Jump to content

இளமை புதுமை பல்சுவை


Recommended Posts

செவ்வாய் கோளை ஆராய்ச்சி செய்ய மார்ஸ் எக்ஸ்பிரஸ் விண்கலம் ஏவப்பட்ட நாள்: ஜுன் 2, 2003

 
செவ்வாய் கோளை ஆராய்ச்சி செய்ய மார்ஸ் எக்ஸ்பிரஸ் விண்கலம் ஏவப்பட்ட நாள்: ஜுன் 2, 2003
 
ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் சார்பாக செவ்வாய் கோளை ஆராய அனுப்பப்பட்ட விண்கலமே மார்ஸ் எக்ஸ்பிரஸ். இங்கிலாந்து, ஜெர்மனி உட்பட பல ஐரோப்பிய நாடுகளின் பங்களிப்போடு, ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையமான இ.எஸ்.ஓ.சி-யால் மார்ஸ் எக்ஸ்பிரஸ் விண்கலம் உருவானது.  ஆறு கோடியே இருபது லட்சம் அமெரிக்க டாலரினால் இது தயாரிக்கப்பட்டது. 2003-ம் ஆண்டு ஜூன் மாதம் இதே தேதியில் மார்ஸ் எக்ஸ்பிரஸ் விண்கலம் அனுப்பப்பட்டது. ஸ்டார் செம் என்னும் ராக்கெட் இதனை தூக்கி சென்றது. ஆறு மாத பயணத்திற்குப் பின் டிசம்பர் 25-ஆம் தேதி செவ்வாய் கிரகத்தின் சுற்று வட்ட பாதையில் நுழைந்தது மார்ஸ் எக்ஸ்பிரஸ்.

மார்ஸ் எக்ஸ்பிரஸுடன் விஞ்ஞானிகள் பீகிள் என்ற ரோபோவையும் அனுப்பி வைத்தார்கள். இது ஒரு மீட்டர் உயரம் உள்ள ரோபோவாகும். இதை வடிவமைத்தவர் இங்கிலாந்தை சேர்ந்த காலின் பிலிஜ்ஜர் ஆவார். பீகில்-2 பத்திரமாக பாராசூட் உதவியுடன் தரையிறக்கப்பட்டது. ஆனால் அது எலக்ரானிக் பாகங்களில் ஏற்பட்ட கோளாரினால் அது செயலிழந்து.

ரோபோ செயலிழந்தாலும் மார்ஸ் எக்ஸ்பிரஸ் இதுவரை செவ்வாயை ஆராய்ந்து வருகிறது. செவ்வாய் கிரகத்தின் தென் துருவத்தில் பனிப்பிரதேசம் இருப்பதற்கான அறிகுறிகளை 2004 ஜனவரியில் கண்டுபிடித்தது. அதில் 87 சதவிகிதம் கார்பன்-டை-ஆக்சைடும்,13 சதவிகிதம் பனியும் இருப்பது தெரியவந்துள்ளது. மீத்தேன், அம்மோனியா போன்ற வாயுக்கள் அங்கு இருப்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.
 
மேலும் இதே தேதியில் நடந்த பிற நிகழ்வுகள்:

• 1615 - பிரெஞ்சு கத்தோலிக்க மதப்பரப்புனர்களின் முதற்தொகுதியினர் கனடாவின் கியூபெக் நகரை அடைந்தனர்.
• 1896 - மார்க்கோனி தான் புதிதாகக் கண்டுபிடித்த வானொலிக்கான காப்புரிமத்தைப் பெற்றார்.
• 1882 - நவீன இத்தாலியை உருவாக்கிய கரிபால்டி மறைந்த தினம்.
• 1953 - இரண்டாம் எலிசபெத் இங்கிலாந்தின் அரசியாக முடிசூட்டு விழா முதற்தடவையாக தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிபரப்பானது.
• 1965 - ஆஸ்திரேலியா கிரிக்கெட் வீரர்கள் ஸ்டீவ் வாக் மற்றும் மார்க் வாக் ஆகியோர் பிறந்த தினம்.
• 1966 - நாசாவின் சேர்வெயர் 1 விண்கலம் சந்திரனில் இறங்கியது. சந்திரனில் மெதுவாக இறங்கிய முதலாவது அமெரிக்க விண்கலம் இதுவாகும்.
• 1992 - டென்மார்க் மக்கள் மாஸ்ட்ரிக்ட் உடன்பாட்டுக்கு எதிர்த்து வாக்களித்தனர்.
• 1999 - பூட்டானில் முதற் தடவையாக தொலைக்காட்சி அறிமுகப்படுத்தப்பட்டது.
 
 

https://www.maalaimalar.com

Link to comment
Share on other sites

  • Replies 11.3k
  • Created
  • Last Reply

நாண­யத்­தாள்­க­ளால் விநாயகருக்கு அலங்காரம்!!

 

 

oh-425x430.jpg

 
 

யாழ்ப்­பா­ணத்­தில் உள்ள விநா­ய­கர் ஆல­யம் ஒன்­றில் நாண­யத்­தாள்­க­ளால் விக்­கி­ர­கத்­துக்கு சாத்­துப்­படி (அலங்­கா­ரம்) செய்­யப்­பட்­டது என்று கூறப்­ப­டும் ஒளிப்­ப­டம் ஒன்று சமூக வலைத்­த­ளங்­க­ளில் நேற்­றுப் பர­வி­யது.

20, 50, 100, 500, 1000, 5000 ரூபா நாண­யத்­தாள்­க­ளைப் பயன்­ப­டுத்தி அலங்­கா­ரம் செய்­யப்­பட்­டி­ருந்­தது. அதே­வேளை நாண­யத்­தாள்­க­ளைச் சேத­மாக்­கு­வது குற்­றம் என்­று இலங்கை மத்­திய வங்கி அறி­வித்­துள்­ளமை தெரி­ந்ததே.

oh-165x300.jpg

http://newuthayan.com

 

1zyjz35.jpg

Link to comment
Share on other sites

வலைபாயுதே

சைபர் ஸ்பைடர்

 

112p1_1527586471.jpg

twitter.com/sundartsp: எடப்பாடி பேட்டியைக் கூர்ந்து கவனித்தால், ``நான் முதலமைச்சரா டூட்டி மட்டும்தான் பார்க்கிறேன்’’ என்று தைரியமாகக் கூறிவிட்டார்.

twitter.com/mekalapugazh: கடவுள் தண்டிப்பார்னு நல்லவன் நம்புறான்...

கடவுளை ஏமாத்திடலாம்னு வல்லவன் நம்புறான்!

twitter.com/indupriya911: இயல்பு நிலைக்குத் திரும்பிக் கொண்டி ருப்பது இணையம் மட்டுமே; பாதிக்கப்பட்ட மக்களின் மனநிலை அல்ல!

twitter.com/Kozhiyaar: திருமண வீட்டில் வயிறுமுட்ட சைவச் சாப்பாடு சாப்பிட்டுத் திரும்பும்போது, வீட்டில் மட்டன் பிரியாணி செய்து வைத்திருப் பதெல்லாம் வன்கொடுமையிலேயே சேரும்!

twitter.com/manipmp: பெண்களை நம்பி நகைக்கடைகளும், ஆண்களை நம்பி அடகுக்கடைகளும் திறக்கப் படுகின்றன.

112p2_1527586510.jpg

twitter.com/HAJAMYDEENNKS: ``நிபா வைரஸைக் கட்டுப்படுத்த, வெளவால்களுக்கு வாய்ப்பூட்டுப் போடும் திட்டம் தமிழகத்தில் அமல் படுத்தப்படும்’’ - செல்லூர் ராஜு

twitter.com/skpkaruna: ராயுடு அடிக்கலைன்னா வாட்சன் அடிக்கிறான்.

வாட்சன் அடிக்கலைன்னா டூப்ளெஸ்ஸி அடிக்கிறான்.

டூப்ளெஸ்ஸி அடிக்கலைன்னா ரெய்னா அடிக்கிறான்.

ப்ராவோ, பில்லிங்ஸ், சஹார் எல்லோரும் அடிக்கிறானுங்க.

எவனுமே அடிக்கலைன்னா படுபாவி தோனி அடிக்கிறான்.

என்னதாண்டா பண்ணுவாங்க எதிர் டீம்?!

#CSKTheChampions

112p3_1527586533.jpg

twitter.com/ansari_mas than:  ஹாஸ்பிட்டல்ல குண்டடிபட்ட பையன் வேதனையிலும் சிரித்தபடி கேட்கிறான்,

``நாங்க கம்பெனியை எதிர்த்துதானே போராடினோம். கவர்மென்ட்டை எதிர்த்தாப் போராடினோம்... எதுக்கு எங்களைச் சுடணும்?’’

twitter.com/arumugamsony: கண் முன்னால் நடக்கும் ஸ்டெர்லைட் போராட்டத்தையே நக்கல்பண்ற கும்பல், சுதந்திரப் போராட்டத்தின்போது என்ன பண்ணிட்டு இருந்திருக்கும்?

twitter.com/thoatta:  ஸ்டெர்லைட்டுக்கு மின்சாரத்தை கட் பண்ணிட்டாராம். அடுத்து வாட்டர் சப்ளை கட் பண்ணுவார் போல. அதற்கடுத்து கதவுக்குப் பூட்டு போடுவார்னு நினைக்கிறேன். இவர் முதலமைச்சரா... இல்ல ஹவுஸ் ஓனரா..?

twitter.com/karunaiimaLar: Instagram is a Good entertainer. ஆனா, அது பணக்காரங்க வீட்டுக்குள்ள போன மாதிரி ஒரு ஃபீல். வீட்டோட அழகை ஓரமா நின்னு ரசிச்சு வேடிக்கை மட்டும் பார்த்துட்டு வந்துடணும்.

twitter.com/manipmp: இனி வீதியில் கத்துவதைவிட விராட் கோலியிடம் சொல்லி சேலஞ்ச் செய்யவைக்கலாம்!

112p4_1527586549.jpg

twitter.com/CreativeTwitz: `நீ முன்ன மாதிரி இல்லை’ என்பதற்கு `நீ எனக்குச் சாதகமா இல்லை’ என்றும் அர்த்தம் உண்டு.

twitter.com/withkaran: அம்மா ஆடியோவுக்குப் பதிலா நிர்மலா தேவி ஆடியோ ஒண்ணை விட்டிருந்தா மொத்தமா டைவர்ட் பண்ணியிருக்கலாம்.

twitter.com/manipmp: கடைசி நொடி வரை பதற்றத்துடனும் சுவாரஸ்யத்து டனும் வைத்திருப்பவை, ஏ.டி.எம் மெஷினும் வெயிட் மெஷினும்.

twitter.com/mekalapugazh: அரசியல் வாதிகளில் தேடாதீர்... பொதுமக்களில்கூட காமராஜரும் கக்கனும் இப்போது யாரும் இலர்!

https://www.vikatan.com

Link to comment
Share on other sites

``இந்த பீச்சுக்கு 4 மாசம் லீவு..!” - நிஜமாகவே கடற்கரையை மூடி வைக்கிறது தாய்லாந்து

 

அளவுக்கு அதிகமாகச் சுற்றுலாப் பயணிகள் வருவதால் தங்கள் நாட்டின் மிக முக்கிய சுற்றுலாத்தலமான `பீ-பீ மாயா' கடற்கரையை மக்கள் பயன்படுத்த தடை விதித்துள்ளதாக தாய்லாந்து நாட்டின் தேசியச் சுற்றுலாத்துறை அறிவித்துள்ளது.

2000-ம் ஆண்டு வெளியான ஹாலிவுட் திரைப்படம் `தி பீச் (The Beach). ஆஸ்கர் நாயகன் லியார்னடோ டீ காப்ரியோ கதாநாயகனாக நடித்த இப்படம் இந்தக் கடற்கரையிலேயே படமாக்கப்பட்டது. தமிழில் ஏழாம் அறிவு (முன் அந்திச் சாலையில் பாடல்) உட்படப் பல திரைப்படங்கள் இங்கே படமாக்கப்பட்டிருக்கின்றன. `தி பீச்’ திரைப்படத்துக்குப் பிறகு உலகம் முழுவதும் புகழ்பெற்ற இந்தக் கடற்கரை, தனது இயற்கை எழிலால் உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்து சுற்றுலாப் பயணிகளை கவர்ந்தது. ஆனால், சுற்றுலாவுக்கு வரும் மக்கள் கடற்கரையின் அழகைக் கெடுக்கின்றனர் என்ற குற்றச்சாட்டு பெருகிவருவதால் இந்தத் தவிர்க்க முடியாத முடிவை எடுக்கும் நிலையில் உள்ளதாக தாய்லாந்து சுற்றுலாத்துறை கூறியுள்ளது.

 

Maya beach

இதுகுறித்துப் பேசிய அந்நாட்டின் சுற்றுலாத்துறை ஆலோசகர் தம்ராங்னவசாவத், ``உலகில் மிகவும் இயற்கையான அழகைக் கொண்ட நாடுகளில் மிக முக்கிய நாடாக தாய்லாந்து உள்ளது. எனவே, நாட்டின் வளர்ச்சிக்கும் வருவாய்க்கும் தூணாக சுற்றுலாத்துறை இருந்து வருகிறது. எங்கள் நாட்டின் மிகவும் பிரபலமான தளங்களில் `பீ-பீ மாயா' கடற்கரையும் ஒன்று. இக்கடற்கரைக்கு ஒரு வருடத்துக்கு 20 முதல் 30 லட்சம் சுற்றுலாப்பயணிகள் வரை வந்து செல்கின்றனர். தொடற்பயன்பாட்டில் இருப்பதால் இவ்விடத்தின் அழகு சற்று சீர்குலைந்து காணப்படுகிறது. மேலும், என்ஜின் படகுகளின் பயன்பாடு அதிகமாக உள்ளதால் கடலில் உள்ள உயிரினங்களும் பாதிப்படைகிறது. இவை அனைத்துக்கும் தீர்வு காணும் விதமாக, ஜூன் 1-ம் தேதி முதல் செப்டெம்பர் 29-ம் தேதி வரை பொதுமக்களுக்கு அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது. மீண்டும் செப்டம்பர் 30-ல் திறக்கப்படும்" என்று அவர் கூறியுள்ளார்.
 
தாய்லாந்து, பிலிப்பைன்ஸ் போன்ற தீவுகளின் வருவாய் பெரும்பாலும் அந்நாடுகளின் சுற்றுலாத்துறையை நம்பியே இருக்கின்றது. 1990-ன் தகவல்படி தாய்லாந்து நாட்டின் சுற்றுலாப்பயணிகள் எண்ணிக்கை 53 லட்சமாக இருந்துள்ளது. அதே எண்ணிக்கை 2017-ம் ஆண்டு 3.5 கோடியாக உயர்ந்துள்ளது. இந்த எண்ணிக்கை ஏற்றதால் பொருளாதார வளர்ச்சி என்ற நன்மையுடன் இயற்கைச் சீர்கேடு என்ற தீமையையும் அந்த நாடு சுமந்து செல்கின்றது. 

சுற்றுலாத்தலங்களைப் பயன்படுத்த தடைவிதிப்பது போன்ற சம்பவங்கள் நடைபெறுவது உலகில் இதுவே முதல் முறை அல்ல. உலகின் பல சுற்றுலாத்தலங்கள், மக்களின் மோசமான நடவடிக்கைகளால் அசுத்தம் செய்யப்பட்டு பின்னர் பயன்பாடு ரத்து செய்யப்பட்டுள்ளன. இன்னமும் பல இடங்கள் சுற்றுலாவாசிகளால் அதிகமாகப் பாதிப்படைந்திருக்கின்றன. அவற்றின் முக்கியமான மூன்று இடங்கள்:


வெனிஸ், இத்தாலி:
உச்சபட்ச சீசன் நேரத்தில் ஒரே நாளில் ஒரு லட்சம் பேர் வரை வந்து செல்வதால், கூட்ட நெரிசல் ஏற்பட்டு முன்பு போல் தற்போது இந்நகரம் இல்லை என்பதே பலரின் கருத்தாக உள்ளது. 


பிரமிட், எகிப்து:

எகிப்தில் சுற்றுலாப்பயணிகளைக் கவரும் இடங்களுள் மிக முதன்மையானது பிரமிட். ஆனால், பார்வையாளர்கள் அதிகமாக வந்து அங்குள்ள பிரமிட் கட்டடத்தின் வடிவங்களைச் சேதப்படுத்தியுள்ளனர். 


