-புரூசிய போரில் ஆஸ்திரிய இராணுவம் இத்தாலிய இராணுவத்தைத் தோற்கடித்தனர்.
1893 – காம்பர்டவுன் என்ற ரோயல் கடற்படைக் கப்பல் ஒன்று விக்டோரியா என்ற பிரித்தானிய மத்தியதரைக்க் கடற்படைக் கப்பலுடன் மோதியதில் 358 மாலுமிகள் கொல்லப்பட்டனர்.
1898 – ஸ்பானிய-அமெரிக்கப் போர்: அமெரிக்கக் கடற்படையினர் கியூபாவில் தரையிறங்கினர்.
1911 – ஐந்தாம் ஜோர்ஜ் ஐக்கிய இராச்சியத்தின் மன்னனாக முடி சூடினான்.
1940 – இரண்டாம் உலகப் போர்: பிரான்ஸ் கட்டாயமாக நாசி ஜெர்மனியுடன் அமைதி உடன்பாட்டுக்கு ஒப்புக் கொண்டது.
1941 – கிழக்குப் போர்முனை: ஜெர்மனிப் படையினர் சோவியத் ஒன்றியத்தை முற்றுகையிட்டனர்.
1941 – சோவியத் ஆக்கிரமிப்புக்கு எதிரான லித்துவேனியாவின் விடுதலைப் போர் ஆரம்பமானது.
1962 – எயார் பிரான்சின் போயிங் விமானம் மேற்கிந்தியத் தீவுகளில் கௌதலூபே தீவில் விபத்துக்குள்ளாகியதில் 113 பேர் கொல்லப்பட்டனர்.
1976 – கனடாவில் மரணதண்டனை தருவது நிறுத்தப்பட்டது.
1978 – புளூட்டோவின் சாரண் என்ற துணைக்கோள் கண்டுபிடிக்கப்பட்டது.
1986 – மெக்சிகோவில் இடம்பெற்ற உலகக்கோப்பை காற்பந்தாட்டப் போட்டியில் ஆர்ஜெண்டீனிய வீரர் மரடோனா நூற்றாண்டுக்கான கோலைப் போட்டார்.
2002 – மேற்கு ஈரானில் இடம்பெற்ற 6.5 றிக்டர் அளவு நிலநடுக்கத்தில் 261 பேர் கொல்லப்பட்டனர்.

பிறப்புகள்

1962 – க்ளைட் ட்ரெக்ஸ்லர், முன்னாள் அமெரிக்கக் கூடைப்பந்து ஆட்டக்காரர்
1964 – டான் ப்ரவுன் ஆங்கில எழுத்தாளர்
1974 – விஜய், தென்னிந்திய நடிகர்

இறப்புகள்

1990 – ஈலியா பிராங்க், நோபல் பரிசு பெற்ற ரஷ்ய இயற்பியலாளர் (பி. 1908)

http://metronews.lk/

Link to comment
Share on other sites

பிட்ஸ் பிரேக்

 
 

 

67p1_1529400755.jpg

‘டர்ட்டி பிக்சர்’ படத்தில் கவர்ச்சிப் புயலாய் நடித்த வித்யா பாலனுக்கு மிகவும் பிடித்த உடை என்னவோ, காஞ்சிபுரம் பட்டுச்சேலைதானாம். ஆடைகள் வாங்கக் கடைகளுக்குச் சென்றாலே மூட்டை நிறைய புடவையைத்தான் வாங்குவாராம்.

சேலை கட்டும் பெண்ணுக்கொரு....


73p1_1529400773.jpg

ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் `தடக்’ எனும் படம் மூலம் பாலிவுட்டில் என்ட்ரி ஆகவுள்ளார். இந்தப் படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் ஜான்வியின் காஸ்ட்யூம், எளிமையான பச்சைவண்ண சல்வார் கமீஸ். தன் தாயின் ஃபேவரிட் டிசைனரான மனிஷ் மல்ஹோத்ரா கைவண்ணத்தில் உருவான இந்த உடைக்கு மேட்சாக, ஜிமிக்கியும் கையில் மோதிரங்களும் மட்டுமே அணிந்திருந்தார். சிம்பிள்!


43p1_1529400804.jpg

`நடிகையர் திலகம்’ படத்தில் சாவித்திரியாக வாழ்ந்த கீர்த்தி சுரேஷின் ஆடைகளை வடிவமைக்க சுமார் ஒரு வருடம் ஆனதாம். மொத்தம் 110 ஆடைகளை ஹைதராபாத்தைச் சேர்ந்த ஆடை வடிவமைப்பாளர் கவுரங் ஷா, 200 உள்ளூர் கைவினைஞர்களைக்கொண்டு முற்றிலும் கைத்தறியால் உருவாக்கினார்.


46p1_1529400825.jpg

ரீனா கபூர், சோனம் கபூர், ஸ்வரா பாஸ்கர் ஆகியோர் இணைந்து நடித்துள்ள `வீரே டி வெட்டிங்’ திரைப்படத்தில் வரும் அனைத்து ஆடைகளும் புது ரகம். 2001-ம் ஆண்டு வெளிவந்த `தேவதாஸ்’ படத்தில் ஆடை வடிவமைப்புக்காக தேசிய விருது தட்டிச்சென்ற ரியா கபூர், சந்தீப் கோஸ்லா கைவண்ணத்தில் உருவான இந்த ஆடைகள்தான், இப்போது `டாக் ஆஃப் தி பாலிவுட்’. நிச்சயம் இது வித்தியாசத்தை விரும்பும் மணப்பெண்ணுக்கானது!


75p1_1529400871.jpg

குறுகிய தோள்பட்டை, அகன்ற இடை கொண்டிருப்பவர்கள் `பியர்’ (Pear) உடலமைப்புக்கொண்டிருப்பவர்கள். இவர்கள், உடலை ஒட்டியிருக்கும் உடைகளைத் தவிர்ப்பது நல்லது. கழுத்துப் பகுதியில் அதிக வேலைப்பாடுகள் நிறைந்த உடைகள் இவர்களுக்கு மிகப் பொருத்தமாக இருக்கும். சிம்பிளா சொல்லணும்னா, இலியானாவோட ஸ்டைலைப் பின்பற்றினாலே ஸ்டைலிஷ் லுக் நிச்சயம்!

https://www.vikatan.com/

Link to comment
Share on other sites

விஜய், கொண்டாட்டங்கள் நிறைந்த கம்ப்ளீட் பேக்கேஜ்..! #HBDVijay

 
 
விஜய், கொண்டாட்டங்கள் நிறைந்த கம்ப்ளீட் பேக்கேஜ்..! #HBDVijay
 

பண்டிகைகள் பல இருந்தாலும், ஏனோ தீபாவளி மட்டும் இன்னும் கொஞ்சம் ஸ்பெஷல். புதுமையின் வாசம் கமழும் வண்ணப் புத்தாடைகள், தெருவெங்கும் நெருப்பு மலர் பூக்கும் மத்தாப்புகள், உண்ண ருசிமிகு பண்டங்கள், பார்க்க புதுரிலீஸ் படங்கள் எனக் கொண்டாட்டங்களுக்கு அளவுகோலே அல்லாத பண்டிகை அது. அப்படியான ஒரு வண்ணமிகு தீபாவளிதான் விஜய்யும் எனக்கு. நடிகர்கள் எத்தனையோ பேர் இருந்தாலும், ஏனோ விஜய் மட்டும் இன்னும் கொஞ்சம் ஸ்பெஷல்! ஏன் ஸ்பெஷல்? நடிப்பு, நடனம், நகைச்சுவை, ஆக்‌ஷன், காதல், வசன உச்சரிப்பு, ஸ்க்ரீன் ப்ரெஸன்ஸ், பெரும் ரசிகர் கூட்டம் என ஒரு மாஸ் ஹீரோவுக்கு இருக்க வேண்டிய பத்துப் பொருத்தங்களும் இன்றைய தேதியில் பக்காவாய் அமையப்பெற்ற ஒரே நடிகர், கொண்டாட்டங்கள் நிறைந்த கம்ப்ளீட் பேக்கேஜ் அவர். தளபதி, கொண்டாடித் தீராத தீபாவளி!

விஜய்

நடனம், விஜய்யின் முக்கிய அடையாளம். சுறுசுறுவென சங்குச்சக்கரம் போல் அவ்வளவு எனர்ஜியாக ஆடுவார். `எவ்வளவு கடினமான நடனசைவாக இருந்தாலும் முகத்தில் புன்னகை மாறாமல் நளினமாக ஆடுபவர்' என்பது வார்த்தை மாறாமல் எல்லா கொரியோகிராஃபர்களும் சூட்டும் புகழாரம். `ஆல்தோட்ட பூபதி' பாடல் விஜய்யின் நடனத்திற்காக அதிகம் பேசப்பட்டது. அதன்பிறகு, அவரது நடனம் `சிவகாசி' படத்தில் அடுத்த கட்ட பரிணாமம் அடையத் தொடங்கி, `அழகிய தமிழ் மகன்' படத்தில் முழுமையடைந்தது. `எல்லாப் புகழும் இறைவன் ஒருவனுக்கே...' பாடலில் விஜய் போட்ட மூட்டி மூவ்மென்ட் எல்லோருக்குமே ஆச்சர்யம். அதுதான், அடுத்தடுத்த படங்களில் விஜய் நடனத்தில் புதிதாய் என்ன செய்திருக்கிறாரென ஆவலை ஏற்படுத்திக் காத்திருக்க வைக்க தொடங்கியது. `குருவி', `வில்லு', `வேட்டைக்காரன்' மற்றும் `சுறா'. இந்த நான்கு படங்களும் விஜய்யை நடனத்தில் வேறோர் உயரத்துக்கு ஜிவ்வென அழைத்துச் சென்றது. சமீபத்தில், `மெர்சல் அரசன்' பாடலில் கூட தியேட்டர் தெறிக்க, சுழட்டி பிகிலடிக்கச் சுற்றி சுற்றி ஆடி கெத்துக் கிளப்பியிருப்பார் மெர்சல் அரசன்!

 

 

விஜய் அப்படியொன்றும் பேரழகு கிடையாது. அஜித், அப்பாஸ், அரவிந்த்சாமி வகையறா கிடையாது. ஆனால், எப்போதும் தண்ணி அடித்தமாதிரி ஒருவித கிரக்கத்திலேயே இருக்கும் கண்கள், எல்லாம் செய்துவிட்டு எதுவுமே செய்யாது இருப்பதுபோல் தெரியும் அப்பாவியான முகம், வாயைத் திறக்காமலேயே பேசும் அந்த ஸ்டைல், நான்கு நாள்கள் ஷேவ் பண்ணாத தாடி... அவ்வளவு க்யூட்டாக இருப்பார். `சச்சின்' படத்தில் விஜய் நக்கலாய் சிரிக்கும் போதெல்லாம் ஏனோ நமக்கும் மென்சிரிப்பு தோன்றும். `காதல் சொல்வது உதடுகள் அல்ல' பாடலின் இறுதியில், மஞ்சள் நிற பூக்களுக்கு நடுவே நின்று சிறிதாய் புன்னகையிட்டு நகர்வார். அந்த ஃப்ரேம் அம்மாடியோவ் கொள்ளையழகு. `ஷாஜகானி'ல் பார்த்த விஜய்க்கும் `சர்காரி'ல் பார்க்கும் விஜய்க்கும் குறைந்தபட்சம் ஆறு வித்தியாசம் கூட இல்லை. இளையதளபதி, பெயருக்கேற்றார்போல் என்றும் இளமையான தளபதி. 