மடகாஸ்கர் தீவு:

தனது கண்கவர் இயற்கை அழகால் உலகின் பல்வேறு இடத்திலுள்ள மக்களைக் கவர்ந்துள்ள இத்தீவு, அந்த மக்களாலேயே தனது அழகையும் இழந்து வருகிறது என்பதே சோகம்கலந்த உண்மையாக உள்ளது.

 

`மக்கள் வரத்துக் குறைவாக உள்ளது' என்ற நிலை சென்று' ஐயோ இவ்வளவு மக்களா?' என்று என்னும் நிலைக்கு உலகின் பல இடங்கள் தள்ளப்பட்டுள்ளன. சுற்றுலாத்துறையின் மூலம், உள்ளூர் மக்கள் பல பேருக்கு வேலை வாய்ப்புகளும் அந்நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும் பெரும் நன்மை ஏற்படும் நிலை இருப்பதால், சுற்றுலா செல்லும் மக்கள் இதை மனதில் வைத்துக்கொண்டு, செல்லும் இடத்தை இயன்ற அளவு சுத்தமாகவும் இயற்கைச் சீர்கேடு ஏற்படுத்தாத வகையிலும் நடந்துகொண்டால், `இந்தப் பூமி செழிக்கும்; அந்த நாடும் செழிக்கும்!'

https://www.vikatan.com

Link to comment
Share on other sites

நெகிழச் செய்த தோனி: சச்சின் ரசிகருக்கு பண்ணை வீட்டில் ‘சூப்பர் விருந்து’

 

 
sudhir

தோனியின் குடும்பத்தினருடன் விருந்து சாப்பிட்ட சுதிர் கவுதம்   -  படம் உதவி: ட்விட்டர்

 இந்திய அணியின் அதிதீவிரமான ரசிகரும், சச்சினின் தீவிர பக்தர், எனச் சொல்லப்படும் ரசிகர் ஒருவரைத் தனது பண்ணை வீட்டுக்கு வரவழைத்து, விருந்தளித்து, புகைப்படங்கள் எடுத்து தோனி நெகிழ்ச்சி அடையச் செய்துள்ளார்.

சச்சின் டெண்டுல்கர், கங்குலி, டிராவிட், தோனி, விராட் கோலி, ரெய்னா உள்ளிட்ட புகழ் நட்சத்திர கிரிக்கெட் வீரர்களை ரசிகர்கள் நேரடியாகப் பார்ப்பது என்பது கடினமான செயல். ஆனால், நட்சத்திர கிரிக்கெட் வீரர்களே ஒரு ரசிகரை வரவழைத்து விருந்து அளிப்பதும், அவருடன் புகைப்படமும் எடுத்துக்கொள்வதும் என்றால், அது சுதிர் கவுதமாக மட்டுமே இருக்க முடியும்

   
 
 

இந்திய கிரிக்கெட் அணியின் அதிதீவிர ரசிகரும், சச்சின் மீது தீராத பைத்தியமாக இருக்கும் சுதிர் கவுதமை தெரியாத இந்திய கிரிக்கெட் வீரர்கள் இருந்தால் வியப்புதான். இந்திய அணி பங்கேற்கும்  கிரிக்கெட் போட்டிகள் நடந்தாலும் அங்கு தேசியக் கொடியுடன் சென்று, உடலில் மூவர்ணத்தைப் பூசி ஆதரவு தெரிவிப்பார்.

இப்போதும் கூட சுதிர் கவுதம் தனது தலையில் இந்தியாவின் வரைப்படத்துக்கு ஏற்ப தலைமுடியை அமைத்துக்கொண்டு அதில் மூவர்ணத்தைத் தீட்டியுள்ளார்.

இந்திய அணி வெளிநாடுகளில் பங்கேற்கும் போட்டிகளில் கூட சுதிர் கவுதம் தனது சொந்த செலவில் சென்று ஆதரவு அளித்து வருகிறார். இவரின் தீவிரத்தைப் பார்த்த கிரிக்கெட் வீரர்கள் பலர், சச்சின், சேவாக், கங்குலி, தோனி ஆகியோர் சுதிர் கவுதமும் சொந்த செலவில் விமான டிக்கெட் எடுத்துக்கொடுத்து அழைத்துச் செல்வதும் உண்டு.

sachin1jpg

2011உலகக்கோப்பையுடன் சச்சினுடன் புகைப்படம் எடுத்த சுதிர் கவுதம்

 

இந்திய அணி மீதும், குறிப்பாக சச்சின் மீதும் சுதிர் கவுதமுக்கு அளவுகடந்த அன்பு உண்டு. 2011-ம் ஆண்டு உலகக்கோப்பையை இந்திய அணி வென்ற பின், அதைத் தொட்டுப்பார்ப்பது என்பது ரசிகர்களுக்கு எட்டாத ஒரு விஷயம். மேலும், வீரர்களின் ஓய்வுஅறைக்கு செல்வதும் ரசிகர்களால் முடியாது.

ஆனால், இந்திய கிரிக்கெட் வீரர்கள் தங்களின் ஓய்வு அறைக்குள் அனுமதிக்கும் ஒரே ரசிகர் சுதிர் கவுதம் மட்டுமே. 2011-ம் ஆண்டு உலகக்கோப்பையை இந்திய அணி வென்றபின், சுதிர் கவுதமை அழைத்துச் சென்ற சச்சின் டெண்டுல்கர் அவருடன் கோப்பையை கொடுத்து புகைப்படம் எடுத்துக்கொண்டார்.

இந்நிலையில், சமீபத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஐபிஎல் போட்டியில் சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது. சூதாட்டச் சர்ச்சை காரணமாக 2 ஆண்டுகள் தடைவிதிக்கப்பட்டு மீண்டும் திரும்பி வந்த சிஎஸ்கே அணி அபாரமாக கோப்பையை வென்றது. இந்த மகிழ்ச்சியில் தோனியும், சிஎஸ்கே அணி வீரர்களும் உற்சாகமாக தங்கள் குடும்பத்தினருடன் நாட்களைக் கழித்து வருகின்றனர்.

ஆனால், இந்த நேரத்தில் ரசிகரை மகிழ்ச்சிப்படுத்த எண்ணிய தோனி, சுதிர் கவுதமை ராஞ்சி நகரில் உள்ள தனது பண்ணை வீட்டுக்கு வெள்ளிக்கிழமை விருந்தினராக அழைத்தார். அங்கு சென்ற சுதிர் கவுதமுக்கு தனது வீட்டில் தோனி சூப்பர் விருந்து ஏற்பாடு செய்திருந்தார். தோனியுடனும், அவர்களின் குடும்பத்தினருடன் அமர்ந்து விருந்து சாப்பிட்ட சுதிர் கவுதம் தனது மகிழ்ச்சியையும், புகைப்படத்தையும் ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.

sudhir1jpg

தோனியுடன் வீட்டில் புகைப்படம் எடுத்துக்கொண்ட சுதிர் கவுதம்

 

இது குறித்து சுதிர் கவுதம் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில், ‘‘எதிர்பாராதவிதமாக தோனியிடம் இருந்து எனக்கு அழைப்பு வந்தது. ராஞ்சியில் உள்ள அவரின் பண்ணை வீட்டில் எனக்கு தோனியும், அவரின் குடும்பத்தினரும் மிகசிறப்பான விருந்து அளித்துக் கவுரவித்தனர். இந்த நிகழ்வை வாழ்க்கையில் என்னால் மறக்க முடியாது. எனக்கு விருந்து வைத்து என்னை இன்ப அதிர்ச்சியில் திகைத்த வைத்த தோனிக்கும், அவரின் மனைவி சாக்ஷிக்கும் எனது நன்றிகள். சிஎஸ்கே சாம்பியன் ஆன மகிழ்ச்சியில் குடும்பத்துடன் நேரத்தைப் போக்கும் தோனி இந்த நேரத்தில் ரசிகரை கவுரப்படுத்தியது பெருமையாக இருக்கிறது’’ எனத் தெரிவித்துள்ளார்.

http://tamil.thehindu.com

Link to comment
Share on other sites

திருமண விழாவில் நடனம்; சமூக வலைதளங்களில் ஒரே நாளில் ஹிட்டான கல்லூரி பேராசிரியர்


 

 

this-man-s-govinda-style-dance-is-a-viral-hit

 

 

மத்தியப்பிரதேசத்தில் திருமண விழா ஒன்றில் நடனமாடிய பேராசிரியர் ஒரே நாளில் மிகவும் பிரபலமாகிவிட்டார். அவரது உற்சாகமான ஆட்டம் சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.

கடந்த மே 31-ம் தேதி கவுதம் திரிவேதி என்பவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ஒரு வீடியோவை ஷேர் செய்து அதன் கீழ் "யுனெஸ்கோவால் தேர்வு செய்யப்பட்ட சிறப்பான திருமண வைபவ கொண்டாட்டப் பதிவு" எனக் குறிப்பிட்டிருந்தார்.

 

அவர் அந்த வீடியோவை ட்விட்டரில் பகிர்ந்த சில நிமிடங்களிலேயே இணையத்தில் வைரலானதுடன் ஊடகங்களில் செய்தியானது.

இப்போது அந்தப் பேராசிரியர் சஞ்சீவ் ஸ்ரீவத்ஸவா ஊடகங்களுக்குப் பேட்டியளித்துக் கொண்டிருக்கிறார். அவர் ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டி, "என்னுடைய நடன வீடியோவை இணையவாசிகள் கொண்டாடிவருகின்றனர். இது எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது. எனது வீடியோவைப் பார்த்து லைக் போட்ட ஒவ்வொருவருக்கும் நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்" என்றார்.

அவரது மனைவி அளித்த பேட்டியில், "எனது கணவரின் நடனத்துக்கு மக்கள் அளித்துள்ள வரவேற்பு எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. அவரும் மிகுந்த உறசாகத்தில் இருக்கிறார். அவருக்கு எப்போதுமே நடனம் மீது அதீத ஆர்வமுண்டு. நடன நிகழ்ச்சிகளில் அவர் கலந்து கொண்டிருக்கிறார். அதுதவிர இதுபோன்ற திருமண நிகழ்ச்சிகள், கல்லூரி விழாக்களில் நடனமாடி அனைவரையும் மகிழ்வடையச் செய்வார்" என மகிழ்ச்சியும் பெருமிதமும் பொங்கக் கூறினார்.

ட்விட்டராட்டிகள் சஞ்சய் ஸ்ரீவத்ஸாவைக் கொண்டாடி வருகின்றனர். அவர் ஆடிய அந்தப் பாடல் பாலிவுட் நடிகர் கோவிந்தா நடித்தத் திரைப்படத்தில் இடம்பெற்ற பாடல். அதனால், கோவிந்தாவின் உன்னத ரசிகன் என்றெல்லாம் சஞ்சய் கொண்டாடப்பட்டுவருகிறார்.

 

 

http://www.kamadenu.in

Link to comment
Share on other sites

தென்னிந்திய ஜேம்ஸ்பான்ட் ஜெய்சங்கர் இறந்த தினம்: ஜூன் 3- 2000

 
தென்னிந்திய ஜேம்ஸ்பான்ட் ஜெய்சங்கர் இறந்த தினம்: ஜூன் 3- 2000
 
ஜெய்சங்கர் (இ. ஜூன் 3, 2000) புகழ் பெற்ற தமிழ்த் திரைப்பட நடிகர் ஆவார். சங்கர் என்ற இயற்பெயர் கொண்ட இவருக்கு இவரது முதல் திரைப்படத்தின் இயக்குனர் ஜோசப் தளியத், ஜெய் என்ற பெயர்ச் சேர்க்கையை அளித்தார்.

பட்டதாரியான இவர், 1965-ல் இரவும் பகலும் என்ற திரைப்படத்தில் அறிமுகமானார். இதைத்தொடர்ந்து 200-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து முடித்தார்.

எம்.ஜி.ஆர், சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன் முதலியோர் நடித்த அதே கால கட்டத்தில் நடித்தாலும், இவருக்கென ரசிகர்கள் இருந்தார்கள். இவரது சமகால நடிகர்களான முத்துராமன், ரவிச்சந்திரன் போன்றோருடனும் இவர் பல படங்களில் இணைந்து நடித்துள்ளார்.

100-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்த பிறகு, ரஜினிகாந்த் நடித்த முரட்டுக்காளையில் வில்லனாகப் புதிய பரிமாணத்தில் தோன்றி பாராட்டுக்களைப் பெற்றார். அதன்பிறகு, பல படங்களிலும் வில்லனாகவும், குணச்சித்திர நடிகராகவும் பரிமளித்தார்.

ஜெய்சங்கர் சண்டைப் படங்களில் அதிகம் நடித்திருந்தாலும், குடும்பக்கதைகளிலும் அதிகம் நடித்து பெயர் வாங்கினார். பல திரைப்படங்களில் துப்பறிபவராகவும் காவலராகவும் வேடம் ஏற்று நடித்ததால் இவரை தென்னிந்திய ஜேம்ஸ்பாண்ட் எனவும் ரசிகர்கள் அழைத்தனர்.

இவர் பற்பல திரைப்படங்களில் குறைந்த இடைவெளிகளில் தொடர்ந்து நடித்ததால், இவரது படங்கள் வாரம் ஒன்றென வெளிவந்த வண்ணம் இருந்ததன் காரணமாக இவர் 'Friday hero' (வெள்ளிக்கிழமை நாயகர்) எனவும் அழைக்கப்பட்டார். 2000-ஆம் ஆண்டு ஜூன் 3-ம் தேதி அன்று, சென்னையில் ஒரு தனியார் மருத்துவமனையில், தனது 62-ம் வயதில் ஜெய்சங்கர் மாரடைப்பால் காலமானார்.
 

 

தி.மு.க. தலைவர் கருணாநிதி பிறந்த தினம்: ஜூன் 3-1924

 
அ-அ+

மு. கருணாநிதி, இவரது இயற்பெயர் தட்சிணாமூர்த்தி (பிறப்பு ஜூன் 3, 1924) திராவிட முன்னேற்றக் கழகத் தலைவரும் முன்னாள் தமிழக முதல்வரும் ஆவார்.

 
 
 
 
தி.மு.க. தலைவர் கருணாநிதி பிறந்த தினம்: ஜூன் 3-1924
 
மு. கருணாநிதி, இவரது இயற்பெயர் தட்சிணாமூர்த்தி (பிறப்பு ஜூன் 3, 1924) திராவிட முன்னேற்றக் கழகத் தலைவரும் முன்னாள் தமிழக முதல்வரும் ஆவார். 1969-ல் முதன் முறையாக தமிழக முதல்வரானார். மே 13, 2006-ல் ஐந்தாவது முறையாக முதலமைச்சராகப் பொறுப்பேற்றார்.

கருணாநிதி, தமிழ்த் திரையுலகில் கதை, உரையாடல் பணிகளில் ஈடுபாடு கொண்டவர். 'தூக்குமேடை' நாடகத்தின் போது எம். ஆர். ராதா 'கலைஞர்' என்ற பட்டம் அளித்தார். இன்றும் அப்பெயராலேயே ஆதரவாளர்களால் அழைக்கப்படுகின்றார். 2011 தமிழக தேர்தலில் திருவாரூர் தொகுதியில் போட்டியிட்டு தேர்ந்தெடுக்கப்பட்டார்.

நாகப்பட்டினம் மாவட்டத்தில் திருவாரூருக்கு அருகிலுள்ள திருக்குவளை என்னும் கிராமத்தில் ஜூன் 3, 1924-ல் முத்துவேலருக்கும் அஞ்சுகம் அம்மையாருக்கும் மகனாகப் பிறந்தார். இவரது இயற்பெயர் தட்சிணாமூர்த்தி. கருணாநிதி, தனது பள்ளிப் பருவத்தில் நாடகம், கவிதை, இலக்கியம் ஆகியவற்றில் அதிக ஆர்வம் கொண்டிருந்தார். நீதிக்கட்சியின் தூணாக கருதப்பட்ட பேச்சாளர் அழகிரிசாமியின் பேச்சால் ஈர்க்கப்பட்ட கருணாநிதி, தனது 13-வது அகவையில், சமூக இயக்கங்களில் முழுமையாக தன்னை ஈடுபடுத்திக்கொண்டார்.

கருணாநிதி தன்னுடைய 14 வது வயதில் நீதிக்கட்சித் தலைவர்களில் ஒருவரான அழகிரிசாமியின் பேச்சின்பால் ஈர்க்கப்பட்டு, அரசியலில் ஈடுபடலானார். அதன்பின் இந்தி எதிர்ப்பு போரட்டத்தின் மூலம் தன் அரசியல் தீவிரத்தைக் காட்டினார். அவர் வாழ்ந்த திருவாரூர் பகுதியில் இளைஞர்களை மாணவ நேசன் என்ற துண்டு கையெழுத்துப் பதிப்புகள் மூலம் ஒன்று திரட்டினார். அவ்விளைஞர் அணியை பின் மாணவர் அணியாக தமிழ்நாடு மாணவர் மன்றம் என்ற பெயரில் உருவாக்கினார். தமிழ்நாட்டில் உருவான முதல் திராவிட இயக்க மாணவர் அணி என்ற நிலையை ஏற்படுத்தினார்.

கருணாநிதியும் அவரது மாணவர் அணித் தோழர்களும் பல்வேறு குடிசை வாழ் மக்களிடையே சென்று சமூக பணிகளிலும், விழிப்புணர்வு வேலைகளிலும் ஈடுபட்டனர். இந்த நிலையில் அவர் துண்டுப் பதிப்பாகத் தொடங்கிய முரசொலி செய்தித்தாளாக, கட்சிப் பத்திரிகையாக உருவெடுத்தது. முரசொலி ஆரம்பித்த முதலாமாண்டு விழாவை தன் மாணவர் மன்ற அணித்தோழர்களான அன்பழகன், இரா. நெடுஞ்செழியன், மதியழகன் ஆகியோருடன் கொண்டாடினார்.

1957-ல் நடைபெற்ற திமுக இந்தி எதிர்ப்பு மாநாட்டில் தமிழ்நாட்டில் நடுவண் அரசால் இந்தி திணிக்கப்படுவதை வன்மையாக எதிர்ப்பதென தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அக்டோபர் 13, 1957 அன்றைய நாளை இந்தி எதிர்ப்பு நாளாக பெருந்திரளான மக்களுடன் அமைதியான முறையில் கடைப்பிடிப்பது என முடிவானது.

இப்போராட்டத்துக்கு தலைமை தாங்கிய கருணாநிதி நடுவண் அரசின் இந்தி திணிப்பை எதிர்த்து இவ்வாறு முழக்கமிட்டார்: "மொழிப்போராட்டம்.. எங்கள் பண்பாட்டை பாதுகாக்க, இது எமது மக்களின் தன்மானம் மற்றும் எங்களது கட்சியின் அரசியல் கொள்கை.. மேலும்இந்தி என்பது உணவு விடுதியிலிருந்து எடுத்துச் செல்லும் உணவு (எடுப்பு சாப்பாடு), ஆங்கிலம் என்பது ஒருவர் சொல்ல அதன்படி சமைக்கப்பட்ட உணவு, தமிழ் என்பது குடும்பத் தேவையறிந்து, விருப்பமறிந்து, ஊட்டமளிக்கும் தாயிடமிருந்து பெறப்பட்ட உணவு” என்று அவர் கூறினார்.

அக்டோபர், 1963, இந்தி எதிர்ப்பு மாநாடு சென்னையில் (மதராஸ்) கூட்டப்பட்டது. நடுவண் அரசின் புரிந்துகொள்ளாமையை உணர்த்தும் விதமாக இந்திய அரசியலமைப்பு தேசிய மொழிகள் சட்ட எரிப்பு போராட்டம் நடத்துவெதென மாநாட்டில் தீர்மானிக்கப்பட்டது. நவம்பர் 16 அன்று அண்ணாதுரையும், நவம்பர் 19 அன்று கருணாநிதியும் கைது செய்யப்பட்டு 25 நவம்பர் அன்று உயர் நீதிமன்ற ஆணையால் விடுவிக்கப்பட்டனர்.

போட்டியிட்ட அனைத்து தேர்தல்களிலும் இவர் வெற்றிபெற்றார். 1957-ம் ஆண்டு சுயேச்சையாகவும் மற்ற அனைத்து தேர்தலிலும் திமுக வேட்பாளராகவும் போட்டியிட்டார். 1984ம் ஆண்டு நடந்த தேர்தலில் போட்டியிடவில்லை. 1957-ம் ஆண்டு திமுக தேர்தலில் போட்டியிட முடிவெடுத்து கருணாநிதி குளித்தலையில் போட்டியிட்டு வென்று, முதல் முறையாக திமுக சட்டமன்றத்தில் அடியெடுத்து வைக்கவும், முதல் முறையாக கருணாநிதி தனது சட்டமன்ற வரலாற்றைத் துவக்கவும் வழிவகுத்தது.

1967-ல் நடைபெற்றத் தேர்தலின் மூலம் திமுக முதல் முறையாக தமிழக ஆட்சியில் பங்குபெற்றது. நாவலர் இரா. நெடுஞ்செழியன் பொதுச் செயலாளராகவும், கருணாநிதி பொருளாளராகவும் கட்சியில் உயர்வு பெற்றனர். தி.மு.க.வின் தொடக்க கால உறுப்பினர் கருணாநிதி. அவர், 1957-ம் ஆண்டிலிருந்து தமிழக சட்டமன்ற உறுப்பினராகவும், கடந்த 40 ஆண்டுகளாக தி.மு.க.வின் தலைவராகவும் பதவி வகித்து வருகின்றார்.

தமிழகத்தின் முதல்வராக ஐந்துமுறை கருணாநிதி பதவி வகித்துள்ளார்.   

1969-1971- அண்ணா மறைவுக்குப் பின் முதல் முறை ஆட்சி

1971-1976—இரண்டாவது முறையாக 1989- 1991- எம். ஜி.ஆர்., மறைவுக்குப் பின் மூன்றாம் முறை ஆட்சி 1996-2001—நான்காம் முறை ஆட்சி 2006-2011—ஐந்தாம் முறை ஆட்சி 

https://www.maalaimalar.com

Link to comment
Share on other sites

போகிற போக்கில்: ஓவியச் சீலை

 

 
sareesjpg

படித்த துறையைவிடத் தனக்குப் பிடித்த துறையில் ஈடுபடுகிறவர்கள் தங்கள் இலக்கை நோக்கி மகிழ்வோடு பயணிப்பார்கள். கோயம்புத்தூரைச் சேர்ந்த ரமா ராஜேஷ், அப்படித்தான் பயணித்துவருகிறார். ஓவியத்தின் மீதிருந்த ஆர்வத்தின் காரணமாகப் பத்தாம் வகுப்பிலிருந்தே ஓவியங்கள் வரையத் தொடங்கினார். அதன் அடுத்த கட்டமாக லண்டனில் உள்ள ஈஸ்ட் லண்டன் பல்கலைக்கழகத்தில் நுண்கலைத் துறையில் முதுநிலை படித்தார்.

 

புடவை ஆராய்ச்சி

 

பல்கலைக்கழகப் படிப்பின் இறுதியாண்டின்போது புடவைகளில் ஓவியம் வரைவது குறித்த ஆராய்ச்சியை ரமா மேற்கொண்டார். அவரது இந்த ஆராய்ச்சிக்குப் பல்வேறு தரப்பினரிடமிருந்து வரவேற்பு கிடைத்தது. இதையடுத்து பட்டு, பருத்தி, ரா சில்க், ஆண்களின் பட்டுச் சட்டைகள் ஆகியவற்றில் மயில், கண்ணன், புத்தர், பூக்கள் போன்றவற்றை வரையத் தொடங்கினார்.

1jpg

அக்ரலிக், ஃபேப்ரிக் கலர் ஆகிய வண்ணங்களைக் கொண்டு புடவைகளில் ஓவியம் தீட்டுகிறார் ரமா. “பொதுவா துணிகளில் எம்ப்ராய்டரி டிசைன் போடுவாங்க. கடந்த ஏழு வருஷமா புடவைகளில் நான் ஓவியம் வரையறேன். இந்தப் புடவைகளை டிரை கிளீன் செய்தாலும் ஓவியங்கள் அழியாது.

அதேபோல் பழைய புடவைகளோடு புதிய புடவைகளைச் சேர்த்து மிக்ஸ் அண்டு மேட்ச் காம்பினேஷனிலும் ஓவியங்களை வரையறேன்” என்று சொல்லும் ரமா, வாடிக்கையாளர்களுக்குப் பிடித்தமான ஓவியங்களை அவர்கள் விரும்புகிற ஆடைகளில் வரைந்து தருகிறார். ஒரு முழு நீளப் புடவையில் ஓவியம் வரைய பத்து முதல் பதினைந்து நாட்கள்வரை ஆகும் என்கிறார் அவர்.

கேரளச் சுவரோவியம் மியூரல், கலம்கரி போன்ற ஓவியங்களையும் ஆடைகளில் வரைகிறார். சுமார் இருபது ஆண்டுகளுக்கு மேலாக ஓவியக்கலைத் துறையில் பயணித்துவரும் ரமா ராஜேஷ் பள்ளி, கல்லூரிகளில் தொடங்கி வெளிநாடுகள்வரை சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஓவியக் கண்காட்சிகளை நடத்தியுள்ளார்.

13CHLRDRAMA%205

ஓவியத்தின் மேல் ஆர்வம் உள்ளவர்களுக்காக ஓவியப் பயிற்சி பள்ளியையும் நடத்திவருகிறார். ஓவியப் புடவைகளை விற்பனை செய்வதற்கான அங்காடியையும் இவர் நடத்திவருகிறார். தான் உருவாக்கிய ஓவியச் சீலைகளுக்குத் தானே மாடலாகவும் மாறிவிடுகிறார் ரமா.

http://tamil.thehindu.com

Link to comment
Share on other sites

 

‘நான் சாமி இல்ல பூதம்’- விறுவிறுப்பான காட்சிகளுடன் வெளியானது சாமி-2 டிரெய்லர்

 
 

விக்ரம் நடிப்பில், ஹரி இயக்கத்தில் உருவாகியுள்ள சாமி-2 படத்தின் டிரெய்லர் வெளியாகி இணையத்தைக் கலக்கி வருகிறது. 

டிரெய்லர்

 

 2003-ம் ஆண்டில் நடிகர் விக்ரம் இயக்குநர் ஹரி காம்பினேஷனில் வெளியான ஆக்‌ஷன் திரைப்படம் சாமி. விக்ரம், த்ரிஷா, விவேக், ரமேஷ் கண்ணா எனப் பல நட்சத்திரங்கள் இணைந்து நடித்த இந்தத் திரைப்படம் மிகப் பெரிய ஹிட் ஆனது. இதனைத் தொடர்ந்து கடந்த வருடம் சாமி-2 படத்தை இயக்கப் போவதாக இயக்குநர் ஹரி அறிவித்திருந்தார். அதன் படி இதற்கான சூட்டிங் வேலைகளும் மிக வேகமாக தொடங்கி நடைபெற்று வந்தன. அவ்வப்போது இப்படத்தின் சூட்டிங் புகைப்படங்கள் வெளியாகி இந்தப் படத்தின் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்து வந்தது.

இந்நிலையில் இன்று சாமி-2 படத்தின் டிரெய்லர்  வெளியிடப்பட்டுள்ளது. 15 வருடங்களுக்கு முன்னதாக எடுக்கப்பட்ட சாமி படத்தில் இருந்ததைப் போலவே இந்தப் படத்திலும் நடிகர் விக்ரம் அதிரடியாகக் களமிறங்கியுள்ளார். ஹரி படம் என்பதால் ஆக்‌ஷன் காட்சிகள் மட்டுமே நிறைந்து விறுவிறுப்பாக டிரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது. இந்த படத்தில் வில்லனாக பாபி சிம்ஹா நடித்துள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது.

சாமி-2 படத்தின் டிரெய்லர் விக்ரம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. வெளியான சில நிமிடங்களிலேயே 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் டிரெய்லரை பார்த்துள்ளனர்.
 

Link to comment
Share on other sites

இருட்டின் அழகு - பிபிசி நேயர்களின் சிறந்த புகைப்படங்கள் #BBCTamilPhotoContest

 

'இரவின் அழகு' என்பதை மையக்கருவாகக் கொண்டு பிபிசி தமிழ் நடத்திய 26ஆவது வார புகைப்படப் போட்டியில் தேர்வு செய்யப்பட்ட பிபிசி நேயர்களின் சிறந்த புகைப்படங்கள்.

ஜெரோம் க்ளின்டன், வேலூர்   அஷோக் தமிழ், தாராபுரம்   க்ருஷிகா ஸ்ரீ   சார்லஸ்   அஷாட், இலங்கை   காஜா முஹீனுதீன்   பீர் முஹமத், தூத்துக்குடி / இடம்: ஹாங்காங்   பிரதீப்ராஜ் வெங்கடேசன்   பிரகாஷ், புர்ஜ்   த. ஜோனிஷ், குளச்சல்

 

 

https://www.bbc.com

Link to comment
Share on other sites

``ஃபேஷன் நகைகள்... வீட்டிலிருந்தே மாதம் ரூ.30 ஆயிரம் சம்பாதிக்கிறேன்!" அனுபவக் கதை

 
 

திகரித்துவிட்ட விலைவாசியைச் சமாளிக்க, ஒரு குடும்பத்தின் கணவன் மனனவி இருவருமே சம்பாதிக்கும் சூழல் இன்றைக்கு உருவாகிவிட்டது. அதேநேரம், வெளியில் வேலைக்குச் சென்றுதான் சம்பாதிக்க முடியும் என்ற நிலையும் இல்லை. பெண்கள் வீட்டிலிருந்தே சிறுதொழில்கள் மூலம் ஆயிரங்களில் சம்பாதிக்கத் தொடங்கிவிட்டனர். அதற்கு கிராஃப்ட் பெரிதும் உதவுகிறது. சில்க் திரட், டெரகோட்டா, சோப் மேக்கிங், ஃபேஷன் நகைகள் மேக்கிங், டால் மேக்கிங் என கிராஃப்டில் இருக்கும் பல பிரிவுகளை, தங்களுக்கு வருமானம் தரும் தொழிலாக மாற்றிவிட்டனர் பெண்கள். ஜூவல்லரி மேக்கிங் உருவாக்கம், விற்கும் முறைகள் பற்றிச் சொல்கிறார்,  கரூரைச் சேர்ந்த வைதேகி.

ஃபேஷன் நகைகள்

 

``எனக்குச் சொந்த ஊர் கரூர், நான் எம்.சி.ஏ, படிச்சிருக்கேன். இப்போ, கரூரில் சொந்தமாக கிராஃப்ட் பிசினஸ் பண்றேன். முன்னாடியெல்லாம் வீட்டில் இருக்கும் ஆண்கள் சம்பாதித்தாலே குடும்பத்தை நடத்திவிடலாம். இப்போ நிலைமை மாறிடுச்சு. வேலைக்குப் போய் சம்பாதிக்க நினைக்கும் எல்லாப் பெண்களுக்குமே படிப்புக்கு ஏற்ற வேலையும் சம்பளமும் கிடைக்கிறதில்லை. அதையும் தாண்டி, குழந்தைகளைக் கவனிக்கிறதிலும் சிக்கல் உருவாகுது. அதனால், வீட்டிலிருந்தே சுயதொழில் தொடங்கலாம்னு நான் முடிவெடுத்தேன். 

வைதேகிஎனக்குச் சின்ன வயசிலிருந்தே கிராஃப்ட் வொர்க் ரொம்பப் பிடிக்கும். வீட்டிலிருக்கும் பழைய, பயன்படுத்தப்படாத பொருள்களில் புதுசு புதுசா ஏதாவது செய்து வீட்டை அலங்கரிப்பேன். அப்படித்தான் ஃபேஷன் நகைகளும் செய்ய ஆரம்பிச்சேன். நானாக நிறைய மாடல்களை உருவாக்கினேன். அதை விஷேச வீடுகளுக்குப் போட்டுட்டுப் போவேன். அதைப் பார்த்து எல்லோரும் பாராட்டுவாங்க. அது எனக்கு ஜூவல்லரி மேக்கிங் மேலே ஆர்வத்தை அதிகமாக்கிடுச்சு. ஜீவல்லரியில் என்ன என்ன டிரண்ட்ஸ் வருதோ, எல்லாத்தையும் தேடித் தேடி கற்றுக்கொள்ள ஆரம்பிச்சேன்'' என்கிற வைதேகி, அதில் மேற்கொண்ட விஷயங்களைச் சொல்கிறார்.