விஜய்

ஆக்‌ஷன் படமென்று வந்துவிட்டால் அடியும் உதையும் கலந்து வைத்து தலைவாழை விருந்து வைப்பதுதான் தளபதியின் ஸ்டைல். பேச்சு மட்டும்தான் சைலன்டா இருக்கும். ஆனால், அடி ஒவ்வொன்றும் சரவெடி! `துப்பாக்கி' படத்தில் தீவிரவாதிகளின் குடவுனுக்குள் ஒற்றை ஆளாய் நுழைந்து, ட்யூப் லைட்டை கழட்டி அடித்துவெளுக்கும் காட்சி ஒன்றுபோதும் உதாரணத்துக்கு. `போக்கிரி' படத்தில்வரும் சண்டைக் காட்சிகளில் எல்லாம் ரத்தம் தெறிக்கும். பார்க்கும் நமக்கு வலிக்கும்! `கத்தி' காயின் ஃபைட்டாய் இருக்கட்டும், அணிந்த கூலிங் க்ளாஸ் கழண்டு விழாமல் அடியாட்களை புரட்டி எடுக்கும் `தெறி' ப்ராட்வே ஃபைட்டாய் இருக்கட்டும், எல்லாம் எத்தனைமுறை பார்த்தாலும் சலிக்காத 1000 வலா சரவெடி!  ஆக்‌ஷன் மத்தாப்பு கொளுத்தும் அதேவேளையில் காதல் ரோஜாப்பூ நீட்டுவதிலும் விஜய் தெறிபேபி. ஆரம்பகாலத்தில், லவ் அண்டு லவ் ஒன்லியென `காதலுக்கு மரியாதை', `துள்ளாத மனமும் துள்ளும்' என வலம் வந்தவர், `திருமலை'க்குப் பிறகு முழுநேர மாஸ் ஹீரோவானார். ஆனாலும், `சச்சின்', `காவலன்', `தெறி' போன்ற படங்களில் அந்தப் பழைய லவ்வர் பாய் விஜய்யை அதே உயிர்ப்போடு காணமுடியும். வாழ்க்கை என்பது ஒரு வட்டம்தானே!

எல்லாம் ஓகே. ஆல் ஏரியாவிலும் விஜய் கில்லிதான்! ஆனால், தன் படங்களில் நடிப்புக்குப் பெரும் முக்கியத்துவம் கொடுப்பதில்லை எனும் குற்றசாட்டை பலர் வைப்பதுண்டு. இது கொஞ்சம் உண்மைதான். ஆனால், கொஞ்சம்தான் உண்மை. தமிழ் சினிமாவில் தயாரிப்பாளர்களுக்கும் விநியோஸ்தர்களுக்கும் லாபம் ஈட்டித் தொரும் மிகச் சில நடிகர்களில் முதன்மையானவர் விஜய். தமிழ்த் திரையுலகின் வணிக இயந்திரத்தில் அவர் முக்கியமானதொரு சக்கரம். அந்தச் சக்கரம் சீராகச் சுற்ற, அவர் `இளைய தளபதி'யாகவும் `தளபதி'யாகவுமே இருக்கவேண்டியதாய் இருக்கிறது. திரையில் முற்றிலும் வேறொரு விஜய்யைப் பார்க்க திரையுலகமே முதலில் தயாராக இல்லை. முற்றிலும் புதிதான, சவாலான கதாபாத்திரங்களில் நடிக்க விஜய் தயங்குவதற்கான காரணம் இதுதான். அந்தக் குற்றச்சாட்டிலுள்ள கொஞ்சம் உண்மை இது மட்டும்தான். உண்மையில், விஜய் முற்றிலும் வேறோர் ஆளாக மாறி நடிப்பதில்லை. ஆனால், அதற்கு விஜய் முயற்சி செய்யாமலும் இருந்ததில்லை என்பதுதான் பாயின்ட். 

 

 

விஜய்

இத்தனைகால உழைப்பின் பயனாய் அடைந்த மாஸ் ஹீரோ எனும் பெரும் பிம்பத்தை அவரே ஆங்காங்கே அணுகுண்டு வைத்து உடைக்க முற்பட்டிருக்கிறார். `கில்லி', `மதுர', `திருப்பாச்சி' என மூன்று மாஸ் கமர்ஷியல் ப்ளாக்பஸ்டர்கள் கொடுத்தபிறகு, `சச்சின்' எனும் ரோம்-காம் படத்தில் நடித்தார். மாஸ், ஆக்‌ஷன் எல்லாத்தையும் கொஞ்சம் தூரம் தள்ளிவைத்து, அவ்வளவு க்யூட்டான நடிப்பை வெளிபடுத்தியிருப்பார். `துப்பாக்கி',`கத்தி',`மெர்சல்',`தெறி' போன்ற படங்களிலும் விஜய்க்குள் இருக்கும் திறமையான நடிகரை உணரமுடியும். விஜய்யிடம் செல்ஃப் ட்ரோலிங் எனும் விஷயத்தையும் அதிகமாய் காணலாம். `தெறி' படத்தில் குள்ளமான தோற்றத்தில் தோன்றியது, `வேலாயுதம்' படத்தில் வரும் டீக்கடைக் காட்சி, `சின்னத்தாமரை' பாடலில் அனுஷ்கா மோதி கீழே விழுவதென நிறைய உதாரணங்கள் அடுக்கிக்கொண்டே போகலாம். `புலி' படத்தில் வில்லனின் காலைப் பிடித்து மன்றாடுவதாகட்டும், `காவலன்' படத்தில் அசினிடம் பேசிக்கொண்டே போய் தவறி விழுவதாகட்டும் கதைக்கு என்ன தேவையோ, அதைச் செய்ய விஜய் தயங்கியதில்லை. ரசிகர்களுக்கு என்ன தேவையோ அதைச் செய்யவும் தயங்கியதில்லை. இந்தத் தீபாவளியும் அதற்கு இன்னொரு சான்றாய் அமையும்... நம்புவோம் நண்பா! ஹேப்பி தீபாவளி

https://cinema.vikatan.com

Link to comment
Share on other sites

சுவீகாரப் புதல்வனை வரவேற்க…
 

image_644f506d28.jpgஸொப்பிங் பைக்குள் புத்தகங்கள் கொப்பிகளுடன், அரை மயக்க நிலையில், சின்னப் பையன் பாடசாலை சென்று கொண்டிருந்தான். அவனுடைய தோற்றம் வறுமையைப் பிரதிபலித்தது. பாடசாலையை அண்மித்ததும் அவன் மயங்கி விழுந்தான்.

மாணவர்களும் ஆசிரியர்களும் அவனருகில் குவிந்தனர். அவன் நிலை உணர்ந்த ஆசிரியர் ஒருவர், பக்கத்தில் நின்ற மாணவத் தலைவனிடம் காசைக் கொடுத்து, தேநீரும் பணிஸும் வாங்கிவர அனுப்பினார். 

அந்த ஏழை மாணவன் மயங்கி விழுவது முதல்முறையல்ல; அந்த மாணவனின் வாடிய தோற்றத்தைத் பார்த்தார் ஆசிரியர்; சிந்தித்தார். 

வறுமைக்குப் பசி நட்பு; வயிற்றில் உஷ்ணம். இவைதான் ஏழ்மையின் வடிவங்கள். உணர்ந்தவர் முடிவெடுத்தார். குழந்தையில்லாத தனது மனைவிக்குச் செய்தியொன்றைத் தெரிவித்தார். மாணவனும் தனது தாயுடன் தொடர்பு கொண்டான். 

அடுத்த நாள், அந்த ஏழை மாணவனைத் தனது தோளில் சுமந்தபடி, ஆசிரியர் தனது ஊருக்குச் சென்றார். சுவீகாரப் புதல்வனை வரவேற்க, ஆசிரியரின் மனைவி குதூகலத்துடன் காத்திருந்தாள்.

Link to comment
Share on other sites

சின்ன சின்ன வரலாறு : பூட்டு

 
 
lockjpg

"ஒரு நிமிஷம்... கதவு சரியா பூட்டியிருக்கேனான்னு செக் பண்ணிட்டு வந்துடுறேன்’’ என்று வீட்டை விட்டுக் கிளம்பும்போது நாம் சொல்லும் அல்லது யோசிக்கும் விஷயம் இதுவாகத்தான் இருக்கும்.

இதற்கான அடிப்படைக் காரணம் "எனது பொருள்".

 

அதாவது, நான் , எனது, என் வீடு எனும் எண்ணம் தோன்றத் தொடங்கிய நாளிலிருந்து இந்த பூட்டுக்கான தேவையும் தொடங்கிவிட்டது.

நம் பொருளையும் வீட்டையும் பாதுகாக்கிற பூட்டு பற்றிய வரலாறு, தெரியவேண்டாமா நமக்கு?

பூட்டுச்சாவியின் வளர்ச்சியின் ஆரம்பப் புள்ளி ஒரு முடிச்சு. அதாவது பொருள்களை பாதுகாக்க கயிறு அல்லது அதைப்போன்ற ஒரு கட்டுமான பொருள் கொண்டு அவற்றைக் கட்டிவைக்கத்தொடங்கினார்கள். இது எந்த வகையில் பாதுகாப்பு என்பதைப்பார்த்தால், நம் பொருள் களவாடப்பட்டிருக்கிறதா என்பதை காட்டிக்கொடுக்க மட்டுமே இது உபயோகப்பட்டது. இதன் ஜுஜுபித்தனம் புரிய ஆரம்பித்ததும், பாதுகாப்பிற்கான தேடல் தொடங்கியது.

வரலாற்றில் யார் எப்போது என்ற விவரங்கள் தெரியவில்லை. முதலில் சொன்னதுபோல் மனிதன் தன் பொருள் என்று பிரித்துப்பார்க்கத்தொடங்கிய ஏதோ ஒரு காலத்திலேயே பூட்டின் வடிவம் ஜனிக்கத்தொடங்கி இருக்க வேண்டும். வரலாற்று ஏடுகளில் முதல் பூட்டுச்சாவி, அந்தக்கால மெசபடோமியா ராஜ்ஜியத்தின் ஒரு நகரான அஸ்ஸிரியாவில் கி.மு. 4000 லேயே உபயோகத்திலிருந்ததாகச் சொல்லப்படுகிறது.

ஆனால் இயந்திர பூட்டுக்களைச்செய்யத்தொடங்கிய கலாச்சாரம் எது என்று தெரியாததால் , எகிப்து, கிரேக்கம் மற்றும் ரோமாபுரியில் ஒரே சமகாலத்தில் வேறு வேறு விதமான பூட்டுக்கள் செய்யத்தொடங்கப்பட்டிருக்கலாம் என்று நம்பப்படுகிறது.