``ஜூவல்லரி மேக்கிங்கில் உள்ள நுணுக்கங்கள் தெரிஞ்சால்தான் நீட்டான நகைகளைச் செய்ய முடியும். அதற்காக, பயிற்சி வகுப்புகளுக்குப் போவேன். யூ-டியூப் பார்த்தும் தெரிஞ்சுக்குவேன். அப்படிக் கற்ற கலையை பிசினஸாக மாற்ற நினைச்சேன். நான் உருவாக்கின நகைகளை எங்கள் தெருவில் உள்ள கல்லூரிப் பெண்கள், உறவினர் வீட்டுப் பெண்களுக்குக் குறைந்த லாபத்தில் விற்பனை செஞ்சேன். அதற்கு நல்ல வரவேற்பு கிடைச்சது. அப்புறம், என் நெருங்கிய தோழியின் மூலம் ஆன்லைன் பிசினஸ் பற்றித் தெரிஞ்சுக்கிட்டேன். ஆரம்பத்தில் ஃபேஸ்புக் மூலம் நகைகளை விற்றேன். நான் எதிர்பார்க்காத அளவுக்கு வரவேற்பு கிடைச்சது. வெளிநாடுகளிலிருந்தும் ஆர்டர் வந்துச்சு. என் பிசினஸுக்கான ஆன்லைன் பக்கத்தை உருவாக்கினேன். அமேசான், ஃப்ளிப்காட் போன்ற தளங்களில் விற்பனை செய்யும் வாய்ப்பு வந்துச்சு. அதிக முதலீடு இல்லாத என் தொழிலுக்கு நல்ல லாபமும் கிடைச்சது. நிறைய பெண்கள் பயிற்சிக்கு என்னை அணுகினாங்க. வகுப்புகள் எடுக்க ஆரம்பிச்சேன். வீட்டைவிட்டு வெளியே போகாமலே மாசம் 30,000 ரூபாய் சம்பாதிக்கிறேன்'' என்கிறவர், மேற்கொண்டுள்ள புதுமைகளைச் சொல்கிறார்.

ஃபேஷன் நகைகள்

``ஜூவல்லரி மேக்கிங்கில் இப்போ ஜெர்மன் சில்வர் ஜூவல்லரிதான் டிரண்ட். இது மேட் ஃபினிஷ் லுக்கில் இருக்கும். அணிந்துகொண்டால் டிரண்டி லுக் கொடுக்கும். அதனால், கல்லூரிப் பெண்களின் ஃபேவரைட்டா இருக்கு. இதை உருவாக்குவது கடினமான விஷயமில்லை. தனித்தனியாக விற்கும் செயின், டாலர், ஹூக் போன்றவற்றை வாங்கி, நம் கற்பனைத்திறனுக்கு ஏற்ப அசெம்பிள் செய்யணும்.

 

பயிற்சி வகுப்புகள், ரீ- சேல், கிராஃப்ட் மேக்கிங் என இப்போ நான் ரொம்ப பிஸி. ஆரம்பத்தில் என் தேவைகளுக்காகச் செய்யத் தொடங்கிய இந்தத் தொழில், இப்போது என் கணவருக்கு இணையாகக் குடும்பச் செலவில் பங்கெடுக்கவும் துணையா இருக்கு. பொருள்களை மொத்த விலைக்கு வாங்கி அசெம்பிள் செய்யும்போது அதிகமான லாபம் கிடைக்கும். ஜூவல்லரி உருவாக்க ஆர்வம் இல்லை. ஆனால், அதைத் தொழிலாகச் செய்யணும் என்கிற பெண்களும் நகைகளை வாங்கி, ரீ- சேல் செஞ்சாலும் லாபம் உண்டு. ஆர்வமும் உழைப்பும் இருந்தால் அழகா லாபம் அள்ளலாம்'' என நம்பிக்கையூட்டுகிறார் வைதேகி.

https://www.vikatan.com/

Link to comment
Share on other sites

”இது எங்க ஊர் கோழி!” - 2 மாநிலங்கள் சண்டை போடுமளவுக்கு என்ன இருக்கு கருங்கோழியில்?

 
 

கோழிக்கறி என்றாலே யாருக்குத்தான் ஆர்வம் இருக்காது. என் உடன் வேலை செய்யும் நெல்லை நண்பர் ஒருவர் "அண்ணே கருங்கோழி எங்கண்ணே கிடைக்கும்" என்று கேட்டார். இங்க கிடைக்கும் என்ற முகவரி கொடுத்துவிட்டு "ஏன்பா கேட்கிற" என்றேன். அந்தக் கோழி உடம்புக்கு நல்லதாம்னே... சொந்தக்காரங்க வளர்க்கக் கேட்டாங்க" என்றார், அந்த நண்பர். கருங்கோழிகள் இன்று தமிழ்நாட்டில் பிரபலமாகிவிட்டன. . 

கருங்கோழி

 

பொதுவாகக் கோழிகளில் பல வகைகளைப் பார்த்திருப்போம். கோழியின் கால், தலைப்பகுதி, இறக்கை என ஒவ்வொரு பகுதியும் ஒருவிதமான வண்ணத்தில் அமைந்திருக்கும். இதுபோக அவற்றின் தோல், இறைச்சி ஆகியவையும் பல வண்ணங்களில் இருக்கும். ஆனால் தலை முதல் கால்வரை கோழி ஒரே நிறத்தில் இருக்குமா என்றால் இருக்கும் என்பதுதான் பதில். அந்தக் கோழி முழுமையாகவே கறுப்பு நிறத்தில் இருக்கும். இது பெரும்பாலும் கருங்கோழி, நாட்டுக் கறுப்புக் கோழி, கடக்நாத் கோழிகள் என்ற பெயர்களில் அழைக்கப்படுவது உண்டு. ஷாஜகான் திரைப்படப் பாடலில் "கறுத்தக்கோழி போட்டு வறுத்து வச்சிருக்கேன்" என்று ஒரு வரி இடம்பெறும். அதுவும் இந்தக் கறுங்கோழியைத்தான் குறிக்கும். இதன் பூர்வீகம் மத்திய பிரதேசம். இது காளி மாசி எனவும் அழைக்கப்படுகிறது. இதற்குக் காளியின் தங்கை என்று பொருள். இதன் வெளிப்புற நிறம் மட்டும் கறுப்பு கிடையாது. கருங்கோழியின் உட்புற சதைப்பகுதி, எலும்புகள் என அனைத்துமே கறுப்பு நிறம்தான். 

இக்கோழியின் உடலில் மெலனின் நிறமி நிறைந்து காணப்படுவதால், கறுப்பு நிறமாகத் தோற்றமளிக்கிறது. கறுப்புத் நிறத் தோகையில் பசுமை நிறம் கலந்து வானவில் நிறம்போலக் காட்சியளிக்கும். இதன் தோல், அலகு, கால் விரல்கள் கருஞ்சாம்பல் நிறமாகவும், கொண்டை, நாக்கு போன்றவை கருஞ்சிவப்பு நிறத்தில் இருக்கும். கோழிச் சந்தையில் இதற்கான தேவை அதிகமாக இருக்கிறது. யுனானி மருத்துவத்தில் கருங்கோழிகள் மருத்துவ குணம் வாய்ந்ததாகக் குறிப்பிடப்படுகிறது. மகாராஷ்டிரா அரசு இக்கோழிகளை அழிவில் இருந்து பாதுகாக்க வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழும் சிலருக்கு இக்கோழியை வளர்க்க நிதியுதவி அளித்து வருகிறது. இன்றைய நிலையில் கருங்கோழிகள் தமிழ்நாட்டின் பல பகுதிகளிலும் பண்ணை முறையிலும், மேய்ச்சல் முறையிலும் வளர்க்கப்பட்டு வருகின்றன. சிரங்கு, வாதம் போன்ற நோய்கள் கருங்கோழிக் கறியால் குணமாகும் என்று சொல்கிறது, சித்த மருத்துவம். 

கருங்கோழிகள்

இக்கோழிகள் ஆண்டுக்கு 80 முதல் 90 முட்டைகள் வரை இடும். முட்டையும் முழுமையான கறுப்பு நிறத்தில் இருக்கும். கருங்கோழிக் குஞ்சுகள் பிறந்து 20 நாட்கள் வரை செயற்கையான வெப்பம் கொடுத்து வளர்க்க வேண்டும். 100 கருங்கோழிக் குஞ்சுகளுக்கு 100 வாட்ஸ் பல்பு ஒன்று அமைத்து வெப்பம் இருக்குமாறு வளர்க்கப்படும். அதிகமான குளிரை இக்கோழிகள் தாங்காது. கோழி வகைகளில் இவை அதிகமான தண்ணீர் அருந்தும். இந்த கோழிக் குஞ்சுகள் 2 மாதங்களில் இருந்து விற்பனை செய்யப்படும். இதன் கறியின் நிறம் கறுப்பாக இருப்பதால், இதை வாங்குவதற்கு மக்கள் தயக்கம் காட்டுகின்றனர். ஆனால், இதில் தயக்கம் கொள்ள எதுவும் இல்லை. கருங்கோழிகள் உண்பதற்கு மிகவும் ஏற்றவை. சந்தையில் கருங்கோழியின் தேவை அதிகமாக இருப்பதால் சில பண்ணையாளர்கள் அதிக விலைக்கு விற்பதாகவும் குற்றாச்சாட்டுகள் எழுந்தன.

கடக்நாத் அப்ளிகேஷன்

 

மைசூர், உணவு ஆராய்ச்சிக் கழகம் கருங்கோழி இறைச்சி இதய நோயாளிகளுக்கு நன்மை தரக் கூடியது என்ற சான்று கொடுத்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. சீன நாட்டு மருத்துவத்தில் இந்தக் கருங்கோழிகள் அதிகமாகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இக்கோழியின் இறைச்சி, ருசியாகவும், மணமாகவும் இருக்கும். இயற்கையாகவே நோய் எதிர்ப்புத் திறன்கள் கொண்டிருப்பதால் இவற்றிற்கு ரசாயன மருந்துகள் பெரும்பாலும் கொடுப்பது இல்லை. சில நாட்களுக்கு முன்னர் கடக்நாத் கோழிகளின் விற்பனைக்காக 'MP Kadaknath' என்ற செயலி வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு சத்தீஸ்கர் மாநிலமும் கடக்நாத் கோழி எங்களுக்குத்தான் சொந்தம் என உரிமை கொண்டாடியதுதான் காரணம். மத்தியப் பிரதேச மாநிலமும், சத்தீஷ்கர் மாநிலமும் தங்களுடைய மாநிலத்துக்குத்தான் என்று உரிமை கொண்டாடும் அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்தது, இந்தக் கறுப்புக் கோழி. இறுதியில் மத்தியப் பிரதேசத்துக்கு கருங்கோழிக்கான புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது.

https://www.vikatan.com

Link to comment
Share on other sites

நீங்கள் ஸ்மார்ட் போன் அடிமையா?

 

 
shutterstock306965114
 
 

இளைஞர்கள் மொபைல் போனை அதிக நேரம் பயன்படுத்துகிறார்கள் என்ற குற்றச்சாட்டு நீண்ட காலமாக உள்ளது. அந்தக் குற்றச்சாட்டை உண்மையாக்கியிருக்கிறது அண்மையில் வெளியிடப்பட்ட ஓர் ஆய்வு முடிவு. இந்திய இளைஞர்கள் தினமும் சராசரியாக 150 முறைக்கும் மேலாக தங்கள் மொபைல் போனைப் பார்ப்பதாக அந்த ஆய்வு சொல்கிறது.

 

அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகமும் இந்திய சமூக அறிவியல் ஆராய்ச்சி கவுன்சிலும் (ICSSR) இணைந்து இந்த ஆய்வை மேற்கொண்டன. ‘ஸ்மார்ட்போனை சார்ந்திருத்தல், வாங்கும் மனநிலை: டிஜிட்டல் இந்தியா முயற்சிகளின் தாக்கங்கள்’ என்ற தலைப்பில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்தியாவில் உள்ள 20 மத்திய பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த 200 மாணவர்கள் இந்த ஆய்வில் பங்கேற்றனர்.

மனக் கலக்கம், தகவலைத் தவறவிட்டுவிடுவோமோ என்ற பயம் காரணமாகப் பல்கலைக்கழக மாணவர்கள் தங்கள் மொபலை தினமும் சராசரியாக 150 முறையாவது எடுத்துப் பார்க்கிறார்கள் என ஆய்வில் தெரியவந்துள்ளது. மாணவர்களின் இந்த நடத்தை அவர்களின் ஆரோக்கியத்தையும் கல்வியையும் பெரிய அளவில் பாதிப்பதாக ஆய்வு முடிவுகள் சுட்டிக்காட்டுகின்றன. ஆய்வில் பங்கேற்ற 26 சதவீத மாணவர்கள் மட்டுமே மொபைல் போனை பேசுவதற்காக மட்டும் பயன்படுத்துவதாகத் தெரிவித்திருக்கிறார்கள். மற்றவர்கள் சமூக ஊடகங்கள், கூகுள் தேடல்கள், பொழுதுபோக்கு அம்சங்களுக்காக (திரைப்படங்கள் பார்ப்பது, பாடல்கள் கேட்பது) மொபைல் போனைப் பயன்படுத்துவதாகக் கூறியுள்ளனர்.

14 சதவீத மாணவர்கள் தினமும் ஸ்மார்ட் போனை மூன்று மணி நேரம் பயன்படுத்துவதும் ஆய்வில் அம்பலமாகியுள்ளது. ஆனால், இவர்களைவிட 63 சதவீத மாணவர்கள் தினமும் நான்கு முதல் ஏழு மணி நேரம் மொபைல் போனிலேயே மூழ்கிக் கிடக்கின்றனர் என்கிறது ஆய்வு. ஒட்டுமொத்தமாக கணினிக்கு மாற்றாக ஸ்மார்ட் போனைப் பயன்படுத்துவதாக இந்த ஆய்வில் மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதேபோல 2017-ம் ஆண்டில் தென் கொரியாவில் ஓர் ஆய்வு நடத்தப்பட்டது. அந்த ஆய்வில் ஸ்மார்ட்போன் பயன்பாட்டால் மன அழுத்தம், மனக் கலக்கம், தூக்கமின்மை போன்ற பிரச்சினைகள் இளைஞர்களுக்கு ஏற்படுவது தெரியவந்தது. கொரிய பல்கலைக்கழகம் நடத்திய இந்த ஆய்வில், இணைய பயன்பாட்டுக்கும் ஸ்மார்ட் போன்களுக்கும் அடிமையாகியிருக்கும் இளைஞர்களின் மூளைகள் வேதிப்பொருட்களின் சமநிலையின்மையால் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.

http://tamil.thehindu.com/

Link to comment
Share on other sites

பலவீனத்தை பலமாக மாற்றுவது எப்படி? - பாடம் சொல்லும் கதை! #MotivationStory

 
 

உன்னை அறிந்தால்

`பென்சில்களுக்கு அழிப்பான்கள் தேவைப்படுவது தவறுகளைத் திருத்தத்தான்!’ என்பது ஓர் ஆங்கிலப் பழமொழி! தவறே செய்யாதவர்கள் இங்கு யாருமில்லை. ஒரு வேலையை மிகச் சரியாக, துல்லியமாகச் செய்பவர்கள் மிக மிக அரிதானவர்கள். ஆக, எல்லோரிடமும் குறையிருக்கிறது என்பது மறுக்க முடியாத உண்மை. பிறரின் குறைகளையும் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்வதுதான் தலைமைப் பண்பின் அடையாளம். ஒரு தேர்ந்த நிர்வாகி, தன் பணியாளர்களின் பலவீனங்களையும் நிறுவனத்துக்குச் சாதகமாக மாற்றிவிடுவார். பணியிடம், பள்ளி, பிசினஸ்... என அனைத்திலுமே இது சாத்தியமே. அதற்கு பலவீனத்தை பலமாக மாற்றுவது எப்படி என்பதை நாம் கற்றுக்கொள்ள வேண்டும். அந்தப் பாடத்தைக் கற்றுக் கொடுக்கிறது இந்தக் கதை. 

 

அது ஒரு மலையடிவார கிராமம். அங்கே ஒரு விவசாயி இருந்தார். அந்த கிராமத்துக்கு குடிநீருக்கு ஆதாரமாக இருந்தது, சற்று தூரத்திலிருந்த ஓடை மட்டுமே. விவசாயியிடம் இரண்டு மண் பானைகளிருந்தன. பானைகளை ஒரு கம்பின் இரு நுனிகளிலும் கட்டித் தொங்கவிட்டு, கம்பின் நடுப் பகுதியைத் தோளில் வைத்துக்கொள்வார். அதைத் தூக்கிக்கொண்டு ஓடைக்குப் போய் நீரெடுத்துக்கொண்டு திரும்பி வருவார். இது அவருடைய தினசரி வழக்கம். அந்தப் பானைகளில் ஒன்றில் லேசாகக் கீறல் விழுந்து ஓட்டையாகியிருந்தது. மற்றொன்று, எந்தக் குறையும் இல்லாத முழுமையான பானை. விவசாயி ஓடையிலிருந்து வீடு திரும்பும்போது, நல்ல பானையில் நிரப்பப்பட்ட தண்ணீர் அப்படியே முழுவதுமாக இருக்கும். கீறல் விழுந்த பானைத் தண்ணீரில் பாதி நீர் கீழே வடிந்து போயிருக்கும். 

கதை

பல வருடங்களாக அந்த மனிதர், இரண்டு பானைகளில் நீர் நிரப்பி, வீட்டுக்கு ஒன்றரைப் பானைத் தண்ணீரோடு திரும்பிக்கொண்டிருந்தார். குறையில்லாத நல்ல பானைக்கு, தன் வேலையை மிகச் சரியாகச் செய்துவருவதில் பெருமை. கீறல் விழுந்த பானை, தன்னை நினைத்து நினைத்து அவமானப்பட்டுக்கொண்டிருந்தது. 

ஒருநாள், ஓடையில் குனிந்து பானைகளில் தண்ணீரை எடுத்துக்கொண்டிருந்தார் விவசாயி. கீறல் விழுந்த பானை அதற்கும் மேல் பொறுக்க முடியாமல் அவரிடம் பேசியது. ``ஐயா... என்னை மன்னிச்சிடுங்க!’’ 

முதலில் குரல் எங்கிருந்து வருகிறது என்பது விவசாயிக்குப் புரியவில்லை. சுற்றுமுற்றும் பார்த்தார். ``ஐயா... நான் உங்க பானை பேசுறேன்’’ என்றதும் அதிர்ந்து போனார். அதை ஆச்சர்யமாகப் பார்த்தார். 

``ஐயா... என்னை மன்னிப்பீங்களா?’’ 

``எதுக்கு? நீ ஏன் என்கிட்ட மன்னிப்பு கேட்கிறே?’’

``என்மேல கீறல் விழுந்ததால நீங்க முழுசா தண்ணீரை நிரப்பினாலும், என்னால பாதித் தண்ணீரைத்தான் வீட்டுக்குக் கொண்டுபோக முடியுது. நீங்க எதிர்பார்த்ததை என்னால நிறைவேற்ற முடியலை. அதுக்காகத்தான் மன்னிப்பு கேட்கிறேன்.’’ 

இதற்குப் பதில் சொல்லாமல் விவசாயி பானைகளில் ஓடைத் தண்ணீரை நிரப்பினார். அவற்றைக் கரைக்கு கொண்டு வந்து கம்பின் இரு நுனிகளிலும் கட்டினார். பிறகு கீறல் விழுந்த பானையிடம் சொன்னார்... ``இன்னிக்கு நாம வீட்டுக்குப் போகும்போது நாம போகும் பாதையை நல்லா கவனிச்சிக்கிட்டே வா... என்ன?’’ பானை அதற்கு ஒப்புக்கொண்டது. 

அவர் சொன்னபடியே, வீட்டுக்குச் செல்லும் பாதையை கவனமாகப் பார்த்துக்கொண்டே வந்தது. வீட்டுக்கு வந்து சேர்ந்தபோது வழக்கம்போல கீறல் பானையிலிருந்த தண்ணீரில் பாதி காலியாகியிருந்தது. விவசாயி பானைகளைக் கீழே இறக்கிவைத்துவிட்டு கேட்டார்... ``வழியில நீ என்ன பார்த்தே?’’ 

``நாம வந்த பாதையெல்லாம் அழகழகான பூக்கள் பூத்திருந்துச்சு.’’ 

 

பூக்கள்

 

``ரொம்பச் சரி. பாதையில பூக்கள் பூத்திருந்ததுதான். ஆனா, அதெல்லாம் பாதையின் ஒரு பக்கம் மட்டுமே பூத்திருந்ததை கவனிச்சியா? இதோ பாரு... நான் உன்னோட கீறலையும், அதனால ஓட்டை விழுந்ததையும், தண்ணீர் வழியுறதையும் எப்பவுமே ஞாபகத்துலவெச்சிருக்கேன். அதை எனக்குச் சாதகமா பயன்படுத்திக்க நினைச்சேன். ஓடைக்குப் போற பாதை முழுக்க எனக்கு பிடிச்ச பூக்களுக்கான விதைகளைப் போட்டுவெச்சேன்; சில செடிகளை நட்டுவெச்சேன். ஒவ்வொரு நாளும் நாம ஓடையிலருந்து திரும்பி வரும்போது, அந்த விதைகளுக்கும் செடிகளுக்கும் நீதான் தண்ணீர் வார்த்தே. உன்னாலதான் அற்புதமான, அழகான அந்தப் பூக்கள் பூத்துச்சு. அதையெல்லாம் நான் பூஜைக்குப் பயன்படுத்துறேன்; என் நண்பர்களுக்கும் சொந்தக்காரங்களுக்கும் கொடுக்கிறேன். உன்னோட கீறல் இல்லாம இந்த சந்தோஷம் எனக்குக் கிடைச்சிருக்காது.’’ 

***      

https://www.vikatan.com

Link to comment
Share on other sites

தாம்பத்ய வாழ்க்கை இனிக்க ஐ லவ் யூ வேண்டாம்... ஆனால்..?!

 

ல்லாக் காலத்திலும் தாம்பத்யம் என்பது, நான்கு கரங்களில் இருக்கும் ஒற்றைக் கண்ணாடிப் பாத்திரம்தான். ஒரு கரம் பலவீனமானாலும் தாம்பத்யம் தள்ளாட ஆரம்பித்துவிடும். கொஞ்சம் ஏமாந்தாலும் தரையில் விழுந்து சுக்குநூறாகிவிடும். சரி, தாம்பத்யம் உடையாமல் இருக்க எந்தெந்த விஷயங்களில் தம்பதிகள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்?

``சின்னச் சின்ன விஷயங்கள்தாம் தாம்பத்யத்தை உடைக்கும் வில்லன்கள் என்பது எந்தளவுக்கு உண்மையோ, அதே அளவுக்கு உண்மை, சின்னச் சின்ன விஷயங்களே ஒரு தாம்பத்யத்தைக் காப்பாற்ற போதும் என்பதும்'' என்கிற உளவியல் நிபுணர் டி.வி. அசோகன் சொல்வதைக் கேளுங்கள்.

 

தாம்பத்யம்

* `நான்', `எனது', `என்னுடைய', `தனித்தன்மை' என இருப்பவர்களைவிட `ஒருவனுக்கு ஒருத்தி', `கொஞ்சம் முன்னபின்ன இருந்தாலும் என் வாழ்க்கைத் துணை' போன்ற பழைய சம்பிரதாயங்களில் நம்பிக்கை வைத்திருப்பவர்களின் தாம்பத்யம், அவ்வளவு எளிதில் உடைவதில்லை என்கிறது ஓர் ஆராய்ச்சி. இந்தக் காலத்துப் பெண்கள் தனித்தன்மையுடன் எல்லாவற்றிலும் ஜெயித்துக்கொண்டிருப்பது தவறு என்று சொல்லவில்லை. அதனுடன், உங்கள் பெற்றோர்களின் தாம்பத்திய வெற்றி சூத்திரத்தையும் பின்பற்றுங்கள். உங்கள் தாம்பத்ய பில்டிங்கின் பேஸ்மென்ட்டும் வலுவாக இருக்கும். 

டி.வி. அசோகன்* பல ஆளுமைப் பண்புகள் இணைந்துதான் ஒரு பர்சனாலிட்டி உருவாகும். பதற்றம் என்பதும் ஓர் ஆளுமை, சந்தேகம் நிறைய இருந்தால் சந்தேக ஆளுமை, சார்புநிலை ஆளுமை, அடுத்தவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் ஆளுமை, இரக்க ஆளுமை, சின்னச் சின்ன விஷயங்களுக்கும் பயப்படும் ஆளுமை என்று ஒருவருக்குள்ளேயே பல ஆளுமைகள் அடங்கியிருக்கும். இதில், தைரியமான ஆளுமை பயந்த ஆளுமையை விரும்பலாம். அதுபோலவே, பயந்த ஆளுமை இன்னொரு பயந்த ஆளுமையையும் விரும்பும். கோபம் அமைதியை லவ் பண்ணும்; கோபத்தைக் கோபமும் லவ் பண்ணும். உங்களுடைய ஆளுமை எது, உங்கள் துணையின் ஆளுமை எது என்பதைத் தெரிந்துகொள்வதும் தாம்பத்யத்தைத் தாங்கிப்பிடிக்கும் ஒரு டிரிக். 

* பத்துக்கு ஏழு பொருத்தம் இருந்தால், கல்யாணம் பண்ணலாம் என்பார்கள். உளவியலைப் பொறுத்தவரை மனைவிக்கு இருக்கும் 10 விருப்பங்களில் 7 விருப்பங்கள் கணவருக்கு இருந்துவிட்டாலே அங்கே ஈர்ப்பு ஏற்பட்டுவிடும். `எனக்கு எதிலும் பெருசா ஈடுபாடு கிடையாது' என்கிற ரசனையற்ற அல்லது விட்டேற்றியான மனப்பான்மை தாம்பத்தியத்தை ருசியற்றதாக்கிவிடும்  

*  ஒரு காலத்தில் குழந்தைகள்தாம் தாம்பத்யத்தைப் பிடித்துவைத்திருந்தார்கள். தற்போது, `என் மனைவியை நம்பலாம்', `என் கணவனை நம்பலாம்' என்கிற நம்பிக்கை உணர்வு மட்டுமே குடும்ப வண்டியை ஓடவைக்கும் அச்சாணியாக இருக்கிறது. 

*  ஒருவரை ஒருவர் சார்ந்திருப்பது... இதை, பொருளாதார ரீதியாகச் சொல்லவில்லை. `இவரில்லாமல் நானில்லை', `இவள் அருகில் இல்லாமல் எனக்கு நிம்மதியில்லை' என்பது போன்ற மனதளவிலான சார்பு நிலை, கணவன் மனைவிக்கிடையே வரும் பிரச்னைகளை இரும்புக்கரத்தால் அடக்கிவிடும்.

* தம்பதிகளுக்கு ஒரு வார்த்தை, உங்கள் தவறுகளைச் சரியாக்க வாழ்க்கை துணையுடன் சண்டைப் போடாதீர்கள். பிறகு, கல்யாண வாழ்க்கை கரும்பின் நுனிபோல ஆகிவிடும். தவறுகளை ஒத்துக்கொண்டு பாருங்கள், அடிக்கரும்பாக இனிக்கும்.

* வாழ்க்கை துணை சொல்வதைக் காது கொடுத்துக் கேளுங்கள். இந்த இயல்பு பொதுவாகவே பெண்களிடம் உண்டு. ஆண்களுக்கு 50 வயதுகளில்தாம் வருகிறது. ஒருவருக்கொருவர் காது கொடுப்பது தாம்பத்தியத்துக்கு நல்லது.  

* எல்லோரிடமும் பாசிட்டிவ் ஃபேக்டர், நெகட்டிவ் ஃபேக்டர் இருக்கும். இதில், நெகட்டிவ் குணத்துக்காக தன் லைஃப் பார்ட்னரைவிட்டு யாரும் பிரிவதில்லை. தன் லைஃப் பார்ட்னரிடம் பாசிட்டிவ் குணங்களே இல்லாதபோதுதான் தாம்பத்யம் பிளவுபடுகிறது. காலங்காலமாகத் தவறு செய்கிற பல கணவன்மார்களை, மனைவிகள் மன்னித்துக் குடும்பம் நடத்தியதற்குக் காரணம், பொருளாதார ரீதியாகக் கணவனைச் சார்ந்து இருந்தது மட்டுமல்ல; கணவர்களிடம் இருக்கும் பாசிட்டிவ் குணத்துக்காகவும்தான். 

* மனதுக்குள் நீங்கள் சந்தோஷமாக இருந்த நினைவுகளைச் சேமித்துவையுங்கள். பிரச்னை வரும் நேரம், இவை உங்கள் திருமண வாழ்வைக் காப்பாற்றிவிடும். 

தாம்பத்யம்

* நிறையப் பேசுங்கள். எதிர்காலத்துக்கு என்ன செய்யப்போகிறோம், குழந்தைகளுக்கு என்ன சேமித்துவைத்திருக்கிறோம் என்பதைத் தாண்டி, வெட்டியாகப் பேசுவதற்கு உங்கள் இருவரிடமும் நிறைய கதைகள் இருக்கின்றன என்றால், உங்கள் தாம்பத்யத்தை சீரியல் வில்லிகளே வந்தாலும் அசைக்க முடியாது.  

* காதல், காமம் இரண்டையும்விட நட்பாக இருங்கள். 

* ஹோட்டல் சர்வர் மாதிரி வாழ்க்கை துணைக்கு என்ன வேண்டுமோ அதை மட்டும் பரிமாறுங்கள். 

* மூன்றாவது மனிதர்களைத் தலையிட விடாதீர்கள். இந்த உலகத்தில் எப்போதும் அடுத்தவன் கதை அல்வா மாதிரிதான். மற்றவர்களை உங்கள் பிரச்னைகளின் நீதிபதிகளாக ஆக்கிவிடாதீர்கள்.  

* மொபைலை டேபிளின் மேல் வைத்துவிட்டு தைரியமாக ரெஸ்ட்ரூம் போகமுடிகிறது என்றால், உங்கள் தாம்பத்யம் படு சேஃபாக இருக்கிறது. போன் வந்தவுடன் பால்கனி போய் குசுகுசுவென்று பேசுகிறீர்கள் என்றால், உங்கள் இல்லற வாழ்க்கை படு பாதாளத்தை நோக்கிப் போய்க்கொண்டிருக்கிறது என்று அர்த்தம்.

* பெட்ரூமுக்குள் டிவி. இருப்பதும் உறவைக் கெடுக்கும் வில்லன்தான் தம்பதிகளே.

 

* தாம்பத்யத்தைக் காப்பாற்ற, `ஐ லவ் யூ' சொல்லவேண்டிய அவசியமே இல்லை. தவறு நேர்கிற இடங்களில் `ஸாரி' சொல்லிப் பழகினாலே தாம்பத்யம் இனிக்கும்.

https://www.vikatan.com

Link to comment
Share on other sites

கி.மு 780 – முதலாவது சூரிய கிரகணம் சீனாவில் பதியப்பட்டது.

வரலாற்றில் இன்று….
 