பதிவு செய்யப்பட்ட முதல் வகை பின் லாக் எனும் வகை பூட்டு , ஆறாயிரம் வருடங்களுக்கு முன் எகிப்திய நாடுகளில் கட்டையால் செய்யப்பட்டது.இவை மரக்கதவுகளில் பொருத்தப்பட்டிருந்தது. இதற்கான சாவி நம் டூத்ப்ரஷ் போன்ற வடிவுகொண்டு , மரத்தினால் செய்யப்பட்டிருந்தது. பூட்டின் வெவ்வேறு ஓட்டைகளில் பொருத்தப்படும்போது, உள்ளே பொருத்தப்பட்ட பின்கள் விலகி, தாழ்ப்பாளை நாம் திறக்க இயலும்.

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் கிரேக்கர்களாலும், ருமேனியர்களாலும் இந்தப் பின் லாக் பூட்டுக்கள் கொஞ்சம்கொஞ்சமாக புதிய உருவம் எடுக்கத்தொடங்கின.

கிரேக்கர்களின் பூட்டு பாதுகாப்புக் குறைவாக கருதப்பட்டது. இதனால் ருமேனியர்கள் உலோகங்களினால் பூட்டுக்கள் செய்யத்தொடங்கினார்கள். இங்கே நாம் கவனிக்க வேண்டிய ஒரு முக்கிய விஷயம், பூட்டை பொருளின் பாதுகாப்பிற்காகக் கண்டுபிடித்த ருமேனியர்கள் , அதன் சாவியையும் பாதுகாக்க வழி கண்டுபிடித்தார்கள். கைகளிலேயே அணிந்து கொள்ளும் விதமாகச் சாவி வடிவமைக்கப்பட்டு, பொருட்களின் பாதுகாப்பை இரட்டிப்பாக்கினார்கள்.

அட, நாம் ஆன் லைன் பாங்கிங் செய்யும்போது வரும் டபுள் லெவல் செக்கிங் போலத்தான்!

முதலாம் நூற்றாண்டில் ரோம சாம்ராஜ்ஜியம் வீழ்ச்சி அடைந்தபின் பூட்டின் வளர்ச்சிக்கு ஒரு பெரிய பூட்டாகப்போடப்பட்டது. பணப்பற்றாக்குறை மற்றும் தொழில் நுட்ப பற்றாக்குறை என்று பல காரணங்கள். ஆகவே இருக்கும் மாதிரி பூட்டுக்களையே சிக்கலாக்கி, ஒரு சாவியை விட்டுப் பல சாவிகள் கொண்டு திறக்க, கண்களுக்குத்தெரியாத கீஹோல்கள் என்று சிறிய மாற்றங்களே காணப்பட்டன.

பதினெட்டாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் பூட்டுக்களின் புதிய வளர்ச்சி ஆரம்பமானது. ராபர்ட் பரோனின் 1778 ம் வருடம் கண்டுபிடித்த டபுள் ஆக்டிங் டம்ப்ளர் லாக், 1784 ம் வருடம் ஜோசப் ப்ரம்மைய்யாவின் ப்ரமாஹ் பூட்டு, 1818 ம் ஆண்டு ஜெர்மையாவின் சப் பூட்டுக்கள், 1848ல் லினெஸ் ஏலின் பின் டம்ப்ளர் பூட்டு, 1857 ல் ஜேம்ஸ் சர்ஜெண்டின் தானே பூட்டிக்கொள்ளும் பூட்டு, 1916ல் சாம்வேல் சேகலின் ஜெமி ப்ரூஃப் பூட்டு, 1924ல் ஹாரி சோரெஃப்பின் முதல் பாட்லாக்.....

ஆனால் யார் கண்டது... இன்னும் ஒரு நூறு வருடங்களுக்குப்பின் இந்த வகை பூட்டுக்கள் வழக்கொழிந்து போகலாம். இயந்திர வகையிலிருந்து தற்போது மின்னணுவிற்கு பூட்டின் தன்மை மாறுபடத்தொடங்கி உள்ளது.

ஸ்மார்ட் கார்டுகள் கொண்டு , சிரி கொண்டு, அலெக்சா கொண்டு ஒரு வாய்ச் சொல்லிலேயே கதவைத் திறக்க முடிகிறது. ஃபேஸ் ரெகக்னுஷன் பழக்கத்திற்கு வந்துவிட்டது. ஆக என் கையில் சாவி என்பது மாறிப்போக நாமே சாவியாக மாறிவிட்டால் இந்தப் பூட்டு சாவிக்கான தேவை இல்லாமல் போய்விடும்.

இதுவரையில் பூட்டுக்கள் வைத்து நடத்தப்பட்ட போட்டிகளைப்பார்ப்போம்.

சொத்தைப் பாதுகாக்க எனும் நோக்கத்தால் தயாரிக்கப்பட்டதால், எப்போதுமே பூட்டுக்களின் தரத்தை நிர்ணயிக்கப் போட்டிகள் வைக்கப்பட்டுள்ளது. 1818ல் வைக்கப்பட்ட ஒரு போட்டியில் ஒரு கைதேர்ந்த பூட்டை உடைப்பவர் மூன்று மாதம் மிககஷ்டப்பட்டு உடைக்க நினைத்த சப் டிடெக்டர் பூட்டு உடைக்கமுடியாமல் போனதால், இதை வடிவமைத்த ஜெர்மியா சப்பிற்கு நூறு டாலர்கள் பரிசளிக்கப்பட்டன.

1784 ல் ப்ரமா லாக் கம்பெனியால் தயாரிக்கப்பட்ட சாலெஞ் லாக் லண்டன் பிகடெலியில் 67 வருடங்கள் காட்சிப்பொருளாக வைக்கப்பட்டு, பின் ஆல்பிரட் சார்ல்ஸ் ஹாப் என்பவரால் 16 நாட்கள் 51 மணி நேர உழைப்பிற்குப் பின்னர் திறக்கப்பட்டு அதற்கான பரிசான 200 டாலர்கள் வழங்கப்பட்டன.

இந்தியாவைப்பொருத்தவரையில் பூட்டு என்று சொன்னால் நம் நினைவில் வருவது அலிகார் பூட்டுக்கள் மற்றும் திண்டுக்கல் பூட்டுக்கள்.அலிகார் பூட்டுக்கள் புதிர் பூட்டுக்கள், அலங்காரப்பூட்டுக்கள், கைவிலங்கு பூட்டு, பொய் திறப்புக்கள் கொண்டவை என்று பல வகையில் தயாரிக்கப்பட்டன. மிக அதிக அளவில் இவை ஏற்றுமதியும் செய்யப்பட்டன.

பூட்டு பற்றி சொல்லும்போது சாவி பற்றியும் சொல்லியாகவேண்டும். செட்டிநாட்டுப் பகுதிகளில், இன்றைக்கும் பல வீடுகளில், கதவுடன் கொண்ட பூட்டு பொருத்தப்பட்டிருக்கும். அதன் சாவியைப் பார்த்திருக்கிறீர்களா? ஒரு உள்ளங்கை நீளத்தை விட பெரிதாகவே இருக்கும். தவிர, அந்தச் சாவி கனமாகவும் இருக்கும்.

திண்டுக்கல்லில் இருந்து வந்த மங்கோ பூட்டுக்கள் அவற்றுடன் நம் வாழ் நாள் முழுவதும் அவை இருக்கும் என்ற டேக்குடன் வந்தன.

திண்டுக்கல் பூட்டுக்கள் கைகளால் செய்யப்பட்டவை. அலிகார் பூட்டுக்கள் இயந்திரங்களால் செய்யப்பட்டவை. அதனால் திண்டுக்கல் பூட்டுக்களின் விலை அலிகார் பூட்டைவிட இரண்டு மடங்கு அதிகம்.இரும்பினால் செய்யப்பட்டு பின் நிக்கல் அல்லது க்ரோமியம் கொண்டு இவை பூசப்பட்டன.ஒரு காலத்தில் இவை அரசாங்க தேவைகளுக்கு உபயோகப்படுத்தப்பட்டன.

இங்கே பேலன்ஸ்டைன் நாட்டைப்பற்றி ஒன்று சொல்லவேண்டும். 1948 ல் நடந்த ஒரு போரில் பாலஸ்தீனர்கள் அகதிகளாக நாட்டை விட்டு துரத்தப்பட்டார்கள். அப்போது, அவர்களின் வீட்டின் சாவியை பத்திரமாக கைகளில் எடுத்துக்கொண்டு சென்றார்களாம். என்றாவது திரும்பி வந்தால் உபயோகப்படும் என்று. அவை தற்போது அவர்களின் வாரிசுகளின் கைகளில் வழிவழிச்சொத்தாக இன்றும் பாதுகாக்கப்படுகிறதாம்.

யார் கண்டது , இனி வரும் காலங்களில் பூட்டுச்சாவிகள் வழக்கொழிந்து சென்றபின் நாமும் நம் கைகளில் நம் வீட்டுச்சாவி அல்லது பீரோ சாவியை நம் சொத்தாக பாதுகாக்கக்கூடும்.

பொருட்களைப் பாதுகாக்க, வீட்டையே பாதுகாக்க எத்தனை நவீனமான பூட்டுகள் வந்தாலும் போனாலும், ’அவனுக்கு ஒரு வாய்ப்பூட்டு போட்டா தேவலை’ என்று சொல்வது, தொடர்ந்துகொண்டே இருக்கும் போல!

பொருளை எப்படியேனும் காபந்துபண்ணிவிடலாம். நம் சொற்களை காபந்து பண்ண பூட்டு தேவை... வாய்ப்பூட்டு தேவை!

http://tamil.thehindu.com

Link to comment
Share on other sites

வலைபாயுதே

 

www.facebook.com/karthikeyan.maddy

எடப்பாடி அங்கிள் நீங்க என்ன பண்றீங்க, சென்னையில ஒரு நாள் 144 போட்டுட்டு ஒரு டூ வீலரை எடுத்துக்கங்க. நூல் புடிச்சாமாதிரி... நேரா ஓட்டணும். போற வழியில குண்டுகுழி இருக்குன்னு ஹேண்ட்பாரைத் திருப்பாம போகணும். அப்படிமட்டும் சென்னையை ஒரு ரவுண்டு சுத்திட்டு வந்துருங்க. பாப்போம். இதுல 82வழி ரோடு போடுறாங்களாமாம்...!

twitter.com/sendil__

செய்தி: மக்களின் உடல்நலன் கருதி தமிழகத்தில் எலக்ட்ரானிக் சிகரெட்டுகளுக்குத் தடை - அமைச்சர் விஜயபாஸ்கர்.

சாதா சிகரெட் உடல்நலனுக்கு நல்லது போல, இத்தன நாளா  இது தெரியாமப்போச்சே!