நிகழ்வுகள்

கி.மு 780 – முதலாவது சூரிய கிரகணம் சீனாவில் பதியப்பட்டது.
1039 – மூன்றாம் ஹென்றி புனித ரோமப் பேரரசன் ஆனான்.
1584 – சேர் வால்ட்டர் ரேலி முதலாவது ஆங்கிலக் குடியேற்றத்தை வட கரோலினாவின் ரோனோக் தீவில் அமைத்தார்.
1615 – ஜ ப்பானில் தொக்குகாவா லெயாசு தலைமையிலான படைகள் ஒசாக்கா கோட்டையைக் கைப்பற்றின.
1707 – யாழ்ப்பாணத்தில் தேசவழமைச் சட்டம் ஒல்லாந்தரினால் அமுல்படுத்தப்பட்டது.
1794 – பிரித்தானியப் படைகள் ஹெயிட்டியில் போர்ட்-ஓ-பிரின்ஸ் துறைமுகத்தைக் கைப்பற்றினர்.
1876 – டிரான்ஸ்கொன்டினென்டல் எக்சுபிரசு என்ற தொடர்வண்டி நியூயார்க்கில் இருந்து புறப்பட்டு சான் பிரான்சிஸ்கோவை 83 மணி 39 நிமிடங்களில் முதலாவது கண்டங்களிடை தொடருந்துப் பாதை வழியே சென்றடைந்தது.
1878 – உதுமானியப் பேரரசு சைப்பிரசை ஐக்கிய இராச்சியத்துக்கு கொடுத்தது.
1896: பெற்றோலில் இயங்கும் தனது வாகனத்தின் முதல் சோதனை ஓட்டத்தை ஹென்ரி போர்ட் வெற்றிகரமாக நடத்தினார்.
1896 – ஹென்றி ஃபோர்ட் பெற்றோலில் இயங்கும் தனது முதலாவது தானுந்தை வெற்றிகரமாகச் சோதித்தார்.
1912 – மாசச்சூசெட்ஸ் மிகக்குறைந்த ஊழியத் தொகையை நிர்ணயம் செய்த முதலாவது அமெரிக்க மாநிலமானது.
1917 – முதலாவது புலிட்சர் பரிசுகள் வழங்கப்பட்டன.
1919 – பெண்களின் உரிமைகள்: பெண்களுக்கு வாக்குரிமை வழங்கும் சட்டமூலத்துக்கு அமெரிக்க சட்டமன்றம் அனுமதி அளித்தது.
1920 – பாரிசில் செய்துகொள்ளப்பட்ட உடன்பாடு ஒன்றின் படி அங்கேரி தனது 71% நிலத்தையும், 63% மக்களையும் இழந்தது.
1928 – சீனக் குடியரசின் அரசுத் தலைவர் சாங் சுவோலின் சப்பானியக் கையாள் ஒருவனினால் படுகொலை செய்யப்பட்டார்.
1939 – பெரும் இன அழிப்பு: 963 யூத அகதிகளை ஏற்றிச் சென்ற கப்பல் ஐக்கிய அமெரிக்காவினால் திருப்பி அனுப்பப்பட்டது. இந்த அகதிகளில் 200 பேர் வரை பின்னர் ஜெர்மனியின் நாசி வதைமுகாமில் சிறைவைக்கப்பட்டுக் கொல்லப்பட்டனர்.
1940 – இரண்டாம் உலகப் போர்: பிரான்சின் டன்கேர்க் என்ற இடத்தில் இருந்த 300,000 பிரித்தானியப் படைகள் முற்றாக விலக்கிக் கொள்ளப்பட்டனர்.
1940 – இரண்டாம் உலகப் போர்: ஜெர்மானியப் படைகள் பாரிஸ் நகரைனுள் நுழைந்தனர்.
1943 – ஆர்ஜெண்டீனாவில் நிகழ்ந்த இராணுவப் புரட்சியில் ரமோன் கஸ்டீல்லோ பதவியிழந்தார்.
1944 – இரண்டாம் உலகப் போர்: ஐக்கிய அமெரிக்கக் கடற்படையினர் செருமானிய நீர்மூழ்கிக் கப்பல் யூ-505 ஐக் கைப்பற்றினர்.
1944 – இரண்டாம் உலகப் போர்: ரோம் நகரம் நேச அணிகளிடம் வீழ்ந்தது.
1957 – மார்ட்டின் லூதர் கிங் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் “அறப்போராட்டத்தின் வலிமை” என்ற தனது உலகப் புகழ் பெற்ற சொற்பொழிவை நிகழ்த்தினார்.
1961 – அமெரிக்கா, பிரித்தானியா, மற்றும் பிரான்சு ஆகிய நாடுகள் கிழக்கு பெர்லினுக்குள் நுழைவதைத் தடுப்பதற்கு தாம் கிழக்கு செருமனி உடன் ஒப்பந்தம் செய்யப்போவதாக சோவியத் தலைவர் நிக்கிட்டா குருசேவ் வியன்னா மாநாட்டில் எச்சரித்தார்.
1970 – தொங்கா ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து விடுதலை அடைந்தது.
1979 – கானாவில் இடம்பெற்ற இராணுவப் புரட்சியில் ஜெனரல் ஆச்சியாம்பொங் பதவியிறக்கப்பட்டு ஜெரி ரோலிங்க்ஸ் ஆட்சிப்பொறுப்பை ஏற்றார்.
1987 – பூமாலை நடவடிக்கை: இலங்கையின் ஆளுகைக்குட்பட்ட வான்பரப்பில் அத்து மீறி உள்நுழைந்த இந்திய வான்படை விமானங்கள் யாழ் குடாநாட்டின் மீது உணவுப் பொதிகளை வீசியது.
1988 – சோவியத் ஒன்றியத்தில் கசக்ஸ்தான் நோக்கிச் சென்ற தொடருந்து வெடித்ததில் 91 பேர் கொல்லப்பட்டனர். 1,500 இற்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.
1989 – சீனாவில் தியனன்மென் சதுக்கத்தில் இடம்பெற்ற மாணவர் போராட்டம் இராணுவத்தினரால் நசுக்கப்பட்டது. பல மாணவர்கள், பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.
1989 – போலந்தில் இடம்பெற்ற பொதுத்தேர்தலில் சொலிடாரிட்டி இயக்கத்தின் வெற்றி கிழக்கு ஐரோப்பாவில் கம்யூனிசத்துக்கு எதிரான புரட்சியைக் கிளறியது.
1989 – உருசியாவில் இரண்டு தொடருந்துகள் இயற்கை எரிவளிமக் குழாய் ஒன்றைக் கடக்கையில் ஏற்பட்ட விபத்தில் 575 பேர் கொல்லப்பட்டனர்.
2001 – அரச மாளிகையில் ஜீன் 1 இல் இடம்பெற்ற படுகொலைகளை அடுத்து ஞானேந்திரா நேபாளத்தின் மன்னராக முடி சூடினார்.

பிறப்புகள்

1887 – பெ. வரதராஜுலு நாயுடு, இந்திய அரசியல்வாதி (இ. 1957)
1910 – கிறிஸ்தோபர் கொக்கரல், ஆங்கிலேயக் கண்டுபிடிப்பாளர் (இ. 1999)
1932 – எஸ். பொன்னுத்துரை, ஈழத்து எழுத்தாளர் (இ. 2014)
1946 – எஸ். பி. பாலசுப்ரமணியம், இந்தியத் திரைப்பட இசைப் பாடகர்
1959 – அனில் அம்பானி, இந்தியத் தொழில் அதிபர்
1970 – தேவு பிபுசு, ஆங்கிலேய இசைக்கலைஞர்
1974 – ஜேக்கப் சகாயகுமார் அருணி, இந்திய சமயற்கலை நிபுணர் (இ. 2012)
1975 – ஏஞ்சலினா ஜோலி, அமெரிக்க நடிகை
1981 – டி. ஜே. மில்லர், அமெரிக்க நடிகர்
1984 – ஜெனவீவ் ஜூலி, அமெரிக்க நடிகை
1990 – ஜெட்சுன் பெமா, ஜிக்மே கேசர் நாம்கியல் வாங்சுக்கின் பூட்டானிய மனைவி

இறப்புகள்

1798 – கியாகோமோ காசநோவா, இத்தாலிய நாடுகாண் பயணி (பி. 1725)
1925 – வ. வே. சு. ஐயர், இந்திய விடுதலைப் போராட்ட வீரர் (பி. 1881)
1941 – இரண்டாம் வில்லியம் (செருமனி) (பி. 1859)

சிறப்பு நாள்

தொங்கா – விடுதலை நாள் (1970)

http://metronews.lk/

Link to comment
Share on other sites

ஈழ விடுதலை போராட்டத்தில் உயிர்விட்ட முதல் போராட்ட வீரர்: ஜூன் 1974

 

 
ஈழ விடுதலை போராட்டத்தில் உயிர்விட்ட முதல் போராட்ட வீரர்: ஜூன் 1974
 
பொன்னுத்துரை சிவகுமாரன் (ஆகஸ்ட் 26, 1950 - ஜூன் 5, 1974) ஈழ விடுதலைப் போராட்ட வீரர்களில் ஒரு முன்னோடி ஆவார். யாழ்ப்பாணம், உரும்பிராயில் காவற்துறையினரின் சுற்றி வளைப்பில் நஞ்சருந்தி மரணமடைந்தார். ஈழப்போராட்ட வரலாற்றில் முதன் முதலில் நஞ்சு அருந்தி உயிர் நீத்தவர் இவரே.

உரும்பிராயில் 1950-ம் ஆண்டு ஓகஸ்ட் 26-ம் நாள் பொன்னுத்துரை, அன்னலட்சுமி ஆகியோருக்கு மூன்றாவது மகவாக சிவகுமாரன் பிறந்தார். யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் உயர்கல்வி கற்றவர். அந்தக் காலகட்டத்தில்தான் இலங்கையில் கல்வித் தரப்படுத்துதல் அறிமுகப்படுத்தப்பட்டது.

இத்தரப்படுத்தல் திட்டத்துக்கு எதிராகத் தொடங்கப்பட்ட தமிழ் மாணவர் பேரவையில் தன்னையும் முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டு சிவகுமாரன் செயற்பட்டார். 1970களின் தொடக்கத்தில் சிறிமாவோ பண்டாரநாயக்கா அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த சோமவீர சந்திரசிறீயின் வாகனத்துக்கு குண்டு வைத்தவர் சிவகுமாரன் என்று குற்றம்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டார்.

1971-ம் ஆண்டு தொடக்கத்தில் யாழ்ப்பாண நகரத் தந்தையாகவும் அப்போது சிறிமா கட்சியின் அமைப்பாளராகவும் இருந்த அல்பிரட் துரையப்பாவுக்கு குறிவைத்து அவரது வாகனத்தில் குண்டு பொருத்தினார். குண்டுவெடித்து சிதறி வாகனத்தின் மேல்பக்கம் எல்லாம் பெருந்தொலைவுக்கு சென்று விழுந்தது. ஆனால் துரையப்பா வருவதற்கு முன்னரே குண்டு வெடித்துச் சிதறியது. இந்தத் தாக்குதல்கள் ஈழ விடுதலைப் போராட்டத்தில் முதல் தாக்குதல்கள் என்று சொல்லலாம்.

அதன் பின்னர் துரையப்பாவின் வாகனத்துக்கு குண்டு வைத்த குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டு இரண்டு ஆண்டு காலம் சிறையிலே கழித்தார். சிறையிலிருந்து வெளியே வந்த பின்னர் மீண்டும் அவர் சில முயற்சிகளை மேற்கொண்டிருக்கிறார். தனியே தாக்குதல் முயற்சி என்பதுமட்டும் அல்ல. குறிக்கோளை வைத்துக் கொண்டு பல்வேறு நிகழ்வுகளில் ஈடுபடுத்திக்கொண்டார். இளைஞர் பேரவை அப்போது நடத்திய உண்ணாவிரதம் போன்றவற்றில் பங்கேற்று மதியுரைகளை வழங்கிச் செல்வார்.

1973-ல் மாணவர் பேரவையின் பொறுப்பாளராக இருந்த சத்தியசீலன் போன்றவர்கள் கைதான காலகட்டம். அதற்கு முதலே சிவகுமாரன் கைதாகி, அனுராதபுரம் சிறையிலே அடைக்கப்பட்டு மல்லாகம் நீதிமன்றில் வழக்குகளும் நடைபெற்றன.

யாழ். தமிழாராய்ச்சி மாநாட்டு படுகொலைகளுக்குப் பின்னர், அப்படுகொலைக்கு உத்தரவிட்ட சந்திரசேகரவைக் கொல்ல வேண்டும் என்ற முடிவை எடுத்தவர் சிவகுமாரன். மாநாடு நடைபெற்ற 9 நாளும் தன்னை தொண்டராகப் பதிவு செய்து கொண்டு மாநாடு வெற்றிபெற வேண்டும் என்பதற்காக கடுமையாக உழைத்தவர். அந்த நிலையில் மாநாட்டுக்கு குழப்பம் விளைவித்த சந்திரசேகரவை அங்கேயே கொல்ல வேண்டும் என்று வெளிப்படையாகக் கூறியவர். அதனாலேயே சிவகுமாரன் தேடப்பட்டார். சந்திரசேகரவைக் கொல்வதற்காக சிவகுமாரன் மேற்கொண்ட முயற்சி சூழ்நிலைகளால் தோல்வியடைந்தது.

உரும்பிராய் நடராஜா என்பவர் விடுதலைக்குப் போராடிய இளைஞர்களைக் காட்டிக் கொடுத்துக் கொண்டிருந்தவர். அவர்மீது தாக்குதல் நடத்துவதற்கு சிவகுமாரன் தலைமை ஏற்றார். கோப்பாயில் காவல் துறையினர் சுற்றிவளைத்த போது அகப்பட்டுவிடக் கூடாது என்பதற்காக சயனைட் அருந்தி இறந்தார். ஈழப்போராட்ட வரலாற்றில் முதன் முதலில் சயனைட் அருந்தி தன்னுயிரை மாய்த்தவர் இவரே.

சிவகுமாரனின் இறப்பு இளைஞர்களிடத்திலே ஒரு எழுச்சியை ஏற்படுத்தியது. சுடுகாட்டுக்குப் பெண்கள் முதன் முதலில் வந்த நிகழ்வாக அது அமைந்தது.

ஜூன் 6 ஆம் நாள் சிவகுமாரன் நினைவாக தமிழீழ மாணவர் எழுச்சி நாள் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. சுற்றுச் சூழல் நாள் ஜூன் 5 ஆம் நாள் வருவதால் அதற்கடுத்த நாள் சிவகுமாரன் நினைவு நாளாக ஆக்கப்பட்டது.
 

https://www.maalaimalar.com/

Link to comment
Share on other sites

24 நாள்கள் கடலில் மிதந்தவர்களைக் காப்பாற்றிய பறவை! - உண்மைக் கதை #FeelGoodStory

 
 


கதை

`நன்றியறிதல் என்பது மிக உயர்ந்த ஆன்மாக்களின் அடையாளம்’ என்கிறார் கிரேக்கக் கதாசிரியர் ஈசாப் (Aesop). யார் யாரோ, எந்தெந்தச் சந்தர்ப்பங்களிலோ, என்னென்னவோ உதவிகளை நமக்குச் செய்திருப்பார்கள். அத்தனையையும் நாம் நினைவில் வைத்திருப்பதில்லை. சிறிய உதவிகள் இருக்கட்டும்... உயிரையே காப்பாற்றித் தந்தவர்களை, நம் வாழ்க்கையே மாறுவதற்குக் காரணமாக இருந்தவர்களைக்கூட மனிதர்கள் மறந்துவிடும்  இது. ஆனாலும், தங்களுக்கு உதவி செய்தவர்களை மறக்காத நல்ல உள்ளம் படைத்த உயர்ந்த மனிதர்கள் உலகெங்கும் இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்கள் தேவதைகளால் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள். ஒரு மனிதர், தனக்கு உதவி செய்த பறவைக்கு தன் இறுதிக்காலம் வரை நன்றி சொன்னார். அந்தக் கதை இது!

 

எல்லா வெள்ளிக்கிழமை மாலை நேரத்திலும் அது தவறாமல் நடக்கும். சூரியன், அடர் மஞ்சள் நிறத்துக்கு மாறி, நீலக் கடலுக்குள் மூழ்கத் தொடங்கும் நேரத்துக்குப் பெரும்பாலும் அவர் வந்துவிடுவார். அமெரிக்காவில் கடற்கரையோரங்களில் அலைகள் ஊருக்குள் வந்துவிடாமலிருக்க அலை தாங்கும் மேடை (Pier) ஒன்றை நிறுவி வைப்பார்கள். ஒரு நீண்ட பாலம் மாதிரி அது இருக்கும். அந்த முதியவர் அந்தப் பாலத்தின் மீதேறி நடப்பார். எலும்பு துருத்தித் தெரியும் தன் கரத்தில் ஒரு பக்கெட்டை வைத்திருப்பார். அதில் இறால் மீன்கள் நிரம்பியிருக்கும். மேடையின் விளிம்புவரை நடப்பார். அது, அவருக்கேயான பிரத்யேக உலகத்தில் அவர் நுழைவதுபோலிருக்கும்.