106p1_1529410556.jpg

twitter.com/BlackLightOfl

இளைஞர்கள் இருக்கும் வீட்டில் ‘நைட் வாட்ச்மேன்’கள் தேவையில்லாத ஆணிதான்.எவனும் தூங்க மாட்டேங்குறான். நைட் ஃபுல்லா மொபைல்தான்!

twitter.com/manipmp

ஒருமைக்கண் ஒரு சிக்னலில் மாட்டினால், அவன் தொடர் ஏழு சிக்னலிலும் சிக்குவான்! #டிசைன்

twitter.com/mohanramko

மாதக்கடைசியில் ‘பிட்னஸ் சேலஞ்ச்’க்கு சவால் விடுகின்றன மணிபர்ஸ்கள்.

twitter.com/Thaadikkaran

தேவைப்படும், தேவைப்படும்னு எல்லாத்தையும் எடுத்து வச்சு, கடைசில பார்த்தா எல்லாம் குப்பையாதான் தெரியுது..!

twitter.com/BlackLightOfl

8 வழிச் சாலையை எதிர்ப்பவர்கள் துரோகிகள் #பொன்னார். நாட்டில் இப்போதைய கணக்கெடுப்பு இப்படி இருக்கிறது #ஆன்டி_இந்தியன்ஸ் #சமூக_விரோதிகள் #நக்சலைட்_கும்பல் #துரோகிகள் மட்டும்தான். மக்களே இல்லை போல!

twitter.com/Kozhiyaar

சாக்லெட், ஐஸ்கிரீமுக்கான முத்தத்தில் அழுத்தம் சிறிது அதிகமாக இருக்கும் என்று அப்பாக்களுக்கு நன்கு தெரியும்!

twitter.com/meenammakayal

மூன்றாவது நபரைப் பற்றிப் பேசிக்கொள்ளாமல்  எவ்வளவு நேரம் உங்களால் பேச முடிகிறதோ அதுவே உரையாடல்... மிச்சதெல்லாம் நேரவிரயம்.

twitter.com/Raittuvidu

நைட் வீட்ல நுழையுறப்ப “என்னடா இன்னுமா நீ தூங்கல?”ன்னு உயரதிர்வுல ஒரு கர்ஜனை கொடுத்துக்கிட்டே நுழைவார் அப்பா. விவரம் தெரியுறவரை நம்ம மேல இவ்ளோ பாசமான்னு நெனைச்சுதான் புளகாங்கிதமடைஞ்சேன்! யோவ் டேடி!

106p2_1529410573.jpg

www.facebook.com/bharathiarockiaraj

டெல்லியில் அறிவிக்கப்படாத குடியரசுத் தலைவர் ஆட்சி.- டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் குற்றச்சாட்டு.

சும்மா போவீங்களா! அறிவிக்கப்படாத ‘துணை வட்டாட்சியர்’ ஆட்சி நடைபெறும் தமிழகமே சும்மா இருக்கும்போது உங்களுக்கு மட்டும் என்ன?

www.facebook.com/karthekarna

பிக்பாஸ் வீட்ல இருக்கிற வாட்டர்கேன் நல்லாருக்கில்ல, பாப்பாக்கு அப்டி ஒண்ணு வாங்குங்க.

#வீட்ல

www.facebook.com/Sriramsathiyamoorthy2690

இது வாசல், கோலம் போடலாம்.

இது கிச்சன், சமைக்கலாம்...

அப்பறம் ஆண்டவரே... இது ஸ்மோக்கிங் ரூம் #மருத்துவ_முத்தம் கொடுக்கலாம் அதானே?!

www.facebook.com/subbusamayan

இங்கே எல்லோரும் ஒரே மாதிரி யோசிக்குற விஷயம் என்ன தெரியுமா..? `நம்மளத் தவிர இங்கே எல்லோரும் சந்தோஷமா இருக்கானுங்க’ என்பதுதான்.

www.facebook.com/hari.lifeisfun

காலைல பார்க்ல வாக்கிங் போகும் போது பார்ப்பேன், சில பேர் கையை மேல தூக்கி ஆட்டிக்கிட்டே ஓடறது, போர் விமானம் மாதிரி இரண்டு சைடுலயும் கையை திடீர்னு நீட்றது, பின்னாலயே நடக்கிறது, சைடு வாங்கினாப்ல நடக்கிறது, stretches பண்றேனு நீபா வைரஸ் வவ்வாலாட்டம் கம்பியில தொங்கறது.. Hand wheel பிடிச்சு அஜித் லாரியோட்ற மாதிரி விசுக் விசுக்குனு திருப்பிட்டு கெத்து பார்வை பார்க்கிறது,யோகா பண்றேனு எசகுபிசகா வேட்டிய கிழிச்சுக்கிறது, அறுகம்புல் ஜூஸ் விக்கிறவர்கிட்ட, ஆன்டி ஆக்ஸிடன்ஸ்னா என்னன்னு தெரியாதானு பீலா வுட்டு அஞ்சு ரூபா குறைச்சுக் கேக்கிறதுனு, சில ஃபிட்னஸ் பைத்தியங்கள் அலப்பறை சொல்லி மாளாது.. ஆனா சொல்லி வெச்ச மாதிரி இப்பெல்லாம் அத்தனை பேரும் அமைதியா வாக்கிங் போறான். ஒரு துளி அலப்பறை இல்லை...

எல்லாம் தலைவன் செய்த மாயம்.

106p3_1529410589.jpg

www.facebook.com/RedManoRed

எத்தன கி.மீ தூரம்?

கி.மீ கணக்கெல்லாம் தெரியாது. ராஜா சார் பாட்டு நாலஞ்சு ஓடணும்.

www.facebook.com/iam.suriyaraj

ஃபுட்பால் வேர்ல்டு கப் பத்திப் பேச ஆரம்பிச்சதும் மெஸ்ஸி, ரொனால்டோனு மேட்ச் பண்ணிட்டு இருந்தேன்... கடைசியா, ‘இந்த வேர்ல்டு கப் நிச்சயம் பார்சிலோனாவுக்குத் தான்’னு உளறப்போய் ரொம்ப அசிங்கமாகிடுச்சு குமாரு...

www.facebook.com/srini dhoni

அம்மா: யாருடா இந்த யாஷிகா ஆனந்த், எந்தப் படத்துல நடிச்சிருக்கா?

அண்ணன்:  சொல்லுடா, நீதான் தெகிரியமான ஆளாச்சே, சொல்லு.

www.facebook.com /Vijaya Lakshmi

சேகர் சார் நடிச்ச படங்கள் ஐம்பது நாள் ஓடிய காலம் போய், இப்போ அவரே ஐம்பதாவது நாளா ஓடிட்டிருக்கார்...

www.facebook.com/Santhosh Narayanan

டெக்னாலஜி எவ்வளவோ முன்னேறிடிச்சு. ஆனால் இன்னும் புக்குக்கு அட்டை போடச்சொல்கிற இந்தப் பாசிசக் கல்வி அமைப்பை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்.

www.facebook.com/ Sathya Subramani

இளையராஜா இல்லாட்டி fm-ல வேலை இல்ல. வடிவேலு இல்லாட்டி ஃபேஸ்புக்ல வேலை இல்ல.

www.facebook.com/ டி.வி.எஸ். சோமு

பலவிதமாக பிரபாகரன் துப்பாக்கி சுட தனக்குக் கற்றுத்தந்ததாக சீமான் கூறுகிறார். அப்படியே இருக்கட்டும்.யாரைச் சுடுவதற்காகக் கற்றுக் கொடுத்திருப்பார்? அவர்களில் யார் யாரை இதுவரை சீமான் சுட்டிருக்கிறார்?

106p4_1529410605.jpg

www.facebook.com/ஜெ.வி. பிரவீன்குமார்

பேருந்தில் இளையராஜா பாடல்கள். பேருந்துக்குள் உள்ள அத்தனை பெண்களும் அழகாகத் தெரிகிறார்கள்.

www.facebook.com/Aadhavan Dheetchanya

முதலில் தோசைக்கல்லைச் சூடேற்ற வேண்டும். பிறகு தேவையான சைஸ் கப்பலை அதன்மீது கவிழ்த்து வேகவிட வேண்டும். சுட்ட கப்பல் ரெடி.

www.facebook.com/ரஹீம் கஸாலி

பிரியாணியில போடும் பத்து கிராம் ஏலக்காய்ல நாலு ஏலக்காய்கூட நமக்கு வந்திடுது. ஆனால், ஒரு கிலோ மட்டன் போட்டாலும் ஒரு பீஸ் கண்ணுல சிக்க மாட்டேங்குது.

www.facebook.com/Vediyappan M Munusamy

நான் : நாலுமுறை பெல்லடிச்சாதான் கதவைத் திறப்பீங்களா மேடம்?

இலக்கியா (தம்பியோட பொண்ணு ) : ஹோம் ஒர்க் பண்ணுனோம் பெரிப்பா, கையெல்லாம் வலி. அதான் வடை சாப்பிட்டிட்டிருந்தோம்.

-கேள்விக்கும் பதிலுக்கும் ஏதாவது சம்பந்தம் இருக்கா பாருங்க.

www.facebook.com/மேகவண்ணன் புதியதடம்

கமல் இல்லாமல் நடத்தினால்கூட ஓவியா இல்லாமல் பிக்பாஸ் நடத்த முடியாதுபோல!

www.facebook.com/மணி அமுதன் மா.பா

வாழ்க்கைல ஒரு சரினா இருந்தா பரவால்லை...வாழ்க்கை பூரா சரினாவாவே இருந்தா எத்தன டேட்டு போட்றது நான்லாம்!

https://www.vikatan.com

Link to comment
Share on other sites

``I am not a robot" - நம்மை இப்படித் தினம் தினம் நிரூபிக்க வைத்த ஆலன் டூரிங்கைத் தெரியுமா?

 

கணினிகளே முழுமையாக உருவாக்கப்படாத காலத்தில், நவீன கணினிகளைக் கனவு கண்டு கட்டமைத்தவன், இரண்டாம் உலகப் போரை சில ஆண்டுகள் முன்பாக முடித்து வைத்தவன். யார் இந்த ஆலன் டூரிங்? ஏன் நவீன கணினியியலின் காலத்தில் அவன் முக்கியமானவன்?

``I am not a robot
 

ஜெர்மானியர்கள் போர் தொடர்பாகப் பயன்படுத்திய ரகசிய/குறியீட்டுத் தகவல் பரிமாற்றங்களை பிரிட்டிஷார் கண்டறிந்ததால் மட்டுமே இரண்டாம் உலகப்போர் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே முடிவுக்கு வந்தது எனச் சில போர் வரலாற்றாளர்கள் குறிப்பிடுகிறார்கள்.

ஜெர்மானியர்களின் தாக்குதல் திட்டங்கள், இடங்கள், தாக்குதலுக்கான நேரம் போன்றவற்றை அவர்கள் குறியீடாக்கம் செய்யப்பட்ட தகவல்களாகப் பரிமாறிக்கொள்ள `எனிக்மா’ எனும் கருவியைப் பயன்படுத்தினார்கள். எனிக்மாவில் ஓர் எழுத்தை அழுத்தும் போது அது மேலே வேறு ஓர் எழுத்தாக ஒளிரும். நாம் பரிமாற விரும்பும் தகவலை எனிக்மாவில் உள்ளிடும் போது அந்தத் தகவல் வேறு ஒரு வாக்கியமாக வெளியாகும். தகவலை அனுப்புபவர் இப்படிக் குறியீடாக்கம் செய்த செய்தியை அனுப்பிவிடுவார், இந்தச் செய்தியை வழக்கம்போல எதிரிகளால் இடைமறித்துத் தெரிந்துகொள்ள முடியும். ஆனால், ஒளிந்திருக்கும் அந்தத் தகவலை உடைக்கவே முடியாது. இந்த இயந்திரம் எப்படி இருக்கும், எப்படிச் செயல்படும் என்பதை கீழே உள்ள வீடியோவில் பார்க்கலாம்.

 

 

``BGFCED DS MEJD” என்று அனுப்பப்பட்ட தகவலை, தகவல் பெறுபவரால் மட்டுமே, மிகச்சரியாக ``ATTACK AT DAWN” எனப் புரிந்துகொள்ள முடியும். தகவலை ஒட்டுக்கேட்டவர்களால் கண்டறிய முடியாததற்குக் காரணம், தகவல் அனுப்புபவரும் பெறுபவரும் எனிக்மா இயந்திரத்தில் ஒரே விதமான Algorithm அமைத்திருப்பார்கள், இடைமறித்துக் கேட்பவர்களுக்கு அந்த அல்காரிதம் சரியாகத் தெரிந்திருக்கும் வாய்ப்பு மிகக்குறைவு. (ஏன் என்பதற்கான விடை அடுத்த பத்தியில்). ஒவ்வொரு நாளும் எனிக்மாவில் என்ன அல்காரிதம் என்பது அதிரகசியமான தகவலாக அவர்களுக்குள் முன்பே பரிமாறப்பட்டிருக்கும். அன்றைய தினத்தில் மட்டுமே அன்றைய அமைப்பு தெரியவதும். (டிராஃபிக் போலீஸாரின் குருவி ஜோக் தெரியுமா? அந்த மாதிரி)

 
 
 
 

ஜெர்மானியர்களின் இந்த `எனிக்மா’ உடைக்கவே முடியாத பெர்லின் சுவர் போல கருதப்பட்டது. (பெர்லின் சுவர் காலத்தால் எனிக்மாவுக்குப் பிந்தையது, வாக்கிய அழகுக்காக மட்டுமே இது.) எனிக்மா முதல் பெர்லின் சுவர் வரை ஜெர்மானியர்களின் வலுவானவை உடைக்கப்பட்டதுதானே வரலாறு. இதனை உடைப்பதற்காகவே தனியாக ஒரு துறை, பல துறைசார் வல்லுநர்கள் என ஆங்கிலேயர்கள் பதறியடித்துக்கொண்டிருந்தார்கள்.

எனிக்மாவை மிகச்சுலபமாக உடைக்கும் வழிமுறைகளை செயல்படுத்தியவர்களில் ``ஆலன் டூரிங்” முக்கியமான கணிதவியலாளர். ஆலன் டூரிங்கின் பிறந்த தினம் இன்று. கணிதவியலில் பெரும் புகழ்பெற்றவராக விளங்கிய டூரிங் கணினியியலின் பிதாமகனாக மாறிப்போனார். சில ஆண்டுகளுக்கு முன்பு வெளியான `த இமிடேஷன் கேம்’ (The Imitation Game) திரைப்படத்தில் ஆலன் டூரிங் வாழ்க்கையும் எனிக்மா இயந்திரம் பற்றிய இந்த அத்தியாயமும் இடம்பெற்றிருக்கும்.

 

ஆலன் டூரிங்

ஆலன் டூரிங்

PC:Public domain, via Wikimedia Commons

அறுபத்தெட்டு ஆண்டுகளுக்கு முன்பு `Computing Machinery and Intelligence' என ஓர் ஆய்வுத்தாளை சமர்ப்பிக்கிறார் ``ஆலன் டூரிங்'' (Alan Turing). அந்த ஆய்வுத் தாளில் அவர் ஒரு கேள்வியை முதல் பத்தியில் வைக்கிறார். அந்தக் கேள்விக்கான பதிலை கண் முன்னே பார்க்கும் தலைமுறையைச் சேர்ந்தவர்கள் நாம். அந்தக் கேள்விக்குச் செல்வதற்கு முன்பாக டூரிங் பற்றியும், அவருடைய முக்கியப் பங்களிப்பு பற்றியும் மேலும் சில தகவல்களையும் சுருக்கமாகப் பார்த்துவிடலாம். அந்தளவுக்குப் பொறுமை இல்லை, கேள்வி என்னன்னு சொல்லுன்னு கேட்பவர்களுக்கான ஒரு சின்ன க்ளூ… சமீபத்தில் ஒரு வீடியோவில் உச்சரிக்கப்பட்ட ``mmm… hmm…” என்ற வார்த்த

 

மனிதனை விலங்குகளிலிருந்து வேறுபடுத்துவது உற்பத்தியைத் தரும் உழைப்புதான் என எங்கெல்ஸ் ``மனிதக் குரங்கிலிருந்து மனிதனாக மாறிய இடைநிலைப்படியில் உழைப்பின் பாத்திரம்” (நம்புங்கள் புத்தகத்தின் பெயர் இது. பெயர்தான் நீளம், மிகச்சிறிய புத்தகம் தான்) புத்தகத்தில் குறிப்பிட்டிருப்பார். அப்படி மனிதனின் உழைப்பினால் உருவான உற்பத்தியை விட அதிக உற்பத்திப்பொருள்களைப் பெற இயந்திரங்கள் உதவிக்கு வந்தன, தொழிற்புரட்சி மலர்ந்தது. 

 

மனித இனத்தின் முந்தைய ஆயிரக்கணக்கான ஆண்டுகளின் வளர்ச்சி விகிதத்தைத் தூக்கிச் சாப்பிட்ட வளர்ச்சி அடுத்த 150 ஆண்டுகளில் ஏற்பட்டது. கூடவே, சமூகத்தின் வர்க்க வேறுபாடுகளும் அடுத்தகட்டத்துக்கு நகர்ந்தது. இந்தக் காலகட்டத்தில் மனிதனின் சக்திக்கு மீறிய உழைப்புக்கு அவன் சக்திக்கு மீறிய இயந்திரங்களை இயக்கத்தேவையான ஆற்றலைப் பெறுவதற்கான கருவிகளை உருவாக்கிய முதல் தலைமுறை அறிவியலாளர்கள் ஜேம்ஸ் ஹார்க்ரீவ்தாமஸ் நியூகொமென்ஜேம்ஸ் வாட்ஜார்ஜ் ஸ்டீஃபன்ஸன் (இந்தப் பட்டியல் மிக நீண்டது) போன்ற பெயர்கள் நினைவிருக்கிறதா? ஏழாம் வகுப்பு அறிவியல் புத்தகத்தில் இந்தப் பெயர்களைப் படித்த நினைவிருக்கலாம்.

 

 

 

முதலாம் தொழிற்புரட்சிக்குப் பிறகு மிகப்பெரிய அடுத்தகட்ட பாய்ச்சலுக்கு வித்திட்ட நவீன கணினியியல் துறையின் வளர்ச்சிக்கு வித்திட்ட முன்னோடிகளில் ஒருவர் ஆலன் டூரிங். நவீன கணினியியலின் உன்னதங்கள் புலப்படத் தொடங்கும் காலகட்டத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இந்த நவீன கணினிகளின் ஆரம்பகட்டத்திலேயே, அதாவது கணினிகளின் தொடக்க காலத்திலேயே நாம் இப்போது கண்டுகொண்டிருக்கும் அதி உன்னதங்களைக் கனவு கண்டவர். முந்தைய பத்தியில் குறிப்பிட்ட கண்டுபிடிப்பாளர்களின் பெயர்கள் நினைவிலிருந்து பலருக்கு அகன்றிருந்தாலும், அவர்கள் கண்டுபிடிப்புகளின் தாக்கம் இன்றளவும் உண்டு, அவர்கள் கண்டுபிடிப்புகளின் ஆயிரம் மடங்கு மேம்படுத்தப்பட்ட கருவிகளையும் நாம் பயன்படுத்தி வருகிறோம். அவர்களிலிருந்து ஆலன் டூரிங் வேறுபடுவது, அவர் கண்ட கனவும், கேட்ட கேள்வியும்தான். இப்போதுதான் அது வடிவம் பெற தொடங்கியிருக்கிறது, அவருடைய முக்கியமான பங்களிப்புகளில் ஒன்றான ``டூரிங் சோதனை” (Turing Test) முன்பை விட இப்போது அதிகமாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

 

நீங்கள் ஒரு கணினியின் முன் அமர்ந்திருக்கிறீர்கள். உங்களுடன் இரண்டு பேர் உரையாடுகிறார்கள். அதில் ஒருவர் மட்டுமே மனிதர், இன்னொருவர்(?) கணினி. இதுதான் டூரிங் சோதனையின் அடிப்படை. 

டூரிங் சோதனை

டூரிங் சோதனை

PC:Juan Alberto Sánchez Margallo, via Wikimedia Commons

டூரிங் டெஸ்ட் என்பதனைச் சுருக்கமாக இப்படி விளக்கலாம். ஒரு எந்திரன் (A Bot / Robot) ஒரு மனிதருடன் உரையாடி, ``நாம் மனிதருடன் தான் பேசிக்கொண்டிருக்கிறோம்” என அவரை நம்பவைக்க வேண்டும். அப்படி அந்த நபர் நாம் மனிதனுடன்தான் உரையாடிக்கொண்டிருக்கிறோம் என நம்பினால், அந்த இயந்திரம் டூரிங் சோதனையை வென்றது. மாறாக, நாம் இயந்திரத்துடன் உரையாடுகிறோம் என அவர் கண்டறிந்துவிட்டால் அந்த இயந்திரம் டூரிங் சோதனையில் தோல்வியடைந்ததாகப் பொருள். 

 

டூரிங்கின் இந்தச் சோதனைக்கு வரவேற்பு இருந்ததைப் போலவே, கடுமையான விமர்சனங்களும் அப்போது முன்வைக்கப்பட்டன. ``ஒரு பச்சைக்கிளி நாம் கேட்கும் அத்தனை கேள்விகளுக்கும் பதில் சொன்னால், அது மனிதனுக்கு இணையான அறிவுள்ளதாக ஆகிவிடுமா என்ன?” என்ற முக்கியமான வாதம் முன்வைக்கப்பட்டது. ஆனாலும், ஐசக் அசிமோவின் விதிகளை விடவும் இத்துறையில் டூரிங் சோதனை மிக முக்கியமான ஒன்று.

 

Siri, Natasha, Alexa, Google Assistance போன்றவற்றுடன் அவை AI Bots என்பது தெரிந்தே மனிதர்கள் உரையாடத் தொடங்கிய பின், இயந்திரங்கள் மனிதர்கள் என்பதை நிரூபிக்க வேண்டிய கட்டாயம் என்ன? டூரிங் சோதனைகளின் தேவைதான் என்ன என்ற ஒரு கேள்வி முன்வருகிறது. இந்த 50 ஆண்டுகளில் டூரிங் பரிசோதனை எப்படி வளர்ந்திருக்கிறது, என்ன மாற்றம் பெற்றிருக்கிறது? 

 

இணையம் வலுவாக வளர்ந்துவிட்ட இந்தக் காலத்தில் டூரிங் சோதனையின் தலைகீழான வடிவம் அதிகமான எண்ணிக்கையில் தினந்தினம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்தக் கட்டுரையை எழுதியவர் முதல், படித்துக்கொண்டிருக்கும் நீங்கள் வரை, தலைகீழாக்கப்பட்ட டூரிங் சோதனையை கடந்த சில ஆண்டுகளில் சில நூறு முறையாவது மேற்கொண்டிருப்போம். 