பறவை

அங்கே போய் அவர் நின்றதும், அவர் தனியாக இல்லை என்பதுபோல சத்தம் கேட்கும். வானத்தின் மேல் சிறு வெண் புள்ளிகள் தெரியும். அவை கீழே வரும்போதுதான் அவை அத்தனையும் பறவைகள் என்பது தெரியும்; அவற்றின் கிறீச்சொலியும் கேட்கும். சில நிமிடங்களில் டஜன் கணக்கில் அந்த ஸீகல் (Seagull) பறவைகள் அவரைச் சூழ்ந்துகொள்ளும். தங்களுடைய இறக்கைகளை படபடவென அடித்துக்கொள்ள ஆரம்பிக்கும். அந்த முதியவர், தான் கொண்டு வந்திருக்கும் பக்கெட்டிலிருக்கும் இறால் மீன்களை எடுத்து கொஞ்சம் கொஞ்சமாக அவற்றை நோக்கி வீசுவார். பசியோடிருக்கும் பறவைகள் இறால்களைக் கொத்தித் தின்ன ஆரம்பிக்கும். அவர் இறால்களைப் போடும்போது உற்றுக் கேட்டால் அவர் என்ன சொல்கிறார் என்பதை கவனிக்க முடியும்... `தேங்க் யூ... தேங்க் யூ’ என்று விடாமல் சொல்லிக்கொண்டிருப்பார்.

சில நிமிடங்களில் பக்கெட் காலியாகியிருக்கும். ஆனால், `எட்’ (Ed) என்று அழைக்கப்படும் அந்த முதியவர் உடனே அங்கிருந்து கிளம்பிப் போய்விட மாட்டார். கடலையே வெறித்து பார்த்தபடி நிற்பார். பழைய நினைவுகளில் மூழ்கிப் போயிருப்பார்.

அவருடைய முழுப் பெயர் எட்டி ரிக்கன்பேக்கர் (Eddie Rickenbacker). முதலாம் உலகப் போரின்போது ஒரு ஹீரோபோலக் கொண்டாடப்பட்டவர். இரண்டாம் உலகப் போரிலும் அமெரிக்காவுக்குப் போர் தொடர்பான ஆலோசனைகளை வழங்கியவர். இரண்டாம் உலகப் போரின்போது, அவர் சென்ற விமானம் ஒன்று பசிபிக் கடலில் மூழ்கிப் போனது. அவரும் அவருடன் சென்ற ஏழுபேரும் அதிர்ஷ்டவசமாக உயிர் காக்கும் படகில் (Life Raft) ஏறித் தப்பித்தார்கள்.

பசிபிக் பெருங்கடல்...கடல் நீரின் மேல் கேப்டன் எட்டி ரிக்கன்பேக்கரும் உடன் வந்தவர்களும் நாள் கணக்கில் மிதந்தார்கள். பகல் முழுக்க சூரியனின் வெப்பத்தோடு போராடினார்கள்; சுறா மீன்களோடு சண்டையிட்டுத் தப்பித்தார்கள்; இவற்றைவிட தாகத்தோடும் பசியோடும் போராடினார்கள். கடலில் மிதக்க ஆரம்பித்த எட்டாவது நாளே அவர்களிடமிருந்த உணவு தீர்ந்துபோயிருந்தது. உணவில்லை; குடிக்கத் தண்ணீரில்லை. நூற்றுக்கணக்கான மைல்களுக்கு அப்பால், தூரத்தில் எங்கேயோ கரையிருந்தது. இவர்கள் எங்கிருக்கிறார்கள் என்பதோ, உயிரோடுதான் இருக்கிறார்களா என்பதோ யாருக்கும் தெரியாது. ஆனால், தினமும் அமெரிக்காவில் பல லட்சக்கணக்கானவர்கள் எட்டி ரிக்கன்பேக்கர் எங்கேயிருக்கிறார் என்று தேடிக்கொண்டிருந்தார்கள்.

கடலில் மிதந்துகொண்டிருந்த அந்த மனிதர்களுக்கு ஏதாவது அற்புதம் நிகழ்ந்தால்தான் உயிர்பிழைப்பது சாத்தியம் என்று உறுதியாகத் தெரிந்தது. பசியோடும் தாகத்தோடும் தவித்துக்கொண்டிருந்த ஒரு பிற்பகலில், ஏதாவது அதிசயம் நடக்க வேண்டும் என்று வேண்டி அவர்கள் கூட்டாகப் பிரார்த்தனை செய்தார்கள். பிறகு களைப்பில் அரைத் தூக்கம் போட்டார்கள். எட்டி ரிக்கன்பேக்கர் வெயில் முகத்தில் படாதபடி தன் தொப்பியால் முகத்தை மூக்கு நுனிவரை மூடிக்கொண்டு, சாய்ந்து படுத்திருந்தார். நேரம் போய்க்கொண்டிருந்தது.

படகு

திடீரென்று ஏதோ ஓர் அலை உயிர் காக்கும் படகின் மேல் மோதியதுபோல ஒரு சத்தம்... ஏதோ ஒன்று அவருடைய தொப்பியின் மேல் வந்து உட்கார்ந்ததை உணர்ந்தார் எட்டி. அது ஒரு கடல் பறவை என்பதை, அதன் சிறகடிப்பிலிருந்து உணர்ந்துகொண்டார். அவர் அசையாமல் சில விநாடிகள் அப்படியேயிருந்தார். அடுத்து என்ன செய்வது என்று யோசித்தார். சடக்கென்று காற்றில் கையை வீசி பறவையைப் பிடித்தார்.  கிறீச்சிட ஆரம்பித்திருந்தது; அவர் கையிலிருந்து விடுபட இறக்கைகளை அடித்துத் துடித்தது. ஆனால் எட்டி எப்படியோ சாதுர்யமாக அந்தப் பறவையின் கழுத்தைப் பிடித்து இறுக்கிவிட்டார்.

எட்டி ரிக்கன்பேக்கர்பிறகு எல்லோரும் சேர்ந்து ஸீகலின் சிறகுகளை உதிர்த்தார்கள். அன்றைக்கு அந்தக் குழுவிலிருந்த மொத்தப் பேருக்கும் அந்தப் பறவை சிறிய உணவானது. மீதமிருந்த பறவையின் குடல் பகுதியை தூண்டில் இரையாக்கினார்கள். அதைக் கொண்டு கடலில் மீன் பிடித்தார்கள். ஒரு சுழற்சியாக ஒன்றை உண்டு, மீதத்தை தூண்டில் இரையாக்கி அவர்கள் நாள்களை நகர்த்த ஆரம்பித்திருந்தார்கள். இயற்கையும் அவர்களுக்குத் துணைபுரிந்தது. அவ்வப்போது சிறியதாகப் பெய்த மழை அவர்களின் தாகம் தீர்க்க உதவியது. இப்படி 24 தினங்கள் அவர்கள் கடலில் மிதந்து, கடைசியாகக் காப்பாற்றப்பட்டார்கள்.

அந்தக் கடுமையான துன்ப நிகழ்வுக்குப் பிறகும் பல ஆண்டுகள் எட்டி ரிக்கன்பேக்கர் உயிர் வாழ்ந்தார். அவரையும் அவர் குழுவினரையும் காப்பாற்றிய அந்த முதல் ஸீகல் அவர் நினைவிலேயே இருந்தது. அதற்குப் பிறகு ஒருபோதும் ஸீகலைப் பார்க்கும்போதெல்லாம் அவர் `தேங்க் யூ’ சொல்லத் தவறியதில்லை. அந்த கடல் பறவைகளுக்கு நன்றி சொல்வதற்காகத்தான் அவர் வாழ்நாள் முழுக்க ஒரு பக்கெட் நிறைய இறால் மீன்களோடு, ஒவ்வொரு வெள்ளிக்கிழமை மாலையும் கடற்கரையிலிருக்கும் அலை தாங்கும் மேடையில் நடந்துகொண்டிருந்தார்.

(குறிப்பு: எட்டி ரிக்கன்பேக்கர் `ஈஸ்டர்ன் ஏர்லைன்’ஸை நிறுவியவர்களில் ஒருவர். அமெரிக்க விமானப்படையில் பைலட்டாக இருந்தவர், அமெரிக்காவின் ஃபைட்டர் ஏஸ் (America's Fighter Ace) என்ற கௌரவம் பெற்றவர்.)

https://www.vikatan.com

Link to comment
Share on other sites

ஹலோ... உலகம் அழியப் போகிறது. என்னவெல்லாம் எடுத்துக் கொள்வீர்கள்?

 
 

அது 2012-ன் இறுதி. டிசம்பர் 31. இரவு ஒரு போன்கால் வந்தது. அவனை ஒரு பயணத்தில் சந்தித்தது. மீன் பிடித் தொழில் செய்பவன். மரக்காணம் பக்கத்தில் இருக்கும் கடற்கரை கிராமத்தைச் சேர்ந்தவன். 

``ண்ணா...இன்னிக்கு நைட்டு உலகம் அழிஞ்சிரும்ன்னு சொல்றாங்களே உண்மையா? நாங்க பசங்க எல்லாரும்...கடலுக்குள்ள தீவுக்குப் போறாம்னா. உலகத்தோட கடைசி இரவு... சந்தோஷமா, நிம்மதியா கடல்லேயே இருக்கலாம்ன்னு போறோம். நீங்களும் வாங்க..." அவன் அதை அவ்வளவு சீரியஸாகச் சொன்னான். 

 

நான் மெதுவாக சிரித்தபடி...

``அப்படி எல்லாம் உலகம் அழிஞ்சிடாது தம்பி..." என்றேன்.

``என்னமோ ண்ணா...நாங்க கடலுக்குப் போய் கடைசியா சாப்பாடெல்லாம் செஞ்சு கொண்டாடப் போறோம். ஒருவேளை உலகம் அழியாம இருந்தா சந்திப்போம்" என்று சொல்லிவிட்டு போன் வைத்தான். 

அழியப் போகும் உலகம்

``உலகம் அழியப் போகிறது"... இந்த வாக்கியம் நிஜ வாழ்க்கையில் நடக்கும் என்றால் அது மிகப் பெரிய இழப்புகளையும், வலியையும் ஏற்படுத்தக் கூடியது. ஆனால், இந்த வழக்கமான பொதுச் சமூக வாழ்வு நமக்கு ஏற்படுத்தியிருக்கும் சலிப்போ அல்லது மொத்த வாழ்வின் பிரச்னைகளிலிருந்து தப்பிப் பிழைப்பதற்கான வழியோ அல்லது ஹாலிவுட் படங்களின் தாக்கமோ... ஏதோ ஒன்று அந்தக் கற்பனையை நமக்கு சுவாரஸ்யப்படுத்துகிறது. உலக அழிவை ஆங்கிலத்தில் `அபோகலைப்ஸ்' (Apocalypse) என்று சொல்வார்கள். 

ஒரு வேளை அபோகலைப்ஸ் நிகழ்ந்தால் என்னவெல்லாம் நடக்கும் என்று ஒரு ஹாலிவுட் படத்தையே மண்டையில் ஓடவிட்டபடி இணையத்தில் அது குறித்து சில விஷயங்களைத் தேடிக் கொண்டிருந்தேன். அப்போது குறிப்பாக ஒரு விஷயம் சற்று வித்தியாசமாக கண்ணில்பட்டது. 

அபோகலிப்ஸ்
 

அபோகலிப்ஸ் நடக்கும்போது நாம் எடுத்துக்கொள்ள வேண்டிய பொருள்கள் என ஒரு பட்டியலைக் கொடுத்திருந்தது. உலகம் அழியப்போகிறது. அதற்கு நாம் தயாராக வேண்டும் என்ற கற்பனையோடு இதைப் படித்துப் பாருங்கள்.

அபோகலிப்ஸிற்குத் தேவையான பொருள்களைச் சேகரிக்க முதலில் நமக்கு ஒரு பேக் (Bag) வேண்டும். இதை ஆங்கிலத்தில் 'பக் அவுட் பேக்' (Bug Out Bag) என்று சொல்கிறார்கள். அழிவு நடந்து குறைந்தபட்சம் அடுத்த 72 மணி நேரத்துக்கு உயிர் வாழ்வதற்கான பொருள்களைக் கொண்டிருப்பதுதான் `பக் அவுட் பேக்'. அதன் கொள்ளளவு 75லி. 

தங்கத் தேவை டென்ட்:

நிலநடுக்கத்தினாலோ, சுனாமியினாலோ இன்னும் பல இயற்கை சீற்றங்களினாலோ அல்லது ஹாலிவுட் படங்களில் காட்டப்படுவது போல் ஜாம்பிக்களினாலோ (Zombies) இந்த உலகம் அழியலாம். முதலில், நாம் பாதுகாப்பாக தங்க ஒரு இடம் வேண்டும். அதற்கு அந்த பேக்கில் ஒரு டென்ட்டை நாம் எடுத்துச் செல்ல வேண்டும். அது இருவர் படுக்குமளவுக்கு இருக்க வேண்டும். கூடவே, ஸ்லீப்பிங் பேக் (Sleeping Bag) வைத்திருப்பது அவசியம். இது இரண்டும் இருந்தால், உலகில் எந்த மூலைக்கு வேண்டுமானாலும் தப்பித்துச் சென்று, பாதுகாப்பாகத் தங்கலாம். 

தங்கத் தேவை டென்ட்

தண்ணீர் :

உலகம் அழிந்து, சூழலை உணர சில மணி நேரங்களாவது ஆகும். சமயங்களில் ஒரு நாள் கூட ஆகலாம். சூழலைப் புரிந்து நீர் இருக்கும் இடத்துக்கு ஆபத்துகளைக் கடந்து பத்திரமாக சென்றடைவது சற்று சிரமமாக இருக்கலாம். அதுவரை பிழைத்திருக்க தண்ணீர் அவசியம். தண்ணீர் பாட்டில் ஒன்றோடு சேர்த்து `ஹைட்ரேடிங் பேக்' (Hydrating Bag) அவசியம். நீண்ட தூரம் நடந்துப் போக இருக்கும் சூழலில் இது முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும்.

ஹைட்ரேஷன் பேக்

உணவு:

உலகம் அழிந்துவிடும். எல்லா கடைகளும் சூறையாடப்பட்டிருக்கும். முடிந்தால் நாமும் அப்படி சென்று தின்பண்டங்களைச் சேகரித்து, பைகளில் நிரப்பிக் கொள்ளலாம். குறிப்பாக, பதப்படுத்தப்பட்ட உணவுகள்தான் அவசியம். மிட்டாய்களும், இனிப்புகளும் உடலுக்குத் தேவையான சக்தியைக் கொடுக்கும். கூடவே, கையடக்க அடுப்புகளும், சில பாத்திரங்களையும் பையில் வைத்துக்கொள்ளலாம். முதல் சில நாள்களைக் கடந்துவிட்டால், ஏதோ ஓர் தீவிலோ, காட்டிலோ வாழ்கிறோம் என்றால் உணவைச் சேகரித்து சமைக்க அது உதவும். 

அபோகலிப்ஸ்

நெருப்பு:

ஆதி கால கற்கால மனிதனின் மகத்தான கண்டுபிடிப்பு நெருப்பு. ஆனால், அவனைப் போல் கற்களைக் கொண்டு நெருப்பு கொண்டு வரும் திறன் நமக்கு இருக்குமா என்று தெரியவில்லை. அதனால், முடிந்தால் ஒரு லைட்டர் கூடவே மெக்னீசியம் கட்டி (Magnesium Bar with Striker) போன்றவைகளை எடுத்துக்கொள்ளலாம். 

கூடவே, டார்ச் லைட்டுகள் வெளிச்சத்துக்கு அவசியம். உலகம் அழிகிறது என்றால், இன்று நமக்கு இருக்கும் எந்த நவீன வசதிகளும் நமக்கு இருக்குமா என்பது சந்தேகம்தான். எனவே, சோலார் பேட்டரிகள், சோலார் கொண்டு இயங்கும் விளக்குகள் போன்றவைகளை எடுத்துக் கொள்வது நல்லது. 

அபோகலிப்ஸ் - மெக்னீசியம் ஸ்ட்ரைக்கர்

பாதுகாப்பு கத்திகள்:

கத்தி. மிகவும் அவசியமான ஒன்று. நம்மை தற்காத்துக் கொள்ளவும், இன்னும் பல உபயோகங்களுக்கும் கத்திகள் கண்டிப்பாகத் தேவைப்படும். கத்தியின் கைப்பிடிகள் சமயங்களில் கண்ணாடிகளை உடைக்க உதவலாம். நல்ல உறுதியான, தரமான கத்தியை எடுத்துக் கொள்வது அவசியம். 