அதேதான், மனிதனுடன் உரையாடிதான் ஓர் எந்திரன் அல்ல என்பதை நிரூபிக்க டூரிங் வடிவமைத்த சோதனை, ஒரு கணினியிடம் நான் ஓர் எந்திரன் அல்ல என்பதை நிரூபிக்கும் வகையில் மாற்றம் பெற்றிருக்கிறது. இந்தச் சோதனைகளில் பயன்படுத்தப்படும் CAPTCHA என்ற வார்த்தைச்சுருக்கத்தின் முழு விளக்கமே ``Completely Automated Public Turing test to tell Computers and Humans Apart” டூரிங் டெஸ்ட்டை அடியொற்றியதுதான். 

 

``எனக்குப் பின்னால் வரும் தலைமுறை என் கருத்துகளைத் தவறு என நிரூபிக்க வேண்டும். அப்படி நிரூபிக்காமல் போனால், அந்தத் தலைமுறை தவறிழைத்ததாகிவிடும்” என ஐன்ஸ்டீனின் மேற்கோள் ஒன்று இருக்கிறது. டூரிங் டெஸ்டை தலைகீழாக்கி நாம் செயல்படுத்திக்கொண்டிருக்கிறோம். டூரிங்கை அடுத்தடுத்த தலைமுறை சரியாகத்தான் சென்றுகொண்டிருக்கிறோம். 

 

எனிக்மா கருவிகளை உடைத்தது, உலகப் போரை விரைவில் முடிவுக்குக் கொண்டுவந்தது, டூரிங் சோதனை எனப் பலவற்றை ஆலன் டூரிங் பிறந்த தினத்தில் மீண்டும் ஒரு முறை நினைவுகூர்ந்ததெல்லாம் சரி, டூரிங் சோதனை தாண்டி இன்று அவர் என்ன முக்கியத்துவம் கொண்டிருக்கிறார் என ஒரு சந்தேகம் வருகிறதா? 

 

சில பத்திகள் முன்பு, ஓர் ஆய்வுத்தாளின் முதல் பத்தியில் ஒரு கேள்வியை டூரிங் எழுப்பியிருந்தார் எனக் குறிப்பிட்டேன். (மீண்டும் ஒரு முறை அந்தப் பத்தியைப் படிக்கலாம்.)

 

அந்தக் கேள்வி ``இயந்திரங்களால் உண்மையிலேயே சிந்திக்க முடியுமா?”, ``இயந்திரங்களுக்கு உணர்ச்சி உள்ளதா?” இந்தக் கேள்விகளுக்கு விடைகளைத்தான் நவீன கணினியியல் நமக்குக் காட்டிக்கொண்டிருக்கிறது. இன்னும் சில ஆண்டுகளில் AI துறை முழு வளர்ச்சியை அடையும்போது டூரிங்கின் இந்தக் கேள்விகள் முடிவுக்கு வரும். ஆக, ஆலன் டூரிங் எப்போதை விடவும் அதிகம் பேசப்பட வேண்டிய நபராக மாறிக்கொண்டிருக்கிறார்.

vikatan

Link to comment
Share on other sites

‘கௌரவத்தைக் காப்பாற்ற வேண்டும்’
 

image_f5242c3b33.jpgமிகச்சிறிய ஊர்ப் பிரச்சினைகளில் பிரபலங்கள் தேவையற்ற விதத்தில் மூக்கை நுளைத்தால், அவர்களுக்கு அவமானங்கள் தேடிவரும். மிகப்பெரிய விடயங்களில் வெற்றி கொள்ளுபவர்கள், தங்கள் கௌரவத்தைக் காப்பாற்ற வேண்டும். 

எல்லாமே தமக்குத் தெரியும் எனச் சில கல்விமான்கள், வீரர்கள் எனச் சொல்லப்பட்டவர்கள் தராதரம் தெரியாத, அறிவு குறைந்தவர்களிடம் கண்டபடி வாய்த்தர்க்கம் புரிவது, தவிர்க்கப்பட வேண்டிய ஒன்றாகும். 

ஒரு விடயத்தைப் பற்றிப் புரியாத பேர்வழிகளிடம், எந்த அறிவுபூர்வமான கருத்தும் எடுபடாது. படித்தவர்களைப் பிடிக்காத நபர்கள் அதிகமாக இருப்பது புதுமையல்ல. 

எவரும் நல்ல விடயங்களைப் பேசும்போது, சுற்றியிருப்பவர்களின் இயல்பையறிந்து  பேசினால் நல்லது. கேட்கப் பிடிக்காதவர்கள், துச்சமாக நோக்கினால் அதனால் வெட்கப்படவேண்டிய சூழ்நிலையும் உருவாகக் கூடும்.  யாருடனாவது கருத்துகளை விதைக்கும்போது, அவர்கள் பாணியில் உரையாடினால், அது சேர வேண்டிய இடத்துக்குப் போய்ச் சேரும்.

Link to comment
Share on other sites

இசையமைப்பாளர் எம். எஸ். விஸ்வநாதன் பிறந்த தினம்: ஜூன் 24- 1928

 
அ-அ+

மனயங்கத் சுப்பிரமணியன் விசுவநாதன் அல்லது எம். எஸ். விஸ்வநாதன் (எம்எஸ்வி, பிறப்பு: 24 சூன் 1928) இந்தியாவின் தமிழ்த் திரைப்பட இசையமைப்பாளர். இவர் கேரளாவின் பாலக்காட்டுக்கு அருகில் எலப்புள்ளி என்ற கிராமத்தில் 1928-ம் ஆண்டு மலையாளக் குடும்பத்தில் பிறந்தார். இவரின் தந்தை சுப்ரமணியன் தாய் நாராயண குட்டியம்மாள் (நானிக்குட்டி). விசுவநாதன் 1953-ம் ஆண்டில் வெளிவந்த ம.கோ. ராமச்சந்திரனின் ஜெனோவா திரைப்படத்தில் வெளிவந்த நான்கு

 
 
 
 
இசையமைப்பாளர் எம். எஸ். விஸ்வநாதன் பிறந்த தினம்: ஜூன் 24-  1928
 
மனயங்கத் சுப்பிரமணியன் விசுவநாதன் அல்லது எம். எஸ். விஸ்வநாதன் (எம்எஸ்வி, பிறப்பு: 24 சூன் 1928) இந்தியாவின் தமிழ்த் திரைப்பட இசையமைப்பாளர். இவர் கேரளாவின் பாலக்காட்டுக்கு அருகில் எலப்புள்ளி என்ற கிராமத்தில் 1928-ம் ஆண்டு மலையாளக் குடும்பத்தில் பிறந்தார்.

இவரின் தந்தை சுப்ரமணியன் தாய் நாராயண குட்டியம்மாள் (நானிக்குட்டி). விசுவநாதன் 1953-ம் ஆண்டில் வெளிவந்த ம.கோ. ராமச்சந்திரனின் ஜெனோவா திரைப்படத்தில் வெளிவந்த நான்கு பாடல்களுக்கு முதன் முதலாக இசையமைத்தார். தமிழ் திரைப்படங்களில் அதிகம் பணிபுரிந்தாலும் தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னட படங்களுக்கும் இசையமைத்துள்ளார். இவர் 1200 திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார்.

தனது நான்காவது வயதிலேயே தந்தையை இழந்த விசுவநாதன் கண்ணனூரில் உள்ள தன் தாத்தா கிருசுணன் நாயர் வீட்டிற்கு சென்று வளர்ந்தார். பள்ளிப் படிப்புப் படிக்காத இவர் இசையின் மீது கொண்ட நாட்டத்தால் அங்கு கர்நாடக இசையை நீலகண்ட பாகவதரிடம் பயின்று 13-வது வயதிலேயே மேடைக் கச்சேரி நிகழ்த்தினார்.

இசையமைப்பாளர் சி. ஆர். சுப்பராமன் இசைக்குழுவில் இவர் ஆர்மோனியத்தையும் டி. கே. ராமமூர்த்தி வயலினையும் வாசிப்பவர்களாக பணிபுரிந்தார்கள். உடல்நல குறைவு காரணமாக, தன்னுடைய 30 வயதில் (1952) சி. ஆர். சுப்புராமன் அவர்கள் மறைந்தார். அவருடைய மறைவால் முழுமை பெறாமல் இருந்த தேவதாஸ், சண்டிராணி, மணமகள் போன்ற படங்களை அவரின் உதவியாளர்களாக இருந்த விசுவநானும் ராமமூர்த்தியும் முடித்துக்கொடுத்தார்கள்.

தேவதாஸ் (தமிழ் & தெலுங்கு) மற்றும் சண்டிராணி (தமிழ், தெலுங்கு & இந்தி) படங்களின் இணை இசையமைப்பாளராக இவர்கள் இருவரும் அறிமுகப்படுத்தப்பட்டார்கள். இப்படங்கள் வெற்றி பெற்றதால் இந்தியில் சங்கர்- ஜெய்கிஷன் என்ற பெயரில் புகழ்பெற்ற இரட்டை இசையமைப்பார்கள் இருந்தது போல் தமிழில் விசுவநாதன்- ராமமூர்த்தி என்ற இரட்டை இசையமைப்பாளராக உருவாகலாம் என்ற எண்ணத்தை விசுவநாதன் ராமமூர்த்தியிடம் தெரிவித்து அவரது இணக்கத்தைப் பெற்றார்.

இவர்கள் இருவரும் பணம் என்ற திரைப்படத்திற்கு முதலில் இணைந்து இசையமைத்தார்கள். ஆயிரத்தில் ஒருவன் திரைப்படம் வரை 700 படங்களுக்கு இணைந்து இசையமைத்தார்கள். இவர் தனியாக 500 படங்களுக்கு மேல் இசையமைத்துள்ளார். இளையராஜாவோடு சேர்ந்து, மெல்லத் திறந்தது கதவு, செந்தமிழ்ப் பாட்டு, செந்தமிழ் செல்வன் என மூன்று படங்களுக்கு இசை அமைத்துள்ளார்.

1995-ல் சத்யராஜ் நடித்த எங்கிருந்தோ வந்தான் என்ற திரைப்படத்தில் இருவரும் மீண்டும் இணைந்து இசையமைத்தார்கள். 1963-ம் ஆண்டு ஜூன் மாதம் 16-ம் தேதி மதராஸ் ட்ரிப்ளிகேன் கல்சுரல் அகாடமி சார்பில் இந்து நாளிதழ் உதவியுடன் இயக்குனர் ஸ்ரீதர் மற்றும் "சித்ராலயா"கோபு முன்னிலையில் நடைபெற்ற விழாவில் சிவாஜி கணேசனால் விசுவநாதன்- இராமமூர்த்திக்கு மெல்லிசை மன்னர்கள் என்று பட்டம் வழங்கப்பட்டது

கண்ணகி, காதல் மன்னன், காதலா காதலா போன்ற 10-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். ஏ. பீம்சிங், கிருஷ்ணன் பஞ்சு, ஏ. சி. திருலோசந்தர், கே. பாலசந்தர் என்ற இயக்குநர்களிடம் மற்ற இயக்குனர்களை விட அதிகமாக வேலை பார்த்திருக்கிறார். தமிழ்த் தாய் வாழ்த்தான நீராடும் கடலுடுத்த பாடலுக்கு மோகன ராகத்தில் இசைக் கோர்ப்பு செய்தவர் விசுவநாதன். வி.குமார், இளையராஜா, அ. இ. ரகுமான், கங்கை அமரன், தேவா, யுவன் சங்கர் ராஜா, ஜி. வி. பிரகாஷ் போன்ற அனைத்து இசையமைப்பாளர்களிடமும் பாடி இருக்கிறார்.