கூடவே, `மல்ட்டி டூல் கிட்' (Multi Tool Kit) எடுத்துச் செல்வதும் அவசியம். சின்ன வயதில் நாம் கல் விட்டு விளையாடியிருப்போமே உண்டிகோல்...அதுவும் முக்கியமானதாக நமக்கு இருக்கும். 

கத்தி

வழிகாட்டும் ஆப்ஸ்:

உலகமே அழிந்தாலும் கண்டிப்பாக மொபைல் போன் குறிப்பிட்ட காலம் வரை அழியாமல் தான் இருக்கும். அதில் சில வழிகாட்டும் ஆப்களை வைத்திருப்பது நல்லது. குறிப்பாக, "Back Country Navigator Topo GPS" (இது ஆன்ட்ராய்ட் போன்களுக்கு), "GAIA GPS" (இது ஐபோன்களுக்கு) போன்ற இன்டெர்நெட் வசதியில்லாமல் இயங்கும் வழிகாட்டும் ஆப்களை உபயோகிக்கலாம். மொபைலை சார்ஜ் செய்ய, சோலாரில் இயங்கும் சில "External Chargers"யை பயன்படுத்தலாம். 

அதே சமயம், ஒரு காம்பஸையும், பேப்பர் மேப்பையும் வைத்துக்கொள்வதும் அவசியம். 

இன்னும், சில கயிறுகள், `டக்ட் டேப்" (Duct Tape), தண்ணீரை வடிகட்ட மெலிதான துணி ஒன்று, `ஃபர்ஸ்ட் எய்ட் கிட்" (First Aid Kit) போன்றவைகளையும் எடுத்துக்கொள்ள வேண்டும். 

அழியும் உலகம்

அதேபோன்று கண்டிப்பாக செருப்புகள் அணிவதைத் தவிர்க்க வேண்டும். நல்ல பூட் ஷூக்களை அணிய வேண்டும். வெயிலைத் தவிர வேறு எந்த சீதோஷ்ணத்துக்கும் காட்டன் பயன்படாது என்பதால் காட்டன் உடைகளைத் தவிர்ப்பது நல்லது. மாறாக,சிந்தெட்டிக் உடைகளை அணிவது நல்லது. 

 

"உலகம் எப்போதும் அழியலாம் என்ற நிலை. அது எப்போது என்பது நமக்குத் தெரியாது. அதனால் அவசரப்படாமல், பிடித்த வாழ்க்கையை வாழுங்கள்." 
                             
                                                                                - தாமஸ் மெர்டன் ( அமெரிக்க கவிஞர்) 
 

https://www.vikatan.com

Link to comment
Share on other sites

இயற்கையைத் தேடும் கண்கள் நடன வணக்கம்

 

 
02CHVANSpottedowletjpg

புள்ளி ஆந்தை

 

குழந்தைகள் ஒளிந்திருந்து பார்ப்பதுபோல், மரப்பொந்துக்குள் இருந்து ஆந்தைகள் எட்டி பார்ப்பதும் சுவாரசியமாக இருக்கும். உடம்பு உள்ளே இருக்க தலையை மட்டும் வெளியே நீட்டி அவை பார்க்கும். ஒவ்வொரு முறை பார்க்கும்போதும் இந்தப் பறவை ஒவ்வொரு பாவனையைக் கொண்டிருக்கும். பார்க்கப் பார்க்க அலுக்காத ஒரு பறவை.

 

புள்ளி ஆந்தை (Spotted Owlet) ஒரு சிறு பறவை. நாடு முழுக்கத் தென்படும் இந்தப் பறவை திறந்தவெளிக் காடுகள், மக்கள் வாழுமிடங்கள், வீட்டுத் தோட்டங்களில் காணப்படும். மரப்பொந்துகளில் வாழும். ஆணும் பெண்ணும் பார்ப்பதற்கு ஒரே மாதிரி இருக்கும். நவம்பர் - ஏப்ரல் மாதங்கள் இதன் இனப்பெருக்க காலம். பொதுவாக மூன்று முட்டைகள் இட்டு குஞ்சு பொரிக்கும்.

எலிதான் இதற்குப் பிடித்த, முதன்மையான உணவு.

வயல்கள், தோட்டங்களில் எலிகள் அதிகம் இருக்கும் என்பதால், அவற்றுக்கு அருகில் உள்ள மரப்பொந்துகளில் கூடமைக்கும். எலிகள் எளிதாகக் கிடைக்கும் என்பதுதான் இதற்கு அடிப்படைக் காரணம்.

 

கண் அழகு

இரவில் சுறுசுறுப்பாகச் செயல்படும் இரவாடி. பகலில் தூங்கிக்கொண்டே இருக்கும் என்று சொல்ல முடியாது. மரப்பொந்துகளில் உட்கார்ந்தபடி பாதிக் கண்கள் மூடி அரைத்தூக்க நிலையில் இருப்பது போலிருக்கும். அது தூக்கமில்லை என்பதற்கு அறிகுறி, அதன் எச்சரிக்கைத் தன்மை. சிறு சத்தத்துக்கும் சட்டென்று விழித்துப் பார்க்கும். ஒவ்வொரு முறையும் நன்கு உற்று பார்க்கும்.

'ஆந்தை மாதிரி முழிக்காதே' என்பார்கள். நன்கு விழித்துப் பார்ப்பதுதான் இதன் சிறப்பு. மஞ்சள் வெளிவட்டத்துக்குள் இருக்கும் அதன் கருவிழிகள் அழகு. பெரிய வட்ட வடிவத்தில் இருக்கும் கண்களை உருட்டி உருட்டி அது பார்க்கும் அழகே தனி. ஆந்தையின் கண்கள் பார்ப்பதற்கு கோளம் போலிருந்தாலும், அவை கோள வடிவமல்ல. கண்ணிலிருந்து காதுவரை நீண்டதொரு குழாய் வடிவத்தில் இருக்கும் என்கிறார்கள்.

02CHVANSpottedowletAthenebramajpg

இணையின் இறக்கையில் அலகால் சிக்கெடுத்துவிடும் புள்ளி ஆந்தை

 

இதன் காரணமாக ஆந்தைகளால் கண்ணை அந்தப் பக்கம் இந்தப் பக்கம் திருப்ப முடியாது. அதனால் தலையையே முழுமையாகத் திருப்பியும் சுற்றியும் பார்க்கும். அதேபோல தலையை மேலிருந்து கீழாக, கீழிருந்து மேலாக நடன அசைவுபோல ஆட்டி ஆட்டிப் பார்க்கும். புள்ளி ஆந்தைகள் அதிகபட்சமாக 270 டிகிரி வரை தலையைத் திருப்பும் திறன் கொண்டவை. ஒரு பொருளை பல கோணங்களில் உள்வாங்கும்.

 

இறக்கை கோதும் அன்பு

ஹரியாணா மாநிலத்தில் உள்ள சுல்தான்பூர் பறவைகள் சரணாலயத்துக்கு குளிர்காலத்தில் ஒரு முறை சென்றிருந்தேன். அப்போது உடலை கதகதப்பாக்கிக் கொள்ள வெயில் காய்வதற்காக பகலிலேயே வெளியில் உட்கார்ந்திருந்தது ஒரு புள்ளி ஆந்தை. அது என்னைப் பார்த்தவுடன் தலையை மேலும் கீழும் ஆட்டி ஆட்டி பார்த்தது, வணக்கம் சொல்லி வரவேற்பதைப் போலிருந்தது. அதை நான் எடுத்த வீடியோ, சமூக வலைதளங்களில் அப்போது வைரலானது.

ஐந்தாறு ஆண்டுகளுக்கு முன் சுல்தான்பூர் பறவை சரணாலயத்தில் சுவாரசியமான மற்றொரு காட்சியைப் பார்க்க முடிந்தது. ஒரு டிசம்பர் குளிரில் இரண்டு ஆந்தைகள் அருகருகே வெளியே உட்கார்ந்திருந்தன. நான் பார்த்துக்கொண்டிருந்தபோதே, ஒரு ஆந்தை மற்றொன்றின் இறகுகளைக் கோதி சிக்கெடுக்க ஆரம்பித்தது. ஆங்கிலத்தில் இதை Preening என்பார்கள். தொலைவிலிருந்து அதைப் பார்ப்பதற்கு கொஞ்சிக் குலாவுவது போலிருந்தது. அது மறக்க முடியாத காட்சி.

http://tamil.thehindu.com/

Link to comment
Share on other sites

 

வெப்பம் அதிகரித்தால் அறிவு குறைவாகும் - புதிய ஆய்வு

மாணவர்களின் மதிப்பெண்ணுக்கும் பருவநிலைக்கும் தொடர்பு இருப்பதாக அமெரிக்க ஆய்வாளர்கள் சொல்கின்றனர்.

Link to comment
Share on other sites

உலக சுற்றுச்சூழல் தினம்

வரலாற்றில் இன்று….
 ஜீன் 05

நிகழ்வுகள்

1864 – அமெரிக்க உள்நாட்டுப் போர்: வேர்ஜீனியாவின் பியெட்மொண்ட் நகரில் இடம்பெற்ற போரில் அமெரிக்கப் படைகள் கூட்டமைப்பூப் படைகளைத் தோற்கடித்து கிட்டத்தட்ட 1,000 பேரை சிறைப்பிடித்தனர்.
1900 – இரண்டாம் போவர் போர்: பிரித்தானியர் தென்னாபிரிக்காவின் பிரிட்டோரியாவைக் கைப்பற்றினர்.
1912 – ஐக்கிய அமெரிக்காவின் கடற்படையினர் கியூபாவில் இறங்கினர்.
1946 – சிக்காகோவில் உணவுசாலை ஒன்று தீப்பிடித்ததில் 61 பேர் கொல்லப்பட்டனர்.
1956 – இலங்கையில் சிங்களம் மட்டும் சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
1959 – சிங்கப்பூரின் முதலாவது அரசு பதவியேற்றது.
1967 – இஸ்ரேலிய வான்படையினர் எகிப்து, ஜோர்தான், சிரியா ஆகியவற்றின் மீது தாக்குதலை ஆரம்பித்தனர்.
1968 – ஐக்கிய அமெரிக்காவின் அர்சுத் தலைவருக்கான வேட்பாளர் ரொபேர்ட் கென்னடி பாலஸ்தீனர் ஒருவனால் சுடப்பட்டார். இவர் அடுத்த நாள் உயிரிழந்தார்.
1969 – அனைத்துலக கம்யூனிஸ்டுகளின் மாநாடு மொஸ்கோவில் ஆரம்பமானது.
1974 – ஈழப்போர்: சிவகுமாரன் உரும்பிராயில் காவற்துறையினர் சுற்றி வளைத்த போது சயனைட் அருந்தி மரணமடைந்தார். இவர் ஈழப்போரில் முதன் முதலில் சயனைட் அருந்தி வீரச்சாவையடைந்தவர்.
1977 – செஷெல்சில் இராணுவப் புரட்சி இடம்பெற்றது.
1977 – முதலாவது தனிக்கணினி அப்பிள் II விற்பனைக்கு விடப்பட்டது.
1979 – இலங்கையின் சுயாதீன தொலைக்காட்சி அரசுடைமை ஆக்கப்பட்டது.
1984 – இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி சீக்கியர்களின் பொற்கோயிலில் தாக்குதல் நடத்த உத்தரவிட்டார்.

பிறப்புகள்

1898 – ஃவெடரிக்கோ கார்சியா லோர்க்கா, ஸ்பானிய எழுத்தாளர் (இ. 1936)
1925 – வ. அ. இராசரத்தினம், ஈழத்து எழுத்தாளர்.
1975 – சிட்ருனாஸ் இல்கவுச்காஸ், லித்துவேனிய கூடைப்பந்து ஆட்டக்காரர்

இறப்புகள்

1910 – ஓ ஹென்றி, அமெரிக்க எழுத்தாளர் (பி. 1862)
1958 – ரெங்கநாதன் சீனிவாசன், மொரிசியசு அரசியல்வாதி (பி. 1910)
2002 – மு. சிவசிதம்பரம், தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர்
2004 – ரோனால்டு ரேகன், அமெரிக்க முன்னாள் அதிபர் (பி. 1911)
2004 – கே. கணேஷ், எழுத்தாளர் (பி. 1920)

சிறப்பு தினம்

உலக சுற்றுச்சூழல் தினம்
டென்மார்க் – அரசியல் நிர்ணய தினம்
சேஷெல்ஸ் – விடுதலை தினம்

http://metronews.lk

Link to comment
Share on other sites

அழியா பிளாஸ்டிக் ஏற்படுத்தும் உயிர் அழிவு பிரச்சனைகள் (புகைப்பட தொகுப்பு)

பயன்பாட்டிற்குப் பிறகு தூக்கி எறியப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் உலகெங்கிலும் உள்ள நீர்வாழ் உயிரினங்களுக்கு சிக்கல்களை உருவாக்கி வருகின்றன. நேஷனல் ஜியோகிராபிக் பத்திரிகையின் ஜூன் மாத பதிப்பில் இந்த உலகளாவிய பிரச்சனையை சித்தரிக்கும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.

புகைப்படம்

 

ஸ்பெயினில் ஒரு குப்பைக் கிடங்கில் பிளாஸ்டிக் பை ஒன்றில் சிக்கிய இந்த கொக்கு உயிர் பிழைத்தது இந்த புகைப்படத்தை எடுத்த புகைப்படக்காரரின் உதவியால் தான்.

 

 

புகைப்படம்

 

மீன்பிடி தொழிலுக்கு பயன்படுத்தும் இந்த வலை வீணாகிப்போனதும் கடலில் வீசப்பட்டிருக்கும். அதில் சிக்கிக்கொண்ட ஆமை தலையை தூக்கி மூச்சு விடுகிறது. வலைச் சிக்கலை அவிழ்க்க முயன்றால், அதுவே ஆமைக்கு ஆபத்தாகிவிடுமோ என்று புகைப்படக்காரர் அச்சப்பட்டார்.

புகைப்படம்

 

ஜப்பானின் ஒகினாவாவில் பிளாஸ்டிக் பாட்டிலுக்குள் சிக்கிக்கொண்ட நண்டு.

புகைப்படம்

 

பிளாஸ்டிக் பூமியில் ஏற்படுத்துவதைவிட கடலில் அதிக மாசை ஏற்படுத்துகிறது. பிளாஸ்டிக் கழிவு சிறு துண்டுகளாக நொறுக்கப்பட்டாலும் அது கடல்வாழ் உயிரினங்களின் வாழ்க்கைக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும்.

புகைப்படம்

 

டாக்காவின் புருகங்கா ஆற்றில் பிளாஸ்டிக் பைகளை கழுவி காய வைக்கும் பெண்ணும் அவரது மகனும். இந்த பிளாஸ்டிக், மறுசுழற்சி செய்யப்படுகிறது. மொத்த பிளாஸ்டிக்கில் ஐந்தில் ஒரு பங்குக்கும் குறைவானவையே மறுசுழற்சி செய்யப்படுகின்றன. அமெரிக்காவில், 10% பிளாஸ்டிக் மட்டுமே மறுசுழற்சி செய்யப்படுகிறது.

புகைப்படம்

 

எத்தியோப்பியாவில், பிளாஸ்டிக் மாசுக்குள் தானாகவே வந்து சேரும் இந்த கழுதைப்புலிகள் குப்பைக் கொட்டும் இடத்தில் இருந்து தங்கள் உணவுத் தேவையை பூர்த்தி செய்து கொள்கின்றன.

புகைப்படம்

 

மக்களுக்கு பிளாஸ்டிக் மாசுபாட்டைப் பற்றி எச்சரிப்பதற்காக லுசிஸ்ட்ரோடஸ் என்ற ஒரு கலைஞரும், வேறு இருவரும் சேர்ந்து மத்திய மாட்ரிட்டில் திபெல்ஸ் நீரூற்றில் 60,000 கழிவுப் பாட்டில்களை நிரப்பினார்கள்.

புகைப்படம்

 

இந்தோனேசியா தீவில், கடல் குதிரை காது குடையும் குச்சியை எடுத்துச் செல்கிறது. இதுபோன்ற ஒரு புகைப்படத்தை எடுக்கும் சூழல் எப்போதுமே வரக்கூடாது என்று புகைப்படக்காரர் ஹாஃப்மேன் கூறுகிறார்.

https://www.bbc.com/

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.