https://www.maalaimalar.com/

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 29 MAR, 2024 | 10:23 AM   காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவசரமாக தேவைப்படும் அத்தியாவசியபொருட்கள் மற்றும் மனிதாபிமான உதவிகளை காசாவிற்குள் அனுமதிப்பது தொடர்பில் இஸ்ரேல் உடனடியாக செயற்படவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது.   காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது. https://www.virakesari.lk/article/179954
    • தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - கிட்ணண் செல்வராஜ் Published By: VISHNU   29 MAR, 2024 | 01:56 AM 1700 ரூபா எனும் வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணண் செல்வராஜ் தெரிவித்தார். சம்பள விவகாரம் தொடர்பில் பெருந்தோட்டத்  தொழிலாளர்களை தெளிவூட்டும் வகையில் இன்று வியாழக்கிழமை (28) ஹப்புத்தளை பிட்டரத்தமலையில் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம் இதனை ஏற்பாடு செய்திருந்தது.  இதன்போதே அகில இலங்கைத் தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணன் செல்வராஜ் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “சம்பள நிர்ணய சபைக்கு 2000 ரூபா அடிப்படை சம்பளத்தை வழங்குவதற்கு ஏதுவான பிரேரணை கொண்டுசெல்லப்பட வேண்டும். அவ்வாறு கொண்டு செல்லும் பொழுது அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கமாகிய நாங்கள் முழுமையான ஆதரவினை தருவோம். அதைவிடுத்து 1700 ரூபாவுக்குள் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை வரையறுக்கக் கூடாது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு ஒரு நாளைக்கு 1700 ரூபாவை சம்பளமாக வழங்கினால் போதுமா? அதுப்போல அரசியல்வாதிகளுக்கு நாட்சம்பளமாக 1700 ரூபா வழங்கினால் போதுமா?  அதனால் 1700 ரூபா என்ற வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்குவதற்கு ஏதுவான நடவடிக்கைகளை அரசாங்கமும், அரசாங்கத்தோடு தூணாகவிருக்கும் மலையகத்தின் பினாமி அமைச்சரும் தொழிற்சங்கத் தலைவர்களும் உடனடியாக முன்னெடுக்க வேண்டும்.” என்று மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179943
    • Published By: VISHNU   29 MAR, 2024 | 01:27 AM கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் கிளிநொச்சி பாரதிபுர செபஸ்ரியார் வீதியின் பாலம் புனரமைத்தலுக்கான அடிக்கல் நாட்டு விழா வியாழக்கிழமை (28) இடம்பெற்றிருந்தது. குறித்த நிகழ்வில்  கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், வன்னி பாராளுமன்ற உறுப்பினர் திலீபன், ஒப்பந்ததாரர்கள், பிரதேச செயலாளர்கள், கிராம மக்கள் மற்றும் வீதி அதிகார சபை உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். இந்நிகழ்வில் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களினால் பாலம் புனரமைப்புக்கான திரைநீக்கம் செய்யப்பட்டு பின் பால புனரைப்புக்கான அடிக்கல்லும் நாட்டி வைத்தார்.குறித்த பாலமானது 15,329,888.18 நிதி பங்களிப்பில் 90நாட்கள் ஒப்பந்த அடிப்படையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட கல்மடு நகர் பகுதியில் அமைந்துள்ள மூலிகைப் பண்ணையின்  பிரதான வீதியினை புனரமைப்பதாகவும் அதற்குரிய நிதியினை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் தெரிவித்து அத்துடன் மேலும் தெரிவிக்கையில் பல சிறிய பாலங்கள் உடனடியாக புனரிப்பு செய்வதற்கான நடவடிக்கையினை  உடன் மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்ததுடன் இப்பகுதிகளில் உள்ள பலகிராமிய வீதிகளை புணரமைப்பு செய்வதற்குசம்பந்தப்பட்ட அமச்சுடன் கலந்துரையாடயிருப்பதாகவும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179939
    • புவி வெப்பமயமாதலால், துருவப் பனிக்கட்டிகள் வேகமாக உருகி வருகின்றன. திடமான பனிக்கட்டி உருகுவதால் பூமியின் மையப்பகுதியில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக பூமியின் சுழற்சி வேகம் அதிகரித்து அதன் மூலம் பூமியின் நேரம் மாறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், இன்னும் சில ஆண்டுகளில் பூமியின் நேரம் ஒரு நாளைக்கு ஒரு நொடி வீதம் குறையும் என்று விஞ்ஞானிகள் தற்போது கணித்துள்ளனர் ஒரு வினாடி என்பது மிக குறுகிய காலப்பகுதி என்ற போதிலும், அது கணினி பயன்பாட்டில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர். https://thinakkural.lk/article/297441
    • கொதிக்கும் காய்ச்சலுடன், தாயின் முன்னிலையில் கண்ணீரை வென்ற ‘சஞ்சுமல் பாய்ஸ்’ வீரர் பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 29 மார்ச் 2024, 03:25 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஒவ்வொரு அணியிலும் ஒரு ரியல் ஹீரோ இருப்பார். அனைத்து நேரங்களிலும் அவர்களின் உதயம் இருக்காது, தேவைப்படும் நேரத்தில் அவர்களின் எழுச்சி அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்லும். அந்த வகையில் “சஞ்சுமெல் பாய்ஸ்” என்று அழைக்கப்படும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு நேற்றைய ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஒளிர்ந்தவர் ரியான் பராக் மட்டும்தான். ஜெய்ப்பூரில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 9-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியை 12 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 2ஆவது வெற்றி பெற்றது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. முதலில் பேட் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் சேர்த்தது. 186 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் சேர்த்து 12 ரன்களில் தோல்வி அடைந்தது. இந்த வெற்றியின் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சொந்த மைதானத்தில் இந்த சீசனில் தொடர்ந்து 2ஆவது வெற்றியைப் பெற்றுள்ளது. முதல் வெற்றி பெற்றவுடன் நிகர ரன்ரேட்டை ஒன்று என வைத்திருந்த ராஜஸ்தான், 2 வெற்றிகளில் 4 புள்ளிகள் பெற்றும் நிகர ரன்ரேட் 0.800 புள்ளியாகக் குறைந்துவிட்டது. டெல்லி கேபிடல்ஸ் அணி அடுத்தடுத்து இரு தோல்விகளைச் சந்தித்துள்ளது. இதனால் இன்னும் புள்ளிக்கணக்கைத் தொடங்க முடியாமல், நிகர ரன்ரேட்டும் மைனஸ் 528ஆக பின்தங்கியுள்ளது. இந்த ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஜொலித்தவர் ரியான் பராக் (45 பந்துகளில் 84 ரன்கள் 6சிக்ஸர்கள், 7பவுண்டரிகள்) மட்டும்தான். ஒரு கட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணி 3 விக்கெட் இழப்புக்கு 36 ரன்கள் என்று இக்கட்டான நிலையில் தடுமாறியது. ஆனால், 4வது பேட்டராக களமிறங்கிய ரியான் பராஸ், அஸ்வினுடன் ஜோடி சேர்ந்து 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும், ஜூரெலுடன் சேர்ந்து 52 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அணிக்கு கவுரமான ஸ்கோரை பெற்றுக் கொடுத்தார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES ஒரு கட்டத்துக்கு மேல் அதிரடி ஆட்டம்தான் ஸ்கோரை உயர்த்த கை கொடுக்கும் என்பதை அறிந்த ரியான் பராக் டெல்லி பந்துவீச்சாளர்களை வெளுக்கத் தொடங்கினார். ஒரு கட்டத்தில் 20 பந்துகளில் 16 ரன்கள் என்று மெதுவாக ஆடிய பராக் அதன்பின் பேட்டை சுழற்றத் தொடங்கினார். பராக் தான் சந்தித்த கடைசி 19 பந்துகளில் மட்டும் 58 ரன்களைச் சேர்த்தார். அதிலும் அதிவேகப்பந்துவீச்சாளர் நோர்க்கியா வீசிய கடைசி ஓவரில் மட்டும் 6 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என 25 ரன்களை பராக் சேர்த்தார். ராஜஸ்தான் அணியை ஒற்றை பேட்டராக கட்டி இழுத்து பெரிய ஸ்கோருக்கு கொண்டு வந்த ரியான் பராக் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த 3 சீசன்களிலும் ரியான் பராக் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. கடந்த சீசனில் 7 இன்னிங்ஸில் பராக் சேர்த்தது வெறும்78 ரன்கள்தான், 2022ம் ஆண்டு சீசனில் பராக் 14 இன்னிங்ஸ்களில் 148 ரன்கள் சேர்த்தார், 2021 சீசனில் 10 இன்னிங்ஸ்களில் 93 ரன்கள் என பராக் பேட்டிங் மோசமாகவே இருந்தது. இதனால் அணியில் இருந்தாலும் பல போட்டிகளில் ப்ளேயிங் லெவனில் இடம் பெறவில்லை. ஆனால், கடந்த ஆண்டில் உள்நாட்டுப் போட்டிகளில் ரியான் பாராக் தீவிரமான ஆட்டத்தால் கிடைத்த அனுபவம் ஆங்கர் ரோல் எடுத்து அணியை இக்கட்டான நிலையில் இருந்து மீ்ட்டுள்ளது. 2024 சீசன் தொடங்கியதில் இருந்தே பராக்கின் பேட்டிங்கில் முதிர்ச்சியும், பொறுப்புணர்வும் அதிகம் இருந்ததைக் காண முடிந்தது. முதல் ஆட்டத்திலும் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து பராக் 93 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது பெரிய ஸ்கோருக்கு கொண்டு சென்றது. அந்த ஆட்டத்திலும் பராக் 29 பந்துகளில் 43 ரன்கள் சேர்த்தார். இரு போட்டிகளிலும் தன்னுடைய ஆட்டத்தின் முதிர்ச்சியை, பொறுப்புணர்வை பராக் வெளிப்படுத்தியுள்ளார். அது மட்டுமல்லாமல் கடந்த 3 நாட்களாக ரியான் பராக்கிற்கு கடும் காய்ச்சல், உடல்வலி இருந்துள்ளது.ஆனால், மாத்திரைகளை மட்டும் உட்கொண்டு, அந்த உடல் களைப்போடு நேற்றைய ஆட்டத்தில் பராக் விளையாடினார் என ராஜஸ்தான் நிர்வாகம் தெரிவித்துள்ளது.   பட மூலாதாரம்,GETTY IMAGES தாயின் முன் சிறப்பாக ஆடியது மகிழ்ச்சி ஆட்டநாயகன் விருது வென்ற ரியான் பராக் பேசுகையில் “ என்னுடைய உணர்ச்சிப் பெருக்கு அடங்கிவிட்டது, என்னுடைய தாய் இந்த ஆட்டத்தை இங்கு வந்து நேரில் பார்த்தால் அவர் முன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறேன். என்னை இங்கு கொண்டுவருவதற்கு அவர் பல போராட்டங்களை சந்தித்துள்ளார். நான் சிறப்பாக ஆடுகிறேனோ இல்லையோ, என்னுடைய திறமை என்னவென்று எனக்குத் தெரியும், அதை ஒருபோதும் மாற்றியதில்லை. உள்நாட்டுப் போட்டிகளில் அதிகமான போட்டிகளில் பங்கேற்றேன், அதிகமான ரன்களும் குவித்தேன். டாப்-4 பேட்டராக வருபவர் ஆட்டத்தை கடைசிவரை எடுத்துச் செல்ல வேண்டும் அதை செய்திருக்கிறேன். முதல் ஆட்டத்தில் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்தேன். இன்று சஞ்சு செய்த பணியை நான் செய்தேன். நான் 3 நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் இருந்தேன். இந்த ஆட்டத்துக்காக கடினமாக உழைத்துள்ளேன். என்னால் விளையாட முடியும் என மனதை தயார் செய்து பேட் செய்தேன்” எனத் தெரிவித்தார். ஆட்டத்தை திருப்பிய பந்துவீச்சாளர்கள் ஒரு கட்டத்தில் ஆட்டம் டெல்லி கேபிடல்ஸ் கையில்தான் இருந்தது. அதை அவர்களிடம் இருந்து பறித்தது ராஜஸ்தான் பந்துவீச்சாளர்கள்தான். கடைசி 5 ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 60 ரன்கள் தேவைப்பட்டது. 16-வது ஓவரை வீசிய சஹல் 6 ரன்கள் மட்டுமே கொடுத்து அபிஷேக் போரெல் விக்கெட்டை கைப்பற்றினார். அஸ்வின் வீசிய 17-வது ஓவரில் டெல்லி பேட்டர் ஸ்டெப்ஸ் 2 சிக்ஸர்கள் உள்பட 19 ரன்கள் சேர்த்தால் ஆட்டம் பரபரப்பானது. ஆவேஷ் கான் 18-வது ஓவரை வீசியபோது, ஸ்டெப்ஸ் ஒரு பவுண்டரி உள்பட 9 ரன்களைச் சேர்த்து அணியை வெற்றி நோக்கி நகர்த்தினார். கடைசி இரு ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 32 ரன்கள் தேவைப்பட்டது. சந்தீப் சர்மா வீசிய 19-வது ஓவரில் முதல் இருபந்துகளில் பவுண்டரி, சிக்ஸர் என ஸ்டெப்ஸ் பறக்கவிட்டதால் ஆட்டம் டெல்லி பக்கம் சென்றது.அந்த ஓவரில் டெல்லி 15 ரன்கள் சேர்த்தது. கடைசி ஓவரில் டெல்லி வெற்றி பெற 17 ரன்கள் தேவைப்பட்டது.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெத்ஓவர் ஸ்பெஷலிஸ்ட் கடந்த முதல் ஆட்டத்திலும் டெத் ஓவரில் கடைசி ஓவரை ஆவேஷ்கான் வீசி வெற்றி தேடித்தந்ததால் இந்த முறையும் கேப்டன் சஞ்சு, ஆவேஷ் கானை பயன்படுத்தினார். கடைசி ஓவரை ஆவேஷ்கான் மிக அற்புதமாக வீசினார். நல்ல ஃபார்மில் இருந்த ஸ்டெப்ஸை ஒரு பவுண்டரி, சிக்ஸர்கூட அடிக்கவிடாமல், 3 பந்துகளை அவுட்சைட் ஆஃப்ஸ்டெம்பிலும் வீசினார். 4வது பந்தை ஸ்லாட்டில் வீசியும் ஸ்டெப்ஸ் அடிக்கவில்லை. 5-வது பந்தை ஃபுல்டாசாகவும், கடைசிப்பந்தில் ஃபுல்டாசாக வீசி டெல்லி பேட்டர்களை கட்டிப்போட்டார் ஆவேஷ் கான். அதிரடியாக ஆடிய அஸ்வின் நெருக்கடியான கட்டத்தில் பேட்டிங் வரிசையில் தரம் உயர்த்தப்பட்டு நடுவரிசையில் அஸ்வின் நேற்று களமிறக்கப்பட்டார். ரியான் பராக்கிற்கு நல்ல ஒத்துழைப்பு அளித்து அஸ்வின் ஸ்ட்ரைக்கை மாற்றி, 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும் அமைத்துக் கொடுத்தார். ரியான் பராக் தன்னுடைய முதல்பாதி இன்னிங்ஸில் ரன் சேர்க்க திணறினார், ஆனால் அஸ்வின் அனாசயமாக 3 சிக்ஸர்களை வெளுத்தார். குறிப்பாக குல்தீப், நோர்க்கியா ஓவர்களில் அஸ்வின் 3 சிக்ஸர்களைப் பறக்கவிட்டார். அஸ்வின் அடித்த திடீர் சிக்ஸால்தான் ராஜஸ்தான் ரன்ரேட் 6 ரன்களைக் கடந்தது. அஸ்வின் தன்னுடைய பணியில் சிறிதும் குறைவி்ல்லாமல் சிறிய கேமியோ ஆடி 19 பந்துகளில் 29 ரன்கள் சேர்த்து பெவிலியன் சென்றார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெல்லிக்கு தொல்லையாகிய சஹல் ராஜஸ்தான் அணி தொடக்கத்திலேயே பர்கர், போல்ட் இருவருக்கும் 6 ஓவர்களை வீசச் செய்து பவர்ப்ளேயோடு முடித்துவிட்டது. இதனால் 14 ஓவர்கள்வரை நல்ல ஸ்கோர் செய்யலாம் என டெல்லி பேட்டர்கள் நினைத்திருக்கலாம். டேவிட் வார்னரும் களத்தில் இருந்தார். ஆனால், ஆவேஷ் கான் ஆஃப் சைடில் விலக்கி வீசி வார்னரை அடிக்கச் செய்து ஆட்டமிழக்கச் செய்தார். மிக அருமையாக பந்துவீசிய சஹல் இரு இடதுகை பேட்டர்களான கேப்டன் ரிஷப் பந்த், போரெல் இருவரையும் வெளியேற்றினார். 4 ஓவர்கள் வீசிய சஹல் 19 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார், இவரின் பந்துவீச்சில் ஒரு சிக்ஸர் மட்டுமே அடிக்க முடிந்தது, பவுண்டரி ஒன்றுகூட அடிக்கவில்லை. சஹல் 7 டாட் பந்துகளையும் வீசியதை கணக்கிட்டால் 2 ஓவர்களில்தான் சஹல் 19 ரன்களை வழங்கியுள்ளார். இரு முக்கியமான பேட்டர்களை சஹல் தனது பந்துவீச்சின் மூலம் வெளியேற்றியது டெல்லி அணிக்கு பெரிய பின்னடைவாக மாறியது. நடுங்கவைத்த பர்கர் ராஜஸ்தான் அணிக்கு இந்த சீசனில் கிடைத்த பெரிய பலம் டிரென்ட் போல்ட், ஆன்ட்ரூ பர்கர் ஆகிய இரு இடதுகை வேகப்பந்துவீச்சாளர்கள்தான். போல்ட் இந்த ஆட்டத்தில் விக்கெட் ஏதும் எடுக்காவிட்டாலும், பர்கர் இரு விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதிலும் ரிக்கி புயிக்கு பர்கர் வீசிய பவுன்ஸர் சற்று தவறியிருந்தால் ஹெல்மெட்டை பதம் பார்த்திருக்கும், ஆனால், கிளவ்வில் பட்டு சாம்சனிடம் கேட்சானது. அதேபோல நல்ல ஃபார்மில் இருந்த மார்ஷ்(23) விக்கெட்டையும் பர்கர் தனது அதிவேகப்பந்துவீச்சில் வீழ்த்தினார். தொடக்கத்திலேயே மார்ஷ், ரிக்கி புயி விக்கெட்டுகளை வீழ்த்தி டெல்லிக்கு பெரிய சேதாராத்தை பர்கர் ஏற்படுத்தினார். மணிக்கு சராசரியாக 148கி.மீ வேகத்தில் பந்துவீசும் பர்கர், பெரும்பாலான பந்துகளை துல்லியமாக, லைன் லென்த்தில் கட்டுக்கோப்பாக வீசுவது ராஜஸ்தான்அணிக்க பெரிய பலம்.   பட மூலாதாரம்,GETTY IMAGES வாய்ப்புகளை தவறவிட்ட டெல்லி அணி டெல்லி அணி பந்துவீச்சிலும்சரி, பேட்டிங்கிலும் சரி கிடைத்த வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்தி இருந்தால் வெற்றி கிடைத்திருக்கும். பந்துவீச்சில் தொடக்கத்திலேயே ராஜஸ்தான் பேட்டர்கள் ஜெய்ஸ்வால்(5), பட்லர்(11), சாம்ஸன்(15) என 3 முக்கிய பேட்டர்களையும் முகேஷ் குமார், குல்தீப், கலீல் அகமது வீழ்த்திக் கொடுத்தனர். இந்த நெருக்கடியை தொடர்ந்து ஏற்படுத்தி தக்கவைத்திருந்தால், ராஜஸ்தான் அணி ஸ்கோர் 120 ரன்களை கடந்திருக்காது. 14 ஓவர்கள் வரை ராஜஸ்தான் அணி 100 ரன்களைக் கூட கடக்கவில்லை. ஆனால், கடைசி 5 ஓவர்களில் அதிலும் டெத் ஓவர்ளில் டெல்லி பந்துவீச்சு மோசமானதை, பராக் பயன்படுத்தி வெளுத்து வாங்கினார். கலீல் அகமது, அக்ஸர் படேல் தவிர எந்தப் பந்துவீச்சாளரும் வாய்ப்பைப் பயன்படுத்தவில்லை. அதேபோல பேட்டிங்கிலும், பவர்ப்ளேயில் 59 ரன்களும், 12 ஓவர்களில் 100 ரன்களை எட்டி டெல்லி அணி வெற்றி நோக்கி சீராக சென்றது. ஆனால், ஒரு கட்டத்தில் ரிஷப் பந்த், போரெல், வார்னர் ஆகியோர் 25 ரன்களுக்குள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தது டெல்லிக்கு பின்னடைவாக மாறியது. கடைசி 5 ஓவர்களில் 60 ரன்களை எட்டுவதற்கும் ஸ்டெப்ஸ் கடுமையாக முயன்று வெற்றிக்கு அருகே கொண்டு சென்றார். ஸ்டெப்ஸுடன் நல்ல பவர் ஹிட்டர் பேட்டர் இருந்தால் ஆட்டம் திசைமாறியிருக்கும். டெல்லி அணியில் வார்னர்(49), ஸ்டெப்ஸ்(44) தவிர எந்த பேட்டரும் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. https://www.bbc.com/tamil/articles/clm7pvlmprko
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.